All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுதீக்ஷ்ஷா ஈஸ்வரின் "என் சுவாசமே" - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரிண்ட்ஸ்,
நான் சுதீக்ஷா ஈஸ்வர். இங்க ஸ்டோரி எழுதணும் உங்க permission வேண்டும் என்று கேட்டவுடன் எனக்கு திரி அமைத்து குடுத்த srikala mamக்கு என் முதல் நன்றி.

ஸ்டோரி பத்தி எனக்கு சொல்ல தெரியல. சோ போக போக பார்போம். தாங்க் யு ஆல் . படிச்சுட்டு ஒரு லைக் தந்தால் மகிழ்ச்சி, கமெண்ட் தந்தால் இன்னும் மகிழ்ச்சி. நிறை அல்லது குறை எதுவா இருந்தாலும் ஷேர் பண்ணுங்க பிரிண்ட்ஸ்.

என் சுவாசமே - 1

காலை மணி 6.30
அழகான ரம்யமான பொழுது. விடிந்தும் இன்னும் சரியாக புலராத வேளை. இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டி மலை பிரதேசம்.

மிதமான மழைச்சாரல். இயற்கையுடன் இயைந்து வாழ விரும்புவர்களுக்கு ஒரு சொர்கபுரி.

உடலை ஊடுருவும் குளிரில் ஆங்காங்கே சில மனித தலைகளின் நடமாட்டம் தெரிந்தது.

குளிரால் எழமுடியாமல் போர்வைக்குள் நெளிந்தது ஒரு உருவம். ஒரு
வலிய ஆண் மகனின் விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்து மரங்கள் அடர்ந்த கானகத்தின் வழியே நடந்து செல்லும்போது பாதை முடிவில் ஒரு அழகிய சோலை, பட்சிகளின் கான கீதம் செவியை வருடி மனதை அடைய நடுவே ஓர் சிறிய நீர்விழ்ச்சி.

அந்த சூழல் மனதிற்கு இனிமை தர அவன் கண்களை சந்தித்து “என்ன எப்போதும் இப்படியே அன்பா பாசமா பார்த்துக்குவீங்களா?”

கண்களில் ஆசையுடனும், மனதில் காதலுடனும், அவன் என்ன சொல்ல போகிறான் எனும் எதிர்ப்பார்ப்புடனும் அவன் முகம் நோக்கினாள்.

அவன் தன் அழுத்தமான உதடுகளை திறந்து, “ அடியேய் எரும மாடே பொழுது விடுஞ்சு எவ்ளோ நேரம் ஆகுது ஒரு பொம்பள புள்ளைக்கு இன்னும் என்ன தூக்கம் வேண்டி கிடக்கு ” என பெண் குரலில் அலறினான்.

அடித்து பிடித்து எழுந்தாள் அகத்தியா.( யெஸ் நீங்க கெஸ் பண்ணுனது ரைட். சாட்சாத் நம்ம நாயகியே தான்)

அந்நேரம் அவள் போன் அலற சுகமான கனவு கலைந்த எரிச்சலுடனே போனை பார்த்தாள். கூட இருக்கும்போது தான் உன் தொல்லை தாங்கல இப்ப கனவுலையும் வந்து டிஸ்டர்ப் பண்ற உன் இம்ச தாங்கலமா என சலிப்புடனே ஆன் செய்து “ம்ம்ம் சொல்லுமா” என்றாள்.

“ ஏண்டி எழுந்துருச்சியா இல்லையா ஒரு பொம்பள புள்ளைக்கு என்ன தூக்கம் வேண்டி கிடக்கு எல்லாம் இந்த மனுசன சொல்லணும் உன்ன செல்லம் குடுத்தே கெடுத்துட்டார் உன்னை எல்லாம் நாலுசாத்து சாத்தி வளத்துருக்கணும் இவரால தான் நீ கெட்டு குட்டிசுவரா போய்ட்ட என தனது மகளிடம் ஆரம்பித்து கணவரிடம் முடித்தார் பானுமதி.

தன் பேச்சு இழுக்கபட்டவுடன் ஹால் சோபாவில் காபி குடித்து கொண்டிருந்த கிருஷ்ணனின் மண்டையில் அபாய மணி அடித்து அவரை அலெர்ட் செய்தது . மெதுவாக இடத்தை காலி செய்தார். (பொழைக்க தெரிஞ்சவர்)

தாயிடம் ஏதோ பேசி சமாளித்து தன் வேலையை தொடர்ந்தாள். (அதாங்க தூங்குறது நமக்கு நம்ம வேலை முக்கியம்)

மறுபடியும் அலறி அவளது தூக்கத்தை தடை செய்தது அவளது அலைபேசி.
“நம்மள நிம்மதியா தூங்கவிடமாட்டாங்களே என எடுத்து அட்டென்ட் செய்வதற்குள் கட் ஆனது அப்பாடா தொல்லைவிட்டுச்சு என நிம்மதி அடையும் முன் மறுபடியும் தனது இருப்பை வெளிபடுத்தியது ஹலோ என சலிப்புடனே காதில் வைத்தாள்.


ஏன்டி எத்தனை கால் பண்ணிருக்கேன் ஒரு போன் அட்டென்ட் பண்ண எவளோ நேரம் சரி நீ கிளம்பிட்டியா இல்லையா எனக் கேட்டாள்

இம்முறை அலைத்தது அவள் தோழி மிருதுளா.மறுபடியும் முதல்ல இருந்தா ஷப்பா முடியலடா சாமி என அலுத்துக்கொண்டே ஏண்டி என்ன ஆச்சு என்று கேட்டாள்

என்னது என்ன ஆச்சா அடியே உன் போன் எடுத்து பாரு என்றாள் என்ன சொல்லுது பக்கி என யோசித்து கொண்டே
சரி பாப்போம் என்னது 19 மிஸ்டு காலா

அவளது கவனத்தை கலைத்தது எதிர் முனையின் குரல் நீ இன்னும் கிளம்பலை அப்போது தான் இன்று முக்கியமான மீட்டிங் இருப்பதும் அதற்கு தான் நைட் தயார் செய்து விட்டு லேட்டாக உறங்கியதும் ஞாபகம் வந்தது அய்யய்யோ இத சொன்னா திட்டுவாளே என நினைத்து சரி சமாளிப்போம் என்று இல்லடி நான் இதோ கிளம்பிட்டேன் என சளைக்காமல் பொய் சொன்னாள் அகத்தியா.


