All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கிரித்திகா பாலனின் "போற போக்கில் ஒரு காதல்" - கதை திரி

Status
Not open for further replies.

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"ஹே தாக்ஷி கூல் கூல்,…
ஏன் இப்போ டென்ஷன்….
இது இப்படித்தான் முடியும்னு எனக்கு தெரியும்,
இருந்தும் ஒரு சின்ன ஆசை இருந்துச்சு அவ்வளவுதான், எனக்கு பெரிய ஏமாற்றம்லாம் இல்ல தாக்ஷி " என்றவள் அவளின் கையை பிடித்து தன்னருகில் அமர்த்தி “இப்போ உன்கிட்ட சொன்னதும் எனக்கு ரொம்ப ரிலாக்ஸ இருக்கு தெரியுமா, சொல்ல போன இப்ப ரொம்ப பெட்டரா ஃபீல் பண்ணறேன்.. "

" மேக் நீ .. " என திரும்ப பொங்க ஆரம்பித்தவளை நிறுத்தியவள்

"தாக்ஷி இளமதியன் ஒன்னும் எனக்கு ஹோப் கொடுத்து ஏமாத்தல, நல்லா பத்து பக்கத்துக்கு அட்வைஸ் தான் கொடுத்தார் அதுவே போதும்.. இனியும் எனக்கு ஃபேமிலி வேல்வியூ பத்தி லெக்ச்சர் வேணாம்ப்பா" என சிரித்தாள்.

அந்த சிரிப்பின் பின்னே உள்ள வலியை தாக்ஷிக்கு உணர முடிந்தது… ஒரு முடிவுக்கு வந்தவள்.

" மதி மாமா மேரேஜ் நடக்காது மேக், பொண்ணு ஒதுக்காம எப்படி மேரேஜ் நடக்கும்"

என்ன உளறுறா இவ என புரியாமல் தாக்ஷியை பார்த்த மேக்னாவிடம்
"ஆமா மேக் ஐ க்நோ , இந்த மேரேஜ் நடக்காது….. அவ ஒத்துக்கமாட்டா'

"எப்படி அந்த பொண்ணுகிட்ட சொல்ல போறியா ?"

ஒரு நிமிடம் விழித்தவள் " ஆமாம், எனக்கும் ரிலேட்டிவ்வா தான இருக்கும்,
நா… நான் போய் சொல்லுவேன், அப்புறம் எப்படி இந்த மேரேஜ் நடக்குமாம்".

"தாக்ஷி இங்க பாரு, என்னய பாருனு சொல்றேன்ல " என அவளின் பக்கம் திருப்பியவள் "இதுல நீ என்னை மட்டும் பார்க்கிற, அந்த பெண்ணை நினைச்சு பாரு என் லவ் சக்சஸ் ஆகாதுன்னு தெரிஞ்சு லவ் பண்ணுன எனக்கே வலிக்குதுனா, மேரேஜ் வர போன அந்த பெண்ணுக்கு வலிக்காதா,
மேரேஜ் நிக்குறதுலாம் கொடுமை தாக்ஷி, அந்த கொடுமையான விசயத்தை நீ செய்ய நான் அலோவ் பண்ண மாட்டேன்"
என திட்டவட்டமாக சொன்னாள்.. அவளுக்கோ தன் மீது கொண்ட அன்பால், இப்படி லூசு தனமாக தனக்காக ஒரு கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு செல்ல போன தாக்ஷியை வியப்பதா இல்லை தான் செய்ய போவதாக சொல்லும் காரியம் எவ்வளவு வீரிய மிக்கது என்பது புரியாமல் நிற்பவளை கண்டு அழுவதா என்று புரியாமல் நின்றாள்.

"அப்போ மதி மாமா பண்ணினது சரினு சொல்றியா மேக் "

" இப்போ மதி என்ன தப்பு பண்ணிட்டாங்க,
என்னய லவ் பண்ணி கழட்டி விட்டுட்டாரா என்ன...
இரு இரு திரும்ப நீ என்ன கேக்க வரேன்னு தெரியுது, என் மேல கொஞ்சம் ஆபக்ஷன் இருக்கு, என் மேல ஆபக்ஷன் வச்சுக்கிட்டு அந்த பெண்ணை மேரேஜ் பண்றது தப்புன்னு சொல்ல வர அதானா "

இன்னும் கைகளை கட்டிக்கொண்ட நிலையிலே ஆம் என்பது போல் பார்த்தாள்.

"மதி உறவுகளுக்கு மதிப்பு கொடுக்குறவர் தாக்ஷி, குடும்பம் தான் எல்லாம் அவர்க்கு . அப்படி இருக்கிறவர் அவருக்கு வரப்போற மனைவியை எவ்வளவு கேர் பண்ணி பாத்துப்பாரு, நீயே சொல்லு…..,
கண்டிப்பா நல்லா.., ரொம்ப நல்லாவே பாத்துப்பாரு,
யூ க்நோ அந்த பொண்ணு ரொம்ப லக்கி தாக்ஷி "

அய்யோவென்று இருந்தது தாக்ஷிக்கு.

"தாக்ஷி, ஐம் ஓகே, நிஜமா நான் ஓகே, நீ இப்படி லூசு தனமா கல்யாணத்தை நிறுத்தறேன்னு கிளம்புவணு தெரிஞ்ருந்தா உன்கிட்ட சொல்லிருக்கவே மாட்டேன்,, எல்லாமே சரியாகிடும் ஓகே… லெட் எண்ட் திஸ்..
வா உனக்கு ஸ்பெஸிலா டெஸர்ட் வச்சிருக்கேன், வந்து டேஸ்ட் பண்ணு வா .. உள்ள போகலாம்"……

என மேகனா முற்றுப்புள்ளி வைத்தாலும், தாக்ஷியால் முடியவில்லை.

********************

"ஹோ இதுதான் தியாகிகள் உருவான கதையா " என்றாள் இவ்வளவு நேரம் கதை கேட்டு கொண்டிருந்த ஜெய்.

"வாங்க போற பாரு, நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன்"

"சரி சரி விடு.. இப்போ மேடம் என்ன செய்ய போறீங்களாம், ஐ மீன்…. " என இழுத்தவளிடம்

" டவுட்டே வேணாம், நீ நினைக்கிறதே தான், கல்யாண பேச்சை என்கிட்ட இருந்து தான ஆரம்பிக்கனும் அன்னைக்கு வச்சிக்கிறேன்" என உறுதி பூண்டாள்.

என்ன அந்த உறுதியை செயல் படுத்தும் நாள் தான் வரவில்லை, அதற்குள் மேகனா கல்யாண நிச்சய பத்திரிகை தான் வந்தது.

அவள் வீட்டில் பார்த்த அவர்களின் நண்பர் குடும்பத்தின் மகனையே திருமணம் செய்து கொள்ள நிச்சயித்து அதுவும் பத்திரிக்கை வரை வந்து விட்டது..

நடுவில் முயன்ற தாக்ஷியிடம் மேகனா தெளிவாக இருந்தாள், “இது தான் ரியாலிட்டி எனவும், தன்னால் இந்த புதிய வாழ்கையில் அடாப்ட் பண்ணி கொள்ள முடியும் எனவும்” தெளிவுற தனக்காக வருந்திய தாக்ஷியிடம் உரைத்தாள்..

மேகனாவின் திருமணமும் நடந்து முடிந்தது, சரியாக ஒரு மாதம் பிறகு தாக்ஷியின் வீட்டில் அவளின் திருமணம் பேச்சு தொடங்கியதும்.. தாக்ஷி மறுத்து விட்டாள்..

ஜெய்மி கூட ஒரு தடவை " தாக்ஷி இப்ப தான் எல்லா பிரச்சனையும் சரியாகிடுச்சே,
மேகனா கூட ஹாப்பியா லைஃப் லீட் பண்ணறாங்க, இன்னும் என்ன….
நீ ஏன் உன் மதி மாமாவையே கல்யாணம் பண்ண கூடாது"

"ஜெய் ஆர் யூ மேட் "

"நோ தாக்ஷி, நீ கொஞ்சம் யோசிச்சு பாரு, எல்லாருக்கும் முதல் லவ் சக்சஸ் ஆகுமா என்ன, பி பிரடிக்கல்….
உன் பிளான் என்ன வீட்ல சொல்ற மாப்பிள்ளையவே…. அவங்களுக்கு யாரை பிடிக்குதோ அவங்கள தான மேரேஜ் பண்ணிபேணு இருந்த….

அப்புறம் எனக்கும் மதி மாமா பாயிண்ட் ஆப் வியூ சரினு படுது,
அவர் குடும்பம் உறவுகள்னு முக்கியத்துவம் கொடுக்கிறதுல என்ன தப்பு..”

"நோ ஜெய், நீ சொல்றது யாரோ ஒரு பெண்ணுக்கு ஓகேவா இருக்கலாம், ஆனா என்னால முடியாது… முன்னாடி எனக்கு விருப்பம் இருந்தது, ஆனா இப்போ சுத்தமா இல்ல.. எதுவுமே இல்ல,
என்னால மதி மாமாவ மேக்'கோட லவ்வரா தான் பாக்க முடியுது,
அதை விட மதி மாமா மேல எனக்கு இப்போ எந்த பிரதிபலிப்பும் இல்ல ஜெய், உனக்கு சொல்ல வருறது புரியும்னு நினைக்கிறேன்"

"தாக்ஷி இது வேணும்மா ஆசை இல்லையா, அவங்க அண்ணன் வீட்டுக்கே உன்னை கல்யாணம் பண்ணி கொடுக்குறது"

“என்னால வேணும்மா நினைச்ச மாதிரி அவங்க அண்ணன் பையனையே கல்யாணம் பண்ணிக்க முடியாது ஜெய், முடியவே முடியாது" என உணர்ச்சிவசப்பட்டாள்.. எது முடியாது முடியாது என சொல்கிறாளோ அதுவே நடக்க போகிறது என்று தெரியாமல்...



இங்கு நம் எல்லாருக்கும் பிடித்து கொள்ள ஒரு பற்று தேவைப்படுகிறது.
நாம் இறைவனை சரணடைவதும் அவ்வாறே, ஒப்புதலாக அவனிடம் பிராதிப்பதும் அவ்வாறே.. பிராத்தனை என்பதற்கு சக்தி வாய்ந்த எண்ணம் என்பதே பொருளாகும். எண்ணங்கள் அழகானால் அனைத்துமே அழகாகும்.. நல்ல எண்ணங்களோடு பிராத்தனை என்பது நம்மில் தூய ஆரா'வை ( நம் உடம்பை சுற்றிய ஒளிவட்டம்) ஏற்படுத்தும். ஆற்றல் மிக்க மின் காந்த ஒளி நமக்கு மட்டுமில்ல நம் சுற்றுப்புறதிலும் மாற்றம் ஏற்படுத்தும் .இதை சுயஅனுபவத்தில் அனைவரும் உணரலாம்.

இதை இங்கு சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தோன்றிட்டே இருந்தது. என்னையை சுயஅலசலில் அமிழ்த்திய விஷயங்களாகும்..

எண்ணம் தான் வாழ்க்கை.... எண்ணம் போலவே வாழ்க்கை.... Be Happy :love: Stay Happy:love::love: and Make Others Happy :love::love::love:…..

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி::love:

http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 8 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

ட்விஸ்ட் ரீவியல்ட், யாரு யாரு இந்த ட்விஸ்ட்ட கெஸ் பண்ணுனீங்க, ஒரு ஆள் மட்டும் தான் கெஸ் பண்ணுனாங்க, அதுவும் ஸ்டார்டிங்க்ல மட்டும் தான்....

அத்தியாயம் 8


தன் வீட்டின் அழைப்பு மணி ஒலித்த சத்ததிலயே, ஜெய்மி தான் என அறிந்து கொண்ட தாக்ஷி ஓடி சென்று அணைத்துக்கொண்டாள், இருவருமே தங்கள் உலகில் மூழ்கினர்.
சிறு வயது முதல் ஒன்றாகவே வளர்ந்த நட்பில் இதுவே அவர்களின் முதன் முதலான நீண்ட பிரிவு.

அளவளாவி கொண்டே உள்ளே சென்றவர்கள் வசதியாக எய்டன் ஜோஷுவவை மறந்து விட்டனர்.
இதை எதிர்பார்த்த எய்டனும் வரவேற்பை எதிர்பாக்கமல் அவனாகவே உள்ளே வந்தமர்ந்தான். இப்பொழுதும் அவனை கவனிக்காமல் தங்களுள் மூழ்கியிருந்தனர்.

சில நிமிடங்கள் பிறகு எய்டன் எங்கே என தாக்ஷி வினவவும், தோழிகள் இருவரும் தங்கள் கண்களை அவர்களை விட்டு பிரித்து வாசல் பக்கம் பதித்தனர்.
எய்டனை காணாமல் ஒரு நொடி இருவரும் விழிக்கவே செய்தனர்.

"எவ்வளவு நேரம் நீங்க அங்க பார்த்தாலும் நான் அங்க இருக்க மாட்டேன்"
என எய்டன் கூறவும் தான் திரும்பி அவன் உள்ளே அமர்ந்திருப்பதை பார்த்தனர்.

சற்றே அசடு வழிந்த தாக்ஷி " ஹையோ சாரிண்ணா, உங்கள சரியா கூட வெல்கம் பண்ணல "

"எப்பா இப்ப்வாச்சும் என்னை தேடுனிங்களே, நானும் நீங்க என்ன திரும்பி பாப்பீங்கன்னு எவ்வளவு நேரம் தான் வெயிட் பண்றது, நின்னு நின்னு என் கை கால் எல்லாம் மரத்து போச்சு "
என சில நொடிகளை பல மணிநேரங்கள் போல் சொன்னவனை இடையிட்டாள் ஜெய்மி,

"போதும், இன்னைக்கு சீன் ஓவரா இருக்கு, எப்ப பாரு ஓவர் பில்ட் அப் பண்ணியே காலத்தை ஓட்டுறது"

"யாரு நானு ஓவர் பில்ட் அப் பண்ணுறேனா, நான் உள்ள வந்தது கூட தெரியாம என்னை தேடி வாசல வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கீங்க, வேற யாராவது உள்ள வந்திருந்தா கூட தெரியாது போலேயே உங்களுக்கு”
என இவன் கூறவும் பதிலுக்கு ஜெய்மி வேறு கூறவும், மாறி மாறி அவர்கள் கூறிய குற்றச்சாட்டிற்கு ஒரு தற்காலிக தடை கொண்டுவந்தாள் தாக்ஷி.

"பஸ் பஸ் போதும், இப்ப போய் ஃப்ரஷ் ஆகிட்டு வாங்க சாப்பிடலாம், அண்ணா நீங்களும் தான்,… பசிக்குதுய்யா"

“உனக்காக போறோம்” என இருவருமே சிலிர்த்து கொண்டு சென்றனர்..

உணவருந்தும் மேசையில் உள்ள உணவு வகைகளை பார்த்த ஜெய்மி
" ஹையோ …. தாக்ஷி… என்னடி இவ்ளோ ஐட்டம்ஸ்,
இந்த ஐட்டம் பேருனாச்சும் உனக்கு தெரியுமா,
என்னை விட்டு வந்த இந்த ரெண்டு மாசத்துல இவ்வளவு சமைக்க தெரிஞ்சுகிட்டியா நீ,
இட்ஸ் மெடிக்கல் மீராக்கள்" என நிஜமாகவே வியந்தாள்...

அவளின் தலையில் கொட்டிய தாக்ஷி " ஹே அடங்கு பிசாசு, எல்லாம் மாமா சமைச்சு வச்சுட்டு போனது, ஈவினிங் சீக்கிரம் வந்து உங்கள மீட் பண்றேனு சொல்லிருக்காங்க"

"என்னது மாம்ஸ்குள்ள இவ்வளவு திறமையா,
இன்னைக்கு மட்டும் தான் மாம்ஸ் சமையலா……. , இல்ல எப்பவுமேவா "
என சந்தேகத்துடன் கேட்டவள் அவளே தொடர்ந்தாள்,

“ விடு விடு நீ பதில் சொல்லவேணாம், உன்னை பார்த்தாலே தெரியுது யார் சமைப்பானு”

" இப்ப இது ரொம்ப முக்கியமா…. வந்து சாப்பிடு, சும்மா கேள்வியா கேட்டுட்டு இருக்க,”

ஆனால் ஜெய்மியின் பார்வையோ எய்டன் பக்கம் சென்றன..
அதில் தினுக்குற்று சுதாரித்த எய்டன் ‘ஆத்தி என்னை டார்கெட் பண்ணப்போறாலே அதுக்குள்ள நாமலே சரண்டர் ஆகிடுவோம்’ என முடிவு செய்து
“எம்மா தாயே இப்படிலாம் என்னை பார்க்க கூடாது, உன் அத்தான் இந்த அளவுக்குலாம் ஒர்த் இல்லைனு உனக்கே தெரியும், என்கிட்ட இதுலாம் எதிர் பாக்கலாமா செல்லம்" என கூறியவனை முறைத்த ஜெய்மி

"எல்லாம் மேல் சாவனிஸ்ட், அது என்ன சமையல் பொண்ணுங்க மட்டும் தான் பண்ணனும்,
விருப்பம் இருந்த எல்லாரும் பண்ணலாம்… ஆனா நாம தான் சமயலறை பெண்கள் டிபார்ட்மெண்ட்னு ஒதிக்கிருக்கோமே, அதுலயும் அது சரியில்ல இது சரியில்லனு நல்லா குறை மட்டும் சொல்ல தெரியும்,
சரியான மேல் சாவனிஸ்ட் உலகம் இது "
என திரும்ப பொரிய ஆரம்பித்தவளை சாப்பாடு பக்கம் திசை திருப்பி எய்டனின் புண்ணியத்தை பெற்றுக்கொண்டாள் தாக்ஷி.

சாப்பாடு முடிந்து கிளம்ப எத்தனித்த எய்டனிடம்" ஏண்ணா நீங்களும் இங்கேயே ஸ்டே பண்ணலாம்ல "

"இல்ல தாக்ஷிம்மா பிரெண்ட் ரூமல் தங்கினாதா மத்த பிரிண்ட்ஸ்க்கும் இன்விடேஷன் கொடுக்க வசதியா இருக்கும், ஓவ்வொருத்தனும் ஒவ்வொரு ஏரியால இருக்கான், ” என கூறி தாக்ஷியை அருகே அழைத்தவன்
"அத விட உன் பிரெண்ட் என்னை சட்னி ஆக்க அப்ப இருந்து ரெடியா இருக்கா… என்னை சிக்க வச்சுறாதமா,
ப்ரோ’ட்ட சொல்லிடு அவர பார்க்க சாட்டர்டே வருறேன்னு, முக்கியமா சாப்பாடு பிரமாதம்னு சொல்லிடு”
சாப்பாடு பற்றி கூறும் போதே தன்னவளை பார்த்தவன் அவளின் முக மாறுதலை கண்டு உஷாராகி
“ஆத்தாடி ஜூட் " என இருவரிடமும் விடை பெற்று வேகமாக சென்று விட்டான்.

