All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “கௌரிசங்கர்” - கதைதிரி

Status
Not open for further replies.

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29384

கௌரி - 22b

திடீரென்று கேட்ட சத்தத்தில் தினேஷ் பதறி விலக, பிரியாவோ அலட்சிய பார்வையை விஜியை நோக்கி வீசியவள்,

“மரியாதையா வெளில போ …” என்று தினேஷிடம் கூற,

“ஏய் என்ன உன் கள்ள காதல் தெரிய கூடாதுனு அவசரமா அவன இங்கிருந்து அனுப்புறியா … விட மாட்டேண்டி …” என்றவள்

“மாஆஆஆஆ … இங்க வந்து பாரு குடும்பம் மானம் கிட்சன்ல எறிகிட்டு இருக்கு …” என்று மீண்டும் குரல் கொடுக்க , அவளின் காட்டு கத்தலில் பதறியடித்து அங்கே வந்தனர் தண்டபாணி வளர் ரகு. சமையலறையில் நின்றிருந்த தினேஷை சந்தேகத்தோடு பார்த்த ரகுவிற்கு , பிரியாவின் கோலம் எரிச்சல் கொடுக்க

“இப்போ எதுக்கு இந்த கத்து கத்துற … ஆமா சார் யாரு இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு …” என்றது தான் தாமதம் , மடை திறந்த வெள்ளம் போல நடந்ததையும் நடக்காதையும் இட்டுக்கட்டி கொட்டினாள் விஜி.

அவள் கூறியதை கேட்டதும் ஆத்திரமடைந்த ரகு

“டேய் பொறுக்கி யார் வீட்டு பொண்ணு மேல கையை வைக்க பாக்கிற …உன்ன கொன்னுடுவேன் டா …” என்று தினேஷின் மேல் பாய , பதிலுக்கு அவன் பனியனை இறுக்கி பிடித்த தினேஷ் ,

“உன் வீட்டு பொண்ணு கூப்ட்டதால தான்டா இங்க வந்தேன் … முதல்ல அவகிட்ட கேளுடா …” என்று எகிற , தன் தம்பியை பிடித்து இழுத்தபடி ,

“ரகு … இவ ஒழுங்கா இருந்தா அவன் ஏன் இவ்வளவு தைரியமா இங்க வர போறான் … அதுவும் நான் பாக்கும் போது ரெண்டு பேரும் கட்டிபிடிச்சுக்கிட்டு முத்தம் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க … அவளுக்கு விருப்பமில்லைனா கத்த வேண்டியது தான … எங்கையாவது சத்தம் கேட்டுச்சா …. முதல்ல இந்த பக்கம் வா …” என்று தினேஷிடம் இருந்து பிரித்து இழுத்து தள்ளி நிறுத்த , யாருக்கு வந்த விருந்தோ என்ற ரீதியில் தனக்கு டீ கலந்துக் கொண்டிருந்தாள் பிரியா.

அவளின் அலட்சியம் அங்கிருந்தவர்கள் முகங்களை கறுக்க செய்ய பொறுமையிழந்த தண்டபாணி

“என்னமா இதெல்லாம் … நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல … வீட்டுக்குள்ள இவர முதல்ல எதுக்கு விட்ட … நானும் கேட்க கூடாது கேட்க கூடாதுனு இருந்தா எல்ல மீறிக்கிட்டு போய்கிட்டு இருக்க …” என்று சத்தம் போட சிறிதும் கண்டுக் கொள்ளாதவள் அவள் பாட்டிற்கு டீ கப்பை தூக்கி கொண்டு வெளியேற, ஆவேசமடைந்த வளர் அவள் கையிலிருந்த கப்பை தட்டிவிட்டு ,

“என்னடி … என்ன உன் திமிர் தனத்த இங்க காட்டுறியா … யாரையும் மதிக்காம நீ பாட்டுக்கு போற … எங்கிருந்து வந்துச்சு இவ்வளவு நெஞ்சுரம் … எல்லாம் அந்த பொட்டைப்பய உன் காலுல விழுந்து கிடக்கிற திமிர்தானே …” என்று கோபத்தில் கத்தியவர் , விஜியிடம்

“ஏய் விஜி போய் அந்த மானங்கெட்டவன கூட்டிட்டு வா …” என்கவும் கௌரியை அழைக்க பாய்ந்து ஓடினாள் விஜி. அதற்குள் தினேஷின் அருகில் வந்த ரகு ,

“வீட்ட விட்டு வெளில போடா …” மீண்டும் எகிற ,

“இருங்க பாஸ் … நம்ம கௌரி சார் வரட்டும் அவர் கிட்ட சில டீலிங்க் பேச வேண்டியிருக்கு என்றவனை நக்கலாக பார்த்த பிரியா மீண்டும் தனக்கு டீ கலக்க தொடங்கினாள்.

சுகமாய் தூங்கி கொண்டிருந்த கௌரியை பிடித்து உலுக்கிய விஜி ,

“டேய் எரும எழுந்திரு … அங்க உன் பொண்டாட்டி குடும்ப மானத்த காத்துல பறக்க விட்டுட்டு இருக்கா …உனக்கு தூக்கம் கேட்குதா …” என்று வேகமாக உலுக்கி எழுப்ப , கண்ணை திறவாமல்

“போக்கா … டிஸ்டர்ப் பண்ணாத …”சலிப்புடன் கூறி திரும்பி படுத்தவனின் காலை ஓங்கி மிதித்தவள் ,

“டேய் நாயே … எழுந்திரு … அங்க வந்து உன் பொண்டாட்டி பண்ணியிருக்க கேவலத்த பாரு என்கவும் , பிரியாவின் பெயர் வரவும் அவசரமாக கண்ணை திறந்த கௌரி

“என்ன நீயும் உன் அம்மாவும் சேர்ந்து பிரிக்குட்டியா கொடுமை படுத்திறீங்களா … இந்த கௌரி இருக்கிற வரைக்கும் அது நடக்காது …” என்று எழுந்தவன் அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு கீழே இறங்கியபடி ,

“முதல்ல உன்ன பேக் பண்ணா அந்த தாய் கிழவி ஒழுங்கா இருக்கும் … எப்ப பாரு எதையாவது சொல்லி ஏத்திவிட்டுக்கிட்டு இருக்கிறது …” என்று புலம்பியபடி கீழே இறங்கியவனை வன்மத்தோடு பார்த்தபடி கீழே இறங்கினாள் விஜி.

சமையலறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கே நிலவிய அசாதாரண சூழல் மனதை ஏதோ செய்தாலும் , அடுப்பு மேடையருகே புடவையில் புத்தம் புது பூவாய் நின்றிருந்த மனைவியை கண்டதும் நேற்றிரவு சொர்க்கத்தில் திளைத்தது ஞாபகத்திற்கு வரவும் புன்சிரிப்புடன் ,

“ப்ரிக்குட்டி … டீ போடுறியா … மாமாக்கும் ஒரு டீ பார்சல் ப்ளீஸ் …” என்று கொஞ்சியவனை குடும்பமே கொலைவெறியோடு பார்க்க , அப்பொழுதுதான் அங்கே நின்றிருந்த தினேஷை கண்ட கௌரி ஆச்சிரியதுடன் ,

“ஹேய் தினேஷ் … இங்க என்ன பண்ற …சார் கூட்டிட்டு வர சொன்னாரா… ” என்று சாதாரணமாய் கேட்டவன் அருகில் சென்ற விஜி ,

“ம்ம்ம் … சார் ஒன்னும் கூட்டிட்டு வர சொல்லல , உன் பொண்டாட்டிதான் திருட்டு தனமா வர சொல்லிருக்கா …” என்று கத்த,

“ச்ச … காதுல ஏன் கத்துற …” என்றவன் சுற்றி நின்றிருந்தவர்களை யோசனையோடு பார்த்தவன் பின் ,

“ஆமா நீங்கலாம் ஏன் இங்க நிக்கிறீங்க … இவ்வளவு சீக்கிரம் எழுந்துக்கிற ஆளு கிடையாதே …” என்றவன் ,

“வா தினேஷ் ஹால்ல போய் உட்கார்ந்து பேசலாம் …” என்று தினேஷை அழைக்க , பிரியாவின் முகத்தில் கர்வமும் உதட்டில் குறுஞ்சிரிப்பு மலர , கொதித்து போனார் வளர்.

“த்தூ … உன்ன போல ஒரு மானங்கெட்ட பயல பார்த்தது இல்லடா … காசு வருதுன்னு பொண்டாட்டிய கூட்டி கொடுப்பியா டா ஈனப்பயலே …” என்று விஷ அம்புகளாய் வார்த்தைகளை வீச , முகம் கோவத்தில் சிவந்து போக ,

“அம்மாஆஆ …” என்று கத்தினான் கௌரி.

“உண்மையை சொன்ன எரியுதா … நடு வீட்டுல எவன் கூடவோ கூத்து அடிச்சுகிட்டு இருக்கா … அவளை தூக்கி போட்டு மெரிக்காம … என்கிட்ட கத்திக்கிட்டு இருக்கியா …”கோபத்தில் சீரிய வளரை சலிப்புடன் பார்த்தவன் ,

“இப்போ என்ன இவங்க ரெண்டு பேரும் தப்பு பண்ணாங்கன்னு உன் பொண்ணு சொன்னுச்சா … அடப்போமா சும்மா எரிச்சலை கிளப்பிட்டு …” தூசியை தட்டுவது போல தட்டிவிட்டவனை நோக்கி கோபத்துடன் சென்ற விஜி ,

“இவங்க ரெண்டு பேரும் கட்டிபிடிச்சுக்கிட்டு முத்தம் கொடுத்ததை என் கண்ணால பார்த்தேன் … தோ நிக்கிறானே அவன் கிட்டயே கேளு …” என்றவளை நோக்கி கையை உயர்த்தி சென்றவன் ,

“அறைஞ்சேன் வச்சுக்கோ நேரா உன் மாமியார் வீட்டுல போய் உட்கார்ந்துப … முதல்ல இங்கிருந்து கிளம்பு எப்போ பாரு எதாவது பிரச்சனையை இழுத்து விட்டுகிட்டு இருக்கிறது …” என்றவனை ஆற்றாமையுடன் பார்த்திருந்தாள் விஜி. பிரியா வானில் சறகில்லாமல் பறந்துக் கொண்டிருந்தாள் . அவளிற்கு கௌரி மேல் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது, ஏன் கடவுளே சொல்லியிருந்தாலும் அவன் நம்பமாட்டான் என்று அவளுக்கு நன்கு புரியும்.

அந்த நம்பிக்கை தந்த தைரியம் அவள் முகத்தில் பிரதிபலிக்க அங்கிருந்தவர்ளை மீண்டும் ஒருமுறை பார்த்தவள், ‘பார் … என் கௌரியை பார் … நீங்கள் என் மீது சேற்றை வாரி இறைத்தாலும் … பன்னீரை தெளித்து என்மீதிருந்த களங்கத்தை துடைப்பான் …” என்ற பார்வை பார்த்தாள். அவள் பார்வையை சரியாக படித்த வளர் ,

“அப்போ நாங்க சொல்றத கேட்க மாட்ட …”என்று அழுத்தமாக கேட்க ,

“ம்ப்ச் … எத்தன தடவமா சொல்றது … என் பிரிக்குட்டியா பத்தி எனக்கு தெரியும் … போய் வேற வேலையிருந்த பாருங்க …” என்கவும் ,அவன் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையை கண்டு பிரியாவின் கண்கள் கலங்கிவிட்டது .

அவன் பேச்சில் சமாதானம் ஆகாத ரகுவும் தண்டபாணியும் இதற்குமேல் அவனிடம் எதுவும் கேட்க விரும்பாதவர்களாக வாயை மூடிக் கொண்டிருக்க, சிலிர்த்துக் கொண்டு வந்தாள் விஜி ,

“சரி … நீ உன் பொண்டாட்டிய எதுவும் கேட்க வேணா … இவன் எதுக்கு இந்த நேரத்துல இங்க வந்தானு கேளு …” மூக்கு புடைக்க கேட்கவும், சலிப்புடன் பார்த்தவன்

“தேவையில்லை …” என்று அந்த பேச்சை ஒதுக்கிவிட்டு வெளியேற முயல ,

“எனக்கு தேவையிருக்கு … இங்க உன் பொண்டாட்டி மட்டுமில்ல … நானும் இங்கதான் இருக்கேன் , அம்மாவும் இங்கதான் இருக்கு … இவ்வளவு விடியல்ல இவன் நம்ம வீட்டுக்குள்ள நுழைந்ததை யாரவது பார்த்திருந்த எங்களத்தான் தப்பா நினைப்பாங்க … இதுல என்னோட மானமும் அடங்கியிருக்கு … இவன் உனக்கு தெரிஞ்சவன் தானே எனக்கு இப்போ கேட்டு சொல்லுற …” என்று கட்டளையிட்டவளை கடுப்புடன் பார்த்தான் கௌரி.

காலையில் மலர்ந்த பண்ணீர் ரோஜாவை போல பளீரென்று இருந்த மனைவியை தனிமையில் கொஞ்ச விடாமல் வம்பு வளர்க்கும் தமக்கையின் மீது கோபம் வந்தாலும் , அவள் கேட்ட கேள்வி நியாயமாக பட்டதால் , தலையை ஆட்டி தன் அதிருப்தியை வெளியிட்டவன் ,


“சொல்லு தினேஷ் என்ன இந்த நேரத்துல இங்க வந்திருக்க … ஏதாவது முக்கியமான விசையமா …” என்று கேட்க , சற்றும் தயங்காமல்

“பிரியாதான் வர சொன்னா …” என்கவும் , தன் மனைவியை மரியாதையை இல்லாமல் அழைத்தது பிடிக்காதவனாக முகம் சுருக்கியவனின் பார்வை ஒரு நொடி என்றாலும் பிரியாவை தொட்டு மீண்டது .

தான் சொல்லித்தான் வந்ததாக கூறிய அடுத்த நொடி தன்னை பார்த்தவனின் பார்வை பிரியாவை கொள்ளாமல் கொன்று புதைத்தது. வளரும் விஜியும் கௌரியின் பார்வையும் , பதிலுக்கு இறுகி போன பிரியாவின் முகத்தையும் கண்டவர்கள் , கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்ற பழமொழிக்கு ஏற்ப கௌரியை குழப்ப நினைத்தனர்.

“தினேஷ் முதலல்ல மரியாதை கொடுத்து பேசு … வர சொன்னா கிட்சேன் வரைக்கும் வருவியா …” என்று கேட்ட கௌரியின் குரலில் சிறிது கோபம் எட்டி பார்க்க ,

“பெட்ரூம் வரைக்கும் வந்துருக்கேன் … கிட்சேன்க்கு வர்றத பெரிசா பேசிகிட்டு இருக்க …”என்று அசால்டாய் பேசியவனை நோக்கி ஒற்றி விரல் நீட்டி எச்சரித்த கௌரி ,

“ஜாக்கிரதை தினேஷ் … நீ பேசுற ஒவ்வொரு வார்த்தையும் சரியில்ல … நீ அத சாதாரணம நினைச்சு சொல்லலாம் பட் கேட்கிறவங்களுக்கு தப்பா படும் … பார்த்து பேசு...” என்று அப்பொழுதும் தன்மையாக பேசியவனை கண்டு எரிச்சலடைந்த வளர் ,

“நீ சோத்துல உப்பு போட்டுத்தானே தின்னுற … இப்பவும் உனக்கு கோபம் வரலையா …” என்றவருக்கு பலமாக தலையாட்டியவன்

“வரலை …எனக்கு என் பொண்டாட்டிய பத்தி தெரியும் …எனக்கு சந்தேகம் வரலை … இதோ நிக்கிறானே காலைவரைக்கும் நல்லவன்னு நினைச்சுட்டு இருந்தேன் … இப்போ தானே தெரியுது சரியான பொறுக்கின்னு … அப்படிதான் பிரிக்குட்டியும் நினைச்சுகிட்டு இருந்திருக்கும் … உங்க பேச்சு கேட்டோ இல்ல இவன் பேச்சு கேட்டோ என் பொண்டாட்டிய கேள்வி கேட்க மாட்டேன் …” என்று திடமாய் கூற, உதட்டை கடித்து பீறிட்டு எழுந்த அழுகையை அடக்கிக் கொண்டாள் பிரியா.

வளர் மற்றும் விஜிக்கு கௌரியின் நம்பிக்கையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்ற வெறி, என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் ,

“பொறுக்கியா … அப்போ பொறுக்கி கூட சேர்ந்து சுத்துன உன் பொண்டாட்டி பத்தினியா …” என்று நக்கலடித்து சிரித்த தினேஷின் சட்டையை கொத்தாக பிடித்த கௌரி ,

“வேணாம் தினேஷ் … என்ன கோபப்படுத்தி பார்க்காத … பாரு நீ எதுக்காக இங்க வந்திருந்தாலும் உன்ன மன்னிச்சு விட்டுடுறேன் மரியாதையா போய்டு …” என்றவனின் கையை தட்டிவிட்ட தினேஷ் ,

“என்ன , விட்டா ஏன் மேலதான் மொத்த தப்பு கணக்கா பேசிகிட்டு இருக்க … உன் பொண்டாட்டி கூப்பிடாமலா இங்க வந்திருக்க போறேன் … அவதான் காலைல போன் பண்ணா … உனக்கும் அவளுக்கும் நேத்து தான் எல்லாம் நடந்துச்சுனு சொன்னா …இனி நாங்க சந்தோசமா இருக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லைனு சொன்னா … இது ஏற்கனவே நாங்க பேசிக்கிட்டதுதான் … பலமுறை உங்க ரூம்ல நாங்க ஜாலியா இருந்திருக்கோம் என்ன எல்லை மீறி போனதில்ல … ஏன்னா உங்களுக்குள்ள தான் எதுவும் நடக்கலையே அதான் …” கொஞ்சம் கூட மனம் உறுத்தாமல் கூறியவனின் மேல் பாய்ந்திருந்தான் கௌரி.

அவன் கூறியதை கேட்டு விஜியை தவிர மொத்த குடும்பம் ஆடிப்போக, பிரியாவிற்கு எழுந்த ஆத்திரத்தில் தன் கையால் அவன் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொள்ள வேண்டும் என்ற வெறி எழ , கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். அதற்குள் கௌரியின் அருகில் சென்ற விஜி ,

“அவன விடு … முதல்ல உன் பொண்டாட்டி கிட்ட கேளு … அவன் சொல்றது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுடும் …” என்று கூறவும் ,

“தப்பு பண்ணி மாட்டிகிட்டவங்க உண்மையா பேசுவாங்க … வேணுமா நான் கொடுத்த நகைங்க எல்லாம் இவங்க ரூம்ல தான் இருக்கு போய் பாருங்க … அத பார்த்தாவது நான் சொல்றது உண்மைன்னு நம்புறீங்களா பாக்குறேன் …” என்று தினேஷ் விஜியிடம் கூற , மீண்டும் நாலுகால் பாய்ச்சலில் பிரியாவின் அறைக்கு ஓடினாள்.

திரும்பி வந்தவளின் கையில் நேற்று பிரியாவிடம் காட்டிய ஆரம் இருக்க ,

“அவன் சொல்றதைத்தான் நம்புல … இது எப்படி வந்துச்சுனு அவகிட்ட கேளுடா … உங்க ரூம்ல உங்களுக்கு தெரியாம எப்படி இத வைக்க முடியும் … கேளுடா தம்பி …” என்கவும் , முகம் இறுக அவள் கையிலிருந்ததை வெறித்து பார்த்தான் கௌரி.

இங்கு பிரியாவோ கொஞ்சம் கொஞ்சமாக செதுக்க கொண்டிருந்தாள் , எத்தனை பெரிய சதி , நேற்று தன் நிலையில் இல்லாத பொழுது தனக்கு தெரியாமல் அங்கே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவளுக்கு அதை இவர்களின் முன் நிரூபிக்க விருப்பமில்லாததால் அமைதி காத்தாள். ஆனால் இந்த குற்றசாட்டுகளை விட கௌரியின் முகம் தான் உயிரோடு அவளை கொன்றது . இதுவரை என்ன நடந்தது என்று வாய் திறந்து கேட்கவில்லை என்றாலும் அவன் மனதில் ஓடுவதை கண்டுக் கொண்டாள்.

இந்த கூத்தையெல்லாம் காண சகிக்காதவராக தண்டபாணி ,

“இங்கபாரு இந்த பையன் காலங்கார்த்தால இங்க ஏன் வந்தானு நான் கேட்க போறதில்ல … ஆனா இந்த நகை எப்படி உன் ரூம்க்கு வந்துச்சு … நீ சொன்னாதான் எங்களுக்கு தெரியும் … இப்பவாவது வாயை திறந்து பதில் சொல்லு …”

என்றவரை மதிக்காமல் அங்கிருந்து வெளியே செல்ல முயன்றவளை தடுத்து நிறுத்தியது கௌரியின் குரல்.

“பிரியா …” என்ற அழைப்பில் மொத்தமாக உடைந்து போனாள் பிரியா. ஆடாமல் அசையாமல் இறுகி போய் அதே இடத்தில் நின்றவளை நோக்கி சென்றவன் ,

“இந்த நக …” என்று தடுமாறியவன் , பின் தொண்டையை செருமிக் கொண்டு ,

“இந்த நக நம்ம ரூம்க்கு எப்படி வந்துச்சு …” என்று சோர்ந்து போன தன் விழிகளை கலங்கிய அவள் விழிகளுடன் கலக்க விட்டு கேட்க , அழுகையை கட்டுப்படுத்தியதால் தொண்டை குழி ஏறி இறங்க , நாசி கோபத்தில் புடைத்திருக்க முகம் சிவக்க வெறித்தவளின் விழிகள் , ‘நீ எனை நம்பவில்லையா ’ என்று குற்றம் சாட்டவும் , துடித்து போனான் கௌரி.

நேற்றிரவு இருந்த நிலை என்ன , இப்பொழுது இருக்கும் நிலையென்ன என்று நொந்து போனவனுக்கு வேறு வழி தெரியாததால் ,

“ப்ளீஸ் சொல்லு … உன் மேல தப்பில்லைனு எனக்கு தெரியும் … ஆனா இங்க இருக்கவங்களுக்கு உண்மை தெரியணும்ல … சொல்லு எப்படி நம்ம ரூம்க்கு வந்திச்சு …” என்றவனை வெறித்து பார்த்தவளுக்கு அப்படி ஒரு கோபம் விஜியின் மேல் வந்தது.

ஒருநொடி போது நடந்தை அனைத்தும் சொல்லிவிட , ஆனால் வளர் முன்னும் விஜியின் முன்னும் தன்னை நிரூபிக்க விரும்பாதவள் , கௌரியை முறைத்துவிட்டு மேல செல்வதற்காக திரும்ப , ஓடி வந்து கையை பற்றினாள் விஜி.

“ஏய் … இவ்வளவு பேர் கேட்கிறாங்கள … யாராவது ஒருத்தரையாவது மதிச்சு பதில் சொல்றியா … நீ என்ன பெரிய மஹாராணியா …” என்றவளை பார்த்த பிரியாவிற்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது . எல்லாம் இவளால் தானே என்ற எண்ணம் தோன்ற , அவள் தோளை பிடித்து வேகமாக தள்ள , அருகிலிருந்த சுவற்றில் மோதி கீழே விழுந்தவள் வயிற்றை பிடித்திக் கொண்டு கதற தொடங்கினாள். அங்கிருந்தவர்களிடமிருந்து ,

“ஐயோ …” “ப்ரியாஆ …” “சண்டாளி …” “என்னமா இது …” போன்ற குரல்கள் வர , கோபமாக பிரியாவின் அருகில் சென்ற கௌரி ,

“உனக்கு என்னதான் பிரச்சனை … இப்போ எதுக்கு அக்காவ தள்ளிவிட்ட …” என்றவனை கண்களால் பொசுக்கினாள் பிரியா.

அதற்குள் “ஐயோ ரத்தங்க …” என்ற வளர் அலற வேகமாக விஜியின் அருகில் ஓடினான் கௌரி. வலியில் துடித்து கொண்டிருந்த விஜியின் காலருகில் தேங்கி நின்ற ரத்தத்தை கண்டு அதிர்ந்து போயினர் குடும்பத்தார்.

“விஜி விஜி …என்னடி ஆச்சு … ஐயோ கடவுளே ஒரே ரத்தமா இருக்கே … முழுகாம இருந்தியாடி …” என்று தரையில் புழுவை போல துடித்துக் கொண்டிருந்தவளின் தலையை மடி மீது வைத்து கண்ணீருடன் புலம்பினார் வளர். முழுகாம இருந்தியாடி என்ற வார்த்தையில் முகம் வெளிற நடுங்கி போய் நின்றிருந்தாள் பிரியா.

“ம்மாஆ … என் … வா … வாழ்க்கையே … நாசம் பண்ணிட்டாமா … இந்த ஒழுக்கம் கெட்டவ … நாலு மாசம்மா …” “இந்த தடவ செக் அப் போனப்ப ஆம்பள புள்ளன்னு தெரிஞ்ச … கிட்டேன் … எங்க சொன்னா புள்ள தங்காமா போய்டும்னு பயத்துல யார்கிட்டையும் சொல்லல … அய்யோ என் குலவாரிச அழிச்சுட்டாளே இந்த கொலைகாரி பாவி …இனி எப்படி என் மாமியார் முகத்துல முழிப்பேன் ” என்று வலியினூடே திக்கி திக்கி கதறியவளை கண்டு தலையடித்துக் கொண்டு அழ தொடங்கினார் வளர் .

