All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சைனுஜா ஸ்ரீயின் "முதல் நீ முடிவும் நீ" கதை திரி

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே
என்னோட பழைய திரியை அழித்துவிட்டு அதே

"முதல் நீ முடிவும் நீ"

கதையை பதிவிட போகிறேன் ஆனால் இம்முறை கரு ஒன்றாயினும் பயணிக்க போகும் விதத்தில் வித்தியாசம் உண்டு சப்ரைசும் உண்டு... பழைய கதையில் என்னமோ சின்ன நெருடலும் திருப்தியின்மை தொடர்ந்து கொண்டே இருப்பதால் அதை தொடர முடியவில்லை புரிந்து கொண்டு மன்னித்து அருளுங்கள் பிளீஸ் 🙏மக்களே. நிச்சயமாக இந்த களம் உங்களுக்கு பிடிக்குமுங்கோ.

வாரத்திற்கு ஒரு அப்டேட் ...PicsArt_01-15-06.38.16.jpg
தலைப்பு: முதல் நீ முடிவும் நீ
கதாநாயகி: நிகழினி & ஷாக்சி
கதாநாயகன்: குருநாதன் & செந்தூஷான்


[காயப்பட்டாலும் கலங்க விடாது காலம்தோறும் காதலிக்கும் பெண்மையும் , எட்டாத காதலாயினும் தாய்மையோடு தந்தையாய் அன்பு செலுத்தும் ஆண்மையும் காதலின் கொடை]

கருத்து திரி
அன்புடன்
சைனுஜா ஸ்ரீ 🙂
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ - 1

அன்று சென்னை மாநகரெங்கும் சமூகவலைதளங்களில் மின்னெலென பரவி கொண்டிருந்த செய்திகளில் முதன்மையாய்
“போலிஸ்சே போலிசை அடித்த கதை” யூடியூப் இல் ஒரு புறம்


“பாரேன் இம்புட்டு நாளா நம்மை தான் அடிச்சிடிறுந்தாங்க இப்போ அவர்களுக்குள்ளே அடிச்சிக்குறாங்க”
“என்ன பிலிப்சூ.. அநாமத்தா அடிவாங்கிபுட்டியே” மெம்களின் தலைவர் வடிவேலு அந்த டெம்ளேட்டில் அடி வாங்கிய போலிஸ்சிடம் வினவுவது போல்


காவல் துறையில் உயர் பதவியிலிருக்கும் அதிகாரி அதுக்கு இனை பதவியிலிருக்கும் இன்னொரு அதிகாரிக்கு கன்னம் பழுக்க சரமாரீயாய் அறை விட்ட சம்பவம்

நக்கலும் நையாண்டியுமாக பற்பல காலேஜ் இளைஞர், மட்டும் விஐபி பாய்ஸ்களின் கைகளில் கருத்துகள் காரசாரமாய் தெறிக்கவிடபட்டு கொண்டிருக்க ..

சீரியல் ஆண்டிஸ், ரிட்டையர் தாத்தாஸ், லொடக் லொடக் பாட்டிசுக்கும் டிவி ரிப்போட்டோர்கள் வழியாய் கடைபரப்பரப்பட்டு வைரலாகி கொண்டிருந்தது.

எதிரதெரிரே உயர் அதிகாரியிடம் விசாரணைக்கு முன்வந்து நின்றிருந்தனர் குருநாதனும் அகத்தியனும்..

“மிஸ்டர் குரு என்ன காரியம் செஞ்சிட்டீங்க உங்க கூட கடமையிலிருந்த இன்னொரு அதிகாரி அகத்தியனை கை நீட்டி அடிச்சிறுக்கீங்க???... இது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா உங்களுக்கு?.... யாரோ ஒருத்தன் அதையும் போட்டோகிராப் எடுத்து எல்லா மீடியாக்கும் கடபரப்பிருக்கான் ..ஏற்கனவே நம்ம டிப்பாட் மெண்ட் மேல மக்களுக்கு நல்ல மரியாதை உண்டு .. இந்த லட்சணத்துல,..”போலிஸ்சே போலிஸ்சை அடித்தது” நியூஸ் ச்சானல், ஸ்சோசியல் மீடியானூ ஒன்னு விடாமா இந்த நீவுஸ்சை வைரலாக்க ஆரம்பிச்சுட்டாங்க”

“ஸ்சார் இப்போ என்னத்துக்கு இவங்கிட்ட காரணம் கேட்டிட்டிருக்கீங்க, எம்மேல இருக்க தனிபட்ட கோபத்தை மனசுல வச்சு பப்பிளிக்கு முன்னாடி அசிங்க படுத்திருக்கான்”... செந்நிரமாய் பழுத்த தன் இரு கன்னங்களையும் இயல்பாய் வருடியபடி கடுங்கோபத்தில் அகத்தியன்..

“காரணம் கேக்க வேண்டியது டிப்பார்ட்மென்ட் ரூல்ஸ்” பதிலளித்த பாண்டியன் குருவை நோக்கி கேள்வியாய் பார்க்க
..........


“பாரூங்க ஸ்சார் இவ்வளவு சொல்றீங்க இவன் வாயில்ல இருந்த ஒத்த வார்த்தையாச்சும் வருதா ... கல்லூளி மங்கனாட்டம் அப்படியே நிக்குறான்...

“தவறு செஞ்சவன் தான் ஸ்சாரி கேப்பான் , இல்லை காரணம் சொல்லி சப்பக்கட்டுகட்டுவான் சரினு தெரிஞ்சே தான் செஞ்சேன்” என்று விட்டு கைகளை பின் புறமாய் கட்டியபடி குருநாதன் விறைப்பாய் நிற்க

கோபத்தில் பல்லை கடித்த அகத்தியனை தொடர்ந்து

“குரு குறுகிய காலத்தில் உங்க செயல் பாடும் உங்க வேலை மேல நீங்க காட்டும் டெடிக்கேசனும் அன்பீட்டபில் பட் இந்த மாதிரி உங்க முன் கோபத்தில் தேவையில்லாத பிளாக்மார்கஸ் கிரியேட் பன்றீங்களே! சொல்ல வருத்தமா தானிருக்கு இருந்தாலும் மிஸ்டர் அகத்தியனை அடிச்சதாழும் இந்த இஷு மீடியாக்கு போய் டிப்பார்ட்மென்ட் நேம் வயலேட் ஆனதாழும் யூ ஆர் அன்டர் சஸ்பன்ஸ் ப்போர் த்திரீ மந்த்..

போலீஸ் தொப்பியை கட்டினாலும் தப்பு செய்யாத தெனாவட்டும், போலிஸ்காரருக்கே உண்டான கெத்து ஓடு கண்ணில் கூலிங் கிளாஸை மாட்டியபடி வெளியேறிய குருநாதனை கண்டு வந்த மகிழ்சியும் திருப்திபடாமலிருக்க..

“டேய் குரு என்னையே அடிச்சிட்டேல .. நேத்து முளைத்த காளான் நீயெல்லாம் இந்த ஆட்டம் காட்டும் போது பத்து வருசமா இந்த டிப்பார்ட்மன்ட்ல இருக்கன்டா நா... இனி பொலிஸ்காரனுனக்கே போலீஸ் ரவுசு காட்டுறேன் பாத்திட்டிறு”... அகத்தியன்

ஆஹாவ் கொட்டாவி விட்டு கையை முன்னீட்டி நெட்டி முறித்தபடி வாயிலை அடைந்திருந்த குருநாதன் சட்டை பாக்கேட்டிலிருந்த போனை எடுத்து யாரூக்கோ டயல் செய்து பேச ஆரம்பித்தான்

“ஹாய் மீ.. என்ன டைம் நீ வீட்டுக்கு வருவ?"
....


“சூப்பர் ... அப்பவே வாரேன் ஓகே தானே"

“லீவா அதை பத்தி கவலைபடாத , மிஸ்டர் அகத்தியன் மூலமா கிடச்சிறுச்சு.. அப்படி தானே அகத்தி யா” அகத்தியனை நக்கலாக நோக்கிய குருவின் பார்வை பிடிக்காது.

“ச்சே இவனை வேலையை விட்டு தூக்கி அவமானபடுத்த நாம நினைச்சா.. எந்த கவலையுமில்லாம இவன் நம்மை கடுப்பேத்திட்டிறுக்கான்”
**************


வழக்கத்தை விட அன்று செந்தூஷான் ஏனோ பதற்றமாயும் தடுமாற்றத்துடனுமே நடமாடிக் கொண்டு இருந்தான் உண்மையை சொல்லப் போனால் அவன் அவனாகவே இல்லை....


கோவிலில் நின்றவனுக்கு மனம் அமைதி அடையவில்லை ....மனம் ஏனோ படபட என துடித்து கொண்டது


"என்னால இப்படி இவளை விட்டு UK கலம்ப முடியுமோ " எனும் என்னமே அவனை வாட்டி எடுக்க..... அவன் நெற்றியில் ஷாக்சி வைத்துவிட்ட திருநூற்றை வருடியவனுக்கு கண்களில் பெரும் ஊற்று எடுத்தது.....


தன் கண்ணீரை அவளிடம் மறைக்க என்னி சற்று தள்ளி வந்து நின்றிருந்து
தன்னை சமன் செய்தவன் காரை எடுத்து கொண்டு மீண்டும் கலம்புகையில் தான் அவன் மனம் மீண்டும் பேயாட்டம் போட துவங்கியது..



அதற்கு ஏற்றாற் போல் அவளும் தன் கேள்வியை தொடுத்தால்...


"ஏன் செந்து மனசுல ஒன்னு வச்சுகிட்டு வெளீல ஒருமாதிரி நடந்துக்கிரீங்க??"


"எது நானா அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே தட்டு தடுமாரி அவன் சமாளிக்கவும்


"திரும்பி திரும்பி எதுக்காக இதே பொய் ஐ சொல்றீங்க. என்னை விட்டு பிரிய முடியாம தவிக்கிற நீங்க எதற்காக தீடிர்னு தனியா UK கலம்பனும்னு சொல்லுங்க செந்தூ".. இந்த முறை ஷாக்சியால் ஆதங்கத்தையும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.


"அச்சோ இவ விட மாட்டா போலயே" என்று உள்ளுக்குள் உண்மையை சொல்ல முடியாது பரிதவித்தவன்.....


"இங்க பாரூ ஷாக்சி நான் உன்கிட்ட அப்படி வந்து சொன்னேனா...நீ சும்மா தேவை இல்லாம ஏதும் பேசி துளையாத" என தன் பதற்றத்தை முயன்று வார்தைகளில் வெளிப்படுத்தாது கடுமையான தொனியில் அவள் பேசுவதை தடுத்தவனை......


அவளோ விடுவதாக இல்லை.....


"செந்து திஸ்இஸ் லாஸ்ட் எனக்கு நீங்க சரியான காரணத்தை சொல்லாம மறச்சு நானும் வருந்தி நீங்கலும் தேவையில்லாம வேதனையில புளுங்கி கரையாம என்கிட்ட தயவு செஞ்சு சொல்லுங்க" என்று அவனிடம் கைகளை குவித்தபடி கேட்டவளிற்கு இதயம் ரணமாய் வலித்தது....


அதற்கு கூட அசையாத அவனின் அமைதி தொடரவே இந்த வார்தைகளை அவள் சொன்னால்......


"ஓகே அப்ப உங்களுக்கு என்னை விட்டு பிரிஞ்சு போறது சரின்னு படுதுல்ல அப்ப இதயும் ஞாபகம் வச்சுக்கோங்க"...


" இனி நானே ஆசப்பட்டாலும் திரும்பி உங்க லைப்ல வரமாட்டன் நீங்கலா என்னை மனசார கதறி கூப்பிடிர வரையும்".....


அவன் மனதினை மாற்ற இவள் இப்படி சொல்லி வைக்க....


விதியோ மேலிரூந்து நீ சொன்னது
பலித்தமாகட்டும் சுவாகா என்றது.....



இவள் வார்தையில் அதிர்ந்த அவன் தடுமாரி தடம்மாரி போனான் அவனது கைகளில் இருந்து கட்டுபாடை இழந்த ஸ்டியரிங் தாறுமாறாய் அசைய காரின் வேகமும் அதற்கேற்றாற் போல தாறு மாறானது


அவளின் பேச்சின் அதிர்வில் அவன் உதடுகள் உண்மையை சொல்ல போக எத்தனிப்பதற்குள் அவர்கள் வாழ்வே தலைகீழாய் மாரி போயிருந்தது.

************
 
Last edited:

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெற்றோலில்லாது பாதியில் நின்ற வண்டியை விட்டு இறங்கிய குரு. கைகளால் பின்னந்தலையை அழுத்த கோதியபடி விடிவிளக்கு ஒழி மட்டும் நிறைந்த அந்த இடத்தில் அவசர தேவைக்காக வண்டியில் சேமிப்பாய் பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெற்றோலை எடுத்து டாங்கை நிறப்ப ஆரம்பித்தான்...

அப்போது திடீரென்று

"செந்தூ !!! .... என்று கத்திய ஒரு பெண்ணின் அழுகை நிறைந்த அவளக்குரலை தொடர்ந்து மீண்டும்..

'யாராச்சும் காப்பாத்துங்களேன்!!!" என்று அவள் கத்துவது கேட்டது...

