All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் முடிவிலி-3

Nanthu Sara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவ்வளவு வருடமாக வீட்டின் அருகில் இருந்த பள்ளியிலேயே படித்து விட்டு இப்போது முதல் முறையாக வீட்டை விட்டு வெகுத்தூரம் கல்லூரிக்கு செல்வது அவனுக்கு கஷ்டமாக இருந்தது...

அவனைக் கல்லூரியில் விட்டுவிட்டு அவனது அப்பா சென்ற போது அவனது கண்ணில் கண்ணீர் வந்தது..

அங்கு இருந்த எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் புதியவர்கள் தான்..

முதல்நாள் வகுப்பிற்கு அனைவரும் சென்றனர்...BE(EEE)-துறை அவர்களை வரவேற்றது...

உள்ளே சென்றதும் கிருஷ்ணாவுக்கு இரண்டு அதிர்ச்சி இருந்தது..

ஒன்று 60 மாணவர்களில் 30 மாணவிகள்.இரண்டாவது அவனுக்கு முதல் பென்ஞ் மட்டும் தான் காலியாக இருந்தது அதில் யாரும் உட்காரவில்லை..தனியாக உட்கார்ந்தான் அது அவனுக்கு மேலும் வருத்தத்தைக் கொடுத்தது...

அந்த கல்லூரியில் பேசாமல் BE(MECH)-துறை எடுத்திருக்கலாம் ஏனெனில் அங்கு மாணவிகள் இல்லை என்று நினைத்தான் கிருஷ்ணா...

“இன்று முதல் நாள் எல்லோரும் உங்களை அறிமுகப்படுத்திக்கங்க” என்று சொன்னார் கல்லூரி பேராசிரியர்.

கிருஷ்ணா தான் முதல் பென்ஞ் அவன்தான் முதலில் சொல்ல வேண்டும்.ஆனால் அவனுக்கு ஆங்கிலம் அவ்வளவு கோர்வையாக பேசத் தெரியாது...

தயங்கி தயங்கி பேசினான் அது அவனுக்கு மேலும் வருத்தத்தைத் தந்தது..ஆனால் அங்கு பேசியவர்களில் 50% தயங்கி தயங்கித்தான் பேசினார்கள் இருப்பினும் முதல்நாள் அவனுக்கு சிறப்பாக அமையவில்லை...

வரும் நாட்களில் சந்திப்போம்...
 
Top