All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!"கதை திரி

Status
Not open for further replies.

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!"கதை திரி
 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ருதிரிதன்-1



சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்...
என விநாயகர் பெருமானை வாழ்த்தி பாடிவிட்டு பூஜையை நிறைவு செய்த தேவி வழக்கம் போல் சமையல் கட்டுக்கு சென்று வேலைகளை பார்க்க ஆரம்பிக்க, அவளின் இதழ் ஓரம் மெல்லிய புன்னகை ஒன்று அரும்பியது.



"தேவி இன்னும் என்ன பண்ணிக்கிட்டு இருக்க?நேரமாச்சு சீக்கிரம் கிளம்பு.."என்று அவள் கணவன் ஜனார்த்தனன் குரல் கொடுக்க, தேவியின் புன்னகை இதழ்களில் இன்னும் பெரிதாக விரிந்தது.



இங்கு அவசர அவசரமாக கிளம்பி கொண்டிருந்த ஜனார்த்தன் எப்போதும் உடனடியாக பதில் சொல்லும் மனைவியின் குரல் கேட்காமல் போக, செய்து கொண்டிருந்த வேலையை பாதியிலேயே விட்டுவிட்டு மனைவியை பார்ப்பதற்காக சமையல் கட்டுக்கு செல்ல அங்கு தன் கணவன் பதட்டமாக தன்னை தேடி வருவான் என்பதை அனுமானித்து வைத்திருந்த தேவியின் புன்னகை இன்னும் பெரிதாக விரிய, அவளை இடுப்பில் இரு கைகளையும் வைத்தபடி கோபமாக முறைத்து பார்த்தான் ஜனார்த்தன்.



"ஏய்! உனக்கு என்ன பார்த்தா என்ன சிரிப்பா இருக்குதா? உன்னோட பதில் வராமல் போக ஒரு நிமிஷம் பயந்து போயிட்டேன் தெரியுமா?"என்று சிடுசிடுப்பாக ஜனார்த்தன் கேட்க, இதழ்களில் மாறாத அதே புன்னகையுடன் செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் விட்ட தேவி கணவனை நெருங்கி அவன் கன்னத்தில் மெலிதாக ஒரு முத்தம் வைக்க, ஆச்சரியத்தில் ஜனார்த்தன் இதழ்கள் விரிய அதைப் பார்த்ததும் தேவியின் சிரிப்போ சத்தமாக மாறியது.



ஜனார்த்தனின் இதழ்களை தன் கை கொண்டு மூடியவள் "எனக்குத் தெரியும் மாமா நீங்க போய் கிளம்புங்க.."என
ஜனார்த்தன் கோபம் முற்றிலுமாக கலைந்தபடி மனைவியை ஏக்கமாக ஒரு பார்வை பார்க்க, தேவி அதை கண்டும் காணாதது போல் அவருக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றவள் இதழ்களோ பழையபடி சின்ன புன்னகையை பூசிக்கொள்ள கைகள் வேலையை விறுவிறுவென பார்க்க ஆரம்பித்தது.



மனைவியை ஏக்கமாக பார்த்தபடி ஜனார்த்தன் திரும்ப, அங்கு இருக்கைகளையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு நின்றிருந்த அவரது எட்டு வயது மகனை கண்டு அதுவரை இருந்த மாயமத்தனையும் அவருக்கு மறந்து போக மகனை கலவரமாக பார்த்தார்.



"நான் சொல்ல சொல்ல கேட்காம இன்னும் இங்கேயே என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது ஒழுங்கு மரியாதையா நீங்க போய் கிளம்புங்க நான் சீக்கிரமா வந்துடுவேன்.. சரி சரி விடுங்க மாமா உங்களுக்கு என்ன ஒரு முத்தம் வேணுமா கொடுக்கிறேன்..அதுக்கப்புறம் என்ன எந்த தொந்தரவும் பண்ணாம அமைதியா நீங்க போயிடனும் என்னோட செல்ல மாமா தானே நீங்க!"என்று சொன்னபடி நாணத்துடன் திரும்பிய தேவிக்கு ஜனார்த்தனின் முதுகு புறம் மட்டுமே தெரிய அவருக்கு முன்பாக மகன் இருப்பது தெரியாமல் போனது.



"அதான் நான் சொல்லிட்டேனே அப்புறம் எதுக்காக கோபம்! சரி சரி விடுங்க மாமா என்ன திரும்பி பாருங்க அப்பதான் நீங்க கேட்டது உங்களுக்கு கிடைக்கும்.."என்று குரல் குழைய சொன்ன தேவி தலையை தாழ்த்திக் கொள்ள,ஜனார்த்தனின் நிலைமையோ ரொம்ப பரிதாபமாக இருந்தது.



மனைவி பேசுவதை கேட்டு அவள் மீது நேசம் கொண்ட மனது திரும்பிப் பார்க்கச் சொல்ல, ஆனால் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த மகனின் கூர்மையான பார்வையும் அவன் தாயின் பேச்சைக் கேட்டு அவன் முகத்தில் தோன்றும் உணர்வுகளையும் அவதானித்தபடி ஜனார்த்தன் அப்படியே நிற்க, தேவி அவன் திரும்பாமல் நிற்கவும் தன் மீது கோபம் கொண்டு தான் இப்படி இருக்கிறான் என்று தவறாக எண்ணி அவளாகவே முன்வந்து கணவனின் தோள்பட்டையை தொட்டு தன் பக்கமாக திருப்ப, அப்போதும் மகனை கவனிக்கவில்லை.



"என்னாச்சு மாமா எதுக்காக இப்படி முகம் எல்லாம் வேர்த்திருக்கு!உங்களுக்கு தான் தெரியும் இல்ல எந்த இடத்துக்கு போனாலும் சொன்னபடி நான் உங்க கூட கிளம்பி வந்துடுவேன்னு.. அப்புறம் எதுக்காக நீங்க இங்க வந்தீங்க முதல்ல நீங்க கிளம்பி இருக்கீங்களா?சின்ன குழந்தை மாதிரி அடம் பிடிச்சுகிட்டு அப்படியே நிக்க வேண்டியது.."என்றபடி தன் சேலை முந்தானையால் அவர் முகத்தை துடைத்து விட, அடுத்து என்ன நடக்கப் போகிறதோ! என்று பதறிய ஜனார்த்தனையின் முகத்தில் வியர்வை சுரப்பி இன்னும் அதிகமாகத்தான் சுரந்தது போலும்.