அதன் பின்னர் தோழிகள் இருவருக்கும் பேச்சு, பேச்சு பேச்சுதான் இன்றோடு எல்லாம் முடிந்து விடுவது போல் பேசி பேசி ஒரு கட்டத்தில் களைத்து தூங்கியவர்கள் தாக்ஷியின் கணவன் வந்து அழைப்பு மணியை அழுத்தவும் தான் எழுந்தனர்..
சுற்றிலும் உள்ள இருட்டு தாங்கள் தூங்க ஆரம்பித்து வெகு நேரம் ஆனதை உணர்த்திட வேகமாக சென்று கதவை திறந்தாள்..

கதவை திறந்ததும் அவளே எதிர்பாராத விதமாக அவளின் கணவன் அருகே வந்து அவளின் நெற்றியில் கை வைத்து பார்த்து
" தாக்ஷி என்னாச்சு, ஆர் யூ ஆள்ரைட் காய்ச்சல் மாதிரி இருக்கு "
என லேசாக பதறியவனின் என்றுமில்லாத திடீர் செய்யகையில் நெளிந்தாள் அவனின் நங்கை.

என்றும் முதல் அழைப்பிலேயே கதவை திறப்பவள், இன்றோ ஐந்தாறு முறை அழைப்புமணி அடித்தும் திறக்காததால் சற்றே குழம்பினான் அவன். தூங்கி எழுந்த வேகத்தில் வேகமாக சென்று கதவை திறந்தவளின் கோலத்திலும், அவள் பின் இருட்டாக இருந்த வீட்டின் நிலையிலும் அனைத்தும் மறந்து தாக்ஷியே முன் நின்றாள் அவனுக்கு. அவளை ஒரு நாளும் இவ்வாறு கண்டதில்லை அவன்.

தன்னவனின் திடீர் செய்கையால் சற்றே நெளிந்தவள்
" அ.. அது கொஞ்சம் நேரம் தூங்கிட்டோம்… நானும் ஜெய்மியும்"
என்று அவனுக்கு தன் தோழியின் வருகையை ஞாபகம் படுத்தினாள்.

அதன் பிறகே அங்கு நின்ற ஜெய்மியை இனம் கண்டு அவளுக்கு திருமண வாழ்த்து சொல்லி ஆரம்பநிலை விருந்தோம்பலை முடித்தவன், அவனின் அலுவலக அலைபேசி அழைப்பில் கவனம் செலுத்தி,
தன்னை சுத்தப்படுத்தி வரும் போது இரவு உணவு தயாராகி இருந்தது.
அவ்வீட்டில் சமையல் என்பது அவனுடையதே, ஆகையால் இன்றைய இரவு உணவு தயாராகி இருப்பது அவன் எதிர்பார்க்காதது.

ஜெய்மியோ " மாம்ஸ் நீங்க வியந்து பாக்குறீங்களா இல்ல பயந்து பாக்குறீங்களா "

"யார் சமைச்சதுனு சொன்ன முதலாவதா இல்ல இரண்டவதானு சொல்லுவேன் "

"நானுனு சொன்னா "

"இப்பவும் கஷ்டம் தான்… பொய் சொல்றதா இல்ல உண்மை சொல்றதானு"

அதில் சிரித்து விட்ட ஜெய்மியும் " ப்பா செம ஷார்ப்பு நீங்க… பொலச்சுப்பீங்க, சரி சரி சாப்பிடலாம், அண்ட் சாப்பாடு எப்படி இருக்குனு தாரலமா உண்மை சொல்லலாம் உங்க வைஃப் ஒன்னும் சொல்ல மாட்ட " என சாப்பிட ஆரம்பித்தனர்..

சாப்பிடும்போதும் சரி, அதன் பிறகு மூவருமாக பேசி கொண்டிருக்கும் போதும் சரி அவனின் கண்கள் தன்னவளின் மேல் சொந்ததுடன் உண்டான தேடலுடன் அடிக்கடி படிந்து மீண்டது.
இதை உற்றவள் உணர்தலோ இல்லையோ அவளின் தோழி நன்றாகவே கவனித்தாள்..

அடுத்த நாள் தோழிகள் இருவரும் கல்யாண பர்சேஸ் என்ற பெயரில் வெளியில் ஒரு சுற்று சுற்றி கைநிறைய பொருட்களோடு வீடு திரும்பினர்..

மாலை இறங்கிய வேலையில் தோழிகள் இருவரும் வாங்கிய பொருட்களை பிரித்து வைத்து கொண்டிருந்தனர்.
தாக்ஷியை நிமிர்ந்து பார்த்த ஜெய்மி
" தாக்ஷி… நீ இன்னும் தாட்சாயினி ஞானமூர்த்தியாதான் இருக்க இல்லையா”... என ஆழ்ந்து வினவும்

பொருட்களை பிரித்து வைத்து கொண்டிருந்தவளின் கைகள் அப்படியே நின்றன.,
சில நொடி அமைதிக்கு பின்,
"இல்லைனு உனக்கு தெரியும் ஜெய்,
நான் சென்னைல இருந்து இங்க வரும் போதே உன் தாக்ஷி, தாட்சாயினி ஞானமூர்த்தில இருந்து வெளிய வந்துட்டா..
அது உனக்குமே நல்லா தெரியும்னு நினைக்கிறேன் "
என பதில் உரைத்தாள் மென்மையை சொந்தமாக அந்நிமிடம் தன் கையில் எடுத்து கொண்டவளாக தாக்ஷி.

"தாட்சாயினி ஞானமூர்த்தில இருந்து வெளிவந்துட்ட சரி.. ,
ஆனா நீ தாட்சாயினியா மட்டும் தான இருக்க,
எப்ப உன் மாமா பேர உன் பின்னாடி சேர்த்துக்க போற"

இப்போது தாக்ஷியோ மௌனத்தை சொந்தமாக்கி கொண்டாள்.

"இத உன்கிட்ட நான் எதிர்பார்க்கல தாக்ஷி.."

"ஜெய்..... நான்... "

"போதும் நிறுத்து தாக்ஷி... உன் ஸ்டுபிட் ரீசன்ச,"

"......"

" இன்னும் எவ்வளவு நாள் தாக்ஷி….,
நீ இங்க வருரதுக்கே ரொம்ப அதிகமாவே டைம் எடுத்துகிட்ட..
ரியாலிட்டி, பிராடிக்கல்னு பேசுற நீ, உன்னை சுத்தி உள்ள ரியாலிட்டிய கொஞ்சம் உன் கண்ணை திறந்து பாரு..
இங்க வந்த ரெண்டு நாள்ல நான் தெரிஞ்சுகிட்டத நீ இங்க வந்து இரண்டு மாசம் ஆகியும் எதையும் ஃபீல் பண்ணாம அதுக்கு கொஞ்சம் கூட ட்ரை பண்ணாம இருக்குற உன்னை என்ன சொல்லி திட்றதுனே தெரில எனக்கு……
கொஞ்சம் உன்னை சுத்தி பாரு தாக்ஷி,
அப்பவாச்சும் உன் மாமா உன் மேல வச்சுருக்கிற லவ்'வ புரிஞ்சுகிறியானு பார்ப்போம்..”

அவ்வாக்கியத்தில் நிமிர்ந்து பார்த்தவளிடம்..

"இனி மாம்ஸ் கண்ண பார்த்து பேச ஆரம்பி, உனக்கே எல்லாம் புரியும் ….
மத்த இடத்துல வாய் கிழிய பேசீட்டு…. இப்ப உன் விஷயத்தில கூறே இல்லாம திரியுறா,
உன்னை வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணணு தெரில.."

"எனக்காக வருத்தப்பட்டு உன் கல்யாணத்த எதுவும் ஸ்டாப் பண்ணிடாத ஜெய்" என சூழ்நிலையை இலகுவாக்கும் பொருட்டு கேட்டாள் தாக்ஷி .

அதை உணர்ந்து கொண்ட ஜெய்மியும்
" எதுக்கு…. நீ உன் லைஃப் வேஸ்ட் ஆக்குறது பத்தாதுன்னு நானும் ஆக்கனுமா,
நானே மாம்ஸ் லைஃப் வேஸ்ட் ஆகுதே பேசாம அவர்க்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன்"

"ஹே அதுலாம் மாமா ஒத்துக்க மாட்டாங்க" என தாக்ஷி வேகமாக மறுக்கவும்

"அந்த திமிர்ல தானடி சுத்திகிட்டு இருக்குற "

ஜெய்மி கூறவுமே அவளுக்கும் அந்த உண்மை உரைத்தது, இந்நாள் வரை தன்னை விட்டு வெளிய பார்க்க முயலாமல் தன்னுள் இறுகியவள், ஜெய்மி வந்தது முதல் இலகுவாகி தன்னை சுற்றியும் பார்க்க தொடங்கிற்ந்தாள் .

*************

இரவு விருந்திற்காக பெண்கள் இருவரின் துணைவர்களின் கைவண்ணத்தில் விருந்து தயாராகி கொண்டிருந்தது. தாங்களும் உதவி புறிகிறோம் என வந்த பெண்ணவர்களை,
பால்கனியில் டின்னர் செட்டிங் தயார் செய்யுமாறு திருப்பி விட்டார்கள் ஆண்கள் இருவரும்.

பால்கனியை இரவு விருந்திற்காக மிக அழகான தயார் செய்தவர்கள்,
தாங்களும் அழகாக தயாராகி வந்தனர்.

ஆண்கள் இருவருமே முதல் சந்திப்பிலேயே ஒருவர் மற்றவரோடு அழகாக நட்பு பாராட்டினர்.
இருவருக்கும் ஓரே அலைவரிசையில் மணம் ஒப்பினாலும்,
மற்றவரை தத்தம் பெண்ணவள் கொண்டு முன்பே நன்கு அறிந்திருந்ததால் எவ்வித தயக்கமின்றி நட்பு பாராட்டினர்.

நால்வருக்கும் அந்த விருந்து இனிமையாய் சென்றது என்பதில் ஐயமில்லை.

ஜெய்மியின் பேச்சுக்கு பின் உணர்ந்தாளோ, இல்லை அவளாக உணர்கிறாளோ
தன்னவனின் தன் மீதான பார்வையை உணர ஆரம்பித்திருந்தாள் தாக்ஷி.
மற்றவர்களோடு உரையாடி கொண்டிருந்தாலும் அவனின் பார்வை அடிக்கடி அவள் மீது படிந்து மீண்டதில் தடுமாறினாள்..

நேற்று ஜெய்மியோடு சேர்ந்து ஒன்றாக ஒரே மாதிரியான வடிவமைப்பில் நிறம் மட்டும் மாறுதல் கொண்டு வாங்கிய, முட்டிக்கு கீழ் சிறிதளவு வரை நீண்ட, 3/4 நீள கவுனையே பெண்கள் இருவரும் இன்று அணிந்திருந்தனர்...

என்றும் இல்லாமல் இன்றைய விருந்திற்காக கொஞ்சம் விஷேசமாக தயாராகிய தாக்ஷி வெளியே வருவதற்கும், தானும் தயாராகி வருவதற்காக அறைக்குள் அவன் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
திடிரென அறைக்குள் வந்தவனின் மீது மோதி கொள்ள பார்த்து கடைசி நொடியில் சுதாரித்து நின்றாள் தாக்ஷி.

தன்னவளை இன்று விசேஷ ஒப்பனையில் பார்த்தவன் சில நொடிகளேனும் அப்படியே நின்று விட்டான்..
அவனின் அசையாமின்மையில், என்னவென்று மேல் நோக்கி அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
முதன் முதலாக கண்டு கொண்டாள் அவனிடம் அவளுக்கான தேடலை…
அந்நிமிடம் தொட்டு இந்நிமிடம் வரை தன் மீது படிந்து மீண்ட அவன் பார்வையினை உணர்ந்து கொண்டே இருந்தாள்.

நாளையன்று ஜெய்மி, எய்டன் கிளம்புவதால் விருந்து நேரம் முடிவு இல்லாமால் நீண்டு கொண்டேயிருந்தது....

விளையாட்டாக "ட்ருத் ஆர் டேர்" விளையாட ஆரம்பித்தனர்..
அதில் ஜெய்மி எய்டன் ஜோடி போட்டி கொண்டு ஒருவரை மற்றவர் வாரி கொண்டேயிருந்தது,
அங்கு இருந்த மற்ற ஜோடி அவர்கள் அளவுக்கு தங்களுக்குள் நெருக்கமாக கலாய்த்து கொள்ளவில்லை என்றாலும் அவர்களை மணம் கொண்டு ரசித்து கொண்டேயிருந்தனர்.

விளையாட்டில் தாக்ஷியின் கணவனுக்கு வந்த கேள்வி -
" ஜெய்மி உங்களை கோபம் கொள்ளும் படியாக நடந்த விஷயம் " ( இது எய்டன் தனக்காக கோர்த்து கொண்ட கேள்வி, அது மாறி அவனுக்கு வந்து விட்டது ) ...

அதை நன்கு உணர்ந்த ஜெய்மி
"மாம்ஸ் க்கு என் மேல கோபம் என்ன இருக்க போகுது" என அவனிடம் கூறி
" இந்த கொஸ்டின் எழுதுனவங்க ஏதோ பெருசா பிளான் பண்ணிருக்காங்க, அப்புறம் வச்சுக்கிறேன் அவங்கள "
என எய்டனிடம் முடித்தாள்..

" இல்லையே இருக்கே " என அவன் கூறவும், அவனை கேள்வியாக ஆச்சரியத்தோடு பார்த்தவர்களிடம்

" ஆமா ஜெய்மிம்மா, ஒரே ஒரு தடவை.."

'அப்படி என்னடா அது' என அவனை கேள்வியோடு பார்த்தவர்களுக்கு அவர்கள் பீனிக்ஸில் சந்தித்து கொண்ட சம்பவத்தை ஞாபகம் படுத்தி, அவர்கள் விரைவாக அவ்விடம் இருவரும் சென்று விட்டதை கூறி அதுனால் வருத்தம் என கூறியவனின் பதிலில் மனதிர்க்குள் நொந்தாள் ஜெய்மி..

' யோவ் மாம்ஸ் நீ கடைசி வரைக்கும் சிங்கிள் தான்யா..
உன் வைஃப் இப்ப தான் எல்லாத்தையும் மறந்துட்டு வரா,
நீயே மறக்க விட மாட்ட போல இருக்கே..' என தனக்குள் நொந்து வெளியே சிரித்து வைத்து மற்ற அனைவரின் கவனத்தை திரும்ப விளையாட்டில் கொண்டு சென்றாள்.

*********
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெங்களூர் வந்த இரு மாதங்களாக தன்னிலையை முழுதாக அறியாமல் தனக்குள் ஒரு மோன நிலையில் மூழ்கியவள், ஜெய்மியின் வருகைக்கு பின் தன்னவனிடம் பார்வையை நிறுத்தி அவன் கண்கள் தனக்காக பிரிதிபலித்த தேடலை உணர்ந்து கொண்டேயிருந்தாள்..

அந்த யோசனையில் மூழ்கியவளை கலைத்தது அவளவனின் குரல்
" தாக்ஷி நீது குட்டி இஸ் ஆன்லைன், உன்னை கூப்பிடுறா " ..
அதில் சுயம் பெற்றவளுக்கு நீது'வின் குரல் ஒன்றே போதுமானதாக இருந்தது அவள் மகிழ்ச்சியின் அளவு கோலை கூட்டுவதற்கு.

விரைவாக வந்து அவன் அருகில் அமர்ந்து அந்த செல்ல சிட்டுடன் ஐக்கியமாகிவிட்டாள்.

நீதுவின் அன்னை மகாவும் அவர்களோடு கலந்து கொள்ள,

"மகாக்கா, என்ன இன்னைக்கு லேட்டா அட்டெண்டென்ஸ் கொடுக்குறீங்க ,
டல்லா வேற தெரியுறீங்க. உடம்பு சரியில்லையா, ஆர் யு ஓகே "

"கொஞ்சம் டையர்ட்டா இருக்கு தாக்ஷி…. வேற ஒண்ணுமில்ல "

"கொஞ்சம் இல்ல ரொம்பவே டையர்ட்டா தெரியுறீங்க, என்னாச்சுக்கா ? "

தனக்கு ஒன்றுமில்லை என மறுத்த மகாவோ இவர்களை நேராக பார்ப்பதை தவிர்த்தவள், அவள் பதில் அளிக்கும் முன் அவளை முந்தி கொண்டு பதில் அளித்தாள் அவளின் மகள்..

" சித்து நான் பிக் கேர்ள் ஆகிட்டேன் " ..

" என் பேபி எப்பவும் பிக் ஸ்வீட் கேர்ள் தான"

"ஹையோ சித்து அந்த பிக் கேர்ள் இல்ல.. இது வேற பிக் கேர்ள்.. "

என்னடா சொல்றா என குழம்பிய இருவருக்கும் தெளிவாக உரைக்கவென அங்கு அவர்களோடு இணைந்தான் மகாவின் கணவன்..

" நீது பேபி, அது பிக் கேர்ள் இல்லடா பிக் சிஸ்டர்” என மகளிடம் திருத்தியவன்..
இவர்களிடமும் அதையே உரைத்து மனைவி மகளை லேசாக அணைத்தவாறு அமர்ந்தான் இளமதியன்!!!!!!!.."

தந்தை திருத்தியதும் " ஆமா, ஆமா.. நான் பிக் சிஸ்டர், இங்க குட்டி தம்பி பாப்பா வர போறான் சித்து ".

மெய் உணர்ந்து அகமகிழ்ந்து தங்கள் மகிழ்ச்சியை பெரியவர்கள் நால்வரும் பகிர்ந்து கொண்டிருக்கும் போது இடையுறாக வந்தது வாயிலின் அழைப்பு..

எழப்போன தன்னவனை அமர்த்தியவள் அவளே சென்று பார்த்தாள்..
வெளியே தங்கள் வீட்டுக்காக வந்த அவர்கள் குடியிருப்பின் மாதாந்திர சுற்றறிக்கையில் கையொப்பமிட்டு வந்தாள் தாக்ஷி, - தாட்சாயினி அமிழ்திரவியம் என்று.......

Dis - இது தாட்சாயினி இளமதியன் கதை அல்ல
அமிழ்திரவியமின் தாட்சாயினிக்கான காதல் கதை :love::love::love:....


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி:love:


http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 9 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

அத்தியாயம் 9

ஒட்டு கேட்பதே தவறு, அதிலும் சரியாக முழுமையாக கேட்காதது மிகப்பெரிய தவறு.
அன்றே அவளின் தந்தைகளின் பேச்சை தெளிவாக கேட்ருந்தாள் என்றால் தெரிந்திருக்கும்,
அவளுக்கென அவர்கள் வீட்டில் நிச்சயம் செய்தது மூத்தவன் இளமதியன் அல்ல
இளையவன் அமிழ்திரவியம் என்று.

