அன்பு தோழமைகளே! இதோ நாங்க வந்துட்டோம்... உங்கள் சுசிமதி... இன்னும் தொடங்காத 'சாக்லேட் நிறத்தழகி' கதையிலிருந்து ஒரு குட்டி "டீ"
கதாநாயகன் : விதுரஷன்
கதநாயகி: மது
மாளிகை போன்ற அறையில் சிறு எறும்பாய் அமர்ந்திருந்தாள் அவள்
அவள் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக .., அவள் கழுத்தில் மிளிரிய மங்கல நாணை கைகளில் ஏந்தி பார்த்தவள் மேலும் குமுறினாள்
பிரத்யேக பூ அலங்காரத்துடன்..., காற்றில் மல்லியும் ரோஜாவும் சுகந்தத்தை பரப்ப அந்த சுகந்தம் அவளின் பிறந்த வீட்டை நினைவு படுத்த மேலும் நொந்து கொணடாள்
முதலிரவு அறையில் தலை நிறைய மல்லிகை சூடி கண்களில் கண்ணீர் வெள்ளமாய் கரைபுரண்டோட அமர்ந்திருந்தாள் மது... அது தான் அவளின் பெயர்
தத்தம் தன் பிறந்த வீட்டின் நினைவில் முழ்கியிருந்தவளுக்கு தன் முன் நின்றிருந்த ஆறடி ஆண்மகனை கவனிக்கவில்லை
அவள் முன் நின்றிருந்த மாலை சூடிய மன்னன் விதுரஷன்
"ஹேய்...! யூ ப்ளாக்கி ...!" என்ற அவனது அமைப்பில் சித்தம் தெளிந்தவள் போல் விருட்டென எழுந்தவள்
அவன் கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்தவள்.., அவன் கால்களை தொட்டு வணங்கினாள் .., துாக்கி விடுவான் என்ற எதிர்பார்ப்பில் தலை உயர்த்தி அவன் முகம் பார்த்தாள் ஆனால் மிஞ்சியது ஏமாற்றமே
"யூ ப்ளடி...! என்ன தைரியம் உனக்கு என்ன டச் பன்னறதுக்கு இடியட்..!" என அவளை தள்ளிவிட்டான் விதுரஷன்
முகமெல்லாம் வேர்த்து கொட்ட ... அவளின் இதயதுடிப்பின் ஒசை படபடவென துடிக்க.. "விது...! " என மென்மையாய் அழைத்தவளை
"ஹேய்...! ஸ்டே அவே ஃபரம் மீ யூ ப்ளாக்கி...! என் பேர் சொல்லி கூப்பிடுற அளவுக்கு உனக்கு தகுதி இல்லை " என முறைத்தான்
இதயமே நின்றது போல் ஆனது அவளுக்கு
"நா உங்கள கட்டிகிட்டவ எனக்கு உரிமையில்லனா வேற யாருக்கு உரிமை இருக்கு ..? " என கேட்டே விட்டாள்
"ஹா! ஹா!" அறையே அதிரும்படி சிரித்தவன்... "கட்டிக்கிட்டா மட்டும் எல்லா உரிமையும் வந்திருமா??? என் விரல் நுனி தீண்டுவதற்கும் ஒரு தகுதி வேணும்..." என நிறுத்தி அவளை தலை முதல் கால் வரை ஆராய்ச்சியாய் பார்த்தவன்... "உனக்கு அந்த தகுதி இல்லை"
வார்த்தைகளால் சுட்டுப் பொசுக்க இவனால் மட்டுமே முடியும்... பேதை நெஞ்சம் பெருந்துன்பத்தில் விம்ம... கண்ணீர் கண்கள் எனும் கரையை கடந்து கரைபுரண்டோட... கல்லாய் சமைந்தாள் மது விதுரஷனின் மது....
மெரூன் நிற புடவையும்.. நெற்றியில் வட்ட பொட்டும் அவன் சூடிய குங்குமமும் நெற்றியில் மிளிர அவளின் சாக்லேட் வதனத்தில் தங்கமே இன்னும் அழகு மிளிர ஜொலிக்க ... அவளின் ஒன்றை கல் மூக்குத்தி பளீச்சிட..., சிவப்பு நிற கற்கள் பதித்த ஜிமிக்கியுடன் கொள்ளை அழகாய் நின்றிருந்த மதுவிடம்... அவனின் கண்களுக்கு மட்டும் குறையாய் தெரிந்தது அவளின் நிறம்...
இவ்வளவு நேரம் "ப்ளாக்கி" என கூப்பிட்டது அவளின் நிறத்தை தான் என மதுவின் புத்திக்கு உரைத்தது....
படிச்சுட்டு சொல்லுங்கோ டியர்ஸ்... டேக் விட்டு போயிருந்தா மன்னிச்சு மக்களே!