நீங்க முடியுமா : 1
.
சென்னையின் அவுட்டர் ,கடற்கரை சாலை ,ஹை வேஷ், மனதையும் , அறிவையும் அப்படி சாந்த படுத்தும் அவ்வளவு அழகான சாலை , சந்தோஷமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் சென்னை மக்கள் தேர்ந்தெடுக்கும் லாங் டிரைவ்காண சாலை, வெண்ணெய் என வழுக்கி செல்லும் அந்த காரில் அரக்கனை ஒத்த உருவத்தோடு ஒருவன்..முகம் முழுவதும் தாடி மண்டி இருக்க, வெள்ளை நிற முழுக்கை சட்டை வெளிர் நீல நிற ஜீன்ஸில், வாயின் ஒருபக்கம் சிகிரேட் இருக்க, தன் கருப்பு நிற ஸ்விப்ட் டிசையர் காரில் பக்கத்தில் ஒரு பெண்ணுடன் தன் வீட்டை நோக்கி சென்று கொண்டு இருந்தான்.
வயது 27 தான் என்றாலும் அவன் உடையில் அவ்வளவு சிரத்தை இல்லாததாலும் அவனின் சாராசரியை விட அதிக உயரமும் ,அவனின் ஆஜானுபாகுவான தோற்றமும் முகம் முழுவதும் மண்டி இருக்கும் தாடியும் அவனை சற்றே வயது அதிகம் உள்ளவனாகவே காட்டியது.. அவன்தான் ஜித்து,ஜித்து விஷ்வேந்திரன்,
விஷ்வேந்திரன் அகலியின் மூன்றாவது மகன்..பெயர் சொல்லும் ஓவியன் ,படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாமல் முழு நேரமும் ஓவியம் ஓவியம் என்றே இருப்பவன் ,விடாமல் 24 மணி நேரம் கூட ஊன் உறக்கம் இல்லாமல் வரைப்பவன் ,அதுவும் இந்த 6 மாத காலமாக இன்னும் அரக்கத்தனமாக அதில் புகுத்தி கொண்டவன்..
பக்கத்தில் உள்ள பெண்ணிற்கு 40 வயது இருக்கும், அந்த பெண் மிரட்சியுடன் அவனை பார்த்து கொண்டு இருந்தது…புயல் வேகத்தில் காரை தன் வீட்டின் முன் காரை நிறுத்தினான்..
மறுபுறமாக வந்து அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு தன் வீட்டை அண்ணாந்து பார்த்தான்..தன் அப்பா, பெரியப்பா , தன் ஒட்டி பிறந்த சகோதரர்களின் அசாத்திய உழைப்பு இந்த வெள்ளை மாளிகை, அதை பார்க்க ஒரு தெய்வீக சாந்தம் கண்களில் வந்து ஒட்டிக்கொள்ளும், வடபுறமாக ஒரு சின்ன பிள்ளையார் கோவில் அதை தான்டி சிட்டவுட்
இடதுபுறம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட அழகு செடிகள் இருக்கும், வீட்டின் பின்புறம் அப்படியே உல்டாவாக கிராமத்து வாசனையை கொண்டு இருக்கும் , வாலி கயிற்றுடன் கிணறு இருக்க அனைத்து வகையான மரங்களும் இருக்க ,ஒரு பக்கம் முழுவதும் மல்லி, முல்லை என பந்தல் போட்டு பூக்கள் பூத்து குலுங்கும்…
மணி 11 தாண்டி இருக்க, அந்த பெண்ணின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் ஜித்து, வழக்கம் போல யாரும் தூங்க வில்லை, விஸ்வா அவனை முறைத்து பார்த்துக்கொண்டு நிற்க அகலியோ கண்களால் தன் கணவனை கெஞ்சி நின்றாள், அந்த பார்வை விஸ்வாவை அமைதிகாக்க வைத்தது இருந்தும் அந்த பெண்ணின் கையை பிடித்து இருக்கும் ஜித்துவின் கையை உக்கிரமாக முறைக்க ஜித்துவுன் கை தானாகவே அந்த பெண்ணன் கையை விட்டது…இன்னொரு புறம் கண்ணன் ,ரீனா செய்வறியாது நிற்க , சந்தோஷின் பார்வையோ எங்கயோ நிலைக்குத்தி போய் இருந்தது ,யாரும் எதும் செய்யமுடியாமல் அமைதி காக்கா, ஜித்து அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு தன் அறைக்கு சென்றான்..கோபம் குறையாமல் மூச்சி வாங்க நின்று கொண்டிருந்த விஷ்வாவை அகலியின் அழுகை கலைக்க , வேகமாக அகலியை நெஞ்சோடு அனைத்து கொண்டான் விஷ்வா, ஏற்கனவே தான் உள்ள பாடும் படுத்தி இருக்க ,இப்பொழுது மீண்டும் தன் பையன் ஆரம்பிக்கிறானே என்று வேதனை பொங்க ஆறுதல் சொல்ல முடியாமல் அனைத்து நின்றான்…