தவறாக கேட்டு தப்பாக தானாக ஒரு எண்ணம் கொண்டு,
தான் மட்டும் குழம்பி கொண்டது மட்டுமில்லாமல் ஜெய்மியையும் குழப்பி
இடியாப்பம் சிக்கலாக்கி கொண்டவளை என்னவென்று சொல்வது.
( ஒன்னு மட்டும் சொல்லாம் யாரும் ஒட்டு கேக்காதீங்கோ )...

இளமதியன் திரும்ப கனடா செல்லவிருப்பதால் அண்ணன், தம்பி இருவரின் திருமணமும்
ஒன்றாக நடத்தி விடலாம் என அவர்களின் திருமண பேச்சு ஆரம்பிக்கும் போதே தாக்ஷிக்கு தெரிய வந்தது அமிழன் தான் அவளுக்கேன நிச்சியக்கப்பட்ட மாப்பிள்ளை என்று..

பெரிதாக தான் செய்த மடத்தனத்தை எண்ணி மருகியவள்
திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் மறுத்தாள்.

தன் சுயகுற்ற உணர்ச்சியில் தவித்து தான் போக்கில் பிதற்றி கொண்டிருந்த தாக்ஷி சடாரென நிறுத்தியவள், கைகளை அவளின் கண்ணத்திற்கு முட்டு கொடுத்தாள், ஜெய்மி கொடுத்த அறையினால்.

"இதுக்கு மேல நீ எதுவும் பேசகூடாது ,
நான் சொல்றத கேப்பியா மாட்டியா "

...

" நான் சொன்ன கேப்பியா மாட்டியா, எனக்கு தேவ உன்கிட்டயிருந்து பதில் மட்டும் தான் தாக்ஷி "
என்ற ஜெய்மியின் கூற்றில் முகத்தில் உறுதி கொண்டு நிமிர்ந்த தாக்ஷியிடம் இருந்து ஒற்றை சொல் பதிலாக வந்தது..

" கேப்பேன் "..

தான் அவளிடம் என்ன கேக்க போகிறேன் என நன்கு அறிந்திருந்தும்
அது அவளால் இயலாத காரியம் என அறிந்தும் தான் கேட்பதற்க்காக மட்டுமே சரியென்று தன் முன் நிக்கும் தோழியை கண்டு உள்ளே நெகிழ்ந்தாலும், அவளிடம் காட்டி கொள்ளாமல் நின்றாள் ஜெய்மி ,

"உன்னை ஏன் இதை செய்ய சொல்றேன்னு கேக்க மாட்டியா தாக்ஷி "

"தேவையில்லை ஜெய்"

என தன் மேல் அன்பால் கொண்ட நம்பிக்கையில் பேசும் தாக்ஷியை கண்டு உறுகினாலும்
தனது உறுதியே அவளின் தோழிக்கு நன்மை பயக்கும் என நம்பினாள் ஜெய்மி..,

திருமணத்திற்கு ஒத்துக்கொண்டவள்,
தனக்கு இதில் இருந்து மீண்டு வர சிறிது காலம் தேவை என்ற தாக்ஷியின் கூற்று,
ஜெய்மிக்கும் சரியெனவே பட்டது. அதை நிறைவேர்த்த அவர்கள் சென்று நின்றது
தாக்ஷியின் சித்தப்பா சிவிசேனப்பெருமாளிடம்,
வேலை ஒப்பந்தம் என ஏதேதோ காரணம் காட்டி இவர்கள் சொன்ன காரணத்தை கேட்டுக்கொண்டவர்,
தாக்ஷி அமிழனின் திருமணத்தை மட்டும் தள்ளி வைத்துக்கொள்ளலாம் என அவர் முடிவு செய்து
மற்றவர்களிடம் தெரிவிக்கும் முன், திடிரென பாதித்த தாக்ஷியின் தந்தை உடல்நலம் அதனால் விளைந்த பாட்டி வெங்கடலட்சுமியின் தூண்டுதலால் இருகல்யாணமும் குறித்த நேரத்தில் ஒன்றாகவே நடந்து தாட்சாயினி,
தாட்சாயினி அமிழ்திரவியம் ஆகினாள்..

இளமதியனுக்காக அவன் வீட்டில் பார்த்த பெண் தான் மகா, மகாலட்சுமி.
மதியன், அமிழன் அப்பவான செல்வகணபதியின் சித்தப்பா வழி பேத்தி .

அவளது திருமண நடக்க இருந்த சமயத்தில் நடந்த விபத்தில் தவறிவிட்ட தன் அண்ணன் அண்ணி
குழந்தையை அரவணைத்து வளர்த்து வருகிறவள்.

பிறந்து எட்டே மாதத்தில் தாய் தந்தையை ஒன்றாக இழந்த நதியா என்ற அந்த இளஞ்சிட்டுக்கு தாயுமானவளாகினாள்..
அதன் பொருட்டு இரண்டு வருடங்களாக திருமணத்தையே மறுத்து வந்தாள்.

அவளது மணமேடை வரை வந்த திருமணமே நதியவை காரணம் காட்டி,
நதியாவா அவனா என அவளை தேர்வு செய்யும் படி நிர்ப்பதிந்த அவனிடமும் அவன் வீட்டாரிடமும்
அவளின் அண்ணன் மகளே இனி தன் மகள் என உறுதி பட கூறி
அவளின் திருமணத்தை அவளாகவே நிறுத்தி அண்ணன் மகளுக்காக வாழ்ந்து வந்தாள்.

அவளை பொருத்த மட்டில் அவளது அண்ணன் மகள் நதியா மட்டுமே அவளின் எதிர்காலம்.

தன் ஒன்று விட்ட சகோதிரியின் மகளான மகாலட்சமியின் திடத்தில் ஈர்க்கப்பட்டு,
அவளுக்கு பொறுமையும் அமைதியும் கொண்ட தன் மூத்த மகன்
இளமதியனே பொருத்தமான துணையாய் இருப்பான் என முடிவு செய்து,
மகாலட்சுமியின் பெற்றோரிடம் அவரின் எண்ணத்தை தெரிவித்தும் விட்டார்,
இளமதியனின் அப்பாவான செல்வகணபதி.

விஷயம் அறிந்த மகா பெரிதாக மறுக்கவே, அவளின் மற்ற முடிவுகளுக்கு துணையாய் இருந்த
அவளின் பெற்றோர் இப்போது அவளின் மறுப்பை சட்டை செய்யவில்லை,
அவர்கள் இத்திருமணத்தை உறுதி செய்து அவர்கள் முடிவில் நின்றனர்.

அதனால் உறுதி செய்த திருமணத்தை நிறுத்தும் பொருட்டு
இளமதியனையே தேடி வந்தாள் மகா.

" இந்த கல்யாணம் சரியா வராது மாமா, நிறுத்திடுங்க "
என கூறியவளை கையை கட்டி அவளையே பார்த்து கொண்டிருந்த இளமதியன்
பதிலாக ஒற்றை கேள்வியை கேட்டான்.

" ஏன் ? "

"ஏன்னா,.....

நான் மட்டும் தனி ஆள் இல்ல, அம்மா அப்பா சொல்ற மாதிரி நீத்துவ அவங்க கிட்ட விட்டுட்டு
என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது,.
நீத்து என் பொண்ணு, நீங்க கல்யாணம் பண்ணிக்க கேக்குறது ஓரு அம்மாவ,
அத தெரிஞ்சுகோங்க "

" தெரியும் "

" என்ன….. "

" நான் கல்யாணம் பண்ணிக்க கேக்குறது நீத்துவோட அம்மாவனு நல்லாவே தெரியும்..
நீத்துவோட அம்மாவ கல்யாணம் பண்ணி நான் நீத்துக்கு அப்பாவா ஆகலாம் இல்லையா"...

மகாவோ வியந்தாலும் குழப்பமாக " அப்படி என்ன ரெடிமேட் குடும்பம் தான் வேணும்னு .... "

அவள் கூற்றில் லேசாக சிரித்தவன் " ஆமா பாரு.. கல்யாணம் பண்ணினதும் உடனே அப்பா போஸ்ட் கிடைச்சுறுதுல, இட்ஸ் ஈசி ஃபார் மீ ன்னா ".

அவன் பதிலில் அவனை முறைத்தவள், அவனின் ஆழ்ந்த பார்வையில் தடுமாறி
அவளின் பார்வையை அவனிடம் இருந்து பிரித்து வேறு பக்கம் திருப்பி கொண்டாள்.

" இப்ப பேசுறதுக்கு எல்லாம் நல்லா அழகா இருக்கும் மாமா, ஆனா சரி வராது ஏன்னா.. "
என கூறியவளை இடை மறித்தான் இளமதியன் .

" ஏன்னா நீ ஃபரஸ்ட் நீதுக்கு தான் அம்மா, மத்ததுயெல்லாம் அப்புறம் தான்.... அப்படி தான "

உறுதியோடு நிமிர்ந்தவள் "ஆமா, என் பொண்ணுக்கு அம்மாவா தான் நான் இருப்பேன்..
இப்ப மட்டுமில்ல எப்பவும்.. என்னால வேற எதுக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது.
உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..
அதுமாதிரி நீத்து'க்கு நான் அம்மா ஆகுறது ஈஸி, உங்களுக்கு என்ன வந்துச்சு,
சும்மா ரெடிமேட் வாழக்கைதான் வேணும் உளராம வேற பொண்ண கல்யாணம் பண்ணிகோங்க.. "

"ஏன் இல்ல உனக்கு அண்ணன்னா, எனக்கு மாரிஸ்வரன்.....,
எனக்கும் மாரிஸ் பொண்ணுக்கு அப்பா ஆகுறது ஈஸி தான் மகா "
என்ற தன் தமயனின் பெயரில் ஒரு நொடி நின்றாள்.

"நீ உன் அண்ணன் மகளுக்கு அம்மா ஆனா மாதிரி என் நண்பன் மகளுக்கு என்னால அப்பா ஆக முடியும்,
இரு இரு நான் முடிச்சுடறேன்..
உனக்கு முன்னாடி பேசின கல்யாணத்தை நதியாக்காக நீயே நிறுத்தினது,
தனியா நின்னு நதியாவ வளர்க்கறதுன்னு அப்பா உன்னை பத்தி சொல்லும் போது
உன் மேல மதிப்பும் மரியாதையும் வந்தது...
அதுலாம் இப்போ அப்பா நம்ம கல்யாணத்துக்கு கேட்டபோ எனக்கு சரினு சொல்ல வச்சது, என்கிட்ட மறுப்பு சொல்லவும் எந்த காரணமும் இல்ல"
என அவளை நோக்கி இரண்டு அடி முன்னே வந்தவன்..

"மகா, இப்போ நமக்குள்ள காதல் இருக்கா, இல்லையான்னு கேள்விக்கு நான் வரல,
பட் ஒரு விஷயம் மட்டும் உறுதி..
என் வாழ்க்கையில் என் மனைவிக்கு மட்டுமே என் முழு காதல் இருக்கும்..
அது நீயா இருந்தா சந்தோஷப்படுவேன்... "

இன்னும் அமைதியாக நின்றவளிடம் " ஏன் மகா இன்னும் என் மேல நம்பிக்கை இல்லையா,
நீத்து'க்கு நான் நல்ல அப்பாவா இருக்க மாட்டேன்னு நினைக்கிறியா "

தன் முன் குழப்பத்துடன் நின்றவளை கண்டு
"இங்க யாரும் உன்னை ஃபோர்ஸ் பண்ணல, நல்லா யோசிச்சு சொல்லு சரியா,
என் மேல நம்பிக்கை இருந்த மட்டும் சரினு உன் முடிவ சொல்லலாம்... இப்போ போ"

" உங்க மேல நம்பிக்கை இல்லாமலாம் இல்ல மாமா, எனக்கு என்ன சொல்லறதுனே தெரில "

அவள் பதில் உரைத்ததிலிலே அவள் இங்கு வந்த போது இருந்த மனநிலையில் இல்லை என உணர்ந்தவன்... அவளுடைய தற்போதிய தேவை யோசிக்க சிறிது கால அவகாசமே என நினைத்து
அதை அவளுக்கும் தெளிவு பெற செய்து செல்ல எத்தனித்தான்..
கிடைத்த அவகாசத்தில் யோசித்த மகாவின் மனதும் இளமதியனை
நதியாவிற்கு அப்பாவாக மாற சம்மதம் சொன்னது...

பெரியவர்களின் ஆசைப்படி இரு திருமணமும் ஒன்றாகவே நடந்து
மகாலட்சுமி தாட்சாயினி இருவரும் செல்வகணபதியின் வீட்டு மருமகளாக ஆகினர்.

இருதம்பதியனரும் அவர்களின் இல்லறவாழ்வு தொடக்கத்தை தள்ளிப்போட்டனர்,
முதல் தம்பதியினர் புரிந்து கொள்ளளோடு,
பின்னவர்கள் புரிந்து கொள்ள முயற்ச்சிக்காமல் சூழ்நிலையை காரணம் கொண்டு தள்ளி தனித்து நின்றனர்(நின்றாள்)..

பிறகு வந்த காலத்திலும் தன் வேலையின் ஒப்பந்த காலத்தை காரணம் காட்டி
சென்னையில் தங்கி விட்டாள் தாக்ஷி. அதில் திருப்தி இல்லாமல் இருந்த
இரு வீட்டு பாட்டிகளிடம் எதிர்ப்பு வந்த போது அவளுக்கு துணையாக நின்றவன் அமிழன்.
சென்னை பெங்களூரு இடையே தூர இடைவெளி பெரிதாக இல்லை என அவர்களை சமாளித்து
அவள் வேலைக்காக சென்னையில் நிற்க உறுதுணையாக இருந்தான் அவளின் உடையவன்.

ஆனால் தாக்ஷியோ சென்னையிலே நின்று விட்டாள்.
இவளும் பெங்களூரு சென்றாள் இல்லை,
அவனாக சென்னை வந்தவனிடமும் அதிக நேரம் செலவழிப்பதை
வேலைகளை தானே உருவாக்கி தவிர்த்தாள்.

முறைத்த ஜெய்மியிடமும் " ஐ நீட் டைம் ஜெய் " என முடித்து விட்டாள்.

ஜெய்மிக்கும் தோழியின் நிலை நன்கு புரிந்த்து.
நிர்மலான மனநிலையில் தாக்ஷி அமிழனின் மனைவியாய் ஆகினாலும்,
மனதளவில் தயாராகவில்லை..
இளமதியனிடம் தான் கொண்டது காதல் இல்லை என எளிதாக கடந்து வர முடிந்தவளுக்கு,
இதில் இருந்து தன்னை எளிதாக மீட்டு கொள்ள முடியவில்லை.
ஒரு வேலை சிறிது காலம் அவகாசம் கிடைத்திருந்தால் அவள் இதை விட்டு மீண்டு வந்திருப்பளோ ' டைம் ஹீல்ஸ் எவிரி திங் ' என நினைத்து கொண்ட ஜெய்மியும் தாக்ஷியை அவள் போக்கிலே விட்டாள்.

மேகனா விஷயத்தினால் இளமதியன் மேல் தாக்ஷி கொண்டிருந்த வருத்தமும்
அவனது திருமணத்தில் மறைந்து விட்டது. அதிலும் இளமதியன் அவர்கள் திருமணத்தை ஒட்டி நீத்து வை சட்டபூர்வமாக சுவீகரிகம் செய்து கொள்ளவும் அனைவரையும் போல் இவளின் மனதும் இருவரையும் வியந்து பாராட்டவே செய்தது.

முன்தம்பதிகளின் வாழ்க்கை ஒன்றாக கனடாவிலும், பின்னவர்களின் வாழ்க்கை சென்னை பெங்களூரில் தனித்தனியாக ஆரம்பமானதும்...

***************

எ பட்ஜெட் எபிசொட் ஆஃப் தாக்ஷி அமிழன் மேரேஜ் :love::love:

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்

கீர்த்தி:love:


http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 10 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.


அத்தியாயம் 10

மொத்தென்று தன்மேல் விழுந்த தலையணையால் எழுந்தவள்
அதை தன் மேல் போட்டவனை துரத்தி கொண்டு ஓடி திரும்ப அவனை மொத்திய பிறகே வேணும்மாவிடம் சென்றார்கள்
, மொத்திய தாக்ஷியும் மொத்து வாங்கிய பிரபுவும்.
ஜெய்மியின் திருமணத்திற்காக முன்னதாக அவள் மட்டும் புதுக்கோட்டைக்கு வந்திருந்தாள்.

" ஏம்மா, இன்னைக்கும் பால் பணியாரமா... பால் கொழுக்கட்டை பண்ணக்கூடாதா...
இதையே இவ வந்ததுலிருந்து மூணாவது தடவ பண்ணறீங்க...
இதுலாம் நல்லாயில்ல சொல்லிப்புட்டேன்.. " என்றான் பிரபு.

" ஏன்டா அக்காவோட போட்டிக்கு போற,
ரொம்ப நாள் கழிச்சு இப்பதான் அவளே வந்திருக்கா, பாவம் புள்ள "...

"யாரு இவ பாவமா.....
நீ பாவம்னு மாமாவை வேணும்னா சொல்லலாம்.
இவளுக்கு நல்லா சமைச்சு போட்டு சமைச்சு போட்டு அவர் தான் களைச்சு போயிருப்பாரு,
இவ நல்லா வெயிட் ஏறி தான் வந்திருக்கா"

"என்ன அமிழு தான் சமைப்பான" என அதிசியத்த அவர்களின் அப்பத்தா வெங்கடலட்சுமியின் அடுத்த கேள்வி தன்னை நோக்கி தான் வரும் என உணர்ந்த தாக்ஷி வேகமாக பிரபுவை துறத்துகிறேன் என்ற போர்வையில் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

"டேய் அமுலியா மாட்டியா விடுற,..
உனக்கு எப்படிடா தெரியும்" என அவனை கூர்ந்து பார்த்தாள்.

"ஆமா சொல்றாங்க பிபிசி'ல ஹெட் லைன்ஸா...
நீ ஏன் இவ்வளவு சீக்கிரமா வந்துருக்க, கல்யாணம் பண்ண போற ஜெய்மி அக்காகூட இன்னும் வரல..
உனக்கு என்ன அவசரம் , ஒழுங்கா மாமா கூடவே வந்திருக்கலாம்ல..."

அவன் வார்த்தையில் நின்றவள்
" நம்ம வீட்டுக்கு நான் மாமாவோட வந்தாதான் வரனுமாடா,
அப்போ இனி இது என்னோட வீடு இல்லையா பிரபு "
என சோர்ந்து அமர்ந்த தன் அக்காவை பார்த்தவனின் மனதும் சோர்ந்தது.
ஜெய்மிக்கு அடுத்து தாக்ஷியின் குழப்பத்தை அறிந்தவன் பிரபு மட்டுமே.

முதலில் அவளது திருமணத்திற்கான சம்மதமும் பின்னர் அவளின் மறுப்பும் மட்டுமே வீட்டினர் அறிந்தது,
அதற்கு பின்னே உள்ள காரணம் ஜெய்மியோடு பிரபு மட்டுமே அறிவான்.
அதேபோல் தாக்ஷியின் அமிழனோடு திருமணத்திற்கு ஜெய்மியோடு பிரபுவும் காரணம்.

