All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரணிகா தேவியின் "மனமேவிய தண்ணொளி சுடரே..." கதை திரி

Status
Not open for further replies.

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

"மனமேவிய தண்ணொளி சுடரே...!" என்கிற புதிய கதை ஆரம்பித்து இருக்கிறேன்.

கிங் - வீராதித்ய சிம்மன்
குயின் - தண்ணொளியாள்

வளைந்து கொடுக்கும் நாணல்கள் அழிவதில்லை. வளையாத மூங்கில்களே முறிந்து போகிறது❤ ஆனால் நல்லிசையாவது என்னவோ மூங்கில்களே😍😍😍

எப்பொழுதும் போல உங்களது ஆதரவை தாருங்கள் நட்பூக்களே😍😍😍
 
Last edited:

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிறிது நேரம் போனையே வெறித்து பார்த்தவள் அவனுக்கு அழைத்தாள்.

“சொல்லுங்க மேடம்...” என்று நக்கல் பண்ணினான்.

“உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோங்க... ஆனா நான் என்னுடைய இடத்தை ஒரு பொழுதும் விட்டுக்கொடுக்கும் எண்ணம் இல்லை...” என்று உறுதியாக மறுத்தாள்.

“நமக்குள்ள இவ்வளவு தூரம் நடந்து முடிந்த பிறகும் நீ இன்னும் அந்த கெத்துலையே இருக்க பார்த்தியா...? எனக்கு உன்கிட்ட பிடிச்சதே உன்னோட இந்த ஆளுமையும் நிமிர்வும் தான். ஆனா அதை நீ என்கிட்டே காண்பிக்கற பாரு அதை தான் நான் வெறுக்கிறேன்... முடிவா நீ என்ன சொல்ற...?” கோவத்தை அடக்கிய குரலில் அவன் கேட்க,

சிறிதும் தாமதமின்றி,

“இது என்னுடைய சிறு வயது கனவு சார். இதை விடுக்கொடுத்துட்டு என்னால ஒரு பொழுதும் இருக்க முடியாது... எனக்கு மூச்சு முட்டிடும். என்னை மீறி உங்களால இந்த ஊர்ல உங்க காலை ஊன்றி வைங்க... அதை விட்டுட்டு என்னை விலை பேசி வளைக்க பார்க்காதீங்க...” திடமாய் மறுத்தாள்.

“நமக்குள்ள இருந்த ரிலேஷன்..” அவன் ஆரம்பிக்கும் பொழுதே, “ஒரே ஒரு நாள் உங்க கூட படுத்ததுக்கு நான் என்னோட வியாபாரத்தை ஈடா வைப்பேன்னு நீங்க நினைச்சிக்கூட பார்க்காதீங்க. அது ஜஸ்ட் பிசிகல் நீட்ஸ்.. தட்ஸ் ஆள்...” என்றாள்.

“ம்ஹும்... அப்போ நம்ம போட்டில அந்த பிஸிகல் நீட்ஸ இடையில இழுக்க மாட்டாய் அல்லவா..?” எதிர் புறமிருந்த கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்துக்கொண்டே மீசையை முறுக்கினான்.

அவனது அந்த முரட்டு தோற்றத்தை அவனது கண்களே கூர்ந்து நோக்கியது... அதில் பாதி உருவம் தண்ணொளியாளே தோன்றினாள்.

அதுவும் கம்பீரமாய் தன்னிடமே தன்னையே எதிர்த்து நின்று பேசியவளின் உருவம் எழ, அதை அவனது கண்கள் ரசித்து தான் பார்த்தது.

ஆனால் அதைவிட அவனது வியாபாரம் முக்கியம் அல்லவா..? அதனால் அதை அப்படியே ஓரம் கட்டிவிட்டு

அழுத்தத்துடன் மீண்டும் அந்த கேள்வியை கேட்டான்...

“நமக்குள்ள இருக்கும் பிசிகல் நீட்சை முன்னாடி நிறுத்த மாட்டாய் தானே...?”