திடுகிட்டு எழுந்த குருநாதன் சுத்திமுத்தி சத்தம் வருகின்ற திசையை கணித்தவன் என்ன என்பதை பார்க்க எத்தனிக்க பாலத்திற்கு கீழே தலை கீழாய் பிறண்டு கிடந்த கார் ஒன்றின் விம்பம் தெரிந்தது போன் லைட் வெளிச்சத்தில் அவசரமாய் அந்த இடத்துக்கு விரைந்தவனுக்கு ரத்த வெள்ளத்தில் மரத்தோடு சாய்ந்துகிடந்த செந்துஷான் மட்டுமே தெரிந்தான்..

குரல் கொடுத்த பெண்ணவள் எங்கே என்று யோசித்தபடி தன் மொபைலை எடுத்து ஆம்பிளன்சுக்கும்.. அந்த ஏறியா அருகிலிருக்கும் போலிஸ் டேசனுக்கு கோல் பன்னி விபரம் சொன்னான்..
************


நேரம் நடுநிசி வேலையது நேற்றைய மழையின் மிச்சமாய் உடலை ஊடுறிவி உறையச் செய்யும் குளிர்பரவிக்கிடக்க...

அதுவரை யாரூமற்று தனிமையாய் இருந்த அந்த வீதியிலே தோலில்
ஒரு கைபையும் கையில் ஒரு சிறு சூட்கேஷ் என ஒரு இளம் வயது யுவதி தன் செல்லப்பிராணி சகிதமாய் எந்தவித அச்சமுமின்றி மருளாத நேர் பார்வையும் , தடுமாற்றமில்லா நடையோடும் வந்து கொண்டிருந்தால்..


(ஆனால் அவளது காதுகளில் போட்டிறுந்த ஹெட்செட்டில் ஒலித்து கொண்டிருந்த பக்தி பாடல்கள் மட்டுமே அவளது தைரியத்துக்கு காரணமா என்று கேட்டால் நான் சொல்ல மாட்டேனே😷)..

அப்போது அதுவரை அந்த இளம் யுவதியோடு சமத்து பிள்ளையாய் வாலை ஆட்டி கொண்டிருந்த அவளுடைய நாய் பைத்தன் திடீரென அந்நியனாய் மாறி கத்தி கூட்பாடூ போட அது கூட தெரியாது சிறுதூரம் நடையை தொடர்ந்து கொண்டிருந்தவள் ... அந்த நாய் அவளின் சட்டை இழுத்து சொல்ல விளைவது புரிய காதுகளிலிருந்து ஹெட் செட்டை எடுத்து "என்ன பைத்தன்... என்னாச்சுடா?"... என்றாள் கேள்வியாய்..

பைத்தன் குறிப்பிட்ட ஒரு திசையை நோக்கி கத்தி கொண்டு முன்னேர தானும் அந்த பக்கமாய் நோக்கியவள் அதிர்ந்து போனால் ஒரு விலை உயர்ந்த கார் வேகத்தை மட்டுபடுத்த இயலாது தட்டுதடுமாறி கட்டுபாட்டை இழந்து தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது அது நோக்கி வந்து கொண்டிருந்த திசையின் பக்கமாய் ஒரு பிளாட் போரமிருக்க அதில் சில வீடற்ற மக்களும்,முதியோரும் மழைக்கு ஒதுக்கமாய் தங்கள் சிறு பிள்ளைகள், குடும்பமென தூங்கி கொண்டிருந்தனர்.... இந்த அசம்பாவிதம் மட்டும் நடந்தேறினால் அவர்களது ஆழ்ந்த தூக்கம் நிறந்தர தூக்கமாகிவிடும்...

நெஞ்செல்லாம் குளிரெடுத்து பயத்தில் கை சில்லிட்டு போக ..வேகமாய் அந்த பெண் என்ன செய்வது என்று ஆராயும் போதே உதடுகள் அந்த செல்ல பிராணியை நோக்கி .... "பைத்தன்!!!!!....இப்ப என்னடா செய்யுறது".... அவஸ்தையாய் மொழிந்தது... அந் நொடி அவளுடைய மூளையில் எதோ ஒரு எண்ணம் சிறு கீற்றாய் மின்னல் வெட்ட...தன் பாக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை துளாவி எடுத்தவள் தன்னுடைய பிளானை அந்த நாயுக்கு வேகமாய் சொல்லியபடி அந்த பிளாட் போரபக்கம் ஓடி விரைந்தவள் ... தன்னால் முடிந்தளவு கூச்சலிட்டபடி கத்தி கொண்டே தண்ணீர் பாட்டிலிருந்த தண்ணிரை அங்கிருக்கவர்கள் மேல் தெளித்து எழுப்ப ..பைத்தன் தானும் தன் பங்கிற்கு குலைத்தபடி அங்கிறுப்போரை உலுக்கி எழுப்ப முயன்றது...

அவளின் சத்தம், தண்ணீர் தெளிப்பு, நாயின் குளைச்சலும் உலுக்கழும் என்று எரிச்சலோடு....

"எந்த பொர***** பே***** நைட் நேரத்துல எழுப்பி கடுப்பை கலப்புறது"... அவளை பைத்தியமோ என்ற பார்வையில் கோபமாய் பேச பொங்கி எழுந்தவரெல்லாம் நடக்கயிருக்கும் விபரீதத்தை உணர்ந்த நொடி வேகமாய் தங்கள் பங்கிற்கு தாங்களும் அக்கம் பக்கம் படுத்திருந்தவர்கள், சொந்தங்கள் பிள்ளைகள் குழந்தைகள் என்று அணைவரையும் கலப்பி கொண்டு எழுந்தவர்கள் எல்லோருமாய் பாதுகாப்பாய் மற்ற திசை நோக்கி ஓடினார்...

பதற்றத்தில் எல்லோரும் முக்கியமாக சிறு குழந்தைகள் பாதுகாப்பாக மீண்டு விட்டார்களா ...அல்லது அங்கு யாரூம் தவறவிடபட்டிறுக்கிறார்களா என்ற பதற்றத்தில் பயத்தோடு விழிகளால் அலசி கொண்டிருந்த அந்த இளம் பெண்ணவள் தன்னை நோக்கி அந்த கார் அருகில் வந்து கொண்டிருப்பதை உணர மறந்து நின்றுக்க....

திடீர் அங்கு வந்து சேர்ந்த பெரியவர் ஒருவர் அவளது நாயையும் கலப்பிவிட்டு அவளையும் கையை பிடித்து வேகமாய் அங்கிருந்து இழுத்து கொண்டு சென்றுவிட ...

அந்த கார் சரியாக அவள் முன்னர் நின்ற இடத்துக்கே கட்டுபாடின்றி பயணித்து அங்கிருந்த தூண்கம்பத்தில் தாரூமாறாய் முட்டுபட்டு ஒருமாதிரியாய் நின்றது...

பெரூமூச்சொன்றை இழுத்துவிட்டு தன்னை காப்பாற்றிய பெரியவரை அவள் நன்றியாய் திரும்பி பார்க்க ... அங்கிருந்த மற்ற மக்கள் அவளை நன்றியோடு பார்த்து துதித்தனர்...

"எம்மா யாரூம்மா நீ..... நீ மட்டும் எங்களை சரியான நேரத்துக்கு வந்து எழுப்பியிறுக்காட்டி எங்க நெலமை என்னாயிருக்கும்".... என்று பயத்தில்... வியர்த நெற்றியை துடைத்தபடியும் தங்கள் குழந்தைகளை ஆதரவாய் தங்களோடு அணைத்தபடியும் அவளை நெறுங்கி கண்களில் நன்றி பெருக்கோடு அவளை வணங்க...

அங்கிறுந்த சில மத்திம வயது ஆண்கள்... "எந்த பணக்கார...பே**** குடிபோதையில நம்மளை கொல்லபாத்திச்சோ அதோ எப்படி முட்டுபட்டு கெடக்குறான் பாரூங்க".... என்று சொல்லியபடி கார்பக்கமாய் சென்று கதவை திறந்து பார்தால் அங்கிருந்ததும் வயதான பெண் தான்
தலை வேகமாய் அடிபட்டதால் சிறுதாய் ரத்தம் சொட்டியபடியிறுக்க முற்றாய் மயங்கி போய் கிடந்தார்....


"நாங்க... எதோ குடிகார பயனு பாத்தா இங்க எதோ வயசான அம்மா அதுவும் அடிப்பட்டு ரத்த காயங்களோட சுய நினைவு இல்லாம மயங்கி கிடக்குறாங்க" அதில் நின்ற ஒருவன் குரல் கொடுக்க ....

"என்னடா சொல்லுற என்றபடி" ஓடியவர்கள் அணைவரோடும் தானும் விரைந்து செல்ல விளைந்தவளை

"நிகழிம்மா இங்க என்னமா செய்யுற" என்றபடி தன் பெண்ணுக்கு அடியும் படவில்லை தானே என்று அவளை ஆராய்ந்து பெருமூச்சு விட்ட பெரியவரை நோக்கி...

"அப்பா ..நீ எப்போப்பா வந்த....இங்க என்ன நடந்திச்சு தெரியுமா".... என்று நடந்தவற்றை விளக்கியவளுக்கு..

"தனியா வராத..வராதேனு சொன்னா கேக்குறியா நீ... கூடயிந்த அப்பா வரட்டுமானு..... ஏதும் கேட்டா... நா என்ன என்னும் சின்ன பொண்ணா நீ கூட வாரதுக்குனு குதிக்குற....பத்தாக்குறைக்கு இதோ இந்த பைத்தன் பைத்தியம் துணையா கூட வருது அதவிட எனக்கென்ன பாதுகாப்பாயிருந்திட முடியும்ற.... அந்தக்காரூ உன்ன நோக்கி வரும் போது இந்த சனியன் ..பூப்பரிச்சிட்டா நின்னுச்சு"...... என்று அவளுடைய தந்தை அவளை கடிந்தபடி பைத்தனை பார்த்து முறாய்க்க..

தலையை தொங்க போட்டு "உவ்...உவ்" என்று மெல்லமாய் முனங்கிய பைத்தன் நல்லபிள்ளையாய் நிகழினியின் பின்னால் பயத்தில் மறைந்து ஒழிந்து கொண்டு நிற்க ...

"உண்மையை சொன்னோன அவளுக்கு பின்னால நல்ல பிள்ளையாட்டம் பம்முறியா ....வீட்டுபக்கம் வா நீ சாப்பாடு போடாம் உன்னை பட்டினி போடுறன்".... என்று அறிவுடைநம்பி சிடுசிடுக்க

"அப்ப்...பா!!!.. எனக்கொன்னுமில்ல நான் நல்லாதானிருக்கேன், அவனை சும்மா நீ திட்டாத அவனும் என்னை மாதிரி தான்".. என்று பைத்தனுக்கு வக்காளத்து வாங்க வாய் திறந்தவளை...கைகாட்டி பேசாதே என்று தடுத்த அறிவுடைநம்பி...

"இவரை சொன்னோன உங்களுக்கு கோபம் பொத்திக்கிட்டு வந்திருமே"...முகத்தை உம்மென்று வைத்து நின்ற மகளை அப்படி பாக்க சகிக்காது....

"சரி அப்பா பேசுனதுக்கு ஸ்சோரி....எலே அதான் நா உன்ன ஒன்னும் சொய்யாம எம்மகளை உன் கைக்குளள வச்சிறுக்கலே...அப்புறம் எதுக்கு இந்த நடிப்பு..... அவ காலுக்கு கிட்ட ஒழியாம வெளீல வந்து காரூக்குள்ள போய் ஏரு" என்று பைத்தனிடம் சிடுசிடு என்று அலுத்து கொண்டே கட்டளையிட்டவர்....

"இராசாத்தி வா நாம வீட்டுக்கு கலம்பலாம்"... என்று அறிவுடை நம்பி அவளையும் அழைத்து கொண்டு கார் பக்கமாய் செல்ல விளைய...

"இறுப்பா நீ ..., காருக்குள்ள இருக்க அந்தம்மாக்கு என்னாச்சோனு தெரியலை"... என்று சொன்ன நிகழினி தகப்பனோடு வேகாமாய் அந்த விபத்தான கார்பக்கமாய் செல்ல...

"எம்மா யாரூ எப்படி போனா உனக்கென்ன.. இதெல்லாம் போலிஸ் கேஸ்மா நமக்கெதுக்கு வேண்டாத சோலி .,, எதோ இவங்களை காப்பத்தினியா வந்தமானு வந்திறுமா".... என்று நிகழினி பின்னாலயே அறிவுவுடை நம்பி புலம்பி கொண்டு தடுத்து கூட்டி போக விளைய அவளை பொருட்படுத்தாத நிகழினி ...

"ப்பா இவங்க தலை எல்லாம் அடிபட்டு ரத்தமாயிருக்கு வா நம்ம காரூலயே கூட்டிட்டு போய் ஹாஸ்பிட்டல்ல சேட்கலாம்".... என்று அவரிடம் சொன்னவள்... அங்கிருந்த சிலரை நோக்கி ..

