எபி-11
வீட்டிற்கு வந்தவள் தாயிடம் ஒன்றும் பேசாமல், உணவும் உண்ணாமல் சென்று படுத்துக் கொண்டாள்.
சரஸ்வதியும் ஏதும் பேசவில்லை.
நிலாவிற்கு இன்றும் தூக்கம் வரவில்லை, மனவேதனையால் இல்லை, மகிழ்ச்சியால். இன்று நடந்ததை ஒவ்வொன்றாக யோசிக்கத் தொடங்கினாள். அவன் முள் போல் குத்தினாலும் அது சுகமான வலியாக இருந்தது. அதில் அவளுக்கு சில கேள்விகளும் எழுந்தது. என்றும் முறைத்துப் பார்ப்பவன், கண்டுகொள்ளாமல் செல்பவன் இன்று காட்டிய முகம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. தொடக்கத்தில் திட்டியவன் பின்பு கனிவாக நடந்து கொண்டான். அவன் வேண்டுமென்றா திட்டினான், நான் தப்பு பண்ணதாலத்தான் திட்டினான். அவன் கரெக்ட்தான் நான் தான் சரியில்லை. அவன் சொன்ன மாதிரி கொஞ்சம் பிராக்டிக்களா இருக்கனும்னு நினைக்கிறேன். அவன் எவ்வளவு கூலா இருந்தான். வெளியில் போகனும்னு சொன்னதும் பழயதை மனசில் வெச்சுக்காம கூட வந்தான், வேறு எதுவும் கேட்கவில்லை, அலட்டிக்கலை, அது இதுன்னு ஒளரலை. ஹய்யா, எவ்ளோ நல்லவன் நான் தான் சும்மா எல்லாத்தையும் குழப்பி. ச்ச நாளைக்கு போய் ஒரு பெரிய தேங்ஸ் சொல்லிடனும் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் தன்னையும் அறியாமல் தூங்கிவிட்டாள்.
காலை வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்கவும் விழித்தவள். வேக வேகமாக தயாராகி வேலைக்குச் சென்றாள். சரஸ்வதி கட்டி வைத்திருந்த மதிய உணவையும் எடுக்காமல் சென்றாள். சரஸ்வதியும் அது குறித்து கவலைப் படவில்லை. மகளுக்கு செவி கொடுத்தாள், தன் மனதை மாற்றி விடுவாள் என்றெண்ணியவர் திருமணத்திற்கு நாள் குறிக்க மீனாட்சியிடம் சொன்னார்.
ஆபிஸிற்கு வந்த நிலா அவ்வப்போது கேண்டீனுக்குச் சென்று ஆகாஷ் இருக்கிறானா என்று பார்த்தாள். நாள் முழுவதும் தேடியவள், பார்க்கிங் ஏரியாவில் அவன் ஓட்டும் காரைக் கண்டதும் அவன் எப்படியும் அங்கு வந்துதானே ஆக வேண்டும் என்று காத்திருந்தாள்.
ஒரு மணி நேரம் கழித்து அன்று நிலாவின் பாட்டு இனிமையாக இருக்கிறது என்ற அதே இளைஞன் ஆகாஷ் ஓட்டும் காரை எடுத்துச் சென்றான். அப்போ ஆகாஷ் இன்னைக்கு வரலையா? எப்படி தெரிந்து கொள்வது? யாரிடம் கேட்பது? ச்ச அவனுடைய போன் நம்பரைக் கூட கேட்கவில்லையே. சரி நாளை பார்க்கும் போது நம்பரை வாங்க வேண்டும்.
எதற்கு அவனுடைய நம்பர்? அப்படி என்ன பேசப் போகிறோம், இப்போ எதற்கு இந்த தேடல்? ஒரு நன்றி சொல்லனும் அவ்வளவு தானே இன்று இல்லையென்றால் நாளை அவ்வளவுதான். மறுபடியும் நீயே உன்னை குழப்பிக்காத நிலா, அவன் சொன்ன மாதிரி பிராக்டிகளா இரு. சரி இப்போ வீட்டுக்கு கிளம்புவோம் என்று தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.
அதன்பின் இரண்டு நாட்களுக் ஆகாஷை பார்க்கவில்லை. எங்கு சென்றிருப்பான்? வேலையை விட்டு சென்றுவிட்டானா? அவனை எதிர்பார்த்து எதிர்பார்த்து மனம் பாராமாகிக் கொண்டிருந்தது.
