அத்தியாயம் 3
இரவில் தாமதமாக உறங்கினாலும் காலியான வயிறு கவிதனை அதிகாலையிலேயே எழுப்பி இருந்தது. மெதுவாக தன் அறையை விட்டு வெளியே வந்து சமையலறையை எட்டிப் பார்க்க அங்கே அவனது வீட்டில் வேலை செய்யும் ராதா என்ற இருபதுகளின் முடிவில் இருக்கும் பெண் மட்டும் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தார்.
தன் பின்னே ஆரவாரத்தை உணர்ந்து திரும்பி பார்த்த ராதா சமையலறை வாயிலில் நின்று கொண்டிருந்த கவிதனை பார்த்ததும் சம்பிரதாய நல விசாரிப்புகளுக்கு பின்,
"காபி சாப்பிட்டீங்களா தம்பி..." என்று கேட்டு வைக்க, அவனும் தனக்கு இருந்த பசியில் தலையை ஆட்டி விட்டு வந்து வரவேற்பு அறையில் இருந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.
அவன் முகத்திலிருந்து ராதா என்ன உணர்ந்தாரோ காபியுடன் ராவை உப்புமாவும் செய்து கொண்டு வந்து அவன் முன் வைத்துவிட்டு சென்றார். சமயலறையில் இருந்து ராதா திரும்பி பார்த்த போது கவிதன் தட்டில் இருந்த அனைத்தையும் காலி செய்துவிட்டு காபியை அருந்தி கொண்டிருந்தான்.
கவிதனை அதிகம் பார்த்ததில்லை என்றாலும் வீட்டினர் பேசுவதை வைத்தே அவனை தெரிந்து வைத்திருந்த ராதைக்கு அவன் மீது காரணம் அறியாது சகோதர பாசம் மேலெழும்பியது.
தனக்கு அணிவகுத்து நிற்கும் பணிகளை ராதாவின் கைகள் செய்து கொண்டிருக்க, மனமோ கவிதனை தன் சகோதரர்களுடன் ஒப்பிட்டு பார்த்தது.
"உப்புமாவுக்கு தேங்ஸ் அக்கா.." என்று கூறி விட்டு தட்டையும் காபி டம்ளரையும் கழுவி வைத்துவிட்டு செல்லும் கவிதனை அதிசய பிறவி போல பார்த்து வைத்தார்.
அவர் இங்கு வேலைக்கு சேர்ந்த இந்த மூன்று வருடங்களில் தனது பணிக்கு கிடைத்த முதல் பாராட்டல்லவா. அதுவும் தாமரை செல்வி பெற்ற புதல்வனிடமிருந்து. இந்த வீட்டை பொருத்த வரை ராதை ஒரு வேலைக்காரி மட்டுமே.
கொடுக்கும் சம்பளத்திற்கு அதிகாலை முதல் இரவு உறக்கத்திற்கு முன்பு வர அவர்கள் ஏவும் வேலையை செய்து முடிப்பதே அவள் கடமை.
என்ன சமையல்...
முடிச்சிட்டேன்...
அடுத்து வேலை இருக்கா...
சரி... இது போன்ற வார்த்தைகளுக்கு மட்டுமே ராதா வாயிலிருந்து வர அனுமதி உண்டு.
அதற்கு மேல் பேசும் சுதந்திரம் அவருக்கு கிடையாது. தன் நிலை அறிந்து தனக்கு அதுவும் நல்லது தான் என்ற எண்ணதில் ராதையும் அதை பெரிது படுத்தவில்லை.
எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி வேலை செய்பவளுக்கு கவிதனின் சிறு பாராட்டு கூட மகிழ்ச்சியை கொடுத்தது. ஆனால் அது சில நிமிடங்கள் மட்டுமே, தன் நிலை உணர்ந்து பறக்க துடித்த மனதை கட்டுக்குள் கொண்டு வந்தாள்.
ராதா காலை உணவை மேசையின் மீது வைத்து விட்டு சமையல் அறைக்குள் முடங்கிய சற்று நேரத்திலேயே வீட்டிலுள்ள ஒவ்வொருவராக வந்து சேர அரம்பித்தன.