அவர் முகத்தை பார்க்காமல் வியர்வையை துடைப்பதில் குறியாக இருந்த தேவி ஜனார்த்தனின் கண்ணசைவை கவனிக்காமல் விட்டு விட, ஜனார்த்தனோ தன் அன்பு மனைவி இன்னும் சிறிது நேரத்தில் இந்த சந்தோஷம் மொத்தத்தையும் இழந்து கண்ணீர் வடிக்க போகிறாள் என்பதை அறிந்தவனின் மனம் மனைவிக்காக வருந்தியது.



"ஏய் இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு?"என்ற ஈஸ்வரியின் குரலில் தேவியின் மொத்த தேகமும் தூக்கி வாரி போட, கணவனை விட்டு ஈரடி பின்னே தள்ளி சென்றார்.


ஜனார்த்தனன் நினைத்தது போலவே பிரச்சினை வந்துவிட்டதை எண்ணி வெறுப்புடன் திரும்ப,அங்கு ஈஸ்வரியின் பக்கத்தில் இரு கைகளையும் கோபமாக கட்டிக்கொண்டு அதே நேரத்தில் கண்களில் சந்தோஷம் மின்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.



நம் கதையின் நாயகன் துரியோதனன். மகாபாரதத்தில் பெண்ணிற்கு தீங்கிழைத்து துடிதுடித்து இறந்த துரியோதனனின் அனைத்து கெட்ட செயல்களையும் பெற்றுக் கொண்டே இந்த ஜென்மத்திலும் வந்து பிறந்திருப்பான் போலும்!!



"உன்ன தாண்டி கேட்டுகிட்டு இருக்கேன்.. காலையிலேயே சமையல் கட்டுல இப்படி எல்லாம் கூத்தடிச்சுக்கிட்டு இருக்கிறியே! நீ எல்லாம் ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்த பொண்ணு தானா? முகரை மூஞ்சியும் பாரு போயும் போயும் உன்ன மாதிரி ஒரு விளங்காதவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறானே இவனை சொல்லணும்.."என்று மகனை வசை பாடிக் கொண்டிருந்த ஈஸ்வரியின் கைகளில் இருந்த மது பாட்டில் சொன்னது அவர் எத்தனை தெய்வீகமான பெண் என்பதை!!



"அம்மா இப்ப எதுக்காக தேவை இல்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க! நீங்களும் ஒரு குடும்ப பொண்ணு தான உங்க கையில என்ன வச்சுட்டு நிக்கிறீங்க!"என்று அருவருப்பாக ஜனார்த்தன் முகத்தை சுளிக்க, அவருக்கு கோபமாக பதில் சொல்வதற்காக ஈஸ்வரி வாய் திறக்க அவரின் கையை பிடித்து தடுத்து நிறுத்திய துரியோதனன் "நீங்க அமைதியா இருங்க கிராண்ட்மா நான் பேசுறேன்.."என்று அவரை பேசிவிடாமல் தடுத்து நிறுத்தியவன் தன் தந்தையின் முகத்தை ஆழ்ந்து பார்த்தான்.



"ஒரு குழந்தை இருக்க வீட்டுல உங்க வைஃப் என்னமோ நேத்துதான் புதுசா கல்யாணமானது மாதிரி இப்படி ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்காங்களே? இது உங்களுக்கு கேவலமா தெரியலையா டாட்.. இவங்கள என்னோட அம்மானு சொல்றதுக்கு எனக்கு ரொம்ப அசிங்கமா இருக்கு.. எனக்கு நீங்க இவங்களோட சேர்ந்து இருக்கிறது சுத்தமா பிடிக்கலை டாட்.. இவங்க அம்மா என்னன்னா பின்னாடி மாட்டு கொட்டாயில் இருந்து கிட்டு எனக்கு தேவை இல்லாம அட்வைஸ் என்கிற பெயரில் எரிச்சல் உண்டு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இவங்க கொஞ்சம் கூட சென்ஸ் இல்லாம இப்படி மோசமா பிஹேவ் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இவங்களை முதலில் இங்க இருந்து துரத்தி விடுங்க.. சரிதா ஆன்ட்டி பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருப்பாங்க அண்ட் இடத்துக்கு தகுந்தாப்ல நடந்துக்கவும் தெரியும்.. இவங்கள மாதிரி மோசமா பிஹேவ் பண்ண மாட்டாங்க கிராண்ட்மா சொன்னதுல என்ன தப்பு இருக்குது டாட்.."என்றவன் ஜனார்த்தனனுக்கு பின்னாடி நின்று கொண்டிருந்த தாயை ஏதோ தீண்ட தகாத பொருள் போல் பார்க்க, மகனின் அந்தப் பார்வையில் சுக்கு நூறாக உடைந்து போனாள் தேவி.



"ஷட் அப் சந்தோஷ்.."



"கால் மீ துரியோதனன் டாட்.. எனக்கு என்னோட பாட்டி வச்ச பேரு அதுதான் அண்ட் எல்லாரும் என்னை கூப்பிடுவது இப்படித்தான்.."



"உன்னோட அப்பா அம்மா நாங்க ரெண்டு பேரும் தான் உனக்கு என்ன பேரு வைக்கணும்னு நாங்க தான் முடிவு பண்ணனும்.. நாங்க உனக்கு ஆசையா வச்ச பேரு சந்தோஷ்.. இப்படி மோசமா பிஹேவ் பண்ண கூடாதுன்னு உன்கிட்ட எத்தன தடவ சொல்லிருக்கேன்.."



"யாரு டேட் நானா மோசமா பிஹேவ் பண்றேன் உங்களுக்கு பின்னாடி நின்னுகிட்டு இருக்க அந்த புவர் லேடி தான் மோசமான லேடி.. அவங்களை தான் நீங்க இந்த வீட்டை விட்டு துரத்தனும்.. நான் சொல்றத நீங்க கேளுங்க டேட்.."



"வாய மூடு சந்தோஷ்.."


"முடியாது டாட் எனக்கு இவங்கள பார்க்க சுத்தமா பிடிக்கல.."என்று ஜனார்த்தன் பின்னால் நின்று கொண்டிருந்த தேவியை சுட்டிக்காட்ட, அவனை என்ன செய்தால் தகும் என்பது போல் கோபமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஜனார்த்தன்.


"அம்மா தயவு செஞ்சு காலையில பிரச்சனையை உண்டு பண்ணாம முதல்ல இவனை இங்க இருந்து கூட்டிட்டு போங்க.. இன்னைக்கு எங்களுக்கு ரொம்ப முக்கியமான நாள் எங்க ரெண்டு பேரோட கல்யாண நாள்.. எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பண்ணி எட்டு வருஷம் ஆச்சு.. இந்த எட்டு வருஷத்துல அவளோட கண்ணுல தண்ணி வந்தது எல்லாமே அவ பெத்த அவனோட பையனாலதான்.. என்னோட பையன நான் எந்த குறையும் சொல்ல மாட்டேன்.. அவனை வளர்க்கிற பொறுப்ப உங்ககிட்ட கொடுத்தேன் பாருங்க அதுதான் நான் பண்ண ரொம்ப பெரிய தப்பு.."என்று ஆக்ரோஷமாக ஜனார்த்தன் கூற, மகன் பேசியதை கேட்டு தன் நடிப்பை தொடங்க ஆரம்பித்து விட்டார் ஈஸ்வரி.