பகலை மொளனமாக கழிப்பவள் இரவில் புலம்புவதும் அழுவதுமாக நாட்கள் நகர்ந்தது. அவளுடைய கவலைகள், உணர்வுகள் அனைத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாமல் திண்டாடிக்கொண்டிருந்தாள். ஒரு ஞாயிறன்று நிலாவின் அறைக்கு வந்த சரஸ்வதி ‘நிலா அடுத்த ஞாயிறு உனக்கு கல்யாணம், நான் அன்னைக்கு சொன்னது தான் இன்றும் என்னை எதிர்த்து ஏதாவது செய்யனும் நினைத்த என்னை நீ பார்க்க முடியாது. காலை எட்டு மணிக்கு கல்யாணம், ஆறு மணிக்கு வண்டி வரும். ஆபிஸில் யாருக்கும் சொல்ல வேண்டாம், கல்யாணம் சிம்பிளா கோவிலில் வைத்து நடக்கும். சில நாட்களுக்குப் பிறகு ரிஷப்ஷன் சொந்தங்களையும் நண்பர்களையும் அழைத்து செய்வோம். உனக்கு வேற ஏதாவது விவரம் வேண்டுமா?’
நிலா தாயையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தாள். எப்படி மனிதர்கள் மாறிப்போகிறார்கள். தன்னைப் பெற்ற தாயே இப்படி எதிரியிடம் பேசுவது போல் நடந்து கொண்டால் எப்படி. ச்ச என்ன வாழ்க்கை? ஒருமுறை நடக்கும் திருமணம் அதை ஏன் இப்படி வற்புறுத்தி நடத்துறாங்க? என் மனதைப் பற்றி கவலையே இல்லையா? ஒருவேளை நான் உண்மையாகவே ஆகாஷை காதலித்திருந்தாள்…. அவ்வளவுதான் அவளின் மூளை வேறொன்றை யோசிக்கத் தொடங்கியது. ஆகாஷ், என்னாயிற்று அவனுக்கு? அன்று பஸ் ஸ்டாப்பில் பார்த்தது, அதன்பிறகு எங்கேயும் பார்க்க முடியவில்லை. ஒருவேளை வேலையை விட்டு சென்றுவிட்டானோ? அன்றுதான் கடைசி நாளோ அதுதான் அவனுக்கும் ஆறுதல் வேண்டியிருந்ததோ?
சிறிது நேரம் நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தவர், மகள் ஏதும் பேசவில்லை என்றதும் அங்கிருந்து சென்றுவிட்டார். இயந்திரமாக வேலைக்குச் செல்வதும் வருவதுமாக இருந்தாள், திருமணம் ஞாயிறு என்பதால், அதற்கடுத்து வந்த திங்கள், செவ்வாய் மட்டும் விடுப்பு எடுத்திருந்தாள். அவளால் ஆகாஷைப் பார்க்க முடியவில்லை, ஒரு நன்றி சொல்லத்தான் முதலில் அவனை தேடினாள் ஆனால் அவனைப் பார்க்க இயலவில்லை என்றதும் அவளுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல் இருந்தது. கண்னைச் சுற்றி கருவலயம், சரியாக உண்ணாததால் வந்த உடல் மெலிவு என இளைத்திருந்தாள். சரஸ்வதிக்கு மகளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது, தான் தவறு செய்துவிட்டோமோ என்ற குற்ற உணர்வு தோன்றத்தொடங்கியது. தன் அனுபவத்தை வைத்து மகளின் வாழ்க்கையை தீர்மானித்திருக்கக் கூடாதோ என்றெல்லாம் எண்ணத் தொடங்கினார். எதுவாக இருந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது எல்லாம் எல்லையை கடந்து விட்டது, அந்த கடவுள் பார்த்துப்பார் என்று சமாதானம் செய்து கொண்டார்.
திருமண நாளும் வந்தது, சனிக்கிழமையே சரஸ்வதி நிலாவின் துணிமனிகளை தயார் செய்து அவளிடம் கொடுத்து வைத்தார். ஞாயிறு காலை சரஸ்வதி கொடுத்த திருமண புடைவையை உடுத்தாமல் நிலா வேலைக்குச் சென்றபிறகு முதல் சம்பளத்தில் வாங்கியிருந்த புடவையை உடுத்தி ஐந்து மணிக்கெல்லாம் தயார் ஆகி ஹாலில் வந்து அமர்ந்து கொண்டாள்.
