அத்தியாயம் 7
வலியால் அயர்வுடன் சாய்ந்தவனுக்கு மற்றொரு காலில் இருந்த ஷு உறுத்துவது போலிருக்கவும், எட்டி கழற்ற முயன்றான். அதுவரை குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்த சுபாஷினி அவனது சிரமத்தைக் கண்டு அவனது காலுக்கருகே மண்டியிட்டு அமர்ந்து.. குனிந்த தலை நிமிராமல் “நான் கழற்றுட்டுமா இளைய ராஜா..!” என்று அனுமதி கேட்டாள்.
அதற்கு ரோஹீத் “அப்படிக் கூப்பிடாதே என்றுச் சொன்னேன் தானே..!” என்றுவிட்டு “ம்ம் கழற்றி விடு..” என்றான்.
கவனமாக அவனது ஷுவை கழற்றிக் கொண்டிருந்தவளின் குனிந்த தலையைப் பார்த்தவன், மெல்ல சரிந்து அவளது வதனத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினான். அவன் நிமிர்த்தவதற்கும்.. சுபாஷினியின் விழியில் இருந்து விழிநீர் கன்னத்தில் உருண்டோடி வந்து அவனது கையில் விழுவதற்கும் சரியாக இருந்தது.
அச்சிறுத்துளி அவனது மனதைக் கலைத்துவிட்டது போல் இருந்தது.
ரோஹீத் “ஏன் அழுகிறாய்..?” என்றுக் கேட்டான்.
சுபாஷினி “தெரியலை..” என்றாள்.
“மாரிமுத்து சொல்லியதைக் கேட்டு ஏன் அழுகிறாயா..?” என்றுக் கேட்டான்.
அதற்கு பதில் தெரியாமல் விழித்த சுபாஷினி திருதிருவென விழித்தாள். பின் “நான் ஏன் அழ வேண்டும்! நான் அழலை இளைய ராஜா..” என்று கண்களை அழுத்த துடைத்தாள். பின் “நான் அழ மாட்டேன். இது தப்பு..” என்று வறண்ட விழியை மீண்டும் துடைத்துவிட்டு தனது வேலையில் கவனத்தைச் செலுத்தினாள்.
ரோஹீத் அவளைப் பார்த்தவாறே சாய்ந்தமர்ந்தான்.
பின் “அந்த காரில் இருப்பது யாரோ என்று நினைச்சியா!” என்றுக் கேட்டான்.
அதற்கு சுபாஷினி ஆம் என்று தலையை ஆட்டினாள்.
ரோஹீத் தொடர்ந்து “நான் என்றுத் தெரிந்திருந்தால்.. அந்த கார் ஹாரனுக்கு ரெஸ்பான்ஸ் செய்திருக்க மாட்டியா..” என்றுக் கேட்டான்.
அதற்கும் சுபாஷினி ஆம் என்று தலையசைத்தாள்.
ரோஹீத் மெல்லிய புன்னகையுடன் “அந்த கார்காரனை ரொம்ப லவ் செய்திட்டியோ!” என்றுக் கேட்டான்.
அதைக் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்த்தவளுக்கு.. கைகள் நடுங்கியது.
ரோஹீத் மாறாத புன்னகையுடன் “யாரோ என்னவோ என்று ஆசையா ஓடி வந்தியா! நான் என்றதும்.. ரொம்ப டிஸ்அப்பாயின்ட் ஆகிட்டியா…” என்றுத் தலையை பின்னால் சாய்த்து சிரித்தான்.
உடனே சுபாஷினி “அப்படியெல்லாம் இல்லைங்க இளைய ராஜா! என்னை யாரோ டீஸ் செய்யறாங்க! அவங்க யாருன்னு பார்த்து திட்..” என்றுக் கூறப் போனவள், அந்த வார்த்தையை முழுங்கி விட்டு “யார் என்றுப் பார்க்க வந்தேன். உங்களைப் பார்த்ததும்.. மரியாதை கலந்த பயம் வந்துருச்சுங்க! உங்க கார் பின்னாடி ஓடி வந்ததிற்கு திட்டுவீங்கனு பயந்தேன்ங்க! அவ்வளவுத்தான்ங்க..” என்றாள்.
ஆனால் ரோஹீத் விடாது அவள் புறம் குனிந்து “உன்னை டீஸ் செய்தவனைத் திட்ட வந்த மாதிரி தெரியலையே! கடைசியா நான் ஹாரன் அடிக்காம போனதும்.. ஏமாற்றத்துடன் வந்து நின்றது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..” என்றுச் சிரித்தான்.
உடனே சுபாஷினி பதட்டத்துடன் “அப்படியெல்லாம் இல்லைங்க இளைய ராஜா! ஏன்னா எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருச்சு..” என்று குனிந்த தலை நிமிராது பதிலளித்தாள்.
அதைக் கேட்ட ரோஹீத் ஷோபாவில் நன்றாக சாய்ந்துக் கொண்டு “ஓ கங்கிராஜ்லேஷன்ஸ்..” என்றான்.
சுபாஷினி “நன்றிங்க..” என்றாள். ஆனால் அவளது முகம் ஏனோ சிறுத்து போயிற்று.
அவளது முகத்தைப் பார்த்த ரோஹீத் “சுபா..” என்று அழைத்து “உன்னோட ஒவ்வொரு பிஹெவ்வும் சம்திங் ஸ்ட்ரேன்ஜ்ஜா இருக்கு! ஏன்?” என்றுக் கேட்டான்.