"பாத்தியா பாத்தியா துரியோதனா எனக்கு இந்த வீட்டில மரியாதை என்னன்னு உனக்கு இப்ப தெரிஞ்சுதா? இதோ உங்க அம்மா அவ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக் கொடுத்து உங்க அப்பாவை எப்படி கெடுத்து வச்சிருக்கான்னு பாரு.. உன்கிட்ட எத்தனை தடவை நான் சொல்லி இருக்கேன் இவ ஒரு மோசமான விஷப் பாம்பு.. இவளுக்கு சப்போர்ட் பண்ணி உங்க அப்பா என்கிட்டே சண்டை போடுறான் இதுக்கு மேல இந்த வீட்ல இருக்க எனக்கு விருப்பமில்லை நான் போறேன்.."என்று கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை வாய்க்குள் சரித்த படி கோபமாக ஈஸ்வரி அங்கிருந்து நகர, பெற்ற தாயின் கண்ணீர் மகனுக்கு கோபத்தை வரவழைக்க அதே நேரம் அவனைப் பெற்ற தந்தையின் தாயின் கண்ணீரை பார்க்கும் பொழுது அப்படி ஒரு கோபம் வந்தது துரியோதனனுக்கு.



இரண்டுமே கோபம்தான். ஆனால் இரண்டுக்கும் இடையில் மலையளவு வித்தியாசம் இருந்தது.



தேவியின் மேல் அவனுக்கு இருப்பது வெறுப்பான கோபம்.



ஈஸ்வரியின் மீது வருவதோ அன்பான ஒரு கோபம்.



"கமான் கிராண்ட்மா நீங்க எதுக்காக இந்த வீட்டை விட்டு போகணும்.. இந்த மொத்த சொத்தும் என்னோட பேர்ல தான் இருக்கு.. எனக்கு 18 வயசு ஆகுற வரை இந்த சொத்தை யாரும் எதுவும் பண்ண முடியாது.. சோ இங்க யாரு இருக்கணும் இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ண வேண்டியது நான் தான்.. ஏதோ டேடுக்காக தான் இந்த லேடியை இங்க விட்டு வச்சிருக்கேன் இல்லாட்டி எப்பவோ இவங்களை இங்கே இருந்து துரத்தி விட்டிருப்பேன்.. கமான் கிராண்ட்மா ச்சில்.. இங்கே இருந்தா எனக்கு இன்னும் கோபம் வரும் வாங்க ரெண்டு பேரும் முதல்ல போவோம்.."என்றவன் ஈஸ்வரி கைகளை பிடித்துக் கொண்டு தேவியை அருவருப்பான ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல, அவளோ அவ்விடத்திலேயே மரணிக்காது ஒன்று மட்டும் தான் குறை.



மகன் அங்கிருந்து சென்றதும் தான் பெருமூச்சு விட்டான் ஜனார்த்தன்.



மகனிடம் சில முக்கியமான விஷயங்களை பேசியாக வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் அப்போதைக்கு அதை விடுத்து மனைவியை சமாதானப்படுத்துவதே இப்பொழுது முக்கியம் என்று திரும்பி மனைவியை பார்த்தவன் அவள் கண்களில் எப்போதும் போல் கண்ணீர் அருவி மாலையென தொடுத்துக் கொண்டிருக்க, அதைத் துடைக்கக்கூட முடியாத தன் கையாலாக தனத்தை நினைத்து தன்னை தானே நொந்து கொண்டான் ஜனார்த்தன்.



"ஹே இதுக்கெல்லாம் அழுக கூடாதுடா தேவி.. இது என்ன புதுசா வா நடக்குது ரொம்ப நாளா நடந்துகிட்டு இருக்க விஷயம் தானடா.. ப்ளீஸ் டா உன்னோட கண்ணீரை பார்த்தா என் மனசு என்ன பாடுபடும் உனக்கு நல்லாவே தெரியும் அப்படி இருக்கும் போது நீ இப்படி அழுதுகிட்டே இருந்தா எனக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்.. தயவு செஞ்சு இன்னிக்கு நம்மளோட கல்யாண நாள் இன்னைக்கு ஒரு நாளாவது நீ அழுகாமல் இருக்கணும்னு தான் உன்னை காலையிலேயே இவ்வளவு சீக்கிரம் ரெடியாக சொன்னேன்டா.. எனக்காக ப்ளீஸ் டா.."



"தயவு செஞ்சு என்கிட்ட பேசாதீங்க மாமா இன்னைக்கு என்னோட பையன் இப்படி எல்லாம் என்கிட்ட நடந்துக்குறதுக்கு காரணம் நீங்க தான்.. என் பையன் அஞ்சு வயசு வரை என் மேல எவ்வளவு பாசமா இருந்தான்னு உங்களுக்கும் நல்லாவே தெரியும்.. நானும் அவன் மேல உயிரையே வச்சிருக்க விஷயம் உங்களுக்கே தெரியும்.. உங்க அம்மாவை பத்தி தெரிஞ்சதுனால தான் அவன இங்க விடக்கூடாதுன்னு நான் அன்னைக்கு உங்ககிட்ட வரமாட்டேன்னு எத்தனையோ தடவை கெஞ்சி கேட்டேன்.. ஆனா நீங்க உங்க கூட வரலன்னா அதுக்கப்புறம் என் கூட பேசவே மாட்டேன்னு கண்டிஷன் போட்டீங்க.. இது எல்லாமே அன்னைக்கு ஒரு நாள் வந்ததால் தான்.."என்ற தேவி வேதனையாக அந்த நாளை நினைத்துப் பார்க்க ஜனார்த்தன் மனதிலும் அதே வேதனை தான்.



