வணக்கம்.......
இது ஒரு காதல் பயணம் - 03 பதிப்பித்துள்ளேன்,
அப்டேட் கொடுக்க நிறைய நேரம் எடுத்திட்டான், some personnel problems and studies are the reasons, really sorry, என்ன சொல்லுறது எண்டு தெரியல...... தெரியுது sorry எல்லாம் பத்தாது நீங்கள் கோபமா தான் இருப்பீங்க அந்த கோபத்தை இல்லாம செய்ய தொடர்ந்து அப்டேட் கொடுத்து இல்லாம பண்ண ட்ரை பண்ணுறன் ப்ளீஸ்
பயணம் - 03
இருபது வருடங்களுக்கு முன்
திரும்பி கீதாவினை பார்த்தான், அச் சிறு பெண் கண்களால் ஒரு திசையினை நோக்கி சைகை செய்தாள். அவள் கண்கள் என்ன செய்தி கூறியதோ "கீதாம்மா இந்த அக்காவுடன் இரு நான் ஒரு போன் செய்துட்டு வரேன் "
ரயில் நிலையத்தின் அலுவலகத்தை நோக்கி நடந்தவன் காதுகளில் விழுந்தது "அன்னையா சூப்பர் அம்மாயி அன்னையா, அம்மிஸ்துந்தே லச்சலோ சம்பாதிஸ்தூந்தி அன்னையா"
அவர்களுக்கு அவனை விட ஓர் பத்து பனிரெண்டு வயது அதிகமிருக்கலாம், நாங்கள் நல்லவர்களில்லை என்பதை அவர்களது உடையும் பரட்டை தலையும் வஞ்சகமும் சூதும் நிறைந்த கண்களும் அடித்து கூறியது. சற்று தள்ளி நின்று ரயிலை வேடிக்கை பார்ப்பதை போல் அவர்களினை கவனிக்கத் தொடங்கினான் அவன்.
இங்கிருந்த ஐவரில் ஒருவன் சற்று தள்ளி நின்றிருந்த அடுத்த நால்வருக்கு சங்கோத முறையில் சைகை செய்தான். அவர்களில் ஒருவன் எட்டி கீதாவும் அந்த பெண்ணையும் பார்த்தவன் கண்களில் மின்னிய மின்னல் கீதாவை பார்த்ததும் மறைந்தது. அவனை தாண்டி சென்று மற்ற ஐவருடன் இணைந்தவர்களில் ஒருவன் தெலுங்கில் சொன்னான்
"அன்னையா..., ஆ சின்ன தெய்யம் கூட உன்தன்னைய "
"அவுனு அன்னையை, முதடிசாரி கூட இ தெய்யனே அன்னைய அந்தம் பகிலி கொட்டிந்து "
கேட்டுக்கொண்டிருந்தவன் உதட்டுக்குள் சிரித்தான். கீதா ஆள்தான் குட்டி காரியம் எல்லாம் படுசுட்டி, பள்ளி விட்டு வந்து ரயில் நிலையத்திலும் திரையரங்கு முன்னிலுமாக எதாவது தின்பண்டங்கள் தண்ணீர் என எதையாவது விற்பாள். படிப்புக்கு நான் பணம் தாரேன் தானே வேலை செய்வதை விடு என சொன்னாலும் கேட்க மாட்டாள். அவனறிய கிட்டத்தட்ட மூன்று நான்கு பெண்களை இவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டாள். அவன் சற்று நேரமாகவே கீதாவை கவனித்து கொண்டுதான் இருந்தான் அந்த கும்பலினை பார்ப்பதும் பின் அந்த பெண்ணினை பார்ப்பதுமாக நின்று எதையோ யோசித்து கொண்டிருந்தாள். பார்த்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்று பேசுவதற்குள் அந்த பெண் விழப்போகவே பிடித்திருந்தான்.
