All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இணையக் காதல்...

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்..29
#################

வள்ளியின் அப்பா தன் நண்பரை பார்க்க அழைத்துச் சென்றார்...போகும்போது வள்ளிமா ..அவர் என் போலீஸ் நண்பர் தான் மா ...அவரிடம் ஒரு ஐடியா கேட்போம்...சரியா ...

சரிப்பா ...எனக்கு கொஞ்சம் பயமா இருக்குபா....போலீஸ் எதாவது தப்பா என்னை நினைச்சிட்டா...

அவர் என் நண்பன் மா...அதைவிட நான் உன்கூட வருகிறேன்....அப்பறம் என்ன பயம்...

ம்ம்...சரிப்பா...சொல்லியவள் அப்பாவுடன் அவர் நண்பர் வீட்டுக்கு சென்றாள்...

அப்பாவின் நண்பர் சீனிவாசன் வீட்டினுள் இருந்து வெளியே வந்தவர் ...வாடா...எப்படி இருக்க...பார்த்து ரொம்ப நாளாச்சு...வரவேற்றார்...இதே ஊரில் இருக்கோம் ஆனால் பார்க்க முடியவில்லை ..நீயும் உள்ளே வாம்மா...நல்ல வளர்ந்திட்டாள் வள்ளி...

வீட்டினுள் நுழைந்தவர்களை அங்கே இருந்தே சோபாவில் அமர வைத்தார்...இருவரும் அமைதியாக இருக்க தன் நண்பனின் முகத்தில் ஒரு குழப்பங்களாக இருப்பதைப் பார்த்த சீனிவாசன் ...என்னாச்சு..டா..ஏன் ஒரு மாதிரி இருக்க...சொல்லு...இரு காபி எடுத்து வரேன் உள்ளே செல்ல போனவரை கைப்பிடித்தவர்...இப்ப சாப்பிட்டு வந்தோம் சீனி...காபி வேண்டாம் ..உன்கிட்ட கொஞ்சம் பேசனும்...அது தான் இந்த நேரத்தில் வந்தோம்...

ஒ..சரி சொல்லு என்னாச்சு...

பாப்பா மூலநூல் யூஸ் பண்ணிகிட்டு இருக்கா ..அதுல ஒரு பிரச்சினை ஆகவிட்டது...அது தான் உன்கிட்ட சொல்லி என்ன பண்ணலாம் கேட்க வந்தேன்.....

ம்ம்..சொன்ன சீனி ...என்னாச்சுமா வள்ளி நீயே சொல்லு...

வள்ளியும் ஆரம்பத்தில் இருந்து முகுந்தோடு பேசியது பழகியது அவனை சந்தித்தது பென்டிரைவர் அனுப்பியது அதில் அவன் பேசியது எல்லாமே தலை குனிந்தபடி சொல்லி முடித்தாள் வள்ளி ....
அவள் பயந்து பயந்து பேச அவள் அப்பா அருகிலே இருந்து பயப்படாதே மா..கரத்தை தன் கரத்தோடு பிடித்து தைரியம் கொடுத்தார்...அவளும்...முகுந்தோடு பேசிய அனைத்தும் சொல்லி முடித்துவிட்டு இது தான் நடந்தது அங்கிள்...வேறு எதுமில்லை...இப்ப நான் பேசியது போல பென்டிரைவர்ல அனுப்பிருக்கான் ...அவன்கிட்ட இப்ப என்னைப் பற்றிய படங்கள் இருக்கும்...அவன் அதை தப்பாக அனுப்பி விடுவானா பயமா இருக்கு ...சொல்லியவள் கண்களில் கண்ணீர் வடிந்தது....அவளுடைய அப்பா கையை தட்டிக் கொடுக்க...

