All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆவியாகிய பாவி

Sanjana rishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவ்விடம் மிகவும் நிசப்தமாக கும்மிருட்டுடன் மிரட்சியளிக்கும் வகையில் காட்சியளித்தது …. தூரத்திலிருந்து ஒரு குரல் ஊஊஊஊஊஹுஹூஉஉஉஉ…... அந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வந்தது…
ஜல் ஜல் ஜல் என்று சப்தமும் சேர்ந்து மேலும் அவனை திகிலூட்டியது….
யாருமற்ற அவ்வறையில் நட்ட நடுநிசியில் இவர்கள் கொள்ளை அடிக்க ஏதுவான சமயம் என எண்ணி வந்தால், இங்கே சலங்கை இன்றியே ஜிங்கு ஜிங்கு னு ஆடும் பிசாசு இருக்கும் போலயே… பயத்தில் உலறி கொட்டினான் அவன்…
“பிசாசு அழகா இருக்குமாடா “ என்றான் இன்னொருவன்…” பிசாசு உன்ன பிட்சா மாதிரி பிச்சி பிச்சி திண்ணும் போது தெரியும்டா “என்றான் மூன்றாமவன்…” டேய் வந்த வேலைய விட்டு அங்க என்னடா வெட்டி வெங்காய பேச்சு “ என்றான் அந்த கொள்ளை கூட்ட தலைவன்… டேய் பாஸ் கோவபட்றாரு சிக்கிரம் வேலைய முடிங்க டா என்றான் அந்த தலைவனின் எடுபிடி இவர்களிடம் இவன் கெடுபிடி… மெதுவே சத்தமின்றி நகர்ந்து செல்கையில் உர்ர்ர் கிரீச் கிரீச் என்ற சப்தம்… ஏதோ பூச்சியா இருக்கும் போங்கடா முன்னாடி என்றான் அந்த எடுபிடி…
“பயபுள்ளைக்கு பயம் டா அதான் நம்ம கிட்ட மட்டும் சீன் காட்டுறான் வெளிய வாடீ சீன் காட்டுற உன்ன சீஸ் பண்ணி ஜுஸ் போட்றேன்” …. என்று கருவி கொண்டான் இரண்டாமவன்…
முன்னேறி செல்கையில் அவர்கள் கண்ட காட்சியில்
இதயம் தாளம் தப்பி வாய் வழியே குதித்திடும் அளவு பயத்தில் உடல் வெடவெடக்க இருந்தனர்….
(அப்படி எத பாத்து இருக்கும்ங...🤔🤔🤔)
இவர்களின் தலைக்கு மேலே அது மிகவும் பயங்கரமாய்…
பாறாங்கல் போன்ற அதை தூக்கிக் கொண்டு உடல் கருகிய நிலையில் விகாரமாய் அப்பிசாசுகள் அந்தரத்தில் ….
எந்நேரமும் இவர்கள் தலையில் விழுந்து உடல் நசுங்கி சாகும் நிலையில் இவர்கள்….
நெஞ்சாங்கூடு நின்று துடிக்க உறைநிலை சென்றுவிட்டனர் அந்த கொள்ளைகார கும்பல்…
அந்த கொள்ளைகார பாஸ் பியூஸ் பிடிங்கின பீஸா ஷாக்காகி சிலை ஆகிட்டாரு… அப்போ அவரோட கூட்டு களவானி பசங்க நிலமைய சொல்லவும் வேணுமா 😂😂😂
அப்போது மிகவும் நாராசமாய் அந்த நிசப்தத்தை கிழித்துக் கொண்டு வந்தது…
ஏன்டா!😡😡😡 உங்கள நம்பினதுக்கு எங்களுக்கு நரக வேதனை தந்துடிங்களேடா உங்கள பழி வாங்காம விடமாட்டேன் , துடி துடிக்க உங்கள நாங்க கொல்லுவோம் டா… என்று சுளுரைத்தது… அந்த பிசாசு கூட்ட தலைவன்…
“வேணா எங்கள மம. மன்னி...ச்சு விவி..ட்ட்ரு தெ… த்...தெ..ர்ர்...ரி..யாம ப்ப்..பண்ணிட்டேன் “ கெஞ்சினான் அந்த கொள்ளை கூட்டத் தலைவன்…
“விட்ரதா??? அது நீ எங்களுக்கு துரோகம் பண்ண நினைக்க முன்னாடி யோசிச்சி இருக்கனும்… திருடும் போது வெளிய யார் வராங்கனு காவல் காக்க சொன்னா ,எங்கள கொல்ல வரது தெரிஞ்சும் அப்படியே எரிஞ்சு சாகட்டும் நாம மட்டும் சந்தோசமா எண்ணிக்கும் பாஸா இருக்கனும்னு நினைச்ச அப்போ தெரியலையா நாங்க பாவம்னு உங்களுக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது டா “ என்று விகாரமாக சிரித்துக் கொண்டே சொல்லியபடி அந்த பெரிய பாறாங்கல் போன்ற வெல்லக்கட்டியை அந்த எறும்புகளின் மேல் போட்டு கொன்றது அந்த கட்டெரும்பு பிசாசும் அதன் குடும்பமும்…
மூச்சு திணற திணற அந்த கொள்ளைகார எறும்புகள் சாவதை ஒருவித குரூரம் கலந்த புன்னகையுடன் பார்த்தன பிசாசாகி போன எறும்பு குடும்பம்…
என்ன இது வெல்லம் கீழ விழுந்து எறும்பெல்லாம் செத்துகிடக்கு என்றவாரே வந்தாள் அவள்…
வெல்லத்த இதுங்க கிட்ட இருந்து காப்பாத்துறது பெரும்பாடா இருக்கே என்று சொல்லிக் கொண்டே சென்றால் அந்த வீட்டின் மாதரசி…


வெல்லம் சக்கரைய பத்திரமா பாத்துக்கோங்க ...😂😂😂
எறும்பு ஆவி வந்துட போகுது😉😉😉
 
Last edited:
Top