அவளது தோழி ஆயிற்றே அதை நம்பவில்லை ஏண்டி பொய் சொல்லாத நீ இன்னும் எழுந்திரிக்கல
தானே என்றாள். “அய்யய்யோ பக்கி கண்டு பிடிச்சுடுச்சே என்ன சொல்றது ஓகே சமாளிப்போம் என இல்லடி நான் கிளம்பிட்டேன் என்றாள் அகத்தியா.

அப்டியா சரி வந்து கொஞ்சம் வெளிய எட்டி பாரு என்றாள் என்ன சொல்லுது லூசு சரி போய்தான் பாப்போமே என கட்டிலை விட்டு இறங்கினாள் .

வாசலில் மிருதுலா இவளை முறைத்த படி நின்று கொண்டு இருந்தாள் இது தான் நீ கிளம்பிட்ட லட்சணமா என திட்டிக்கொண்டே உள்ளே வந்தாள்.

அவளுக்கு ஒரு அசட்டு சிரிப்பை பதிலாக தந்துவிட்டு காபி குடிக்குறியாடி என்றாள். ஏண்டி எப்படி டி இவளோ கூலா இருக்க எனக்கேட்டு முடியும் வரை அவளை முறைத்தாள்.

அதற்கெல்லாம் அசர்பவாளா அகத்தியா “ஏண்டி நீயும் டென்ஷன் ஆகி என்னையும் டென்ஷன் ஆக்குற இதுக்கும் முறைப்பு தானா போடி அப்புறம் பிரிட்ஜ் ல பால் வச்சுருக்கேன் போய் காபி போட்டு குடிச்சுட்டு எனக்கும் போட்டு வை என்ன செல்ல குட்டி நான் போய் கிளம்புறேன் சரியா என்றாள்.

அவளை அடிக்க எதாவது கிடைக்கிறதா என சுற்றி முற்றி தேடிகொண்டு அடியே உன்னை கொல்லாம விடமட்டேண்டி லேட் ஆச்சேனு நான் அடிச்சு பிடிச்சு ஓடி வந்தா அம்மணி இன்னும் கிளம்பாம இருந்துட்டு இதுல்ல நான் வந்து உனக்கு காபி போட்டு வைக்கணுமா என காளி அவதாரம் எடுத்திருந்தாள் மிருதுளா.

அவள் கைக்கு சிக்காமல் போக்கு காட்டி பாத்ரூம்மிற்குள் நுழைந்தாள் அகத்தியா.ஆனாலும் தோழியின் சேட்டையை ரசித்து கொண்டே காபி போட கிட்செனிர்க்குள் போனாள் அவளது தோழி.

பின் அவள் கிளம்பி வரவும் இருவருமாக வேகவேகமாக கொறித்து விட்டு ஆபீஸ் கிளம்பினர். ஸ்கூட்டியின் பின் புறம் மிருதுலா உட்கார இருவரும் பேசிய படியே பயணித்தனர். அவர்கள் இருவரும் வேலை செய்வது ஒரு பல கிளைகள் கொண்ட ஒரு ஹோட்டல் நிறுவனத்தின் அலுவலக பிரிவில்.

இன்று கோயம்பத்தூரில் மதியம் அலுவலக சமந்தமான ஒரு முக்கிய மீட்டிங் நடை பெற இருந்தது. அதற்கான ஆவணங்களை தயார் செய்து அதை ஆபீசில் ஒப்படைத்து சரி பார்த்து பின் அதை பிரிண்ட் செய்து மேலாளரின் பார்வைக்கு அனுப்பி அவரது கையொப்பம் பெறவேண்டும் இரவு வெகு நேரம் இந்த வேலையை செய்து கொண்டு இருந்ததால் காலையில் லேட் ஆகி பரபரப்புடன் கிளம்ப வேண்டிற்று பேசிக்கொண்டே வந்தாலும் சாலையில் கவனம் வைத்துதான் வந்து கொண்டு இருந்தாள். ஆனால் விதி யாரை விட்டது! அவளது நேரம்.

சாலையில் திடீரென எங்கிருந்தோ ஒரு குழந்தை ஓடி வந்தது. அவள் அதை முன்பே கவனித்து விட்டாலும் மிக அருகில் வந்ததால் அவளால் பிரேக் பிடிக்க முடியவில்லை.

அந்த குழந்தையை காப்பாற்ற எண்ணி அவள் வண்டியை அந்த புறம் திருப்ப அந்நேரம் பார்த்து அப்புறம் ஸ்கூல் வேன் பிள்ளைகளுடன் வர அவர் இவர்களை பார்த்து பிரேக் போட முயல முடியாமல் அது தனது கட்டுபாட்டை இழந்து எதிர் புறம் வந்து கொண்டு இருந்த ஒரு கார் மீது மோத போக . அது ஒரு குறுகிய வழிப்பாதை என்பதால் அவர் அதனால் தடுமாறி மரத்தில் மோதி விட்டார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட விபத்தில் எல்லாம் தலைகீழ் ஆனது. இவர்கள் இருவரும் சிறு காயத்துடன் ரோட்டில் விழுந்து கிடக்க வேனில் இருந்த குழந்தைகள் பயத்தில் கத்திக்கொண்டு இருந்தனர் டிரைவருக்கு அவளவு அடி இல்லை

இருவரும் தட்டு தடுமாறி எழுந்து பார்க்கும் போது முதலில் ஒன்றுமே புரியவில்லை. பிறகு தான் நடந்தது புரிந்தது,அது ஒரு குறுகலான சாலை என்பதால் கண் இமைக்கும் நேரத்தில் விபத்து நடந்துவிட்டது.

சிலர் வேகமாக வேன் டிரைவரை மீட்டு முதலுதவி செய்து கொண்டு இருந்தனர். நல்லவேளை அதில் இருந்த பிஞ்சு குழந்தைகள் சிறு காயம் கூட இல்லாமல் தப்பி விட்டனர்.

