All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சொல்லாத காதல் 😷💔❤️💔😷

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
12051
சொல்லாத காதல்


உன் கன்னக்குழியில் எழுதிடா
என் ஆசை முத்தம் காதல்

எழுதியும் உன் முகவரி சேரா
என் ஆயிரம் காகித கவிதைகள் காதல்

என் இதயம் கொன்ற இரக்கமற்ற
வலிகளாய் எழுதப்படாத
என் ஒருதலை காதல்......


சொல்லி தொலையா என் சொல்லாத காதல்...

............>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




அவள் கண்கள் என்னும்
கருவறையில்
காதல் என்னும் உயிர் வளர்த்தேன்
உதித்த காதல் உயிர் உருபெறும்
முன்னே உதிர்ந்து போனது
காலம் கடந்த

என் சொல்லாத காதலால்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


12055


நேரத்தை வீணடித்து
நேர்த்தியாய் ஒரு கவிதை

கவிதையுடன் என் உள்ளம்
புதைத்த காதல்

விழிகள் நான்கும் நோக்க
இதயம் இரண்டும் இடமாற

மொழியாய் என் காதல் பிறக்கும் முன்னே
வலியாய் என் கண்ணீர் துளிர்த்ததால்

முடியாமல் போனது என் காதலை

உன்னிடம் சொல்ல...

.>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




12052


உன்னுடன் மட்டுமே இனிதாய் பேசிய
என் இதழ்கள்


என்றும் விடாமல் உன் கரம் கோர்த்து நடந்த
என் கரங்கள்

அலை வந்து மோதும் அந்தி வான கடற்கரை
ஓரத்தில் உன்னுடன் மட்டுமே பயணித்த
என் கால்கள்

நான் உயிர் வாழ்கிறேன் என்பதற்கு ஆதாரமாய்
உனக்காய் மட்டுமே துடித்த
என் இதயம்

இவைகள் சொல்ல நினைத்த காதல்

உன் விழிகள் என்னும் தடையை தகர்த்த முடியாமல்
தவித்து நின்றது

ஏனெனில்
என் காதலின் பிம்பம் உன் விழியில்
பிரதிபளிக்காமல் போய்விடுமோ என்று…..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

12053



எப்போதும் கலைந்து கிடக்கும் என் அறை
அதன் ஓரத்தில்

என் மலரும் நினைவுகளாய் சிறு பெட்டி
அதில் பல காகித மடல்கள்

ஒவ்வொன்றும் பல கதை சொல்ல
ஒரு கடிதம் மட்டும் கையில் கணத்தது
கணத்த மனதுடன் திறந்தேன்

வெள்ளை நிறமாய் ஆரம்பித்து
இருள் நிறத்தில் முடிந்தது
அவள் கையெழுத்து

இரு துளி கண்ணீர் பட்டு கலைந்த
அக்கையெழுத்து சொன்னது
கண்ணீருடன் என்னவளின்
சொல்லாத காதலை….


>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


12054

நித்தமும் உன்னுடன் பயணிக்க
நினைக்கிறேன்

உன் வேதனையில் நான் வலிக்கொண்டு
உன் மகிழ்வில் நான் புன்னகைத்து
உன் துயரில் நான் பங்குக்கொண்டு

முடிகற்றை நிறைந்த உன் நெஞ்சத்தை
மஞ்சமாய் கொண்டு

தோழியாய் தோள் தந்து
துணைவியாய் மடி தந்து

நித்தமும் உன்னுடன் பயணிக்க
நினைக்கிறேன்

இவ்வுணர்வுக்கு பெயர் என்னவோ
காதல் என்றால் அதை

சொல்ல நினைக்கிறேன்
சொல்லாமலும் தவிக்கிறேன்

எங்கே நீ மறுத்துவிடுவாயே என்று…..




>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

HI friend and sister romba naaluku apram oru kakitha padichi epdi irukunu sollunga kutham kurai irunthalum sollunga na thiruthikuren

கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... sisters & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/
 
Last edited:
Top