All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காத்திருப்பின் சுகம்❤️ (வலி)💔

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருப்பு சுகம்

என் இடவலம் நிறைந்தவனே

உனக்காக காத்திருக்கும் போது மட்டும்
ஏன் இந்த மகிழ்ச்சி

என் இதய துடிப்பு போல் சத்தம் எழுப்பும்
என் கை கடிகரத்தை நொடிக்கு நொடி பார்த்துக் கொண்டே

வறண்ட என் இதழ்களை மெல்ல வதைத்துக் கொண்டே

என் நெற்றியில் விழும் காற்குழலின் ஒற்றை கற்றையை
விலக்கிக் கொண்ட

நீ வரும் திசையை பார்த்து

வீசும் காற்றில் உன் வாசத்தை தேடிக்கொண்டே

கால்கள் நோக காத்திருக்கிறேன்
என்னவனே


எனை காண வருவாயா என்று

..............................................>>>>>>>>>>>>>>>>>>>>>




காத்திருக்கிறேன்
சில மணி நேரங்கள்
அல்ல
வருடங்கள் பல முகமறியா
என்னவனுக்காக

.......................................>>>>>>>>>>>>>>>>>>>>>>>




உன் இதயத்துடன்
என் இதயம் கோர்க்க
ஒரு முறை
மண்டியிடுகிறேன்

உன்னிடம் அல்ல

உன்னிடம் இருக்கும்
என் காதலிடமும்
என் விழிகள் கட்டுண்ட
உன் காதல் விழிகளிடமும்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



விதையின் காத்திருப்பு முளைக்கும் வரை

மழையின் காத்திருப்பு மண்ணை அடையும் வரை

இரவின் காத்திருப்பு பகலின் தொடக்கம் வரை

வெண்நிலவின் காத்திருப்பு கதிரவன் மறையும் வரை

பசியின் காத்திருப்பு உணவு கிடைக்கும் வரை

தாயின் காத்திருப்பு பிள்ளை பெறும் வரை

கண்ணீரின் காத்திருப்பு வலிகள் உணரும் வரை

காதலின் காத்திருப்பு அதன் வெற்றி கிட்டும் வரை

பெண்ணவளே என் காத்திருப்பு உன் பார்வை என் மேல்
விழும் வரை
நான் உன் இதயம் குடியேரும் வரை
நம் வாழ்வின் இறுதியில் கைக்கோர்த்து நடைபயிலும் வரை....

ஏனென்றால் காத்திருப்பும் சுகம் அல்லவா.....

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<







காத்திருப்பின் வலி


நிஜத்தை விட கனவு சுகமானதடா
எனக்கு

இரவு நேர கனவுகளுக்கு வலிகள் இல்லை

உயிரென நினைத்தவர்கள் விலகி செல்வதில்லை

உயிரில் கலந்தவர்கள் நொடி நேரம் கூட
எனை விட்டு பிரிவதில்லை

நான் நினைப்பது மிகவும் எளிமையாய் நடக்கிறது

இப்போது உணர்கிறேனடா

நிஜத்தை விட கனவு சுகமானதடா

எனக்கு

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>



காதல் விடுகதைக்குள் சிக்கி தவிக்கிறேனே
அதன் விடையை உன் விழியில் காண்கிறேனே
மௌனம வேண்டாம் என்னவனே
இதழ் திறவாய் என் கள்வனே
உன் காதல் வார்த்தைக்கு ஏங்குகிறேன்
தனிமையில் நானும் புலம்புகிறேன்
உனக்கான என் காத்திருப்பில் காலங்கள் ஓடியும்
நீயும் நானும் பிரிந்த இடத்தில் உன் காதலுக்காக
வலியுடன் காத்திருக்கிறேன்

அதை சுகமாய் ஏற்று.....

