AnuCharan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16
அன்றிரவே ரவி தர்மபுரி கிளம்பியிருந்தான். அவனுடன் ராம் மற்றும் விஷ்ணு வும் உடன் வருவதாய் கூற அவர்களும் பொள்ளாச்சியிலிருந்து கிளம்பியிருந்தனர்.
தன் நண்பனின் மூலம் இன்ஸ்பெக்டரின் தற்போதைய பணியிடத்தை அறிந்த ரவி அன்றே கிளம்பி விட்டான். அடுத்த நாள் காலை மூவரும் ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துவிட்டு அவர் பணியாற்றும் காவல் நிலையத்திற்கு சென்றனர். ரவி நேரே உள்ளே சென்றவன் இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என கூற அங்கிருந்த கான்ஸ்டபிளும் அவரின் அறையைக் காட்டிவிட்டு ஒதுங்கி கொண்டார். அனுமதி பெற்று உள்ள வந்த மூவரையும் பார்த்த சேகருக்கு அடையாளம் தெரியாமல் புருவம் சுருக்கி யோசித்தவர் " யார் நீங்க " எனக் கேட்க
ரவி " ஐ அம் ரவிக்குமார் ஐபிஎஸ் அசிஸ்டன்ட் கமிஷ்னர் சென்னை சிட்டி. இப்போ அன்அபிசியலா ஒரு கேஸ் விசயமா உங்ககிட்ட விசாரிக்கலாம்னு வந்துருக்கோம். இது ராம் அண்ட் விஷ்ணு என்னோட பிரதர்ஸ்." என தன் அடையாள அட்டையைக் காண்பிக்க சேகரோ சட்டென இருக்கையை விட்டு எழுந்தவர் அவனுக்கு சல்யூட் அடித்தார்.
அதை ஏற்றவன் அவரை அமர சொல்ல அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் மூவரும் அமர்ந்து கொண்டனர். " சொல்லுங்க சார் எந்த கேஸ் பத்தி கேட்கணும்" சேகர்.
"நீங்க டிரான்ஸ்பர் ஆகி வர்றதுக்கு முந்தின நாள் உங்க ஏரியால ரெண்டு பொண்ணுங்க வந்த டூவீலர் ஆக்ஸிடென்ட் கேஸ். ஒரு பொண்ணு ஸ்பாட் அவுட் ..." ரவி.
"ஆமா சார் அதுதான் என்னோட லாஸ்ட் கேஸ் . அடுத்த நாளே என்ன டிரான்ஸ்ஃபர் பண்ணீட்டாங்க சார். என்னோட பொண்ணு வயசு தான் சார் அந்த இறந்த பொண்ணுக்கு ..அந்த பொண்ணுக்கு கண்ணுல அவ்வளவு உயிரோட்டம் சார் " இன்னும் அவரால் அந்த இமைக்காத விழிகளை மறக்க முடியாமல் தற்போதும் அவர் கண்களில் வலியைக் கண்ட மூவருக்கும் நெஞ்சில் சுருக்கென வலி உருவானது. .
“ அந்த பொண்ணு எங்களோட சிஸ்டர் தான் அவங்க டூவீலர் பிரேக் இல்லாம தான் ஆக்சிடென்ட் ஆனதா கேஸ் கிளோஸ் பண்ணிருக்காங்க அன்னைக்கு ஸ்பாட்ல என்ன நடந்தது சேகர்”
“அன்னைக்கு விபத்து நடந்த அப்போ பக்கத்துல தான் நானும் இன்னொரு கான்ஸ்டாப்பிலும் ரௌண்ட்ஸ்ல இருந்தோம் சார் . தகவல் கிடச்ச கொஞ்ச நேரத்துலேயே நாங்க அங்க போய்ட்டோம். நாங்க போன உடனேயே அம்புலனசும் வந்துருச்சு. ரோடு சைடு இருக்க நடை பாதைல அந்த பொண்ணோட தல மோதினதால ஸ்பாட்லேயே டெத் சார் வண்டி ஓட்டுன இன்னொரு பொண்ணு கால் வண்டில மாட்டி இழுத்துட்டு போனதால கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன்ல இருந்தாங்க அவங்கள ஆம்புலன்ஸ்ல கான்ஸ்டாபில் கூட அனுப்பிட்டு நா அந்த ஏரியால விசாரிக்கும் போது ஒரு பிளாக் கலர் கார் தான் இடுச்சதா சொன்னாங்க சார் ஸ்டேஷன் கால் பண்ணி கேஸ் பைல் பண்ண சொல்லிட்டு கன்ட்ரோல் ரூம்க்கு வண்டி டீடெயில்ஸ் பார்வேர்ட் பண்ணேன் மேற்கொண்டு விசாரிக்கறதுக்குள்ள என்னை டிரான்ஸபர் பண்ணிட்டாங்க அடுத்த ரெண்டு நாளும் அங்க நா டியூட்டி லேயே இல்லை சார்” என்க
“நீங்க மேல எதுவும் விசாரிக்கலயா ஐ மீன் கார் மோதினதுக்கான எவிடென்ஸ் ஏதும் இல்லையா” ரவி.
