Nila Yazhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
10
"நீயாடி இது? ஆஃபீஸ்னு அடக்கி வாசிக்கிறேன்" என்று கூறியவனைப் பார்த்து சிரித்தாள் அவள்.
"உங்க கிட்ட கொடுத்த என் செல்போன் சேகரின் டேபிள் டிராயரில் எப்படி
இருந்தது?"
"எல்லாம் கௌதமின் உபயம்" என்று ஜீவா சொல்ல, பவித்ராவின் கண்கள் கலங்கியது.
"ஷ்ஷ்.. என்ன பவி . . அதுதான் எல்லாம் முடிஞ்சுட்டதே.. இன்னுமென்ன அழுகை ?"
"தேங்க்ஸ் ஜீவா "
"எதுக்கு இத்தனை தேங்க்ஸ்? அதற்கு பதிலா ஒரு சின்ன ஹெல்ப்
பண்ணுறியா?"
என்ன உதவி என்பது போல் பார்த்தவளிடம் "லன்ச் டைம்
ஆகிடுச்சு.. நாலு மணிக்கு ஒரு பிஸினெஸ் மீட்டிங்
இருக்கு.. உத்தரவு கொடுத்தால்
கிளம்பிடுவேன்" என்று ஜீவா சொல்ல அவள் போலியாக முறைத்தாள்.
"இந்த அளவுக்கு ஐஸ் வைக்க வேணாமே.. நானென்ன உங்களைக்
கட்டியா போட்டிருக்கேன்? என்கிட்ட அனுமதி கேட்குறீங்க?" என்று
சிணுங்கியபடி கேட்டவளைப் புதிராக பார்த்தான் அவன்.
அவனிடம் பதில் வராமல் போகவே, விழியுயர்த்தி அவனைப் பார்த்தவள் அவன் முகத்தில் தெரிந்த பாவத்தில் தலைகுனிந்தாள்.
"லட்டு.."
அவனது பிரத்யேக அழைப்பில் குற்றவுணர்வு மேலிட உதட்டைக் கடித்தவளின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தது. அடுத்ததாக அவன் கேட்கவிருக்கும் கேள்வியை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள் அவள்.
அவளுக்கு அந்தக் கஷ்டத்தைத் தரக் கூட மனமில்லாமல் வாய் வயை வந்த கேள்வியைத் தடுத்து நிறுத்தி, "கிளம்பட்டுமா?" என்று மட்டும் கேட்க பவித்ரா தலையசைத்தாள்.
"நீயும் போய் சாப்பிடு.. இல்லன்னா உன்னைத் தேடி என் ரூமிற்க வந்துடுவான் கௌதம்" என்று ஜீவா சிரித்தவாறே சொல்ல பவித்ரா நிம்மதியுடன் வெளியே சென்றாள்.
அலுவலகமே காலியாக
இருக்க கெளதம் மட்டும் பவித்ராவின் கேபினில் அமர்ந்திருந்தான்.
பவித்ரா வரவும் எதுவும் பேசாமல் அவன் எழுந்து 'போகலாமா?' என்று கேட்டான்.
'இப்போ இவன்கிட்ட என்ன சொல்றது? '
"சாரி கௌதம் .. நான் ஜீவா பத்தி உன்கிட்ட மறைச்சதுக்கு" பவித்ரா
மெதுவான குரலில் சொல்ல, கௌதம் அவளைப் பார்த்து புன்னகையோடு பேசினான்.
"இது கொஞ்சம் நான் எதிர்பார்த்த விஷயம் தான்" என்று சொன்னவனை பவித்ரா நம்பாத பார்வை பார்த்தாள். அவள் ஜீவாவைத் தெரியும் என்பது போல் ஒரு நாளும் நடந்து கொண்டதில்லை. அப்படியிருக்க
கௌதம் இதை எதிர்பார்த்தேன் என்று சொன்னால் அவள் எப்படி நம்புவாள்?
"உண்மை தான் பவி. . " என்றவன் அன்று பவித்ரா அவனை சாப்பிட அழைக்க வந்த போது நடந்ததைச் சொன்னான்.
"பேயைத் தான் பார்த்திருக்கான்னு ஜீவா சார் சொல்லும்போதே எனக்கு ஷாக் தான்.. நான் திரும்பக் கேட்டதும் பேச்சை மாத்திட்டாரு.. நீயும் ஜீவா சாரைத் தெரிந்த மாதிரி காட்டிக்கல.. சரி ஏதோ
நமக்குத் தான் பிரம்மைனு நினைச்சேன்.. பார்த்தால் மனுஷன்
எக்ஸ்பீரியன்ஸில் தான் சொல்லியிருக்காரு போல!?" என்று கௌதம் சிரிக்க பவித்ரா அவனை முறைத்தாள்.
"ஓகே ஓகே..ஜஸ்ட் ஃபார் ஃபன். . பட் யூ ஆர் சோ லக்கி பவி"
"ஏன்?"
"ஏன்னு உனக்குத் தெரியாதா?"
அவளுக்குத் தெரியும் தான் . . ஜீவா எப்போதுமே கௌதமிற்கு ஹீரோ
மாதிரி.. அவனிடம் வேலை பார்ப்பதையே பெருமையாகச் சொல்லிக்
கொள்பவன் கௌதம்.. அப்படிப்பட்டவன் அவளை வேறு எதற்காக லக்கி
என்று சொல்லப் போகிறான்?
அறிந்திருந்தும் பவித்ரா சிரித்தவாறே
தெரியாது என்று தலையசைத்தாள்.
"ஜீவா சார் உன்னைக் காதலிக்கிறாரே.. அதுக்குத்தான்" என்று பொறாமையின் சாயலோடு கௌதம் சொல்ல பவித்ராவிற்கு சிரிப்பு வந்துவிட்டது .
"கௌதம் நீ ஒரு பையன்.. அதையே மறந்துட்ட போல? என்னவோ ஜீவா என்னைக் காதலிக்காமல் இருந்திருந்தா உன்னைக் காதலிச்சிருப்பார் என்பதைப் போலப் பேசுறியே" என்று அவள் சிரிக்க
கௌதம் எட்டிக்காயைத் தின்றது போல முகத்தைச் சுளித்தான். அதைப்
பார்த்த பவித்ரா இன்னும் அதிகமாகச் சிரிக்க அதை ரசனையுடன்
பார்த்தவாறே ஜீவா அவர்களைக் கடந்து சென்றான்.
பவித்ராவும் கௌதமும் வழக்கம் போல அவர்களது இடத்தில் அமர்ந்து உணவுண்ண ஆரம்பிக்க ஸ்வீட்டி அவர்களின் அருகில் வந்து நின்றாள். பவித்ராவும் கௌதமும் அவளைத் திரும்பிப் பார்க்க அவள் தயக்கத்தோடு மன்னிப்பு கேட்டாள்.
"நான் எதுவும் தப்பா நினைக்கல ஸ்வீட்டி.. பரவாயில்லை" என்று
பவித்ரா மெல்லிய குரலில் சொன்னாள்.
ஸ்வீட்டி கிளம்ப அடுத்து
சுலோச்சனா வந்து மன்னிப்பு கேட்க அவளுக்கு என்னவோ போலிருந்தது.
அவள் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு அவளது கேபினிற்குச் செல்ல அங்கே ராஜேஷும் நித்தினும் அவளிடம் வந்து பேசினார்கள்.
அவர்களிடமும் பேசி அனுப்பிவிட்டு கௌதமைக் காணச் சென்றவள் அவனின் அருகே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டவாறு தலையைப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டாள்.
கௌதமிடம் பேசிக் கொண்டிருந்தவளை அருகிலிருந்த சிலர் புதிய மரியாதையோடு பார்த்து சிரிக்க
அவளும் வேறு வழியின்றி சிரித்து வைத்தாள்.
"என்ன பவி இங்கே வந்துட்ட? என்ன விஷயம்?" என்று கௌதம் கேட்க
பவி தலையைப் பிடித்தாள்.
"தலைவலி"
"என்னாச்சு? நல்லா தானே இருந்த?"
"எல்லோரும் ஒரு மாதிரி புதிசா பார்க்கிறாங்க கௌதம்.. மரியாதை
கொடுத்துப் பேசுறாங்க... தலைவலியாக இருக்கு" என்று பவித்ரா சொல்ல
கௌதம் சிரித்தான்.
"ஜாலியாக அதை என்ஜாய் பண்ணு பவி.. ஏன் டென்ஷன் ஆகுற?"
"ஒரு மாதிரியாக இருக்கே கௌதம்"
"இதையும் உன் ஆளிடம் சொல்லு அப்போ . . இதுக்கும் எதாவது வழி சொல்லுவார்"
"என்ன வழி?"
"அதை ஜீவா சார் கிட்ட தான் கேட்கணும்" என்று பூடகமாகச் சொல்ல
பவித்ரா புரியாமல் பார்த்தாள்.
"ஈஸி பவி.. ரெண்டு நாள்ல நார்மலாக ஆகிடும்..எல்லோரும் இதை மறந்துவிட்டு வேறொன்றைப் பேசப்
போறாங்க.." என்று அவன் சொல்ல பவித்ரா தலையாட்டினாள்.
ஜீவாவால் அவ்வளவு எளிதாக சேகரை விட்டுவிட மனமில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் தேவையின்றி பவியையும் உள்ளிழுக்க வேண்டிவரும் என்பதால் அன்அஃபீஷியலாய் அவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கச் சொன்னான். சைபர் க்ரைமில் வேலை செய்யும் நண்பரிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறியவன் மேற்கொண்டு அந்தப் புகைப்படம் பகிர்தலைத் தடை செய்திருந்தான்.
அன்றைய தினம் பவித்ரா ரொம்பவே சந்தோஷமாக இருந்தாள். அதே மனநிலையில் வீட்டிற்குச் சென்றவளை முகம் முழுவதும் சிரிப்போடு பத்மா வரவேற்க அவள் பத்மாவை இறுக அணைத்துக் கொண்டாள்.
"என்னடி பவி ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுதே? என்ன
விஷயம்?"
"நீங்க கூட ரொம்பவே சந்தோஷமாக இருக்கிற மாதிரி தான் இருக்குது.. என்ன விஷயம்? அக்கா வர்றேன்னு
சொல்லுச்சா?"
"இல்லைடி நாம தான் அங்கே போகப் போறோம்" என்று பத்மா சொல்ல
பவித்ரா ஏனென்று கேட்டாள்.
"சந்தியாவிற்கு நாள் தள்ளிப் போயிருக்காம்டி.. அதான் பூ,
பலகாரம் எல்லாம் வாங்கிப் போய் பார்த்துட்டு வரலாம்னு அப்பாகிட்ட
சொல்லியிருக்கேன்.. அவர் வரவும் கிளம்பலாம்" என்று பத்மா பதிலளிக்க
பவித்ரா சந்தோஷத்தில் குதித்தாள்.
"என்கிட்ட சொல்லலையேம்மா அக்கா" என்று முகத்தைத் தூக்கியவளை "உன்கிட்ட சொல்லச் சொல்லி ஆயிரம் முறை என்கிட்ட போனில் சொல்லிவிட்டா தாயே .. அவளே ஈவ்னிங்
உன்னிடம் பேசுறேனு சொன்னாள்" என்று பத்மா சொல்லவும் பவித்ரா சிரித்தாள்.
"அட.. எனக்கு அக்காவைப் பற்றித் தெரியாதாம்மா? சும்மா கேட்டேன். . சரி நான் ஃப்ரெஷ் ஆகிட்டுக் கிளம்பி வரேன்.. அப்பா வரவும் கிளம்பலாம்" என்றவள் அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் சொன்னது போலவே சிவகுரு வரவும் மூவரும் கிளம்பி சந்தியாவின் வீட்டிற்குச் சென்றனர். ராமநாதன் கேஸ்
விஷயமாக வெளியே சென்றிருக்க சாவித்திரி அவர்களை முகம் மலர
வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். சந்தியா ஓடிவந்து தங்கையைக் கட்டிக்கொள்ள, பவித்ரா அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனோஜைப் பார்த்துச் சிரித்தாள்.
"அத்தான் உங்கள் நிலைமை எனக்குப் புரியுது.. நாங்கள் பாசமழையைப்
பொழிறதெல்லாம் சாதாரணமான ஒண்ணு. இதுக்கெல்லாம் என்னோடு போட்டி போடக் கூடாது"
"எனக்குக் கிடைக்காதது உனக்குக் கிடைச்சா தானே உன்னோடு
போட்டி போடணும்? அதுக்கு அவசியமே இல்லை. . என்ன சந்தியா?" என்று கேட்டு மனோஜ் கண் சிமிட்ட, சந்தியா முகம் சிவந்தாள்.
"அது என்னவோ உண்மை தான் அத்தான். . எனக்கு இவ்வளவு
சீக்கிரம் சித்தியாக புரமோஷன் கொடுத்துட்டீங்க.. அதுலேயே தெரியுது" என்று பவித்ரா சொல்ல மனோஜ்
சிரித்தான்.
"உன் அக்காவின் பேச்சையே என்னால் தாங்க முடியல. அத்தையும் மாமாவும்
பாவம்.. எப்படித்தான் ரெண்டு பேரையும் சமாளிச்சாங்களோ" என்று
சாவித்ரியுடன் பேசிக் கொண்டிருந்த சிவகுருவையும் பத்மாவையும்
பார்க்க அவர்கள் என்னவென்று தெரியாமலேயே மரியாதையோடு சிரித்து வைத்தார்கள்.
"காவ்யா எங்கே அத்தான்? காணோமே?" என்று பவித்ரா கேட்க, அவள் மாடியில் அவள் அறையில் இருப்பதாகச் சொன்னான்.
"அக்கா உன் நாத்தனாருக்கு எங்களை வரவேற்காமல் ரூமில் என்ன
வேலை? அதெப்படி அப்படி இருக்கலாம்? எங்களுக்கு என்ன மரியாதை?"
"சேச்சே .. அவளுக்கு நீங்க வந்தது தெரிஞ்சிருக்காது பவி.. அதனால் தான் மேலே இருக்கா போல.. நான் போய்க் கூப்ட்டு வர்றேன்" என்று மனோஜ்
கிளம்ப அவனைக் கைப்பிடித்துத் தடுத்தாள் சந்தியா.
"அவ சும்மா விளையாடுறா.. நீங்க ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க? நீ காவ்யாவைப் பார்க்கணும்னா நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு அவரை ஏன் கலங்கடிக்கிற?"
மனோஜிடம் சொல்லிவிட்டு பவித்ராவை அவள் முறைக்க, பவித்ரா
சிரித்தாள்.
"ரொம்ப பார்மாலிட்டீஸ் வேண்டாம் அத்தான்.. நான் விளையாட்டா தான் கேட்டேன். நாமே மேலே போகலாம்" என்று பவித்ரா சொல்ல மூவரும் காவ்யாவின் அறைக்குச் சென்றார்கள்.
காவ்யா ஹெட்செட்டை காதுகளில் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டபடி கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்தாள். மூவரும் உள்ளே வந்ததைக் கூட உணராமல் அவள் அதே நிலையில் இருக்க மனோஜ் அவளருகில் வந்து போனில் மாட்டியிருந்த ஹெட்செட்டைக் கழட்ட அவள் போனிலிருந்து கசிந்த
இசை அறை முழுவதும் கேட்டது.
அறை முழுதும் கேட்ட சத்தத்தில் காவ்யா அவசரமாக கண் திறந்து
பார்த்தாள். அவள் முன் புன்னகையோடு நின்று கொண்டிருந்த
பவித்ராவை பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தன.
"பவி அண்ணி . . எப்போது வந்தீங்க? எப்படி இருக்கீங்க?" என்று காவ்யா
நலம் விசாரித்தாள்.
"இப்படி ஹெட்செட்டை காதுல மாட்டிக்கிட்டு கண்ணை மூடி
பாட்டுக் கேட்டால் பவி வந்தது மட்டுமல்ல அத்தை மாமா வந்தது கூடத்
தெரியாது" என்று மனோஜ் குற்றம் சாட்டும் குரலில் சொல்ல காவ்யா தலைகுனிந்தாள்.
"சாரிண்ணா.. நான் போய் அவங்க கிட்ட பேசிவிட்டு வரேன்" என்று கூறி வருத்தத்துடன் சென்றவளைத் தடுத்தாள் பவித்ரா.
"அட நீ உட்காரு காவ்யா.. உன் கூடப் பேசத்தான் நாங்க மேலே வந்தோம் . . நீ
கீழே போய்ட்டா நாங்க யார்கிட்ட பேசுறது?" என்று பவித்ரா சொல்ல
காவ்யா மனோஜைப் பார்த்தாள். அதைக் கவனித்த பவித்ரா 'முடியல' என்றாள்.
"அத்தான் திஸ் இஸ் டூ மச். ஒரு
ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டதுக்கே அவளைக் குற்றவாளிக்
கூண்டில் ஏத்திட்டீங்களே?" என்று பவித்ரா குறைபட சந்தியா 'ஆமாம்'
என்றாள்.
" நீ வேற பவி .. இவர் மட்டும் என்னவாம்? தூங்குறதுக்கு முன்னாடி ரூம்ல
பாட்டைப் போட்டு அலற விடுவாரு. . உனக்கே தெரியும் நான்
தூங்கிட்டா அவ்வளவு சீக்கிரம் எழுந்துக்க மாட்டேன் . . ஆனால்,
தூங்குறதுக்கு முன்னாடி சின்ன சத்தம் கேட்டாலும் எனக்குத் தூக்கம் வராது . . என் தூக்கமே போச்சு இங்கே வந்ததில் இருந்து..'' என்று சந்தியா
அலுத்துக் கொண்டாள்.
மனோஜ் "பாட்டால் மட்டும் தான் தூக்கம் கெட்டுச்சா?" என்று சந்தியாவின்
காதருகே குனிந்து கேட்க, சந்தியா தங்கையும் நாத்தனாரும் அறியாமல் அவன் கைகளில் கிள்ளினாள்.
"ஷ்.. எந்த நேரத்துல என்ன பேச்சு" என்று கண்களில் ஜாடைக் காட்ட மனோஜ் சிரிப்பை பதுக்கிக் கொண்டான்.
"இல்ல அண்ணி.. அண்ணன் சொல்றது சரிதான்.. நான் போய் பேசாமல் இருந்தால் மரியாதை குறைவாக
இருக்கும்.. நான் பேசிட்டு
வந்துடுறேன். அதுவரை நீங்க பேசிட்டு இருங்க" என்று
கூறிவிட்டு கீழே சென்றுவிட்டாள் அவள்.
திரும்பி மேலே வந்தவள்
நால்வருக்கும் சேர்த்து பழச்சாறு கொண்டு வர, அதைப் பருகிய படியே
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். காவ்யாவின் கேள்விகள் எல்லாமே பவித்ராவின் அலுவலகம் சார்ந்ததாகவே இருக்க பவித்ரா சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள்.
"நீ பவியை விசாரிக்கிறயா இல்லை அவளோட வேலையைப் பத்தி விசாரிக்கிறயா காவ்யா?" என்று
சந்தியாவே கிண்டலாகக் கேட்கும் வரை அவளது விசாரிப்பு இருந்தது.
"நான் அவளோட காலேஜ் பத்தி விசாரிச்சது மாதிரி அவள் என்
வேலை பத்தி விசாரிக்கிறா" என்று அவளுக்கு ஆதாரவாக பவித்ரா பேச
காவ்யா அடுத்து வாயைத் திறக்கவேயில்லை.
காவ்யாவின் விசாரிப்புகள் எதற்காக என்பதை பவித்ரா ஊகித்திருந்தாள். அதை ஊர்ஜிதப் படுத்த, பேசிக் கொண்டிருக்கும் போதே பவித்ரா கௌதமிற்கு கால் செய்து கட் செய்துவிட மிஸ்டு கால் பார்த்து அவனே திரும்ப அழைத்தான்.
"சொல்லு கௌதம்" என்று பவித்ரா காவ்யாவின் முகத்தை
ஆராய்ச்சியாகப் பார்த்தவாறே பேச அவள் எதிர்பார்த்தது போலவே
காவ்யாவின் கண்கள் மின்னின.
"என்ன சொல்ல? நீதான் கால்
பண்ணியிருக்க.. சொல்லு என்ன விஷயம்?"
"நான் அக்காவோட வீட்டுக்கு வந்திருக்கேன் கௌதம்"
"அதுக்கு ஏன் எனக்கு கால் பண்ணுன?"
"ம்ம்.. இங்கே எல்லோரும் ஃபைன்.. சரி நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம்.. எதுவும் முக்கியமான விஷயம் இல்லையே?"
"என்ன லூசு மாதிரி சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்க? நீதானே கால்
பண்ணுன? இன்ட்ரஸ்ட்டா கேம் விளையாடிட்டு இருந்தேன். . அதை பாஸ்
பண்ணி வைச்சிட்டு உனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணிட்டு இருக்கேன்"
''ஓ.. அப்படியா கௌதம் . . சரி நாளைக்குப் பேசுகிறேன்" என்று போனை வைத்துவிட்டாள் அவள்.
காவ்யாவின் கண்கள் நொடிக்கொரு முறை பவித்ராவின் செல்போனில் பதிந்து மீள்வதைப் பார்த்த பவித்ராவிற்குப் பாவமாக இருந்தது. ஆனால், அவளால் என்ன செய்ய முடியும்? இது அவள் அக்காவின் புகுந்த வீடு . . இங்கே அவள் நாத்தனார் காதல் கீதம் பாட அவள் உதவியது தெரிந்தால் அவளின் அக்கா அல்லவா பின் நாளில்
கஷ்டப்படுவாள்? காவ்யாவிற்கு இன்னும் வயதிருக்கிறது.. இந்த முடிவில்
இவள் உறுதியாய் இருந்தால் முடிந்த உதவியைச் செய்து கொள்ளலாம்
என்று நினைத்துக் கொண்டாள்.
அவர்கள் பேசிவிட்டு கீழே வரவும் பத்மா பவித்ராவைப் பார்த்து 'போகலாமா? ' என்று கேட்டாள். பவித்ரா தலையசைக்க பத்மா சந்தியாவிடம் இந்த மாதிரி நேரத்தில் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லிவிட்டு சாவித்ரியிடம் திரும்பினாள்.
"பார்த்துக்கோங்க அண்ணி" என்று பத்மா குரல் கமறச் சொல்ல,
சாவித்ரி ஆறுதலாக பத்மாவின் கையைப் பிடித்து அழுத்தினாள்.
"இது என் வீட்டு வாரிசு சம்பந்தி.. உள்ளங்கைல வைச்சு தாங்குவேன்.. கவலையே படாதீங்க" என்று கூறி அவர்
விடை கொடுக்க மூவரும் கிளம்பிச் சென்றனர்.
"நீயாடி இது? ஆஃபீஸ்னு அடக்கி வாசிக்கிறேன்" என்று கூறியவனைப் பார்த்து சிரித்தாள் அவள்.
"உங்க கிட்ட கொடுத்த என் செல்போன் சேகரின் டேபிள் டிராயரில் எப்படி
இருந்தது?"
"எல்லாம் கௌதமின் உபயம்" என்று ஜீவா சொல்ல, பவித்ராவின் கண்கள் கலங்கியது.
"ஷ்ஷ்.. என்ன பவி . . அதுதான் எல்லாம் முடிஞ்சுட்டதே.. இன்னுமென்ன அழுகை ?"
"தேங்க்ஸ் ஜீவா "
"எதுக்கு இத்தனை தேங்க்ஸ்? அதற்கு பதிலா ஒரு சின்ன ஹெல்ப்
பண்ணுறியா?"
என்ன உதவி என்பது போல் பார்த்தவளிடம் "லன்ச் டைம்
ஆகிடுச்சு.. நாலு மணிக்கு ஒரு பிஸினெஸ் மீட்டிங்
இருக்கு.. உத்தரவு கொடுத்தால்
கிளம்பிடுவேன்" என்று ஜீவா சொல்ல அவள் போலியாக முறைத்தாள்.
"இந்த அளவுக்கு ஐஸ் வைக்க வேணாமே.. நானென்ன உங்களைக்
கட்டியா போட்டிருக்கேன்? என்கிட்ட அனுமதி கேட்குறீங்க?" என்று
சிணுங்கியபடி கேட்டவளைப் புதிராக பார்த்தான் அவன்.
அவனிடம் பதில் வராமல் போகவே, விழியுயர்த்தி அவனைப் பார்த்தவள் அவன் முகத்தில் தெரிந்த பாவத்தில் தலைகுனிந்தாள்.
"லட்டு.."
அவனது பிரத்யேக அழைப்பில் குற்றவுணர்வு மேலிட உதட்டைக் கடித்தவளின் விழிகள் கலங்கிச் சிவந்திருந்தது. அடுத்ததாக அவன் கேட்கவிருக்கும் கேள்வியை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள் அவள்.
அவளுக்கு அந்தக் கஷ்டத்தைத் தரக் கூட மனமில்லாமல் வாய் வயை வந்த கேள்வியைத் தடுத்து நிறுத்தி, "கிளம்பட்டுமா?" என்று மட்டும் கேட்க பவித்ரா தலையசைத்தாள்.
"நீயும் போய் சாப்பிடு.. இல்லன்னா உன்னைத் தேடி என் ரூமிற்க வந்துடுவான் கௌதம்" என்று ஜீவா சிரித்தவாறே சொல்ல பவித்ரா நிம்மதியுடன் வெளியே சென்றாள்.
அலுவலகமே காலியாக
இருக்க கெளதம் மட்டும் பவித்ராவின் கேபினில் அமர்ந்திருந்தான்.
பவித்ரா வரவும் எதுவும் பேசாமல் அவன் எழுந்து 'போகலாமா?' என்று கேட்டான்.
'இப்போ இவன்கிட்ட என்ன சொல்றது? '
"சாரி கௌதம் .. நான் ஜீவா பத்தி உன்கிட்ட மறைச்சதுக்கு" பவித்ரா
மெதுவான குரலில் சொல்ல, கௌதம் அவளைப் பார்த்து புன்னகையோடு பேசினான்.
"இது கொஞ்சம் நான் எதிர்பார்த்த விஷயம் தான்" என்று சொன்னவனை பவித்ரா நம்பாத பார்வை பார்த்தாள். அவள் ஜீவாவைத் தெரியும் என்பது போல் ஒரு நாளும் நடந்து கொண்டதில்லை. அப்படியிருக்க
கௌதம் இதை எதிர்பார்த்தேன் என்று சொன்னால் அவள் எப்படி நம்புவாள்?
"உண்மை தான் பவி. . " என்றவன் அன்று பவித்ரா அவனை சாப்பிட அழைக்க வந்த போது நடந்ததைச் சொன்னான்.
"பேயைத் தான் பார்த்திருக்கான்னு ஜீவா சார் சொல்லும்போதே எனக்கு ஷாக் தான்.. நான் திரும்பக் கேட்டதும் பேச்சை மாத்திட்டாரு.. நீயும் ஜீவா சாரைத் தெரிந்த மாதிரி காட்டிக்கல.. சரி ஏதோ
நமக்குத் தான் பிரம்மைனு நினைச்சேன்.. பார்த்தால் மனுஷன்
எக்ஸ்பீரியன்ஸில் தான் சொல்லியிருக்காரு போல!?" என்று கௌதம் சிரிக்க பவித்ரா அவனை முறைத்தாள்.
"ஓகே ஓகே..ஜஸ்ட் ஃபார் ஃபன். . பட் யூ ஆர் சோ லக்கி பவி"
"ஏன்?"
"ஏன்னு உனக்குத் தெரியாதா?"
அவளுக்குத் தெரியும் தான் . . ஜீவா எப்போதுமே கௌதமிற்கு ஹீரோ
மாதிரி.. அவனிடம் வேலை பார்ப்பதையே பெருமையாகச் சொல்லிக்
கொள்பவன் கௌதம்.. அப்படிப்பட்டவன் அவளை வேறு எதற்காக லக்கி
என்று சொல்லப் போகிறான்?
அறிந்திருந்தும் பவித்ரா சிரித்தவாறே
தெரியாது என்று தலையசைத்தாள்.
"ஜீவா சார் உன்னைக் காதலிக்கிறாரே.. அதுக்குத்தான்" என்று பொறாமையின் சாயலோடு கௌதம் சொல்ல பவித்ராவிற்கு சிரிப்பு வந்துவிட்டது .
"கௌதம் நீ ஒரு பையன்.. அதையே மறந்துட்ட போல? என்னவோ ஜீவா என்னைக் காதலிக்காமல் இருந்திருந்தா உன்னைக் காதலிச்சிருப்பார் என்பதைப் போலப் பேசுறியே" என்று அவள் சிரிக்க
கௌதம் எட்டிக்காயைத் தின்றது போல முகத்தைச் சுளித்தான். அதைப்
பார்த்த பவித்ரா இன்னும் அதிகமாகச் சிரிக்க அதை ரசனையுடன்
பார்த்தவாறே ஜீவா அவர்களைக் கடந்து சென்றான்.
பவித்ராவும் கௌதமும் வழக்கம் போல அவர்களது இடத்தில் அமர்ந்து உணவுண்ண ஆரம்பிக்க ஸ்வீட்டி அவர்களின் அருகில் வந்து நின்றாள். பவித்ராவும் கௌதமும் அவளைத் திரும்பிப் பார்க்க அவள் தயக்கத்தோடு மன்னிப்பு கேட்டாள்.
"நான் எதுவும் தப்பா நினைக்கல ஸ்வீட்டி.. பரவாயில்லை" என்று
பவித்ரா மெல்லிய குரலில் சொன்னாள்.
ஸ்வீட்டி கிளம்ப அடுத்து
சுலோச்சனா வந்து மன்னிப்பு கேட்க அவளுக்கு என்னவோ போலிருந்தது.
அவள் அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு அவளது கேபினிற்குச் செல்ல அங்கே ராஜேஷும் நித்தினும் அவளிடம் வந்து பேசினார்கள்.
அவர்களிடமும் பேசி அனுப்பிவிட்டு கௌதமைக் காணச் சென்றவள் அவனின் அருகே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டவாறு தலையைப் பிடித்தவாறு அமர்ந்துவிட்டாள்.
கௌதமிடம் பேசிக் கொண்டிருந்தவளை அருகிலிருந்த சிலர் புதிய மரியாதையோடு பார்த்து சிரிக்க
அவளும் வேறு வழியின்றி சிரித்து வைத்தாள்.
"என்ன பவி இங்கே வந்துட்ட? என்ன விஷயம்?" என்று கௌதம் கேட்க
பவி தலையைப் பிடித்தாள்.
"தலைவலி"
"என்னாச்சு? நல்லா தானே இருந்த?"
"எல்லோரும் ஒரு மாதிரி புதிசா பார்க்கிறாங்க கௌதம்.. மரியாதை
கொடுத்துப் பேசுறாங்க... தலைவலியாக இருக்கு" என்று பவித்ரா சொல்ல
கௌதம் சிரித்தான்.
"ஜாலியாக அதை என்ஜாய் பண்ணு பவி.. ஏன் டென்ஷன் ஆகுற?"
"ஒரு மாதிரியாக இருக்கே கௌதம்"
"இதையும் உன் ஆளிடம் சொல்லு அப்போ . . இதுக்கும் எதாவது வழி சொல்லுவார்"
"என்ன வழி?"
"அதை ஜீவா சார் கிட்ட தான் கேட்கணும்" என்று பூடகமாகச் சொல்ல
பவித்ரா புரியாமல் பார்த்தாள்.
"ஈஸி பவி.. ரெண்டு நாள்ல நார்மலாக ஆகிடும்..எல்லோரும் இதை மறந்துவிட்டு வேறொன்றைப் பேசப்
போறாங்க.." என்று அவன் சொல்ல பவித்ரா தலையாட்டினாள்.
ஜீவாவால் அவ்வளவு எளிதாக சேகரை விட்டுவிட மனமில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் தேவையின்றி பவியையும் உள்ளிழுக்க வேண்டிவரும் என்பதால் அன்அஃபீஷியலாய் அவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனிக்கச் சொன்னான். சைபர் க்ரைமில் வேலை செய்யும் நண்பரிடம் சுருக்கமாக விஷயத்தைக் கூறியவன் மேற்கொண்டு அந்தப் புகைப்படம் பகிர்தலைத் தடை செய்திருந்தான்.
அன்றைய தினம் பவித்ரா ரொம்பவே சந்தோஷமாக இருந்தாள். அதே மனநிலையில் வீட்டிற்குச் சென்றவளை முகம் முழுவதும் சிரிப்போடு பத்மா வரவேற்க அவள் பத்மாவை இறுக அணைத்துக் கொண்டாள்.
"என்னடி பவி ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுதே? என்ன
விஷயம்?"
"நீங்க கூட ரொம்பவே சந்தோஷமாக இருக்கிற மாதிரி தான் இருக்குது.. என்ன விஷயம்? அக்கா வர்றேன்னு
சொல்லுச்சா?"
"இல்லைடி நாம தான் அங்கே போகப் போறோம்" என்று பத்மா சொல்ல
பவித்ரா ஏனென்று கேட்டாள்.
"சந்தியாவிற்கு நாள் தள்ளிப் போயிருக்காம்டி.. அதான் பூ,
பலகாரம் எல்லாம் வாங்கிப் போய் பார்த்துட்டு வரலாம்னு அப்பாகிட்ட
சொல்லியிருக்கேன்.. அவர் வரவும் கிளம்பலாம்" என்று பத்மா பதிலளிக்க
பவித்ரா சந்தோஷத்தில் குதித்தாள்.
"என்கிட்ட சொல்லலையேம்மா அக்கா" என்று முகத்தைத் தூக்கியவளை "உன்கிட்ட சொல்லச் சொல்லி ஆயிரம் முறை என்கிட்ட போனில் சொல்லிவிட்டா தாயே .. அவளே ஈவ்னிங்
உன்னிடம் பேசுறேனு சொன்னாள்" என்று பத்மா சொல்லவும் பவித்ரா சிரித்தாள்.
"அட.. எனக்கு அக்காவைப் பற்றித் தெரியாதாம்மா? சும்மா கேட்டேன். . சரி நான் ஃப்ரெஷ் ஆகிட்டுக் கிளம்பி வரேன்.. அப்பா வரவும் கிளம்பலாம்" என்றவள் அவளது அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் சொன்னது போலவே சிவகுரு வரவும் மூவரும் கிளம்பி சந்தியாவின் வீட்டிற்குச் சென்றனர். ராமநாதன் கேஸ்
விஷயமாக வெளியே சென்றிருக்க சாவித்திரி அவர்களை முகம் மலர
வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். சந்தியா ஓடிவந்து தங்கையைக் கட்டிக்கொள்ள, பவித்ரா அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மனோஜைப் பார்த்துச் சிரித்தாள்.
"அத்தான் உங்கள் நிலைமை எனக்குப் புரியுது.. நாங்கள் பாசமழையைப்
பொழிறதெல்லாம் சாதாரணமான ஒண்ணு. இதுக்கெல்லாம் என்னோடு போட்டி போடக் கூடாது"
"எனக்குக் கிடைக்காதது உனக்குக் கிடைச்சா தானே உன்னோடு
போட்டி போடணும்? அதுக்கு அவசியமே இல்லை. . என்ன சந்தியா?" என்று கேட்டு மனோஜ் கண் சிமிட்ட, சந்தியா முகம் சிவந்தாள்.
"அது என்னவோ உண்மை தான் அத்தான். . எனக்கு இவ்வளவு
சீக்கிரம் சித்தியாக புரமோஷன் கொடுத்துட்டீங்க.. அதுலேயே தெரியுது" என்று பவித்ரா சொல்ல மனோஜ்
சிரித்தான்.
"உன் அக்காவின் பேச்சையே என்னால் தாங்க முடியல. அத்தையும் மாமாவும்
பாவம்.. எப்படித்தான் ரெண்டு பேரையும் சமாளிச்சாங்களோ" என்று
சாவித்ரியுடன் பேசிக் கொண்டிருந்த சிவகுருவையும் பத்மாவையும்
பார்க்க அவர்கள் என்னவென்று தெரியாமலேயே மரியாதையோடு சிரித்து வைத்தார்கள்.
"காவ்யா எங்கே அத்தான்? காணோமே?" என்று பவித்ரா கேட்க, அவள் மாடியில் அவள் அறையில் இருப்பதாகச் சொன்னான்.
"அக்கா உன் நாத்தனாருக்கு எங்களை வரவேற்காமல் ரூமில் என்ன
வேலை? அதெப்படி அப்படி இருக்கலாம்? எங்களுக்கு என்ன மரியாதை?"
"சேச்சே .. அவளுக்கு நீங்க வந்தது தெரிஞ்சிருக்காது பவி.. அதனால் தான் மேலே இருக்கா போல.. நான் போய்க் கூப்ட்டு வர்றேன்" என்று மனோஜ்
கிளம்ப அவனைக் கைப்பிடித்துத் தடுத்தாள் சந்தியா.
"அவ சும்மா விளையாடுறா.. நீங்க ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்துக்குறீங்க? நீ காவ்யாவைப் பார்க்கணும்னா நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுட்டு அவரை ஏன் கலங்கடிக்கிற?"
மனோஜிடம் சொல்லிவிட்டு பவித்ராவை அவள் முறைக்க, பவித்ரா
சிரித்தாள்.
"ரொம்ப பார்மாலிட்டீஸ் வேண்டாம் அத்தான்.. நான் விளையாட்டா தான் கேட்டேன். நாமே மேலே போகலாம்" என்று பவித்ரா சொல்ல மூவரும் காவ்யாவின் அறைக்குச் சென்றார்கள்.
காவ்யா ஹெட்செட்டை காதுகளில் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டபடி கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்தாள். மூவரும் உள்ளே வந்ததைக் கூட உணராமல் அவள் அதே நிலையில் இருக்க மனோஜ் அவளருகில் வந்து போனில் மாட்டியிருந்த ஹெட்செட்டைக் கழட்ட அவள் போனிலிருந்து கசிந்த
இசை அறை முழுவதும் கேட்டது.
அறை முழுதும் கேட்ட சத்தத்தில் காவ்யா அவசரமாக கண் திறந்து
பார்த்தாள். அவள் முன் புன்னகையோடு நின்று கொண்டிருந்த
பவித்ராவை பார்த்ததும் அவள் கண்கள் விரிந்தன.
"பவி அண்ணி . . எப்போது வந்தீங்க? எப்படி இருக்கீங்க?" என்று காவ்யா
நலம் விசாரித்தாள்.
"இப்படி ஹெட்செட்டை காதுல மாட்டிக்கிட்டு கண்ணை மூடி
பாட்டுக் கேட்டால் பவி வந்தது மட்டுமல்ல அத்தை மாமா வந்தது கூடத்
தெரியாது" என்று மனோஜ் குற்றம் சாட்டும் குரலில் சொல்ல காவ்யா தலைகுனிந்தாள்.
"சாரிண்ணா.. நான் போய் அவங்க கிட்ட பேசிவிட்டு வரேன்" என்று கூறி வருத்தத்துடன் சென்றவளைத் தடுத்தாள் பவித்ரா.
"அட நீ உட்காரு காவ்யா.. உன் கூடப் பேசத்தான் நாங்க மேலே வந்தோம் . . நீ
கீழே போய்ட்டா நாங்க யார்கிட்ட பேசுறது?" என்று பவித்ரா சொல்ல
காவ்யா மனோஜைப் பார்த்தாள். அதைக் கவனித்த பவித்ரா 'முடியல' என்றாள்.
"அத்தான் திஸ் இஸ் டூ மச். ஒரு
ஹெட்செட் போட்டு பாட்டுக் கேட்டதுக்கே அவளைக் குற்றவாளிக்
கூண்டில் ஏத்திட்டீங்களே?" என்று பவித்ரா குறைபட சந்தியா 'ஆமாம்'
என்றாள்.
" நீ வேற பவி .. இவர் மட்டும் என்னவாம்? தூங்குறதுக்கு முன்னாடி ரூம்ல
பாட்டைப் போட்டு அலற விடுவாரு. . உனக்கே தெரியும் நான்
தூங்கிட்டா அவ்வளவு சீக்கிரம் எழுந்துக்க மாட்டேன் . . ஆனால்,
தூங்குறதுக்கு முன்னாடி சின்ன சத்தம் கேட்டாலும் எனக்குத் தூக்கம் வராது . . என் தூக்கமே போச்சு இங்கே வந்ததில் இருந்து..'' என்று சந்தியா
அலுத்துக் கொண்டாள்.
மனோஜ் "பாட்டால் மட்டும் தான் தூக்கம் கெட்டுச்சா?" என்று சந்தியாவின்
காதருகே குனிந்து கேட்க, சந்தியா தங்கையும் நாத்தனாரும் அறியாமல் அவன் கைகளில் கிள்ளினாள்.
"ஷ்.. எந்த நேரத்துல என்ன பேச்சு" என்று கண்களில் ஜாடைக் காட்ட மனோஜ் சிரிப்பை பதுக்கிக் கொண்டான்.
"இல்ல அண்ணி.. அண்ணன் சொல்றது சரிதான்.. நான் போய் பேசாமல் இருந்தால் மரியாதை குறைவாக
இருக்கும்.. நான் பேசிட்டு
வந்துடுறேன். அதுவரை நீங்க பேசிட்டு இருங்க" என்று
கூறிவிட்டு கீழே சென்றுவிட்டாள் அவள்.
திரும்பி மேலே வந்தவள்
நால்வருக்கும் சேர்த்து பழச்சாறு கொண்டு வர, அதைப் பருகிய படியே
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். காவ்யாவின் கேள்விகள் எல்லாமே பவித்ராவின் அலுவலகம் சார்ந்ததாகவே இருக்க பவித்ரா சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள்.
"நீ பவியை விசாரிக்கிறயா இல்லை அவளோட வேலையைப் பத்தி விசாரிக்கிறயா காவ்யா?" என்று
சந்தியாவே கிண்டலாகக் கேட்கும் வரை அவளது விசாரிப்பு இருந்தது.
"நான் அவளோட காலேஜ் பத்தி விசாரிச்சது மாதிரி அவள் என்
வேலை பத்தி விசாரிக்கிறா" என்று அவளுக்கு ஆதாரவாக பவித்ரா பேச
காவ்யா அடுத்து வாயைத் திறக்கவேயில்லை.
காவ்யாவின் விசாரிப்புகள் எதற்காக என்பதை பவித்ரா ஊகித்திருந்தாள். அதை ஊர்ஜிதப் படுத்த, பேசிக் கொண்டிருக்கும் போதே பவித்ரா கௌதமிற்கு கால் செய்து கட் செய்துவிட மிஸ்டு கால் பார்த்து அவனே திரும்ப அழைத்தான்.
"சொல்லு கௌதம்" என்று பவித்ரா காவ்யாவின் முகத்தை
ஆராய்ச்சியாகப் பார்த்தவாறே பேச அவள் எதிர்பார்த்தது போலவே
காவ்யாவின் கண்கள் மின்னின.
"என்ன சொல்ல? நீதான் கால்
பண்ணியிருக்க.. சொல்லு என்ன விஷயம்?"
"நான் அக்காவோட வீட்டுக்கு வந்திருக்கேன் கௌதம்"
"அதுக்கு ஏன் எனக்கு கால் பண்ணுன?"
"ம்ம்.. இங்கே எல்லோரும் ஃபைன்.. சரி நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம்.. எதுவும் முக்கியமான விஷயம் இல்லையே?"
"என்ன லூசு மாதிரி சம்பந்தம் இல்லாமல் பேசிட்டு இருக்க? நீதானே கால்
பண்ணுன? இன்ட்ரஸ்ட்டா கேம் விளையாடிட்டு இருந்தேன். . அதை பாஸ்
பண்ணி வைச்சிட்டு உனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணிட்டு இருக்கேன்"
''ஓ.. அப்படியா கௌதம் . . சரி நாளைக்குப் பேசுகிறேன்" என்று போனை வைத்துவிட்டாள் அவள்.
காவ்யாவின் கண்கள் நொடிக்கொரு முறை பவித்ராவின் செல்போனில் பதிந்து மீள்வதைப் பார்த்த பவித்ராவிற்குப் பாவமாக இருந்தது. ஆனால், அவளால் என்ன செய்ய முடியும்? இது அவள் அக்காவின் புகுந்த வீடு . . இங்கே அவள் நாத்தனார் காதல் கீதம் பாட அவள் உதவியது தெரிந்தால் அவளின் அக்கா அல்லவா பின் நாளில்
கஷ்டப்படுவாள்? காவ்யாவிற்கு இன்னும் வயதிருக்கிறது.. இந்த முடிவில்
இவள் உறுதியாய் இருந்தால் முடிந்த உதவியைச் செய்து கொள்ளலாம்
என்று நினைத்துக் கொண்டாள்.
அவர்கள் பேசிவிட்டு கீழே வரவும் பத்மா பவித்ராவைப் பார்த்து 'போகலாமா? ' என்று கேட்டாள். பவித்ரா தலையசைக்க பத்மா சந்தியாவிடம் இந்த மாதிரி நேரத்தில் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லிவிட்டு சாவித்ரியிடம் திரும்பினாள்.
"பார்த்துக்கோங்க அண்ணி" என்று பத்மா குரல் கமறச் சொல்ல,
சாவித்ரி ஆறுதலாக பத்மாவின் கையைப் பிடித்து அழுத்தினாள்.
"இது என் வீட்டு வாரிசு சம்பந்தி.. உள்ளங்கைல வைச்சு தாங்குவேன்.. கவலையே படாதீங்க" என்று கூறி அவர்
விடை கொடுக்க மூவரும் கிளம்பிச் சென்றனர்.