"இங்க பாரு தேவி சத்தியமா இப்படி எல்லாம் நடக்கும்னு நான் மட்டும் எதிர்பார்த்தேனா? உன்ன மாதிரி நானும் எவ்வளவு அதிர்ச்சி அடைஞ்சேன்னு உனக்கும் தெரியும் தானடா.. நம்ம பையன் பிறந்ததுல இருந்து உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியலன்னு தானே உன்னை பத்து நாள் ஊட்டிக்கு கூட்டிட்டு போனேன்.. எனக்கு மட்டும் என் பொண்டாட்டி கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா? இதுல என்ன தப்பு இருக்கு சொல்லு..நான் திரும்பி வரும்போது நம்ம மேல பாசமா இருந்த நம்ம பையன் உன்னை எதிரியா பாக்குற அளவுக்கு அவனை மோசமா எங்க அம்மா மாத்தி வச்சிருப்பாங்கண்ணு நான் என்ன கனவா கண்டேன்.. அவனைக் கண்டுச்சு நான் பேசினாலும் நீ விட மாட்டேங்கிற.."



"ஆமா அவன் சின்ன குழந்தை தாங்க அவனோட மனசுல என்ன பத்தி தப்பான எண்ணத்தை அத்தை விதைச்சிட்டாங்க.. இனிமே அத யாராலும் மாற்ற முடியாது நீங்க எனக்கு சப்போர்ட் பண்ணி அவன்கிட்ட பேசினா கண்டிப்பா உங்களையும் வெறுத்திடுவான்.. அதுக்கப்புறம் அவனை இன்னும் ரொம்ப மோசமான சூழ்நிலைக்கு உங்க அம்மா மாத்திடுவாங்க..கண்டிப்பா இன்னைக்கு இல்லாட்டியும் என்னைக்காவது ஒரு நாள் என் பையன் என்னை புரிஞ்சுகிட்டு என்கிட்டயே மறுபடியும் வந்துடுவான்னு எனக்கு நம்பிக்கை இருக்குதுங்க.. என்னோட பையன் கண்டிப்பா நம்ம குழந்தையா நம்மகிட்ட வருவான்.."என்று கண்களை துடைத்துக்கொண்ட தேவி சமையல் வேலைகளை விறுவிறுவென பார்க்க ஆரம்பிக்க மனைவியை அதற்கு மேலும் தொந்தரவு செய்யாமல் தனியாக விட்டு விட்டு வெளியே சென்றான் ஜனார்த்தன்.



இங்கு வெளியில் வந்த துரியோதனனும் சந்தோஷமாக ஈஸ்வரியுடன் சேர்ந்து விளையாட ஆரம்பிக்க, போதையில் இருந்த ஈஸ்வரி அளவுக்கு அதிகமாக குடித்ததால் மயக்கம் வருவது போல் இருக்கவும் போதையில் தள்ளாடி அங்கு வந்து கொண்டிருந்த ஜனார்த்தன் மேல் விழுக, அவரை பிடித்து தள்ளி விட்டான்.



அவன் பிடித்து தள்ளி விட்டதில் நிலை தடுமாறி சோபா மீது விழ துரியோதனன் தன் தந்தையை கோபமாக பார்த்தான்.


"இங்க பாரு உனக்கு எப்படி உங்க அம்மாவை பிடிக்காதோ அதே மாதிரி எனக்கும் இவங்கள பிடிக்காது.. சோ அவங்களுக்கு நீ சப்போர்ட் பண்ணி பேசாத.."என்று சொல்லிட, அவரை கோபமாக முறைத்து பார்த்தவன் தனதறைக்கு சென்று விட்டான்.



சோபாவில் விழுந்து குடிபோதையில் உலறிக்கொண்டிருந்த தன் தாயை வெறுப்பாக பார்த்த ஜனார்த்தன் "உங்ககிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் இந்த மாதிரி வீட்ல ஒரு சின்ன குழந்தையை வச்சிக்கிட்டு இப்படி எல்லாம் பண்ணாதீங்கன்னு எத்தன தடவ சொன்னாலும் திருந்த மாட்டீங்க.. உங்க இந்த செயல்கள் எல்லாத்துக்கும் என்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு தானே என் பையனை எனக்கு எதிரா மாத்தி வச்சிருக்கீங்க.. நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்க உங்களை ஏதாவது சொன்னா உடனே அவன் என் பொண்டாட்டி கிட்ட சண்டைக்கு வருவான்..அவளை கூட்டிகிட்டு தனியா போகலாம்னு பார்த்தா ஏற்கனவே நாசமா போயிருக்க என் மகன் உங்க கூட இருந்தா சத்தியமா அவன் வாழ்க்கையே நாசமா போயிடும்..அவன் ஒருத்தனுக்காக தான் இத்தனையும் பொறுத்துக்கிட்டு சும்மா இருக்கேன் ஒரு நாள் இல்ல ஒரு நாள் உங்களையெல்லாம் என்ன பண்றேன்னு பாருங்க.."என்றவன் கோபமாக கத்தி விட்டு தனதறைக்கு செல்ல, அவனை ஒரு பொருட்டாக மதிக்காத ஈஸ்வரி மேலும் இன்னொரு பாட்டிலை உடைத்து குடிக்க ஆரம்பித்தார்.



தேவி சமையல்கட்டு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வர, அவரை முதல் வேலையாக அங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பினான் ஜனார்த்தன்.



அந்த வீட்டைப் பொறுத்தவரை தேவி சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி மட்டும்தான்.



ஜனார்த்தனனுக்கோ மனைவி அந்த வீட்டில் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும் அதே நேரத்தில் தன் இன்னொரு உயிரான மகனையும் அதே வீட்டில் விட்டுச் செல்ல பிடிக்காது அனைத்தையும் சகித்துக் கொண்டு தான் இன்று வரை அந்த வீட்டில் இருக்கிறான்.



எளிய அலங்காரத்தில் அழகான தேவதை போல் கிளம்பி வந்த தன் மனைவியை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்த ஜனார்த்தன் மனைவியின் நெற்றியில் இதழ் பதிப்பதற்காக நெருங்க, ஏற்கனவே காயம்பட்டிருந்த தேவி கணவனை தடுத்து நிறுத்த மனைவியின் மனதை அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்ட ஜனார்த்தன் இன்று ஒரு நாளாவது அவள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவியை அழைத்துக்கொண்டு வெளியில் வர சோபாவில் அமர்ந்து போனை நோண்டிக் கொண்டிருந்த துரியோதனன் தாயும் தந்தையும் ஒன்றாக வருவதை பார்த்து வெறுப்புடன் அங்கிருந்து செல்ல, தேவியின் கைகளை அழுத்தமாக பிடித்தபடி அவளை அழைத்துக்கொண்டு வெளியில் வந்த ஜனார்த்தன் அன்று முழுவதும் தேவிக்கு பிடித்தமான இடங்களை எல்லாம் சுற்றி பார்த்துவிட்டு அவருக்கு பிடித்த உணவுகள் அனைத்தையும் வெளியிலேயே சாப்பிட வாங்கி கொடுத்தவன் முடிந்தவரை அவளை மகிழ்ச்சியாக வைத்திருந்தான்.



