All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுவாதி லக்ஷ்மியின்- "உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே💘"- கதை

Status
Not open for further replies.

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
ஹாய் பிரெண்ட்ஸ் 🤗💕


Happy Morning 🌼🌄

#உண்மை_காதல்_ யாரென்றால் உன்னை_ என்னை_ சொல்வேனே❤!!!!_(Romantic love story 💞)

🤗💕


கதை இப்பொழுது என்னுடைய Blog-ல், இலவசமாக வாசிக்கலாம், மக்களே, லிங்க் டீசர்-க்கு கீழே இதே போஸ்ட்ல இருக்கு ஃபிரண்ட்ஸ் 🤗🤗😍😍


முன்னோட்டம்:


கதா நாயகன்: ஹரிகிருஷ்ணா🔥


கதா நாயகி: மிதிலா(ஜிகிளி)💕


ஆன்டி ஹிரோ: ருத்ரன்😍


அமெரிக்காவில் உள்ள பெண்கள் மகப்பேறு மருத்துவனான ஹரிகிருஷ்ணாவிற்கும், திருச்சியில் பள்ளியில் இப்பொழுது தான் படித்துக்கொண்டு இருக்கும் மிதிலாவிற்கும் இடையே உருவாகும் உண்மை காதலின் பயணமே இக்கதை!!


ருத்ரன் என்னும் கதாபாத்திரம் இவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன??? நம்மையா?? தீமையா??


ருத்ரனிற்கும் மிதிலாவிற்கும் இடையே என்ன உறவு??


பதினைந்து வயது இடைவெளியில் இருக்கும் இவர்கள் இணையும் காரணம்???


உணவு, படிப்பு தான் முக்கியம் என்று பட்டாம்பூச்சியாய் பறந்துக்கொண்டு இருக்கும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நம் கதா நாயகியும், வாழ்க்கையில் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்ற பல கோட்பாடுகள் கொண்ட, அமெரிக்க கலாச்சாரத்தில் வளர்ந்த ஹரியும் எவ்வாறு சந்திப்பார்கள், இணைவார்கள் இடையில் அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளே கதை முழுக்க இருக்கும்.


கல்யாணமே வேண்டாம் என்று இருக்கும் ஹரியும், தன் பதினாறு வயதில் இருந்தே ஹரியை மட்டுமே நினைத்து கொண்டு இருக்கும் மிதிலாவும் இணையும் காதல் பயணம்!!!


குடும்பம், காதல், சஸ்பென்ஸ், டிவிஸ்ட், ரொமான்ஸ், காமெடி எல்லாம் இருக்க ஹாப்பி என்டிங் நாவல்.


கடைசிவரை படிங்க மக்களே!!! எதிர்பாராத பல திருப்பங்கள் வரும்.❤❤


Teaser-1 🔥


"கௌசல்யா சுப்ரஜா ராம

பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே"


என்று எம்பெருமானுக்கு காலை திருப்பள்ளியெழுச்சி பாடிக் கொண்டிருந்தனர்.


அப்பொழுது மிதிலா மித்ராவிடம், "எப்பொழுது இந்த பூஜை முடியும்" என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.

மித்ரா, "இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று நினைக்கின்றேன்… ஏண்டி கேட்டுகிட்டே இருக்க?? " என்றவுடன்.

மிதிலா," இல்ல புளி சாதம், பொங்கல் வாசனை எல்லாம் செமையா வருது பயங்கரமா பசிக்குது அதான் கேட்டேன்", என்றாள் .


காலை 5 மணி அளவில் எல்லா சிறப்பு பூஜையும் முடிந்து, ஐயர் தீபாரதனை தட்டை மக்களை நோக்கி எடுத்து வந்தார். அதை பார்த்த, நம்ம மிதிலா முகத்தில் பல ஆயிரம் மின்னல்கள் வர ஆரம்பித்தது.