பயப்படாதமா..அவன் கிட்ட இருந்து எல்லா போட்டோஸ் வாங்கிவிடலாம்... கவலை படாதே ...இப்ப இது மாதிரி விட தான் நிறைய கேஸ் வருதுமா....அதும் இப்ப உள்ள காலகட்டத்தில் எத்தனை பிரச்சினைகள் பெண்களை மையம் கொண்டே நடந்து கொண்டு இருக்கிறது ...அதுவும்‌ முகநூலில் பெண் பெயரில் ஆண்கள் உலாவதும்..பெண்களை குறிவைத்து பேசுவதும் பழகவதும் தான்....எத்தனை விதவிதமான ஆப் வந்திருக்கிறது ...வாய்ஸ் முதல் போட்டோஸ்,வெளிநாட்டில் இருந்து பேசுவது போல போன்கால்ஸ்... TikTokவீடியோஸ்...அதில் தங்களை விதவிதமாக வீடியோ எடுத்து அப்லோடு பண்ணவதும்..அதுக்கும் வரும் கமென்ஸ் லைகஸ் இதுதான்
இப்ப ஆண்ராய்டு போன்ல இருக்கு...நீங்கள் தான் கவனமா இருக்கனும் ....வீட்டிற்கு தெரியாமல் எல்லாம் செய்யிரீங்க...இப்ப உங்க அப்பா உன் மேல் நம்பிக்கை அவருடைய நண்பன் நான்..அதனால தைரியமாக என்னிடம் அழைத்து வந்தார்...இதே இந்த இடத்தில் வேறு யாரும் இருந்தால் இப்படி நம்பி கூட்டிக் கொண்டு வருவார்களா....சொல்லு....பல பேர் தவறாக மாட்டிக் கொண்டு தன் வாழ்க்கை தொலைத்து..தற்கொலை பண்ணிக் கொள்கிறார்கள் ...உங்களை முகநூலை யூஸ் பண்ண வேண்டாம் சொல்ல போவதில்லை ...இப்ப இருக்கிற எல்லாருமே சிறு வயது முதல் வயதான பெரியவர்கள் வரை இதை பயன்படுத்துகிறார்கள் ....அதுக்கு அடிட் ஆக வேண்டாம் ....இப்ப முகநூலுமே ஒரு போதை வஸ்து ஆகிவிட்டது ...பல பேர் இதில் வீழ்ந்து சீர்யழிகிறார்கள்... இங்கு வருவது பொழுதுபோக்கு மட்டும் வராமல் வாழ்க்கை தேடுகிறார்கள் ...எதையும் யூஸ் பண்ணும் போது நல்வழியில் கொண்டு போவதும் உங்க கையில் கெட்ட வழியில் கொண்டு போவதும் உங்க கையில் தான் ....வீட்டில் பாசத்தை தேடுங்கள்...தெரியாத முகத்தில் தெரியாத ஆட்களிடம் பாசத்தை தேடாதீர்கள்...ஒக்கே...உன் தனிமை தீர எதாவது கிளாஸ் போ...படி ..அதுவும் முடிலயா...பாட்டு கிளாஸ் சேர்ந்து கற்றுக்கோ அரங்கேற்றம் பண்ணி விடலாம். .சரியாடா....அவனை நான் பார்த்துக்கிறேன்...உன் போட்டோஸ் வீடியோஸ் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் வாங்கி விடுகிறேன்...கவலை படாமல் இருமா...

சரி அங்கிள்...இனி கவனமா இருக்கேன்...சாரி...

எதுக்கு சாரிடா..தெரியாமல் தப்பு செய்வதற்கு சாரி கேட்க வேண்டாம் ...நாளைக்கு வா...அவனை நேரிலே பார்த்து வாங்கி விடலாம் ....

சரி சீனு...ரொம்ப தேங்கஸ்...என்ன பண்ணவது எனக்கு பயம் தான் ...நாளைக்கு வருகிறேன்...போகலாம் வள்ளி ...கிளம்பினார்கள் ....

சசி ஜெகநாதன் ...
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இணைய காதல்...30
##################

முகுந்தை பிடித்து விசாரித்து வள்ளியின் போட்டோஸ் வீடியோ எல்லாவற்றையும் வாங்கிவிட்டார் சீனிவாசன் ...உன்னை போல ஆட்களால் எத்தனை உலகம் தெரியாத பெண்கள் மாட்டிக் கொள்கிறார்கள் ....பொதுவா ஆண்களும் பெண்களும் எதிர்பாலித்தனரிடம் பேசனும் பழகனும் ஆசைபட்டு தன் வாழ்க்கை வீணாக்கி கொள்வதும்...தான் இப்ப நடக்கிறது ...உன்னை நம்பி அப்பெண் பேசி பார்க்க வந்திருக்கா...அவளை லவ் பண்ணுகிறேன் கல்யாணம் பண்ணிகிறேன் ...சொல்லி அவள் பேசியதை மாற்றி பேசி வீட்டிற்கே அனுப்பிருக்கே..இன்னும் எத்தனை பேரை ஏமாற்றி இருக்க சொல்லு முகுந்தை மிரட்டினார்....பொதுவாக எல்லாரும் யூஸ் பண்ணுகிற முகநூலால் நீங்கள் தவறாக யூஸ் பண்ணவது மட்டுமல்லாமல் இதில் பெண்களையும் மாட்டி ஏமாற்றி கொண்டு இருக்க...வள்ளி தைரியமாக அவள் அப்பாவிடம் பேசாமல் இருந்திருந்தால் என்னடா பண்ணிருப்பிங்க...அவனை அடி வெளுத்தார் சீனிவாசன் ...

சார்..சார்...அடிக்காதீங்க..
வலிக்கது..வாய்யில் இரத்தம் ஒழுக கொஞ்சினான்....நான் சொல்லிறேன்..

சொல்லுடா இன்னும் என்ன பண்ணீரிப்பிங்க சொல்லு...

சொல்றேன் சார்...அவளை காதலிப்பதாக நடித்து வீட்டை விட்டு வரச் சொல்லி அவள் கொண்டு வரும் நகை வாங்கிட்டு மும்பையிலே விற்று விடலாம் என் நண்பன் சொன்னான் சார்...திக்கிதிணறி சொன்னான் சார்...எனக்கும் பணதேவை அதிகமா இருக்கவும் சரி சொல்லி வள்ளிடம் பேசினேன் தப்பாக இதுவரை பேசல...அவளோ இன்சென்ட் பேச்சால் அவளிடம் தப்பா பேசல ..லவ் பண்ணுகிறேன் கல்யாண பண்ணுகிறேன் மட்டும் தான் சொன்னேன் ...அவள் என்னை பார்க்க வந்தப்ப பார்க்கில் உள்ளே நுழைந்திருந்து என்கிட்ட பேசின வரை வீடியோ எடுத்தது என் நண்பன் தேவ்...அவள் பின்னாடியே வந்து வீட்டு அட்ரஸ் தெரிந்து அவளுக்கு பென்டிரைவரை அனுப்பினேன் ...சொல்ல சொல்ல சீனிவாசன் அவனை பிச்சு மேய்ந்துவிட்டார்....ஏன்டா எல்லாம் உங்க வாழ்க்கை அழித்து அப்பெண்ணின் வாழ்க்கையும் அழிக்கிறீங்க...இது மாதிரி வேற பொண்ணக நடந்து இருக்கிங்களா விசாரிக்க...அணுகுண்டு போல பல குண்டு சேர்ந்து வெடித்தது...அவன் எத்தனை பெண்கள் ஏமாற்றினான் என்ன பண்ணினான் சொல்ல சொல்ல வாழ்நாள் முழுவதும் வெளியே வராமல் தண்டனை அனுபவிக்கும் அளவுக்கு தவறுகளை செய்திருந்தான்..அவன் மேல் கேஸ் பைல் பண்ணிவிட்டு ...கிளிம்பினார் வள்ளியின் வீட்டிற்கு...சீனிவாசன் ...
.
வாங்க அங்கிள் உட்காருங்க அழைத்தவள் அப்பா உள்ளே இருக்கிறார் ..அப்பா அங்கிள் வந்திருக்கிறார் வாங்க...சொல்ல..
வந்துவிட்டேன் மா...வாடா சீனு.. என்னாச்சு அவனை பிடித்துவிட்டாயா...

