பானுரேகா தமிழ்ச்செல்வன்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் : 20
தமிழரசி….பெருந் தயக்கத்துடன் கையில் பார்வதி தந்த பால் செம்போடு…உடல் முழுவதும் நடுக்கம் பரவ… இதயம் இருமடங்காக துடித்து ஒலியெழுப்ப….பாண்டியனின் அறைக்கு முன்பு நின்றவளுக்கு… ஒரு கணம் …இப்படியே ஓடிவிடலாமா என்ற எண்ணம் தோன்றியது.
நினைப்பதெல்லாம் நடத்திவிடத் தான் முடியுமா என்ன? தயக்கத்தை உதறித் தள்ளியவள் மூச்சை இழுத்து பிடித்தவாறு.. தன் பூங்கரத்தால் அறைக்கதவை மெல்லத்திறந்து தலையை மட்டும் உள்ளே நுழைத்து அறையை பார்வையால் துழாவினாள். அறையில் யாரும் இருப்பதற்கான அறிகுறி தென்படாததால்…. நிம்மதி பெரு மூச்சுடன் மெதுவாக வலதுகாலை வைத்து உள்ளே நுழைந்தவளின் முகத்தில் பூக்களின் நறுமணத்தோடு...கூடிய குளிர்காற்று மோத…. மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து தன் நுரையீரலில் நிரப்பிக் கொண்டவளின் மனம் சற்றே ஆசுவாசமடைந்தது.
அந்த பிரம்மாண்டமான படுக்கை அறையின் ஷோபாவில் அமர்ந்து ஏதோ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பாண்டியை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவள் அறையில் நுழைந்ததை அவளது கொலுசொலியில் உணர்ந்த பாண்டி சட்டென்று திரும்பி பார்க்க சிவப்பும் வெள்ளையும் கலந்த மணிகளைக் கொண்டு கணாணை கவரும் வகையிலல் டிசைன் செய்யப்பட்டிருந்த வெண்ணிற புடவையில் அதற்கேற்றவாறு பொருத்தமான நகைகள் அணிந்து கொண்டு தலை நிறைய நெருக்கமாக தொடுக்கப்பட்ட மல்லிகைபூக்கள் சரம்சரமாக இரு பக்க தோள்களைத் தாண்டி வழிய கை கால் முளைத்த வெண்தாமரை மலராய் வந்து நின்றவளைக் கண்டவன் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க…. ஏற்கனவே அவளது அழகில் மயங்கிக்கிடப்பவன் முற்றிலும் தன்னியல்பைத் தொலைத்து தடுமாறித்தான் போனான்….! காலையில் தான் கட்டிய மங்கல நாணில் அவன் பார்வை நிலைக்க அது உணர்த்திய உரிமையில் அவன் இதயம். தித்தித்தது. இவள் தன்னுடமை..!! எனக்கே எனக்கான என்னவள் என்ற உரிமையுணர்வு தோன்ற தலையிலிருந்து பாதம்வரை அவன் பார்வை அவளை உரிமையோடு ரசிக்க ஆரம்பித்தது.
தன்னை கணவன் பார்வையாலே கபளீகரம் செய்வதை உணராதவளாய்… ஒரு உயர்தர நட்சத்திர உணவு விடுதியின் அறையைப் போன்று தோற்றம் காட்டிய அவ்வறையை விழிகள் விரிய அணுவணுவாக ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழரசி.
அவ்வறையின் அழகிலும் கலைநயத்திலும் மனதை பறிகொடுத்தவளாய் ஒவ்வொன்றாக பார்வையிட்டுக் கொண்டிருந்தவளை ஒரு பக்க சுவர் முழுவதையும் நிறைத்திருந்த பாண்டியின் பெரிய புகைப்படம் கவர…அதனருகில் சென்றவள் அழகிய புன்னகையோடு…….கரு நீல ஜீன் அணிந்து வெள்ளை நிற முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டவாறு கண்களில் கூலர்ஸூடன் வசீகரமாய் புன்னகைத்தவாறு பாண்டியின் புகைப்படம் வீற்றிருக்க… அதில் கவரப்பட்டவளாக… அருகே சென்று பார்வையிட ஆரம்பித்தாள்.
அவனது வசீகரப் புன்னகையில் தன்னை ஒரு கணம் தொலைத்தவள் மறுகணமே தன் மனதை அடக்கியவளாக…
“ஓ… இவனுக்கு சிரிக்கக்கூட தெரியுமா?! ஆச்சரியம் தான்!! எப்பவும் சட்டைக்கு போடுற கஞ்சியை இவன் குடிச்ச மாதிரியில்ல விறைப்பா திரிவான்?! இதுல மட்டும் எப்படி க்ளோசப் விளம்பரத்துக்கு போஸ் கொடுக்குற மாதிரி இப்படி ஒரு புன்னகை…?! என்று உதட்டை சுழித்தாலும்… கரங்கள் அவளையும் மீறி அவனது கன்னத்தை மென்மையாக வருடத் தொடங்கியது.
அவள் அறைக்குள் வந்ததிலிருந்து அவளின் மீது பார்வையை பதித்திருந்தவன் அவளது பேச்சில் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவன்….அவள் தன் புகைப்படத்தை ஆசையாய் வருடியதில் அவளின் மென்கரங்களின் பரிசத்தை தன் கன்னங்களில் உணர்ந்தவனாக.,. கன்னங்களைத் தொட்டுப் பார்த்தான். அவளின் பரிசத்தை உணரத்துடித்த அவனது மனத்தின் ஆர்ப்பரிப்பை அடக்க இயலாது சத்தமின்றி எழுந்தவன் நிதானமாக தன்னவளை நெருங்கினான்.
நூலளவு இடைவெளியில் தன் பின்னே நின்றிருந்தவனின் வருகையை கூட உணராது மெய்மறந்து தன்னவனின் புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்தவளை…. பின்னிருந்து அணைத்தவன்.. அவளிள் செவிமடலை தன் மீசைமுடிகள் உரச முத்தமிட்டு… “நிஜம் நான் உன் பக்கத்திலேயே இருக்கும் போது நிழல் எதுக்கு பேபி… அங்கே வருடுவதை இங்கே வருடலாமே…..!! நான் என்ன வேணாம்னா சொல்லப்போறேன்…” என்ற கிசுகிசுப்பான கிறக்கமான குரலில் …. கூற திடுக்கிட்டவளாய் சட்டென்று அவனை நோக்கி திரும்ப….அவனது மார்பில் மோதிக்கொண்டாள். ஏற்கனவே. நெருங்கி நின்றிருந்தவன் வாகாக அவளது இடையை வளைத்துக் கொண்டான்.
இருவரின் முகமும் அருகருகே… அதிர்ச்சியில் அவளது கண்கள் மேலும் விரிய….பட்டாம்பூச்சியாய் இமையிரண்டும் படபடக்க…அதன் அழகில் மேலும் மயங்கியவன்… அவளது கண்களில் தன் முதல் முத்திரையை பதித்தான். அடுத்தடுத்து அவளது முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தியவன்…. இறுதியில் அவளது உதட்டில் இளைப்பாறத் தொடங்கினான் கணவனின் திடீர் அணைப்பிலும்…. முத்தப்படையெடுப்பிலும் முற்றிலும் நிலைகுலைந்து போனவள்… உடலெங்கும் நடுக்கம் பரவ… ஆழிப் பேரலையாய் தன்னை தாக்கிய புதுமையான உணர்வுகளால் அவன் கைகளில் செயலற்று துவண்டாள். மனைவியின் நிலையை அறிந்து கொண்டவன் வெற்றிப் புன்னகையுடன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான் ரத்னவேல் பாண்டியன்.
சுற்றிலும் மலர்ச்சரங்களால் திரையிடப்பட்டிருந்த மஞ்சத்தில் அவளை கிடத்தி… தானும் அவளருகில் சரிந்தவன் தன் மனையாளின் முகத்தை காதலாய் நோக்க… தன்னை மறந்து கண்களை இறுக மூடி.. இதழ்கள் துடிக்க மயங்கிக் கிடந்தவளை பார்த்தவனின் உணர்வுகள் அலையலையாய் பொங்கிப் பெருக… இதற்கு மேல் தாளதவனாய் ஆவேசமாய் தன்னவளின் இதழ் நோக்கி குனிந்தவன் அவளது துடிக்கும் இதழ்களை மீண்டும் சிறை செய்தான். ஆரம்பத்தில் மென்மையாய் ஆரம்பித்து பிறகு வன்மையாய் மாறிய அவனது இதழ் முற்றுகை விடாது தொடர சிறிது நேரத்தில் மூச்சுக் காற்றுக்காய் தவித்தவளுக்காய் மனமேயில்லாது அவளது இதழ்களை விலக்கி தன்னவளின் முகம் பார்க்க வெண்தாமரை மலராய் இருந்தவளின் முகம் தன் செயலால் செந்தாமரை நிறங்கொண்டதை ரசித்துப் பார்த்தவன்… அவளை முழுவதுமாக கொள்ளையிட்டு விட துவங்கும் பொருட்டு அவளது இதழ் நோக்கி குனிந்தவனின் கைகள் தன்னவளின் மேனியில் அத்துமீறி பயணிக்க…
அவனின் இதழ் தீண்டலில் ஏற்கனவே தன்னை மறந்த நிலையில் இருந்த தமிழரசியோ….அவனின் கரங்களின் அத்துமீறலில் தன் பெண்மை விழித்துக் கொள்ள அவனது கரங்களை மேலே முன்னேற விடாது தடை செய்ய… தீராத தாபத்திலும் மோகத்திலும் தன்னுள் எழும் உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தவனுக்கோ…அது அதிருப்தியைத் தர….
