All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Sjanap86

New member
மக்களே,

எல்லோரும் அவங்க அவங்க எஸ்டிடி சொல்லும் போது நான் மட்டும் சொல்லாமல் இருக்கலாமா...? நானும் வந்துட்டேன்... எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு... இப்போது வசிப்பது கொழும்பு, இலங்கை... திருமணமாகி இங்கே வந்து 19 வருடங்களாகி விட்டது... குழந்தைகள் வளர்ந்ததும் பொழுதுபோக்குக்காக கதை படிக்க ஆரம்பித்து அப்படியே எழுதும் ஆர்வத்தில் கதை எழுத ஆரம்பித்தது... இப்போது இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது... தினமும் உங்களை எல்லாம் பார்க்கலைன்னா ஏதோ ட்ரெக் அடிக்ட் கேஸ் மாதிரியாகிவிடுகிறது... அந்தளவுக்கு தளமும், வாசகர்களும் என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒருவராகி விட்டனர்... கல்லூரி நாட்களில் படித்த புத்தகங்கள் எல்லாம் வேறு வகை... இப்போது படிப்பது எல்லாம் குடும்ப நாவல்கள் மட்டுமே... மனதை லேசாக, மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நாவல்களை மட்டுமே இப்போது படிக்கிறேன்... நிறைய எழுத்தாளர்களின் தீவிர ரசிகை... இப்போதும் நான் ஒரு நல்ல வாசகி... இவ்வளவு தான் மக்கா என் எஸ்டிடி... ???

அன்புடன்,
ஶ்ரீகலா :)
Happy to see ur words here...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi fnds... I'm janani.. Like to read SK books so much. She take me inside the story... Expect her new one.... Can anyone tel how to read ongoing book can't find it...
Srikala novels என்று இருப்பதை கிளிக் செய்யுங்க.. அங்கே மூன்று கதைகளுக்கான கதை திரிகள் இருக்கும் .... என்சாய்...
 

ThilagamArul

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகள் அனைவர்க்கும் வணக்கம்.

நான் ஜோஸ்பின் வான்மதி. என்னை வெளியில் யாருக்கும் வான்மதி என்றால் தெரியாது. இங்கே நம் தளத்தில் வான்மதி என்றால் மட்டுமே தெரியும். நான் வசிப்பது முத்துநகர். நான் என் பதினைந்து வயதில் கதை படிக்க ஆரம்பித்தேன். புத்தக பேய் என்று தான் வீட்டில் கூப்பிடுவார்கள். அப்படி படிப்பேன். கதை, கட்டுரை, கவிதை எதையும் விட்டு வைப்பதாய் இல்லை. தனியாக இருந்தால் இசையோடு தான் இருப்பேன். நிறைய பாடல்கள் கேட்பேன். பாடல் கேட்டாலும், கதை படிக்க ஆரம்பித்தாலும் பூமிக்குள் புதைந்தாலும் தெரியாது. அப்படி ஒரு பைத்தியம்.

திகில் நாவல்கள் நிறைய படிப்பேன். இப்பொது ஸ்ரீஉடைய நாவல்கள் படிக்க ஆரம்பித்த பிறகு ரொமான்டிக் நாவல்கள் அதிகம் படிக்கிறேன். ஸ்ரீ மட்டுமே அதற்க்கு முழு பொறுப்பு. :p

இங்கே இந்த தளத்தில் நிறைய தோழிகள் அறிமுகம் கிடைத்தது. இது எனக்கான தனி உலகம். நன்றி ஸ்ரீ.
Omg......omg......mathyum......vanmathy hariyum oruthara.....idu theriyave ithanai naal ayiduche.......:eek:
Anyway.....thanks for this thread pa
hi mathy
 
Top