All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அணுசரணின் "வேங்கை விழியாள் " - கதை திரி

Status
Not open for further replies.

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்புக்களே!!

இதோ என் புது முயற்சியுடன்..... இந்த கதை ஒரு போட்டிக்காக ஆரம்பித்தது ஆனால் அந்த நேரத்துக்குள் முடிக்க முடியும் என தோணாததால் சாதாரண தொடர் கதையாகவே கொடுக்கலாம் என நினைத்தேன்....
எங்கே போட்டிக்காக அவசரமாக எழுதி கரு மாறிவிடக்கூடாததால் இந்த முடிவை எடுத்தேன்...
என் முதல் கதையும் தொடர்ந்து வரும் அதேபோல் இந்த முயற்சிக்கும் உங்கள் ஆதரவை அளியுங்கள் நட்புக்களே
:)நன்றி(y)(y)
 
Last edited:

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைப்பு : வேங்கை விழியாள்

நாயகன் : நிலவழகன்!!!!
நாயகி : நிலவழகி!!!!!!


கதையைப் பற்றி சொல்லணும்னா ...இது கொஞ்சம் வித்தியாசமான சென்சிட்டிவ் ஆன கதைக்களம் கொண்ட தொடர்கதை நட்புக்களே... சமூகத்தில் அன்றாடம் நாம் அலட்சியமாய் சிலரைக் கடந்து வந்திருப்போம்.... அவர்களைப் பற்றின கதை...

எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் இந்தமாதிரி ஒரு கதைக்கருவுடன் தொடர் எழுத மிகவும் ஆசை... அதற்கான சரியான தருணமாகவே இதைப் பார்க்கிறேன்....

வெற்றி தோல்விகளை தாண்டி நான் எடுத்துக் கொண்ட‌‌ கதை மாந்தர்களுக்கு நியாயம் செய்வதிலே உறுதியாய் உள்ளேன்.. சில மனதைப் பாதிக்கும் நிகழ்வுகள் இருந்தாலும் பெரிய மனது பண்ணி மன்னித்து கொள்ளுங்கள் நண்பர்களே...

இறுதியாக ஒரே ஒரு தாழ்மையான வேண்டுகோள் நட்புக்களே... என்னைப் போன்ற புதிய எழுத்தாளர்களுக்கு உங்களின் குறைந்த பட்ச ஒரு வார்த்தையிலான (நிறை/குறைக்கான)கருத்துக்கள் எவ்வளவு மகிழ்ச்சி அளிக்கிறது என்பது எழுத்தாளர்களான எங்களுக்கு மட்டுமே புரியும்... எனவே சரியோ தவறோ உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...

இதோ கதையின் முன்னோட்டம்

"பின்னங்கால் பிடறியில் படற இருள் கவ்விய அந்த ஆள் ஆரவமற்ற சாலையில் தன் உடம்பில் உள்ள காயங்களையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருந்த பதின் வயது பாலகனை சிறிதும் இரக்கமில்லா அந்த மனித மிருகங்கள் துரத்திக் கொண்டிருந்தது...

ஒரு தெருவைக் கடந்ததும் அவர்கள் பின் வருவதற்கான ‌எந்த அறிகுறியும் இல்லாமல் போக அந்த பிஞ்சோ ஓடிவந்ததனால் ஏற்பட்ட களைப்பில் அருகில் இருந்த குப்பைத் தொட்டியின் பின் மறைந்து கொள்ள,

துரத்தி வந்த அரக்கர்களை வெறுமையான தெருவே வரவேற்றது... அதில் மாமிசமலைபோல் இருந்த ஒருவன் மற்றவனிடம் 'அவனை விடக் கூடாது... இந்த தெருவத் தாண்டி அவன் எங்கையும் போயிருக்க முடியாது... நீங்க ரெண்டு பேரும் அந்த பக்கம் போங்க 'என அனுப்பிவிட்டு அவனும் நகர ....

அதுவரை தன் வாயை இருகையாலும் மூடி மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தவன் அப்போது தான் ஆசுவாசமாக மூச்சு விட அந்நேரம் அவன் தோள்களில் ஒரு கரம் விழ திரும்பி பார்க்க அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றான்.... பின் சில நொடிகளிலேயே அந்த கரங்களிலேயே மயங்கி விழுந்திருந்தான்"

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏🙏

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
27707
விழி-1

கரு மேகங்கள் சூழ்ந்து நிலவு மகளை முகம் காட்டாமல் மறைத்துக் கொள்ள இதைப் பொறுக்காத வான் காதலன் தன் மின்னலெனும் ஆயுதம் கொண்டு மேகங்களைத் தாக்க அதுவோ வலி பொறுக்காது தன் கண்ணீரை பொழியவாரம்பித்தது...

அந்த ஏகாந்த இரவில் விடாது பெய்யும் மழையையும் பொருட்படுத்தாது 'திருச்சி டூ சென்னை' என எழுதப்பட்ட அந்த பேருந்து தங்குதடையின்றி தன் வேகத்தை அதிகப்படுத்தி முன்னேறிக் கொண்டிருந்தது...

அதில் பின்னிருக்கையில் ஜன்னலோரம் தன் பொதிகள் அடங்கியப் பையை மார்போடு அணைத்துக் கொண்டு மழையை வெறித்தவாறு அமர்ந்திருந்தான் நிலவழகன்...

பெயரிற்கு ஏற்ற போலவே அழகன் தான்.சந்தன நிறத்தில்.. மாசுமருவற்ற முகமும்... சிறிதாய் அரும்பத் துவங்கியிருந்த மீசையும் என பார்க்க லட்சணமாய் இருந்தான்.... ஏனோ இந்த ஒரு மாதம் அவன் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களாக மாறிப் போயின...

திருச்சிக்கு பத்து மைல் தாண்டி உள்ளது நிலவழகனின் கிராமம்.... அவனுடைய தந்தை வீரபாண்டியன், அவனின் சித்தி பரிமளம்... அவனைவிட ஆறு வயது சிறியவன் நிலவரசன்... தங்கை மதிவதனி....

வீரபாண்டியன் குடும்பம் அந்த கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வசித்து வரும் பெரிய குடும்பம்... அந்த கிராமத்தின் முக்கால்வாசி நிலம் அவர்களுடையதே...
அதுமட்டுமின்றி அந்த ஊரில் அவர்கள் வைப்பதே சட்டம்....

நிலவழகனின் தாய் அவனைப் பிரசவித்த ஆறு மாதங்களில் பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலின் காரணமாக அடிக்கடி சுகவீனமாக இருந்தவர் சிலநாட்களிலேயே இறைவனடியை அடைந்தார்.

கைக்குழந்தையுடன் தவித்துக் கொண்டிருந்த வீரபாண்டியனுக்கு அவரின் குடும்பமே சேர்ந்து அவர் மனைவியின் தங்கை பரிமளத்தை மணமுடித்து வைத்தனர். ...

முதலில் பரிமளமும் தன் அக்காவின் மகன் தன் மகனென்ற எண்ணி அவனை நன்றாகவே வளர்த்தார் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கடந்து அவர் கற்பமடையும் வரை....

பின் அவரின் நடவடிக்கையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டது... எங்கே தன் இரத்தத்தில் உருவாகும் பிள்ளைக்கு இந்த ஊரில் முதல் உரிமை கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சியவர் கொஞ்சம் கொஞ்சமாக நிலவழகனிடம் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார்...
அதோடு காரணமே இன்றி அவன் மீது சிறிது சிறிதாக வெறுப்பையும் வளர்த்துக் கொண்டார்...

முதல் முதலில் அம்மா என்றே அறிமுகமானவர் தன்னை இதுவரை அன்புமழையில் நனைத்தவர் தீடிரென விலகுவது புரியாத அந்த ஐந்து வயது நிலவழகனும் 'மா...மா...' என தன் மழலை மொழியில் முந்தானையைப் பிடித்துக் கொண்டே திரிய ஒரு கட்டத்திற்கு மேல் பரிமளத்திற்கு எரிச்சலையே உண்டாக்கியது....

இதனை கவனித்த வீரபாண்டியன் " அழகா ஏன் அம்மாவை தொந்தரவு பண்ற ....நீ தம்பிப் பாப்பா வேணும்னு கேட்டல்ல அப்போ அம்மாவ தொல்லைப் பண்ண கூடாது சரியா "... என எடுத்துக் கூற அவனும் சரியென தலையாட்டினான் பொறுப்பு மிக்க தமையனாக அப்போதிருந்தே மாறினான்...

அதன் பின் நிலவழகனும் பரிமளத்தை எதற்கும் எதிர் பார்ப்பதில்லை...

பரிமளத்திற்கு மகன் பிறக்கவும் அவரின் முழு கவனமும் அவனின் மீதே திரும்பியது முன்பு போல் நிலவழகனை பார்த்துக் கொள்வதில்லை... நிலவழகனுக்கும் அது வருத்தம் அளித்தாலும் பெரிதாய் கண்டு கொள்ளாமல் தன் தமையன் மீதே கவனத்தை செலுத்தினான்...

பரிமளம் நிலவழகனுக்கு கொடுமை எதும் செய்துவிடவில்லை அதற்கு அவரின் மனமும் இடம் கொடுக்காது ஏனெனில் தனக்கு முதன் முதலில் தாய்மை உணர்வை அறிமுகப்படுத்தியவன் என்பதால் அந்த பாசமும் சிறிது இருந்தது அதோடு தன் மகனான நிலவரசனுடனும் நன்றாகவே பழகவிட்டார்....

ராமனின் தமையன் லட்சுமணன் போல பாசமிக்க இருந்தனர் பரிமளமும் பிற்காலத்தில் கைகேயி போல் வரம் பெற உதவுமென விட்டு விட்டார்..

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகளில் மதிவதனி... நிலவழகனுக்கு குடும்பம் தான் எல்லாமே... தம்பி தஙகைகளுக்காக உயிரைக் கூட தருவான்... அவர்களுக்கும் நிலவழகன் என்றால் உயிர்...

வீரபாண்டியனுக்கு உருவத்தில் தன் முதல் மனைவியைக் கொண்டு இருக்கும் நிலவழகன் மீது மிகுந்த பாசம்... அதில் பரிமளத்திற்கு அதிருப்தியே‌... நிலவரசன் வீரபாண்டியன் போல் சற்று மிடுக்குடன் இருப்பான்... இருந்தும் அவர் அழகன் மீதே கவனம் செலுத்துவதில் வருத்தமும் கோபமும் அதிகமாக மனதில் வைத்திருந்தார் அது வெடித்து சிதறும் காலமும் வந்தது...

