All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனுசரணின் "உயிரின் தேடல் நீய(டா)டி" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளைக் கூறி ஊக்குவித்து, குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையைத் தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே 🙏🙏
முதலில் இந்த சைட்டில் எனக்கு எழுத அனுமதித்த ஸ்ரீ கலா மேம்க்கு மிக்க நன்றி..

இது என் முதல் கதை .. இதுவரை நான் எத்தனையோ நாவல்கள் படித்துள்ளேன். அது என்னவோ கதை படிப்பதில் அலாதி பிரியம். படிக்க படிக்க கதை நிழல் படங்கள் போல் என் மனதில் பதிந்து விடும்.( என்னடா நாலு நாவல் படிச்சா கதை எழுதுவியா அப்டின்னு கேட்க கூடாது 😁 எல்லாருக்குள்ளேயும் கண்டிப்பாக ஒரு கதாசிரியர் உண்டு அது நாம் எழுதும் சில தேர்வுகளிலேயே தெரிந்து விடும். இதில் நானும் ஒருத்தி 😂) பின்னர் தான் நாமும் ஏன் கதை எழுத கூடாது என்று தோன்றியவுடனே கண்முன் வந்த கதை தான் இது. ஒரு வேளை இப்படி எல்லாம் நடந்தா எப்படி இருக்கும்னு தோன்றியதுதான் தற்போது கதை வடிவில் தர போகிறேன். முதல் முறை என்பதால் குறை நிறைகளை கட்டாயம் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நட்புகளே..அறிமுகம் மற்றும் முன்னோட்டம் இன்று. முதல் ஐந்து அத்தியாயங்கள் வரை நான் மற்ற தளங்களில் முடித்துள்ளேன். எனவே தொடர்ந்து ஐந்து அத்தியாயங்களை நாளை பதிவிடுகிறேன் இன்று அறிமுகம் மற்றும் முன்னோட்டம் மட்டுமே!!!
நன்றி 🙏
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைப்பு : உயிரின் தேடல் நீய(டா)டி

நாயகன் : ஆருஷி- (சூரியனின் முதல் கதிர்) இருளை நீக்கி ஒளி தரக்கூடிய சூரியனைப் போன்றவன்.

நாயகி : ஸ்ரீ நிதி.

குட்டி டீசர்:


அந்த கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டிருந்த சாக்லேட் ஐஸ்கிரீம் கேக்கை நாவில் எச்சில் ஊற கண்களாலே விழுங்கி கொண்டிருந்தாள் ஸ்ரீ. கைகள் பரபரக்க சுற்றும்முற்றும் பார்த்து மீண்டும் அதையே கண்களில் ஆசை மின்ன பார்த்து கொண்டிருந்தாள்.

அப்போது " உன்னால் அதை பார்க்க மட்டுமே முடியும் சாப்பிடவோ ஏன் தொடக்கூட முடியாது அப்புறம் ஏன் வீணாக ஆசையை வளர்த்துக் கொள்கிறாய்" பின்னால் இருந்து கேட்ட அழுத்தமான குரலில் தூக்கிவாரிப் போட ஒரு முழு நிமிடம் கண்களை மூடி தன்னை சமன்படுத்தி கொண்டு திரும்பி பார்த்தாள் ஸ்ரீ.

அங்கு கைகளை கட்டிக்கொண்டு நின்றவனைக் கண்டு அவள் கண்கள் சாசர் போல் விரிந்தன. இவனுக்கு எப்படி நான் தெரிகிறேன் என குழப்பிக் கொண்டிருக்க அவனோ இதழை கேலிபோல் வளைத்து அவளையே அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் ஆருஷி.
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2394323944
அத்தியாயம் 1

'அம்மா... 'என்ற அலறலுடன் தன் கண்களை மூடி காதுகளை கைகளால் மூடியும் அவ்விடத்தில் இருந்து தப்பி சற்று தள்ளி நின்று கொண்டாள்.

சில நொடிகளில் நடந்து முடிந்த செயலில் கால்கள் தடுமாற அங்கிருந்த நடைமேடையில் அமர்ந்து விட்டாள்.

அவளின் பயம் தன் கைகளிலும் முகத்திலும் வழியும் குருதியைக் கூட துடைக்க மனமின்றி கைகள் நடுங்குவதிலேயே தெரிந்தது.

தான் உயிரோடு இருப்பதை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. என்ன வேகம் அந்த கார்.

எவ்வளவு நேரம் அப்படியே அமர்ந்து இருந்தாளோ
தன்னை தாண்டி சென்ற ஆம்புலன்ஸ் சத்தத்தில் திடுக்கிட்டவள். அந்நிலையிலும் ஒரு நொடி கண் மூடி அதில் செல்வது யாராயினும் நலம் பெற வேண்டினாள்.அவள் வேண்டுதலுக்கு ஆயுள் இல்லை என்றும் அதில் செல்வது தாம் தான் என்றும் யார் அவளிடம் சொல்வது!!!

பின் சுயநினைவு பெற்றவளாய் தன் இரு சக்கர வாகனத்தை நோக்கி சென்றாள்.தோழியின் ஸ்கூட்டி அது. இன்று இரவு தன் சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு மூன்று மாதங்கள் கழித்து செல்லவுள்ளாள். அதனால் தன் பெற்றோருக்கும், தம்பிகளுக்கும் பொருட்கள் வாங்கி வந்தாள்.

சில நொடிகளில் நடந்த களோபரத்தில் அவளின் வண்டி சேதாரமுற்று பரிதாபமாக ரோட்டில் கிடந்தது.

அவள் பைகள் ஆங்காங்கே கிடக்க முதலில் வண்டியை தூக்க எண்ணி அதன் அருகில் சென்று தூக்க முயற்சி செய்தாள்.ம்கூம்..முடியவில்லை.. அவள் தொடுகை எல்லாம் காற்றுடனே கரைந்தது.

அது ஒரு வழி பாதை தோழி வீட்டிற்கு சீக்கிரம் செல்லவே அந்த குறுக்கு வழியில் சென்றாள். அவள் இது வரை தன் குடும்பத்தை பிரிந்து இருந்தது இல்லை. முதல் முறையாக மூன்று மாதங்கள் வேலைக்காக சென்னையில் தங்கியுள்ளாள்.

உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று சுற்றும் முற்றும் பார்க்க ஆங்காங்கே சிலர் நின்று தங்களுக்குள் ஏதோ பேசியும், மேலும் அருகில் போலீஸ் வண்டியில் ஒருவர் சாய்ந்து கொண்டு அலைபேசியில் ஏதோ பார்த்து கொண்டிருந்தார்.

அவரிடம் வண்டியை தூக்கி தர சொல்லலாம் என்று எண்ணி பக்கத்தில் சென்று அழைக்க.. அந்நேரம் சரியாக அவருக்கு அழைப்பு வந்தது..

அழைப்பை ஏற்று அவர் கூறிய செய்தியை கேட்டவள் அவ்விடத்திலேயே உறைந்து நின்று விட்டாள் அவள் ஸ்ரீ நிதி..
______________________

ஒரு வருடத்திற்கு முன்பு...

பொள்ளாச்சி அருகில் சிறிய கிராமம் ஸ்ரீநிதியினது,

சுந்தரம்- வள்ளி (தாத்தா பாட்டி) தம்பதியருக்கு நான்கு மகன்கள்.

மூத்தவர் மூர்த்தி இளையவர் ரத்தினம் , ராஜ் , கோபால் அடுத்தடுத்து பிறந்தவர்கள்.

மூர்த்தி-சித்ராவிற்கு விஷ்ணு என்ற மகனும் ஸ்ரீநிதி மகளும்.

ரத்தினம்-கமலா தம்பதியருக்கு இரு மகன்கள் ரவி,ராம்.

ராஜ்-வித்யா தம்பதியருக்கு இரட்டையர்கள் நவீன்,நரேன்

கோபால்- செல்வி(தற்போது உயிருடன் இல்லை) தம்பதியருக்கு ஒரே மகன் மனோஜ்.

அண்ணன் தம்பி நால்வரும் அருகருகே வீடு கட்டி வசிக்கின்றனர். சுந்தரம் தம்பதியினர் மூத்தவர் வீட்டில் தங்கியுள்ளனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம். கோபால் மட்டும் படித்து அந்த ஊரில் உள்ள அரசாங்க பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். வறுமை காரணமாக மற்ற மூவரும் படிக்க முடியவில்லை. ஆனால் தம்பியை படிக்க வைத்தனர்.

இவர்கள் குடும்பத்தில் ஒரே பெண் வாரிசு ஸ்ரீ நிதி மட்டுமே அதனால் அவள் அனைவருக்கும் செல்லப்பிள்ளை. 'டேட்ஸ் லிட்டில் பிரின்ஸஸ்' கேள்வி பட்டிருப்போம் ஆனால் அவள் அந்த குடும்பத்தில் உள்ள மூன்று தலைமுறையினருக்கும் இளவரசி...
-------------------------------------

'மன மன மன mental மனதில்

லக்க லக்க லக்க பொல்லா வயதில்

டக்க டக்க டக்க கொட்டும் இசையில்

ஓ கே என் கண்மணி மடியில்.....'

என்ற பாடல் ஹைடெசிபெல்லில் ஒலிக்க இரு கைகளையும் விரித்து வானத்தை அண்ணாந்து பார்த்து அந்த மாலை வேளையில் ஆள் அரவமற்ற சாலையில் வேகமாக சென்ற 'ராயல் என்ஃபீல்டில் ' பின் அமர்ந்து அந்த ஏகாந்த்தை கண் மூடி ரசித்தாள் ஸ்ரீ நிதி.

படாரென விழியை திறந்தவள் முன்னால் வண்டியை ஓட்டிச் சென்ற அவளவனின் முகத்தைக் காண முயன்றாள்.

அவளின் முயற்சியை உணர்ந்து சட்டென வண்டியை நிறுத்தினான் அவன்.இந்த திடீர் செயலில் அவன் மேலே தடுமாறி விழுந்தாள் ஸ்ரீ. அதில் முகம் சிவக்க வண்டியில் இருந்து இறங்கினாள்.

புன்சிரிப்புடன் தன் கையுறைகளையும், தலை கவசத்தையும் கழற்றினான். இவள் விழி விரித்து ஆவென அவனைக் காண்பதற்குள்
தீடீரென மாறிய வானிலையில் மழை பெய்ய ஏதோ வித்தியாசமாக உணர்ந்து 'மழைத்தண்ணி சூடாவா இருக்கும்' என்று அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள்.

'அய்யோ இன்னைக்கும் வட போச்சே' நிலைமை புரியவே சில நிமிடங்கள் ஆக அதற்குள் கத்தியிருந்தாள் அவள்.

சுற்றி இருந்தவர்கள் முகம் இதை கேட்டு அஷ்டகோணலாகியது.. இதில் கடுப்பான ராம் "சரியான தீனி பண்டாரம் எப்ப பாரு சாப்டறத பத்திதான் நினைப்பு.. நவீன் போய் இன்னொரு வாளி சுடு தண்ணீர் கொண்டு வா இன்னு இவ தெளியல..' என்றான் .

'சரிண்ணா' நவீன்
மலங்க மலங்க விழித்தவள் முன் அவளுடைய சித்தப்பா பசங்களான ரவி, ராம், நவீன்,நரேன், மனோஜ் நின்றிருந்தனர்.

ரவி ஸ்ரீயை விட இரண்டு வயது மூத்தவன்.அவனுக்கு போலீஸ் அதிகாரி ஆவதுதான் கனவு.எனவே கடும் உழைப்பால் இருமுறை தோல்வி கண்டு மூன்றாம் முறையாக எழுதிய சிவில் சர்வீஸ் தேர்விலும் அடுத்தடுத்த எழுத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று ஐபிஎஸ் பயிற்சிக்காக அடுத்த மாதம் டெல்லி செல்லவுள்ளான்.

ராமும் ஸ்ரீயும் எட்டு மாதங்கள் இடைவெளியில் பிறந்தவர்கள்.ஸீரீக்காக ராமை ஒரு வருடம் கழித்து இருவரும் ஒன்றாக படிப்பது போல் பள்ளி சேர்த்தனர். ஸ்ரீக்கு பாடிகார்ட் போல். ஆனால் இவள் செய்யும் லூட்டிகளில் விழிபிதுங்கி நிற்பது என்னவோ ராம் தான்.
நவீன்,நரேன் இருவரும் பள்ளி இறுதி ஆண்டில் உள்ளனர். மனோஜ் எட்டாம் வகுப்பு படிக்கிறான்.

ராம் கூறியதை கேட்டு பதறியபடி எழுந்தவள் "டேய்.. டேய்... இருங்கடா அர்த்த ராத்திரியில் ஏன்டா இப்படி பண்றீங்க.." என அழுவதை போல் அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டிருந்தாள் ஸ்ரீ.

நரேன்"என்னது அர்த்த ராத்திரி ஆ விடிஞ்சு ஆறு மணியாச்சு.. எழுத்துரு பாப்பா.. இன்னைக்கு என்ன நாளாவது தெரியுமா!" என்றான் பாவமாக..

"சண்டே தான்டா இன்னைக்கு... ஏண்டா இவ்வளவு சீக்கிரம் எழுப்புனீங்க..ஆமா சண்டே எப்பவும் நான் தானே பத்து மணிக்கு உங்களை எழுப்பவேன்... என்ன எல்லாரும் சேர்ந்து பழிவாங்குரீங்களா!!" என்று சிணுங்கினாள்
இவர்களின் சம்பாஷனைகளை ஒரமாக நின்று பார்த்துக் கொண்டு இருந்தாள் ஸ்ரீ யின் அண்ணி சவிதா ( விஷ்ணு வின் மனைவி.திருமணம் முடிந்து ஆறு மாதங்கள் ஆகிறது. ஸ்ரீ யின் கல்லூரி சீனியர்.அப்பொழுதே இருவருக்கும் நல்ல இணக்கம்.அமைதி குணமுள்ள சவிதாவிற்கு துறு துறு ஸ்ரீ யை எப்போதும் பிடிக்கும். எதார்த்தமான குணமுள்ளவள்)

இதில் மானசீகமாக தலையில் அடித்து கொண்ட ராம்"ஹே லூசு.. உன் புத்தி போகுது பாரு... சரி காய்ஸ ரெடி.. ஒன்..டூ... த்ரீ... ஹாப்பி பர்த்டே ஸ்ரீ குட்டி" என கோரசாக அனைவரும் கத்த திகைத்து நின்றாள் ஸ்ரீ.

