All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கல் நெஞ்சே கசிந்துருகு " கதைப் பகுதி

Status
Not open for further replies.

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளே...

மன்னிக்கவும். கதையை பதிவிடுவதற்காக வரவில்லை. சில காரணங்களால் என்னால் கதையை தொடர்ந்து (எழுத) பதிவிட முடியவில்லை. கதையை ஒரளவு முடித்த பின்பு வருகிறேன்.

அன்புடன்,
பூவினி.
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளே .....


ஒரு சிறிய முன்னோட்டம்......


அந்த இடமே அமைதியாயிருந்தது. குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவு அமைதி. தனிமையை விரும்புபவர்களை கூட அச்சம் கொள்ளச் செய்யும் மயான அமைதி.

அங்கு வெளிச்சமுமில்லை. அரையிருட்டாக இருந்தது. மதியின் நெற்றியில் பூத்த வியர்வை மொட்டுகள் மெல்ல பூமியைத் தழுவின.

அவளது இதயமோ தன் இயல்பான வேகத்தைக் காட்டிலும் அதிகமாகத் துடித்தது. இதே நிலைமை நீடித்தால் பயத்திலே தான் இறந்து விடுவோம் என்பதை மதி நன்கு உணர்ந்திருந்தாள்.

இருப்பினும் அவளால் பயத்தினைக் கட்டு படுத்த இயலவில்லை. புடவை முந்தானையை கையில் சுற்றி வாயில் வைத்து சத்தம் வராமல் தடுத்துக் கொண்டவளுக்கு தலை சுற்றியது.

ஒரு நிமிடம் எதற்காக இப்படி ஓடி ஒளிந்து உயிரைக் காத்துக் கொள்ள வேண்டும் . அந்த கயவர்களின் பிடியில் சிக்கி உயிரைப் போக்கி கொள்ளலாமா என்றிருந்தது.

அவளால் முடிந்தவரை அவளும் தன்னுயிரை காத்துக் கொள்ள முயன்று விட்டாள். இனியும் என்ன செய்வது என்று குழம்பியவளின் பாதத்தில் வலி எடுத்தது.

பாதத்தைப் பார்த்தவள் அதிலிருந்த கண்ணாடித் துண்டை வலியைப் பொறுத்துக் கொண்டு பிடுங்கி எறிந்தாள். இதுவரை மெலிதாக கசிந்து கொண்டிருந்த இரத்தம் தடை நீங்கிய மகிழ்வில் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

உயிர் பயம், பாதத்தில் இருந்த காயத்தின் வலி , இருள் என அனைத்தும் அவளுக்கு சூன்யமாய் தெரிய தனது கணவனை தேடினான் பேதையவள்.

இரவும் பகலும் தன்னைக் காத்து நின்றவனின் தோளில் சாய்ந்து கதற வேண்டும் போலிருந்தது அவளுக்கு. இனி அது முடியுமா??? இங்கிருந்து உயிரோடு செல்ல முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

எப்படியாவது இங்கிருந்து செல்ல வேண்டும் என அவளது மூளையில் உறைக்க , தனது கணவனை மனதினுள் நினைத்தவள் மெல்ல தன்னை சமன்படுத்த முயன்றாள்.

"மதி... பயப்படாத. உன்னால முடியும்" என தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டவள் மெல்ல அவ்விடத்திலிருந்த நகர அவளுக்கு அந்த பேச்சுக் குரல்கள் கேட்டன.

"எங்கடா போயிருப்பா.. தேடுங்கடா... இன்னைக்கு அவள விடக்கூடாது. ம்ம்ம்.... போங்கடா" என ஒருவன் அங்கிருந்த மற்றவர்களுக்கு கட்டளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

யார்க் கண்ணிலும் படாமல் ஒளிந்து தவழ்ந்து வத்தவளுக்கு எதிலோ இடித்தது போன்ற உணர்வு தோன்றியது. அந்த அரை இருட்டினில் என்னவென்று பார்க்க முடியாமல் அவள் அதை ஊன்றி பார்க்க இரத்தம் சில்லிட்டுப் போய் அமர்ந்தாள்.

அவள் தனது உதடுகளை கடித்து பயத்தைக் கட்டுபடுத்த முயல அவளது உதடுகள் அறுபட்டு இரத்தம் வழிந்தது. அந்த உணர்வு கூட இன்றி அவள் கீழே கிடந்ததையேப் பார்த்தாள்.

அவளிடம் புதிதாய் முளைத்த தைரியமும் காணாமல் போனது. இத்தனை நாட்கள் இல்லாமல் தனியே வந்த தன்னை நொந்துக் கொண்டவள். தன்னுடைய இறுதி நொடிகளுக்காக காத்து நின்றாள்.



அன்புடன் ,

பூவினி
 
Last edited:

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழமைகளுக்கு வணக்கம்....

புதிய தளம் என்பதால் முந்தைய பதிவுகளை மீண்டும் பதிவிடுகிறேன்....


அன்புடன்,
பூவினி
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1

பரபரப்பாக இருந்தது அந்த சாலை. வாகனங்களின் நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார்கள் காவலர்கள்..

அலுவலகத்திற்கு செல்பவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர்.

தாய் பறவையின் சிறகின் கீழே பாதுகாப்பை தேடும் சிறு பறவைகள் போல அனைவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த முயன்றுக் கொண்டிருந்தனர்..

இதற்கெல்லாம் காரணம் நகரையே உலுக்கிய கொலை சம்பவத்தின் தீர்ப்பு இன்று என்பது தான்... சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் அது...
குற்றம் சாட்டப்பட்ட நபர் நகரின் மிகப் பெரிய ரௌவுடி..

தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்கள் நடக்கும் நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய காத்து கொண்டு இருந்தனர்...

நீதிமன்ற வளாகம்......