தன் அக்கா அமிழன் மாமவிற்கு பதிலாக மதி மாமாவை தான் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்று தவறுதலாக புரிந்துள்ளாள் என விளக்கியவன் பிரபுவே.
அதன் பிறகும் திருமணதிற்கு மறுத்தவளை
வேணும்மா, பெரியப்பாவின் உடல்நிலை, அப்பத்தாவின் பேச்சு என திசை திருப்பி சம்மதிக்க வைத்தான்.
ஒரு பக்கம் ஜெய்மி என்றால், மறுபக்கம் பிரபு என்று அவளின் திருமணத்திற்கு தாக்ஷியை சம்மதம் சொல்ல வைத்தது.

இப்போதும் இன்னும் குழம்பி கொண்டிருப்பவளின் அருகே அமர்ந்தவன்
" நிச்சயமா இல்லக்கா, இது உன்னோட வீடு இப்ப மட்டுமில்ல எப்பவும்...
இது உனக்கே நல்லா தெரியும்... இத நான் சொல்லியா உனக்கு தெரியனும்....
இப்படி நீ கேக்குறதே அபத்தமா தெரிலயா ....
அண்ட் நீ தான் இப்படி யோசிச்சு சோர்ந்து போய் உட்காருற ஆளா,
நீ நீயாவேயில்லக்கா"

"நானும் என்னய தான் பிரபு தேடிட்டு இருக்கேன் " என தனக்குள் மூழ்கினாள்.

"ஸ்லோ.." என பிரபு கூறவும் என்னவென்று புரியாமல் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

"ஆமா... ரொம்ப ஸ்லோக்கா, இதுவே லேட்டு... இதுல பாத்து பதமா தேடுறாங்களாம்...
வெரசாக்க வெரசா... " என தாக்ஷியின் தோலை போட்டு ஆட்டினான் பிரபு.

அதில் புன்னகைத்து உணர்வு பெற்றவள்,

"இப்பலாம் நா அக்கா மாதிரி இல்ல.. நீ தான் அண்ணன் மாதிரி இருக்க " என்றாள் ஆழமாக..

அவளின் அருகே குனிந்து " இதுல அண்ணன் தம்பினு என்ன இருக்கு, யாராயிருந்தாலும் அவங்க பர்ஸட் ப்ரயாரிட்டி அவங்கங்க சிஸ்டர்ஸ்க்கு தான். எனக்கு மட்டுமில்ல நம்ம வீட்டுக்கே நீ தான் எப்பவும் ஸ்பெஷல்..
இப்படி உனக்குள்ளே சோர்ந்து உட்காராத....”


..........

“கைலயே வச்சிகிட்டு வெளில தேடிட்டு இருக்கக்கா நீ…..
நம்ம வீட்டு பொண்ணா தேடாம மாமாவோட தாக்ஷியா தேடு... "
என ஆழ்ந்து கூறி தன் தமக்கையை தோளோடு அணைத்து கொண்டான்.
பெண்ணவளும் தன் தம்பியிடம் தங்கையாக மாறி அவன் கைவளைகளின் தலை சாய்த்துக்கொண்டாள்.

"தேங்க்ஸ் டா... "

"இது எதுக்கு... "

"தெரில " என தோளை குலுக்கிக்கொண்டு திரும்ப அவன் தோள்வலைகளில் அமைதியாக சாய்ந்துகொண்டாள். அந்த அமைதி இருவர்க்கும் ஒரு நிறைவை கொடுத்தது.

இவர்களை தேடி மாடி ஏறி வந்த வெங்கடலட்சுமி
"ஏட்டிகளா கீழ அம்புட்டு கலவரம் பண்ணிட்டு இங்க வந்து கொஞ்சிகிட்டு இருக்குதுங்க,
இந்த சிறுசுகளுக்கு லொள்ள பாரு"

"என் அக்கா! என் தம்பி ! நாங்க அப்படித்தான் " என திரும்பவும் செல்லம் கொஞ்சி கொண்டனர்.

'ரெண்டையும் சமாதானம் பண்ணி சாப்பிட கூட்டிட்டு போகலாமான்னு பாத்த, இந்த சிறிசுகளுக்கு ரொம்ப தான் எகத்தாலாம்' என முகவாயில் கை வைத்து அதிசியத்த அவர்களின் அப்பத்தா வெங்கடலட்சுமி

"ஏட்டிகளா ஒழுங்கா கீழ வந்து கால பலகாரம் சாப்பிடுங்க,
நாங்க சமையல்கட்ட ஒழிச்சு மதியத்துக்கு ஆக்க வேணாம்,
உங்க அப்பாமாருங்க வெரசா போனாதான் நல்ல நண்டு கிடைக்கும்"

"என்ன நண்டா??? ஏ அப்பத்தா முந்தாநாள் தான நண்டு வச்சீங்க,
ஒழுங்கா இன்னைக்கு மட்டன் வாங்குங்க " என பிரபு வெகுண்டவும்

" டே மட்டன் எனக்கு பிடிக்காதுடா " என தாக்ஷி இந்த பக்கம் சிலிர்த்து கொண்டு வந்தாள்.

" எனக்கு நண்டு ஒத்துக்காது "

"பெரியப்பா உனக்கு மீனு வாங்கியாறேன்னு சொல்லிருக்காரு கண்ணு" என இடையிட்டு கூறிய வேங்கடலட்சுமியை கவனித்தார்கள் இல்லை..

" அது என்ன ஸீ புஃட் ஒத்துக்காதாம் ஆனா மீனு மட்டும் சாப்பிடுவாராம்,
மீன் மட்டும் நிலத்துல வாழுதோ " என தொடர்ந்து சண்டை போட்டு கொள்ள ஆரம்பித்தனர்.

பொறுத்து பார்த்த வெங்கடலட்சுமி " எப்படியோ போங்க, இனி என்னால மாடி ஏறி வரமுடியாது,
உங்க அம்மாளுக்கு கீழ வேலையிருக்கு ஒழுங்கா வந்து சாப்பிட்டுட்டு அப்புறம் அடிச்சுகோங்க "
என புலம்பி கொன்டே கீழே சென்றார்.

எதிர்ப்பட்ட தன் மகன்களிடமும் புலம்ப மறக்கவில்லை அவர்
"ஏன்டா இப்ப செத்த நேரம் முன்னாடி தான் நல்லா பாசமா கொஞ்சிகிட்டு இருந்துச்சுங்க ,
அட நம்ம புள்ளைகளா இது கண்ணு நிறைஞ்சு அதிசயமா பாத்துகிட்டு இருந்தேன்
அடுத்த நிமிஷமே திரும்ப அடிச்சுக்கிதுங்க " என அதிசியப்பட்டார்.

"நீங்க ஏன்ம்மா மாடி ஏறி ரெண்டு பேர் நடுல தலையை கொடுக்கீறீங்க,
அதுலாம் அடிச்சு பிடிச்சு சோர்ந்து போய் தானா சாப்பிட வருவாங்க..
இப்ப மாடி ஏறிட்டு அப்புறம் கால் வலிக்குது ஊசி போட கூட்டிட்டு போங்கடானு சொல்றது,
இதுக்கு மேல ஊசி போட போன டாக்டரே வெளிய போக சொல்லிடுவாரு"

"அட போட இவன் கிடைக்கான்..
ஆனா சிவசு, மூர்த்தி பிரபு கையில அவன் அக்கா தலைய சாஞ்சுகிட்டு பேசிட்டிருந்ததா பாக்கணுமே!,
கொள்ள அழகுடா! அந்த மாதிரி ஒரு போட்டா பிடிச்சு இங்க பெருசா மாட்டனும்.
அப்படியே ஊருக்கும் ஒன்னு கொண்டு போகனும்,
ஆண்டவா என் பிள்ளைகள இப்படியே ஒத்துமைய்யா சந்தோசமா வச்சுருப்பா "
என உடனடி ஒரு வேண்டுதலையும் வைத்தார்.

"ஏன்மா இதுக்கு போய் வெசனப்படுறீங்க, அதுலாம் ரெண்டும் சும்மா அடிச்சுக்குங்க
ஆனா ரெண்டும் ஒருத்தர ஒருத்தர் விட்டு கொடுக்காதுங்க"

"எனக்கும் அந்த நம்பிக்கை இருக்குப்பா.. உங்க ரெண்டு பேர் மாதிரி அதுங்களும் ஒத்துமையா இருக்கனும்.
நம்ம அமிழ்க்கே தாக்ஷிய கட்டி கொடுத்தது ஒரு நிம்மதினா,.
அடுத்து நம்ம பிரபு அவன் அக்காவ அண்ணன் மாதிரி பாத்துக்குவாங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு, அந்த சந்தோசம் போதும்.
இதுங்க ரெண்டும் அடிச்சுக்கிறத பாத்து முன்னாடிலாம் நான் ரொம்ப பயந்துருக்கேன்"

"ம்ஹிம் என் பிள்ளைங்க அதுலாம் உங்க பிள்ளைகள விட நல்லா ஒத்துமையா பாசமா தான் இருக்காங்க,
இனியும் இருப்பாங்க யாரும் கண்ணு வைக்காம இருந்தா சரி"
என அங்கிருந்து நொடித்து கொண்டு சென்றார் வேணுவிசாலாட்சி.

"இவ இப்ப என்னத்துக்கு சிலிர்த்துக்கிட்டு போற " என்ற தன் இளைய மகனிடம்,

"அத வேற ஒன்னும் இல்லடா என்னய விட அவ பிள்ளைகள நல்லா வளர்த்துருக்காலாம், அதான் என்னையவே கண்ணு வைக்காதீங்கன்னு ஏட்டிட்டு போற" என்றுவிட்டு வீட்டின் உள்நோக்கி " வேணும்னா உன் பிள்ளைகளா உட்கார வச்சு நல்லா சுத்தி போட்டுக்கோடி" என கூறினாலும் அங்கு இருந்த மூவர்க்கும் உள்ளே சென்ற வேணுவிசாலாட்சிக்கும் மகிழ்ச்சியே...

*************

அமிழ்திரவியனோ வீட்டிற்கு செல்லும் வழியை மறந்து போல இலக்கில்லாமல் மகிழுந்தை செலுத்தி கொண்டிருந்தான்.

அவன் ஆசையாக வாங்கி செதுக்கி இவ்வளவு நாள் அவன் மட்டுமே வசித்த வீடுதான்,
ஏன் திருமணம் முடிந்தும் சில மாதங்கள் தனியேதான் இருந்தான்.
இந்த இரண்டு மாதங்களாகதான் தாக்ஷியின் இருப்பிடமாகவும் மாறியது.
இவ்வளவு மாதங்கள் தனியாக இருக்க முடிந்தவனுக்கு அவள் சென்ற இந்த சில நாள்கள் இருக்க முடியவில்லை.

வீட்டின் அமைதியும் நிசப்தமும் அவனை பித்தனாக்கியது.
இருவரும் மனமுவந்து பேசி சிரித்து கணவன் மனைவியாக வாழவில்லை என்றாலும் அவனவளின் இருப்பே அவனுக்கும் அவன் வீட்டுக்கும் உயரிப்பை தந்தது.
அவள் இல்லாத வீடும் அவனும் வெறுமையாக உணர்ந்தனர்.

திருமண ஆரம்ப காலத்தில் தாக்ஷியின் பனியின் பொருட்டு அவர்களுள் வந்த இடைவெளி அதிகரித்தது.
அந்த இடைவெளி அவனை தன்னவளிடம் மனதால் நெருங்க முடியாமல் தடுத்தது.
அவளாகவும் அந்த இடைப்பட்ட நாள்களில் பெங்களூர் வரவில்லை,
அவளை காண சென்னை சென்றாலும் அவனோடு நேரம் ஒதுக்குவதை குறைத்தவளிடம் அவனால் நெருங்க முடியவில்லை. அதில் கடமை உணர்வை மட்டுமே அவனால் கண்டுகொள்ளமுடிந்தது.

அவனுக்கோ அவளின் ஒப்பந்த காலம் எப்போது முடியும்...
அது முடிந்ததும் அவள் எங்கே வேளையில் அமர்வாள்,
இல்லை தான் வேறு வேலை மாறிக்கொண்டு சென்னை போய்விடலாமா என யோசித்து ஒரு பக்கம் சென்னையில் தனக்கு ஏற்றார் போல் வேலையை அலச தொடங்கிருந்தான்.

இவ்வாறு தன்னுள் உழன்று கொண்டிருந்தவனை எழுப்பியது ஒரு விடியற்காலை அழைப்பு.
அவனின் மனைவி அவனிடம் வந்து சேர்ந்த நாள்.

அந்த அதிகாலை பொழுதில் உறங்கிக்கொண்டிருந்தவனை எழுப்பிய தாக்ஷியின் அலைபேசி அழைப்பு அவனுக்கு முதல் ஆச்சிரியம் என்றால், அலைபேசியில் அவள் அளித்த செய்த அடுத்த ஆச்சிரியம்.

"ஹலோ,.. மாமா இங்க KJP, பெங்களூரு கண்டாய்ன்மெண்ட், பெங்களூரு சென்ட்ரல்னு நிறைய பிளேஸ் சொல்றாங்க, எங்க இறங்குறது "

என்னவென்று புரியாமலும், அவளின் விடியற் காலை அழைப்பிலும் விழித்தவன்.

"டுக்.... தாக்ஷி என்ன சொல்ற, எதுக்கு அதுலாம்"

" மைசூர் எக்ஸ்பிரஸ்ல பெங்களூர் வந்துட்டு இருக்கேன் மாமா... எங்க இறங்கனும்"
என அவள் கூறியதும் தான் தாமதம் அவள் கொடுத்த செய்தியில் இன்பமாய் உணர்ந்து வேகமாக எழுந்து விட்டான்.

அவளின் இந்த திடீர் வருகை, அதுவும் அவளாகவே அவனிடம் வந்தது அவன் முற்றிலும் எதிர்பாக்காதது .

பதிலே வராததால் இந்த பக்கமிருந்து தாக்ஷி,

"ஹலோ ... மாமா ...."என கூறியதும் உணர்வு வந்தான்.

"கண்டாய்ன்மென்ட்ல இறங்கிடு தாக்ஷி " என பதில் உரைத்தவன் ரயில்பெட்டியின் வகுப்பு மற்றும் எண், அவள் இப்போது எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறாள் என அறிந்து கொண்டு இன்னும் இருபது நிமிடங்களில் வந்துவிடுவாள் என்பதால் விரைந்து சென்று அவள் இறங்கும் முன் அவள் வந்த ரயில் பெட்டியின் முன் நின்றான் தன்னவளை வரவேற்க மனம் முழுதும் பேரானந்தத்தோடு.

************

மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்த மகிழுந்தில் அமைதியே நிலவியது, வரும் போது அடித்து பிடித்து விரைந்து வந்தவன் திரும்பும் போது மெதுவாக மிக மெதுவாக பொறுமையாக சென்றான் அவளுடனான பயணத்தின் இனிமையை ரசித்துகொண்டு.


தன் அருகே இருந்தவளை திரும்பி பார்த்தவன் எதுவும் கேட்டானில்லை, அவனை பொருத்த மட்டில் அவளாகவே அவனை தேடி வந்ததில் உவகை கொண்டான்.

எதுவாக இருந்தாலும் அவளிடம் இருந்தே வரட்டும் என்றிருந்தான்.

காரில் நிலவிய அமைதியை உடைத்தது தக்ஷியின் குரல்,

" நான் பேப்பர் போட்டுட்டேன் "

" பாண்ட் இருந்தது "

"முடிஞ்சுடுச்சு "

"ஆனா ஏன்... " என இழுத்தவன்.. அமைதியாக இருந்தான்.

" எப்படியும் பெங்களூர்ல பிளேஸ்மெண்ட் இருக்காது... அதான்.."

"ஆனா அதுக்காக கிடைச்ச வேலைய விடுறதா……" என்று அமிழன் கூறவும்
தாக்ஷி அவனை திரும்பி பார்த்துவிட்டு அமைதியாக ஜன்னல் பக்கம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

இங்கு இவனின் மனசாட்சியோ
'இப்ப அவ வேலைக்கு போகலங்கிறது தான் உன் பிரச்சினையா டா,
இவ்வளவு நாள் பிரிஞ்சு இருக்கோம் புலம்புன.. இப்ப அவளா வந்தவளையும் திரும்ப அனுப்பிடாத..
வாய மூடிட்டு இரு ' என இடித்து உரைக்கவும் அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை..

வெளியே வண்டியில் ஒழித்த இசையின் இனிமையை விட தன்னுள் பரவிய இனிமையை ரசித்து உணர்ந்து கொண்டிருந்தான்.

வீடும், அவனும் தாக்ஷியை மிகுந்த ஆரவாரத்துடன் உள் அழைத்து கொண்டனர்..

பின் வந்த நாள்களில் என்ன தான் அவனிடம் சகஜமாக பேசினாலும் அவளுக்குள் ஒரு வட்டம் போட்டு கொண்டு அதன்னுள்ளே இருந்தாள். அதனை நன்றாக உணர்ந்தவனும் அவ்வட்டத்தை தாண்டி அவளிடம் நெருங்க முயலவில்லை..
அவளின் அருகமையே அவனுக்கும் அவன் வீட்டுக்கும் போதுமானதாக இருந்தது..

இதோ இன்றோ அவளில்லாமல் வீட்டிற்கு செல்ல பிடிக்காமல் மனம் போன போக்கில் டிரைவ் செய்து கொண்டிருந்த அமிழனை தன் உணர்விலிருந்து மீள செய்தது அலைபேசி அழைப்பு..

" சொல்லு மதி "

" எவ்வளவு நேரம்டா கால் பண்ணுறது, ஃபர்ஸ்ட் வீடியோ கால் வா நீ " என அலைபேசியை அனைத்து விட்டு வீடியோ காலில் வந்தான் இளமதியன்.

" ம்ம் சொல்லு "

" என்னத்த சொல்றது, இப்போ எங்கடா இருக்க "

"ம்ம்ம் நடு ரோட்டில இருக்கேன்" என கடுப்பாக அமிழன் பதில் அளிக்கவும், அது எதனால் என்று தன் இளையவனை அறிந்த தமயனோ சிரித்தான்.

" ஹா ஹா... ஏன்டா தாக்ஷி ஊருக்கு போன இந்த நாலு நாளைக்கா இந்த அழம்பல் பண்ணிட்டு இருக்க "
என மேலும் சிரித்து தன் இளையவனின் கடுப்பை அதிகரித்தான் இளமதியன்.

