All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதை தகவல் திரி

G

geethanjali

Guest
Hi unga free novel Amazon la not available and kindle app la unga name kuduthalum novel ela pls check pannunga
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi unga free novel Amazon la not available and kindle app la unga name kuduthalum novel ela pls check pannunga
varudhe ma.. store la poi search la "aruna" nu koduthale varum ma.. india dhane ma
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

நான் உங்கள் அருணா..

மீண்டும் ஒரு சந்தோசமான செய்தி..

இப்போது வெளியான என் கதை "என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ" இப்போது வி கேன் shopping தளத்தில் வந்துவிட்டது பேபிஸ்..

ஆன்லைனில் வாங்குபவர்கள் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம் டியர்ஸ்..

வாய்ப்பளித்த ஸ்ரீ அக்காவிற்கும் பிரியா நிலையத்திற்கும் பெரும் நன்றிகள்..

பேபிஸ் புத்தகம் வாங்கி படிச்சுட்டு உங்கள் கருத்தை பகிர்ந்துக்கோங்க டியர்ஸ்.. காத்திருக்கிறேன் மா..


*****************

குட்டி teaser...

கடந்து சென்ற நிமிடங்கள் முழுவதும் பயத்திலும் பிரார்த்தனையிலும் கழிய மனதை நூறு முறை திட படுத்தி கொண்டு அவள் ஒரு காலை காற்றில் வைத்து, மறுகாலையும் தூக்கிய போது அவள் மனம் இதோ முடிந்து விட்டது என்று அனற்ற, திடீரென்று அவளை ஒரு வலிய கரம் பிடித்திழுத்து....

அவன் இழுத்த வேகத்தில் அவள் அவன் மேலே விழ அவளை தாங்கி நின்றவன் "என்ன செய்கிறாய்.." என்றான் கோப குரலில்..
பார்ப்பதற்கு சிறு பெண் போல் இருப்பவள் இப்படி ஒரு முடிவை எடுத்தது அவனுக்கு கோபத்தை விளைவித்தது...

ஒரு நொடி என்ன நடந்தது என்றே தெரியாமல் அவள் விழிக்க "ஏய் உன்னை தான்... இங்கே பார்.. என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறாய்.. அப்படி உனக்கு என்ன பிரெச்சனை..." என்றான்...

அவன் கனல் குரலில் அவனை அவள் அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தாள்.. அவளை விட இரண்டு அடி உயரமாக இருந்தவன் கைகள் ஏதோ கட்டை போல் இருந்தது...

அதன் வலிமையில் தான் இப்படி வந்து விழுந்திருக்கிறோம் என்று
அவளுக்கு புரிய அதற்கு பிறகு தான் அவன் கேள்வி அவளுக்கு
ஞாபகம் வந்தது...

அவள் அவனையும் பயத்துடன் பார்த்து வைக்க "இப்போது சொல்ல போகிறாயா.. இல்லையா... இல்லையென்றால் நீ குதித்துக்கொள்.. நான் போகிறேன்.." என்றான் அவன் எரிச்சலுடன்..

உதவி செய்ய வந்தவனை சந்தேகமாக பார்த்தால் அவனுக்கு கோபம் வராதா...

அவனது கோபமான பேச்சில் தன் தவறை உணர்ந்து கொண்டவள் தனது பிரெச்சனைகளை பற்றி மென் குரலில் அவனிடம் கூறினாள்..

"இதற்கு சாவு தான் தீர்வென்று உனக்கு யார் சொன்னது.. வாழ்ந்து பார்க்கலாம் என்ற எண்ணமே இந்த காலத்து பெண்களுக்கு வராது போல்.." என்று சலித்துக்கொண்டான் அவன்..