“ம்ப்ச்… பேபி… ப்ளீஸ்டா…!!” என்றவன் குரல் குழைந்து ஒலிக்க அந்த குரலின் மாயாஜாலத்துக்கு கட்டுப்பட்டவளாய் தன் தடையை அவள் விலக்கிக் கொள்ள… முழு வேகத்துடன் அவளை ஆக்ரமித்துக் கொண்டவன் கன் தேடலை தொடர அவனது தீண்டல்களில் உருகிக் குழையும் தன்னுடலையும் மனதையும் தடை செய்ய இயலாது தானும் அவனுள் புதைந்து போனாள் தமிழரசி. இரவு முழுவதும் தொடர்ந்த அவனது தேடல் விடிகாலை முடிவுக்கு வர திருப்தியுடன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து…. புன்னகைத்தவன் அவளின் முகம் பார்க்க… கலைந்த ஓவியமாய் தன்னருகே இப்போதும் கண்மூடி படுத்திருந்தவளை ஆசையாய் தூக்கி தன் மார்பில் கிடத்திக் கொண்டு அவளது நாடியை நிமிர்த்தி…!
“பேபி கண்ணைத் திறந்து பாருடா…. என்க…அவள் அப்போதும் ஏதும் பேசாமல் இருக்க…அவளது மௌனனத்தில் சஞ்சலமடைந்தவன்..
“என்மேல கோவமா பேபி…. நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா…?!!” என்று தவிப்புடன் வினவியவனை கண்களைத் திறந்து அவனது கலக்கத்தை ஆச்சரியத்துடன் பார்த்தவளின் மனம் எல்லையில்லாத நிறைவுடன்…இல்லை எனும் விதமாக தலையை ஆட்ட…அதில் நிம்மதியடைந்தவனாய் அவளை தன் மார்பில் இரு கைகளாலும் இறுக்கிக் கொண்டு அவளது உச்சந்தலையில் தன் இதழ் பதித்தவன் புன்னகையோடு நிம்மதியாக உறங்கிப் போனான்.
மனதில் பலவகையான குழப்பக்களும் கேள்விகளும்…தொடர்ந்த போதும்... அவனது அணைப்பில் தன் கலக்கங்கள் மறைய தானும் நிம்மதியாக கண்களை மூடிக் கொண்டாள் தமிழரசி. ஆனால் இந்த நிம்மதி நிலைக்குமா…?!
சென்னை…கதிரவனின் படுக்கையறை…
வழக்கம் போல விடியற்காலை 5 மணிக்கு தூக்கம் கலைந்து தாமரை எழ முற்பட அசைய முடியாத தன்னிலையை உணர்ந்தவள் மெதுவாக தலையை மட்டும் திரூம்பிப் பார்க்க…கதிரவன் தான் அவளை பின்னோடு அணைத்தவாறு நெருங்கிப் படுத்திருந்தவன்…வலது கையால் அவளது இடையை இறுக்கிப்பிடித்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனது பிடிக்குள் இருந்து மெல்ல விலகும் பொருட்டு திரும்பியவளின் அசைவை உணர்ந்தவன்….அவளை மேலும் இறுக்கிக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான். அவனின் அடாவடியில் முகம் சிவந்து அவனை நோக்கியவளுக்கு முந்தைய இரவின் இனிமையான நிகழ்வுகள் மனதில் வலம் வர சந்தோஷமும் துக்கமும் ஒருங்கே எழுந்து அவளை வாட்டியது.
உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன அந்த அறைக்குள் நுழைந்தாள் தாமரை…! கட்டிலைச் சுற்றிலும் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் இன்றைய நாளின் முக்கியத்துவத்தை உணர்த்த.. ஒருவித சிலிர்ப்பு உடலெங்கும் பரவத்தான் செய்தது. காலையில் அவன் கட்டிய தாலி மார்போடு உரசி தனக்கும் அவனுக்குமான பந்தத்தை உணர்த்தியது.ஆனால் அதை கட்டியவனின் மனதில் தான் இல்லையே என்ற வேதனையில் கண்களில் நீர் திரள…இது மற்றவர்களுக்காக கட்டாயத்தின் பேரில் கட்டப்பட்டது என்ற நினைவே கசந்தது. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள்.. அறையின் பக்கவாட்டில் இருந்தபால்கனி நிலைப்படியில் சாய்ந்து கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு தன்னையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த கதிரவனைக் கண்டு அதிர்ந்தவள். மறுகணமே உணர்வுகளை தொலைத்த பார்வையுடன் திரும்பி நடந்து.. நிலைக்கண்ணாடியின் மேசையில் கொண்டு வந்த பால் ii சொம்பை வைத்து விட்டு தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி வைக்க ஆரம்பித்தாள். கடைசியாக கழுத்தில் அணிந்திருந்த வைர நெக்லஸைக் கழற்ற அது எதிலோ வகையாக மாட்டிக்கொண்டு கழற்ற முடியாமல் சதிசெய்ய அதனோடு போராட ஆரம்பித்தாள்.
அவளின் ஒவ்வொரு செயலையும் ரசனையோடு கண்களில் காதல் வழிய பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நடந்து வந்து அவளுக்கு பின்னால் நின்றவன் அவளின் நீண்ட கூந்தலையும் அதிலிருந்து சரம் கரமாய் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப்பூவை நோக்கி குனிந்து தன் முகம் புதைத்து ஆழ்ந்து நுகர்ந்தவன் அதன் இனிமையான மணம் மனதை மயக்க அப்படியே அதில் தன் முகத்தை புரட்ட நிலைக்கண்ணாடியில் தன்னவனின் வரவை உணர்ந்தவள் அவன் தன்னை நெருங்கி நின்றதிலேயே உறைந்தவள்… அவனது செயலில் முற்றிலும் நிலை குலைந்தாள். அடிவயிற்றில் சில்லென்ற உணர்வு எழுந்து உடலெங்கும் குளிர் பரவ நிற்க இயலாது தடுமாறியவள்…பற்றுதலுக்காக ஒப்பனை மேசையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மனைவியின் நிலையை உணர்ந்து கொண்டவன் நமுட்டுச் சிரிப்புடன்.. தன் இடது கையால் அவளது கூந்தலையும் பூச்சரத்தையும் மெதுவாக விலக்கியவன்… மனையாள் கழற்ற போராடிய நெக்லஸ்ஸின் கொக்கியை லாவகமா கழற்றி மேசை மீது வைத்தவன்… மனைவியை நிலைக்கண்ணாடியில் பார்த்தவாறே….இன்னும் நெருங்கினான்.அவனது உயிரைத் தீண்டும் நேசப்பார்வையை எதிர்கொள்ள இயலாது அவள் தலையை குனிந்து கொள்ள… குனிந்து அவளது முதுகில் தன் இதழை மெல்ல ஒற்றினான். தன்னவனின் முதல் இதழ் தீண்டலில் கூசிச் சிலிர்த்தவளின் படபடப்பு அதிகரிக்க... முதுகில் ஆரம்பித்த இதழோற்றல் படிப்படியாக முன்னேறி அவளது கழுத்து வளைவை நெருங்கி அதில் தன் முகத்தை புதைத்தவனுக்கு தான் அணிவித்த புத்தம் புது தாலியில் பூசப்பட்டிருந்த மஞ்சளின் மணமும் தன்னவளின் ப்ரத்யேக மணமும்… தலையில் சூடியிருந்த பூவின் மணமும் சேர்ந்த கலவையான மணம் மனதைமயக்க ஆழ்ந்து சுவாசித்து அதை நுகர்ந்தவனின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் பேரலையாய் பொங்கிப் பெருக.. இதற்குமேல் தாமதிக்க இயலாது என்று உணர்ந்தவன் தன்னவளின் தோளை தன்னை நோக்கி சுண்டி இழுத்து திருப்ப தன் மார்பில் மலர்க் கொத்தாக விழுந்தவளின் முகத்தை நிமிர்த்தி..கன்னங்களை இரு கைகளாலும் இறுக பற்றி… தன்னவளின் முகம் பார்க்க கண்களை இறுக மூடி இதழ் துடிக்க நின்றிருந்தவளை நோக்கி ஆவேசமாக குனிந்தவன் அவளின் துடிக்கும் இதழ்களை சிறை செய்தான். அடுத்தடுத்த அவன் அதிரடிகளால் முற்றிலும் தன்னிலை மறந்து நின்றிருந்தவள் அவனது திடீர் இதழ் முற்றுகையில் இதுவரை தான் அறியாத புதுவித உணர்வுகள் தாக்க அதை தாங்க இயலாது மெல்ல துவள ஆரம்பித்தவள் பற்றுதலுக்காக அவனது முதுகையே இரு கரங்களால் வளைத்து பிடித்தாள்… மனைவியின் நெகிழ்வில் மனதுக்குள் மகிழ்ந்தவன் தன் உள்ளத்துக் காதலையெல்லாம் தன்னவளுக்கு உணர்த்திவிடும் பொருட்டு அவளது இதழில் மேலும் தன்னை புதைத்துக்கொண்டான் தாமரையின் கதிரவன். தன் காதலை வாய்மொழியாக உணர்த்தாமல் உடல்மொழியில் தன் அன்பை அவள் மீதான தன் நேசத்தை உணர்த்த விரும்பினான். ஆனால் அவனின் மனதை தாமரையாள் புரிந்து கொள்வாளா…?! என்பதை அவன் அந்நேரம் யோசிக்கவில்லை!!.