கருப்புடை அணிந்த வழக்கறிஞர்கள் பலர் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர்...

"எனக்கு தெரியும் மணி சார். ராம் இந்த கேஸ்ல ஆஜர் ஆகும் போதே அவர் தான் ஜெயிப்பார்னு"

"ஆமாம் அதனால தான அவருக்கு ஆப்போஸிட்டா யாருமே ஆஜர் ஆகல. வேற வழியில்லாம நம்ம கோபால் தான் ஆஜராக வேண்டியதாச்சு"

" ஆமாமா... கோபாலும் முடிஞ்ச அளவுக்கு போராடினார். ஆனா ராம எதிர்த்து ஜெயிக்க முடியுமா?"

"அது உண்மைதான். ராம் ரொம்ப திறமையானவர் கூடவே நேர்மையானவர். அவருக்கு சரினுப்பட்டா மட்டும் தான் அவர் ஆஜராவார். கண்டிப்பா ஜெயிக்கவும் செய்வார்."

"அதோட அவரு இந்த தமிழ்நாட்டோட நம்பர் ஒன் பணக்காரரோட பையன் , வசதிக்கு குறவில்ல. ஆள்பலம், பணபலம் ரெண்டும் இருக்கு. அதனால யாரும் அவர நெருங்க முடியாது. நாம அப்டியா"

" நீங்க சொல்றதும் சரிதான். இதுவே இந்த கேஸ்ல நாம ஆஜராகிருந்தா நாம இந்நேரம் இருக்க மாட்டோம்"

இப்படி பலர் பல விதமாக பேசிக்கொண்டிருக்க , அவர்கள் பேச்சின் நாயகனோ அமைதியாக எந்த வித ஆர்ப்பாட்டமுமின்றி தனது ஃபேஸன் ப்ரோவில் வந்து இறங்கினான்.

எல்லாரும் அவனை அவர் இவர் என்று அழைத்தாலும் இன்னுமும் இருபத்தியெட்டு வயது பூர்த்தியடையாத இளைஞன் தான் ராம் சுந்தர். நல்ல கம்பீரமான அழகுடைய ஆறடி உயர இளைஞன்.

பல பெண்களின் கனவு நாயகன். தமிழ்நாட்டின் மிகச்சிறந்த வக்கீல். இளம் வயதிலேயே பல சவாலான வழக்குகளை கையாண்டவன்...

அவனுடைய பைக்கை விட்டு அவன் இறங்க காத்திருந்தது போல , அவன் இறங்கிய நொடி பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டார்கள்...

" சார்....... சார்..... சொல்லுங்க சார். இந்த கேஸ்ல நீங்க தான் ஜெயிப்பீங்கனு எல்லாரும் பேசுறாங்க. அதபத்தி நீங்க என்ன நினைக்குறீங்க"

" அந்த ரௌடிக்கு என்ன தண்டன கிடைக்கும்" என அடுக்கடுக்கான கேள்விகள் அவன் முன் வைக்கப்பட, மெல்லிய புன்னகையுடன் " ப்ளீஸ் பிரண்ட்ஸ்.. அப்புறம் பேசலாம். நான் போகணும்" என்று கம்பீரமாக அவர்களிடம் விடை பெற்றான் ராம்..


இரண்டு மணி நேரங்கழித்து....

"பரபரப்பா பேசப்பட்ட இந்த கொலை வழக்குல, குற்றம்சாட்டப்பட்ட ரௌடி தான் கொலைகளை செய்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் ரௌடி ராஜா விற்கு இரட்டை ஆயுள் தண்டனையும் , ஐம்பது லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட குடும்பத்தின் தலைவரான அருள் நம்மோடு இருக்கிறார்...

சொல்லுங்க சார், நீங்க தீர்ப்ப நினச்சு என்ன மாதிரி பீல் பண்றீங்க"

"அவனுக்கு இந்த தண்டனை பத்தாதுமா. அவனத் தாக்குல் தொங்க விடணும் .ஆனா போன தடவ நிரபராதினு விடுதலை செஞ்சப்ப நான் நொறுங்கிட்டேன். ராம் தம்பி மட்டும் இல்லனா அவனுக்கு இந்த தண்டன கூட கிடச்சுருக்காது. ராம் தம்பி செஞ்ச உதவிய நான் என்னைக்கும் மறக்க மாட்டேன்."

அவர் பேசிக்கொண்டிருக்கும் போது கோர்ட் வாசலிலிருந்து ராம் வெளியே வந்தான். அருள் ஓடிச்சென்று அவனது கால்களில் விழப்போக அவரைத் தடுத்து அவரது தோள்களில் கைப்போட்டுக் கொண்டவன் அவரிடம் ஏதோ பேசிவிட்டு தனது வாகனத்தில் ஏறி சென்றுவிட்டான்.

இதையனைத்தையும் அங்கிருந்த கேமராக்கள் உள்வாங்கிக் கொண்டு இருந்தன. அடுத்த ஐந்தாவது நிமிடம் அவை தமிழகமெங்கும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எல்லோரும் ராமின் தைரியத்தை பாராட்டிக் கொண்டிருக்க , ராமோ தனது ஃபேஸன் ப்ரோவில் அந்த மாளிகையின் முன் நின்றான். அதன் கதவு அவனுக்காக திறக்கப்பட்டது. ஐந்தாறு நபர்கள் ஒடிவந்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர்..

அனைவருக்கும் புன்னகையை பதிலாக தந்தவன் ஆடம்பர மாளிகையினுள் நுழையாமல், மாளிகையின் பின்புறம் இருந்த சிறிய வீட்டிற்குள் சென்றான்.....