சரஸ்வதி எதுவும் பேசவில்லை, எப்படியாவது திருமணம் நடந்தால் போதும் என்று நினைத்தவர். ஏழு மணிக்கெல்லாம் கோவிலில் வந்திறங்கினர். சரஸ்வதி என்றும் வரும் அதே கோவில்தான் என்பதால், உள்ளே நுழைந்ததும் ’வாம்மா நிலா’ என்று மீனாட்சியின் குரல் கேட்டு நிமிர்ந்தவள், புரியாமல் அவரைப் பார்த்தாள்.
நீங்க போங்க நான் நிலாவிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சரஸ்வதியிடம் கூறினார். ‘நிலா, ஏம்மா இளைச்சுப்போய் என்னவோ போல் இருக்க. நான் தான் சொன்னேனே, இந்த கல்யாணத்தினால் உன் அம்மா தனிமரம் ஆகிடுவாங்கன்னு பயப்படாத, அதற்கு பதில் நிறைய சொந்தங்களைத் தரும். என்னை நம்பும்மா’
‘என்னப்பா? ஏதும் வேணுமா?’
மறுபுறம் பதில் இல்லை.
’சொல்லுப்பா’
‘மேடம், நான் அவங்க கூட கொஞ்சம் பேசனும்’
‘தம்பி’
‘பயப்படாதீங்க’
மீனாட்சி அங்கிருந்து நகர்ந்தார். நிலாவின் பின்புறம் இருந்தவன் அங்கிருந்தவாரே ’நான் சில விஷயங்களை கல்யாணத்திற்கு முன்பே உங்ககிட்ட சொல்லிடனும்னு நினைக்கிறேன், இது ரொம்ப லேட்னு எனக்கு தெரியும் ஆனாலும் வேற வழியில்லை இப்பதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது’
‘நான் ஒரு பெண்ணை விரும்புறேன், என் வீட்டில் ஜாதகம் அது இது என்று இந்த கல்யாணத்தில் கொண்டுவந்து நிறுத்திட்டாங்க. பலதும் என்னால் உங்ககிட்ட சொல்ல முடியாத நிலை ஆனால் நான் இப்ப சொன்னது மட்டும் உங்க வாழ்க்கைக்கு சம்பந்தப் பட்டதுன்னு எனக்கு தோணிச்சு. நமக்கு நடக்கப்போகிற கல்யாணத்தை சீரியஸா எடுத்துக்க வேண்டாம். ஜஸ்ட் கொஞ்ச நாள் பொருத்துகிட்டா எல்லாத்தையும் நான் சரி செய்திடுவேன். உங்களுக்கு எதாவது சொல்லனுமா?’ கேட்கனுமா?’
‘நிலாவிற்கு தலை சுற்றியது. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்றே அவளுக்கு புரியவில்லை. திருமணத்தை சீரியஸாக எடுக்கக்கூடாதா? அம்மாவிற்கு இது தெரியுமா? அவரும் இதற்கு உடந்தையா? என் உணர்விற்கு இங்கு மதிப்பேயில்லையா? நான் பெண் பல தடைகள் எனக்கிருக்கலாம் ஆனால் ஆணிற்கு ஏன் இந்த திருமணத்தை தடுக்க முடியவில்லை, என்னைப் பார்த்தால் இளிச்சவாய் போல இருக்கிறதா? எல்லாருக்கு என் வாழ்க்கை விளையாட்டாக போய்விட்டதா?’ என்று யோசனையில் இருந்த நிலா. ‘தம்பி, நேரமாச்சு இரண்டு பேரும் வறீங்களா’ என்று மீனாட்சி வந்து அழைத்ததும் தந்நிலைக்கு வந்தவள். இனி தான் இதில் செய்ய ஏதும் இல்லை. இவர் சொல்வது போல் சிறிது காலம் பொறுத்துக் கொள்ளலாம், பின்பு யாருக்கும் தெரியாமல் எங்காவது சென்றுவிடலாம்.