“அப்டி ஏதும் இல்லை சார் நா அந்த கேஸ் பத்தி விசாரிக்கும் முன்னவே பக்கத்துல இன்னொரு அச்சிடேன்ட்ன்னு எனக்கு கால் வந்தது அங்க நா கெளம்பிட்டேன் சார்” சேகர்..
“அது என்ன கேஸ்”
“அது விபத்து நடந்த பகுதில இருந்து ரெண்டு ஏரியா தள்ளி பாண்டிச்சேரி மெயின் ரோடுல கன்டைனர்ல கார் மோதிருச்சு சார் ட்ரின்க் அண்ட் டிரைவ் கேஸ் சார்”
“என்ன கார்”
“ப்ளாக் கலர் பெர்ராரி கார் சார்” சேகர்
“இந்த கேஸ் பத்தி விசாரிக்கும் பொது உங்களுக்கு மிரட்டலோ இல்லை வேற மாதிரியான திரேட் கால்ஸ் ஏதும் வந்ததா” ரவி
“நோ சார்” சேகர்.
“ஓகே அந்த அச்சிடேன்ட் கேஸ் யாரு விசாரிச்சது” ரவி
“அது பக்கத்துக்கு ஏரியா இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சவரு தான் சார் ஹெல்ப் காக கூப்டாரு... கன்டைனர் டிரைவர் சரண்டர் ஆகிட்டான் சார் கார் ல இருந்தவங்க சீரியஸ் கண்டிஷன் னு சொன்னா சார் அப்புறம் கொஞ்ச நேரத்துலயே எனக்கு டிரான்ஸபெர்ன்னு சொல்லி கால் வந்து நா கெளம்பிடேன் சார்”
“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி சேகர்” ரவி என்றவன் அவருக்கு கை குலுக்கி விட்டு வெளியில் மூவரும் வந்தனர்.
“என்ன ரவி இவருகிட்ட இருந்து எந்த தகவலும் சரியா கிடைக்கல” விஷ்ணு.
“இல்லை விஷ்ணு நிறைய க்ளூ நமக்கு கெடச்சுருக்கு அவரு சொல்றத பார்த்தா இடிச்சது கண்டிப்பா கார் தான் ஏன்ன ஸ்பாட் ல இருந்தவங்க உடனே மாத்தி சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை அதுக்கு அடுத்த நாள் தான் யாரோ மாத்தி சொல்ல வச்சிருக்கணும்” ரவி.
“கரெக்ட் ரவி அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா வர்ஷினி சொல்றத பார்த்தா அவங்கள இடிச்சது பிளாக் கலர் பெர்ராரி அச்சிடேன்ட் ப்ளஸ்ல இருந்து கொஞ்ச தூரத்துல நடந்த விபத்துலயும் பிளாக் கலர் பெர்ராரி ஏன் அந்த கார் தான் இந்த கார் ஆஹ் இருக்க கூடாது அண்ணா” என்று ராம் தன் சந்தேகத்தை கூற மற்ற இருவரும் திகைத்து அவனை பார்த்தனர்...
----------------------------------------------------------------------------------
ஆறடி உயரமும் கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்டு வசீகரிக்கும் நீலநிற விழிகளால் தன்னை ஆராய்ச்சி பார்வை பார்த்து நிற்கும் ஆருஷி கண்டவளுக்கு 'யாரிவன் ? எதற்கு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்' என நினைத்தவள் மீண்டும் அவன் விழிகளை நோக்க அதில் என்ன கண்டாளோ சில நிமிடங்கள் அதில் கண்டுண்டவள் போல் அசையாது அதிர்ச்சியில் திறந்த வாய் மூடாது நின்றாள்..
அவனோ அவளின் நிலையில் மனதினுள் குளிர்ந்து முகத்தில் எதுவும் காட்டாது சற்றென்று அவளை பார்த்து கண் சிமிட்டினான். அவனின் செயலில் தன் நிலை அடைந்தவள் 'யப்பா..என்ன கண்ணுடா இது .. அப்படியே அதுக்குள்ள மூழ்கிருவேன் போல' என மனதினுள் பேசியவள் வெளியில் அசடு வழிய சிரித்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
'அய்யோ ஸ்ரீ மிட்டாய் கடைய பார்க்குற மாதிரி இப்பிடியா ஆ னு பார்த்து வைப்ப' என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் மீண்டும் அடுத்தடுத்த கேக்கை ரசிப்பது போல அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.
அவளின் செயலையும் முகமாற்றத்தையும் கண்டவனுக்கு இதழ் ஓரம் புன்னகை அரும்பியது.அவள் அந்த இடத்தைவிட்டு நகர்வதை உணர்ந்தவன் காற்றுக்கும் வலிக்கும் என மெல்லிய உயிர் உருக்கும் குரலில் "ஸ்ரீ..." என அழைக்க அவளின் நடை தடைபட்டது.
