All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எண்ண அலைகள்.......

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உலக பெண்கள் தினம்....!
பெண்...
தாய்மையின் இலக்கணம்
வாய்மையின் வழித்தடம்
இலக்கணம் மீறா உன் வழித்தடம்
இலக்கியம் ஆகும் உன் வாழ்விடம்!
பெண்
மேன்மையின் பிறப்பிடம்
மென்மையின் உறைவிடம்
தலைக்கனம் இல்லா உன் தனித்துவம்
தரணியை காக்கும் உன் மகத்துவம்!
அன்புடன்
செல்வி சிவானந்தம்.
அனைவருக்கும் என் இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்

அன்னை தெரசாவின் வழியில் பெண்மையை போற்றுவோம்; அதன் மேன்மையை பெருக்குவோம்.
https://www.youtube.com/watch?v=tQTTuBrIlf8
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலம் கடந்தாலும்,
நேரம் ஓடினாலும்,
மனம் ஓய்ந்தாலும்,
உடல் தளர்ந்தாலும்,
வயது முதிர்ந்தாலும்,
எண்ணங்கள் மட்டும்
நிறுத்துவதில்லை
அதன் ஓட்டத்தை?

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீடு அது காப்பகம்
கதவுகள் இருந்தால்,
வீடு அது அன்பகம்
தாய் இருந்தால்,
வீடு அது நந்தவனம்
சந்தோசம் இருந்தால்,
வீடு அது சுகவனம்
நிம்மதி இருந்தால்,
நம் வீடு காப்பகமா? அன்பகமா? நந்தவனமா? சுகவனமா?
இல்லை அனைத்தும் சேர்ந்த நல்லகமா?
மானுடா! பதில் நம் கையிலே.

அன்புடன்

செல்வி சிவானந்தம்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா உங்கள் கவிதைகள் எல்லாமே சூப்பர்💓💓💓
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

விவேகம் இல்லா வேகத்தில்
விஞ்ஞானம் வளர்ந்தாலும்,
நிதானம் இல்லா நிமிஷத்தில்
நாட்கள் நகர்ந்தாலும்,
சமத்துவம் இல்லா சமூகத்தில்
சமாளித்து நிமிர்ந்தாலும்,
சங்கமம் என்பது கடையென்று
காலம் காட்டியதோ...! அதன்
தடத்தை நாட்டியதோ...!
ஓடிய ஓட்டம் நின்றது
ஆடிய ஆட்டம் நின்றது
நாடிய நாட்டம் நின்றது
தேடிய தேடல் வென்றது...?
ஆம்...
அன்பின் கூட்டில்
அன்றில்கள் கூட்டம்!
வீறிஎழல் என்ற சார்வரியின் பிறப்பு
வீணான விசயத்தில்
விவேகம் இல்லாமல்
வீணாய் போகாமல்
வாழ்க்கையின் நிம்மதி
அன்பின் தேடல் அல்ல...
அன்பின் அரவணைப்பின் கூடல்...! என
புரிந்தவர் புனிதர்!
அறிந்தவர் மனிதர்!
என்ற மெய்மொழியுடன்....
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

விவேகம் இல்லா வேகத்தில்
விஞ்ஞானம் வளர்ந்தாலும்,
நிதானம் இல்லா நிமிஷத்தில்
நாட்கள் நகர்ந்தாலும்,
சமத்துவம் இல்லா சமூகத்தில்
சமாளித்து நிமிர்ந்தாலும்,
சங்கமம் என்பது கடையென்று
காலம் காட்டியதோ...! அதன்
தடத்தை நாட்டியதோ...!
ஓடிய ஓட்டம் நின்றது
ஆடிய ஆட்டம் நின்றது
நாடிய நாட்டம் நின்றது
தேடிய தேடல் வென்றது...?
ஆம்...
அன்பின் கூட்டில்
அன்றில்கள் கூட்டம்!
வீறிஎழல் என்ற சார்வரியின் பிறப்பு
வீணான விசயத்தில்
விவேகம் இல்லாமல்
வீணாய் போகாமல்
வாழ்க்கையின் நிம்மதி
அன்பின் தேடல் அல்ல...
அன்பின் அரவணைப்பின் கூடல்...! என
புரிந்தவர் புனிதர்!
அறிந்தவர் மனிதர்!
என்ற மெய்மொழியுடன்....
அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! நன்றி
இப்போதான் படிச்சேன் சூப்பரு அக்காஆஆ😍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கறை...!

இக்கரைக்கு அக்கரை பச்சை
அக்கரைக்கு இக்கரை பச்சை
எவர் எக்கரையில் இருந்தாலும்

அவரவர் அக்கறையே நன்று!
 
Top