"சார் நானும் சாக வேண்டும் என்று நினைக்கவில்லை.. நான் வேற என்ன செய்வது சொல்லுங்கள்.. எனக்கு எங்கே போவது, என்ன செய்வதென்று தெரியவில்லை.. ஏதேனும் முயற்சி செய்யலாம் என்றால் கூட அது வரை இப்போது என்னிடம் வம்பு செய்தது போல் ஆட்கள் சும்மா இருக்க வேண்டாமா.." என்று அவளும் சிறு கோபத்துடன் கேட்டாள்...

அவளுக்கு மட்டும் என்ன சாக வேண்டும் என்று ஆசையா.. அவள் நிலை புறியாமல் இவன் வேறு கோபப்பட்டுக்கொண்டு..

அவள் பேசி முடித்ததும் அதில் இருந்த நியாயம் சிறிது அவனுக்கும் உரைத்தது போல் அதனால் குரலை மட்டும் தனித்து கொண்டவன் "எதற்குமே சாவு முடிவு இல்லை.. ஒரு முறை பிரெச்சனை என்றால் மறு முறை முயற்சிப்பதை விட்டுவிட்டு இது முட்டாள் தனம் தான்.." என்றான் அழுத்தமான குரலில்..
சிறிது நாட்களுக்கு முன் ஏற்பட்ட ஒரு தற்கொலை அவனை எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது என்பது அவனுக்கு தானே தெரியும்..
அவன் கூறுவது சரி என்று தோன்றி அவள் பேசாமல் நிற்க "உன் பெயர் என்ன.." என்றான்.."

“மீரா.." என்று அவள் கூற

"ஐ எம் விதார்த் வருண்.. என்னுடன் வா.. உனக்கு நான் வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்.." என்றான் தொடர்ந்து..

மீண்டும் அவள் லேசாக சந்தேக பார்வை பார்க்க போக "ஏய் வேண்டாம் அப்பறம் பேசாமல் சென்று விடுவேன்.." அவன் எச்சரிக்கையில் பேசாமல் அவன் பின்னால் சென்று விட்டாள் மீரா.. அவளுக்கும் வேறு வழி இல்லையே...

விதார்த் சென்னையில் மிக பெரிய தொழிலதிபன்..

ஊட்டியில் தனக்கு இருக்கும் எஸ்டேட்டில் சில நாட்கள் ஓய்வெடுக்க தான் வந்திருந்தான்..

அன்று இரவு மீண்டும் சென்னை திரும்பும் போது தற்செயலாக வண்டியை நிறுத்திய போது தான் மீராவை பார்த்து விட்டு வந்து காப்பாற்றினான்..

இப்போது அவளை காரில் ஏற சொன்னவன் தானும் ஏறி அமர்ந்து கொண்டு "சென்னை செல்ல வேண்டும்.. எப்படியும் நாளை மதியம் ஆகி விடும்.. தூங்குவதென்றால் தூங்கு.." என்றான்...

மீராவிற்கோ எங்கே தூங்குவதென்று இருந்தது.. ஒரே நாளில் எத்தனை குழப்பங்கள், எத்தனை மன போராட்டங்கள் மற்றும் வேதனைகள்.. இதில் எங்கே உறங்குவது, பேசாமல் அமைதியாக அமர்ந்து வந்தாள் மீரா..

மலையில் இருந்து கீழே இறங்கும் போது மீராவிற்கு வெகுவாக குளிர தொடங்கியது..

அவள் அணிந்திருந்த சுடிதாரரால் வெளியில் இருந்தும் கார் ஏ.சியில் இருந்தும் வந்த குளிரை தாக்கு பிடிக்க முடியவில்லை..

அவள் குளிரில் நடுங்குவதை கவனித்த விதார்த் "பின்னால் என் கோட் இருக்கு பார்.. எடுத்து அணிந்து கொள்.. இங்கிருந்து இறங்கி விட்டால் குளிர் குறைந்து விடும்.." என்றான்..

"இல்லை பரவாயில்லை சார்." என்று மேலும் குறுகி அமர்ந்து கொண்டாள் மீரா..

அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் "உன்னால் இந்த குளிரை தாங்க முடியும் போல் தோன்றவில்லை.. உனக்கு உடம்பு ஏதாவது முடியாமல் போனால் உன்னை அழைத்து கொண்டு மருத்துவமனைக்கு அலையைவெல்லாம் என்னால் முடியாது.. உதவி செய்த பாவத்திற்கு இன்னும் என்னை படுத்தாதே.." என்று அவன் எரிச்சல் குரலில் கூற, அவன் குரலில் இருந்த எரிச்சல் கஷ்டமாக இருந்தாலும் அவன் சொல்வது போல் அவனுக்கு மேலும் தொந்தரவாக இருக்க கூடாது என்று நினைத்தவள் பேசாமல் அவன் கூறியது போல் கோட்டை எடுத்து அணிந்து கொண்டாள்..

அது குளிருக்கு இதமாக இருந்தது.. அதில் இருந்த வந்த ப்ரெத்யேக நறுமணம் வேறு அவளை என்னவோ செய்தது..

அவளது சிறிய உடலுக்கு அவனது கோட் ஏதோ போர்வை போர்த்தியது அவளை முழுதாக விழுங்கி இருந்தது..

அந்த கோட் தந்த கதகதப்பிலும் அதன் நறுமணம் ஏற்படுத்திய இனம் புரியா உணர்விலும் அப்படியே கண் அயர்ந்து விட்டாள் மீரா..

தூங்கும் அவளை திரும்பி பார்த்த விதார்த்திற்கு 'இதெல்லாம் தேவை தானா' என்ற எண்ணம் எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை..

ஏற்கனவே அவன் ஒருத்திக்கு உதவி செய்கிறேன் என்று போய் அதனால் அவன் வாழ்வில் தொடர்ந்த நடந்து விட்ட நிகழ்வுகள் அவன் கண் முன் படமாய் ஓடியது..

'ஒரு முறை பட்டது பத்தாது என்று மீண்டும் தானே இழுத்து விட்டு கொண்டோமோ??' என்று தோன்றினாலும் 'இந்த வயதில் சாக துணிந்த சிறு பெண்ணை அப்படியே விட்டுவிட்டு செல்லவும் மனம் வந்து தொலைய வில்லையே' என்று நினைத்துக்கொண்டவன் தொடர்ந்து வண்டியை வேகமாக செலுத்தினான்.
காலை வேலையில் உளுந்தூர்பேட்டை வரை வந்திருந்தவன் அங்கிருந்த பிரபல உணவகத்தில் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பி மீராவை பார்த்தான்..

தலை ஒரு பக்கமாக ஜன்னல் புறமாக சாய்ந்திருக்க ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தாள் மீரா..

"ஏய்.." என்று அவன் அழைத்து பார்க்க அவளோ அசையவே இல்லை..

சட்டென்று அவள் பெயர் ஞாபம் வராததால் ஒற்றை விரலால் நெற்றியில் தட்டிக்கொண்டே சிறிது நேரம் யோசித்தவன் "யா.. மீரா.. மீரா.." என்று தனக்குள் கூறிக்கொண்டு

"மீரா.." என்று அவளை அழைத்தான்..

அவன் குரலில் தூக்கம் களைந்து எழுந்தவளுக்கு ஒரு நொடி தான் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை..

பக்கத்தில் விதார்த்தை பார்த்ததும் நடந்ததெல்லாம் நினைவு வர நேராக எழுந்து அமர்ந்தாள்..

"இறங்கி வா ஏதாவது சாப்பிட்டுவிட்டு செல்லலாம்.." என்று கூறி அவன் இறங்கி விட காரில் இருந்து இறங்க போனவளுக்கு அப்போது தான் தன்னை சுற்றி இருந்த கோட் ஞாபகம் வந்தது..