அழுது, ஓய்ந்து கண்ணீர் வற்றியவுடன் நிதானத்திற்கு வந்த அகலியின் கண்ணில்,இத்தனை பெரிய வயதிலும் ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தையாய் நிற்கும் தன் நண்பன் கருவாயன் கண்ணில் பட அவனை நோக்கி விரைந்தாள், அதே பார்வையை விலக்காமல் எங்கயோ பார்த்து அமர்ந்து கொண்டு இருந்த சந்தோஷின் அருகில் அமர்ந்து அவன் தோளை தொட குளம் கட்டி கலங்கிய கண்களுடன் அகலியை நோக்கி திரும்பிய சந்தோஷ் “ தேனு குட்டி ,செல்லம்மா கிடைச்சிடுவாள்ள ,
எங்கயாவது நல்லா இருப்பால ,என்க நின்று இருந்த கண்ணீர் மீண்டும் உடைப்பெடுக்க இருவரும் அழுக விஷ்வா , ரீனா ,கண்ணன் என யாராலும் ஆறுதல் படுத்த முடியவில்லை..
ஆம் சந்தோஷ் ,ஜனனியின் ஒற்றை பெண்ணான செல்லம்மா காணவில்லை ஆறு மாதமாக , எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை..
ஏனோ செல்லமாவிற்கு பிறகு ஜனனி கருத்தரிக்கவில்லை அதை பற்றி பெரிதாக அவர்கள் கவலைப்பட்டதும் இல்லை,தன் ஒற்றை பெண்ணை இளவரசியென அத்துணை சிறப்பாக வளர்த்தனர்..24 வயதான சின்ன சிட்டு எங்கு போனது என்ன ஆனது தெரியவில்லை..
செல்லம்மா தொலைந்த நாளாய் அவர்கள் குடும்பத்தின் எல்லாம் தொலைந்துவிட்டது..ஜனனி சாப்பிடுவதில்லை,ஒழுங்காக தூங்குவது இல்லை , மருத்துவமனை செல்வது இல்லை,எந்நேரமும் ஒரே அழுகை அழுகை மட்டுமே…
விதி தன் அடுத்த இன்னிங்க்ஸை அவர்கள் குடும்பத்திலையே தொடங்கிவிட்டது..
விஷ்வா,சந்தோஷ் ஒழுங்காக தொழிலை கவனிக்க செல்வதில்லை
ஏதோ தொழில் விஷ்வா ,அகலியின் மற்ற இரு புதல்வர்கள் விபீன், துருவ், மற்றும் கண்ணனின் கவனிப்பால் இன்னும் சரிவை சந்திக்காமல் உச்சத்தில் இருந்தது..
ரீனா வீட்டு பொறுப்பை பார்த்துக்கொள்ள ஏதோ வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது…
தன் முழு பண பலத்தையும் ,படை பலத்தையும் பயன்படுத்தி விஷ்வா செல்லம்மாவை தேட பலன் என்னவோ புஜ்ஜியம் தான்…பொறுப்பெடுத்து தேட வேண்டிய ஜித்துவே இப்படி மது மாது என்று இருக்க விஸ்வாவிற்கு ஏதும் புரியவில்லை..
விபீன், துருவ் ,ஜித்து மூவரும் ஒரே பிரசவத்தில் பிறந்து இருந்தாலும் விபீன் துருவ் இருவரும் ஐடென்டிகல் ட்வின்ஸ், பார்க்க ஒரு மாதிரி உருவ அமைப்பு கொண்டவர்கள் குணமும் அப்படியே அப்பா மாதிரி சாந்தம், புத்தி கூர்மை எந்தன் பெண்ணையும் ஏர் எடுத்தும் பார்க்காதது என அத்தனையும் , ஜித்து கடைசி, பெரிதாக எதற்கும் அசைட்டை செய்து கொள்ள மாட்டான் , அவனுக்கு வேண்டும் என்றால் அதை எப்டியாவது சாதித்து கொள்வான்,இருப்பது ஒரு வாழ்க்கை அதை நாம் விரும்பியபடி வாழ வேண்டும் என்று நினைப்பவன்..பெண்களை இப்படி என்பதற்குள் வலையில் சிக்க வைத்து விடுவான்..கண்டிப்பாக முறை தவறுபவன் கிடையாது, கொஞ்சம் பிரிகுவண்டா தண்ணி ,தம் அடிப்பவன் அதுவும் ஒரு எல்லைகுள்ளே இருக்கும், தன் சந்தோஷ திற்க்காக அடுத்தவர்கள் பாதிக்க கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பவன்..