மனம் முழுவதும் மூச்சுக்காற்றாய் தன்னுள் நிரம்பி இருந்தவனின் தொடுகையில் உடல் தன்னையும் மீறி அவனிடம் குழைய… அந்நேரம் அவனின் நிராகரிப்பு தந்த வலி நினைவில் எழுந்து மூளை அவனை விட்டு விலகி. எழச்சொல்லி … அறிவுறுத்த… காதல் கொண்ட மனமோ…அவனது உயிர்த்தீண்டலில் உருகி கரைய… மனதுக்கும் அறிவுக்கும் இடையே போராடிக் களைத்தவள்…இறுதியில் காதலுக்கு அடிபணிந்தாள். அதை நினைத்துப் பார்த்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க பீறிட்ட அழுகையை வாயைப் பொத்தி அடக்கியவள்…அவனிடமிருந்து மெல்ல விலகி குளியலறைக்குள் புகுந்தவள் தண்ணீரை திறந்து விட்டு கதறி அழத் தொடங்கினாள். அவனது தொடுகையில் உருகி குழைந்த தன்னை நினைத்தவளுக்கு அத்தனை அவமானமாக இருந்தது. காதலாய் ஆரம்பிக்க வேண்டிய உறவு….கடமைக்காய் ஆரம்பித்த விதத்தை நினைத்து உள்ளுக்குள் மருகினாள்..
வேதவல்லி பவனம்.
அடுத்தநாள் காலை இண்டர்காம் ஒலியில் கண்விழித்த பாண்டி… தன்மார்பை மஞ்சமாக்கி துயிலும் மனைவியின் தூக்கம் கலைந்து விடாமல் இண்டர்காமை எடுத்து காதில் வைக்க…. அந்தப்பக்கம் பார்வதி தான் அழைத்தார்.
“சொல்லுங்கம்மா..!” என்ற மகனது குரலிலேயே அவர்கள் இன்னும் துயில் களைந்து எழவில்லை என்பதை உணர்ந்தவராக…. சற்று தயங்கியவர் பிறகு..
“அய்யா பாண்டி மணி 9 ஆயிடுச்சு…. நீயும் மருமகளும் கிளம்பி வந்தீங்கன்னா…டிபன் சாப்பிட்டு ஊருக்கு கிளம்ப சரியாயாயிருக்கும்!...நாங்க எல்லாரும் தயாராகி உங்க ரெண்டு பேருக்காகத் தான் காத்திருக்கோம்” என்க..அப்போது தான் அறையின் கடிகாரத்தை பார்த்தவன்.. சிறு புன்னகையுடன் தன் தலையில் தட்டிக் கொண்டே தன் பதிலுக்காக காத்திருக்கும் அன்னையிடம்…
“இதோ அரைமணி நேரத்தில் கிளம்பி வர்றோம்மா…!!” என்று அழைப்பை துண்டித்தவன் மனையாளை பார்க்க பளிங்குச்சிலையாய் தன் மார்பில் பள்ளி கொண்டிருந்தவளின் எழிலில் தன்னைத் தொலைத்தவன்..அவளது முகத்தை தன் விரல் கொண்டு அளக்க அவனது ஸ்பரிசத்தில் சிலிர்த்தவள் இலேசாக சிணுங்கி உதட்டைச் சுழிக்க… அவனது பார்வை சுழித்த இதழ்களில் விழ..கைகள் கொண்டு அவளின் இதழ்களின் வடிவை அளந்தவன் அதன் மென்மையில் தன்னை தொலைத்தவனாய்…தன் இதழ்கொண்டு வருடும் ஆவலில் அவள் முகம் நோக்கி குனிய அவனது வருடலில் கண்விழித்தவள் அவனது நோக்கம் அறிந்து கொண்டவளாய் சட்டென்று துள்ளி எழுந்தவள் வெட்கத்தோடு குளியலறைக்கு புகுந்து கொண்டாள்.
அவளது திடீர் விலகலை எதிர்பாராதவன்… முகத்தில் மந்தகாச புன்னகை விரிய
“ச்சே…!! ஜஸ்ட் மிஸ்! என்று தன் தலையை கோதிக் கொண்டவன் எழுந்து உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து வோர்க் அவுட் செய்ய ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் குளித்துவிட்டு குளியலறையிலிருந்து மெதுவாக தலையை நீட்டி எட்டிப் பார்த்தவள் அறைக்குள் அவன் இல்லை என்பதை உணர்ந்தவளாய்.. மெதுவாக வெளியே வந்தாள். ஓப்பனை மேசையை நெருங்கி தன்னை எளிமையாக அலங்கரித்துக்கொண்டவள் தலையில் சுற்றியிருந்த துவாலையை அகற்றி ஈர கூந்தலை விரித்து விட்டவள். அதை உலர்த்தும் பொருட்டு அறையின் பால்கனிக்குச் சென்றவளின் பார்வை வீட்டுத் தோட்டத்தில் படிய அதன் அழகில் மனதைப் பறிகொடுத்தவளாய்.. விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தவளை இரு வலிய கரங்கள் பின்னிருந்து அவளது இடையை சுற்றி வளைத்துக் கொள்ள.. முதலில் அதிர்ந்தவள் பிறகு தன்னவனை உணர்ந்து…அவனிடமிருந்து விடுபட போராட.. அவனோ அவளின் போராட்டங்களை எளிதாக முறியடித்து அவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டு அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள… அதில் மேனி சிலிர்த்தவள் சுற்றுப்புறம் உணர்ந்து…
“விடுங்க……இது பால்கனி யாராவது பாரக்க போறாங்க…” என்று முகம் சிவக்க.. லேசாக அவன் பிடி தளரவும் அவன் அணைப்பிலிருந்து விலகியவள்…அறைக்குள் செல்ல அவளது பின்னோடு சென்றவன் மனைவியை தேட அவளோ ஒப்பனை மேஜையருகே நின்று இடையைத் தாண்டி நீண்டிருந்த கூந்தலை பின்னி சடையிட்டவள் பின்னே தூக்கி வீச அது அவளுக்கு பின்னால் நின்றிருந்த பாண்டியின் முகத்தில் மோதியது. தன் முகத்தில் வந்து விழுந்த சடையை ஆசையாய் கைகளால் வருடி முகர்ந்து பார்க்க..அதன் நறுமணத்தில் உணர்வுகள் கட்டவிழ்க்க…கண்களில் மயக்கம் பரவ கண்ணாடி வழியே தன்னவளை நோக்கியவன் தாபத்தோடு நெருங்க..கணவனின் முகமாற்றத்தை உணர்ந்து கொண்டவள் அங்கிருந்து நழுவ பார்க்க… மனைவியின் நோக்கம் அறிந்தவனாய் ஒப்பனை மேசையின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி அவளை சிறையிட்டவன் கண்கள் குறும்பில் மின்ன..
காலையில் மிஸ்ஸான கணக்கை இப்ப நேர் செய்யவா பேபி… என்று அவளை நெருங்கவும் அறைக்கதவு தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருக்க… அப்போது தான் காலை அன்னையின் அழைப்பு நினைவு வந்தவனாக….
“பேபி.. !! வெளியே அம்மா தான் வந்திருப்பாங்க… நீ போய் கதவை தர நான் குளிச்சிட்டு வந்துடுறேன்… என்றவன் ஒரு அவசர முத்திரையை மனைவியின் இதழ்களில் பதித்து விட்டே குளியலறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.
அவனது அதிரடி முத்தத்தில் திகைத்து நின்றவளை கதவு தட்டும் ஒலி கலைக்க அவசரமாக ஓடிச்சென்று கதவை திறந்தாள். வெளியே பார்வதி கையில் காபிகோப்பைகளுடன் நிற்க…!
தமிழரசி “வா..வாங்க அத்தை!! நீங்க ஏன் அத்தை மாடிப்படி ஏறி எடுத்துட்டு வந்தீங்க நானே வந்திருப்பேனே…?!என்று முகம் மலர வரவேற்றவள்…அவர் கையிலிருந்து காபி டிரேயை வாங்கிக் கொள்ள தன் மருமகளின் முகத்தில் களைப்பையும் மீறிய மலர்ச்சியையும் வெட்கத்தில் சிவந்திருந்த அவளது வதனத்தையும் கண்டு கொண்டவர்… நிறைவுடன் அவளை பார்த்து புன்னகைத்தார்.
பரவாயில்லடா..?! மணி 9 ஆயிடுச்சு இன்னும் நீங்க பலகாரம் சாப்பிட கூட வரலையே அதான் காபியாவது கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ஆமா பாண்டி எங்கடா..?! என்றவரிடம்.
அ…அவங்க இப்ப தான் அத்தை குளிக்கப் போயிருக்காங்க.. என்றாள் நாணத்தோடு..! மருமகளின் முகச்சிவப்பு அவருக்கு பல கதைகளைச் சொல்ல மனதில் எல்லையில்லாத நிம்மதி எழுந்தது.
முகம் கனிய மருமகளை பார்த்தவர் பாசத்தோடு…”சரிடா!! பிளாஸ்க்ல காபி வச்சிருக்கேன் ரெண்டு பேரும் குடிச்சிட்டு சீக்கிரம் கீழே இறங்கி வாங்க! டிபன் சாப்பிட்டு ஊருக்கு கிளம்பனும் மணியாகுது…!!” என்றவர் சந்தோஷத்தோடு அறையை விட்டு வெளியேறினார்.
அதற்குள் குளியலறை கதவை திறந்து கொண்டு பாண்டி வெறும் டவலோடு வெளியே வர… அவனது தோற்றம் கண்டு முகம் சிவந்தவள் திரும்பி நின்று கொண்டாள்.