"அண்ணா இந்தம்மாவை எங்க காரில ஏத்துரீங்களா பிளீஸ்"...... என்று அங்கிறுப்பவர்களிடம் சொல்ல "ஏன்மா உனக்கு வேண்டா த பிரச்சிணை"... என்று அவளுடைய தகப்பனை போலவே சிலர் ஆலோசணை சொல்ல ..."ஆமாப்பா வந்திரு கண்ணு".... என்று அறிவுடைநம்பி வேறு கெஞ்சலாய் அவளுக்கு பின்பாட்டு போட அவரை உறுத்துவிழுத்து கண்களால் அடக்கிய நிகழி ...

"பிளீஸ்ப்பா ஒரு ஜீவன் உயிருக்கு போராட்றதை பாத்திட்டு சும்மா கையாலாகத தனததில் விட்டிட்டு நமக்கென்னனு போறமாதிரி பாவம் இந்த உலகத்தில் கொலை பாவத்தை விட மோசமானது...... என்று சில நொடி எதையோ நினைத்து கண்களை இறுக மூடித்திறந்தவள் உணர்வற்ற குறலில் சொல்லி அவர்களை வேகபடுந்தவும் தன் மகளின் குரல் வேறுபாட்டில் உணர்ந்த உணர்வை அவளை நன்கு தெரிந்த நல்ல தந்தையாக புரிந்து கொண்ட அறிவுடைநம்பி...

"நீ வா ராசாத்தி நாமா இந்தம்மாக்கு எதுவும் நடக்காம காப்பாத்திடலாம்".... என்று நிகழியின் தோலை பற்றியபடி காருக்கு அழைத்துச் சென்றவர்.....

சொன்னது போலவே அந்த விபத்தானவரை ஹாஸ்பிட்டலில் சேர்த்து மருத்துவ செலவையும் தானே தன் மகளுக்காய் ஏற்று கொண்டார்...

"நிகழிம்மா.... அந்த பெரியவங்களை பத்தி எதுவும் விபரம் தெரிஞ்சுதாம்மா"

"இல்லப்பா...அவங்க காரை செக்பன்னும் போது பர்ஸ் அது இதுனு எதுவுமில்லையாம் போன் மட்டும்தானிருந்திச்சு ... அவங்க விங்கர் பிரிண்டை கொடுத்து ஓப்பன் பன்றதுக்கு அவங்க முழிக்கனுமே".. என்று வாயை பிதுக்கியவளிடம்....

"சரிம்மா இதுக்கப்ரமா அப்பா பாத்துக்குறேன்.. உனக்கு பயணகளைப்பு அசதியா இருக்கும் நீ வீட்ட போய் ரெஸ்ட் எடு" என்றவரிடம்....

"இல்லப்பா நானும் உங்கூடேயிருக்கேன்"... என்று அவள் மறுப்பாய் சொல்லி அவர் முகத்தை பாவாமாய் கெஞ்சலாய் பாத்துவைக்க ...

"ஆவூனா இப்படியே பாத்து அப்பாவை ஆப்பனிடு".... என்று புலம்பியவர்
"சரி இரு இராசாத்தி அப்பா இதோ வரேன்" என்று அங்கு ஹாஸ்பிட்டலிருந்த காண்டினுக்கு சென்று சூடாய் அவளருந்துவதுக்கு டீ வாங்கி வந்து கொடுத்தார்...


"என் செல்லம்ப்பா நீ.. என்று அவரின் கன்னத்தை பிடித்து கொஞ்சியவள்...காப்பியை உறஞ்சி ரெண்டு வாய் அறிந்தியவள்...
"ப்பா... அப்படியே பைத்துனுக்கு பால் ஒன்னு வாங்கி குடிக்க கொடுக்குறியா பிளீஸ் என்றுவிட்டு மீண்டும் காப்பியை உறிஞ்சி குடிக்க...


அவளை முறைத்த அறிவுடை நம்பி "அதுக்கு தானே ...பாலென்ன பாய்சனே வாங்கி வைக்குறேன்" என்று சிடுசிடுக்க...

"அப்ப்..பா என்று கோபமாய் பல்லை கடித்தவளை கண்டு பெருமூச்சொன்றை விட்டபடி

"அந்த குட்டிபிசாசை சொன்னா மாட்டும உனக்கு கோபம் பொத்திகிட்டு வந்து அப்பா அதுக்கு தான் பால் வாங்க போறேன் நீ ஒழுங்கா இதை குடி என்றவர் மனதுக்குள் பைத்தனை வைதபடி அந்த இடத்தை விடு மீண்டும் நகர்ந்தார்"...

"ஒத்த பொண்ணுனு செல்லம் கொடுத்து பையனாட்டம் வளர்த்தா
அவளோ அவங்கப்பாவிட்டிடு அந்த நாயை செல்லம் கொடுத்து பாத்துக்குறா".... என்று அவள் மேலிருந்த பாசதில் பைத்தனுடையதும் தன்மகளுடையதும் பாசபிணைப்பில் சிறுபொறாமையுற்ற வண்ணம் அந்த தந்தை புலம்பி கொண்டு போக...


"இந்தப்பா இருக்காரே".... என்று தன் தந்தையை நினைத்து நிகழினியின் இதழ்கள் சிரிப்பில் விரிந்த அதே நேரம்...

ரத்த காயத்தில் இருந்த செந்தூஷானை அதே வைத்தியசாலையில் தூக்கி கொண்டு
வந்து அவசர சிகிச்சையை மருத்துவர்களை கொண்டு ஆரம்பிக்க வைத்தவன்.


போனை எடுத்து தாயிற்கு அழைக்கவும்.

இங்கே நிகழினி கையில் வைத்திருந்த மொபைல் சினீங்கியது.

குரு கோலிங் என்று மொபைல் திரை காட்டவும் அவர்களின் சொந்தக்காரர் யாரோ அடிப்ட்ட விபரத்தை சொல்வோம் என்று அழைப்பை ஏற்றி அவள் பேச விழையும் போதே....

'ஸ்சோரி மீ .. எனக்காக பாத்திட்டிறுக்காம வீட்டுக்கு போ மீ.. இங்க ஒரு ஆக்சிடன்ட் கேஸ் விசயமா வேலையிருக்கு" என்று படபட என்று கூறியவன் தாயின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கவும்‌‌..

மறுபக்கம் நிகழினிக்கு ஏனோ அவனின் குரல் அவளுள் ஆழ்ந்து உயிர் வரை தீண்டி உறைய செய்தது போலிருந்தது
"இந்த குரல்!!!..." சத்தமாய் என்ன சேதி என்று சொல்லாது மத்தளமிட்டு குதித்த அவளின் மனதின் மொழியை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை"


"ஹலோ...மீ நா பேசுறது கேட்குதா"

ஹலோ!!!!....

மறுபக்கம் அவள் தன்னிலை திரும்பி பேச ஆரம்பிக்க முதல் அவனது ஆப்பிஸ் போனில் இருந்து அழைப்பு வர அதை எடுத்து பேசிய குருவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது..

"குரு ஸ்சார் விபத்து நடந்த இடத்தை சோதிச்சதுல விபத்தான காரை தாண்டி இன்னொரு கார்ரோட நம்பர் பிளேட் கிடச்சிது அதை விசாரிச்சு பாத்ததுல" என்று சற்று தயங்கிய அந்த ஏறியா இன்ஷ்பெக்டர்..

"அது உங்க பேர்ல தான் ஸ்சார் ரெஜிஸ்ட்டராயிருக்கு" என்று அதன்‌ நம்பரை சொன்னான்...

தொடரும்...

கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்க மக்களே
கருத்து திரி
 
Last edited:
Hi mam nice start, guru eduku adithya va adicha unaku leave venum nu adichiya ella Vera reason ah, shakshi ki Enna achi, avalukum accident agidicha, nice epi mam thanks.
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam nice start, guru eduku adithya va adicha unaku leave venum nu adichiya ella Vera reason ah, shakshi ki Enna achi, avalukum accident agidicha, nice epi mam thanks.
சகோ உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி . அடுத்த எப்பியில் அதற்கான விடை வரும் சகோ

மேலே போஸ்ட் டில் கருத்து திரியை மென்சன் செய்ய மறந்துவிட்டேன்
சின்ன ரிக்குவஸ்ட் இனி உங்கள் கருத்துக்களை கருத்து திரியில் பகிர் வீங்களா பிளீஸ்..
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ- 2

நடுங்கும் கரங்களோடு தன் தாயின் போனில் அழைப்பினை குரு மீண்டும் கனெக்ட் செய்த போது அதற்காகவே காத்திருந்ததை போல படபட என்று நடந்த விபத்தையும் அவர் எங்கே அட்மிட் செய்யபட்டிருக்கார் என்ற விபரத்தையும் கோர்வையாக அடுக்கிய நிகழினி பேசி மூடித்து மூச்சு விடுவதற்குள் போன் கீ என்ற இரைச்சலோடு கட் செய்யபட்டிருந்தது தெரிந்தது.

"யாரிது பேச முதலே கட் பன்னிட்டாங்களே.. ஏதோ வந்து சேந்தா சரி" என்று தோளை குலுக்கியவள் அப்போது தான் போன் ஆப் ஆக முதல் டிஸ் பிளேயை கவணித்திருந்தால்.
உள்ளே விபத்துக்குள்ளாகியிருந்த பெண்மணி புன்னகை முகமாய் அமர்ந்திருக்க அவரை அணைத்து கொண்டு தலைமேல் தலைசாய்தபடி ஒரு இளைஞனும் புண்ணகை முகமாய் அருகில் அமர்ந்திருந்தான்.


அவனை அவளுக்கு தெரியவில்லை ஆனால் அந்த பெண்மணியை.

"இந்த அம்மாவை பாத்திருக்கனே எங்கயோ" முகத்தில் ரத்த சொட்டியதாழும், அவரை கொண்டு வந்து சேர்க்கும் போது இருந்த பர பரப்பிலும் கருத்தில் பதியாத முகம் இப்போது தான் சிறிது சிறிதாக அவளுக்கு அடையாளம் தெரிந்தது.

போனை எடுத்து கூகிலில் சில கீ வேர்ட்சை அவள் தட்டியபோது அந்த விபரமும் கிடைத்தது.

ஜான்சி தீ அயர்ன் லேடி ஆப் இந்தியா என்று தேசிய ரீதியில் கருதப்படும் பெண்மணி என்று விசேடமாய் அவர் பெயரோடு அடிக்கோடு இடபட்டிருந்தது. இருபத்தி மூன்று வயதில் நடந்த ஒரு கார் விபத்தில் முதுகு தண்டில் ஏற்பட்ட எழும்பு முறிவோடு கால்களும் செயலிழந்து போன போதும், பிள்ளை பிறக்காது என்று கணவன் அவரை விட்டு விலகிய போதும் பெட் பேசண்டாக இருந்த தன்னை உடல் அளவிழும் மன அளவிழும் திடபடுத்தி கொண்டு வர்ணங்களால் மாயஜால ஓவியங்கள் பலதை தீட்டி அதனோடே தன்னை மற்றவர்கள் பரிதாபமாய் பார்க்க கூடாதென்ற வைராக்கியம் மிக, பல தொலைகாட்சி மற்றும் சர்வதேச நிகழ்சிகளை தொகுத்து வழங்குவது, இவன்ட் ஆர்கனைஸ் செய்வது என்று தன் வரவை பதிவு பன்னி கொண்டே வந்தவர். காலம் தாமதிக்காது அடுத்த இரு வருடத்திற்குள்ளையே ஆசிரமத்திலிருந்து மூன்று வயது குழந்தை ஒன்றை தன் பிள்ளையாய் தத்தெடுத்து சந்தோசமாய் வாழ்கையை ஆரம்பித்திருந்தவரின் அந்த மகன் இன்று குருநாதன் ஐ பி எஸ் போலிஸ் துறையில் துணை ஆணையாளராக சென்னையில் பணியாற்றுகிறான்.

என்று விக்கிபீடியாவில் இருந்த தகவலை சிறிதே வேக வேகமாய் படித்து பார்த்தவள் வியந்தபடி நிமிர்ந்த போது.

குரு வார்ட் கண்ணாடிக்குள்ளே அட் மிட் செய்ய பட்டிருந்த தாயை தவிப்போடு பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

"யாரிது" சட்டென்று எழுந்து அருகில் சென்று அவனது முகத்தை பார்தவளுக்கு இப்போது அடையாளம் தெரிந்தது இது அந்த ஜான்சி அவர்களின் மகன் குரு நாதன் என்று.


"நிகழிம்மா பைத்தனுக்கு பால் வாங்கி குடுத்துட்டேன், அப்பாவும் எம்புட்டு நேரமா தான் இங்கிட்டு அங்கிட்டுமா நடந்திட்டே இருக்கிறது அந்தம்மாவோட சொந்த காரங்க யாராச்சுக்கும் தகவல் சொல்லிட்டு கலம்புவோம் வா" என்று முன்னால் நின்ற குருவை கவணிக்காது படபட என்று பேசி கொண்டே போன அறிவுடை நம்பிக்கு.

"அப்பா அதெல்லாம் வந்திட்டாங்க, அந்தா நிக்குறாரே அவரு அந்தம்மாவோட பிள்ளை" என்று அவள் தானரிந்த விபரத்தை தகப்பனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கிருந்து வந்து காவலதிகாரி ஒருத்தர்.