அதற்கு அவள் "அப்படியெல்லாம் இல்லைங்க.." என்று பதிலளித்தாள்.
ரோஹீத் “இல்லை. சம்திங் இருக்கு.. ஆக்சுவலா நீ என் கார் வருவதைப் பார்த்து ஆர்வமா வந்து பின் ஒளிந்து விளையாடி.. பின் ஏன் கண்டுக்காம போனேன்னு கோபம் பட்டு.. இந்த கருப்பு ஜாக்குவார் காரை ஓட்டியவன் கூட.. தனி காதல் கதையையே ஓட்டிய மாதிரி இருந்தது." என்று தலையைப் பின் சாய்த்து சிரித்தான்.
அவளுக்கே தெரியாததை.. அவன் கூறவும் அதிர்ந்த சுபாஷினி.. அவனது ஷுவையும் ஷாக்ஸையும் கழற்றிவிட்டு எழுந்து அகல முயலவும்.. சட்டென்று கையை நீட்டி அவளது கரத்தைப் பற்றினான்.
சுபாஷினி அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கவும்.. ரோஹீத் "எனக்கு அந்த விளையாட்டு இன்டர்ஸ்டிங்கா இருந்துச்சு. அதனால நானும் விளையாடினேன்." என்று பற்றிய அவளது கரத்தை விடாது கூறினான்.
ஆனால் “இளைய ராஜா..!” என்றுத் திடுக்கிட்டவளின் உள்ளத்து பயம் தானே வெளி வந்தது.
“இளைய ராஜா! என்னை விட்டு விடுங்க..! எனக்கு மேரேஜ் ஆகப் போகுது.” என்றுப் பதறினாள்.
ரோஹீத்தின் விழிகள் கூர்ப்பெற்றது.
“இதை ஏன் இப்போ சொல்கிறே?” என்றுக் கேட்டான்.
சுபாஷினி.. அவனது கரத்தில் சிக்குண்ட தனது கரத்தைப் பார்த்தவாறு.. “எனக்கு பயமாக இருக்கு..” என்றாள்.
“என்ன பயம்?”
“நானும் அவங்களை மாதிரி ஆகி விடுவேனோ என்று..” என்றாள்.
“யாரை மாதிரி..?” என்றுக் கேட்டவன், தொடர்ந்து “மலர் மாதிரியா..!” என்றுக் கேட்டதில் இருந்த அர்த்தத்தில் திகைப்புடன் நிமிர்ந்துப் பார்த்தாள். ஆனால் அவனோ அவளது பதிலுக்காக காத்திருந்தான். அதிலேயே அவன் கேட்டதின் அர்த்தம் புரியாது கேட்டுருக்கிறான் என்று சுபாவிற்கு தெரிந்தது. ஆனாலும் அவளையும் அறியாது மனதில் சில்லிடும் உணர்வை அவளால் தடுக்க முடியவில்லை.
அப்பொழுது மாரிமுத்து தன் மனைவியுடன் ரோஹீத்திற்கு திருஷ்டி சுற்ற வந்தான். ரோஹீத் சுபாவின் கரத்தைப் பிடித்தவாறு இருப்பதைப் பார்த்து அதிர்ந்து நின்றான். அவர்களைப் பார்த்த சுபா பயத்துடன் தனது கரத்தை விடுவித்து கொள்ள நினைத்தாள். ஆனால் அவனது இறுகிய பிடி அவளது முயற்சியைத் தடுத்தது. மாரிமுத்து மற்றும் அவனது மனைவி தங்கத்தின் பார்வை அவளைப் பிடித்திருந்த அவனது கரத்தில் இருப்பதைக் கண்டு மெல்ல விடுவித்தான்.
ரோஹீத் “வா மாரிமுத்து! திருஷ்டி சுத்திப் போடு!” என்றான்.
தங்கம் இடது கையில் வரமிளகாய், கல்உப்பு, எலுமிச்சையுடன் வந்து ரோஹீத்திற்கு திருஷ்டி கழித்துவிட்டு அதை முச்சந்தியில் வீச.. வெளியே சென்றாள். தனது மனைவியுடன் வெளியே செல்ல முற்பட்டவனை ரோஹீத் அழைத்தான்.
“சொல்லுங்க இராஜா!” என்று பவ்யமாக நின்றவனிடம் “இப்போ நீ செய்தது உன் விருப்பம். அதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். அதுக்காக என் விசயத்தில் தலையிடுவதை நான் ஒத்துக்க மாட்டேன்.” என்று இறுகிய குரலில் கூறவும், மாரிமுத்து வெடுவெடுத்து போனான்.
ரோஹீத் “நான் சொன்னதை செய்ய சொன்னா.. யார் உன்னை நான் சொல்லாததையும் செய்ய சொன்னது. உனக்கு அவ்வளவு தைரியம் வந்துருச்சா!” என்று தாழ்வான ஆனால் அழுத்தமான குரலில் கேட்டான்.
அந்த குரலில் மாரிமுத்து வெடவெடத்து போனான். அங்கு நின்றிருந்த சுபாஷினிக்கும் அதே நிலைமை தான்!
ரோஹீத் தொடர்ந்து “மைசூருக்கு நான் ஃபோன் போட சொன்னேனா?” என்றுக் கேட்கவும், மாரிமுத்து என்ன பதில் கூறுவது என்றுத் தெரியாமல் திருதிருவென விழித்தான்.