எப்படி மறந்தேன் என ஒரு நிமிடம் தன்னையே திட்டிக் கொண்டு அனைவரின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டாள். பின் அனைவரையும் வெளியில் அனுப்பிய சவிதா அவளை அணைத்து வாழ்த்து கூறி சீக்கிரம் குளித்து வர சொன்னாள்.

குளிக்க சென்ற ஸ்ரீ காலையில் கண்ட கனவை எண்ணி புன்னகை பூசிக் கொண்டாள்.

இது கடந்த சில நாட்களாக வரும் கனவு வேறு வேறு சூழலில் அவளவனுடன். யார் அவன்? எங்கிருக்கிறான்? ஏன் அவனின் முகம் கூட கண்டதில்லை.ஆனால் கனவில் அவன் தோன்றினால் அன்றைய தினம் புத்துணர்ச்சியுடன் வலம் வருவாள். மிகுந்த சிவபக்தியுடைய ஸ்ரீ மற்ற பெண்கள் போல் அவ்வயதிற்குரிய ஆசைகள் அற்று ஆன்மீக நாட்டம் அதிகம் உள்ளவள். தோழிகள் நாவல்கள் படித்தால் இவள் சிவபுராணங்களும், திருவாரமும் படிப்பாள். பிரதோஷத்திற்கும் பௌர்ணமிக்கும் கட்டாயம் சிவன் கோவில் சென்று விடுவாள். தன் வலது கையில் உடுக்கை மற்றும் வேல் கொண்ட ஒரு வித டாட்டூ வரைந்துள்ளாள். இவ்வளவு வருடத்தில் இப்படி ஒரு கனவு அவளுக்கு வந்ததில்லை அதுவும் ஒரே மாதிரியான கனவு எனவே தான் அதில் அவளுக்கு சற்று ஆர்வம் அதிகம்.

இது வெறும் உணர்வு என்றளவிளேயே எண்ணி இருந்தாள் ஸ்ரீ.ஏனெனில் எதார்த்தமான வாழ்க்கை வாழ நினைப்பவள் இது போன்ற கனவுகளை அதிகம் ஆர்வம் காட்ட மாட்டாள். ஆனால் இந்த கனவில் வருபவனுக்கும் தனக்கும் நிச்சயம் எதோ தொடர்பு உண்டு என்பதில் உறுதியாக இருந்தாள்.

அன்றும் அதே போல் தான் புது உற்சாகம் தானாய் ஒட்டி கொண்டது. கனவை நினைத்து பார்த்தவள் கண்கள் ஆச்சரியமாக விரிந்து கொண்டது ஆம் அவனின் அடையாளமாக வலது கையில் கட்டைவிரல் பக்கமுள்ள சிறிது பெரிய மச்சம். வழக்கம் போல் சிறிது நேரம் அதில் மூழ்கி விட்டு பின் தலையில் தட்டிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.



உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும்👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23947
அத்தியாயம்-2

குளித்து முடித்து வந்தவள் கட்டிலில் இருந்த பிங்க் நிற தாவணியை கண்டு வியப்பில் ஆழ்ந்து விட்டாள். இதை வாங்கியவர் யார் என்று அறிய அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியம் இல்லை. புது துணியை அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னையே சுற்றி பார்த்து கொண்டாள்.

ஜந்தரை அடிக்கு சற்று உயரமான துறு துறு கண்களும் இயற்கையிலேயே சிவந்த அதரங்களும், எலுமிச்சை நிறத்தில் அம்சமாக இருப்பாள். அலங்காரம் செய்வதில் விருப்பம் இல்லாதவள் நீளமான முடியை தளரப் பிண்ணி பொட்டிட்டு வெளியில் வந்தாள்.

வீடே அமைதியாக இருந்தது.அது நான்கு அறைகளும், சமையலறை, பூஜை அறை, வரவேற்பு அறை முற்றம் என பெரிய அளவிலான வீடு. ஸ்ரீ யின் அண்ணன்(விஷ்ணு) இன்ஜினியரிங் கட்டிடக் கலை முடித்தவுடன் அறைகளை எடுத்துக் கட்டி பாரம்பரிய வீட்டை மாற்றாமல் இக்காலத்திற்கான வசதிகளுடன் மாற்றி அமைத்து உள்ளான்.இதே போலவே மற்ற சித்தப்பாவின் வீடுகளையும் அவரவர் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொடுத்துள்ளான்

முதலில் சாமியறை சென்று விளக்கு ஏற்றி

"நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க

வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி "

என்று சிவபுராணத்தை மனதார கண் மூடி மனதினுள் பாடியவள். திருநீறு இட்டு வெளியில் வந்தாள்.

அவள் குடும்பத்தினர்கே ஆச்சர்யம் அவளின் சிவ பக்தியில்... திருவிழா எதேனும் விசேஷ நாட்களில் மட்டுமே கோவில் செல்வது அவர்களின் வழக்கம். ஆனால் மாதம் இருமுறை எப்பாடு பட்டாவது சிவன் கோயில் சென்று விடுவாள் ஸ்ரீ. டாட்டூ குத்தி வந்த போது அனைவரும் அதிர்ந்ததே விட்டனர் ஆனால் கடிந்து அவளை பேசிராதவர்களுக்கு மனம் சுணங்கினாலும் அவள் போக்கிலேயே விட்டு விட்டனர். இவர்களுக்கு இடையில் மாட்டியது என்னவோ ராம் தான்.அதுவும் அவள் டாட்டூ குத்தியதால் வந்த காய்ச்சலில் குடும்பத்தினரிடையே மாட்டி நொந்து விட்டான்.

பூஜை முடிந்த பிறகு வெளியே வந்தவளுக்கு வீட்டினர் ஒருவரும் கண்ணில் படவில்லை. வீட்டின் வெளியே பார்க்க வாசலில் கால் வைக்க மேலிருந்து ஒரு கூடை ரோஜாப்பூ இதழ்கள் அவள் மேலே விழுந்தது.. இந்த திடீர் செயலில் முதலில் அதிர்ந்து பின் சிறுபிள்ளை போல் குதிக்க ஆரம்பித்தாள். பின் அனைவரையும் தேடி வீட்டின் பின்புறம் செல்ல அங்கு கண்ட காட்சியில் மெய் மறந்து விட்டாள்.அங்கு வேப்பமரம் அடியில் டேபிள் போடப் பட்டு அதில் அவளுக்கு மிகவும் பிடித்தமான சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் பிறந்த நாள் வாழ்த்துடன் சிரித்து கொண்டிருந்தது..

சுற்றிலும் அவளுடைய தாத்தா பாட்டி பெற்றோர் அண்ணா அண்ணி , அவளுடைய சித்தப்பாக்கள் மற்றும் சித்தியுடன் அவள் தம்பிகளும் சில வாண்டுகளும் நின்றிருந்தனர்.. வேக எட்டுகளுடன் அவர்களை நோக்கி சென்றவள் தன் அண்ணி சவிதாவை அணைத்து உடைக்கு நன்றி கூறி அனைவரிடமும் அதனை சுற்றி சுற்றி காண்பித்தாள்.. அனைத்து பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் பெற்று பின் கேக் வெட்டினாள்.

முதலில் "என் பெண் இவ்வளவு வளர்ந்து விட்டாளா" என கண் கலங்க ஓரமாய் நின்று கொண்டு இருந்த தன் தாய்க்கும் பின் தந்தைக்கும் ஊட்டினாள். பின் மனோஜிற்கு ஊட்டிவிட்டாள்.

மனோஜ் மூன்று வயதிருக்கும் போதே அவனுடைய தாய் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுபடுத்த படுக்கை ஆனார் அதன் பின் மானோவை வளர்த்தது முழுக்க முழுக்க ஸ்ரீ யும் அவள் பெற்றோருமே. எனவே மனோவிற்கு ஸ்ரீ இன்றியமையாதவள் ஆகிவிட்டாள். மேலும் ஒரு வருடம் நோயுடன் போராடியவர் பின் ஓய்ந்து மரணத்தை அடைந்தார்.மறுமணத்தை மறுத்து தன் மகனுக்காக ஸ்ரீ வீட்டிலேயே தங்கி கொண்டார் கோபால்.

அனைவருக்கும் கேக்கை ஊட்டிவிட்டாள். தந்தை மற்றும் சித்தப்பாக்கள் சேர்ந்து ஒரு கணிசமான தொகை கொடுத்து பிடித்ததை வாங்கிக்கொள்ள சொன்னார்கள். அவள் அண்ணன் விஷ்ணு அவளுக்கு விலையுயர்ந்த வாட்சை பரிசளித்தான். பின்பு காலை உணவை முடித்து விட்டு பெரியவர்கள் அனைவரும் கிளம்பி விட சின்னவர்கள் அனைவரும் ஊர் சுற்ற கிளம்பி விட்டனர்.

ஸ்ரீ பிறந்தநாளை முன்னிட்டு முதலில் கோவையில் உள்ள தர்மலிங்கேஸ்வர் கோவில் சென்று வணங்கி விட்டு பின் ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்து விட்டு பின் மால், படம் பார்த்து விட்டு இரவு உணவு முடித்து வீடு வருவதாய் திட்டமிட்டனர்.

விஷ்ணு ஏதோ வேலை இருப்பதாய் கூறி வீட்டில் இருந்து கொண்டான். குடும்பத்துடன் வெளியே செல்வதற்காக இரு கார்கள் லோன் போட்டு வாங்கியுள்ளனர் பகிர்ந்து.. ரவி வண்டியை ஓட்ட அருகில் ராமும் பின் நவீன் நரேன் நடுவில் சவிதா ஸ்ரீ மனோவும் அமர்ந்து கொண்டனர்.

வண்டியை ஓட்டிக் கொண்டே ரவி "காலேஜ் முடித்து என்ன செய்ய போகிறீர்கள் " என்று ஸ்ரீ மற்றும் ராமிடம் கேட்டான் அதில் இருவரும் திருதிருவென விழித்தனர்.
"இன்னும் ஆறு மாசம் இருக்கு ல அப்போ பாத்துக்கலாம் ரவி அண்ணா" என்றாள் ஸ்ரீ.

ராமும் ஸ்ரீ யும் கோவையில் உள்ள புகழ்பெற்ற தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் கடைசி வருடம் படிக்கின்றனர். ஸ்ரீ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவிலும், ராம் சிவில் இன்ஜினியரிங்கும் படிக்கிறார்கள்.
ராம் " வந்துடுவான் பெரிய மிலிட்டரி மாறி இவன் பிளான் பண்ணி ஐபிஎஸ் பாஸ் பண்ணா நாங்களும் இப்ப இருந்தே ஓடனுமா??" என்று மனதினுள் அண்ணணை வறுத்து கொண்டு வெளியில் அண்ணணை பார்த்து 'ஈஈஈ..' என சிரித்து வைத்தான்.

அவன் முகத்தை கண்ட ஸ்ரீ யும் சவிதா வும் பக்கென சிரித்து விட ராம் பின் திரும்பி அவர்களை முறைத்தான். இவர்களின் சம்பாஷனைகளை ஒரக் கண்ணால் கண்ட ரவி மனதில் சிரித்து வெளியே விறைப்பாக இருந்தான்.

கோவிலில் தரிசனம் முடிந்து நேராக ஆசிரமம் சென்றனர். அங்கு ஸ்ரீ யை கண்ட கண்ணன் வேகமாக ஓடிவந்து கட்டிக்கொண்டு பிறந்தநாள் வாழ்த்து சென்னான். கண்ணன் பதிமூன்று வயது தாய் தந்தையை இழந்த கண்ணன் பஸ் ஸ்டாண்டில் கையேந்தி கொண்டிருந்தான் ஒன்றரை ஆண்டுகள் முன்பு அவளிடம் பரட்டை தலையுடன் கிழிந்த பனியனும் அரைக்கால் டவுசர்முமாக பிச்சை எடுக்கும் போது பேசி அவனைப்பற்றி விவரம் தெரிந்து கொண்டு இந்த ஆசிரமத்தில் சேர்த்து விட்டாள். ஸ்ரீ சற்று இளகிய மனம் கொண்டவள் அவள் முன் யாரேனும் அழுதாலோ அல்லது துன்பத்தில் இருந்தாலோ அவளால் தாங்கிகொள்ளவே முடியாது.. இங்கு இதுபோல் ஆதரவற்ற குழந்தைகள் பத்து பேரை சேர்த்துள்ளாள் .
அவனிடம் இருந்து பிரிந்த ஸ்ரீ நன்றி கூறி சாக்லேட் கொடுத்தாள்.அன்று மதிய உணவு இவர்களுடையது அனைவரும் சாபிட்டு முடித்ததும்.. அங்கிருந்த அனைவரிடமும் சிறிது நேரம் விளையாடி விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

அதன் பின்னர் மால், படம் என்று அன்றைய நாளினை கடத்திவிட்டு இரவு எட்டு மணி வாக்கில் வீட்டிற்கு வந்தனர். வள்ளி பாட்டி சின்னவர்கள் அனைவரையும் சேர்த்து சுத்திப் போட்டார் மகிழ்வுடன். ரவி விஷ்ணு விடம் கண்ணசைக்க அவன் வெற்றி என கட்டைவிரல் உயர்த்தி காட்டினான்.

அனைவரிடமும் ஸ்ரீ கொஞ்சிவிட்டு அவள் அறைக்கு சென்றாள் அங்கு அவள் கண்ட காட்சியில் கண் கலங்க நின்று விட்டாள். அவளினது சற்று பெரிய அறை அங்கு சன்னலின அருகே மரத்தாலான இருக்கை ஊஞ்சல் போல் தொங்கிக் கொண்டிருந்தது. பின் சுவற்றில் விஷ்ணு திருமணத்தன்று எடுத்த குடும்ப போட்டோ பெரிதாகவும் அதனை சுற்றி ஸ்ரீ யின் விதவிதமான போஸ்களிலும் அதிலும் இன்று காலை பூக்கள் அவள் மீது விழுவது போன்ற புகைப்படம் மிக அழகாக இருந்தது ..