குருநாதனை கண்டு ஸ்சார் என்று சல்யூட் அடித்துவிட்டு பேச ஆரம்பிக்க அவனோ எதுவுமே கருத்தில் பதியாதவனாய் தாயை மட்டும் முடிக்கிவிட்ட பொம்மையை போல் அதே இடத்திலிருந்தபடி தவிப்போடு பாத்திருந்தான்.

சூழ் நிலை அறிந்த காவலதிகாரி அவனை விட்டு நிகழினி அறிவுடைநம்பி அவர்கள் புறம் வந்தவர்.

"நீங்களா இவங்களை இங்கே அட்மிட் செஞ்சது" என்றபடி அங்கு என்ன நடந்தது என்பதை கேட்டுக் குறித்து கொண்டவர்.

"இந்த ஆக்சிடன்ட் கேஸ் பத்தி எங்களுக்கு ஏதும் விபரம் தேவைபட்டாலோ, தெரிய வேண்டியோ இருந்தா நாங்க கூப்பிடும் போது நீங்க ஸ்டேசனுக்கு வந்து இந்த கேஸ் இன்வெஸ்டிகேசனுக்கு நீங்க கோப்ரேட் பன்னனும்".

"என்ன ஸ்சார் உயிருக்கு போராடுவங்களை கொண்டு வந்து அட்மிட் செஞ்சா , கேஸ் அது இது ஸ்டேசனுக்கு வந்துட்டு போங்கனுறீங்க , ஸ்சார் நாளைக்கு பின்ன வெளீல இருக்கவங்க என் பொண்ணை எதாச்சும் தப்பா நினைச்சா அவளுக்கு கல்யாணம் காட்சினு நான் பன்னி பாக்குறதில்லையா என்ன ?"

"ஸ்சார் இப்ப எதுக்கு டென்சனாகி பபிப்பிடுறீங்க, உங்க
பொண்ணுக்கோ இல்ல அவங்க பேருக்கோ இதனால எந்த பாதிப்பும் வராது ஜஸ் ஒரு பாமிலிட்டிக்கு தான்" சற்று பயந்திருந்த அறிவுடை நம்பிக்கு தெளிவு படுத்தி நம்பிக்கை கொடுத்து . "சரி உங்க ரெண்டு பேர் டீட்டெய்ல்சயும் சொல்லுங்க" என்று கேட்கவும் முதலில் தயங்கினாலும்.


எஸ்.அறிவுடை நம்பி ரிட்டையார் சிவில் இன்ஜினியர், அவ என் பொண்ணு நிகழினி இவெண்ட் மெனேஜர் A.N இவெண்ட் ஓர்கனைசிங் நூ சின்னதா கம்பணியை ரன் பன்றா.

இங்கே காவல் அதிகாரிக்கு தங்களை பற்றிய தகவல்களை இவர்கள் கொடுத்து கொண்டிருக்க, சிகிச்சையை முடித்த வெளியேறி டாக்டர் குருவோடு பேச ஆரம்பித்தார்.

"டோன்ட் வொரி குரு நவ் ஷீ இஸ் ஆல் ரைட், நா பாத்த வரைக்கும் உங்கம்மா மெண்டலி ஸ்டிரோங்கான வுமன் அப்பிடியிருக்க வேறு என்னாச்சுனு தான் தெரியலை கவணமா அவங்களை பாத்துக்கோங்க"

என்று அவனது தோலை தட்டி விட்டு டாக்டர் நகர்ந்துவிட தாயினருகே சென்றமர்ந்தவன் தலை வருடி அவர் கண்விழிக்க காத்திருந்தான்.

ஒன்றரை மணி நேரம் கழித்து கண்விழித்த ஜான்சி சிவந்த கண்களோடு எதையோ யோசணையோடு எண்ணிக் கொண்டு இலக்கற்று வெறித்திருந்த குருநாதனின் கன்னத்தில் கைவைக்க தன்ணுர்வு அடைந்தவன்.

"மீ எழுந்துட்டியா நீ, ரொம்ப பயந்திட்டேன் தெரியுமா , எல்லாம் என்னால தான் டின்னருக்கு என்னால வர முடியுமானு யோசிச்சப்ரமா என் பிளானை உனக்கு சொல்லிருக்கனும்"

"எனக்கு ஒன்னுமில்ல கண்ணப்பா டென்சனாகதே நீ"

"ம்ம்.. நீ ஒன்னும் இங்கையே இருக்க வேணாம் காலை ல டிஷ் ஜார்ஜ் பன்னி உன்னை கூட்டிட்டு போய்டலாமினு டாக்டர் சொன்னாரூ ஓகேயா என்று விட்டு என்று அவரின் கையின் மீது தலை சாய்திருந்தவனை.

"கண்ணப்பா நா வந்த வழீல *** ப்ரிஜ் சைட் மழையால ஈரலிப்பா இருந்திருக்கும் போல டிரைவர் காரீ ஸ்பீட்டை சரியா மேனேஜ் பன்னாம இருந்திருக்கானோ என்னமோ வண்டியேன் தடுமாற்றாமா எதுலயோ இடிபட்ட மாதிரி இருக்குனு அதிர்ந்து அசதியில கண்ண மூடியிருந்த நான் முழிச்சு பார்த்து என்ன ஆச்சு எதாச்சுனு நிதானிக்க முதலே நம்ம டிரைவர் திரு அந்த பக்கமா வண்டியை நிறுத்தாமலே ஓடிட்டு வந்தான்.

"என்னாச்சுடா நடந்தது என்ன‌னூ விசாரிக்க முத லே நா இந்த அக்சிடன்டுக்கு காரணமில்லனூ பயந்த முகத்தோட சொன்னவன் தான் அடுத்த நொடி யோசிக்குறதுக்கு முதலே வண்டியை விட்டு குதிச்சுட்டான்"

"எனக்கு என்ன நடந்திச்சு ஏது நடந்திச்சுனு கொஞ்ச நேரம் ஒன்னுமே புரியலை, ஆனா ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்திருக்குமோனு மனசு பயந்திச்சு அவ்வளவு தான் அதுக்கப்ரமா நடந்தது எதுவும் ஞாபகத்திலே இல்லடா".

இப்போதும் அதை எண்ணி பயந்தவராய் சொன்ன ஜான்சியின் கண்ணத்தை கையிலேந்தியவன்.

"மீ நீ பயப்புடுற மாதிரி எதுவுமில்ல. பிரிட்ஜ் சைட்டிருந்த போலீஸ் பூத்தை இடிச்சிட்டு வலிக்கின வண்டியை கண்ட்ரோல் பன்ன தெரியாம அந்த இடியட் இப்படி பன்னட்டான், நீ இதையே யோசிக்காதே நாளைக்கு உனக்கு ஆர்ட் காம்படிசன் இருக்குல, நா தார சூப்பை குடிச்சிட்டு மருந்து சாப்பிட்டு தூங்கு என்றவனுக்கு.

பயத்திலும் துக்கத்திழும் தொண்டை அடைத்தது.

"ஷாக்சி உனக்கு என்னாச்சுடி?, நீ எங்கே இருக்க இப்போ?"



"உனக்கும்,செந்துவுக்கும் நடந்த இந்த விபத்துக்கு இந்த கார் மூலமா நாங்களும் ஒரு விதத்தில் காரணமா ஆகிட்டமோனு சொன்னா மீ யால, தாங்கிக்கொள்ள முடியுமா?" என்று பல்வேறு விடயங்கள் குருவின் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

**********************
 
Last edited:

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“என்ன இருந்தாலும் நீ செஞ்சது தப்புப்பா, நாம கலம்புறோனு அவர்களை பாத்து சொல்லிட்டு வந்திருக்கலாம்”

“ராசாத்தி அது வெறும் இந்த அம்மா சம்மந்த பட்ட கேஸ் மட்டுமில்லை அந்தம்மா வந்த கார் பன்ன அக்சிடன்ட்ல இன்னொரு கார் பாலத்துக்கடில விழுந்து காயபட்டவனையும் நாம இருந்த அதே ஹாஸ்பிட்டல்ல தான் சேத்திருக்காம், இது இப்படி இருக்க இவங்க கூட நாம அதிகமாக மூ பன்னாம இருக்கிறது தான் நமக்கு நல்லது அதான் அந்தம்மா பிள்ளை போலீஸ் ஆச்சே அவன் பாத்துக்கமட்டானா அந்த அம்மாவை”.

“சரியான சுயநலவாதிப்பா நீ”

“இருந்திட்டு போகட்டுமே, இந்தப்பா எது செய்தாலும் உன் நல்லது தான் அதுக்கு பின்னாடி காரணமா இருக்கும்”

“ ஆவூனா இதொன்னை சாக்கு சொல்லிடுவ” பேசிக் கொண்டே காரை செலுத்திய படி தன் வீட்டிற்கு அருகில் அவர்கள் நெருங்கியிருந்த போது

"என்னப்பா இது எப்பயும் நீ தானே காரை உள்ளக் கொண்டு போகும் போது கதவை திறந்து விடுவ? இன்னைக்கு ஏன் கதவு திறந்தபடியிருக்கு நேத்து கேட்டை பூட்ட மறந்திட்டியா என்ன?"

என்று யோசணையாய் கேட்டுக் கொண்டே தகப்பனை நோக்கியவளை கண்டு உள்ளுக்குள் பரவ தொடங்கிய சிறு பீதியை முயன்று அடக்கியபடி.

" நிகழியம்மா அப்பாக்கு வயசாகிட்டே வருதில்ல"..

"பெரிய கண்டு பிடிப்பு பென்சன் எடுத்தே ரெண்டு வருசமாகுது இப்ப தான் அது உனக்கு தெரியுமா என்ன?"

"உடம்புக்கு வேற அடிக்கடி சொகமில்லாம வருது"

"உனக்கு கொஞ்சம் கூட விவஸ்தை இல்லப்பா,
இத முதலே சொல்லிருந்தேன்னா அங்க ஹாஸ்ப்பிட்டல்ல வச்சே உனக்கு என்ன ஏதுனு செக்க பன்னிருக்கலாம் ல"


"ஷப்பா இவ கூட பேசி மாறடிக்க முடியாது".." ராசாத்தி இப்படி குறுக்க குறுக்க பேசினீனா அப்பாக்கு பேச வந்த விசியம் மறந்து போயிடும்.. " என்று பெரு மூச்சு விட்டவரை கண்டு

"இப்ப ஏன் சலிச்சுக்குர, சரி ஏதோ வயசான கதைனு ஆரம்பிச்சியே‌ ஜொள்ளு என்னெனு தான் கேப்போமே"

"ஐயோ இவ வேற கூலா இருக்கா இப்போ மட்டும் நா இந்த பேச்ச ஆரம்பிச்சேனா?" என்று மென்டு முழுங்கியபடி

"அதான்மா அப்பாக்கு வயசாகி அடிக்கடி உடம்புக்கு முடியாம வர்ரதால காலாகாலத்துல உனக்கு "

"காலாகாலத்துல எனக்...கு!!!" புருவத்தை உயர்தியபடி அழுத்தமாய் இடைவெட்டிய மகளை கண்டு


"திரு திரு முழித்தபடி, உனக்கு துணையா சொந்த பந்தங்களை சேத்துவச்சு, உன்னையும் கலகலனூ குடும்பமா பாக்கனும் அப்படினூ அப்பாக்கு இப்பெல்லாம் ரொம்ப ஆசை ஆசையா வருது"

"எனக்கு வாயில நல்ல வருது,உனக்கு என்னை பாத்தா சோகமா மூஞ்சைய தூக்கி வச்சிட்டு வாழ்வே மாயமினு பாடிட்டு இருக்க மாதிரியா இருக்கு? ஏன் என் கலகலப்புக்கு இப்ப என்ன குறைச்சல்"

புசு புசு என்று ஏற துடங்கிய கோபத்தை இழுத்து அடக்கியபடி பேச ஆரம்பித்த மகளை கண்டு பம்மியபடி.

"ராசாத்தி நேத்து நைட் நேரமாகியும் நீ வந்து சேரலேனு அப்பா எம்புட்டு பயந்தேன் தெரியுமா?, எதோ அப்பா உடம்புல தெம்பிருக்க போயி அந்த சாமத்துலயும் உன்னை தேடி அங்கிட்டும் இங்கிட்டு போக முடிஞ்சிது. ஆனா எல்லா நேரமும் உன் அப்பா இப்படியே இருக்க மாட்டேன்ல எனக்கப்ரமா உன்னைய சந்தோசமா?"

என்று படபட என்று பேசி கொண்டே போனவரை

"இந்த பல்லவி பாடூறதை நிப்பாட்ட போறியா இல்லையா" கடுப்போடு சத்தமிட்டவள்

"வந்திருக்கிறது யாரூ? எதுக்கு தேவையில்லாம இப்படி சிம்பத்தி கிரியேட்ட பன்னுற?"