‘ஆகாஷ், கடைசியா ஒருமுறை உங்களை பார்த்து பேசனும் போல் இருக்கு. அன்று ஒருநாள் ஒரே நாள் எனக்கு ஆறுதல் தந்து கூடவே இருந்தது போல் வாழ்க்கை முழுவதும் எனக்கு ஆறுதல் தரும் உறவாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
‘அம்மாடி, அழாதேமா. எல்லாம் சரியாயிடும்’ என்று நிலாவை அழைத்துக் கொண்டு சென்றார் மீனாட்சி. ஞாயிறு என்பதால் கூட்டம் குறைவாகவே இருந்தது, எண்ணி பத்து பேர்தான் கல்யாணத்திற்கு வந்திருந்தனர். நிலா குனிந்த தலை நிமிரவில்லை. ஐய்யர் படு குஷியாக இருந்தார், தானாக பார்த்து நடத்தி வைக்கும் முதல் கல்யாணம், கடவுளே நல்லபடியாக இந்த ஜோடி வாழ வேண்டும் என்று கடவுளிடம் கூடுதலாக வேண்டிக்கொண்டார்.
ஐய்யர் மந்திரங்களை கூறி இறைவனின் பாதத்தில் தாலியை வைத்து எடுத்து வந்து மாப்பிள்ளையின் கையில் கொடுத்து கெட்டச் சொன்னார். நிலாவின் கழுத்தில் தாலி ஏறியது, கண்களை இருக மூடித் திறந்தாள்.
’நிலா, மாலையை வாங்கு மாப்பிள்ளை கழுத்தில் போடு’ என்றதும் ஆகாஷ் ஆவலாக பெண்ணின் முகத்தைப் பார்த்தான். ஆம், அது நிலாதான் அவனுக்கு தெரிந்த அதே நிலா.
மாலையை வாங்கி மாப்பிள்ளையின் கழுத்தில் போடுவதற்காக நிமிர்ந்தவள், எதிரில் மாப்பிள்ளையாக ஆகாஷ் நிற்கவும். இருமுறை கண்களை மூடித்திறந்தாள். முகம் மாறவில்லை, தன்முன் நிற்பது ஆகாஷ் தான் பிரம்மையில்லை. இத்தனை நாட்களாக தான் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று காத்திருந்த ஆகாஷ். சரஸ்வதியை திரும்பி ஒருமுறை பார்த்தாள். சரஸ்வதி மகளின் திருமணத்தை பெருமையாக பார்த்துக் கொண்டிருக்கும் தாயைப் போன்று மனதில் பாரத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அமைதியாக ‘போடு’ என்பதைப் போன்று கண் அசைத்தார்.
‘மாலையைப் போடுமா’ என்று அய்யர் கூறவும்
அவள் ஆகாஷின் கழுத்தில் மாலையை இட்டாள். ஆகாஷும் நிலாவின் கழுத்தில் மாலையை அணிவித்தான்.
மாப்பிள்ளையும் பெண்ணும் மூணு முறை பிராகாரத்தை வலம் வந்திடுங்கோ என்றதும் இருவரும் செய்வதறியாது நின்றனர்.
’நிலாவின் கையை பிடித்துக் கொண்டு மூன்று முறை கோவிலை சுற்றி வாங்க’ என்று மீனாட்சி கூறினார்.
அசையாமல் நின்றிருந்த நிலாவின் கையை தானாக தேடி பிடித்துக் கொண்டு ஆகாஷ் வேகமாக நடந்தான். நிலாவினால் அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. மூச்சு வாங்கியது. இரண்டாவது முறை வந்ததும், ’என்னால முடியலை ஆகாஷ்’
அவளை வேகமாக இழுத்து தன் முன்னே நிறுத்தியவன் ‘எனக்கும்தான் முடியலை நிலா. உனக்கு கல்யாணம்னு நீ சொல்லவேயில்லை. உன் ஆசை நிறைவேறினால் போதும்னு நினைச்சிட்ட இல்ல?’
‘என் ஆசையா?’
‘மறுபடியும் நடிக்காத நிலா’
‘ஆகாஷ்’
‘ஸ்டாப் இட் நிலா, எதுவும் பேச வேண்டாம், நான் கொஞ்ச நேரம் முன்னாடி உன்கிட்ட சொன்னதைத்தான் இப்பவும் சொல்றேன், இந்த கல்யாணத்தை நீ சீரியஸா எடுத்துக்க வேண்டாம். வா’ என்று மீண்டும் தரதரவென்று இழுத்துக் கொண்டு நடந்தான்.