ஏனோ அதை கழட்டவே அவளுக்கு மனம் வரவில்லை.. அந்த கோட் மனதில் தனி ஒரு தைரியத்தை கொடுப்பதையும் அவள் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டி இருந்தது..
வேறு வழி இல்லாமல் அந்த கோட்டை கழட்டி வைத்துவிட்டு காரில் இருந்து இறங்கினாள் மீரா..

அப்போதுதான் அந்த காரையே ஒழுங்காக பார்த்தாள்.. இரவு இருளில் எதுவும் சரியாக தெரியாமல் இருக்க, இப்போது அந்த காரின் ப்ரமாண்டமே அவளை பயமுறுத்தியது..

அதன் விலையே கோடிகளில் இருக்கும் என்று தோன்றியது மீராவிற்கு..

வித்தார்த் மிகவும் பெரிய ஆளாக இருப்பாரோ என்று யோசித்துக்கொண்டே அவள் நிற்க, முன்னாள் இரண்டடி நடந்திருந்தவன் மீரா வராததை உணர்ந்து திரும்பி "வாட்.." என்றான் ஒற்றை புருவம் மட்டும் உயர்த்தி..

அவன் கேள்வியில் நினைவிற்கு மீண்டவள் "ஒ.. ஒ.. ஒன்றும் இல்லை.." என்று கூறிக்கொண்டே அவனை தொடர்ந்தாள்..
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

மற்றுமொரு சந்தோசமான செய்தி.. என் புத்தகம் "என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ ஆன்லைன்யிலும் கடைககளுக்கும்" வந்துவிட்டது டியர்ஸ்..

கீழே லிங்க் அண்ட் முகவரி தரேன்.. புத்தகம் வாங்குபவர்கள் வாங்கி படித்து உங்கள் ஆதரவை கொடுங்கள் பேபிஸ்.. நீங்கள் புத்தகத்திற்க்கு தரும் ஆதரவு தான் எங்களை மென்மேலும் வளர்க்கும் டியர்ஸ்..

Sri Kala அக்காவிற்கும் பெரிய பெரிய நன்றி கா.நீங்க கொடுத்த வாய்ப்பில்தான் கா இது எல்லாமே லவ் யூ கா..😘😘😘😘😘

ப்ரியா நிலையத்திற்கும் மிக பெறிய நன்றிகள்..

சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்குமிடம்:

புத்தக விலை: 210

Stall number 280 Priyanilayam

ஆன்லைன்:



marinabooks.com (8883488866 marina books ku இந்த எண்ணில் அழைத்து order செய்து கொள்ளலாம்..)

கடைகள்:

Vijaya pathipagam Coimbatore,Erode.
Malligai books Madurai
Devathi books Trichy
Om Muruga Salem
Indu Book park Erode
Mumtaz Karaikudi
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டீஸ்,

" என் இருள் வானில் ஒளி நிலவாய் நீ" விதார்த் அண்ட் மீராவிதம் இருந்து குட்டி டி...


*************************

மீரா வீட்டை அடைந்த போது வீடே அமைதியாக இருந்தது.. வேலைகள் அது பாட்டிற்கு எப்போதும் போல் நடந்து கொண்டிருக்க அங்கு அவளுக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை.. வீட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதே மனதில் நம்பிக்கையை கொடுக்க யாரையும் எதுவும் கேட்காமல் நேராக தங்கள் அறைக்கு சென்றாள் மீரா..

அங்கே அவனை காணாமல் தடுமாறியவள் பக்கத்தில் இருந்த அவனது சிறிய பாரில் இருந்து சத்தம் வர, அங்கு சென்றாள்..

அவள் கணவன் தான் அமர்ந்திருந்தான்.. அவள் இந்த வீட்டிற்கு வந்த போது முதல் முதலாக எப்படி கைகளில் கிளாஸ்ஸுடன் அமர்ந்திருந்தானோ, அதே போல் அமர்ந்திருந்தான்..