அவனின் குரலில் ஏதோ செய்ய 'என் பேரு எப்படி தெரியும்' எனும் கேள்வி கணைகளை கண்ணில் கொண்டு ஸ்ரீ அவனை திரும்பி பார்த்தாள்.
அதை புரிந்து கொண்டவன் போல் ஸ்ரீ அருகில் சென்று "ஐ யம் ஆருஷி " என கையை நீட்ட அவளோ அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு 'பேரப் பாரு ஆரு குளம்னு ' என முணுமுணுத்து விட்டு மீண்டும் அவ்விடத்தை விட்டு நகர முயல அவனுக்கோ அவளின் செயலில் சட்டென கோபம் வர இருந்தும் பொறுமையை கையாண்டான்.
அவனுக்கோ இன்னும் நான்கு நாட்களில் அவளை வெளிச்சத்திற்கு அனுப்ப வேண்டும் இல்லையெனில் அந்த அரக்கனிடம் மாட்டிக் கொள்வாள். எனவே எப்படி அவளிடம் நெருங்குவது என அறியாது முழித்து கொண்டிருந்தான். அதுவும் அவளின் மரணத்திற்கு காரணமானவனே அவளைக் காக்க வந்துள்ளதாய் கூறினால் ஸ்ரீ எப்படி ஏற்றுக் கொள்வாள் எப்படி நடந்ததை புரிய வைப்பது சொன்னாலும் அதையெல்லாம் நம்புவாளா என ஏகப்பட்ட குழப்பத்திற்கு மத்தியில் தான் அவன் பேசியது ஆனால் அவளோ பேச விருப்பம் இல்லாது போல் ஒதுங்கி போவது கோபத்தைத் தந்தாலும், காதல் கொண்ட மனமோ அவளின் ஒவ்வொரு அசைவையும் உணர்ச்சியையும் உள்ளக்கிடங்கில் பொக்கிஷம் போல் சேர்த்து வைக்கிறது.
வாழ்நாளிலேயே அவளுடன் களிக்கும் பொழுதுக்காக அவன் எத்தனை இரவுகளில் கனவு கண்டிருக்கிறான் ஆனால் அவையெல்லாம் கனவாய் மாறிப்போக வரம் போல் கிடந்த இந்த நான்கு நாட்களும் அவளுடனான இனிமையான தருணங்களாக மாற்றவே அவனுக்கு மிகுந்த பேராவல். இருந்தும் மனமோ அவளின் பாதுகாப்பையே முதன்மையாய் நிறுத்த அவளுக்கான பாதுகாவலாய் தான் மாறிப் போனான்.
அந்நேரம் என ஒரு பெண் ஸ்ரீ யின் ஆன்மாவை ஊடுருவி சொல்ல அவளோ ஒரு நிமிடம் நிலையில்லாது கீழே அமர்ந்து விட்டாள். அதைக் கண்ட ஆருஷியோ அவளின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவ முன்வர அவளோ அதைத் தடுத்து எழுந்தவள்
"ச்ச அடிக்கடி இப்படித் தான் ஆகுது என்னன்னே தெரியல" என முணுத்தவள் அவ்விடம் விட்டு செல்ல முயல
ஆருஷியோ " உன்னோட மனசு வீக்கா ஒரு நிலையில்லாம இருந்தா இப்படி தான் நடக்கும்" என்க அவளின் நடை ஒரு நிமிடம் தடைபட்டது.
ஸ்ரீ " என்ன சொல்றீங்க எனக்கு எதுவும் புரியல " என வினவ ஆருஷி அவள் அருகில் வந்தவன் " இந்த மாதிரி நிலையில மனசு ஒரு நிலையில் இல்லாம குழப்பத்திலையோ இல்லை பயத்துலையோ இருந்தா நம்மால திடப் பொருட்களை தொடவோ அல்லது அதனை ஊடுருவவோ முடியாது" என விளக்க இன்னும் ஸ்ரீ முகத்தில் தெளிவில்லாததை உணர்ந்தவன் மேலும் தொடர்ந்தான்
"என்னுடன் வா" என அருகில் உள்ள சுவர் பக்கம் ஸ்ரீ யை அழைத்து சென்றவன் தன் கைகளை அந்த சுவற்றில் வைத்து அழுத்த அவனின் கைகளோ சுவற்றை ஊடுருவிச் சென்றது.
"ஸ்ரீ இப்போ உன்னோட கையை சுவற்றில் வை " எனக் கூற அவளும் அவன் கூறியதை செய்ய "இப்போ உன்னோட கைக்கு அழுத்தம் குடு " என்க அவளும் அதேபோல் செய்ய என்ன ஆச்சரியம் ஸ்ரீ யினது கைகள் அந்த சுவற்றை ஊடுருவிச் செல்லாமல் காற்றில் கரைந்து மீண்டும் சேர்ந்தது.