ஒரு கூட்டமோ அந்த காரில் இருப்பவர்களை மீட்க சென்றனர். கார் கதவை திறக்க முடியாமல் போராடி கொண்டு இருந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் காயங்களை கூட பொருட்படுத்தாமல் அந்த பிள்ளைகளை கவனிக்க சென்றனர்.

ஆம்புலன்ஸ் வந்து வேனில் வந்த அனைவரையும் அனுப்பிவிட்டு வந்தனர். அப்போது தான் கார் கதவை உடைத்து அதில் இருந்த மூவரையும் மீட்டு வேறொரு அம்புலன்சில் அனுப்பினர்.

அகத்தியாவிற்கு மனசே சரியில்லை தன்னால் தான் இந்த விபத்து நடந்தது என்று நினைத்து கதற ஆரம்பித்தாள். என்ன தான் விளையாட்டு பிள்ளையாக இருந்தாலும் மிகவும் இளகிய மனம் கொண்டவள்.

“ஏய் இங்க பாரு அவங்களுக்கு ஒன்னும் ஆகாது ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் செல்ப்.இது உன்னால நடந்தது இல்ல ப்ளீஸ் சொல்லறத கேள்ளு” என அவளை சமாதானப்படுத்தினாள் மிருதுளா.

அப்படியும் அவளது சமாதானம் எடுபடாமல் போக தன் பலம் முழுக்க திரட்டி அவளது கன்னத்தில் ஒரு அரை விட்டாள், அதில் மிரண்டு பொய் அவளை நோக்கினாள்.

சொன்னா கேட்க மாட்ட இதுக்கு நீ காரணம் இல்ல புரியுதா என அவளை போட்டு உலுக்கினாள் மிரு.

அதில் தன் உணர்வு அடைந்து இல்லடி இது என்னாலதான் என அதே பல்லவியை பாடினாள் இங்க பாரு நான் தான் சொன்னேன்ல நீ அந்த குழந்தைய காப்பாற்ற நெனச்ச பட் இப்டி ஆகும்னு தெரியாதுல்ல இது உன்னோட தப்பு எதுவும் இல்ல புரியுதா. என சிறு கண்டிப்புடன் முடித்தாள் மிருதுளா.

இதில் அவளது புலம்பல் குறைந்ததே தவிர முற்றுமாக நிற்கவில்லை. தோழி குற்ற உணர்வில் பேசுகிறாள் என புரிந்து வா வீட்டுக்கு போகலாம். இப்ப அதிர்ச்சில இருக்க எதுவும் பேச வேணாம் ஆபீஸ்க்கு லீவ் சொல்லிடு பொய் ரெஸ்ட் எடு நான் பார்த்துக்குறேன்.

அவளோ ப்ளீஸ் டி என்னால வீட்டுல நிம்மதியா இருக்க முடியாது. வா இப்ப நம்ம ஹாஸ்பிடல் போலாம். ப்ளீஸ் டி எனக்காக வாயேன் எனக் கெஞ்சினாள்.

உன்னக்கு என்ன பைத்தியமா? சொல்றத கேட்கவே மாட்டியா நீ எல்லாம் பிடிவாதம் சொன்ன கேளு என கோவத்தில் ஆரம்பித்து சிறு கெஞ்சலுடன் முடித்தாள் மிரு.

அவளோ அதில் காதில் வாங்கினாள் தானே நீ வரலைனாலும் பரவாயில்ல நான் மட்டும் போறேன் நீ ஆபீஸ் போ என தன் நிலையிலேயே நின்றாள் .

சொன்னா கேட்கமாட்ட வந்து தொல என அவ்வழியே வந்த ஆட்டோவை மறித்து ஏறி கொண்டனர். வழியெங்கும் அவள் பிரமை பிடித்தார் போல் தான் வந்தாள் மிருதுள்ளாவிற்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது.

ஹாச்பிட்டளுக்குள் நுழைந்தவுடன் அவ்வுளவு நேரம் இருந்த தைரியம் அவளை விட்டு ஓடி விட்டது போலும். கால்கள் தள்ளாட அங்கேயே வேரோடி விட்டது போல் நின்றாள்.

கல் என சமைந்த கால்களை மெதுவாக எட்டு வைத்து எடுத்து சென்றாள். அவளை கை தாங்கலாக அழைத்து சென்று அங்கு இருக்கும் பெஞ்சில் அமர்த்தி விட்டு ரிசெப்சென்னில் விவரம் கேட்டு வந்தாள்.

ICU எனும் போர்ட்டை கண்டவுடன் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும்
விடை பெற்றுவிட்டது. ஏற்கனவே தன்னால் தான் இந்த விபத்து என மருகி கொண்டு இருந்தவளுக்கு, இது இன்னும் பீதியை உண்டு பண்ணியது.

அவர்களை சார்ந்தவர்கள் யாரும்மின்றி ஒரு 60 அல்லது 65 மதிக்கத்தக்க ஒருவர் மட்டும் வெளியே கை நெற்றியில் கட்டுகளுடன் இருந்தார். அவர்களை தயக்கம் சூழ்ந்து கொள்ள என்ன செய்வது என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டு இருந்தாள் அகத்தியா.

அப்பொழுது கால் பேசி மிதித்து விட்டு வந்த மிருதுளா அவளது தோற்ற்றம் கண்டு அருகில் சென்று “ஹேய் ஏண்டி இங்கேயே நின்னுட்ட போலையா” என்றாள்.

இல்லடி எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்றாள். அப்டியா அப்ப வா போயிறலாம்.

ம்ஹும் ப்ளீஸ் டி பார்த்ட்டு மட்டும் போய்டலாம் ப்ளீஸ் டி சரி அப்ப வா இங்கேயே ஏன் நின்னுட்டு இருக்க இல்லடி பயமா இருக்கு என மறுபடியும் கூற மிருதுவிருக்கு டென்ஷன் தலைக்கு ஏறியது

பல்லை கடித்துக் கொண்டு ஒன்னு போய் பாரு இல்ல வா திரும்பி போய்டலாம்.
இப்டி என் உசுர வாங்காத என்றாள் மிருதுளா.