அவள் வரவை உணர்ந்து விதார்த் அவளை வெறித்து பார்க்க, மீராவிற்கோ கணவனை கண்ட சந்தோசத்தில் வேறு எதுவுமே மூளையில் உரைக்கவில்லை..

"விது.." என்று கத்திகொண்டே அவனிடம் ஓடி வந்தவள், அவனை இறுக அணைத்திருந்தாள்...

அவள் அணைத்த வேகத்தில் தன் கைகளில் இருந்த கிளாஸ்ஸை கீழே வைத்தவன், அவளை திருப்பி அணைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தான்..

"விது உங்களுக்கு ஒன்றும் இல்லையே விது.. பேப்பரில்.. பேப்பரில்.." என்று அதற்கு மேல் கூற முடியாமல் திணறினாள் மீரா..

அவன் மார்பில் முகம் புதைத்து அழுதவள் பின் அவனை தலை முதல் கால் வரை ஒரு முறை நன்றாக ஆராய்ந்தாள்..

"உங்களுக்கு ஒன்றும் இல்லை தானே விது.." என்று ஒருவாறு அவள் அழுது ஓய்ந்து கண்களை துடைத்து கொண்டு கேட்க, அவளை கூர்மையாக பார்த்தான் விதார்த்..

அவன் பார்வை வீச்சு தாங்காமல் அவள் விழிக்க அடுத்த அவன்
கைகள் அவள் கன்னத்தில் வேகமாக இறங்கி இருந்தது...

"முட்டாள்.." என்று கர்ஜித்தவன் குரலில் அத்தனை கோபம்..

கண்கள் எல்லாம் சிவந்து உச்சகட்ட கோபத்தில் நின்றிருந்தவனை பார்க்க அவளுக்கு அத்தனை பயமாக இருந்தது..

கன்னங்கள் வேறு அவன் விட்ட அறையில் வின் வின் என்று தெறித்து வலிக்க, அதை பிடித்து கொண்டே அவனை பார்த்திருந்தாள் மீரா..

"அறிவு இருக்கா டி உனக்கு.. என்ன நினைத்து இப்படி ஒரு முடிவெடுத்தாய்.. போனவ அப்படியே போக வேண்டியது தானே.. நான் இறந்து விட்டேன் என்று செய்தி பார்த்ததும் ஏன் வந்தாய்..? பால் ஊற்றி விட்டு போகவா..?" என்று அவன் மேலும் கத்த

"ஐயோ என்ன பேசறீங்க விது.." என்று தன் காதுகளை இரு கைகளால் அழுந்த மூடி கொண்டாள் மீரா..

மெதுவாக அவள் அருகில் எழுந்து வந்தவன் அவள் கைகளை அழுத்தமாக பிடித்து காதில் இருந்து எடுத்து "வேறு எப்படி பேசுவது..? இது ஒன்றும் பெரிய ஆச்சர்யம் இல்லையே... என்றாவது ஒரு நாள் நடக்கும் தானே.. பின் என்ன.." என்று மேலும் அவளை குதற

"அப்படி பேசாதீங்க விது ப்ளீஸ்.." என்று முகத்தை மூடி கொண்டு கதறி விட்டாள் மீரா..

அத்தனை நேரம் கோபத்தில் கத்திக்கொண்டிருந்தவனுக்கு அவள் கதறவும் அதை தாங்க முடியவில்லை..

சில நிமிடம் இறுகி போய் நின்றிருந்தவன் அதற்கு மேல் முடியாமல் "பேபி.." என்று அவளை அணைத்திருந்தான்..

அவன் அணைத்ததும் அவன் மார்போடு ஒன்றிக்கொண்டவள், மேலும் கேவிக்கொண்டிருந்தாள்..