இதைக் கண்டவள்"ஏன் இப்படி நடக்குது ஒவ்வொரு முறை மனிதர்கள் என்னை ஊடுருவி போகும் போது இப்படி தான் நா கீழ விழுந்தறேன்" என கேள்வியாய் அவனிடம் சொல்ல
"நம்மோட ஆன்மா காற்றால உருவாகிறது சோ காற்றால் திட பொருட்களை ஊடுறுவ முடியாது ஆனா நம்மால அத ஊடுறுவ முடியும்"என்க ஸ்ரீ யோ அவனின் விளக்கத்தில் இமை மூடாது அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இங்க பாரு மொதல்ல நீ மனச குழப்பிக்காம எதை பத்தியும் யோசிக்காம மனச ஒரு நிலை படுத்து மனசுல எப்பவும் சந்தோஷமான விஷயத்தை தான் நெனச்சுக்கணும் புரியுதா நெகடிவ் ஆ எதையும் நெனைக்க கூடாது ஓகே" என கூற அவளும் சம்மதமாய் தலையாட்டியவள் ஒரு நிமிடம் கண் மூடி ஆழ்ந்த மூச்செடுக்க அவளுக்கோ நள்ளிரவில் நடந்த சம்பவமே நினைவுக்கு வர சட்டென விழி திறந்தவளுக்கு பயம் மட்டுமே எஞ்சி இருந்தது பாவமாய் ஆருஷியை பார்த்தாள்.
அவனுக்கு அவளின் நிலை புரிந்தாலும் வேறு வழி இல்லை அவள் பயத்தை விட்டு தனியாய் போராட வேண்டிய சூழ்நிலை எனவே விடாது அவளிடம் "ஸ்ரீ உன்னோட வாழ்க்கைல நடந்த நல்ல விஷயம் இல்லை ரொம்ப சந்தோசமா இருந்த நாட்களை உன் மனசுல நெனச்சுக்கோ" என ஊக்கப்படுத்த மீண்டும் கண்களை மூடி அவள் வாழ்நாளில் நடந்த அனைத்து சந்தோஷமான தருணங்களையும் மீட்டியவள் இறுதியாய் அவளின் கண்முன் அவளவனுடன் கனவில் பைக்கில் சென்ற நினைவும் கண் முன் வர அதை ஆழ்ந்து அனுபவித்து கண் விழித்தாள். இப்பொது அவள் கண்ணில் பயமோ இல்லை குழப்பமோ இல்லாமல் இருக்க அந்த சுவற்றில் கை வைத்து அழுத்தம் கொடுத்தாள் என்ன ஆச்சர்யம் அவளின் கை அந்த சுவற்றில் அனாயசமாக ஊடுருவி அடுத்த பக்கம் சென்றது அதை உணர்ந்தவள் மிகுந்த மகிழ்ச்சில் ஆருஷியை பார்க்க அவனும் அவளைத் தான் கண்ணில் காதல் மிகப்பார்த்துக் கொண்டிருந்தான்
அவனின் பார்வையின் பொருளை உணராதவள் "ஏன் நாம் ஆன்மாவா இருக்கோம் இந்த நிலைக்கு ஒரு முடிவு இல்லையா" என கேட்க ஆருஷியோ " இருக்கு " என்றவன் சித்தர் கூறியவற்றில் ஆன்மாவை பற்றி மட்டும் ஸ்ரீ க்கு விளக்கினான். மேலும் ஆதிலிங்கம் பற்றியும் அவளின் பிறப்பின் ரகசியம் மற்றும் அவளின் மரணத்திற்கான காரணம் என அனைத்தையும் கூறினால் எங்கே குழம்பிவிடுவாளோ என எண்ணியவன் நேரம் வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
குறைந்தது அவளின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்பதையாவது அவன் கூறியிருக்கலாம் அதனால் பின்னால் நடக்கவிருக்கும் விபரிதங்களை உணராமல் போனான்.. ஸ்ரீ யுடன் இனிமையான நினைவுகளை சேர்க்க நினைத்தவனுக்கு அவளுக்கு உண்மை தெரிந்தபின் அவளுடைய செயலில் தன் உயிர் போகும் வலியை விட அதிக வலியை அனுபவிக்க போவதை இப்போதே தவிர்த்திருக்கலாம். விதி வலியது...
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே.....
கதை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே
என்றும் அன்புடன் உங்கள்
Anucharan
அன்றிரவே ரவி தர்மபுரி கிளம்பியிருந்தான். அவனுடன் ராம் மற்றும் விஷ்ணு வும் உடன் வருவதாய் கூற அவர்களும் பொள்ளாச்சியிலிருந்து கிளம்பியிருந்தனர்.