வீரபாண்டியன் பஞ்சாயத்து,சந்தை , தோப்பு என எங்கு சென்றாலும் விடுமுறை நாட்களில் நிலவழகனை உடன் அழைத்து சென்று விடுவார்... தனக்கு பின் அவனே என்பதுபோல அதற்கான அனைத்தையும் சிறுவயது முதலே அழகனுக்கு கற்றுத்தர துவங்கியிருந்தார்....

எட்டாம் வகுப்பு தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் தான் அந்த எதிர்பாராத சம்பவங்கள் நிகழ்ந்திருக்க..
தன் மீது திருட்டு பழி விழுந்தது கூட தெரியாமல் நிலவழகனின் தற்போது இலக்கில்லா பயணம் இனிதே துவங்கியிருந்தது...
--------------------------------
மெல்ல மெல்ல கருமேகங்கள் அகல பிரகாசமாக தன் கதிர்களை பூமியில் பரப்ப துவங்கியிருந்தாள் நிலவுமகள்....

அவளின் ஒளியில் மரங்களுடன் உறவாடிக் கொண்டிருந்த மழைத் துளிகளும் வைரத்தைப் போல ஜொலி ஜொலிக்க அவ்வழிவந்த தென்றலும் இலையுடனான உறவைப் பிரித்து தரையில் விழ்த்தியிருக்க ....வருத்தமாய் இலையும் தென்றலை முறைத்தது....

வெண்ணிற திரைச்சீலைகளைக் கடந்து சென்ற தென்றலும் நிலவுமகளுக்கு போட்டியாய் உறங்கிக் கொண்டிருந்த நிலவழகியை பார்த்ததும் அதுவும் தன் வேகம் குறைத்து மெதுவாய் அவளைத் தீண்டி காற்றில் கரைந்து போனது.. நிலவழகி பெயருக்கேற்ற போல அழகிதான்......

ஐந்தரை அடிக்கு சற்று அதிக உயரமும் பால் வண்ண நிறமும் என பார்க்க அழகாய் இருப்பாள்...

அவள் நன்றாக உறங்குவது போல் வெளியில் தெரிந்தாலும் அந்த ஏசி அறையிலும் சிறிது நேரத்திலேயே உடல் முழுதும் வியர்வையில் குளித்து நடுங்க ஆரம்பித்தது.. கண் திறக்காமலேயே மூச்சுவிட சிரமப்படுபவள் போல் பெரிய பெரிய மூச்சுகளை விட்டவள் சில நொடிகளிலேயே 'ஆ......' என கத்தியபடி படுக்கையில் இருந்து எழுந்தமர்ந்தாள்...

தன் கையினை நெஞ்சில் வைத்து தடவிக் கொண்டே மற்றொரு கையால் விளக்கைப் போட்டவள் தண்ணீர் பாட்டிலையும் அருகில் இருந்த மாத்திரையும் எடுத்து வேக வேகமாக வாயில் போட்டவள்... நிலை கொள்ளவே சில நொடிகள் ஆனாது‌...

தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டவள் மணியைப் பார்க்க அதுவோ நள்ளிரவு இரண்டைக் காட்டியது... சற்று கோபத்துடன் முகம் சிவக்க தன் தொலைப்பேசியை கைவிட்டு துளாவியவள் அதில் கீர்த்தி என பதிவிட்டிருந்த எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்...

முழு ரிங் ஆகி கட் ஆகும் சமயத்தில் அழைப்பு ஏற்கப்பட எதிர் முனையில் பேச வாய் திறக்கும் முன்னே நிலா பொரியவாரம்பித்திருந்தாள்...

"நான்தான் அவ்வளவு தூரம் சொன்னேன்ல டி ...கேட்டியா....இந்த நினைப்பே வராமால் வேலையில என்னை முழு நேரம் ஈடுபடுத்தி அசதியினால ஏற்படுற ‌உடல்வலில கூட நல்லா தூங்கிட்டு இருந்தேன்...நீ சும்மா இல்லாம கொஞ்சம் ரெஸ்ட் எடுடி அப்பிடின்னு பன்னிரண்டு வருசமா தமிழ்நாடு பக்கமே வராத என்னை கொடைக்கானல்ல இருக்க உன் மாமனாரு கெஸ்ட் ஹவுசுல கொண்டு வந்து தங்கவச்சு என் நிம்மதியையே கெடுத்துட்டு நீ நல்லா தூங்கிட்டு இருக்கயாடி எரும... உன் சைக்காலஜில தீய வைக்க... நீ போலி டாக்டர்னு தெரியாம உன்ன நம்பி வந்தேன்ல என்ன செல்லணும்டி..."

இன்னும் பல நல்ல வார்த்தைகள் கொண்டு திட்டிக் கொண்டிருக்க எதிர் முனையில் கீர்த்தியோ அவள் பேச ஆரம்பிக்கும் முன்பே அலைப்பேசியே அருகில் இருந்த சோபாவில் தூக்கி வீசியவள் நல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தாள்...

அழைப்பை ஏற்காமல் விட்டிருந்தால் திரும்ப திரும்ப விடாது அழைத்து முழுத் தூக்கத்தையும் கெடுத்திருப்பாள் என்று தன் நண்பியைப் பற்றி நன்றாய் உணர்ந்த கீர்த்தி எப்போதும் போல் இன்றும் செய்தாள்....

இங்கு நிலாவோ நன்றாய் நல்ல வார்த்தைகளால் கீர்த்தியை அர்ச்சித்து விட்டு மூச்சு வாங்கிய பின்பே எதிர்முனையில் சத்தம் வராமல் போனதை உணர்ந்தவள் தன் ஆருயிர் தோழி தற்போது என்ன செய்திருப்பாள் என அறிந்து ...

"காலையில உனக்கு இருக்குடி " என மனதில் பொருமிக் கொண்டே அலைப்பேசியை வைத்தாள்...

பின் போர்வையினால் தன் உடலை மூடிக் கொண்டு அந்த கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது பால்கனி ஊஞ்சலில் சென்று அமர்ந்தாள்...

மழை நின்றிருந்தாலும் அதன் ஈரம் தென்றல் வழி கம்பளியையும் தாண்டி உடலை வருட அதைக்கூட உணராமல் இருளைக் கிழித்து வரும் நிலவின் ஒளியை பார்த்துக் கொண்டே இருந்தவள் எடுத்துக் கொண்ட மருந்து செயல் பட ஆரம்பித்து இருக்க எப்போது உறங்கினாள் என்றே அறியாமல் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருந்தாள்....

❤❤❤
கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏🙏
என்றும்
அன்புடன்
Anucharan 💖
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி-2

"பெண் கன்று பசு தேடி பார்க்கின்ற வேலை
அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை
என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே
கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே
தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன
தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து
ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல
தந்தை இருந்தும் தாயும் இருந்தும்
சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல"

பேருந்தில் ஹைடெசிபெல்லில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது...

எதையுமே உணராத நிலவழகன் ஜன்னலின் வழியே வெகுநேரமாக கொட்டும் மழையையே பார்த்துக் கொண்டிருந்தான்...

அடுத்து என்ன என்பதுவே மனதில் ஓடிக் கொண்டிருந்தது...

வெறும் பதினான்கு வயதே ஆகியிருப்பினும் அவனுக்கும் வயதிற்கு மீறிய முதிர்ச்சியும், அவனின் தந்தையுடன் வெளியில் சென்ற அனுபவமும் இருக்க தனியாக தன் வாழ்க்கையை வாழ புது இடம் தேடி கிளம்பியிருந்தான்...

இன்னும் சென்னையை அடைய ஒரு மணி நேரம் இருக்க அன்று மருத்துவரிடம் வாங்கிய முகவரியை இன்னொரு தடவை எடுத்து சரிபார்த்தவன் அத்தோடு தன் படிப்பு சான்றிதழ்களும் ஐந்து லட்சம் பணத்தையும் ஒருமுறை பார்த்துக் கொண்டு மீண்டும் அதனை தன் நெஞ்சோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டான்...

மழை குறைந்து
கிழக்கு வானத்தில் சூரியன் மெல்ல தன் இளஞ்சிவப்பு நிறக் கதிரால் இந்த பூமியை பார்க்க துவங்கியிருந்த வேளையில் நிலவழகன் சென்னையை அடைந்திருந்தான்...

பேருந்தை விட்டு இறங்கியவன் அந்த இளங்காலை வேளையிலேயே பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த அந்த பேருந்து நிலையத்தைப் பார்க்க மிரண்டே போனான்...

அதோடு மட்டுமல்லாது முந்தின நாள் காலையில் உண்ட உணவு அதன்பின் அவன் சாப்பிடவே இல்லை அதனால் அவன் வயிறு வேறு தன் இருப்பை உணர்த்த
மெதுவாக தன் பார்வையை சுழலவிட்டவனுக்கு அருகில் தேநீர் கடை தெரிய அங்கு சென்றான்...

"அண்ணா ஒரு பால் இரண்டு பன்" என்றான்... அந்த கடைக்காரரோ அவனை மேலிருந்து கீழ் வரை அலட்சியமாய் பார்த்தவர் சிறு முக சுழிப்புடன்

"காலைலேயே வந்துர வேண்டியது...கடையே இப்போதான் திறந்தேன்... அதுக்குள்ள இதுங்களுக்கு படியளக்கணுமா " என வாயிற்குள்ளேயே முணுமுணுத்து விட்டு
"காசு இருக்கா "என சற்று அதட்டலுடனே கேட்டார்...

அவரின் முணுமுணுப்பு நிலவழகனின் காதில் விழ அவனின் முகமோ இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது...

இருந்தும் இந்த காலை வேளையில் வேறு எங்கும் அலைய இயலாது என்பதை உணர்ந்தவன் வேறுவழியின்றி ஆம் என்பது போல் தலையசைக்க அவரும் வேண்டா வெறுப்பாக பாலைக் காய்ச்சியவர் அவன் கையில் கொடுக்காமல் அருகில் இருந்த பெஞ்சில்

'டொம் ... ' என்ற சத்தத்துடன் வைத்தவர் அருகிலேயே பன்னையும் வைக்க அதற்குள் தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து உணவிற்கான சில்லறை எடுத்தவன் அவர் கைகளில் கொடுக்க அந்த டீக்கடைக்காரரோ
"போ அந்த பக்கம் போய் குடி " என உதாசினமாக கூறிவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்... அவரின் அலட்சியப் போக்கை கண்ட நிலவழகனுக்கு சுருக்கென்று ஒருவித வலி உருவாக உணவுகூட தொண்டையில் இறங்க மறுத்தது..