"ப்ச் அழாதே பேபி.. ஏன் இப்படி செய்தாய்.. நான் எவ்ளோ துடித்து விட்டேன் தெரியுமா.. இனி என்னை விட்டு போக மாட்டாய் தானே.." என்று அவளை அணைத்துக்கொண்டு விதார்த் கேட்க, மாட்டேன் என்பது போல் அவள் தலை மட்டும் வேகமாக அசைந்தது..

அதில் லேசாக சிரித்து கொண்டான் விதார்த்..

மீராவிற்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது, இனி நிச்சயம் இப்படி ஒரு அதிர்ச்சியை அவளால் தாங்க முடியாது.. இனி அவனாக அவளை வீட்டை விட்டு செல்ல சொல்லும் வரை அவளாக எங்கேயும் செல்ல போவதில்லை.. வாழும் காலம் வரை அவன் முகத்தையாவது பார்த்துக்கொண்டே வாழ வேண்டும் என்று நினைத்திருந்தாள்...

அவன் கொடுத்த செய்தி அவன் எதிர்பார்த்த மாற்றத்தை முழுவதுமாக அவளுக்குள் விதைத்திருந்தது..

மெதுவாக அவள் முகத்தை பிடித்து நிமிர்த்தியவன் "பேபி என்ன குழப்பம் உனக்கு.. நான் உன்னை விரும்பவில்லை என்று ஏன் தீடிரென்று தோன்றியது.. அதை வார்த்தைகளால் கூறாததாலா.. 'ஐ லவ் யு பேபி'.." என்று ஆசையாக அவள் முகம் பார்த்து அவன் கூற, அவள் முகமோ நிராசையையே காட்டியது..
என்னதான் அவனை விட்டு பிரிவதில்லை என்று முடிவு செய்து விட்டாலும், அவனது அந்த வார்த்தையை மட்டும் அவளால் நம்ப முடியவில்லை...

ஒருவேளை சில நாட்கள் முன் சொல்லி இருந்தால் நம்பி இருப்பாள்.. ஆனால் அன்று அவனது வார்த்தைகளில் இருந்த வெறுப்பை கேட்டபின் அதை அவளால் நம்ப முடியவில்லை..

அவளது நம்பிக்கை இல்லா முகத்தை பார்த்தவன் சட்டென அவளை விட்டு விலகி விட்டான் விதார்த்..

"என்ன பேபி இது..? என்னை நம்பவில்லையா.." என்று இறுகி விட்ட குரலில் கேட்க, அவளோ பதில் கூறாமல் தலை குனிந்தாள்..

அதிலேயே அவள் மனம் அவனுக்கு புரிந்துவிட்டது..

அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் ஒரு நொடி திணறி விட்டான் விதார்த்..

"என்ன பேபி இது..?" என்று குழப்பத்துடன் தலை கோதி கொண்டவன் "இப்போ என்ன அதனால் மீண்டும் என்னை
விட்டு செல்ல போகிறாயா.." என்று விதார்த் கேட்க

"இல்லை நீங்களாக வேறு யாரையாவது விரும்பி என்னை போக சொல்லும் வரை நான் போக மாட்டேன்.." என்று தெளிவாக கூறினாள் மீரா..

"இதை மட்டும் தெளிவா பேசு.." என்று தலையில் அடித்துக்கொண்டான் விதார்த்..

இருந்தும் அவள் செல்ல மாட்டேன் என்று கூறியதே நிம்மதியாக இருக்க, கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு புரிய வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டான்..

"சரி பேபி.. நான் உன்னை விரும்பவில்லை என்று வைத்துக்கொள்வோம்.. நீ என்னை விரும்புகிறாய் தானே..?" என்று அவன் கண்களில் குறும்புடன் கேட்க, இவருக்கு எப்படி தெரியும் என்று திருதிருவென விழித்தாள் மீரா...

"என்ன பேபி முழிக்கற.. நீ என்னை விரும்புகிறாய் தானே.." என்று மீண்டும் அழுத்தி கேட்டான் விதார்த்..