சிறியதாக இருந்தாலும் நேர்த்தியாக இருந்தது அந்த வீடு. வீட்டினுள்ந நுழைந்தவன் ஹாலில் யாரும் தென்படாததால் கிச்சினுக்கு சென்றான். அங்கும் ஆள் நடமாட்டம் இல்லை என்றதும் , மூடியிருந்த பாத்திரங்களை திறந்து தனக்கு தேவையானவற்றை எடுத்து ஒரு தட்டில் வைத்து சாப்பிட ஆரம்பித்தான்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐந்து நிமிடங்களில் ஒரு வளைக்கரம் அவனது தலையை வருடியது. அதை உணர்ந்த அவனது முகம் மிகவும் மென்மையானது.

"ம்மா " என்றபடி அவன் திரும்ப , " எப்ப கண்ணா வந்த. கூப்டுருக்கலாம்ல" கனிவுடன் கூறிய அவரை பாசத்துடன் பார்த்தான்.

அவனுடைய தட்டைப் பார்த்தவர் " என்ன கண்ணா தண்ணி பக்கத்துல இல்லாம சாப்ட கூடாதுனு சொன்னேன்ல. இரு கொண்டு வரேன்" என்ற படி அவர் எழ அவரது கரம் பிடித்து தடுத்தவன் அவனது தட்டைப் பார்த்தான்.

அவனது பார்வையின் அர்த்தத்தை உணர்ந்தவர் புன்சிரிப்புடன் அவனுக்கு ஊட்டி விட ஆரம்பித்தார். அவனது உணவு முடிந்ததும் எழுந்தவன் அவரிடம் அவரது உணவு மற்றும் மாத்திரை பற்றி கேட்டறிந்தான்.

"ம்மா ஸ்ரீ ஆபிஸ் போய்ட்டானா"
"போய்ட்டான் கண்ணா"
அவரிடம் விடைபெற்றவன் மாளிகையினுள் நுழைந்தான்.

காணும் இடமெல்லாம் செல்வத்தை பறைசாற்றுவதைப் போல இருந்தது அந்த மாளிகை. அவனை கண்ட அனைவரும் அவனுக்கு சலாம் சொல்ல , ஒரு தலையசைப்போடு தன் தந்தையின் அறையை நோக்கி சென்றான்.

" என்ன ராம் சாப்டியா. கமலா சாப்டாச்சானு கேட்டியா"

" சாப்டேன்பா. அம்மா சாப்டாங்க. நீங்க?."

"சாப்டேன் ராம். டி.வில நியூஸ் பாத்தேன். ரொம்ப பெருமையா இருக்குபா".

அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவன் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றான்...

அங்கே ஆளுயர போட்டோவில் தன்னுடன் சிரித்துக் கொண்டிருந்த ஸ்ரீ யின் உருவத்தை வருடினான்...

அவனது நினைவலைகள் ஸ்ரீயை முதன் முதலில் சந்தித்த நாளை நோக்கி சென்றது....


அதே நகரம் அந்நகரத்தின் பிரபலமான கல்லூரி ஒன்றில் நகத்தை கடித்தப்படி பதட்டத்தோடு அமர்ந்திருந்தாள் வெண்மதி. பெயருக்கு ஏற்றாற்போல் வானுலக மதிக்கு நிகரான அழகுடன் இருந்தாள்.

கருமேகத்தினை ஒத்திருந்த கூந்தல் இடையைத் தாண்டி நீண்டிருந்தது. மெல்லிய பதட்டத்துடன் ஒப்பனையற்ற அவளுடைய முகம் ஜொலித்தது.

" என்னாச்சு மதி , ஏன் இவ்ளோ பதட்டமா இருக்க" கேட்டபடி அவளுடைய கையை தொட்டாள் நிவேதிதா. அவளது திடீர் தொடுகையை எதிர்பார்க்காத மதி மீண்டும் அரண்டு விழித்தாள்.

"ஏய்.... ஏண்டி எல்லாத்துக்கும் இப்படி பயப்படுற. சரி சொல்லு என்னாச்சு"

"அது...... அது....."

" அதுக்கு அப்றம் சொல்லுடி"

"இதப்பாரு " என்றபடி கையிலிருந்த கடிதத்தையும், கேட்பெரி சாக்லெட்டையும் நிவியிடம் கொடுத்தாள்.


"என்னடி இது" என்று கடிதத்தைப் பிரித்து படித்தவளது முகம் சற்று வெளிறியிருந்தது..



அவளின் மனமோ அத்துவை நினைத்து உருகியது.


எந்தன் காதல் என்னுள்ளே
புதைந்திட வேண்டுகிறேன்- நீ
என்னை மறந்து தொலைவில்
சென்றிட விரும்புகிறேன்!

கருவறையாய் மாறிட
எண்ணினேன் அன்பே
காயங்களாய் மாறியது
விதியின் வலிமையோ!

எந்தன் கடலாய் நீயும்
கண்முன்னே விரிந்திருக்க
கலந்திட இயலாமல்
கரையினில் நானே!

அலையோடு உனைச்சேர
தடையும் நானன்றோ!
தடையினை அறியாமல்
துடிப்பதும் நீயன்றோ!

உனதருமை நலன்வேண்டி
தனிமைதனை நாடி
சிறைவாசம் செய்கிறேன்!

உண்ணும் உணவும்
உன்னை உணர்த்திட
உண்ணாமல் உறைகிறேன்!

உயிரோடு வாழ்ந்திருந்தும் - உன்
உணர்வுகளில் மரித்திட வேண்டி
பொய்யாய் மரித்துப் போனேனே!

இருகரம் கொண்டெந்தன்
இதயம் பிழிகின்ற
வலிதனை உணர்கிறேன் - உன்னை
பிரிந்திட எண்ணுகையில்!

மரணதேவனே எனக்கு
மலர்தனை போட மாட்டாயோ!
என் மன்னவன் நெஞ்சில்
மாற்றம் செய்திட வாராயோ!