என்று தந்தையை சந்தேகமாய் புருவம் உயர்தி கேட்டபடி வீட்டிற்குள் காரை கொண்டு நிற்பாட்டியவள் வண்டியை விட்டு இறங்க காத்திருந்ததை போல,

"மருமகளே" என்று பாசத்தை கீலோ கணக்கில் ஸ்டாக் வைத்து கூவியபடி நிகழினியை அவளது சின்னத்தை மேகலா அணைக்க வரவும் அப்போது தான் திறந்த கார் கதவிற்குள் இருந்து வெளியேறிய பைத்தன் அவரின் வரவு பிடிக்காது குலைக்க ஆரம்பித்ததே ஒரு குலை பத்து கிலோ கறியை அவரின் உடம்பிலிருந்து பல்க்கா எடுக்காமல் விடமாட்டேன் என்ற ரீதியில் கொலை வெறியேடு தாக்குதலுக்கு தயாராகி நிகிழினியின் முன்னே வந்து நின்று அவரோடு சண்டித்தனம் செய்ய ஆயத்தமாய் உறும

பயத்தில் முகம் வெளுத்து போன மேகலாவோ "ஐயய்யோ நாயா இது பேய்" என்று வேக எட்டுக்களோடு நகர்ந்து சட்டென்று தமையனின் பின்னே தஞ்சம் புகுந்து "பாரூண்ணே உங்க வீட்டு நாயுக்கு என்னை பாக்குற நேரமெல்லாம் இதே வேலையா போச்சு" என்று முனுமுனுப்பு வேறு.

"எப்பயாச்சுமிருந்திட்டு தான் உன்னை பாக்குதுல அதான்.
நீ பயப்பிடாத நா அதை பாத்துக்குறன்" என்று தங்கைக்கு தைரியம் சொன்ன அறிவுடைநம்பி பைத்தனை முறைக்க நிமிந்த போதோ வாசலில் நிகழினியும் இல்லை பைத்தனுமில்லை.


"பரவால விடுன்னே பொண்ணு வெளியூர் போய்ட்டு வந்திருக்கில்ல நைட்லாம் தூங்காம இருந்த டயர்ட் வேற இருக்கும் அதான் ப்பிரஷப்பாக போகிருக்கும் நீ வா அண்ணே நான் காப்பி போட்டுத்தறேன்" அண்ணன் மகள் பொட்டளவிற்கு கூட மறியாதை தரப்பவதில்லை என்று தெரிந்ததால் அலட்டிக் கொள்ளாது மேகலா செயல்பட.

தன் அறைக்குள் தாழ்பாழிட்டு அமர்ந்திருந்த நிகழினியோ

யோசணையோடூ "ஏண்டா பைத்தா வரும் போது அப்பா பேசினதை வச்சு பாக்கும் போது இந்த அத்தை சாத்தான் தான் ஏதோ காதுல வேதம் ஓதியிருக்குதுனு தெரியிது, அப்பா கல்யாணத்தை பத்தி சாதரணாமாவோ சண்டை போடுற மாதிரியோ கேட்டா கூட கத்தியே சமாளிச்சுடலாம் ஆனா இப்படிலாம் எமோசனலா பிட்டை போடுறாரே? என்னால எப்படி டா இதை சமாளிக்க முடியும்?" கன்னத்தில் கவலையாய் கை ஊண்டியபடி பைத்தனின் முகத்தை நிகழினி பாத்து கொண்டிருக்கும் போதே.

ஐடியா இருக்குதே என்பதை அவளுக்கு தெரியபடுத்தும்
சிம் போலிக்காய் கட்டிலிருந்து குதித்த பைத்தன் தன் வாலை பிடிப்பதை போல ஒரு சுத்து சுத்தியபடி எதிரில் டீப்பாயில் இருந்த மேகசீனை வாயில் கவ்வி எடுத்து அவளருகில் வைக்கவும்.


அகமும் முகமும் ஒரு சேர மலர்ந்தவள் "என் செல்லமடா நீ" என்று அதற்கு சிறு முத்த மழையை பொழிந்து விட்டு.

தன் போனை எடுத்து நேரத்தை பார்த்த போது அது மணி ஒன்பது என்று காட்டிட “பரவாயில்லை என்னும் போட்டி ஆரம்பிக்க நேரமிருக்கு”

"பைத்தா வீட்டிற்கு வரும் போது இந்த அத்தை சாத்தான் இங்கு இருக்க கூடாது அதற்கு நீ தான் பொறுப்பு அப்பாவை நான் பாத்துக்குறேன் ஓகே" என்று அதற்கு கட்டளை இட்டு அடுத்து செய்ய போவதை தனக்குள் எண்ணமிட்ட படி நிகழினி குளியறைக்குள் புகுந்து கொண்டால்.

***************

"எலேய்! சிதம்பரம் அங்க டிராயின் பன்ன உட்காந்திருக்கிறது எம் பொண்ணு எம்புட்டு அழகா வரையிறால்ல"

" ஷப்பா இவங்கூட இதே ரோதனையா போச்சு யோவ் அறிவு, இதோட இருபதாவது தடவை இதை பத்தி நீ அங்கலாய்க்குற என்னோட பையனும் தான் படம் வரையிறான் சும்மா தொன தொனனுட்டிருக்காத நீ" என்று அறிவுடை நம்பியின் தெரிந்தவரும் எதிர்த்த வீட்டுக்காரருமான சிதம்பரம் சலித்தபடி ரெண்டு கதிரை விளகி போய் அமர.

"அவன் பையனை விட எம் பொண்ணு அழகா வரையிதுனு பொறாமையில பொங்கிட்டு போறான்" என்று கழுத்தை ஒடித்துக் கொண்ட அறிவுடை நம்பி மேடையில் பயங்கர சிந்தனையோடு ஓவியம் தீட்டுபவர்களில் ஒருவராய் அமர்ந்திருந்த நிகழினியை ஆர்வம் பொங்க பாத்திருந்தார் இத்தனைக்கும் அவள் என்ன வரைகிறாள்? ஏன் வரைகிறாளா ?என்று கூட அவருக்கு தெரியாது.

காரணம் அங்கே போட்டி விதிப்படி குறிந்த நேரத்திற்குள் வரையபட்ட ஓவியங்கள் முழுமை அடைந்திருந்தால் அதன் பின்னர் ஒரு சேர அணைத்து போட்டியாளர்களினதும் ஓவியங்கள் வரிசை படுத்தபட்டு பார்வையாளர்களுக்கு காட்சியளிக்கபடும்.

யூனி சேவ் என்ற அமைப்பும் பிரபல தனியார் நிறுவணம் ஒன்றும் சேர்ந்து நடத்தபடும் அந்த போட்டியின் பரிசு தொகையில் ஒரு சிறு விகிதமும், விற்பணைக்கு வைத்திருக்கும் ஓவியங்களுக்கும் கிடைக்கும் பணத்தில் சொற்ப பகுதியும் அந்த ஓவிய கண்காட்சி மூலியமாய் சேகரிக்கப்பட்ட பணத்தோடு ஆதரறவற்ற மற்றும் குழந்தைகளின் கல்வியின் தேவைக்காக நன்கொடையாய் எடுத்துக் கொள்ளபடும் என்ற ரீதியில் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தது.


"ஏதோ அவசரத்துலயும் ஆர்வ கோலாறுலயும் வந்து சேந்திட்டோம் இப்ப என்ன வரையிறது நூ தெரியலையே, அப்பா வேற அங்கியிருந்து எட்டி எட்டி பாக்குறாரூ போதாத குறைக்கு கண்கானிக்குற இந்தம்மாவ வேற நம்மளை குறுகுறுனு பாக்குதே" வெள்ளை வெளிர் என்றிருந்த டிராயிங் போர்ட்டை எந்தவித கான்சப்டும் கிடைக்காத போதும் பெரிதாய் வரைந்து தள்ளுவதை போல கெத்தாய் கான்வசை கையில் வைத்திருந்தபடி உள்ளுக்குள் யோசித்த கொண்டிருந்த நிகழினியின் காதுக்கு மீண்டும் அந்த குரல் கேட்டது.


"மீ இங்க பாரூ லேட் ஆகிருச்சு அதுஇதுனு யோசிக்காத உன் புல் போக்கஸ்சும் டிராயிங்கில தானிருக்கனும் ஓகேவா". என்று வீல் சியாரை தள்ளியபடி அந்த மேடைக்குள் வந்து சேந்த குரு சற்று யோசணையிலிருந்த தாயின் தலையை மெதுவாய் ஆட்டி.

"ஆர் யூ ஓகே மீ"

தன் யோசணையை கைவிட்டவராய் மகனது முகத்தை பார்தவர் "ஐயாம் ஓகேடா கண்ணப்பா" என்று ஜான்சி தலையாட்டவும்

"அதை கொஞ்சம் உன் திரேட் மார்க் சிறிப்போட சொல்லாமே"

"இது போதுமா" என்று அவர் புண்ணகைக்கவும் "சரி போதும் போதும் இதுக்கே மேடையில இருக்க அந்த ஆண்டி நம்மளை பாத்து குறுகுறுனு மொறைக்குது" என்றபடி.

ஜான்சி வரைவதற்கு தயார்படுத்தபட்டிருந்த இடத்தில் அவரோடு சென்றவன்.

"அப்புறம் மீ ஒரு சின்ன ரெக்கவஸ்ட்டு" என்றபடி தாயின் காதுக்கருகில் நன்கு குனிந்தவன் "இந்த முறை நீ ஏன் ஐயாவா டிராயிங்கா வரையப்பிடாது. பிகாஸ் சிட்டிக்குள்ள ஐயா திரெண்டிங் நம்பர்வன் அதுமட்டுமில்லை உனக்கும் பிரைஸ் மணி கன்போர்ம், வர்ர போற பொண்ணுங்களும் ஐயாவை பாத்து ரசிச்சதாவும் இருக்கும் ல" அலட்டி கொள்ளாது சொன்னவனது தோலில் அடி போட்டவர்.

"போடா அறட்ட நேரம் காலம் தெறியாம" என்று சிரித்தபடி ஜான்சி தன் மனதில் நினைத்த ஓவியத்தை வரைய ஆரம்பிக்கவும்.

தாயை திருப்தியோடு பார்த்தபடி‌ குருநாதன் பல தடவை மனதின் உள்ளே வணங்கி வேண்டிக் கொண்டான்.

"கடவுளே இந்த ஆக்சிடன்ட்ல அடிப்பட்டு பாதிக்கபட்டது செந்துஷானும்,ஷாக்சியும் தான்னூ அம்மாக்கு தெரிய கூடாது"

என்றபடி ரெண்டெட்டு நடந்திருப்பான் தற்செயலாய் அவன் கைபட்டு நிகழினியின் டிராயிங் போட் தட்டுபட்டு கீழே வில போக.

"தனக்குள் மூழ்கிருந்தவளோ ஐயய்யோ என் டிராயிங்" என்ற படி வீறு கொண்டு எழவும் நொடியில் சுதாரித்து அதை பிடித்து நிலையாய் நிப்பாட்டி நிறுத்திய குரு சிறித்தபடி.

"அடடே! என்னங்க உங்க மனசு மாதிரி டிராயிங் போடும் வெள்ள வெளீரினு இருக்கு"

"என்ன எம் பொண்ணு போர்ட்டு எம்பிடியா இருக்கு" அந்த பக்கம் புல் போக்சலிருந்த அறிவுடைநம்பி கண்ணை விறிக்கவும், சிதம்பரமோ அவரை கண்டு கேலியாய் புண்ணகைத்து செறிமி கொண்டார்.

"ஏன் ஸ்சார் மானத்தையும் வாங்கிபுட்டு மானசீகமா நக்கலும் பன்றீங்க?" கோபத்தில் நிகழினி தந்தை முகத்தையும் அருகில் சத்தம் கேட்டு திரும்பி பார்த்துவிட்டு சிறித்தவர்களையும் கண்டு பல்லை கடிக்க.

"வறண்ட பூமி தனை முத்தமிட்ட மழைதுளிபோல
மரித்த உன் மனதுக்குள் உயிர் சாரலாய் என் நினைவுகள்" என்று குரலை தாழ்த்தி ஹஸ்கி வாய்சில் கவிதுவத்தோடூ சொன்னவனை கண்டு.


“ஹான் என்ன?” என்று திடுகிட்டவள்

"என்ன இவன் சொல்லுறான்?" தன் காதை பரபர என்று லேசாக தேய்த்தூவிட்டு விரித்த விழிகளில் கேள்வியாய் அவனை நோக்கி "இப்ப எதாச்சும் என்கிட்ட சொன்னீங்க", நிகழினி.

"நல்லா வரையுங்கனூ சொன்னேன் ஆல் தி பெஸ் ட்" என்ற குரு அதன் பின்னே அவள் அடுத்த கேள்வி கேட்பதற்கே தான் அங்கு நிட்கவேயில்லையே.

“இவனென்னத்துக்கு என் கிட்ட அப்படி சொன்னான்” அதற்கு மேல் நிகழினியை யோசிக்க விடாது போட்டி நேரத்தையும் தற்போதைய நேரத்தையும் கணிப்பிட்டு அறிவிப்பாளர் கூற ஏதோ எண்ணத்தில் தன்னியல்பாய் அவளது கையும் மனசும் ஓவியத்தை வரைவதில் ஈடுபட துவங்கியிருந்தது.

வெளியேறி பார்கிங்கிற்கு வந்திருந்த குரு நாதனின் மொபைலில் குறுஞ்செய்தி வந்ததற்காக வைபிரேட்டாக எடுத்து பார்த்த போது.