இப்படி வேதனையும் சந்தோஷமாக கழிந்த அன்றைய பொழுதுதான் அவர்கள் இருவரின் கடைசி பொழுதாக அமைந்தது.



ஆம். உயிருடன் அவ்வீட்டை விட்டு சென்ற இருவரும் திரும்பி வந்தது என்னவோ சடலமாகத்தான்.



இருவரின் உடல்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாதபடி சிதைந்து உயிரற்ற உடல்களாக வீட்டிற்குள் வந்தார்கள்.



தன் காதல் மனைவி பூமியில் அனுபவிக்க முடியாத சந்தோஷங்கள் அனைத்தையும் மேலோகத்திலாவது கொடுக்கலாம் என்று அவளுடன் சேர்ந்து பயணம் செய்தான் அவள் காதல் கணவன் ஜனார்த்தன்.



தாயும் தந்தையும் இருக்கும் பொழுதே அவனை மோசமாக மாற்றி வைத்திருக்கும் அவன் தாத்தா, பாட்டி இனிமேல் யார் என்று கேள்வி கேட்பதற்கு நாதி இல்லாமல் போக அவனை என்ன செய்யப் போகிறார்கள்??



அனைத்திற்கும் பதில் அவள் ஒருத்தியே!!





 

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ருதிரிதன் 2:



மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி! காஞ்சி
மாவடி வைகும் செவ்வேள்
மலர்அடி போற்றி! அன்னான்
சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி! என தன் அழகிய குரலில் பாடிக்கொண்டிருந்தது அந்த மூன்று வயது குழந்தை.



அந்த குழந்தையின் பாடலில் எப்போதும் போல் மயங்கிய அவளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தை பாடும் அழகை கண்ணாரக் கண்டு அவள் பாடலை செவி வழியாக கேட்டு குழந்தை பாடும் பாடலுக்கு பின்ராகம் பாடியபடி இறைவனுக்குண்டான பூஜை செய்து முடிக்க, இறுதியாக கடவுள் புகைப்படங்களுக்கு தீபாரதனை காட்டிய குழந்தை அதை பெற்றவர்களிடம் காட்டி கண்களில் ஒத்தி கொள்ளும்படி சொல்ல, பெற்றோர் இருவரும் அவளை தங்கள் மகளாக அடைந்ததை எண்ணி இறைவனுக்கு மனமார்ந்த நன்றிகளை சொல்லிவிட்டு தீபாராதனை எடுத்துக் கொள்ள, பெற்றோர்களிடம் புன்னகைத்த குழந்தை அப்படியே அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த அவள் தாத்தா, பாட்டி இருவருக்கும் கொடுக்க அவர்களுக்கும் கிட்டத்தட்ட அதே பரவச நிலை தான்.



"என் செல்லப்பேத்தி பாக்குறதுக்கு அப்படியே அந்த மகாலட்சுமி என் கண்ணு முன்னாடி வந்து நின்னு அவங்களே எனக்கு தீபாரதனை காட்டி எடுத்துக் கொள்ளும்படி சொல்றது மாதிரி இருக்கு.. என் பேத்தி மேல யார் கண்ணும் படக்கூடாது.."என்று சொன்னபடி குழந்தையின் கையில் இருந்த தட்டை வாங்கி அவர் மருமகளிடம் கொடுக்க, அதை புன்னகையுடன் வாங்கிய அஞ்சலி தன் அருகில் நின்று கொண்டிருந்த தன் பெரிய மகளுக்கும் அதை காட்டிவிட்டு உள்ளே வைக்க, குழந்தையின் தந்தையோ தன் மகளுக்கு மிகவும் பிடித்தமான பொம்மையை பரிசாக கொடுப்பதற்கு தன் அறைக்கு விரைந்து சென்றான்.



"என் பட்டு இப்படி வா தாத்தா கிட்ட.. வழக்கம்போல இன்னைக்கும் உங்களோட பூஜை ரொம்ப அருமை.. தாத்தா உங்களோட பூஜையை பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து போயிட்டேன்.. சரி என் செல்ல பேத்திக்கு தாத்தா இன்னைக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கேன்.."என்றவர் தன் பேத்தியை கைகளில் தூக்கிக்கொண்டு முன்னே செல்ல, அவரை பின்தொடர்ந்து சென்றார் மனைவி கனகா.



தான் இங்கு நிற்பதை பொருட்படுத்தாமல் தன் வீட்டில் உள்ள அனைவரும் தனக்கு பின்னே பிறந்த தன் தங்கையை மட்டும் செல்லம் கொஞ்சுவதை கண்டு எப்போதும் போல் கோபப்பட்டாள் ஏழு வயது நிரம்பிய பூஜா.



'இருக்கட்டும் இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு தான் நானும் பார்க்கிறேன்.. முதல்ல இந்த பிசாசை இங்கே இருந்து துரத்தி விடணும் அப்பதான் எனக்கு சந்தோசம்.. இவங்க எல்லாருக்கும் நான் இங்கே இருக்கிறது கண்ணுக்கு தெரியாது அவ ஒருத்தி மட்டும் போதும்..'என்று தன் தங்கையை மனதுக்குள் திட்டிய பூஜா கோபமாக தன் அறைக்கு சென்றாள்.



"என்ன பண்ணிட்டு இருக்கீங்க ரஞ்சித்?"


"நம்ம பொண்ணோட பிறந்தநாள் இன்னைக்கி அவளுக்கு பிடிச்ச பொம்மையை வாங்கிட்டு வந்தேன் அஞ்சலி.. அத வேற எங்கேயாவது வச்சா மறந்து போயிடுவேன்னு பெட்டுக்கு கீழ வச்சேன்..இங்க வச்சது மாதிரி தான் இப்பவும் ஞாபகம் இருக்கு ஆனா இப்ப வந்து தேடிப் பார்த்தால் எனக்கு கிடைக்கல நீ எதுவும் பார்த்தியா?"என்று மனைவிக்கு பதில் சொன்ன ரஞ்சித் தன் மகளுக்காக ஆசை ஆசையாக வாங்கி வந்த பரிசை எங்கேயாவது தவற விட்டு விட்டோமா? என்று பரபரப்புடன் மனைவியை கூட கவனிக்காமல் வீட்டை சல்லடை போட்டு தேட, கணவனின் செயலில் மனைவிக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.



அவளும் அவளுடன் சேர்ந்து தேடிப் பார்க்க எங்கு தேடியும் அந்த பரிசு பொருள் இறுதி வரை கிடைக்காமல் போனது.



கணவன் பரிசு வாங்கி வந்திருப்பான் என்பதால் அஞ்சலி குழந்தைக்கு உடை மட்டும் வாங்கி வந்திருந்தாள்.