அவன் நின்றிருந்த இடத்தின் அருகில் குப்பைத் தொட்டியில் எலும்பும் தோலுமாக இரண்டு நாய்க்குட்டிகள் படுத்திருக்க அதன் அருகில் சென்றவன் தன் கைகளில் இருந்த பன்னை அதன் அருகில் வைத்துவிட்டு பாலை மட்டும் குடித்துக் கொண்டான்..

------------------------------------------

பெரியமுள் பன்னிரண்டைத் தொட்டிருக்க சின்னமுள்ளோ சோம்பலாக பத்தைத் தொட்ட நொடி கூண்டில் அடைபட்ட குயிலோ வேகமாக வெளிவந்து தன் இன்னிசைக் குரலில் பத்து முறை கூவியது.....

அப்போது தான் சூரியன் மெல்ல மெல்ல வெளிவந்து தன் உஷ்ணத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தது....

முகத்தில் பட்ட கதிரவனின் ஒளியில் தன் நீலநிற கருமணிகள் மூடிய இமைகளினுள் அங்கும் இங்கும் அசைய பிரிக்க இயலாது இருந்த இமைகளை மெல்ல திறக்க அந்த செங்கதிரோனின் மிதமான ஒளியில் அவளின் நீலநயனங்கள் சோர்வை மீறியும் பிரகாசித்தது....

இரவு இருந்த இறுக்கம் நடுக்கம் எல்லாம் வெயில் கண்ட பனியாய் விலகி இருக்க புத்துணர்ச்சியுடன் தெரிந்தாள்.... தன் உடலில் சுற்றியிருந்த போர்வையை விலக்கியவள் தன் கலைந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு அந்த பால்கனி வழியே தெரிந்த பசுமையையும், பறவைகள் மீட்டும் இன்னிசையையும் தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தாள் நிலவழகி ....

இருப்பத்தியாரு வயதுள்ள யுவதி..... என்னதான் அவளுக்கு பிரச்சினைகள் இருந்தாலும் அதை முடிந்தமட்டும் சமாளிக்கும் திறமையும் கூடவே இருந்தது...

புதிதாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எப்போதும் அவளுக்கு உண்டு...

மும்பையில் அவள் நடத்தும் இருவேறு நிறுவனமும் அந்த அந்த துறையில் நம்பர் ஒன் தகுதியில் இருக்கிறது ..

ஒன்று மென்பொருள் நிறுவனம் மற்றொன்று வணிகம் சம்பந்தமான நிறுவனம்...

இந்த இளம்வயதிலேயே இரண்டு நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துகிறாள் என்பதிலேயே அவளின் உழைப்பும் முயற்சியும் அபரிவிதமானது என்பதில் எந்த ஐயமும் இல்லை... அவளைப் பொறுத்தவரை வாழ்க்கையில் தொழில் மற்றும் அவள் நடத்தும் தொண்டு நிறுவனம் அவை மட்டுமே உலகமே....

எந்த சமூகம் அவளை புறக்கணித்து வீதியில் எறிந்ததோ தற்போது அதே சமூகத்தின் முன் நூறு பேரிற்கு வேலை தரும் முதலாளி என்ற நிலையில் இருக்கிறாள்....

இதுவே அவளின் முழு வெற்றி இருந்தும் கடந்த காலத்தில் நடந்த கசப்பான நினைவுகளில் இருந்து தப்பிக்கவே தன்னை முழுநேரமும் தொழிலிலேயே புகுந்தி கொள்கிறாள்....

இதையெல்லாம் கவனித்த அவளின் ஆருயிர் தோழி மற்றும் தோழனான கீர்த்தனா, வாசன் இருவரின் திட்டமே இந்த ஒருமாதகால ஓய்வு ...

கீர்த்தி,வாசன் , மணி மற்றும் நிலவழகி மூவரும் ஒன்பதாம் வகுப்பில் இருந்தே மிக நெருங்கிய நண்பர்கள்...

எப்போதும் தனியாகவே இருக்கும் நிலவழகிக்கு ஒருநாள் வகுப்பு மாணவர்களாலே பிரச்சனை ஏற்பட இந்த மூவரும் தான் அவர்களிடம் இருந்து அழகியை காத்தனர்...

அந்த சம்பவத்திற்கு பிறகு அவர்களை பார்த்தால் சிறு புன்னகையுடன் கடக்கும் நிலவழகியை பேசிப்பேசியே தங்கள் மூவர் கூட்டணியில் இணைத்திருந்தனர்...

கீர்த்தி மருத்துவத் துறையைத் தேர்ந்தெடுக்க மற்றவர்கள் தொழில் துறையில் கால்பதிக்க அதற்கான துறையைத் தேர்ந்தெடுத்தனர்...

வாசன் மற்றும் மணி இருவருமே நிலவழகிக்கு பாதுகாவலன் போன்றவர்கள்...

கல்லூரி காலங்களில் கல்லூரி விடுதி அவளுக்கு கிடைக்காமல் போக மற்ற இருவரும் அவளுக்கு தனியாக வீடு எடுத்து தங்க வைத்திருந்தனர்...

அதிலும் அவளுக்கு பிரச்சினைகள் வர இருவரும் அவளுடனே தங்கிக் கொண்டனர்...
இதை அறிந்த பலரும் வாசனையும் மணியையும் தவறாக பேச அதைப்பற்றி அவர்கள் எப்போதுமே கண்டு கொண்டதில்லை.. நிலவழகி எவ்வளவோ சொல்லியும் கேட்காது இருவரும் அவளுடனே தங்கிக் கொண்டு தன் தோழிக்கு உற்ற நண்பர்களாக இருந்து வந்தனர்...

படிப்பு முடிந்ததும் வேலை தேடும் வேட்டையை துவங்க நிலவழகியைத் தவிர மற்ற இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது ஆனால் நிலவழகிக்கு திறமை இருந்தும் வேலை மறுக்கப்பட்டது....

அதனால் பல வருடம் முன் தன் பெயரில் டெப்பாசிட் செய்யப்பட்டு தற்போது அந்த பணம் பல்கி பெருகி இருக்க அதை வைத்து முதலில் வணிக நிறுவனத்தை நிறுவினாள்...

மற்ற இருவருமே அவளுக்கு உதவியாக வந்துவிட மணி வணிக நிறுவனமும் , வாசன் மென்பொருள் நிறுவனத்திலும் முப்பது சதவீத பங்குதாரராக இன்று வரை அவளுக்கு பக்கபலமாக இருக்கின்றனர்...

அந்த வீட்டின் அலைப்பு மணி சத்தத்தில் சுயம் தெளிந்தவள் சென்று கதவை திறக்க அங்கே கீர்த்தியின் மாமனாரும், வாசனின் தந்தையுமான கோபிநாதன் புன்னகையுடன் நின்றிருந்தார்...
ஆம் கீர்த்தியும் வாசனும் ஒருவரையொருவர் காதலிக்க இருவீட்டார் சம்மதத்துடன் இந்த வருடம் தான் திருமணம் செய்து கொண்டனர்... அவரை மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள் நிலவழகி ..

"என்னம்மா நல்லா தூங்கினாயா!!! எதுவும் அசவுகரியம் இருந்தால் உடனே எனக்கு கூப்பிடுமா "என்று வாஞ்சையுடன் கூறினார்... அவளிடம் என்ன பிரச்சினை இருந்தாலும் என்ன குறைகள் இருந்தாலும் தன் மகளாகவே நிலாவைப் பார்ப்பார்....

"அப்படியெல்லாம் இல்லை அங்கிள்.. இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. இங்க இருந்து பார்க்க வீயூ ரொம்ப அழகா இருக்கு அங்கிள்... இத்தனை வருஷம் இதையெல்லாம் எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியல ..." என புத்துணர்ச்சியுடன் கூற...

"நான் உங்களை எல்லாம் எத்தனை முறை இங்க வர சொல்லிக் கூப்பிட்டு இருப்பேன் நீங்கதான் அந்த மும்பையை கட்டிக்கிட்டே அழதீங்க.. அந்த வாசு பையனாச்சும் கூட்டிட்டு வருவான்னு பாத்தா படிக்க அவன் சித்தப்பா வீட்டுக்கு போனவன் இன்னும் இங்க வரவேயில்லை கல்யாணத்தை கூட அங்கையே வச்சுட்டான்.. என்ன பண்றது எங்க நம்ம சொல்லறத கேக்குறான்... கீர்த்தி சொன்னா நீ இங்க ஒரு மாசம் இருக்க போறன்னு எதுனாலும் என்னக் கூப்பிடுமா.... உனக்கு என்ன வசதி வேணுமோ தயங்காம கேக்கணும் சரியா" என அன்புக் கட்டளையிட்டவர் மகிழ்ச்சியாக வெளியேறினார்...

அவர் பேசிவிட்டு செல்வதை புன்னகையுடன் பார்த்தவளுக்கு தன் தந்தையை எண்ணி கண்கள் கலங்க துவங்கியது...

அலைப்பேசி விடாமல் ஒலிக்கும் சத்தத்தில் கண்களைத் துடைத்துக் கொண்டவள் அலைப்பை ஏற்று காதில் வைக்க அந்தப்பக்கம் மணி நிலாவை பேசவே விடாது பொறிந்து தள்ளினான்...

" நாங்கதான் பழசை நினைக்க கூடாதுனு சொல்லிருக்கோம்லடி அப்புறம் என்ன லீவுக்கு போனா ஜாலியா இருந்துட்டு வர வேண்டியது தான் அதனென்ன மறக்க முடியலன்னு பொலம்புனையாமா.... அப்போ இத்தனை வருஷம் நாங்கள் உன்ன பார்த்துக்கிட்டு எல்லாம் பொய்யா.... அந்த கீர்த்திக்கு தமிழ்நாட்டை தவிர வேற இடமே கிடைக்கலையா நான் பிஸ்னஸ் விசயமா டெல்லி போய்ட்டு வர்றதுக்குள்ள புருஷனும் பொண்டாட்டியும் இப்படி ஒரு காரியத்தை பண்ணி வச்சுருக்காங்க....." என மூச்சு வாங்க பேசிக் கொண்டிருக்க

"நாங்க என்னடா பண்ணுனோம் "என்று கோரசாக கேட்ட குரலில் தான் மணி நிதானத்திற்கு வந்தான்....