பின் சலிப்புடன் தலையைத் திருப்பிக் கொண்ட ரோஹீத் “காரில் என் ஃபோன் இருக்கும். அதுக்கு கண்டிப்பா ஃபோன் செய்திருப்பாங்க! அதை எடுத்துட்டு வா..” என்ற பொழுது.. வேறு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
மருத்துவர் வந்திருக்கிறார் என்று அவரை அழைத்துக் கொண்டு அப்படியே அவனது செல்பேசியையும் எடுத்துக் கொண்டு வருவதாக மாரிமுத்து விரைந்தான்.
அப்பொழுது சுபாஷினி "நான் கிளம்பட்டுங்களா.." என்றுக் கேட்டாள்.
அவளைப் பார்த்த ரோஹீத் "நான் உன்னைப் போக சொல்லுலையே.." என்றான்.
சுபாஷினி "எப்போ போகச் சொல்வீங்க இளைய ராஜா?" என்றுச் சங்கடத்துடன் கேட்டாள்.
அதற்கு ரோஹீத் "சொல்லும் போது போ.." என்றான்.
சுபாஷினி "வீட்டுல சொல்லிட்டு வரலை. தேடுவாங்க.." என்றுச் சிறுப்பிள்ளை கூறும் காரணம் போல் கூறினாலும்.. உண்மையே கூறினாள்.
அதைக் கேட்ட ரோஹீத் "ஓ! ஐ வில் தின்க் எ ரிஷன் ஃபார் தட்..." என்றான்.
அவள் இங்கேயே இருப்பதற்கு.. அவளது பெற்றோர்களிடம் சொல்ல காரணத்தை யோசிக்கிறேன் என்று அவன் கூறியதைக் கேட்டு சுபாஷினி அயர்ந்து நின்றாள்.
மருத்துவரை அழைத்துக் கொண்டு வந்த மாரிமுத்து பவ்வியமாக அவனின் செல்பேசியை நீட்டவும், ரோஹீத் வாங்கி பார்த்தான். அதில் மேனேஜரின் தவறிய அழைப்புகள் இருந்தன. அதை இகழ்ச்சியாக பார்த்த ரோஹீத் செல்பேசியை அணைத்து வைத்தான்.
அதற்குள் மாரிமுத்துடன் விரைந்து வந்த டாக்டர் ரோஹீத்தின் காலை ஆராய்ந்தார். பின் "எலும்பு முறிவு மாதிரி தெரியலைங்க! மூட்டு விலகியிருக்கு! ஹாஸ்பெட்டல அட்மிட் செய்துட்டா.. உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பிச்சரலாம். லேட் ஆனா ரொம்ப டேன்ஞ்சர் ஸார்!" என்றுவிட்டு.. உடன் அழைத்து வந்த கம்பௌன்டர் பாயிடம் அவர்கள் கொண்டு வந்த ஸ்டெக்சரில் ரோஹீத்தை படுக்க வைத்து கொண்டு போக கூறினார்.
ஆனால் அவர்களை கை நீட்டி தடுத்த ரோஹீத் "என்ன ட்ரீட்மெண்ட் தருவீங்க! அதை இங்கேயே செய்யுங்க.." என்றான்.
அதைக் கேட்டு திகைத்த மருத்துவர் "ஸார் அதற்கான ஸ்பெஷிலிட்ஸ் ஹாஸ்பெட்டல தான் இருக்கு! அதற்கு பிறகும் காலை அசைக்காம அன்டர்கேர்ல இருக்கணும்." என்றார்.
ரோஹீத் "ஹலோ டாக்டர்! நான் இங்கேயே ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறேன் என்றுச் சொல்லியாச்சு. அப்போ.. அதற்காக எப்படி.. என்ன செய்யணும் என்றும் நான் சொல்லிட்டு இருக்கணுமா.. அதற்கான அரேன்ஜ்மென்ட்ஸ் நீங்களே செய்ய மாட்டிங்களா! இந்த பொண்ணு நர்ஸ் தான் வீடும் இங்கே இருக்கு.. இவ என்னைப் பார்த்துப்பாள். ட்ரீட்மெண்ட் பிறகு அன்டர்கேர் பற்றி கவலைப்பட தேவையில்லை. சோ ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க.." என்றுவிட்டு வலியின் காரணமாக அயர்வுடன் சாய்ந்துக் கொண்டான்.
ரோஹீத் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சுபாஷினிக்கு.. வலியுடன் அவன் சோர்வது தெரியவும் மற்றதை மறந்து.. "டாக்டர்! அவருக்கு வலிக்குது போல.. முதலில் ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க.." என்றுத் துரிதப்படுத்தினாள்.
இராஜ பம்பரையின் இளைய வாரிசு கூறிய பின்.. அதற்கு மறுப்பு ஏது! எனவே மருத்துவர் சிகிச்சையை தொடங்கினார். சுபாஷினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு.. தன்னுடன் அழைத்து வந்த கம்பௌன்டரிடம் தேவையான மருந்துகளை மருத்துவமனையில் இருந்து எடுத்து வரக் கூறி அனுப்பினார்.