பரிசை தொலைத்து விட்டு அது கிடைக்காமல் போக கட்டிலில் வருத்தத்துடன் அமர்ந்திருந்த கணவனின் அருகில் வந்தவள் அவன் தலையை மென்மையாக கோதி கொடுத்தாள்.



"இப்ப எதுக்காக தேவையில்லாம இவ்வளவு பீல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க ரஞ்சித்? சரி விடுங்க அது எங்க போகப்போகுது வீட்ல தான் எங்கயாவது இருக்கும் கண்டிப்பா கிடைக்கும்.."


"இல்லடி எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு இங்கதான் நான் வாங்கிட்டு வந்து வச்சேன்.."



"சரி விடுங்க ரஞ்சித் நான் பாப்பாவுக்கு வாங்கிட்டு வந்து டிரஸ் இது.. இத கொண்டு போய் அவகிட்ட குடுங்க கண்டிப்பா குழந்தை ரொம்ப சந்தோஷப்படுவாள்.."என அவள் வாங்கி வந்திருந்த சிகப்பு நிற அழகிய ப்ராக் ஒன்றை கொடுக்க, அதை வாங்காமல் மனைவியை நிமிர்ந்து பார்த்தான் ரஞ்சித்.



அவன் பார்வையில் என்ன பொருளை பெண்ணவள் உணர்ந்து கொண்டாளோ சற்று குனிந்து அவன் நெற்றியில் மென்மையாக இதழ் பதிக்க, அதில் ரஞ்சித்தின் இதழ்கள் தானாக புன்னகையை சிந்தியது.



இங்கு தன்னுடைய அறைக்கு குழந்தையை தூக்கி வந்திருந்த ராமானுஜம் குழந்தைக்கு மிகவும் பிடித்தமான கூண்டுகிளியை பரிசாக கொடுக்க, அதை கையில் வாங்கிய குழந்தை அந்த பறவையை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்தது.



"ஹாப்பி பர்த்டே பட்டுக்குட்டி.."என்று ராமானுஜம் வாழ்த்து கூற,அவரைத் தொடர்ந்து கனகாவும் பேத்தியின் கன்னங்கள் இரண்டையும் வழித்து நெட்டை முறித்தவர் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாப்பா இன்னைக்கு நீ சந்தோசமா இருக்குறது மாதிரி எப்பவும் சந்தோசமா இருக்கணும்.. உன்னோட வாழ்க்கை முழுக்க உனக்கு எந்த விதமான பிரச்சனைகளையும் கடவுள் கொடுக்காமல் உன் ஆயுளை அதிகமாகி கொடுக்கட்டும்.."என்று குழந்தையின் தலை மீது கை வைத்து ஆசீர்வாதம் செய்தவர், அவளுக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு சீடையை ஏற்கனவே செய்து வைத்திருந்தவர் அதை குழந்தையின் கைகளில் கொடுக்க,ஒரு கையில் கிளி கூண்டை வைத்திருந்த குழந்தை அதை கீழே வைத்துவிட்டு பாட்டியின் கையில் இருந்த இனிப்பு சீடையை வாங்காமல் அவரை கண்களில் கண்ணீருடன் நிமிர்ந்து பார்க்க, குழந்தையின் கண்ணீரில் துடித்து விட்டார்கள் பெரியவர்கள் இருவரும்.



கையில் வைத்திருந்த சீடையை அருகில் இருந்த மேஜை மீது வைத்த கனகாம்பாள் என்னும் நாமம் கொண்ட கனகா பதட்டத்துடன் தன் பேத்தியை கைகளில் தூக்கிக் கொள்ள "என்னாச்சுடா உனக்கு எதுக்காக பிறந்தநாள் அதுவுமா இப்படி அழுதுகிட்டு இருக்க?எப்பவுமே என் செல்ல பேத்தி எதுக்காகவும் அழக்கூடாதுன்னு தாத்தா உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்.. ஏதாவது கொசு எதுவும் கடிச்சு வச்சுருச்சா.."என்று குழந்தையின் உடலை தடவிப் பார்த்தபடி பதட்டமாக ராமானுஜம் கேட்க, குழந்தைக்கு புது உடை அணிவிப்பதற்காக உள்ளே வந்த அஞ்சலி,ரஞ்சித் இருவரும் கூட குழந்தை தேம்பி தேம்பி அழுவதை கண்டு பதற்றத்துடன் வந்தார்கள்.



"ஹே அருந்ததி குட்டிமா உனக்கு என்ன ஆச்சு டா எதுக்காக அழுதுகிட்டு இருக்க?"என்று பதட்டத்துடன் கேட்ட ரஞ்சித் குழந்தையை அவன் அம்மாவின் கைகளில் இருந்து தன் கைகளில் வாங்கிக் கொள்ள, அவன் கழுத்து வளைவில் முகம் புதைத்த அருந்ததி என்னும் பேர் கொண்ட நம் நாயகி கண்களில் கண்ணீர் அப்பொழுதும் இன்னும் அதிகம் ஆகிக்கொண்டே போனது.



நால்வரும் மாறி மாறி குழந்தையிடம் காரணம் கேட்டுக் கொண்டே இருக்க அவர்கள் யாருக்கும் பதில் சொல்லாத அருந்ததி அப்படியே அவன் தந்தையோடு ஒட்டிக் கொள்ள "பாப்பா இங்க பாருடா இப்ப மட்டும் நீ சொல்லலனா அம்மா உன் கூட பேச மாட்டேன்.."என கண்ணீருடன் சொன்ன அஞ்சலியை பார்த்த அருந்ததி "மா கிளி பாவம்"என்று அவள் தாத்தா பரிசாக கொடுத்த கூண்டிலிருந்த கிளியை பரிதாபமாக பார்த்தபடி அழுகையுடன் சொல்ல, அதுவரை குழந்தைக்கு என்ன பிரச்சனையோ என்ற பதறிக் கொண்டிருந்த அனைவரும் குழந்தை வாய் திறந்து காரணம் சொன்ன பிறகே சற்று ஆசுவாசமடைந்தார்கள்.