மூன்றாவது முறை வலம் வரும்போது நிலாவிற்கு தலை சுற்றிவிட்டது, நிலாவின் கை நழுவுவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கையில் வலக்கையால் தலையை பிடித்துக் கொண்டு சரிந்தவளை தக்க சமயத்தில் தாங்கிப் பிடித்தான்.
‘நிலா, நிலா என்னாச்சு நிலா?’ அவளிடம் எந்த அசைவும் இல்லாததை உணர்ந்தவன், அவளை கையில் ஏந்திக் கொண்டு அனைவரும் நின்றிருந்த இடத்திற்கு விரைந்தான். அங்கு நின்றிருந்த இளங்கோவிடம் காரை எடுக்கச் சொன்னான்.
‘அய்யோ நிலாவிற்கு என்னாயிற்று? என்று பதறிய சரஸ்வதியைத் தொடர்ந்து மீனாட்சியும் விரைந்தார்.
அவர்கள் என்னவென்று உணர்ந்து விரைவதற்கு முன்னர் ஆகாஷ் வண்டியுடன் பறந்துவிட்டான்.
மீனாட்சியின் கணவரும் அவர்களைத் தொடர்ந்து வாசலுக்கு வந்தவர், வாங்க நம்ம வண்டியில் போவோம். நான் இளங்கோவிற்கு அழைத்து எந்த ஹாஸ்பிட்டல்னு கேட்கிறேன்’ என்று காரை நோக்கி நடந்தார்.
’கர்ணா, நீ இங்கேயே இரு, நான் போயிட்டு தகவல் சொல்றேன். தங்கச்சி அவனை கூட்டிகிட்டு வீட்டுக்கு போமா’
‘சரி அண்ணா’
சரஸ்வதியுடன் காரில் ஏறிய மீனாட்சி மிகவும் பதட்டத்துடன் இருந்தார்.
‘டேய் இளங்கோ, எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போறீங்க?’
‘-’
‘சரி சரி, நாங்க வந்திடறோம்’
’நிலாமா, பயப்படாதீங்க, அடிக்கடி இப்படி நடக்குமா?’
‘இல்லைங்க, இன்று தான் முதல் தடவை’
‘நிலாவிற்கு உடம்பு சரியில்லையா?’
‘-’
‘சரி சரி விடுங்க, எல்லாம் சரியாயிடும். காலையில் சாப்பிடாமல் இருந்திருக்கும் பதட்டத்தில். எல்லா பெண்களும் அப்படித்தான், ஒரு விசேஷத்திற்கும் சாப்பிடறதே இல்லை. அதுதான்’
நிலா நிலா என்று இருமுறை மீண்டும் அழைத்தான், அவளிடம் அசைவேயில்லை. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அங்கிருந்த நீரை எடுத்து முகத்தில் தெளித்தான், பயனில்லை.
ஹாஸ்பிட்டல் வந்ததும் விரைவாக அட்மிட் செய்து, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
‘எவ்ளோ நேரமாச்சு மயங்கி?’
‘ட்வெண்டி மினிட்ஸ் டாக்டர்’
‘ஓகே, ப்ரெஷர் லோவா இருக்கு, சாப்பிட்டாங்களா காலையில்?’
‘தெரியலை’
‘நீங்க அவங்களுக்கு என்ன ரிலேஷன்?’
‘அது வந்து… ஹஸ்பெண்ட்’
‘குட், வைஃப் சாப்பிட்டாங்களா இல்லையான்னு உங்களுக்கு தெரியாது’
அது வந்து..
ஓகே ரொம்ப வீக்கா தெரியறாங்க, பீபி லோ, ட்ரிப்ஸ் போடச் சொல்லியிருக்கேன், சில டெஸ்ட் எடுக்க எழுதியிருக்கேன். வில் வெயிட் அண்ட் சீ. இதுக்கு முன்னாடி இப்படி மயங்கியிருக்காங்களா? இல்லை வேற ஏதும் உடம்புக்கு பிரச்சினையிருக்கா?’
‘ரியலி சாரி டாக்டர், எனக்கு எதுவும் தெரியாது’
‘இவங்க உங்க வைஃப் தானே?’