மனைவியின் மனநிலையை உணர்ந்து கொண்டவன் கள்ளச்சிரிப்புடன் அவளது அருகில் வந்து நின்று தன் தலையை சிலுப்ப பூவாய் சிதறிய நீர்த் துளிகள் அவளது முகத்தில் தெரிக்க அதில் சிலிர்த்து அவனை முறைத்துப் பார்த்தவள்…
“சீக்கிரம் தலையை துவட்டிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க அத்தை காபி குடிச்சிட்டு கீழ வரசொன்னாங்க ஊருக்கு கிளம்பனுமாம்.” என்று தலையை குனிந்தவாறே சொன்ன மனைவியின் வெட்கம் அவனை கிளர்ந்தெழ செய்ய..அருகில் நெருங்கியவனின் நோக்கம் புரிந்தவளாய் தேக்குமரத்தைப் போல உருண்டு திரண்டிருந்த அவனது மார்பை தன் மென் விரல்களால் தடுத்து நிறுத்தியவள் அவனது முகத்தை பாராது..
“ப்ளீஸ் அத்தை ஏதாவது நினைக்க போறாங்க சீக்கிரம் கிளம்புங்க வேலு” என்க அவளது ப்ரத்யேக அழைப்பில் அவனது கண்கள் மின்ன அவளைப் பார்த்தான். இதுவரை யாரும் அவனை இப்படி அழைத்ததில்லை. தன்னவளின் இந்த அழைப்பில் அவன் மனம் உற்சாகத்தில் திளைக்க…மார்பில் பதிந்திருந்த அவளது கையின் மேல் தன் கைகளை வைத்து அழுத்தியவன் அந்த கைகளை எடுத்து சிறு முத்தம் பதித்து விடுவித்துவிட்டு…முகம் விகசிக்க..உடை மாற்றும் அறைகக்கு சென்றவன் ஐந்து நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தான்.
க்ரீம் கலர் பேண்டும் அதற்கு பொருத்தமான அடர்ஊதாவும் நீலமும் கலந்த நிறத்தில் விலையுயர்ந்த சட்டையும் அணிந்து கொண்டு அழகாக வந்தவனை விழியகற்றாது பார்த்துக் கொண்டு நின்றவளை நெருங்கியவன்
“போலாமா பேபி.?!” .என்க தன்னை மறந்து தலையை ஆட்டியவளை தோளோடு அணைத்தவாறு அறையை விட்டு வெளியேறினான். படிகளில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்த அருணாச்சலமும் பார்வதியும்.. மகன் மருகளின் அன்னியோன்யத்திலும் ஜோடிப் பொருத்தத்திலும்.. நிறைவுடன் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். பெரியவர்களை பார்த்ததும் வெட்கத்தோடு விலக முற்பட்டவளை… அவன் விட்டால் தானே..!!
“ஏங்க..! அத்தை , மாமா பார்க்குறாங்க விடுங்க என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாய் புன்னகையுடன் கைகளை விலக்கிக் கொள்ள…நிம்மதி பெருமூச்சுடன்.. பார்வதியிடம் செல்ல அவர்களை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தவர்.
“தமிழ்மா பூஜை அறையில் விளக்கேற்றி கும்பிட்டு வாம்மா!! பாண்டி… நீயும் போய்யா” என்கவும் தலையை ஆட்டிவிட்டு கணவனுடன் பூஜையறைக்குள் நுழைந்தவள் பூஜையை முடித்துவிட்டு… நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ள சிமிழை எடுத்தவளை தடுத்து தானே குங்குமத்தை எடுத்துஅவளது வகிட்டில் வைத்தவன்….பற்றிய அவள் கையிலிருந்த குங்குமத்தை தன் நெற்றியில் இட்டுக் கொண்டான். கணவனது செய்கையை வாயைப் பிளந்து பார்த்தவளுக்கு ஆச்சரியத்துடன் வெட்கமும் வர முகம் சிவந்தது. ரசனையோடு அதை பார்த்தவன் அவளது கையைவிடாது பிடித்தவாறே அறையை விட்டு வெளியே வந்தான்.
சாப்பாட்டு மேசையில் இவர்களுக்காக காத்திருந்த பார்வதி இருவரையும் அமரவைத்து பரிமாற….
“நான் பரிமாறுறேன் நீங்க உட்காருங்க அத்தை.. மாமா சாப்பிட்டாச்சா அத்தை என்று வினவ…மருமகளின் பொறுப்பில் முகம் கனிந்தவர். அவளது கையை பிடித்து பாண்டியின் பக்கத்தில் அமர வைத்தவர்.
“நானும் உங்க மாமாவும் எப்பவோ சாப்பிட்டாச்சு… நீ உட்கார்ந்து சாப்பிடு முதல்ல…என்றவர் புது மணத் தம்பதிகளுக்காக தன் கையால் பரிமாறினார். முதலில் பாதாம் அல்வாவை இருவருக்கும் வைத்தவர் பொங்கல் , இட்லி ,பூரி என்று வரிசையாக பரிமாறியவர் சட்னி கிண்ணங்களை எடுத்து அருகில் வைத்து விட்டு “சாப்பிட்டு வாங்க நான் ஹால்ல இருக்கேன்” என்றுவிட்டு புதுமணத் தம்பதிகளுக்கு தனிமை வழங்கி நாசூக்காக வெளியேறினார்.
அவர் செல்லவே காத்திருந்தவனைப் போல தன் இலையில் இருந்த பாதாம் அல்வாவை எடுத்தவன் தன் மனைவிக்கு ஊட்டிவிட எத்தனிக்க…அவளோ வேண்டாமென மறுத்து ”நீங்க சாப்பிடுங்க நான் சாப்பிட்டுக்கிறேன்!” என்க அவன் பிடிவாதமாக ஊட்ட எத்தனிக்க அவனது பிடிவாதத்தில் மனதுக்குள் சலித்தாலும் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள்.. சட்டென்று இடது கையால் அவளது முகத்தை பற்றி அவளது இதழோடு இதழ் சேர்த்தவன் சிறிதுநேரத்திற்கு பிறகு விலக..இப்போது இனிப்பு அவனது வாய்க்குள்ளே இடமாறியிருக்க….கள்ளச்சிரிப்போடு ரசித்து சாப்பிட்டவன்…
“வாவ்!!.... இதுவரை நான் இப்படியொரு பாதாம் அல்வாவை சாப்பிட்டதேயில்லை செம்ம டேஸ்ட் என்று சப்புக் கொட்ட…கணவனின் செயலில் முதலில் திகைத்தவள் அவனது பேச்சில் முகம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.
சில பல சீண்டல்களூடன் காலை உணவை முடித்துவிட்டு வரவேற்பரையில் தன் தந்தைக்கு அருகில் சென்று அமர்ந்தான் பாண்டியன்.
“கிளம்பலாமா…பாண்டி என்றவரை யோசனையோடு பார்த்தவன்…
“அப்பா அதுக்கு முன்னாடி எனக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்”!
“சொல்லுப்பா என்ன விஷயம்?!” என்றவரிடம்
“நான் இன்னும் ஒரு வாரத்தில் டியூட்டியில் ஜாய்ன் பண்ணனும்பா…அதனால சென்னையில் ரிசப்ஷன் முடிஞ்சு அப்படியே மறுவீட்டு பங்ஷனை முடிச்சிட்டு அங்கிருந்தே ஊருக்கு கிளம்பலாம்னு நினைக்கிறேன்”!. என்க
மகனது வார்த்தைகளை கேட்டவருக்கு முதலில் வருத்தமாக இருந்த போதும் அவனது வேலையை கருத்தில் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டார் அருணாச்சலம்.. ஆனால் பார்வதியோ திரும்பவும் மகனை பிரிய வேண்டுமே என்ற கவலையில் முகம் சுருங்கிப் போனார்.
“ என்னய்யா…. திடீர்னு இப்படி சொல்ற உறவுக்காரவங்க எல்லாம் உங்க ரெண்டு பேரையும் விருந்துக்கு அழைச்சிருக்காங்க போகலைன்னா தவறா எடுத்துக்குவாங்க அதுமட்டுமல்ல அருணாவும் உங்களை விருந்துக்கு அழைக்கனும்னு சொல்லிட்டிருந்தா .. என்று கவலைபட்டவரை சமாதானப் படுத்த எழுந்தவன் அன்னையை நெருங்கி அவரது கைகளை பற்றிக் கொண்டவன்….
“அம்மா… அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை நான் உடனடியா கிளம்பியாகனும் அத்தை வீட்டுக்கு வேணும்னா ரிசப்ஷன் மூடிஞ்சதும் போறோம் மத்தவங்களை அப்பா சமாளிப்பார். என்ற மகனின் அழுத்தமான குரலில் …இதற்குமேல் அவனை வற்புறுத்த விரும்பாதவராய் அமைதியாகிவிட்டார் பார்வதி.
(கையணைக்க ..வருவான்!!)
ஹாய் பேபீஸ் கதையின் 20ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் பேபீஸ்
தமிழரசி….பெருந் தயக்கத்துடன் கையில் பார்வதி தந்த பால் செம்போடு…உடல் முழுவதும் நடுக்கம் பரவ… இதயம் இருமடங்காக துடித்து ஒலியெழுப்ப….பாண்டியனின் அறைக்கு முன்பு நின்றவளுக்கு… ஒரு கணம் …இப்படியே ஓடிவிடலாமா என்ற எண்ணம் தோன்றியது.
நினைப்பதெல்லாம் நடத்திவிடத் தான் முடியுமா என்ன? தயக்கத்தை உதறித் தள்ளியவள் மூச்சை இழுத்து பிடித்தவாறு.. தன் பூங்கரத்தால் அறைக்கதவை மெல்லத்திறந்து தலையை மட்டும் உள்ளே நுழைத்து அறையை பார்வையால் துழாவினாள். அறையில் யாரும் இருப்பதற்கான அறிகுறி தென்படாததால்…. நிம்மதி பெரு மூச்சுடன் மெதுவாக வலதுகாலை வைத்து உள்ளே நுழைந்தவளின் முகத்தில் பூக்களின் நறுமணத்தோடு...கூடிய குளிர்காற்று மோத…. மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்து தன் நுரையீரலில் நிரப்பிக் கொண்டவளின் மனம் சற்றே ஆசுவாசமடைந்தது.
அந்த பிரம்மாண்டமான படுக்கை அறையின் ஷோபாவில் அமர்ந்து ஏதோ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த பாண்டியை அவள் கவனிக்கவில்லை. ஆனால் அவள் அறையில் நுழைந்ததை அவளது கொலுசொலியில் உணர்ந்த பாண்டி சட்டென்று திரும்பி பார்க்க சிவப்பும் வெள்ளையும் கலந்த மணிகளைக் கொண்டு கணாணை கவரும் வகையிலல் டிசைன் செய்யப்பட்டிருந்த வெண்ணிற புடவையில் அதற்கேற்றவாறு பொருத்தமான நகைகள் அணிந்து கொண்டு தலை நிறைய நெருக்கமாக தொடுக்கப்பட்ட மல்லிகைபூக்கள் சரம்சரமாக இரு பக்க தோள்களைத் தாண்டி வழிய கை கால் முளைத்த வெண்தாமரை மலராய் வந்து நின்றவளைக் கண்டவன் இதயம் ஒரு கணம் நின்று துடிக்க…. ஏற்கனவே அவளது அழகில் மயங்கிக்கிடப்பவன் முற்றிலும் தன்னியல்பைத் தொலைத்து தடுமாறித்தான் போனான்….! காலையில் தான் கட்டிய மங்கல நாணில் அவன் பார்வை நிலைக்க அது உணர்த்திய உரிமையில் அவன் இதயம். தித்தித்தது. இவள் தன்னுடமை..!! எனக்கே எனக்கான என்னவள் என்ற உரிமையுணர்வு தோன்ற தலையிலிருந்து பாதம்வரை அவன் பார்வை அவளை உரிமையோடு ரசிக்க ஆரம்பித்தது.
தன்னை கணவன் பார்வையாலே கபளீகரம் செய்வதை உணராதவளாய்… ஒரு உயர்தர நட்சத்திர உணவு விடுதியின் அறையைப் போன்று தோற்றம் காட்டிய அவ்வறையை விழிகள் விரிய அணுவணுவாக ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள் தமிழரசி.
அவ்வறையின் அழகிலும் கலைநயத்திலும் மனதை பறிகொடுத்தவளாய் ஒவ்வொன்றாக பார்வையிட்டுக் கொண்டிருந்தவளை ஒரு பக்க சுவர் முழுவதையும் நிறைத்திருந்த பாண்டியின் பெரிய புகைப்படம் கவர…அதனருகில் சென்றவள் அழகிய புன்னகையோடு…….கரு நீல ஜீன் அணிந்து வெள்ளை நிற முழுக்கை சட்டையை முழங்கை வரை ஏற்றிவிட்டவாறு கண்களில் கூலர்ஸூடன் வசீகரமாய் புன்னகைத்தவாறு பாண்டியின் புகைப்படம் வீற்றிருக்க… அதில் கவரப்பட்டவளாக… அருகே சென்று பார்வையிட ஆரம்பித்தாள்.
அவனது வசீகரப் புன்னகையில் தன்னை ஒரு கணம் தொலைத்தவள் மறுகணமே தன் மனதை அடக்கியவளாக…
“ஓ… இவனுக்கு சிரிக்கக்கூட தெரியுமா?! ஆச்சரியம் தான்!! எப்பவும் சட்டைக்கு போடுற கஞ்சியை இவன் குடிச்ச மாதிரியில்ல விறைப்பா திரிவான்?! இதுல மட்டும் எப்படி க்ளோசப் விளம்பரத்துக்கு போஸ் கொடுக்குற மாதிரி இப்படி ஒரு புன்னகை…?! என்று உதட்டை சுழித்தாலும்… கரங்கள் அவளையும் மீறி அவனது கன்னத்தை மென்மையாக வருடத் தொடங்கியது.
அவள் அறைக்குள் வந்ததிலிருந்து அவளின் மீது பார்வையை பதித்திருந்தவன் அவளது பேச்சில் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவன்….அவள் தன் புகைப்படத்தை ஆசையாய் வருடியதில் அவளின் மென்கரங்களின் பரிசத்தை தன் கன்னங்களில் உணர்ந்தவனாக.,. கன்னங்களைத் தொட்டுப் பார்த்தான். அவளின் பரிசத்தை உணரத்துடித்த அவனது மனத்தின் ஆர்ப்பரிப்பை அடக்க இயலாது சத்தமின்றி எழுந்தவன் நிதானமாக தன்னவளை நெருங்கினான்.
நூலளவு இடைவெளியில் தன் பின்னே நின்றிருந்தவனின் வருகையை கூட உணராது மெய்மறந்து தன்னவனின் புகைப்படத்தை ரசித்துக் கொண்டிருந்தவளை…. பின்னிருந்து அணைத்தவன்.. அவளிள் செவிமடலை தன் மீசைமுடிகள் உரச முத்தமிட்டு… “நிஜம் நான் உன் பக்கத்திலேயே இருக்கும் போது நிழல் எதுக்கு பேபி… அங்கே வருடுவதை இங்கே வருடலாமே…..!! நான் என்ன வேணாம்னா சொல்லப்போறேன்…” என்ற கிசுகிசுப்பான கிறக்கமான குரலில் …. கூற திடுக்கிட்டவளாய் சட்டென்று அவனை நோக்கி திரும்ப….அவனது மார்பில் மோதிக்கொண்டாள். ஏற்கனவே. நெருங்கி நின்றிருந்தவன் வாகாக அவளது இடையை வளைத்துக் கொண்டான்.
இருவரின் முகமும் அருகருகே… அதிர்ச்சியில் அவளது கண்கள் மேலும் விரிய….பட்டாம்பூச்சியாய் இமையிரண்டும் படபடக்க…அதன் அழகில் மேலும் மயங்கியவன்… அவளது கண்களில் தன் முதல் முத்திரையை பதித்தான். அடுத்தடுத்து அவளது முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தியவன்…. இறுதியில் அவளது உதட்டில் இளைப்பாறத் தொடங்கினான் கணவனின் திடீர் அணைப்பிலும்…. முத்தப்படையெடுப்பிலும் முற்றிலும் நிலைகுலைந்து போனவள்… உடலெங்கும் நடுக்கம் பரவ… ஆழிப் பேரலையாய் தன்னை தாக்கிய புதுமையான உணர்வுகளால் அவன் கைகளில் செயலற்று துவண்டாள். மனைவியின் நிலையை அறிந்து கொண்டவன் வெற்றிப் புன்னகையுடன் அவளை கைகளில் அள்ளிக் கொண்டு கட்டிலை நோக்கி நடந்தான் ரத்னவேல் பாண்டியன்.
சுற்றிலும் மலர்ச்சரங்களால் திரையிடப்பட்டிருந்த மஞ்சத்தில் அவளை கிடத்தி… தானும் அவளருகில் சரிந்தவன் தன் மனையாளின் முகத்தை காதலாய் நோக்க… தன்னை மறந்து கண்களை இறுக மூடி.. இதழ்கள் துடிக்க மயங்கிக் கிடந்தவளை பார்த்தவனின் உணர்வுகள் அலையலையாய் பொங்கிப் பெருக… இதற்கு மேல் தாளதவனாய் ஆவேசமாய் தன்னவளின் இதழ் நோக்கி குனிந்தவன் அவளது துடிக்கும் இதழ்களை மீண்டும் சிறை செய்தான். ஆரம்பத்தில் மென்மையாய் ஆரம்பித்து பிறகு வன்மையாய் மாறிய அவனது இதழ் முற்றுகை விடாது தொடர சிறிது நேரத்தில் மூச்சுக் காற்றுக்காய் தவித்தவளுக்காய் மனமேயில்லாது அவளது இதழ்களை விலக்கி தன்னவளின் முகம் பார்க்க வெண்தாமரை மலராய் இருந்தவளின் முகம் தன் செயலால் செந்தாமரை நிறங்கொண்டதை ரசித்துப் பார்த்தவன்… அவளை முழுவதுமாக கொள்ளையிட்டு விட துவங்கும் பொருட்டு அவளது இதழ் நோக்கி குனிந்தவனின் கைகள் தன்னவளின் மேனியில் அத்துமீறி பயணிக்க…
அவனின் இதழ் தீண்டலில் ஏற்கனவே தன்னை மறந்த நிலையில் இருந்த தமிழரசியோ….அவனின் கரங்களின் அத்துமீறலில் தன் பெண்மை விழித்துக் கொள்ள அவனது கரங்களை மேலே முன்னேற விடாது தடை செய்ய… தீராத தாபத்திலும் மோகத்திலும் தன்னுள் எழும் உணர்வுகளின் பிடியில் சிக்கியிருந்தவனுக்கோ…அது அதிருப்தியைத் தர….
“ம்ப்ச்… பேபி… ப்ளீஸ்டா…!!” என்றவன் குரல் குழைந்து ஒலிக்க அந்த குரலின் மாயாஜாலத்துக்கு கட்டுப்பட்டவளாய் தன் தடையை அவள் விலக்கிக் கொள்ள… முழு வேகத்துடன் அவளை ஆக்ரமித்துக் கொண்டவன் கன் தேடலை தொடர அவனது தீண்டல்களில் உருகிக் குழையும் தன்னுடலையும் மனதையும் தடை செய்ய இயலாது தானும் அவனுள் புதைந்து போனாள் தமிழரசி. இரவு முழுவதும் தொடர்ந்த அவனது தேடல் விடிகாலை முடிவுக்கு வர திருப்தியுடன் அவளின் நெற்றியில் இதழ் பதித்து…. புன்னகைத்தவன் அவளின் முகம் பார்க்க… கலைந்த ஓவியமாய் தன்னருகே இப்போதும் கண்மூடி படுத்திருந்தவளை ஆசையாய் தூக்கி தன் மார்பில் கிடத்திக் கொண்டு அவளது நாடியை நிமிர்த்தி…!
“பேபி கண்ணைத் திறந்து பாருடா…. என்க…அவள் அப்போதும் ஏதும் பேசாமல் இருக்க…அவளது மௌனனத்தில் சஞ்சலமடைந்தவன்..
“என்மேல கோவமா பேபி…. நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா…?!!” என்று தவிப்புடன் வினவியவனை கண்களைத் திறந்து அவனது கலக்கத்தை ஆச்சரியத்துடன் பார்த்தவளின் மனம் எல்லையில்லாத நிறைவுடன்…இல்லை எனும் விதமாக தலையை ஆட்ட…அதில் நிம்மதியடைந்தவனாய் அவளை தன் மார்பில் இரு கைகளாலும் இறுக்கிக் கொண்டு அவளது உச்சந்தலையில் தன் இதழ் பதித்தவன் புன்னகையோடு நிம்மதியாக உறங்கிப் போனான்.
மனதில் பலவகையான குழப்பக்களும் கேள்விகளும்…தொடர்ந்த போதும்... அவனது அணைப்பில் தன் கலக்கங்கள் மறைய தானும் நிம்மதியாக கண்களை மூடிக் கொண்டாள் தமிழரசி. ஆனால் இந்த நிம்மதி நிலைக்குமா…?!
சென்னை…கதிரவனின் படுக்கையறை…
வழக்கம் போல விடியற்காலை 5 மணிக்கு தூக்கம் கலைந்து தாமரை எழ முற்பட அசைய முடியாத தன்னிலையை உணர்ந்தவள் மெதுவாக தலையை மட்டும் திரூம்பிப் பார்க்க…கதிரவன் தான் அவளை பின்னோடு அணைத்தவாறு நெருங்கிப் படுத்திருந்தவன்…வலது கையால் அவளது இடையை இறுக்கிப்பிடித்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனது பிடிக்குள் இருந்து மெல்ல விலகும் பொருட்டு திரும்பியவளின் அசைவை உணர்ந்தவன்….அவளை மேலும் இறுக்கிக் கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தான். அவனின் அடாவடியில் முகம் சிவந்து அவனை நோக்கியவளுக்கு முந்தைய இரவின் இனிமையான நிகழ்வுகள் மனதில் வலம் வர சந்தோஷமும் துக்கமும் ஒருங்கே எழுந்து அவளை வாட்டியது.
உணர்வுகளைத் தொலைத்த முகத்துடன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன அந்த அறைக்குள் நுழைந்தாள் தாமரை…! கட்டிலைச் சுற்றிலும் செய்யப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் இன்றைய நாளின் முக்கியத்துவத்தை உணர்த்த.. ஒருவித சிலிர்ப்பு உடலெங்கும் பரவத்தான் செய்தது. காலையில் அவன் கட்டிய தாலி மார்போடு உரசி தனக்கும் அவனுக்குமான பந்தத்தை உணர்த்தியது.ஆனால் அதை கட்டியவனின் மனதில் தான் இல்லையே என்ற வேதனையில் கண்களில் நீர் திரள…இது மற்றவர்களுக்காக கட்டாயத்தின் பேரில் கட்டப்பட்டது என்ற நினைவே கசந்தது. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள்.. அறையின் பக்கவாட்டில் இருந்தபால்கனி நிலைப்படியில் சாய்ந்து கைகள் இரண்டையும் கட்டிக்கொண்டு தன்னையே குறு குறுவென பார்த்துக் கொண்டிருந்த கதிரவனைக் கண்டு அதிர்ந்தவள். மறுகணமே உணர்வுகளை தொலைத்த பார்வையுடன் திரும்பி நடந்து.. நிலைக்கண்ணாடியின் மேசையில் கொண்டு வந்த பால் ii சொம்பை வைத்து விட்டு தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி வைக்க ஆரம்பித்தாள். கடைசியாக கழுத்தில் அணிந்திருந்த வைர நெக்லஸைக் கழற்ற அது எதிலோ வகையாக மாட்டிக்கொண்டு கழற்ற முடியாமல் சதிசெய்ய அதனோடு போராட ஆரம்பித்தாள்.
அவளின் ஒவ்வொரு செயலையும் ரசனையோடு கண்களில் காதல் வழிய பார்த்துக் கொண்டிருந்தவன் மெல்ல நடந்து வந்து அவளுக்கு பின்னால் நின்றவன் அவளின் நீண்ட கூந்தலையும் அதிலிருந்து சரம் கரமாய் தொங்கிக்கொண்டிருந்த மல்லிகைப்பூவை நோக்கி குனிந்து தன் முகம் புதைத்து ஆழ்ந்து நுகர்ந்தவன் அதன் இனிமையான மணம் மனதை மயக்க அப்படியே அதில் தன் முகத்தை புரட்ட நிலைக்கண்ணாடியில் தன்னவனின் வரவை உணர்ந்தவள் அவன் தன்னை நெருங்கி நின்றதிலேயே உறைந்தவள்… அவனது செயலில் முற்றிலும் நிலை குலைந்தாள். அடிவயிற்றில் சில்லென்ற உணர்வு எழுந்து உடலெங்கும் குளிர் பரவ நிற்க இயலாது தடுமாறியவள்…பற்றுதலுக்காக ஒப்பனை மேசையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மனைவியின் நிலையை உணர்ந்து கொண்டவன் நமுட்டுச் சிரிப்புடன்.. தன் இடது கையால் அவளது கூந்தலையும் பூச்சரத்தையும் மெதுவாக விலக்கியவன்… மனையாள் கழற்ற போராடிய நெக்லஸ்ஸின் கொக்கியை லாவகமா கழற்றி மேசை மீது வைத்தவன்… மனைவியை நிலைக்கண்ணாடியில் பார்த்தவாறே….இன்னும் நெருங்கினான்.அவனது உயிரைத் தீண்டும் நேசப்பார்வையை எதிர்கொள்ள இயலாது அவள் தலையை குனிந்து கொள்ள… குனிந்து அவளது முதுகில் தன் இதழை மெல்ல ஒற்றினான். தன்னவனின் முதல் இதழ் தீண்டலில் கூசிச் சிலிர்த்தவளின் படபடப்பு அதிகரிக்க... முதுகில் ஆரம்பித்த இதழோற்றல் படிப்படியாக முன்னேறி அவளது கழுத்து வளைவை நெருங்கி அதில் தன் முகத்தை புதைத்தவனுக்கு தான் அணிவித்த புத்தம் புது தாலியில் பூசப்பட்டிருந்த மஞ்சளின் மணமும் தன்னவளின் ப்ரத்யேக மணமும்… தலையில் சூடியிருந்த பூவின் மணமும் சேர்ந்த கலவையான மணம் மனதைமயக்க ஆழ்ந்து சுவாசித்து அதை நுகர்ந்தவனின் உணர்வுகள் கட்டுக்கடங்காமல் பேரலையாய் பொங்கிப் பெருக.. இதற்குமேல் தாமதிக்க இயலாது என்று உணர்ந்தவன் தன்னவளின் தோளை தன்னை நோக்கி சுண்டி இழுத்து திருப்ப தன் மார்பில் மலர்க் கொத்தாக விழுந்தவளின் முகத்தை நிமிர்த்தி..கன்னங்களை இரு கைகளாலும் இறுக பற்றி… தன்னவளின் முகம் பார்க்க கண்களை இறுக மூடி இதழ் துடிக்க நின்றிருந்தவளை நோக்கி ஆவேசமாக குனிந்தவன் அவளின் துடிக்கும் இதழ்களை சிறை செய்தான். அடுத்தடுத்த அவன் அதிரடிகளால் முற்றிலும் தன்னிலை மறந்து நின்றிருந்தவள் அவனது திடீர் இதழ் முற்றுகையில் இதுவரை தான் அறியாத புதுவித உணர்வுகள் தாக்க அதை தாங்க இயலாது மெல்ல துவள ஆரம்பித்தவள் பற்றுதலுக்காக அவனது முதுகையே இரு கரங்களால் வளைத்து பிடித்தாள்… மனைவியின் நெகிழ்வில் மனதுக்குள் மகிழ்ந்தவன் தன் உள்ளத்துக் காதலையெல்லாம் தன்னவளுக்கு உணர்த்திவிடும் பொருட்டு அவளது இதழில் மேலும் தன்னை புதைத்துக்கொண்டான் தாமரையின் கதிரவன். தன் காதலை வாய்மொழியாக உணர்த்தாமல் உடல்மொழியில் தன் அன்பை அவள் மீதான தன் நேசத்தை உணர்த்த விரும்பினான். ஆனால் அவனின் மனதை தாமரையாள் புரிந்து கொள்வாளா…?! என்பதை அவன் அந்நேரம் யோசிக்கவில்லை!!.
மனம் முழுவதும் மூச்சுக்காற்றாய் தன்னுள் நிரம்பி இருந்தவனின் தொடுகையில் உடல் தன்னையும் மீறி அவனிடம் குழைய… அந்நேரம் அவனின் நிராகரிப்பு தந்த வலி நினைவில் எழுந்து மூளை அவனை விட்டு விலகி. எழச்சொல்லி … அறிவுறுத்த… காதல் கொண்ட மனமோ…அவனது உயிர்த்தீண்டலில் உருகி கரைய… மனதுக்கும் அறிவுக்கும் இடையே போராடிக் களைத்தவள்…இறுதியில் காதலுக்கு அடிபணிந்தாள். அதை நினைத்துப் பார்த்தவளுக்கு துக்கம் தொண்டையை அடைக்க பீறிட்ட அழுகையை வாயைப் பொத்தி அடக்கியவள்…அவனிடமிருந்து மெல்ல விலகி குளியலறைக்குள் புகுந்தவள் தண்ணீரை திறந்து விட்டு கதறி அழத் தொடங்கினாள். அவனது தொடுகையில் உருகி குழைந்த தன்னை நினைத்தவளுக்கு அத்தனை அவமானமாக இருந்தது. காதலாய் ஆரம்பிக்க வேண்டிய உறவு….கடமைக்காய் ஆரம்பித்த விதத்தை நினைத்து உள்ளுக்குள் மருகினாள்..
வேதவல்லி பவனம்.
அடுத்தநாள் காலை இண்டர்காம் ஒலியில் கண்விழித்த பாண்டி… தன்மார்பை மஞ்சமாக்கி துயிலும் மனைவியின் தூக்கம் கலைந்து விடாமல் இண்டர்காமை எடுத்து காதில் வைக்க…. அந்தப்பக்கம் பார்வதி தான் அழைத்தார்.
“சொல்லுங்கம்மா..!” என்ற மகனது குரலிலேயே அவர்கள் இன்னும் துயில் களைந்து எழவில்லை என்பதை உணர்ந்தவராக…. சற்று தயங்கியவர் பிறகு..
“அய்யா பாண்டி மணி 9 ஆயிடுச்சு…. நீயும் மருமகளும் கிளம்பி வந்தீங்கன்னா…டிபன் சாப்பிட்டு ஊருக்கு கிளம்ப சரியாயாயிருக்கும்!...நாங்க எல்லாரும் தயாராகி உங்க ரெண்டு பேருக்காகத் தான் காத்திருக்கோம்” என்க..அப்போது தான் அறையின் கடிகாரத்தை பார்த்தவன்.. சிறு புன்னகையுடன் தன் தலையில் தட்டிக் கொண்டே தன் பதிலுக்காக காத்திருக்கும் அன்னையிடம்…
“இதோ அரைமணி நேரத்தில் கிளம்பி வர்றோம்மா…!!” என்று அழைப்பை துண்டித்தவன் மனையாளை பார்க்க பளிங்குச்சிலையாய் தன் மார்பில் பள்ளி கொண்டிருந்தவளின் எழிலில் தன்னைத் தொலைத்தவன்..அவளது முகத்தை தன் விரல் கொண்டு அளக்க அவனது ஸ்பரிசத்தில் சிலிர்த்தவள் இலேசாக சிணுங்கி உதட்டைச் சுழிக்க… அவனது பார்வை சுழித்த இதழ்களில் விழ..கைகள் கொண்டு அவளின் இதழ்களின் வடிவை அளந்தவன் அதன் மென்மையில் தன்னை தொலைத்தவனாய்…தன் இதழ்கொண்டு வருடும் ஆவலில் அவள் முகம் நோக்கி குனிய அவனது வருடலில் கண்விழித்தவள் அவனது நோக்கம் அறிந்து கொண்டவளாய் சட்டென்று துள்ளி எழுந்தவள் வெட்கத்தோடு குளியலறைக்கு புகுந்து கொண்டாள்.
அவளது திடீர் விலகலை எதிர்பாராதவன்… முகத்தில் மந்தகாச புன்னகை விரிய
“ச்சே…!! ஜஸ்ட் மிஸ்! என்று தன் தலையை கோதிக் கொண்டவன் எழுந்து உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்து வோர்க் அவுட் செய்ய ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் குளித்துவிட்டு குளியலறையிலிருந்து மெதுவாக தலையை நீட்டி எட்டிப் பார்த்தவள் அறைக்குள் அவன் இல்லை என்பதை உணர்ந்தவளாய்.. மெதுவாக வெளியே வந்தாள். ஓப்பனை மேசையை நெருங்கி தன்னை எளிமையாக அலங்கரித்துக்கொண்டவள் தலையில் சுற்றியிருந்த துவாலையை அகற்றி ஈர கூந்தலை விரித்து விட்டவள். அதை உலர்த்தும் பொருட்டு அறையின் பால்கனிக்குச் சென்றவளின் பார்வை வீட்டுத் தோட்டத்தில் படிய அதன் அழகில் மனதைப் பறிகொடுத்தவளாய்.. விழியகற்றாது பார்த்துக் கொண்டிருந்தவளை இரு வலிய கரங்கள் பின்னிருந்து அவளது இடையை சுற்றி வளைத்துக் கொள்ள.. முதலில் அதிர்ந்தவள் பிறகு தன்னவனை உணர்ந்து…அவனிடமிருந்து விடுபட போராட.. அவனோ அவளின் போராட்டங்களை எளிதாக முறியடித்து அவளை தன்னோடு இறுக்கி அணைத்து கொண்டு அவளது கழுத்து வளைவில் தன் முகத்தை புதைத்துக் கொள்ள… அதில் மேனி சிலிர்த்தவள் சுற்றுப்புறம் உணர்ந்து…
“விடுங்க……இது பால்கனி யாராவது பாரக்க போறாங்க…” என்று முகம் சிவக்க.. லேசாக அவன் பிடி தளரவும் அவன் அணைப்பிலிருந்து விலகியவள்…அறைக்குள் செல்ல அவளது பின்னோடு சென்றவன் மனைவியை தேட அவளோ ஒப்பனை மேஜையருகே நின்று இடையைத் தாண்டி நீண்டிருந்த கூந்தலை பின்னி சடையிட்டவள் பின்னே தூக்கி வீச அது அவளுக்கு பின்னால் நின்றிருந்த பாண்டியின் முகத்தில் மோதியது. தன் முகத்தில் வந்து விழுந்த சடையை ஆசையாய் கைகளால் வருடி முகர்ந்து பார்க்க..அதன் நறுமணத்தில் உணர்வுகள் கட்டவிழ்க்க…கண்களில் மயக்கம் பரவ கண்ணாடி வழியே தன்னவளை நோக்கியவன் தாபத்தோடு நெருங்க..கணவனின் முகமாற்றத்தை உணர்ந்து கொண்டவள் அங்கிருந்து நழுவ பார்க்க… மனைவியின் நோக்கம் அறிந்தவனாய் ஒப்பனை மேசையின் இருபுறமும் தன் கைகளை ஊன்றி அவளை சிறையிட்டவன் கண்கள் குறும்பில் மின்ன..
காலையில் மிஸ்ஸான கணக்கை இப்ப நேர் செய்யவா பேபி… என்று அவளை நெருங்கவும் அறைக்கதவு தட்டும் ஓசை கேட்கவும் சரியாக இருக்க… அப்போது தான் காலை அன்னையின் அழைப்பு நினைவு வந்தவனாக….
“பேபி.. !! வெளியே அம்மா தான் வந்திருப்பாங்க… நீ போய் கதவை தர நான் குளிச்சிட்டு வந்துடுறேன்… என்றவன் ஒரு அவசர முத்திரையை மனைவியின் இதழ்களில் பதித்து விட்டே குளியலறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான்.
அவனது அதிரடி முத்தத்தில் திகைத்து நின்றவளை கதவு தட்டும் ஒலி கலைக்க அவசரமாக ஓடிச்சென்று கதவை திறந்தாள். வெளியே பார்வதி கையில் காபிகோப்பைகளுடன் நிற்க…!
தமிழரசி “வா..வாங்க அத்தை!! நீங்க ஏன் அத்தை மாடிப்படி ஏறி எடுத்துட்டு வந்தீங்க நானே வந்திருப்பேனே…?!என்று முகம் மலர வரவேற்றவள்…அவர் கையிலிருந்து காபி டிரேயை வாங்கிக் கொள்ள தன் மருமகளின் முகத்தில் களைப்பையும் மீறிய மலர்ச்சியையும் வெட்கத்தில் சிவந்திருந்த அவளது வதனத்தையும் கண்டு கொண்டவர்… நிறைவுடன் அவளை பார்த்து புன்னகைத்தார்.
பரவாயில்லடா..?! மணி 9 ஆயிடுச்சு இன்னும் நீங்க பலகாரம் சாப்பிட கூட வரலையே அதான் காபியாவது கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ஆமா பாண்டி எங்கடா..?! என்றவரிடம்.
அ…அவங்க இப்ப தான் அத்தை குளிக்கப் போயிருக்காங்க.. என்றாள் நாணத்தோடு..! மருமகளின் முகச்சிவப்பு அவருக்கு பல கதைகளைச் சொல்ல மனதில் எல்லையில்லாத நிம்மதி எழுந்தது.
முகம் கனிய மருமகளை பார்த்தவர் பாசத்தோடு…”சரிடா!! பிளாஸ்க்ல காபி வச்சிருக்கேன் ரெண்டு பேரும் குடிச்சிட்டு சீக்கிரம் கீழே இறங்கி வாங்க! டிபன் சாப்பிட்டு ஊருக்கு கிளம்பனும் மணியாகுது…!!” என்றவர் சந்தோஷத்தோடு அறையை விட்டு வெளியேறினார்.
அதற்குள் குளியலறை கதவை திறந்து கொண்டு பாண்டி வெறும் டவலோடு வெளியே வர… அவனது தோற்றம் கண்டு முகம் சிவந்தவள் திரும்பி நின்று கொண்டாள்.
மனைவியின் மனநிலையை உணர்ந்து கொண்டவன் கள்ளச்சிரிப்புடன் அவளது அருகில் வந்து நின்று தன் தலையை சிலுப்ப பூவாய் சிதறிய நீர்த் துளிகள் அவளது முகத்தில் தெரிக்க அதில் சிலிர்த்து அவனை முறைத்துப் பார்த்தவள்…
“சீக்கிரம் தலையை துவட்டிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க அத்தை காபி குடிச்சிட்டு கீழ வரசொன்னாங்க ஊருக்கு கிளம்பனுமாம்.” என்று தலையை குனிந்தவாறே சொன்ன மனைவியின் வெட்கம் அவனை கிளர்ந்தெழ செய்ய..அருகில் நெருங்கியவனின் நோக்கம் புரிந்தவளாய் தேக்குமரத்தைப் போல உருண்டு திரண்டிருந்த அவனது மார்பை தன் மென் விரல்களால் தடுத்து நிறுத்தியவள் அவனது முகத்தை பாராது..
“ப்ளீஸ் அத்தை ஏதாவது நினைக்க போறாங்க சீக்கிரம் கிளம்புங்க வேலு” என்க அவளது ப்ரத்யேக அழைப்பில் அவனது கண்கள் மின்ன அவளைப் பார்த்தான். இதுவரை யாரும் அவனை இப்படி அழைத்ததில்லை. தன்னவளின் இந்த அழைப்பில் அவன் மனம் உற்சாகத்தில் திளைக்க…மார்பில் பதிந்திருந்த அவளது கையின் மேல் தன் கைகளை வைத்து அழுத்தியவன் அந்த கைகளை எடுத்து சிறு முத்தம் பதித்து விடுவித்துவிட்டு…முகம் விகசிக்க..உடை மாற்றும் அறைகக்கு சென்றவன் ஐந்து நிமிடத்தில் தயாராகி வெளியே வந்தான்.
க்ரீம் கலர் பேண்டும் அதற்கு பொருத்தமான அடர்ஊதாவும் நீலமும் கலந்த நிறத்தில் விலையுயர்ந்த சட்டையும் அணிந்து கொண்டு அழகாக வந்தவனை விழியகற்றாது பார்த்துக் கொண்டு நின்றவளை நெருங்கியவன்
“போலாமா பேபி.?!” .என்க தன்னை மறந்து தலையை ஆட்டியவளை தோளோடு அணைத்தவாறு அறையை விட்டு வெளியேறினான். படிகளில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்த அருணாச்சலமும் பார்வதியும்.. மகன் மருகளின் அன்னியோன்யத்திலும் ஜோடிப் பொருத்தத்திலும்.. நிறைவுடன் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். பெரியவர்களை பார்த்ததும் வெட்கத்தோடு விலக முற்பட்டவளை… அவன் விட்டால் தானே..!!
“ஏங்க..! அத்தை , மாமா பார்க்குறாங்க விடுங்க என்று மெல்லிய குரலில் கிசுகிசுத்தவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாய் புன்னகையுடன் கைகளை விலக்கிக் கொள்ள…நிம்மதி பெருமூச்சுடன்.. பார்வதியிடம் செல்ல அவர்களை மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தவர்.
“தமிழ்மா பூஜை அறையில் விளக்கேற்றி கும்பிட்டு வாம்மா!! பாண்டி… நீயும் போய்யா” என்கவும் தலையை ஆட்டிவிட்டு கணவனுடன் பூஜையறைக்குள் நுழைந்தவள் பூஜையை முடித்துவிட்டு… நெற்றியில் குங்குமம் இட்டுக்கொள்ள சிமிழை எடுத்தவளை தடுத்து தானே குங்குமத்தை எடுத்துஅவளது வகிட்டில் வைத்தவன்….பற்றிய அவள் கையிலிருந்த குங்குமத்தை தன் நெற்றியில் இட்டுக் கொண்டான். கணவனது செய்கையை வாயைப் பிளந்து பார்த்தவளுக்கு ஆச்சரியத்துடன் வெட்கமும் வர முகம் சிவந்தது. ரசனையோடு அதை பார்த்தவன் அவளது கையைவிடாது பிடித்தவாறே அறையை விட்டு வெளியே வந்தான்.
சாப்பாட்டு மேசையில் இவர்களுக்காக காத்திருந்த பார்வதி இருவரையும் அமரவைத்து பரிமாற….
“நான் பரிமாறுறேன் நீங்க உட்காருங்க அத்தை.. மாமா சாப்பிட்டாச்சா அத்தை என்று வினவ…மருமகளின் பொறுப்பில் முகம் கனிந்தவர். அவளது கையை பிடித்து பாண்டியின் பக்கத்தில் அமர வைத்தவர்.
“நானும் உங்க மாமாவும் எப்பவோ சாப்பிட்டாச்சு… நீ உட்கார்ந்து சாப்பிடு முதல்ல…என்றவர் புது மணத் தம்பதிகளுக்காக தன் கையால் பரிமாறினார். முதலில் பாதாம் அல்வாவை இருவருக்கும் வைத்தவர் பொங்கல் , இட்லி ,பூரி என்று வரிசையாக பரிமாறியவர் சட்னி கிண்ணங்களை எடுத்து அருகில் வைத்து விட்டு “சாப்பிட்டு வாங்க நான் ஹால்ல இருக்கேன்” என்றுவிட்டு புதுமணத் தம்பதிகளுக்கு தனிமை வழங்கி நாசூக்காக வெளியேறினார்.
அவர் செல்லவே காத்திருந்தவனைப் போல தன் இலையில் இருந்த பாதாம் அல்வாவை எடுத்தவன் தன் மனைவிக்கு ஊட்டிவிட எத்தனிக்க…அவளோ வேண்டாமென மறுத்து ”நீங்க சாப்பிடுங்க நான் சாப்பிட்டுக்கிறேன்!” என்க அவன் பிடிவாதமாக ஊட்ட எத்தனிக்க அவனது பிடிவாதத்தில் மனதுக்குள் சலித்தாலும் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டாள்.. சட்டென்று இடது கையால் அவளது முகத்தை பற்றி அவளது இதழோடு இதழ் சேர்த்தவன் சிறிதுநேரத்திற்கு பிறகு விலக..இப்போது இனிப்பு அவனது வாய்க்குள்ளே இடமாறியிருக்க….கள்ளச்சிரிப்போடு ரசித்து சாப்பிட்டவன்…
“வாவ்!!.... இதுவரை நான் இப்படியொரு பாதாம் அல்வாவை சாப்பிட்டதேயில்லை செம்ம டேஸ்ட் என்று சப்புக் கொட்ட…கணவனின் செயலில் முதலில் திகைத்தவள் அவனது பேச்சில் முகம் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.
சில பல சீண்டல்களூடன் காலை உணவை முடித்துவிட்டு வரவேற்பரையில் தன் தந்தைக்கு அருகில் சென்று அமர்ந்தான் பாண்டியன்.
“கிளம்பலாமா…பாண்டி என்றவரை யோசனையோடு பார்த்தவன்…
“அப்பா அதுக்கு முன்னாடி எனக்கு உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்”!
“சொல்லுப்பா என்ன விஷயம்?!” என்றவரிடம்
“நான் இன்னும் ஒரு வாரத்தில் டியூட்டியில் ஜாய்ன் பண்ணனும்பா…அதனால சென்னையில் ரிசப்ஷன் முடிஞ்சு அப்படியே மறுவீட்டு பங்ஷனை முடிச்சிட்டு அங்கிருந்தே ஊருக்கு கிளம்பலாம்னு நினைக்கிறேன்”!. என்க
மகனது வார்த்தைகளை கேட்டவருக்கு முதலில் வருத்தமாக இருந்த போதும் அவனது வேலையை கருத்தில் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டார் அருணாச்சலம்.. ஆனால் பார்வதியோ திரும்பவும் மகனை பிரிய வேண்டுமே என்ற கவலையில் முகம் சுருங்கிப் போனார்.
“ என்னய்யா…. திடீர்னு இப்படி சொல்ற உறவுக்காரவங்க எல்லாம் உங்க ரெண்டு பேரையும் விருந்துக்கு அழைச்சிருக்காங்க போகலைன்னா தவறா எடுத்துக்குவாங்க அதுமட்டுமல்ல அருணாவும் உங்களை விருந்துக்கு அழைக்கனும்னு சொல்லிட்டிருந்தா .. என்று கவலைபட்டவரை சமாதானப் படுத்த எழுந்தவன் அன்னையை நெருங்கி அவரது கைகளை பற்றிக் கொண்டவன்….
“அம்மா… அதுக்கெல்லாம் இப்ப நேரமில்லை நான் உடனடியா கிளம்பியாகனும் அத்தை வீட்டுக்கு வேணும்னா ரிசப்ஷன் மூடிஞ்சதும் போறோம் மத்தவங்களை அப்பா சமாளிப்பார். என்ற மகனின் அழுத்தமான குரலில் …இதற்குமேல் அவனை வற்புறுத்த விரும்பாதவராய் அமைதியாகிவிட்டார் பார்வதி.
(கையணைக்க ..வருவான்!!)
ஹாய் பேபீஸ் கதையின் 20ஆம் அத்தியாயத்தை பதிந்து விட்டேன் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் பேபீஸ்
Last edited: