All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாம் காதலா 14

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14 கலாப காதலா

" வேணாம் தம்பி என்ன பகைசிட்டா எல்லாம் தப்பா நடக்கும் "
" அதலாம் நாங்க பாத்துகுறோம் நீ கிளம்பு "
" ஏய் யார பாத்து என்ன வார்த்தை பேசுற ஐயா நீங்க சொல்லுங்க ஐயா இவனுங்க இரண்டு பேரையும் இதே இடத்துல போடுறோம் "
" போடுறா போடுறா பாக்கலாம் மேல கை வைச்சு பாரு "
என நெஞ்சை நிமிர்த்தி கொண்டு அவன் முன்னே செல்ல
" அஜய் அஜய் சும்மா இரு பப்ளிக் ப்லேஸ் "
" இங்க மோதுன தோத்துட்ட அதோட கிளம்பு சும்மா இங்க சீன் காட்டுற வேலைலா எங்கிட்ட வேணாம் நாங்க சீன் காட்டுனா வேற மாதிரி இருக்கும் "
" டேய் முத்து வாடா போலாம் "
என வெள்ளை வேட்டி சட்டை அணிந்து நெற்றில் பட்டை அடித்து ஊருக்கு நல்லவரா காட்டி கொண்ட அந்த ஐம்பது வயது பெரியவர் குணசீலன் செல்ல....
அவரின் பின்னே அவரது அடியாள் முத்துவும் திரும்பி இவர்களை முறைத்து கொண்டு சென்றான்...
" ஐயா சொல்லுங்க நைட்டோட நைட்டா லாரி ஏத்தி எல்லாத்தையும் முடிச்சுடுவோம் "
" ம்ம் இப்ப வேணாம் இப்ப பண்ணா நம்ம தான் பண்ணோனு எல்லாருக்கும் தெரியும் கொஞ்சம் நாள் போகட்டும் பாத்துக்கலாம் "
" ஆங் அப்புறம் அவன் பேரு என்ன "
என கைகாட்டி கேட்க
" சித்தார்த் ஐயா "
" அவன பத்தி விசாரி "
" சரிங்க ஐயா "
காரில் ஏறும் முன் இருவரையும் பார்க்க நண்பர்கள் இருவரும் சிரித்து பேசி கொண்டு இருக்க அதனை கண்ட பெரியவர் வன்மம் தலைக்கு ஏறியது....
" ரொம்ப நன்றிங்க சார் நீங்க இரண்டு பேர் மட்டும் இல்லனா கண்டிப்பா இது நடந்துறுக்காது "
என அங்கிருந்த பெரியவர் ஒருவர் கூற
" இதுல என்ன இருக்கு யார் செஞ்சா என்ன நல்லது நடந்தா சரி "
" இல்ல சித்தார்த் தம்பி கடந்த எட்டு வருஷமா இவனுங்க தான் இந்த பிராஜெக்ட பண்ணுறாங்க ஒன்னு நல்ல பண்ண மாட்டாங்க இல்லனா அது எதுவேமே உறுதியா இருக்காது பணம் பணம் பணம் இதுதா இவங்க தொழில் மக்களுக்கு நல்லது பண்ணணும் நினைக்கவே இல்லை "
" சரிங்க சார் நாங்க வரோம் அடுத்தது எங்க ஆபிஸ் வந்து பேசுங்க வரேன் "
இருவரும் கிளம்பி தங்களது ரெஸ்ட்டாரண்ட் அமர்ந்து பேசி கொண்டு இருக்க அங்கு வந்தாள் பூரணி..
வந்தவள் சித் யை முறைத்து கொண்டே அஜய் அருகில் அமர்ந்தாள்..
