முன்னோட்டம் :
மத்திய சென்னையிலுள்ள அந்த சாப்பிங் மால் வார இறுதிக்கே உடைய பரபரப்புடன் காணப்பட்டது.
வாரமுழுவதும் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளும்,
வாரமுழுவதும் ப்ராஜெக்ட் அசைன்மென்ட் மீட்டிங் என ஓடும் இளைகர்களும்,ஒரு நாளாவது நல்ல ரெஸ்ட் எடுக்கலாம் என்று நினைக்கும் குடும்ப தலைவர்களும் வீட்டின் மனைவி,குழந்தைகளின் கட்டாயத்தால் கொட்டாவி விட்டபடி,,,என அனைத்து தரப்பு மக்களும் அங்கே நிரம்பி வழிந்தனர்.
அந்த சலசலப்பையும் தாண்டி அந்த மாலின் வாசலில் வந்து நின்றது ப்ளாக் கலர் BMW கார்.அதன் பின்னே நான்கு இன்னோவா காரும் நிற்க அதிலுருந்து பத்து பதினைந்து தடியர்கள் இறங்க,,,, அதில் மிகவும் பவ்யத்துடன் ஒருவன் வந்து அந்த BMW காரின் கதவை திறந்துவிட்டான்.
அதில் இருந்து தன் அடர்ந்த மை போட்ட கண்களுக்கு கூலரை போட்ட படியே இறங்கியவள் தன் கருப்பு நிற ஹை ஹீல்ஸை தரையில் டக் டக் என வைத்தபடி தன் ஒய்யார நடையுடன் தன் படைகளுடன் உள்ளே சென்று கொண்டிருந்தாள்
நம் கதையில் நடக்கும் ஒட்டு மொத்த கொடுர சம்பவங்களின் கதாநாயகி ரீனா ராணி .
.
அங்கே உள்ள அனைவரும் ஒரு முறையாவது அவளை திரும்பி பார்த்திருப்பார்கள்.அவள் அழகிதான் எனினும் எல்லாரும் அவளை பார்பதற்கு காரணம் அவளின் உடைதான்.
ப்ளக் கலர் ஸ்லீவ் லேஷ்ஷில் மார்புக்கு கொஞ்சம் மேலிருந்து ஆரமித்த அந்த உடை அவளின் தொடை பகுதிக்கு கொஞ்சம் முழங்காலிற்கு கொஞ்சம் மேலே முடிந்திருந்தது. அவளின் இடுப்பு பகுதியில் தங்க கலரில் ஒரு செயினும்,கழுதை ஒட்டி அதே கலரில் பல வலயங்களை ஒன்றாக கோர்த்த படி உள்ள செயினை அணிந்து, அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை போட்டிருந்தாள் .
அது பார்பதற்கு ஒரு கருப்பு கலர் டவலை அவள் சுற்றி கட்டிருப்பதை போலவே தோன்றும் அதுவும் மிகவும் இறுக்கமாக இருப்பதால் அவளின் அபாயகரமான வளைவுகள் அப்படியே தெரிந்தது....
மாஃலை பார்திக்கொண்டே வந்தவளின் கண்ணில் அவளின் இன்னைக்கான இரை பட்டது.
விதி அந்த குடும்பத்தை பாவமாக பார்த்தது.
ஒரு தன் குழந்தயிடனும் தன் மனைவியுடனும் அங்கே நின்று கொண்டிருந்தான் அந்த பழியாடு,
சரியான உயரத்தோடும் நல்ல கலரில் பார்பதற்கு கலாபக் காதலன் படத்தில் நடித்த ஆர்யா போல் இருந்தான் அந்த இளைஞன்.
அவனை ரசித்த படியே அவன் அருகில் வந்த ரீனா அவனிடம் “ ஹை ஹான்சம் டுடே இய்ய் வான்ட் யூ டு ஸ்லீப் வித் மீ( Today I want you to sleep with me) என கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் கேட்டாள்.
அதை கேட்ட அந்த இளைஞனும் அவன் மனைவியும் “வாட் யூ மீன்”, எனவும் சீ கருமம் “ எனவும் முகத்தை சுளிக்க ,அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல்
“ஏன் இங்கிலீஷ் தெரியாத என கூறியவள் “***********************************” என தமிழில் பச்சையாக கேட்டாள். அந்த பெண் தன் காதை பொத்திகொள்ள அவனோ கோபமாக அவளின் கழுதை பிடிக்க போக அதிலுருந்து அலட்சியமாக விலகியவள்
‘ சி ஹான்சம் ஆண்கள் எனக்கு முன்னடி கோபபட்டால் எனக்கு பிடிக்காது.
அங்கே பார் என அவள் கை நீண்ட திசையை பார்க்கும் பொது அவளின் மனைவியும் ஒரு வயது மகனும் அவளின் அடியாட்களின் பிடியில் துப்பாக்கி முனையில் நின்றனர்.
“என்னங்க”, ”அப்பா” எனவும் பயத்துடன் அவனை அழைக்க “ இப்பொழுது பயத்தோடு அவளை பார்த்தவனின் பார்வையில் திருப்தியுற்றவள் “பாலோ மீ” என முன்னே செல்ல அவளை மிகுந்த அவமானத்தோடும் தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பயத்தோடும் பின் தொடர்ந்தான்.
இதுபோல் தான் நினைத்தது சரியோ தவறோ அசிங்கமானதோ அருவருபானதோ எதை பற்றியும் அவள் யோசித்ததில்லை. அவளுக்கு வேண்டும் என்றால் வேண்டும் மட்டும் தான்.
ஒரு புலியை வீட்டில் வைத்து ஒரு பூனைக்குட்டியை போல வளர்த்தால் அது அப்படியே தான் வளருமாம். அதே போல ஒரு காட்டில் வைத்து புலி போல வளர்த்தால் அதுவும் அப்டியே வளருமாம்.
“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அது நளவர்
ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே”
என்ற பாடலுக்கு ஏற்ப கொடூரமான அண்ணனின் பாதுகாப்பில் வளர்ந்தவள் அவனை போலவே வளர்ந்தாள்.
அவளால் பாதிக்கபட்டவர்கள் அவளை கொலை செய்ய நினைப்பதும் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதும்,ஊரை விட்டு தூரமாக செல்வதும் அவர் அவர்களின் மனவலிமையும் ,குடும்ப பின்புலத்தையும் பொறுத்தது...