தன் நண்பனின் மூலம் இன்ஸ்பெக்டரின் தற்போதைய பணியிடத்தை அறிந்த ரவி அன்றே கிளம்பி விட்டான். அடுத்த நாள் காலை மூவரும் ஒரு ஹோட்டலில் காலை உணவை முடித்துவிட்டு அவர் பணியாற்றும் காவல் நிலையத்திற்கு சென்றனர். ரவி நேரே உள்ளே சென்றவன் இன்ஸ்பெக்டரை பார்க்க வேண்டும் என கூற அங்கிருந்த கான்ஸ்டபிளும் அவரின் அறையைக் காட்டிவிட்டு ஒதுங்கி கொண்டார். அனுமதி பெற்று உள்ள வந்த மூவரையும் பார்த்த சேகருக்கு அடையாளம் தெரியாமல் புருவம் சுருக்கி யோசித்தவர் " யார் நீங்க " எனக் கேட்க
ரவி " ஐ அம் ரவிக்குமார் ஐபிஎஸ் அசிஸ்டன்ட் கமிஷ்னர் சென்னை சிட்டி. இப்போ அன்அபிசியலா ஒரு கேஸ் விசயமா உங்ககிட்ட விசாரிக்கலாம்னு வந்துருக்கோம். இது ராம் அண்ட் விஷ்ணு என்னோட பிரதர்ஸ்." என தன் அடையாள அட்டையைக் காண்பிக்க சேகரோ சட்டென இருக்கையை விட்டு எழுந்தவர் அவனுக்கு சல்யூட் அடித்தார்.
அதை ஏற்றவன் அவரை அமர சொல்ல அவருக்கு எதிரில் இருந்த இருக்கையில் மூவரும் அமர்ந்து கொண்டனர். " சொல்லுங்க சார் எந்த கேஸ் பத்தி கேட்கணும்" சேகர்.
"நீங்க டிரான்ஸ்பர் ஆகி வர்றதுக்கு முந்தின நாள் உங்க ஏரியால ரெண்டு பொண்ணுங்க வந்த டூவீலர் ஆக்ஸிடென்ட் கேஸ். ஒரு பொண்ணு ஸ்பாட் அவுட் ..." ரவி.
"ஆமா சார் அதுதான் என்னோட லாஸ்ட் கேஸ் . அடுத்த நாளே என்ன டிரான்ஸ்ஃபர் பண்ணீட்டாங்க சார். என்னோட பொண்ணு வயசு தான் சார் அந்த இறந்த பொண்ணுக்கு ..அந்த பொண்ணுக்கு கண்ணுல அவ்வளவு உயிரோட்டம் சார் " இன்னும் அவரால் அந்த இமைக்காத விழிகளை மறக்க முடியாமல் தற்போதும் அவர் கண்களில் வலியைக் கண்ட மூவருக்கும் நெஞ்சில் சுருக்கென வலி உருவானது. .
“ அந்த பொண்ணு எங்களோட சிஸ்டர் தான் அவங்க டூவீலர் பிரேக் இல்லாம தான் ஆக்சிடென்ட் ஆனதா கேஸ் கிளோஸ் பண்ணிருக்காங்க அன்னைக்கு ஸ்பாட்ல என்ன நடந்தது சேகர்”
“அன்னைக்கு விபத்து நடந்த அப்போ பக்கத்துல தான் நானும் இன்னொரு கான்ஸ்டாப்பிலும் ரௌண்ட்ஸ்ல இருந்தோம் சார் . தகவல் கிடச்ச கொஞ்ச நேரத்துலேயே நாங்க அங்க போய்ட்டோம். நாங்க போன உடனேயே அம்புலனசும் வந்துருச்சு. ரோடு சைடு இருக்க நடை பாதைல அந்த பொண்ணோட தல மோதினதால ஸ்பாட்லேயே டெத் சார் வண்டி ஓட்டுன இன்னொரு பொண்ணு கால் வண்டில மாட்டி இழுத்துட்டு போனதால கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன்ல இருந்தாங்க அவங்கள ஆம்புலன்ஸ்ல கான்ஸ்டாபில் கூட அனுப்பிட்டு நா அந்த ஏரியால விசாரிக்கும் போது ஒரு பிளாக் கலர் கார் தான் இடுச்சதா சொன்னாங்க சார் ஸ்டேஷன் கால் பண்ணி கேஸ் பைல் பண்ண சொல்லிட்டு கன்ட்ரோல் ரூம்க்கு வண்டி டீடெயில்ஸ் பார்வேர்ட் பண்ணேன் மேற்கொண்டு விசாரிக்கறதுக்குள்ள என்னை டிரான்ஸபர் பண்ணிட்டாங்க அடுத்த ரெண்டு நாளும் அங்க நா டியூட்டி லேயே இல்லை சார்” என்க
“நீங்க மேல எதுவும் விசாரிக்கலயா ஐ மீன் கார் மோதினதுக்கான எவிடென்ஸ் ஏதும் இல்லையா” ரவி.
