Pavichandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 1
"வைதேகி..!! வைதேகி..!! ஏண்டியம்மா வைதேகி..!!" என்று அந்த பழமை வாய்ந்த அக்ரஹார வீட்டினுள் நுழையும் போதே தன் மனையாளான வைதேகியை அழைத்தபடி வந்தார் சுப்ரமணிய சாஸ்திரி.
அவரது குரல் கேட்டு அடுக்களையினுள் இருந்து தன் கைகளை துடைத்தபடி ஒரு சொம்பு தண்ணீரை கையில் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்த வைதேகி அதை தன் கணவன் புறம் நீட்டியபடி "ஏண்ணா இதை சத்த குடிங்கோ பிறகு பேசவந்த விஷயத்தை பேசிக்கலாம்....!!" என்று முகத்தில் வழியும் மலர்ந்த புன்னகையுடன் சொல்ல.
அதில் தன் மனைவியை பார்த்து புன்னகைத்த சுப்ரமணி "ஹா..ஹா நீ இருக்கியே..!!" என்று செல்லமாக அலுத்தபடி தண்ணீர் அடங்கிய சொம்பை வாங்கி வாயில் சரித்தார்.
உண்மையில் அவருக்கு தாகமாக தான் இருந்தது போலும் அந்த சொம்பில் ஒரு சொட்டு தண்ணீர் மிச்சமின்றி மொத்தமாக குடித்து முடித்தவர் காலியான சொம்பை தன் மனையாள் புறம் நீட்டினார்.
அவரை பற்றி அறிந்த அவர் மனையாளும் சிறுபுன்னகையுடன் அந்த சொம்பை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கணவன் புறம் வர, அதற்குள் சுப்ரமணி வீட்டுத்திண்ணையில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.
"இப்ப சொல்லுங்கோணா, போன காரியம் என்னாச்சு..??" என்று ஒரு வித ஆர்வத்துடன் வினவ.
அதில் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தன் மனைவி புறம் திரும்பிய சுப்ரமணி "நேக்கு பரம திருப்தியா இருந்துதுடி வைதேகி..!! மாப்பிள்ளை பேரு ராகவன் சென்னையில பெரிய கம்பனில இன்ஜினியரா இருக்காரு. சொத்து பத்துனு அவா தோப்பனார் சேத்துவச்சதே இந்த தலமுறைக்கு காணும் அது பத்தாதுன்னு இவரும் நன்னா சம்பாதிக்குறார். அது மட்டும் இல்லை அவா நம்மளை போலவே ஆச்சாரமான பிராமணன் குடும்பம்..!!" என்று உற்சாகமாக சொன்னவர் தொடர்ந்து
"நம்ம மக ஜாதகமும் அவா ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்கு கூடவே அவாளுக்கு நம்ம பொண்ணை ரொம்பவே புடிச்சுபோச்சு டி..!! அவாளுக்கும் நம்ம பொண்ணை பார்த்து பரம திருப்திதான். ஆனா என்ன மாப்பிளை ஜாதகப்படி அடுத்த வருஷம் தான் கல்யாணம் செய்யணும்னு இருக்கு அதனால கல்யாணத்தை ஒரு வருஷம் தாண்டி வைக்க சொல்லி இருக்காங்க..!!" என்று கடைசியில் குரல் நலிந்து சொல்ல
"அதுக்கென்னணா அது இன்னும் நல்லது..!! நம்ம பொண்ணும் இப்ப தான் படிச்சிண்டு இருக்கா அடுத்த வருஷம் சரியா அவ படிப்பும் முடிஞ்சிடும். முடிஞ்ச கையோட கல்யாணம் செஞ்சு வச்சா இன்னும் வசதியா இருக்குமோனோ..!!" என்று வைதேகி சொல்ல.
அதுவே சரி என்று பட்டது சுப்ரமணிக்கு.
"சரி டி வைதேகி...!! பிரயாணம் செஞ்சதுல நேக்கு நல்லா தலைவலியா இருக்கு டி அந்த தரித்திரத்துக்கிட்ட நேக்கு ஸ்டிராங்கா பில்டர் காப்பி போட சொல்லு..!!" என்று சொல்ல
அதற்கு வைதேகியோ "ப்ச் அவ நம்ம ஆத்து பக்கத்துல இருக்க திருமால் கோயிலுக்கு போயிருக்காணா. இருங்கோ நான் போய் உங்களுக்கு போட்டுண்டு வரேன்..!!"என்று சொல்லி விட்டு அடுக்களைக்குள் நுழைய.
கோவில் என்று சொன்னதில் இவரும் அமைதி ஆகி விட்டார்.
அதே நேரம் அந்த திருமால் கோவிலின் வெளியே ஒரு பெரிய அண்டாவை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள் அவள்.
மஞ்சள் நிற தாவணியும் அதற்கு தோதாய் சற்று வெளுத்துபோன கருநீல நிற பாவாடை அணிந்து தலையை நேர் வகிடு எடுத்து கறுப்பு நிற ரிப்பனால் இருபுறமாய் முடிந்து விட்டிருந்தாள்.
நெற்றி வகிட்டில் சிகப்பு நிற சாந்து பொட்டை கோவி வடிவில் வைத்து அதற்கு மேல் குங்குமம் அதற்கு மேல் திருநீறு வைத்திருந்தாள். காதின் ஓரத்தில் சற்று நேரத்துக்கு முன் கோவிலில் கொடுத்த சிகப்பு ரோஜாவை சொருகியிருக்க.
மேலும் அதில் வட்டவடிவிலான பிளாஸ்டிக் தோடும் வீற்றிருந்தது. கூடவே கழுத்தில் சிகப்புற நிற தாயத்துடன் கூடிய நூலும் போட்டவாறு மாநிறத்திற்கும் சற்றே குறைந்த நிறத்தில் இருந்தாள் அவள். என்ன தான் நிறம் குறைவாய் இருந்தாலும் பளிச்சென்று அனைத்து பல்லும் தெரியும் படி அவள் வெகுளியாய் புன்னகைக்கையில் அத்தனை அழகாய் இருந்தது அவளை பார்ப்பதற்கு.
இருமாதங்களுக்கு முன்பு தான் பத்தொன்பது வயதை அடைந்திருந்தாள்.
தூக்கமுடியாமல் அவள் அந்த அண்டாவை தூக்கிக்கொண்டு வருவதை பார்த்து "அடியே அலமூ..!!" என்றபடி அவள் அருகில் வந்தாள் அவளது தோழி பாவனா.
தன் தோழியின் குரல் கேட்ட அலமூ இவளோ தோழி வந்துவிட்ட நிம்மதியில் "பாவனா..!! சத்த கைகொடு டி இந்த அண்டாவை தூக்கி அதோ அந்த கோவில் வாசல்ல வச்சிடுவோம்..!!"என்று சொல்ல.
உடனே அந்த அண்டாவின் மறுபுறத்தை பிடித்துக்கொண்டாள் பாவனா..!!
இருவருவமாய் சேர்ந்து அந்த அண்டாவை கொண்டு கோவிலின் வாசலில் வைத்துவிட்டு மூச்சு வாங்கியபடி நிமர.
அதில் பாவனாவோ அலமூவை பார்த்து "ஏண்டி அலமூ..!! நோக்கு ஏண்டி இந்த வேண்டாத வேலை..!! அது பாட்டுக்கு கோவில் சன்னிதானத்துக்குள்ள தானே இருந்தது. நீ ஏன் மெனக்கெட்டு போய் இதை இங்க தூக்கிண்டு வந்த..!!" என்று லேசாய் முறைத்தவண்ணம் கேட்க.
அதில் தன் நெற்றியில் வழிந்த வியர்வையை தன் தாவணியால் துடைத்தபடி மூச்சு வாங்கியவாறே "இல்லடி பானு..!! இந்த பொங்கல் சன்னிதானத்துக்குள்ள இருந்தா இதோ இவாள் எல்லாம் அதை புசிக்க முடியாது..!! அதான் வெளிய எடுத்துண்டு வந்தேன்" என்று அந்த கோவிலின் வெளியே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவர்களை சுட்டிக்காட்டி கூற.
அதில் அவளை வியப்புடன் பார்த்தாள் பாவனா கூடவே அவளது நிலையை எண்ணி கவலையும் வர
"இப்படி அடுத்தாளுக்கு பாவம் பாக்குற நோக்கு இந்த பகவான் பாவம் பாக்கலையேடி..!!" என்று எவ்வளவு முயன்றும் வாயை அடக்க முடியாமல் பாவனா சொல்லிவிட.
அதில் அதுவரை இருந்த புன்னகை மறந்து ஒரு நொடி முகம் வாடி விட்டது அலமூவிற்கு.
ஆனால் அடுத்த நொடி தன்னை
மீட்டெடுத்தவள் தன் தோழியை பார்த்து மெல்ல புன்னகைத்தவாறு "டி பாவனா, அந்த பகவான் எந்த ஒரு ஜீவராசிகளையும் சும்மா படைச்சிருக்க மாட்டார், கண்டிப்பா ஏதாவது காரணத்தோடு தான் படைச்சிருப்பார். அதே போல எப்பவும் ஒரு மனுஷாளுக்கு துன்பத்தையே கொடுத்திண்டு இருக்க மாட்டார். என்ன நான் என் வீட்டுல கொஞ்சூண்டு கஷ்ட படுறேன் அதுவும் என் மேல இருக்க அக்கறையில தான் என் தோப்பனார் அப்படி செய்யுறார். நீ வேணும்னா பாரேன் நான் என் ஆத்துக்காரர் வீட்டுக்கு போனா என்னை என் ஆத்துக்காரர் ராணி போல பார்த்துப்பார்...!!" என்று கண்கள் மலர கூறியவள் கன்னத்தில் கைவைத்து ஏதோ யோசித்தவாறு "ம்ம்ம்..!! அது என்னமோ சொல்லுவாங்களே..?? ஆங்..!! தரைல பாதம் படாம, அப்படி என்னை பார்த்துப்பார் எனக்கு வர போற ஆத்துக்காரர்...!!" என்று தன் தோழிக்கு தன் மீது இருக்கும் வருத்தத்தை போக்க எண்ணி இவள் சொல்ல அச்சமயம் சரியாய் கோவில் மணி அடித்தது.
அதில் கண்களை விரித்தவள் தன் தோழியின் புறம் திரும்பி "டி பார்த்தியா..?? மணி அடிச்சு அந்த பகவானே நடக்கபோறதை உறுதி படுத்திட்டார்..??" என்று சொல்லியவாறு கோவில் புறம் திரும்பி தன் கன்னத்தில் போட்டவள் கையை மேலே தூக்கி பகவானே என்று வாய் விட்டு கூறியபடி கும்பிட்டாள்.
தன் தோழியின் நிலை கண்டு வருத்தபடுவதா இல்லை சந்தோஷபடுவதா என்று அறியாமல் நின்றாள் பாவனா.
ஆனால் தன் வருத்தத்தை கூறி தன் தோழின் மனதில் சஞ்சலத்தை விதைக்க வேண்டாம் என்று எண்ணியவள் அவள் புறம் குறும்புடன் திரும்பி..
"எப்படி..?? உன்னை போல அம்மாஞ்சியா தானே நோக்கு மாப்பிள்ளை வேணும்..!!" என்று கேலியாக கேட்க
அதில் தன் தோழியை முறைக்க முயன்று சிரித்தவள் "நான் எப்படியோ அது நேக்கு தெரியலை டி ஆனா நேக்கு வர போறவர் மனது தூய்மையா இருக்கணும் அதிகமா கருணை உள்ளம் கொண்டு இந்த உலகத்துல உள்ள எல்லா வாயில்லா ஜீவராசிகள் கிட்டையும் அன்பா இருக்குறவா தான் என் ஆத்துக்காரர் இருப்பார். இது வரை ஒரு ஈ எறும்பு கிட்ட கூட அவர் பாவமே செஞ்சிருக்க மாட்டார். அதிர்ந்து கூட பேசாதவரா இருப்பார் கூடவே நன்னா வடு மாங்கா ஊறுகாவோடு மணக்க மணக்க எனக்கு தயிர் சாதம் சமைச்சு போடுறவாளா தான் எனக்கு வரபோற ஆத்துக்காரர் இருப்பார்..!!" என்று நாக்கை சப்புக் கொட்டியபடி கூற.
அதில் தன் தோழியை பார்த்து களுக்கென்று சிரித்த பாவனா "ஏண்டி அலமூ நோக்கு குடும்பம் நடத்த மாப்பிள்ளை வேணுமா இல்லை சமைச்சு போடுற துறவியா மாப்பிள்ளை வேணுமா..??" என்று கேலியாக கேட்ட
அதில் "போடி..!!" என்று செல்லமாக சிணுங்கிய அலமூ "தெரியலடி பாவனா, நேக்கு சின்ன வயசுல இருந்து அப்பா பாசம் பெருசா கிடைச்சது இல்லை, மடியில போட்டு தூங்க வைக்கிறதுல இருந்து எனக்கு பிடிச்சதை கையால சமைச்சு ஊட்டிவிடுறது வரை எதுவும் யாரும் நேக்கு பண்ணது இல்லை அதான் இது எல்லாத்தையும் சேர்த்து எனக்கு வரபோறவாகிட்ட எதிர்பார்க்குறேன்..!!" என்று முகம் கறுக்க கண்களில் முட்டிய கண்ணீரோடு சொன்னவள் சட்டென்று தன்னை சுதாரித்தபடி கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு முகத்தில் எப்போதும் உள்ள புன்னகையை பூசியவாறு தன் தோழியை பார்த்தவள் அவள் தன்னை பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து தன்னை முழுவதும்
மீட்டெடுத்தவளாய்
"டி பாவனா நம்ம வெட்டி பேச்சை அப்புறம் வச்சுக்கலாம் இப்போ இவாள் எல்லாருக்கும் பொங்கலை கொடுப்போம் என்று சொல்ல..!!" அதில் தான் வருத்தப்பட்டு தன் தோழியின் ரணத்தை கிளறவேண்டாம் என்று முடிவெடுத்த பாவனா தலையை மட்டும் ஆட்டினாள். பின் இருவரும் சேர்ந்து அங்கிருந்தவர்களுக்கு பொங்கலை வழங்கினர்.
கோவிலுக்குள் சென்று வெளியேறுபவர்களுக்கும் பாவனா பொங்கல் கொடுக்க.. அங்கு பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அலமூ பொங்கல் கொடுத்தாள்.
பொங்கல் எல்லாம் பரிமாறி முடித்துவிட்டு சன்னிதானத்தை ஒருமுறை சுற்றி வந்த தோழிகள் பின் விடைபெற்று அவர் அவர் வீட்டுக்கு செல்ல.
அலமூவும் அவள் வீட்டினுள் நுழைந்தாள். வீட்டினுள் வைக்கப்பட்டு இருந்த துளசி செடியின் ஓரத்தில் கையில் இருந்த கோவில் பிரசாதத்தை தட்டிவிட்டு அவள் நிமிர்கையில் "க்கூம்..!!" என்று தொண்டையை கனைக்கும் குரல் கேட்க பதறி நிமிர்ந்தவளின் முகமோ தன் முன்னே நின்றவரை பார்த்து வெளிறி போனது.
அங்கோ அலமூவை உக்கிரமாக முறைத்துக்கொண்டு நின்றார் சுப்பிரமணி.
"கழிசடை..!! கழிசடை..!! எங்க டி போய் ஊர்மேய்ஞ்சிட்டு வர்ற..??" என்று சிறுபெண் என்றும் பாராமல் வார்த்தையால் அவர் வதைக்க.
அதில் சட்டென்று தேங்கிய கண்ணீருடன் அடுத்து நடக்கபோவதை எண்ணி பயத்துடன் எச்சிலை கூட்டி விழுங்கியவாறே "இல்லை ப்பா நா.. நா.. கோவிலுக்கு தான் ப்பா போயிண்டு வந்தேன்..!!" என்று அழுகையுடன் குரல் அடைக்க பேச
"கோவிலுக்கு போக நோக்கு இவ்வளவு நேரமா..?? ஹான்...!! கழிசடை நாயே உன் அம்மாவை போலவே ஓடுகாலியா வளருறியா நீ..!!" என்றவர் அவளை வெறுப்புடன் பார்க்க.
அவரது வார்த்தையில் எப்போதும் போல துடித்து போனாள் அலமூ.
அதற்கு மேல் என்ன சொல்ல வந்தாரோ அதற்குள் அங்கு வந்த வைதேகி அங்கே நடப்பதை கண்டு லேசாய் பதறியவாறு "ஏண்ணா விடுங்கோ அவளை, அவ எங்கிட்ட சொல்லிட்டு தான் போனா..!!" என்று கூறி அவளை காப்பாற்ற அதில் அவரையும் முறைத்தவர் தன் தோளில் இருந்த துண்டை உதறிவிட்டு இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் போனதும் நிம்மதி பெருமூச்சு விட்ட வைதேகி அங்கு கண்களில் கண்ணீருடன் நின்றுக் கொண்டு இருந்த அலமூவை பார்த்து பரிதாபம் எழ அதை அடக்கியவர் "ஏண்டி என்ன அங்கேயே மசமசனு நிக்குற நோக்கு ஒவ்வொரு வேலையா சொல்லணுமா..?? போ..!! மாடில வத்தல் காய போட்டிருக்கேன் அதை ஒரு தடவை கிண்டிவிட்டுட்டு வா..!!" என்று சொல்ல அதில் வேகமாக தன் கண்ணீரை துடைத்தவள் தாவணி பிடித்தபடி வேகமாக மாடி படிகளில் ஏறினாள்.
அதை பார்த்து ஒரு பெருமூச்சோடு அடுக்களையினுள் நுழைந்தார் வைதேகி.
பிராமண குடும்பத்தை சார்ந்தவர் தான் சுப்பரமணி. வெளி இடத்தில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்துக் கொண்டு இருந்தவருக்கு அங்கு உடன் பூஜை செய்யும் பெரியவரின் பெண்ணின் மீது காதல் வர அதை அப்பெண்ணிடம் கூறி சம்மதம் பெற்று ஒரு வருடமாக காதல் கடலில் மூழ்கி கொண்டு இருந்தார்.
அச்சமயம் திடீர் என அவர் தந்தைக்கு சீரியஸ் என்ற செய்தி வர என்னவோ ஏதோ என்று பதறி ஊருக்கு போனவரை பிடித்து கடைசி ஆசை என்று கட்டாயப்படுத்தி தன் தங்கை பெண்ணான சுப்புலஷ்மிக்கு மணமுடித்து வைத்த சுப்பிரமணியின் தந்தை அச்சமயமே தன் உயிரை விட்டிருந்தார்.
தந்தையின் இறப்பு அதற்கு மேல் தன் காதல் கைகூடாமல் போன சோகம் என எல்லாம் சேர்ந்து கோபமாக சுப்புலஷ்மியை தாக்கினார் சுப்பிரமணி.
தினம் தினம் தன் விஷசொற்களால் அவரை தாக்கியவர் ஒரு வருடத்தில் சுப்புலஷ்மி தனக்கு பிள்ளை பெற்று தரவில்லை என்று வேண்டுமென்றே அவர் மீது மலடி என்ற பழிச்சொல்லை இட்டு இரண்டாவதாக வைதேகியை திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணமான ஒரு வருடத்திலேயே வைதேகி "வைஷ்ணவி..!!" என்ற பெண் மகவை ஈன்றெடுக்க.
இதையும் கூறி சுப்புலஷ்மியை வார்த்தைகளால் குதறி தள்ளினார் சுப்பிரமணி.
இதோ இதோ என்று வைஷ்ணவி பிறந்த மூன்று வருடத்தில் சுப்புலஷ்மி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்க. தன் வெள்ளை நிறத்துக்கு கொஞ்சமும் ஒத்துபோகாத கரிய நிறத்தில் இருந்த அந்த பிஞ்சு பிள்ளையை பார்த்து கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் "எவன் கூடயோ படுத்து புள்ள பெத்துண்ட நோக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் குழந்தையினு சொல்லுவ ஓடுகாலி நாயே..!!" என்று வார்த்தைகளால் சுப்புலஷ்மியை குத்தி கிழித்தவர் அந்த பிஞ்சு குழந்தையை கையால் கூட தொடவில்லை
ஊரில் அனைவரிடமும் இதை கூறியவர் சுப்புலஷ்மியின் பெண்மைக்கே இழுக்கை உண்டாக்கினார்.
எவ்வளவு தான் ஒரு பெண்ணும் தாங்குவாள். அதிக துக்கத்தை தாங்கியதால் என்னமோ தூக்கத்திலேயே தன் உயிரை விட்டிருந்தார் சுப்புலஷ்மி.
அவர் அருகில் இன்னும் பெயர் கூட சூட்டப்படாத நிலையில் பசியில் அழுது கொண்டிருந்தது அந்த பச்சிளம் குழந்தை.
சுப்புலஷ்மியை வேண்டா வெறுப்பாய் அடக்கம் செய்து முடித்து வந்த சுப்பிரமணி அங்கு வைதேகி அக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பால் புகட்டிக்கொண்டிருப்பதை பார்த்து கொதித்து எழுந்தேவிட்டார்.
"கருமம் கருமம்..!! ஏய் வைதேகி நோக்கு ஏண்டி இந்த வேண்டாத வேலை, அந்த ஓடுகாலி பெத்துபோட்ட கழிசடைய தூக்கி வெளிய கடாசிட்டு உள்ள வா..!!" என்று சத்தம் போட
"வார்தைய அளந்து பேசுங்கோணா..!! இந்த பச்சபிள்ளைய பார்த்து நோக்கு இரக்கம் வரலியா..??" என்று கண்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தபடியே ஆதங்கமாய் கேட்க
அதில் எரிச்சலுடன் அவரை பார்த்த சுப்பிரமணி "நோக்கு எல்லாம் சொன்னா புரியாது டி பட்டா தான் புரியும்..!! என்னமோ செய்..!!" என்று கூறி தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டு உள்ளே சென்றுவிட கண்களை துடைத்தபடி மீண்டும் அக்குழந்தைக்கு உணவு ஊட்ட ஆரம்பித்தார் வைதேகி.
குழந்தை நடந்து திரியும் வரை சற்று கவனமாக பார்த்துக்கொண்ட வைதேகி பின் படிபடியாய் விலக ஆரம்பித்தார்.
அதில் முக்கிய பங்கு வைஷ்ணவியையே சாரும். சுப்பிரமணியின் செல்லபிள்ளையான வைஷ்ணவிக்கோ அச்சிறுவயதில் தந்தை கூறும் விஷவார்த்தைகள் வேதவாக்காய் போக தாயிடம் சண்டையிட ஆரம்பித்தாள் போதாதென்று அக்குழந்தையையும் அடித்து கிள்ளி என துன்புறுத்தி தாக்க ஆரம்பிக்க துணுக்குற்ற வைதேகி வேறுவழியில்லாமல் அக்குழந்தையிடம் இருந்து விலக ஆரம்பித்தார்.
பெயர் சூட்டப்படாத அக்குழந்தைக்கு அக்கம்பக்கத்தினரில் எவரோ வயதான ஒருவர் செல்லமாய் அழைத்த "அலமூ குட்டி..!!" என்ற வார்த்தையே பெயராய் மாற அதில் இருந்த அவள் "அலமூ..!!" ஆனாள்.
வைதேகி அவளை ஸ்கூலில் சேர்த்து விட்டப்போது "கஸ்தூரி..!!" என்று சேர்த்துவிட ஏனோ அந்த தமிழ் மீடியம் கவர்மென்ட் ஸ்கூலில் அழைப்பவரை தவிர வேறு யாரும் கஸ்தூரி என்று அழைக்காததால் யார் பெயரை கேட்டாலும் "அலமூ..!!" என்றே கூறுவாள் அவள்.
கான்வென்ட் ஸ்கூலில் படித்த வைஷ்ணவிக்கோ காலையில் ஷூ பாலிஷ் போடுவது முதல் துணி அயன் பண்ணுவது வரை அலமூவே செய்ய தடுக்க வந்த வைதேகியிடம் "இது என்ன சத்திரமா எல்லாருக்கும் தண்ட சோறு போட..?? வேலை செஞ்சா தான் இங்க இடம்..!!"என்று சுப்பிரமணி கறாராய் சொல்லிவிட மௌனியாகி போனார் வைதேகி.
இங்கு அலமூவுக்கு ஆரம்பத்தில் எல்லாம் வித்தியாசமாய் இருந்தது. வைஷ்ணவியிடம் கொஞ்சும் தந்தை தன்னிடம் எறிஞ்சு விழுவது ஏன் அதுவும் இல்லாமல் தகாத வார்தைகளால் இறந்த தன் தாயை திட்டுவது ஏன்..?? என்று ஒன்றும் புரியவில்லை.
வளர வளர புரிய தொடங்க தாயை எண்ணி கவலையுடன்அழுதாள். ஆம் ஒன்றும் செய்யாத தன்னையே தந்தை இப்படி திட்டுகிறார் என்றால் தன் தாய் ஒன்றும் செய்து இருக்க மாட்டார் என்றே நம்பினாள்.
இதில் வைதேகியும் அவளை விட்டு ஒதுங்கியே இருக்க எல்லோரும் ஒதுக்க ஒதுக்க இவளே ஒடுங்கி போனாள்.
நல்லவரை தான் கடவுள் மிகவும் சோதிப்பாராம் அது அலமூவின் விஷயத்தில் சரியாய் இருந்தது ஆம் சரியாய் பத்தாவது பொது தேர்வில் டெங்குவால் பாதிக்கப்பட்டு பரிட்சை எழுதமுடியாமல் ஆனாள் அலமூ.
அதில் அது தான் சாக்கு என்று அவளது படிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டு விட்டார் சுப்பிரமணி. அதில் அவரை எதிர்த்து ஒன்றும் பேசமுடியாமல் சோர்ந்து போனார் வைதேகி.
அவ்வீட்டில் வீட்டு வேலை செய்பவள் மறந்தும் புத்தகங்களை தொட மாட்டாள். அப்படி தொட்டால் இல்லை தொட போவதை பார்த்தாலே சுப்பிரமணி ஆடி தீர்த்து விடுவார். அதற்கு பயந்தே அவள் புத்தகம் இருக்கும் பக்கம் கூட போகமாட்டாள்.
**********************************
"இப்போ என்னணா பண்ணுறது..!!" என்று கவலையாக கேட்ட வைதேகியிடம் சோர்ந்து போன முகத்துடன் "ப்ச் நேக்கு தெரியலை டி வைதேகி, நம்ம பொண்ணு படிப்புக்கு வாங்குன கடன் கழுத்தை நெரிக்குது இதுல அவளுக்கு கல்யாண செலவு வேற இருக்கு அதுக்கு இப்பவே சேர்க்கணும் ம்கூம்..!! என்ன பண்ணபோறேன்னே தெரியலை..!!" என்று கூறி பெருமூச்சு விட்டவரை பார்த்து கண் கலங்கியது வைதேகிக்கு என்ன தான் இருந்தாலும் காதல் கணவர் அல்லவா..?
ஆம் இப்போது காசு தான் அங்கு பிரச்சனை வைஷ்ணவியின் படிப்பு செலவுக்கு லட்சக் கணக்கில் கடன் வாங்கி இருக்க இப்போது அது வட்டி போட்டு பெரிய தொகையாய் நிற்கிறது.
கடன் கொடுத்தவர்கள் வேறு கேட்க தொடங்க என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் சுப்பிரமணி.
இதை எல்லாம் அடுக்களையில் இருந்து பார்த்தவளுக்கோ தந்தையின் நிலையை எண்ணி வருத்தமாய் இருக்க அச்சமயம் அவள் மனக்கண்ணில் மின்னி மறைந்தது ஒரு நிகழ்வு அதில் சட்டென்று தன் துணிமணிகள் இருக்கும் பையை திறந்தவள் அதில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்தவள் கண்களில் ஒளிரும் நம்பிக்கையுடன் நிமிர்ந்தாள்.
இது ஒரு முறை இவள் வீட்டருகில் இருந்த ஒரு பெண் மணி இவள் படும் பாட்டை பார்த்து இரக்கப்பட்டு அவர் வேலைசெய்யும் இடத்தில் வேலையிருப்பதாய் சொல்லி கொடுத்த விலாசம். அப்போது தேவைபடாதது இப்போது தேவை சரியாய் பட்டது.
விஷயத்தை இவள் தயங்கி தயங்கி வைதேகியிடம் கூற மொத்தமாக மறுத்துவிட்டார் அவர்.
ஆனால் எங்கிருந்து தான் மூக்கு வேர்த்ததோ அச்சமயம் அங்கு வந்து சுப்பிரமணி இதை கேட்டுவிட.
"இதுவரை தண்டத்துக்கு ஓசில தானே சோறு போட்டேன் இப்போ அதுக்கு பரிகாரமா அவ எனக்கு சப்பாதிச்சு தர்றதுக்கு என்ன..?? நான் ஒன்னும் அவ செலவுல இல்ல நான் செஞ்சதை தான் திரும்பி கேக்குறேன்..!!" என்று இரக்கமே இல்லாமல் சொன்னவரிடம் வைதேகி எவ்வளவோ போராடி பார்த்தும் பயனில்லாமல் போனது .
இதோ உத்தரபிரதேச மாநிலத்தை நோக்கி செல்லும் ட்ரெயினில் ஏறிவிட்டாள் அலமூ..!!
ஏனோ பயத்தைவிட வீட்டை விட்டு முதல் முதலில் வெளியே செல்லும் ஆர்வமே அவளிடம் அதிகமாய் இருக்க ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அப்போது அந்த கம்பார்ட்மென்டில் தோள் பையை மாட்டியபடி வந்த இளைஞன் தன் டிக்கெட்டை குனிந்து பார்த்தபடி நிமிர்ந்து தன் கண்களால் தன் இருக்கை எண்ணை தேட சரியாய் அலமூவின் அருகே தான் இருந்தது அவனது சீட்.
அதில் "ஊப்..!! தேங்க் காட்" என்று கூறி பெருமூச்சு விட்டவன் தன் பேகை கழட்டி சீட்டின் கீழ் வைத்து விட்டு தொப் என்று ரிலாக்சாக அலமூவின் அருகில் அமர்ந்துகொண்டான்.
இதை எதையும் கவனிக்காமல் கருமமே கண்ணாய் உதட்டில் தோன்றிய புன் முறுவலுடன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் அலமூ.
அவளை பார்த்து அந்த இளைஞனுக்கு என்ன தோன்றியதோ..??அவள் கவனத்தை தன் புறம் திருப்ப எண்ணி இவனே அவள் புறம் திரும்பி "ஹே.. ஹாய்..!!" என்று அழைக்க.
அதில் சட்டென்று திரும்பி அவனை பார்த்தவள் அவன் தன்னை பார்த்து
புன்னகைத்ததை பார்த்து என்னசெய்வது என்று தெரியாமல் சிறு பதட்டத்துடன் பதிலுக்கு புன்னகைத்து வைத்தாள்.
"பஸ்ட் டைம் டிராவலா..??" அவளது பதட்டத்தை பார்த்து அவன் கேட்க.
அதில் கண்கள் விரிய ஆச்சரியமாய் அவனை பார்த்தவள் வேகமாய் ஆம் என்பது போல தலையாட்டினாள்.
அதை கண்டு பக்கென்று சிரித்துவிட்டான் அவன்.
"சோ க்யூட்..!!" என்றபடி சிரித்தவன் "இவ்வளவு பயம்னா ஏன் தனியா வர பேரெண்ட்ஸ்ச கூட்டிட்டு வந்திருக்கலாம்ல..!!" என்று ஒருமைக்கு தாவி இவன் கேட்க
"இல்ல வீட்டுல கொஞ்சம் பண கஷ்டம் அதான் வேலைக்கு .." என்று இழுத்தவள் வேகமாக "என் தோப்பனார் வரேன் தான் சொன்னார் நான் தான் அவரை வரவேண்டாம் சொன்னேன்....!!" என்று தந்தையை விட்டுகொடுக்காமல் அவள் பேச.
அதில் இதழ் பிரித்து சிரித்தவன் "தட்ஸ் குட் போல்ட் லேடி..!!" என்றான் அவளை பாராட்டுவது போல.
அதில் அவனது புகழ்ச்சியில் கூச்சத்துடன் சிரித்தாள் அலமூ.
அதற்கடுத்து இருவரும் நன்றாக பேச.
அவனது பேச்சில் அலமூவும் அவனுடன் நன்றாக பேசினாள்.
"பார்க்க படிச்சவர் போல இருக்கார் ஆனா எந்த பகட்டும் இல்லாம எவ்வளவு அழகா பேசுறார்..!!" என்று வியந்து போய் அவனை பார்த்தவள் அவனிடம் சகஜமாய் பேசினாள்.
உணவு உண்ணும் நேரமும் வர கைகழுவ சென்றவளுடன் எழுந்து வந்தவன் அவளிடம் "இந்த கம்பார்ட்மென்ல ஒரு லேடி கூட இல்ல உன்னை தவிர சோ எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லிட்டு போ சரியா..!!" என்று அக்கறையோடு சொல்ல அவள் மனதில் உயர்ந்து போனான் அவன்.
கைகழுவி விட்டு இருவரும் வந்து இருக்கையில் உட்கார அந்த இளைஞனோ கையில் இருந்த ஜூசை அவளிடம் நீட்டி "ஜூஸ் குடிக்கிறியா..??" என்று கேட்க அதில் தன் தலையை இடம் வலமாய் ஆட்டியவள் "மன்னிச்சுக்கோங்கோ பிராமண வழக்கப்படி வெளி இடத்துல எதுவும் சாப்பிட கூடாது அதனால.." என்று உணவை குறிப்பிட்டு காட்டி அவள் இழுக்க
கையை மேலே தூக்கியவன் "புரிஞ்சிச்சு புரிஞ்சிச்சு..!! ரிலாக்ஸ் மா..!!" என்று கூறியவன் அந்த பாட்டிலை மீண்டும் தன் பேகினுள் வைத்தான்.
இவளோ தனது கட்டை பையில் இருந்த ஒரு டிபன் பாக்ஸ்சை எடுத்தவள் அதை திறந்து தன் மூக்கை டிபன் பாக்ஸ்சின் மேல வைத்து ஆழமாக சுவாசித்து அந்த புளியோதரையின் மணத்தை தன்னுள்ளே முடியும் அளவு நிரப்ப.
அவள் செய்யும் செயலை வித்தியாசமாய் பார்த்தான் அவன்.
கையில் இருந்த புளியோதரையை எடுத்து அவன் புறம் நீட்டியவள் "எங்காத்துல வைதேகி அம்மா பண்ண புளியோதரை நன்னா நெய் மிதக்க தாளிச்சு கொட்டியது அந்த நெய் மணத்தோடு சேர்த்து சாப்பிடும்போது இந்த புளியோதரை தொண்டைக்குள்ளே இறங்கறச்சே அமிர்தமா இருக்கும்..!! அதுவும் எங்காத்துல செஞ்ச புளியோதரையை சாப்பிட்டா நூறு வயசு வரை ஆரோக்கியமா வாழலாம்" என்று பெருமையாய் சொல்ல.
அதில் ஒரு நிமிடம் அவனுக்கு எச்சில் ஊறி விட்டது அவளோ "ம்ம்..!!" என்றபடி மேலும் அதை நீட்ட அதை எடுக்கலாமா வேண்டாமா என்று இருந்தவன் "அப்போ உனக்கு..!!" என்று கேட்க
"நேக்கு இன்னொரு டப்பா இருக்கு நீங்க கவலை படாதிங்கோ..!!"என்று கூறி பளிச்சென்று புன்னகைக்க
அதில் அவள் கையில் இருந்த டிபன் பாக்சை வாங்கியவன் "அப்போ நான் நூறு வருஷம் வாழ்வேன்னு சொல்லுற..??" என்று சிரிப்புடன் கேட்டு அதை உண்ணத்தொடங்கினான் .
அதை பார்த்து ஆம் என்பது போல புன்னகைத்தவள் தன் பையில் இருந்த மற்றொரு டிபன் பாக்ஸ்சை எடுத்து திறக்க போக அப்போது அவள் கண்ணில் விழுந்தான் அவளுக்கு எதிரே அமர்ந்து இருந்தவன்.
இவள் ஏறியதில் இருந்தே கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு இருந்தவன் இப்போதும் அதே புத்தகத்தை வைத்து தான் படித்துக்கொண்டு இருந்தான்.
இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட இவள் பார்த்து அவன் குடிக்கவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் ட்ரெயினில் தூங்கவேண்டி லைட் அனைத்தையும் அணைத்துவிடுவார்கள் என்று ஒருவர் சிறிது நேரத்துக்கு முன் வந்து சொல்லி இருக்க. அதை கேட்டும் அவன் உண்ணாமல் இருப்பதை பார்த்து ஒருவேளை உணவு கொண்டு வரவில்லையோ என்று எண்ணினாள்.
தன் கையில் இருந்த புளியோதரையையும் தன் எதிரே இருந்தவனையும் மாறி மாறி பார்த்தவள் "சரி ஆபத்துக்கு பாவம் இல்லை..!!" என்று மனதில் எண்ணியபடி அதை அவன் முன் மெதுவாய் நீட்டினாள்.
அவனோ புத்தகத்தில் மூழ்கி இருப்பான் போலும் இவள் நீட்டியதை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.
அதில் அவனை எப்படி அழைப்பது என்று குழம்பியவள் அவன் போட்டிருக்கும் வெள்ளை சட்டையை பார்த்து "ஏங்க..!! வெள்ளை சட்டை போட்டுருக்குறவரே..!!" என்று அழைக்க அதில் சட்டென்று நிமிர்ந்து அவளை கூர்மையாக பார்த்தான் அவன்.
அந்த பார்வை ஏனோ இவளுக்கு பயத்தை கொடுக்க "இ.. இல்லை.. சா.. சாப்பாடு சாப்பிடலையா..??" என்று திக்கித்திணறி கேட்டாள் அவள்.
அதில் அவளை அழுத்தமாக பார்த்தவன் "இல்லை..!!" எனும் விதமாய் தலையாட்ட.
அதை கண்டு தான் நினைத்தது சரிதான் என்று எண்ணியவள்.
கையில் இருந்ததை அவன் புறம் நீட்டி "என்கிட்ட புளியோதரை இருக்கு சாப்பிடுறீங்களா..??" என்று கேட்க அவனோ இவளை விழி எடுக்காமல் அழுத்தமாய் பார்த்தான்.
அதை கவனிக்காத இவளோ "பயப்படாதீங்க வீட்டுல சுத்தமா செஞ்சது தான் அதுவும் என் வைதேகி அம்மா செஞ்சது நன்னா மணக்க மணக்க நெய் விட்டு தாளிச்சு எடுத்..!!" என்று அவள் அந்த இளைஞன் இடம் சொன்னது போலவே மொத்த புளியோதரை ரெசிப்பியும் சொல்ல போக அதற்குள் இவளை இடைமறித்தவன் "நோ நீட்..!! நான் முன்ன பின்ன தெரியாத வெளியாளுங்களை நம்பி சாப்பிட்றது இல்லை..!!" என்று முகத்தில் அடித்தார் போல சொல்ல.
முகம் சூம்பி விட்டது அலமூவுக்கு அவன் புறம் நீட்டியிருந்த புளியோதரையை தன்புறம் மெல்ல இழுத்துக்கொண்டவள் அதை திறந்து மெல்ல உண்ண ஆரம்பித்தாள்.
அதற்குள் அவள் அருகில் இருந்த இளைஞன் அவள் கொடுத்த புளியோதரையை முழுதும் காலி செய்து விட்டு அவளிடம் திரும்பி சப்புகொட்டியவாறே "வேற இருக்கா..??" என்று கேட்க.
அதில் கையில் வைத்து இருந்த டிபன் பாக்ஸ்சை அவன் புறம் நீட்டியவள் புன்னகையுடன் "சாப்பிடுங்கோ..!!" என்றாள்.
அதை வாங்கி அவன் உண்ணத்தொடங்க இவளோ சாப்பிட்ட கையை காய விடக்கூடாது என்று எண்ணியபடி எழுந்து கைகழுவ சென்றாள் மெய் மறந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் அவள் சென்றதை உணரவில்லை.
இங்கு கைகழுவிக்கொண்டு இருந்தவளோ "இந்த லோகத்துல நல்ல மனுஷாள் இருக்குறது போல கெட்ட மனுஷாளும் இருக்காள். இப்படியா ஒருத்தர் கேட்டா மூஞ்சில அடிச்சது போல பேசுறது...!!" என்று சற்று முன் பார்த்தவனை எண்ணி ஆதங்கமாய் அவள் முணுமுணுக்க இரு கையோ அதன் பாட்டிற்கு தண்ணீரில் உரசி கழுவிக்கொண்டு இருந்தது.
கழுவி முடித்தவுடன் கைகளை உதறியவள் தாவணி முந்தாணையில் கையை துடைத்தபடி தன் கம்பார்ட்மென்டினுள் நுழைய அங்கு கண்ட காட்சியில் நா உலர உடல் நடுங்க கண்கள் தெறித்துவிடும் அளவு விரிய நெஞ்சில் கைவைத்தபடி அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள்.
அங்கோ இவளது புளியோதரை உண்டவன் வாயில் புளியோதரை தள்ள ரத்தவெள்ளத்தில் செத்து கிடக்க அவனுக்கு எதிரே இவளது புளியோதரையை வேண்டாம் என்றவன் கையில் இருந்த துப்பாக்கியை ஊதி அவனது முதுகுக்குப்பின் சொருகிக்கொண்டு இருந்தான்.
அந்த நொடியே அங்கு எரிந்து கொண்டு இருந்த லைட் அனைத்தும் ஆப் ஆகி விட என்ன நடக்கிறது என்று தெரியாபல் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள் அலமூ என்ற கஸ்தூரி..!!
தொடரும்..
"வைதேகி..!! வைதேகி..!! ஏண்டியம்மா வைதேகி..!!" என்று அந்த பழமை வாய்ந்த அக்ரஹார வீட்டினுள் நுழையும் போதே தன் மனையாளான வைதேகியை அழைத்தபடி வந்தார் சுப்ரமணிய சாஸ்திரி.
அவரது குரல் கேட்டு அடுக்களையினுள் இருந்து தன் கைகளை துடைத்தபடி ஒரு சொம்பு தண்ணீரை கையில் எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்த வைதேகி அதை தன் கணவன் புறம் நீட்டியபடி "ஏண்ணா இதை சத்த குடிங்கோ பிறகு பேசவந்த விஷயத்தை பேசிக்கலாம்....!!" என்று முகத்தில் வழியும் மலர்ந்த புன்னகையுடன் சொல்ல.
அதில் தன் மனைவியை பார்த்து புன்னகைத்த சுப்ரமணி "ஹா..ஹா நீ இருக்கியே..!!" என்று செல்லமாக அலுத்தபடி தண்ணீர் அடங்கிய சொம்பை வாங்கி வாயில் சரித்தார்.
உண்மையில் அவருக்கு தாகமாக தான் இருந்தது போலும் அந்த சொம்பில் ஒரு சொட்டு தண்ணீர் மிச்சமின்றி மொத்தமாக குடித்து முடித்தவர் காலியான சொம்பை தன் மனையாள் புறம் நீட்டினார்.
அவரை பற்றி அறிந்த அவர் மனையாளும் சிறுபுன்னகையுடன் அந்த சொம்பை வாங்கி அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டு கணவன் புறம் வர, அதற்குள் சுப்ரமணி வீட்டுத்திண்ணையில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.
"இப்ப சொல்லுங்கோணா, போன காரியம் என்னாச்சு..??" என்று ஒரு வித ஆர்வத்துடன் வினவ.
அதில் முகம் முழுவதும் மகிழ்ச்சியுடன் தன் மனைவி புறம் திரும்பிய சுப்ரமணி "நேக்கு பரம திருப்தியா இருந்துதுடி வைதேகி..!! மாப்பிள்ளை பேரு ராகவன் சென்னையில பெரிய கம்பனில இன்ஜினியரா இருக்காரு. சொத்து பத்துனு அவா தோப்பனார் சேத்துவச்சதே இந்த தலமுறைக்கு காணும் அது பத்தாதுன்னு இவரும் நன்னா சம்பாதிக்குறார். அது மட்டும் இல்லை அவா நம்மளை போலவே ஆச்சாரமான பிராமணன் குடும்பம்..!!" என்று உற்சாகமாக சொன்னவர் தொடர்ந்து
"நம்ம மக ஜாதகமும் அவா ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்கு கூடவே அவாளுக்கு நம்ம பொண்ணை ரொம்பவே புடிச்சுபோச்சு டி..!! அவாளுக்கும் நம்ம பொண்ணை பார்த்து பரம திருப்திதான். ஆனா என்ன மாப்பிளை ஜாதகப்படி அடுத்த வருஷம் தான் கல்யாணம் செய்யணும்னு இருக்கு அதனால கல்யாணத்தை ஒரு வருஷம் தாண்டி வைக்க சொல்லி இருக்காங்க..!!" என்று கடைசியில் குரல் நலிந்து சொல்ல
"அதுக்கென்னணா அது இன்னும் நல்லது..!! நம்ம பொண்ணும் இப்ப தான் படிச்சிண்டு இருக்கா அடுத்த வருஷம் சரியா அவ படிப்பும் முடிஞ்சிடும். முடிஞ்ச கையோட கல்யாணம் செஞ்சு வச்சா இன்னும் வசதியா இருக்குமோனோ..!!" என்று வைதேகி சொல்ல.
அதுவே சரி என்று பட்டது சுப்ரமணிக்கு.
"சரி டி வைதேகி...!! பிரயாணம் செஞ்சதுல நேக்கு நல்லா தலைவலியா இருக்கு டி அந்த தரித்திரத்துக்கிட்ட நேக்கு ஸ்டிராங்கா பில்டர் காப்பி போட சொல்லு..!!" என்று சொல்ல
அதற்கு வைதேகியோ "ப்ச் அவ நம்ம ஆத்து பக்கத்துல இருக்க திருமால் கோயிலுக்கு போயிருக்காணா. இருங்கோ நான் போய் உங்களுக்கு போட்டுண்டு வரேன்..!!"என்று சொல்லி விட்டு அடுக்களைக்குள் நுழைய.
கோவில் என்று சொன்னதில் இவரும் அமைதி ஆகி விட்டார்.
அதே நேரம் அந்த திருமால் கோவிலின் வெளியே ஒரு பெரிய அண்டாவை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள் அவள்.
மஞ்சள் நிற தாவணியும் அதற்கு தோதாய் சற்று வெளுத்துபோன கருநீல நிற பாவாடை அணிந்து தலையை நேர் வகிடு எடுத்து கறுப்பு நிற ரிப்பனால் இருபுறமாய் முடிந்து விட்டிருந்தாள்.
நெற்றி வகிட்டில் சிகப்பு நிற சாந்து பொட்டை கோவி வடிவில் வைத்து அதற்கு மேல் குங்குமம் அதற்கு மேல் திருநீறு வைத்திருந்தாள். காதின் ஓரத்தில் சற்று நேரத்துக்கு முன் கோவிலில் கொடுத்த சிகப்பு ரோஜாவை சொருகியிருக்க.
மேலும் அதில் வட்டவடிவிலான பிளாஸ்டிக் தோடும் வீற்றிருந்தது. கூடவே கழுத்தில் சிகப்புற நிற தாயத்துடன் கூடிய நூலும் போட்டவாறு மாநிறத்திற்கும் சற்றே குறைந்த நிறத்தில் இருந்தாள் அவள். என்ன தான் நிறம் குறைவாய் இருந்தாலும் பளிச்சென்று அனைத்து பல்லும் தெரியும் படி அவள் வெகுளியாய் புன்னகைக்கையில் அத்தனை அழகாய் இருந்தது அவளை பார்ப்பதற்கு.
இருமாதங்களுக்கு முன்பு தான் பத்தொன்பது வயதை அடைந்திருந்தாள்.
தூக்கமுடியாமல் அவள் அந்த அண்டாவை தூக்கிக்கொண்டு வருவதை பார்த்து "அடியே அலமூ..!!" என்றபடி அவள் அருகில் வந்தாள் அவளது தோழி பாவனா.
தன் தோழியின் குரல் கேட்ட அலமூ இவளோ தோழி வந்துவிட்ட நிம்மதியில் "பாவனா..!! சத்த கைகொடு டி இந்த அண்டாவை தூக்கி அதோ அந்த கோவில் வாசல்ல வச்சிடுவோம்..!!"என்று சொல்ல.
உடனே அந்த அண்டாவின் மறுபுறத்தை பிடித்துக்கொண்டாள் பாவனா..!!
இருவருவமாய் சேர்ந்து அந்த அண்டாவை கொண்டு கோவிலின் வாசலில் வைத்துவிட்டு மூச்சு வாங்கியபடி நிமர.
அதில் பாவனாவோ அலமூவை பார்த்து "ஏண்டி அலமூ..!! நோக்கு ஏண்டி இந்த வேண்டாத வேலை..!! அது பாட்டுக்கு கோவில் சன்னிதானத்துக்குள்ள தானே இருந்தது. நீ ஏன் மெனக்கெட்டு போய் இதை இங்க தூக்கிண்டு வந்த..!!" என்று லேசாய் முறைத்தவண்ணம் கேட்க.
அதில் தன் நெற்றியில் வழிந்த வியர்வையை தன் தாவணியால் துடைத்தபடி மூச்சு வாங்கியவாறே "இல்லடி பானு..!! இந்த பொங்கல் சன்னிதானத்துக்குள்ள இருந்தா இதோ இவாள் எல்லாம் அதை புசிக்க முடியாது..!! அதான் வெளிய எடுத்துண்டு வந்தேன்" என்று அந்த கோவிலின் வெளியே பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவர்களை சுட்டிக்காட்டி கூற.
அதில் அவளை வியப்புடன் பார்த்தாள் பாவனா கூடவே அவளது நிலையை எண்ணி கவலையும் வர
"இப்படி அடுத்தாளுக்கு பாவம் பாக்குற நோக்கு இந்த பகவான் பாவம் பாக்கலையேடி..!!" என்று எவ்வளவு முயன்றும் வாயை அடக்க முடியாமல் பாவனா சொல்லிவிட.
அதில் அதுவரை இருந்த புன்னகை மறந்து ஒரு நொடி முகம் வாடி விட்டது அலமூவிற்கு.
ஆனால் அடுத்த நொடி தன்னை
மீட்டெடுத்தவள் தன் தோழியை பார்த்து மெல்ல புன்னகைத்தவாறு "டி பாவனா, அந்த பகவான் எந்த ஒரு ஜீவராசிகளையும் சும்மா படைச்சிருக்க மாட்டார், கண்டிப்பா ஏதாவது காரணத்தோடு தான் படைச்சிருப்பார். அதே போல எப்பவும் ஒரு மனுஷாளுக்கு துன்பத்தையே கொடுத்திண்டு இருக்க மாட்டார். என்ன நான் என் வீட்டுல கொஞ்சூண்டு கஷ்ட படுறேன் அதுவும் என் மேல இருக்க அக்கறையில தான் என் தோப்பனார் அப்படி செய்யுறார். நீ வேணும்னா பாரேன் நான் என் ஆத்துக்காரர் வீட்டுக்கு போனா என்னை என் ஆத்துக்காரர் ராணி போல பார்த்துப்பார்...!!" என்று கண்கள் மலர கூறியவள் கன்னத்தில் கைவைத்து ஏதோ யோசித்தவாறு "ம்ம்ம்..!! அது என்னமோ சொல்லுவாங்களே..?? ஆங்..!! தரைல பாதம் படாம, அப்படி என்னை பார்த்துப்பார் எனக்கு வர போற ஆத்துக்காரர்...!!" என்று தன் தோழிக்கு தன் மீது இருக்கும் வருத்தத்தை போக்க எண்ணி இவள் சொல்ல அச்சமயம் சரியாய் கோவில் மணி அடித்தது.
அதில் கண்களை விரித்தவள் தன் தோழியின் புறம் திரும்பி "டி பார்த்தியா..?? மணி அடிச்சு அந்த பகவானே நடக்கபோறதை உறுதி படுத்திட்டார்..??" என்று சொல்லியவாறு கோவில் புறம் திரும்பி தன் கன்னத்தில் போட்டவள் கையை மேலே தூக்கி பகவானே என்று வாய் விட்டு கூறியபடி கும்பிட்டாள்.
தன் தோழியின் நிலை கண்டு வருத்தபடுவதா இல்லை சந்தோஷபடுவதா என்று அறியாமல் நின்றாள் பாவனா.
ஆனால் தன் வருத்தத்தை கூறி தன் தோழின் மனதில் சஞ்சலத்தை விதைக்க வேண்டாம் என்று எண்ணியவள் அவள் புறம் குறும்புடன் திரும்பி..
"எப்படி..?? உன்னை போல அம்மாஞ்சியா தானே நோக்கு மாப்பிள்ளை வேணும்..!!" என்று கேலியாக கேட்க
அதில் தன் தோழியை முறைக்க முயன்று சிரித்தவள் "நான் எப்படியோ அது நேக்கு தெரியலை டி ஆனா நேக்கு வர போறவர் மனது தூய்மையா இருக்கணும் அதிகமா கருணை உள்ளம் கொண்டு இந்த உலகத்துல உள்ள எல்லா வாயில்லா ஜீவராசிகள் கிட்டையும் அன்பா இருக்குறவா தான் என் ஆத்துக்காரர் இருப்பார். இது வரை ஒரு ஈ எறும்பு கிட்ட கூட அவர் பாவமே செஞ்சிருக்க மாட்டார். அதிர்ந்து கூட பேசாதவரா இருப்பார் கூடவே நன்னா வடு மாங்கா ஊறுகாவோடு மணக்க மணக்க எனக்கு தயிர் சாதம் சமைச்சு போடுறவாளா தான் எனக்கு வரபோற ஆத்துக்காரர் இருப்பார்..!!" என்று நாக்கை சப்புக் கொட்டியபடி கூற.
அதில் தன் தோழியை பார்த்து களுக்கென்று சிரித்த பாவனா "ஏண்டி அலமூ நோக்கு குடும்பம் நடத்த மாப்பிள்ளை வேணுமா இல்லை சமைச்சு போடுற துறவியா மாப்பிள்ளை வேணுமா..??" என்று கேலியாக கேட்ட
அதில் "போடி..!!" என்று செல்லமாக சிணுங்கிய அலமூ "தெரியலடி பாவனா, நேக்கு சின்ன வயசுல இருந்து அப்பா பாசம் பெருசா கிடைச்சது இல்லை, மடியில போட்டு தூங்க வைக்கிறதுல இருந்து எனக்கு பிடிச்சதை கையால சமைச்சு ஊட்டிவிடுறது வரை எதுவும் யாரும் நேக்கு பண்ணது இல்லை அதான் இது எல்லாத்தையும் சேர்த்து எனக்கு வரபோறவாகிட்ட எதிர்பார்க்குறேன்..!!" என்று முகம் கறுக்க கண்களில் முட்டிய கண்ணீரோடு சொன்னவள் சட்டென்று தன்னை சுதாரித்தபடி கண்ணீரை உள்ளிழுத்து கொண்டு முகத்தில் எப்போதும் உள்ள புன்னகையை பூசியவாறு தன் தோழியை பார்த்தவள் அவள் தன்னை பரிதாபமாய் பார்த்துக்கொண்டிருப்பதை பார்த்து தன்னை முழுவதும்
மீட்டெடுத்தவளாய்
"டி பாவனா நம்ம வெட்டி பேச்சை அப்புறம் வச்சுக்கலாம் இப்போ இவாள் எல்லாருக்கும் பொங்கலை கொடுப்போம் என்று சொல்ல..!!" அதில் தான் வருத்தப்பட்டு தன் தோழியின் ரணத்தை கிளறவேண்டாம் என்று முடிவெடுத்த பாவனா தலையை மட்டும் ஆட்டினாள். பின் இருவரும் சேர்ந்து அங்கிருந்தவர்களுக்கு பொங்கலை வழங்கினர்.
கோவிலுக்குள் சென்று வெளியேறுபவர்களுக்கும் பாவனா பொங்கல் கொடுக்க.. அங்கு பிச்சை எடுத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு அலமூ பொங்கல் கொடுத்தாள்.
பொங்கல் எல்லாம் பரிமாறி முடித்துவிட்டு சன்னிதானத்தை ஒருமுறை சுற்றி வந்த தோழிகள் பின் விடைபெற்று அவர் அவர் வீட்டுக்கு செல்ல.
அலமூவும் அவள் வீட்டினுள் நுழைந்தாள். வீட்டினுள் வைக்கப்பட்டு இருந்த துளசி செடியின் ஓரத்தில் கையில் இருந்த கோவில் பிரசாதத்தை தட்டிவிட்டு அவள் நிமிர்கையில் "க்கூம்..!!" என்று தொண்டையை கனைக்கும் குரல் கேட்க பதறி நிமிர்ந்தவளின் முகமோ தன் முன்னே நின்றவரை பார்த்து வெளிறி போனது.
அங்கோ அலமூவை உக்கிரமாக முறைத்துக்கொண்டு நின்றார் சுப்பிரமணி.
"கழிசடை..!! கழிசடை..!! எங்க டி போய் ஊர்மேய்ஞ்சிட்டு வர்ற..??" என்று சிறுபெண் என்றும் பாராமல் வார்த்தையால் அவர் வதைக்க.
அதில் சட்டென்று தேங்கிய கண்ணீருடன் அடுத்து நடக்கபோவதை எண்ணி பயத்துடன் எச்சிலை கூட்டி விழுங்கியவாறே "இல்லை ப்பா நா.. நா.. கோவிலுக்கு தான் ப்பா போயிண்டு வந்தேன்..!!" என்று அழுகையுடன் குரல் அடைக்க பேச
"கோவிலுக்கு போக நோக்கு இவ்வளவு நேரமா..?? ஹான்...!! கழிசடை நாயே உன் அம்மாவை போலவே ஓடுகாலியா வளருறியா நீ..!!" என்றவர் அவளை வெறுப்புடன் பார்க்க.
அவரது வார்த்தையில் எப்போதும் போல துடித்து போனாள் அலமூ.
அதற்கு மேல் என்ன சொல்ல வந்தாரோ அதற்குள் அங்கு வந்த வைதேகி அங்கே நடப்பதை கண்டு லேசாய் பதறியவாறு "ஏண்ணா விடுங்கோ அவளை, அவ எங்கிட்ட சொல்லிட்டு தான் போனா..!!" என்று கூறி அவளை காப்பாற்ற அதில் அவரையும் முறைத்தவர் தன் தோளில் இருந்த துண்டை உதறிவிட்டு இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டே அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் போனதும் நிம்மதி பெருமூச்சு விட்ட வைதேகி அங்கு கண்களில் கண்ணீருடன் நின்றுக் கொண்டு இருந்த அலமூவை பார்த்து பரிதாபம் எழ அதை அடக்கியவர் "ஏண்டி என்ன அங்கேயே மசமசனு நிக்குற நோக்கு ஒவ்வொரு வேலையா சொல்லணுமா..?? போ..!! மாடில வத்தல் காய போட்டிருக்கேன் அதை ஒரு தடவை கிண்டிவிட்டுட்டு வா..!!" என்று சொல்ல அதில் வேகமாக தன் கண்ணீரை துடைத்தவள் தாவணி பிடித்தபடி வேகமாக மாடி படிகளில் ஏறினாள்.
அதை பார்த்து ஒரு பெருமூச்சோடு அடுக்களையினுள் நுழைந்தார் வைதேகி.
பிராமண குடும்பத்தை சார்ந்தவர் தான் சுப்பரமணி. வெளி இடத்தில் உள்ள ஒரு கோவிலில் பூஜை செய்துக் கொண்டு இருந்தவருக்கு அங்கு உடன் பூஜை செய்யும் பெரியவரின் பெண்ணின் மீது காதல் வர அதை அப்பெண்ணிடம் கூறி சம்மதம் பெற்று ஒரு வருடமாக காதல் கடலில் மூழ்கி கொண்டு இருந்தார்.
அச்சமயம் திடீர் என அவர் தந்தைக்கு சீரியஸ் என்ற செய்தி வர என்னவோ ஏதோ என்று பதறி ஊருக்கு போனவரை பிடித்து கடைசி ஆசை என்று கட்டாயப்படுத்தி தன் தங்கை பெண்ணான சுப்புலஷ்மிக்கு மணமுடித்து வைத்த சுப்பிரமணியின் தந்தை அச்சமயமே தன் உயிரை விட்டிருந்தார்.
தந்தையின் இறப்பு அதற்கு மேல் தன் காதல் கைகூடாமல் போன சோகம் என எல்லாம் சேர்ந்து கோபமாக சுப்புலஷ்மியை தாக்கினார் சுப்பிரமணி.
தினம் தினம் தன் விஷசொற்களால் அவரை தாக்கியவர் ஒரு வருடத்தில் சுப்புலஷ்மி தனக்கு பிள்ளை பெற்று தரவில்லை என்று வேண்டுமென்றே அவர் மீது மலடி என்ற பழிச்சொல்லை இட்டு இரண்டாவதாக வைதேகியை திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணமான ஒரு வருடத்திலேயே வைதேகி "வைஷ்ணவி..!!" என்ற பெண் மகவை ஈன்றெடுக்க.
இதையும் கூறி சுப்புலஷ்மியை வார்த்தைகளால் குதறி தள்ளினார் சுப்பிரமணி.
இதோ இதோ என்று வைஷ்ணவி பிறந்த மூன்று வருடத்தில் சுப்புலஷ்மி ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்க. தன் வெள்ளை நிறத்துக்கு கொஞ்சமும் ஒத்துபோகாத கரிய நிறத்தில் இருந்த அந்த பிஞ்சு பிள்ளையை பார்த்து கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் "எவன் கூடயோ படுத்து புள்ள பெத்துண்ட நோக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் குழந்தையினு சொல்லுவ ஓடுகாலி நாயே..!!" என்று வார்த்தைகளால் சுப்புலஷ்மியை குத்தி கிழித்தவர் அந்த பிஞ்சு குழந்தையை கையால் கூட தொடவில்லை
ஊரில் அனைவரிடமும் இதை கூறியவர் சுப்புலஷ்மியின் பெண்மைக்கே இழுக்கை உண்டாக்கினார்.
எவ்வளவு தான் ஒரு பெண்ணும் தாங்குவாள். அதிக துக்கத்தை தாங்கியதால் என்னமோ தூக்கத்திலேயே தன் உயிரை விட்டிருந்தார் சுப்புலஷ்மி.
அவர் அருகில் இன்னும் பெயர் கூட சூட்டப்படாத நிலையில் பசியில் அழுது கொண்டிருந்தது அந்த பச்சிளம் குழந்தை.
சுப்புலஷ்மியை வேண்டா வெறுப்பாய் அடக்கம் செய்து முடித்து வந்த சுப்பிரமணி அங்கு வைதேகி அக்குழந்தையை கையில் வைத்துக்கொண்டு பால் புகட்டிக்கொண்டிருப்பதை பார்த்து கொதித்து எழுந்தேவிட்டார்.
"கருமம் கருமம்..!! ஏய் வைதேகி நோக்கு ஏண்டி இந்த வேண்டாத வேலை, அந்த ஓடுகாலி பெத்துபோட்ட கழிசடைய தூக்கி வெளிய கடாசிட்டு உள்ள வா..!!" என்று சத்தம் போட
"வார்தைய அளந்து பேசுங்கோணா..!! இந்த பச்சபிள்ளைய பார்த்து நோக்கு இரக்கம் வரலியா..??" என்று கண்களில் வழிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்தபடியே ஆதங்கமாய் கேட்க
அதில் எரிச்சலுடன் அவரை பார்த்த சுப்பிரமணி "நோக்கு எல்லாம் சொன்னா புரியாது டி பட்டா தான் புரியும்..!! என்னமோ செய்..!!" என்று கூறி தோளில் கிடந்த துண்டை உதறிக்கொண்டு உள்ளே சென்றுவிட கண்களை துடைத்தபடி மீண்டும் அக்குழந்தைக்கு உணவு ஊட்ட ஆரம்பித்தார் வைதேகி.
குழந்தை நடந்து திரியும் வரை சற்று கவனமாக பார்த்துக்கொண்ட வைதேகி பின் படிபடியாய் விலக ஆரம்பித்தார்.
அதில் முக்கிய பங்கு வைஷ்ணவியையே சாரும். சுப்பிரமணியின் செல்லபிள்ளையான வைஷ்ணவிக்கோ அச்சிறுவயதில் தந்தை கூறும் விஷவார்த்தைகள் வேதவாக்காய் போக தாயிடம் சண்டையிட ஆரம்பித்தாள் போதாதென்று அக்குழந்தையையும் அடித்து கிள்ளி என துன்புறுத்தி தாக்க ஆரம்பிக்க துணுக்குற்ற வைதேகி வேறுவழியில்லாமல் அக்குழந்தையிடம் இருந்து விலக ஆரம்பித்தார்.
பெயர் சூட்டப்படாத அக்குழந்தைக்கு அக்கம்பக்கத்தினரில் எவரோ வயதான ஒருவர் செல்லமாய் அழைத்த "அலமூ குட்டி..!!" என்ற வார்த்தையே பெயராய் மாற அதில் இருந்த அவள் "அலமூ..!!" ஆனாள்.
வைதேகி அவளை ஸ்கூலில் சேர்த்து விட்டப்போது "கஸ்தூரி..!!" என்று சேர்த்துவிட ஏனோ அந்த தமிழ் மீடியம் கவர்மென்ட் ஸ்கூலில் அழைப்பவரை தவிர வேறு யாரும் கஸ்தூரி என்று அழைக்காததால் யார் பெயரை கேட்டாலும் "அலமூ..!!" என்றே கூறுவாள் அவள்.
கான்வென்ட் ஸ்கூலில் படித்த வைஷ்ணவிக்கோ காலையில் ஷூ பாலிஷ் போடுவது முதல் துணி அயன் பண்ணுவது வரை அலமூவே செய்ய தடுக்க வந்த வைதேகியிடம் "இது என்ன சத்திரமா எல்லாருக்கும் தண்ட சோறு போட..?? வேலை செஞ்சா தான் இங்க இடம்..!!"என்று சுப்பிரமணி கறாராய் சொல்லிவிட மௌனியாகி போனார் வைதேகி.
இங்கு அலமூவுக்கு ஆரம்பத்தில் எல்லாம் வித்தியாசமாய் இருந்தது. வைஷ்ணவியிடம் கொஞ்சும் தந்தை தன்னிடம் எறிஞ்சு விழுவது ஏன் அதுவும் இல்லாமல் தகாத வார்தைகளால் இறந்த தன் தாயை திட்டுவது ஏன்..?? என்று ஒன்றும் புரியவில்லை.
வளர வளர புரிய தொடங்க தாயை எண்ணி கவலையுடன்அழுதாள். ஆம் ஒன்றும் செய்யாத தன்னையே தந்தை இப்படி திட்டுகிறார் என்றால் தன் தாய் ஒன்றும் செய்து இருக்க மாட்டார் என்றே நம்பினாள்.
இதில் வைதேகியும் அவளை விட்டு ஒதுங்கியே இருக்க எல்லோரும் ஒதுக்க ஒதுக்க இவளே ஒடுங்கி போனாள்.
நல்லவரை தான் கடவுள் மிகவும் சோதிப்பாராம் அது அலமூவின் விஷயத்தில் சரியாய் இருந்தது ஆம் சரியாய் பத்தாவது பொது தேர்வில் டெங்குவால் பாதிக்கப்பட்டு பரிட்சை எழுதமுடியாமல் ஆனாள் அலமூ.
அதில் அது தான் சாக்கு என்று அவளது படிப்புக்கு மொத்தமாக முழுக்கு போட்டு விட்டார் சுப்பிரமணி. அதில் அவரை எதிர்த்து ஒன்றும் பேசமுடியாமல் சோர்ந்து போனார் வைதேகி.
அவ்வீட்டில் வீட்டு வேலை செய்பவள் மறந்தும் புத்தகங்களை தொட மாட்டாள். அப்படி தொட்டால் இல்லை தொட போவதை பார்த்தாலே சுப்பிரமணி ஆடி தீர்த்து விடுவார். அதற்கு பயந்தே அவள் புத்தகம் இருக்கும் பக்கம் கூட போகமாட்டாள்.
**********************************
"இப்போ என்னணா பண்ணுறது..!!" என்று கவலையாக கேட்ட வைதேகியிடம் சோர்ந்து போன முகத்துடன் "ப்ச் நேக்கு தெரியலை டி வைதேகி, நம்ம பொண்ணு படிப்புக்கு வாங்குன கடன் கழுத்தை நெரிக்குது இதுல அவளுக்கு கல்யாண செலவு வேற இருக்கு அதுக்கு இப்பவே சேர்க்கணும் ம்கூம்..!! என்ன பண்ணபோறேன்னே தெரியலை..!!" என்று கூறி பெருமூச்சு விட்டவரை பார்த்து கண் கலங்கியது வைதேகிக்கு என்ன தான் இருந்தாலும் காதல் கணவர் அல்லவா..?
ஆம் இப்போது காசு தான் அங்கு பிரச்சனை வைஷ்ணவியின் படிப்பு செலவுக்கு லட்சக் கணக்கில் கடன் வாங்கி இருக்க இப்போது அது வட்டி போட்டு பெரிய தொகையாய் நிற்கிறது.
கடன் கொடுத்தவர்கள் வேறு கேட்க தொடங்க என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார் சுப்பிரமணி.
இதை எல்லாம் அடுக்களையில் இருந்து பார்த்தவளுக்கோ தந்தையின் நிலையை எண்ணி வருத்தமாய் இருக்க அச்சமயம் அவள் மனக்கண்ணில் மின்னி மறைந்தது ஒரு நிகழ்வு அதில் சட்டென்று தன் துணிமணிகள் இருக்கும் பையை திறந்தவள் அதில் இருந்து ஒரு காகிதத்தை எடுத்தவள் கண்களில் ஒளிரும் நம்பிக்கையுடன் நிமிர்ந்தாள்.
இது ஒரு முறை இவள் வீட்டருகில் இருந்த ஒரு பெண் மணி இவள் படும் பாட்டை பார்த்து இரக்கப்பட்டு அவர் வேலைசெய்யும் இடத்தில் வேலையிருப்பதாய் சொல்லி கொடுத்த விலாசம். அப்போது தேவைபடாதது இப்போது தேவை சரியாய் பட்டது.
விஷயத்தை இவள் தயங்கி தயங்கி வைதேகியிடம் கூற மொத்தமாக மறுத்துவிட்டார் அவர்.
ஆனால் எங்கிருந்து தான் மூக்கு வேர்த்ததோ அச்சமயம் அங்கு வந்து சுப்பிரமணி இதை கேட்டுவிட.
"இதுவரை தண்டத்துக்கு ஓசில தானே சோறு போட்டேன் இப்போ அதுக்கு பரிகாரமா அவ எனக்கு சப்பாதிச்சு தர்றதுக்கு என்ன..?? நான் ஒன்னும் அவ செலவுல இல்ல நான் செஞ்சதை தான் திரும்பி கேக்குறேன்..!!" என்று இரக்கமே இல்லாமல் சொன்னவரிடம் வைதேகி எவ்வளவோ போராடி பார்த்தும் பயனில்லாமல் போனது .
இதோ உத்தரபிரதேச மாநிலத்தை நோக்கி செல்லும் ட்ரெயினில் ஏறிவிட்டாள் அலமூ..!!
ஏனோ பயத்தைவிட வீட்டை விட்டு முதல் முதலில் வெளியே செல்லும் ஆர்வமே அவளிடம் அதிகமாய் இருக்க ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
அப்போது அந்த கம்பார்ட்மென்டில் தோள் பையை மாட்டியபடி வந்த இளைஞன் தன் டிக்கெட்டை குனிந்து பார்த்தபடி நிமிர்ந்து தன் கண்களால் தன் இருக்கை எண்ணை தேட சரியாய் அலமூவின் அருகே தான் இருந்தது அவனது சீட்.
அதில் "ஊப்..!! தேங்க் காட்" என்று கூறி பெருமூச்சு விட்டவன் தன் பேகை கழட்டி சீட்டின் கீழ் வைத்து விட்டு தொப் என்று ரிலாக்சாக அலமூவின் அருகில் அமர்ந்துகொண்டான்.
இதை எதையும் கவனிக்காமல் கருமமே கண்ணாய் உதட்டில் தோன்றிய புன் முறுவலுடன் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தாள் அலமூ.
அவளை பார்த்து அந்த இளைஞனுக்கு என்ன தோன்றியதோ..??அவள் கவனத்தை தன் புறம் திருப்ப எண்ணி இவனே அவள் புறம் திரும்பி "ஹே.. ஹாய்..!!" என்று அழைக்க.
அதில் சட்டென்று திரும்பி அவனை பார்த்தவள் அவன் தன்னை பார்த்து
புன்னகைத்ததை பார்த்து என்னசெய்வது என்று தெரியாமல் சிறு பதட்டத்துடன் பதிலுக்கு புன்னகைத்து வைத்தாள்.
"பஸ்ட் டைம் டிராவலா..??" அவளது பதட்டத்தை பார்த்து அவன் கேட்க.
அதில் கண்கள் விரிய ஆச்சரியமாய் அவனை பார்த்தவள் வேகமாய் ஆம் என்பது போல தலையாட்டினாள்.
அதை கண்டு பக்கென்று சிரித்துவிட்டான் அவன்.
"சோ க்யூட்..!!" என்றபடி சிரித்தவன் "இவ்வளவு பயம்னா ஏன் தனியா வர பேரெண்ட்ஸ்ச கூட்டிட்டு வந்திருக்கலாம்ல..!!" என்று ஒருமைக்கு தாவி இவன் கேட்க
"இல்ல வீட்டுல கொஞ்சம் பண கஷ்டம் அதான் வேலைக்கு .." என்று இழுத்தவள் வேகமாக "என் தோப்பனார் வரேன் தான் சொன்னார் நான் தான் அவரை வரவேண்டாம் சொன்னேன்....!!" என்று தந்தையை விட்டுகொடுக்காமல் அவள் பேச.
அதில் இதழ் பிரித்து சிரித்தவன் "தட்ஸ் குட் போல்ட் லேடி..!!" என்றான் அவளை பாராட்டுவது போல.
அதில் அவனது புகழ்ச்சியில் கூச்சத்துடன் சிரித்தாள் அலமூ.
அதற்கடுத்து இருவரும் நன்றாக பேச.
அவனது பேச்சில் அலமூவும் அவனுடன் நன்றாக பேசினாள்.
"பார்க்க படிச்சவர் போல இருக்கார் ஆனா எந்த பகட்டும் இல்லாம எவ்வளவு அழகா பேசுறார்..!!" என்று வியந்து போய் அவனை பார்த்தவள் அவனிடம் சகஜமாய் பேசினாள்.
உணவு உண்ணும் நேரமும் வர கைகழுவ சென்றவளுடன் எழுந்து வந்தவன் அவளிடம் "இந்த கம்பார்ட்மென்ல ஒரு லேடி கூட இல்ல உன்னை தவிர சோ எதா இருந்தாலும் என் கிட்ட சொல்லிட்டு போ சரியா..!!" என்று அக்கறையோடு சொல்ல அவள் மனதில் உயர்ந்து போனான் அவன்.
கைகழுவி விட்டு இருவரும் வந்து இருக்கையில் உட்கார அந்த இளைஞனோ கையில் இருந்த ஜூசை அவளிடம் நீட்டி "ஜூஸ் குடிக்கிறியா..??" என்று கேட்க அதில் தன் தலையை இடம் வலமாய் ஆட்டியவள் "மன்னிச்சுக்கோங்கோ பிராமண வழக்கப்படி வெளி இடத்துல எதுவும் சாப்பிட கூடாது அதனால.." என்று உணவை குறிப்பிட்டு காட்டி அவள் இழுக்க
கையை மேலே தூக்கியவன் "புரிஞ்சிச்சு புரிஞ்சிச்சு..!! ரிலாக்ஸ் மா..!!" என்று கூறியவன் அந்த பாட்டிலை மீண்டும் தன் பேகினுள் வைத்தான்.
இவளோ தனது கட்டை பையில் இருந்த ஒரு டிபன் பாக்ஸ்சை எடுத்தவள் அதை திறந்து தன் மூக்கை டிபன் பாக்ஸ்சின் மேல வைத்து ஆழமாக சுவாசித்து அந்த புளியோதரையின் மணத்தை தன்னுள்ளே முடியும் அளவு நிரப்ப.
அவள் செய்யும் செயலை வித்தியாசமாய் பார்த்தான் அவன்.
கையில் இருந்த புளியோதரையை எடுத்து அவன் புறம் நீட்டியவள் "எங்காத்துல வைதேகி அம்மா பண்ண புளியோதரை நன்னா நெய் மிதக்க தாளிச்சு கொட்டியது அந்த நெய் மணத்தோடு சேர்த்து சாப்பிடும்போது இந்த புளியோதரை தொண்டைக்குள்ளே இறங்கறச்சே அமிர்தமா இருக்கும்..!! அதுவும் எங்காத்துல செஞ்ச புளியோதரையை சாப்பிட்டா நூறு வயசு வரை ஆரோக்கியமா வாழலாம்" என்று பெருமையாய் சொல்ல.
அதில் ஒரு நிமிடம் அவனுக்கு எச்சில் ஊறி விட்டது அவளோ "ம்ம்..!!" என்றபடி மேலும் அதை நீட்ட அதை எடுக்கலாமா வேண்டாமா என்று இருந்தவன் "அப்போ உனக்கு..!!" என்று கேட்க
"நேக்கு இன்னொரு டப்பா இருக்கு நீங்க கவலை படாதிங்கோ..!!"என்று கூறி பளிச்சென்று புன்னகைக்க
அதில் அவள் கையில் இருந்த டிபன் பாக்சை வாங்கியவன் "அப்போ நான் நூறு வருஷம் வாழ்வேன்னு சொல்லுற..??" என்று சிரிப்புடன் கேட்டு அதை உண்ணத்தொடங்கினான் .
அதை பார்த்து ஆம் என்பது போல புன்னகைத்தவள் தன் பையில் இருந்த மற்றொரு டிபன் பாக்ஸ்சை எடுத்து திறக்க போக அப்போது அவள் கண்ணில் விழுந்தான் அவளுக்கு எதிரே அமர்ந்து இருந்தவன்.
இவள் ஏறியதில் இருந்தே கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்துக்கொண்டு இருந்தவன் இப்போதும் அதே புத்தகத்தை வைத்து தான் படித்துக்கொண்டு இருந்தான்.
இதுவரை ஒரு சொட்டு தண்ணீர் கூட இவள் பார்த்து அவன் குடிக்கவில்லை.
இன்னும் சிறிது நேரத்தில் ட்ரெயினில் தூங்கவேண்டி லைட் அனைத்தையும் அணைத்துவிடுவார்கள் என்று ஒருவர் சிறிது நேரத்துக்கு முன் வந்து சொல்லி இருக்க. அதை கேட்டும் அவன் உண்ணாமல் இருப்பதை பார்த்து ஒருவேளை உணவு கொண்டு வரவில்லையோ என்று எண்ணினாள்.
தன் கையில் இருந்த புளியோதரையையும் தன் எதிரே இருந்தவனையும் மாறி மாறி பார்த்தவள் "சரி ஆபத்துக்கு பாவம் இல்லை..!!" என்று மனதில் எண்ணியபடி அதை அவன் முன் மெதுவாய் நீட்டினாள்.
அவனோ புத்தகத்தில் மூழ்கி இருப்பான் போலும் இவள் நீட்டியதை சிறிதும் கண்டு கொள்ளவில்லை.
அதில் அவனை எப்படி அழைப்பது என்று குழம்பியவள் அவன் போட்டிருக்கும் வெள்ளை சட்டையை பார்த்து "ஏங்க..!! வெள்ளை சட்டை போட்டுருக்குறவரே..!!" என்று அழைக்க அதில் சட்டென்று நிமிர்ந்து அவளை கூர்மையாக பார்த்தான் அவன்.
அந்த பார்வை ஏனோ இவளுக்கு பயத்தை கொடுக்க "இ.. இல்லை.. சா.. சாப்பாடு சாப்பிடலையா..??" என்று திக்கித்திணறி கேட்டாள் அவள்.
அதில் அவளை அழுத்தமாக பார்த்தவன் "இல்லை..!!" எனும் விதமாய் தலையாட்ட.
அதை கண்டு தான் நினைத்தது சரிதான் என்று எண்ணியவள்.
கையில் இருந்ததை அவன் புறம் நீட்டி "என்கிட்ட புளியோதரை இருக்கு சாப்பிடுறீங்களா..??" என்று கேட்க அவனோ இவளை விழி எடுக்காமல் அழுத்தமாய் பார்த்தான்.
அதை கவனிக்காத இவளோ "பயப்படாதீங்க வீட்டுல சுத்தமா செஞ்சது தான் அதுவும் என் வைதேகி அம்மா செஞ்சது நன்னா மணக்க மணக்க நெய் விட்டு தாளிச்சு எடுத்..!!" என்று அவள் அந்த இளைஞன் இடம் சொன்னது போலவே மொத்த புளியோதரை ரெசிப்பியும் சொல்ல போக அதற்குள் இவளை இடைமறித்தவன் "நோ நீட்..!! நான் முன்ன பின்ன தெரியாத வெளியாளுங்களை நம்பி சாப்பிட்றது இல்லை..!!" என்று முகத்தில் அடித்தார் போல சொல்ல.
முகம் சூம்பி விட்டது அலமூவுக்கு அவன் புறம் நீட்டியிருந்த புளியோதரையை தன்புறம் மெல்ல இழுத்துக்கொண்டவள் அதை திறந்து மெல்ல உண்ண ஆரம்பித்தாள்.
அதற்குள் அவள் அருகில் இருந்த இளைஞன் அவள் கொடுத்த புளியோதரையை முழுதும் காலி செய்து விட்டு அவளிடம் திரும்பி சப்புகொட்டியவாறே "வேற இருக்கா..??" என்று கேட்க.
அதில் கையில் வைத்து இருந்த டிபன் பாக்ஸ்சை அவன் புறம் நீட்டியவள் புன்னகையுடன் "சாப்பிடுங்கோ..!!" என்றாள்.
அதை வாங்கி அவன் உண்ணத்தொடங்க இவளோ சாப்பிட்ட கையை காய விடக்கூடாது என்று எண்ணியபடி எழுந்து கைகழுவ சென்றாள் மெய் மறந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தவன் அவள் சென்றதை உணரவில்லை.
இங்கு கைகழுவிக்கொண்டு இருந்தவளோ "இந்த லோகத்துல நல்ல மனுஷாள் இருக்குறது போல கெட்ட மனுஷாளும் இருக்காள். இப்படியா ஒருத்தர் கேட்டா மூஞ்சில அடிச்சது போல பேசுறது...!!" என்று சற்று முன் பார்த்தவனை எண்ணி ஆதங்கமாய் அவள் முணுமுணுக்க இரு கையோ அதன் பாட்டிற்கு தண்ணீரில் உரசி கழுவிக்கொண்டு இருந்தது.
கழுவி முடித்தவுடன் கைகளை உதறியவள் தாவணி முந்தாணையில் கையை துடைத்தபடி தன் கம்பார்ட்மென்டினுள் நுழைய அங்கு கண்ட காட்சியில் நா உலர உடல் நடுங்க கண்கள் தெறித்துவிடும் அளவு விரிய நெஞ்சில் கைவைத்தபடி அப்படியே அதிர்ந்து நின்று விட்டாள்.
அங்கோ இவளது புளியோதரை உண்டவன் வாயில் புளியோதரை தள்ள ரத்தவெள்ளத்தில் செத்து கிடக்க அவனுக்கு எதிரே இவளது புளியோதரையை வேண்டாம் என்றவன் கையில் இருந்த துப்பாக்கியை ஊதி அவனது முதுகுக்குப்பின் சொருகிக்கொண்டு இருந்தான்.
அந்த நொடியே அங்கு எரிந்து கொண்டு இருந்த லைட் அனைத்தும் ஆப் ஆகி விட என்ன நடக்கிறது என்று தெரியாபல் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள் அலமூ என்ற கஸ்தூரி..!!
தொடரும்..