அவனின் மிக பெரிய பொழுது போக்கே அவனின் அத்தை மகள் செல்லம்மாவை கதற கதற காலாய்ப்பது,அழுகவிடுவது , வலிக்க அடிப்பது என எல்லாம்..அவனுக்கும் அவளுக்கும் தான் கல்யாணம் என்று வீட்டு பெரியவர்கள் சொன்னாலும் பெரிதாக ஈடுபாடு காட்டமாட்டான்…நீங்க எதையாவது பேசிக்கொள்ளுங்கள் என இருந்துவிடுவான்..
ஆனால் செல்லம்மா அப்படி இல்லை அறியாத வயது முதல் ஜித்துவை தன் காதலனாக கணவனாக வரித்து கொண்டவள் குட்டி அத்தான்,குட்டி அத்தான் என அவனை கொண்டாடி தீர்ப்பவள், அவன் ஒரு நிமிடம் அவள் முன் நின்றாள் கண்களாலே கபளீகரம் செய்துவிடுவாள்…
எத்தனை தொலைவில் இருந்தாலும் அந்த விழுங்கும் பார்வையை ஜித்து எளிதாக கண்டுபிடித்துவிடுவான்..அவளை நோக்கி திரும்பாமலே “குட்டச்சி வந்தன்னு வச்சிக்கடி காத திருகி கையில கொடுத்துடுவேன் ,ஒழுங்கா ஓடிப்போ என்பான்,
செல்லம்மாவும் பழிப்பு காட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் அவனை ரூட் விடுவாள்..
செல்லம்மா , பேரை போலவே பார்த்தாலே செல்லம் கொஞ்சம் தோணும் கொலு கொலு முக அமைப்பு.. எப்பொழுதும் முட்டி வரை ஒரு பாவாடை ,ஒரு டீஷிர்ட் , சங்கி மங்கி கொண்டை என அரை லூசு மாறியே சுற்றுபவள் , அமைதியோ அமைதி , அருந்த வாலு என எந்த கட்டுக்குள்ளும் வைக்க முடியாது..அவளின் அத்தை அகலியின் தீவிர விசிறி என்பதால் ,அகலி அளவு இல்லை என்றாலும் ஓரளவு அதை விட பயங்கர சேட்டை காரி..
தன் குட்டி அத்தான் அவளுக்கு தினசரி கொடுக்கும் மொக்கைகளின் அடிப்படையில் அவளின் அன்றைக்கான சேட்டைகள் இருக்கும்…
ரீனா ,கண்ணன் தம்பதியருக்கு ஒரே மகள் மேகா, பெங்களூரில் தங்கி CA படிக்கிறாள், விடுமுறைக்கு தான் வீட்டிற்கு வருவாள்..
ரீனாவிற்கு ஜித்து என்றால் அப்படி ஒரு செல்லம் ,அகலியின் மற்ற பிள்ளைகள் தன்னை பெரியம்மா என்று அழைக்க ஜித்து மட்டும் அம்மா என்று அழைத்து பழகி இருந்தான்,அதனால் தனி பிரியம் ,சின்ன வயதில் சாப்பிடுவது தூங்குவது என அத்தனையும் தன்னோடு தான்…ஒரு வகையில் பெருமை என்றாலும் இப்பொழுதான அவனின் நடவடிக்கைகளை பார்க்கும் போது தன்னிடம் வளர்ந்ததால் இப்படி இருக்கிறானோ என ரீனா கவலை படுவதும் உண்டு…
விஷ்வா,அகலியின் கடைசி பிள்ளை ,துகிரா ,தன் மாமன்னுக்காக, அவனுக்கு பிடிக்கும் என்பதற்காக பெற்று எடுத்த ஒற்றை பெண் பிள்ளை செல்லம்மாவை விட 7 மாதம் இளையவள்..
வீட்டில் நடக்கும் இவ்வளவு பணி போரிலும் தன் அறையைவிட்டு வெளியேறாமல் உள்ளே அடைத்து கிடந்தாள்..அவள் வாழ்வில் அப்படி எண்ணப்பதான் கருப்பான பக்ககங்களோ.. அவளும் கொஞ்சம் சோபையாக தா திருகிறாள் ஒரு மாத காலமாக…..
அவள் வாழ்க்கையிலும் இடர்கள் அதிகம் காயங்கள் அதிகம் ,அதைவிட காதல் அதிகம் ஆனால் இப்பொழுது எதற்கும் அர்த்தம் இல்லை...