"என் பட்டு குட்டி இதுக்காக போய் அழுதுகிட்டு இருக்கீங்களா அதுவும் பிறந்த நாள் அதுவுமா?"என்று குழந்தையின் மூக்கோடு தன் மூக்கை உரசிய ரஞ்சித் "அப்பா இப்பவே அந்த கிளியை திறந்து விடுங்க.."என்று சொல்ல,"கண்டிப்பா நீ சொல்லாமல் இருந்தாலும் இப்பவே நான் கிளியை திறந்து விட்டிருப்பேன் ரஞ்சித்.. என் பேத்தி கண்ணீருக்கு காரணமான இந்த கிளியை இனிமே நான் இங்க வச்சிருக்க மாட்டேன்.."என்று சொன்னவர் அந்த நிமிடமே கிளியை கொண்டு வந்து வெளியில் திறந்து விட,"கீச் கீச்"என்று சத்தமாக கத்தியபடி தனக்கு கிடைத்த விடுதலையை நினைத்து ஆனந்தமாக கத்திய கிளி மேலே பறந்து சென்று சற்று நொடிகளில் மறைந்து போனது.



"என்னங்க பாத்தீங்களா! நம்ம பேத்திக்கு இந்த வயசுலையே இவ்வளவு பக்குவம்.. ஒரு கிளி கூண்டுல அடைபட்டு இருக்கிறதை பார்த்து எவ்வளவு அழுகை.. கண்டிப்பா இவ தெய்வ குழந்தை தான்.. போன ஜென்மத்தில் நாம நிறைய புண்ணியம் பண்ணி இருக்கோம் அதனால தான் இப்படி ஒரு அழகான குழந்தை நமக்கு பேத்தியா கிடைத்திருக்கிறாள்.."என்று சொன்ன கனகா, கிளி பறந்து சென்றதும் அதுவரை அழுது கொண்டிருந்த அருந்ததி சிரிக்க ஆரம்பிக்க குழந்தையின் சிரிப்பை ரசித்துப் பார்த்தபடி அவர் சொல்வதை ஆமோதிப்பது போல் அனைவரின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.



அங்கு நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பூஜா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.



'இவங்க கண்ணுக்கு எப்பவுமே நான் ஒரு பொருட்டா கூட தெரிய மாட்டேன் போல..எப்ப பாத்தாலும் அந்த பிசாச தூக்கி வச்சுக்கிட்டு அதை மட்டும் செல்லம் கொஞ்சிக்கிட்டு இருக்காங்க நானும் இந்த வீட்டு குழந்தை தானே ஒரு நாளாவது என்னை இப்படி எல்லாம் கொஞ்சி இருப்பாங்களா! அடியே அருந்ததி முதல்ல உன்னை ஏதாவது ஒரு வழி செஞ்சா தான் எனக்கு சந்தோசமா இருக்கும்..' என்று மனதுக்குள் கருகிக் கொண்ட பூஜா வெளியில் சிரித்தபடி "அருந்ததி இந்தா உன்னோட பிறந்த நாளைக்கு என்னோட பரிசு.."என்று ஒரு பென்சிலை பரிசாக கொடுக்க,"ஐ பெஞ்சில் சூப்பரா இருக்கு அக்கா தேங்க்யூ.."என்று அருந்ததி தன் தமக்கை தனக்கு கொடுத்த பரிசை விலை உயர்ந்த வைரமாக கருதி அவள் அப்பாவிடம் காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, மகளின் சந்தோஷத்தை பார்த்த ரஞ்சித் முகத்திலும் சந்தோஷம்தான்.



"பென்சில் ரொம்ப அழகா இருக்கு பூஜா குட்டி.. சரி ஏன் இந்த டிரஸ் போட்டிருக்க உனக்கு கூட அம்மா ஒரு புது டிரஸ் தானே வாங்கிட்டு வந்து கொடுத்தாங்க அப்புறம் ஏன் அதை போடாம இத போட்டுருக்க?" என்று கேட்ட தந்தையை முறைத்து பார்த்தாள் பூஜா.


தன் பெரிய மகள் தன்னை பார்த்து முறைக்கவும் புன்னகையுடன் அவளை தன் மறு கைகளில் தூக்கிக் கொள்ள "அச்சோ என்னங்க பார்த்து.. ரெண்டு பேரையும் எப்படி உங்களால தூக்க முடியும் பாப்பாவை என் கிட்ட குடுங்க நான் வச்சுக்கிறேன்.. ஏய் பூஜா நீ பெரிய பொண்ணு தானே இப்படி எல்லாத்துக்கும் சரிக்கு சமமா சின்ன பொண்ணு கிட்ட போய் போட்டி போட்டுகிட்டு இருக்க?"என்று கோபமாக மகளை அஞ்சலி திட்ட, ரஞ்சித் தன்னை தூக்கியதும் சந்தோஷப்பட்ட பூஜா அஞ்சலி திட்டவும் முணுக்கென கண்ணீர் வந்துவிட்டது.



தகப்பனின் கைகளில் இருந்து கீழே இறங்கியவள் தாயை அழுகையோடு கூடிய கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் "நான் உங்க மகள் தானே?என்னமோ இந்த அருந்ததி மட்டும்தான் உங்க மக மாதிரியும் என்னை என்னமோ குப்பை தொட்டியில் இருந்து தூக்கிட்டு வந்து வச்சிக்கிறது மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க?நானும் ரொம்ப நாளா பாத்துகிட்டு தான் இருக்கேன் இந்த வீட்டில் இருக்கிற எல்லோருக்கும் என்ன விட அவளை தான் ரொம்ப பிடிக்குது ஏன் நானும் இந்த வீட்டு பொண்ணு தானே என்னை யாருக்குமே பிடிக்கல?இந்த அருந்ததி பிறக்கிற வரை எல்லாரும் என் மேல எவ்வளவு பாசமா இருந்தீங்க இப்ப எல்லாருமே இவளை மட்டும் தான் பாசமா பார்த்துக்கிறீங்க உங்க யாருக்குமே என் மேல கொஞ்சம் கூட அன்பே இல்லை உங்களுக்கு என் மேல சுத்தமா அன்பே இல்ல..இனிமே நான் உங்ககிட்ட பேச கூட இல்ல நான் உங்க கிட்ட பேசுறது கூட உங்களுக்கு கஷ்டமா இருக்கும் நான் போறேன்.."என்று அழுகையோடு சொல்லிவிட்டு பூஜா தன் அறைக்கு ஓட, மகளை சாதாரணமாக திட்டிய அஞ்சலி அதற்கு அவள் இத்தனை கோபப்படுவதை கண்டு ஒரு நிமிடம் அதிர்ந்து போய் விட்டாள்.



"எதுக்காக அஞ்சலி இப்ப அவளை தேவை இல்லாமல் திட்டின? அவளும் நம்மளோட குழந்தைதான் இப்படி குழந்தைகளுக்கு இடையில் பாசியாலிட்டி பார்க்க கூடாது.."



"உங்களுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது ரஞ்சித் நம்ம குழந்தைகளுக்கு இடையில் நான் இப்படி வேறுபாடு பார்ப்பேனா?"


