All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "தூராதோ நின் நேச துளிகள்...!" கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25

வசீகரனின் வீட்டுக்கு வந்தவள் தன் உடைகளை எடுத்துக்கொண்டு அம்மாவையும் கூட்டிக்கொண்டு விரைவாக அந்த வீட்டை விட்டு வெளியேர வாசலை அடைத்துக்கொண்டு நின்றிருந்தான் வசீகரன்.
கூடத்தில் பார்க்கவன், கண்ணன், பிரசன்னா மற்றும் லிங்கம் ஆகியோர் கைகளை பிசைந்துக்கொண்டு நின்று இருந்தார்கள். சரண்யா இப்படி வீட்டை விட்டு வெளியே போவாள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
லிங்கம் “சரண்யா வெண்ணை திரண்டு வரும்பொழுது தாழியை உடைக்கிற மாதிரி நடக்காதடா. வசீகரனோட சேர்ந்து வாழு... இன்னும் இரண்டு நாளில் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படி கிளம்பி போறது சரியில்லை” என்றார் பெரிய மனிதனாக.
“மாமா உங்களுக்கு எதுவும் தெரியாது. நீங்க இதுல தலையிடாதீங்க. இந்த பிராடு என்னை எத்தனை வருடமா கண்கலங்க வச்சுருக்காருன்னு தெரியுமா?” என்றாள் வசியை முறைத்துக்கொண்டே.
அவன் நிலைப்படியில் ஒற்றை காலை மடக்கி ஊன்றியவன் இன்னொரு காலை தரையில் பதித்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டு தெனாவட்டாக நின்று இருந்தான்.
அந்த தெனாவட்டு அவளை இன்னும் உசுப்பி விட பல்லக்கடித்தாள். ‘செய்யிறதும் செஞ்சுட்டு எவ்வளவு தெனாவட்டா நிக்கிறாரு பாரு. இவரை எல்லாம் நல்லா காய விட்டா தான் அடங்குவாரு’ என்று முணகினாள்.
ஆனால் அவன் அப்பாவும் அடங்க மாட்டான் என்று உள்மனம் சொல்ல அதை காதிலே வாங்கிக் கொள்ளவில்லை. பிடித்த பிடியிலே இருந்தாள்.
பிரசன்னாவோ அதுக்கு மேல், “அவரு படுற வலியை உன்னால தாங்க முடியாதுன்னு தானே சொல்லல. அதுக்காக நீ இப்படி கோவிச்சுக்கிட்டு இருக்கிறது கொஞ்சம் சரியில்ல சரண்யா. ஒழுங்கா அறைக்கு போ” என்றான்.
“நீ பேசாதடா எரும... எல்லாரும் கூட்டு களவானிங்க தானே..” என்று அவனோடு சேர்த்து கண்ணன் மற்றும் பார்க்கவனையும் திட்டி தீர்த்தாள்.
சரண்யாவையும் சௌந்தர்யாவையும் தவிர மற்ற எல்லோருக்குமே வசீகரன் உயிரோடு இருப்பது தெரியும். அவளிடம் யாரும் சொல்ல கூடாது என்று வசீகரன் கட்டளை போட்டு இருக்க அவனை மீறி அவர்களால் வாய் திறக்க முடியவில்லை. அந்த கோவம் வேறு அவளை இன்னும் ஆத்திரத்தை கிளப்ப குழம்பில் போட்ட கோழியாய் கொதித்துக்கொண்டு இருந்தாள்.
அவள் சண்டை போடும் அழகை நிலை படியில் சாய்ந்து நின்று கண் நிறைய பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கு ஆசையிலும் உரிமையிலும் மீசை துடித்தது. கடுகை போல பொறிந்துக்கொண்டு இருந்தவளின் இதழ்களை கடித்து கவ்வி இழுக்க ஆசை எழ அதன் பிறகு எதற்கு தாமதம்...
அவள் கையில் இருந்த பையை வாங்கி மூலையில் வீசியவன் அவளை அலேக்காக தூக்கி தோளில் போட்டவன் அனைவரிடமும் சௌந்தர்யாவிடமும் கண்ணை காட்டியவன் தன்னுடைய அறைக்கு தூக்கிச்சென்றான் அவளை.