பிரச்சனை பெரிதாவதை கண்ட தினேஷ் அங்கிருந்து நழுவி வெளியேற, மகள் கதறுவதை காண சகிக்காமல் கௌரியை நெருங்கிய வளர் ,

“இப்போ உனக்கு சந்தோசமா … சொல்லு … இந்த நாதாரி சிறுக்கிக்காக உன் அக்காவோட வாழ்க்கையை நாசமாகிடியே … உனக்கே தெரியுமல்ல அவ மாமியாக்காரி ஆம்பள புள்ள இல்லைனு என்னனா கொடுமைகள் பண்ணா … கடவுளா பார்த்து கொடுத்தத … கொன்னுட்டாளே … போ போய் உன் பொண்டாட்டி கால்ல விழுந்து கிட …” என்று வெறுப்பை உமிழ , குற்றவுணர்வில் தலைகுனிந்து நின்றவனின் பார்வை அங்கே மிரண்டு போய் ஒடுங்கி நின்றிருந்த பிரியாவின் மேல் பாய்ந்தது. வேகமாக அவளருகில் சென்றவனை பார்த்து ,

“நா … நா … வே … னும்னு … பண் …” என்றவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் கௌரி.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29417

கௌரி - 23

கௌரி தன்னை அறைவான் என்று எதிர்பார்க்காத பிரியா அதிர்ந்து போய் அடிபட்ட பார்வை பார்க்க , உள்ளுக்குள் நொறுங்கி போனவன் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவள் கைகளை அழுந்த பற்றி,

“உன் அலட்சியத்தால என்ன பண்ணி வச்சுருக்க பாரு … அக்கா என்ன கேட்டுச்சுனு புடிச்சு தள்ளி … ச்சை … நீ எல்லாம் ஒரு பொண்ணா … அவ கதர்றது உன் காதுல விழுல … கொலைகார பாவி , உலகத்த பாக்க விடாம ஒரு உயிர கொன்னுட்டியே … அந்த குழந்தைய பத்தி எவ்வளவு கனவு கண்டுருப்பா … எல்லாத்தையும் ஒரே நொடில கலைச்சிட்டியே …” என்று சீறியவனை கண் கலங்க பார்த்தவள் ,

“நா … நா …” என்று வார்த்தை வராமல் தடுமாற , ஒற்றை கையை நீட்டி பேசுவதை தடுத்தவன் ,

“பேசாத … பேசாத … ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு …” என்று நிறுத்தியவன் அவளை தீர்க்கமாய் பார்த்தபடி

“அவனுக்கு எப்படி நேத்து நமக்குள்ள நடந்தது தெரிஞ்சுச்சு …” என்று அழுத்தமாய் கேட்க , சில நொடிகள் உதட்டை கடித்தபடி பார்த்தவள் பின்,

“எ … எ …என்ன … சந்தேகபடுறியா …” என்று கமறிய குரலில் கேட்கவும் ,

“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்ல … சொல்லு அவனுக்கு எப்படி தெரிஞ்சுச்சு …” என்று மீண்டும் அழுத்தி கேட்டவனை சில நொடிகள் வெறித்து பார்த்தவள் ,

“அப்போ என்ன நம்பலை நீ …” என்று பதில் கேள்வி கேட்க, அவள் கையை வேகமாக பிடித்து இழுத்தவன் ,

“எப்படி நம்பறது … சொல்லு எப்படி நம்பறது …” என்று கோபத்தில் கத்தினான். அதுவரை துடித்துக் கொண்டிருந்த விஜியில் கவனம் பதித்திருந்த ரகு,

“கௌரி … பிரச்சனை எதுவும் பண்ணாத … முதல்ல விஜியை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனும்…” என்றவனை கண்டுக் கொள்ளாத கௌரி

“உன்ன நம்புறதா … பணக்காரன் நினைச்சுத்தானே என்கிட்ட பழகின … சந்தர்ப்பம் கிடைச்சுருந்தா என்ன மயக்க தாலி கட்டாமலே என் கூட படுத்திருப்ப … அப்படிப்பட்ட உன்ன எப்படி நம்புறது …” என்று விச அம்புகளை வீச அது குறி தவறாமல் அவள் இதயத்தை குத்தி கிழித்தது. அவன் வார்த்தைகளை வீசிய அந்த நொடியே உள்ளுக்குள் மரித்து போனாள் பெண்ணவள் .

மௌனமாய் உதட்டை இறுக்க மூடி வெறித்து பார்த்தவளின் ஒற்றை கண்ணிலிருந்து சிறு கோடாய் கண்ணீர் வழிய , பார்த்திருந்தவனின் கண்களும் கலங்கியது. தொண்டையை செருமி தன்னை சரிபடுத்திக் கொண்டவன்,

“எனக்கு சுத்தமா உன் மேல நம்பிக்கையில்ல … இப்போன்னு இல்ல அது எப்பவும் உன் மேல வராது … எவ்வளவுதான் பாசமா பால ஊத்தி வளர்த்தாலும் பாம்போட குணம் கொத்தாம விடாது … அப்படிதான் நீயும் … ஏன் தினேஷ் சொன்னது உண்மையா இருக்க கூடாது … பணத்துக்காகா நீ எந்தளவுக்கு கீழிறங்கி போவேன்னு கூட இருந்து பார்த்தவன் நான் …” மேலும் குத்தி கிழிக்க , இத்தனை நாள் அவன் ஒருவனே தன் சொந்தம் என்று நினைத்திருந்தவள் மொத்தமாய் வெறுத்து போனாள். அவளை போலவே அவள் இதயமும் இறுகி போக , தன் தமக்கைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காக்கும் பொருட்டு , பதில் பேசாமல் அவன் பிடியிலிருந்து நழுவி மாடிக்கு செல்ல நினைத்தவளின் எண்ணம் புரிந்தவன் வேகமாக அவள் அருகில் சென்று ,

“எங்க போற … உன் முகத்த பார்த்தா ரத்த வெள்ளத்துல துடிக்கிற எங்க அக்கா ஞாபகம் தான் வரும் … மீறி உன் கூட சேர்ந்து வாழ்ந்தாலும் எந்த நொடி எப்போ எவன் கூட பணத்துக்காக கூத்தடிப்பனு பயந்துகிட்டு இருக்கனும் … இனி நமக்குள்ள சரிப்பட்டு வராது … இப்பவே வீட்ட விட்டு வெளில போ …” என்று கூடை தனலை கொட்ட, அசையாமல் நின்றிருந்தவள் திரும்பியும் பார்க்காமல் செருப்பை கூட போட தோன்றாமல் தெருவில் இறங்கி நடக்க தொடங்கினாள். உயிரற்ற பிணமாய் நடந்து சென்றவளை வெறித்து பார்த்தவனை ,

“கௌரிஈ … சீக்கிரம் ஆட்டோ புடிச்சுட்டு வா …விஜிக்கு ரொம்ப மோசமாகிட்டு இருக்கு …” என்று ரகு குரல் கொடுக்க தன் கவலையை மறந்து அக்காவை காக்கும் பொருட்டு ஆட்டோ பிடிக்க சென்றான்.

விஜியை ஆட்டோவில் ஏற்றி அனுப்பியபின் தன் வண்டியை எடுத்துக் கொண்டு அவர்களை தொடர்ந்து சென்றவனின் பார்வையில் ரோட்டில் நடந்து சென்ற பிரியா பட்டாள். அவளை கண்ட நொடி மனதில் தோன்றிய வலியை ஒதுக்கி தள்ளியவன் வண்டியை பறக்கவிட்டு அவளை காணாததை போல கடந்தும் சென்றான்.

தன்னை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தவளின் நம்பிக்கையை ஒட்டு மொத்தமாய் குழி தோண்டி புதைத்திருந்தான் கௌரி. இன்னும் அவன் தீண்டிய தேகத்தின் இச்சை கூட அடங்காத நிலையில் தன்னை விலக்கி வைத்தவனின் நம்பிக்கை துரோகம் உயிரோடு கொன்றிருக்க , முடுக்கிவிட்ட பொம்மையாய் தன் கால் போன போக்கில் நடந்தவளின் கண்ணில் அவள் வீட்டிற்கு செல்லும் பேருந்து பட அதில் ஏறிக் கொண்டவளிடம் டிக்கெட் எடுப்பதற்கு கூட பணமில்லை.

பயணம் முழுவதும் திட்டிக் கொண்டு வந்த நடத்துனரை கூட உணரும் நிலையில் அவளில்லை.

எவ்வாறு பேருந்திலிருந்து இறங்கினாள், எப்படி வீட்டிற்கு சென்றாள் அது கடவுளுக்கு தான் வெளிச்சம்.

தன் வீட்டை நெருங்கியவளின் தலை தெரிந்த அடுத்த நொடி கையில் விளக்கமாருடன் அவள் முன் பத்திரகாளியாக தோன்றிய ஜெயந்தி,

“ஒழுக்கம் கெட்ட நாயி … எந்த முகத்த வச்சுக்கிட்டு இங்க வந்து நிக்கிற … இப்போ தாண்டி உன் மாமியா போன் பண்ணி சொன்னா … நீ என் வயித்துல தான் பொறந்தியான்னு சந்தேகமா இருக்கு … அந்த பொம்பள விடுற சாபத்த காது கொடுத்து கேட்கமுடில … நீ கெட்டு போனதுமில்லாம இன்னும் வெளியேவே வராத சிசுவ அழிச்சுருக்கியே … நல்லாயிருப்பியா … இந்த பாவத்த எத்தன கங்கைல மூழ்கி எழுந்தாலும் கழுவ முடியாதே …” என்று சீரியவர் கையிலிருந்த துடைப்பத்தால் அவளை விளாசி எடுக்க , எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் மரம் போல நின்றிருந்தாள் பிரியா.

ஜெயாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து விலக்கிவிட , பிரியாவின் கண்களோ வீட்டிற்குள் கண்ணை மூடி உட்கார்ந்திருந்த தந்தையை வெறித்து பார்த்தது.

“என்ன ஜெயா … என்னதான் கோவமா இருந்தாலும் … கல்யாணமான பொண்ண இப்படியா அடிப்ப … போ அப்படி …” என்று எகிறி கொண்டு வந்த ஜெயாவை விலக்கியபடி வயதில் மூத்தவர் அதட்ட,

“விடுக்கா … இவள என் கையால அடிச்சு கொன்னாதான் என் வெறி அடங்கும் … பெத்த எங்களுக்கும் உண்மையாயில்ல … கட்டுன புருஷனுக்கும் உண்மையாயில்ல … இவ பொறந்ததே சாபக்கேடு … விடு … எங்க குடும்ப மானத்தை வாங்கவே வந்திருக்க சனியன் …” என்று கத்தியவரை விளக்குவதற்குள் போதும் போதும் என்றானது அங்கிருந்தவர்களுக்கு.

சற்று நேரம் முன்புதான் வளர் ஜெயந்தியை அழைத்து அங்கே நடந்தவற்றை கூறி, கன்னாபின்னா என்று திட்டிவைக்க , ஆடிப் போய் உட்கார்ந்து விட்ட ஜெயா முதல் வேலையாக பிரசவத்திற்கு வந்திருந்த காயுவை அருகிலுள்ள கோவிலுக்கு சென்று வர கூறினார், பின் பிரியாவின் வரவிற்காக கடுங் கோபத்துடன் காத்திருந்தார்.

தன் கணவரிடம் மட்டும் நடந்தவற்றை கூறியவருக்கு தன் மகள் ஒழுக்கம் தவறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்தவருக்கு பிரியாவை கண்டம் துண்டமாக வெட்டிப் போட வேண்டும் என்ற வெறியே எழுந்தது.

தன்னை பிரியாவை நெருங்க விடாமல் பிடித்திருந்தவர்களிடம்,

“விடுக்கா … நான் எதும் பண்ணமாட்டேன் … இந்த சனியன் தொட்டா எனக்குதான் பாவம் சேரும் …” என்றவர் பின் பிரியாவிடம்,

“ஏய் … நீதான் எங்க பொண்ணு இல்லைனு தலை முழுகிட்டோம்ல இங்க எதுக்கு வந்த … போய் எங்கையாவது செத்து தொல … உயிரோடு இருந்து இன்னும் சீரழிஞ்சி போகாதா … உன்ன பொண்ணா பெத்த பாவத்துக்கு இந்த அசிங்கத்தை அனுபவிச்சிட்டு போறேன் …” என்று தேள் கொடுக்காய் கொட்டியவர் , வேகமாக வீட்டிற்குள் சென்று கதவை அறைந்து சாத்த, மூடிய கதவை ஜீவனே இல்லமால் வெறுமையான பார்வை பார்த்தவள் மீண்டும் கால் போன போக்கில் நடக்க, கடற்கரைக்கு வந்து சேர்ந்தாள்.

கடற்கரையில் யார் கண்ணிலும் படாமல் மறைந்து இருந்தவள் இருட்டியபின் கூட்டம் கலைந்ததும் , மெள்ள தன்னிடத்திலிருந்து எழுந்து நடந்தவளின் கால்கள் அலைகளை நோக்கி செல்ல மனமோ இன்று நடந்ததை நினைத்து பார்த்தது.

அவள் அன்னை அடித்த பொழுதும் வலிக்கவில்லை , பலர் தன்னை பாவமாகவும் ஏளனமாகவும் பார்த்தது கூட வலிக்கவில்லை, உடலளவில் வலிக்க செய்யாமல் மனதை மரிக்க செய்த கௌரியின் செய்கை வலியை கொடுக்க , அழுத்தம் தாளமுடியாமல் வாய்விட்டு கதறிவிட்டாள் பிரியா.

“நான் யாரையும் பெருசா நினைக்கலடா … உன்ன தானே என் சொந்தமா நினைச்சேன் … ப்ரிக்குட்டி ப்ரிக்குட்டினு உருகி உருகி சுத்துனத நினைச்சு கர்வமா சுத்தி திரிஞ்ச என்ன பல பேர் கேவலமா பாக்க வைச்சுட்டியே …” என்று கதறியவள்,

“என்ன வேணாம்னு தூக்கி போட்டல … நான் உனக்கு வேணாம்ல … எனக்கும் இந்த வாழ்க்கை வேணாம் போ … நல்லா வாழுனும் கார் பங்களானு வாழனும் ஆசைப்பட்ட என்ன பாதில போக வச்சுட்டில … போறேன் போ … இதான் உன்ன நம்புனதுக்கு எனக்கான பனிஷ்மெண்ட் … இந்த வாழ்க்கையை விட்டே போறேன் …” என்று வெறிபிடித்தவள் போல கத்தியவள் , கடலை நோக்கி வேகமாக சென்றாள்.

நான்கு மாதத்திற்கும் மேலாக நன்கு வளர்ந்த கரு கலைந்ததால் சற்று சிரமப்பட்ட விஜியின் உடல் நன்கு குணமடைந்த பின்தான் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

அதுவரை தூக்கமில்லாமல் பதட்டத்துடன் சுற்றி திரிந்த கௌரி , விஜி வீட்டிற்கு வந்தபின் தன்னறைக்குள் சென்று படுத்தவனின் நினைவுகள் முழுதும் பிரியாவே நிறைந்திருந்தாள். மன பாரம் தாங்காமல் தலைகாணியில் முகம் புதைத்தவனின் நாசியை சீண்டியது அவனின் ப்ரிக்குட்டியின் வாசம்.

அவள் வாசத்தை அடி நெஞ்சுவரை இழுத்து சுவாசித்தவனின் கண்களில் இருந்து இரு முத்துகள் உருண்டோட , வேகமாக எழுந்து உட்கார்ந்தவனின் பார்வை முழுதும் அந்த அறையை சுற்றி அலசியது.

கொடியில் கிடந்த அவளின் நைட்டி … சிறு டேபிளில் இருந்த கண்ணாடி பவுடர் … அறையின் மூலையில் இருந்த ஸ்டவ் … இப்படி அனைத்திலும் அவளின் இருப்பே தெரிய மூச்சு முட்டுவது போலிருந்தது கௌரிக்கு.

வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவன் மொட்டைமாடியின் கைப்பிடி சுவரை பற்றி இருட்டை வெறிக்க , அவன் கை பற்றியிருந்த சுவற்றில் எதுவோ எழுதியிருப்பதை போல இருக்கவும் , மனம் உந்துதலால் செல்லில் உள்ள வெளிச்சத்தில் பார்க்க,

அங்கே அழகான குட்டி இருதயம் அம்பு குறியுடன் வரையப்பட்டு மேலே கௌரி கீழே பிரியா என்று எழுதிருக்கவும் , சோர்ந்து போய் கீழே தரையில் உட்கார்ந்து விட்டான் கௌரி.

பாகம் 1 நிறைவுற்றது…
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குட்டி டீசர்:

நல்ல உறக்கத்தில் இருந்தவளின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் அறை கதவு தட்டபடவும் , நேரத்தை பார்த்த படி எழுந்தவள் மணி சரியாக ஒன்றறை என்று காட்ட இந்த நேரத்தில் என்னவாம் என்று சலித்தபடி கதவை திறந்தவளின் முன், போதையில் கண்கள் சொருக சற்று தள்ளாடியபட சட்டை கலைந்து நின்றிருந்த கௌரியை கண்டு அதிர்ந்து போனாள் பிரியா.

அதிர்ந்து நின்றிருந்தவளை பார்த்து மந்தகாசமாக சிரித்த கௌரி,

"பிளிஸ் கொஞ்சம் வெளியே வாங்க ஒரு என்கொயரி இருக்கு" என்கவும்,

"வாட் இந்த நேரத்திலயா..." என்று கோபத்துடன் ஆரம்பித்தவள், இன்று காலை அவன் செய்த உபதேசம் நினைவுக்கு வரவும் வாயை மூடிக்கொண்டாள்.

அதற்குள் அவன் கண்ணில் பணி படர்வதை கண்டு கொண்ட பிரியா ,'அடேய் இந்த ஒத்த வார்த்தைக்கே உனக்கு மூடு மாறுதா' என்று மனதில் அவனை வறுத்தவள் , என்ன ஆனாலும் வாயை திறக்க கூடாது என்று முடிவு செய்தவள், சைகையால் என்ன என்று கேட்கவும், அதை பார்த்து கௌரிக்கு சிரிப்பு வந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கியவன்,பின் பிரியாவை அழுத்தமாக பார்த்தபடி

" அதுவந்துங்க … மீன் குழம்பும் மீன் வறுவலும் சமைச்சுட்டு போயிருந்தேன்… வந்து பார்த்தா பதிமூனு குழம்பு மீன்ல பதின்னொன்று தான் இருக்கு … அதேபோல ஒன்பது வறுத்த மீன்ல ஏழுதான் இருக்கு… ஹவ் ட் பாசிபில்" என்ற கௌரியை அதிர்ந்து பார்த்த பிரியா , 'அட வீணா போனவனே போகும் போது எண்ணி வச்சுட்டுத்தான் போனியா… பிரியா எதுவாது சொல்லி சமாளி' என்று நினைத்தவள் வெளியே அவனை அனல் தெறிக்க பார்த்தாள் பிரியா.

நடு இரவில் எழுப்பி மீனை பற்றி கேட்டவனை பார்த்து அதிர்ந்த பிரியா , சடுதியில் சமாளித்து அவனை முறைத்து பார்க்கவும்,

"அய்யோ நீங்க சாப்பிட்டிங்களான்னு கேட்கலை … இங்க இருக்கிறது நாம இரண்டு பேர்தான் … ஈவினிங் கவுன்ட் பண்ணி வச்சுட்டு போனது நைட் வந்து பார்த்தா குறையிது, நான் நீங்க தான் எடுத்திட்டிங்கன்னு சொல்லல பட் எப்படிங்க இது பாசிபில்" என்று போலியாக ஆச்சிரியப்பட்டு பேசிய கௌரியை மீண்டும் முறைத்தவள், அவன் அருகில் சென்று தன் இரண்டு கைகளையும் தூக்கி அவன் மூக்கு அருகில் எடுத்து சென்று,

"நல்லா மூச்சை இழுத்து உள்ள விடுங்க … ம்ம்ம் இப்ப சொல்லுங்க மீன் ஸ்மெல் அடிக்குதா" என்று கோபமாக கேட்டபடி அவன் மூக்கில் வைத்து கையை அழுத்தி தேய்க்கவும், கௌரி இல்லை என்னும் விதமாக தலையசைத்தவன், பின் மெல்ல,

"இல்லைங்க … சோப்பு போட்டு கையை நல்லா கழுவி வாசனையா இருக்குங்க" என்றவனின் பார்வை அவள் உதடுகளின் படிந்து மீளவும், அதில் கடுப்பானவள் எக்கி அவன் பின் தலையில் ஒரு கையை கொடுத்து தன்னை நோக்கி இழுத்து மற்றைய கையால் அவன் கன்னத்தை அழுந்த பற்றியவள் கௌரியின் இதழ்களை ஆவேசமாக பற்றினாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29463

கௌரி - 24

பங்குனி வெய்யில் தன் உக்கிரத்தை காட்டி பல்லிளிக்க , அதை பொருட்டு படுத்தாமல் கழுத்தில் வழிந்த வேர்வையை புடவை முந்தானையால் ஒற்றி எடுத்தவாறே வேக நடையிட்டு நடந்தவளின் வாய் ஊரில் இல்லாத கெட்ட வார்த்தைகளை எல்லாம் வழி நெடுகிலும் உதிர்த்தவண்ணம் இருக்க, திட்டியது போதும் கொஞ்சம் உதட்டுக்கு ஓய்வு கொடு என்ற எண்ணத்தில் அவளின் போன் அலறியது.அதில் மிளிர்ந்த எண்ணை பார்த்ததும்

‘இப்போ எதுக்கு இந்த சனியன் கால் பண்ணுது…’ என்று மனதில் திட்டியவள் கடுப்புடன் வார்டன் அழைப்பை ஏற்க,

“ரூம பூட்டிட்டு வந்திட்டியா … உன்கிட்ட சொல்லிருந்தன்ல ரூம பூட்ட வேணாம்னு …” எடுத்தவுடன் எரிச்சலுடன் பேசிய வார்டனை கண்டு கோபம் சுர் என்று ஏறினாலும்,

“வெளில போற வேலை இருந்துச்சு மேடம் ,அதான் பூட்டிட்டு வந்துட்டேன் … எதுக்கு மேடம் கேட்கிறீங்க …” என்று பொறுமையாக தெரியாததை போல கேட்க,

“வெளில போறதா இருந்தா என்கிட்ட கீய கொடுத்துட்டு போக சொன்னேன் தானே … எப்ப வருவ … அந்த பொண்ணு அதோட திங்ஸ் எடுத்துட்டு வந்திருக்கு …” என்று கடுப்புடன் பதிலளித்தார். போகிற வேலையை தவிர வேற வேலையில்லை என்றாலும் வேண்டுமென்றே ,

“எப்போ வருவேன் தெரியாது … அநேகமா நைட் ஆகிடும் … அப்புறம் நான் வர லேட் ஆகுதுன்னு உங்ககிட்ட இருக்கிற சாவிய வச்சு திறந்திங்கனு வச்சுக்கங்க … எந்த பொருள் காணாம போனாலும் நீங்கதான் பொறுப்பு … ” என்று கூலாய் பதில் கூறியவள் அவருக்கு காத்திராமல் போனை அனைத்திருக்க கடுப்பில் பல்லைக் கடித்தார் வார்டன்.

ப்ரியாவின் ஒட்டு மொத்த ஆத்திரமும் தன் தோழி செல்வி மேல் திரும்பியது . ஹாஸ்டலில் நிம்மதியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் , உப்பு சப்பில்லாதா விஷயத்திற்கு தேவையில்லாமல் வார்டனிடம் சண்டை போட்டு ரூமை காலி செய்யும் நிலைக்கு கொண்டு வந்தவளின் மேல் கொலைவெறியே வந்தாலும், அவளால் தான் இன்று தான் உயிரோடு நடமாடிக் கொண்டிருப்பதை நினைத்து அமைதி காத்தாள் . செல்வி தோழி என்பதைவிட தோழி வடிவில் உள்ள தாய் என்றே சொல்லலாம் அந்தளவிற்கு அவளிடம் பாசம் காட்டும் ஒரே ஜீவன்.




இத்தனை நாட்கள் இல்லாமல் எதற்காக திடீரென்று தன்னை ஹாஸ்டலில் இருந்து பிரித்து கூட்டி செல்கிறாள் என்று விளங்காத புதிர். அதுவும் அவசர அவசரமாக புரோக்கர் மூலமாக வாடகைக்கு வீட்டையும் பார்த்து அட்வான்சும் கொடுத்திருந்தவளை சந்தேகத்தோடு பார்த்தாலும் வாய் திறந்து ஏன் என்று கேட்கவில்லை. நாளை அவர்கள் அந்த புது வீட்டிற்கு குடி புகும் நாள், ஆனால் நேற்று ஊரில் இருக்கும் செல்வியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியால் அவள் ஊருக்கு கிளம்பி விட, எப்படி தனியாக சமாளிப்பது என்று திகைத்து விழித்தவளை குறிப்பிட்ட வீட்டின் அட்ரசை சொல்லி அழைத்திருந்தார் புரோக்கர்.