வந்தவர்கள் யாரும் கவிதனின் வருகையை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சம்ப்ரதாயமாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவரவர்கள் அவர்களுடைய வேலையை பார்த்துக்கொண்டு இருந்தனர். உணவு நேரத்தில் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அப்பொழுது வீட்டிற்குள் அதிரடியாக வந்த கவிதனின் இளைய தம்பி கார்த்திக்
"அம்மா உனக்கு விஷயம் தெரியுமா உன்னுடைய பெரிய பையனுக்கு வேலை போயிட்டு?" என்று கவிதன் நேற்றிலிருந்து தன் தாயிடம் கூற தயங்கிய விஷயத்தை அவனது தம்பி கார்த்திக் வீட்டில் அனைவரின் முன்பும் போட்டு உடைத்தான்.
கவிதனின் குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்று அதிகமானது. தாமரைச்செல்வி குருபாதம் தம்பதியருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள் மூத்தவன் விதுர கவிதன். அவனை அடுத்து 2 சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் இருந்தனர்.
பிள்ளைச் செல்வங்களை அதிகமாக சேர்த்த தெரிந்த தம்பதியருக்கு அவர்களின் வாழ்க்கை பொருளாதாரத்தை உயர்த்த தேவையான பொருட்செல்வத்தை சேர்க்க தெரியவில்லை. அதனால் அவர்களின் குடும்பம் மத்திய தரத்திற்கும் கீழே கஷ்டப்பட்டுக் கொண்டே இருந்த நேரம் விதுர கவிதனின் திறமை குடும்பத்தை அவர் எடுத்துச் செல்ல உதவியது.
அவன் தன் திறமை மூலமாகவே உயர்ந்த கல்வி, நல்ல வேலை என முன்னேற அவனை பற்றிக்கொண்டு அவனது குடும்பமும் முன்னேறியது. அவன் வேலைக்கு செல்ல ஆரம்பித்து இரு வருடங்களிலேயே தகுதிக்கு மீறி கடன் வாங்கி சகோதரிகள் இருவரின் திருமணத்தை பெற்றவர்கள் சிறப்பாக முடித்து இருந்தன.
அந்த கடனை அடைப்பதற்காக ஆன்சைட் பணிகளையும் ஏற்று அதையும் திறம்பட நடத்தி வேலையில் நல்ல பெயரையும் சம்பாதிக்க ஆரம்பித்தான்.
கவிதன் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பும் நாள் அன்று அவளது மூத்த தம்பி கேசவன் தன்னுடன் படித்த பவித்ரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான். முதலில் அதை ஏற்க முடியாத குடும்பத்தார் பின்பு மகன் பாசம் வெற்றி கொள்ள பவித்ராவையும் தங்கள் குடும்பத்தில் சேர்த்து கொண்டனர்.
திருமணம் முடித்த சகோதரிகள் இருவருக்கும் வருடம் தவறாமல் சீர் செய்வது, வீட்டு லோன், வீட்டில் செலவு, இளைய தம்பியின் படிப்பு செலவு என்று அனைத்தையும் அவன் ஒருவனே தாங்கிக் கொண்டிருக்க இதில் எந்த வேலை கிடைத்தாலும் செய்யாமல் சோம்பேறியாக சுற்றித்திரிந்த தம்பியின் மனைவியின் செலவும் அவனுடையதில் சேர்ந்து கொண்டது.
இப்படி அவளின் வருமானத்தை நம்பி மட்டுமே அவன் குடும்ப உறுப்பினர்கள் இருக்க அவனுக்கு வேலை போனது அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தையே தந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித உணர்வில் இருந்தனர். அதில் பெரும்பாலும் இனி தங்களின் தேவையை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது என்ற பய உணர்விலேயே இருந்தனர்.
இதில் யாரும் அவன் எவ்வளவு கஷ்டத்துடன் வீடு திரும்பி இருக்கிறான் என்று நினைத்து பார்க்கவில்லை. அனைவரும் தங்களைப் பற்றியே சுயமாக சுயநலமாக சிந்தித்து கொண்டிருக்க ஐந்து வருடங்களாக அந்த வீட்டிற்கு உழைத்து சேர்த்த உள்ளத்தை பற்றி சிந்திக்க கூட அவர்களுக்குத் தோன்றவில்லை.