"சரி விடு நீ அருந்ததிய பார்த்துக்கோ நான் போய் பூஜாவை சமாதானப்படுத்தி கூட்டிட்டு வரேன்.."என்ற ரஞ்சித் கையில் வைத்திருந்த மகளை மனைவியிடம் கொடுத்துவிட்டு தன் பெரிய மகளை சமாதானப்படுத்துவதற்காக செல்ல "அத்தை அவர் என்ன சொல்லிட்டு போறார்ன்னு நீங்க கேட்டீங்களா? எனக்கு பூஜாவை பிடிக்காதா?"என்று கண்கலங்கியபடி கேட்க, தாயின் கண்ணீரை தன் பிஞ்சு கரங்களால் துடைத்து விட்ட அருந்ததி "அம்மா அக்கா பாவம் தானே இனிமே திட்டாதீங்க.."என்று சொன்ன மகள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்ட அஞ்சலி மகளை மாமியாரிடம் கொடுக்க,"சரி விடுமா அவன் ஏதோ கோபத்தில் சொல்லிட்டு போறான் உனக்கு அருந்ததியை விட பூஜா மேல தான் அதிக பாசம் அவனுக்கும் சரி எங்களுக்கும் சரி நல்லாவே தெரியும்.."என பேத்தியை தூக்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள்.



இங்கு பூஜா அறைக்கு வந்த ரஞ்சித் மகளை செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்த, அப்பொழுதும் பாதி சமாதானமாகியும் ஆகாமலும் மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்ட மகளை பார்த்தபடி உள்ளே வந்த அஞ்சலி அவள் பங்கிற்கு அவளும் மகளை செல்லம் கொஞ்ச அதில் முற்றிலுமாக கரைந்து போனது அவளது கோபம்.



அதன் பிறகு அஞ்சலி வாங்கி வந்திருந்த உடையை மகளுக்கு அணிவித்து அருந்ததியின் மூன்றாவது பிறந்த நாளை இனிமையாக கொண்டாடி முடிக்க, அந்த தருணத்தை அழகாக உள் வாங்கிக் கொண்டது கேமரா.


ரஞ்சித் ஒரு அலுவலகத்தில் கிளர்க்காக பணிபுரிய அஞ்சலி பக்கத்தில் இருக்கும் கிண்டல் கார்டன் ஒன்றில் வேலை பார்க்க குழந்தைகள் இருவரையும் பார்த்துக் கொள்வது ராமானுஜம், கனகா இருவரும் தான்.


அதிலும் பூஜா பள்ளிக்குச் சென்று விட வயதான தம்பதிகளுக்கு அருந்ததி ஒருவள் மட்டும்தான் பொழுதுபோக்கு.



அருந்ததி அவர்களோடு அதிக நேரம் இருந்ததால் என்னவோ பூஜாவை விட அருந்ததி மீது அவர்களது பாசம் ஒரு படி அதிகம் தான்.



வசதியும் அல்லாத ஏழ்மையும் அல்லாத நடுத்தர வர்க்கம்.


அவர்களுக்கென்று ஒரு சிறிய வீடு அதில் எப்பொழுதும் மகிழ்ச்சி மட்டும்தான்.



மகளின் பிறந்தநாளை இனிமையாக கொண்டாடி முடித்த ரஞ்சித் "அம்மா அப்பா இரண்டு பேரும் குழந்தையை பார்த்துக்கோங்க.. என் பொண்ணுக்காக அவளுக்கு பிடிச்ச ஒரு பொருளை பரிசா வாங்கிட்டு வந்தேன் ஆனா அத எங்க வச்சேன்னு தெரியல இப்ப காணோம்.. கண்டிப்பா என் மகளுக்கு ஏதாவது பிறந்தநாள் பரிசு நான் கொடுத்தே ஆகணும்.. நான் போய் கடையில் வாங்கிட்டு வந்துடறேன்..அஞ்சலி நீயும் கடையில ஏதோ திங்ஸ் எல்லாம் வாங்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தியே வா நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா போயிட்டு வந்துடலாம்.."என்ற ரஞ்சித் உறங்கிக் கொண்டிருந்த தன் இரண்டாவது தேவதையின் நெற்றியில் முத்தம் வைத்துவிட்டு செல்ல, கணவனை புன்னகையுடன் பின்தொடர்ந்தாள் அஞ்சலி.


அதே நேரம் தன் அறையில் அமர்ந்திருந்த பூஜா அருந்ததிக்காக வாங்கி வந்திருந்த பரிசை தன் கைகளில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தவள் 'உங்களோட பரிசு, அன்பு எல்லாமே எனக்கு மட்டும் தான் சொந்தமா இருக்கணும் ப்பா.. எப்பவுமே உங்களுக்கு நான் மட்டும் தான் செல்லம் அந்த அருந்ததி கிடையாது..' என்று வாய் விட்டு சொன்னவள் அந்த பரிசு பொருளை யாருக்கும் தெரியாதபடி ஒரு இடத்தில் மறைத்து வைத்தாள்.



இங்கு மகளுக்காக பரிசு வாங்க வந்த தந்தையோ எதிர்பாராமல் எதிரில் வந்த காரின் மீது மோத மோதிய வேகத்தில் இருசக்கர வாகனம் சறுகிக்கொண்டு சென்று பல அடிகளுக்கு அப்பால் நிற்க அவ்விடத்திலேயே கணவன் மனைவி இருவரின் உயிரும் ஒன்றாக பிரிந்தது.



சற்று நேரத்திற்கு எல்லாம் உயிருக்கு உயிரான ஜோடிகள் இருவரும் உயிர்த்துறந்து உயிரற்ற உடல்களாக வீட்டிற்கு வந்து சேர, பெரியவர் இருவரும் அதிர்ச்சியில் அப்படியே சாய பூஜா தன் பெற்றோரைப் பார்த்து அழுது கொண்டிருக்க அருந்ததி என்னும் பிஞ்சு குழந்தையோ தன் தாயும் தந்தையும் இனி திரும்பி தன்னை பார்க்க வர மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டதால் என்னவோ அவர்கள் முகத்தை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தது.



கூடப்பிறந்த அக்கா அவளது எதிரியாக மாற பெற்றோரின் அன்பு இல்லாமல் எப்படி வளர போகிறது அந்த பிஞ்சு?



இங்கு அன்பே உருவான ஒருத்தி அன்பு என்றால் என்ன என்று கேட்கும் ஒருவனிடம் சேரும்போது அவள் நிலை என்ன ஆகும்?


இவை அனைத்திற்கும் அவன் ஒருவனே பதில்.



அவன் துரியோதனன். அன்பே உருவாக கொண்ட அருந்ததியின் வருங்கால மணாளன்.
 
Status
Not open for further replies.
Top