சுவாசம் வரும்.....
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரிண்ட்ஸ்

நான் அடுத்த ud யோட வந்துட்டேன். என்ன எதிர் பார்த்த அனைவருக்கும் சாரி கேட்குறேன். உன்ன யார் எதி பார்த்தா அப்படின்னு நீங்க சொல்றது கேட்குது. சோ நோ வெட்டி பேச்சு. இன்னைக்கு லைக் பட்டன் பிரஸ் பண்ண கொஞ்சம் கஷ்டப்பட்டு கமெண்ட் பண்ணுங்க ப்பா pls அப்பத்தான் நான் எப்டி எழுதுறேன்னு எனக்கு தெரியும்.

images - 2019-03-04T180558.148.jpg







என் சுவாசமே - 2

வாழ்வில் மாற்றம் ஒன்றே மாறாதது.

அகத்தியாவின் மனநிலையை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். ஆம், காலையில் அவள் இருந்த மனநிலை என்ன?, இப்பொது அவள் இருக்கும் நிலை என்ன?

இந்த சம்பவம் அவள் மனதை மிகவும் பாதித்து இருந்தது. தான் பொறுப்பாகாத ஒரு சம்பவத்திற்கு அவள் தன் மேலேயே பழியை போட்டுக் கொண்டாள்.

இதில் அவள் பங்கு துளி கூட இல்லாதிருப்பினும்,அவளுள் இருக்கும் மென்மனதுடையவளோ, நடந்த அனைத்திற்கும் அவளையே பொறுப்பாகி இருந்தது. மனசாட்சியின் குற்றச்சாட்டுகளை தாள முடியாமல் அவள் மனமோ “ஓவென” கதற வேண்டும் போல் இருந்தது. அதன் பழிச்சொற்களால், அதன் வீரியம் தாங்க முடியாமல் அவள் கண்கள் நில்லாமல் அருவியை பொழிந்த வண்ணமே இருந்தது.

சிலர் இப்படி தான் தேவை இல்லாத விசயகளுக்கு, தேவையே இல்லாமல் குற்றஉணர்ச்சிகளுக்கு ஆளாகி, தன்னை தானே வருத்திக்கொண்டு
இருப்பர். இவளும் இந்த ரகம் தான்.

அதனால் தான் மிருதுலாவின் சமாதானங்கள் எடுபடாமலே போயிற்று. தோழியின் நிலை கண்டு அவளுக்கும் பாவமாக இருந்தாளும், எதையும் காது கொடுத்து கேட்க மாட்டேன் என்பவளிடம் கோவமும், பரிதாபமும் ஒருங்கே தோன்றியது.


ஐ.சி.யு வின் அறை கதவு திறக்கப்பட்டது. ஏதோ தனது குடும்பத்தில் உள்ளவர்க்கே எதோ ஆனது போல் ஒரு பதற்றத்துடன் காத்திருந்தாள். டாக்டர் வெளி வர எடுத்துக்கொண்ட அந்த ஒவ்வொரு நொடியும் அவளுக்கு மட்டும் அல்ல அங்கே இருந்த மற்றவர்களுக்கும் நரகமாக இருந்தது.

இவள் இவ்வாறு இருக்க அம்முதியவரோ எதையும் உணரும் நிலையில் இல்லை. அவர் அருகில் இருந்த டிரைவர் அவரை இரு முறை கூப்பிட்டு அழைத்தும் பயன் இல்லாமல் போக, அவரை தொட்டு அழைத்தார்.

அதில் தன்னிலை மீண்டவர், அவர் முகத்தை உணர்வின்றி நோக்க அவருடன் டாக்டர் வெளியே அவரை நோக்கி வருவதை தெரிவித்தார். டாக்டரின் முகத்தை எதிர் நோக்கினர்.
அவர் கூறப்போகும் வார்த்தைகளுக்காக தனது உயிரை கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்தார்.

டாக்டரின் முகம் ஒரு நொடி சந்தோசத்தையும், மறு நொடி துயரத்தையும் காட்டியது. “துரை நம்ம வாசு பொழச்சுட்டான். அவனுக்கு ஒன்னுமில்லைடா.” படபடவென சந்தோசத்துடன் கூறினார். “ஆனா?”, என ஒரு கேள்விக்குறியுடன் நிறுத்தினார்.

“என்னடா என் மகனுக்கு என்ன?” என அவர் குரலில் ஒரு தவிப்புடன் கேட்டார். இல்லைடா நம்ம வாசுக்கு ஒன்னும் இல்லை, அவன் உயிருக்கு ஆபத்து ஒன்னும் இல்ல. ஆனா தலையில கொஞ்சம் அடி பலமா பட்டு இருக்குற மாதிரி தெரியுது. இன்னும் கண் முழிக்கல அவன் கண் முழிக்க இன்னும் ஒரு 8 மணி நேரம் கிட்ட ஆகும் இல்ல அதுக்கும் மேலயும் ஆகலாம். அப்படி இல்லனா இருபத்தி நாலு மணி நேரம் வெயிட் பண்ணி பார்ப்போம்”, என ஒரு சிறிய இடைவெளி விட, மேலே சொல் என்பது போலவும், இதற்கு மேல் வேறு எந்த சோதனையும் என் மகனுக்கு இருக்க கூடாது என அவர் மனம் ஒரு அவசர வேண்டுதல் வைத்தது.

ஒரு பெருமூச்சுடன் மேலே சொல்ல துவங்கினார். 24 மணி நேரம் தாண்டியும் அவன் கண்ணு முழிக்கலனா அப்புறம் பார்ப்போம் நீ ஒன்னும் கவலை படாத என அவர் அங்கிருந்து நகர்ந்து அடுத்த கேஸ் பார்க்க சென்றார்.