❤'பார்த்த விழி பார்த்த படி

பூத்து இருக்க

காத்திருந்த காட்சி

இங்கு காணக் கிடைக்க'❤


என்று ஐயரை வைத்த கண் வாங்காமல் மிதிலா பார்க்க ஆரம்பித்தாள்.


Teaser- 2🔥


இடம்: சியாட்டில் ,வாஷிங்டன் மாநிலம்,அமெரிக்கா. (Seattle, Washington State, USA) ஹரி துபாய் செல்லும் விமானத்திற்காக காத்து இருந்தான்.


திருச்சி ஏர்போர்ட்டில் கால் பதித்த நொடி .. ஹரிக்கு ‌ஏனே மனம் ஒரு மாதிரியாக இருந்தது… சிறிது படபடப்பாகவும் இருந்தது.. அதே சமயம் உள்ளுக்குள்ளே ஒரு வித மகிழ்ச்சியும் பரவியது… உடலை ஏதோ மெல்லிய மயிலிறகால் வருடுவது போல் சுகமாக இருந்தது.. தன்னவளின் மூச்சு காற்று கலந்த தென்றல் காற்று அவனை தீண்டியதோ.. மூச்சுக்காற்றே இவ்வாறான இதத்தை பரப்பினால்…



-------




Teaser-3🔥


ஏற்கனவே மிகவும் தாமதம் ஆவதால் எரிச்சலில் இருந்தவன், காரிலிருந்து விரைந்து இறங்கி வந்தான் கடும் சீற்றம் கொண்ட புயலென .


அவன் ருத்ரன்🔥.


மாநிறத்திற்கும் வெண்மை நிறத்திற்கு இடையில் உள்ள நிறத்தில்,நன்றாக முறுக்கேறிய உடலுடன் , வெள்ளை நிற சட்டை மற்றும் கருநீல நிற கோட் சூட்டில், சில்வர் நிறத்தில் ரேடோ வாட்ச் இடது கையிலும், பிளாட்டினம் பிரேஸ்லெட் வலது கையிலும் மற்றும் காதில் ஒற்றை பெரிய கல் வைர ஸ்டர்ட்ம் அணிந்து... பார்க்க கம்பீரமாக.. அதே சமயம் கண்களிலும்.. உடல் மொழியிலும் அலட்சியமும்.. சீற்றமும் வழிந்தோட.. ஆணழகனாக நடந்து வந்தான்.


காரிலிருந்து ருத்ரன் வெளி வந்ததுமே... விஷ்ணு ருத்ரனின் தோற்றத்திலும், அவனின் தோரணையிலுமே பேச்சை நிறுத்தி விட்டார்.


விஷ்ணுவிற்கு மனதில் எப்படி இந்த இடத்தை விட்டு செல்வது , பெண்பிள்ளைகளை வேறு வைத்துள்ளோம் என்று மனம் பதைபதைப்பாக இருந்தது. இவர்கள் ஏதாவது பெண்களை செய்து விட்டால் என்ன பண்ணுவது என்று... பல்வேறு வகையான சிந்தனைகள் அவர் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.




Teaser 4🔥


அழுகை சத்தம்,


ஹரி, அருகில் சென்றவுடன் தான் .. அது பள்ளி மாணவி போல் உள்ளது என்றும், நெருங்க நெருங்க சிறுபெண் என்றும் தெரிந்து கொண்டவன்.. பதறி !! கீழே எங்கேயாவது விழுந்து விட்டாலோ ?? என்று விரைந்து விசாரிக்க அருகே சென்றான்.


ஹரி மிதிலாவை நெருங்கி , " Hey girl !! what happened ?? You need any help??", என்று மென்மையாக கேட்டான்.


அவனது ஆங்கில உச்சரிப்பின் வித்தியாசத்தில்,சத்தம் வந்த உடனே மிதிலா பதறி யார் என்று நிமிர்ந்து பார்த்தாள் ?? அவளுக்கு இருந்த வலியில் அவன் பேசிய அமெரிக்க ஆங்கிலம் வேறு ஒன்றும் புரியவில்லை.