“அப்டி ஏதும் இல்லை சார் நா அந்த கேஸ் பத்தி விசாரிக்கும் முன்னவே பக்கத்துல இன்னொரு அச்சிடேன்ட்ன்னு எனக்கு கால் வந்தது அங்க நா கெளம்பிட்டேன் சார்” சேகர்..
“அது என்ன கேஸ்”
“அது விபத்து நடந்த பகுதில இருந்து ரெண்டு ஏரியா தள்ளி பாண்டிச்சேரி மெயின் ரோடுல கன்டைனர்ல கார் மோதிருச்சு சார் ட்ரின்க் அண்ட் டிரைவ் கேஸ் சார்”
“என்ன கார்”
“ப்ளாக் கலர் பெர்ராரி கார் சார்” சேகர்
“இந்த கேஸ் பத்தி விசாரிக்கும் பொது உங்களுக்கு மிரட்டலோ இல்லை வேற மாதிரியான திரேட் கால்ஸ் ஏதும் வந்ததா” ரவி
“நோ சார்” சேகர்.
“ஓகே அந்த அச்சிடேன்ட் கேஸ் யாரு விசாரிச்சது” ரவி
“அது பக்கத்துக்கு ஏரியா இன்ஸ்பெக்டர் எனக்கு தெரிஞ்சவரு தான் சார் ஹெல்ப் காக கூப்டாரு... கன்டைனர் டிரைவர் சரண்டர் ஆகிட்டான் சார் கார் ல இருந்தவங்க சீரியஸ் கண்டிஷன் னு சொன்னா சார் அப்புறம் கொஞ்ச நேரத்துலயே எனக்கு டிரான்ஸபெர்ன்னு சொல்லி கால் வந்து நா கெளம்பிடேன் சார்”
“உங்க ஒத்துழைப்புக்கு ரொம்ப நன்றி சேகர்” ரவி என்றவன் அவருக்கு கை குலுக்கி விட்டு வெளியில் மூவரும் வந்தனர்.
“என்ன ரவி இவருகிட்ட இருந்து எந்த தகவலும் சரியா கிடைக்கல” விஷ்ணு.
“இல்லை விஷ்ணு நிறைய க்ளூ நமக்கு கெடச்சுருக்கு அவரு சொல்றத பார்த்தா இடிச்சது கண்டிப்பா கார் தான் ஏன்ன ஸ்பாட் ல இருந்தவங்க உடனே மாத்தி சொல்றதுக்கு வாய்ப்பு இல்லை அதுக்கு அடுத்த நாள் தான் யாரோ மாத்தி சொல்ல வச்சிருக்கணும்” ரவி.
“கரெக்ட் ரவி அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா வர்ஷினி சொல்றத பார்த்தா அவங்கள இடிச்சது பிளாக் கலர் பெர்ராரி அச்சிடேன்ட் ப்ளஸ்ல இருந்து கொஞ்ச தூரத்துல நடந்த விபத்துலயும் பிளாக் கலர் பெர்ராரி ஏன் அந்த கார் தான் இந்த கார் ஆஹ் இருக்க கூடாது அண்ணா” என்று ராம் தன் சந்தேகத்தை கூற மற்ற இருவரும் திகைத்து அவனை பார்த்தனர்...
----------------------------------------------------------------------------------
ஆறடி உயரமும் கட்டுமஸ்தான உடலமைப்பும் கொண்டு வசீகரிக்கும் நீலநிற விழிகளால் தன்னை ஆராய்ச்சி பார்வை பார்த்து நிற்கும் ஆருஷி கண்டவளுக்கு 'யாரிவன் ? எதற்கு என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறான்' என நினைத்தவள் மீண்டும் அவன் விழிகளை நோக்க அதில் என்ன கண்டாளோ சில நிமிடங்கள் அதில் கண்டுண்டவள் போல் அசையாது அதிர்ச்சியில் திறந்த வாய் மூடாது நின்றாள்..
அவனோ அவளின் நிலையில் மனதினுள் குளிர்ந்து முகத்தில் எதுவும் காட்டாது சற்றென்று அவளை பார்த்து கண் சிமிட்டினான். அவனின் செயலில் தன் நிலை அடைந்தவள் 'யப்பா..என்ன கண்ணுடா இது .. அப்படியே அதுக்குள்ள மூழ்கிருவேன் போல' என மனதினுள் பேசியவள் வெளியில் அசடு வழிய சிரித்துவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.
'அய்யோ ஸ்ரீ மிட்டாய் கடைய பார்க்குற மாதிரி இப்பிடியா ஆ னு பார்த்து வைப்ப' என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள் மீண்டும் அடுத்தடுத்த கேக்கை ரசிப்பது போல அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றாள்.
அவளின் செயலையும் முகமாற்றத்தையும் கண்டவனுக்கு இதழ் ஓரம் புன்னகை அரும்பியது.அவள் அந்த இடத்தைவிட்டு நகர்வதை உணர்ந்தவன் காற்றுக்கும் வலிக்கும் என மெல்லிய உயிர் உருக்கும் குரலில் "ஸ்ரீ..." என அழைக்க அவளின் நடை தடைபட்டது.