இதை கேட்ட துரைவேல் அப்படியே இடிந்து அமர்ந்தார். அவர் மனதில் சொல்ல முடியா துயரம் அழுத்த என செய்வது என தெரியாமல் பித்து பிடித்தார் போல் அமர்ந்துவிட்டார்.


xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx


அந்த இயந்திரப்பறவை ,”கிரர்ர்ர்ர்” எனும் ஒலியுடன் மண்ணில் இருந்து விண்ணை நோக்கி மேலெழும்பியது.
முதல் 6வது வரிசையில் ஜன்னலோர இருக்கையில் கண்களை மூடி பின்னே சாய்ந்து அமர்ந்து இருந்தாள் அகத்தியா. ஆம் அகத்தியா தான். அவள் தான் அவளே தான்.

மிகவும் சோர்ந்து போய் தெரிந்தாள் அவள். அவள் முகத்தில் சோர்வை மீறிய கவலை தெரிந்தது. இனி என்ன நடக்குமோ என எண்ணாமல், என்ன நடந்தால் என்ன எனும் மனநிலையில் இருந்தாள் அவள்.

என்னவானது அவளுக்கு? அதற்கு பதில் அவளிடமே. மனம் தன் போக்கில் யோசித்து கொண்டு இருந்தது, ஏதேதோ நினைவுகள் மனதினுள் சுழன்று கொண்டு இருந்தது. அதன் வேகத்தில் தன்னை சமாளிக்க முடியாமல் நீரோட்டத்தில் இழுத்து செல்லப்பட்டு தத்தளிக்கும் எறும்பு போலானாள்.

எங்கே கண் மூடினால் அது தன்னை இழுத்து சென்று விடுமோ என பயந்தவள் போல படக்கென்று கண் திறந்தாள். என்ன முயன்றும் அதனை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் சிந்தை அவள் கட்டுக்குள் இல்லை. அதை தெளிவாய் அவளால் உணர முடிந்தது. அதை நினையாதே என்ன மனதிற்கு கட்டுப்பாடு விதிக்க அவள் நினைக்கவில்லை.

மாறாக அப்போது தான் அது இன்னும் அந்த நினைவுகளுக்குள் சிக்கி வெளி வரத் தெரியாமல் தவிக்கும். வேண்டாம் வேண்டாம் எதையும் நினைக்க வேண்டாம் என அவளுக்கு அவளே பல முறை சொல்லிக்கொண்டு அதில் தோற்றும் போய் இருந்திருக்கிறாள். அதனால் அதே தவறை தவறியும் மீண்டும் மீண்டும் செய்ய அவள் முற்படவில்லை.

ஏன் எதற்கு என ஆயிரம் கேள்விகள் மனதினுள் இருந்தாலும் அதற்கு விடை தெரியாமல் மனதினுள்ளே மருகி தவித்து இருக்கிறாள். இப்போது இது இப்படி தான் என அவளே சமாளித்துக்கொண்டு இருக்கும் போது இவ்வாறு நடந்ததால் அவள் முற்றும் உடைந்து போனாள்.

எதையும் யோசிக்க பிடிக்காமல் மறுபடியும் கண்களை மூடிக்கொண்ட போது ஒரு மென் தளிர்க் கரத்தின் வருடலில் மெதுவாக கண் திறந்து பார்த்தாள். அவள் கண் முழித்ததும் அவளை நோக்கி ஒரு மென்னகையை சிந்தியது.

பக்கத்துக்கு இருக்கையில் இருக்கும் பெண்ணின் குழந்தை அது. அத்தளிர் கரத்தின் ஸ்பரிசம் அவளது மனக்காயத்திற்கு மயில் இறகால் வருடியது போல இருந்தது.

ஒரு மழலையின் ஸ்பரிசம் எப்பேர்பட்ட மனக்காயத்தையும் ஆற்ற வல்லது. அதன் நிலாமுகம் கண்ட போது தன் துன்பம் அனைத்தும் குறைந்து காணாமல் போய் விட்டது போல், மனம் லேசாகி பேப்பர் போல் ஆனது போன்ற ஒரு தோற்றம் உண்டானது.

அது அவளது தாயிடம் இருந்து இவளிடம் தாவ முற்பட்டது. எது ஒரு இனம் புரியா பாசம் எதோ ஏழேழு ஜன்மம் பழகியது போல் ஒரு உணர்வு அவளுள் ஏற்பட்டது. இவளை கண்டதும் தனது இரு கை விரித்துஅவளிடம் செல்ல முற்பட்டது.

குழந்தையை யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா இல்லை அவளும் தான் அதற்கு விதிவிலக்கா? அவள் தனது கையை விரித்ததும் அது ஒரு மயக்கும் சிரிப்புடன் அவளை நோக்கி வந்தது.

ஏதோ மிகவும் பழகியவர் போல அவள் கன்னத்தை முத்தமிட்டு முத்தமிட்டு எச்சில் செய்தது. இதோ இருந்த கொஞ்ச நஞ்ச மனகிலேசமும் தன்னை விட்டு பறந்து தொலை தூரம் தொலைந்தது போன்று இருந்தது.

தன் கவலை மறந்து அக்குழந்தையுடன் ஒன்றி லயிக்க ஆரம்பித்தாள். பின்பு அதனுடன் மெய் மறந்து சேர்ந்து விட்டாள்.
அந்த குழந்தை தன் பவள செவ்வாயால் அவள் முகம் முழுவதும் முத்தமிட்டுகொண்டு இருந்தது.

திருச்சி விமான நிலையம் வரும் வரை அந்த குழந்தை அவளிடமே ஒட்டி கொண்டு வந்தது. விமானம் தரை இறங்க வேண்டிய அறிவிப்பு வந்தவுடன் அவள் முகம் தன் சோகத்தை வெளிபடுத்தியது. குழந்தையும் அவள் சோகம் உணர்ந்ததோ என்னவோ அதன் முகம் கூம்பி வாடி விட்டது.

இவள் அந்த குழந்தையை விட்டு பிரிய வேண்டுமோ என்ன நினைத்து கலங்கிப் போனாள். அந்த நிமிடம் தனது கவலைகள் அனைத்தும் நினைவடுக்கின் எதோ ஒரு மூலையில் ஓடி ஒளிந்து விட்டது என்பது தான் உண்மை.

அதன் தாய் அவளிடம் குழந்தையை வாங்க கை நீட்டிய போது ஏதோ தன் குழந்தையை யாரோ தன்னிடம் இருந்து பிரித்து செல்வது போலவே உணர்ந்தாள்.