"ஹோ அப்படிங்களா சார், அம்மாவும் அப்பதாவும் அண்ணிக்கு பெர்க்னன்சி சிக்னஸ் அதிகமா இருக்குன்னு தெரிஞ்சதுல இருந்து அண்ணிய இங்க கூட்டிட்டு வர பறந்துட்டு இருக்காங்க
நான் தான் ரெண்டு பேரையும் அமுக்கி ஆஃப் பண்ணி வச்சிருக்கேன்..
இருடா நாளைக்கே அப்பத்தாக்கு டிக்கெட் போட்டு ஃபிளைட் ஏத்தி விடுறேன்..
அப்பத்தா ஒரு ஆளே போதும் தனியாவே வந்து அண்ணிய நெய்யூலிக்கு கூட்டிட்டு வந்திடும்..
எப்படி வசதி, நாளைக்கு டிக்கெட் போற்றவா "

" அடேய் அடேய் நா என்னடா பண்ணுனேன் உனக்கு..
இந்த யோசனையை அப்படியே கிடப்பில் போடு"

"இல்லடா, அப்பதாக்கு டிக்கெட் போட்டதான் நீ சரி வருவ'

"அடேய், போதும்… யோசனையயோட நிறுதிக்க, அத இம்ப்ளிமெண்ட் பண்ற ஐடியாலாம் வச்சுக்காத...
சரி விடு, வீட்டுக்கு தான் போகாம சுத்திட்டு திரியுற சாப்பிட வாச்சும் செய்ஞ்சியா "

"பச் ... இல்ல டா "

"இப்பவே பத்து மணி மேல இருக்குமேடா,
அதான் நீயும் இன்னும் ரெண்டு நாள்ல ஊருக்கு கிளம்ப போறேல... ஜஸ்ட் டு டேஸ் தான"

"பசிக்கல விடேன்"

"அது என்ன பசிக்கல… பிடிக்கலனு..,
ஆனாலும் நீ இருக்கியே டா... எல்லாத்துக்கும் பிடிவாதம் அவசரம் உனக்கு....
நான் கனடா ரீடர்ன் ஆகுறதுக்கு நாலு மாசம் இருந்ததா ஒரு மாசமா என்னை கேன்சல் பண்ணி குறைக்க வச்சு, என்னமோ நான் திரும்பி இந்தியா வர நாலு அஞ்சு வருஷம் ஆகும்கிற மாதிரியும் அதுனால நான் உன் கல்யாணத்தை பாத்துட்டு தான் போவேணு அடம் பிடிச்ச மாதிரி என்னை எல்லார்கிட்டையும் சொல்ல வச்சு என்கூடவே மேரேஜ் பண்ணிகிட்டா அவசர குடுக்க தானடா நீ. அப்பவே அப்படி இப்ப சொல்லவா வேணும்"

"டேய் கடுப்பை கிளப்பாம போன வச்சிட்டு வேலைய பார்த்து பிள்ளை குட்டிகள படிக்க வைக்கிற வழிய பாரு"

"ஆமாம்ல எனக்கு தான் இப்போ ரெஸ்பான்சிபிலிட்டி டபுள் ஆகிடுச்சே, உனக்கு என்ன பிள்ளையா குட்டியா... நீ ரோட்டை காவல் காத்துட்டு இருக்காம சீக்கிரம் வீட்டுக்கு போய் சேருற வழிய பாரு " என போனை வைத்தான்.

தன் தமயனிடம் பேசி வைத்ததும் தான் எங்குயிருக்கிறோம் என சுற்றும் முற்றும் பார்த்து,
தான் பெங்களூர் விட்டு தொலைவில் வந்து விட்டதை உணர்ந்தான் அமிழன்.
"ஷீட்.." என வண்டியை நிறுத்தியவன், சீட்டில் தலைக்கு கை கொடுத்து கண் மூடி சாய்ந்து விட்டான்..

சில நிமிடங்கள் மௌனத்தை எடுத்து கொண்டவன் எழுந்து பெரு மூச்சுவிட்டு ஒரு முடிவுடன் வண்டியை இயக்கி கிளம்பினான்...


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்

கீர்த்தி:love:


http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 11 பதிந்து விட்டேன் நட்டுபுஸ்,

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.


அத்தியாயம் 11


காய்ப்பு முடிந்து தேங்காயைகளை பறிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. அத்தோடு இளநீரையும் சேர்த்து பறித்து தந்தைமார்கள் கொடுக்க பருகி கொண்டிருந்தாள் தாக்ஷி.
அவளுக்கோ இளநீர் மற்றும் அதனில் உள்ள தேங்காய் என்றால் அலாதி பிரியம், அதற்காகவே அவளது காலை தூக்கத்தை தியாகம் செய்து தயாராகி வந்திருந்தாள்.

இளநீர் சீவி கொடுத்துக்கொண்டிருந்த இருவரின் திடீர் முக மாற்றத்தில் வியந்தவள், .
கூடவே "வாங்க.. வாங்க மாப்பிளை " என இருவரும் அழைக்கவும் யாரென திரும்பி பார்த்து ஆச்சிரியமாகி குடித்து கொண்டிருந்த இளநீர் பொறை ஏற அதை அடக்கி முழுங்கினாள்.

அவர்களுக்கு தலையசைத்து பதில் அளித்தவனோ, தாக்ஷியின் மேல் நங்கூரமென பதிந்த அவனின் பார்வையை விலக்காமலே அவர்களின் அருகே வந்தான் அமிழன்.

ஒன்றும் சொல்லாமல் வரவேற்கவுமில்லாமல் நின்றவளை,
"என்ன தாக்ஷிம்மா வாங்கனு சொல்லாம அப்படியே நிக்குற.. முதல்ல மாப்பிள்ளைட்ட இருந்து பையை வாங்கு.."
என தந்தையாக அவர் கடிந்து கொள்ளவும் அதில் உணர்வு பெற்றவள் என்ன செய்கிறோம் என் புரியாமல் குடித்து கொண்டிருந்த இளநீரை அவன் கையில் திணித்து விட்டு அவனிடம் இருந்த மடிக்கணினி பையை வாங்கி கொண்டாள்.

இப்போது கடிந்து கொள்வது அவளின் சிறிய தந்தையின் முறை ஆகிற்று..
"தாக்ஷிம்மா இப்படி தான் வரவேற்க்கறதா..
ரா பூரா முழிச்சு வண்டி ஓட்டி வந்திருக்காங்க.., நீ வா அமிழா"
என அவனை அருகே அழைத்து இளநீரை சீவி அவனுக்கு கொடுத்து கொண்டிருந்தனர்.

அவனின் இந்த திடீர் வருகையில் முதலில் விழித்து கொண்டிருந்தவள் அதன் பிறகு அங்கு நடந்தவற்றில் சிறிது சிறிதாக காண்டு ஆனாள்.

"தம்பி இந்தாங்க ரொம்ப இலசான தேங்காய் நல்லாயிருக்கும் பிடிங்க " என ஊட்டாத குறையாக நீட்டிய தந்தையை முறைத்தவள், அதன் தாக்கத்தோடு அமிழனை பார்த்தாள்,
அவளை மறந்து அவர்களின் வீட்டு மாப்பிள்ளையை கவனிக்க ஆரம்பித்ததில் கோபம் கொண்ட தாக்ஷி.

நேற்று முதல் சாப்பிடாமல் களைப்பில் வந்த அமிழனும் அவர்கள் விருந்தோம்பலில் நனைந்து கொண்டிருந்தவன் தன்னவளை திரும்பி பார்த்து விழித்தான்.
' என்னடா இது, இப்ப ஏன் இப்படி பாசமா பார்த்து வைக்குறா ' என தனக்குள் ஜெர்க் ஆனான்.

இங்கு தாக்ஷியும் அறியவில்லை இவ்வளவு நாள் வரை அவனிடம் தனியியல்பான மனநிலையில் வெளிக்கொண்டு இல்லாமல் இறுகி இருந்து வந்தவள், அதனை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி கொண்டிருந்தாள் என்பதினை.

தாக்ஷியின் தந்தைகளின் அலப்பறையை தொடர்ந்து வேணும்மா அப்பத்தாவின் அலப்பறைகள் தொடர்ந்தது. இதில் அவளின் அப்பத்தா வார்த்தைக்கு வார்த்தை அவளை வேலை ஏவி கொண்டிருந்தார்.
ஏற்கனவே தன் முதல் முன்னிருமை ( first priority ) பறிபோனதில் வருத்தம் கொண்டவள் இதில் மேலும் கடுமைகள் கொண்டாள்.

"பாட்டி.... பருப்பு பாயசம் சூப்பரோ சூப்பர், நான் இப்படி சாப்பிட்டதே இல்ல.. செம டேஸ்ட் "

"என்ன கண்ணு நீ இதை போய் பெருசா சொல்லிக்கிட்டு...
உனக்கு எப்ப வேணுனாலும் கேளு நான் பண்ணித்தாறேன்"

"அப்பதாவும் பண்ணுவாங்க ஆனா பருப்பு இந்த அளவுக்கு மெருவா இருக்காது..
வாயில் வச்சதுமே கரையுது.. வாவ்.."

"அவ கிடக்கா, அவ கல்யாணம் ஆனா புதுசுல கறி குழம்புக்கு புளிய கரைச்சு ஊத்தி எங்க சின்னம்மா கிட்ட இடி வாங்குனவ தான..
நா உனக்கு நாளைக்கு இதுலயே கருப்பட்டி போட்டு பண்ணித்தறேன் கண்ணு "

"என்னது நாளைக்குமா……." என ஒரு சேர கூவி அதிரிந்தார்கள் , தள்ளி உட்கார்ந்து இவர்களின் அலப்பறையை முறைத்து பார்த்து கொண்டிருந்த அக்கா தம்பி இருவரும்.

ஏனென்றால் இன்றைய காலை மட்டுமில்லாமல் இப்போது மதிய சமையல் மெனுவும் இருவருக்கும் அல்லாமல் அமிழனுக்கு ஏற்றார்படி அமைந்து நடந்து கொண்டிருந்தது.
அதில் அவர்கள் இருவருக்கும் அறவே பிடிக்காத பருப்பு பாயசம் வேறு, அது இன்று மட்டுமில்லாமல் நாளைக்கும் தொடரும் என்பதில் வெகுண்டார்கள் அவர்களின் அப்பத்தா மீதும் அதை ரசித்து உண்டு கொண்டிருந்த அவர்கள் மாமா மீதும்.
ஆனால் அவர்களை கவனிப்பார்கள் தான் யாரும் இல்லை.

இப்போதும் தன் அப்பதாவின் உந்துதலால் கையில் கிண்ணத்தோடு அறைவாசலில் நின்று கொண்டிருந்தவளை கண்ணாடி வழியாக தன் தலையை சரி செய்தபடியே ரசித்து கொண்டிருந்தான் அவளின் கோபம் எதனால் என்று இங்கு வந்த சில நேரங்களிலே உணர்ந்து கொண்ட அமிழன்.

திரும்பாமல் இன்னும் கண்ணாடி முன் நிற்கும் அமிழனிடம்,
"ம்ம்க்கும்.... பாலாஜி கடை ஜாங்கிரி சூடா போட்டாங்கலாம்.. அப்பா உங்களுக்காக வாங்கிட்டு வந்துருக்காங்க, இந்தாங்க.."
என அவனை நேர் கொண்டு பார்க்காமல் வேறு பக்கம் பார்த்து கொண்டு சொன்னவளை எப்போதும் போல் ரசித்தான்.

"மேடம் காலையில இருந்து கோவமா இருக்கீங்க போல…."

"இல்ல... இல்லையே... அப்படிலாம் ஒன்னும் இல்ல" என வேகமாக ஆரம்பித்தவள் தன்னையே கைகட்டி பார்த்து கொண்டிருந்தவனின் பார்வையில் தன்னுள் வார்த்தைகளை விழுங்கினாள் .

" இல்லையா.... " என அவளை நோக்கி நெருங்கி வந்தான்.

"ஆ.. மா.. " என்றவள் அவன் தன்னருகே நெருங்கி வரவும் தன்னிச்சையாக இரண்டு அடி பின்னே நகர்ந்து கதவோடு ஓட்டி நின்றாள்.

ஓரு கையால் அவளின் தோளை உரசிகொண்டு கதவில் மூட்டு கொடுத்தவன், மற்றொரு கையால் அவள் கையில் உள்ள ஜாங்கிரியை சிறிது எடுத்து அவளுக்கு கொடுக்கும் பொருட்டு அவள் இதழ்கள் அருகே கொண்டு சென்றான்.

அவனை இவ்வளவு நெருக்கத்தில் கண்டதில் படபடப்புடன் நின்றவள் அவன் கொடுத்ததை தன்னிச்சையாக இதழ் விரித்து தனக்குள் சேர்த்து கொண்டாள்.

அவள் சாப்பிட்ட மிச்சத்தை தன்னில் சேர்த்து கொண்டவன்,
அவளின் காதருகே குனிந்து " இந்த ஸ்பெஸல் கவனிப்பு எல்லாம் அமிழனுக்கு இல்ல டுக்கு...
இது எல்லாமே தாக்ஷியோட அமிழனுக்கானது " என மென் வார்த்தைகளாக அவளிடம் சேர்த்து விட்டு நகர்ந்து சென்றான்.

அவன் விலகவுமே சீராக மூச்சு விட்டவள் செல்லும் அவனயே யோசனையோடு பார்த்து கொண்டிருந்தாள். இதுவரை அவன் அருகாமையில் மூச்சு முட்டுவது போல் இருந்தவளுக்கு அவன் விலகி செல்லவும் எதையோ இழந்தது போல், அது என்னவென்றும் புரியாமல் செல்லும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

மாடிப்படி அருகே சென்றவன் திரும்பி பார்த்து தன்னையே பார்த்து கொண்டிருந்தவளை என்னவென்று தலை உயர்த்தி வினவவும் ஒன்றுமில்லை என்பதாக இவள் தலையசைத்து தேங்கி நின்றாள்.

அவளை தன்னுள் உள்வாங்கியவன் " தாக்ஷி பர்சேஸ் இருக்கு, கடைக்கு போகனும் நீயும் வரியா "
என்ற கேள்வி வந்த நொடி வேகமாக தலையாட்டி சம்மதம் தெரிவித்தாள்.

முகம் பிரகாசித்து வேகமாக வருகிறேன் என்பதாய் தலையசைத்தவளை இனம் கண்டு மகிழ்ந்தவன்
" ரெடியாகிட்டு வா, கீழ நானும் பிரபுவும் வெய்ட் பண்ணுறோம்"
என கீழே சென்று அவளுக்காக காத்து கொண்டிருந்தான்.

************

கடையை வேடிக்கை பார்த்து கொண்டே வந்தவள்,
"என்ன மாமா வாங்கனும்…."

"ஃபார்மல்ஸ் கேசுவல்ஸ் ரெண்டுமே வாங்கனும் தாக்ஷி..”

அவன் பதிலில் சற்றே யோசித்தவள் அப்போதே ஒரு விஷயத்தை உணர்ந்து கொண்டாள்
அமிழன் மடிக்கணினி பையை தவிர வேற எதுவும் கொண்டுவரவில்லை என்பதனை.

"மாமா.. நீங்க ட்ரெஸ் எதுவும் எடுத்துட்டு வரலையா…!! "

' எவ்வளவு சீக்கிரம் கண்டு பிடிச்சருக்கா ' என நினைத்து கொண்டவன் இல்லை என்பதாக தலை அசைத்து
" எனக்காக ட்ரெஸ் செலக்ட் பண்ணுறியா… " என வினவினான்.

"நானா.. " என சிலநொடிகள் யோசித்தவள் சரியென்று அவன் உடைகள் இருக்கும் பகுதிக்குள் சென்று தேர்வு செய்ய தொடங்கினாள்.

தனக்காக உடைகள் தேர்வு செய்துகொண்டிருந்தவளை தள்ளி நின்று ரசித்து
கொண்டிருந்தவனிடம் வந்த பிரபு,
" ஏன் மாம்ஸ் அக்கா போற ஸ்பீட் பாத்து ஷாக் ஆகாம, ரசிச்சிட்டு இருக்க??..."
என்றவனுக்கு ஒரு பார்வையை கொடுத்து விட்டு திரும்ப தன்னவளை கைகளை கட்டிக்கொண்டு ரசிக்க ஆரம்பித்து விட்டான் அமிழன்.

"இப்ப தான் நீங்க ட்ரெஸ் லக்கேஜ் இல்லாம வந்ததே கண்டுபிடிச்சுருக்குறா....
இப்பக்கூட ட்ரெஸ் எடுக்காம ஏன் சீக்கிரம் வந்தீங்கன்னு டாபிக் குள்ள போகவே இல்ல..
என் அக்கா எப்ப அதை மெதுவா தேடி.. எப்ப கண்டுபிடிச்சு, எப்ப புரிஞ்சுகறது...
எனக்கு என்னமோ நான் தாய்மாமா’வா ஆகுறதுக்கு முன்னாடி அப்பா ஆகிடுவேனு நினைக்கிறேன்..
என்ன மாம்ஸ் சரி தான நான் சொல்றது..."

"என்னடா நக்கலா... வீட்டுக்கு ஒரு விவேகானந்தர் உருவாக்க சொல்லிருக்காங்க..
நம்ம வீட்டுக்கு உன்னதான் ஆக்கலாம்னு முடிவு பண்ணிருகோம்..
சோ இந்த கவலை உனக்கு தேவையே இல்லாததுடா அமுலியா ... "

"ஏது.. ஏது.. யோவ் மாமா…. நீ என் அக்காவோட செட்டில் ஆகுறதுக்கு காரணமே நான்தான்,
இப்ப என்னைய சிங்கிள் ஆக்க பிளான் பண்ணறீங்களோ…
என் அக்காவ கரெக்ட் பண்ண என்கிட்டயே கேட்டதுலாம் மறந்து போச்சா மாம்ஸ் உனக்கு ... "

"அடச்சே என்னடா பேசுற... கரெக்ட் அது இதுனு... ஷி ஸ் மை வைஃப் "...

"என் அக்கா உங்க வைஃப் ஆகுறதுக்கே நான் தான் காரணம்... அது எப்பவும் ஞாபகம் இருக்கட்டும் மாம்ஸ்…"

அதற்குள் தாக்ஷி இவர்களை பார்த்து அழைத்து, அருகே வந்த அமிழனின் கையில் தேர்வு செய்த உடைகளை திணித்து ட்ரையல் பார்த்து வரும்படி சொன்னாள்.

"நோ நீட் தாக்ஷி.. உனக்கு ஓகே'ன்னா எடுத்துடலாம் "

' பாற்ரா... ரொம்பத்தான் ஓவர் சீன்னு ' என தனுக்குள் அவனுக்கு ஒரு கொட்டு வைத்தவள்,
மீதமுள்ள ஷர்ட்'டை பிரபு கையில் திணித்து
"ஓவர் பொங்கல நிறுத்த சொல்லிட்டு ட்ரையல் பாத்துட்டு வர சொல்லு உன் மாம்ஸ "

" இல்ல தாக்ஷி.. உனக்கு பிடிச்துருந்தா " என ஆரம்பித்த அமிழனிடம்

" ட்ரையல் பாத்தா தான் எனக்கு ஓகே’வா இல்லையான்னு நான் சொல்ல முடியும் "
என முடித்த தாக்ஷியை மறுக்க முடியாமல் சென்றான்.