அவனின் குரலில் ஏதோ செய்ய 'என் பேரு எப்படி தெரியும்' எனும் கேள்வி கணைகளை கண்ணில் கொண்டு ஸ்ரீ அவனை திரும்பி பார்த்தாள்.
அதை புரிந்து கொண்டவன் போல் ஸ்ரீ அருகில் சென்று "ஐ யம் ஆருஷி " என கையை நீட்ட அவளோ அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்து விட்டு 'பேரப் பாரு ஆரு குளம்னு ' என முணுமுணுத்து விட்டு மீண்டும் அவ்விடத்தை விட்டு நகர முயல அவனுக்கோ அவளின் செயலில் சட்டென கோபம் வர இருந்தும் பொறுமையை கையாண்டான்.
அவனுக்கோ இன்னும் நான்கு நாட்களில் அவளை வெளிச்சத்திற்கு அனுப்ப வேண்டும் இல்லையெனில் அந்த அரக்கனிடம் மாட்டிக் கொள்வாள். எனவே எப்படி அவளிடம் நெருங்குவது என அறியாது முழித்து கொண்டிருந்தான். அதுவும் அவளின் மரணத்திற்கு காரணமானவனே அவளைக் காக்க வந்துள்ளதாய் கூறினால் ஸ்ரீ எப்படி ஏற்றுக் கொள்வாள் எப்படி நடந்ததை புரிய வைப்பது சொன்னாலும் அதையெல்லாம் நம்புவாளா என ஏகப்பட்ட குழப்பத்திற்கு மத்தியில் தான் அவன் பேசியது ஆனால் அவளோ பேச விருப்பம் இல்லாது போல் ஒதுங்கி போவது கோபத்தைத் தந்தாலும், காதல் கொண்ட மனமோ அவளின் ஒவ்வொரு அசைவையும் உணர்ச்சியையும் உள்ளக்கிடங்கில் பொக்கிஷம் போல் சேர்த்து வைக்கிறது.
வாழ்நாளிலேயே அவளுடன் களிக்கும் பொழுதுக்காக அவன் எத்தனை இரவுகளில் கனவு கண்டிருக்கிறான் ஆனால் அவையெல்லாம் கனவாய் மாறிப்போக வரம் போல் கிடந்த இந்த நான்கு நாட்களும் அவளுடனான இனிமையான தருணங்களாக மாற்றவே அவனுக்கு மிகுந்த பேராவல். இருந்தும் மனமோ அவளின் பாதுகாப்பையே முதன்மையாய் நிறுத்த அவளுக்கான பாதுகாவலாய் தான் மாறிப் போனான்.
அந்நேரம் என ஒரு பெண் ஸ்ரீ யின் ஆன்மாவை ஊடுருவி சொல்ல அவளோ ஒரு நிமிடம் நிலையில்லாது கீழே அமர்ந்து விட்டாள். அதைக் கண்ட ஆருஷியோ அவளின் பலவீனத்தைப் புரிந்து கொண்டு அவளுக்கு உதவ முன்வர அவளோ அதைத் தடுத்து எழுந்தவள்
"ச்ச அடிக்கடி இப்படித் தான் ஆகுது என்னன்னே தெரியல" என முணுத்தவள் அவ்விடம் விட்டு செல்ல முயல
ஆருஷியோ " உன்னோட மனசு வீக்கா ஒரு நிலையில்லாம இருந்தா இப்படி தான் நடக்கும்" என்க அவளின் நடை ஒரு நிமிடம் தடைபட்டது.
ஸ்ரீ " என்ன சொல்றீங்க எனக்கு எதுவும் புரியல " என வினவ ஆருஷி அவள் அருகில் வந்தவன் " இந்த மாதிரி நிலையில மனசு ஒரு நிலையில் இல்லாம குழப்பத்திலையோ இல்லை பயத்துலையோ இருந்தா நம்மால திடப் பொருட்களை தொடவோ அல்லது அதனை ஊடுருவவோ முடியாது" என விளக்க இன்னும் ஸ்ரீ முகத்தில் தெளிவில்லாததை உணர்ந்தவன் மேலும் தொடர்ந்தான்
"என்னுடன் வா" என அருகில் உள்ள சுவர் பக்கம் ஸ்ரீ யை அழைத்து சென்றவன் தன் கைகளை அந்த சுவற்றில் வைத்து அழுத்த அவனின் கைகளோ சுவற்றை ஊடுருவிச் சென்றது.
"ஸ்ரீ இப்போ உன்னோட கையை சுவற்றில் வை " எனக் கூற அவளும் அவன் கூறியதை செய்ய "இப்போ உன்னோட கைக்கு அழுத்தம் குடு " என்க அவளும் அதேபோல் செய்ய என்ன ஆச்சரியம் ஸ்ரீ யினது கைகள் அந்த சுவற்றை ஊடுருவிச் செல்லாமல் காற்றில் கரைந்து மீண்டும் சேர்ந்தது.