மணி பேச ஆரம்பித்ததுமே நிலா கீர்த்திக்கு அழைப்பு விடுத்துவிட்டு குளிக்க சென்றிருந்தாள்..

மணி " ஏண்டி முட்டை போண்டா நீயும் உன் புருசனும் அறிவை அடகு கடைல வச்சுட்டீங்களா... வெக்கேஷனுக்கு அனுப்ப வேற ஊரே கிடைக்கலயா... இதுக்கு எப்படி நிலா நீ ஓத்துக்கிட்ட " என்க ...

கீர்த்தியோ "அவ அப்பவே குளிக்க போயிருப்பா" என கூறிவிட்டு அவளுடைய லையனை கட் செய்தவள் " கோபப்படாத மணி அவ எவ்வளவுதான் சந்தோசமா இருக்க மாதிரி தெரிந்தாலும் அவ உள்ளுக்குள்ள ரொம்ப மன அழுத்தத்துல இருக்கா ஓய்வே இல்லாம எந்த நேரமும் தொழில் தொழில்னு ஓடிட்டே இருக்கா ... அதுமட்டுமில்ல தனியாகவே வாழ பழகிட்டு இருந்தவள நம்ம பிரண்ட்ஸ் சர்கிள்ல சேர்ந்தததுக்கு அப்புறம் அதிகமா இல்லைனாலும் நம்ம சார்ந்து இருக்க ஆரம்பிச்சுட்டா...‌ உதாரணமாக எங்களுக்கு கல்யாணம் ஆகி தனி வீடு வந்ததுக்கு அப்புறம் அவ ரொம்ப தனிமை உணருறா அதில இருந்து தன்னை மீட்டுக்க தான் தொழில்ல ஒரு வருடத்தில காட்ட வேண்டிய வளர்ச்சிய இந்த மூணு மாசத்துல காட்டிருக்கா... இந்த நில தொடர்ந்தா அவளோட உடல்நிலை ரொம்ப பாதிக்கப்படும்.... மணி அவளுக்கான வாழ்க்கையை அவ வாழணும் ... அதுக்கு நாம கொஞ்சம் ஸ்பேஸ் குடுக்கணும்.... நிலா அவளோட நிஜத்தை எங்க தொலைச்சாளோ அங்க தான் அவளை மீட்டு எடுக்கணும்...மணி உங்களுக்கு நியாபகம் இருக்கா முதல் முதல்ல நீங்க அவகூட அவ வீட்டுல தங்குன போது என்ன நடந்துதுனு."

மணி " மறக்க முடியுமா கீர்த்தி எனக்கும் வாசுவுக்கும் நிலாவோட நிலைமைய பார்த்து உயிரே போயிருச்சு ... அதுக்கு அப்புறம் தானே அவளோட கடந்த கால வாழ்க்கையே முழுசா நமக்கு தெரிய வந்தது அதுவும் அவளா சொல்லாம டாக்டர் டீரிட்மென்ட் மூலமாதான உண்மை வெளிய வந்தது.. கீர்த்தி காலைல அவ கால் பண்ணி பேசுனத சொன்னதும் ஒருநிமிடம் எனக்கு அன்னைக்கு அவ இருந்த நிலைமை தான் கண்ணு முன்னாடி வந்தது அதான் அவள கூப்டேன்... முன்னாடினா அவகூட நாம் இருந்தோம் இப்போ அவ எப்படி அதெல்லாம் சமாளிக்க போறானு தெரியலையே..." என்க.

"நீ பயப்படாதடா அப்பா கூட இருக்காரு நாளைல இருந்து கூட ஒரு வேலைக்கார பெண்ணை துணைக்கு வைக்கிறதா சொல்லியிருக்கார்.

" ஆமா மணி மாமா பாத்துக்குவாரு நீ பயப்படாத ...கடைசி ஒரு வாரம் நாமும் அங்க தங்கிட்டு வருவோம் ....எனக்கு என்னமோ இந்தமுறை திரும்ப அவ மும்பை வரும்போது புதிய நிலாவ வருவானு தோணுது..." இப்படியே நிலாவை பற்றி பேசிக் கொண்டிருக்க

நம் நாயகியோ புதுப் பாடலை முணுமுணுத்துக் கொண்டே குளிருக்கு இதமான நல்ல வெதுவெதுப்பான நீரில் குளித்துக் கொண்டிருந்தாள்....

❤❤❤

இந்த எபில நிறையா க்ளூ குடுத்துருக்கேன்😉😉... கண்டுபிடித்தால் கமெண்ட்ல சொல்லிட்டு போங்க மக்காஸ்😊🙏

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி-3

பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த நிலவழகனுக்கு தன் கையில் இருக்கும் முகவரியை யாரிடம் கேட்பது என தெரியாது திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான்...

அவ்வழியே செல்பவர்களை அழைக்க அவர்களும் ஒருநிமிடம் நிற்பவர்கள் அவனின் தோற்றத்தை கண்டதும் அலட்சியப் பார்வையை வீசிவிட்டு சென்றுவிடுவார்கள்...
அவனுக்கு மனம் சோர்ந்து கண்ணீர் வரப் பார்த்தது...
இன்னும் ஒருபடி மேலே போய் சிலர் அவன் கூறவருவதைக் கேட்கும் முன்பே "காசில்லை போ" என விரட்டவே செய்தனர்...

சோர்வாக சென்றவன் அங்கிருந்த நடைமேடையில் அமர்ந்து கொண்டான்... அவனுக்கு வாழ்க்கையே வெறுத்து போனது...

என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம் .... ஒரு தனி மனித உயிருக்கு இவ்வளவு தான் மதிப்பா... ஒருவனின் உருவத்தில் என்ன உள்ளது ... ஒருவர் செய்யும் செயல்களே அவருக்கு மதிப்பை ஏற்படுத்த வேண்டுமே தவிர பணமோ தோற்றமோ அதனை நிர்ணயிக்க கூடாது...

இந்த சிறுவயதிலேயே நிலவழகனுக்கு இவையெல்லாம் வலிக்க வலிக்க அடித்து இந்த சமூகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... இன்னும் அவனுக்கு இந்த சமூகம் என்ன வைத்திருக்கிறதோ.....

கலங்கி அமர்ந்திருப்பவனை சற்றுத் தொலைவில் கண்ணில் வஞ்சம் மின்ன பார்த்துக் கொண்டே ஒரு மிருகம் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது..‌தன் அலைப்பேசியே எடுத்த அந்த மிருகம் யாருக்கோ அழைப்பை விடுக்க பார்வை மட்டும் நிலவழகனை விட்டு அகலவில்லை ...

மறுமுனை அழைப்பை ஏற்றவுடன்
" மச்சி காலைலேயே ஒரு பட்சி சிக்கியிருக்கு... இளசான ப்ரஷு பீஸூ மாமே ... தூக்குனோம் நல்ல துட்டு பார்க்கலாம்... "
என்க...
...................
"கவலையை விடு மாமே உனக்கே தெரியும் ... என் கண்ணுல சிக்குனா அடையாளமே இல்லாம பார்சல் பண்ணீருவேன்னு... இன்னைக்கு நைட்டு பார்சல்னு மெசேஜ போட்டுரு மாமே ... சத்தமே இல்லாம தூக்கிட்டு போட்டோ அனுப்புறேன்"
...................
"வேணாம் மாமே அந்த தௌலத்து போன தடவையே துட்ட குறைச்சுட்டான் ... ரொம்ப நாளா ஒரு பாம்பேகாரன் நம்மகிட்ட பார்சல் கேட்டுட்டே இருந்தான்ல அவனுக்கு நா அனுப்புற போட்டோ அனுப்பி விலைய கேளு ஒத்து வந்தா சரி இல்லாட்டி வேற இடம் பார்ப்போம்..."
.....................
"சரி மாமே .. விரசா நம்ம பயலுககிட்ட பொருள வச்சுட்டு ரெடியா இருக்க சொல்லு.... இன்னும் அரை மணி நேரத்தில அங்க இருப்பேன் " என்றவன்
அலைபேசியை சட்டைப்பையில் போட்டவன் தன்னுடைய ஆட்டோவை எடுத்து கொண்டு நிலவழகனின் அருகில் நிறுத்தினான்....

தன் முன் நின்ற ஆட்டோவைக் கண்டவனுக்கு முதலில் பயம் உருவானது..
தலையை மட்டும் வெளியே நீட்டிய அந்த கயவன் எதார்த்தமாக கேட்பது போல
"தம்பி ஊருக்கு புதுசா... இங்க எல்லாம் உட்கார கூடாது பா" என்க...

அதை நம்பிய நிலவழகனும் எழுந்து நின்றவனுக்கு தன்னை மதித்து ஒருவர் பேசுவதிலேயே மகிழ்ச்சியாக இருந்தது...
"ஆமா அண்ணா .... " என்றவன் தன் சட்டைப்பையில் இருந்த முகவரியை எடுத்து அவனிடம் காட்டி எப்படி செல்வது எனக் கேட்டான்....

அழகாக அமைந்த இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டவன் முகவரியைப் பார்த்ததும் மனதில் இருந்த சிறு சந்தேகமும் நிவர்த்தியானது. ..

ஏனெனில் அந்த மருத்துவமனை மற்றும் மருத்துவரும் எதில் மிகச் சிறந்தவர் என்பது அந்த வட்டாரத்திற்கே தெரியும் அது மட்டுமின்றி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு அதற்கு பின்னான பாதுகாப்பையும் அவர்களே வழங்குதால் இவன் அங்கு ஒரு முறை சென்று விட்டால் திரும்ப அவனை தூக்குவது மிகவும் கடினம் என்பதையெல்லாம் யோசித்தவன் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்...

புன்னகையுடன் நிலவழகனைப் பார்த்தவன்
"இந்த இடமா . எனக்கு நல்லாவே தெரியும்... இங்க இருந்து கொஞ்ச தூரம்" என்க
அழகனும்"என்ன அங்க கொண்டு போய் விடுறீங்களா ... ஆட்டோக்கு பணம் நான் தரேன்.. " என்றான் ‌..

அந்த கயவனும் "அங்க போன திரும்பி வர சவாரி கிடைக்காது தம்பி.... அதனாலேயே எந்த ஆட்டோவும் வராது.... உன்ன பார்க்க வேற பாவமா இருக்கு..." என்று பொய்யாக நடித்தான்.

அவனின் நடிப்பை நம்பிய அழகனும் "பிளீஸ் அண்ணா என்னை கொண்டு விடுறீங்களா..." என கெஞ்சினான்... அதில் பாவப்பட்டு ஒத்துக் கொள்வது போல " சரி தம்பி உனக்காக வரேன்.... " என்றவன் நிலவழகன் ஆட்டோவில் ஏறியவுடன் தன் அலைப்பேசி மூலம்
"பட்சி சிக்கிடுச்சு " என்று தகவலை தன் கூட்டாளிகளுக்கு அனுப்பியவன் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தான்.‌...

தனக்காக காத்திருக்கும் ஆபத்தை அறியாத நிலவழகனும் தன் பொதிப்பையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சிங்காரச் சென்னையை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.....
-----------------------------------
குளித்து விட்டு வந்த நிலாவிற்கு மிகவும் புத்துணர்ச்சியாக இருந்தது....

ஜீன்சும் டாப்பும் அணிந்து கொண்டவள் தலைமுடியினை ஒரு கிளிப் கொண்டு அடக்கியவளுக்கு அலைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தாள் அவள் முன் சீறுடை அணிந்து கொண்டு கையில் காலையுணவுடன் பணியாள் நிற்க புன்னகையுடன் வாங்கிக் கொண்டாள்...

அவளுக்கு பிடித்த பூரியும் மாசாலாவும் இருக்க உணவை முடித்தவள் அடுத்து அழைத்தது என்னவோ மணிக்கு தான்.....

என்னதான் அவன் கோபத்தைக் காட்டினாலும் அது அவள் மேல் உள்ள அக்கறையில் அல்லவா... நிலாவைப் பொறுத்தவரை நண்பர்கள் மூவரும் தான் உலகம்...

தாயாய் தந்தையாய் சகோதரியாய் சகோதரனாய் நண்பர்களாய் அவள் வாழ்க்கையில் அனைத்து கதாபாத்திரங்களும் அவர்கள் மூவரும் தான்...

அழைப்பை ஏற்ற மணி
" சொல்லுடி சாப்டியா ‌‌... " மணி..

"சாப்டேன் மணி.. ஏன் அவ்வளவு கோபம்... நான்தான் அப்ப அப்ப ஏதாவது உளருவேன்னு தெரியும்ல் அப்புறம் ஏன் அவர்களை திட்டுகிறாய்...." நிலா..

"நிலா மார்னிங் வாசு சொன்னதும் எனக்கு ரொம்ப பதற்றமாகிடுச்சு அதான் . இங்கபாரு உனக்கு அங்க பிடிக்கலன்னா உடனே கிளம்பி வந்திடு" என்றான்..

" இல்ல மணி எனக்கு இந்த இடம் ரொம்ப பிடிச்சு இருக்கு... புது இடம்ல அதான் தூக்கம் வராம கெட்ட கனவா வந்திருக்கு.. கொஞ்சநாள் இருந்துட்டே வரேன்..." நிலா..

"நிலா வேணும்னா நான் கிளம்பி வரவா ரெண்டு பேரும் ஒரு ஒன்வீக் அங்க இருந்துட்டு கிளம்பி வந்திருவோம் " என்றான் அக்கறையாக.‌

" இல்லாடா நான் மேனேஜ் பண்ணிப்பேன் .. அதான் மூணு வாரம் கழிச்சு நீங்க எல்லாம் வருவீங்கல்ல அப்புறம் என்ன..." நிலா ..

" சரிடி பாத்துக்கோ... பத்திரமா இரு.‌‌ எதுனாலும் எனக்கு கால் பண்ணு... சரியா" மணி..

" சரிடா நான் பாத்துக்கிறேன்... ஆமா இப்போ எல்லாம் உன்னோட புது பிஏ க்கு நிறைய வேலை குடுக்கற போல .‌. ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போனாலும் கால் பண்ணி வேல தருகிறாயாமே... அப்படியா..." என நக்கலாக இழுத்தாள்....

மணி ' அய்யய்யோ இவளுக்கு எப்படி தெரிந்தது... அடேய் வாசுப்பயலே உனக்கு இருக்குடா ' என மனதில் கருவிக் கொண்டான்..

" என்னடா சத்தத்தைக் காணோம்.." நிலா..

" ச்ச... ச்ச... அப்படியெல்லாம் இல்ல நிலாம்மா .. பைல்ல டவுட் அதான் கால் பண்ணி கேட்டேன் மத்தபடி எதும் இல்லை " என வழிந்து கொண்டே பேசினான்...

ஏதும் மறைத்தாலோ அல்லது அவளை சமாளிக்கும் போது மட்டுமே அவனின் அழைப்பு 'நிலாம்மா' வாக இருக்கும்...

" அப்போ கன்பார்ம் .. சரிடா சீக்கிரம் சொல்லி சம்மதத்தை வாங்கிரு... சரியா " என மறைமுகமாக தன் சம்மதத்தை கூற அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி...

இருந்தும் அவனுக்கு மனது சற்று உறுத்தலாகவே இருந்தது. 'இப்போது தான் வாசு கீர்த்தி திருமணம் முடிந்து வேறு வீடு சென்றார்கள்..‌. அதேபோல் தானும் சென்றுவிட்டால் நிலா தனியாளாகிவிடுவாள்....அவளை தனியாக விட முடியாது... திருமணம் முடித்தால் நிச்சயம் மற்றவர்கள் போல் தன்னையும் தனியாக செல்லவே வற்புறுத்துவாள் ' என பலவாறு யோசித்தவன் அவளிடம் இருந்து உண்மையை மறைத்தான்..

" நிலாம்மா. உனக்கே என்னைப் பற்றி தெரியும்ல .. எனக்கு இந்த காதல் கல்யாணம் எல்லாம் ஒத்துவராது.. கொஞ்சநாள் எந்த கமிட்மென்ட் உம் இல்லாம சந்தோஷமா இருக்கணும்.. அதனால இத பத்தியெல்லாம் யோசிக்காம ஹாலிடேவ என்ஜாய் பண்ணு..." என்றான் சமாதானமாக...

" சரிடா ... என்னமோ சொல்லுற நானும் கேட்டுக்கிறேன்... " என்றவள் பேசி முடித்து அலைபேசியை வைக்கையில் நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது..

அவளுக்கு தோன்றியதெல்லாம் தான் எவ்வளவு அதிஷ்டசாலி என்பதே.. இந்த காலத்தில் இரத்த சொந்தமே இக்கட்டான சூழ்நிலைகளில் சுயநலத்திற்காக உறவுகளை துச்சமாக வீசிச் செல்கையில் எந்த இரத்த சொந்தமும் இன்றி நட்பிற்காக இன்றுவரை அதே பாசத்துடன் வாழும் மனிதர்கள்தான் எத்தனை சிறந்தவர்கள்...

அவளுக்கு பெருமையாகவும் ஒருபுறம் கர்வமாகவும் இருந்தது...

அதேநேரம் அவள் நடத்தும் தொண்டு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது..‌ அழைப்பை ஏற்றவளுக்கு எதிர்முனையில் என்ன தகவல் சொல்லப்பட்டதோ அதிர்ச்சியாய்...

" ஷிட்... உங்களுக்கு எத்தனை முறை சொல்லிருக்கேன்.. நம்மகிட்ட உதவி கேட்டு நம்ம தேடி வர்றவங்களை பாதுகாப்பா நம்ம காப்பகத்துக்கு கொண்டு வரணும்னு....
நீங்க இவ்வளவு கவனமில்லாம இருப்பீங்கனு நான் நினைக்கவே இல்லை ‌.. என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது இன்னும் இரண்டு மணி நேரத்துக்குள்ள அந்த பையன் நம்ம காப்பகத்துல பாதுகாப்பா இருக்கணும் ... புரியுதா க்விக்... அந்த பையனோட அடையாளங்களை டாக்டர் சொன்னாருல அத வச்சு நம்ம டிடெக்டிவ் கிட்டவும் சொல்லி தேட சொல்லுங்க ... " என மேலும் சில கட்டளைகளையிட்டவளுக்கு மனம் ஒரு நிலையிலேயே இருக்கவில்லை‌..‌

ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலைமோத இதுவரை இருந்த உற்சாகம் முற்றிலும் வடிந்து அவளின் இருவிழிகளும் கலங்க துவங்கியிருந்தது.....

❤❤❤❤

கதையின் போக்கைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏🙏❤

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி-4

சட்டென ஆட்டோ நிற்கையில் சுயம் தெளிந்த நிலவழகன் "என்னாச்சு அண்ணா..." என்றான் ...

அவனோ "தம்பி சவாரிக்கு ரெண்டு பேரு கை காட்டுறாங்க.... நான் உன்ன இறக்கிவிட்டுட்டு சும்மா தான் திரும்பி போகணும்.. அவங்க ரெண்டு பேரையும் ஏத்திக்கிட்டா எனக்கும் திரும்பி போக சவாரி கிடைத்த மாதிரி இருக்கும்"என்றான் அப்பாவியான குரலில்...

அவனின் நடிப்பை நம்பிய அழகனும் "சரி அண்ணா" என்று நகர்ந்து அமர அவனின் கூட்டாளிகள் இருவரும் நிழவழகனின் இருபுறமும் அமர்ந்தனர்.‌.

ஆட்டோ புறப்பட மூவரும் ஒருவருக்கு ஒருவர் கண்களால் ஏதோ சமிக்ஞை செய்து கொள்ள சில நொடிகளில் அழகனின் வலது புறம் அமர்ந்து இருந்தவன் தன் கையில் மயக்க மருந்து அடித்து வைத்திருந்த கைக்குட்டையை இடப்பக்கம் வேடிக்கை பாரத்துக் கொண்டிருந்த அழகனின் மூக்கில் வைத்து அழுத்தியிருந்தான்...

நிலவழகனும் சிறிது நேரம் தன்னை விடுவிக்க போராட அவனின் முயற்சிகள் தோல்வியடைய அந்த மயக்க மருந்தை சுவாசித்த சில நிமிடங்களிலேயே மயக்கத்தை தழுவியிருந்தான்...

உணர்வற்று இருப்பதை உணர்ந்து கொண்ட மூவரும் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தினார் பின்பு அவனை வெவ்வேறு கோணங்களில் தன் கைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் ஒரு எண்ணிற்கு அனுப்பிவிட்டு வண்டியை கிளப்பினான்.

பழைய இரும்பு குடோன் போன்று இருந்த அந்த இடத்தில் ஆட்டோவை நிறுத்தியவன் அவனுடன் இருந்த மற்ற இருவரும் மேலும் ஒருவன் என நால்வர் சேர்ந்து தீவிரமாக எதையோ விவாதித்துக் கொண்டிருந்தனர்...

ஒருவன் "மாமே பத்து லட்சம் இல்லாம பொருள அனுப்ப முடியாதுன்னு அவன் கிட்ட சொல்லிரு.. இதுல எவ்ளோ ரிஸ்க் இருக்குன்னு தெரியாம அவன் பாட்டுக்கு குறைச்சு சொல்லிட்டு இருக்கான்" என்க மற்றவனும் "சரிப்பா நீயே பேசிப் பாரு" என்றான்...

வெளியே வந்தவனும் ஒரு எண்ணிற்கு அழைத்து பேச சிறிது நேரம் காரசாரமாக விவாதம் நடந்தது சில மணி நேரங்கள் தொடர்ந்த அந்த விவாதம் ஒரு முடிவுக்கு வர புன்னகையுடன் திரும்பி வந்தான் அவன்...

மற்றவர்களிடம் "எப்படியோ பேசி சமாதானம் பண்ணிட்டேன் டா அதே அமௌன்ட்க்கு சரி சொல்லிட்டாங்க இன்னைக்கு நைட் நம்ம கொரியர் வண்டியில பார்சல் பண்ணிரலாம்" என்றவன் முகத்தில் வெற்றிக் களிப்பு...

அங்கு ஒரு ஓரமாக நின்றிருந்த ஆட்டோவில் இருந்த நிலவழகன் ஐ பார்க்க அவனோ இன்னும் அதே மயக்க நிலையில் இருந்தான் என்னடா இன்னும் மயக்கம் தெளியவில்லையா என்றான் மற்றவனிடம்...

"சீக்கிரம் தெளிஞ்சுடும் அண்ணா அதுக்குள்ள நம்ம மயக்க மருந்து கொடுத்து விடுவோம் " என்று முடிக்கவில்லை நிலவழகனிடம் இருந்து லேசாக அசைவு தெரிந்தது அதை பார்த்த மற்றவர்கள் மீண்டும் அதே கைக்குட்டையை அவனின் முகத்தில் வைத்து அழுத்தி இருந்தனர்...

புன்னகையுடன் திரும்பிய அவனின் கூட்டாளிகள் இன்னும் நாலு மணி நேரத்துக்கு அவன் எந்திரிக்கவே மாட்டான் அண்ணா..

அடுத்தடுத்த வேலைகள் மளமளவென நடக்க மாலை குடோன் முன் இவர்கள் ஏற்பாடு செய்திருந்த கொரியர் வண்டியும் கூடுதலாக நிலவழகனை வாங்குபவனின் கையாள் ஒருவனுடன் தயாராக இருந்தது.

ஆட்டோவில் தன் கையில் இருந்த பையை கெட்டியாகப் பிடித்தபடி மயக்க நிலையில் இருந்த நிலவழகனை வண்டிக்கு இடம் மாற்றும் பொருட்டு தூக்க அவனிடம் இருந்து அந்த பையை பிரிக்க முயன்றனர்...

ஆனால் மயக்க நிலையிலும் அழகன் அந்த பையை கெட்டியாக பிடித்து இருந்தான் நேரமாவதை உணர்ந்தவர்கள் அதில் பெரிதாக எதுவும் இருக்காது என்று எண்ணி அந்த பையுடனே அவனை அந்த வண்டிக்கு மாற்றினர்....

அவனை வண்டியில் ஏற்றிய உடன் அதனையும் புகைப்படம் எடுத்துக் கொண்டவன் அதனை முன்பு புகைப்படம் எடுத்து அனுப்பிய அதே எண்ணிற்கு அனுப்ப அடுத்த நிமிடம் வண்டியுடன் வந்த கையாளுக்கு அழைப்பு வந்தது அதனை ஏற்று பேசியவன் கையில் இருந்த பணக்கட்டை அவர்களிடம் கொடுத்து விட்டு வண்டியை கிளப்பியிருந்தனர்...

நால்வரில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த ஒருவன்
"ஏன் அண்ணே இந்த சின்னப்பையனை எதுக்காக இவ்வளவு காசு குடுத்து வாங்கிட்டுப் போறாங்க " என கேள்வியாக வினவினான்...

" டேய் அவன் நமக்குத்தான் சின்னப் பையன் ஆனா பாம்பே கல்காத்தாவுல எல்லாம் அவனுங்களுக்கு பணம் காய்க்கிற மரம்டா... ஆள் வேற உயரமா கலரா இருக்கான் இவனுக்கு கொஞ்சம் செலவு பண்ணுனா போதும்டா இன்னும் ஆறுமாசத்துல தொழில்ல இறக்கி விட்டுருவானுங்க ... அப்புறம் என்ன காலம் முழுக்க சம்பாதிட்டே இருக்க வேண்டியதுதான்..." என்றான் ஏளனமாக அதைக் கேட்ட புதியவன் கண்களை விரித்தான்....
என்ன மனிதர்கள் இவர்கள் எல்லாம்..அவனால் நிலவழகனின் விதியை எண்ணி பரிதாபம் மட்டுமே பட முடிந்தது....
-------------------
நீண்ட இரண்டு மணி நேரங்கள் கழித்து நிலாவிற்கு சேவை மையத்தில் இருந்து அழைப்பு வந்தது..ஒரே ரிங்கில் எடுக்க மறுமுனையில்
" மேம் பையன் கிடைச்சுட்டான் .. நம்ம ஆட்கள் அங்க போக நேரமானதால அவனை நம்ம முகவரியை வச்சுட்டு ஆட்டோவுல வந்துருக்கான் ... இடையில வண்டி பழுதானதால நேரத்துக்கு வர முடியாம தாமதமாகிடுச்சாம் மேம்..." என்க அப்போதுதான் அவளுக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.......

" ஓ.கே.. அந்த ஆட்டோகாரர் எண்ணை வாங்கி வைத்துவிட்டு அவருக்கு சன்மானம் கொடுத்துவிடு... அத்தோடு அந்த பையனை அழைச்சுட்டு வர அனுப்புன ஆள் அண்ட் அவனோட ஹெட் ரெண்டு பேரையும் டிஸ்மிஸ் பண்ணீருங்க... இனி இது போல எதும் நடக்க கூடாது... அந்த பையனுக்கு தேவையான மெடிக்கல் டிரிட்மெண்ட் முடிந்ததும் நம்ம ட்ரஸ்ட் மூலமாகவே படிக்க தேவையான பணத்தை அரேன்ச் பண்ணி கொடுத்துருங்க " என கட்டளைகளைப் பிறப்பித்தவளுக்கு அப்போதுதான் நிம்மதியாக இருந்தது..‌‌..

நேரம் மாலையை நெருங்க அவளுக்கு சற்று நடந்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது... வாசனின் கெஸ்ட் ஹவுஸ் ஹோட்டல் அறைகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டிடமும் அதனை சுற்றிலும் தனித் தனி வீடுகள் என மிகவும் அழகாக அமைந்திருந்தது...

நிலா ஒற்றை அறையுள்ள மரத்திலால் ஆன சிறிய வீட்டிலேயே தங்கியிருந்தாள்... குளிருக்கு இதமான கோர்ட் மற்றும் காலணிகளை அணிந்தவள் அங்கு காலார நடக்க ஆரம்பித்து இருந்தாள்...

மனதில் இருக்கும் காயங்கள் ஆற துவங்கியிருந்தாலும் அதனை நினைவு படுத்துவது போலவே மேலும் மேலும் சம்பவங்கள் நடக்க அவளும் தான் என்ன செய்வாள்..

பதினான்கு வயதில் இருந்தே வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கிறாள் காயங்கள் ஆறினாலும் அதன் வடு இன்னும் அப்படியே அல்லவா உள்ளது...

நண்பர்களுக்காக சிரிப்பது போல் காட்டிக் கொண்டாலும் இன்னும் மனதின் வெறுமை விரக்தி எல்லாம் நீங்காமல் நெருப்பு கங்குகள் போல் ஒருபக்கம் புகைந்து கொண்டே அல்லவா உள்ளது...

மலைகளுக்கு நடுவே மறையும் ஆதவனை பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் .. ஆறுமணிவாக்கிலே அவள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்த போது வாசனின் தந்தையும் அவருடன் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணியும் அவளுக்காக காத்துக் கொண்டிருந்தனர்...‌

"வாம்மா நிலா... இவங்க தான் ஜெயந்தி..‌ நீ இருக்க வரை உனக்கு உதவியா உங்கூடவே இருப்பாங்கமா " என்க "எதுக்கு அங்கிள் சிரமம் நானே பாத்துக்குவேன்" நிலா..

"பரவாயில்லை மா ... இவங்க இங்க வேலை செய்றவங்கதான் ஹோட்டலுக்கு பக்கத்துல தங்குவாங்க இப்போ உங்கூட இருப்பாங்க அவ்வளவுதான் டா வித்தியாசம் நீ எதுவும் மறுக்க வேணாம்மா... " என்ற அவரின் அன்புக் கட்டளையை ஏற்றுக் கொண்டவள்

"சரி அங்கிள்" என்றுவிட்டு அந்தப் பெண்மணியைப் பார்த்து புன்னகைத்தாள்... அவரும் பதிலுக்கு புன்னகை செய்ய ஏனோ அவளின் தாயின் எண்ணமே மனதில் ஓடியது...

அவரின் ஸ்பரிசத்தையோ இல்லை அவரின் அன்பையோ இதுவரை அவள் உணர்ந்ததில்லை அவளின் தாயினை புகைப்படத்தில் தான் பார்த்து இருக்கிறாள் .. இப்போதும் அவரின் புகைப்படத்தை பொக்கிஷம் போல் கையில் வைத்துள்ளால் தான் அதுவும் நிலா ஒவ்வொரு முறை கண்ணாடி பார்க்கும் போது அவளுக்கே தோன்றுவது தன் தாய் எங்கும் செல்லவில்லை தன்னுள் தான் தன்னைக் காத்து தனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றே தோன்றும் ஏனெனில் அவள் அப்படியே அவள் தாயைப் போல...

ஒவ்வொரு முறை அவள் தனிமையை உணரும் போதும் அவருடைய புகைப்படத்துடன் மானசீகமாக பேசிக் கொள்வாள்...இன்று கூட காணாமல் போன அந்த சிறுவன் நல்லபடியாக திரும்பி வர வேண்டும் என மனமுருகி தன் தாயிடம் வேண்டிக் கொண்டிருந்தாள்...

வாசனின் தந்தை சென்றவுடன் "ஜெயாம்மா வாங்க காபி சாப்பிடுறீங்களா"என பாசமாக கேட்டாள்... இதுவரை தன்னை வேலைக்காரியாகவே நினைத்து விரட்டியவர்கள் மத்தியில் தன்னை மரியாதையுடன் நடத்தும் நிலவழகியை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது...

வாசனின் தந்தை அனைத்தையும் கூறியதால் நிலாவைப் பற்றி தெரிந்தே உடன் இருக்க சம்மதித்திருந்தார்....

இருவரும் பேசிக் கொண்டே அந்த நாளைக் கடத்த நிலாவிற்கும் அவரை மிகவும் பிடித்திருந்தது..

ஜெயந்தி சிறுவயதிலேயே திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாததால் கணவர் பிரிந்து சென்று விட வாசனின் தந்தை உதவியால் இங்கு வேலை செய்து வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்...

இரவுணவு முடிந்ததும் உறக்கம் வராமல் இருக்க இருவரும் கணப்பை முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...

"ஏன் ஜெயாம்மா நீங்க ஒரு குழந்தையை தத்தெடுத்து இருக்கலாமே ஏன் ரெண்டு பேரும் பிரிந்தீர்கள்..."என்றாள்...

" கல்யாணமான புதுசுல என் மேல ரொம்ப பாசமாதான் இருந்தாங்க .. மூணு வருசமா குழந்தை இல்லாமல்தான் இருந்தோம் நான் கூட வருத்தப்படுவேன் ஆனா அவுக தான் எனக்கு ஆறுதல் சொல்லுவாங்க அப்படி இருந்தவங்கள அவங்க அம்மா அதான் ஏன் மாமியார் ஏதேதோ சொல்லி மனச கலைச்சுட்டாங்க ...அவுகளும் ஒரு கட்டத்தில தனக்கும் வாரிசு வேணுமுன்னு வேற கல்யாணம் பண்ணிகிட்டாங்க.."என்றவர் குரலில் சோகத்தை உணர்ந்த நிலா ஆதரவாக அவருடைய தோளைத் தொட்டாள்...

தன்னை மீட்டுக் கொண்டவர் மேலும் தொடர்ந்தார்.."அவர விட்டு வந்தது வருத்தமா இருந்தாலும் அதைவிட அவர் சந்தோஷமா இருக்காருங்கரது எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துதுமா...இந்த சமூகத்தில ஒரு பொண்ணு தனியா வாழ்வது ரொம்ப கஷ்டம் வாசனோட அப்பா மட்டும் இல்லனா நா எப்பவோ மண்ணுல மக்கிப் போயிருப்பேன் மா... பெண்ணுங்க எவ்வளவுதான் சாதிச்சாலும் ஏன் அந்த நிலவுக்கே கூட போனாலும் திரும்பி வீட்டுக்கு வரும்போது நமக்குன்னு ஒருத்தராவது வீட்டுல இருக்கணும்மா ... அது அப்பா அம்மா அண்ணன் தம்பி கணவன் நம்ம குழந்தைங்க அப்படி யாரவேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா கண்டிப்பா அப்படி ஒரு ஆள் நமக்கு இருக்கணும் " என்றவரின் குரலில் இத்தனை வருட தனிமையும் ஏக்கமும் நிறைந்திருந்தது... அதனை புரிந்து கொண்ட நிலாவும் அவருக்கு ஆதரவாக தோளில் வைத்திருந்த தன் கையில் அழுத்தத்தைக் கூட்டினாள்...

❤❤❤

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 🙏

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விழி-5

பாராங்கல்லை வைத்ததைப் போன்று கனத்த இமைகளை மெதுவாக பிரித்த நிலவழகனுக்கு முதலில் தெரிந்தது என்னவோ இருள் தான்...

அவனுக்கு நிதானத்திற்கு வரவே முழு மூன்று நிமிடங்கள் தேவைப்பட்டது அதன்பின்னே சற்று நினைவு கூர்ந்தவனுக்கு அவனுடன் ஆட்டோவில் இரண்டு பேர் ஏறியதும் மூக்கில் ஏதோ வைத்து அழுத்தியது வரை நினைவில் இருந்தது...

அவனுக்கு தன்னை யாரோ கடத்தியுள்ளனர் என்பது வரை தெளிவாய் புரிந்தது.... கிட்டத்தட்ட தொடர்ந்து இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மயக்கத்திலேயே இருந்ததால் அவனால் சரியாக காலைக்கூட அசைக்க முடியவில்லை....

தனக்கு என்ன நடந்தது ஏன் கை, காலை கூட அசைக்க முடியவில்லை என யோசித்துக் கொண்டே தட்டுத்தடுமாறி எழுந்து அந்த இருளிலும் ஒரு மூலையில் எறிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் அருகில் சுவற்றைப் பிடித்து தள்ளாடிக் கொண்டே சென்று கையில் எடுத்தவன் அப்போதுதான் தான் இருக்கும் இடத்தை ஆராய்ந்தான்...

அது ஒரு அறை என்பதும் அதில் இரண்டு கதவுகள் இருந்தது வரை தெளிவாக தெரிந்தது... அதில் ஒரு கதவு பூட்டப்பட்டிருக்க மற்றொன்று குளியலறை என்பது வரை அறிந்து கொண்டான்...
தான் எங்கிருக்கிறோம் எதற்காக தன்னை கடத்தினார்கள் என்பது தெரியாமல் இருந்தவனுக்கு அப்போதுதான் தன் வைத்திருந்த கைப்பை நினைவுக்கு வர அதனை சுற்றிலும் தேடினான் ....

அவன் படுக்க வைக்கப்பட்டிருந்த கட்டிலின் அருகேயே இருக்க முதலில் அதனை சோதிக்கையில் அதில் துணிகளுக்கு அடியில் இருந்த பணம் அப்படியே இருந்தது அதைக் கண்டு பெருமூச்சு விட்டான்...
சாதாரணமாக தேடினால் அதில் பணம் இருப்பது துளியும் வெளியில் தெரியாது அதுபோலதான் அவன் பணத்தை வைத்து இருந்தான் ....

சிறிது நேரத்திலேயே பயமும் குழப்பமுமாக அவனின் எண்ணமோ " இந்த பணத்துகாக தான் என்னை கடத்துனாங்க அப்படி என்றால் அவங்க ஏன் என்னோட பையை பாக்கல .... அப்போ வேற எதுக்காக என்னை கடத்துனாங்க" என்ற கேள்வி மனதினுள் ஓட சற்று தலை சுற்றுவது உணர்ந்தவன் அப்படியே கட்டிலில் அமர்ந்தான்....

இன்னும் மருந்தின் மிச்சமீதி அவனின் உடலில் இருக்க அதன் வீரியம் தான் குறைந்த பாடில்லை...சற்று நேரத்திலேயே அறையின் வாயிலில் பேச்சு சத்தம் கேட்க அவன் தன்னை நிலைப்படுத்திக் கொண்டே கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்....

அவர்கள் பேசுவது வேறு மொழி என்பது வரை அவனுக்கு புரிந்தது...கதவு திறக்கும் சத்தத்தில் பழைய படியே படுத்துக் கொண்டான் நிலவழகன்....

உள்ளே வந்த நான்கு ஐந்து பேரில் நாற்பதைக் கடந்த மருத்துவர் ஒருவர் மற்றவர்களை வெளியில் அனுப்பிவிட்டு அவனைப் பரிசோதித்தார்..

அவர் தொடுவதால் ஒருவித அருவருப்பும் கூச்சத்தையும் உணர்ந்தவன் தன்னை சமாளிக்கும் பொருட்டு பற்களைக் கடித்துக் கொண்டான்...

அவர் தன்னை என்ன நோக்கத்தில் பரிசோதிக்கிறார் என்பதை உணர்ந்தவனுக்கு மனம் திக்கென்றது ஏனெனில் அவன் இதனை முன்பே தெரிந்திருந்தான்....

அவனுக்கு மயக்கம் தெளிந்தது தெரிந்து மீண்டும் ஏதேனும் தந்து மயக்கம் வருவது போல் செய்து விடுவார்களோ என்ற பயத்தில்தான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அமைதியாக மயக்கத்தில் இருப்பது போலேவே படுத்திருந்தான்.......

பரிசோதனை முடித்தவர் வெளியில் நின்றவர்களை அழைத்தார்....
(வேற்று மொழி தமிழில் )

"எல்லாம் ஓகே கம்மிங் வீக்கெண்ட் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிருங்க அடுத்த மூணு மாசத்துக்கு அப்புறம் தொழில்ல இறக்குங்க... " என மேலும் சில விசயங்களை கூற இதையெல்லாம் தூங்குவது போல் நடித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த அழகனுக்கு அவர் கூறியதில் பாதி வார்த்தை புரியவில்லை...

சில ஆங்கில வார்த்தைகளை மட்டும் புரிந்து கொண்டவனுக்கு தனக்கு நடக்கவிருப்பதை ஊகித்தவனுக்கு மனதில் பயம் உருவானது... இதையெல்லாம் இவர்கள் ஏன் செய்ய வேண்டும் நிச்சயம் இதில் ஏதோ தவறு உள்ளது என்பதை புரிந்து கொண்டவன் இங்கிருந்து முதலில் தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்...

அறையில் இருந்து வெளியே சென்றவர்கள் ஒருவனை காவலுக்கு நிறுத்திவிட்டு மற்றவர்கள் கலைந்து சென்றனர்...

நேரம் நள்ளிரவைத் தொட்டிருக்க நல்ல குடி போதையில் கையில் மது பாட்டிலும் தொப்பையுமாக அந்த விடுதியின் உரிமையாளன் நிலவழகனின் அறை இருந்த பகுதியில் தள்ளாடியபடியே நடந்து வந்தான்..
அவன் நடக்கும் சத்தத்தில் தூக்கம் கலைந்த அந்த காவல்காரனுக்கு சற்று சலிப்பாக இருந்தது.. விடுதியின் இந்த பகுதி புதியவர்களை மட்டுமே அடைத்து வைப்பர்...

எப்போதுமே மற்ற பெண்கள் இல்லாத சமயத்தில் தான் இந்த பகுதியை நாடி வருபவன் அப்படி வந்து சென்றால் அன்றைய தினம் நிச்சயம் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்காது ..

இன்றும் அதே போல் அந்த காமுகன் வர அவனுக்கோ அந்த சிறுவனை நினைத்து பாவமாக இருந்தது... தள்ளாடியபடி வந்த அந்த மிருகமோ நேரே சென்று அழகனின் அறை கதவில் கைவைக்க

அவனோ "ஜீ வேணா ஜி அவன் சின்ன பையன் இந்த வாரக் கடைசியில ஆஸ்பிடல் அனுப்பனும் அப்புறம் கூட பாத்துக்கலாம்...இப்ப எதும் ஆச்சுன்னா நமக்கு தான் நஷ்டம்"என தடுக்க போதையில் இருந்தவனுக்கு வெறி ஏறியது

"அரே சாலா ... என்னையேவே தடுக்க...றயா.... இங்க இருந்து ....எந்த பீஸும் என்னை தாண்டி தான்...... போகும்னு உனக்கு தெரியும்ல...."என நா குழறியபடி பேசியவன் அவனைத் தள்ளிவிட்டு உள்ளே சென்று கதவைப் பூட்டினான்....

மருத்துவர் வெளியே சென்றதுமே அங்கிருந்து தப்பிக்கும் மார்க்கத்தை தேடியவன் குளியலறையில் இருந்த சிறிய சன்னல் அதன் கம்பியை கடினபட்டு ஒரு வழியாக அகற்றியவன் அதன் மேல் ஏறி கீழே பார்க்க அது ஒரு உயரம் குறைந்த இரண்டாவது மாடியின் பின்புறம் மேலும் அருகிலேயே பதில் சுவர் இருக்க என்பதை அறிந்து கொண்டான்...

மேலும் அதில் திட்டு போன்ற பகுதியிருக்க அதில் தப்பித்து விடலாம் என எண்ணியவன் நடுநிசியானதும் முதலில் தன் பையை வீசினான்
பின் அவன் குதிக்க எத்தனித்த வேளையில் அறை வாசலில் பேச்சு சத்தம் கேட்க இப்போது தப்பித்தால் அனைவரும் முழித்து விரைவில் அவர்களிடம் மாட்டிக் கொள்வோம் என்பதை புரிந்து கொண்டவன் சத்தமில்லாமல் கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான் தனக்கு நடக்க போகும் விபரீதத்தை அறியாமல்.....

முழு மது போதையில் இருந்த அந்த மிருகத்திற்கு ஆணிற்கும் பெண்ணிற்குமான வித்தியாசம் கூட தெரியாமல் புத்தி மழுங்கிதான் போனது அவனிற்கு தற்போதைக்கு தேவை ... தன் வெறியை தீர்த்துக் கொள்ள அந்த பிஞ்சை கருக்கவும் தயாராகிவிட்டான்..‌‌...

நம் நாட்டில் நடக்கும் பல பாலியல் குற்றங்களுக்கு இந்த மது தான் மிகப்பெரிய பங்கையாற்றுகிறது என்றால் அது மிகையாகாது..

இந்த மது மற்றுமின்றி ஏனைய பிற போதை வஸ்துகளும் எத்தனையோ பிஞ்சுகளை முலையிலேயே கருக்கி விடுகின்றன......
இதில் ஆண் பெண் வித்தியாசங்கள் எல்லாம் எப்போதோ மறைந்து போய் விட்டது....

சிறிது நேரத்திலேயே வெளியில் நின்றவனுக்கு சிறுவனின் அலறல் சத்தம் மட்டுமே கேட்க அதுவும் சில வினாடிகளிலேயே அடங்கியும் போனது....

அந்தக் விடுதி உரிமையாளனின் வலது கை மற்றும் நிலவழகனை வாங்க டீல் பேசியவர் வேகமாக அந்த தளத்தை நோக்கி ஓடிவந்தான்....

நிலவழகனின் அறை முன்பு கைகளைப் பிசைந்து கொண்டிருந்த அடியாளைக் கண்டவனுக்கு ஒருபுறம் ஆத்திரமாக இருந்தது...

"டேய் அறிவுகெட்டவனே!!!! அவர எதுக்கு டா உள்ளவிட்ட ... போனதடவை என்ன நடந்ததுனு தெரியும்ல .. பாடிய கிளியர் பண்றதுக்கு படாதபாடு பட்டோம் அதோட எவ்வளவு காசு நட்டமாகிடுச்சுனு தெரியும்ல" என்க தலைகுனிந்து நின்றான்...

ஆம் கடந்தமுறை ஒரு பதினைந்து வயது சிறுமியை கடத்தி வந்து அடைத்து வைத்திருந்தனர்....
இதேபோல் அன்றும் ஆள்கிடைக்காமல் இங்கு வந்த பிசாசின் இச்சைக்கு ஆளாகி அந்த பிஞ்சு அநியாயமாய் தன் உயிரினை விட்டிருந்தது...

"உள்ள போய் எவ்வளவு நேரம் ஆச்சு டா"என்க ...
"ஒரு மணி நேரம் இருக்கும் பையா ... மொதல்ல அந்த பையன் சத்தம் வந்தது அப்புறம் இல்லை " என்றான்...

" எல்லாம் போச்சு ... இன்னும் அவனுக்கு சிகிச்சையே முடியல அந்த டாக்டர் வேற கத்த போறான்... " என்றவன் வேகமாய் கதவை தட்டினான்...

உள்ளிருந்து எந்த எதிரொலியும் வராமல் போக ஒரு கட்டத்திற்கு மேல் கதவை தள்ளி உடைத்துக் கொண்டே உள்ளே சென்றான்...
அங்கு அவன் கண்ட காட்சியில் ஒரு நிமிடம் உறைந்து தான் போனான்....

அவனின் பாஸ் அங்கு கட்டிலின் கீழே அரைகுறை ஆடையில் வயிற்றில் குத்திய மது பாட்டிலுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்...

அடுத்த நொடி பதறியவன் அருகில் சென்று உயிர் இருக்கிறதா என சோதிக்க அந்தோ பரிதாபம் அதிக இரத்த போக்கினால் அந்த மிருகம் அந்த இடத்திலேயே இறந்து கிடந்தது... அதிர்ச்சியில் தன் ஆட்களை கத்தி அழைத்தவன் கொலைவெறியுடன் நிலவழகனை அறை முழுவதும் தேடினான் ...

குளியலறை சன்னல் கம்பி கீழே கிடப்பதைக் கண்டவன் ஒரு பதினான்கு வயது பாலகனுக்கு இவ்வளவு துணிச்சலா என வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால்....

பின் இதன் வழிதான் தப்பியிருப்பான் என்பதை ஊகித்து தனது அடியாட்களை ஏரியா முழுவதும் தேடுமாறு விரட்டினான்...

உடை அங்காங்கே கிழிந்திருக்க உடலில் அந்த அரக்கனால் ஏற்பட்ட காயம் மற்றும் இரண்டு நாட்கள் சாப்பிடாதது என நிலவழகனை அதிக தூரம் தப்பிக்க இயலாது செய்திருக்க ஒரு மரத்தின் பின்னே மறைந்திருந்தான்...

இன்னும் அவன் கையும் உடலிலும் ஒருவித நடுக்கம் இருந்து கொண்டேதான் இருந்தது...அவன் கண்ணில் இருந்து கண்ணீர் விடாது வழிந்து கொண்டே இருந்தது...

என்ன மாதிரியான மனித மிருகங்கள் இவர்கள்... ஒரு சிறுவன் என்றும் பாராது ... ச்ச ... அவன் மனதில் உயிருடன் வாழ்வதற்காக இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் அந்த மிருகத்தால் முற்றிலும் அழிந்து போனது....

முதலில் இங்கிருந்து தப்பித்து பிறகு வாழ்வதா சாவதா என்பதை முடிவு செய்வோம் என எண்ணியவன் மறைவிலிருந்து வெளியில் வந்து தன் பையை தோளில் மாட்டியவன் வேகமாய் நடக்க ஆரம்பிக்க அதற்குள் அவனின் அடியாட்கள் நிலவழகனை கண்டு விட்டனர்...

பின்னங்கால் பிடறியில் படற இருள் கவ்விய அந்த ஆள் ஆரவமற்ற சாலையில் தன் உடம்பில் உள்ள காயங்களையும் பொருட்படுத்தாமல் ஓடிக் கொண்டிருந்த பதின் வயது பாலகனை சிறிதும் இரக்கமில்லா அந்த மனித மிருகங்கள் துரத்திக் கொண்டிருந்தது...

ஒரு தெருவைக் கடந்ததும் அவர்கள் பின் வருவதற்கான ‌எந்த அறிகுறியும் இல்லாமல் போக அந்த பிஞ்சோ ஓடிவந்ததனால் ஏற்பட்ட களைப்பில் அருகில் இருந்த குப்பைத் தொட்டியின் பின் மறைந்து கொள்ள,
துரத்தி வந்த அரக்கர்களை வெறுமையான தெருவே வரவேற்றது...

அதில் மாமிசமலைபோல் இருந்த ஒருவன் மற்றவனிடம் 'அவனை விடக் கூடாது... இந்த தெருவத் தாண்டி அவன் எங்கையும் போயிருக்க முடியாது... நீங்க ரெண்டு பேரும் அந்த பக்கம் போங்க 'என அனுப்பிவிட்டு அவனும் நகர ....

அதுவரை தன் வாயை இருகையாலும் மூடி மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தவன் அப்போது தான் ஆசுவாசமாக மூச்சு விட அந்நேரம் அவன் தோள்களில் ஒரு கரம் விழுந்தது.. திரும்பி பார்த்தவன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று சில நொடிகளிலேயே அந்த கரங்களில் மயங்கி விழுந்திருந்தான் நிலவழகன்

❤❤❤❤

உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே

 
Status
Not open for further replies.
Top