ஏன் இங்கே என்ற யோசனையுடன் , அவர் குறிப்பிட்ட விலாசத்திற்கு செல்வதற்குள் மிகவும் களைத்து சோர்ந்து போய் காணப்பட்டவள், எங்கே அந்த புரோக்கர் என்று தேடியவளின் கண்களுக்கு அவர் ஒரு அழகிய வீட்டின் முன் நின்று கொன்டு யாரோ ஒரு ஆடவனிடம் பேசிக் கொண்டிருப்பது கண்ணில்பட்டது.

சோர்வாய் அவர்களை நெருங்கியவளின் காதுகளில் அந்த ஆடவனின் குரல் கேட்கவும் சட்ரென்று நடப்பதை நிறுத்திவிட்டு சிலையாய் அதே இடத்தில் நின்றுவிட்டாள்.

அதே குரல் ஏழு வருடங்களுக்கு முன் ப்ரிக்குட்டி ப்ரிக்குட்டி என்று கொஞ்சி தன்னையே சுற்றி சுற்றி வந்த குரல் … தன் மேல் எந்த காலத்திலும் நம்பிக்கை வரபோவதில்லை என்று உறுதியாக மறுத்த அதே குரல்… இப்பொழுது செல்வியின் செயலுக்கான காரணம் புரிந்தது … தன்னை பற்றி முழுமையாக அறிந்த செல்வியிடமிருந்து இதை எதிர்பார்க்காதவளுக்கு உள்ளுக்குள் வலித்தாலும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை .அதுவும் இவன் முன் தன் தோல்வியை காட்ட விரும்பாதவள் புரோக்கரின் கவனத்தை கவரும் வண்ணம் தொண்டயை செறும,

பேசிக் கொண்டிருந்த இருவரும் திரும்பி பார்த்தனர். பிரியாவின் கண்களோ பல வருடங்களுக்கு பின் பார்க்கின்ற கௌரியில் நிலைத்து நிற்க, அவனோ அவளை தெரிந்ததை போல காட்டிக் கொள்ளாமல் சிறு புன்னகையை உதிர்க்க ,அவளின் திகைத்த பார்வையை கண்ட தரகர் ,

“கௌரி சார் இவங்கதான் உங்க வைப்பா …” என்று கேட்ட நொடி , முகத்தில் தோன்றிய மலர்ச்சியை லேசாக இரும்பி மறைத்தவன் , தொண்டையை கனைத்து சரி செய்தபடி ,

“கௌரி இல்ல சங்கர்ர்ர்ர் …” என்று திருத்தியவன் பின் ,

“வொய்ப்பா …” என்று உதடுகள் மலர சிரித்தவன் ,

“மேடத்துக்கு ஓகேனா எனக்கு நோ ப்ரோப்ளம் …” என்று கண்கள் மின்ன குறும்பு கூத்தாட பேசியவனை திரும்பியும் பார்க்காதவள் ,

“ஒருத்தங்களை பத்தி தெரியறதுக்கு முன்னாடி எதுக்கு கண்டவங்க கூட ஜோடி சேர்த்து பேசுறீங்க …நான் உங்கள பார்க்கத்தான் வந்தேன் … பேசுறத பார்த்தா நீங்க வீட்டு ப்ரோக்கர் மட்டும்தானா இல்ல …” என்று இழுக்கவும் , அவள் தன்னை மட்டமாக பேசியதை பொறுத்துக் கொள்ள முடியாதவர்

“என்னமா பண்றது என்ன பார்க்க வந்தேன்னு சொல்ற … ஆனா நான் உன்ன பார்த்தபோ நீ கௌரி சாரை தான் வச்ச கண்ணு எடுக்காம சைட் அடிச்சுட்டு பார்த்துட்டு இருந்தியா … அதான் அவசரப்பட்டுட்டேன் … சாரி மா…” என்று அவள் தலையில் கொட்டி மன்னிப்பும் வேண்டவும் ,

அவரின் நேரடி பேச்சில் அதிர்ச்சியடைந்தவளை அப்படியா என்பதை போல ஒற்றை புருவம் உயர்த்தி பார்த்து ரசனையுடன் சிரித்தவனை கண்டு ஆத்திரத்தில் முறைக்க , அதையும் கண்கள் மின்ன ரசித்து மகிழ்ந்தவனை கண்டு கடுப்பானவள் , “ஜொள்ளு பார்ட்டி… ” என்று வாய்க்குள் முணுமுணுக்கவும் , அதை கண்டுக் கொண்டவனின் இதழ்கள் வசீகர புன்னகையில் விரிய தன் கைக்குட்டையை எடுத்து தன் உதடுகளில் உள்ள ஜொள்ளை துடைப்பதைப் போல நடித்தவனை கண்டு கடுப்பானவள், அதே கடுப்புடன் தரகரை திரும்பி பார்க்கவும், இவ்வளவு நேரம் இவர்கள் இருவரையும் கையை கட்டிக் கொண்டு பார்த்திருந்தவரின் பார்வை இதான் உங்க ஊர் கண்டவங்களா என்று கேள்வி கேட்டது. அதை சிறிதும் கண்டுக் கொள்ளாதவள் ,

"என்ன எதுக்கு வர சொன்னீங்க…" என்றவளை புரியாமல் பார்த்தவர்,

“நான் உன்ன வர சொன்னேனா … இதுக்கு முன்னாடி உன்ன பார்த்தது கூட இல்லமா … என்னமா வந்ததிலிருந்து ஒரு மாதிரியாவே பேசிகிட்டு இருக்க … கௌரி சார் வேற என்ன தப்பா நினைக்க போறார் …” என்றவறை விட்டுவிட்டு ,

‘ஆமா இவரு பெரிய எலிசபெத்து பேரன் … அப்படியே தப்பா நினைச்சுட்டாலும் கொடுத்துக்கிட்டு இருக்கிறது நின்னுட போகுது …’ என்று உள்ளுக்குள் சலித்துக் கொள்ள அவனோ ப்ரோக்கரிடம்

“பழனிஈஈஈ … எத்தன தடவ சொல்றது கௌரி இல்ல சங்கர் …சங்கர் சங்கர்ர்ர்ர்ர்னு …” என்று அழுத்தி கூறியவனை, இது ரொம்ப முக்கியம் பாரு என்பதை போல பார்த்தவளை கண்டுக் கொள்ளாமல்,

“என்ன பண்ணலாம் சொல்லுங்க பழனி…” என்றவனை இடைமறித்த பிரியா,

"காலைல போன்ல பேசினிங்களே அந்த கௌரி நான் தான்" என்றவளை மீண்டும் புரியாமல் பார்த்தவர்,

"கௌரியா… எனக்கு தெரிந்த ஒரே கௌரி இதோ நிக்கிறாறே சங்கர் சார்தான் … உன்ன யாருன்னு தெரியலையேமா…” என்று கௌரியை நோக்கி கையை காட்டிவிட்டு யோசனையில் மூழ்க, பல்லைக் கடித்து பார்த்தவள்

"ஹல்லோ ரொம்ப யோசிக்காதிங்க… செல்வி தெரியுமா அமிஞ்சக்கரைல வீடு பார்த்து கொடுத்தீங்களே… அட்வான்ஸ் கூட கொடுத்தாச்சு … நாளைக்கு அங்க ஷிப்ட் ஆகிறோம் இப்ப எதுக்கு இங்க வர சொன்னீங்க" என்றவளை சங்கடத்துடன் பார்த்தவர்,

"ஒ அமிஞ்சக்கரை பார்ட்டியா ஞாபகம் வந்துடுச்சுமா… அது வந்துமா அந்த ஹவுஸ் ஓனர் அட்வான்ஸை திருப்பி கொடுத்துட்டாங்கமா… அவங்களுக்கு அந்த போர்சன் தேவை படுதாம்" என்று சர்வ சாதாரணமாக பிரியாவின் தலையில் பெரிய பாறாங்கல்லை தூக்கி போட, சில நொடிகள் அசைவற்று நின்றுவிட்டாள்.

இதை நம்பி வார்டனிடம் வாய் சவடால் விட்டு திமிராய் பேசியது வேறு மனக் கண்ணில் வந்து போக,

"சார்ர்ர் என்ன சார் சொல்லுரீங்க கடைசி நிமிஷத்தில இப்படி சொன்ன நான் என்ன சார் பண்ணுவேன்" குரல் கமர கேட்டவளை பார்த்து ஏதோ சொல்ல வந்த தரகரை, இடைமறித்த கௌரி,

"ஹல்லோ பழனி சார் முதல்ல என்னோட பிரச்சனையை தீர்த்துட்டு அப்புறம் அந்த மேடம் பிரச்சனையை பாருங்க"என்றவனை முறைத்து பார்த்த பிரியாவிற்கு புரிந்தது இது அனைத்தும் இவன் வேலையாகத்தான் இருக்கும் என்று. இவன் முன் உடைந்து போக விரும்பாதவள் தீர்க்கமாய் தரகரை பார்த்து,

"என்ன சார் விளையாடுறிங்களா நாளைக்கு ஹாஸ்டல காலி பண்ணணும், அட்வான்ஸ் கொடுத்து வீடு ஷிப்ட் பண்ண போற நேரத்தில வீடு இல்லைன்னு அசால்ட்டா சொல்றீங்க … முடியாது சார் எனக்கு நாளைக்கு வீடு என் கைக்கு வந்தாகனும் …" என்று ஆத்திரத்தில் முகம் சிவக்க பேசியவளை சற்றும் மதிக்காமல்,

"பழனி இப்போ வீடு என் கைக்கு வருமா வராதா" என்று கறாராக இடைமறித்த கௌரியை எரிச்சலுடன் பார்த்த ப்ரோக்கர்,

"கௌரி சார்…" என்றழைத்தவரை

"கால் மீ ஷங்கர்" என்று திருத்தியவனை கொலை வெறியுடன் பார்த்தனர் இருவரும். அவர்களை கண்டுகொள்ளாதவன்,

"சொல்லுங்க பழனி…" என்க

"உங்க வைப் எங்க சார்" என்றவருக்கு

"இல்லாதா வைப்க்கு நான் எங்கே போவேன்… எனக்கு அதெல்லாம் தெரியாது முழு அட்வான்ஸ் கொடுத்தாச்சு… என் கைக்கு வீடு கிடைக்குமா கிடைக்காதா" என்று அதுலயே நின்றவனை கண்டு அயர்ந்து போனவர்,

"ஷங்கர் சார் அந்த வீட்டை பார்க்கும் போது என்ன சார் சொன்னேன்… பேமிலியா இருக்கிறவங்களுக்குதான் கொடுப்பாங்கனு சொன்னேனா இல்லையா அதுக்கு ஒத்துக்கிட்டுத்தானே வீடு பார்த்திங்க ... அடுத்து அட்வான்ஸ் கொடுக்கும் போது என்ன சார் சொன்னிங்க குடி வரும் போது வைப்ப கூட்டிட்டு வருவேன் சொன்னிங்கதானே எங்க சார் உங்க வைப் … வீட்டு ஓனரம்மா உங்க மனைவியை பார்த்தாத்தான் சாவி கொடுப்பேன் சொல்லிட்டாங்க … நீங்க உங்க வைப்ப கூட்டிட்டு வந்து அந்த அம்மா கிட்ட சாவி வாங்கிக்கோங்க" என்று எரிச்சலுடன் பேசியவரை , கடுப்புடன் பார்த்த கௌரி ஏதோ சொல்ல வரவும், அவனை கண்டுக்காத தரகர் பிரியாவிடம் திரும்பி,

"அம்மாடி மன்னிச்சுடுமா அந்த பொம்பளை கடைசி நிமிஷத்தில வீட்டை தர மாட்டேன் சொல்லிடுச்சு… ஒரு வாரம் டைம் குடுமா வேற நல்ல வீடா பார்த்து தாரேன்" என்றவர் பேசியபடி பையில் இருந்து பணக்கட்டை எடுத்து அவள் கையில் திணித்து,

"என்னோட கமிசன் பணம் கூட எடுத்துக்கல ... நீ கொடுத்த அட்வான்ஸ் பணம் அப்படியே உன் கிட்ட கொடுத்துட்டேன்மா" என்றவர் கௌரியிடம் திரும்பி,

"ஷங்கர் சார் உங்க மனைவியை கூட்டிட்டு வந்து சாவி வாங்கிக்கங்க சார்… அப்போ நான் கிளம்புறேன்" என்றவர் பொதுவாக விடைப் பெற்று அங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற நினைப்பில் பைக்கை கிளப்பி கொண்டு மறைந்தார்.

பிரியாவிற்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலை. கையை பிசைந்து கொண்டு நின்றவளுக்கு ஏற்கனவே வெய்யிலில் நடந்ததால் உண்டான சோர்வுடன் தரகர் பண்ணிவைத்த வேலையில் மேலும் சோர்வடைந்தவள் தளர்ந்து போய் அருகிலிருந்த மரத்தில் சாய்ந்துக் கொள்ள, சற்று நேரம் அவளையே ஆழ்ந்து பார்த்திருந்தவன் அவளிடம் மனம்விட்டு பேச எண்ணி நெறுங்க,

"சங்கர்… என்னப்பா வீட்டுக்குள்ள வராம ரொம்ப நேரமா வெளியே நின்னுட்டு இருக்க… உள்ள வாப்பா சாவி வாங்க தானே வந்திருக்க … அது யாரு உன் சம்சாரமா…" என்ற படி கௌரியை நோக்கி வந்தார் அந்த வீட்டின் உரிமையாளரான மீனாட்சி அம்மா.

திடீரென்று கேட்ட கணீர் குரலில் தெளிந்தவளின் காதில் , உன் சம்சாரமா என்ற வார்த்தை நாராசமாய் ஒலிக்க , அவசரமாக மறுக்க நினைத்தவளின் கரத்தை பற்றியவன்,

"ஆமாமா … இவங்க தான் என் வொய்ப் பி…" என்று ஆரம்பித்தவன் பின் “கௌரி…” என்று அறிமுகபடுத்தியவன் , திரும்பி பிரியாவை பார்க்க தன்னால் முடிந்த மட்டும் முறைத்துக் கொண்டிருந்தவளின் தோளை சுற்றி தன் கரத்தை போட்டு தன்னோடு இறுக்கிக் கொண்டவன் அவளை பார்த்து வசிகர புன்னகையை இதழ்களில் மலர விட்டவாறே ,

"கௌரி…இவங்க தான் மீனாட்சி அம்மா இந்த வீட்டோட மகாலட்சுமி … அம்மா வீட்டுக்கு குடி வந்தா அடிக்கடி கோவிலுக்கு போற தேவையில்ல … அம்மாவ பார்த்தா அந்த மதுரை மீனாட்சி அம்மன நேர்ல பார்த்தது போல …." என்று கூடை ஐசை தலையில் கொட்ட, முகம் மகிழ்ச்சியில் மலர கௌரியின் கையில் லேசாக அடித்தவர் ,

“பார்த்து கௌரி ஏற்கனவே எனக்கு சளி ஓவரா இருக்கு … இதுல நீ வேற ஐஸ் பேக்டரில உட்கார வைக்கிற … வீடு உனக்குதான்பா … கௌரிய அழைச்சுக்கிட்டு உள்ள வா …” என்றவர் பிரியாவை பார்த்து “உள்ள வாமா” என்றுவிட்டு போக , இதுவரை போலியாக சிரித்துக் கொண்டிருந்தவள் அவர் தலை மறைந்ததும், அவனிடமிருந்து வேகமாக விலகியவள்,

“ஏய் இன்னொரு தடவ கைய தொட்ட மரியாதை கெட்டுடம் … என்ன தைரியம் இருந்தா என்ன உன்னோட மனைவினு அறிமுகம் படுத்துவ… என்ன பார்த்தா இளிச்சவாயின்னு எழுதி ஒட்டிருக்கா… இல்ல ஜட்டம் போல தெரியுதா…" என்று சீறியவளின் போன் அலற அதில் தெரிந்த வார்டன் நம்பரை கண்டு நொந்துப் போனவளுக்கு நாளைக்குள் வேறொரு ஹாஸ்டலை பார்த்து செல்வது என்று முடியாத காரியமாக பட, சில நொடிகள் கண்ணை மூடி திறந்தவள் அதிருப்தியில் தலையை இடமும் வலமும்மாக ஆட்டிய பின், ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு தன்னை நிலைப்படுத்திக் கொண்டபின் கௌரியின் கண்களை நேராக பார்த்தவாறே,

"ஒன் மந்த் … ஒன் மந்த் மட்டும் வொய்ப்பா நடிக்கிறேன்… அதுக்கு அப்புறம் வேற இடம் பார்த்துகிட்டு போய்க்கிட்டே இருப்பேன் … இதுக்கு சம்மதம்னா வீட்டுக்குள்ள போ …” என்று சொல்லி முடிப்பதற்குள் கேட்டை திறந்து கொண்டு வீட்டிற்குள் சென்று கொண்டிருந்தவனின் இதழ்களில் விஷம சிரிப்பும், முகத்தில் எதையோ சாதித்த புன்னகையும் இருந்தது.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29512

கௌரி - 25

மீனாட்சி அம்மாவிடம் வீட்டின் சாவியை வாங்கி கொண்டு இருவரும் வெளியேற , ஏற்கனவே சோர்ந்து போய் தெரிந்த பிரியாவை கண்ட கௌரி ,

“ஏங்க … எங்க போனும்னு சொல்லுங்க … நான் ட்ராப் பண்ணிடுறேன் … கார்ல தான் நான் வந்தேங்க …” என்றவனை , முறைத்து பார்த்தவள் பதில் கூறாமல் நடக்க ,

“அட உங்க அழகுல மயங்கி ஒன்னும் கூப்பிடல … நான் ட்ராவல்ஸ் கார் தாங்க ஓட்டுறேன் … நீங்க போற இடத்திற்கு எவ்வளவு ஆகுமோ பே பண்ணிடுங்க …” என்க , ஏற்கனவே டயர்டாக இருந்ததால் மறுபேச்சு பேசாமல் காரில் உட்கார்ந்துக் கொண்டாள்.

சில நொடிகள் அவர்கள் பயணம் அமைதியில் கழிய , மெல்ல பக்கவாட்டில் திரும்பி அவளை பார்த்தான் கௌரி. ஏதோ சிந்தனையில் இறுகி போயி உட்கார்ந்திருந்தவளை வாரியணைத்து கொள்ள துடித்த கைகளை ஸ்டேரிங் வீலை அழுந்த பற்றி அடக்கி கொண்டான். அவளை அப்படியே விட மனமில்லாதவனாக,

“அப்புறங்க … உங்களை பத்தி சொல்லுங்களேன் … தெரிஞ்சுக்கிறேன் …” என்று மெல்ல பேச்சு கொடுக்க , திடீரென்று கேட்ட அவன் குரலில் சற்று அதிர்ந்து போனவள் அவன் கூறியதை நினைவு படுத்தி பார்த்தவளின் முகம் ரொம்ப முக்கியம் என்ற பாவனையை காட்ட , அதை சரியாக கண்டுக் கொண்டவன் ,

“ஒரே வீட்டுல இருக்க போறம் … ஒருத்தரை பத்தி ஒருத்தர் தெரிஞ்சுக்கிட்டாதானே எந்த பிரச்சனையும் வராம தடுக்க முடியும் …” என்கவும் ,

“தெரிஞ்சுக்கணும்னு அவசியமில்ல … என்னால எந்த பிரச்சனனையும் வராது …”என்று இறுகி போன குரலில் கூறியவளை பார்த்து பற்கள் தெரிய சிரித்தவன் ,

“பார்த்தாலே தெரிதுங்க … நீங்க ரொம்பப் நல்லவங்கனு …அதுவும் வெள்ளையா வேற இருக்கீங்களா , வெள்ளையா இருக்கவங்க பொய் மட்டும் இல்லைங்க , எந்த வம்பு தும்புக்கும் போக மாட்டாங்க …” என்றவனை முறைத்து பார்த்தவளை கண்டு

“ஏங்க முறைக்கிறீங்க , உங்கள கிண்டல் பண்ணல உண்மையாத்தான் சொல்றேன் …” என்றவனை அலட்சியம் செய்தவள் வெளியே வேடிக்கை பார்த்து வர ,

“ஏங்க உங்க முழு பேரும் கௌரிதாங்கள இல்ல கூட இன்னும் இருக்கா …” என்று நிறுத்தியவனை மீண்டு முறைத்தவளை பார்த்து

“உண்மைய கண்டு புடிச்சுட்டேன்க …” என்று சம்பந்தமே இல்லாமல் பேசியவனை கண்டு என்ன அது என்ற ஆர்வம் உள்ளுக்குள் வந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாதவள் அலட்சியமாக தலை திருப்பிக் கொள்ள ,

“பார்த்தீங்களா பார்த்தீங்களா … இப்போ நான் சொன்னது கூட உண்மைன்னு ப்ரூவ் ஆகிடுச்சு … அதாங்க வெள்ளையா இருக்கிறவங்க தேவியில்லாதா விசயத்துல தலையிட மாட்டாங்கன்னு … பாருங்க ஒரு உண்மை கண்டு புடிச்சுட்டேன்னு சொன்னேன் , கண்டுக்காம வேடிக்கை பார்த்துட்டு வரீங்க , இதுவே வேற யாரவது இருந்திருந்தா என்ன விஷயம்னு நோண்டி நொங்கு எடுத்துருப்பாங்க …” என்று மொக்கை போட்டவனை பல்லை கடித்து பொறுத்துக் கொண்டவள் மனதில் ,

‘லூசு பயலே , வளவழுனு இழுக்காமா என்னத்த கண்டுபுடிச்சேன்னு சொல்லி தொலை … இதுவா அதுவான்னு டென்ஷன் ஆகுதுல …’ என்று புலம்பியபடி அவனை மீண்டும் முறைத்துக் பார்க்க , ஸ்டேரிங் வீலை பிடித்துக் கொண்டிருந்த வலது கையை தூக்கி ஸ்டேரிங் வீலை ஓங்கி அடித்தபடி ,

“சந்தேகமே இல்லைங்க… நான் கண்டுபுடிச்சது நூறு பெர்ஸன்ட் உண்மைங்க …” என்று மீண்டும் ஆரம்பிக்க , ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியாமல் பார்வையால் என்னதது என்று கேள்வியெழுப்ப ,

“அதாங்க நீங்க கண்ண கண்ண விரிச்சு முறைச்சா காந்த கண்ணழகி போல இருக்கீங்கன்னு உங்க ஆழ் மனசுல யாரோ தப்பா பதிய வச்சுருக்காங்க போல … அதான் என்ன சும்மா சும்மா முறைச்சு முறைச்சு பாக்குறீங்க …” ஈஈஈ என்று சிரித்தபடி கூறியவனை மீண்டும் முறைக்க ,

“பார்த்தீங்களா பார்த்தீங்களா இப்போ கூட முறைக்கிறீங்க , எவ்வளவு அழகான கண்ணு அத வச்சு என்ன சைட் அடிக்கலாம் , ஆசையா பார்க்கலாம் ரசிச்சு பார்க்கலாம் ஏன் காதலா கூ …” என்று ஆரம்பித்தவனை திரும்பி உஷ்ண பார்வை பார்த்தவள் ,

“ஹலோ முதல்ல கார நிறுத்துங்க … முன்ன பின்ன தெரியாத பொண்ணு கிட்ட இப்படித்தான் மிஸ் பிஹேவ் பண்ணுவீங்களா … ஆள பார்த்தா டீசெண்டா இருக்கீங்க பட் உங்க பார்வையும் பேச்சும் சரியில்ல … என்னால ஒன் மந்த் உங்க கூட குப்பை கொட்ட முடியாது … நீங்க கார நிறுத்துங்க இத்தோடு முடிச்சுக்கலாம் …” என்றவளை அதிர்ந்து பார்த்தவன் ,

“இங்க பாருங்க நான் தப்பாலாம் பேசல … உங்கள முன்னையும் பின்னையும் ஏன் சுத்தி கூட பார்த்துட்டேன்க அதனால முன்ன பின்ன தெரியாத பொண்ணுன்னு சொல்றது செல்லாது …”என்றவன்

“அதோடு … உங்கள பார்த்தா ஓடி போன என் பொண்டாட்டி போலவே இருக்கீங்க … அதான் கோவமா பாக்கிற அந்த கண்ணு பாசமா பாக்காதன்னு கொஞ்சம் உரிமை எடுத்து பேசிட்டேன் இது தப்பாங்க …” என்று அப்பாவியாய் பேசியவனை கண்டு கொலை காண்டு ஆனவள் ,

“இப்படி பேசுறதுக்கு உங்களுக்கு வெட்கமா இல்ல …” என்று கோபத்தில் சீற , நீண்ட நேரம் தங்கள் வண்டியை முந்த நினைத்த வண்டிக்கு வழியை விட்டவன் , பின் மெல்ல திரும்பி பார்த்து உதட்டை பிதுக்கி
தலையை ஆட்டியவன் ,

“என் பொண்டாட்டி ஓடி போனதுக்கு நான் ஏங்க வெட்க படனும் … நானே பாவம் … ஓடி போன பொண்டாட்டி திரும்பி இன்னைக்கு வருவா நாளைக்கு வருவானு ஏழு வருசமா காத்துகிட்டு இருக்கேன் … என்ன பார்த்து வெட்கமா இல்லையானு கேட்டுடீங்களே …”பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு பேசியவனை கண்டு பல்லை நர நர என்று கடித்தவள் ,

“ஸ்ஸ்ஸ்ஸ் ஸ்ஸ்ஸப்பா … தங்க முடில … இப்படி மொக்க போட்டா பொண்டாட்டி ஓடி போகாமா கூடவே இருந்து கொஞ்சுவாளா … நான் சொன்னது, என்ன போல தேர்ட் பேர்சொன் கிட்ட உங்க பொண்டாட்டி ஓடி போய்ட்டானு சொல்றீங்களே அது வெட்கமா இல்லையானு கேட்டேன் … அப்புறம் இன்னைக்குத்தான் பார்க்கிற பொண்ணுகிட்ட என் பொண்டாட்டி போல இருக்கீங்கன்னு சொல்றது வெட்கமா இல்லையானு கேட்டேன் …போதுமா …” என்று பொறுமையை இழுத்து பிடித்து பேச, உதட்டை பிதுக்கி சிரித்தவன்

“ நீங்க கில்லாடியான ஆளுதாங்க … பாக்க ஆண்ட்டி போல இருந்துகிட்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பொண்ணு பொண்ணுன்னு சொல்லி என் மனசுல பதிய வைக்கிறீங்க பாருங்க அங்க நிக்கிறீங்க …” என்று நக்கலடித்தவனை தீ பார்வை பார்த்து ,

“இங்க பாருங்க ரொம்ப எல்லை மீறி போறீங்க …” ஒற்றை விரல் நீட்டி எச்சரிக்க ,

“சரி விடுங்க என் சோக கதையை கேட்டு ரொம்ப பாதிப்பு அடைஞ்சுருக்கீங்க போல … நம்ம ஊட்டுல எப்படீங்க, உங்க புருஷன் தொல்ல தாங்காம நீங்க வீட்ட விட்டு ஓடி வந்துடீங்களா … இல்ல உங்க தொல்ல தாங்காம அவரு விரட்டி விட்டுட்டாரா …” என்றவனை திரும்பி பார்த்து உட்கார்ந்தவள் ,

“ரெண்டும் இல்லைங்க …எனக்கும் என் ஹஸ்பண்ட் பிரெண்டுகும் ரொம்ப நாளா கள்ள தொடர்பு இருந்திச்சு , ஒருநாள் நாங்க ஒண்ணா இருந்தத நேர்ல பார்த்துட்டார் … என்ன போல ஒரு கேடுகெட்டவ இனி அவர் வாழ்க்கைக்கு தேவைலனு துரத்தி விட்டுட்டார் …” அவனுக்கு வலிக்க வேண்டும் என்றே பதில் கூற , அவள் எதிர்பார்த்ததை போலவே கௌரியின் உடல் இறுகி முகம் கருக்க அமைதியாக காரை ஓட்டியவனிடம் ,

“என்ன சங்கர் சார் பேச்சு மூச்சே காணும் … ஒருவேள பயந்துடீங்களா இவ்வளவு மோசமான பொண்ணு கூடவா வீடு ஷேர் பண்ணணுமானு … அப்படி ஒரு தாட் இருந்தா ரப்பர் வச்சு அழிச்சுடுங்க … நீங்களே ட்ராவெல்சல சம்பளத்துக்கு ஓடிக்கிட்டு இருக்கீங்க … என் டார்கெட் ஒன்லி பணக்கார அங்கிள்ச மட்டும்தான் … அதனால நீங்க ஒன்னும் பயப்பட தேவையில்ல …” கண்ணை சிமிட்டி கூற , கௌரியின் கையில் கார் தாறுமாறாக பறந்தது.

அவனின் இறுகிய தோற்றதை கண்ட பிரியா மேலும் பேச்சை வளர்க்காமல் ஜன்னலோரம் திரும்பிக் கொண்டவளின் உள்ளம் உலை கொதிப்பது போல கொதித்து கொண்டிருந்தது.

‘குடும்பத்துக்காக என்ன வீட்டைவிட்டு வெரட்டிட்டு , திரும்பி ஒன்னு சேர வந்திருக்கான் வெட்கமே இல்லமா … போடா நீயும் வேணாம் உன் பாசமும் வேணாம் … எப்பவும் போல யாரும் இல்லாதா அநாதையா இருந்துட்டு போறேன் …’ என்று கருவியவளுக்கு கண்ணை கரித்து கொண்டு வர , கண்ணை மூடிக் கொண்டு சீட்டில் சாய்ந்துக் கொண்டாள்.

பிரியாவின் பதிலில் செருப்படி வாங்கியது போல உணர்ந்தவனுக்கு அதற்கு மேல் பேச்சை வளர்க்க பிடிக்காததால் அமைதி காத்தவனுக்கு ,பிரியாவோடு மீண்டும் சேர்வது என்பது அத்தனை சுலபமில்லை என்றும் புரிந்தது.

மூன்று வருடங்கள் , சரியாக மூன்று வருடங்கள் பிரியாவை அவளுக்கு தெரியாமலே அவளை பின் தொடர்ந்து சென்றிருக்கிறான் கௌரி. பேருந்தில் பயணிக்கும் பொழுது அவளறியாமல் அவள் பின் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு அவளை ரசித்திருக்கிறான். செல்வியுடன் அவள் செல்லும் இடங்களில் எல்லாம் நாய்க்குட்டி போலவே தொடர்ந்து சென்றிருக்கிறான். பல இரவுகள் அவள் தரிசனம் வேண்டி அவள் இருக்கும் ஹாஸ்டலில் நீண்ட நேரம் காத்தும் இருக்கிறான். இப்படி அவள் அறியாமல் அவளுடன் பயணித்தவனுக்கு இன்று தன்னருகில் நெருக்கமாக உட்கார்ந்திருப்பவளை சீண்டாமல் அமைதி காப்பது கொடுமையான விஷயமாக பட, இதற்குமேல் தாக்கு பிடிக்க முடியாமல் காரை அருகிலுள்ள ஹோட்டலின் முன் நிறுத்தினான்.

ஹாஸ்டலுக்கு செல்லாமல் ஹோட்டல் அருகில் வண்டியை நிறுத்தியவனை கேள்வியுடன் பிரியா பார்க்க ,
சற்று தயங்கியவன் பின்

“சாரிங்க இன்னைக்கு முக்கியமான வேலை இருந்ததால காலைல இருந்து நான் எதுவும் சாப்பிடல … இப்போ வீடு கிடைச்ச சந்தோஷத்துல பயங்கரமா பசிக்குது … வாங்களேன் நாளைல இருந்து ஒன் மந்த புருஷன் பொண்டாட்டியா சார்ஜ் எடுத்துக் போறதுக்கு நமக்கு நாமே ட்ரீட் கொடுத்துக்கலாம் …” என்றவனை முறைத்து பார்த்தவள் பின் கார் கதவை திறந்துக் கொண்டே ,

“தேங்க்ஸ் … பட் எனக்கு இன்டெரெஸ்ட் இல்ல … எனக்கும் சேர்த்து நீங்களே ட்ரீட் கொடுத்துகுங்க , பக்கத்துல தான் ஹாஸ்டல் நான் நடந்தே போய்ப்பேன் …” என்றபடி காரிலிருந்து இறங்க , கதவை திறந்துக் கொண்டு வேகமாக அவளருகில் வந்தவன் ,

“ப்ளீஸ் … உண்மையிலயே பசிக்குதுங்க … நீங்க சாப்ட்டா நானும் சாப்பிடுவேன் இல்லனா பரவாயில்லை வண்டில ஏறுங்க உங்க இடத்துல இறக்கிவிட்டுட்டு போறேன் …” என்று கெஞ்சும் குரலில் பேசவும் , மறுக்க தோன்றாமல் அவனை மீண்டும் முறைத்துவிட்டு சாப்பிடுவதற்காக உள்ளே சென்றாள்.

அவள் சட்டென்று சம்மதிப்பாள் என்று எதிர் பார்க்காதவன் மனம் நிறைய சந்தோசத்துடன் அவள் அமர்ந்திருந்த இருக்கை நோக்கி செல்ல , கை கழுவதற்காக எழுந்து சென்றவளுக்கும் சேர்த்தே ஆர்டர் கொடுத்தவன் , அவள் வந்ததும் ,

“உங்களுக்கும் சேர்த்தே நான் ஆர்டர் சொல்லிட்டேன் …” என்க சிறு தலையசைப்புடன் ஏற்றுக் கொண்டவளின் முன் பிரியாணி கிண்ணத்தை சர்வர் வைக்க , தன் முன்னிருந்த தட்டில் சிறிது பிரியாணியை போட்டபடி ,

“எடுத்துக்கோங்க … இந்த கடைல பிரியாணி நல்லாயிருக்கும் … சாப்ட்டு பாருங்க உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் …” என்றவன் ஒரு வாய் பிரியாணியை உள்ளே தள்ள , தன் முன்னிருந்த பிரியாணி கிண்ணத்தை வெறித்து பார்த்தவளின் முகம் இறுகி போகவும் , எதுவோ சரியில்லை என்று நினைத்தவன் ,

“சாப்பிடுங்க …” என்று சிறிது பிரியாணியை அவள் தட்டில் வைத்தபடி கூற , மெல்ல நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்தவள் ,

“நான் பிரியாணி சாப்பிட மாட்டேன் …” இறுகி போன குரலில் கூறவும் , ஒருநொடி அமைதியானவன் பின்

“என்னங்க சொல்றீங்க … பிரியாணின்னா எல்லாருக்கும் உயிராச்சே … அது எப்படி உங்களுக்கு புடிக்காம போகும் … சும்மா சாப்ட்டு பாருங்க …” தன்னை சமாளித்து கூற,

“எனக்கும் ஒரு காலத்துல பிரியாணி உயிர் தாங்க … ஆனா இப்போயில்ல …” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் வெளியேற , அவள் செல்வதையே கையாலாகாத தனத்துடன் பார்த்திருந்தவனுக்கு , மனம் அந்த ஓரிரவை நோக்கி பயணிக்க , அது தந்த இனிமைகளை நினைத்து பார்த்தவனிடமிருந்து பெருமூச்சு எழ தானும் சாப்பிடாமல் எழுந்துக் கொண்டான்.

ஹாஸ்டலை நோக்கி காரை செலுத்தியவன் அவளை சீண்டி வம்பிழுக்காமல் அமைதியாக வர , பழைய நினைவுகளில் மூழ்கி போன பிரியா துக்கம் தாளாமல் கார் கண்ணாடியில் சாய்ந்துக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள். ஹாஸ்டல் வந்ததும் வண்டியை விட்டு இறங்கியவள் , அவனிடம் கார் வாடகையாக சில நூரை நீட்ட பிகு பண்ணாமல் அமைதியாக வாங்கிக் கொண்டவனிடம் சிறு தலையசைப்புடன் விடை பெற்று ஹாஸ்டலில் நுழைய போனவளை

“பிரியா …” என்று தடுத்து நிறுத்தினான் கௌரி. தன்னை பிரியா என்று அழைத்தது பிடிக்கவில்லை என்பதை கண்ணில் காட்டி முறைத்தவளின் முன் சிறு பிளாஸ்டிக் பாகை நீட்டியவன்

“இந்தாங்க பிடிங்க … இதுவரைக்கும் நடந்தத மறந்துட்டு … நாளையிலிருந்து பிரெஷா உங்க லைப்ப ஸ்டார்ட் பண்ணுங்க … அதுக்கு முதல் படியா பாதியில சாப்பிடாம விட்ட பிரியாணியில இருந்து தொடங்குங்க … வாங்கிக்கோங்க …” என்று பிரியாணி பொட்டலம் அடங்கிய பையை அவளிடம் நீட்ட , அவனையே வெறித்து பார்த்தவளுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ , அவன் கையிலிருந்த பிரியாணி பொட்டலத்தை பிடுங்கி , ஆவேசமாக அவன் முகத்தில் விட்டெறிய , விட்டெறிந்த வேகத்திற்கு பிரியாணியும் சால்னா பாக்கெட்டும் உடைத்துக் கொண்டு அவன் முகத்தில் வழிய , ஒரே ஒரு நொடி அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன் பதில் ஏதும் பேசாமல் முகத்தில் வழிந்த சால்னாவை கூட துடைக்காமல் விறுவிறு என்று காரில் ஏறி பறந்தான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29553

கௌரி - 26

தன்னுடைய அறையில் இருட்டை வெறித்தபடி படுத்திருந்த பிரியாவிற்கு கௌரியின் சால்னா வழிந்த முகமே கண்முன் வந்து நிற்க தான் அவனிடம் நடந்துக் கொண்டது அதிகப் படியோ என்ற எண்ணம் தோன்றவும் கண்ணை மூடி தன்னையே நொந்துக் கொண்டவளின் கைப் பேசி அலறியது. அறைக்கு வந்ததிலிருந்து இன்னும் உடையை கூட மாற்றாமல் இன்ற நடந்ததை அசைபோட்டபடி படுத்திருந்தவளின் செவியை தீண்டிய கை பேசியின் ஒலியை கண்டு சலிப்புடன் எடுத்து பார்த்தவளுக்கு , அதில் செல்வியின் பெயர் மிளிரவும் கோபத்துடன் கட் செய்தாள்.

மீண்டும் மீண்டும் அழைப்பு வர , பொறுமையிழந்தவள் அழைப்பை ஏற்று அமைதி காக்க , அதிலயே அவளின் கோபத்தின் அளவை உணர்ந்த செல்வி ,

“என்கிட்ட பேசமாட்டியா ப்ரியா … கோபமா …” என்றவளுக்கு உதட்டை கடித்து அமைதி காத்தாள் பிரியா.

“ப்ளீஸ் பேசுடி … உன்ன ஏமாத்திட்டேன்னு நினைக்கிறியா …” என்ற கேள்விக்கு ,

“ஆமா … நீ இப்படி செய்வேன்னு கொஞ்சம் கூட நினைக்கல … உனக்கு மட்டும்தான் என்ன பத்தி தெரியும் இருந்தும் … கௌரி … அவர் …” என்றவளுக்கு மேலே பேச முடியாதளவுக்கு அழுகை வரவும் ,

“இல்ல ப்ரியா … நீ நினைக்கிறது போல நான் எதுவும் அண்ணா கிட்ட சொல்லல … அண்ணா உன்ன இன்னைக்கு தான் பர்ஸ்ட் டைம் பாக்கிறாருனு நினைக்கிறியா , இல்ல டீ அவர் மூணு வருசமா உன் பின்னாடி உனக்கு தெரியாம சுத்திகிட்டு இருந்தார் … நான் தான் சந்தேகப்பட்டு விசாரிச்சேன் அப்போதான் அவர் யாருனு தெரிஞ்சுச்சு …” என்கவும் , அதனால் தான் தன்னை கண்டதும் அதிர்ச்சி அடையவில்லையோ என்று நினைத்தவளுக்கு அவன் தன் பின்னே மூன்று வருடங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பே சிறிது சாந்த படுத்தியது. பதில் பேசாமல் அமைதி காத்தவளிடம்,

“அவரும் என் கிட்ட ஹெல்ப் கேட்கல … நானும் உன்ன பத்தி எதுவும் சொல்லல …” என்று நிறுத்தியவள் பின்,

“ப்ரியா உன்கிட்ட ஒரு விஷயத்த மறைச்சுட்டேன் … நான் போன வாரமே வேலையை விட்டுட்டேன் டி … போன தடவ ஊருக்கு போனப்ப அம்மாக்கு ரொம்ப முடியாம போச்சு , சீக்கிரம் என்ன விட்டு போய்டுவேன் பயப்படுறாங்க … இந்த நேரத்துல அவங்க கூடவே இருக்கனும் தோணிச்சு … உன்ன தனியா விட்டுட்டு போகவும் மனசில்ல … அப்போதான் இவ்வளவு நாள் உன்ன தொந்தரவு பண்ணாம உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்கிற அண்ணா ஞாபகத்து வந்தார்டீ… அவர்கிட்ட போய் என் நிலைமையை சொன்னேன் , அப்போதான் உன்ன ஹாஸ்டல்ல இருந்து முதல்ல கிளப்ப சொன்னார் மத்தத அவர் பாத்துகிறதா சொல்லவும் , எனக்கும் அது நல்ல ஐடியாவா பட ஒத்துக்கிட்டேன் …” என்றவள் ,

“எனக்கு தெரியும் என் மேல நீ கோபமா இருப்பேன்னு … நீ கோபப்பட்டாலும் பரவாலைன்னு தான் இதுக்கு சம்மதிச்சேன் … இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படியே இருக்க போறதா பிளான் ப்ரியா … உனக்குன்னு ஒரு லைப் வேணாமா … நீ ஒன்னும் அறுபது வயசு கிழவி கிடையாது எல்லாம் முடிஞ்சுடுச்சுனு வாழ … எனக்கு அண்ணன பார்த்தா தப்பா தெரில , அவர் உன்ன பாக்கிற பார்வையே சொல்லும் எந்தளவுக்கு உன் மேல பைத்தியமா இருக்காருன்னு …”

“நீயே சொல்லுடி … அண்ணனுக்கு என்ன குறைச்சல் ஏன் ஏழு வருசமா வேற பொண்ண பார்க்காமா உனக்காக காத்துகிட்டு இருக்கனும் … நீ என்ன உலக அழகியா இல்ல அம்பானி பொண்ணா … சொல்லு டி … அண்ணா ரோட்ல நடந்தாலே நான் முதக்கொண்டு எல்லா பொண்ணும் அவர திரும்பி பார்க்காம போனதில்ல …” என்று நிறுத்தியவள் பின் ,

“இங்கபாரு ப்ரியா , உன்ன பிரைன் வாஷ் பண்றதுக்கோ இல்ல நீ என்னவிட்டு போனா போதும் நினைப்புல இதெல்லாம் சொல்லல … உன்ன பத்தி தெரிஞ்சதாலதான் சொல்றேன் … என்ன வயசுடி உனக்கு ,இந்த வயசுலயே ஏன் ஆசையை துறந்துட்டு வாழணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா … அதுவும் சதி பண்ணி உன் நாத்தனார் காரி பிரிச்சு விட்டா , எத்தன வருஷம் ஆனாலும் அவன் எனக்காக காத்துகிட்டு இருப்பான்னு அது மூஞ்சுல செருப்பால அடிச்சு வாழ வேணாம் … நல்லா கேட்டுக்கோ ப்ரியா இது கடவுளா பார்த்து கொடுத்த வாய்ப்பு , யாரோ ஒருத்திக்காக உன் வாழ்க்கையை வேஸ்ட் பண்ணாதா … உனக்கு புடிச்ச மாதிரி வாழுடி …” என்று பிரியாவை ஏற்றிவிட்டு அறிவுரை கூற , யோசிக்க தொடங்கினாள் பிரியா.

செல்வி பேசி முடித்தபின் அடுத்து அவள் அன்னையும் பேசி அறிவுரை வழங்க , பிரியாவின் மனம் குழம்ப தொடங்கியது. போனை வைத்தபின் கட்டிலில் மல்லாக்க படுத்தபடி விட்டத்தை வெறித்தவளின் எண்ணம் முழுதும் கௌரியே நிறைத்திருந்தான். அதுவும் செல்வியின் , ‘உன் ஆசைப்படி வாழு டி …’ என்ற வார்த்தை அவள் காதுகளில் ரிங்காரமிட , அன்று கௌரியும் அவளும் ஈருடல் ஓருயிராய் பின்னி பிணைந்திருந்த இரவின் ஞாபகங்கள் மனக்கண்ணில் தோன்ற உணர்ச்சி பெருக்கில் துடித்து போனாள் பிரியா.

‘ஏன் இந்த ஒரு மாசமும் என் இஷ்டபடி வாழ கூடாது …’ என்ற எண்ணம் தோன்ற,
மீண்டும் அவனின் அணைப்புக்கும் , ப்ரிக்குட்டி என்ற அழைப்புக்கும் ஏங்கிய மனதையும் உடலையும் கட்டுப்படுத்த தெரியாமல் கண்ணில் கண்ணீரோட படுத்திருந்தவளின் முகம் எதையோ நினைத்து தீவிரமடைந்தது. ஏழு வருடங்களாக தன் உணர்ச்சிகளை தனக்குள் அடக்கிக் கொண்டவளுக்கு , அவனை கண்ட நொடியிலிருந்து சொல்லமுடியாத உணர்வுகள் தன்னுள் ஓடுவதை அறிந்தவள், இனியும் அடக்கி வைப்பது சிரமம் என்பது புரிய, கௌரியுடன் இருக்க போகும் இந்த ஒரு மாதத்தையும் தன் இஷ்டம்போல வாழ முடிவெடுத்தாள்.

அதேசமயம் மொட்டைமாடியில் தூரத்து நிலவை ரசித்துக் கொண்டிருந்த கௌரியின் நினைப்பு முழுவதும் பிரியாவை எப்படி சமாளிப்பது என்ற ரீதியில் இருந்தவனுக்கு தெரியவில்லை பிரியா என்னும் மோஹினியிடம் தான் மாட்டிக் கொண்டு விழிக்க போவதை.

மறுநாள் காலை ஆறுமணிக்கே அறைக் கதவை வார்டன் தட்ட ,அவரை முறைத்தபடியே கிளம்பியவள் அறையை காலி செய்தபின் தன்னுடைய பெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவளுக்கு , எப்படி புது வீட்டிற்கு செல்வது என்ற யோசனை. நேற்றிரவு அவன் முகத்தில் பிரியாணியை விட்டெறிந்ததால் அவனை அழைத்து பேசவும் சங்கடப்பட்டவளிடம் புது வீட்டின் சாவியும் இல்லை. ‘அய்யோ கடவுளே இப்போ என்ன செய்றது’ என்று புலம்பியபடி கண்களை சுழற்றியவளின் பார்வை வட்டத்தில் கௌரியின் கார் தென்பட , முகத்தில் அனிச்சையாக குறுநகை பூத்தது.

‘அப்படியே தாண்டா இருக்க , கொஞ்சம் கூட மாறலை …இதுனாலதான் உன் கூனி அக்காவும் , சூனியக்காரி அம்மாவும் பிரிச்சு வச்சுதுங்க … ’ என்று மனதில் கொஞ்சிக் கொண்டவள், பெட்டிகளை தள்ளிக் கொண்டு காரை நோக்கி செல்ல , அவள் வருவதை கண்ணாடி வழியே பார்த்தவன் , அவசரமாக காரிலிருந்து இறங்கி பெட்டிகளை வாங்கி கொண்டான்.

அவன் முகத்தை ஏறிட்டு பார்த்தவளுக்கு அவனின் சிவந்த கண்களை கண்டதும் நேற்று சால்னாவை விட்டெறிந்ததால் சிவந்து விட்டதோ என்று கவலை பிறக்க, பாவமாக அவன் முகத்தை பார்த்தாள். தன்னை பார்ப்பதை கண்டதும் , மெல்லிய சிரிப்பை உதித்தவன் முன்கார் கதவை திறந்து விட , அதில் ஏறாமல் பின்னிருக்கையில் ஏறிக் கொண்டவளை கண்டு சலிப்புடன் தலையசைத்துக் கொண்டவன் புது வீட்டை நோக்கி காரை செலுத்தினான்.

கார் ஓட்டுவதில் அவன் மும்முரமாய் இருக்க , பின் சீட்டில் உட்கார்ந்திருந்தவளோ அவனை ரகசியமாக ரசித்துக் கொண்டிருப்பதில் பிஸியானாள்.

‘ம்ம்ம் … முன்ன விட மூஞ்சுல நல்ல மெச்சூரிட்டி தெரியுது … கலரும் கம்மி ஆனா போலத்தான் இருக்கு ஏன் … ஏ சி வண்டி தானே ஓட்டுறான் அப்புறம் என்ன …’ என்று நினைத்தவள் அவன் தலையை உத்துபார்த்து ,

‘முடி கூட வெள்ள கலர் ஷேட் அடிக்குது … டய் அடிச்சுகிட்டா என்னவாம் அறுவது வயசா ஆகிடுச்சு …’ என்று மனதில் அலுத்துக் கொண்டவளின் ஞாபகத்தில் அன்று அவன் நடந்துக் கொண்டது நினைவுக்கு வரவும் முகம் இறுக அவனை பார்ப்பதை விடுத்து திரும்பிக்கொண்டாள்.

ஒருவழியாக புது வீட்டிற்கு குடி வந்தனர் கௌரியும் பிரியாவும். குட்டி ஹால் கிட்சேன் அளவான இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீட்டை கண்டதுமே பிரியாவிற்கு பிடித்து விட்டது. அவள் மனதில் நீண்ட நாட்களாய் இருந்த ஆசை இதுவரை நிறைவேறாத ஆசை ,அளவான வரவேற்பறை, கச்சிதமான சமையலறை, இரண்டு படுக்கையறை கொண்டு சிறிய வீடு . இன்று அது தனக்கே தனக்கு என்ற எண்ணமே அவள் முகத்தில் அளவிட முடியாத மகிழ்ச்சியை கொடுக்க , அது வாடகை வீடுதான் இந்த மகிழ்ச்சி தற்காலிகம்தான் என்று தெரிந்தாலும் அந்த இடத்தை பார்த்ததும் அவள் மனம் அமைதியடைந்தது .

அதே சந்தோஷத்துடன் , மாஸ்டர் பெட்ரூமில் நுழைந்தவள் அங்கே ஏற்கனவே போடப்பட்டிருந்த கட்டிலில் அமர, இலவம் பஞ்சு மெத்தையை கண்டதும் அப்படியே சரிந்து படுத்தாள் . அவள் படுத்ததும் உள்ளே வாங்கி கொண்ட மெத்தையின் சுகத்தில் லயத்திருந்தவளின் உடல் திடிரென்று சில்லிடவும் கண் திறந்து பார்த்தவள் முன் ஏசி ரிமோட்டை நீட்டியபடி நின்றிருந்தான் கௌரி.

மனம் லேசாகியிருந்ததால் அவனை கண்டதும் இறுக்கி கட்டி மெத்தையில் புரள வேண்டும் என்ற ஆசை பிறக்க , அதை கண்களில் காட்டியபடி மோக பார்வை பார்த்தாள். தான் பார்த்தது நிஜமா கனவா என்று புரியாமல் அதிர்ந்து போன கௌரி, தன் கண்களை கசக்கிவிட்டு மீண்டும் பார்க்க , அதற்குள் சுதாரித்த பிரியா தன் பார்வையை மாற்றி முறைத்து பார்க்க, ‘அதானே பார்த்தேன் … ப்ரிக்குட்டியாவது கண்ணால கூப்பிடுறவாவது … நல்லா இருக்கும் போதே முறைச்சு முறைச்சு பார்க்கும் … இப்போ கேட்கவே வேணாம் …’ என்று மனதில் தெளிந்தவன் அசட்டு சிரிப்பை உதிர்த்து ,

“அது வந்து … ரிமோட்டு …” என்று மீண்டும் ரிமோட்டை நீட்டவும்,

“ஹலோ … கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா … தெரியாத பொண்ணு ரூம்குள்ள இப்படித்தான் பெர்மிஷன் வாங்காம உள்ள வருவீங்களா …” என்று மிரட்டியவள் எழுந்து உட்கார , அவளின் சரிந்த முந்தானையில் பார்வை செல்லவும் எச்சில் கூட்டி விழுங்கியவன் அவசரமாக தன் பார்வையை திருப்பிக் கொண்டு ,

“அது இது ஏசி ரூம் , இத நீ …” என்றவனை முறைத்த முறைப்பில்,

“நீங்க எடுத்துக்குங்க … அட்டாச்சுடு பாத்ரூம் கூட இருக்கு … உனக் … உங்களுக்கு கம்பர்டபிளா இருக்கும் …” என்றவனிடம் , சொல்லிட்டில அப்போ கிளம்பு என்ற தோரனையில் பார்க்க,

ஏசி ரூம் , வா வா என்று கண் சிமிட்டி அழைத்த பஞ்சு மெத்தை தனிமை இதையெல்லாம் விட கருநீல புடவையில் வெளீர் இடையை காட்டி முந்தானை சரிய நின்றிருந்தவளின் கோலம் , கௌரியை நிலையிழக்க செய்ய , அங்கிருந்து நகராமல் பிடித்து வைத்த பிள்ளையார் போல நின்றிருந்தவனை புருவம் சுருக்கி பார்த்தவள்,

“சொல்லிட்டீங்கள … அப்போ …” என்று வாசலை நோக்கி கையை காட்ட, ஏக்க பெறுமூச்சு விட்டபடி பாவமாக வெளியேறினான் கௌரி. அவன் சென்றதும்

‘ஆஹா இவன் நம்மள விட ரொம்ப வீக்கா இருப்பான் போல … பயபுள்ள ஏழு வருசமா காஞ்சு கிடக்குது போல …பிரியா நீ ஒன்னும் பண்ண வேணாம் அமைதியா இருந்து இந்த லூசு ஜொள்ளு விடுறத பார்த்து என்ஜோய் பண்ணிக்கோ ‘ என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொள்ள, மீண்டும் கதவை திறந்து உள்ளே எட்டி பார்த்தவனை இப்போ என்ன என்ற ரீதியில் அவள் பார்தக்கவும்,

“கேட்க மறந்துட்டேன் …சாப்பாடுக்கு என்ன பண்ண போற … வேணும்னா ரெண்டு பேரும் ஷேர் பண்ணி சமைச்சுக்கலாமா …” என்று கேள்வியோடு நிறுத்த , அவசரமாக தலையாட்டி மறுத்தவள் ,

“முதல்ல சமைக்க ஷேர் பண்ணிக்க கூப்பிடுவாங்க , அப்புறம் பெட்ல ஷேர் கேட்பீங்க … இந்த வேலையே வேணாம் … உங்க லிமிட் என்னவோ அதோடு நிறுத்தீக்கீங்க …” என்று முகத்திலடித்தபடி பேச முகம் சுருங்கி போனாலும்,

“என் பொண்டாட்டி வேணா என் கூட வாழ பிடிக்காம ஓடி போயிருக்கலாம் பட் … என்னைக்கும் நான் ஸ்ரீராமன் தான் … என் பொண்டாட்டிய தொட்ட இந்த கையாலா வேற யாரையும் தொட மாட்டேன் … இது ஓடி போன என் பொண்டாட்டி மேல சத்தியம் …” என்று முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு பேசியவனை நக்கலாக பார்த்தவள் ,

‘ரொம்பதான் … பொண்டாட்டி மேல லவ் இருக்கிறபோல சீன் விடவேண்டியது … கூட இருந்தப்ப வாழ தெரியாம துறத்தி விட்டுட்டு பேச்ச பாரு ரொம்ப நல்லவனாட்டம்…’ என்று நொடித்து கொண்டவள் , இருந்துட்டு போ என்று பதில் பார்வை பார்க்க, தயங்கி தயங்கி வெளியேறியவனுக்கு , அவளை எப்படி நெருங்குவது என்று தெரியவில்லை.

அன்று வேலைக்கு செல்லாமல் வீட்டில் தூங்கியே பொழுதை கழித்த ப்ரியாவின் கண்ணில் கௌரி படாமல் போக , ஒருவேளை தான் பேசியதால் கோபித்து விட்டானோ என்று நினைத்தவள் அவனின் அருகாமைக்கு ஏங்கினாள். ஏனோ அவள் மனம் அவன் அணைப்புக்கு ஏங்கி தவிக்க , அவன் வரவிற்காக காத்திருந்தவளின் கண்கள் தூக்கத்தால் சொக்கவும் இதற்கு மேல் முடியாது என்று தூங்க சென்றாள்.

நடு இரவில் வீட்டிற்கு தள்ளாடியபடி வந்த கௌரி பிரியாவின் அறையை சிறிது நேரம் வெறித்துப் பார்த்தவன் , பின் தன் தலையை உலுக்கி, சட்டைப் பையில் இருந்த சிறு முருகர் படத்தை கையில் எடுத்தான். அதை தன் முகத்துக்கு நேராக தூக்கிப் பிடித்து தன் மனதிலிருந்ததை புலம்ப தொடங்கிணான்.

"தெய்வமே ஏன் தெய்வமே என் வாழ்க்கையில விளையான்ட … நான்னா அவ்வளவு இஷ்டமா உனக்கு… வாயை திறந்து பேசு தெய்வமே… நான்பாட்டுக்கு சிவனேன்னு பணக்கார பொண்ண வலை வீசி தேடிகிட்டு இருந்தேன். ஏன் என் கண்ணுல இந்த ராட்சஷிய காட்டுன ... கல்யாண வாழ்க்கையில வெரும் தயிர் சாதமா சாப்பிட்டு இருந்த எனக்கு ஒருநாள் மட்டும் பிரியாணியை கொடுத்து சாப்பிட சொல்லி ஆசை காட்டிட்டு , மறுநாளில் இருந்து பிரியாணி வாடயே கிட்ட வராத மாறி செஞ்சிட்டியே இதுயெல்லாம் ஒரு தெய்வம் பண்ணுற காரியமா சொல்லு தெய்வமே சொல்லு… சரி இப்படியே நம்ம வாழ்க்கை போகட்டம்னு மனசை தேத்திக்கிட்டு இருக்க பார்த்தா விட்டிய தெய்வமே திரும்பவும் அவள தேட வச்சு என் கண்ணு முன்னாடி காட்டி சித்திரவதை பண்ணிட்டியே தெய்வமே … இப்போ எனக்கு பிரியாணி சாப்பிடனும் போல இருக்கே நான் என்ன பண்ணுவேன் நானும் எவ்வளவு நேரம்தான் நல்லவனா நடிக்கறது" என்று போதையில் புலம்பியவன், மீண்டும் சாமி படத்தை தன் சட்டை பைக்குள் வைத்துவிட்டு,

"இந்த சாமியை நம்பி சாமியாரா போனதுதான் மிச்சம் … இனி நாமளே பாத்துக்க வேண்டியதுதான்…” என்று வாய்விட்டு புலம்பியவன், அவள் அறைக் கதவை நெருங்கி தட்ட கையை தூக்க, இவனின் புலம்பலை கேட்டு விழித்துக் கொண்டவள் கதவை திறந்து வெளியே எட்டி பார்க்கவும், தூக்கிய கையை மெல்ல இறக்கியவனின் பார்வை அவளின் கலைந்த தோற்றத்தை கண்டு ரசிக்க தொடங்கி பின் மெள்ள மெள்ள மாறியது.

அனிடமிருந்து கிளம்பிய மதுவின் வாடையைக் கண்டுக் கொண்டவள்
முகத்தை சுழிக்க, மூச்சு காற்று முகத்தில் படும் அளவிற்கு அவளை நெருங்கி நின்றவன் ,தன் கையோடு வாங்கி வந்திருந்த பிரியாணி அடங்கிய பையை அவளிடம் நீட்டியபடி,

“உனக்கு பிடிச்ச முணியாண்டி விலாஸ் பிரியாணி … சாப்பிடு…” என்றவனை, ‘எவ்வளவு திமிர் குடிச்சுட்டு வந்ததுமில்லாம பிரியாணிய வேற நீட்டுறியா… இன்னைக்கு செத்தடா மவனே…’ மனதில் கறுவியவள், கோபமாக அவன் கையிலிருந்த பிரியாணியை பிடுங்க எண்ணி கையை நீட்டியவளின் இடுப்பை வளைத்து பிடித்து தன்னிடம் நெறுக்கிக் கொண்டவன், மறுகையால் தலையை ஆடாமல் பிடித்துக் கொண்டு ஆவேசமாக அவள் உதடுகளை தன் முரட்டு உதடுகளால் கவ்விக் கொண்டான்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29576

கௌரி - 27

பிரைவேட் ஹாஸ்பிடலில் அட்மின் ஆபிசராக வேலை பார்க்கின்றாள் பிரியா. பெயர் சொல்லும்படியான பதவித்தான் , இந்த நிலை அடைவதற்கு அவள் பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தவளை அழைத்தார் தலைமை மருத்துவரும் அந்த மருத்துவமனையின் உரிமையாளருமான கண்ணன்,

“வாமா கௌரி … உட்கார் …” என்றவர்

“சொல்லு உனக்கு இங்க என்ன ப்ரோப்லேம் … ஏன் திடீர்னு வேலையை விட நோட்டீஸ் கொடுத்திருக்க …” நேரடியாக விசயத்திற்கு வர , இத்தனை வருடங்களாக தன் வீட்டு பெண் போல பார்த்துக் கொண்டவரிடம் எப்படி சொல்வது என்று தயங்கியவள் பின் தொண்டையை செருமிக் கொண்டு ,

“தப்பா எடுத்துக்காதீங்க சார் , இது திடீர்னு எடுத்த முடிவு இல்ல … கொஞ்ச நாளாவே மனசு டிஸ்டர்ப்டா இருக்கு , தெரிஞ்சவங்க இல்லாத இடமா பார்த்து கொஞ்ச நாளைக்கு இருந்துட்டு வந்தா பெட்டரா இருக்கும்னு தோணிச்சு சார் … என் ப்ரெண்ட் ரொம்ப நாளா சிங்கப்பூர்ல ஆபர் இருக்குனு சொல்லிட்டு இருந்தா அதான் .. ப்ளீஸ் மறுக்காமா என் ரெஸிக்நேஷனை ஏத்துக்கோங்க …” என்று நீண்ட விளக்கம் கொடுக்க , அவளை சில நொடிகள் ஆழ்ந்து பார்த்தவர் ஒன் மந்த் நோட்டீஸ் பீரியடை ஏற்பதாக கையெழுத்து இடவும் , கலங்கிய கண்களுடன் அவருக்கு நன்றியை தெரிவித்துவிட்டு வெளியேறினாள்.

கௌரியை சந்தித்த அன்றே சிங்கப்பூர் வேலையை ஏற்றுக் கொள்வதாய் தன் தோழியிடம் தெரிவித்தவள் , தாமதிக்காமல் தன்னுடைய ரெஸிக்நேஷன் கடிதத்தையும் கண்ணனுக்கு அனுப்பியிருந்தாள். தன்னை தேடி தான் சென்னைக்கு வந்திருக்கான் என்று தெரிந்தாலும் அவனுடன் மீண்டும் பந்தத்தில் இணைய அவள் விரும்பவில்ல. முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்தவள் , அவனுடன் இருக்க போகும் இந்த ஒரு மாதத்தில் விடுபட்ட ஏழு வருடங்களின் வாழ்க்கையை வழ்ந்து பார்க்க முடிவெடுத்தாள்.

அன்று முழுவதும் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறியவளுக்கு நேற்றிரவு நடந்ததே நினைவில் வந்து இம்சிக்க , கௌரியை திட்டியபடி வேலையை பார்க்க தொடங்கினாள். சற்று நேரம் கழித்து அவளின் செல் போன் சிணுங்கவும் , தலைநிமிர்த்தி பார்த்தவளுக்கு போனில் கௌரியின் பெயர் மிளிர காணவும் , அதை எடுக்காமல் அலட்சியம் செய்தவள் தன் வேலையை கவனிக்க தொடங்கினாள்.

செல் போனும் மீண்டும் மீண்டும் அடித்து ஓய்ந்து போக வேலையில் மூழ்கியிருந்தவளை, அழைத்த ரிசப்ஷனிஸ்ட்

“உங்களுக்கு போன் …” என்க, யார் என்று கேட்டவளுக்கு ,

“உங்க வீட்டுக்கார் …” என்று பதிலளிக்க , இது யாரோடைய வேலை என்று தெரிந்தவள் பல்லை கடித்தபடி அழைப்பை ஏற்று ,

“ஹெல்லோ …” என்றாள் கோபமாக ,

“நான்தாங்க கௌரி … உங்க போன் …” என்று ஆரம்பித்தவனை பேசவிடாமல் ,

“ஹலோ உங்க மனசுல என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க … இப்போ எதுக்கு வீட்டுக்காருனு அறிமுகம் படுத்திக்கிறீங்க … “ என்று படபடக்க ,

“பின்ன நான் உங்க வீட்டுக்கார் இல்லையா …” என்று எதிர்கேள்வி கேட்டவனை கண்டு கோபமானவள்,

“என்ன விளையாடுறிங்களா... இதுதான் உங்களுக்கு லிமிட்…" என்று கத்தியவளுக்கு

“ ஹலோ… ஏங்க எப்பவும் தப்பாத்தான் நினைப்பிங்களா … நாம இருக்கிற வீடு மீனாட்சி அம்மாவோடது … அவங்ககிட்ட இருந்து நான் வாடகைக்கு வீடு எடுத்துருக்கேன்…அவங்க எனக்கு வீட்டுகாரங்க … இப்போ என்னோட வீட்டுல உங்களுக்கு உள் வாடகை விட்டுருக்கேன் ... அப்போ நான் உங்க வீட்டுக்காரர்தானே" என்று விளக்கம் கொடுத்தவனை பல்லை கடித்து கேட்டவள்,

"இப்போ இந்த விளக்கம் கொடுக்கத்தான் எனக்கு போன் பண்ணிங்களா" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் கேட்க ,

“அதுக்கும் தான் …” என்று இழுத்தவனுக்கு ,

“அப்போ வேற என்னத்துக்கு போன் பண்ணீங்க … வேலை பாக்கிற நேரத்துல கண்டபடி போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ணாதீங்க … சீக்கிரம் சொல்லிட்டு வைங்க …” என்று சிடுசிடுத்தவளுக்கு ,

“அது நேத்து நைட் …”என்று இழுக்க ,

“நேத்து நைட்க்கு என்ன …” என்று கேள்வி கேட்கவும் குழம்பி போனவன் ,

“அது நான் கொஞ்சம் …” என்று மீண்டும் இழுக்க ,

“நீங்க கொஞ்சம் … சீக்கிரம் இழுக்காம மேட்டர சொல்லிட்டு வைங்க …” என்கவும் , என்ன இவ கோபப்படாம இப்படி பேசுறா என்று நினைத்தவன்

“போதைல இருந்தேன் …” என்று கூறவும் ,

“ வாட் … குடிப்பீங்களா … இத ஏன் வீடு பாக்கவந்த அன்னைக்கு சொல்லல …” என்று போலியாக அதிர்ந்து கேள்வி கேட்க

‘என்ன இது குடிப்பீங்களானு அதிர்ச்சியா கேட்கிறா … நேத்து குடிச்சுட்டு வந்தது ஒரு வேல கண்டு பிடிக்கலையா …’ என்று நினைத்தவன் ,

“அதான் போதைல தெரியாம கிஸ் பண்ணிட்டேன் , தப்பா எடுத்துக்க வேணாம்னு சொல்றதுக்கு தான் …” என்றவனை அவசரமாக இடைமறித்தவள் ,

“வாட் கிஸ் பண்ணீங்களா … என்னையா … நைட்டா …” என்று கீச்சிட்டவள் ,

“ஓஹ் … சார்க்கு அப்படி ஒரு நினைப்பு இருக்கா … ஹலோ … கெட்ட கனவு கண்டுருக்கீங்க … இனி கனவுல கூட நீங்க என்ன கிஸ் பண்றதா நினைக்க கூடாது புரியுதா …” என்று அதிர்ச்சி கொடுத்தவள் போனை வைத்திருக்க முற்றிலும் குழம்பி போனான் கௌரி.

‘அப்போ நேத்து ஒன்னும் நடக்கலையா … இல்லையே ப்ரிக்குட்டிய கிஸ் பண்ணது போலத்தான் இருந்துச்சே … அப்புறம் எப்படி ஒன்னும் நடக்காத போல பேசும் …’ என்று மண்டை குழம்பி போனான்.

காலையில் கண் விழித்த கௌரிக்கு தான் சோபாவில் அலங்கோலமாய் கிடந்த கோலமே இரவு நடந்ததை ஞாபகப்படுத்த அய்யோ என்று தலையில் கையை வைத்துக் கொண்டான்.

நீண்ட வருடங்களுக்கு பின் தன் ப்ரிக்குட்டியை நெருக்கத்தில் பார்த்ததும் ஆர்ப்பரித்த மனதையும் உடலையும் அடக்க தெரியாமல்தான் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தான் கௌரி. பிரியாவை விட்டு பிரிந்தபின் பழகிக் கொண்ட பழக்கம் இது . அதற்காக மொடா குடியனும் இல்லை ,எப்பொழுதாவது மனதை வருத்தும் அளவிற்கு பிரியாவின் ஞாபகங்கள் நெஞ்சை அழுத்தினால் தூங்கி எழுவதற்காக அதை கையில் எடுப்பான்.

நேற்றிரவு குடித்துவிட்டு வந்தவனின் நிதானம் தவறி பிரியாவை இழுத்தணைத்து இதழ் பதிக்க, கோபம் கொண்ட பிரியா தன் பலத்தை திரட்டி அவனை தள்ளிவிட , அருகிலிருந்த சோபாவில் தடுமாறி கீழே விழுந்தான் கௌரி.

தான் முத்தமிட்டதை தவறாக நினைத்து வீட்டை விட்டு செல்வதாக கூறுவாளோ என்று பயந்து போய்த்தான் அவளை அழைத்தான். ஆனால் நேற்று எதுவுமே நடவாததை போல பேசியவளை கண்டு குழம்பி போனவனுக்கு ஒருவேளை அது கனவோ என்று நினைக்க தொடங்கினான்.

தெளிவுபடுத்திக் கொள்ளவதற்கா மீண்டும் அவளை அழைக்க , கடுப்புடன் எடுத்தவள்

“ஹெலோ இப்போ என்ன … கட்டிபிடிச்சதுக்கு சாரி கேட்க போறீங்களா …” என்று நக்கலடிக்க ,

“அது இல்லைங்க … இன்னைக்கு நான் லாங் ட்ரிப் போறேன் , நாளைக்குத்தான் வீட்டுக்கு வருவேன் … அத சொல்லத்தான் போன் பண்ணேன் …” என்று சமாளித்தவனுக்கு ,

“அத ஏன் என்கிட்ட சொல்றீங்க … நான் என்ன உங்க வொய்ப்பா …நீங்க வாங்க வராம போங்க … இதெல்லாம் என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதீங்க …” என்றவள் அவன் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டிக்க ,

“ப்ரிக்குட்டி சூட இருக்கிறத பார்த்தா , நேத்து நடந்தது கனவு இல்ல … அப்போ அடுத்த கட்டிங்க போட்டுற வேண்டியதுதான் …” என்று வாய்க்குள் முணுமுணுத்தவன் சவாரிக்கு கிளம்பி சென்றான்.

இரவு பிரியா வீட்டிற்குள் நுழையும் பொழுது மணி ஒன்பதரை. அன்று பாதி நாள் கௌரியை நினைத்து கொண்டிருந்ததால் வேலையில் கவனம் சிதற , முடிக்க வேண்டிய வேலையை முடித்துவிட்டு வர தாமதம் ஆகா , வீட்டிற்குள் நுழைந்தவளுக்கு அப்படி ஒரு அசதி. வீட்டிற்கு சீக்கிரம் செல்ல வேண்டும் என்ற நினைப்பில் இரவு உணவும் வழியில் வாங்கவில்லை . சமையலில் பழக்கமில்லாதவளுக்கு , என்ன சமைப்பது என்ற போராட்டம். ஏற்கனவே பசியால் தலைவலியும் சேர்ந்துக் கொள்ள , தன் நிலையை நினைத்து சோர்ந்து போய் சோபாவில் உட்கார்ந்தவளின் நாசியை துளைத்தது மீன் குழம்பின் வாசம்.

அவசரமாக சமையலறைக்குள் சென்று பார்க்க வருசலாக அடுக்கப்பட்டிருந்த கிண்ணத்தில் சாதமும் , மீன் குழம்பும் ,மீன் வறுவலும் இருக்க நாக்கை குழைத்தவள், கை கால் கூட கழுவாமல் ஒரு தட்டில் கொஞ்சம் சாதமும் குழம்பும் ஊற்றி , குழம்பில் இருந்த பதிமூன்று மீனிலிருந்து சிறிய இரு மீனை தன் தட்டில் வைத்தவள் ,வறுத்த மீனை பார்க்க அதில் மொத்தம் ஒன்பது துண்டுகள் இருக்க அதிலிருந்தும் இரண்டு துண்டை தன் தட்டில் வைத்தபின் கூடத்திற்கு சென்று ரசித்து ருசித்து சாப்பிட தொடங்கினாள்.

வெகு நாட்களுக்கு பிறகு திருப்தியாக சாப்பிட்டவள் , அவள் சாப்பிட்டதை கண்டு பிடிக்க முடியாதபடி சாதத்தை சமன் படுத்தியவள், மீன் முள்ளையும் தூக்கி வெளியே வீசியவள், ‘அவ்வளவு மீன்ல ரெண்டு மீன் எடுத்ததையா கவனிக்க போறான்’ என்று நினைத்து நிம்மதியான உறக்கத்திற்கு சென்றாள்.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் தூக்கத்தை கெடுக்கும் வகையில் அறை கதவு தட்டபடவும் , நேரத்தை பார்த்த படி எழுந்தவள் மணி சரியாக ஒன்றறை என்று காட்ட இந்த நேரத்தில் என்னவாம் என்று சலித்தபடி கதவை திறந்தவளின் முன், போதையில் கண்கள் சொருக சற்று தள்ளாடியபட சட்டை நனைந்து நின்றிருந்த கௌரியை கண்டு அதிர்ந்து போனாள் பிரியா.

‘என்ன இன்னைக்கும் குடிச்சுருக்கானா…’ என்று கடுப்பாக நினைத்தவளை பார்த்து மந்தகாசமாக சிரித்த கௌரி,

"பிளிஸ் கொஞ்சம் வெளியே வாங்க ஒரு என்கொயரி இருக்கு" என்கவும்,

"வாட் இந்த நேரத்திலயா..." என்று கோபத்துடன் ஆரம்பித்தவளின் இதழ்களில் அவன் பார்வை பட்டு கண்ணில் பனி படரவும், சட்டென்று வாயை மூடிக்கொண்டவள்,

'அடேய் என்னடா உன்கிட்ட அக்கபோரா இருக்கு ஒத்த வார்த்தை பேசறதுக்குள்ள உனக்கு மூடு மாறுதா … வாயவே திறக்க விடமாட்டுறியேடா…' என்று மனதில் அவனை வறுத்தவள் , என்ன ஆனாலும் வாயை திறக்க கூடாது என்று முடிவுடன், சைகையால் என்ன என்று கேட்க, அதை பார்த்தனின் போதையேறிய கண்களில் கேலி சிரிப்பு மின்ன தன்னையே அழுத்தமாக பார்த்திருந்தவளிடம்,

" அதுவந்துங்க … மீன் குழம்பும் மீன் வறுவலும் சமைச்சுட்டு போயிருந்தேன்… வந்து பார்த்தா பதிமூனு குழம்பு மீன்ல பதின்னொன்று தான் இருக்கு … அதேபோல ஒன்பது வறுத்த மீன்ல ஏழுதான் இருக்கு… ஹவ் ட் பாசிபில்" என்ற கௌரியை அதிர்ந்து பார்த்த பிரியா , 'அட வீணா போனவனே போகும் போது எண்ணி வச்சுட்டுத்தான் போனியா… பிரியா எதுவாது சொல்லி சமாளி' என்று நினைத்தவள் உள்ளுக்குள் நடுகினாலும் வெளியே அவனை அனல் தெறிக்க முறைத்தாள்.

நடு இரவில் எழுப்பி மீனை பற்றி கேட்டவனை பார்த்து அதிர்ந்த பிரியா , சடுதியில் சமாளித்து அவனை முறைத்து பார்க்கவும்,

"அய்யோ நீங்க சாப்பிட்டிங்களான்னு கேட்கலை … இங்க இருக்கிறது நாம இரண்டு பேர்தான் … ஆப்டர்நூன் கவுன்ட் பண்ணி வச்சுட்டு போனது நைட் வந்து பார்த்தா குறையிது, நான் நீங்க தான் எடுத்திட்டிங்கன்னு சொல்லல பட் எப்படிங்க இது பாசிபில்" என்று போலியாக ஆச்சிரியப்பட்டு பேசிய கௌரியை மீண்டும் முறைத்தவள், அவன் அருகில் சென்று தன் இரண்டு கைகளையும் தூக்கி அவன் மூக்கு அருகில் எடுத்து சென்று,

"நல்லா மூச்சை இழுத்து உள்ள விடுங்க … ம்ம்ம் இப்ப சொல்லுங்க மீன் ஸ்மெல் அடிக்குதா" என்று கோபமாக கேட்டபடி அவன் மூக்கில் வைத்து கையை அழுத்தி தேய்க்கவும், கௌரி இல்லை என்னும் விதமாக தலையசைத்தவன், பின் மெல்ல,

"இல்லைங்க … சோப்பு போட்டு கையை நல்லா கழுவி வாசனையா இருக்குங்க" என்றவனின் பார்வை அவள் உதடுகளின் படிந்து மீளவும், அதில் கடுப்பானவள் எக்கி அவன் பின் தலையில் ஒரு கையை கொடுத்து தன்னை நோக்கி இழுத்து மற்றைய கையால் அவன் கன்னத்தை அழுந்த பற்றியவள் அவன் இதழ்களை தன் இதழ்களால் ஆவேசமாக பற்றவும் அதிர்ந்து போனான் கௌரி.

பற்றிய வேகத்தில் தன் இதழ்களை அவனிடமிருந்து பிரித்தவள்,

“மீன் ஸ்மெல் அடிக்குதா …” என்று கேட்டவள் மீண்டும் அவன் இதழ்களை பற்றிக் கொண்டு ,

“இப்போ அடிக்குதா …” என்று கேட்டபடி மீண்டும் மீண்டும் அவன் இதழனைக்க ஆடிவிட்டான் கௌரி.

பிரியாவின் ஆவேசத்தில் கௌரியின் போதை தெளியவும் , அவசரமாக அவளிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டவனின் கண்கள் அவளை ஆராய்ந்து. தன்னிலையிழந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றவளை கண்டதும் உள்ளம் உருகவும் , அவளை சீண்டுவதை கை விட்டவன்

“சாரி… நீ போய் தூங்குங்க … நான் தான் தப்பா கணக்கு பண்ணிட்டேன்" என்றவனை இகழ்ச்சியாக பார்த்தவள்,

"இல்லைங்க நீங்க கணக்கு பண்ணதலாம் கரெக்ட் பட் தப்பான ஆளை கணக்கு பண்ணிட்டிங்க" என்றவளை புருவம் சுருக்கி அழுத்தமாக பார்த்தவன், பதில் கூறாமல் தன் அறைக்கு செல்வதற்காக திரும்ப,

"ஏங்க … என்னங்க பாதியில விட்டுட்டு போறிங்க …மேட்டர் பண்ண வேணாங்களா. இதுக்குதானே இவ்வளவு கஷ்டப்பட்டிங்க … ஐ மீன் கஷ்டப்பட்டு செல்வியை கரெக்ட் பண்ணி வார்டன் கிட்ட சண்டை போட வச்சு தனியா வீடு பார்த்து அந்த புரோக்கரை சரிபண்ணி … எப்பா எவ்வளவு வேலை பார்த்திருக்கிங்க… இப்போ பொசுக்குன்னு தூங்கபோன என்ன அர்த்தம் … சும்மா பிகு பண்ணாம வாங்க கௌரி சார் இன்னைக்கு பிரியானி வாங்கி கொடுக்கிற செலவு கூட கிடையாது" என்று நக்கலாக பேசியவளை கண்டு கண்ணை மூடி திறந்தவன்,

"ப்ளீஸ் ப்ரி …” என்று ஆரம்பித்தவனின் கையை பதம் பார்த்தது மேசை மேலிருந்த ப்ளவர் வாஸ்.

“அப்படி கூப்பிடாத … கூப்பிடாத …” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவள் ,

“எப்படி உன்னால ஒண்ணுமே நடக்காத போல செல்லமா கூப்பிட முடியுது … ம்ம்ம் … சொல்லு .. கொஞ்சம் கூட உன் மனசு உறுத்தலையா … உன் குடும்பம் முன்னாடி அசிங்க படுத்தி கேவல படுத்தி … வீட்ட விட்டு துரத்தி விட்டுட்டு … இப்போ ஒண்ணுமே தெரியாதது போல செல்ல பேர் வச்சு கூப்பிடுற …”

“கையை பார்த்து வீச தெரிஞ்ச எனக்கு உன் மண்டையை பிளக்க தெரியாதுன்னு நினைச்சியா … போனா போகுதுனு இன்னைக்கு கையோட விட்டேன் இன்னொரு தடவ அப்படி கூப்ட்ட …” என்று உதடுகள் துடிக்க பேசியவளை காண காண கௌரியின் இதயம் ரணமாக ,

“இல்லடா இனி கூப்பிடல … சாரி … சாரி … போய் படு … காலைல பேசிக்கலாம் …” என்று தொண்டை கமர பேசியவனை வெறித்து பார்த்தவள்,

“நீ போனா போகணும் … வானா வரணுமா … முடியாது … போக மாட்டேன் இங்கதான் இருப்பேன் … “ என்று கையை கட்டிக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவளை , அள்ளி அணைத்துக் கொள்ள கௌரியின் கைகள் பரபரத்தது. இன்னும் அதற்கு நேரம் வரவில்லை என்று அறிந்தவன் தன்னை கட்டுப்படுத்திய படி ,

“சரி வேணாம் … இது உன் வீடு உன்னிஷ்டம் … என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ … எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு நான் தூங்க போறேன் …”
அங்கே இருந்தால் தேவையில்லாத பிரச்சனை உண்டாகும் என்று நினைத்து அவளிடம் சொல்லிக் கொண்டு தூங்க சென்றவன், அறைக்குள் நுழைவதற்கு முன் திரும்பி பார்க்கவும் , நின்றிருந்த இடத்திலிருந்து தன்னையே கண் சிமிட்டாமல் பார்த்திருந்தவளின் கோலம் அவன் நெஞ்சை நெகிழ செய்ய பொறுக்க முடியாமல்

“என்னடா …” என்று உருகும் குரலில் கேட்டவனை நோக்கி ஒற்றை விரலை மெல்ல உயர்த்தியவள்

“வேணும் …” என்க , புரியாமல் பார்த்தவன்

“என்னடா …” என்று கேட்க ,

“வேணும் …” என்று மீண்டும் கூறவும் , கௌரிக்கு எதுவோ புரிவது போல இருந்தாலும் , தெளிவுபடுத்திக் கொள்வதற்காக ,

“என்ன … வேணும் …” என்று தயங்கி கேட்டவனை நோக்கி மெல்ல நடந்து வந்தவள் , அவன் மூச்சு காற்று தன் முகத்தில் மோதும் அளவிற்கு நெறுங்கி நின்று,

“வேணும் … நீ வேணும் … இப்பவே வேணும் …” என்றவாறே காற்று கூட புக முடியாதளவிற்கு அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29631

கௌரி - 28

பிரியாவின் இந்த அதிரடியை எதிர்பார்த்திராத கௌரி, உள்ளுக்குள் இன்பமாய் அதிர்ந்து போனான். தன்னை கட்டிக் கொண்டதும் இல்லமால் தன்னை வேண்டும் என்று கேட்கிறாள் அப்படியென்றால் நடந்ததை மறந்து வாழலாம் என்றுதானே அர்த்தம் ,என்று மனம் பலவகையில் சிந்தித்து மகிழ , அவனும் தன் பங்கிற்கு அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அவன் அணைப்பை கண்மூடி அனுபவித்தவள் பின் அவன் கன்னங்களை பற்றி முகம் முழுவதும் முத்தத்தால் குளிப்பாட்டவும், கண் மூடி சுகமாய் அதில் நனைந்தவனின் இதழ்களை ஆவேசமாக பற்றினாள் பிரியா.

மெல்ல மெல்ல கௌரியின் உணர்ச்சிகள் வீறுக் கொண்டு எழ , தன் கட்டுப்பாட்டை இழந்து வருவதை உணர்ந்தவன் அவளிடமிருந்து தன் இதழ்களை கஷ்டப்பட்டு பிரித்தான். கண்களில் மோக தீ பற்றியெரிய தன்னையே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க பார்த்திருந்தவளை கண்டு மென்னகை புரிந்தவன் , அவள் கைகளை பற்றி அதில் மென்மையாக முத்தமிட , மீண்டும் ஆவேசமாக அவனை அணைத்துக் கொண்டவள் அவன் உணர்வுகளை தூண்டிவிடும் வகையில் காது மடலில் முத்தமிட்டு கடிக்க , சிலிர்த்து போனான் கௌரி.

தன்னிலை இழந்தவன் கைகள் அவள் உடலில் அத்துமீறி கவிதை எழுத துடிக்க , விரும்பியே அவனிடம் தன்னை ஒப்புக்கொடுத்து கிறங்கி நின்றாள். நீண்டநாள் பிரிவு ஏக்கம் எல்லாம் சேர்த்துக் கொள்ள அவசர கதியில் தங்களின் உணர்ச்சிகளுக்கு வடிகால் கொடுக்க நினைத்தவர்கள் கூடத்தில் இருந்த சோபாவை மஞ்சமாக்கி கொள்ள , கலவியின் இறுதி நொடியில் சுதாரித்தான் கௌரி.

அவளிடமிருந்து விலக முயன்றவனை ,கேள்வியுடன் பார்த்தவளுக்கு ,

“அது … இது … இப்போ… கொஞ்சம் பேசுவோம் …” என்று தலை முடியை கோதியபடி பேசியவனை புருவம் சுருக்கி பார்த்தவள் ,

“பேசுறத பொறுமையா பேசிக்கலாம் … அவசரம் ஒண்ணுமில்ல …” என்றவள் அவன் காலை தன் காலால் தட்டிவிட , பாலன்ஸ் இல்லாமல் அவள் மேலையே தடுமாறி விழுந்தவனை மீண்டும் இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

மீண்டும் முரட்டு தனமான இதழ் யுத்தம் அங்கே அரங்கேற, சுவாசத்திற்காக பிரிந்த நொடியை பயன்படுத்தி சட்ரென்று விலகி உட்கார்ந்துக் கொண்டான் கௌரி.

‘இல்ல அவசரப்பட கூடாது … போன தடவ போல தப்பு பண்ண கூடாது … பொறுமை பொறுமை …’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் திரும்பி பார்க்க , அவன் விட்ட நிலையில் தன்னையே கண் சிமிட்டாமல் பார்த்திருந்தவளை கண்டு நெஞ்சை பிசைய பார்த்தவன் கலைந்திருந்த நைட்டியை சரி செய்தபடி ,

“ என்னடா …” என்று உயிர் உருக்கும் குரலில் கேட்க , சில நொடிகள் அவனையே பார்த்திருந்தவள்

“நான் வேணாமா …” என்று கண்கள் கலங்க கேட்கவும் துடித்து போய்விட்டான் கௌரி. படுத்திருந்தவளை இழுத்து அணைத்துக் கொண்டவன் ,

“வேணும்டா … என் உயிரு போற வரைக்கும் நீ வேணும்... நீ இல்லாம நா இல்ல …” என்று காதலில் அரற்ற , அவனிடமிருந்து பிரிந்து

“அப்புறம் ஏன் …” என்று கேள்வியாய் பார்த்தவளை காத்து கூட புகமுடியாதளவிற்கு மீண்டும் அணைத்துக் கொண்டவனுக்கு தாங்கவே முடியவில்லை. அவள் வாய் திறந்து கேட்கும் நிலையில் தங்களை நிறுத்திய விதியை சபித்தபடி

“இரு வந்துடுறேன் …” என்று அவசரமாய் அவன் அறைக்குள் மறைந்துக் கொண்டான். சில நொடிகள் கழித்து வெளியே வந்தவனின் கையில் அவள் கழற்றி வீசிய தாலி தொங்கவும், அதை கண்டதும் அவள் முகம் இறுகி போக , புருவம் முடிச்சுட அவனை பார்த்தவளை கண்டு மென்னகை புரிந்தவன் , அவள் கை பற்றி எழுப்பி ,

“வா இப்பவே சாமி போட்டோ முன்னாடி தாலி கட்டிக்கலாம் …” என்று அவள் கை பற்றி எழுப்பவும் , சிறிது கூட அசைந்து கொடுக்காமல் இறுகி போய் நின்றிருந்தவள் மறுப்பாக தலையசைக்க , குழப்ப ரேகைகள் முகத்தில் ஓட ,

“தாலி கட்டினாதான் நாம புருஷன் பொண்டாட்டி டா … வா தாலி கட்டி என்ன உன் கணவனா ஏத்துக்கோ , அப்புறம் நீ சொல்றத காலம் பூரா கேட்டுகிட்டு உன் காலடியில் கிடக்கிறேன் … ப்ளீஸ் டா மறுக்காத …” கண்கள் யாசிக்க கெஞ்சியவனை பார்த்து மீண்டும் அழுத்தமாக தலையாட்டியவள் ,

“எனக்கு … இப்போ … நீ … வேணும் …” என்று ஒவ்வொரு வார்த்தையாய் அழுத்தி நிதானமாய் சொல்லியவளை சங்கடத்துடன் பார்த்தவன் ,

“தாலி …” என்று ஆரம்பித்தவனின் கையிலிருந்த தாலியை வெடுக்கென்று புடுங்கியவள் அதை தூர எறிந்துவிட்டு ,

“இப்போ நீ வேணும் … தருவியா தரமாட்டியா …” என்று கறாராய் பேச , எச்சில் கூடி விழுங்கியவன் ,

“உன்ன அசிங்க படுத்த விரும்பல … தாலி கட்டாம உறவு வச்சுக்கிட்டா அது உனக்குத்தான்டா அசிங்கம் … ப்ளீஸ் தாலி கட்டிக்கலாம் …”என்று தன்மையாக பேசியவனிடம்,

“எனக்கு அசிங்கலாம் கிடையாது …” என்று கூறியவள் அவனை இழுத்து அணைத்து கொள்ள ,தடுமாறி போனவன் , அவள் கன்னங்களை இரு கைகளால் பற்றி ,

“பாரு நமக்கு டைவோர்ஸ் ஆகிடுச்சு … இப்போ நமக்குள்ள முன்னாள்னு அடையாளம் தவிர வேற உறவும் இல்ல … ப்ளீஸ் டா பழச மறந்துட்டு தாலி கட்டிக்கிட்டு புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிக்கலாம் … ப்ளீஸ் நமக்கா …” என்று உண்மையை கூறி கெஞ்சவும் ,

“ஓஹ் … டிவோர்ஸ் ஆகிடுச்சுனு இப்போ தான் தெரியுமா , அப்போ எந்த உரிமையில ஒரே வீட்டுல இருக்க வச்ச … ஊரே பாக்க சேர்ந்து ஒரே வீட்டுல ஒரு மாசம் இருக்க போறம் அப்போ வராத அசிங்கம் ,நாலு செவுத்துக்குள்ள பண்ற மேட்டரால தான் வந்திட போகுதோ …” என்று நக்கல் பேசியவளுக்கு பதில் கூற முடியாமல் தவித்து போய் நின்றான் கௌரி.

“பதில் சொல்ல முடிலல …” என்று கிண்டலடித்தவள் ,

“இங்கபாரு நல்லா கேட்டுக்கோ , நீ வேணும் கேட்டது உன் கூட சேர்ந்து வாழயில்ல … மேட்டர் பண்ணத்தான் கூப்டேன் … எப்படி வீட்ட ஷேர் பண்ணிக்கிறோமோ அதேபோல நம்மளையும் ஒரு மாசத்துக்கு ஷேர் பண்ணிக்கலாம் …தாலி கட்டாம சேர்ந்து வாழற கான்செப்ட் … உனக்கு எப்படியோ தெரில எனக்கு உன்ன பார்த்த பின்ன உன்ன கட்டி பிடிச்சுக்கணும் கிஸ் அடிக்கணும் , கசமுசா பண்ணனும் தோணுது … வேற யாரும் கிடைக்க மாட்டாங்கன்னு இல்ல , உண்மையை சொல்லனுமா உன்ன தவிர வேற யார்கிட்டயும் அப்படி தோணல …” என்று கையை கட்டிக் கொண்டு நிதானமாய் விளக்கம் கொடுத்தவளை திகைத்து போய் பார்த்திருந்தவனின் தலை மறுப்பாக அசைய , தோளை குலுக்கியவள் ,

“பரவால்ல … கொஞ்சம் வாழ்க்கைல என்ஜோய் பண்ணலாம் நினைச்சேன் … ம்ம்ம் …” என்று பெருமூச்சை இழுத்துவிட்டவள் , தலையை நிமிர்த்தி கௌரியை பார்த்தவாறே ,

“நீ ஏன் இன்னும் வேற கல்யாணம் பண்ணிக்கலைனு தெரில … ஒரு வேள என்ன உண்மையா லவ் பண்ணிருக்கலாம் … இல்ல குற்றவுணர்ச்சியா கூட இருக்கலாம் … பட் என்ன கேட்டா , உன் லைப்ப இவ்வளவு நாள் வேஸ்ட் பண்ணிட்டேன்னு தான் சொல்லுவேன் … எனக்கு உன் மேல எந்த பீலிங்ஸ் அப்பவும் கிடையாது இப்பவும் இல்ல … அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என் மனச மாத்துறேன்னு எந்த குறளி வித்தையும் பண்ணாத , ஏன்னா அடுத்த மாசம் சிங்கப்பூர்ல வேலைல ஜாயின் பண்ண போறேன் …” என்று தன் மனதை தெரியப்படுத்திய பின் அவனை தாண்டி தன் அறைக்கு சென்றவள், திரும்பி பார்த்து ,

“இப்போ உன் முடிவு என்ன நோ ஆர் எஸ் …” அவனை கூர்மையாக பார்த்தபடி கேட்க , தலையை மெல்ல இடமும் வலமும் ஆட்டி மீண்டும் தன் மறுப்பை சொல்ல , ஒரு நொடி புருவம் சுருங்க பார்த்தவள் பின் அலட்சிய பாவத்துடன் தன்னறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவள் உள்ளே சென்று மறையும்வரை வெறித்து பார்த்தவன் , பின் சோர்ந்து போய் சோபாவில் உட்கார்ந்தவனுக்கு , அவளை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை. சில நொடிகள் இலக்கின்றி வெறித்து கொண்டிருந்தவன் ,

“சிங்கப்பூர் போறியா ப்ரிக்குட்டி … என்ன மீறி எப்படி போறேன்னு பார்த்துடுறேன் …வேற யாரை பார்த்தும் பீலிங் வரலைனு சொல்றியே அதுலயே தெரியலையா , உன் மனசுல தான்தான் இருக்கேன்னு …”என்று சொல்லிக் கொண்டவன் ஒரு முடிவோடு தூங்க சென்றான்.

அறையில் கட்டிலில் படித்திருந்த பிரியாவிற்கோ , அவன் தன்னை தீண்டாதது அவ்வளவு ஏமாற்றமாக இருக்க ,

“ பெரிய புடுங்கியாடா … தாலி கட்டாம தொட மாட்டியோ … எப்படி என்கிட்ட வராம போறேன்னு நானும் பாக்கிறேன் …” என்று புலம்பியவலின் உடல் இந்த நொடியே அவன் வேண்டும் என்று திமிரெடுத்து ஆட்டம் போட , அதை பெரும்பாடு பட்டு அடக்கியவள் சோர்ந்து போய் தூங்கினாள்.

காலையில் கண்விழித்த கௌரி தன்னருகில் படுத்திருந்தவளை கண்டு சுகமாய் அதிர்ந்து போனான். அதுவும் அவன் கண் விழித்த அடுத்த நொடி , அவனை நெருங்கி படுத்தவள் ஒரு காலை தூக்கி அவன் இடுப்பில் போட்டபடி அவனை அணைத்து தூங்கவும் , கௌரியின் இதயம் நின்று துடித்தது.

அதுவும் காலை வேளையில் ஹார்மோன் எக்கு தப்பாய் சுரக்க, புது ரத்தம் பாய்ந்ததை போல சுரென்று ரத்த நாளங்கள் முறுக்கி கொள்ள , தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவள் இதழ்களை ஆவேசமாக பற்றிக் கொண்டான். இதற்கு தானே காத்துக் கொண்டிருந்தாள் , கிடைத்த வாய்ப்பை விடாதவள் பதிலுக்கு அவனுள் மோக தீயை மூட்ட , மொத்தமாய் தடுமாறி போனான் கௌரி.

அவளுடன் இரண்டற கலந்துவிட மனம் துடிக்க , புத்தியோ ‘எழுந்திரு எழுந்திரு தப்பு பண்ணுற , அவ ஆசைக்கு இணங்கினா ஜென்மத்துக்கு அவ கிடைக்க மாட்டா’ என்று விடாமல் சொல்லிக் கொண்டிருக்க, மனமேயில்லாமல் அவளிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரிந்து விலகி நின்றான். ஏமாற்றம் அவமானம் எல்லாம் சேர்ந்த கலவையாய் உணர்வுகள் அவள் முகத்தில் தாண்டவமாட , கண்களில் கண்ணீர் கோர்க்க அடிபட்ட பார்வை பார்த்தவளின் பாவம் அவனை தாக்கவும் வேகமாக சென்று வயிற்றோடு அணைத்துக் கொண்டவன் .

“ஒண்ணுமில்லடா …” என்று அவள் தலையை வருடிவிட்டவன் பின் தன்னிடமிருந்து அவளை பிரித்து கன்னங்களை தாங்கியவன் மென்மையாய் அவள் நெற்றியில் முத்தம் பதிக்க , கண்ணை மூடியிருந்தவளின் விழிகளில் இருந்து சூடான கண்ணீர் வழிந்தது . அதை துடைத்துவிட்ட படி ,

“இவ்வளவு கஷ்டம் எதுக்குடா … பேசாம திரும்ப கல்யாணம் பண்ணிக்கலாமா … நீ ஆசைப்பட்ட படி ஒரு மாசம் கழிச்சு சிங்கப்பூர் போகலாம் … நான் ஒன்னும் சொல்லமாட்டேன் . அதுவரைக்கும் நீயும் நானும் நம்ப வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துடலாமா … சொல்லுடா…” என்று ஆசை கொப்பளிக்கும் குரலில் பேச , ஒருநொடி புருவம் சுருக்கி பார்த்தவள் ,

“ரொம்ப கற்பனை பண்ணிக்காத , புது இடம் அங்க தூக்கம் வரல , காலைல வேலைக்கு போகணுமேன்னு நினைச்சு இங்க படுக்க வந்தேன் . தூக்கத்துல புரண்டு படுத்த என் மேல நீதான் காஞ்ச மாடு போல பாஞ்சுட்ட…” என்று குற்றம் சாட்ட , அப்படியா என்பதை போல பார்த்தவன் வெண்பற்கள் தெரிய சிரிக்க,

அந்த சிரிப்பை பார்த்ததும் மனம் ஏனோ பாரமாகி போனது பிரியாவிற்கு . தன்னையே நாய்க்குட்டி போல ப்ரிக்குட்டி ப்ரிக்குட்டி என்று சுற்றிவந்தவன் , வசதி இல்லையென்றாலும் ராணியை போலத்தானே உணரவைத்தான். பழையதை நினைக்க நினைக்க பீறிட்டு எழுந்த அழுகையை கஷ்டப்பட்டு அடக்கியவளின் மனம் மீண்டும் அவனின் சேவகத்திற்கு ஏங்கியது.

தன்னையே கண் சிமிட்டாமல் பார்த்திருந்தவளின் கோலம் நெஞ்சை பிசைய , என்னடா என்று அன்பொழுக கேட்கவும் , “தலையை வலிக்குது” என்று முணுமுணுத்தவள் அங்கிருந்து வெளியேறி தன் அறைக்குள் நுழைந்துக் கொள்ள , யோசனையுடன் அவளை பார்த்திருந்தான் கௌரி.

அன்று மருத்துவமனையில் சிரித்த முகத்துடன் மிக உற்சாகமா வளம் வந்தாள் பிரியா. பின்னே காலையில் காபியிலிருந்து காலை டிபனும் , மதிய சாப்பாட்டையும் கட்டிக் கொடுத்து வழியனுப்பி வைத்திருந்தான் கௌரி. என்னவோ மனம் லேசாகிவிட்ட பீல் , இவ்வளவுநாள் தனிமையில் உழன்றுக் கொண்டிருந்தவளுக்கு இது சொர்க்கமாக தெரிய அங்கிருந்தவர்களிடம் வலிய சென்று பேசினாள்.