அவனது எண்ணங்களினை கலைத்தது அந்தக் கும்பலின் தலைவனின் குரல் "இந்த வாட்டி இந்த குட்டி பிசாசையும் சேர்த்து தூக்கிருவோம், நானும் கொஞ்சம் வளர்ந்த பிறகு தூக்குவோம் என்று தான் பார்த்தான் ஆனா சரி வராது "
அவர்களில் ஒருவன் கேட்டான் "என்ன ராக்கி உண்மையவோ சொல்கிறாய்"
மற்றவன் பதிலளித்தான் "ஆமாண்டா பிளான் எல்லாம் ரெடி, அந்த பொண்ணு இல்லாட்டியும் இந்த குட்டி சத்தான இன்று தூக்கியிருப்போம்..."
கேட்டுட்டுக் கொண்டிந்தவனின் நரம்பினை யாரோ சுண்டியது போல் உணர்வுடன் அங்கிருந்து அகன்றான். ரயில் நிலையத்தின் வெளியே மோட்டார் பைக்கில் நின்றவனின் அருகே செல்ல அங்கிருந்த சிலர் சிறியவர் பெரியவர் பேதம் இல்லாமல் வணக்கம் வைத்தார்கள். எதனையும் கண்டு கொள்ளாமல் பைக்காரன் காதில் எதையோ சொன்னவன் கலங்கிய முகத்துடன் உள்ளே வந்து கீதாவை விட்டு சென்ற இடத்தை பார்த்தான்.
வெறுமையாக இருந்த இடம் அவனைப் பார்த்து சிரித்தது.
இன்று
கீழே மண்டியிட்டு அமர்ந்து அவர்கள் நால்வரும் மயங்கிவிட்டனர் என்பதை உறுதிப்படுத்திய வெட்டியான். உதட்டை குவித்து விசில் அடித்தான்.
உள்ளேயிருந்து இன்னொரு வெட்டியானும் ஒரு பெண்ணும் வெளிய வந்தனர்.
வெளியே நின்ற போலி வெட்டியான் மயங்கியிருந்தவர்களை பரிசோதித்தவாறே நிமிர்ந்து கூட பார்க்காமல் கையிலிருந்த சிறிய மயக்க மருந்து ஸ்பிரையினை அவளிடம் நீட்டினான். அதை வாங்கி தனது bag உள்ளே வைத்தவள் துப்பாக்கி போன்ற ஒன்றினை அவனிடம் கொடுத்தவாறே அந்த நால்வரினையும் ஊன்றி பார்த்தாள்.
அந்த துப்பாக்கியினை சரி பார்த்தவன், ஒருகாலினை குத்திட்டு கீழே இருந்தவன் கால்முட்டியில் கையினை ஊன்றி தலை சாய்த்து அவளை நோக்கி கேட்டான் "இவர்கள் தானே.... மாப்பிள்ளைகள் "
அவள் கண்களில் மில்லிமீட்டர் அளவில் மலர்ந்த குறுநகையுடன் ஆமோதிப்பது போல் தலையசைத்தாள்.
"அந்த மரத்தை ஆட விட்டு சமய சஞ்சீவியாக நல்ல வேலை செய்தாய், நான் மயக்க மருந்தினை அடிக்கவிட்டால் இங்கேயே மாரடைப்பில் இறந்திருப்பார்கள்" லேசாக சிரித்தான்.