‘ஆமாம்’
‘பராவாயில்லை அதாவது உங்களுக்கு தெரிந்திருக்கு’
‘-’
‘ஓகே வெயிட் பண்ணுங்க என்னன்னு பார்ப்போம்’
‘ஓகே டாக்டர், பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே?’
‘இப்படி ஒரு ஹஸ்பண்ட் அவங்களுக்கு கிடைத்திருக்கிறதை நினைத்தால்தான் எனக்கு பயமா இருக்கு மிஸ்டர், போங்க போய் அவங்க பக்கத்தில் உட்காருங்க, கண் விழித்தால் இன்பார்ம் பண்ணுங்க’
‘ஷ்யூர்’
வண்டியை நிறுத்திவிட்டு ஹாஸ்பிட்டல் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்தவன், நேரே நிலாவின் அறைக்கு வந்தவன்.
’ப்ரோ, டாக்டர் என்ன சொன்னாங்க?’
‘டெஸ்ட் ரிஸல்ட் வந்திட்டு சொல்லுவாங்க’
‘ப்ரோ, இவங்க அவங்கதானே?’
ஆம் என்பது போல் தலையை ஆட்டினான்.
‘யூ ஆர் லக்கி ப்ரோ, அவங்களுக்கு எல்லாம் தெரியுமா?’
இல்லை என்பது போல் தலையை ஆட்டினான்.
‘ஓ’
‘-’
‘சரி விடுங்க ப்ரோ, எல்லாம் சரியாயிடும்’
‘-’
‘அம்மா அப்பா வந்திருப்பாங்க, நான் அவங்களை கூட்டிகிட்டு வரேன்’
‘இளா, எதுவும் அவளுக்கு இப்ப தெரிய வேண்டாம்’
‘ஷ்யூர் ப்ரோ, நான் எதுவும் சொல்ல மாட்டேன் வித் அவுட் யுவர் பெர்மிஷன். டோண்ட் வொர்ரி’
பரப்பரப்பாக இருந்த மருத்துவமனையில் சரஸ்வதியும், மீனாட்சியும், ஜெயகிருஷ்ணனும் உள்ளே நுழைந்தனர். அவர்களை நிலாவின் அறைக்கு இளா அழைத்து வந்தான். அவர்கள் உள்ளே வந்ததும் ஆகாஷ் எழுந்து வெளியில் சென்றான். சிறிது நேரம் கழித்து ஜெகே என்கிற ஜெய கிருஷ்ணனும், இளாவும் வெளியில் வந்தனர்.
சரி, இளா எதுவும் இருந்தா கூப்பிடு, டாக்டர்கிட்ட பேசிட்டு ஆபிஸுக்கு கிளம்புறேன்.
சரிப்பா
மொளனமாக ஆகாஷைப் பார்த்துவிட்டு அவர் கிளம்பிச்சென்றார்.
‘அவங்களை வீட்டுக்கு அழைச்சிட்டு போ இளா, நான் இங்கே இருக்கிறேன், நிலா கண் முழிச்சதும் அவளை கூட்டிகிட்டு நான் வீட்டுக்கு வரேன்.
சரி, ஏதும் வேணும்னா கூப்பிடுங்க ப்ரோ.
ஷூயர்
நான் போய் ரிபோர்ட்ஸ் ரெடியாயிடுச்சான்னு பார்த்திட்டு வரேன் ப்ரோ, டாக்டர் என்ன சொல்றார்னு கேட்டுட்டு கிளம்புன்னா கொஞ்சம் பெட்டரா இருக்கும்.
இளா கிளம்பியதும், ரூமிற்குள் செல்ல ஆகாஷ் முனைகையில் அங்கு சரஸ்வதி புலம்பிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.
‘நான் தப்பு பண்ணீட்டேனோன்னு தோனுது மீனா, நிலா இப்போ கல்யாணம் வேண்டாம் கொஞ்ச நாள் கழியட்டும்னு சொன்னா, நான் தான் ஜாதகம் அது இதுன்னு என் பெண்ணை இந்த நிலைமைக்கு கொண்டு வந்திட்டேன்’
‘அண்ணி எல்லாம் சரியாயிடும், இது சாதாரண தலைசுற்றல் தான். இரெண்டு நாள் நல்லா ரெஸ்ட் எடுத்தால் சரியாயிடும், நீங்க அழாதீங்க, இனிமேல் நிலா என் பொறுப்பு.’