ஆனால் சுபாஷினி “டாக்டர்! அந்த மிடிஷன்ஸ் வரும் வரை.. காத்திருக்க வேண்டுமா.. ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிருச்சு! அப்பறம் பாதமூட்டை சரியான போஸிஷனுக்கு.. நகர்த்த முடியாது. ஆப்ரேஷனை கையில் எடுக்க வேண்டியது வரும். இப்போ நீங்க கையிலேயே நகர்த்தி விடலாம். நான் தொட்டு ஆராய்ந்தவரை.. ரொம்பவும் விலகிய மாதிரி தெரியலை. லைட்டா நகர்ந்திருக்கு..” என்றாள்.
அவளை மெச்சுதலுடன் பார்த்த.. மருத்துவர் பிரதாப் “இளைய ராஜா வலியை தாங்குவாரா என்றுத் தான் யோசிக்கிறேன்.” என்றார்.
அதற்கு ரோஹீத் எரிச்சலுடன் “ஸ்டாப் ஃகாலிங் லைக் தட்! நான் தாங்கிப்பேன். சீக்கிரம் ட்ரீட்மென்ட் ஆரம்பிங்க!” என்று உத்தரவிட்டான்.
அதற்கு மேல் தாமதியாமல் மருத்துவர் பிரதாப் இன்னொரு கம்பௌன்ட்டரை ரோஹீத்தின் முழங்காலில் அழுத்தமாக பிடித்துக் கொள்ள கூறினார். பின்னர் சுபாஷினியை பாதத்திற்கு மேலாக கண்டை காலை பிடித்துக் கொள்ள கூறியவர், ரோஹீத்தின் நகர்த்த பாதமூட்டை முதலில் மெல்ல தடவி நீவினார். சரியான நிலையை நீவி அறிந்தவர், அடுத்த நிமிடம் திடுமென பாதவிரல்களிடம் ஒரு கையால் அழுத்தமாக பிடித்துக் கொண்டு மறுகையால் பலம் கொண்ட மட்டும் அழுத்தமாக பிடித்து பாதமூட்டை பழைய நிலைக்கு அழுத்தி அசைக்கவும், ரோஹீத் வலியால் துள்ளினான். ஆனால் கம்பௌன்ட்டர் மற்றும் சுபாஷினி அழுத்தமாக பிடித்துக் கொண்டதால்.. அவனால் கால்களை அசைக்க முடியவில்லை. ஆனால் வலியின் காரணமாக கையால் அந்த ஷோபா உறை கிழிந்து விடும் அழுத்தி பிடித்தான்.
பிரதாப் பாதமூட்டை சரியான நிலைக்கு நகர்த்தியதும்.. கையோடு கொண்டு வந்திருந்த.. பெல்ட்டை இறுக்கமாக தற்போதைக்கு கட்டிவிட்டார். மருந்துகள் மற்றும் நவீன பெல்ட்… அசையாமல் இருக்க பேட் போன்றவை வந்ததும்.. சரியான சிகிச்சை முறை அளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.
பின் ரோஹீத்தை நிமிர்ந்து பார்த்தார். அவர் நினைத்தது போல்.. வியர்ந்து ஒழுக கண்கள் சொருக அமர்ந்திருந்தான்.
உடனே பிரதாப் அங்கு ஓரமாக நின்றிருந்த மாரிமுத்துவிடம் ஒரு டம்ளர் நீரில் உப்பும், சர்க்கரையும் சரியான அளவில் போட்டு எடுத்துக் கொண்டு வரக் கூறினார். சுபாஷினி அங்கு நின்றிருந்த தங்கத்திடம் குளிர் நீரில் நனைத்த துண்டை கொண்டு வரக் கூறினாள்.
பிரதாப்.. கம்பௌன்டரை இன்னும் காலை விடாமல் பிடித்துக் கொள்ள கூறிவிட்டு.. கையோடு கொண்டு வந்திருந்த வலி நிவாரணிக்கான ஊசி மருந்தை உடலில் செலுத்தினார். அதற்குள் மாரிமுத்தும்.. தங்கமும் கேட்டதை கொண்டு வந்திருந்தார்கள். பிரதாப் பெல்ட் போடப்பட்டிருப்பதை ஆராய்ந்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, சுபாஷினியே டம்ளரை வாங்கி சிறிது சிறிதாக ரோஹீத்திற்கு புகட்டி விட்டாள். பின் தங்கம் கொண்டு வந்திருந்த துண்டை நன்றாக பிழித்துவிட்டு.. முகம், கழுத்து, மார்பு ஆகியவற்றை மெல்ல துடைத்துவிட்டாள்.
ஊசி மருந்து, சுபாஷினி செய்த அவசர உதவி என்று அனைத்தும் சேர்ந்ததும்.. கண்கள் இருட்ட, காதடைக்க அமர்ந்திருந்த ரோஹீத்திற்கு மெல்ல சுயநிலை வந்ததது. இமைகள் திறந்து நன்றாக சுற்றிலும் பார்த்தான்.
அயர்வாக படுத்தவன்.. அணைத்து வைத்திருந்த செல்பேசியை எடுத்துப் பார்த்தான். பல தவறிய அழைப்புகள் இருந்தன. மாரிமுத்துவை பார்த்தான்.
மாரிமுத்து "என்னோட ஃபோனுக்கும் ஃகால் வந்துச்சுங்க இராஜா! ஆனா என்ன பதில் சொல்றதுனு தெரியலை. அதனால எடுக்கலைங்க.." என்றான்.