அவன் சிரிப்பதை பார்த்த வெட்டியானுக்கு தலை சுற்றுவது போல இருந்தது என்றால் அவன் கூறியதைக் கேட்டு மயக்கமே வரும் போல் இருந்தது. ஒரிஜினல் வெட்டியான் நிமிர்ந்து அந்த பெண்ணினைப் பார்த்தன். உள்ளே அவர்கள் இருவரும் அந்த மரத்தை ஆட்ட முயற்சி மட்டும் தான் செய்தார்கள் அந்த மரத்தின் உறுதியான கிளை அசைவென என்று சண்டித்தனம் செய்தது. அதை அப்படியே விட்டுவிட்டு அவன் குடிசையின் உள்ளே செல்ல அந்த பெண் சுண்ணாம்பில் நனைத்த சில கொட்டாங்குச்சிகளை அங்கங்கே எறிந்துவிட்டு பின் வாசலில் நின்று மரத்தை பார்த்துக் கொண்டிருந்தாள். இதை தான் ஒரிஜினல் வெட்டியான் உள்ளே இருந்து பார்த்தன். மரம் ஆடியதை அவன் பார்க்கவில்லை. வெட்டியான் குழப்பத்துடன் அந்த பெண்ணைப் பார்க்க அவள் பயப்படாதே நான் பார்த்துக் கொள்கின்றேன் என்பது போல் கண்முடி திறந்தவள் குனிந்து கீழே இருந்தவன் தோளில் தட்டி துரிதப்படுத்தினாள்.
கீழே இருந்தவன் கையிலிருந்த துப்பாக்கி பிடித்த கையை தூக்க தன்னையும் மறந்து கேட்ட வெட்டியானின் வார்த்தை திக்கியது "இவர்களை கொல்ல போ..... போ ......."
அவன் நிமிர்ந்து ஒரு பார்வை தான் பார்த்தன், பார்வையா அது போட்ட வேடத்துக்கு தக்க சட்டை இல்லாத வெற்று மார்பும் புஜங்களும் திண்ணென்று இருக்க சட்டென குறுகிய இடையும் இரும்புச் சலாகைகளை பொருத்தி வைத்தது போன்ற கைகளும் ஒரு அடி விட்டால், அடி வாங்கியவன் எட்டு இல்லை பதினாறு குட்டி காரணமே போடுவான் போல் இருந்தது. அனைத்திற்கும் மேலாக அந்த கண்கள் எதிரில் இருப்பவன் உள்ளத்தின் அடி ஆழம் வரை சென்று அனைத்தையும் எடைபோடும் அந்தக் கண்கள் குற்றவாளிகளுக்கு மட்டுமில்லை அவனது மேலதிகாரிகளுக்கு கூட நெஞ்சில் கூட ஒரு கிள்ளு கிள்ளும். வெட்டியான் கண்களுக்கு மூன்றாவது கண்ணினை திறந்த அந்த முக்கண் சிவன் போலவே தெரிந்தான் ஹைட்ரபாத் சார்மினாரின் SP தீனதயாளன்.
வெட்டியான் அந்த மயானத்தின் பிணங்களுக்கு மத்தியில் கூட இவ்வளவு பயத்தினை உணர்ந்ததில்லை. அவனுடன் இருந்த அந்தப் பெண்ணிற்கு அப்படியல்லாம் பயம் இருந்ததை போல் தெரியவில்லை அவள் சுற்றிலும் பார்வையை சுழற்றியவாறே, 'சீக்கிரம் முடி' என்பது போல் அவனது தலையில் தட்டினாள்.
ஒரு கணம் கண்முடி திறந்தவன் "என் இமேஜை டேமேஜ் பன்னுறதே இவளின் வேலைய போய்விட்டது" உதட்டுக்குள் முனுமுனுத்தவாறே தன் வேலையில் முனைந்தான்.
வெட்டியான் விழி தெறித்துவிடும் போல் விழித்தான். சில தினங்களுக்கு முன் SP தீனதயாளன் ஒரு கொலை கேஸில் பிணத்தினை உறவினர் கொண்டுவந்து எரித்துவிட அது சம்பந்தபட்டவர்களினை அடையாளம் காட்ட வெட்டியனை ஒரு மாலுக்கு வருமாறு கூறியிருந்தான். அங்கு ரவுடிகளுக்கு பயத்து ஒரு பிரபல தொழில் அதிபரின் மகள் அவனது கையை பிடித்ததற்கு உதறிய உதறில் கீழே விழுந்ததில் அப் பெண்ணுக்கு இடுப்பு எலும்பே உடைந்துவிட்டது. இத்தனைக்கும் அவள் லேசாக தான் பிடித்திருந்தாள். ஆனால் இந்தப் பெண் SP தீனதயாளனின் தலையில் இவ்வளவு இலகுவாக தட்டியது சற்று முன் நடந்த அமானுஷ்யங்களினை பின்னே தள்ளி பயத்தினை ஆச்சரியம் அக்கிரமித்திருந்தது.