ஹரி மிதிலாவின் முக பாவனைகளை வைத்து.. தமிழில், "கீழே விழுந்துட்டையா கேர்ள்?? எங்காவது அடிபட்டிச்சா.??", என்றான் மென்மையாக.


-

-

-

-


இதற்கிடையில் மிதிலாவிற்கு சட்டென அடிவயிற்றில் ஏற்பட்ட மின்னல் போன்ற அதீத வலி.. சட சடவென உடலின் பாகங்களில் பாய்ந்தது.. சிறு பெண்ணால் அவ்வலியை சுத்தமாக தாங்க முடியவில்லை.. கண்களில் நீர் பெருகியது… வலியில் மயக்கமே வரும் போல் இருந்தது அவளிற்கு..


அவள் முக மாற்றத்தையும்.. கண்ணீரையும் பார்த்து பதறி ஹரி என்ன செய்வது என்று தெரியாமல்.. மிதிலாவின் கையை பற்றிக்கொண்டு, "ஏன் டா அழற.. எதுவும் சொல்லவும் மாட்ற?? போலீஸ் இல்லன்னா.. ஆம்புலன்ஸ் ஓட எமர்ஜென்சி நம்பர் எதாச்சு சொல்லு டா, நான் ஃபோன்ல கால் செய்கிறேன் ,உன் வீடு எங்க இருக்கு ?? பக்கத்துல இருக்கா ?? உன்னோட பேரன்ட்ஸ் நம்பர் ஆச்சு சொல்லு?? ", என்றுவிட்டு அவள் கண்களை மென்மையாக துடைத்து விட்டான்.


அதற்கு ஹரி ,"அவளிடம் எங்கு ? எப்படி வலிக்கின்றது? என்று கேட்டுவிட்டு, அவள் சொன்னதை வைத்து சந்தேகத்துடன் ,"உனக்கு இப்ப என்று கேட்டான்.. என்றான்.


மிதிலா சட்டென்று விளங்காமல் முழித்தாள்.


மிதிலாவிற்கு அப்பொழுதுதான் புரிந்தது,ஹரி எதைப்பற்றி கேட்கின்றான் என்று. புரிந்ததும் மிகவும் வெட்கம் ஆகிவிட்டது அவளிற்கு,


அவள் முக சிவப்பையும் , அவள் முகத்தில் தோன்றிய சங்கடமான பாவனையும் வைத்து, ஹரி அவளின் நிலையை புரிந்துகொண்டு , மென்மையாக மிதிலாவின் கையைப் பற்றி சிறிது உள்ளங்கையில் அழுத்தத்தை கொடுத்து கொண்டே.. "டோன்ட் வொரி (don't worry ) நான் கைனகாலஜி டாக்டர் (gynecology doctor) தான் என்கிட்ட சொல்லு.. எனக்கு என்னமோ உனக்கு ஃபுட் பாய்சன்னு தோனலை ??", என்றான் தன்மையாக.😍


https://swathilakshmitamilnovels.blogspot.com/2023/07/blog-post.html

அன்புடன்
சுவாதி லக்ஷ்மி 💘



🤗
 

swathikrishna

உண்மைக் காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே
உண்மை காதல் யாரென்றால் உன்னை என்னை சொல்வேனே

FB_IMG_1662755554816.jpg

இப்பொழுது பிரதிலிபி ஆப்பில் பதிவு செய்துக்கொண்டு இருக்கின்றேன்..

விருப்பம் உள்ளவர்கள் அதில் வாசியுங்கள் தோழமைகளே..

லிங்க் 👇👇👇

கதை லிங்க்


Pratilipi Profile link 👇👇


அன்புடன்
-சுவாதி கிருஷ்ணா🤗
 
Status
Not open for further replies.
Top