ரோஹீத் "இப்போ பேசு! எனக்கு ட்ரீட்மெண்ட் நடந்துட்டு இருக்குனு சொல்லு! நான்தான் இங்கேயே செய்ய சொன்னேனு சொல்லு! நான் இங்கே தான் இருப்பேன் என்றுச் சொல்லு! எனக்கு சரியாகிற வரை.. யாரும் என்னை டிஸ்டர்ப் செய்ய இங்கே வர வேண்டாம் என்று நான் சொன்னதா சொல்லு.." என்றான்.
மாரிமுத்து திருதிருவென விழித்தான். ஏனெனில் ரோஹீத் கூறியதைப் போல்.. அவன் கூறினால்.. அவனது வேலை போவது நிச்சயம்!
அவனது முகத்தைப் பார்த்து சிரித்த ரோஹீத் “நான் இன்னொரு தரம் சொல்வதாக இருந்தால்.. அதை உன்கிட்ட சொல்ல மாட்டேன். உன் இடத்தில் வேற ஒருத்தங்க இருப்பாங்க..” என்ற அடுத்த நிமிடமே மாரிமுத்து தனது செல்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே விரைந்தான்.
அங்கு மருத்துவர் பிரதாப்பும்.. வேண்டிய மருந்துக்களை வீட்டிற்கு தரத் தயங்கிய தலைமை மருத்துவரிடம் இளைய ராஜாவான ரோஹீத்தின் பிடிவாதத்தை கூறி.. ட்ரீப்ஸ் போன்ற மருத்துவ உதவிகரணங்களை மாளிகைக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டிருந்தார். மாரிமுத்துவிடம் பேசிவிட்டு.. திரும்பி ரோஹீத் டாக்டர் பிரதாப்பே பேசி முடித்துவிட்டதைப் பார்த்து புன்னகைக்கவும், பிரதாப் “நானும் உங்க கிட்ட கேட்க தான் திரும்பினேன் ஸார்! ஆனா மாரிமுத்துவிடம் நீங்க பேசிட்டு இருக்கிறதைப் பார்த்ததும்.. நானே கேட்டுட்டேன்.” என்று சிரித்தார்.
ரோஹீத் சிறு ஏளனச்சிரிப்புடன் “நான் விரும்பியதை செய்ய எதுக்கு மற்றவங்க இடையிடறீங்கனு தான் புரியலை.” என்றான்.
அதற்கு பிரதாப் “அனைவரும் உங்களோட நல விரும்பிகள்! உங்களுக்கு எங்க ஹாஸ்பெட்டல பெஸ்ட் ட்ரீட்மென்ட் அன்ட் கேர் கொடுத்து கௌரவிக்கணும் என்று நினைச்சுருப்பார். எதாவது கடைக்கு போன.. அங்கிருப்பதிலேயே பெஸ்ட் பொருள் உங்களுக்கு ஆர்வமா கொடுப்பாங்க இல்ல ஸார்! அந்த மாதிரி தான்..” என்றுச் சிரித்தார். அதை ஒத்துக் கொண்டு சிரித்த ரோஹீத் பின் முடிவில் இறுகிய முகத்துடன் “ஐ ஹெட் ஸ்பெஷல் கேர்..” என்கவும், பிரதாப் சிரிப்பை நிறுத்திவிட்டு அமைதியானார்.
அதைப் பார்த்து சிரித்த ரோஹீத் “ஆனா எனக்கு வேண்டும் என்ற இடத்தில் இந்த பவரை யுஸ் செய்துப்பேன். இப்போ ஹாஸ்பெட்டலுக்கு வர மாட்டேன் என்றுச் சொன்னேனே அந்த மாதிரி..” என்றுவிட்டு தலையைப் பின்னால் சாய்த்து சிரிக்கவும், பிரதாப் குழம்பி போனார்.
பின் ட்ரீப்ஸ் ஏற்ற மருந்துகள் வர இன்னும் அரை மணி நேரம் ஆகும் என்பதால்.. ரோஹீத்தின் பல்ஸ் மற்றும் உடல் வெப்பநிலை மீண்டும் சரிப்பார்க்கப்பட்டது. பிரதாப்பிற்கு மீண்டும் அழைப்பு வரவும்.. வெளியே சென்றார்.
அப்பொழுது சுபாஷினி “இளைய..” என்று இழுத்தவள், அவன் பார்த்த பார்வையில் “ஸார்! நான் போகட்டுங்களா..” என்றுத் தயக்கத்துடன் கேட்டாள்.
அதைக் கேட்டவனின் கண்கள் கூர்பெற்றது. அங்கு நின்றுக் கொண்டிருந்த கம்பௌன்டரை பார்த்து வெளியே போ.. என்பது போல் தலையசைக்கவும், அவன் அடுத்த கணமே வெளியேறினான்.
பின் ரோஹீத் சுபாஷினியை பார்த்து “என்னோட ஆர்டரை மீறுவதற்கு அவ்வளவு தைரியம் இருக்கா..” என்று உறுமினான்.
உடனே சுபாஷினி பயத்துடன் கரங்களை குவித்தவாறு “தைரியமில்லாமல் தான்.. நான் போகிறேன் என்றுச் சொல்கிறேன் ஸார்!” என்று மண்டியிட்டாள்.
அவளது பயத்தைப் பார்த்த ரோஹீத் “ஏன் என்னைப் பார்த்துக்க பிடிக்கலையா..” என்றுக் கேட்டான்.
அதற்கு சுபாஷினி “அச்சோ அப்படியில்லைங்க! நான் கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக நீங்க என்றுத் தெரியாம நடந்துக்கிட்டேன். அதுதான் காரணம்..” என்றாள்.