விடுங்க என்னை நான் எங்கும் வர மாட்டேன். நான் சென்னைக்கு போறேன். உங்க மாய் மாலத்துக்கு எல்லாம் நான் மயங்க மாட்டேன்...” என்றவளை அறைக்குள் இருந்த படுக்கையில் தூக்கிப்போட்டவன் கதவை அடித்து சாத்திவிட்டு அவள் மீது வந்து தொப்பென்று விழுந்தான்.
அவன் அப்படி வந்து மேலே விழ அவனது மொத்த எடையை தாங்காமல் “ம்மா” என்று அலறினாள். “மேல வந்து விழுந்ததுக்கே இப்படி அலறினா மத்ததுக்கு எல்லாம் என்னடி பண்ணுவ”
“நான் என்னவோ பண்ணுவேன். உங்களுக்கு என்ன வந்ததாம். முதல்ல என்னை விடுங்க. நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன்” என்றவள் அவனை தள்ளிவிட பார்க்க அவன் ஒரு இன்ச் கூட நகரவில்லை.
“முடிஞ்சா நகர்த்திக்கோடி” என்றவன் அவள் மீது உல்லாசமாக படுத்துக்கொண்டான். அதில் அவளுக்கு கரையுடைத்துக் கொண்டு உணர்வுகள் பெருக அவனது முகத்தை பார்த்தாள்.
அவனும் அவளை தான் பார்த்தான். இருவரின் முகத்திலும் காதல் காதல் மட்டுமே நிறைந்து இருந்தது. அவளின் இதழ்களை பார்த்தான். அன்று ஆசையாக கடைசியாக அவள் கேட்ட இதழ் முத்தம் நினைவுக்கு வர சரண்யாவுக்கு மனம் கனத்து போனது.
“பழசை நினைக்காம என்னை பாருடி. இது தான் நிஜம்” என்றான். அவன் சொல்ல சொல்ல அவளது கண்களில் நிற்காமல் கண்ணீர் சுரந்தது. அவளது கண்ணீரை தன் இதழ் கொண்டு துடைத்தவன் ஆவேசமாய் அவளது இதழ்களை கவ்விக்கொண்டான்.
அவள் கொண்ட வலிக்கு இது மட்டும் தானே மருந்து. அவளால் இப்பொழுதும் நம்ப முடியவில்லை. வசி இல்லாமல் இரண்டு வருடம் வாழ பழகியவளுக்கு அவனது திடீர் வருகை அவளுள் பெரும் பிரளையத்தை கொடுத்தது.
அதுவும் பொது வெளியில் அவனை அவள் சந்தித்த பொழுது பெரிதும் தடுமாறி போனாள். அதை மேடையில் இருந்தே உணர்ந்தவன் அவளை எங்கும் தடுமாற கூடாது, அதற்கு நான் விடமாட்டேன் என்பது போல அவளை பார்த்து ஏளன புன்னகை ஒன்றை சிந்தினான்.
அது வரை இருந்த தடுமாற்றம், தயக்கம், மயக்கம், கண்ணீர் என எல்லாமும் கலைந்து போக இத்தனை நாள் செய்துவந்த நிர்வாக திறமையும் நொடியில் கைக்கொடுக்க மிடுக்குடன் மேடை ஏறினாள் சரண்யா.
அதை தானே சக்கரவர்த்தி வசீகரனும் எதிர்பார்த்தான். அத்தனை பேரின் முன்னிலையிலும் தன்னவள் தடுமாறுவதா? அவள் அரசியல்லவா... அந்த நிமிர்வு அவளிடம் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் இருக்க வேண்டும் என்று எண்ணினான்.
அதை தன் ஒற்றை பார்வையிலே அவளிடம் வரவைத்து இருந்தான் அவளுடைய வசி.
ஆழமாக அழுத்தமாக மிகவும் வன்மையாக அவளது இதழ்களை தன் வசம் இழுத்துக்கொண்டவன் பாராபட்ச்சம் இன்றி காயம் செய்ய ஆரம்பித்தான் அவளது இதழ்களை. அவளுக்கும் அது தான் வேண்டி இருந்ததோ என்னவோ. அவனின் அருகாமையை அவளுக்கு வலிக்க வலிக்க உணர்த்தினான்.

துளிகள் தூரும்...

--
S.Rami
 
Last edited:

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழமைகளே...

புத்தாண்டு க்காக முழு கதை இதோ..

ஒருநாள் மட்டுமே லிங்க் இருக்கும்

படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்😍😍 நன்றி


 
Status
Not open for further replies.
Top