All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

உங்களை பற்றிய சிறு சுயவிவரம் இங்கே பகிர்ந்து கொள்ளலாம்... ஶ்ரீகலா நாவல்ஸ் குழுமத்தில் நீங்களும் ஒருவர் என்கிற எண்ணத்தை இங்கே விதையுங்கள்... நிச்சயம் நம் நட்பு சிறு செடியாகி, மரமாகி, பூத்து குலுங்கும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் பெயர் செல்வி சிவானந்தம்.
நான் பிறந்தது தமிழ் நாட்டில் முத்து நகரம். இருப்பது கர்நாடகாவின் கலை நகரமாம் மைசூர். எனக்கு மிகவும் பிடித்தது கதை, கவிதை, பாடல் கேட்பது. இசையில் என்னை மறக்கும் நான் அதிகம் ரசிப்பது அமைதியான மெட்டுக்களே. நான் இங்கு புதியவள் அல்ல. இங்கு எனக்குக் கிடைத்த தோழிகள் என் வாழ்வின் சிகரங்கள். இந்த நட்பு கொடுத்தது அன்பு, பண்பு, பாசம், நேசம், மரியாதை, மகிழ்ச்சி எல்லாம் கலந்த வாழ்க்கை பாடங்கள் அதுவே என்றும் என் எழுச்சி.
 
Last edited:
This is a good way Sasi to introduce ourselves.

ஹாய் ப்ரெண்ட்ஸ்,

படிக்க தெரிந்த வயது முதலே ஆர்வத்துடன் எண்ணிலடங்கா கதைகளையும், நாவல்களையும் படித்து
களித்த நான் முதன் முறை ஒரு நாவல் எழுதலாம் என்று முயற்சிக்க, என்னுடைய "காதலா? கர்வமா?" நாவலின் வெற்றிக் கொடுத்த மகிழ்ச்சியில் மற்றுமொரு படைப்புடன் உங்கள் முன் வந்துவிட்டேன்...

என்னுடைய முதல் நாவலுக்கு கிடைத்த ரசிகர்களையும், வாசகர்களையும் நான் என்னுடைய இரண்டாவது நாவலான மலரினும் மெல்லியவளால் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று அஞ்சி, குழம்பி, தத்தளித்துப் போயிருந்த என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்க செய்துவிட்டார்கள் எனது வாசக நண்பர்கள்...

மேலும் மேலும் என்னுடைய எழுத்துக்களால் உங்களை மகிழ்விக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்...

Name: JB
Residence: Florida
Completed Novels: காதலா? கர்வமா?
On Going Novel: மலரினும் மெல்லியவள்!
Next: கடவுளுக்கு தான் வெளிச்சம் (இது நாவலின் பெயரல்ல... என் மனசாட்சியின் குரல் ஹி ஹி)


பிடிச்சது மெலோடியஸ் பாடல்கள் கேட்பது... பாட்டு இல்லைன்னா நான் இல்லை.
அப்புறம் பெயிண்டிங்.
சமைப்பது, பிள்ளைங்களை பார்த்துக் கொள்வது - சைடுல
இப்போ புது அட்வெண்ட்சர் நாவல் எழுதுவது...

இதுக்கு மேல என்னைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை. :)

ஜே.பி
 
Last edited:

தாமரை

தாமரை
நான் பிறந்தது தமிழ் நாட்டில் முத்து நகரம். இருப்பது கர்நாடகாவின் கலை நகரமாம் மைசூர். எனக்கு மிகவும் பிடித்தது கதை, கவிதை, பாடல் கேட்பது. இசையில் என்னை மறக்கும் நான் அதிகம் ரசிப்பது அமைதியான மெட்டுக்களே. நான் இங்கு புதியவள் அல்ல. இங்கு எனக்குக் கிடைத்த தோழிகள் என் வாழ்வின் சிகரங்கள். இந்த நட்பு கொடுத்தது அன்பு, பண்பு, பாசம், நேசம், மரியாதை, மகிழ்ச்சி எல்லாம் கலந்த வாழ்க்கை பாடங்கள் அதுவே என்றும் என் எழுச்சி.
😍😍😍🌷🌷🌷🌷🌷🌷🌷
 

தாமரை

தாமரை
நான் தாமரை ... சென்னையில் வசிக்கிறேன் .பள்ளியில் கற்றது தமிழ்.. இப்போது கற்றுக் கொடுப்பது ஹிந்தி .....