ரோஹீத் குறுஞ்சிரிப்புடன் “நீதான் என்னைப் பார்த்துக்கணும் என்று நான் சொல்வதற்கும் அதுதான் காரணம்..” என்றுப் பேச்சை முடித்தான்.
சுபாஷினி மெல்ல “வேண்டாம் ஸார்! இது ஏதோ விபரீதமா போயிருமோ என்றுப் பயமா இருக்கு!” என்றாள்.
ரோஹீத் “என்ன விபரீதம் என்று நினைக்கிறே?” என்று அடக்கப்பட்ட முறுவலுடன் கேட்டான்.
சுபாஷினி பரிதாபமாக அவனை ஏறிட்டுப் பார்க்கவும், ரோஹீத் “ஓ! அப்போ அந்த கார்காரனை லவ் செய்துட்டியா என்றுக் கேட்டதைச் சொல்றீயா! அதுதான் நான் என்றால் நீ திரும்பியும் கூடப் பார்க்க மாட்டே என்றுச் சொல்லிட்டே! உனக்கும் மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு! அப்பறம் எதை விபரீதம் என்றுச் சொல்கிறே..!” என்றுத் தோள்களைக் குலுக்கினான்.
சுபாஷினி குனிந்த தலை நிமிராது “எனக்கு நீங்க இன்னும் விளையாடற மாதிரி இருக்கு!” என்றாள்.
ரோஹீத் “அது விளையாட்டு இல்லை! மை டிசையர்! சொல்ல போன ரொம்ப நாள் கழிச்சு.. எதாவது விசயம்.. அல்லது ஒரு நபரிடம் இவ்வளவு நேரம் பேசறேன். மலருக்கும் எனக்கும் இருக்கிற ரிலேஷன் பற்றித் தெரிந்திருந்தா.. உனக்கு சில கெஸ்ஸஸ் இருந்திருக்கும். எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கலை. எல்லாமே வெறுத்துப் போன எனக்கு உன்னோட பயம், ஆர்வம், ஏமாற்றம், கோபம், கண்ணீர், தயக்கம் எல்லாம் பார்க்க பிடிச்சுருக்கு! ஆனா இன்னும் நீ சிரித்து பார்க்கலை.” என்றான்.
ரோஹீத் கூறியது கேட்டு சுபாஷினி அயர்ந்து நின்றாள். என்ன பேசுகிறான் என்றுப் புரிந்துத் தான் பேசுகிறானா என்று இருந்தது. அவளது பயம் அதிகமானது போன்று இருந்தது. ஆனால் எட்டு வருடங்களுக்கு முன் அவனது ஆசை, காதல், வாழ்க்கை அழித்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு கொண்டிருந்த சுபாஷினிக்கு.. அவளுடன் பழக வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றி.. தான் செய்த குற்றத்திற்கு பிராய்சித்தம் செய்தால் என்ன என்றும் தோன்றியது. எப்படியும்.. சில நாட்கள் தான் இங்கே இருக்க போகிறான். அதுவரை.. அவனுக்கு பணிவிடை செய்து தனது தவறிற்கு பிராய்சித்தம் செய்ய எண்ணினாள்.
எனவே அவன் மேல் புதிதாக தோன்றிய பயத்தையும், முன் செய்த குற்றவுணர் போன்ற தனது உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மெல்ல “சரி ஸார்!” என்றாள்.
ரோஹீத் “ஷப்பா! இளைய ராஜா என்றுத் தான் பெத்த பேரு! ஆனா எனக்கு வேண்டியதை நிறைவேற்ற.. எப்படி கெஞ்ச வேண்டியது இருக்கு..” என்றுச் சிரிக்கவும், சுபாஷினி பதட்டத்துடன் “அப்படியெல்லாம் இல்லைங்க! என்னை மன்னிச்சுடுங்க! எனக்கு உங்களைப் பார்த்த பயம் கலந்த மரியாதை அதுதான் தயங்கினேன்ங்க..! மத்தபடி ஒண்ணுமில்லைங்க..” என்று பாதி உண்மையை அவசரமாக கூறினாள்.
அதற்குள் மருத்துவ உபகரணங்களை கொண்டு வந்த கம்பௌன்டருடன் ரோஹீத்தின் அனுமதி பெற்று உள்ளே வந்த பிரதாப்.. ரோஹீத்திற்கு அடுத்த கட்ட சிகிச்சை தொடங்கினார். உடன் இரு கம்பௌன்டர்கள் இருந்ததால்.. அவர்கள் உதவியுடன் ரோஹீத்தை ரெஸ்ட் ரூமிற்கு அழைத்து சென்று.. பின் அவன் அணிந்திருந்த உடையை மாற்றி.. இலகுவான உடையை அணிய செய்தனர். பின் பாதத்தில் அப்பொழுதைக்கு மாட்டியிருந்த பெல்ட்டை கழற்றி.. களிம்பு தடவி.. மூட்டு அசையா வண்ணம் இருக்க மாவு கட்டு போடப்பட்டது. பின் ரோஹீத்திற்கு ட்ரீப்ஸ் ஏற்றப்பட்டது. இவை அனைத்தும் செய்து முடிக்கும் வரை.. சுபாஷினியும் உதவி செய்தாள்.
ரோஹீத்தின் கட்டுப் போட்ட காலை மீண்டும் ஆராய்ந்த பிரதாப் “ஸார்! உங்களைத் தூக்க.. நடக்க வைக்க.. உதவியா இந்த கம்பௌன்ட்டரை இங்கே விட்டுட்டு போகட்டுமா..” என்றுக் கேட்டார்.