முதல்கட்ட ட்ரையல் பார்த்து வந்தவனிடம் மேலும் சில ஆடைகளை திணித்து அவற்றையும் மாற்றி மாற்றி போட்டு பார்க்க வைத்தே திருப்தி ஆனாள்.

சோர்ந்து போய் வந்தவனிடம் அடுத்து கேஸூவல்ஸ் கொடுக்கவும் பயந்து விட்டான்
" ஹையோ தாக்ஷி இங்க இருக்கிறப்ப போடுறதுக்கு தான்..
இதுக்கு ட்ரையல் எல்லாம் வேண்டாமே சும்மா ஒரு மூணு நாலு செட் எடுத்துக்கலாம் "
என்றவனை தாக்ஷி மறுக்கவும் ஏதாவது உதிவகள் கிடைக்குமா என பிரபுவை பரிதாபமாக பார்த்தான் அமிழன்.

பிரபுவோ வாகாக வேறு பக்கம் திரும்பி கொண்டு சிரிப்பை அடக்கி கொண்டிருந்தான்.
' பெட்டரமாஸ் லைட்'டே தான் வேணும்னு அடம் பிடிச்சில... அனுபவி மாம்ஸ் அனுபவி....'
என அவனுக்குள் நினைத்து அடக்கிக் கொண்டான்.

ஒருவழியாக பல ஆடைகளை அமிழனை போட்டு பார்க்க வைத்து திருப்தி ஆனவள் பில் பண்ணசொல்லவும் அவளின் அருகே வந்த அமிழன்,
"தாக்ஷி.... எல்லாம் ஓகே.. இந்த ரெட் கலர் ஷர்ட் எடுக்கணுமா "
என அவனை பார்த்து வெளிர் வெளிரென என சிரித்து கொண்டிருந்த சிவப்பு சட்டையை சுட்டி காட்டி கேட்டான்.

"கண்டிப்பா மாமா, ஜெய் மேரேஜ்க்கு போடனும்ல " என பெரிய குண்டாக தூக்கி போட்டாள்.

அந்த அதிர்வில் விழித்தவனிடம் " ஏன் மாமா இதை போட மாட்டீங்களா.. அப்போ இந்த ஷர்ட் வேணாமா " என முகத்தை சுருக்கி கேட்கவும்... அவனவளிடம் விழுந்த அமிழன் தேர்வு செய்ததை பில் போட கொடுத்து விட்டு,

"உனக்கும் வாங்கிக்கோ தாக்ஷி… "

"எனக்கா... இப்ப எதுக்கு மாமா, வேணாம்... " என யோசித்து மறுத்தவளை அவளின் ஆடைகள் இருக்கும் பகுதிக்கு அழைத்து சென்று தேர்வு செய்ய வைத்தான்.

தனக்காக இரண்டு ஆடைகளை தேர்வு செய்தவள் அதை எடுத்து கொண்டு வந்து அவனிடம் காண்பித்தாள்.

தனது அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியில் கவனம் கொண்டிருந்த அமிழனோ தாக்ஷியின் கையில் உள்ள உடைகளை பார்த்து " இந்த மஸ்டர்டு யெல்லோ ஓகே தாக்ஷி, இதை பில் பண்ணிடுங்க"
என கடை ஊழியரிடம் கொடுத்த பிறகே அவளை நிமிர்ந்து பார்த்தான்.

தன் கையில் மீதமுள்ள ஆடையை பார்த்தவள் அவனை முகம் சுருக்கி முறைத்துவிட்டு அந்த ஆடையை கீழே வைத்து விட்டாள்.

அமிழனுக்கு அப்போதே அவன் செய்த மடத்தனம் புரிந்தது...
ரெண்டில் ஒன்றை தேர்வு செய்யும்படி தன்னிடம் வரவில்லை, அவள் தேர்வு செய்த இரண்டு ஆடைகளோடு வந்தாள் எனபதை தாமதமாக புரிந்து
' இன்னைக்கு சோதப்புறடா அமிழா ' என நொந்தவன் அவள் கீழே வைத்த ஆடையை கையில் எடுத்து கொண்டான்.

அவனின் செய்கையை பார்த்தவள் " இவர் மட்டும் கடையை புரட்டி போட்டு வங்குவாராம்,
நான் எஸ்ட்ரா ஒன்னு வாங்க கூடாதாம்" என முனுமுனுத்துக் கொண்டு பில் கவுண்டர் அருகே சென்று நின்று கொண்டாள்.

உரிமை பாராட்டாமல் தான் தான் இத்தனை நாள் தனித்து நின்றோம் என்பதை அந்நேரம் வசதியாக மறந்துவிட்டாள். அவனிடம் இயல்பாக வெளிப்படையாக இருக்க தொடங்கினாள் பழைய தாக்ஷியாக.

************

அமிழன் வந்திருப்பதை அறிந்த ஜெய்மியின் பெற்றோர் அவர்கள் சார்பாகவும் அவனை திருமணத்திற்கு அழைத்து அவனை பார்த்து விட்டு சென்றிருந்தனர் .

ஜெய்மியின் திருமணத்திற்கான முதல் நாள், ஜெய்மியின் வீடு...

தாக்ஷி, அமிழன் இவர்கள் இருவரும் ஜெய்மியின் வீட்டில் உள்நுழையவும் இளவயது பட்டாளம் தாக்ஷியை உள்வாங்கி கொண்டது, அமிழன் தான் தனித்து விடப்பட்டான் .

வெளியே அமர்ந்திருந்த அமிழனுக்கு சில நிமிடங்கள் மேல் இருக்க முடியவில்லை..
ஜெய்மியின் தந்தையும் இல்லாததால் அங்கு இருந்த உறவினர்களோடு ஓர் அளவுக்கு மேல் என்ன உரையாடுவது என நெளிந்தான்..
இதில் தாக்ஷி ஜெய்மியின் உறவினர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனதால் அவளின் கணவனை காணும் பொருட்டு ஒருவர் பின் ஒருவராக அவனை வந்து பார்த்து விட்டு செல்லவும் அவஸ்த்தையாக உணர்ந்தான்.

அதனை கண்டுகொண்ட ஜெய்மியின் அன்னை உள்ளே சென்று தாக்ஷியை அழைத்து ஒரு கோப்பையில் தண்ணீர் எடுத்து வந்து அமிழனிடம் கொடுக்குமாறு பணிக்கவும்,

" ம்மா.. இப்ப தான ஜூஸ் குடிச்சாங்க.. அதுக்குள்ள தண்ணி குடிக்க மாட்டாங்கம்மா "
என திரும்ப உள்ளே செல்ல முயன்ற தாக்ஷியை இழுத்து பிடித்து
" இதை மாப்பிளைகிட்ட கொடு " என அவள் கையில் தண்ணீர் தட்டை வைத்தவர் அவன் அவஸ்த்தையாக அமர்ந்திருப்பதை சுட்டி காட்டினார்.

அங்கு ஜெய்மியின் உறவினர் ஒருவரிடம் அமிழன் மாட்டிக்கொண்டு விழிப்பதை கண்டு தன்னுள் வந்த சிரிப்பினை அடக்கி கொண்டு அவனின் அருகே சென்று தண்ணீர் குவலையை ஏந்திய தட்டை நீட்டினாள்.

நிமிர்ந்து தாக்ஷியை பார்த்தவன் ஒரு விடுப்பட்ட உணர்வோடு அவள் கையில் இருந்த குவலையை எடுத்து கொண்டு வெளியே செல்லவும் இவளும் பின்னோடு சென்றாள்.

இதுவரை தன் இதழ்களுக்குள் சிரிப்பை அடக்கி கொண்டிருந்தவள் இதழ் விரித்து சத்தமாக சிரிக்கவும், தன்னை கண்டு கொண்டே அவள் நகைப்பதை உணர்ந்த அமிழன் முறைத்தான்.

அவன் முறைப்பை கண்டு மேலும் நகைத்தாலும்,
" ஓகே பஸ் பஸ்.. சிரிக்கல போதுமா.... “ என நிறுத்தியவள்
“ நீங்க வீட்டுக்கு போங்க மாமா... "

"ஹே தாக்ஷி... அப்ப நான் போகட்டா…"

ஆம் என்பதாக தலையசைத்து
" ஈவினிங் பிரபுவோட மஹாலுக்கு வந்துடுங்க .."

" நீ... " என அவன் இழுக்கவும்,

" நான் ஜெய் கூட இருக்கனும்ல அவ கூட இங்கயிருந்து வந்திருவேன்.."

" அப்போ ஓகே " என அவள் கையில் குவலையை திணித்து விட்டு விடை பெற்று செல்ல முயன்றவனை நிறுத்தியவள் ,
" மாமா.. ஈவினிங் அந்த ரெட் கலர் ஷர்ட் போட்டுட்டு வந்துடுங்க…"

" அதையா .... தாக்ஷி அப்போ ஜெய்மி வீட்ல எடுத்து கொடுத்த கிரீம் கலர் ஷிர்ட்.. "
அவனுக்கோ அந்த சிகப்பு சட்டையை விட்டு தப்பிக்க முடியாத என்ற அவா.
ஆனால் அவனின் பதிலில் முகம் சுருக்கி அவனை பரத்தவளிடம் அவனால் மறுக்க முடியவில்லை.

" ஓகே .. டன்.. அதையே போடுறேன்... இப்ப ஓகே வா "
என அவன் கூறியது மகிழ்ந்த அவனவளின் முகத்தை பார்த்து புன்னகையோடு அவளிடம் தலையசைத்து விடை பெற்றான்.

அவன் தலையசைத்தலோடு அவள் அகமும் அசைந்தது.
தன் அகம் பார்த்து நடப்பவனை கொண்டு சினுங்கிய அவள் இதயம், மெல்ல மெல்ல
அவளை அறியாமல் அவனை தன்னுள் வாங்கியவள் கண்ணங்களில் செம்மையையும் வாங்கி கொண்டாள்.

........................

டிஸ்கி - அங்க அங்க எழுதி வச்சதா ஒண்ணா சேத்து பாக்கும்போதுதான் தெரிஞ்சது,
( மீ டு மீ : அடியே இதைதான் ஒரு வாரமா ஒட்டிக்கிட்டு இருந்திய நீ )' என்ற மொமெண்ட்.


லாக்டவுன் தளர்க்கப்பட்டதால் நெஸ்ட் ஏபி வித் ஜெய்மி - எய்டன் மேரேஜ்....

.........................


கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி 😍


http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 12 பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் ,

அத்தியாயம் 12


அமைதியான மாலை நேரம் அழகாக அலங்கரிக்க பட்ட மண்டபத்தில்
வரவேற்பு( reception ) என்றோ, சங்கீதத் என்றோ, ப்ரீ வெட்டிங் என்றோ, கெட் டூ கேதேர் என்றோ, பிரெண்ட்ஸ் பார்ட்டி என்றோ என எல்லா வகையிலும் சேர்த்தியான கொண்டாட்டம் அங்கு நிகழ்ந்து கொண்டிருந்தது.


விழாவின் நாயகன் நாயகியான எய்டன் ஜோஷுவா மற்றும் ஜெய்மி ப்ரஸில்லா'வுக்காக அனைவரும் காத்து கொண்டிருக்க அமிழனோ அவனின் தாக்ஷிக்காக...

இங்கு கூட்டத்தில் இருந்த பிரபுவோ ஜெய்மியின் தங்கையுடன்,

"ஹே ப்ரின்ஸி.. இப்ப நான் சொன்னத செய்வீயா மாட்டியா... "

"டே அமுலியா படுத்தாதட "

"ஹே ஒழுங்கா அண்ணனு கூப்பிடு... கல்யாணம் முடிஞ்சு உன் பிரெண்ட்ஸ் கிளம்புற வர அமுலியா வந்துச்சு அவ்வளவு தான்..
உன் சின்ன வயசு ரகளை எல்லாம் போட்டு கொடுத்துடுவேன் "

"சரிடா அண்ணா ...
இப்ப என்ன பண்ணனும்ங்கிற "

"நீ பெருசா ஒன்னும் பண்ண வேணாம் ....
இதோ உன் பிரெண்ட்ஸ் வராங்க பாரு, அவங்ககிட்ட இன்ட்ரோ கொடு "

அவனை முறைத்து விட்டே அருகில் வந்த தன்னுடன் மருத்துவம் படிக்கும் தோழிகளிடம் வேண்டாம் வெறுப்பாக அறிமுகபடித்தினாள்..

"ஹாய் கேர்ள்ஸ் மீட் மை அண்ணா பிரபு.. ஆனா அவன் பெரு அமுலியானு மட்டும் நான் சொல்லமாட்டேன்ப்பா " என அவள் எண்ட் கார்ட் போடவும்,

"ப்ரின்ஸி ..... " என பல்லை கடித்தவன், வெளியே இவர்களை பார்த்து சிரித்து வைத்தான்.

அவன் மட்டும் இல்லாமல் அவர்களும் சிரித்து விட்டு செல்லவும் நொந்தான்..
ப்ரின்ஸி தோழிகளின் ஒருத்தி மட்டும் தேங்கி நின்று " உங்க பேர் சூப்பரா இருக்கு'" என சொல்லி அவனுக்கு “ஹாய்” சொல்லி சென்றவளை பார்த்து சிரித்து வியந்து கொண்டிருந்தவனை தலையை தட்டி அமிழன் இழுத்து சென்றான்.

"மாமா எனக்கு என்னவோ உன் தங்கச்சி டாக்டரா தான் இருப்பானு நினைக்கிறேன், நீங்க என்ன நினைக்கிறீங்க "

"நாம நினைக்கிறத விட அங்க நிக்குற அப்பத்தா என்ன நினைக்கிறாங்கனு தெரிஞ்சா நல்லா இருக்கும்.. போய் கேப்போமா.."

"கல் நெஞ்சுகாரா... இப்படி ஒரேடியா பழச மறந்திட்ட பாத்தியா ..."

"உனக்கு இன்னும் காலம் இருக்கு அமுலியா பேபி... " என சிரித்து கொண்டே வாசலை பார்த்தவனின் பார்வை அங்கேயே நின்றன மணமக்களோடு நுழைந்த அவனவளை கண்டு..

நீள லாங் கவுனில் தலைமுடியை க்ரல் செய்து படரவிட்டு விசேஷ நாளுக்கென கொஞ்சம் அதிகப்படியான அலங்காரத்தில் அழகாக அவன் முன் வந்தவளை விட்டு வேறு எங்கும் அவனின் கண்கள் நகர மறுத்தன.

இங்கே பெண்ணவளும் உள்ளே நுழைந்த நொடி முதல் அவனை தேடிய அவளின் கண்களுக்கு சிரமம் கொடுக்காமல் அவள் முன்னையே நின்றவனின் பார்வையின் வீச்சை உணர்ந்து கொண்டே இருந்தாள்.

இன்றைய நிகழ்ச்சிக்காக தயாராகி கண்ணாடி முன் நின்றவளை இடித்து கொண்டு முன் வந்த ஜெய்மி
"தள்ளுடி... இன்னைக்கு என் கல்யாணமா இல்ல உன் கல்யாணமானு தெரில.. கிளம்புறா கிளம்புறா கிளம்பிக்கிட்டே இருக்கா.. இப்ப கண்ணாடி முன்னவும் போய் நிக்க ஆரம்பிச்சுட்டா "

"சும்மா இரு ஜெய்... "

"என்ன சும்மா இருக்க, மேடம் கன்னத்த பாரு இன்னைக்கு ஃபுல்லா ரெட்டிஷ்தான் "

"அப்படிலாம் ஒன்னும் இல்ல " என வேகமாக தன் கைகளை கொண்டு தன் கன்னங்களை தாக்ஷி தேய்க்கவும், ஜெய்மி முதற்கொண்டு மற்றவர்களும் சிரிக்கவும் தன்னை உணர்ந்து முறைத்த தாக்ஷி,

"ஜெய்.. உனக்கு விளையாட நான் தான் கிடைச்சேனா... "

" ஹலோ மேடம் யாரு விளையாடுறது " என அவளை கை பிடித்த கண்ணாடி முன் தன் அருகே நிறுத்திய ஜெய்மி

"இங்க பாரு புதுசா என் பிரிண்ட் வெக்கம்லா படுறா, எப்பவும் சீக்கிரம் கிளம்புறவ இன்னைக்கு என்னமோ பாத்து பாத்து கிளம்பி கண்ணாடி முன் நின்னு அடிக்கடி சரி பாத்துகிறா..."

........

"அங்க பாரு உன்னை.. இன்னைக்கு செம ப்ரீட்டி யூ ஆர் ,யாருக்காக பாத்து பாத்து ரெடி ஆகினியோ அவங்க பிளாட் தான் போ"...

" ஹே ஒன்னும் அப்படிலாம் யாருக்காகவும் இல்ல... " என வெளியே கூறினாலும் 'நான் மாமாக்காக தான் பண்ணிருக்கேனா ' என தன்னுள் முதல் கேள்வி எழுப்பியவள் அதற்கு விடை கண்டுபிடிக்கும்முன் இவை தன்னவனுக்கு பிடிக்குமா என அடுத்த கேள்வி கொண்டாள்.

அவளின் இரண்டாவது கேள்விக்கு அவளவனின் பார்வையே மொத்தமாக பதில் தந்தது.
அவளையே அவளை மட்டுமே தொடர்ந்து அவன் கண்கள் சொன்ன பதிலை உணர்ந்த அவளின் அகமும் முகமும் ஒரு சேர உவகை கொண்டது.

ஊடுருவிய அவனின் பார்வையினால் தானாக அவளின் கால்கள் அவனை நோக்கி சென்றன...

இவ்வளவு நாள் அவனை கண்ணோடு சேர்த்து பார்க்காமல் இருந்து வந்தவள் அவன் கண்ணோடு கலந்த நொடி முதல் அவனை விட்டு அகல முடியாமல் அவனை உள்வாங்க தொடங்கினாள்.

அவனின் அருகே வந்து என்னவென்று தலை உயர்த்தி கேட்டவளிடம் ஒன்றுமில்லை என்பதாக தலையசைத்தான் அமிழன் அவளின் மேல் கொண்ட பார்வையை சிறிது கூட விலக்காமள்....

அதில் உவகை கொண்டவள் " அப்போ நான் ஜெய் கிட்ட போகட்ட " என கேட்டவளுக்கு சரியென தலையசைப்பே வந்தது அவனிடம்.

அவள் விலக போகும் நேரம் அவளின் கை பிடித்து நிறுத்தியவன்..,
"டுக்கு.... செல்ஃபி எடுத்துக்கலாமா, நம்மளோட ஃப்ரஸ்ட் செல்ஃபி வித் சேம் கலர் ட்ரெஸ்ல... "
என அவளை தோளோடு சேர்த்து அனைத்து இவரும் ஒன்றாக தற்படம் எடுத்துக்கொண்டனர்.. உடையின் நிறத்தில் மட்டுமில்லாமல் மனதோடும் ஒன்றாக முற்பட்டடு..