இதைக் கண்டவள்"ஏன் இப்படி நடக்குது ஒவ்வொரு முறை மனிதர்கள் என்னை ஊடுருவி போகும் போது இப்படி தான் நா கீழ விழுந்தறேன்" என கேள்வியாய் அவனிடம் சொல்ல
"நம்மோட ஆன்மா காற்றால உருவாகிறது சோ காற்றால் திட பொருட்களை ஊடுறுவ முடியாது ஆனா நம்மால அத ஊடுறுவ முடியும்"என்க ஸ்ரீ யோ அவனின் விளக்கத்தில் இமை மூடாது அதிசயமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"இங்க பாரு மொதல்ல நீ மனச குழப்பிக்காம எதை பத்தியும் யோசிக்காம மனச ஒரு நிலை படுத்து மனசுல எப்பவும் சந்தோஷமான விஷயத்தை தான் நெனச்சுக்கணும் புரியுதா நெகடிவ் ஆ எதையும் நெனைக்க கூடாது ஓகே" என கூற அவளும் சம்மதமாய் தலையாட்டியவள் ஒரு நிமிடம் கண் மூடி ஆழ்ந்த மூச்செடுக்க அவளுக்கோ நள்ளிரவில் நடந்த சம்பவமே நினைவுக்கு வர சட்டென விழி திறந்தவளுக்கு பயம் மட்டுமே எஞ்சி இருந்தது பாவமாய் ஆருஷியை பார்த்தாள்.
அவனுக்கு அவளின் நிலை புரிந்தாலும் வேறு வழி இல்லை அவள் பயத்தை விட்டு தனியாய் போராட வேண்டிய சூழ்நிலை எனவே விடாது அவளிடம் "ஸ்ரீ உன்னோட வாழ்க்கைல நடந்த நல்ல விஷயம் இல்லை ரொம்ப சந்தோசமா இருந்த நாட்களை உன் மனசுல நெனச்சுக்கோ" என ஊக்கப்படுத்த மீண்டும் கண்களை மூடி அவள் வாழ்நாளில் நடந்த அனைத்து சந்தோஷமான தருணங்களையும் மீட்டியவள் இறுதியாய் அவளின் கண்முன் அவளவனுடன் கனவில் பைக்கில் சென்ற நினைவும் கண் முன் வர அதை ஆழ்ந்து அனுபவித்து கண் விழித்தாள். இப்பொது அவள் கண்ணில் பயமோ இல்லை குழப்பமோ இல்லாமல் இருக்க அந்த சுவற்றில் கை வைத்து அழுத்தம் கொடுத்தாள் என்ன ஆச்சர்யம் அவளின் கை அந்த சுவற்றில் அனாயசமாக ஊடுருவி அடுத்த பக்கம் சென்றது அதை உணர்ந்தவள் மிகுந்த மகிழ்ச்சில் ஆருஷியை பார்க்க அவனும் அவளைத் தான் கண்ணில் காதல் மிகப்பார்த்துக் கொண்டிருந்தான்
அவனின் பார்வையின் பொருளை உணராதவள் "ஏன் நாம் ஆன்மாவா இருக்கோம் இந்த நிலைக்கு ஒரு முடிவு இல்லையா" என கேட்க ஆருஷியோ " இருக்கு " என்றவன் சித்தர் கூறியவற்றில் ஆன்மாவை பற்றி மட்டும் ஸ்ரீ க்கு விளக்கினான். மேலும் ஆதிலிங்கம் பற்றியும் அவளின் பிறப்பின் ரகசியம் மற்றும் அவளின் மரணத்திற்கான காரணம் என அனைத்தையும் கூறினால் எங்கே குழம்பிவிடுவாளோ என எண்ணியவன் நேரம் வரும் போது சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.
குறைந்தது அவளின் மரணத்திற்கு தான் தான் காரணம் என்பதையாவது அவன் கூறியிருக்கலாம் அதனால் பின்னால் நடக்கவிருக்கும் விபரிதங்களை உணராமல் போனான்.. ஸ்ரீ யுடன் இனிமையான நினைவுகளை சேர்க்க நினைத்தவனுக்கு அவளுக்கு உண்மை தெரிந்தபின் அவளுடைய செயலில் தன் உயிர் போகும் வலியை விட அதிக வலியை அனுபவிக்க போவதை இப்போதே தவிர்த்திருக்கலாம். விதி வலியது...
உன் கைகள் கோர்த்து உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே.....
கதை பற்றிய உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புக்களே
அனுசரணின் "உயிரின் தேடல் நீய(டா)டி" - கருத்துத் திரி
"உயிரின் தேடல் நீய(டா)டி" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.srikalatamilnovel.com
என்றும் அன்புடன் உங்கள்
Anucharan
Last edited: