All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதை தோரணங்கள்...! - வாழ்க்கை அன்பின் வழியில்....

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

கவிதைகள் நம் எண்ண ஓட்டத்தில் வளர்ந்தாலும், ஒரு தலைப்பின் கீழ், அதன் வித்தியாசமான அணுகு முறையில் கவிதைத் தோரணம் கட்டலாம் என்ற புதிய அறிமுகத்துடன் உங்களுடன் செல்வி சிவானந்தம்@ மித்ரவருணா.

இதில் புதிய தலைப்புகளுடன் வாரம் இரண்டு முறை தவறாமல் உங்களை சந்திக்கலாம் என்று ஆவல்.

முதல் ஆரம்பம், நம்மில் இருந்து, நம் வாழ்க்கையில் இருந்து தொடங்குகிறேன். உங்கள் எண்ணங்கள் மேலோங்க, என் கவிதைகளும் கருத்துக்களும் நேர்மறை சிந்தனைகளைத் தூண்டுவதாக அமைக்க விழைகிறேன்.

மேலும் நம் தாரக மந்திரமான அன்பின் அரிச்சுவடியை பாராயணம் செய்யவும் வழி காண விழைகிறேன்.

வாருங்கள் இன்றைய தலைப்பு - வாழ்க்கை அன்பின் வழியில்....


வாழத்தான் பிறந்தாய்

வாழ்கின்ற மாணுடா...!
அன்பென்னும் அமுதம்
அகம் திறந்து காட்டி விட்டால்
வாழ்கின்ற வாழ்க்கையிலே
வசந்தங்கள் வீசாதோ....!


அம்மாவின் அன்பில்
முடங்குகின்ற கோபம்...!
அப்பாவின் அன்பில்
அடங்கிகின்ற தாபம்...!
காலங்கள் கடந்தாலும்
கரையாத மோகம்
அன்பென்னும் அமுதம்
ஊட்டுகின்ற யோகம்....!



அன்பின் சிரிப்பில்
அகிலமும் அடங்க
ஆனந்தக் கூத்தாடும்
ஆழ்மனம் கூட
இயல்பான மனதின்
சோகங்கள் மறந்து
உத்வேகம் கொண்டு
உயிர்த்துவிட்டதென்ன...?


அன்பின் அரவணைப்பில்
ஆட்பட்ட மனங்கள்
ஆகாயம் கடந்த
எல்லைகள் என்றாலும்
ஆரவாரமாய் கடந்து
ஆர்ப்பரிக்கும் அன்றோ....?


அன்பின் வழியில்
தேடுகின்ற சொந்தம்
ஆண்டுகள் கடந்து
நாடுகின்ற பந்தம்....!



வாழ்க்கை வாழ்வதற்கே...! அதை அன்பின் வழியில் ஆனந்தமாய் வாழுங்கள்....!

அனைவருக்கும் இந்த நாள் நன்னாளாய் துலங்க என் இனிய வாழ்த்துக்கள், நன்றி


 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்க்கை அன்பின் வலியில்.....

அன்பின் வலியில்
அன்னையின் பிறப்பு - அந்த
வலியில் நின்றது
பிள்ளையின் வளர்ப்பு!
வலித்து வலித்து
பெற்ற பிள்ளை
வலிக்க வலிக்க
விலகும் நாளில்
அன்னையின் எதிர்பார்ப்பு...!
அன்பின் வலியது உயிர் நிலை...!


அன்பின் வலியில்
காதலின் தவிப்பு - அந்த
தவிப்பில் நின்றது
உற்றவர் பொறுப்பு!
பொறுப்பும் தவிப்பும்
தீராத வாழ்வில்...
அன்பின் வலியது உயிர் நிலை...!

பொறுப்பில்லா பிள்ளை
மறுப்பில்லா காதல்
வெறுப்பில்லா வாழ்க்கை
புதுயுகம் கண்ட
புன்னகை தேசம்...!
புன்னகையின் மொழியறியா
கனவு தேசம்...!

அன்பின் வலியது உயிர் நிலை....!
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கவிதைகள்😻😻😻
 
Top