உந்தன் பிள்ளைச் சிரிப்பை
மீண்டும் கண்டிட தவிக்கிறேன்
என்னை மறந்து
உந்தன் வாழ்வை வாழ்ந்திடு
உன் வருத்திடும் எந்தன்
காதலை துறந்திடு!

என்றும் நீ வாழ
துடிக்கும் எந்தன்
இதயம் காதலுடன்!
துடிப்பதையும் நிறுத்தும்
காதலுடன்!!!!!!!!!!!!!!



"என்னம்மா பண்ற, அழறியா. இது நீயா தேடிக்கிட்டது. அப்ப படுற கஷ்டமெல்லாம் பட்டு தான ஆகணும்"

"அப்பா" அதிர்ந்து போய் அழைத்தாள் அம்மு என்கிற ஹரிணி.

இதுவரை அவளிடம் எதற்குமே கடிந்து கொள்ளாதவர் இன்று முதல் முறையாக கோபப்படுகிறார்.

"என்னங்க இப்டி பேசுறீங்க. அவ ஏற்கனவே பாவம்ங்க"

"பாவம்தான் நான் இல்லைனு சொல்லலயே சாந்தி. நாமளும் பாவம்தான.
இதுவரைக்கும் இவளுக்கு பிடிக்காத எதையாவது செஞ்சிருக்கோமா. இவ விருப்பப்படி தான நடந்துகிட்டோம். இவ லவ் பண்றேனு வந்தப்ப , நாம மத்த பெத்தவங்க மாதிரியா நடந்தோம். இவர் விருப்பம் தான முக்கியம்னு சொன்னோம். லவ் வேண்டானு வந்தப்பயும் நாம இவளுக்கு தான சப்போர்ட் பண்ணோம். ஆனா இவ ஏன் இப்படி இருக்கா"

"என்னங்க கோபப்படாதீங்க. அப்றம் பேசலாம் வாங்க"

"இல்லமா அப்பா பேசட்டும்"

"அம்மு வேணாம்டா"
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பேசுறேன் எல்லாத்தையும் பேசுறேன். உனக்காக தான சொந்த ஊரவிட்டு, சொந்தபந்தத்த விட்டு இங்க வந்தோம். ஆனா நீ மனசு மாறலனா எப்படி. இருக்குற ஒரே பொண்ணு சந்தோஷமா இருக்கணும்னு நாங்க ஆசப்பட மாட்டோமா. ஒரு வருசமாச்சு நீ அத்துவ பிரியுறேனு முடிவெடுத்து பிரிஞ்சு வந்து, ஆனா இன்னும் பழசையே நினச்சு கஷ்டப்படுறீயே. இங்க நீ எப்படி கஷ்டப்படுறியோ, அதே மாதிரிதான அத்துவும் கஷ்டப்படுவான். நீயாவது பரவால்ல நீ எடுத்த முடிவுக்காக வருத்தப்படுற. பாவம்மா அவன் நீ ஏன் அவன விட்டு வந்தேனு தெரியாம செத்துகிட்டு இருப்பான். அதுவும் நீ உயிரோட இல்லனு அவன நம்ப வச்சுருக்க. பொண்ணு நீ அழுது தீத்துக்குற. அவன்???" என்றவர் இடைவெளி விட்டு

" பேசாம நான் அத்துக்கிட்ட நடந்த எல்லா உண்மையும் சொல்லப் போறேன். அவன் உன்னப் புரிஞ்சுப்பான். கடைசி வர உன் கூடவே இருப்பான். ஒரு வருஷமா பைத்தியம் மாதிரி அவன நெனச்சு அழுதுகிட்டு நீயும் கஷ்டப்பட்டு அவனையும் கஷ்டப்படுத்தி, என்னால முடியலமா. என் பொண்ணு முகத்துல சிரிப்ப பாக்கணும்னு நான் தவமிருக்கேன்மா" சொல்லியவரின் கண்கள் கசிந்திருந்தன.

"சாரிப்பா. நான் என்ன மட்டுமே யோசிச்சு சுயநலமா இருந்துட்டேன்."

"இல்லமா நான்"

"நான் பேசிக்கிறேன்பா. நான் பழைய மாதிரி இருக்க முயற்சி பண்றேன். இனிமேலும் உங்கள கஷ்டப்படுத்த மாட்டேன்.ஆனா நீங்க எதுக்காகவும் அத்துவ பாக்க கூடாது. அத்துகிட்ட பேசி முயற்சி பண்ணா, நான் உயிரோடு இருக்க மாட்டேன்"

"அம்மு என்ன வார்த்தடா சொல்ற" பெற்றோர் இருவரும் ஒருசேர அதிர்ந்தனர்.

"பயப்படாதீங்க நானா எதையும் செய்யமாட்டேன். அது உங்க கையில தான் இருக்கு"

"நாங்க எதுவும் பண்ணலடா. நீ எங்க கூட இருவந்தாலே போதும்"
என்ற படி அவளுடைய அறையை விட்டு வெளியேறினர்.

அவர்கள் சென்றதும் " அத்து உன்னை ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல. அப்பாக்கூட சொன்னாங்க. அது எனக்கும் தெரியும். ஆனா அவங்களுக்கு தெரியல. நான் செத்துட்டதா நீ நம்பறேனு அவங்க நினைக்குறாங்க. அது உண்ம இல்லையே. உனக்கு நான் உயிரோட இருக்குறது தெரியும் தான அத்து. ஏன்னா உன் காதல் என்னய உனக்கு காட்டி குடுத்துடும். ஜ லவ் யூ அத்து."


