All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"இனிதா மோகனின் " தொடுக்காத பூச்சரமே!"_ கதைத்திரி"

Status
Not open for further replies.

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் எப்படி இருக்கீங்க..என் மேல் செம கோபத்தில் இருப்பீங்க.சாரி ஃப்ரெண்ட்ஸ்..உடல் நிலையும் ,சில பர்சனல் இஸ்யூஸ்ஸால் என்னால் கதையை தொடர முடியாமல் பாதியில் நிறுத்தி விட்டேன்..
அதற்காக தயவு செய்து உங்கவீட்டு பிள்ளையா நினைச்சு என்னை மன்னிச்சுடுங்க ஃப்ரெண்ட்ஸ்..
இனி ரெகுலரா அப்டேட் தருவேன்..
இப்ப தான் திரும்பவும் எழுத ஆரம்பிச்சு இருக்கேன்..இனி நெக்ஸ்ட் வீக்ல இருந்து ரெகுலராக அப்டேட் தருவேன்..முழுமூச்சில் உதி&யாழி எழுதப் போறேன்..இன்னும் 6&7அத்தியாங்களில் கதை முடியப் போகுது..கதையே மறந்து போச்சுன்னு சொல்றவங்க எனக்காக இன்னொருவாட்டி படிச்சு பாருங்க.. நெக்ஸ்ட் வீக் உதியோடு வருகிறேன்..
அன்புடன்

இனிதா மோகன்
 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லோரும் இப்படி இருக்கீங்க.. காதலர் தின ஸ்பெஷலா😘 உதி&யாழிக்கு ஒரு குட்டி முன்னோட்டம்♥

முன்னோட்டம்

உதியனம்பி ,காலையில் கண் விழிக்கும் போதே கைகளில் ஏதோ பிசுபிசுப்பாக இருப்பதை உணர்ந்து திடுக்கிட்டுப் பார்த்தான்.

முதலில் ஒன்றும் புரியவில்லை... கையின் மணிக்கட்டால் கண்களை நன்றாக தேய்த்துக் கொண்டு பார்த்தவனுக்கு, அது மருதாணி என்பது புரிந்தது..

தன் மனையாளின் வேலையாகத் தான் இருக்கும் என்று நினைத்தவன், "யாழி..யாழி.." என்று அவள் பெயரை ஏலம் விட்டுக் கொண்டே சமையலறைகுச் சென்றான்.

அவளோ, கணவனின் குரலை கண்டு கொள்ளாமல் தன் வேலையிலேயே கவனமாக இருந்தாள்.

உதியோ, தன் அழைப்பைக் கண்டு கொள்ளாமல் நின்றவளின் கைகளைப் பற்றித் தன் புறம் திருப்பி, "யாழி என்ன வேலை செஞ்சு வச்சுருக்கே.." என்று குரலை கொஞ்சம் உயர்த்திக் கேட்டவனிடம்.

"பார்த்த தெரியலையா? மருதாணி வச்சு இருக்கேன்.."என்று சாதாரணமாக சொன்னாள்.

"அது தெரியுது . எதுக்குடி எனக்கு வச்சே.."

"ம்! " என்று ராகம் இழுத்த படியே, "புருசன் கையில் மருதாணி நல்லா சிவந்தா..பொண்டாட்டி மேலே அளவுகடந்த பாசம் வச்சுருப்பாங்கன்னு பக்கத்து வீட்டு பாட்டி சொல்லுச்சு..அது தான் டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன்.."என்றவளிடம்..

"உன்னோட போக்கே வர..வர.. சரியில்லை ..அந்த பாட்டிகிட்டவெல்லாம் உனக்கு என்ன பேச்சு..?"

"நான் யார் கூட பேசனும்,யார் கூடப் பேசக்கூடாதுன்னு அப்புறம் பாடம் எடுங்க.. இப்ப மசமசன்னு நிக்காம, கையை கழுவுங்க எப்படி சிவந்திருக்குன்னு பார்க்கணும் .."

"ஏண்டி புரொபஸர் செய்யற வேலையா இது?"

"ஹலோ மெக்கானிக் ..நான் காலேஜ்ல தான் புரொபஸர்..வீட்ல உங்க பொண்டாட்டி தான். அதை மொதல்ல நினைப்பு வச்சுக்கோங்க.. வழ..வழன்னு பேசாம சொன்னதைச் செய்ங்க.."

"யாழி வர..வர உன்னோட அக்கப்போர் அளவில்லாமல் போகுது..
எப்படி டீ இப்படியே போய் கடையிலே வேலை செய்வேன்.."

"ஏன் ? வேலை செய்தால் என்னவாம்...?"

"உனக்கு என்னமோ ஆயிடுச்சு.. என்றவனின் கைகளைப் இழுத்து, மருதாணியை கழுவியவளின் விழிகள் வியப்பில் குடையாய் விரிந்தது..

விரைவில்...
 
Status
Not open for further replies.
Top