’என்னமோ எனக்கு ஒன்னும் புரியலை மீனா, நான் செய்தது சரியா, தப்பான்னு’
’இதோ தம்பியே வந்திருச்சு, இவங்களை கொஞ்சம் வீட்டில் விட்ரு அகி, நான் நிலாகூட இங்கே இருக்கேன்.’
‘வேண்டாம், என் வைஃபை பார்த்துக்கு எனக்கு தெரியும், நீங்க அவங்களையும் கூப்பிட்டு கிளம்புங்க’
’அகி’
அதே நேரம் இளாவுடன் டாக்டரும் அங்கு வந்தார்.
’டாக்டரைக் கண்டது சரஸ்வதி, ஓடிச்சென்று ‘டாக்டர், நிலா இன்னும் கண்ணைத் திறக்கலை, தயவுசெய்து அவளுக்கு என்னன்னு சொல்லுங்க’
‘பதட்டப்படாதீங்க, அவங்க காலையில் ஏதும் சாப்பிட்டாங்களா?’
‘கடவுளே, என் பெண் எதை சாப்பிட்டா? தெரியலையே, டாக்டர் அவளை எப்படியாவது காப்பாத்துங்க, பாவி, இப்படி பண்ணுவான்னு நான் கனவிலும் நினைக்கலையே. எல்லாம் என்னாலதான்.’
டாக்டர் குழம்பிவிட்டார், காலையில் எதுவும் சாப்பிட்டாங்களான்னு கேட்டா, இந்த லேடி என்னென்னமோ பேசுதே. ஏதும் போலீஸ் கேஸாயிடுமோ? பெரிய இடம் வேற, ஜெகே சார் வேற ரெகமெண்ட் செய்திருக்குறார். என்ன செய்வது?
இளாதான் சரஸ்வதி அருகில் சென்று, ஆண்ட்டி காலையில் அண்ணி ப்ரேக்பாஸ்ட் சாப்பிட்டாங்களா இல்லையான்னு டாக்டர் கேட்கிறார் என்று விளக்கினான்.
சரஸ்வதியின் மூளையில் இப்போது தான் தெளிந்தது, பயத்துடன் ஆகாஷைப் பார்த்தார், பின்பு டாக்டரைப் பார்த்து ‘இல்லை’ என்பது போல் தலையாட்டினார்.
குடும்பமே தெளிவில்லாமல் இருக்கு, அந்த பெண் வேற கண்ணை முழிச்சு என்ன உளரப்போகுதோ.
‘ஆகாஷ் சரஸ்வதியைத்தான் வெறுமையாக பார்த்துக் கொண்டிருந்தான். அவர் உளரியதிலிருந்து நிலா திருமணத்தை நிறுத்த விஷம் குடித்திருக்கலாம் என்று ஊகிக்கும் அளவிற்கு எதுவோ நடந்திருக்கிறது. திருமணம் வேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறாள். என்ன காரணமாக இருக்கும்?’
’பேஷண்ட் ரிப்போர்ட் எல்லாம் நார்மலாகத்தான் இருக்கு. பீபி லோ, கொஞ்சம் வீக்கா தெரியறாங்க, அவங்க கண் விழித்த பிறகுதான் பாக்கியை சொல்ல முடியும். இன்னும் ஒன் ஹார் வெயிட் பண்ணலாம்’ என்று நர்ஸிடம் சிலவற்றை சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
சரஸ்வதி சிறிது நேரம் மகளையே பார்த்துக்கொண்டிருந்தார், மீனாட்சியும் இளாவும் வற்புறுத்தி அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் சென்றபின் நிலாவின் அருகில் அமர்ந்தவன், அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து கண் விழித்த நிலா, சுற்றும் முற்றும் பார்த்தாள். தலை பாரமாக இருந்தது, உடம்பெல்லாம் ஒரே வலியாக இருந்தது. கண் எதிரே ஆகாஷ் அமர்ந்திருந்த நிலையிலே உறங்கிக் கொண்டிருந்தான். அவளுக்கு காலையில் நடந்தது நினைவிற்கு வந்தது. விதியின் விளையாட்டை நினைத்து அவளுக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.