கரையுமா கன்னியவளின் கல்நெஞ்சம் அவளின் அத்துவிற்காக........
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2

"ஏய் தினேஷ் வந்து இத உன்கிட்ட தந்தானா? இப்ப என்னடி பண்றது. அவனப் பத்தி உனக்கு தெரியும்ல. "

" எனக்கு பயமாயிருக்குடி. என்ன பண்றதுனு தெரியல"

"லூசு பயப்படாத. நீ ரொம்ப அழகான பொண்ணுடி. அதோட கோடிஸ்வரி. அதான் அவன் உனக்கு லெட்டர் தந்துருக்கான்.உங்க அப்பாக்கிட்ட சொல்லு. அவர் பாத்துப்பாரு. இல்ல உன் அத்தான் கிட்ட சொல்லு"

"வேணாம்டி அப்பாக்கிட்ட சொன்னா அவன காலேஜ் விட்டு அனுப்ப வச்சுடுவாங்க. வேற எங்கயும் படிக்க முடியாத மாதிரி பண்ணிடுவாங்க.
அதவிட என்னோட சேப்டினு சொல்லி ரெண்டு பேர என் கூட அனுப்புவாங்க. என்னோட சந்தோஷம் போய்டும்டி. "

"சரி அப்பா கிட்ட தான சொல்ல கூடாது. உன் அத்தான் கிட்ட சொல்லு"

"அதுக்கு அப்பாவே பரவாயில்லடி. தினேஷ அடிச்சு தோல உரிச்சுடுவாங்க.என்னால யாரும் கஷ்டப்பட கூடாதுடி."

" அடிபோடி........ யார்கிட்டயும் எதுவும் சொல்ல மாட்டேனா தினேஷ் கிட்ட என்ன சொல்லுவ. அவன் நல்ல பையன் இல்ல. அவன் பொண்ணுங்க கிட்ட ஒரு மாதிரி பிகேவ் பண்ணுவான்டி. இவ்ளோ ஏன்? இந்த லெட்டர படிக்க முடியுதா. ப்ரோபோஸ் பண்றவன் மாதிரியா எழுதிருக்கான். ச்சை சகிக்கல "

"தெரியும்டி. இந்த லெட்டர குடுக்கும் போது இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள பதில் சொல்லனும், அதுவும் ஓ.கே மட்டும் தான் சொல்லனும்னு சொன்னான். இல்லனா என்ன பண்ணுவானு அவனுக்கே தெரியாதுனு சொல்லிட்டுப் போறான். நான் என்ன பண்ணட்டும்"

"மதி எனக்கு ஒரு சந்தேகம். அவனுக்கே தெரியாதத அவன் எப்படி பண்ணுவான்" என்றவள் கண்களில் குளம் கட்ட தன்னை பார்க்கும் தோழியைக் கண்டவுடன் மௌனமாகினாள்.

"சாரி மதி அழாத. வீட்ல சொல்ல மாட்டேனு சொல்ற. ஸ்டாப் யார்கிட்டயாவது ரிபோர்ட் பண்ணலாம்னா உங்க அப்பாக்கிட்ட சொல்லிடுவாங்க. என்ன பண்ணலாம்"

"ஏதாச்சும் சொல்லுடி... ப்ளீஸ்... ப்ளீஸ்"

"இருடி... ஏன் இத்தன ப்ளீஸ். நான் ஒண்ணு சொல்வேன். ஆனா அதுவும் ரிஸ்க் தான். வேணாம் விடு"

"என்னடி சொல்ற. புரியுற மாதிரி சொல்லு"

"அது வந்துடி நான் என்ன சொல்ல வந்தேனா.. தினேஷ் பயப்படுற மாதிரி இந்த காலேஜ்ல இருக்குறது ஒருத்தன் தான். அவன் மட்டும் உனக்கு சப்போர்ட் பண்ணா இந்த காலேஜ்ல யாரும் உனக்கு லவ் டார்ச்சர் குடுக்க மாட்டாங்க. அவன மீறி அப்பாகிட்டயும் யாரும் சொல்ல மாட்டாங்க "

"யாருடி அது"

" அது வேற யாரும் இல்ல. நம்ம காலேஜ்ல மெக்கானிக்கல் டிபார்ட்மெண்ட்ல தேர்டு இயர் படிக்குற ஆதித்யா தான்" அவள் சொல்லி முடிக்கவும், மதிக்கு அழுகை போய் கோபம் வந்தது.

"லூசு... உன் கிட்ட எனக்கு ஹெல்ப் பண்ணா சொன்னா, நீ என்ன ஒரேடியா மேல அனுப்ப வழி சொல்ற. இந்த காலேஜ்ல இதுவரைக்கும் ஒரே ஒரு பொண்ணாவது அவன் கிட்ட பேசிருக்காங்களா. அவனப் பாத்தாலே அரண்டு ஓடுவாங்க. இதுல அவன்கிட்டப் போய் நான் ஹெல்ப் கேக்கணுமா. அப்படியே போனாலும் அவன் என் கிட்ட பேசுவானா. போடிங்க" இடைவிடாமல் பொரிந்து தள்ளிய மதி தோழியின் முறைப்பைக் கண்டதும் அடங்கினாள்.

"சொல்லுவடி லூசுனு... போனாப் போகுதேனு ஹெல்ப் பண்ண ஐடியா சொன்னா என்னய திட்றேல. நீயே எதையாவது பண்ணு. என்னய கேக்காத"

இவர்கள் பேசிக்கொண்டிருந்த இடத்திற்கு தினேஷ் வந்தான். அவனைக் கண்டதும் மதி நிவியின் கரங்களை இறுகப் பற்றினாள்.

'இவ வேற கைய கெட்டியா பிடிச்சுருக்காளே. ஓடலாம்னா முடியாது போல. ஒருவேள நாம ஒடக்கூடாதுனு தான் பிடிச்சுருக்காளோ.' நிவியின் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தது .