“நீங்க உங்க luggage எடுங்க அப்புறம் நான் எடுத்துக்குறேன் என்றாள். அந்த பெண்ணும் சிறிது மென்னகை சிந்தி, தலை அசைத்து தனது luggage எடுத்துக்கொண்டு குழந்தையை வாங்க கை நீட்டினாள்.

குழந்தையோ அவளிடம் இருந்து பிரிய மறுத்து அழுதது. அவளுக்கே மனது சங்கடம் ஆகி போய் விட்டது. அந்த பெண்ணும் குழந்தையை அவளிடமே விட்டு விட்டு, “உங்க luggage எதுன்னு சொல்லுங்க நான் எடுத்து தரேன்” என, அகத்தியா பதறி
“இல்லல உங்களுக்கு ஏன் வீண் சிரமம் நானே எடுத்துக்குறேன்” என அவசரமாக மொழிந்தாள்.


“இதுல என்னங்க இருக்கு பாருங்க அவன் சமத்தா அடம் பண்ணாம உங்க கிட்ட இருக்கான் நீங்க விடுங்க நான் எடுத்துட்டு வரேன்”. “இல்ல நீங்க குழந்தையை பிடிங்க நான் எடுத்துக்குறேன்”, என அகத்தியா சொல்ல குழந்தை அதை உணர்ந்து கொண்டதோ என்னவோ அவளது டாப் கழுத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு வர மாட்டேன் என அடம் பிடித்தது.

அதன் தாயிடம் வரவே மாட்டேன் என முரண்டு பிடித்தது. அகத்தியாவிற்கோ சங்கடமாக போய் விட்டது. பரவில்லை விடுங்க நான் எடுத்து தரேன் இதுல என்ன formalities என சொல்ல அவள் மெதுவாக தலை அசைத்தாள்.

இப்போது அவள் தனது கை கொண்டு அதன் முதுகை வருட குழந்தை அவளது தோளிலே சுகமாக முகம் புதைத்து, அவளது கழுத்தை கட்டிக்கொண்டு வாகாக படுத்துக்கொண்டது.

செக்கிங்கிலும் அவளிடமே குழந்தை இருந்தது. செக்கிங் முடித்து இருவரும் பிரியும் நேரம் வந்ததும் அவளுக்கு மனம் மிகவும் கனத்து போனது. எதோ சில மணி நேரம் பழகிய ஒரு குழந்தைக்காக அவள் மனது மிகவும் தவித்தது.

மனதை இறுக்கிக்கொண்டு குழந்தையை அதன் தாயிடம் கொடுத்தாள். அதுவோ அவளை விட்டு வரவே மாட்டேன் என அழுதது பாவம் அழுது அழுது அதன் முகமே சிவந்து விட்டது.

அவளுக்கு மிகவும் பாவமாக தான் இருந்தது. அனால் மனதை கல்லாக்கி கொண்டு அங்கிருந்து ஏதோ தப்பி ஒளிபவள் போல அங்கிருந்து வேகமாக அகன்றாள்.
திரும்பியும் பார்க்காமல் வேக எட்டுகள் வைத்து அவள் முன்னே நடக்க குழந்தையின் அழுகை ஒலி இன்னும் தொடந்து கேட்டது.

திரும்பி பார்க்க சொல்லி சொன்ன மனதை அடக்கி இன்னும் வேகமாக நடந்தாள். குழந்தையின் அழுகை ஒலி அவளது செவியில் இருந்து தேய்ந்து மறைந்து காற்றோடு கலந்து போனது.

சுவாசம் வரும்.




.
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends

Ungakitta oru suggestion ketkanum
Yaarum enna theda matinga but irunthalum nan ketkuren

Some health issues cant type for long time
So kutty kutty ah weekly two or three uds tharalama

Comment pannunga pa plz pomma potta nannum pomma than poduven solliten
 

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி பிரிண்ட்ஸ் கொஞ்சமே கொஞ்சம் லேட் ஆய்டுச்சு .ஸ்பெல் செக் பன்னல mistake இருந்தா மன்னிச்சு.

என் சுவாசமே – 3





அகத்தியா அந்த குழந்தையின் அழுகை தன் செவியில் இருந்து தேய்ந்து மறையும் வரை திரும்பினாளில்லை. ஏனோ அதன் பிஞ்சு முகம் அவளது கவலைகளை மறக்க போதுமானதாக இருந்தது. இப்போது அதனை விட்டு பிரியும் போது ஏனோ தன் குழந்தையையே விட்டு செல்வது போலவே ஒரு பிரம்மை.
தனது துன்பம் மறக்க அத்தளிரிடம் கவனம் செலுத்தினாள். அதிலே தன் துன்பங்கள் அனைத்தும் மறந்து அதனிடமே லயித்துப்போனாள். இப்போது அதனை விட்டு பிரியும் போது ஏனோ மனதுக்கு மிகவும் பாரமாக உணர்ந்தாள்.

அங்கிருந்த ஒப்பனை அறையில் தன கண்ணில் வழிந்த கண்ணீரை முகம் கழுவி சுத்தப் படுத்திக்கொண்டு விலை நோக்கி சென்றாள். வாயிலில் எங்கேயாவது தன் குடும்பம் தென்படுகிறதா என கண்களை நாலா புறமும் சுழலவிட்டுக்கொண்டே தேடினாள்.

அங்கே அவள் தந்தையும், தம்பியும் அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தனர். அவளது தந்தை அவளை கண்டவுடன் ஒரு மெல்லிய நகையை சிந்தினார். அவர் முகமும், கண்களும் சோர்வை பிரதிபலித்தன. ஏனோ இது எல்லாம் தன்னால் தானோ என்றே அவளுக்கு தோன்றியது.