அதுயெல்லாம் பிடித்துவிட்டாச்சு..வள்ளி படத்தை வீடியோ எல்லாம் வாங்கியாச்சு...அவன் வள்ளிடம் மட்டுமல்ல பல பேர்கிட்ட பேசிருக்கான் இந்தமாதிரி நடந்திருக்கு வள்ளி தைரியமாக சொல்லவும் நீயும் உன் பெண் மேல் நம்பிக்கை வைத்தால் மட்டும் தான் காபாற்ற பட்டுருக்கா..இல்லை அவள் வாழ்க்கை தடம் மாறிருக்கும்...தப்பிச்சாடா வள்ளி ...அவளை பார்த்து சொன்னவர் முகுந்தை பற்றி அவன் செய்த தவறுகளை சொல்ல வள்ளியின் கண்ணில் கண்ணீர் வடிந்தது...அவள் அப்பாவும் என் பெண் எவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்து இருப்பா..தெய்வமே என் பெண்ணை காபாற்றிவிட்டப்பா...வேண்டியவர் தன் நண்பனுக்கு நன்றி கூறினார்...ஏய்...நமக்குள்ள என்ன நன்றி ..உன்னாலே எவ்வளவு பெரிய கும்பல் மாட்டிருக்கு இனி அவன் வாழ்நாள் முழுவதும் வெளியே வர முடியாது....வள்ளி நீ மட்டும் தைரியமா இல்லாமல் இருந்திருந்தா நடப்பதே வேறு தான் ...தப்பிச்சுட்டே...இனி கவனமா இரு...உங்க வயது பெண்கள் எல்லாம் கண்டதே காட்சி கொண்டே கோலம் சுற்றி இருக்கீங்க..எல்லாவற்றிலும் அவசரம் ஆர்வகோளாரு தான் அதில் உள்ள நன்மை தீமை பார்ப்பதில்லை ....உங்கள் வாழ்க்கை பற்றி வீட்டில் இருப்பவர்கள் பற்றியும் சிந்திப்பதில்லை...எல்லா நேரமும் வீட்டில் உள்ளவர்கள் துணை இருக்க மாட்டார்கள் ...நாம் தான் எல்லா இடத்திலும் ஜாக்கிரதையாக இருக்கனும்..நமக்கனு ஒரு சுயக்கட்டுபாடு வேண்டும் அதை புரிந்து கொண்டு நடங்க..முகநூலை யூஸ் பண்ணாதிங்க சொன்னா வீட்டிற்கு தெரியாமல் செய்வீங்க... அதைவிட இதில் நல்லது கெட்டது அறிந்து யூஸ் பண்ணுங்க...இனி இம்மாதிரி வம்பில் மாட்டிவிடாதே சரியா...கவனமா இரு...வள்ளிக்கு அட்வைஸ் செய்தார்...சீனிவாசன் .

அவர் பேச பேச..சாரி அங்கிள் .இனி கவனமா இருக்கேன் ...அப்பா நீங்க மட்டும் என் மேல் நம்பிக்கை வைக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் சாரிபா...

விடுடா குட்டி இனி கவனமா இரு.என்னிடம் பயமில்லாம் எல்லா பேசு ..அப்பா மட்டுமல்ல உனக்கு தோழன் நான் ஒக்கே...போய் அங்கிளுக்கு காபி எடுத்து வா....ம்ம் தலையாட்டிவள் உள்ளே செல்ல டபுள் ஸ்டார்ங் காபிடா...சீனி குரல் கொடுக்க...சிரித்தப்படி உள்ளே சென்றாள் வள்ளி....

சீனு வள்ளி பெயர் இதில் வராது தானே கல்யாண ஆகிற பொண்ணு..நாளைக்கு எதும் பிரச்சினை ஆகிட கூடாதுல...

நான் எதுக்கு இருக்கேன் பார்த்துக்கிறேன்...பயப்படாதே...சீக்கிரம் நல்ல மாப்பிள்ளை பாரு ..கல்யாணத்தை ஜாம்ஜாம் நடத்திவிடலாம்....

அடுத்தது அது தான் சீனு.....சொன்னவர் வள்ளி வரவும் வள்ளிமா கல்யாணம் சாப்பாடு சாப்பிட இங்கே வரனுமவ நான் சீக்கரம் விவாக பிரபஸ்து..சீனு வாழ்த்த வள்ளி முகம் சிவந்து தலைகுனிந்தவள் போங்க அங்கிள் உள்ளே ஒட இருவரும் சிரித்தார்கள் ...

சசி ஜெகநாதன் ..

பிகு...இந்த கதை இதுடன் முடிந்தது ...எப்படி இருந்தது உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்...இது என்னுடை முதல் தொடர்.. முதல் முயற்சி இன்றைய சூழ்நிலையில் இணையத்தில் நடக்கும் நிலமை பற்றி எனக்கு தெரிந்தை எழுதினேன் ..உங்கள் கருத்துக்களை பகிருந்து கொண்டால் மேலும் என் எழுத்து திறமை வளர்த்து கொள்ள உதவும் தோழிகளே பீளிஸ் ஹெல்ப் மீ...அடுத்த கதையுடன் வருகிறேன் ...
 
Top