வெளியில் வந்தவள் நேராக சென்று தன் அண்ணனை கட்டிக் கொண்டாள். விஷ்ணு வாஞ்சையுடன் தங்கையின் தலையை வருடிக் கொடுத்தான். இருவருக்கும் எட்டு வருடங்கள் வித்தியாசம். ஸ்ரீ எப்பவும் அவனின் முதல் குழந்தை போல...

" பிடிச்சு இருக்கா பாப்பா" விஷ்ணு..

" சூப்பரா இருக்கு... தாங்க்ஸ் அண்ணா" வார்த்தைகள் வராமல் தடுக்க..

"பச் என்ன இது சின்ன பிள்ளை போல"..

"சரி சரி போதும் கொஞ்சியது போய் தூங்குங்க " என அதட்டல் போட்டார் மூர்த்தி.. அதில் சிரித்து கொண்டே அவரவர் அறைக்கு சென்றனர்.

வள்ளி தன் மகன் மருமகளை அழைத்தார்.

" மூர்த்தி ஸ்ரீ க்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணணும் டா எனக்கு என்னமோ மனசு சரியில்லை... அவ ஜாதகத்தை நம்ம குருஜி கிட்ட ஒருதடவை காட்டிரலாம்." என்றார் வள்ளி

"ஸ்ரீ இன்னும் சின்ன பொண்ணு மா . இருபது வயதுதான் ஆகிறது.. மெதுவா பண்ணலாம் மா.. உங்க திருப்திக்கு வேணா நாம நாளைக்கு போய் குருஜி அ பாக்கலாம்" மூர்த்தி.

"சரிப்பா... அவ எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கணும்.." என மனதார வேண்டிக் கொண்டார்.

மனிதன் நினைப்பதும்,வேண்டுவதும் நடந்து விட்டால்...பிறகு நான் என்ன செய்வேன்!!!!!என
இவர்களின் மகிழ்ச்சியை கண்ட விதியோ ஏளனமாக புன்னகைத்து கொண்டது....


உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும். உங்கள் கருத்துக்களே என் ஊக்கம்👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23967

அத்தியாயம் 3

அடுத்த நாள் காலை அனைவருக்கும் பரபரப்பாக விடிந்தது.. சின்னவர்கள் அனைவரும் பள்ளி கிளம்பி விட... ஸ்ரீ யும் ராமும் கல்லூரி கிளம்பி விட பெரியவர்கள் தோட்டத்திற்கு கிளம்பி கொண்டிருந்தனர்..

சாப்பிட்டுக்கொண்டு இருந்த மூர்த்தியிடம் வந்த வள்ளி பாட்டி

"இன்னைக்கு வேலை இருக்காப்பா"என்று கேட்டார்.

"இல்லைமா அதான் முருகன் இருக்கான் ல மா அவன் பாத்துக்குவான்" மூர்த்தி.(முருகன் அவர்கள் தோட்டத்தில் வேலை செய்பவன் சிறுவயதிலேயே பெற்றோர்கள் இழந்த நிலையில் மூர்த்தியிடம் எட்டு வயதில் அடைக்கலமானவன். படிக்க சொல்ல படிப்பு வரவில்லை என விவசாயத்தை கற்றுக் கொண்டான்‌. தற்போது இருப்பத்தி ஐந்து வயது ஆகிறது)

"சரிப்பா நாம குருஜி அ பார்த்ததுண்டு வந்தரலாம்.. ரத்தினத்தையும் ராஜையும் இன்னொரு நாள் பாத்துக்க சொல்லிக்கலாம். கோபால், மனோஜ் ஜாதகத்தையும் எடுத்துகோ." பாட்டி

"சரிம்மா" மூர்த்தி.

கல்லூரி வாகனத்தில் இருந்து இறங்கிய ஸ்ரீ யும் ராமும் பேசிக்கொண்டே தங்கள் கல்லூரி வளாகத்தை நோக்கி சென்றனர்.

ராம் " உன்னால தாண்டி நான் டெய்லியும் இந்த இந்துப் போன ஊர் சுத்தி பஸ்ல வர வேண்டி இருக்கு அரைமணி நேரத்தில் வர வேண்டடிய பஸ் ஒன்றரை மணிநேரம் ஆகுது. அவுட் பஸ்ல போலானு சொன்னா ஸ்ரீ ரொம்ப சிரமப்படுவா அப்டிங்கராங்க சரி பைக் வாங்கி தர சொன்னா அதையும் நீ கெடுத்து விட்டுட்ட.. " என்று லட்சத்தியொரு முறையாக புலம்பிக் கொண்டே வந்தான். "

"டேய் எவ்வளவு வாட்டி தாண்டா இதையே சொல்லுவ" என்று காதுக்குள் சுண்டுவிரல் விட்டு இரத்தம் வருவது போல் செய்து காட்டி அவனை வெறுப்பேற்றினாள்.

அதில் கடுப்பான ராம் அவள் தலையில் நங்கென கொட்டினான்.

இவர்களை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டேவந்த விக்னேஷ் ராமின் செயலில் கோபம் கொண்டு அவனை அழைத்தான்.

விக்னேஷ் அங்கு எம்பிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன். பணக்கார வீட்டு பையன் ஸ்ரீ யை பார்த்தவுடனே அவள் மீது ஒரு ஈர்ப்பு.

அவளுடன் பேச முயற்சி செய்கையில் ராம் அதற்கு தடையாக இருந்தான். அவளுக்காக தான் அவன் இதே கல்லூரியில் முதுகலை சேர்ந்ததும்.

பணக்கார வீட்டு பையன்களுக்கே உரியதான குடி, பெண் தோழிகள் என இருந்தவன் தான் ஆனால் ஸ்ரீ யை கண்ட நாள் முதல் அவன் திருந்த முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.

அவனின் நடத்தையை அறிந்த ராம் பல முறை அவனை எச்சரித்து விட்டான் அவளுடன் பேச முயற்சி செய்யாதே என்று.

ஆனாலும் அவள் கல்லூரி முடிப்பதற்குள் தன் ஆசையை சொல்லியே தீரவேண்டும் என்ற முடிவுடன் இருந்தான்.

அன்றும் அவன் அழைத்து திரும்பிப் பார்த்த ராம் ஸ்ரீ யை வகுப்பறை அனுப்பி விட்டு விக்னேஷை நோக்கி வந்தான்.

விக்னேஷ் "ஏன்டா உன்னால அவ கூட சண்டை போடாம இருக்கவே முடியாதா "

"ஆரம்புச்சுட்டான்...." என மனதில் சலித்துக் கொண்டு
"உனக்கு இப்போ என்ன பிரச்சினை அவ என் லிஸ்டர் நாங்க அப்படித்தான் அடிச்சுப்போம் உன் வேலையை பாத்துட்டு போ" என்றான்.

அதில் கோபம் கொண்டவன் "அவதான் என்னைக்கா இருந்தாலும் என் வொய்ஃப் சோ நான் கேட்பேன்"என்றான்.
இதில் ஆத்திரமடைந்த ராம் "இது கண்டிப்பாக நடக்காது.. ஸ்ரீ மே இதுக்கு ஒத்துக்க மாட்டா" என்றான்.

"அவ ஒத்துக்கலனாலும் தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிபேன்" என்று வார்த்தையை விட்டான் விக்னேஷ்.

கண்கள் சிவக்க ராம் அவ்விடத்தை விட்டு அகன்றான். விக்னேஷ் அவன் அமைதியில் திகைத்து தான் கூறியதை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றான். அவன் தெரிந்து அவ்வாறு கூறவில்லை அந்த எண்ணம் கூட கிடையாது கோபத்தில் வார்த்தையை விட்டு விட்டான் பின் விளைவை அறியாமல்...

கடைசி ஆறு மாதம் என்பதால் பிராஜெக்ட் சம்பந்தமாக மட்டுமே கல்லூரி வந்துகொண்டிருந்தனர் இருவரும்.ஒருவாரம் வேகமாக ஓடியது.. ராம் அவன் பேசியதில் இருந்து தீவிர யோசனையிலேயே இருந்தான்.

பின் ஒரு முடிவு எடுத்தவனாக ரவி விஷ்ணு விடம் பேச சென்றான்.. இருவரிடம் நடந்த அனைத்தையும் கூறிய ராம் தன் திட்டத்தையும் கூறினான்.. முதலில் அதிர்ந்து பின் தவறு என்று தெரிந்தும் இருவரும் சம்மதித்தனர். பின் அந்த ஞாயிறு அன்றே அதை செயல்படுத்தினர்.

அடுத்தநாள் கல்லூரி சென்ற ராம் பார்த்தது அங்கு டீசி வாங்கி கொண்டு வந்த விக்னேஷின் தந்தையையே.. இதழில் ஒரு வெற்றிப் புன்னகையுடன் வகுப்பறை சென்றான்.

கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த ஸ்ரீ தன் அப்பத்தாவை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சினாள் இது எப்போதும் நடப்பதே .. அவரோ "ஏண்டி இப்படி சும்மா சும்மா கட்டி புடிக்கற.. பொம்பளை புள்ள மாதிரி நடந்துகோ "என்பார்.

ஆனால் இன்று அமைதியாக இருக்கவே தன் அன்னையிடம் என்னவென கண்களாலேயே கேட்டாள். அதுக்கு அவரோ தெரியல என்று சொல்ல யோசனையுடன் அறைக்கு சென்றாள்.

இங்கு அவரோ அன்று குருஜி கூறியதையே நினைத்து கொண்டிருந்தார்..
குருஜி என்பவர் குருமூர்த்தி ஜோசியம் பார்ப்பவர் அல்ல நிதமும் சிவனை நினைத்து பூஜித்து தொழுபவர். சிறு வயதிலேயே குரு ஆன்மீக நாட்டம் கொண்டு அவர் சொல்லும் வாக்கு அனைத்தும் நடக்க அதில் நல்லது மற்றும் கெட்டதும் அடக்கம். அவரின் தந்தை பெரிய செல்வந்தர். குரு பணத்தில் விருப்பம் அற்று ஆசிரமம் அமைத்து அங்கேயே வசிக்கிறார். அவர் தெரிந்த சிலருக்கு மட்டுமே ஜாதகம் கணித்து கூறுவார். அதில் சுந்தரம் தம்பதியரும் ஒருவர். ஒரு சிறு விபத்தில் குருவும் சுந்தரமும் சந்திக்க அதன் பின்னர் நட்புடன் உள்ளனர்.

பெண் குழந்தை கேட்டு குருவிடம் செல்ல அவரோ 'உனக்கு புத்திரி யோகம் இல்லை என்றும் அடுத்த தலைமுறையில் உண்டு....'என்றும் கூறினார் அது போலவே தான் நடந்ததும்..

சுந்தரம் வள்ளி மூர்த்தி மூவரும் குருஜி யை வணங்கி பின் சிலபல நலம் விசாரிப்புகுப்பின் வள்ளி அவரிடம் சின்னவர்களின் ஜாதகத்தை கொடுத்தார். முதலில் இறைவனை நன்றாக வேண்டிக்கொண்டு அதனை பார்த்தார்.

முதலில் விஷ்ணுவிற்கு "சொந்த தொழில் தொடங்குவார் ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியம்" என்றார்.

பின் ஸ்ரீ யினதை பார்த்து முதலில் திகைத்து பின் குழம்பமாகி பின் தெளிவானார். இதனை மற்றவர்கள் கவனிக்கவில்லை ஆனால் வள்ளி பாட்டி கவனித்து யோசனையானார். பின் "லட்சுமியின் அருள் பெற்ற பொண்ணு, அவளுடைய மகிழ்ச்சியே உங்கள் குடும்பம் செழிக்க வைக்கும்" என்றார்.

சுந்தரம் "எங்கள் குடும்பத்தின் ஆதாரமே அவள் தான்.திருமணம் எப்போது நடக்கும்"என்று கேட்டார்.

ஒரு பெருமூச்சுடன் "ஒரு வருடம் கழித்து வாருங்கள்" என்று கூறி மற்றவர்களதை இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என அனைவரையும் அனுப்பி வைத்தார். வள்ளி பாட்டியோ குருவின் இந்த திடீர் செயலில் குழப்பமானார். குருஜி ஏதோ தங்களிடம் மறைப்பதை தெளிவாய் புரிந்து கொண்டார்.

அவர்கள் சென்றவுடன் குருஜி கண்மூடி இறைவனோடு மானசீகமாக "ஏன் அந்த குழந்தைக்கு மட்டும் இப்படி கஷ்டத்தை கொடுக்க போகிறாய்.. அவள் என்ன தவறு செய்தாள்.. எதுவும் அறியாத உன்னையே தொழுது வாழும் பெண்ணிற்கு ஏன் இந்த முடிவு காத்திருக்கிறது... அவள் குடும்பத்தில் இதை எவ்வாறு தாங்க போகிறார்கள்..."என்று கண்கலங்க மனமுருகி கேட்டுக் கொண்டிருந்தார்..


உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும்👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23974

அத்தியாயம் 4

சென்னையில்...

மாலை நேரத்தில் அந்த பெரிய வரவேற்பு அறையில் தன்முன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தன் பெரியப்பா பையனான ஆருஷியைக் கண்டு எச்சில் கூட்டி விழுங்கி கொண்டு 'இவனுக்கு அவனுங்களே பரவாயில்லை.. அவனுங்களாவது கை கால தான் ஒடச்சானுங்க இவன் நம்மள பார்வையாலையே எரிப்பானே... கடவுளே எப்படியாவது என்ன இவன்ட இருந்து காப்பாத்து..." என மனதினுள் புலம்பிக் கொண்டு இருந்தான் விக்னேஷ்.. அவனின் தந்தையும் சற்று பயத்துடனே அவன் முன் அமர்ந்திருந்தார்.

அந்நேரம் உள்ளே நுழைந்தவர்களை கண்டு "அப்பாடா தப்பிச்சேன்.. இனி பெரியப்பா பாத்துக்குவாரு.." என சற்று ஆசுவசமானான் விக்னேஷ்..

உள்ளே வந்த கிருஷ்ணன் தன் தம்பியை வரவேற்று பின் இருக்கையில் உடலில் கட்டுடன் அமர்ந்திருந்த விக்னேஷை கண்டு அதிர்ந்தார்.

" டேய் விக்கி.. என்னாச்சு டா.. " கிருஷ்ணன்.

"ஒன்னும் இல்லை பெரியப்பா தடுக்கி விழுந்துட்டேன்".. விக்னேஷ். இதைக் கேட்ட ஆருஷி தீயாய் அவனை முறைத்தான்.

"என்னாச்சு ஆருஷி ஏன் அவனை முறைக்குற.. என்ன நடந்தது.." கிருஷ்ணன்.

"ஒன்னும் இல்லை ப்பா... ஒழுங்கா நடக்க கூட தெரியல .. இன்னும் என்ன சின்ன பிள்ளையா!" என சமாளித்தான் ஆருஷி.

"ஹப்பாடா ... தப்பிச்சோம்..." என நிம்மதி ஆனான்.. ஏனெனில் நடந்த உண்மையை சொன்னால் இவரே கொண்டு போய் மறுபடியும் அவன்ங்களிடமே ஒப்படைத்து விடுவார் அவ்வளவு நேர்மையான மனிதர்..

கிருஷ்ணன் அவருடைய தம்பி அன்புசெல்வன்.. சிறுவயதிலேயே தந்தையை இழந்த நிலையில் தாய் சொத்துக்களை விற்று சொந்த ஊரான கோவையிலேயே வாகனங்கள் உதிரி பாகங்கள் செய்யும் தொழில் தொடங்கினர்... இருவரும் கடுமையான உழைப்பாளிகள்... தொழிலும் வளர ஆரம்பித்தது... இருவருக்கும் அவர்களின் அத்தை மகள்களையே மணம் முடித்தனர்.

கிருஷ்ணன்-கீதா தம்பதியருக்கு
ஆருஷி - அபிநந்தன் இருமகன்கள்.

அன்பு - செல்வி தம்பதியருக்கு விக்னேஷ் ஒரே மகன்.

கிருஷ்ணன் சற்று நேர்மைவாதி.. தொழிலும் சரி வாழ்க்கையிலும் சரி...ஆருஷி நல்ல அறிவாற்றல் கொண்டவன்.. சென்னையில் கல்லூரி படித்து முடித்து அங்கேயே தன் தந்தையின் தொழிலை தொடங்கிவெற்றி கண்டான். மூன்று ஆண்டுகள் உழைப்பில் வளரும் இளம் தொழிலதிபர் வரிசையில் உள்ளான்.. அங்கேயே வீடு கட்டி தன் பெற்றோர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டான். கோவை நிறுவனத்தின் முழுப் பொறுப்பும் தன் தம்பியான அன்புவிடம் ஒப்படைத்து விட்டு சென்னை வந்து விட்டார் கிருஷ்ணன். அபிநந்தன் வெளிநாட்டில் தொழில் கல்வி படிக்கிறான்.

அவரவர் அறைக்கு சென்றபின் விக்னேஷ் அறைக்கு சென்ற ஆருஷி
"உன்னை அடிச்சது யாரு??" என இரு கைகளையும் கட்டி கூர்மையாக அவனை பார்த்தவாரே வினவினான். அதில்'உண்மையை என்னிடம் மறைக்காதே!! ' என்ற கட்டளையுடனே!! அவன் இங்கு வந்தவுடனேயே கண்டுகொண்டான் யாரோ அவனை நன்றாய் அடி வெளுத்துள்ளனர் என்று...
இவனோ சற்று பயத்துடனே நடந்தவற்றை கூறினான்..

ராமிடம் பேசிவிட்டு கிட்டதட்ட அவன் அந்த விசயத்தை மறந்தே போனான். வழக்கம் போல் அவன் செல்லும் பப்பிற்கு அந்த வீக்கென்டும் செல்ல அங்கு வந்த ரவி விஷ்ணு ராம் மூவரும் முகத்தை மறைத்து கைக்குட்டையை கட்டிக்கொண்டு அவன் வெளிவர காத்திருந்தனர்.. முழு போதையில் வெளிவந்த விக்கியை முகத்தை மூடி வெளியில் ஒதுக்குபுறம் இழுத்து வந்து அடி வெளுத்துவிட்டனர். இறுதியில் இனி அவளை தூக்குவேன்‌‌.. ஏன் அவ நினைப்பே உனக்கு வர கூடாது

நாளைக்கே நீ இந்த ஊருல இருக்க கூடாது என மிரட்டி மேலும் அவன் சட்டைப்பையில் 'உன் பையன் உயிரோடு இருக்க வேண்டும் என்றால் இந்த ஊரில் இருக்க கூடாது' என எழுதிய கடிதத்தை வைத்து விட்டு அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சென்றனர்.
"போலீஸ் கம்ளைன்ட் எதுவும் வேண்டாம். தப்பு உன் மேலையும் இருக்குனு சொல்லி கொஞ்சநாள் இங்க இருக்க சொல்லி என்ன கூட்டிட்டு வந்துட்டாரு அண்ணா " என கூறி முடிக்கும் முன் அவனை ஓங்கி அறைந்திருந்தான் ஆருஷி.

" ஏண்டா அறிவுகெட்டவனே அந்த பொண்ணு வேணானு சொன்னா தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவியா அவ்வளவு தைரியமா உனக்கு" என்றான் ஆத்திரத்துடன்.

"சாரிண்ணா ... எனக்கு அவளை பார்த்ததும் பிடிச்சுருச்சு அண்ணா ராம் வேணானு சொல்லும் போது இன்னும் ஆர்வமாகிருச்சு அண்ணா.. அவன் என்னை அவமான படுத்த....அப்படி பேசிட்டேன் அண்ணா மத்தபடி தப்பான எண்ணம் லா எதுவும் இல்லை.. இன்ஃபேக்ட் அவங்க அடுச்சதுல தப்பே இல்லணா எந்த அண்ணா முன்னாடியும் இப்படி தங்கச்சிய தூக்குவேன்னு சொன்னாளும் இப்படி தான் நடந்துக்குவாங்க.. நானா இருந்தாலும் இதுவும் இதுக்கு மேலயும் செய்வேன்.. " என தன்னிலை விளக்கத்தை கொடுத்தான்..

தன் மீதே தவறு என்பதை தெளிவாய் உணர்ந்தவனை மேலும் திட்டாமல் அவனை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தவன் கோவையில் உள்ள தன் நண்பனுக்கு அழைத்து விவரம் கூறி அந்த பெண்ணின் முழுவிவரமும் கேட்டான்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் அழைத்த அவன் நண்பன் "அந்த பொண்ணு என் தங்கச்சியோட காலேஜ்மெட் மச்சி நல்ல பொண்ணு.. மிடில் கிளாஸ் ஃபேமிலி கூடப்பிறந்த அண்ணன் விஷ்ணு.. சித்தப்பா பசங்க ஐந்து பேரு அவளுக்கு ஒன்னுன்னா இவனுங்க உயிர கூட கொடுப்பானுங்க.. நல்ல குடும்பம் டா எதுவும் பண்ணிராதடா " என சற்று வருத்தத்துடன் சொன்னான் ..

ஏனெனில் எதிரிகளை முளையிலேயே கிள்ளி எறிய நினைப்பவன் ஆருஷி அதுமட்டுமின்றி தன் குடும்பத்தின் மீது மிகுந்த பாசமுடையவன் விக்னேஷை தன் சொந்த தம்பி போலவே எண்ணுபவன் அவன் குடும்பத்தினர்க்கு ஒன்று என்றால் அவன் எந்த எல்லைக்கும் செல்வான் என தன் நண்பனை பற்றி தெரிந்தவனாக..

ஆருஷியோ.."ச்ச ச்ச அப்டியெல்லாம் இல்ல மச்சி அவனுங்க அடிச்சி ஹாஸ்பிடல் சேர்த்துட்டு போயிருக்கும் போதே நல்லவன்னு தெரிஞ்சுது .. நான் அவங்க இடத்துலே இருந்தாலும் இப்படி தான் நடந்துப்பேன் .. கொஞ்ச நாள் போய் அப்பவும் விக்கி அந்த பொண்ண விரும்புனா முறைப்படி பொண்ணு கேட்க தான் உன்கிட்ட கேட்டேன்" என கூற அப்போதுதான் அவன் நண்பனுக்கு நிம்மதியாக இருந்தது.

பின் "அந்த பொண்ணு போட்டோ மெயில் பண்ணிருக்கேன் பாரு... " என கூறி அழைப்பை துண்டித்தான்.

மெயிலில் வந்த புகைப்படத்தை பார்த்த ஆருஷின் இதயம் வேகமாக துடித்தது.. வேகமாக விக்கி அறைக்கு சென்றவன்" இன்னும் நீ அந்த பொண்ண உண்மையா விரும்புகிறாயா..." என கேட்டான். விக்கி " தெரியல அண்ணா இப்போ மனசு முழுக்க குற்ற உணர்ச்சி தான் இருக்கு.. அவ ரொம்ப நல்ல பொண்ணு அவளுக்கு குடும்பம் தான் எல்லாமே...ரொம்ப இரக்க குணம் உள்ளவள். இந்த மாதிரி அவனுங்க அண்ணனுங்க ஒருத்தனை அடிச்சுருக்காங்கன்னு தெரிஞ்சாலே எனக்கு பரிதாபபட்டு அண்ணனுக்கு கூடதான் சண்டை போடுவா ... நான் தான் சின்னபுள்ள தனமாக நடந்துட்டேன்.. நல்லவேளை அவளுக்கு தெரியாது தெரிஞ்சுது அவ்வளவு தான்." என்றான்.

அதைக்கேட்ட ஆருஷி" சரி நீ குணமானதும் அபி கூட போய் தொழில் பயிற்சி எடுத்துக்கோ முடிஞ்சதும் நம்ம பிசினஸ்அ விரிவுபடுத்தாலாம்" என கூறிவிட்டு சென்றான்.

ஆருஷி அவன் அறைக்கு வந்து தன் நண்பன் அனுப்பிய புகைப்படத்தை பார்த்து அதை தன் விரல்களால் வருடி ஒரு விஷம புன்னகையுடன் இரசித்துக் கொண்டிருந்தான்.

கனவிலும் நினைக்காத வகையில் அவர்களின் சந்திப்பு நடக்க போவதை அறியாமல் அவன் ஒரு கணக்கை வகுத்துக் கொண்டிருந்தான்.

-----------------------------

விக்னேஷை அடித்து விட்டு வந்ததிலிருந்தே மூவருக்குள்ளும் பயம் இருந்து கொண்டே தான் இருந்தது ... எங்கே போலீஸ் என்று போய்விடுவார்களோ தடையங்கள் இல்லை என்றாலும் விக்னேஷிற்கு தெரியுமே யார்ரென்று..

அவனை பற்றி முழுவிவரம் விசாரிக்கும் போது ஒரே பையன் என்றும்.. பணக்காரர்கள் என்றாலும் அவரின் தந்தை அவ்வளவு தைரியசாலி இல்லை தான் உண்டு தன் வேலையுண்டு என தொழில் முடிவுகள் கூட வேறு ஒருவர் தான் எடுப்பர் என்றும் அறிந்தவர்கள் வருவதை பார்த்து கொள்ளலாம் என தான் இறங்கிவிட்டனர்.

அதுவும் தங்கையை தூங்குவேன் என சொல்லியவனை சாதரணமாக விட அவர்கள் ஒன்றும் அவ்வளவு நல்லவர்கள் இல்லையே..

ரவி கூட முதலில் தவறு என நினைத்தவன் பேசி பார்கலாம் என்று தான் நினைத்தான் ஆனால் அவன் மேலும் கோபம் கொண்டு ஸ்ரீ க்கு ஏதும் தொல்லை கொடுத்தால் என்ன செய்ய என்றே சரி என்று கூறினான்.

நினைத்தை செய்த பின் அவன் தந்தை டீசி வாங்கி வருவதை கண்டு தான் சற்று நிம்மதி ஆனார்கள்.

அதன்பின் அவன் வெளியூர் அனுப்பபட்டான் என்று கேள்வி பட்டதிலிருந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்தும் ஸ்ரீ க்கு மிகுந்த பாதுகாப்பு செய்தனர். ராம் முன்பை விட அவளுக்கு நிழலாகிபோனான்.அதைவிட முக்கியமாக இந்த விசயத்தை அவளுக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டனர்.இல்லையேல் ஸ்ரீ யே அனைவரையும் கூட்டி பஞ்சாயத்து வைத்து வீட்டை விட்டு துரத்தி விடுவாள். ஏனெனில் அவ்வளவு கண்டிப்பு தன்னால் யாரும் பாதிக்கப்பட கூடாது என்பதில் அவ்வளவு உறுதியானவள்..

நாட்கள் வாரங்களாக அன்று ரவி தன் ஐபிஎஸ் பயிற்சிக்காக டெல்லி செல்லவுள்ளான்..அங்கு அண்ணன் தம்பி என அனைரின் வீடே பரபரப்பாக இருந்தது..பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா என அனைவரும் ரவியை மாறி மாறி அறிவுரை கூறி உணவுகளை ஊட்டிவிட்டு என வீடே அல்லோலப்பட்டது.. ரவியோ அனைவரின் பாசமழையிலும் விருப்பியே நனைந்தான் எனலாம்..

இரவு கோவையில் பஸ் ஏறி விடியற்காலை ஐந்து மணிக்கு சென்னையில் உள்ள டெல்லி செல்லும் விமானத்தை பிடிக்க வேண்டும்.. விஷ்ணு வையும் ரவியையும் தனியாக அழைத்து ஸ்ரீ யை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொன்னான்.

ஸ்ரீ ரவியை கட்டிக் கொண்டு ஆல் த பெஸ்ட் சொல்ல ரவியோ தனியாக எங்கும் செல்ல கூடாது என்று பல அறிவுரைகள் கூறினான். இதுவே அவன் ஸ்ரீ யை கடைசியாக பார்ப்பது என தெரியாமல் அறிவுரை கூறிக் கொண்டிருந்தான்..

பெரியவர்களிடம் ஆசி வாங்கி கொண்டும் அனைவரிடமும் பிரியாவிடை பெற்று தன் கனவை நினைவாக்க சென்றான்.

காலச்சக்கரம் யாருக்கும் காத்திராமல் அதன் பணியை செவ்வனே செய்ய ராமும் ஸ்ரீ யும் கல்லூரியில் இறுதி கட்டத்தில் இருந்தனர். ராமிற்கு பெங்களூரில் உள்ள பிரபல நிறுவனத்திலும், ஸ்ரீ க்கு கோவையிலேயே ஒரு நிறுவனத்திலும் வேலை கிடைத்தது.. ஸ்ரீ க்கு மூன்று மாதங்கள் பயிற்சிக்காக சென்னை செல்லவும் அழைப்பு வந்தது. முதலில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஸ்ரீ தனியாக சென்னை செல்வதில் சற்றும் விருப்பம் இல்லை ... அதுவும் ராம் பெங்களூர் செல்ல அவனும் இல்லாது எவ்வாறு தனியே அனுப்புவது என்பதில் துளியும் ஆர்வம் இல்லை..

பின்னர் தான் 'பெண்பிள்ளை சொந்தகாலில் நின்று பழகட்டும் மூன்று மாதங்கள் தானே அதன்பின் கோவையே வந்துவிடலாம்.. சென்னையில் தன் நண்பன் வீடு உள்ளது அவனுடைய பெண்ணும் அதே நிறுவனத்தில் வேலை செய்கிறாள் .. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்' என்று கோபால் பலவாறு பேசியே அனைவரையும் சம்மதிக்க வைத்தார்.. ஏனெனில் ஸ்ரீ அவரின் செல்லமகள் ஆம் அவரின் மனைவி இறந்த பிறகு அவருக்கு ஸ்ரீ யே பெரும் ஆறுதல். மற்றவர்கள் தடுக்க ஸ்ரீ நேராக வந்தது தன் கோபால் சித்தாப்பாவிடமே. விஷ்ணுவும் ரவியுமே ஆதரவு தந்தனர்.

அவர்கள் கூறியதும் சரியென படவே பெரியவர்கள் அனைவரும் சம்மதித்தனர். இருந்தும் வள்ளி அப்பத்தாவை சமாளிப்பதற்குள் அனைவருக்கும் தான் போதும் போதும் என்றாகி விட்டது.இறுதியில் அனைவரிடமும் கெஞ்சி கொஞ்சி என சம்மதம் பெற்று என அவள் சென்னை கிளம்பும் நாளும் வந்தது ... மனோஜ் தான் ஸ்ரீ யை கட்டிக் கொண்டு ஒரே அழுகை‌. பின் அவனை சமாதானம் செய்து அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்று கிளம்பினாள்..

இரவு எட்டு மணிக்கு இரயில்... குடும்பம் மொத்தமும் ரயில்வே ஸ்டேஷனில் குவிந்து விட்டனர். தாயும் சித்திகளும் அவளுக்கு பல அறிவுரைகள் கூறி சவிதா வாழ்த்துகள் கூறியும் வழியனுப்பினர். உடன் ஸ்ரீ யின் தந்தை, கோபால்,ராம், சென்றனர்.

வண்டி கிளம்பும் அறிவிப்பு வர இவளோ வண்டியின் படிகளில் நின்று தன் குடும்பத்தை கண்களால் நிரப்பிக் கொண்டாள்..

ஏனோ மனம் பாரமாக இருப்பது போல் உணர்ந்தால்... பிறந்ததிலிருந்து குடும்பத்தையே பிரிந்து இருந்திராதவள் மூன்று மாதங்கள் எவ்வாறு இருக்க போகிறாள்..

இனி இவர்களை காணவே முடியாதோ என தோன்றிய நொடி இதயம் வேகமாக துடிக்க நமச்சிவாய மந்திரத்தை உச்சரித்து பயத்தை போக்க முயற்சித்தாள்..

இரயில் வண்டி நகரத்துவங்க அவளும் அனைவருக்கும் கையசைத்து விடை பெற்றாள்.. மூன்று மாதங்கள் எவ்வாறு அவளை விட்டு இருக்க போகிறோம் என பெரியவர்கள் கண்கலங்கினர்..


இவர்களை கண்ட விதியோ இனி ஆயுசு முழுக்க இதே நிலை தான் என அகோரமாக சிரித்தது... பார்ப்போம் விதி ஜெயிக்குமா!!! இல்லை இவர்களின் பாசம் ஜெயிக்குமா என்று இனி வரும் நாட்களில்....


கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே..👇👇


 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
2398223983


அத்தியாயம் 5

அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர் .. கோபாலின் நண்பர் ராம்நாதன் அவர்களை ஸ்டேஷனிலேயே வந்து அழைத்து சென்றார்.பரஸ்பர நலம் விசாரிப்புகுப்பின் வீட்டை நோக்கி புறப்பட்டனர்... ராமநாதன் வரும் போதே கார் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்.

கோபாலின் பள்ளி கால நண்பர்... கோவையை பூர்வீகமாகக் கொண்டவர்.. கடந்த பத்து வருடங்களாக வேலை மாற்றல் பெற்று சென்னையில் வசிக்கிறார்.அவருக்கு ஒரே மகள் வர்சினி. அவள் ஸ்ரீ நிதி பணிபுரிய இருக்கும் நிறுவனத்தின் சென்னையில் இருக்கும் தலைமையிடத்தில் பணிபுரிகிறாள்.

ஒருமணி நேர பயணத்திற்கு பிறகு ராமநாதனின் வீட்டை அடைந்தனர்.

அங்கு அவரின் மனைவி கலையரசியும் மகளும் வாசல் வரை வந்து வரவேற்றனர்... அவரின் வீடு நான்கு அறைகள் கொண்ட ஸ்ரீ வீட்டில் பாதியளவு இருந்தது.. பத்துக்கு பத்து அறை மூன்றும் சிறிய பூஜை அறை சமயலறை மற்றும் சற்று பெரிய வரவேற்பு அறை... சிரம பரிகாரங்கள் நால்வரும் முடித்தபின் காலையுணவை கலையரசி எடுத்துவைக்க அனைவரும் உண்டனர்.

"அண்ணா இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் ஊருக்கு போலாம் ல ணா... வந்தன்னைக்கே கிளம்பனுமா " என்றார் கலையரசி..

"இல்லை மா அங்க ஊருலையும் கொஞ்ச வேலை இருக்கு நடவு சமயம் வேற இன்னொரு நாள் கண்டிப்பா வரோம் மா.. ஸ்ரீ பத்திரமா இருடா .. " என்று கலையரசியிடம் ஆரம்பித்து ஸ்ரீ யிடம் முடித்தார் மூர்த்தி.

" அண்ணா இதெல்லாம் நீங்க சொல்லனுமா ஸ்ரீ எங்க பொண்ணு மாதிரி நாங்க பார்த்துக்கிறோம்... நீங்க கவலைப்படாமல் போய்ட்டு வாங்க" கலையரசி.. இதைக் கேட்ட மூர்த்தி மற்றும் கோபாலிற்கு மனநிறைவாய் இருந்தது..

"ஆன்ட்டி எனக்கு உங்களை நினைச்சா தான் பாவமா இருக்கு....நான் நல்லா சமைப்பேன்னு இவ சொன்னா தயவு செய்து நம்பி கிட்சன் பக்கம் மட்டும் விட்றாதிங்க...அப்புறம் உங்க கிட்சனுக்கு அது தான் கடைசிநாளா இருக்கும்.. அனுபவத்துல சொல்றேன்.." என வராத கண்ணீரை துடைத்து கொண்டு சிரியாமல் சொல்ல அங்கிருந்த அனைவரும் கொல்லென சிரிக்க ஸ்ரீ யோ ராமை கொலை வெறியோடு முறைத்து பார்த்தாள்..

"அப்படியெல்லாம் இல்லை ஆன்ட்டி ஏதோ ஒரு தடவை அம்மா சாதம் குக்கர் ல வைக்க சொன்னாங்க நான் கரெக்ட் ஆ தான் வைச்சேன்.. பழைய குக்கர் வெடிச்சுருச்சு அதுக்கு நான் என்ன செய்வேன்.. எல்லாம் அந்த குக்கர் மேல் தான் தப்பு... இவன் என்னவே என்னை சொல்றான்.. " என அப்பாவியாக சொல்ல எவ்வளவு முயன்றும் சிரிப்பை அடக்க முடியாமல் அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்...

பின் ஸ்ரீ அழுகையாய் உதட்டை பிதுக்க கலையரசி அங்கிருந்தவர்களை கண்ணால் சைகை செய்ய ராமும் வர்சினி மட்டும் சிரிக்க அவரோ "நீ எதும் வருத்தப்படாத டா.. நீ கூட பரவால வர்சூக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாது..."என வர்ஷினியை வார அவள் அன்னையின் மேல் கடுப்பானாள்

"நான் உனக்கு சூப்பரா சமைக்க கத்து தர்றேன்..சரியா!!" என ஸ்ரீ யை கேட்க அவளும் ராமிற்கு பழிப்புக்காட்டி சிரித்தாள்.

பின் மூவரும் அன்றிரவே ஊரிற்கு கிளம்ப "பொறுப்பா நடந்துகணும் டா" என கூறிய மூர்த்தியும் கோபாலும் மனமேயின்றி பிரிந்து சென்றனர்...ஸ்ரீ அவர்கள் கிளம்பும் வரை பொறுத்தவள் அதற்குமேல் முடியாமல் அவளுக்கென ஒதுக்க பட்ட அறையில் முடங்கி விட்டாள் ..

முதல் நாள் என்பதால் அவர்களும் ஓய்வெடுக்கட்டும் என விட்டுவிட்டனர்..எப்போதுமே வர்ஷினியின் பெற்றோருக்கு அவள் ஒரே பெண்ணாய் போனதில் வருத்தமே.. உறவுகள் உடன்பிறப்புகள் இன்றி தனியாய் வாழ்வதின் அருமை தெரிந்தவர்கள்.

கல்லூரி படிக்கும் போதே கலையரசியை காதலித்து படித்து முடிக்கும் முன்பே பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர்.. எனவே உறவுகளும் சொல்லிக் கொள்வது போல் இல்லை.. கோபாலின் குடும்பத்தை போல் தனித்தனியான வீடுகளில் வசித்தாலும் அவர்களின் ஒற்றுமையில் பெரிய ஆச்சர்யமே.. வர்ஷினியை இது போன்ற குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பதே அவர்களின் எண்ணம்..

முதல் முறை குடும்பத்தை விட்டு பிரிந்தது, புது இடம் என ஸ்ரீ க்கு அந்த இரவு சிவராத்திரி தான்.. அடுத்த நாள் வேலைக்கு செல்ல வேண்டி அனைவரும் பரப்பரப்பாக கிளம்பி கொண்டிருந்தனர் .. அவர்களதும் நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேலானவர்கள் சொந்தவீடு , வர்ஷினிக்கு ஸ்கூட்டி, சாதரணமான கார் என இவ்வளவு தான் உடைமையே..

முதலில் ராமநாதன் அலுவலகம் கிளம்பி விட ஸ்ரீ யும் வர்ஷினியும் ஸ்கூட்டியில் ஆபிஸ் சென்றனர்..

அந்த வானுயர முப்பது மாடி கட்டிடத்தின் பிரமாண்டத்தில் திகைத்து நின்று விட்டாள் ஸ்ரீ.. வர்ஷினி அவளை அழைத்து சென்று அவளின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி பயிற்சி நடக்கும் இடத்திற்கு வாழ்த்துக்கூறி அனுப்பி வைத்தாள்..

வர்ஷினி ஸ்ரீ யை விட ஒரு வயது மூத்தவள்.. அவளும் இன்ஜினியரிங் கம்ப்யூட்டர் பிரிவு படித்து இந்நிறுவனத்தில் ஓராண்டிற்கு முன்பு சேர்ந்தாள்.

இன்றுடன் ஸ்ரீ சென்னை வாசி ஆகி ஒரு மாதம் ஆகிவிட்டது.. சென்னை வாழ்க்கை அவளுக்கு உயிரோட்டம் இல்லாததது போலவே தோன்றியது... அந்த போக்குவரத்தும் ஜன நெருக்கடியும் ஸ்ரீ க்கு மூச்சு முட்ட வைத்தது..

வர்சினியும் ஸ்ரீயும் நன்றாக நெருங்கி விட்டனர்.. முதலில் குடும்பத்தை பிரிந்து மிகவும் வருந்தியவள் அதை வெளியில் காட்டாமல் இருந்தாள் அதை அறிந்து கொண்ட வர்ஷினி அவளை தனியாக விடாமல் எப்பவும் கூடவே இருந்தாள்..
தனியாக வளர்ந்தவளுக்கு ஸ்ரீ தங்கையை தாண்டியும் தோழியைத் தாண்டியும் இருவருள்ளும் நல்ல பாசபிணைப்பு உருவாகி இருந்தது.. சிங்கார சென்னையை சுற்றி காட்டுகிறேன் என்ற பேர்வழியில் ஸ்ரீ யை ஒருவழி செய்து விட்டாள் வர்ஷினி.போனில் அனைவரிடமும் தவறாமல் பல மணிநேரம் பேசுபவள் இருந்தும் எப்போது நேரில் சென்று அவர்களை பார்க்க என்று ஏக்கமாக இருந்தது அவளுக்கு.. எப்போது ஊருக்கு சொல்வோம் என ஆவலாக இருந்தாள்.

எப்போழுதும் துறுத்துறுவென இருக்கும் ராமும் பெங்களூர் கிளம்பி விட ஸ்ரீயும் இல்லாமல் பெரியவர்கள் தான் மிகவும் வருந்தினர்..

நாட்கள் அதன் போக்கில் நகர ஸ்ரீ வேலையை நன்கு கற்றுக் கொண்டிருந்தாள் அவள் குழுவில் அவளுடன் சேர்த்து இன்னும் நான்கு பேர்.. அனைவரிடமும் இன்முகத்துடனே நடந்து கொண்டாள்..

ஸ்ரீ இங்கு வந்து மூன்று மாதங்கள் முடிய இருநாட்கள் இருந்தது.. அவளுக்கு வேலையும் உறுதியானது.

இடையில் அவளின் பெற்றோர்கள் வேலை பளுவினால் வந்து பார்க்க முடியவில்லை அவளும் வேலை காரணமாக ஊரிற்கு செல்ல முடியாமல் போக கலையரசி ராமநாதனும் தான் அவளை தேற்றி மகள் போலவே பார்த்துக் கொண்டனர்..

இன்று....

எவ்வளவு முயன்றும் அவளால் நம்பவே முடியவில்லை ... பின் தன் கை கால்கள் என வேகமாக தொட்டுத் தொட்டுப் பார்த்தாள் ஏதோ சற்று வித்தியாசமாக உணர்ந்தாலே தவிர மற்றபடி அவளுக்கு வேறு எதுவும் தவறாய் தோன்றவில்லை..

சட்டென நினைவு வந்தவளாய் சுற்றி முற்றி தன் தோழி வர்ஷினியை தேட அங்கு அவள் இல்லை வண்டியின் அருகே செல்ல அந்த கரிய சாலை வண்ணத்தையும் மீறி செங்குறுதி பளபளத்தது கையில் நடுக்கத்துடன் அதை வருடிப் பார்த்தாள் சுத்தமாக தொடு உணர்வின்றி ஏதோ குளுமையாய் மட்டும் உணர்ந்தாள்..

பின் வேகமாய் எழுந்தவள் அந்த காவல் அதிகாரி கூறிய மருத்துவ மனையை நோக்கி விரைந்தாள்..
வர்ஷினி யுடன் ஊர் சுற்றியதில் அந்த ஏரியா பழக்கமாகி இருந்தது...

'வர்ஷினி வர்ஷினி....' என அவள் மனம் மீண்டும் மீண்டும் முணுமுணுக்க சட்டென அவள் நடந்த இடம் ஆடுவதை உணர்ந்து பயந்து தன் கண்களை இறுக மூடிக் கொண்டாள்..

சிறிது நேரம் கழித்து சுற்றுப்புறம் எந்த அசைவும் இல்லாமல் இருக்க பயத்துடனே மெல்ல கண்கள் திறக்க தன் முன்னால் கிழிந்த நாறாய் கிடந்த வர்ஷினியை கண்டவள் கண்களில் கண்ணீர் தானாய் சுரக்க ஆரம்பித்தது...

அவளின் தலையிலும் வலது கையிலும் வலது காலிலும் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது.. அவளை அந்நிலையில் பார்க்க முடியாதவள் வேகமாக அங்கிருந்து வெளியில் வந்து வராண்டாவில் நின்று கொண்டாள்.

அவளுக்கு இவையெல்லாம் கனவாய் இருக்க கூடாதா என்ற ஒரு நப்பாசை... ஆனால் விதியை யார் மாற்ற முடியும்..

அப்போது பதற்றத்துடன் உள்ளே வந்த ராமநாதன் மற்றும் கலையரசியை கண்டவளுக்கு இன்னும் அழுகையாய் வந்தது ..

கலையரசி ஸ்ரீ யினை ஊடுருவி செல்வது போல செல்ல ஸ்ரீ தான் அதில் தடுமாறி அங்கேயே அமர்ந்து விட்டாள். அவளுக்கு இன்னும் இந்த நிலையை தாக்குபிடிக்கவே முடியவில்லை ...

மரணத்திற்கு பிறகான இந்நிலை அவளிற்கு ஏதோ மீளா சுழலில் மாட்டிக் கொண்டது போல் உணர்ந்தாள்..

ஆம் அவள் உடலில் இருந்து உயிர் பிரிந்து முழுதாய் மூன்று மணி நேரம் ஆகி இருந்தது...

இந்நிலையில் இருந்து எவ்வாறு அவள் மீள் போகிறாள்.. அல்லது இந்த மீளா சுழலில் சிக்கி மூழ்கிப் போவாளா!! என்பதை இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்...

-----------------------------

முதல் கதை , புதிய கோணம், என சற்று பதற்றமாய்தான் உள்ளது நட்புக்களே... உணர்வுகள் சரியாக எழுத்துக்களில் பிரதிபலிக்கிறதா என்பதை பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
23999

அத்தியாயம் 6

சில மணி நேரங்களுக்கு முன்பு..


அவளுக்கு இரவு எட்டு மணிக்கு இரயில்.அவளுடன் வர்ஷினி குடும்பத்தினரும் பொள்ளாச்சி சென்று ஒரு வாரம் தங்குவதாக திட்டமிட்டிருந்தனர். ராமநாதன் அலுவலகம் ஒரு வாரம் விடுமுறை சொல்வதற்காக சென்றுவிட .. வர்ஷினியும் ஸ்ரீ யும் குடும்பத்தினர்க்கு பொருட்கள் வாங்க சென்றிருந்தனர்.

அனைத்தும் வாங்கி விட்டு வர்ஷினி வண்டி ஓட்ட ஸ்ரீ பின்னால் அமர்ந்திருந்தாள். அவர்களின் வீடு செல்ல குறுக்கு வழியான ஒரு வழிப் பாதையில் சென்றார்கள்.. அப்போது எங்கிருந்தோ வந்த கருப்பு நிறக் கார் இவர்களது ஸ்கூட்டியை வேகமாக மோத வண்டி தடுமாறி சரிந்தது..

இருவருமே ஊரிற்கு செல்லவிருக்கும் மகிழ்ச்சியில் தலைகவசத்தை மறந்து வந்திருந்தனர்..(இதனால் கூறவருவது என்னன்னா மக்களே "தலை கவசம் நம் உயிர் கவசம்")

அதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீ நடைமேடை தடுப்பில் தலை மோத சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள்.

வர்ஷினியோ வண்டியுடனே இழுத்து செல்லப்பட்டு தலை கை கால்கள் என உடலில் பல காயங்களுடன் மயக்கமடைந்தாள். இவர்களை இடித்த அந்த காரோ சிறிதும் வேகத்தை குறைக்காமல் சென்றுவிட்டது..

அந்த பகுதியில் குறைந்த மக்களே அந்நேரத்தில் அங்கு இருந்தனர்.. அங்கிருந்த சிலர் வேகமாக வந்து ஆம்புலன்ஸ்க்கும் போலீஸ் நிலையத்திற்கும் அழைத்தனர்.

அருகிலேயே ரவுன்ஸ்ல் இருந்த அந்த ஏரியா இன்பெக்டர் சேகர் மற்றும் அவருடன் கன்ஸ்டபிள் ஒருவரும் உடனடியாக சம்பவ இடத்தினை அடைந்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்...

அதற்குள் அங்கு வந்த ஆம்புலன்ஸ் முதலில் ஸ்ரீ யை பரிசோதித்த மருத்துவர்கள் இல்லை என தலையசைக்க அந்த இன்ஸ்பெக்டருக்கே சற்று மனம் கனத்து விட்டது. அதுவும் ஸ்ரீ யினது கண்கள் திறந்த நிலையிலேயே அவள் உயிர் பிரிந்திருக்க மருத்துவரே வருத்த்துடன் அவள் கண்களை மூடினார்...

வர்ஷினியை பரிசோதித்தார் உயிர் இருப்பதாகவும் சீக்கிரம் மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என அவசரப்படுத்தினார்.

ஆம்புலன்ஸில் அவர்களுடன் கான்ஸ்டபிளை துணைக்கு அனுப்பிவிட்டு சேகர் காவல் நிலையத்திற்கு அழைத்து உதவிக்கு ஆள்அனுப்ப சொல்லிவிட்டு அருகில் இருந்தவர்களை விசாரித்தார்..

அதில் ஒருவர் " சார் கருப்பு கலர் கார் சார் மின்னல் வேகத்தில் வந்தது நாங்க என்னனு திரும்பி பார்க்கறதுக்குள்ள வண்டியை இடிச்சுட்டு போயிருச்சு" என்றார்.
"வண்டி நம்பர் யாரும் பாத்திங்களா" என்று கேட்டார் சேகர்.

"இல்ல சார் ஆனா கார் நல்ல விலையுயர்ந்த கார் சார்" என்றனர் சுற்றி இருந்தவர்கள்.

அவர்களை அனுப்பிய சேகர் ஸ்கூட்டியை சோதிக்க அதில் வர்ஷினி அழைப்பேசி மற்றும் இருவரது கம்பெனி ஐடி கார்டுகளும் இருந்தது .. அதில் இருவரின் பெற்றோருக்கும் அழைத்து சிறு விபத்து என்றும் சின்ன காயம் தான் என பொய் கூறி மருத்துவமனை பெயர் சொல்லி வர சொன்னார் ..

பின்னர் தன் வண்டியில் சாய்ந்து ஹாஸ்பிடல் சென்ற கான்ஸ்டபிளுக்கு அழைத்துக் கொண்டிருந்தார்.அதே சமயம் அவரிடமிருந்தே அழைப்பு வந்தது .

" ம் .. ஹாஸ்பிடல் சேர்த்துட்டயா" சேகர்.

...................

" அந்த சீரியஸா இருக்க பொண்ணு பேரு வர்ஷினி சென்னை பொண்ணு. அந்த ஸ்பாட் அவுட் பொண்ணு பேரு ஸ்ரீநிதி பொள்ளாச்சி போல. ஹாஸ்பிடல்ல இந்த விவரத்தை கொடுத்துரு. " சேகர்

....................

"அந்த கார் அடையாளம் சொல்லி அடுத்த செக் போஸ்டர்ல தேட‌ சொல்லிருக்கேன் . இடிச்ச காரை கண்டு பிடிச்சர்லாம். நீ அந்த ஸ்ரீ யோட பேரன்சு வந்ததும் பாடிய ஒப்படைச்சுரு. அவங்க கிளம்பர வர கூட இருந்துட்டு வா. நா துணைக்கு கான்ஸ்டபிள அனுப்புறேன்" என்று கூறி போனை வைத்தார். இதைத்தான் ஸ்ரீ ஆன்மாவாய் நின்று கேட்டது அதன் பின்னே தன் தோழியின் நினைவு வந்து தேடினாள்.

இங்கு மருத்துவமனை வந்த ராமநாதன் அங்கு ஐசியு முன் நின்ற கான்ஸ்டபிளை நோக்கி சென்றார்.

"சார் எங்க பொண்ணுங்களுக்கு ஒன்னும் ஆகலையே" சற்று பதட்டதுடனே வினவினார்.

அவரோ"நீங்க வர்ஷினியோட பேரன்சா.."என்றார்.

"ஆமா சார் . ஸ்ரீ யும் எங்க பொண்ணு மாதிரி தான் சார் .. ரெண்டு பேருக்கும் என்னாச்சு சார் சின்ன அடினு தான் சொன்னாங்க எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு சார்" என்றார் கலைச்செல்வி.

அதில் பெருமூச்சு விட்ட கான்ஸ்டபிள் ஐசியுவை நோக்கி கைகாட்டினார். அதில் இருவரும் "சார் சின்ன அடினு தான சொன்னாங்க ஏன் ஐசியுல வச்சுருக்காங்க" என பதறினர்.

"ஒண்ணும் இல்லை.. நீங்க பதறாதிங்க டாக்டர் வந்து சொல்லுவாங்க " என்றார்.

கான்ஸ்டபிளும் தான் என்ன செய்வார் இது போல் எத்தனையோ கேஸ்களை தினம் தினம் பார்த்தாலும் இது போன்ற அப்பாவி பெற்றோர்களை எதிர்கொள்வதில் அவர்களுக்கும் மனம் பாரமாகி விடும். அதுவும் ஸ்ரீ போல ஸ்பாட் அவுட் கேஸ்கள் தான் கடினமே அதுவும் அவர்களின் பெற்றோர்கள் கதறுவதில் தான் இவர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றி போகிறது .

அவர்கள் மருத்துவமனை அடைவதற்குள் ஸ்ரீ குடும்பத்தினர் பத்து முறை ராமநாதனுக்கு அழைத்து விட்டனர்.. இவரும் மருத்தவரை பார்த்து விட்டு அழைப்பதாய் கூறி வைத்தார்.

ஸ்ரீ யோ தட்டுத்தடுமாறி எழுந்தவள் அங்கு கான்ஸ்டபிளிடம் இருவரும் பேசுவதை கண்டு அவர்கள் அருகில் சென்றாள். வீண் முயற்சி தான் என்று தெரிந்தும் கலைச்செல்வியிடம்."ஆன்ட்டி வர்ஷினிக்கு ஒன்னும் ஆகாது அவ நல்லாகிடுவா" என கூறி அவரின் தோள் தொட முயற்சிக்க ம்கூம்... அவள் ஸ்பரிசம் வெறும் காற்றாய் தான் போனது அவள் யார் கண்ணுக்கும் தெரியவுமில்லை இவள் பேசுவதும் ஒருவருக்கும் கேட்கவில்லை... ஸ்ரீக்கோ மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்களின் அருகேயே நின்று கொண்டாள்.

அந்நேரம் வெளியே வந்த நர்ஸ் இவர்களை அழைக்க அனைவரும் மருத்துவரை சந்திக்க சென்றனர்.
உள்ளே நுழைந்தவர்களை பார்த்த

மருத்துவர் "முதல்ல உட்காருங்க .. நீங்க வர்ஷினியோட பேரன்ஸ் ரைட்" என, இருவரும் ஆம் என தலையசைத்தனர்.

"வர்ஷினிக்கு ஹெட் ல இன்ஜூரி ஆகிருக்கு ... கிரிட்டிகள் ஸ்டேஜ் தான். பிரைன் டெட் ஆகவும் சான்ஸ் இருக்கு எதுனாலும் அவங்க கண்விழித்தால் தான் சொல்ல முடியும். அதுபோக கால்லையும் கைலயும் எழும்பு முறிவு அதுக்கான ட்ரீட்மெண்டும் பண்ணிருக்கோம் அவங்க கண்விழித்தால் தான் மேற்கொண்டு சொல்ல முடியும். " என நிறுத்த கலைச்செல்வியோ கதறி அழ ஆரம்பித்து விட்டார்..

ராமநாதனுக்கும் மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கண்கலங்கினர். பின்பு " டாக்டர் ஸ்ரீ எப்படி இருக்கா அவளுக்கு எதும் ஆகலையே" என்று கேட்க மருத்துவரோ கான்ஸ்டபிளை 'இன்னும் சொல்லலையா' என்ற ரீதியில் பார்க்க அவர் இல்லை என தலையசைத்தார்.

"அந்த பொண்ணோட பெற்றவர்கள் வந்துட்டாங்களா " மருத்துவர்.

" இல்லை டாக்டர். அவங்க பொள்ளாச்சி. வந்துட்டே இருக்காங்க நைட்குள்ள வந்துடுவாங்க .என் நண்பனோட பொண்ணு தான் வேலை விசயமாக இங்க இருக்கா" என்றார்.

பெருமூச்சு விட்ட மருத்துவர் அவர்களை ஒரு அறைக்குள் அழைத்து சென்றார். அங்கு தலை முதல் கால் வரை வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்த ஒரு ஸ்டச்சரின் முன்பு அனைவரையும் நிற்க வைத்து "சாரி சார் அவங்க சம்பவ இடத்திலேயே " என்று மருத்துவர் முடிக்க வில்லை கலைச்செல்வி இல்லை என கத்தியிருந்தார்.

"ஏங்க நம்ம ஸ்ரீ க்கு ஒண்ணும் இல்லைல வாங்க நம்ம போலாம் இது ஸ்ரீ‌ இல்லை வாங்க போலாம்" என கூறியபடியே தன் கணவனின் கைகளைப் பிடித்து இழுத்தார்.

அவரோ தன் மனைவியை சமாதானம் செய்து கொண்டே மருத்துவரையும் கான்ஸ்டபிளையும் நோக்க "நடந்த விபத்துல அவங்க தலையில பலமா அடிபட்டு அந்த இடத்துலயே இறந்துட்டாங்க" என கூற கான்ஸ்டபிள் அந்த துணியை விலக்க அங்கு முகத்தில் பக்கவாட்டிலும் காதில் இருந்தும் வழிந்த உதிரம் உறைந்த நிலையில் நிர்மூலமான முகத்துடன் படுத்திருந்த ஸ்ரீ யை கண்ட கலைச்செல்வி அவ்விடத்திலேயே மயங்கி விழுந்தார்..

அவரை ஒரு கையால் தாங்கிய ராமநாதன் ஸ்ரீ யின் முகத்தை தொட்டு " ஸ்ரீ உனக்கு ஒண்ணு இல்லடா கண்ண முழிச்சு பாருடா மா இந்த அங்கிளை பாருடா பிளீஸ் டா எங்களை விட்டு போயிராதமா.. உங்க குடும்பத்துக்கு நான் என்னடா பதில் சொல்லுவேன் ...எந்திரிடா.. " என திரும்ப திரும்ப சொல்லி கதற அங்கு அரூபமாய் இருந்த ஸ்ரீ யோ மவுனமாய் கதறினாள்.

தன்னவர்களின் கதறல்களை காண சகிக்காதவள் வேகமாக வெளியே வந்து வர்ஷினியின் அறைக்கு சென்று விட்டாள். குறுகிய காலமே ஆனாலும் இரத்த உறவுகளை போல மனதளவில் மிகவும் நெருங்கி விட்டிருந்தனர்.

இங்கு கான்ஸ்டபிளோ அவர்களை வெளியில் அழைத்து வந்து ஆசுவாசப்படுத்தினார். கலைச்செல்வி ஒருபுறம் மயங்கி இருக்க அங்கிருந்த செவிலியர்கள் அவரை பார்த்து கொண்டனர்.

ராமநாதன் " எப்படி சார் இப்படி ஆச்சு .. என் பொண்ணு நல்லாதான் வண்டி ஓட்டுவா.."என அழுகையுனுடே கேட்டார் அவரும் மேலோட்டமாக நடந்ததை கூற அவருக்கு ஆத்திரம் தாளவில்லை.

அதே நேரம் ஸ்ரீ யின் தந்தை அழைக்க ராமநாதனுக்கோ நின்ற அழுகை மீண்டும் வந்தது . எப்படி கூறுவார் அவர்களின் குலகொடி இங்கு வேரறுந்து கிடப்பதை...

துக்கம் மேலிட அழைப்பை ஏற்காமலே விட்டு விட்டார். அருகிருந்த கான்ஸ்டபிளோ "இப்போ எதுவும் சொல்லாதிங்க சார் அவங்க இங்க வந்து தெரிஞ்சுக்கிட்டும்.. " என ஆலோசனை கூறினார். அவருக்கும் அதுவே சரியென பட மீண்டும் அழைத்த சமயம் பெரிதாய் ஒன்றும் இல்லை எனக் கூறி வைத்தார்.

மகள் மனைவி ஒரு பக்கம் ஸ்ரீ மறுபக்கம் என துக்கம் தொண்டையை அடைக்க ஐசியு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

ஐசியினுள் இருந்த ஸ்ரீ யோ மெதுவாய் தன் தோழியின் அருகே சென்று அவள் கைகளின் மேல் மெதுவாய் தன் கையை வைத்தாள். பின்பு அவளின் பெட்டில் அமர்ந்து " வர்ஷு நா இப்போ பேசரது எல்லாம் உனக்கு கேட்காதுனு தெரியும் ஆனாலும் பேசுறேன் உங்களையெல்லாம் இனி எப்போ பார்பேன்னு தெரியல.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். என் குடும்பத்தை பிரிந்து வந்தப்ப அவங்க நினைப்பே வராம என்னை நீங்க பார்த்துக்கிடீங்க... நான் என்ன யோசிக்கிறேன் எதற்காக வருத்தப்படுறேன்னு நா சொல்லாமையே என்னை பத்தி புரிஞ்சு என்னை சந்தோஷப்படுத்துனீங்க... இதுக்கெல்லாம் நான் உங்களுக்கு என்ன திருப்பி செய்ய போறேன்னு தெரியல.. " துக்கம் தொண்டையை அடைக்க குரலை செருமிக் கொண்டு" பிளீஸ் எழுந்த்துக்கோ வர்ஷு ஆன்ட்டியும் அங்கிளும் ரொம்ப அழறாங்க" என தேம்பினாள் ஸ்ரீ..

பின்பு சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் நேரம் ஆவதை உணர்ந்து " வர்ஷு டாக்டர்ஸ்லாம் என்னென்னமோ சொல்லாறாங்க ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கு நீ கண்டிப்பா எழுந்து வரனும் என்ன காப்பாத்தாம விட்ட கடவுள் கண்டிப்பா உன்ன காப்பாத்துவாரு. என்னால் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது.. என்னோட நினைப்புல நீங்க எல்லாரும் மகிழ்ச்சியா இருந்த நினைவு தான் இருக்கனும்... இவங்க எல்லாம் எனக்காக அழறத பாக்குற சக்தி எனக்கு இல்லை.. என்னோட குடும்பம் இங்க வர்றதுக்குள்ள நான் கிளம்பனும். எனக்காக ஒன்னே ஒன்னு மட்டும் செய்வியா வர்ஷு அப்ப அப்ப பொள்ளாச்சி போய் என்... இல்ல இல்ல நம்ம குடும்பத்தை பார்த்துக்கோ" என கண்கலங்க தன் கையை அவள் கையிலிருந்து விலக்கியவள் நிமிர்ந்து அவளை காண என்ன புரிந்ததோ வர்ஷினியின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்தது..
வர்ஷினியின் கைகள் அசைந்து ஸ்ரீ யினது ஸ்பரிசத்தை தேட அது கிடக்காமல் அவள் இமைகளுக்குள் கருமணிகள் அங்குமிங்கும் அலைந்து கடினப்பட்டு விழிகள் திறக்க முயற்சி செய்தாள்.

யார் சொன்னது மரணித்தால் அவர்களை உணரமுடியாது என்று உண்மையான அன்பு கொண்டால் நிச்சயமாக அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் எந்நிலையில் இருந்தாலும் அவர்களை நம்மால் நிச்சயம் உணரமுடியும் என்பதற்கு வர்ஷினியும் ஸ்ரீ யுமே ஒரு எடுத்துக்காட்டு..

சுய உணர்வுகளற்று கிடந்த நிலையிலும் தன் தோழிக்கு மேலானவளின் உயிரற்ற ஸ்பரிசத்தை அவளால் சில கணங்கள் உணரமுடிகிறது என்றால் இவர்களின் அன்பு பிணைப்பை எந்த வார்த்தைகள் கொண்டு விளக்குவது..

அவளின் அசைவை பார்த்த ஸ்ரீ அவளின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவள் இனி வர்ஷினி குணமாகிவிடுவாள் என்ற நம்பிக்கையில் அவ்விடத்தை விட்டு சற்று லேசான மனதுடன் வெளியேறினாள் ஸ்ரீ.



இனி இக்கதையின் எபி வாரம் இருமுறை பதிவிடப்படும் மக்களே... கதையினைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇

 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
24058 24059.


அத்தியாயம் 7

ஐசியுவிலிருந்து வெளியேற நினைக்கையில் கதவின் வழியே ஊடுறுவி வந்தவள் மீண்டும் நிலையில்லாமல் கீழே விழுந்து விட்டாள் ஸ்ரீ. முன்பும் இருமுறை இப்படி தான் சென்றாள் அப்போதெல்லாம் விழவில்லையே என யோசித்தவள் அந்த நேரம் முழுகவனமும் வர்ஷினியை பார்க்கும் ஆவலால் கவனிக்காதது நினைவு வந்தது. இது ஏன் இப்படி இருக்கு என குழம்பி எழுந்தாள்

அப்போது அங்கு இருக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த வர்ஷினியின் பெற்றொரை பார்த்ததும் மீண்டும் மனம் கனத்தது.. அழுது அழுது ஓய்ந்தவர்கள் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அமர்ந்திருக்க அந்நேரம் சரியாக ஸ்ரீ யின் பெற்றோர்கள் அவருக்கு அழைக்க இவரும் மருத்துவமனை முகவரியை கூறி வரசொன்னார்.

இதை கேட்ட ஸ்ரீ அவர்களை பார்க்கும் ஆவலும் ஏக்கமும் மனதில் எழ அதை அடக்க வழி தெரியாமல் திணறினாள். இங்கு கலைச்செல்வியோ மேலும் அழ ராமநாதனுக்கும் மீண்டும் கண்கள் கலங்கியது.. சிறிது நேரம் அங்கேயே நின்றவள் ' உண்மை தெரிந்த பின் அவர்களின் நிலைமையை காணும் தைரியம் நிச்சயமாக தனக்கு இல்லை' என முடிவெடுத்தவள் மனதின் ஏக்கத்தை அங்கேயே புதைத்து விட்டு திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

நேரம் நள்ளிரவை தொட்டுக் கொண்டு இருக்க எங்கே செல்வது இனி என்ன செய்வது இந்நிலைக்கு ஒரு முடிவு இல்லையா என பலவாறு சிந்தித்தவள் இலக்கின்றி அந்த வெறிசோடிய சாலையில் மெரீனா கடற்கரையை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

அந்த இரவு நேரத்தில் ஆங்காங்கே சில விளக்குகள் மட்டுமே ஒளிர அங்கிருந்த நடைபாதையில் சிலர் உறங்க எங்கிருந்தோ கேட்ட நாயின் ஊளையிடும் சத்தத்தில் தன் யோசனையில் இருந்து களைந்தவள் சுற்றுப்புறத்தை கவனிக்க ஆரம்பித்தாள்.. வர்ஷினியுடன் ஊர் சுற்றிய போது இந்த இடத்தை பார்த்துள்ளாள்

இது மெரீனா கடற்கரை செல்லும் வழி என அறிந்தவள் கடற்கரை நோக்கி முன்னேறினாள்... அவளுக்கு இந்த இரவும் தனிமையும் ஒருவித பயத்தை உருவாக்க மனதினுள் நமச்சிவாய மந்திரத்தை உருப்போட்டுக் கொண்டு நடந்தாள். ஆங்காங்கே படுத்திருந்த சில நாய்கள் திடிரென்று குரைக்க அவளுக்கு சகலமும் ஆடிப்போனது.

பொதுவாக ஸ்ரீ க்கு நாய்கள் என்றாலே பயம்... இதில் இந்த நாய்கள் வேறு அவளைப் பார்த்து குரைத்து கொண்டே முன்னேற இவளோ தான் ஒரு ஆன்மா என்பதையும் மறந்து பயந்து நடுங்க ஆரம்பித்து விட்டாள். பின்னர் ஒரு வழியாக தைரியத்தை கூட்டி அங்கிருந்த வேகமாக நடந்தவள் அங்கு ஓரமாய் கரையில் நின்ற ஒரு படகின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

இருள் சூழ்ந்த அந்த சாமத்தில் கடல் அலைகளின் ஓசை மட்டுமே கேட்க அந்த கடலினை வெறித்துப் பார்த்தவள் அவள் வர்ஷினியுடன் இங்கு வந்தது நினைவில் ஆடியது. சென்னையில் அவளுக்கு மிகவும் பிடித்தமான இடம் இந்த கடற்கரை தான் அதனாலேயே வர்ஷினியை வற்புறுத்தி இங்கு பலதடவை அழைத்து வந்துள்ளாள். அவர்கள் இருவரும் இணைந்து இங்கு அலைகளில் ஆடியது நினைவு வர ஸ்ரீ க்கு கண்ணை கரித்துக் கொண்டு வந்தது.‌ இருந்தும் அந்நாட்களில் மகிழ்ச்சியை எண்ணி கண்மூடி நினைவு படுத்த அவளின் இதழ் ஓரம் புன்னகை அரும்பியது ..

மனதை சந்தோசமான தருணங்கள் மூலம் திடப்படுத்திக் கொண்டிருந்தாள். வாழ்க்கையில் நாம் சேர்க்கும் மிக பெரிய சொத்து நல்ல நினைவுகளே என்பதை ஸ்ரீ நன்றாக உணர்ந்திருந்தாள்..

குளிர்ச்சியான காற்று மெதுவாய் சீண்ட ஏனோ அவள் ஆன்மா சிலிர்த்து அடங்கியது..
அந்த கூதல் காற்றில் அவள் அமர்ந்திருந்த மணல் சற்று கிளம்ப தன் பின்னே கேட்ட காலடி சத்தத்தில் சர்வமும் அடங்கி போனது ஸ்ரீ க்கு அதுவும் நாய்கள் ஊளையிடும் சத்தம் வேறு அவளை பயமுறுத்தின அந்த இரவு நேர தனிமையும் கும்மிருட்டும் நடுங்க வைக்க பயந்து கொண்ட திரும்பிவள் பின்னால் நின்ற உருவத்தை பார்த்து 'வீல்...' என அலறினாள்..

------------------------------------------------------------

மின்னல் வேகத்தில் உள்ளே வந்த காரை பார்த்து மருத்துவமனை ஊழியர்களே சற்று மிரண்டு தான் போயினர்.. வண்டியை அதன் இடத்தில் நிறுத்திய விஷ்ணு வேகமாக இறங்க அவனைத் தொடர்ந்து மூர்த்தி, சித்ரா , கோபாலும் பதற்றத்துடன் இறங்கினர். மாலை மூர்த்திக்கு ஸ்ரீ க்கு சிறு விபத்து என அழைப்பு வர அதிர்ந்தனர். உடனே ராமநாதனுக்கு அழைக்க அவரும் அதையே உறுதி செய்தார். சின்ன காயம் தான் என கூறியிருந்தாலும் ஏனோ மனது பதறிக் கொண்டே இருந்தது‌.. தகவலை வீட்டில் சொன்னவுடன் அனைவரும் பதறி விட்டனர்.

அவர்களை சமாதானம் செய்து மூர்த்தி, சித்ரா, விஷ்ணு,கோபால் என நால்வரும் காரில் கிளம்பினர். அவர்களுடன் சவிதா மேடிட்ட வயிற்றுடன் ஐந்து மாத கருவை சுமந்து கொண்டு வருவதாய் அடம் பிடிக்க அவளை வற்புறுத்தி விட்டு விட்டு வந்தனர்..

மின்னல் வேகத்தில் விஷ்ணு வண்டியை ஓட்ட சாதரணமாக சென்னையை அடையும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்னதாக சென்னையை அடைந்திருந்தனர். மருத்துவமனையை அடைந்தவுடன் பெயரை சொல்லி விசாரித்தவர்கள் நேரே வர்ஷினி இருக்கும் ஐசியு வார்டு இருக்கும் தளத்தை அடைந்தனர்.

அங்கு ஒரு அறையின் முன்பு அமர்ந்து அழுது கொண்டு இருந்த வர்ஷினியின் பெற்றோரை கண்டவர்களுக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது... வேகமாக அவர்களை அடைந்து கோபால் ராமநாதன் தோளை தொட திரும்பி பார்த்தவர் நொடியும் தாமதிக்காமல் அவரை கட்டிக் கொண்டு கதற ஆரம்பித்துவிட்டார்..

அவரும் எவ்வளவு நேரம் தான் அழுகையை அடக்கி அவர் மனைவிக்கு ஆறுதல் சொல்ல முடியும் நண்பர் வந்தவுடன் தனக்கு ஆதரவாக எண்ணி அழுது விட்டார்.

அதைக் கண்ட ஸ்ரீ யின் பெற்றோர்களுக்கு நெஞ்சில் நீர் வற்றிப் போனது. கோபால் "என்னாச்சு டா .. ஸ்ரீ யும் வர்ஷினியும் எங்க .. அவங்களுக்கு ஒண்ணும் ஆகல தான்... சொல்லுடா என்னாச்சு.. எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு" என்று அவரை உலுக்கினார்.

அவரோ "நம்ம ஸ்ரீ நம்மல விட்டுட்டு போயிட்டாட " என்றார் அழுகையுடனே.. அதைக் கேட்ட நால்வரும் அவ்விடத்திலேயே உறைந்து விட்டனர்..

முதலில் சுயவுணர்வு பெற்ற சித்ரா "என்ன அண்ணா சொல்றீங்க .. கண்டிப்பா ஸ்ரீ க்கு எதுவும் ஆகியிருக்காது நீங்க வேணா பாருங்க என்னை பாத்ததும் அம்மானு சொல்லி என்னை வந்து கட்டிப்பிடிச்சுக்குவா" என கண்ணீருடன் பேச கலைச்செல்வியோ வேகமாக வந்து சித்ராவின் கையை பிடித்துக் கொண்டார். மூர்த்தியும் கோபாலும் கண்களில் கண்ணீரோடு நிற்க விஷ்ணுவோ நம்ப முடியாமல் "என்ன நடந்தது" என்றான்.

அங்கிருந்த கான்ஸ்டபிளும் நடந்ததை கூற விஷ்ணுவிற்கோ ஆத்திரம் தாளாமல் அங்கிருந்த சுவற்றில் ஓங்கி குத்தினான். கண்களில் இருந்து கண்ணீர் வழிய அதை துடைக்கும் எண்ணம் அற்று மொத்தமாய் நொருங்கி விட்டிருந்தனர்.

கான்ஸ்டபிளோ அவர்களை ஸ்ரீ யின் உடல் இருக்கும் அறைக்கு அனைவரையும் அழைத்து சென்றார். துணியை விலக்க ஸ்ரீ யின் உயிரற்ற உடலை கண்டவர்கள் உயிர் போகும் வலியை அனுபவித்தனர். சித்ராவோ " அய்யோ ஸ்ரீ உனக்கு என்னாச்சுமா... எந்திரிம்மா... ஒரே ஒரு முறை அம்மான்னு கூப்பிடுடா... " என அவளின் முகத்தை கையில் ஏந்தி கதற அங்கிருந்தவர்களுக்கு இதயத்தில் இரத்த கண்ணீர் வடிந்தது... அழுது அழுது ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்தம் தாங்காமல் சித்ரா மயக்கமடைய அவரை அங்கிருந்த நர்ஸ் மற்றும் கலைச்செல்வி தாங்கிக் கொண்டனர்.

ஆண்கள் மூவரும் மௌனமாய் கண்ணீர் வடிக்க அங்கிருந்த கான்ஸ்டபிள் அவர்களை வெளியில் அழைத்து வந்தார்.

அவர்கள் வருவதை பார்த்த மற்றுமொரு கான்ஸ்டபிள் அவர்களிடம் வந்தவர் ஃபார்மாலிட்டிஸ் முடிக்க வேண்டி ஸ்ரீ யின் பெற்றோர்களிடம் சில கையெழுத்துகள் வாங்கினர். மகளின் இழப்பில் துவண்டு இருந்தவர்கள் அதன்பின்னே வர்ஷினி யின் நினைவு வந்து விசாரிக்க அவளின் நிலைமையை எண்ணி மேலும் சோர்வுற்றனர்.

ஸ்ரீ வர்ஷினியிடம் பேசி சென்றவுடன் வர்ஷிக்கு நினைவு வர சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்தாள் அவளுக்கு ஸ்ரீ பேசியதும் அவளின் ஸ்பரிசமும் அந்நிலையிலும் மீண்டும் மீண்டும் நினைவு வர கடினப் பட்டு விழிகளை திறந்தாள்..

அப்போதுதான் உள்ளே வந்த நர்ஸ் அதைப் பார்த்து டாக்டரை அழைக்க வெளியில் இருந்தவர்கள் இன்னும் பயந்து விட்டனர். வர்ஷினியை பரிசோதித்த மருத்துவர் முகத்தில் ஒரு வித நிம்மதி ... வர்ஷினியோ தனக்கு சுவாசத்திற்காக பொருத்தப்பட்டிருந்த மாஸ்க்கையும் மீறி ' ஸ்ரீ ஸ்ரீ... 'என முணுமுணுத்தாள். மருத்துவர் அவளை ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம் எனக் கூறி இனி சுவாசக் கருவி தேவையில்லை என அதை அகற்றி விட்டு வெளியில் வந்தவர் பதற்றத்துடன் நின்றவர்களைப் பார்த்து புன்னகைத்தார்.

"வர்ஷினி கண் விழிச்சுட்டாங்க பை காட்ஸ் கிரேஸ்... இனி அவங்க குணமாகிடுவாங்க... அவங்க ஸ்ரீ ஸ்ரீ னு திரும்ப திரும்ப சொல்லட்டு இருக்காங்க ... இப்போதைக்கு எந்த அதிர்ச்சியான விசயத்தையும் அவங்க கிட்ட சொல்லாதிங்க..." என்றார்.

ராமநாதன் " டாக்டர் இப்போ நாங்க எங்க பொண்ண பார்க்கலாமா" என கேட்டார். " தாராளமா பார்க்கலாம்.. அவங்க முன்ன யாரும் அழாதிங்க தைரியம் தர மாதிரி பேசுங்க" என கூறி நர்ஸிடம் பார்த்து கொள்ள சொல்லி விட்டு சென்றார்.

ஐசியினுள் நுழைந்து அங்கு தலையிலும், கை கால்களில் கட்டுகளுடன் கிழிந்த நாறாய் கிடந்த வர்ஷினியை கண்டவர்களுக்கு தங்களையும் மீறி கண்ணீர் சுரந்தது.. அவள் அருகில் சென்ற கலைச்செல்வி அவளுக்கு ஆறுதல் சொல்ல போகும் முன் அவளே "மா.. ஸ்ரீ எங்க...ம்மா ... இவ்வளவு நேரம் .... இங்கதான் இருந்தா... கண்விழித்து பார்த்தால் காணோம்... அவளை கூப்புடு ...மா... " என திக்கி திக்கி கேட்க அவள் பேசுவதை கேட்ட மூர்த்தி கோபால் மற்றும் சித்ரா அதற்குமேல் முடியாமல் அழுகையுடனே வெளியேறினர்..

விஷ்ணு மட்டும் அங்கேயே அழுகையை கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான்.. ஏனெனில் அவனுக்கு வர்ஷினியிடம் விபத்து பற்றி கேட்க வேண்டி இருந்தது.. இந்நிலையில் அவளால் கூற முடியாது என்று தெரிந்தும் அவனுக்கு தன் தங்கையின் நிலைமைக்கு காரணமானவர்களை உருத் தெரியாமல் அழிக்க வேண்டியிருந்தது.

அவர்கள் அழுது கொண்டே வெளியேறியதை கண்டவள் குழம்பிய முகத்துடன் தன் தந்தையை காண அவரோ "ஸ்ரீ க்கு ஒண்ணுமில்லை டா அவ பக்கத்துல தான் ரெஸ்ட் எடுக்கறா..‌நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்க வேணாம் ரெஸ்ட் எடு என்றார்.." என்றார். விஷ்ணு முன்னே வந்து " ஆர் யூ ஓக்கே" என்க அவளும் ம் என தலையசைக்க விஷ்ணு மேற்க் கொண்டு " என்னம்மா ஆச்சு" என்றான்.

"அண்ணா நாங்க மெதுவா தான் வண்டியை ஓட்டினோம் அந்த கார் தான் வேகமாக வந்து இடிச்சது.. இடிச்சதும் இல்லாம நிற்க கூட இல்லை... கருப்பு கலர் ஃபெராரி கார்னு நினைக்குறேன்." என தட்டுத் தடுமாறி கூற அவனும் இது போதும் என எண்ணி வர்ஷினி யை ஓய்வெடுக்க கூறி விட்டு வெளியே வந்தான். அங்கிருந்த கான்ஸ்டபிளிடம் விவரம் கூற அவர் உடனே இன்ஸ்பெக்டர்க்கு தகவல் கூறினார்..

அவருக்கோ இந்த விபத்தின்பின் சற்று அருகிலேயே இன்னொரு விபத்து ஏற்பட்டு இருக்க அதுவும் சற்று பெரிய இடமாக இருக்க நேரே சென்று விசாரிக்க வேண்டிய சூழ்நிலை எனவே கன்ட்ரோல் ரூமிற்கு தகவல் கூறிவிட்டு இவர் வேலையை தொடர்ந்தார்.

இங்கு விஷ்ணுவிற்கு நிலைகொள்ள முடியவில்லை அழுது அழுது ஓய்ந்து போன பெரியவர்களைக் கண்டு அவன் தற்போது நிலைமையை கையில் எடுத்துக் கொண்டான். ஊரில் மற்ற சித்தப்பாக்களிடம் அலைபேசியில் நடந்ததை கூறி பிற ஏற்பாடுகள் செய்ய சொன்னான்..

அந்த நள்ளிரவு நேரத்தில் அந்த கிராமமே ஸ்ரீ வீட்டின் கதறலில் விழித்துக் கொண்டது. இங்கு இன்ன‌ பிற நடைமுறைகளை முடித்து காலை எட்டு மணியளவில் ஸ்ரீ யின் உடலை ஒப்படைப்பதாய் இருந்தது..

ராமிற்கும் ரவிக்கும் தகவல் சொல்லப்பட அவர்களும் அடுத்த விமானத்தில் கிளம்பியிருந்தனர். ரவிக்கு இந்த வாரத்துடன் பயிற்சி முடியவுல்ல நிலையில் அவன் தன் மேல் அதிகாரியிடம் அனுமதி பெற்று உடனே கிளம்பியிருந்தான்.அடுத்தநாள் காலை எட்டு மணிவாக்கில் ஸ்ரீ யின் உடல் தன் சொந்த ஊரை நோக்கி ஆம்புலன்ஸில் பயணப்பட்டது...

எவ்வளவு ஆவலாக தன் சொந்த ஊர் செல்லும் நாளிற்காக காத்திருந்தாள் ஆனால் இப்படி அவள் செல்வதை யார் தான் கற்பனை செய்திருப்பார்கள்.... நாம் அன்றாடம் வாழ்வில் எவ்வளவோ விபத்தைக் கடந்து வந்திருப்போம் சிலர் விபத்திற்கு காரணமாகவும் இருந்திருப்பார்கள் அவர்கள் செய்யும் தவறினால் ஸ்ரீ போன்ற எத்தனையோ குடும்பம் தவறே செய்யாத தம் குடும்பத்தினரை இழந்து வாழ்கின்றனர். இழப்பிலேயே பெரிய இழப்பு, சோகம் புத்திர சோகம்.. தாம் உயிருடன் நன்றாய் இருக்கும் போது தன்னுடைய இரத்தம் வாழும் முன்பே மரணிப்பது எவ்வளவு பெரிய கொடுமை ...‌
----------------------------------------------------------
அந்த நடுசாம நேரத்தில் ...

ஆந்தைகள் ஒருபுறம் அலற அந்த அடர்ந்த மனித வாசனை அறியா இருள் சூழ்ந்த காட்டில் பெயரறிய ஜீவராசிகள் ஏதோ ஆபத்தை உணர்ந்து கத்த அந்த‌ இடமே அகோரமான பிம்பத்தை உருவாக்கியது....

நிலவொளியோ அந்த காட்டினுள் நுழைய முயற்சித்து லட்சத்தியொரு முறையாக தோல்வியை தழுவ மை இருட்டின் நடுவே திடிரென்று விழித்த ஒரு ஜோடி சிவப்பு நிறக் கண்கள் மட்டும் தன் இத்தனை வருட காத்திருப்பின் பலனாய் கிடைக்கப் போகும் இரையை எண்ணி மகிழ்வில் மின்னி பளபளத்தன.


உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே 👇👇

 
Status
Not open for further replies.
Top