“மன்னிச்சிருங்க அண்ணா என்னால தானே உங்களுக்கு வேலை போச்சு மத்தவங்களை போல நானும் காலேஜ் போகனும் அப்படீன்னு என் தகுதிக்கு மீறி நாபட்ட ஆசையை கூட மதிச்சு பேச போய் தானே நீங்க சித்தப்பா வை அடிச்சீங்க, இந்த வாய் பேசாத, காது கேட்காதவன் எம்மேல நீங்க வச்ச அன்பு ஒன்னே போதும் அண்ணா நான் இந்த ஊரை விட்டை போறேன் என்னை பாக்குற நேரம் எல்லாம் சித்தப்பாவுக்கு உங்க மேல கோபமும் வன்மமும் வந்திட்டே தானிருக்கும் யாருக்கும் நான் உபத்திரம் தர விரும்பலை என்னை தேடாதீங்க பாய் அண்ணா”

“ஷிட் இருக்க பிரச்சணையில இவன் வேற தேவையில்லாம, பைத்தியக்காரன்!!!!...இதுக்காக வா நான் கஷ்டப்பட்டேன்" "முட்டாள்தனம்!!!!"... என்று தலையில் அடித்துக் கொண்ட குரு நாதன் மொபைலை எடுத்து வேகமாய் சில பல எண்களை அழுத்தியவன்.

“ஜோர்ஜ் நானிப்ப சொல்லுற நம்பரை ஒழுங்க நோட் பன்னிக்கோங்க கடைசியா எங்க அந்த சிம்மோட சிக்கனல் யூசாச்சுனு கண்டுபிடிங்க அண்ட் , இந்த பையனோட போன் தான் அது என்று சில தகவல்களையும் படம் ஒன்றையும் அனுப்பியவன் இவன் எங்கிருந்தாழும் சீக்கிரமே கண்டுபிடிச்சு எனக்கு தகவல் சொல்லுங்க “ என்று அவன் போனை கட் செய்த போது டக் கென்று மொபைல் ரிங்காகவும் எடுத்து பேசினால்

“குரு ஸ்சார் மிஸ்டர் செந்துஷானுக்கு கான்சியஸ் திரும்பிருச்சு, நீங்க சொன்ன படி அவங்க அண்ணை மட்டும் தான் வர சொல்லி வந்திருக்கார்”.

“சரி நான் என்னும் டென் மினிட் ல அங்க வந்திர்ரன்”
*********

“நிகழிம்மா அங்க பாறேன் உன் ஓவியத்தை தான் எல்லா பயலும் வாயை பிளந்து பாத்திட்டு போறான்” தங்களை தாண்டி போன சிதம்பரத்தை கடுப்பேற்ற என்றே காலரை தூக்கி விட்டபடி அறவுடை நம்பி அலுப்பறை செய்ய.

வெறும் மணல் மண்ணாய் உதிரும் ஒரு பெண்ணவள் தலையை வசந்தமான ஒரு ஆணின் கைகள் தாங்கி பிடித்திட அவன் பிடிக்குளிருந்த அத்தனையும் அவனின் வசந்தங்களை தன்னகத்தே கொண்டிருக்க பாதி வசந்தமும், மீதி வறட்சியுமாய் கிடையாய் சாய்ந்திருந்த பெண்ணவள் கழுத்து வரை தான் படம் , ஆணின் முகமோ

“எம்மா யாரூம்மா இவன் பாக்கும் போது எங்கயோ பாத்த ஞாபகம் வருதே”

“அட படுபாவி நா வரைய ரெடியாகும் போது முகத்தை காட்டிட்டு போனனான், அதனாலயோ என்னமோ அவன் முகத்தையே வரைந்து துளைச்சுட்டேனே,.. அப்பா ஒரு பக்கமிருக்ட்டும் அவனம்மா இந்த பெயிண்டிங்கை பாத்திட்டு என்ன சொல்லப் போறாங்களோ”

“இந்த பெயிண்ட்டிங்கை எனக்கு விற்பியாயாம்மா” அருகில் கேட்ட குறலில் திடுகிட்டு திரும்பினால் ஜான்சி .

தொடரும்...
கருத்து திரி
 
Last edited:

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அணைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் மக்களே. இந்த நாள் சந்தோசங்களையும் நல்ல ஆரம்பத்தையும் உங்கள் வாழ்வில் கொண்டு வந்து சேர்க்கட்டும் God bless you Makka.


அடுத்த எப்பியில் செத்துஷாற் மற்றும் ஷாக்சியினை பற்றி விரிவாய் தெரிந்து கொள்ள ஆரம்பிப்போம்.


அன்புடன்
சைனுஜா ஸ்ரீ 😊

 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அணைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் இந்த ஆண்டு அணைவருக்கும் இனிதாக அமையட்டும்.

லீவுக்கு ஊருக்கு வந்தால் அப்டேட் போட முடியவில்லை நாளை அப்டேட்டுடன் வருகிறேன்.
 

Shaynuja Sri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ- 3


"ஏது விற்கிறதா அதெல்லாம் முடியவே முடியாது, எம் பொண்ணு பெயிண்டிங் விக்கிறதுக்காக வரையல, பாத்துட்டீங்களா நல்லா இருக்கா போயிடுங்க" கொஞ்சம் கர்வத்தோடு திமிராய் சொல்லிய தகப்பனை இடித்த நிகழினி

"அப்பா வாயை வச்சிட்டு சும்மாருக்க மாட்டீங்களா" தகப்பனை கண்டித்தவள்

"அப்பா பேசினதுக்கு ஸ்சாரிங்க" என்று திரும்பிய நிகழினி தன்னிலும் ஓவியத்திலும் அடிக்கடி கண்ணை பதித்து மீட்ட ஜான்சியை கவணித்து பேச முதலே

"நீ எதுக்கு ராசாத்தி இந்தம்மாக்கு ஸ்சாரி கேட்டகனும்",
என்றபடி ஏதோ ரகசியம் பேசுவதை போல அவளது காதருகில் மெதுவே


"உனக்கு ஒன்னு தெரியுமா இந்தம்மா இருக்காங்களே அவங்க தான் இந்த காம்படிசன்ஸ்ல கடந்த எல்லா வருசத்துலயும் பர்ஸ்ட் பிரைஸ் வின் பன்னுனாங்கலாம் இந்த முறை நீ வின் பன்னீட்டில அதான் இதை வாங்கி ஆராச்சி பன்ன நினைக்கிறாங்க அப்பா விடுவேனா இனி எல்லா வருசமும் எம் பொண்ணு தான் போட்டியில நம்பர் ஒன்னு.. ஆனாலும் ஒரு விசியத்துக்கு இந்தம்மாவை பராட்டியே ஆகனும் நேத்து பட்ட அடிக்கு அஞ்சாரு நாள் ரெஸ்ட் எடுப்பாங்கனு பாத்தா மறு நாளே வந்து நிக்குறாங்களே"... என்று ரகசியம் பேசி லொடலொடத்த தகப்பனை கண்டு அவள் இயலாமையின் தலையில் அடித்து கொள்ள.

"நீ தெரிஞ்சு வரைஞ்சியோ தெரியாம வரைஞ்சியோ உண்மையில இந்த ஓவியத்த உருவாக்கின உனக்கு உயிருள்ள வரை நான் கடமைபட்டிருக்கேன்மா ... எப்படீன்னு பாக்றியா என் மகன் தான் என் வாழ்கையோட வசந்தம் அதுக்கு ஓவியத்துல நீ கொடுத்த விம்பத்தை பாக்கும் போது மனசுக்கு நெருக்கமானதையும் தாண்டி மெய் சிலிர்கிறது"

"ஏது அந்த பயலா இது, இம்புட்டு நேரமா இந்த விசியம் பிடிபடாம போச்சே ச்சேய்" விழிகள் தெறித்துவிடும் அளவுக்கு அறிவுடை நம்பி ஓவியத்தை ஸ்கான் செய்வது போல் அருகே சென்று பார்தபடி வாயை பிளக்க


தாய்மையை அனுபவிக்க ஆரம்பித்திடாத மங்கையவளும் அந்த தாயவளின் பேச்சில் சில நொடி நெகிழ்ந்து தான் போனாள் ஆனாலும்,


" உங்க பையனை நினைச்சு இதை நான் வரையலை இது எப்படி ஆச்சுனும் புரியலை"


"ஒரு வேலை நீ வரைய ஆரம்பிக்கும் போது முகத்தை கிட்ட கொண்டு வந்து காட்டிட்டு போனான்ல அதனால ஆகிருக்குமோ" அவளது மனசாட்சி எடுத்துக் கொடுக்க..

"வாய்ப்பு இருக்கலாம் அனாலும் " மீண்டும் அவளது மனதில் ஏதோ ஒன்று உருத்தியது...

நிகழினியை பார்த்து மெலிதாய் குறுநகை சிந்திய ஜான்சியை பார்த்து..

"இந்தம்மா கூட இவளது பழக்கத்தை தொடரவிட கூடாது, இப்போ தான் நானே இவளுக்கு கல்யாணம் காட்சீனு பன்னி பாக்கன்னும்ற ஆசையில அவளை சம்மதிக்க வைக்க முயற்சி எடுத்திருக்கேன் இவங்களோ திருமண வாழ்கையே சரிவராம ஒண்டிகட்டையா வாழ்ந்தவங்க எப்படியோ ஏதோ ...ஏற்கனவே கல்யாணம் வேணாம் என்கிற பொண்ணு இவங்க கூட பழக போய் வேணவே வேனாம் சாமி"

சராசரி மனுசனாய் சரியாய் தப்புக் கணக்கு போட்ட அறிவுடைநம்பி ஒரு பெண்ணின் தந்தையாய் இப்படி சிந்திப்பது சரியா என்று எண்ணினாலும் சமூகம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கோட்பாடு படி ஜான்சி சாதனை பெண்ணாக இருந்தாலும் தனிபட்ட வாழ்கை சிறக்காது போன பெண் அவரோடு பழகி எங்கே நிகழனி தன்னாலும் இவரை போல் தனிமையினை சமாளித்து வெற்றிகரமாய் வாழ்ந்து காட்டிட முடியும் என்று சொல்லிவிடுவாளோ என்று அந்த தந்தையுள்ளம் யோசணை கொண்டது.

"இங்க பாரூங்க பாக்குறதுக்கு அது உங்க பையன் மாதிரி இருக்கிறதால அது உங்க பையனாகிடாது அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லாத போது இது எப்படி சாத்தியமாக முடியும்... முதல்ல சொன்னது தான் இந்த படத்தை நாங்க விற்கலை....உடம்பை பாத்துக்கோங்க"..... என்று அழுத்திருத்தமாக அறிவுடைநம்பி கூறி சில மணி நேரத்துலயே நிகழினியையும் கூட்டிக் கொண்டு அங்கிருந்து கலம்பிவிட்டார்...

காலையிலிருந்து ஓய்வின்றி இருப்பதாலும், பயணகலைப்பாலும் வேறு சில சிந்தனைகளும் திடிரென்று மனதில் எழுந்து வாட்ட நிகழினியும் தந்தைக்கு மறுப்பு சொல்லாது ஜான்சியிடம் கூறிவிட்டு விடைபெற்று விட்டாள்...

போகும் அவளையே பார்த்த ஜான்சிக்கு நன்கு புரிந்தது அவளின் தகப்பன் தன்னிடம் இருந்து தன் மகளை விலக்க வைக்க முயல்வது கூடவே ஜான்சிக்கு காரணத்தையும் ஊகிக்க முடிந்தது.. இவ்வளவு வருடத்தில் காணாத அவமானமா புறக்கனிப்பா? எது என்றாலும் தன்னோடு முடிந்தால் பரவாயில்லை அது தன் மகன் விடயத்தையும் பாதிக்கும் போது தான் அந்த இரும்பு பெண்ணவளும் உணர்ச்சிகளில் மெழுகாய் கசிகிறாள்..

"நிகழியம்மா உனக்கு வேணும்னா நாங்க யாரோவா இருக்கலாம் ஆனா என் பையனுக்கு? நீ அப்படி இல்லயே... இதை எப்போ தான் நீ தெரிந்து உணரப் போகிறாயோ?"

********
"ஸ்சார்..ஸ்சார் நில்லுங்க இந்த மாதிரி நேரத்துல நீங்க ஸ்டிரெயின் பன்னிக்க கூடாது"....


அந்த வாட்ரூமிலிருந்து வெளிவந்த செவிலிப் பெண் கத்தி கொண்டே ஹாஸ்பிட்டல் வராண்டாவில் ஓடிவர பில்கட்டிவிட்டு போனில் ஏதோ மெசேஜ்சை தட்டச்சு செய்தபடி திரும்பி வந்து கொண்டிருந்த கீதன் சத்தம் கேட்ட திசையில் எதேர்சையாய் திரும்ப அங்கு அவனது தம்பி தான் மூச்சிறைக்க எதையோ பினாற்றிக் கொண்டு முடியாத உடம்போடும் வேகமாய் பதறியடித்து ஓடிக் கொண்டிருந்தான்.

"டேய் செந்து நில்லூடா" இப்போது கீதனும் பதறியடித்து படி அவனை தடுத்து நிறுத்த பின்னால் செல்லல் ஆனான். அங்கு மொத்த பகுதியும் என்னமோ எதோ என்று வேடிக்கை பார்க்க திரும்ப ஒருசிலர் செந்துஷானை தடுத்தும் பாத்தனர் அவர்களை வெறித்தனமாய் தள்ளிவிழுத்துவிட்டு ஹாஸ்பிட்டலை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தான்...


