All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "குறிஞ்சி நாடன்...!" கதையின் கருத்து திரி

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மலைநாடன் உருவத்தைச் சுவரில் சித்திரம் எழுதியும், சிலை வடித்தும் தன் பிரிவுத்துயரை ஆற்றிக்கொள்கிறாளோ அவனின் குறிஞ்சியாள்❤

போரினால் ஏற்பட்ட தலைவனின் பிரிவு (பசலை) போதாதென்று, அயலார் குழுவின் பெண்ணோடு திருமணம் என்ற செய்தி(வதந்தி)யும் குறிஞ்சியாளின் நெஞ்சுரத்தை சோதிக்க வேண்டுமா?

இன்னும் எவ்வளவுதான் பிரிவைத் தாங்க வேண்டுமோ இந்நால்வரும்?

அருமை @RamyaRaj sis.
நன்றி மா... பிரிவு துயருக்கு தலைவன் தானே மருந்தும் ஆகிறான்.. அதை தான் இப்படி ஆற்றிக் கொள்கிறாள்...
விரைவில் துயர் தீரும் நாள் வரும்...:love::love::love:
 

Vidhushi

Active member
குறிஞ்சியின் துயருக்குக் குறையாது, தன் மனக்கிடையைக் களமாடும் நேரத்தினிடையே, பெருங்கிளை வியப்புறும் அளவு நாடன் உரைக்கும் பாங்கு அருமை அருமை 👏👏👏

நாடனவனின் சமர்கோலம், களமாடும் காட்சி, அதைக் கண்ணுற்ற அயலார் குழுத்தலைவனின் மனவோட்டம், மனவிருப்பம்; அதனைத் தொடர்ந்த போர் நிறுத்தக்காட்சி.... அத்தனை வர்ணனைகளும் கண்முன்னே காட்சியாய் விரிந்தது😍

காண்போர்க்குப் போர் நின்றது மட்டுமே செய்தி. ஆனால், காரணம் அறியும்முன்னே ஏதும் யூகங்கள் பரவி, தலைவியை அடைந்து மீண்டும் ஏதும் வருத்தமுறச் செய்யுமோ?

Interesting @RamyaRaj sis.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குறிஞ்சியின் துயருக்குக் குறையாது, தன் மனக்கிடையைக் களமாடும் நேரத்தினிடையே, பெருங்கிளை வியப்புறும் அளவு நாடன் உரைக்கும் பாங்கு அருமை அருமை 👏👏👏

நாடனவனின் சமர்கோலம், களமாடும் காட்சி, அதைக் கண்ணுற்ற அயலார் குழுத்தலைவனின் மனவோட்டம், மனவிருப்பம்; அதனைத் தொடர்ந்த போர் நிறுத்தக்காட்சி.... அத்தனை வர்ணனைகளும் கண்முன்னே காட்சியாய் விரிந்தது😍

காண்போர்க்குப் போர் நின்றது மட்டுமே செய்தி. ஆனால், காரணம் அறியும்முன்னே ஏதும் யூகங்கள் பரவி, தலைவியை அடைந்து மீண்டும் ஏதும் வருத்தமுறச் செய்யுமோ?

Interesting @RamyaRaj sis.
மிக்க மிக்க நன்றி மா... இனி ஓரளவு சோதனை கட்டம் முடிந்து விடும்... காதல் களமாட்டம் தொடங்கிவிடும் நன்றி மா
 

Vidhushi

Active member
நாடன் வருகை அவனின் குறிஞ்சியாளுக்கும், அவள் செய்தத சிலை நாடனுக்கும் இன்ப அதிர்ச்சி ஈயுமோ?

பெருங்கிளை - நாள்மலர் தம் தலைவன்-தலைவியின் நலத்தை மட்டுமே நாடுவது, ஆழ்ந்த நட்பைக் குறிக்கிறது.

அருமை @RamyaRaj சிஸ்❤
 

Vidhushi

Active member
பெருங்கிளை - நாள்மலர் வதுவை, என்றும் நலம் நாடும் தன் தலைவன்-தலைவியினாலேயே இனிதே நடத்திவைக்கப்பட்டது.

இனி, நாடன்-குறிஞ்சி வதுவை என்றோ?

அருமை @RamyaRaj சிஸ் .
 

Vidhushi

Active member
குறிஞ்சியின் மனக்கிலேசத்தைப் போக்குவதற்காக வந்த மலைநாடன், அவள் தன் உள்ளத்தாசையை வாய்விட்டுக்கூறிய பிறகுமா புறந்தள்ளுவான்?

99 மலர்களால் தன் நேசத்துக்குரியவளை அலங்கரித்த நாடன், தன்னவள் எழுதிய தன் சித்திரம் மற்றும் வடித்த சிலையைக் கண்டு நெகிழ்ந்த நாடன், குடியிருப்பு நாளன்று தன்னவள் வடித்த தன் சிலையோடு, தானே வடித்த தன்னவளின் சிலையைக் கொண்டுவந்துத் தன் குறிஞ்சியாளைக் கர்வம் கொள்ளவைத்த நாடன் எனப் பலவிதங்களில் இந்தக் கடைசி(!) இரு அத்தியாயங்களில் தோன்றுகிறான்.

முத்தாய்ப்பாய் மயில்🦚வரும் காட்சி, மிக அருமை.



இனி அவர்களை வழிவழியாய் அக்குறிஞ்சி நில மக்கள் காவல் தெய்வமாய் வழிபடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

குறிஞ்சி நிலத்தில் வாழும் பூவிளங்குறிஞ்சி - மலைநாடன் நேசம் @RamyaRaj அவர்களின் அருமையான படைப்புகளில் ஒன்று.
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
குறிஞ்சியின் மனக்கிலேசத்தைப் போக்குவதற்காக வந்த மலைநாடன், அவள் தன் உள்ளத்தாசையை வாய்விட்டுக்கூறிய பிறகுமா புறந்தள்ளுவான்?

99 மலர்களால் தன் நேசத்துக்குரியவளை அலங்கரித்த நாடன், தன்னவள் எழுதிய தன் சித்திரம் மற்றும் வடித்த சிலையைக் கண்டு நெகிழ்ந்த நாடன், குடியிருப்பு நாளன்று தன்னவள் வடித்த தன் சிலையோடு, தானே வடித்த தன்னவளின் சிலையைக் கொண்டுவந்துத் தன் குறிஞ்சியாளைக் கர்வம் கொள்ளவைத்த நாடன் எனப் பலவிதங்களில் இந்தக் கடைசி(!) இரு அத்தியாயங்களில் தோன்றுகிறான்.

முத்தாய்ப்பாய் மயில்🦚வரும் காட்சி, மிக அருமை.



இனி அவர்களை வழிவழியாய் அக்குறிஞ்சி நில மக்கள் காவல் தெய்வமாய் வழிபடுவார்கள் என்பதில் ஐயமில்லை.

குறிஞ்சி நிலத்தில் வாழும் பூவிளங்குறிஞ்சி - மலைநாடன் நேசம் @RamyaRaj அவர்களின் அருமையான படைப்புகளில் ஒன்று.
நன்றி நன்றி மா😍😍😍😘😘😍 எனக்கு இதை விட சொல்ல வேறு வார்த்தை எதுவும் சிக்கவில்லை😍😍😍😘 லவ் யூ சோ மச் மா... உங்க
 
Top