" என்ன அம்மு ரொம்ப கோபமா இருக்க போல " அஜய் கேட்க
" அவ நார்மலா தான் இருக்கா நீ எதும் கிளப்பிவிடாம மூடிட்டு இரு " சித் கூற
" நான் எங்க நார்மலா இருக்கேன் கோபமா தான் இருக்கேன் "
" என்னாச்சு அம்மு "
" பாரு அஜய் இவர நைட்டுலேந்து எத்தனை வாட்டி கால் பண்ணுறேன் எடுக்கவே இல்லை "
" ஏன்டா என் அம்மு கால் பண்ணும் போது எடுக்கல "
பொறுப்பு இவன்கிட்ட கொடுக்குறாளே என எண்ணியவன்
" அதுமட்டும் இல்ல அஜ்ஜூ இப்பலா எனக்காக டைம் ஸ்பெண்ட் பண்ணறதே இல்ல "
என பாவமாக முகத்தை வைத்து கொண்டு கூற
" மச்சான் ஒழுங்கா என் அம்மு கூட டைம் ஸ்பெண்ட் பண்ணுற போ கிளம்பு "
" டேய் சும்மா இரு டா ஆபிஸ்ல முக்கியமான கிளைண்ட் வராங்கா டா நான் இருக்கனும் "
" பெரிய இந்த கிளைண்ட்டு நீ போ நான் பாத்துகுறேன் "
" அப்படி ஒன்னும் யாரும் கஷ்டபட்டு என் கூட வர வேணாம் நான் கிளம்புறேன் "
என்று பூர்ணி கிளம்ப
" அவள நானே ஏதாவது பேசி சமாளிச்சு இருப்பேன் நீ பஞ்சாயத்து பண்ணுறனு இப்படி பண்ணிடியே டா உன்ன "
என கை ஓங்க
" சரி சரி விடு மச்சான் காதல் வாழ்க்கையில இதலாம் ஜகஜம் போ போய் சமதானம் பண்ணு "
சித் எழுந்து பூர்ணி பின்னால் போக ஆட்டோ விற்கு கை காட்டி அது நிற்க அதில் ஏறும் போது சரியாக வந்தவன்
" நீ போங்க ஆட்டோ வேணாம் "
என அனுப்பி வைத்தவன்
" ஏய் வா நான் ட்ராப் பண்ணுறன் "
" நான் ஒன்னும் வரல "
" ஏய் ரொம்ப பண்ணாத வாடி என் பட்டு இல்ல "
" இல்ல "
என முறுக்கி கொண்டவள் முன்னே செல்ல
" பட்டு விளையாடாத டி ஆபிஸ் டைம் ஆகிடுச்சு வாடி "
" அப்ப போங்க உங்க ஆபிஸ் கட்டிட்டு அழுங்க "
இதுக்கு மேல பேசுனா சரியில்ல என்றெனியவன் அவளின் கையினை ஒரு கையாலும் இடையினை ஒரு கையாலும் பிடித்து திமிறியவளை அடக்கியவன் கார் நோக்கி இழுத்து சென்றான்..
" விடுங்க விடுங்க நான் தான் வரலனு சொன்னேன்ல விடுங்க "
பார்க்கிங் சென்றவன் சுற்றிலும் ஆள் இல்லாததை உறுதி செய்து அவளை காரில் சாய்த்தவன் இரு பக்கமும் கையால் அவளை நகர விடாமல் சிறை செய்தான்...
" பட்டு இங்க பாரேன் "
" பாக்க மாட்டேன் "
" பட்டு பாரேன் "
" பாக்க மாட்டேன் போடா "
என தலை குனிந்து நின்றவளின் கண்ணத்தை தூக்கி தன் முகம் பார்க்க வைத்தவன்
" சாரி டி "
அவனின் முகத்தை நேருக்கு நேர் கண்டவளின் கோபம் வடிய
கண்கள் கலங்க
" போடா "
என்றாள்
" ஏய் பட்டு என்னாச்சு ஏய் அழுகுறியா ஏய் "
தன் மார்பில் சாய்ந்தவளை தன்னுடன் சேர்த்து இறுக்கி கொண்டான்..