வாசிப்பதை... நேசிப்பிற்கும் தாண்டி ...சுவாசிப்பிற்கு என இருப்பவள் .. தரமான எழுத்துக்களைத் தேடி வந்த என்னை அரவணைத்து ,,கருத்துஎழுதவும் தூண்டியது ஸ்ரீயின் கதை இழைகளும் ,,அருமையான கிடைத்தற்கரிய நட்பு உள்ளங்களும் ....


மிகப் பிடிக்கும்...
*******************
மனம் வருடும்மெல்லிசை பிடிக்கும்..
மனஆழம் தொடும் கவிதை பிடிக்கும்.
சமூக அவலங்களுக்கு தீர்வு சொல்லும் கதைகள் பிடிக்கும் ...
அழகாய் இருக்கும் படங்கள் ,,,மனங்கள் பிடிக்கும் .... இயற்கை பிடிக்கும் ... இயற்கை விவசாயம் பிடிக்கும் ... உணவே மருந்து எனும் மந்திரம் பிடிக்கும் ... சத்தாய் சுவையாய் சமைக்கப் பிடிக்கும் ... புதிது புதிதாய் முயற்சிகள் செய்யப் பிடிக்கும் ...

நன்றி
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் தாமரை ... சென்னையில் வசிக்கிறேன் . கற்றது தமிழ்.. கற்றுக் கொடுப்பது ஹிந்தி .....


வாசிப்பதை நேசிப்பிற்கும் தாண்டி சுவாசிப்பிற்கு என இருப்பவள் .. தரமான எழுத்துக்களைத் தேடி வந்த என்னை அரவணைத்து ,,கருத்துஎழுதவும் தூண்டியது ஸ்ரீயின் கதை இழைகளும் ,,அருமையான கிடைத்தற்கரிய நட்பு உள்ளங்களும் .... மிகப் பிடிக்கும்

மனம் வருடும்மெல்லிசை பிடிக்கும்..
மனஆழம் தொடும் கவிதை பிடிக்கும்.
சமூக அவலங்களுக்கு தீர்வு சொல்லும் கதைகள் பிடிக்கும் ...
அழகாய் இருக்கும் படங்கள் மனங்கள் பிடிக்கும் .... இயற்கை பிடிக்கும் ... இயற்கை விவசாயம் பிடிக்கும் ... உணவே மருந்து எனும் மந்திரம் பிடிக்கும் ... சத்தாய் சுவையாய் சமைக்கப் பிடிக்கும் ... புதிது புதிதாய் முயற்சிகள் செய்யப் பிடிக்கும் ...

நன்றி
அற்புதம் தாமரை
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகள் அனைவர்க்கும் வணக்கம்.

நான் ஜோஸ்பின் வான்மதி. என்னை வெளியில் யாருக்கும் வான்மதி என்றால் தெரியாது. இங்கே நம் தளத்தில் வான்மதி என்றால் மட்டுமே தெரியும். நான் வசிப்பது முத்துநகர். நான் என் பதினைந்து வயதில் கதை படிக்க ஆரம்பித்தேன். புத்தக பேய் என்று தான் வீட்டில் கூப்பிடுவார்கள். அப்படி படிப்பேன். கதை, கட்டுரை, கவிதை எதையும் விட்டு வைப்பதாய் இல்லை. தனியாக இருந்தால் இசையோடு தான் இருப்பேன். நிறைய பாடல்கள் கேட்பேன். பாடல் கேட்டாலும், கதை படிக்க ஆரம்பித்தாலும் பூமிக்குள் புதைந்தாலும் தெரியாது. அப்படி ஒரு பைத்தியம்.

திகில் நாவல்கள் நிறைய படிப்பேன். இப்பொது ஸ்ரீஉடைய நாவல்கள் படிக்க ஆரம்பித்த பிறகு ரொமான்டிக் நாவல்கள் அதிகம் படிக்கிறேன். ஸ்ரீ மட்டுமே அதற்க்கு முழு பொறுப்பு. :p

இங்கே இந்த தளத்தில் நிறைய தோழிகள் அறிமுகம் கிடைத்தது. இது எனக்கான தனி உலகம். நன்றி ஸ்ரீ.
 
வணக்கம் தோழமைகளே....!
என்னோட பெயர் உமா இருப்பது கரூர் எனப்படும் கரூவூர்.தொழில் கைத்தறி நெசவு தாங்க பரம்பரை தொழில்..படித்தது பி.காம் ...
பிடித்தம் படிப்பது, வரைவது , சமைப்பது,விளையாடுவது, புதுசா இருந்த அதை செய்து பார்ப்பது .
 

தீபஷ்வினி

꧁᭄SMS WRITER꧁᭄
ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.


அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட என் ஆசையை, கனவை சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"


இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...


உங்கள்
தீபஷ்வினி???
 
Last edited:
Top