"மதி என்ன சொல்லலாம்னு இருக்க. உன் பின்னாடி ஒரு வருசமா சுத்திகிட்டு இருக்கேன். நீ கண்டுக்கவே மாட்ற. இனிமேல் உனக்கு டைம் கிடையாது. ஈவ்னிங் காலேஜ் வாசல்ல வைட் பண்ணுவேன். உனக்கு பிடிச்சாலும் பிடிக்காட்டியும் நீ என்ன லவ் பண்ணி தான் ஆகணும் . பை"
அவன் சென்றதும் பயத்தில் உறைந்து நின்ற மதியை உலுக்கினாள் நிவி.

"என்னடி பண்ண போற. அப்பாவா? ஆதியா?" என பாட்ஷா பட வசனம் போல் கேட்டால் நிவி.

"வீட்ல அப்பாக்கிட்டயோ இல்ல அத்தான் கிட்டயோ சொன்னா என்னோட ஹேப்பினஸ் போய்டும். அப்புறம் வினய் அத்தான எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி அத்தை அப்பாவ போர்ஸ் பண்ணுவாங்க. ஏற்கனவே அப்பாவுக்கு அத்த மேல ஷாப்ட் கார்னர் இருக்கு. சோ ஆதியே பெட்டர். பாக்கலாம் . நீ என் கூடவே இருடி."

"என்னது உன் கூடவே இருக்கனுமா" மனதில் பயமிருந்தாலும் தோழிக்காக அவளுடன் செல்ல தீர்மானித்தாள் நிவி.

"நிவி இப்ப அவன் எங்கடி இருப்பான்"

"எங்க இருப்பான், கழுத கெட்டா குட்டிச்சுவரு தான. காலேஜ் கிரவுண்ட்ல தான் இருப்பான். "

"அப்ப சரி வா போகலாம்"

"இப்பவா"

"ஆமாம்டி. வா" என்ற படி அவளுடைய கரத்தினைப் பிடித்து இழுத்து சென்றாள்.

இதுவரை ஆதி மற்றும் அவனது இரு நண்பர்களை தவிர மற்றவர்கள் போக அச்சப்படும் காலேஜ் கிரவுண்டின் தென்பகுதியை நோக்கி சென்றனர்.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதை நெருங்க நெருங்க அவர்களின் இதயத்துடிப்பு அதிகமாகியது. அதிலும் யாரோ சிலர் ஒருவரை அடிப்பதைப் போன்ற சப்தம் கேட்கவும் சொல்லவே வேண்டாம் மதிக்கு கண்கள் கலங்கியது.

"டேய் இனிமேல் இப்படி பண்ண. அடிக்க மாட்டேன். ஏண்டா நாம உயிரோட இருக்கோம்னு நீ நினைக்கிற அளவுக்கு பண்ணிடுவேன்" சொல்லிக் கொண்டே கீழே கிடந்தவனை மிதித்தான் ஆதி. அதில் கீழே கிடந்தவனின் வாயிலிருந்து இரத்தம் வெளியேறியது.


இதைப் பார்த்து அரண்டு போன நிவியும், மதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்க, அடித்தவனோ தன் கரங்களில் படிந்திருந்த இரத்தக் கரையை சுத்தம் செய்ய வேண்டி தண்ணீர் இருந்த இடம் நோக்கிச் சென்றான்.

ஆதி எனும் ஆதித்யா அந்த பிரபல கல்லூரியின் முக்கியமான மாணவன். வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன். முரட்டு தனம் நிறைந்தவன். கோபக்காரன். அவனைக் கண்டால் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் மிரளுவார்கள். நல்ல நிறமும், பார்ப்பவர்கள் எதிர்த்து பேச முடியாதளவுக்கு கம்பீரமான உடலமைப்புக் கொண்டவன்.


தனக்கு சரியென்று தோன்றுவதை யார் தடுத்தாலும் செய்பவன். யாருக்கும் கட்டுப் படாதவன். அடுத்த ஆண்டு கோல்டு மெடல் வாங்குவான் என பலரது நம்பிக்கையை பெற்றவன். மொத்தத்தில் அவனை எதிர்க்க கல்லூரியில் யாரும் இல்லை.

இதற்கு மேல் நிற்க கூடாதென்று மதியின் மூளை வலியுறுத்த
"நிவி வா போய்டலாம்" என்று கூறியவள் பதட்டத்தில் கரங்களை கழுவிவிட்டு வந்த ஆதியை பார்க்காமல் அவன் மீது மோதிவிட, சுவற்றில் முட்டியது போல் வலித்தது மதிக்கு.

கைகளில் தண்ணீர் பாட்டிலை ஏந்திக் கொண்டு நண்பர்களின் புறம் பார்வையை பதிந்திருந்த ஆதியும் மதியை கவனிக்காததால் தான் நடந்தது இந்த மோதல்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்ததில் மதி பயந்துவிட, ஆதி கோபமாக அவளைப் பார்த்து உறுமினான்.


"ஏய்...... அறிவில்ல பாத்து வரமாட்ட"

அவனுடைய அதட்டலில் உடலெல்லாம் நடுங்கியது மதிக்கு. கண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் கன்னங்களில் வழிய பதட்டத்துடன் நிமிர்த்தவள், தன் முன்னே கோபமான முகத்தை கண்டு மீண்டும் நடுங்கினாள்.

"தெ.. தெரியாம மோ...திட்டேடன்.... சாரி.. சாரி.... என்னய அடிச்சுடாதீங்க. உண்மையிலேயே நான் தெரியாம தான் மோதினேன்"
திணறிக் கொண்டே சொல்லி முடித்தவள் அங்கிருந்து ஓட முயற்சிக்க அவளுடைய வலக்கரத்தினை பிடித்து தடுத்தான் ஆதி.