அதற்கு ரோஹீத் "மாரிமுத்து போதும் டாக்டர்!" என்றுவிட்டு செல்பேசியில் எதையோ பார்க்க ஆரம்பித்தான். எனவே பிரதாப் சுபாஷினியிடம் எந்தெந்த மாத்திரைகள் எந்தெந்த வேளைகளில் கொடுக்க வேண்டும் என்ற விபரங்களைக் கூறியவர், மாலையில் வருவதாக கூறிவிட்டு சென்றார்.
பிரதாப் சென்றதும்.. மாரிமுத்துவிடம் ரோஹீத்திற்கு காலை உணவாக இலகுவாக செரிமானம் ஆக இட்லி வேக வைக்க கூறினாள். மாரிமுத்து தனது மனைவியிடம் சொல்ல செல்வும், சுபாஷினி ரோஹீத்திடம் "நான் என்னோட அப்பா அம்மா கிட்ட சொல்லிட்டு வந்தரேன் ஸார்.." என்றாள்.
ரோஹீத் சரி என்றுக் கூறவில்லை. போகாதே என்றுக் கூறவில்லை. சாய்வாக அமர ஏதுவாக போடப்பட்டிருந்த தலையாணியில் சாய்ந்தவாறு கையைக் கட்டிக் கொண்டு அமைதியாக எங்கோ வெறித்தவாறு இருந்தான். அதையே அனுமதியாக ஏற்றுக்கொண்டு.. வீட்டிற்கு விரைந்தாள். வேகமாக நடந்து வந்ததில் அவளுக்கு வியர்த்து ஒழுகியது. அதைத் துடைக்க கூட இல்லாமல் வீட்டைத் தாண்டி.. அவர்கள் விவசாயம் செய்யும் இடத்தை நோக்கி சென்றாள்.
அவளது மனதில் பல எண்ணங்கள் அவளை விட வேகமாக உழன்றுக் கொண்டிருந்தன.
மலரிடம் படித்த பெண்.. என்று அன்றே கண்டுப்பிடித்தவன், அதனோடு தொடர்ந்து நினைவடுக்கில் சென்று.. மலரை அழைத்து வரச் சொன்ன பெண்ணும் தான் என்றுக் கண்டுப்பிடித்து விடுவானோ என்று அஞ்சினாள்.
அடுத்த பயத்தை நினைத்து அவளே மனம் குன்றிப் போனாள். ரோஹீத் தான் காரை ஓட்டிச் செல்கிறான்.. என்று அறியாது, அவளை இந்த சில நாட்களாய் ஆட்டிப் படைத்த அந்த காரை கண்டால்.. அவளது நடவடிக்கை மற்றும் எண்ணங்களைப் பற்றி ரோஹீத் கூறியது வியப்பையும் அச்சத்தை அளித்தது.
மிகவும் வெளிப்படையாக அந்த காரோட்டியை காதலித்தாயா என்றுக் கேட்டுவிட்டான். இல்லை என்று மறுப்பு தெரிவித்தவளுக்கு.. அப்போ அவளது நடவடிக்கைக்கு என்ன பெயர் என்ற கேள்வியும் எழுந்து அவளைப் பயமுறுத்தியது. இன்னொருவருடன் திருமணம் நிச்சயத்திருக்கையில்.. ஒரு காரின் ஹாரன் சத்தத்திற்கு எப்படி மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாய் மாறினேன்.. என்றுத் தன்னையே கொட்டிக் கொண்டாள். அது வெளிப்படையாகவே தெரிந்திருக்கவே.. ரோஹீத் அதைச் சொல்லிக் காட்டுகிறார் என்று அவளுக்கு தெரிந்தது. அதை வைத்து.. அவளுடன் அவன் விளையாடுவது புரிந்தது.
அந்த விளையாட்டு விபரீதமாக போக கூடாது என்று அஞ்சினாள். ஏனெனில்.. அவளைப் பற்றித் தெரிந்து.. சமஸ்தானத்தின் இளைய ராஜாவாக.. சிறு அதிகாரத்துடன் அவன் பேசிய பேச்சுகளின் அர்த்தங்கள் வேறாக சுபாஷினிக்கு ஒலித்தது. அல்லது அவளுக்கு மட்டும் தான் அவ்வாறு அவன் என்ன பேசினாலும் விவகாரமாக அர்த்தம் தோன்றுகிறதா.. இல்லை.. உண்மையிலேயே.. இளைய ராஜா சற்று விவகாரமாக தான் பேசுகிறாரா.. என்றுப் பல கேள்விகள் எழுந்தன. ஆனால்.. அம்மாதிரி பேச்சுக்களுக்கு.. அவளின் பதில் அமைதியாக இருந்தால்.. அவளுக்கு இத்தனை பயம் இருந்திருக்காது. ஆனால் ரோஹீத் பேசும் வார்த்தைகள்.. சுபாஷினிக்கு அர்த்தம் வேறாக ஒலித்து சிலிர்ப்பை ஏற்படுவதைத் தான் பயத்துடன் உணர்ந்தாள்.