ஏதோ தோன்ற கண்ணை விழித்த ஆகாஷ், நிலா விழித்திருப்பதைப் பார்த்துவிட்டு நர்ஸை அழைத்து பரிசோதனைச் செய்ய சொன்னான். டாக்டர் வந்து நிலாவிடம் சிறிது நேரம் தனியாக பேசினார். பின்பு சில மருந்துகளை குறித்துக் கொடுத்தார்.
ஆகாஷிடம் திரும்பியவர் ‘இதெல்லாம் சரியான டைம்ல சாப்பிடச் சொல்லுங்க, கொஞ்சம் அவங்களை கேர் பண்ணுங்க. ஹஸ்பெண்ட்னு சொன்னா மட்டும் போதாது அதுமாதிரி நடந்துக்கனும். அவங்களுக்கு மன அழுத்தம் இருக்கு, கொளண்சிலிங் எழுதியிருக்கேன், டாக்டர் கொஞ்ச நேரத்தில வந்திடுவாங்க, பேஷண்ட் கோஆப்பரேட் செய்தால் சீக்கிரம் சரியாயிடும், எதுவாக இருந்தாலும் இரண்டு பேரும் பேசி தீர்க்க பாருங்க, மன அழுத்தத்தை குறைவா இடை போடாதீங்க’
எல்லாவற்றிற்கும் சரியென்று தலையை அசைத்தவன் டாக்டர் சென்றதும், நிலாவின் அருகில் வந்தமர்ந்து ‘எப்படி இருக்கு, ஆர் யு ஓகே?’
‘-’
‘ஐ ஆம் சாரி’
‘-’
’சரி, பேசறதுக்கு இது சரியான நேரம் இல்லை. நான் போய் மெடிசின் வாங்கிட்டு வந்திடறேன்’
மாலை வரை மருத்துவமனையில் இருந்துவிட்டு மன நல மருத்துவரையும் சந்தித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.
காரில் கண்ணை மூடி இருந்தவள், ‘நிலா, வீடு வந்தாச்சு’ என்றவுடன் புதிதாக இருந்த வீட்டைப் பார்த்து குழம்பினாள்.
‘என்ன நிலா?’
‘-’
‘இனிமேல் இதுதான் உன் வீடு’
’-’
அதே நேரம் அங்கு ஆரத்தியுடன் ஒரு பெண் வந்து நின்றார்.
‘இறங்கி வாடா நிலா’
நிலா இறங்கினாள், அகி நிலா கூட சேர்ந்து நில்லு என்று இருவருக்கும் ஆரத்தி எடுத்தார்.
ஆரத்தி எடுத்து முடிந்ததும் உள்ளே அழைத்துச் சென்று மாடியில் ஓர் அறையைக் காட்டி, ’இதுதான் உங்க ரூம், நீ போய் ரெஸ்ட் எடுடா, நான் சாப்பிட எதாவது எடுத்திட்டு வரேன்’ என்று அந்த பெண்மணி வெளியே சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்து அவளுக்கு உணவு எடுத்து வந்தவர், அவளை உண்ண வைத்துவிட்டு மருந்துகளையும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார். சிறிது நேரம் ஜன்னலின் வெளியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள், களைப்பு தோன்ற கட்டிலில் சென்று படுத்துக் கொண்டாள்.
எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை, நடு இரவில் விழித்தவள் புதிதாக இருந்த அறையைப் பார்த்து பயந்துவிட்டாள். கட்டிலிலிருந்து எழுந்து அமர்ந்தவள் காலை கீழே வைக்கும்போதுதான் கவனித்தாள் அந்த பெண்மணி படுத்திருந்தது. ஒவ்வொன்றாக மீண்டும் நினைவில் வந்தது. திருமணமானால் உறவுகள் கிடைக்குமாம், ஹு, தான் தற்போது தனியாக அனாதையாக இருப்பது இந்த திருமணத்தால்தான். என்னவெல்லாம் சொல்லிவிட்டான். சிலநேரம் பழையதையெல்லாம் நினைவுபடுத்தியவள் உறக்கம் வராமல் ஜன்னலின் அருகே சென்று நின்று கொண்டாள்.
‘என்னடா தூக்கம் வரலையா?’
‘-’
‘தூக்கம் வரலைனாலும் பரவாயில்லை, படுத்துக்கோடா, உனக்கு அசதியா இருக்கும்’
எதுவும் பேசாமல் வந்து படுத்துக்கொண்டாள்.
தொடரும்...