ஆனால் அவர் அவ்வாறு எண்ணவில்லை. தனது மகளை மீண்டும் காண்போமா என தவித்து கொண்டு இருந்தவர் அல்லவா? அவளை மறுபடியும் பார்த்ததே போதும் அதுவே தனக்கு சந்தோசம் என அவர் நினைத்து கொண்டு இருக்க அவள் இவ்வாறு இப்படி நினைத்து கொண்டு இருப்பது தெரிந்தால் பாவம் அவர் மனது என்ன பாடுபடும்.
காலம் மட்டும் தாங்கள் சந்தோசமாக இருந்த காலத்திற்கே சென்று அங்கேயே நகராமல் இருந்து விடாதா? என்றே ஏங்கினாள். ஏனோ மனம் முழுவதும் ஒரு குற்றவுணர்ச்சி வியாபித்தது. என்ன முயன்றும் அது அவளை விட்டு நீங்கிய பாடாக இல்லை.

அதற்குள் அவள் தம்பி அவளது தந்தையை பின்பற்றி அவளை பார்த்து புன்னகைத்தான். தம்பியை கண்டதும் தனது முகத்திற்கு முகமூடி அணிந்துக்கொண்டு அவளும் புன்னகைத்தாள். அவளது கண்ணுக்கு எட்டாத புன்னகை அவளது தந்தையை வருத்தமுற செய்தது.

என்ன இருந்தாலும் பெண்ணை பெற்றவர் அல்லவா?
ஏனோ மனம் குழம்பிய குட்டையை போலே இருந்தது அவளுக்கு . இல்லை எதுவுமே இல்லை. இனி என்ன செய்வது என்றே புரியவில்லை. மனம் மட்டும் உணர்வற்று இருந்தது போல இருந்தது கண்ணை திறந்துக் கொண்டு ஏதோ கனவில் சஞ்சரிப்பவள் போன்றே இருந்தது. எதையும் நினையாதே மனமே எதையும் நினையாதே! என மனதிற்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டு இருந்தாள். அதில் சிறு வெற்றியும் பெற்றாள்.

மனதை அடக்க அவள் என்ன ரிஷியா? அல்லது முனியோ? இரண்டுமே அல்லவே! சாதாரண மானுடப் பெண் தானே!

எதையெதையோ யோசித்துக் கொண்டே வந்தவள், அவளது அப்பா “வீடு வந்துடுச்சு இறங்குமா” என்னும் அவரது
குரலிலும் தன் சிந்தனை கலைந்தாள் இல்லை.

அவளது அபராஜித் “அக்கா!அக்கா!” என இருமுறை அழைத்து தோளை தொட்டு உலுக்க, “ஆங்ங்” என தூக்க கலக்கத்தில் இருந்து விழிப்பது போல இமை தட்டி தன்னை மீட்டுக் கொண்டாள்.

இவள் முன்னே அவளது தம்பியும் தந்தையும் இறங்கி “வாம்மா “ என அழைத்தார். ஏதோ தவறு செய்த குழந்தையை போல விழித்தாள். அவர் அழைத்ததும், தன் கல்லென கனத்த கால்களுக்கு மெல்ல உணர்வுட்டி அடியெடுத்து வைத்தாள்.

அவளது கண்கள் அந்த வீட்டை அளவெடுத்து. அவர்கள் முன்னே இருந்த வீட்டை காட்டிலும் இது சற்று சிறிதாகவும் வசதி குறைந்தது போலவும் தெரிந்தது. மனம் முழுவதும் பாரம் ஆகி போனது போன்று ஓர் உணர்வு அவளுள் எழுந்தது.

அதற்குள் வெளியே அரவம் கேட்டு வந்தார், அவள் தாய் பானுமதி. இருவரது பார்வையும் சிறிது நேரம் நேருக்கு நேர் சந்தித்து கொண்டது. பின்னர் அவள் தான் தனது பார்வையை தழைத்து கொள்ள வேண்டியதாயிற்று.

“நான் என்ன உன்னை அப்படியா வளர்த்தேன்?” என்னிடம் உனக்கேதற்க்கு அந்த பயமும் ? தயக்கமும்?” என்று அவரது பார்வை கேட்பது போன்று ஓர் உணர்வை தந்தது. “உள்ள வாமா” என்ற தந்தையின் அழைப்பில் அவள் தாயை ஏறிட அவரோ இன்னும் தன் பார்வையை இல்லை. “என்ன பானு இன்னும் என்ன அப்டியே நின்னுட்டு பார்த்துக்கிட்டே இருக்க”

பாப்பா எவளவோ வருஷம் கழிச்சு வந்திருக்க? உள்ள கூட கூப்பிடாம என்ன அப்படியே பார்த்துட்டே இருக்கிற! கூப்பிடு உள்ள” என சிறு கண்டிப்புடன் கூற அவர் தன் கணவரையும் மகளையும் ஒரு முறை கண்டவர், ஒரு பெருமூச்சை ஒன்றை வெளியிட்டு தன் வாய் திறந்து மெதுவே, ”வா” என அழைத்து விட்டு சென்றுவிட்டார்.
அதுவரை தனை அழைக்க மாட்டாரா? அழைக்காமல் போய் விடுவாரோ? என எண்ணி பயந்துக் கொண்டு இருந்தவளின் மனம் சற்றே அவளுக்கே தெரியாமல் ஆசுவாசமாக உணர்ந்தது.

கண்கள் சிறிதே கலங்க வர, தனது கண்ணை சிமிட்டி அதை உள்ளிளுத்துக் கொண்டாள். எங்கே தனது வாழ்வு தடம் மாறியது, தடம் மாறி போனது என்று அவளுக்கே தெரியவில்லை.
இதோ தன்னை பெற்று சீராட்டி வளர்த்த அவர்களுக்கு தெரியாததை விட தனக்கு என்ன தெரிந்துவிட போகிறதாம் என தன்னை தானே ஒரு நூறு ஆயிரம் முறை கேட்டுக்கொண்டாள் அகத்தியா.

தான் நிதானம் தவறி விட்டோமோ எங்கே தனது நிதானம் இழந்தோம் பெற்றவர்களை விட தனக்கு என்ன என்ன தெரிந்து விட்டது வாழ்க்கையில். எதுவும் தெரியவில்லை. என்ன அடைந்தோம் என்ன இழந்தோம் என்றே அவளுக்கு தெரியவில்லை.