" முன்னாடி லா இந்த மாதிரிலா இல்லங்க இப்பலா உங்கள பாக்கனும் பேசனும் எப்பவும் உங்க கூடவே இருக்கனும் தோனுதுங்க பிளிஸ் உங்க கூடவே கூட்டிட்டு போயிடுங்க "
என அழுபவளை பார்த்து சிரிப்பதா வருத்தபடுவதா என தெரியவில்லை..
" பாரு பட்டு உன்ன விட்டு எங்கயும் போக மாட்டேன் உன் கூடவே தான் இருப்பன் ஓகே சண்டே புல் டே உன் கூடவே இருக்கன் போதுமா இப்ப கிளம்பலாமா "
என அவளை சமாளித்தவன் கிளம்பி அவளை ஹாஸ்டலில் விட்டு கிளம்பினான்..
மறுநாள்
" சார் உங்கள பாக்க இரண்டு பேர் வந்துருக்காங்க "
" யாரு "
" வில்லேஜ் ப்ராஜட் விஷயமா வந்துருக்கோனு சொன்னாங்க "
" ஓ சரி வர சொல்லு அப்படியே அஜய் வர சொல்லு "
என தனது பிஏ க்கு உத்தரவு இட்டவன் அடுத்த வேலை செய்ய
" வணக்கம் தம்பி "
" வாங்க வந்து உட்காருங்க "
அதற்குள் அஜய் வர அடுத்த கட்ட பேச்சு வார்த்தை ஆரம்பம் ஆனது....
பூர்ணி வீட்டில்
" இந்த வாரம் பூர்ணி ய வர சொல்லி அவளுக்கு கல்யாண ஏற்பாட சொல்லிடலாமாங்க "
என சுமதி தயங்கி தன் கணவன் சிவராமனிடம் கேட்க
" இப்ப அதுக்கு என்ன அவகிட்ட கேட்ட எல்லாம் முடிவு பண்ணுறோம் "
" ஏங்க நம்ம புள்ள தான ஒரு வார்த்தை அவளுக்கு சம்மதமானு கேட்க மாட்டிங்களா "
" என்ன டி எழுத்து எழுத்து பேசுற நல்லது எதுனு நமக்கு தெரியும் அவ சின்ன புள்ள நீ எதும் பேசி அவள குழப்பாத போ போய் வேலைய பாரு "
" ஏய் அரமெண்டல் அவன் உன் பர்த்டேக்கு என்னலா செஞ்சான் நீ என்னனு அவனுக்கு பர்த்டே வானு கேக்குற "
" சாரி அஜ்ஜூ எனக்கு என் பர்த்டேவே மறந்துடும் மறந்துட்டேன் பா "
" சரி சரி சார்ட்டே நைட்டு கிளம்பி இரு சண்டே அவன் பர்த்டேவ ஜாமாய்க்குறோம் "
" ஓகே டன் "
என இருவரும் கைதட்டி சிரிக்க பொழுது கழிந்தது...
சனிக்கிழமை இரவு அந்த பப் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு நவநாகரிக ஆண்கள் பெண்கள் என பலர் இருக்க வழக்கமாக சித் அஜய் இருவருக்கும் இடையே நடக்கும் போட்டி நடந்தது...
இம்முறை அஜய் ஜெயிக்க சுற்றி இருந்த கூட்டம் ஆரவாரம் எழுப்பி சத்தம் கிளம்ப ஆடல் பாடலுடன் ஆரம்பமானது...
பூர்ணிக்கு இது எல்லாம் புதியதாக இருந்தது இது எதும் அவளுக்கு புரியவும் இல்லை பிடிக்கவும் இல்லை இருப்பினும் சித்தார்த் க்காக பொறுமை காத்து இருந்தாள்....
தொடரும்....
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சகோ ஆனால் இன்னும் 11,12,13,பதிவுகள் இல்லை சகோ
🙄🙄🙄🙄🙄🙄
சகி என்னுடைய 10 வந்து பதிவில் கீழே 11 12 13 அத்தியாயம் வரிசையாக கொடுத்து இருக்கிறேன் சகி படித்து பாருங்கள்
 
Status
Not open for further replies.
Top