அவளுக்குள் லயித்தவனை மீட்க செய்தது பிரபுவின் குரல்,
" மாம்ஸ் உங்க ஃபோன வச்சுட்டு இங்க பாருங்க " என அங்கே வந்த பிரபு அவர்கள் இருவரையும் மாறி மாறி நிற்க வைத்து அவன் திருப்தி பட்ட புகைப்படம் எடுத்து தள்ளிய பிறகே நிறுத்தினான்.
அவன் நிறுத்தவும் தாக்ஷி அவனிடம் தலையசைத்து விட்டு ஜெய்மியிடம் சென்றுவிட்டாள்.

விழாவில் நடைபெற்ற ஒவ்வொரு சின்ன சின்ன விளையாட்டிலும் ( couple gameshow) அவள் அவனிடம் தோர்த்து தொலைந்து போக ஆரம்பித்தாள்.

மொழியில்லை மொழியாய்

உன் பேர் சொல்லாமல்
விழியில்லை விழியாய்
உன் முகம் பார்க்காமல்

உயிரினில் உனையே
நான் புதைத்தே நின்றேன்
புரிந்திடும் முன்னே
உனை பிரிந்தேன் அன்பே

தினமும் கனவில்
உனை தொலைவில் காண்கிறேன்
அதனால் இரவை
நான் நீள கேட்கிறேன்

எழுத்து பிழையால்
என் கவிதை ஆனதே
எனக்கே எதிரி

என் இதயம் ஆனதே

குதூகலமாக ஆரம்பித்த குரூப் அந்தக்ஷனியில் அமிழன் அவளை நோக்கி கண்ணோடு கண்வைத்து அவளுக்காக பாடிய பாடலில் தன்னுள் அவனை காண ஆரம்பித்தாள்.

---------------------------

விழா முடிந்து கிளம்பிய வீட்டாரிடம் விடை கொடுக்கும் பொருட்டு வந்த தாக்ஷியை யோசனையோடு பார்த்தவனை கண்டுகொண்டாளோ என்னவோ,

"மாமா.... நான் இங்கயே ஜெய் கூட ஸ்டே பண்ணனும்... "

அதில் அப்பட்டமாக தன் கண்களில் ஏமாற்றத்தை பிரதிபலித்தான், அதை உணர்ந்து அவனிடம் போய் சேரும் முன் இடையிட்டு மறுத்தது வேங்கடலட்சுமியின் குரல்.

இப்போது பாட்டியை சமாதான படுத்தவென கண்களால் அவள் அவனிடமே இறைஞ்சவும்
நொடியில் தன்னை மீட்டு கொண்டவன், அவனே அவரை சமாதானப்படுத்தி அனைவரையும் கூட்டி செல்லும் பொறுப்பை கையில் எடுத்து கொண்டான்.

அவளிடமும் செல்வதாக விடை பெற்றவனிடம் "மாமா நாளைக்கு க்ரீம் கலர் ஷர்ட் " என கூறியவளை கண்டு சிரிப்புடன் தலையசைத்து சென்றான் அமிழன்..

********************

திருச்சபைக்கு நன்றி...

"எய்டன் ஜோஷுவா ஆகிய நீ ஜெய்மி ப்ரிஸில்லா'வை திருமணம் செய்துகொள்ள சம்மதமா.."

"சம்மதம் "

"ஜெய்மி ப்ரிஸில்லா ஆகிய நீ எய்டன் ஜோஷுவா'வை திருமணம் செய்துகொள்ள சம்மதமா.."

"சம்மதம் "

பால்ய காலம் தொட்டு இன்றளவும் தன் இரட்டையை ( twin) போன்று விளங்கிய அவளது ஜெய்மியின் திருமணத்தில் அவளோடு தாக்ஷியும் மனநிறைவு கொண்டாள்.

திருமண நிகழிச்சிகள் ஒவ்வொன்றிலும் தன்னை லயித்து ரசித்தவள் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அமிழனை பார்த்தவளுக்கு அவளது திருமண நிகழ்ச்சி மண கண்முன் வந்தன.

அன்று அகம் நிறைந்து மகிழவோடு தான் இருந்தோமா என்று யோசித்த அவளுக்கு கிடைத்த பதிலில் கலங்கி குற்றஉணர்வில் லேசாக தடுமாறியவளை கண்டுகொண்டானோ என்னவோ அவளின் அருகில் வந்து அவள் கைகளோடு கைகள் சேர்த்து அழுத்தம் கொடுத்து விரல்கள் கோர்த்து கொண்டான்.

அதில் உணர்வு பெற்று அவள் முகம் நோக்கியவளுக்கு கண்சிமிட்டு தலையசைத்து புன்னகைத்து, அதை அவளுக்கும் கடத்தினான்.

திருமணம் முடிந்ததும் கிடைத்த சிறு இடைவெளியில் அவளை அழைத்து கொண்டு வெளியே சென்ற அமிழன், தேவாலயத்தில் செயற்கையாக உருவாக்கிய பசுமை ஊற்றில் வீற்றிருந்த மேரி மாத சிலை அருகே வந்தான்.

என்னவென்று கேள்வியாக பார்த்தவளிடம்

"ஒரு சின்ன கிஃப்ட் டுக்கு... "
என அவன் கையில் வைத்திருந்த அழகான சின்ன பெட்டியை திறந்துகொண்டே...,

"என்னோட ஃபரஸ்ட் மன்த் சாலரில உனக்காக வாங்கின ரிங், என்கிட்டயே ரொம்ப நாள இருக்கு… உன்னோடத இனி நீயே வச்சுக்கிறியா.."

'ரிங்க்கா... ஜெய் மேரேஜ் பாத்து ரிங் ஷேர் பண்ணிக்க மாமாக்கு ஐடியா வந்திடுச்சா, ஹையோ இப்போ என்கிட்ட மாமாக்கு கொடுக்க ரிங் இல்லையே' என ஓடிய அவளின் மனவோட்டத்தை நிறுத்தவென இடையிட்டது அவனது குரல்..
அவளுக்கான வாங்கிய மோதிரம் இப்போது செயினில் கோர்க்கப்பட்டு இருந்தது, அதை கையில் எடுத்தவன்,

" டுக்கு... மே ஐ... " என செயினை அவளிடம் சேர்க்க அனுமதி வேண்டியவனுக்கு சரியென இவள் விழிகள் பதில் அளிக்க நெடுநாள் கொண்டு அவளுக்காக காத்து கொண்டிருந்த அவளது பரிசு அவளிடம் அமிழனால் சேர்க்கப்பட்டு அழுத்தமாக பொருந்தி கொண்டது.

பெண்ணவளும் அவனின் வாக்கியத்தை முழுமையாக உள்வாங்காமல் அவர்கள் திருமணம் தொட்டே வந்த நேசம் அவனது என நினைத்துக்கொண்டாள்.

**********

"ஜெய்... அது.. நான் ரிசெப்ஷன்க்கு மாமாவோட வராட்டுமா .."

ஜெய்மி திருமண தினத்தன்று மாலையே எய்டன் ஊரான திருச்சியில் நடைபெறவுள்ள வரவேற்ப்புக்கு கிளம்ப ஆயுத்தமானவளிடம் தயக்கம் கொண்டு கேட்ட தன் தோழியை கைகட்டிக்கொண்டு பார்த்த ஜெய்மி

"சோ மேடம் என்னோட இப்போ வர மாட்டீங்க"

"இல்ல ஜெய்... அது.. வந்து " என தயக்கம் கொண்டவளை பார்த்து புன்னகைத்து அனைத்து கொண்டவள்..

"ஐயாம் ஹாப்பி ஃபார் யூ டி ... இந்த மாதிரி உன்னை பாக்குறதுக்கு, கன்னம்லாம் சிவந்து செம அழகு போ.. இது தான் நான் உன்கிட்ட எதிர் பாத்தேன்...
ஹ்ம்ம் மாம்ஸ விட்டு பிரிஞ்சு வர முடியலேல..."

" ஹே.. அப்படிலாம் ஒன்னும் இல்லை ஜெய்... " என தன்னை மறைக்க முற்பட்டவளிடம்

"பாரா... ஹு இஸ் ப்ளஷிங் நௌ.."

"ஜெய்.... "

சிரித்து கொண்டு தன் தோழியை அனைத்து விலகியவள்,

"மாம்ஸ பாத்துகிட்டே இருந்து என்னை மறந்திடாமா சீக்கிரம் ரிசெப்ஷன்க்கு வந்து சேருங்க மேடம்.. "
என்றவளிடம் விடை பெற்று பிரபு அருகே நின்று கொண்டிருந்த அமிழனிடம் வந்தவள் அவனை பார்க்காமல் பிரபுவிடம்,

"போகலாமா.."

"எங்க போகலாமா.. , உனக்கு பாய் சொல்ல தான் நாங்க வெய்ட் பணறோம் "

"நம்ம வீட்டுக்கு தான்.. "

"நீ ஜெய் அக்காகூட திருச்சி போறதான.."

"இல்ல, ஈவினிங் உங்களோடதான் போகணும்.."

"நிஜமா... இது நீ தான் பேசுறதா ..... , இரு இரு கிள்ளி பாத்துகிறேன்" என அவளை கிள்ள வந்த தன் தம்பியை அடக்கியவள்,

"உனக்கு கிள்ளி பாக்கணும்னா, உன்னை கிள்ளி பாத்துக்கோ.. எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வாங்க நான் வெளில வெய்ட் பன்றேன் " என அவ்வளவு நேரம் அவளயே கண்களை அகற்றாமல் கன்னம் வைத்து கொண்டிருந்தவனின் பக்கம் அவளது பார்வையை திருப்பாமல் பிரபுவிடம் கூறி விட்டு சென்றாள் தாக்ஷி...



கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்

கீர்த்தி😍


http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 13 பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் ,

அத்தியாயம் 13

பெங்களூரில் அமிழன் தாக்ஷி....

பால்கனியில் நின்ற அமிழனிடம் தண்ணீரை வெதுவெதுப்பாக்கி கொண்டு வந்து கொடுத்தவள் அவன் கழுத்தை இடவலப்புரமாக தளர்வாக்கி கொள்வதை பார்த்ததும்,

"அப்பா சொன்ன மாதிரி டிரைவர் அண்ணாவ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல மாமா... தனியா இவ்வளவு தூரம் ட்ரைவ் பண்ணி ஏன் கஷ்டப்பட்டுகிட்டு..."

திரும்பி அவளை கூர்ந்து பார்த்தவன் "எனக்கு உன்னோட நான் மட்டுமே ஸ்பெண்ட் பண்ணுற லாங் ட்ராவல் வேணும் டுக்கு... "
அவன் கூறியதன் முதல் வார்த்தையை விடுத்து " மாமா.. நீங்க என்ன புதுசா இப்படி கூப்பிடுறீங்க.."

"எப்படி.. "

"அதான் டுக்கு'னு.. நீங்க இப்படி கூப்பிடுறது சின்ன வயசுல என்னை டக் டக்கு'னு ( dhakshi to duck )..... கூப்புடுவீங்கள அது மாதிரி இருக்கு "

அவளின் கூற்றில் வாய் விட்டு சிரித்தவன் " அதுலாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க... "

" ஆமா.. ஆமா.. மறக்கிற மாதிரி தான் நீங்க கிண்டல் பண்ணி வச்சுருக்கீங்க பாருங்க... எப்ப பாத்தாலும் டக் டக்'னு வம்பு இழுத்துட்டு இருப்பீங்க" அவள் கூற்றில் மேலும் சிரித்தவன்
பேசி கொண்டே அவளின் அருகே வந்து,

" ஏன் தாக்ஷி நான் உன்னை அப்படி கூப்பிட்டு கிண்டல் பண்ணுறத நிறுத்தி ரொம்ப வருசமாச்சே.. உனக்கு தெரிலயா... "

அவளின் அருகே கண்ணோடு கண் கலந்து மென்மையாக கேட்டவன் முன் நிலை தடுமாறி நின்றவளை , அவனவளின் கண்களின் வழியாக அவனை கண்டுகொண்டானோ....
அவளின் கன்னங்களை கைகளில் ஏந்தி விழி விரித்து அவனை பார்த்து படபடத்த இமைகளில் இதழ் ஒற்றி அடுத்தாக இதழ் நோக்கி குனிந்தவனின் செய்கையில் இதுவரை சுயம் இழந்து நின்றவள் கடைசி நொடியில் சுயம் பெற்று அவன் மார்பில் கை வைத்து தள்ளி நிறுத்தினாள்.

அவளின் நடுக்கமும் கண்களில் தெரிவித்த மறுப்பும் அவனை நிற்க வைத்து. மேற்கொண்டு கிடைத்த இடைவெளியில் அவள் உள்ளே சென்று விட்டாள்.

இந்நாள் வரை தனிமையை எளிதாக கடந்து வந்தவனுக்கு அவளின் கண்களில் அவனுக்கான நேசத்தை கண்ட பிறகும் விலகி நிற்க முடியவில்லை, விலகி நிற்பவளையும் கடந்து வர முடியவில்லை.

பின்னர் வந்த நாள்களில் தனிமையை இம்முறை அவன் கையில் எடுத்து கொண்டான்.

இதுவரை ஒரே அறையை உபயோகப்படுத்தியவர்களின் வழக்கம் மாறியது அவன் முகப்பில் உள்ள நீளவிருக்கையில் தஞ்சம் புகுந்ததால்.

இரண்டு நாள்கள் மேலாக நீடித்த அவனின் இறுக்கமான ஒதுக்கத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் இன்றும் நீளவிருக்கையில் அமர்ந்து தொலைக்காட்சியில் லயித்தவனிடம் சென்றாள்.

" இப்ப என்னாச்சு மாமா ஏன் இங்க சோஃப'லயே தூங்குறீங்க.. கம்ஃபர்டபிளா இருக்காதுல "

அவளின் பக்கம் பார்வையை திருப்பாமல் தொலைக்காட்சியிலே லயித்தவன் " ஒன்னும் பிரச்சனை இல்ல.. எனக்கு இங்க கம்ஃபர்டபிளா தான் இருக்கு.. நீ தூங்கு போ... "

" இவ்வளவு நாள் இல்லாம இப்ப மட்டும் என்னாச்சாம்.."

" நீ பேசாம போய் தூங்கு தாக்ஷி.. "

" மாமா.... "

என திரும்பவும் ஆரம்பித்தவளை இடைமறித்தான்,

" தாக்ஷி.... என்னால முன்ன மாதிரி கை கால வச்சுக்கிட்டு சும்மா இருக்க முடியாது.... அது உனக்கு ஓகே'ன்னா சொல்லு உள்ள வந்து படுத்துக்கிறேன் .... "

அவன் கூறியதை உணர்ந்து விழி விரித்து நின்றவளை கண்டு

" என்ன தாக்ஷி.. உள்ள வந்து படுத்துக்கட்டுமா... "

அதில் உணர்வு கொண்டு வேகமாக அவள் செல்வதை பார்த்தவன் தனக்குள் புன்னைகைத்து
' நீ சின்ன வயசுல இருந்த அதே டக்கு தான்'டி'
நினைத்து கொண்டாலும் வெளியே காட்டி கொள்ளாமல் இறுக்கி கொண்டான்.

தொடர்ந்த அவனின் ஒதுக்கத்தை கண்டு தடுமாறியவளுக்கு அவளுள் எழுந்த ஒதுக்கம் குழப்பம் எல்லாம் பின்னுக்கு சென்றன.

' அப்படினா இப்போ என் மனசு ஃபுல்லா இருக்குறது மாமா தான'
'ஏன் பிடிக்காமயா கல்யாணம் பண்ணிகிட்ட'
'இல்ல இல்ல அப்படிலாம் சொல்ல முடியாது... ஆனா.....'
'என்ன ஆனா.. அந்த ஆனா'வ ஃபுல் ஸ்டாப் போட்டு நிறுத்து.. இன்னும் எத்தனை நாளைக்கு இதையே சொல்லிட்டு இருப்ப.. ஐ க்நோ யூ லைகிங் ஹிம்.. ஆமா தான'
' ஆமா .. .. ஆமா... '
' அப்புறம் என்ன.. அந்த ஆனா'க்கு டாட் போட்டு ஃபுல் ஸ்டாப் வச்சிட்டு....ஜஸ்ட் ஷோ இட் '

என அவளுக்குளே சுய அலசளில் விழுந்தவளுக்கு இறுதியாக கிடைத்த விடையின் நிறைவில் அமிழனை காணவும் அவனிடம் தெரிவிக்கவும் அப்போதிருந்தே அவனுக்காக காத்திருக்க தொடங்கினாள்.

அலமாரியில் உடைகளை அளந்து கொண்டு வந்தவளின் கைகள் ஒரு சேலையில் நின்றன.
அவளது செயலை நிறுத்திய அந்த ஆடை அவளிடம் வந்து சேர்ந்த நாளை நோக்கி அவளின் சிந்தனைகள் பின்னோக்கி சென்றன.

மேகனாவின் திருமணம் முடிந்த சமயம் இவளுக்கு அலைபேசியில் அழைத்த பிரபு ஒரு ஆடையுலகம் பெயர் சொல்லி அங்கு வரசொல்லவும் ஜெய்மியிடன் சென்றிருந்தாள் தாக்ஷி.

வந்தவள் கடையில் பிரபுவை கண்டு,

" டே ...நீ எப்போ சென்னை வந்த... சொல்லாம கொள்ளாம வந்ததும் இல்லாம என்னையும் அவசரமா இங்க வர சொல்லிருக்க.. "
என இடையிட முயன்ற பிரபுவை பேச கூட விடாமல் பேசியவள் நிறுத்தினாள் அங்கு வந்து நின்ற அமிழனை கண்டு..

கிடைத்த இடைவெளியை பிடித்து கொண்ட பிரபு " மாமா வாங்கிருக்கிற புது பிளாட்'க்கு அடுத்த வாரம் கிரஹபிரவேசம் இருக்கு, அதுக்கு எல்லாருக்கும் சாரீ எடுக்கணும்.. நீ செலக்ட் பண்ணி கொடுப்பேணு தான் உன்னை கூப்பிட்டோம்..."

" நானா... "

" வேணு அத்தைக்கும் எடுக்கணும் தாக்ஷி.. அத்தைக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு தான நல்லா தெரியும் " என அமிழன் இடையிடவும்

சரி என்பதாக தலை அசைத்தவள் ஜெய்மியுடன் சேர்ந்து வேணும்மாவிற்கு மட்டுமில்லாமல் இரு வீட்டு பாட்டி, அமிழனின் அன்னை மற்றும் அமிழனின் அத்தை என அனைவருக்கும் தேர்வு செய்து முடித்து தேர்ந்தெடுத்த அனைத்தையும் சரி பார்த்து நிமிர்ந்தவளிடம்

" உனக்கும் ஒரு சாரீ செலக்ட் பண்ணிடு தாக்ஷி" என கூறி அவர்கள் அருகே வந்தவனிடம் முதலில் வேண்டாம் என மறுத்தவள் அவனின் அமைதியான பார்வையில் அவளுக்காகவும் தேர்வு செய்ய ஆரம்பித்தாள்.