இவளின் ஆர்ப்பாட்டத்தை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியாவின் தோழி கீதா. செல்விக்கு அடுத்தபடி தன் மனதில் இருப்பதை பகிர கூடிய நம்பகமான ஆள்.

பிரியாவின் துள்ளாட்டத்தை கண்டு பொறுக்க முடியாமல் அவளை தனியாக தள்ளிக் கொண்டு வந்த கீதா,

“என்னடி உன்ன சுத்தி ஒரு ஒளி வட்டமே தெரியுது … அதுவும் உலக அதிசயமா சிரிச்சு சிரிச்சு பேசுற … என்ன மேட்டர் …” என்றவளை பார்த்து பக்கென்று சிரித்தவள் ,

“மேட்டர் தாண்டி மேட்டர் …” என்கவும் ,தன்னை முறைத்து பார்த்தவளின் தோளை சுற்றி கையை போட்டவள் ,

“அவ்வளவு அப்பட்டமாவ தெரியுது …” என்று கிண்டலடித்தவளை அதிசயமாய் பார்த்த கீதாவை கண்டு கிளுங்கி சிரிக்க , மீண்டும் முறைத்தவளின் விரல்களை பற்றி ஒவ்வொரு விரலாக சுளுக்கெடுத்தவள்

“உண்மையில மேட்டர் தாண்டி மேட்டர் … நீ வேணும்டானு வெட்கத்த விட்டு கேட்டும் வா தாலி கட்டிக்கலாம் கூப்பிடுறேன் டி …” என்று கதையளந்தவளை புரியாமல் பார்த்த கீதா ,

“என்ன … இப்படியா கேட்ட …இப்படி கேட்கிற ஆள் கிடையாதே … நேத்து நல்லாதானே வீட்டுக்கு போன … தலைல எங்கையாவது அடிபட்டுருக்கா , அதான் லூசு போல உளறியா …” என்று அவள் தலையை ஆராய முயன்றவளின் கையை தட்டிவிட்டவள் ,

“ஏய் லூசு … நான் நல்லாத்தான் இருக்கேன் …” என்றவளை தெளிவில்லாமல் பார்த்த கீதா ,

“நான் லூசா … இருக்கட்டும் இருக்கட்டும் … ஆமா யாரு அந்த அவன் நல்லவன் … உன்ன தாலி கட்டிக்க கூப்ட்டவன் … உன் கூடத்தான் நானும் இருக்கேன் எனக்கே தெரியமா உனக்கு ஒரு லவரா டி …” என்று பொறாமை பட்டவளின் கன்னத்தை கிள்ளியவள் ,

“ கௌரி டி …” முகம் மலர சொல்லியவளை புருவம் சுருக்கி பார்த்தவள் ,

“கௌரியா … யாரு உன் முன்னாள் புருஷனா … உன்ன கூட சந்தேகப்பட்டு வீட்ட விட்டு துரத்தினானே , அந்த நாதாரி பயலா …” என்று விசாரிக்க , அவளை நன்றாக முறைத்த பிரியா ,

“இங்கபாரு இப்படி மரியாதை இல்லாம பேசாத , அதோடு அவன் ஒன்னும் என்ன சந்தேகப்பட்டு துரத்துலே …” என்று ரோஷத்துடன் கூற ,

“ம்ம்ம் அவனால உன் வாழ்க்கை வீணாகி கிடக்குது , சப்போர்ட்க்கு சிலிர்த்துக்கிட்டு வர . அவனை எல்லாம் மரியாதையா கூப்பிட முடியாது அவன் என்னவிட ஒரு வயசு சின்னவன் தானே … அப்படிதான் கூப்பிடுவேன் …” பிரியாவின் மேல் உள்ள அக்கரையில் முறுக்கிக் கொண்டு கீதா பேச , முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவள் அங்கிருந்து நகர பார்க்க , தாவி அவள் கையை பிடித்த கீதா ,

“அட என்னடி புதுசா கோபலாம் படுற , அதுவும் அந்த நாத …”என்றவளை பிரியா முறைத்த முறைப்பில்

“சரி சரி , உன் முன்னாள் புருஷனுக்காக …” என்றவள் ,

“எப்படி எங்க ஏன் மீட் பண்ணணு சுருக்கமா சொல்லு …” என்று உத்தரவு போடவும் , கௌரியை பார்த்ததிலிருந்து நடந்ததை கூறினாள் பிரியா.

அனைத்தையும் பொறுமையாக கேட்டவள் ,

“ஆமா நீ ஏன் திரும்ப கல்யாணம் பண்ணிக்க கூடாது … அவன் தான் ஒன் மந்த தாலி கட்டிட்டு வாழலாம் சொல்றான்ல , அப்புறம் என்னடி . உனக்கும் அவன் மேல ஆசையிருக்கு …” என்றவளுக்கு வேகமாக தலையசைத்து மறுப்பு தெரிவித்தவள் ,

“அது மட்டும் முடியாது …” என்று அழுத்தமாய் கூறியவளை யோசனையுடன் பார்த்த கீதா ,

“ஆனா பிரி …” என்று தொடங்கியவளை கையை நீட்டி தடுத்தவள் ,

“உங்ககிட்டலாம் காமிச்சுக்கில … எனக்கு கௌரினா அவ்வளவு பிடிக்கும் , எவ்வளவுனா அவனுக்காக என்னோட ஆசையை கனவை தூக்கி எறிஞ்சுட்டு அவன் தான் உலகம்னு வாழ ஆரம்பிச்சேன் … உனக்கு தெரியுமா அவன் கூட இருந்த வரைக்கும் என்ன ராணியா உணர வச்சான் , அதுதான் எல்லார் கண்ணையும் உருட்டி தப்பா போச்சு … அப்படி பட்டவன் சந்தோசத்த முடக்க பார்ப்பேனா … என்ன கட்டுறதும் பாழ்கிணத்துல தள்ளுறதும் ஒண்ணுதான் … இப்போ அவன்கிட்ட காட்டுற கோபம் கூட பொய்தான் …அவனுக்கு என்ன வயசு இருக்கும் நினைக்கிற ஜஸ்ட் முப்பது தான் … இன்னும் நிறைய வயசிருக்கு அவன் சாதிக்க… அதுக்கு தடைகல்லா குறுக்க நிக்க மாட்டேன் … இந்த ஒரு மாசத்துக்குள்ள அவன் கூட எவ்வளவு டைம் ஸ்பெண்ட் பண்ண முடியுமோ பண்ணி மனச நிரப்பிக்கிட்டு தான் பிளைட் ஏறுவேன் …” என்றாள் உறுதியாய்.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
29673

கௌரி - 29

பிரியா பேசியதை கேட்டு கீதாவிற்கு எங்கையாவது போய் முட்டிக்கலாமா என்றே தோன்றியது. ‘சரியான லூசு அவனே கல்யாணம் பண்ணிக்கலாம் கூப்பிடுறேன் … மனசுல பெரிய அன்னை தெரேசானு நினைப்பு … இந்த செல்விக்கு ஏன் வேண்டாத வேலை … அந்த மொள்ளமாரி கூட கோர்த்து விட்டு போயிருக்கு …’ என்று மனதில் பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் திட்டி தீர்த்தாள்.

‘இருடி உன்ன என்ன பண்றேன் பாரு … இவ்வளவு நாள் எங்ககிட்ட அவன வெறுக்கிற மாதிரி பேசிட்டு நேர்ல பார்த்து கவுந்திட்டியா … இதுல வேற எங்ககிட்ட காமிச்சுக்கிலனு வேற டயலாக் …உன் மூஞ்ச பார்த்தாலே தெரியுது , அவன் மேல எவ்வளவு பித்தா இருக்கன்னு … ஒரு மாசம் கழிச்சு சிங்கப்பூர் போறியா எப்படி போறேன்னு நானும் பார்த்துடுறேன் …’ என்று உள்ளே கறுவியவள், வெளியில்

“அப்போ இந்த ஒரு மாசம் ஒரே அஜால் குஜால்ஸ் தான் …” என்று அவள் தோளை இடித்தபடி கேட்க , வெட்க சிரிப்பு சிரித்த பிரியா உதட்டை பிதுக்கி ,

“ம்ம்கூம் … மனசுல பெரிய விஸ்வாமித்ரர்னு நினைப்பு , நேத்து எவ்வளவு அட்டெம்ப்ட் பண்ணேன் தெரியுமா … எல்லாம் வேஸ்ட்டா போச்சு …” என்று சலித்துக் கொள்ளவும்

‘அட ஊம குசும்பி … எப்படியெல்லாம் அவன செக்ஸ் டார்ச்சர் பண்ணிருக்க … மூஞ்ச கடுவன் பூனை போல வச்சுக்கிட்டு என்னன வேலை பார்த்திருக்க … இருடி உன்ன கவனிக்க வேண்டிய விதத்துல கவனிக்கிறேன் …’ என்று பொறுமியவள் ,

“அடப்போடி விஸ்வாமித்திரரையே டான்ஸ் ஆடி கைக்குள்ள போட்டுக்கிட்டா மேனகை .உன் கௌரி எம்மாத்திரம்… இப்போ என்ன அவன கரெக்ட் பண்ணனும் அவ்வளவுதானே … அதுக்கெல்லாம் கைவசம் நிறைய இருக்கு … நம்ம பர்ஸ்ட் அஸ்திரம் சிட்டு குருவி லேகியம் … இதுக்கு மயங்காதவங்க இருக்க முடியுமா …” என்று புன்னகையுடன் கூறிய கீதாவை வியப்புடன் பார்த்தாள் பிரியா. பின்

“உண்மையாவ சொல்ற …” என்று நம்பாமல் கேட்க , போலியாக முறைத்தவள் ,

“ நான் ஏன் பொய் சொல்ல போறேன் … நான் சொல்லிருக்கேன்ல என் ஹஸ்பாண்ட் கல்யாணம் ஆனா டே ஒன்ல இருந்து என்னையே சுத்தி சுத்தி வருவாருனு … நானே அவர்கிட்ட கேட்டுருக்கேன் , ஏன்பா உங்களுக்கு சலிப்பே தட்டாதுனு … அதுக்கு என்ன சொன்னார் தெரியுமா , கல்யாணம் ஆனா புதுசுல அவர் ப்ரெண்ட்ஸ் இவருக்கு சிட்டு குருவி லேகியம் கலந்து கொடுத்துட்டாங்களாம் , அதான் அவரால ஆசையை அடக்க முடியலையாம் … ஒரு தடவ எடுத்தா ஆயுசு முழுக்க வேலை செய்யுமாம் …” என்று கதை சொன்னவளுக்கு தெரியவில்லை அவள் புருஷன் அந்த விஷயத்தில் வீக் , அதை மறைக்கத்தான் லேகியம் கதையை அடிச்சுவிட்டிருந்தான்.

கீதா கூறியதை ஆச்சிரியதுடன் கேட்டிருந்த பிரியா ,

“கீத் … ப்ளீஸ் டி அண்ணாகிட்ட சொல்லி எனக்கும் ஒரு டப்பா வாங்கி தர சொல்லுடி …” என்று கெஞ்சியவளுக்கு ,

“ச்சி கெஞ்சாதடி … வாங்கி தாடினா வாங்கி தர போறேன் … நாளை காலைல உன் கைல இருக்கும்…” என்று பெருந்தன்மையாய் பதிலளிக்க ,

“நாளைக்கா … ப்ளீஸ் டி அண்ணாவ இன்னைக்கு ஈவினிங்கே வாங்கிட்டு வர சொல்லுடி …” என்று அவசரப் படுத்தியவளை அதிர்ந்து பார்த்த கீத் ,

“ஏய் , என்னடி நாளைக்கானு அலற்ர … அவரு வேலை விட்டு வரும்போது தானே வாங்கிட்டு வர முடியும் … இப்போ எங்க சுத்திக்கிட்டு இருக்கார்னு தெரில…” என்றவளை பார்த்து மறுப்பாக தலையசைத்தவள் ,

“நோ … டைம் கொடுக்கிற அளவுக்கு எனக்கு டைம் இல்ல … நானா அவனான்னு ஒரு கை பார்க்காம விடமாட்டேன் … நானே வெட்கம் விட்டு அவன கூப்ட்டா ஓவரா பிகு பண்றான் … எனக்கு தெரியாது இன்னைக்கு நைட் வேலை விட்டு போகும் போது வாங்கி தா …” என்று கறாராய் பேசிவிட்டு போக ,

“இவளுக்கு இருக்கிற கொழுப்ப பார்த்தியா … நேத்து வரைக்கும் அவன் மேல வெறுப்பா இருக்கிற போல சீனா போட்டுட்டு … இவளை …” என்று பல்லை கடித்தவள் மெடிக்கல் ரெப்பாக இருக்கும் தன் கணவனுக்கு அழைத்தாள்.

இரவு ஏழு மணி வாக்கில் சிட்டு குருவி லேகியத்துடன் மருத்துவமனை வாசலில் நின்றிருந்தான் சுரேஷ் கீதாவின் கணவன் .அவனிடமிருந்து வாங்கி பிரியாவிடம் கொடுத்தவள் , ரெண்டு கண்ணையும் சிமிட்டி ,

“நீ இருக்கிற ஸ்பீடுக்கு நாளைக்கு வேலைக்கு வருவியா தெரில … விடிய விடிய மஜாதான் போ … என்சாய்” என்று கேலி பேசியவளை கண்டு வெட்க புன்னகை புரிந்தவள் ,

“போடீ லூசு …” சிணுங்கிவிட்டு சென்றவளை கண்டு குழம்பி போன சுரேஷ் ,

“என்னடி பண்ற … இப்போ எதுக்கு அந்த புள்ளைகிட்ட கொடுத்த …” என்று கேட்டவனுக்கு ,

“அவ தான் கேட்டா … அவ புருஷன கரெக்ட் பண்ண …” என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தவன்

“என்ன புருஷனா … அந்த பொண்ணுக்கு விவாகரத்து ஆகிடுச்சுல … அப்புறம் எப்படி புருஷன் …” என்று சந்தேகத்தோடு கேட்கவும் , அவனை முறைத்தவள் ,

“இதெல்லாம் நல்லா ஞாபகம் வச்சுக்குங்க … அவன் திரும்ப இவளை தேடி வந்திருக்கான்…” என்றவளுக்கு ,

“ஓஹ் ஹோ … சும்மா தெரிஞ்சுக்கத்தான் கேட்டேன் …” என்று அசடு வழியவும் தலையில் அடித்துக் கொண்ட கீதா பைக்கில் ஏறிக் கொண்டாள். பேருந்தில் பயணம் செய்துக் கொண்ட பிரியாவிற்கு எப்பொழுதுடா வீடு வரும் என்றிருந்தது.

வீட்டிற்கு வந்த பிரியா , அலுப்பு நீங்க குளித்தவள் நைட்டியை மாட்டிக் கொண்டு கையோடு வாங்கி வந்திருந்த மல்லிகை பூவை தலையில் சூடி கௌரியை எதிர்பார்த்து சோபாவில் உட்கார்ந்துக் கொண்டாள் . இரவு பத்துமணி வாக்கில் வீட்டிற்கு வந்த கௌரி இன்பமாக அதிர்ந்து போனான்.

நாள் பூரா வண்டியை ஓட்டி களைத்து போய் வீட்டிற்கு வந்தவனின் கண்களுக்கு பளிச்சென்று இருந்த பிரியாவை கண்டதும் சோர்வு எல்லாம் தலைதெறிக்க ஓடி போனது. இதற்கு தானே இத்தனை நாட்களாக ஏங்கி தவித்தது , இன்று தன் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில் , டிவி பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்று ,

“சாப்டியாடா ..” என்று கேட்க , அவன் வீட்டிற்குள் வந்தது தெரிந்தும் கண்டுக் கொள்ளாமல் உட்கார்ந்திருந்தவள் , அவன் கேட்கவும் இல்லையென்று தலையசைத்து பதிலளித்தாள்.

“பைவ் மினிட்ஸ் … குளிச்சுட்டு டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன் …” என்று அவசரமாக தன்னறைக்குள் நுழைய போனவனை ,

“பசிக்குது …” என்று தடுத்தாள் பிரியா . சில நொடிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றவனுக்கு குளித்தால் தேவலாம் போல இருந்தது. ஆனாலும் தன்னிடம் பசிக்கிறது என்று வாயை திறந்து கேட்டபின் குளிக்க செல்ல பிடிக்காமல் கிட்சேன்க்குள் நுழைந்துக் கொண்டான்.

சுட சுட தோசைகளை சுட்டுக் தட்டில் வைத்து அவளிடம் கொடுக்க , கால்களை மடக்கி உட்கார்ந்தவள் ரசித்து ருசித்து உண்ண தொடங்கினாள். சுட்டு போட போட ஆறு தோசைகளை விழுங்கியவள் போதும் என்று நிப்பாட்டிக் கொள்ள , அடுப்பை அனைத்தவன் குளிக்க சென்றான்.

குளித்து முடித்தபின் தனக்கும் தோசைகளை சுட்டு தின்றுவிட்டு வருவதற்குள் படுக்க சென்றிருந்தாள் பிரியா. இவனும் லைட்டை அணைத்து விட்டு அசதியாக இருந்ததால் படுக்க சென்றான். படுத்தவுடன் கண்ணை இழுத்துக் கொண்டு செல்ல , கண்ணை மூடியவனின் அறைக் கதவு தட்டுப்பட , என்ன என்ற யோசனையுடன் சென்று கதவை திறந்தவன் முன் பால் கப்பை நீட்டியபடி நின்றிருந்தாள் பிரியா.

உலக அதிசயமாக கேட்காமலே பாலை நீட்டியபடி நின்றிந்தவளை கண்டே ஏதோ வில்லங்கம் என்று கண்டுக் கொண்டவன் ,சற்று தயங்கி ,

“என்னடா பாலா … புல்லா சாப்டேன் டா … பால் குடிக்க இடமில்லை …” என்று வயிற்றை தட்டிக் காட்டி கூற, புருவம் சுருக்கி பார்த்தவள் ,

“அப்போ நான் கொடுத்தா குடிக்க மாட்ட அப்படித்தானே … எதையாவது கலந்திருப்பேன் சந்தேகம் …” என்ற அடுத்த நொடி , அவளிடமிருந்து பாலை வாங்கி மடமட என்று குடித்தவனுக்கு பாலில் இருந்த வந்த வாசனையே எதுவோ கலந்திருக்கிறது என்று புரிந்து விட்டது . இருந்தும் அவள் மேல் கொண்டிருந்த நம்பிக்கையால் , குடித்து முடித்தவன் ,

“குடிச்சுட்டேன் , ஹாப்பியா …” வெண்பற்கள் தெரிய சிரித்தபடி பேச , முகத்தை தூக்கி வைத்துக் கொண்டவள் பொய் கோபத்துடன் சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள். அவள் பின்னையே சென்றவன் ,

“சாரிடா … உண்மையிலையே வயிறு புல்லா இருக்கு …”என்று காரணம் கூறியவனை , இப்போ மட்டும் எப்படி குடிச்ச என்ற கேள்வியுடன் பார்க்க , அவள் கன்னங்களை உள்ளங்கையில் தாங்கியவன் ,

“எல்லாம் உனக்காகத்தான் … ” என்று அவள் இதழ்களை உரசியபடி பேசவும் , ‘ஆஹா … மருந்து வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு … அப்படியே பேச்சு கொடுத்து தூங்க விடாம பண்ணனும் …’ என்று நினைத்தவள் ,

‘ஆமா ரொம்ப பாசமா இருக்கிற மாதிரி நடிக்க வேணாம் … நான் வேற ஒன்னும் கேட்டேன் கொடுத்தியா …’ என்று பதில் பார்வை பார்த்தவள் பார்வையால் குற்றம் சாட்ட , அவள் கன்னத்தில் முத்தமிட்டவன் ,

“அதுவும் உனக்காகத்தான் டா …” என்றவனுக்கு அவளின் நெருக்கம் தலையில் சூடியிருந்த மல்லிகை பூ , தனிமை ஏக்கம் எல்லாம் சேர்த்துக் கொள்ள , அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

‘ஆஹா ஆஹா ஆஹா … மருந்து வேலை செய்யுது டோய் …’ என்று குதூகலித்தவளின் கைவிரல் அவன் தலை முடியை கோத , மெல்ல தலை நிமிர்த்தி பார்த்தவனின் ஒரு கை அவள் இடுப்பை வளைக்க , மறுகையோ அவள் பின்னந்தலைக்கு சென்று தன்னை நோக்கி கீழே இழுக்க , அவன் கண்களோ ஆசையோடு ஈரம் மின்னிய அவள் இதழ்களை பார்த்தது. மெல்ல அவள் இதழ்களை தன் இதழோட உரசியவன் அதை பற்றும் வேளையில் வயிற்றில் வலியெடுக்க அவசரமாக எழுந்தவன் பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டான்.

முத்தமிடும் வேளையில் திடீரென்று விலகி சென்றவனை கண்டு குழம்பி போயி உட்கார்ந்திருக்க , பாத்ரூம் கதவை திறந்துக் கொண்டு வந்தவன் சிறு சிரிப்புடன் ,

“வயிறு புல்லா இருக்கு சொன்னேன்ல … அதான் வலி எடுத்துடுச்சு …” என்றவாறே அவள் அருகில் உட்காரவும், விட்டதை தொடரும் பொருட்டு அவனை நெருங்கி உட்கார்ந்தவளைக் கண்டு வெண்பற்கள் தெரிய சிரித்த கௌரி , அவள் தோளை சுற்றி கையை போட்டவன்

“தூக்கம் வரலையாடா …” என்று கேட்டவனுக்கு இல்லையென்று தலையாட்டியவளின் நெற்றியில் மென்முத்தம் பதிக்க , இது போதாது என்ற பார்வையுடன் அவனை ஏக்கத்தோடு பார்க்க , என்ன நினைத்தானோ மீண்டும் அவள் இதழ்களை நோக்கி குனிந்தான் கௌரி.

மீண்டும் உதடுகள் நான்கும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு நலம் விசாரிக்க , சுள்ளென்று வலி வயிற்றில் வர துடித்து போனான் கௌரி. வலியை வெளியே காட்டாமல் , மீண்டும் பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டவனை நினைத்து பீதியானது பிரியாவிற்கு.

என்ன ஏது என்று கேட்காமல் பாத்ரூம் கதவையே வெறித்து கொண்டிருக்க , சோர்ந்து போய் வெளியே வந்தவனை கண்டு , ‘ஒருவேள அந்த லேகியம் சாப்டாதாலதான் இப்படி ஆச்சோ’ என்று பயந்து போனவள் ,

“என்னாச்சு …” மெல்ல கேட்க , முகத்தில் அயர்ச்சி தெரிய அவள் அருகில் உட்கார்ந்தவன் ,

“என்னனு தெரிலடா … மோஷன் போறபோல வயத்த வலிக்குது … ஆனா மோஷன் போக மாட்டுது …” சோர்வுடன் உண்மையில் பயந்துவிட்டாள் பிரியா.

“டாக் ..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டான் கௌரி.

இதே போல ஐந்து ஆறு தடவை நடக்கவும் , இனிமேல் டாக்டரிடம் செல்லாமல் இருப்பது நல்லதில்லை என்று உணர்ந்தவள் ,

வலியில் சுருண்ட கிடந்தவனிடம் “பயமாயிருக்கு டாக்டர் கிட்ட போலம் …” என்று கூற , நிமிர்ந்து பார்த்து கூட பதில் சொல்ல முடியாமல் கிடந்தவனை கண்டு அச்சம் கொண்டவள் , அவன் கை பிடித்து இழுக்க ,

“கா … லை … ல … போ …” என்றவனால் மேற்கொண்டு பேசாமல் முடியாமல் வலிக்கவும் , தடுமாறியபடி மீண்டும் பாத்ரூம்குள் நுழைந்துக் கொண்டான்.

வெகு நேரமாகியும் வெளியே வரமால் இருந்தவனை கண்டு ,

“என்ன பண்ணுது … கதவ தொறங்க …” என்று பயந்த குரலில் கதவை தட்ட, அவள் பயந்திருக்கிறாள் என்று கண்டுக் கொண்டவன் பலத்தை திரட்டி கதவை மெல்ல திறந்து ,

“ஒண்ணுமில்லடா … பயப்படாத … நீ போ தூங்கு … விடிஞ்சதும் டாக்டர் கிட்ட போய்க்கிறேன் …” என்று கஷ்டப்பட்டு பேசியவனை கண்டு கண்ணில் குளம் கட்டியவளுக்கு அழுகையில் வார்த்தைகள் வரவில்லை.

மறுப்பாக தலையை ஆட்டி ,

“இல்ல இப்போவே போலாம் … வா …” என்று அவன் கைபிடித்து முன்னே நடக்க , அந்த வலியிலும் முகத்தில் புன்னகையை தவழவிட்டவன் ,

“என்னால டிரைவ் பண்ண முடியாது … இந்த நேரத்துல தனியா வெளில போறதும் சரியில்ல … என் போன் கட்டில்ல இருக்கு எடுத்துட்டு வாடா …” என்ற கௌரி வலியை பல்லை கடித்து பொறுத்து கொள்ள , அவசரமாக அவன் போனை கொண்டுவந்து கொடுத்தாள்.