அவனது கரத்தின் அழுத்தம் தந்த வலியால் மதியின் கண்களில் கண்ணீர் இன்னும் அதிகமாய் பெருக்கெடுத்தது.

"ஏய்.. என்ன என்னனு நினச்ச. எனக்கு பொண்ணுங்ககிட்ட கை நீட்ற பழக்கம் இல்ல" கோபமாக கத்தியவன் அவள் கண்ணீரைக் கண்டு " அதான் அடிக்கவேயில்லைல அப்றம் ஏன் அழுது தொலைக்கிற" என மீண்டும் உறுமினான்.

மதியோ அவனது முகத்தினைப் பார்க்காமல் அவனது கரத்தினுள் சிறைப்பட்ட தனது கரத்தினைப் பார்த்தவாறு " கை வலிக்குது" என்றாள்.

முதலில் புரியாமல் விழித்தவன் , அவள் கரங்களை விடுவித்து விட்டு " புடிக்க தான செஞ்ஞேன் அது எப்படி வலிக்கும்" என்றான்.

அவளோ அவனுக்கு பதில் கூறாமல் தன் கையை தடவிக் கொண்டிருந்தாள். அவளுடைய கரத்தினில் ஆதியினுடைய விரல் தடம் பதிந்து இரத்தம் கட்டியிருந்தது.

ஒரு நிமிடம் அவளுடைய கரங்களை பார்த்தவன் வியப்பில் புருவத்தை உயர்த்தினான். பின்னர் முகம் மாறியவன்

" உங்களுக்கு வேற வேலயே இல்லயா. அதான் காலேஜ்ல அவ்ளோ இடம் இருக்குல, அப்புறம் ஏன் இங்க வரீங்க. அவ்ளோ தனியா பேசனுமோ உங்க லவ்வர் கூட. ச்சை இதுங்க டார்ச்சர் தாங்க முடியல" என்று கத்தினான்.

அவனுடைய வார்த்தைகளை கேட்ட மதிக்கு கோபம் வந்தது என்றுமில்லாத திருநாளாய். ஏனெனில் அவளுடைய தன்மானம் அல்லவா சீண்டப்பட்டுள்ளது. கோபத்தில் மூக்கு விடைக்க நிமிர்ந்தவள்.


"ச்சீ... உங்களப் பத்தி தெரிஞ்சிருந்தும் உங்ககிட்ட ஹெல்ப் கேக்க வந்தேன் பாரு, எனக்கு இது தேவதான்" என்றபடி போக முயற்சித்தாள். அவளுடைய வார்த்தைகள் ஆதிக்கு கோபத்தைத் தூண்டியது.

கோபத்தில் அவளது கரத்தினை மீண்டும் பிடித்தவன் " என்னடி தெரியும் என்னப் பத்தி.... சொல்லுடி என்னப் பத்தி என்ன தெரியும்" என்று கத்தினான்.

மதியோ வலியில் கண்களை மூடினாள். அவளுடைய உடலில் நடுக்கம் ஏற்பட்டது. அதை அவளது கரத்தினைப் பற்றிய ஆதியும் உணர, அவளது கரத்தினை விடுவித்தான்.

இதுவரை உறைந்திருந்த நிவி, மதியை அழைத்து செல்ல நினைத்து அவளை நெருங்க நினைக்கயில் ஆதியின் நண்பர்கள் அவளைத் தடுத்தனர்.


அதுவரை கோபமாயிருந்த ஆதி அப்போது தான் மதியின் முகத்தை கூர்ந்து கவனித்தான். மதிக்கு இயற்கையிலேயே மீன்களைப் போன்ற கண்கள். அதில் சற்று நீளமான இமை முடிகள்.

அவளின் மூடிய இமை முடியின் நுனியில் ஒரு சொட்டுக் கண்ணீர் வழியாமல் நிற்க, காலை வேளையில் புற்களின் நுனியில் இருக்கும் பனித்துளியின் நினைவு வந்தது ஆதிக்கு.
 

பூவினி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
புல்லின் நுனியில் அதிகாலை வேளையில் விழவா வேண்டாமா என அமர்ந்திருக்கும் அந்த பனித்துளியை எப்போதும் ரசிப்பான் ஆதி.

இன்று மதியின் கண்ணீர் அதை நினைவுப்படுத்த சுற்றுப்புறம் மறந்த ஆதி, தன்னுடைய வலக் கரத்தினை அவளின் விழியருகே கொண்டு செல்ல மதி மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் அதிர்ந்தனர்.

மதியோ ஆதியின் கரம் அவள் முகத்தினை நெருங்குகையில் அன்னிச்சையாய் பின் நகர்ந்து அவனை முறைத்தாள். அந்த நொடியில் அவளின் விழியில் இருந்த அந்த கண்ணீர்த்துளி ஆதியின் கரத்தினுள் விழுந்தது.

தான் தொடுவதற்குள் கண்ணீரை விழச் செய்து விட்டாள் என ஆதிக்கு மதி மீது கோபம் வர "ம்ப்ச்" என்று அதிருப்தியை வெளிப்படுத்தியவன் , தனது கரத்தில் இருந்த அவளது கண்ணீரை தனது விரல்களால் தொட்டுப் பார்த்தான்.

அந்த நிமிடம் அவன் என்ன உணர்ந்தானோ கோபமாய் இருந்த அவனது முகம் மென்மையாகி மதியைப் பார்த்தான்.

" உன் பிரச்சன என்ன. எதுக்காக என்னய பாக்க வந்த சொல்லு" மென்மையாக கேட்டான்.

மதியோ அவனுக்கு பதில் சொல்லாமல் அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு செல்ல எத்தனித்தாள். அவளை செல்ல விடாமல் அவளுக்கு முன்நின்று வழிமறித்தவன், தன் நண்பர்களைப் பார்த்தான்.