ஒரு முறை அவளது கரங்கள் சற்றே அழுத்தமாக அவளது வயிற்றை தடவி விட்டுக்கொண்டது. அடுத்த நொடியே,

“நான் கோழை கிடையாது சார். அது வெறும் ஆக்சிடண்ட். அதற்காக உங்களை கார்னர் பண்ணி காரியம் சாதிக்க நான் என்றுமே விரும்ப மாட்டேன்... என்னுடைய முயற்சியில் மட்டுமே உங்களை எதிர்த்து நிற்பேன்.” என்றாள் உறுதியாக.

“அப்போதும் சமாதானத்துக்கு வழி இல்லையல்லவா...?” நக்கலுடன் கேள்வி கேட்டான்.

“இந்தியா முழுவதும் பிசினெஸ் செய்யும் உங்களுக்கு ஒரு சின்ன மாவட்டத்தில் உங்களது பொருள் விற்பனை ஆகவில்லை என்று அறிந்து அதை ப்ரிஸ்டீஸ் இஷ்யூவா நினைத்து சாமானிய ஒரு பெண்ணிடம் நீங்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் எனக்கு அது தான் வாழ்வாதாரம்... அது தான் என்னோட கனவு.. அப்படி இருக்கும் பொழுது என்னால் எப்படி இதிலிருந்து பின் வாங்க முடியும்... கண்டிப்பாக முடியாது.. நீங்களா நானா...? இந்த போட்டி எப்பொழுதும் தொடரும். அதை எதற்கும் ஈடாக வைத்து வெற்றி அடைவேன் என்று மட்டும் நினைக்க வேண்டாம். அது என்னுடைய நேர்மையை அவமதிப்பது போல சார்...” அழுத்தத்துடன் சொன்னாள்.

அவளது அந்த கம்பீரம் அவனை இன்னும் வெகுவாய் கவர,

“எஸ்... ஐ லைக் இட் யாளி... திஸ் இஸ் த திங்க், இட்ஸ் ரியலி இம்பெர்ஸ்... ஐ வாஸ் வெரி இம்ப்ரெஸ்டு... நான் எத்தனையோ பேரை இந்த பிசினெஸ் வட்டத்துல பார்த்துட்டேன்... ஆண் பெண் எத்தனயோ சிறு குறு பெரிய அளவிலான நிர்வாக ஆட்களை பார்த்துட்டேன்... அவங்க காரியம் சாதிக்க எந்த எல்லைக்கு வேணாலும் போவாங்க. நானும் அதை யூஸ் பண்ணிக்கிவேன். யூஸ் பண்ணிட்டு அவங்களுக்கு பேவர் பண்ணி குடுத்துட்டு என் காரியத்தையும் நான் சாதிச்சுக்குவேன்.”

“நானும் உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன்...” என்று அவன் கர்வமாய் சொல்லிக்கொண்டே கண்ணாடியை பார்த்து தன்னை தானே ரசித்துக்கொண்டான்.

மேலாடை இன்றி கட்டுமஸ்த்தான அவனது உடம்பை பார்த்துக்கொண்டவனின் சிந்தையில் இந்த உடம்பில் தண்ணொளியாள் கொடி போல பின்னி கிடந்த நேரத்தை எண்ணி பார்த்தவன் ஒரு விசில் போட்டான்
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

"மனமேவிய தண்ணொளி சுடரே...!" கதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வரும்... கதை முடிந்த ஒரு நாளிலே எடுத்து விடுவேன். நட்பூக்களே... அதனால் படிப்பவர்கள் சற்று விரைவாக படிக்க தொடங்குங்கள்...
எப்பொழுதும் போல உங்கள் ஆதரவை எனக்கு கொடுத்து உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
நன்றி...!
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டுடே கிங் & குயின்க்கு லீவு தோழமைகளே. எப்பொழுதும் போல வெள்ளிக்கிழமை வருவார்கள்
 
Status
Not open for further replies.
Top