அதில் யாருக்கோ அழைத்தவன் விவரத்தை கூறி ,

“வீடு தெரியும்ல … சீக்கிரம் வா …” என்றவன் போனை அணைத்து அவளிடம் கொடுத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான் ஆறுதலுக்காக .

தப்பு செய்துவிட்டோமோ என்று உள்ளுக்குள் கலங்கி கொண்டிருந்தவளுக்கு அவன் கழுத்தில் முகம் வைத்ததும் , அவளை மீறி சிறு கேவல் எழ ,

“ஏன்டா … எனக்கு ஒண்ணுமில்ல … சீக்கிரம் சரியாகிடும் …” என்று தலை நிமிர்த்தாமல் கூறியவனின் தலையை வருடி விட்டது அவளின் கைகள்.

அவன் அழைத்திருந்த நபர் வந்ததும் , தான் மட்டும் செல்வதாக கூறியவனிடம் பிடிவாதம் பிடித்து காரில் ஏறிக் கொண்டவள் , மருத்துவமனையில் டாக்டர் கேட்ட கேள்வியில் உள்ளுக்குள் அசிங்கப்பட்டு போனாள்.

கௌரியை முழுதும் பரிசோதித்த மருத்துவர் ,

“கடைசியா என்ன சாப்டீங்க …”. என்று கேட்டதற்கு சற்று தயங்கிய கௌரி பின் ,

“அது பால் டாக்டர் … ஆனா வெறும் பால் இல்ல லேகியம் கலந்த பால் …” என்று மெல்ல கூறவும் அதிர்ந்து போய் பார்த்தால் பிரியா .

“லேகியமா … என்ன லேகியம் …” என்றவருக்கு

“சிட்டு குருவி லேகியம் …” சற்றும் தயங்காமல் கூற , ஒரு நொடி அவனை அற்பமாக பார்த்த டாக்டர் ,

“பார்த்தா படிச்சவங்க போல இருக்கீங்க … ரோடு சைடுல விக்கிற கண்ட லேகியதையும் சாப்டிருக்கீங்களே … நீங்க சாப்டதுல ரோட்டுக்கு போடுற தார கலந்துருக்காங்க … அதான் போய் அடைச்சுகிச்சு …” என்றவர் மேலும் பல அறிவுரைகள் கூற நொந்து போனாள் பிரியா .

ஒருநாள் முழுவதும் மருத்துவமனையில் தங்கியவர்கள் மறுநாள் தான் வீட்டிற்கு வந்தனர். இதன் நடுவே ‘என்னடி விடிய விடிய கொண்டாட்டமா … அதான் ஹாஸ்பிடல் வரலையா …’ என்று கீதா மெசேஜ் அனுப்பியிருக்க , கொதித்து போன பிரியா இருடி உன்ன வந்து கவனிச்சுக்கிறேன் என்று கருவியவள் கோப பொம்மையை தட்டிவிட்டாள்.

மறுநாள் மனமே இல்லமால் வேலைக்கு கிளம்பி சென்றவளை ஆர்வத்துடன் எதிர்கொண்டாள் கீதா.

“என்னடி சிட்டு குருவி விடாமா கத்திக்கிட்டு இருந்ததா … உன் முகத்த பார்த்தாலே அப்பட்டமா தெரியுது ரெண்டு நாளா தூங்கலைனு …” என்று கிண்டலடித்தவளின் முதுகில் ஓங்கி ஓங்கி குத்திய பிரியா, நடந்ததை கூற திகைத்து போய் விழித்தவள் அப்பொழுதே தன் கணவனுக்கு அழைத்து விசாரிக்க , இது வரை வாழ்க்கையில் அதை தொட்டது கூட இல்லையென்றும் நேற்று தான் அவனும் முதல் தடவையாக பார்த்ததாக கூற வண்ணம் வண்ணமா திட்டி தீர்த்த கீதா பிரியாவிடமும் மன்னிப்பு வேண்டினாள்.

“சாரி டி … எல்லாம் எங்க வீட்டுல இருக்கிறதால வந்தது … இப்போ கௌரி எப்படி இருக்கார் … நேத்து ஹாஸ்பிடல்ல நீனா கூட இருந்த …” என்றவளுக்கு , தலையை ஆட்டி ம்ம்ம் என்றவள்

“இப்போ பரவால்ல … காலைலயே சவாரி இருக்குனு கிளம்பி போயாச்சு… ஆமாடி நான் தான் நேத்து பாத்துக்கிட்டேன் …” என்று கூறும் போதே அவள் முகம் செம்மையுற்றதை கவனித்த கீதா ,

‘அவ்வளவு ஆசையை வச்சுக்கிட்டு , பிரிய போறாளாம் …’என்று முணுமுணுத்தவள், அவளிடம் சொல்லிக் கொண்டு தன் வேலையை பார்க்க சென்றாள். பிரியாவோ நேற்று மருத்துவமனையில் நடந்ததை நினைத்து பார்த்து பார்த்து சந்தோசப்பட்டுக் கொண்டாள்.

நேற்று முழுவதும் அவனுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்தவள் மனதளவில் இன்னும் நெருங்கி போனதை போலவே உணர்ந்தாள். அதுவும் பக்கத்து பெட்டில் இருந்த தம்பதியரின் அன்யோன்யத்தை கண்டதும் அவளுக்கும் அதேபோல நடந்துக் கொள்ள ஆசை பிறக்க நேற்று முழுதும் ஆதர்ஷ் தம்பதிகள் போலவே நடந்துக் கொண்டாள். அன்றிரவு வீட்டிற்கு கிளம்பியவளிடம்

“இன்னைக்கு என்கிட்ட செம்மையான ஐடியா இருக்குடி சொல்லவா …” என்ற கீதாவை கையெடுத்து கும்பிட்ட பிரியா ,

“நீ ஆணியே புடுங்க வேணாம் … நானே பார்த்துகிறேன் … ஐடியா சொல்றேன் பேர்ல ஆளா கிளோஸ் பண்ண பாக்குது லூசு …” என்று திட்டிவிட்டு அடுத்து என்ன பண்ணலாம் என்ற நினைப்பில் வீட்டிற்கு கிளம்பினாள்.

அன்றிரவு பதினொன்றை கடந்த பிறகு வீட்டிற்கு வந்த கௌரி கதவை மெல்ல திறந்து விட்டிற்குள் நுழைய இருட்டு வரவேற்றது.

‘அப்பாடா ப்ரிகுட்டி தூங்கிடுச்சு போல …’ என்று நினைத்தவன் லைட் ஸ்விட்சை தட்டி விளக்கை ஒளிரவிட அங்கே சோபாவில் உட்கார்ந்திருந்தாள் பிரியா.

“அய்யோ…” என்று திடுக்கிட்டு போனவனுக்கு இன்றும் தூங்காமல் விழித்திருப்பவளை கண்டு மனதில் கிலி பிடித்தது , “அய்யோயோ இன்னைக்கு என்ன பண்ண போகுதுனு தெரிலையே … கல்நெஞ்சு பிரிக்குட்டி ஒருநாள் கூட கேப் விடாம துரத்துதே …” என்று நொந்தவன் அவள் உட்கார்ந்திருந்த தினுசை கண்டு,

‘டேய் கௌரி … கவுந்திடாதடா … உன்ன மயக்கத்தான் ரம்பா போஸ்ல உட்கார்திருக்கா … அவள கண்டுக்காம ரூம்க்கு போய்டு …’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன் அவள்புறம் திரும்பாமல் தன்னறைக்குள் செல்ல தொடங்க, அவள் அருகில் வந்ததும் அவன் கட்டுப்பாட்டை மீறி கண்கள் அவளை திரும்பி பார்க்கவும், அங்கே தன்னையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவளை கண்டு எச்சில் விழுங்கியவன் பின் அசட்டு சிரிப்பை உதிர்த்து,

“என்ன டா … இங்க உட்கார்ந்திருக்க … இன்னும் தூங்கலையா … “ என்று அப்பாவியாக கேட்டவாறே அவள் அருகில் சென்றவனின் மனமோ

‘மானங்கெட்டவனே போகாத போகாதன்னு சொல்லும் போதே மீறி போயிருக்கல … நேத்து லேகியம் வச்சு ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சா, இன்னைக்கு ரம்பா தொடையை காட்டி என்ன பண்ண போறாளோ … கண்டிப்பா ரேப் பண்ணாமா விடமாட்டா போல… சேதாரம் இல்லாம தப்பிகனும்னா பேசாம அவகிட்ட சரணாகதி அடைஞ்சுடு … அடிவாங்க உடம்புல தெம்பு இல்ல…’ என்று துப்பியதை துடைத்துக் கொண்டவனின் பார்வை அவள் வெளீர் தொடையில் குத்தி நின்றது.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
“கௌரிசங்கர்” - 30

இரவு மணி பன்னிரண்டு, மோஹினி பிசாசு போல மயக்கும் பார்வை பார்த்தபடி உட்கார்ந்தவளின் அருகில் சென்றவன்

“என்னடா … இன்னும் தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க … மணி பன்னெண்டு ஆச்சு … நாளைக்கு வேலைக்கு போகணும்ல …” என்றபடி அவள் அருகில் உட்கார, அவனையே பார்த்திறந்தவள் மெல்ல வாய்திறந்து

“கால் வலிக்குது … இன்னைக்கு புல் டே ஹாஸ்பிடல்ல நின்னுகிட்டு இருந்தேன் … வலில தூக்கம் வரலை…” அப்பாவியாய் கூறவும் ,

“அச்சச்சோ … ஏன்டா … நான் வேணா காலை அமுத்தி விடவா …” என்று கேட்ட நொடி தன் வலக்காலை தூக்கி அவன் தொடை மேல் போட்டிருந்தாள்.

ஏற்கனவே தாறுமாறாக துடித்து கொண்டிருந்த இதயம் இப்பொழுது பந்தய குதிரை வேகத்தில் துடிக்க , எச்சில் கூடி விழுங்கியவன் , கெண்டை காலை மெல்ல பிடித்தான். காலை பிடித்தது மட்டும் தான் அவனின் நினைவிற்கு தெரிந்தது , அதன் பின் எப்படி யார் தொடங்கியது என்று புரியாத வகையில் இருவரும் நெடுநாள் ஆசையை தீர்க்கும் முனைப்பில் இருக்க , அன்று போல் இன்றும் கடைசி நொடியில் சுதாரித்து விலகினான் கௌரி. பிரியாவால் இந்த ஏமாற்றத்தை தாங்கி கொள்ள முடியாமல் போக வெறிக் கொண்டவள் போல அவன் சட்டையை பிடித்து இழுத்து ஆக்ரோஷமாக முத்தமிட்டு அணைக்கவும் , கொஞ்சம் கொஞ்சமாக தன் கட்டுப்பாட்டை இழந்துக் கொண்டிருந்த கௌரிக்கு பிரியாவின் மேல் கோபம் வந்தது.

கல்யாணமும் பண்ணிக் கொள்ள மாட்டாளாம் , ஆனால் இது மட்டும் தேவையா என்ற கோபம் வர , அவளை பிடித்து தள்ளியவன்,

“என்ன பிரியா பண்ற … ஏன் இப்படி அனைஞ்சான் கேஸ் மாதிரி பிகேவ் பண்ற, பாக்கவே அசிங்கமா இருக்கு …” என்று கோபத்தில் வார்த்தைகளை விட , உள்ளுக்குள் துடித்து போனவள், வெளியே காட்டிக் கொள்ளாதவளாக ,

“நான் ஒன்னும் கண்டவன பார்த்து அலையுல … உன்கிட்டத்தானே அது ஒன்னும் எனக்கு தப்பா படலை …” என்று திமிராய் பதில் கூற ,

“நானும் உனக்கு கண்டவன்தான் … எப்போ என்கிட்ட இருந்து வலுக்கட்டாயமா டிவோர்ஸ் வாங்கிட்டு போனியோ அப்பவே நான் உனக்கு மூனாமனுஷன் தான் …” பட்டென்று பதில் கொடுக்க , ஒரு நொடி முகத்தில் வேதனை படர அவனை பார்த்தவள் , மறுநொடி சோபாவிலிருந்து எழுந்துக் கொண்டவள் தன்னறைக்குள் செல்வதற்காக திரும்ப , தான் புரிந்த தவறு புரியவும் வேகமாக அவள் கைகளை பற்றினான் கௌரி.

“சாரி டா … அது நீ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்ற கோபத்துல சொல்லிட்டேன் … தப்பா எடுத்துக்காதடா …” என்று கெஞ்ச , சிறிதும் மதிக்காதவள் அவன் கையை உதறிவிட்டு மீண்டும் தன்னறைக்குள் செல்ல முயல , அவள் வழியை மறைத்தபடி நின்றவன் ,

“ப்ளீஸ் கோவமா போகாதடா … நம்ம நல்லதுக்குதான் சொல்றேன் கேட்க மாட்டியா … ஏற்கனவே நான் அவசப்பட்டதாலதான் எல்லார் முன்னாடியும் தலை குனிச்சு நின்னோம் … உன்னையும் அசிங்க படுத்தி என்னையும் அசிங்க படுத்திக்கிட்டேன் … இப்போ திரும்ப நாம வாழ போற வாழ்க்கையை முறைப்படி ஆரம்பிக்க ஆசை படுறேன் … கடவுள் ஆசிர்வாதத்தோடு உன் கழுத்துல தாலி கட்டி உரிமையா உன் கையை பிடிக்கணும் நினைக்கிறது தப்பா … சொல்லு … அப்புறம் இதையும் யோசிச்சு பாரு இப்போ அவசரப்பட்டுட்டு நாள பின்ன பேபி பார்ம் ஆச்சுனா , அது நம்ம குழந்தைக்குத்தானே அசிங்கம் …” என்றவன் அவள் முகத்தில் தெரிந்த ரௌத்திரத்தில் அதிர்ந்து போய் வாயை மூடிக் கொண்டான்.

கண் கோவை பழமாய் சிவந்திருக்க வெண்ணிற முகமும் ரத்த சிவப்பை பூசியிருக்க தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள பெரிய பெரிய மூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தவளை கண்டு பயந்து போன கௌரி , அவள் தோளை பற்றி ,

“என்னடா … ஆச் …” என்றவன் தூரப்போய் விழுந்துக் கிடந்தான் . அதீத கோபத்தில் அவனை பிடித்து தள்ளியிருந்தவள் கையில் கிடைத்த பொருளை எல்லாம் அவன் மேல் விட்டெறிய தொடங்கினாள். பார்ப்பதற்கு வெறிக் கொண்டவள் போல இருந்தவளை கண்டு பதறி போனவன் அடிகளை பொருட்டுபடுத்தாமல்

“என்னடா ஆச்சு … ப்ளீஸ் … ப்ளீஸ் அமைதியாகு …சாரி தெரியாம சொல்லிட்டேன் … கீழ வயசானவங்க இருக்காங்க … நாம போடுற சத்தம் அவங்க தூக்கத்தையும் கெடுக்கும் … ப்ளீஸ் டா பிரியா மா …” என்று கெஞ்சி கொஞ்சி அவளை அசைய விடாமல் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அவன் அணைத்த பின் அமைதியானவள், அவன் பிடியில் இருக்க பிடிக்காமல் வெளிவர கையை காலை அசைத்து கொண்டிருந்தவளை விட மாட்டேன் என்ற ரீதியில் இறுக்கி பிடித்திருந்தான் கௌரி. சில நொடிகள் அமைதியாக நின்றவளின் மனம் பழையதை எண்ணிப்பார்த்து வருத்திக் கொள்ள மீண்டும் வெறியானவள் அவனை ஒரே ஒதராக உதறி தள்ளிவிட்டு தன்னறைக்குள் புகுந்துக் கொண்டு கதவை அடித்து சாத்தினாள்.

அவளின் திடீர் ஆவேசத்தில் திகைத்து போய் நின்ற கௌரிக்கு, அவளின் பிரச்சனை புரியாத நிலை. இருந்தும் அவளை தனியே விட மனமில்லாததால் , அறைக்கதவை தள்ளி பார்க்க அதுவோ பூட்டியிருந்தது . மனம் பொறுக்காமல் தன்னிடமுள்ள சாவியை கொண்டு அறையை திறந்துக் கொண்டு சென்றவன் , அங்கே வெறும்தரையில் படுத்திருந்தவளை கண்டு துடித்து போனான் .

“டேய் என்னடா இது … இப்போ என்னாச்சுன்னு உன்ன வருத்திக்கிற … உன்ன பார்க்கவே கஷ்டமா இருக்குடா … தெரியாம தப்பா பேசிட்டேன் … மன்னிக்க மாட்டியா …” என்று அவள் கை பிடித்து எழுப்ப முயன்றவனிடமிருந்து தன் கையை உருவிக் கொண்டவள் , அவனை தீ பார்வை பார்த்து ,

“வெளில போ …” கை நீட்டி வெளியே காட்ட ,

“நான் சொல்ல வர்ரதை கொஞ்சம் …” என்றவனை ,

“இப்போ நீ வெளில போகல … இதோ இந்த சேப்டி பின்னால என்ன குத்திகிட்டே இருப்பேன் … பாக்கிறியா …” என்று செயினில் மாட்டியிருந்த ஹூக்கை கழற்றி தன் இடக்கையில் குத்திக் கொள்ள துடித்து போனான் கௌரி.

“ஏய் லூசு என்ன பண்ற … எதுக்கு இப்போ வெறி வந்தவ போல பிகேவ் பண்ற…என்னன்னு வாய திறந்து … ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் தன் கையில் ஓங்கி குத்திக் கொள்ள, குத்திய இடத்திலிருந்து சிறு பொட்டாய் ரத்த துளி எட்டி பார்க்கவும் செய்வதறியாது நின்றுவிட்டவன், மீண்டும் அவள் கை ஓங்குவதை கண்டு ,

“போய்டுறேன் … போய்டுறேன் …குத்திக்காத …” என்று நொந்து போன மனதோடு வெளியேறினான். கூடத்திலிருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டவனின் கண்களுக்கு ,சத்தம் எழுப்பாமல் மௌனமாய் அழுததால் உடல் குலுங்குவதை கண்டவனுக்கு வாழ்க்கையே வெறுத்து போன நிலை. அவளிடம் பேச்சுக் கொடுக்கவும் பயந்தவன் அவள் தூங்கும் வரை தவிப்போடு அவள் அறையே பார்த்திருந்தவனுக்கு அன்றைய இரவு தூங்கா இரவாகி போனது.

மறுநாள் காலையில் கண் விழித்த பிரியா நேரத்தை பார்க்க அதுவோ , எட்டு என்று காட்டவும் பதறி போய் எழுந்தவள் அவசர கதியில் குளித்து மருத்துவமனைக்கு கிளம்பியவளின் முன் சிரித்த முகத்துடன் சாப்பாட்டு தட்டை நீட்டிய கௌரி ,

“வெரி குட் மார்னிங் …” என்க , அதை கண்டுக் கொள்ளாதவள் அவனை தாண்டி வாசலை நோக்கி செல்லவும் , அவள் பின்னையே சென்றவன் ,

“உனக்கு பிடிச்ச கார சட்னி வச்சுருக்கேன் … ப்ளீஸ் டா ரெண்டே ரென்டு இட்லி மட்டும் சாப்ட்டு போ …” என்று கெஞ்சும் குரலில் கூற , சிறிதும் மதிக்காதவள் , அவனை கடந்து செல்லவும் வேகமாக அவள் வழியை மறித்தவன்

“கோபத்த சாப்பாட்டுல காட்டாதடா … ப்ளீஸ் சாப்பிடு … நீ சாப்ட்டாதான் நானும் சாப்பிடுவேன் , எனக்கு இன்னைக்கு முக்கியமான சவாரி இருக்கு பிரியா … ப்ளீஸ் எனக்காக சாப்டு …”என்று பாவமாய் பேசியவனை கண்டு சிறிதும் மனம் இறங்காதவள் , அவனை மீறி வெளியேற நொந்து போனவன் கண்ணை மூடி தன்னை நிலைப்படுத்தியபின் டேபிளில் இருந்த பாகை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டிக் கொண்டு அவளை பின்தொடர்ந்தான்.

அவசரமாக காரை எடுத்து அவள் முன் நிறுத்தியவன் ,

“பிரச்சனை பண்ணாம ஏறுடா … உன் ஹாஸ்பிடல்ல இறக்கி விட்டுட்டு போறேன் …” என்று சோர்ந்து போன குரலில் குறைவும் , ஒரு நொடி அவனை ஆழ்ந்து பார்த்தவள் மறுபேச்சு பேசாமல் காரில் ஏறிக் கொண்டாள்.

மருத்துவமனை வந்ததும் விறுவிறுவென்று இறங்கி உள்ளே சென்றவளை வேகமாக பின் தொடர்ந்தவன் , அவள் பற்றி நிறுத்தி தன் கையிலிருந்த பாகை அவள் கையில் மாட்டியபடி ,

“மதியத்துக்கு சாப்பாடு வச்சுருக்கேன் , என் மேல இருக்கிற கோபத்துல சாப்பிடாம இருந்துடாதா …”என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் வெளியேற ,

“ஹலோ சங்கர் …” என்று அழைத்து தடுத்தார் கண்ணன். அவரை கண்டதும் முகம் மலர சிரித்தவன் ,

“ஹலோ டாக்டர் எப்படி இருக்கீங்க … பார்த்து ரொம்பநாள் ஆச்சு …” என்று நலம் விசாரித்தவனை நெருங்கியவர் அவன் தோளை தட்டியபடி ,

“அத நான் கேட்கணும் … முன்ன அடிக்கடி இந்த பக்கம் வருவ … இப்போ ஆளையே காணும் …”என்றவர் தூரத்தில் சென்றுக் கொண்டிருந்த தன் மகளும் மகப்பேறு மருத்துவருமான வெண்ணிலாவை அழைத்தவர்,

“நிலா … நான் சொல்லிருக்கேன்ல சங்கர் … அவர் இவர்தான் …” என்று மகளுக்கு அறிமுகம் படுத்தியவர் , என்ன பத்தி சொல்ல என்ன இருக்கு என்று யோசித்தபடி நின்றிருந்தவனிடம் ,

“சங்கர் , என் ஒரே பொண்ணு வெண்ணிலா …” என்று அவனுக்கு அறிமுகம் படுத்த , சிறுசிரிப்புடன் “ஹாய் …” என்று அறிமுகமாகியவளிடம் புன்னகையுடன் வணக்கம் என்று பதிலுக்கு கை கூப்பினான் கௌரி. இதையெல்லாம் சற்று தள்ளி நின்றுக் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா.

“யாரையாவது ட்ராப் பண்ண வந்தீங்களா …” என்று பேச்சை தொடங்கிய நிலாவிற்கு பதில் சொல்வதற்கு முன், பிரியாவை பார்க்க , என்னை காட்டிக் கொள்ளாதே என்று தலையை மறுப்பாக ஆட்டியபடி பார்வையால் கெஞ்சியவளை யோசனையுடன் பார்த்தவனுக்கு அவளின் பேச்சை மீற விருப்பம் இல்லாததால் ,

“ஆமா …”என்றவனை பேச்சுக் கொடுத்தபடி தங்கள் அறைக்குள் அழைத்து சென்றார் கண்ணன்.

ஒருவித யோசனையுடன் அதே இடத்தில் நின்றிருந்தவள் , கௌரி கண்ணன் அறையை விட்டு வெளியேறிய அடுத்தநொடி உள்ளே நுழைந்திருந்த பிரியா ,

“யாரு சார் வந்துட்டு போறது … நம்ம நிலா மேடம்க்கு பார்த்திருக்கிற மாப்பிள்ளையா … ஆள் அழகா அம்சமா இருக்கார் …” என்று வேண்டுமென்றே அவர்கள் மனதில் பதியும் படி பேசியவளை யோசனையுடன் பார்த்த கண்ணன் , தன் மகளை திரும்பி பார்க்க கன்னங்கள் சிவக்க வெட்கத்துடன் அமர்ந்திருந்தவளின் தோற்றமே அவளிற்கு கௌரியை பிடித்திருக்கிறது என்று பறைசாற்ற , பிரியாவை நிமிர்ந்து பார்த்து மென்னகை புரிந்தவர் ,

“ம்ம்ம் … பார்த்துட்டா போச்சு … எனக்கு தெரிஞ்ச பையன் நல்ல பொறுமைசாலி , பயங்கர கேரிங் கூட , மூணு வருசமா பார்த்துகிட்டு இருக்கேன் … நீ சொல்லு நம்ம நிலாக்கு ஏத்தவரா இருப்பாரா அந்த சங்கர் …” என்று அவளிடமே கருத்தை கேட்க , உள்ளுக்குள் வலித்தாலும் , பல சொத்துக்களுடன் ஏற்கனவே முதல் திருமணம் தோற்ற நிலாவை விட வேற நல்ல எதிர்காலம் கௌரிக்கு அமையாது என்று எண்ணியவள் ,

“பக்கா ஜோடி … ஜோடியா நடந்தா என் கண்ணே பட்டுடும் போல அவ்வளவு அழகா பொருத்தமா இருப்பாங்க ரெண்டு பேரும் …” முகம் மலர்ந்தாள் அன்றிலிருந்து இன்றுவரை கௌரிக்கு ஜோடி சேர்க்கும் கொள்கையில் இருந்து மாறாத பிரியா .
 
Status
Not open for further replies.
Top