அவன் பார்வை என்ன சொல்லியது, அவனுடைய நண்பர்கள் அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர். அவர்களுடனே நிவியை அழைத்து செல்லவும் மறக்கவில்லை. நிவி மற்றும் மதியின் குரல்கள் காற்றில் கலந்தது தான் மிச்சம்.

அவர்கள் சென்றபின் மதியை நிதானமாக ஏறிட்டான் ஆதி.

"சொல்லு"

அப்போதும் மதி மௌனமாக இருக்க , ஆதியின் பொறுமை பறந்தது.

"இப்போ சொல்ல போறியா இல்லயாடி. சும்மா கெஞ்சனுமா. " என உறும மதி அழத் துவங்கினாள்

"ஏய்.... என்ன திமிரா... கேக்குறேன்ல.... சொல்லுடி" என்று அவள் கரத்தில் அழுத்தம் கொடுக்க

"ஆது........." என்று தடுமாறினாள் மதி. அவள் அது என சொல்லப் போக பயத்தில் ஆது என சொல்லி விட்டாள்.

அவளின் ஆது என்ற அழைப்பைக் கேட்டவுடன் ஆதிக்கு வித்தியாசமாய் இருந்தது. சொல்லப் போனால் பிடித்தும் இருந்தது. அவளுடைய கரத்தினை விடுவித்தவன் அவள் கண்களைப் பார்த்து

" ஆது நல்லாருக்கே. எல்லாரும் என்ன ஆதினு தான் கூப்டுவாங்க. இது எனக்கு பிடிச்சுருக்கு. இனிமே இப்படியே கூப்டு" என பல நாள் பழகியவன் போல கட்டளையிட மதிக்கோ தலை சுற்றியது. இவனிடம் எப்படி சொல்வது அது தவறி வந்த அழைப்பென்று. வேண்டாம் இங்கிருந்து சென்றாளே போதும் என நினைத்தவள். மெல்ல தினேஷைப் பற்றி சொன்னாள். அவனுடைய கடிதத்தையும் அவனிடம் தந்தாள்.

அதைப் படித்த ஆதியின் முகம் கடினமுற்றது. காதலை யாரும் இவ்வளவு கீழ்த்தரமாக ஒரு பெண்ணிடம் சொல்லியிருக்க மாட்டார்கள் என ஆதிக்கு தோன்றியது.


"ஈவ்னிங் காலேஜ் முடிஞ்சோன நீ வெளியே வர வேணாம். க்ளாஸ் ரூம்ல இரு. நானே வந்து கூட்டிட்டுப் போறேன். தினேஷ நான் பாத்துக்குறேன்" என்றான்.


மதி தயங்கியபடி நிற்கவும் " என்ன" என்றான்.

"இல்ல என்னோட நேம், டிபார்ட்மெண்ட்லாம் தெரியுமா?"

"வெண்மதி... பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ்.. செகன்ட் இயர் தான. ரொம்ப யோசிக்காத உன்னோட நோட்ல வச்சு தான அந்த லெட்டர தந்த அப்ப பாத்தேன். போ..."

அவனிடம் தலையிட்டிவிட்டு திரும்பி நடந்தவள் சற்று தொலைவில் ஆதியின் நண்பர்களிடம் மாட்டிக் கொண்டு விழிக்கும் நிவியைப் பார்த்ததும் அவளிடம் வந்தாள்.


மதியைப் பார்த்ததும் அவர்கள் சிறு புன்னகையுடன் விடைபெற மதி நிவியை சமாதானம் செய்து நடந்தவற்றை கூறி வகுப்புக்கு அழைத்து சென்றாள்.


தேனியின் ஒரு கிராமத்தில்.....

"அம்மு சாப்ட வாடா. அப்பாவும் உனக்காக சாப்டாம இருக்காங்க பாருடா" கிணற்றிலிருந்து ஒலிப்பது போல் இருந்தது அம்மாவின் குரல் அவளுக்கு.


எழுந்து செல்ல மனமில்லையென்றாலும் தந்தையின் சோகம் நிறைந்த முகம் அந்த எண்ணத்தை தோற்கடித்தது. மெல்ல கட்டிலை விட்டு இறங்கியவள் , டைனிங் டேபிளை நோக்கி சென்றாள்.

"வா அம்மு ... உனக்கு பிடிச்ச தோசை, காரச்சட்னி . சாப்டலாம் வா. இன்னைக்குனு உங்கம்மா நல்லா பண்ணிருக்காடா " தனக்காக வலியை மறைத்து கொண்டு புன்னகையுடன் பேசும் தந்தையைக் கண்டவள், புன்னகையை வரவழைக்க முயன்றாள்.

"உடகாருடா அம்மு தோசை வைக்கவா"

"ம்ம்ம்ம்ம்ம"
இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்னை மகளாய் பெற்றதைத் தவிர. என்னால் இவர்கள் இன்னும் என்னத் துன்பமெல்லாம் படப் போகிறார்களோ மனதினுள் எண்ணியவாறு தோசையை பிய்த்து வாயினுள் வைத்தாள்.

மொறு மொறுவென்று எண்ணெயில் மிதந்த யோசயையும், காரமான சட்னியும் வாயில் வைத்தவுடன் அவனது நினைவை உசுப்பிவிட்டது.

"ஹனி உனக்கு பிடிச்ச சாப்பாடு என்ன"

"எனக்கு மொறு மொறுனு தோசையும், கார சட்னியும் ரொம்ப பிடிக்கும் அத்து"

"என்னது தோசையும் சட்னியுமா. வேற எதுவும் பிடிக்காதா. அப்டினா கல்யாணத்துக்கு அப்புறம் வெறும் தோசை தானா" அலுத்துக் கொண்டான் அவன்.

" எனக்காக சாப்ட மாட்டியா"
 
Status
Not open for further replies.
Top