அவனது வாயிலிருந்து வெளிவந்த வார்தைகளெல்லாம் வெறும் "ஷாக்சி ...ஷாக்சி...ஷாக்சி" அவளின் நாமம் மட்டுமே திவனில்லாத அவனது குரலில் மொத்த உயிரையும் தேக்கி தவிப்போடு உச்சரிக்கபட்டு கொண்டிருந்த வார்தைகள்.

பைக்கின் கண்ணாடி வழியாய் செந்துஷானை பாத்துவிட்ட என்னவோ எதோ என்ற பதற்றம் அதிகரிக்க அவனுக்கு முன் பைக்கினை தடுப்பாய் நிறுத்தி குரு அவனை எட்டி பிடித்து கொண்டு நிப்பாட்ட.

"விடூ....என் ஷாக்சியை பாக்க போகனும் அவ எதோ அபத்துல இருக்கா" ..... திமிறியபடி ஆக்கிரோசமாய் செந்து கத்தவும் வேடிக்கை பார்க்க நின்றவர்களை குருநாதன் கண்டித்து அனுப்பியவாறு.


"செந்து இங்க பாரூடா என்னை பாரூ என்றேன்ல" செந்துசானின் நாடியை இறுக பற்றி தன்னை பார்க்க செய்தவன்.

"என்ன பிரச்சனை? அவளுக்கு என்னாச்சு? பதறாம சொல்லூடா நானும் அவளை தான் நேத்துல இருந்து தேடிட்டிறுக்கன்"

"கு...குரு அவ எதோ இடத்துல தனியா மாட்டிறுக்க மாதிரியும்... செந்து தனியா இருக்கேன் பயமாருக்கு கொஞ்சம் கொஞ்சமா என்னையே என்னால உணர முடியலைனு பயந்து கத்துர மாதிரி".... கண்டது மாயையா கணவான நிஜமா என்று பிரித்து உணரமுடியாத மனநிலையில் பினாத்தி கொண்டிருந்தவனது உடல் நடுக்கத்தின் வழியாவும் வார்தைகள் வழியாவும் தானும் அதே நடுக்கத்தை மனதளவில் குரு உணர்ந்தான் .

காரணம் செந்துவுக்கு அவள் மனைவியென்றாள் இவனுக்கோ அவனுயிர் தோழி அன்றோ...


அப்போது செந்துசானை நோக்கி திடீரென்று வந்து சேர்ந்த போலிஸ் கான்ஸ்டபிளும் ஹாஸ்பிட்டல் வாடனும் அவனை பிடித்து கூட்டி செல்ல முயல

"இவருக்கு அந்த மயக்க ஊசியை போட்டு கூட்டிட்டு போறது தான் நல்லதுனு டாக்டர் சொன்னாரூல அதையே செய்யுங்க அந்த வாடனுக்கு கட்டளையிட்டபடி வந்து சேர்ந்த அகத்தியனது கண்களோ குருநாதனை இகழ்சியாய் பாத்து புண்ணகைத்தது...

"ஸ்டோப்பிட் அகத்தியா...யாரூம் செந்து மேல கைவைக்காதிங்க" அவர்களை குருநாதன் தடுத்துவிடவும்...

"எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் குருநாதன் இந்த கேசை ஹாண்டில் பன்னுற இன்வெஸ்டிகேட்டர் நாதான் இதை செய்ற முழு ரைட்சும் எனக்கிருக்கு...நீங்க சஸ்பென்சுலயே இருந்தாழும் இந்த கேஸ்படி நீங்களும் ஒரு குற்றவாளியா சந்தேகிக்கபடுபவர் அதுனால" மூடிட்டு போ என்று கடைசி வரியை சொல்லாது சைகையில் செய்து அலட்சியப் படுத்தினான்.
இந்த முறை வலைத்துபிடித்து ஊசியை குத்திடவும் சில நொடிகளிலே செந்துஷான் மயங்கி சரிந்தான்...


"நீ கொடுத்த முத்தத்தின் ஈரளிப்பு கூட வறளவில்லை,....அதற்குள் மீண்டும் முகவரி தொலைந்தவனாய் முதல் புள்ளியிலேயே நிறுத்திவிட்டாயே?"

மயக்கத்தில் சொறுக ஆரம்பித்த அவனது கண்களில் நிழல் விம்பமாய் அவள் உருவம்

மூஷ்டிகளிருக "அகத்தியா உன் லிமிட்டை தாண்டிட்டிருக்க நீ" கோபத்தில் குருநாதன் பல்லைகடித்து கொண்டே செந்துஷானை தாங்கிபிடித்துக் கொள்ள..

"என்ன... அதிகாரி கோபம் வருதோ வா...வந்து அடிபாப்போப்பம் என்ன முறைப்போட நிறுத்திட்ட... ம் என்ன சொன்ன நீ இந்த மூறை என்னை அடிப்ப ஆங்... உன் ஒரு தலை கா... வேண்டாம் இப்போ இருக்க மாட்டருக்கே வருவோம் ... ரொம்ப அலசி பாத்ததுல அநேகமா உன் பிரண்ட் பிரிட்ஜ் கீழ இருந்த எதோ நதில தவறி விழுந்து செத்திருக்க வாய்ப்பிருக்கு... பாடியை தான் தேட சொல்லிருக்கன் கிடைச்சதும் ..வந்து காரியம் பன்னுறீங்களா"

அவனை கொல்லும் வெறியே வந்துவிட்டது குருநாதனுக்கு கையிலிருந்த செந்துஷானால் அவனால் விரைந்து எதுவும் செய்ய முடியவில்லை...

அதற்குள் கீதனோடு மற்ற அதிகாரிகளும் வந்துசேர சூழ் நிலை கருதி தன் கோபத்தை கட்டுபடுத்திக் கொண்டு அடுத்தகட்ட வேலைகளுக்கு தயரானவன் அகத்தியனை பார்த்த பார்வை அது பதுங்கி பாயும் புலியின் பார்வையல்ல அடிப்பட்ட பாம்பின் பார்வை என்பதை அகத்தியன் அந்தக் கணம் உணராது மமதை கொண்டு சாதித்துவிட்ட உணர்வில் மிதப்போடு இருந்தான் என்றால் மிகையில்லை.
**********

காணமல் போன பொண்ணு பெயர் ஷாக்சி.. வயசு இருபத்தியாறூ ...படிச்சது விசுவல் கொமியூனிக்கேசன்..
ஆரியமித்திரா கிரியேட்டிவ் விஸ்சுவல் ஸ்டூயோல (Aariyamethra crestive vidual studio) கிரியேட்டிவ் டிரெக்டராக (creative directer) தொடர்ந்த மூன்று வருசமா வேலை பாக்குறாங்க...கல்யாணமாகி ஒன்றரை வருசமாகுது புருசஷன் பெயர் செந்துசண்முகமூர்த்தி
( செந்துஷான்) வயசு மூப்பத்தி ஒன்னு ஹெத்திக்கல் ஹாக்கர் ஏ.ஆர்.இம் செக் (A.R.M Sec) கம்பணில ஒன்றரை வருசமா வேலை...கல்யாணம் ஆனதுல இருந்து ரெண்டு பேரும் பெங்களூர்ல தான் இருந்திருக்காங்க... இந்த வருசம் கிடைச்ச யூகே பிராஜட் ல தேர்ந்தெடுக்கபட்டு முதல்ல போக மறுத்த செந்துஷான் ஏனோ கடைசியா இந்த ஒரு வாரத்துக்கு முன்னம்... நானே இந்த பிராஜாக்ட் கம்பணி சார்பா போறேன்னு விடாம வேரையாலுக்கு ஒப்படைச்ச பிராஜெக்டை கேட்டு பிளிஸ் பன்னி வாங்கிருக்காரு அதற்கு தயாரா... யூ கே போக ஏர்போட் போகுற வழியில தான் இந்த ஆக்சிடன்ட் நடந்திருக்கு..



அந்த ஹாஸ்ப்பிட்டல் வராந்தாவில் கீதனை அனுப்பிவிட்டு இரவு செந்துஷானுக்கு தானே துணையாக நின்றிருந்த குருநாதன் இந்த கேசின் அடிப்படை தகவல்கள் ஏற்கனவே தெரிந்திருந்த போதும் அகத்தியனின் பொறுப்பின் கீழ் விசாரிக்கும் லோக்கல் இன்ஸ் பெக்டர் அப்துலிடம் கேசை பற்றி முழுதாக விசாரித்து அறிந்து கொள்ள எண்ணினான் அதற்கு ஏற்பவே அவன் கடைசியாய் கேட்ட தகவல்கள் அவனுக்கு புதிய சில செய்திகளை சொன்னது.

அந்த யோசணையோடு "நீங்க விபத்தான காரை டிடெக்ட் பன்னதுல அடிஸ்னலி ஏதும் தெரிஞ்சதா.. அதாவது செந்து கூட ஷாக்சி போனதுக்கு எதாச்சும் அதாரம் இருந்ததா?"..

"காரூக்குள் அவரோட லக்கேஜ், டிக்கெட், விசா, போன் மட்டும் தான் கிடைச்சது பட்... செந்துஷான் சாய்ந்திருந்த மரத்துக்கு பின் பக்கம் போகும் வழியினில் ஒரு பத்தடி தள்ளி எக்ஸ்ட்ராவ ஒரு போன் கிடைச்சிருக்கு..அதுல கிடைச்ச விங்கர் பிரின்ட் அவங்க வீட்டில இருந்து கலெட் பன்னி ஸ்சாம்பிள் ரெண்டையும் டெஸ்ட் பன்னி பாத்துல அவங்க டீ என்னேயோட மேச் ஆகிருக்கு...பட் இதை தவிரனு பாத்தா செந்துஷான் அவரோட குளோத்ல அவங்க் ரத்தக் கரையும் பதிஞ்சதால.. அவங்களும் இவரோட போனது கன்போர்ம் ஆகிருக்கு"

"இதை பத்தி மீடியாக்கு" குருநாதன்...

"இல்லை ஸ்சார் ... அகத்தியன் ஸ்சார் இதை செய்ய சொன்னாலும் சம்பந்தபட்ட குடும்பத்தாட்களான கீதன் அவரு இதை மறுத்துட்டாரூ"...

"பட் அவ போட்டோவை எல்லா ஸ்டேசன்சுக்கும் அனுப்புங்க முடிஞ்சளவு சீக்கிரமா கண்டுபிடிச்சே ஆகனும்...அன்ட் ரொம்ப தாங்ஸ் அப்துல் அகத்தியன் சொன்னப்றமும் எனக்கு பர்சனலா இந்த கேசுக்கு நீங்க பன்னுற உதவிகளுக்காக"

"இதுல என்ன ஸ்சார் இருக்கு எனக்கு உங்களை பத்தியும் தெரியும்,... அவரை பத்தி ஐயய்யோ நல்லாத் தெரியும் ..சீக்கிரமே மிஸஸ் ஷாக்சியை கண்டுபிடிச்சிடலாம்" என்று குருவோடு அப்துல் பேசிக் கொண்டிருக்கும் போதே அவர்களை நோக்கி மூச்சிரைக்க ஓடிவந்த செவிலிப் பெண் ஒருத்தி...

"ஸ்சார்.. நீங்க அட்மிட் பன்ன பேசண்ட் நாங்க அசந்த நேரத்து யாரூக்கும் தெரியாம ஹாஸ்பிட்டலை விட்டு வெளியேறி போய்ட்டாரூ... நீங்க காவலுக்கு வச்சிருந்த கண்ஸ்டபிள்ஸ் ரெண்டு பேரும் அவரை பின்னாடி துரத்திட்டே போயிருக்காங்க"...

பயத்தில் கைகளை பிசைந்தபடி கூறிய செவிலிப் பெண்ணை பார்த்து "உங்க பொறுப்பில் இருக்கும் ஒரு பேசண்ட் ஐ கூட ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியாத"... என்று கடிந்த அப்துல் பின் தொடர்ந்து போன கான்ஸ்டபிஸ்களின் நம்பருக்கு தொடர்பு கொண்ட போது... அவனை எங்கயோ தவறவிட்ட ரீதியில் தற்பபோது தேடிக் கொண்டிருப்பதாய் தகவல் அளித்தனர்...

"ஏண்டா இப்படி எல்லாம் பன்னி தேவையிலாம் பிரச்சணைய இழுதுக்கிறியோ" மனதுக்குள் இயலாமையோடு செந்துஷானை பற்றி எண்ணிக் கொண்ட குரு அப்துல் உடன் தானும் அவனை தேடக் கலம்பினான்...

அப்போது அவனது மொபைல் விடாது அலரத் தொடங்கியது .. முதலில் நம்பரை கவணியாமல் இருந்த டென்சனில் கட் செய்தபடி இருந்தவன் ஒரு கட்டத்தில் எரிச்சல் மிக எடுத்துப் பார்த்தால் பெர்சணல் நம்பருக்கு அழைப்புகள் வந்திருந்தது... பார்த்து கொண்டிருக்கும் போதே மீண்டும் மொபைல் அழைப்பில் சிணுங்க அவன் அதை உயிர்பித்து காதில் வைக்கவும் ..

சில நொடி அமைதியின் பின் தயங்கி தயங்கி பேச ஆரம்பித்த அந்தக் குரல் அவன் காதில் விழுந்தது...

“ஸ்சார்... என்ன ஏதுனு போன்லவச்சு இப்போ எதையும் கேட்காதிங்க ... அவசரமாக உங்க உதவி வேணும்”

சிறு மிறட்சியோடு தட்டு தடுமாறி மெல்லிய குரலில் தன்னிடம் பேசிய நிழலியின் குரலில் அவளுக்கு என்னவோ எதோ என்று குருநாதனுக்கு மனதிற்குள் பயப்பந்து உருளத் தொடங்க தன்னை அறியாமலே

“நிகழி எதுக்கும் பயப்புடாதீங்க... இதோ நான் அங்க வந்திடுறன்” படபடப்பை குரலில் காட்டாது அவன் போனில் பேசும் போதே போன் பாதியில் கட்டாகிவிட்டது...

"அப்துல் சின்ன எமெர்ஜன்சி" என்று கூறிவிட்டு அடித்துபிடித்துக் கொண்டு நிகழினியின் வீட்டிற்கு ஓடிவந்த போதுஅதற்காகவே தன் வீட்டுக் கேட்டருகே கையை பிசைந்து எதோ யோசனையோடும் சிறிது பயத்தோடும் காவல் காத்து கொண்டிருந்த நிகழினி ..

"வந்துட்டீங்களா உள்ள வாங்க ஆனா அமைதியா வாங்க..பிளீஸ்" என்று படபடப்போடு சொல்ல என்னமோ எதோ என்று பயந்து கொண்டிருந்தவன்..

அவளினை சிறு பதற்றதுதோடு அலசினான்..

"என்னங்க பிரச்சணை"... தைரியமான போலிஸ் காரன் தன் விடயத்தில் முகத்தில் பிரதிபலித்த படபடப்பையும் தவிப்பையும் எனோ அவள் சரியாக கவணிக்கவில்லை எதோ யோசணையோடு எட்டி வாசலுக்கு வெளியேவும் வீட்டிற்கு உள்ளேயும் யாரூம் பார்கின்றனரா என்று பாத்துவிட்டு மெதுவே தன்னை பின் தொடருமாறூ கூற..

செந்துஷானின் நினைவுகூட சில நொடி குருநாதனுக்கு பின்னுக்கு போய்விட்டது "எதுனாலும் உள்ளவாங்க பேசிக்கலாம்" மிரண்ட விழிகளோடு அவனை அழைத்து கொண்டு வீட்டின் மறு வாசல் வழியாக உள்ளே படிகட்டுகளினால் மொட்டைமாடிக்கு அழைத்து சென்றாள்..

அந்த மொட்டை மாடியில் சிமந்தால் அமைக்கப்பட்டிருந்த டாங்கினில் சாய்ந்து சற்று மறைவாக அமர்ந்தபடி ஆமாவாசையிருட்டில் தெரிந்த வானில் தொலைந்து போன தன் நிலவை தேடி பார்வையை தொலைத்தபடி செந்துஷான் அமர்ந்திருந்தான்..

"செந்து டேய் நீ எங்கடா இங்க?" அவனை அங்கு பார்த்த அதிர்ச்சியில் குருநாதன் தன்னை மறந்து குரலை உயர்த்திவிட முந்திக் கொண்டு அவனது வாயை இறுக தன் கைகளால் மூடிய நிகழினி...

"அச்சோ இப்போ எதுக்கு சத்தம் போடுறீங்க... கீழ இருக்க அப்பாக்கு இது எதுவும் தெரியாது ,தெரியவும் வேண்டாம்" விழிகள் சடுகுடு ஆட படபடத்தவளின் விழிகள் அவளது அருகாமை அவளின் ஸ்பரிசம் தவமிருந்தவனுக்கு வேண்டியவரம் சரியாய் தவறான நேரத்தில் கிட்டியதை போல் இருந்தது"..

அவனது முகத்திற்கு அருகே சுடக்கிட்டவள் "என்னாச்சு சீக்கிரமா உங்க பஞ்சாயத்தை முடிச்சிட்டு இடத்தை காலி பன்னா நல்லாருக்கும்"

பெருமூச்சொன்றை இழுத்துவிட்டவனுக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்ததுக்கு முன்னம் போலவே இருந்திருக்கலாம் என்று மனம் சினுங்கியது...

"எல்லாம் இவனால தான்...அறிவு கெட்டவன் இங்க எதுக்கு வந்தான்" மனதுல் எண்ணிய குரு..


அவனருகே சென்று மண்டியிட்டு "ஏன்டா போலிஸ் கஸ்டியில உன்னை வச்சிறுக்கும் நேரத்துல இப்படி உடம்புக்கும் முடியாம ஹாஸ்பிட்டலை விட்டும் தப்பிச்சு வந்திருக்க எதுக்காக? அதுலயும் இங்க எதுக்காகா வந்த?" கடைசி வரியை மட்டும் பல்லை கடித்து கொண்டு கடுப்பில் கேட்டான்..

"அதே தான் நானும் கேட்கிறேன் மாடி வழியா ஏறி அநாமத்தா என் வீட்டிற்குள்ள வந்தது மட்டுமில்லாம எதோ தெரிஞ்சவர் மாதிரி உங்களுக்கு கால் பன்னி வர சொல்லச் சொல்லுறார் கத்திக்கூப்பாடு போட்டா.. தனக்கு தானே விபரீதமா ஏதும் மன்னிக்கவும் என்று தன் கழுத்தில் கத்தியை வேற வச்சு மிறட்டுரார்.. இன்னொரு பக்கம் கெஞ்சுறர்?".. யாரூ இவரு எதற்காக இவர் என் வீட்டிற்கு வந்து உங்களை கூப்பிடச் சொல்லனும்" ..."சரியான சைக்கோ"...கடைசி வரிகளை மட்டும் அவள் மனதிற்குள் சொல்லிக் கொண்டால்..இப்படி நிகழனி வேறு குருநாதனின் கேள்விக்கு பதில் வரும் முன்னமே தன் கேள்விகளையும் அடிக்கி கொண்டு போக...

"குரு இந்த ஆக்சிடன்ட் வேணா எதேர்சையாய் நடந்திருக்கலாம் ஆனால் அதை காரணமாக வச்சு பின்னாடி நடந்தது எதுவும் எதேர்சையாய் இல்லை ... நிச்சயமா என் ஷாக்சியை பத்தின எதோ ஒன்னு உங்க ஆட்களுக்கு தெரிஞ்சிருக்கு அதை அவங்க என்கிட்டயும் உன் கிட்டயும் நல்லா மறைக்கிறாங்க" .

குருவின் போலிஸ் மூளை இதை வேறு கோணத்தில் யோசிக்க வேண்டுமோ என்று அப்போது தான் அலாட்டானது.


"உன்னை நான் நேரடியா தொடர்பு கொண்டா அது எப்படியும் மத்த அதிகாரிகளோட கவணத்தை திருப்பும், உன் உதவி வேணும் போலிஸ் காரனா இல்லாம ஷாக்சியோட நண்பனா அதனால தான் நிகழினியவங்க மூலமா உன்னை வரவழைச்சு உன்னை சந்திக்க நெனைச்சேன் அதுமட்டுமில்ல அவங்க நான் சொல்லுறதை படமா வரைஞ்சு தரணும்" ..

"கொஞ்சம் பொறுங்க உங்களுக்கு எப்படி என் பெயர் தெரியும் ...அதிலயும் நான் வரையிறத பத்தி....யாரூங்க நீங்க எனக்கு?" புதுசு புதுசா குழப்புறானுகளே மனசுக்குள் நிகழினி கடுகடுத்து கொண்டிருந்தால்...

"பேசும் போது பெயர் கூட சொல்லலை நீங்க... அப்புறம் எப்படி இந்த குருநாதன் உங்க வீட்டிற்கு வந்தாரூ? அதுவும் எதுவும் பிரச்சைணாயானு விசாரிச்சாரே இதை பத்தி யோசிச்சு பாத்தீங்களா?.... என்னை பாத்து ஊரையே கூட்டுற மாதிரி நீங்க அடக்குற வரைக்கும் குலைச்ச உங்க பைத்தன் இந்த சாரை கண்டூம் ஏன் குலைக்காம வாலை வாலை ஆட்டிட்டிறுக்கு அதை கவணிச்சீங்களா நீங்க? ... இதை யோசிங்க ஆட்டமெட்டிக்கா என்கிட்ட நீங்க கேட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்க வாய்ப்பிருக்கு"

பாயிண்ட்டு பாயிண்டாக நிகழினிக்கு கேள்விகளாய் தொடுத்து எடுத்துக் கொடுத்த செந்துஷானை கொலைவெறியோடு பாத்த குருநாதன்...

"ஏண்டா இந்த நேரத்துல இது ரொம்ப அவசியமா?" அடிக்குரலில் பல்லைக்கடிக்க..

“ம்ஹிம் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லாத எதுவும், செல்லாமல் போனதன் நரக வலியை தான் மிச்சம் வைக்கும்... அனுபவஸ்தன் சொல்றன்” நெஞ்சை தட்டி கொண்டு கசப்பான புண்ணகையை உதிர்ந்த செந்துவின் கண்களோ துளி போடும் மேகமானது...

அப்படியே எழுந்தவன் அங்கே ஓரமாய் தூணோடு கட்டியிருந்த பைத்தனின் பெல்டினை அவிழ்த்து விடிவிக்கவும். இந்த முறை செந்துஷானை பாத்து குலைக்காமால் விழுந்து கட்டி எடுத்த ஓட்டத்துடன் குருநாதனை அடைந்த பைத்தன் அவனது துடையின் மேல் தன் இருகால்களையும் போட்டு எழுந்து அவனை அணைத்தபடியும் சுரண்டியபடியும் விசுவாசமாய் வாலை ஆட்டிக் கொண்டு ஆர்வமாய் தன் அன்பை காட்டியது...

ஓரக் கண்ணால் தங்களை வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்த நிகழினியை கண்டு

“இப்படி உன் எஜமானியம்மாகிட்ட என்னை கோத்து விட்டிட்டியே பைத்தா” என்று மானசீகமாய் தனக்குள் சொல்லி கொண்டாலும்... பாசத்தோடு அவன் தலைய வருடி கொடுத்தான்...

இருவரின் பாசப்பிணைப்பை பார்த்துக் கொண்டு நின்றவளுக்கு ஒன்று நல்லாக தெரியும் பைத்தன் தன்னையும் தந்தையையும் தவிர்த்து எளிதில் யாரோடும் பழகிடாது ... அப்படியே என்றாழும் அது அவள் சொன்னால் மட்டுமே உண்டு... பல பேருக்கு வில்லன் ரேஞ் அப்படிப்பட்ட பைத்தன் செல்லக் குழந்தையாய் இவனிடம் கொஞ்சி மகிழ்கிறதே?"

“எனக்கே இவனை இன்னைக்கு தான் தெரியும் , அப்படியிருக்க நீ எப்படி இவன் கூட”

யோசணையோடு பல்லை கடித்துக் கொண்டிருந்த அவளின் முன்

“பிளீஸ்... நிகழினி நான் சொல்லுறதை படமா வரஞ்சு தாரீங்களா பிளீஸ் ... என் மனைவி எங்க இருக்கா என்னனு ஒன்னுமே தெரியலை ஆனா இந்த இருபத்தி நாளு மணிநேரமா எனக்கு ஒரு கணவோ மாயையோ என் மனைவி சம்பமந்தபட்ட ஒரு நிகழ்ச்சி விம்பமாய் தொடர்ந்து வந்துட்டே இருக்கு... நீங்க மனசு வச்சா அதை நான் தெளிவா என்னனு உங்க ஓவியம் மூலியமா பாத்து அறிந்து மனைவியை கண்டுபிடிக்க ஏதாவது வழிகிடைக்கும்”

கண்களில் தவிப்போடு உருக்கமான குரலில் கை கூப்பி மன்றாடி கேட்டவனுக்கு மறுக்க முடியவில்லை..

ஒரு காலத்தில் உயிரைக்கு கொள்ளும் இந்த காதலின் தவிப்பினை அவளும் உணர்ந்தவள் தானே என்னும் அந்த சுவடின் மிகுதியினை மனதின் ஓரம் மறையாத தளும்பாய் சுமக்கிறவளாயிற்றே..
கசந்துபோன சுவடுகளின் எண்ணி ஓட்டத்தை தவிர்த்து விட்டு...


அடுத்தக் கட்ட வேலையாய் செந்து தன் எண்ணத்தில் தோன்றியதை விபரிக்க விபரிக்க அவற்றை சிறத்தையாய் கேட்டுக் கொண்டே வரைய ஆரம்பித்தவளுக்கு அதிர்சியாய் ஒரு தகவல் ஒன்று காத்திருந்தது என்றாள்... மற்ற இருவருக்கோ ஷாக்சியினை தேடிப்பிடிப்பதற்கான ஒரு க்ளூ கிடைத்தாழும் அதையும் தாண்டி சில குழப்பங்கள் அதனோடு ஒட்டி அவர்களுக்காக காத்திருந்தது.

தொடரூம்

கருத்து திரி
 
Last edited:
Top