தற்பொழுது பிராய்சித்தம் என்றுக் கூறி.. அவனுக்கு பணிவிடை செய்ய ஒத்துக் கொண்டுவிட்டாள். அவள் ஒத்துக் கொள்ள விட்டாலும்.. ஒத்துக் கொள்ளும் வரை.. விட்டிருக்க மாட்டான் என்றுத் தோன்றியது. இம்மாதிரி ஏன் அவள் வேண்டும் என்ற பிடிவாதம் என்ற கேள்விகள் தான் சுபாஷினியை விபரீதமாக எண்ண தோன்றியது.
சுபாஷினியின் தற்போதைய பயமே வேறு.. இம்மாதிரி தொடர்ந்து இருபொருள் தரும்படி அதிக உரிமையுடன் பேசினால்.. அவள் மயக்கி விடுவாளோ என்று அஞ்சினாள். அவளுக்கு அந்த காயத்ரி வேறு நினைவிற்கு வந்தாள். அதே நேரத்தில்.. காயத்ரியை நினைத்து.. சுபாஷினி ‘அவங்களை மாதிரி ஆகிடுவேனோ’ என்று பயத்தில் உரைத்த பொழுது.. ரோஹீத் ‘மலர் மாதிரியா..’ என்று அவன் காதலித்தவளைப் பற்றிக் கூறியதைக் கேட்டு அவள் மனம் சிலிர்க்கவில்லை என்றால்.. அந்த மனம் இருந்து பயனில்லை.
ஆனால் அவளுக்கு ஒன்றும் மட்டும் நன்றாக புரிந்தது.
இந்த சமஸ்தானத்தின் இளைய ராஜாவை விரும்பினால்.. மலருக்கு நேர்ந்த கதி தான் அவளுக்கு! அல்லது இளைய ராஜாவால் விரும்பப்பட்டால் காயத்ரியின் நிலைமை தான் அவளுக்கு! ஊராரின் ஏச்சு பேச்சுகளுக்கு ஆட்பட்டு.. அசை நாயகியாக பேசப்படுவாள். எனவே இந்த இரு நிலைக்கும்.. அவள் சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு ரோஹீத்திடம் எவ்வித உணர்வும் இன்றி.. எவ்வாறு அவனது அருகில் இருப்பது என்று பலவாறு எண்ணியவாறு நடந்தாள்.
அவளை அந்நேரத்தில் பார்த்ததும்.. அவர்களே அவளை நோக்கி வந்தனர். சுபாஷினி மிகவும் பதட்டத்துடன் இருந்தாள். அவளது பெற்றோர்கள் ரோஹீத்தை பார்த்து கொள்ள மறுத்துவிட்டால்.. எப்படிச் சமாளிப்பது என்று பல்வேறுவிதமாக ஒத்திகை பார்த்தவாறு சென்றாள். ஆனால் அங்கு இராஜ பரம்பரையை சேர்ந்த ரோஹீத்தை பார்த்துக் கொள்வது என்றால் அது அவர்களது கடமை என்றார்கள். எவ்வளவோ பெரிய மருத்துவர்கள் இருக்க.. ரோஹீத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவளுக்கு கிடைத்தது அவளது பாக்கியம் என்றுக் கூறிக் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றுக் கூறினார்கள்.
அதைக் கேட்டவளுக்கு நடுஉச்சியில் அவர்கள் கொட்டியது போன்று இருந்தது. ரோஹீத்திற்கும் அவளுக்கு உள்ள உறவையும் எல்லையையும் பற்றி உரைப்பது போன்று இருந்தது.
ஆம்.. அவன் இந்த சமஸ்தானத்தின் இளைய ராஜா.. அவள் அவனுக்கு பணிவிடை புரிய வாய்ப்பு கிடைத்திருக்கும் பெண்! இதைத் தவிர வேறு எதுவுமில்லை என்ற தெளிவு அவளுக்குள் இருந்துவிட்டால்.. வேறு எந்த குழப்பமும் தேவையில்லை. அவனது எவ்விதமான பேச்சும் அவளைப் பாதிக்காது. வேறு அர்த்தம் போன்று தோன்றாது.. என்று எண்ண எண்ண மனம் தெளிவதைக் கண்டாள். எனவே தனது அன்னை மற்றும் தந்தையிடம் கூறிவிட்டு.. மாலை நெருங்கும் பொழுது வந்துவிடுகிறேன்.. என்றுவிட்டு மாளிகையை நோக்கி நடைப் போட்டாள்.
தற்பொழுது அவளது மனதில் மாரிமுத்து இட்லி அவிச்சு கொடுத்திருப்பானா.. அவன் உண்டிருப்பானா என்ற கேள்விகள் எழுந்தது. இம்மாதிரி பணிவிடைகள் செய்ய தான் அவளை வைத்திருக்கிறான். எனவே அப்பணியை ஆற்ற விரைந்து சென்றாள்.
மூச்சு வாங்க வேகமாக குன்றின் மலைப்பாதையில் ஏறியவள், கேட்டை திறந்ததும்.. அங்கு அணிவகுத்திருந்த கார்களை கண்டு அதிர்ந்தாள்.
அந்த கார்களின் பிரமாண்டத்தை வைத்தே.. அவை மற்ற இராஜவம்சத்தினரின் கார்கள் என்று அவளுக்கு தெரிந்தது.
அவ்வாறு எனில்.. இங்கிருந்து இளையராஜாவை அழைத்துச் சென்றுவிடுவார்களா.. என்று விக்கித்து நின்றுவிட்டாள்.
தெளிந்த அவளது உள்ளம் மீண்டும் குழம்பியது அவள் அறியவில்லை.