*******************************************************************



என்னவளே

என்றும் நீ என் இதய ஓசையை கேட்டுக்கொண்டு

என் மார்பை மஞ்சமென கொண்டு என் விழி நோக்கி பல
முறை சொல்லும் உன் மன ஆசை

வானம் உடைத்து பொழியும் வான்நீரில்
இருவர் நாம் ஒன்றாய் நனைய வேண்டும் என்று

நீ கேட்ட போது வான் சோகம் கொள்ளவில்லை
வான்மழை பொழியவுமில்லை

இன்றோ என் விழி என்னும் வானம் கண்ணீர் மழையை பொழிகிறது

என் இடவலம் துயில் கொண்ட நீ எனை தூற்றியேறிந்து சென்றதால்

தினம் தினம் பொழியும் என் விழிநீர் மழையில்
நனைந்திட வா என் கண்மணியே

வலியுடன் காத்திருக்கிறேன்

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<




என் கிறுக்கலுக்கு நீ வைத்த பெயர் கவிதையடி

என் விழி பார்த்து கேட்டாய் ஒரு கோள்வி நீ காதலிக்கிறாயா
என்று

ஆம் என்று யோசிக்காமல் சொல்ல இதழ் விரித்தேன்

என் இதழ் விரித்த புன்னகையில் ஆர்வம் கொண்டாய்

மின்னும் உன் விழிகளை கண்டு நீ தான் என் காதல்
என்று சொல்ல நினைத்தேன்

மறுத்துவிடுவாயோ என்று இதயம் துடித்த படப்படப்பில்

இதழ்விரிப்பை இன்னும் பெரிதாக்கி அதை மறைத்துவிட்டேன்

ஒர் நாள் மின்னும் உன் விழியை என் விழிகளுக்குள்
சிறை பிடித்து சொல்கிறேன்

என் கிறுக்களின் சொந்தகாரி நீ என்று

நீயும் சொல்லி விடு உன் மன அறை எனக்கு சொந்தம்
என்றால்

உன் பதில் எதுவாயினும் ஏற்கிறேன்
அதுவரை காத்திருகிறேன்...............

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<



அலை வந்து அழிக்கும் என தெரிந்தும்
கடற்கரையில் கோலமிடுகிறாய்

அது அழிந்த பின் உன் இதயம் துடிக்கிறாய்

என் இதயத்தில் அழிக்க முடியாது என தெரிந்தும்
காதல் கோலமிடுகிறாய்

அதை அழிக்கவும் நினைக்கிறாய்

துடிக்கும் என் இதயத்தின் சத்தம் கேட்கவில்லையா

நீ சுவாசிக்கும் என் இதயக்கூட்டில் உனையன்றி யாருக்கும்
இடமில்லை என்பதையும் உணரவில்லையா

........................................................................................................................


By

- சாரா-💐💐💐💐💐
காத்திருப்பு உனக்காய் நான் வருவேன் அது வரை என் நினைவுகளுடன் காத்திரு என்று சொல்லும் தலைவன்(வி)க்காய் காத்திருப்புது காத்திருப்பின் சுகம்

புரிதால் இல்லாமல் பிரிந்த உடன் புரிந்து கொண்டு எனக்காய் வருவான்(ள்) என காத்திருப்பது காத்திருப்பின் வலி இதை எனக்கு தெரிந்த வார்த்தை கொண்டு வடித்திருக்க

படிச்சிடு எப்படி இருக்குனு சொல்லுங்க செல்லம்ஸ்

HI friend and sister romba naaluku apram oru kakitha padichi epdi irukunu sollunga kutham kurai irunthalum sollunga na thiruthikuren


கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... sisters & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 

Attachments

Last edited:

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண்யா சிஸ் கவிதையாவே உங்களுக்கு ஒரு குட்டி ரிப்ளை😉😉:-
எழுத்துக்கள் கொண்டு வார்த்தை உருவாக்கி....
வார்த்தையை கவிதையாய் கோர்த்து கதை புனைய வைப்பது அருமையிலும் அருமை....

continue ur best work sissy ma
with love
kalaiyarasi 😍😍😍
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண்யா சிஸ் கவிதையாவே உங்களுக்கு ஒரு குட்டி ரிப்ளை😉😉:-
எழுத்துக்கள் கொண்டு வார்த்தை உருவாக்கி....
வார்த்தையை கவிதையாய் கோர்த்து கதை புனைய வைப்பது அருமையிலும் அருமை....

continue ur best work sissy ma
with love
kalaiyarasi 😍😍😍
Nanrigal pala babyma samma happy romba naal kazhichi vara oru wish love you babyma 😘😘😘😘😘😍😍😍😍😘😘😍😘😍😘😍😘😍😘💋💕💕💕
 
Top