"ஐயோ சீர் இல்லாம இனி என் மாமனார் மாமியார் நான் எப்படி சமாளிப்பேன்...." என்று மூத்த அக்கா மலர்விழி தன் கவலையை ஆரம்பிக்க, அவளை தொடர்ந்து அடுத்த தங்கை கயல்விழி
"நான் வேற அண்ணன் நம்பி தான என் மக பெயருல புதுசா சீட்டு ஆரம்பிச்சேன். இனி என்ன செய்வேன்." என்று கூற, கேசவன் மனதுக்குள்ளேயே
"இன்னும் கொஞ்ச நாள் போன நான் யாருக்கும் தெரியாம வாங்குன வீட்டு கடனையும் அடைச்சு முடிச்சிருப்பேன். அதுக்குள்ளேய இவனுக்கு வேலை போகணும். இனி எங்கிட்ட வீட்டு செலவுக்கு பணம் கேட்டா என்ன பண்ண?" என்று நினைத்துக்கொள்ள, கவிதையைப் பெற்ற அவர் தாயோ அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த பின்
"என்னடா கவிதா கார்த்திக் சொல்றது உண்மையா? உன்னைத்தானே நாங்க மலைபோல நம்பி இருந்தோம். இப்படி எங்க நம்பிக்கையில மண்ண அள்ளி போட்டுட்டியே." என்று சத்தமாக கத்தி அழ ஆரம்பித்தார்.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல அவரது தாய் மாமாவின் மனைவி சுந்தரவள்ளி
"நல்ல வேலை அவசரப்பட்டு என் பொண்ணு தேன்மொழிய இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கல. கொடுத்திருந்தா என் பொண்ணு நடுத்தெருவில் தான் நிக்கனும்." என்று தன் மகள் ஏதோ பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்தது போல பேசி வைக்க, கவிதனுக்கு இப்பொழுது சுவரில் முட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
அதே நேரம் தாயின் பேச்சில் அதிர்ந்து நின்ற தேன்மொழியின் முகத்தை பார்க்கும் பொழுது கவிதன் அவள் மீது இரக்கமே மேலோங்கியது.
கதிர்வேல் எவ்வளவோ தடுத்தும் சுந்தரவள்ளி தன் இஷ்டத்திற்கு பேசிக் கொண்டே செல்ல மற்றவர்களும் அவரது பேச்சை தடுக்க முயற்சி செய்யவில்லை. இறுதியில்
"என் பொண்ணு என் தங்கச்சி வீட்டுக்குத்தான் மருமகளா வரணும்னு என்னோட ஆசை அதனால் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்." என்று கதிர்வேல் உறுதியாக கூற, சுந்தரவள்ளி நொடியும் யோசிக்காமல்
"அப்படின்னா உங்க தங்கச்சி சின்ன பையன் கார்த்திக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்." என்று அவருக்கு நல்லது என்று தோன்றிய வழியை கூறினார்.
முன்பு இருந்தே சுந்தரவள்ளிக்கு தனது மகளை கவிதனுக்கு திருமணம் செய்து கொடுப்பதில் விருப்பம் பெரிதாக இருந்தது இல்லை. என்ன தான் கவிதை நல்லவனாகவும் நல்ல வேலையில் இருந்தாலும் அவனது வருமானங்கள் எதுவும் அவனது கையில் இல்லை என்பதும், அவன் வீட்டார் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருப்பதுவும் அவரது அதிர்ப்திக்கு பெரிய காரணமாக இருந்தது.
இந்த இரண்டு விஷயங்களும் கார்த்திக்கிடம் கிடையாது எனவே அவரை பொருத்தவரையில் நல்லவன் கவிதனை விட வல்லவன் கார்த்திக் சிறந்த தேர்வு.
பேச்சு வேறு பாதையில் பயணிக்க கவிதனுக்கும் தான் நினைத்த எதையும் சட்டென்று அனைவரின் முன்பும் பேசி விட முடியவில்லை.
கார்த்திக் சிறுவயதிலிருந்து கவிதனிடம் போட்டி போடும் மனப்பான்மையை எதனாலோ தன்னுள் வளர்த்துக்கொண்டான். இந்த போட்டி குணம் சில நேரம் அவனுக்கு வெற்றியாகவும், பல நேரம் அவனுக்கு தோல்வியாகும் அமைந்தது.
அண்ணன் வழியை பின்பற்றி அவன் படித்து சில மாதங்களுக்கு முன்பு நல்ல வேலையில் அமர்ந்துவிட்டான். ஆனால் உறவு பெண்களில் அழகியான தனது மாமன் மகள் அண்ணணுக்கு மனைவியாகும் விஷயத்தில் அவனுக்கு பெரிதும் மனத்தாங்கல் இருந்தது. அதில் தோல்வியடைய அவன் விரும்பவில்லை.
தேன்மொழி மீது தனக்கு இருந்த ஈர்ப்பை யாரிடமும் கூற முடியாமல், அதே சமயம் எப்படியாவது இந்த திருமணத்தை பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வளரவிடாமல் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்க, அவன் எதிர்பாராத விதமாக சுந்தரவள்ளியே அதை ஆரம்பித்து வைத்தார்.
தன் வேலை போன விஷயம் தெரிந்தால் வீட்டினர் கவலை கொள்வார்கள் அதனை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று பலவித சிந்தனையோடு நேற்றிலிருந்து போராடிக்கொண்டிருந்த கவிதனுக்கு இளைய தம்பியின் மூலம் உருவான இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.
தனது திறமைக்கு எப்படியும் இன்னும் சிறிது நாட்களிலேயே தற்போது பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட சிறப்பான ஒரு வேலையை தேடிக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை இருந்தாலும் அதை மற்றவர்களுக்கு, குறிப்பாக அன்னைக்கும் அத்தைக்கும் புரிய வைக்கத்தான் முடியவில்லை.
மீண்டும் மீண்டும் அனைவரும் கவிதன் வேண்டும் என்று வேலையை விட்டு வந்ததாகவும், தங்களின் மீது அவனுக்கு அக்கறை இல்லை என்பது போலவும் பேச, அவனுக்கு தன்னை நினைத்தே கழிவிரக்கம் தோன்ற ஆரம்பித்தது.
நிலைமை மோசமாகும் நேரம் வீட்டில் அழைப்பு மணி ஒலிக்க அனைவரின் கவனமும் தற்காலிகமாக வாசலை நோக்கி திரும்பியது.
"ஹலோ மிஸ்டர் விதுர கவிதன் நான் ஆனந்த். இத எங்க பாஸ் உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க." என்று பார்மலாக உடையணிந்த ஒருவர் கவிதன் முன்பு ஒரு பழுப்பு நிற உறையை நீட்ட, கவிதன் அவர் யார் என்று அறியாமல் தயக்கத்துடனே பெற்றுக் கொண்டான்.
தனது அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வான உறையில் இருந்த கடிதத்தை படித்ததுமே அவன் முகம் பல வண்ணஜாலம் காட்ட ,அதை வீட்டார் அனைவரும் ஆராய்சி பார்வை பார்த்துக் கொண்டிருந்தன.
"இது என்க பாஸ் காட். உங்க பதில நீங்களே சொல்லிட்டா ஓகே." என்று கூறிவிட்டு சென்றுவிட, அடுத்த நொடி அவன் கையில் இருந்த கடிதத்தை பறித்து படித்த அவன் மூத்த சகோதரி
"ஐய்ய்ய் ஆம்மா அண்ணணுக்கு பெரிய கம்பெனியில வேலை கிடைத்திருக்கு ம்மா. அது மட்டுமில்லாமல் முன்ன வேலை பார்த்த இடத்தை விட இரண்டு மடங்கு சம்பளம்." என்று தான் கடிதத்தில் வாசித்ததில் புரிந்த விஷயத்தை வீட்டாருக்கு தெரியப்படுத்த, அடுத்த நொடி மந்திரக்கோலை சுழற்றியது போல அனைவரும் அனைவரும் முக பாவனையும் பேச்சும் மாறியது.
அதுவரை அவனை திட்டிக் கொண்டு இருந்தவர்கள் மீண்டும் தங்கள் பழைய முகமூடியை அணிந்து கொண்டு பேச ஆரம்பிக்க அது எதுவும் கவிதையில் கருத்தில் படவில்லை.
அவன் எண்ணம் முழுவதும் தனக்கு புதிதாகக் கிடைத்திருக்கும் வேலையிலேயே இருந்தது. தன்னுடைய திறமைக்கு இந்த வேலை சரியானதாக இருந்தாலும் அதை தன்னிடம் ஒப்படைக்க நினைத்த தேனிலாவை பற்றி ஆராய்ச்சியாக நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஆம் கபிலனுக்கு புதிதாக வேலை கிடைத்திருப்பது தேனிலவின் ஒரு நிறுவனத்தின் தான். அதுவும் அந்த நிறுவனம் முழுவதும் அவனது கட்டுப்பாட்டில் இயங்கும் அளவிற்கான அதிகாரமுள்ள பதவியுடன் கூடிய வேலை.
சில மணி துளிகளுக்கு பிறகு சுற்றம் உரைக்க சுற்றத்தாரின் நடவடிக்கையும் உரைக்க ஒன்றும் கூறாமல் தனது அறைக்கு வந்து, மீண்டும் சென்னை செல்வதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தான்.
கவிதன் சென்றது எதோ சொல்ல வந்த சுந்தரவள்ளியை தனது கோப பார்வையால் தடுத்து நிறுத்திய கதிர்வேல்,
"எல்லாரும் அதிகமா பேசியாச்சு, இப்போதைக்கு யாரும் எதுவும் பேச வேண்டாம்." என்று அனைவருக்கும் பொதுவாக கூறி விட்டு தனது மகள் மனைவியுடன் வீடு திரும்பினார்.
கணினியில் வேகமாக தட்டச்சு செய்து கொண்டிருந்த தங்கையை சில நொடிகள் கவனித்த அக்னி மித்ரன்
"ஐ காண்ட் பிலிவ் திஸ் எதுக்காக நீ அந்த கவிதனுக்கு இவ்வளவு பெரிய பதவியில் கொடுத்திருக்கிற. வீ ஆர் ஆல்ரெடி ஹேவ் well-trained அண்ட் எக்ஸ்பீரியன்ஸ்டு ஸ்டாப்ஸ். தென் வெய் கவிதன்?" என்று தனது சந்தேகத்தை கேட்க, தனது சகோதரனை நிமிர்ந்து பார்த்த தேன்னிலா
"ஐ ஆல்ரெடி ஆன்சர்டு பார் திஸ் கொஸ்டின்." என்று சலனமில்லாமல் கூற, தனது கேள்விக்கான பதில் எப்பொழுது தங்கையிடமிருந்து கிடைத்தது என்று புரியாமல் சில நொடி குழம்பிய அக்னி மித்ரன் அன்று கவிதன் படிப்பிற்கு தங்கை உதவும் போது கூறிய பதில் நினைவு வந்தது.
"வாட் எவர் தேனு. எனக்கு நீ உன்னுடைய ஸ்டேட்டஸ் விட்டு இறங்கி வருவது சுத்தமா புடிக்கல." என்று கவிதனுக்கு தனது தங்கை உதவுவதில் தனக்கு விருப்பமில்லை என்பதை நேரடியாக உணர்த்த, பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட தேன்னிலா
"நான் என்னுடைய ஸ்டேட்டஸ விட்டு இறங்கி வரப்போவது இல்லை. பட் கவிதன என்னுடைய ஸ்டேட்டஸ் இக்வல்லா கொண்டு வரப் போறேன்." என்று கூற
"பார் வாட்?" எதற்காக தங்கையின் இந்த முடிவு என்று தெரிந்து கொள்ள மித்ரன் கேட்க
"ஐ வாண்ட் டு மேரி ஹிம்." என்று அசராமல் வந்த தேனிலாவில் பதிலில், பல நிறுவனங்களை திறம்பட கட்டிக்காக்கும் மித்ரன் அதிர்ந்து போனான்.
முதல் பிழை போல் மனதினிலே....
விழுந்தது உன துருவம்... ஓ....
உதடுகளால் உனை படிப்பேன்....
எரிந்திடு அரை நிமிடம்...
தொலைவதுபோல் தொலைவதுதான்..
உலகில் உலகில் புனிதம்