சற்று நிமிர்ந்து அந்த பெண்ணினை பார்த்தான். தலையில் குளிர் காலத்தில் போடுவது போல் காதினை மறைத்து புருவம்வரை ஒரு குல்லா, அதனூடே வெளி வந்த கேசம் நான் சுருள் என்று சுருண்டு இருந்தது. முகத்தினை முக்கோண துணியினால் மூடி கட்டியிருந்தாள். ஈட்டி போல் ஜொலித்த கண்கள் மட்டும் மயானத்தின் காற்றினையும் துளைத்து விடும் போல் எதையோ தேடி நாலாபுறமும் சுழன்று கொண்டிருந்தது. அந்த நாலு குண்டர்களிடம் தப்பி வந்தாளா இல்லை பொறிக்குள் இழுத்து வந்தாளா என்பது சரியாக தெரியாத போதும் ஓடியதில் சற்றே தலை கலைந்திருந்த வெள்ளை ஷிர்ட்டினை இடுப்பில் முடிந்து இருந்தாள். குண்டு என்று ஏற்கவும் முடியாத மெலிவு என்று ஒதுக்கவும் முடியாத உடல்வாகுடன், நீல டெனிம் ஜீன்ஸ் பிளஸ் ஆங்கில் பூட்ஸ் அணிந்த கால்களினை அகட்டி உறுதியாக நிலத்தில் பதித்து நின்ற விதம் பயத்துக்கும் அவளுக்கும் வெகுதூரம் என்பதையும் பறைசாற்றியது. இடுப்பில் ஊன்றியிருந்த கைகளில் ஏதோ ஒரு வடிவத்தினை பச்சை குத்தியிருந்தாள்.
தீனதயாளன் வேலை முடித்து நிமிர்ந்தவன் அவள் பார்வையை கவனித்துக் கேட்டான் "எதாவது பிரச்சனையா, வேறு யாரும்....." அவன் முடிப்பதற்குள் இல்லை என வேகமாக தலையசைத்தவள் கீழே மயங்கியிருந்தவர்களினை பார்க்க, "இந்த வேலை முடிந்துவிட்டது நாம் போகலாம்" என்றவன் தனது கண்களை மயானத்தை சுற்றி ஓடவிட்டான்.
ஹைதராபாத் நகரினை விட்டு வெகு தொலைவில் இருந்த அந்த மயானம் அவன் கண்களுக்கு சாதாரணமாகவே தெரிந்தது. அங்கங்கே சில புது சமாதிகளும் நடுநடுவே இடிந்து பழுதடைந்து சமாதிகள் மேல் சிறு பூண்டு தாவரங்கள் வளர்த்திருக்க பழமையும் புதுமையுமாக கலந்து காட்சியளித்தது. வேறு நபர்களின் நடமாட்டம் எதுவுமில்லை என்பதை உறுதிசெய்து கொண்டவன் கண்களினை மட்டும் திருப்பி அவளை பார்த்தன்.
ஓர் இடத்தினையே உற்று பாத்துக்கொண்டிருந்தவளின் புருவத்தின் அருகே உதித்த வியர்வை முத்துக்கள் காதேரமாக வாய்க்கால் கட்டி கழுத்தை நோக்கி இறங்கிவே, அவன் புருவத்தினை சுருக்கி தனக்குள் யோசித்தான் 'இதற்கு முதலும் நான்கைந்து தடவைகள் இப்படித்தான் வியர்த்து வடித்தாள் கேட்டால் பதிலில்லை' . ஏதோ வெடித்த சத்தம் அவனது சிந்தனையை இடற திரும்பி பார்த்தன் அது எரிமேடையில் இருந்து வந்த சத்தம். இதைப்பற்றி மேற் கொண்டு பேச இது இடமில்லை என உணர்ந்தவன் வெட்டியானிடம் திரும்பினான்.
"இவர்கள் எழுந்ததும் பயத்தில் மயக்கம் போட்டதாக சொல்லி திருப்பி அனுப்பிவிடு வேறு எதுவும் பேசியதாக தெரிந்தது.... " அந்த அழுத்தமான பார்வையே மீதியை கூற வெட்டியான் சூரன் போல் எல்லாப் பக்கமும் தலையாட்டி வைத்தான்.
ஏதாவது தடயங்கள் விடுபட்டுள்ளதா என்று அந்த அந்த இடத்தினை நன்றாக சுற்றி பார்த்தவன் அவளது பூட்ஸ் காலடிகளை தன் கால் தடத்தினை பதித்து அழித்தவன் மீண்டும் ஒரு எச்சரிக்கை பார்வையை வெட்டியான் பக்கம் வீசியவாறே அந்த மர்ம பெண்ணையும் அழைத்துக்கொண்டு பாதையின் ஓரமாக இருந்த புல்வெளி வழியே அந்த மயானத்திலிருந்து வெளியே போகும் பாதையில் நடந்தான்.
அவர்கள் செல்வதை பார்த்த வெட்டியான் அதுவரை அடக்கி வைத்திருந்த மூச்சினை நிம்மதியாக வெளியேற்றியவாறே "இவர்களுக்கு மயக்கம் தெளிய எப்படியும் ஒரு பத்து நிமிடமாவது எடுக்கும்" தனக்குள் முணுமுனுத்தவாறே எரிமேடையினை நோக்கி சென்றான். தன் வேலையினை செய்துகொண்டே அவர்கள் மேல் ஒரு கண்வைத்தவாறு இருந்தவனுக்கு இதயம் எகிறி தொண்டைக்குழி வழியே வெளி வந்துவிடும் போல் இருந்தது அந்த காட்சி.
வெள்ளை நிற புகை வடிவத்தில் அந்த குண்டர்களின் அருகே ஒரு உருவம் இவர்கள் அருகே நிற்பதா அல்லது வெளியே செல்பவர்களை பின் தொடர்வதா என்பது போல் தயங்கி நின்று கொண்டிருந்தது. வெட்டியானுக்கு பயத்தில் மூச்சு திணறத் தொடங்கியது.
அந்த வெள்ளை புகை குண்டர்களின் மேலாக பறப்பது போல் வேகமாக கடக்கவே அந்த இடத்தில் மட்டும் வீசிய காற்று சுற்றியிருந்த சருகுகள், அரிசி சோளப்பொரி மண் என மூன்று மீட்டர் வட்டத்தினுள் இருந்த அனைத்தினையும் எழுப்பி ஒரு கணம் அந்தரத்தில் நிற்கவிட்டு கீழே விழவிட்டது. அதன் பின் மெதுவே வெளியே செல்பவர்களை பின்தொடர்ந்து காற்றில் கலந்து மறைந்தது.
******
மில்லில் மீட்டிங் முடித்து வந்திருந்த ஜெர்மனியர்களுக்கு ஊரை சுத்தி பார்க்க ஏற்பாடு செய்திருந்தான். மொழிபெயர்ப்பாளர் சுவேதாவும் அவர்களோடு காரில் ஏறுவதை பார்த்து கையசைத்தவாறே அவர்களுக்கு விடை கொடுக்கவும் யது நந்தனின் செல் சத்தமின்றி அதிரவும் சரியாக இருந்தது.
ப்ளூடூத்தில் "யது ஹியர்...." என்று பதிலளித்தவாறே காரினுள் அமர்ந்து சீட் பெல்டை அணிந்தவன் கைகள் மறுமுனையில் கேட்ட செய்தியில் அந்தரத்தில் நின்றது.
பயணம் தொடரும்...