அதற்கு பொய் உரைக்க முடியாமல் 'ஆம்' என்பது போல் மெதுவாக தலை அசைத்தாள் மீரா...

'எதற்கெடுத்தாலும் தலையை உருட்டு..' என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டவன்

"தென் ப்ரொபோஸ் மீ.." என்றான்..

மீண்டும் 'ங' என விழித்தாள் மீரா..

"கம் ஆன் பேபி.." என்று அவன் குறும்புடன் கூற, அவள் மேலும் விழித்தாலே ஒழிய வார்த்தை வரவேயில்லை...

மெதுவாக அவள் அருகில் வந்து அவள் முகத்தை ஒற்றை விரல் கொண்டு நிமிர்த்தியவன் "சொல்லு பேபி.. நான் சொல்வதை தான் நம்ப மாட்டேன் என்கிறாய்.. நீயாவது சொல்லு.. நான் உன்னை போல் நம்ப மாட்டேன் என்றெல்லாம் கூற மாட்டேன்.. சமத்தாக நம்புவேனாக்கும்.. சொல்லி பாரேன்.."

பேசிக்கொண்டே இருந்தவன் அவளை அப்படியே தன் கை வலையத்திற்குள் கொண்டு வந்திருந்தான்..

"பேபி இப்போ நீ சொன்னால் தான் என் கையை விட்டே செல்ல முடியும்.." என்று அவள் காதோரத்தில் கிசுகிசுப்பாக கூற, அவளுக்கோ கூசி சிலிர்த்தது..

சும்மாவே பேச வராது இதில் இவன் இப்படி வேறு கேட்டாள் என்ன தான் செய்வது என்று தெரியாமல் திணறினாள் மீரா..

அவள் திணறலை ரசித்துக்கொண்டு விதார்த் நின்றிருக்க தீடிரென்று வெளியில் இருந்து "ஐயா.." என்று குரல் கேட்டது..

"கரடி.." என்று சத்தமாக முணுமுணுத்தவன் "எனக்குன்னே
வருவானுங்க.." என்று புலம்பி கொண்டே மீராவை விட்டு விலகினான்..

அவன் புலம்பலில் மீரா லேசாக சிரிக்க "சிரிக்காத டி.." என்று கிசுகிசுப்பாக கூறிவிட்டு வெளியே வந்தான் விதார்த்..

அங்கு நின்றிருந்த வேலையாள் "அய்யா உங்களை பார்க்க யாரோ வந்து இருக்காங்க.." என்று கூற

"இதோ வரேன்.." என்று மீராவை கண்களாலேயே தன்னை தொடருமாறு செய்கை செய்து விட்டு சென்றான்..

புத்தகம் கிடைக்குமிடம்:

chennai book fair

priya nilayam stall no:280
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயத்துடன் வந்திருக்கிறேன் .
" மறுஜென்மம் வேண்டுமோ " கதை நேரடி புத்தகமாக வெளிவந்துள்ளது..

முதல் நன்றி நம்ம ஸ்ரீகலா அக்காவிற்கு தான். அவர்கள் இல்லாமல் எதுவுமே சாத்தியம் இல்லை.. தொடர்ந்து புத்தகம் வெளியிட்டு வரும் பிரியா நிலையத்திற்கும் பெரும் நன்றிகள்..🥰🥰🥰

எப்போதும் என்னுடன் பயணிக்கும் வாசகம் செல்லங்களுக்கும், எழுத்தாள தோழிகளுக்கும் பெரும் நன்றிகள்..

கதைக்கான teaser லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.. புத்தகமாக வாங்கி படித்துவிட்டு நிச்சியம் உங்கள் ஆதரவை வழங்குங்கள்.. நன்றி பேபீஸ். லவ் you ஆல்..

புத்தகம் கிடைக்கும் link:


teaser link:


View attachment 21727
 
Top