அமிழனின் வீட்டில் இருந்து வேணுவிசாலாட்சிக்கு ஒவ்வொரு பண்டிகை திருவிழாவிற்கு பிறந்த வீட்டு சீராக செய்யும் போது பிரபுவோடு தாக்ஷிக்கும் செய்வது வழமையாதலால் அவளும் முதலில் மறுத்தாலும் பின் அவளுக்கெனவும் தேர்வு செய்ய தொடங்கினாள்.

அவள் தேர்வு செய்த ஆடைகளை மறுத்து வந்தவன், பின்னர் அவனே அவளோடு சேர்ந்து அவளுக்காக தேர்வு செய்ய தொடங்கினான். ஒவ்வொன்றாக தாக்ஷி அவள் மீது வைத்து பார்ப்பதும் அமிழன் மறுப்பதுமாக இருந்தன.

இறுதியாக அவன் தேர்வு செய்த பச்சை வண்ண லாவெண்டர் சேலையை அவள் மீது வைத்து கண்ணாடி முன் நின்று பார்த்தவளை வைத்த கண் விடாமல் பார்த்த அமிழனை கவனிக்க வேண்டியவள் கவனிக்காமல் விட்டாலும் ஜெய்மி கண்டுகொண்டாள்.

அந்நிமிடம் வரை ஜெய்மிக்கும் அமிழனே அவன் தோழிக்கு பார்க்க பட்ட மணவாளன் என தெரியாது... அவளுக்கு மட்டுமில்லாமல் தாக்ஷிக்கும் அதே நிலை தான்.

'என்னடா நடக்குது இங்க ' என குழம்பிய ஜெய்மி அருகில் இருந்த பிரபு மூலம் தெளிவுற்றாள் .

ஜெய்மி பிரபுவின் மூலம் அமிழனின் நேசத்தையும், பிரபு ஜெய்மியின் மூலம் தாக்ஷியின் தவறுதலான குழப்பத்தையும் அறிந்து கொண்ட இருவரும் சுற்றி இருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு உணர்வுகளை வெளிக்காட்டாமல் அமைதியாகினர்.

இவர்கள் தங்களுக்குள் அமைதியாகவும் தாக்ஷி அமிழன் தேர்வு செய்த ஆடையோடு வரவும் சரியாக இருந்தது.

இரு வீட்டு உறவினர் மட்டும் கலந்து கொண்ட கிரஹபிரவேசத்தில் தாக்ஷியால் கலந்து கொள்ள முடியவில்லை அதனால் அன்று வாங்கப்பட்ட சேலையும் இன்று வரை பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சற்று நேரம் சேலையை கையில் எடுத்து வருடியவள் சிந்தனை பெற்று அதனை எடுத்து அணிந்து தயாராகி அமிழனின் வரவுக்காக காத்திருக்கலாகினாள்... இந்த சேலையே அவனுக்கு தன் மனதினை சொல்லிவிடாதா என மணம் முழுமையும் பேராவளோடு.

அமிழனோ வந்ததிலிருந்து எப்போதும் போல் இறுக்கமாகவே இருந்தான். தேவைக்கு அதிகமாக வார்த்தைகளை விடாது மட்டுமில்லாமலும் அவளை நிமிர்ந்து கூட பார்க்காமல் இருந்தவனை கண்டு சிறிது சிறிதாக கோபம் கொண்டாள் பெண்ணவள்.

இரவு உணவு முடிந்ததும் வழக்கம் போல் நீளவிருக்கையில் குடி போகி அமேசான் நெட் ஃப்ளிக்ஸ்'ல் திகில், மர்மம், அமானுஷ்யம் என மாற்றிக்கொண்டே வந்தவன் ஒரு அமானுஷ்யம் படத்தில் தேங்கி அதை தீவிரமாக பார்க்க தொடங்கவும் அவனிடம் வந்தவள் தொலைக்காட்சி தொலைநிலையை ( tv remote ) பறித்து தொலைக்காட்சி அமர்த்தினாள்.

அமிழனோ வேகமாக எழுந்து வந்து அவளிடமிருந்து தொலைக்காட்சி தொலைநிலையை வாங்கியவன் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து கொண்டே

" விளையடாத தாக்ஷி, சவுண்ட் டிஸ்டர்ப்'பா இருந்துச்சுனா ரூம் லாக் பண்ணி தூங்கு... சத்தம் கேக்காது "
என இன்னும் அவளை கவனிக்காமல் தொலைக்காட்சியை விட்டு பார்வையை விலக்காமல் நின்று கொண்டே சேனல் மாத்தி கொண்டிருந்தவனை கண்டு கோபம் கொண்டு
தொலைக்காட்சியை மறைத்தவாறு அவன் முன் சென்று நின்றாள்.

திடிரென தன் முன் வந்து நின்றவளை கண்டு அதிர்ந்தவனின் கவனம் பிறகே அவள் ஆடையில் மீது பதிந்தது.
ஒரு நொடி புருவம் சுருக்கி பிறகு இனம் கண்டு கொண்டான்.

அன்று அவளுக்கென முதல் முதலாக வாங்கிய பச்சை வண்ண லாவெண்டர் சேலையில் அழகாக தன் முன் நின்றவளை பார்த்து இன்புற்று கண்களை விரித்தவனின் கண்கள் மேலும் விரிந்தன அவன் கன்னங்களை நோக்கி வந்த அவளின் இதழ்களை கண்டு.

அவளின் செய்கை புரிந்து அவளுக்கு வாகாக கன்னங்களை திருப்பி காட்டி கண்களை மூடிக்கொண்டவன் விழிகள் திறந்து அலறினான் அவனின் கைகளை கண்ணங்களுக்கு கொடுத்து..

" ஆஆ ஆ....... ராட்சசி இப்படியாடி கடிச்சு வைப்ப "
விலகி போக போனவளை கை பிடித்து கேட்டவனிடம் இருந்து கைகளை விடுத்து கொண்டவள்..

" இதோட விட்டேனே...உங்கள....
நீங்க போய் அந்த பேய்ய கட்டிக்கிட்டே அழுங்க.. நான் தூங்க போறேன்.."
என வாய் திறந்து கூறியும் ' ரொம்ப ஓவரா தான் பண்ணுறாரு' என தனக்குள் முணுமுணுத்துக்கொண்டும்
அறைக்குள் நுழைய போனவளை
தடுத்து கதவோடு சேர்த்து தன் கைவலைகளுள் நிறுத்தியவன்.

" எனக்கு அந்த பேய் வேணாம், இந்த ராட்சஸியே போதும்.. கட்டிக்கட்டுமா .... "

அவன் கேள்வியில் சம்மதமே என்பது போல் நாணம் கொண்டு அவனை நோக்காமல் வேறெங்கோ பார்த்தவளை முகவாயில் கை வைத்து அவனை நோக்கி திருப்பியவன் புருவம் உயர்த்தி கேட்கவும்
படபடத்து தாழ்த்தி கொண்ட அவளின் இமைகளில் அவனது இதழ்களை பதித்து எடுத்து அவளின் கன்னங்களை நோக்கி நகர்ந்து அவளின் இதழ்கள் அருகே வந்தவன் சற்றென்று நிறுத்தினான்.

" ஹே.... அன்னைக்கு மாதிரி தள்ளி விற்ற மாட்டில்ல'டி "
என கேட்கவும் சட்டென்று அவளுள் எழுந்த உணர்வலைகள் எல்லாம் வடிந்து கடுமை கொண்டு அவனை முறைத்தவள்.. அவனின் மார்பில் கை வைத்து தள்ளி,

" உங்களுக்குலாம் அந்த பேய் தான் செட் ஆகும்.. போங்க மாமா போய் அதோடையே டூயட் பாடுங்க... "

என கோபம் கொண்டு கூறி அறைக்குள் சென்று கதவை சாற்றும் முன்

' ரொம்ப சொதப்புறடா அமிழா.. முழிச்சுக்கோ' என தனக்குள் வசைப்பாடிய அமிழன் அவளின் பின் சென்று அவனவளை கைகளில் அள்ளி கொண்டான்...


..............................................

கதைக்கான உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் பிரெண்ட்ஸ்.

நன்றிகள்
கீர்த்தி 😍


http://srikalatamilnovel.com/community/threads/கிரித்திகா-பாலனின்-போற-போக்கில்-ஒரு-காதல்-கருத்துத்-திரி.1754/page-5#post-344417
 
Last edited:

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"போற போக்கில் ஒரு காதல்" கதையின் அத்தியாயம் 14 பதிந்து விட்டேன் பிரெண்ட்ஸ் ,

அத்தியாயம் 14


"டுக்கு... ஆறாக போகுது.. இப்பவே கிளம்பின தான் வீயூஸ் நல்லா இருக்கும்.. எந்திரிச்சுக்கோடா.... குவிக்... "

மூணாறின் குளிரால் தலை வரை இழுத்து போர்த்திக்கொண்டிருந்த தாக்ஷியை எழுப்பி கொண்டிருந்தான் அமிழன்.
அவளோ திரும்பி படுத்துக்கொண்டு,

"மாமா அங்க பெங்களூர்லயே ஆறு மணிக்கு விடியாது.. இங்க மூணாறு வந்து ஏன் மாமா இப்படி படுத்திறீங்க "


என கைகளில் துழாவி அருகில் இருந்த தலையணையை எடுத்து காதில் பொத்திவைத்து கொண்டு திரும்ப தூங்க ஆரம்பித்தவளை கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாக எழுப்பி குளியரைக்குள் அனுப்பி வைத்தான்.

உள்ளே எழும்பிய டொம் டொம் என்ற சத்தத்தில்
'அவ வெளிய வரும் போது இங்க இருந்தோம் சேதாரம் உனக்கு தான்டா அமிழா'
என எண்ணியவன் வேகமாக அறையை விட்டு வெளியேறிவிட்டான்.


தன்னை சுத்தப்படுத்தி குளியரைவிட்டு வந்தவளின் கண்களில் நேர் எதிரே பட்டது,
அமிழன் அவளுக்காக எடுத்து வைத்து சென்ற ட்ரெக்கிங் ஷூ தான்.


அதனை கண்டு கால்களை தரையில் உதைத்து
" மாமா....... " என கத்தியவள் பிறகு வேறு வழியில்லாமல் அதனை அணிந்து கொண்டு
அவள் அணிந்திருந்த மேல் சட்டையின் ஹூடி'யில் தலையை சேர்த்து நன்றாக உள்ளிழுத்து கொண்டு
அறையை சாற்றி வெளியே வந்தவளை மூணாறின் குளிர் காற்று அவளின் மீது முட்டி மோதி ஊடுருவ
அதில் இன்னும் கைகளை கட்டி ஹுடியில் தன்னை உள்ளிழுத்து குறிகியவள்,
சோம்பித்திரி'யில் (lounge ) தன்னை போல் ஹூடியில் மறைத்து கொண்டு உறங்கும் உருவத்தை இனம் கண்டு
" ஜெய் ... " என ஓடி சென்று அனைத்து கொள்ளவும் திடுக்கிட்டு விழித்த ஜெய்மியும் அரவணைத்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் அளித்து கொண்டனர்.


இந்நாள் தம்பதியர், முன்னாள் தம்பதியர் என இரு ஜோடிகளும் தேன்நிலவு என்று மூணாறுக்கு கிளம்பி வந்து
அதை மலையேறும் செயல்படாக மாற்றி அவர்கள் இருவரையும் மலையேற்றி கொண்டிருந்த தன்னவர்களின் செயல் கண்டு உள்ளுக்குள் கருவி கொண்டிருந்தனர் தோழிகள் இருவரும்.


மலையேற்றம் மட்டுமில்லாமல் ரிசார்டில் ( பொழுதுபோக்கிடம் ) உள்ள இதர பல செயற்பாடுகளிலும் (activities) பங்கு கொண்டார்கள்.

சைட் சீயிங், சைக்கிளிங், பேர்ட் வாட்சிங் என்பது மாறி இப்போது ட்ரெக்கிங், அதுவும் விடிய காலை ட்ரெக்கிங்'க்கு ஆயுத்தமாகி கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் மூணாறின் நகரை விட்டு தொலைவில் இருந்த எஸ்டேட்'டின் இயற்கையின் சூழல் நடுவில் உள்ளமைந்திருந்தது.
மாசுகள் அல்லாத சுற்றிலும் மரங்களால் சுழ பட்டதாகும்.
Bsnl தவிர வேறு எந்த அலைப்பேசி சமிக்ஞை இல்லாத முற்றிலும் இயற்கையோடு ஒன்றிய உலகம்.


வெளியுலக சத்தம் முற்றிலும் தடைபட்டு நீரோடையின் சலசலப்பும் பறவைகளின் கீச்சு காணமே எங்கும் ஒளித்தது.

மிளகு மரங்கள் முதற்கொண்டு எண்ணற்ற மூலிகை ஆயுர்வேத மரங்களால் நிரம்பியிருந்தத நடைபாதை இருபுறமும் அக்காலை வேளையில் மூலிகைளால் நிறைந்த காற்றை நுரைப்பையில் நிறைப்பித்து இயற்கையை அனுபவித்து நடந்தனர்.

செங்குத்தாக அமைந்த பாதையில் தோழிகள் இருவரும் அங்கங்கே நின்று தற்சுட்டி (selfie) எடுத்து கொண்டு சென்றனர்.

அவர்களை முன்னே விட்டு பின்னே ஆண்கள் இருவரும் அவர்களுக்கு துணையாக வந்த ரிசார்ட் ஊழியரிடம் பேச்சை வளர்த்து கொண்டு பின் தொடர்ந்தனர்.

ரிசார்டில் தங்கியிருந்த மற்ற நபர்களும் அங்கங்கே நின்று புகைப்படம் எடுத்து கொள்வதில் முனைப்பாக இருந்ததால், தான் பேசுவதை ஆர்வமாக கவனித்து அதில் கேள்விகளும் கேட்டு தெளிவு பெற்று கொண்டு வந்த எய்டன் அமிழனுடன் ரிசார்ட் ஊழியரும் பின்தங்கி அவர்களோடு இணைந்து அவர்களுக்கு விளக்கி கொண்டு வந்தான்.

தன் கையோடு கைகள் கோர்த்துக்கொண்டு முன்னே பின்னே கைகளை ஆட்டிய படி தன்னோடு நடந்து வந்த தாக்ஷியை பார்த்த ஜெய்மிக்கு அவர்களின் பள்ளி பருவம் ஞாபகம் வந்தன. பள்ளி காலம் தொட்டு இவ்வாறு நடப்பது தாக்ஷியின் பழக்கமாகும்.

வளர்ந்த பின் இடையில் விட்டு விட்டாலும் அவ்வப்போது அவளை மறந்து சிறு வயது தாக்ஷி வெளிவந்து விடும் இப்போது போல்.. தன் தோழியை கண்டு 'எவ்வளவு காலம் ஆகினும் சில விஷயங்கள் மாறாது' என்பதை நெஞ்சோடு இனிமைகள் உணர்ந்து புன்னகைத்து கொண்டாள் ஜெய்மி.

தன்னோடு புன்னகைத்து கொண்டவளை பார்த்து என்னவென்று தலையுயர்தி வினவிய தாக்ஷியிடம்,

" எந்த சேன்ஜ்'ம் இல்லாம நம்ம லைஃப் ஃபுல்லா நாம இப்படியே இருக்கப்போறோம்ங்கிற ஹாப்பினஸ் கொடுத்த ஹார்ட் ஃபுல் ஸ்மைல் தாக்ஷி "


தோழியை உள்வாங்கிய தாக்ஷியும் இனிமைகள் கொண்டு " ஆமா இல்லயா ஜெய், அதுலயும் நீ பெங்களூர்க்கே வந்தத விட வேற என்ன வேணும் "...

***************

இரு வாரங்களுக்கு முன்..

காரில் அவனது தோழன் வீட்டுக்கு என தாக்ஷியை அழைத்து சென்று கொண்டிருந்தான் அமிழன்,

"மாமா, உங்க பிரெண்ட் வீட்டுக்கு போறோம், பேசுறோம், அப்புறம் நம்ம வீட்டுக்கு வந்துடனும், அங்க ஸ்டே எல்லாம் பண்ண முடியாது ஓகே தான, "

"அதான் கிளம்புறதுக்கு முன்னாடியே டீல் போட்டுட்டு தான வந்துருக்க தாக்ஷி," என பெருமூச்சு விட்டு கொண்டு
"என் பிரெண்ட் இந்த வீக் எண்ட் என்கூட ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைச்சான் " என அமிழன் கூறவும்


"இப்படி ஏதாவது திரும்ப ஆரம்பிப்பீங்கனு தான் இப்ப சொல்றேன், நோ ஸ்டே ஓகே.. "

"சரி ஓகே ஓகே " என்று முடித்தார்கள்.

அமிழனின் தோழன் வீடு சென்று காலிங் பெல் அடித்தவளை வரவேற்றது ஜெய்மியாக இருந்ததில் ஆச்சிரியமாகி இன்பம் கொண்டாள்.

எய்டனுக்கு கிடைத்த பதவி உயர்வுடன் கொண்ட வேலை இடம் மாற்றத்தில் அவன் தேர்ந்தெடுத்த இடம் பெங்களூராக இருந்ததில் தோழிகள் இருவருகுள்ளும் எழும்பிய இடைவெளி முற்றிலும் தகர்ந்தது.

"ஜெய் அப்போ இனிமே நீ இங்க தான " என மகிழ்ந்தவள் முன்னமே அவளிடம் கூறாததுக்கு சண்டையிட்ட தாக்ஷியிடம்,

"உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் தாக்ஷி பேபி, மாம்ஸ் கிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னோம்.. இங்க வீடு பார்த்து எல்லாம் செட் பண்ண ஃபுல் ஹெல்ப் மாம்ஸ் தான் "
என்று சண்டையிட்டு சமாதானம் ஆனவர்களை இடையிட்டான் அமிழன்,


" ஓகே ஜெய்மிம்மா நாங்க கிளம்புறோம் "

" ப்ரோ என்னயிது.. வந்ததும் கிளம்பறேன்னு சொல்றீங்க " என எய்டனும்

" மாம்ஸ் இந்த வீக் எண்ட் இங்க தங்கனும்னு பிளான் பண்ணினத மறந்தாச்சா " என ஜெய்மியும் வினவும்

" நான் என்னப்பா பண்ணுறது.. இட்ஸ் ஆல் மை வைஃப் ஆர்டர்.. " என அமிழன் கையை விரித்து தாக்ஷியை கை காட்டி கோர்த்து விடவும்,

" வீக் எண்ட் மட்டுமில்ல வீக் டேஸும் நான் இங்க தான் மாமா நீங்க வேணும்னா கிளம்புங்க "

" பிரெண்ட் பாரத்ததும் என்னை கழட்டி விட்டுட்டா " என அதிசயத்தை அமிழனிடம்

" இனி இதான் ப்ரோ நிரந்தரம்... வாங்க நாம இவங்கள விட பெருசா நட்பு வளர்த்து ஸ்ட்ராங் பாண்ட் உருவாக்குவோம் " என்று 'நண்பேன்டா' என்பது போல் அமிழனை தோழனைத்து கொண்டான் எய்டன்.

******
 
Status
Not open for further replies.
Top