எதோ கண்ணை கட்டி காட்டில் விட்டது விட்டது போலவே இருந்தது. தாய் மடி தேடும் சேயாக அவளது மனம் தவித்தது. அம்மா என அழைத்து அவர் மடியில் முகம் புதைத்து தன மன பாரம் முழுவதும் இறங்கும் வரை அழுது கரைய வேண்டும் போல அவளது மனம் பரபரத்தது.

தனது முட்டாள் தனத்தால் தான் மட்டும் கஷ்டப்படவில்லை தனது மொத்த குடும்பமுமே தன்னால் கஷ்டப்பட்டு விட்டது என் அவள் மனம் குமைந்தது. என்ன தான் வளர்ந்த பெண்ணாகவே இருந்தாளும், எத்தனை வயதானாலும் தாய் மடி தரும் சுகமும், நிம்மதியும் அலாதியன்றோ?

தன் துயரம் அனைத்தையும் இறக்கி வைக்க தாய் மடி சேர சேயாய் அவளது மனம் தவித்தது. “இந்த ரூம்ல போய் பிரெஷ் அப் ஆகிட்டு வாம்மா” என தந்தையின் குரலிற்கு சிறு தலை அசைப்பை மட்டுமே தந்தாள்.

உள்ளே போய் கதவடைத்து, கட்டிலில் சென்று தொப்பென அமர்ந்தாள். இனி என்ன செய்வது என்ற அதே கேள்வி அவளை சுற்றியது. மனமே இல்லாமல் போய் பாத்ரூம் சென்று தன்னை சுத்தப்படுத்தி, குளித்துவிட்டு வரும் போது தூக்கம் கண்ணை சுழற்றியது. இதனை வருடம் இல்லாத தூக்கம் ஏனோ இப்பொது வந்தது.

போய் கட்டிலில் விழுந்தது மட்டும் தான் தெரியும். அப்படி ஒரு தூக்கம் வந்தது அவளுக்கு. தனது இருப்பிடத்திற்கு வந்ததால் வந்த உறக்கமோ? வெகு நேரம் கழித்து அறையினுள் தனது கணவரின் வர்புதலின் பேரில் அங்கு வந்த பானுமதி தூங்கும் மகளை சிறிது நேரம் பார்த்திருந்தார்.

அவரது கண்களுக்கு ஐந்து வயது குழந்தை போலவே தெரிந்தாள். அவரையே “அம்மா, அம்மா” என சுற்றி வரும் அவள் மீது அவருக்கு அன்பு அதிகம்.
அகத்தியாவின் மேல் எப்போதும் ஒரு தனி பிரியமுடன், சிறு கண்டிப்பும் கொண்டு இருந்தார். தாய்க்கு தன் பிள்ளை எப்பொழுதுமே ஸ்பெஷல் தான்.

அதற்கு பானுமதியும் விதி விளக்கல்ல. அகத்தியா சிறு வயதில் இருந்தே மிகவும் குறும்புகாரியாகவே வளர்ந்தால். அவரது கணவரிடம் அவளுக்கு செல்லம் மிக அதிகம். அதனாலே அவர் மகளிடம் சிறு கண்டிப்புடனே இருந்தார்.
பெற்றோர் இருவருமே செல்லம் கொடுத்தால், மகள் இன்னும் குறும்பாக இருப்பாள் என்பதால் அவளிடம் மட்டுமே அவர் சிறிதாக கொஞ்சம் கண்டிப்பு காட்டினார்.

பிறகு யாரும் அவளை, “உன் அம்மா வளர்த்த லட்சணத்தை பார்” என்று ஒரு கூட கூறி விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். தனது எண்ணத்தில் சுழன்று கொண்டு இருந்த அவர் அகத்தியாவிடம் லேசாக அசைவு தெரியவும் அங்கிருந்து வேகமா வெளியேறினார்.

இது எதுவும் தெரியாத அகதியாவோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். பல்ல வருடம் அவளை விட்டு எட்டி நின்ற உறக்கம் இன்று அவளின் மேல் சிறிதே சிறிது கருணை கொண்டு அவளை அரவணைத்து கொண்டது.

வெளியே வந்த பானுமதியிடம் “ என்ன நீ மட்டும் வர? பாப்பா எங்க?” என கேட்டவரிடம் “ அவ தூங்குறா” என பதிலிறுத்து விட்டு சென்றார். கிருஷ்ணனும் ஒரு ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டு வெளியே சென்று விட்டார்.

மூன்று மணி நேரம் கழித்தும் எந்திரிக்காமல் இருந்தாள் அகத்தியா. வெளியே சென்று விட்டு வந்த கிருஷ்ணன் னோ இன்னும் அவளை எழாமல் இருக்கும் மகளை எழுப்ப சென்றார். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளைப் பார்த்து அவருக்கு எழுப்ப மனம் வரவில்லை. தூங்கும் மகளையே சிறிது நேரம் பார்த்து விட்டு சென்றார்.

மகள் மேல் அதிகம் பாசம் கொண்ட அந்த தந்தைக்கு தன் மகள் வாழ்வு நினைத்து அவர்க்கு கவலையாக இருந்தது.

சுவாசம் வரும்.......
 

Attachments

sutheeksha eswar

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Marupadiyum nan than pa
Ipavum nan story poda varala
Sorry friends konja nalaiku ennala story continue panna mudiyatha nilamai
Yaraum enna thedi irukka maatinga
But nan ud podum bothu comment panni enna encourage panna en friends kaga nan
Inga vanthen
Athu enna na en kutty baby ah parthu kittu rest eduka kooda ennaku time irukka matenguthu
Scenes ellam avar alutha udane maranthu poiduthu and munna maari type panna mudiyala, scenes thonunona muna mari type pannovo note panna kooda mudiyala enna pathi therinju my vootukaar apove laptop ah pudinkittu poitar ipo sutham phone edutha kooda my family muraching me
So sorry friends paiyan konjam valarnthona nan varen illa apo apo varuven nu ninaikuren
God only knows
Apram en paiyan nuku unga elaroda blessings and wishes vennum friends
Bye see u all as soon as possible
Love u😘😘😘
 
Status
Not open for further replies.
Top