All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நந்து சுந்தரமின் 'சுடும் நிலவு!!! சுடாத சூரியன்!!!' - கதை திரி

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
5 💕...

கிழக்கே உதித்த ஆதவன் தன் கதிர்களால் மக்களை ரட்சிக்கத் தொடங்கிய காலை நேரம்.

திருமண மஹால் முழுதும் நிரம்பி இருந்த பேச்சுக் குரல்களும், சிரிப்பு சத்தமும், மேள, நாதஸ்வர ஓசையும் அங்கிருந்த எல்லோர் மனதிலும் இதம் பரப்பி இருந்தது.

மனையின் நடுவே அக்கினி குண்டமும்,அதன் ஒரு பக்கம் மணமக்கள் அமர ஜமுக்காலம் விரித்திருக்க மற்றொரு பக்கம் அய்யர் அமர்ந்து "மஞ்சள் எடுத்து வாங்கோ, ஒரு டம்ளரில் தண்ணீர் தாங்கோ "

என தாரணி, வைஷுவிடம் தேவையானதை எடுத்துவர சொல்லிக் கொண்டிருந்தார்.

மணப்பெண்ணை அழைத்து அவளின் நாத்தி முறைப் பெண்களிடம் இருந்து அரிசி, தேங்காய், வெற்றிலை பாக்கை முந்தானையில் வாங்கிக்க சொல்லிய ப்ரோஹிதர் ;

தாராணியை நிச்சயப் பட்டுப் புடவையை தாம்பளத்தில் வைத்து சவிதாவிடம் குடுக்க சொன்னார்.

அதை அவள் வாங்கியவுடன் மணமகள் அறைக்கு அழைத்து சென்றனர் தாரணியும், வைஷ்ணவியும்.

அடுத்ததாக மனைக்கு வந்த மதிநந்தன் தன் பெற்றோருக்கு பாத பூஜை செய்தான். பின்பு அவனின் தாய்மாமன் மதி கையில் காப்பு அணிவித்து, முஹூர்த்த ஆடையை அவனிடம் குடுத்தார்.

அதை மாற்றி வரும்படி அவனை அனுப்பிய ப்ரோஹிதர் சவிதா மேடைக்கு வந்ததும் அவள் பெற்றோருக்கு பாத பூஜை செய்வித்து, காப்பு கட்ட தாய் மாமனை அழைத்தார்.

அய்யர், "பொண்ணோட தாய் மாமா வாங்கோ "என்றதும் தனது மீசையை முறுக்கிவிட்டு மனைக்கு வந்தார் முத்தரசியின் அண்ணனும், ஹரியின் தந்தையுமான ரத்தினவேல்.

தன் தங்கை மகள் கையில் அவர் காப்பு அணிவித்து, முஹூர்த்த பட்டுப் புடவை இருந்த தாம்பளத்தை குடுத்தார்.

அதை வாங்கிக்கொண்டு தன் நாத்திகளின் (தாரு, வைஷு) கைகளை பிடித்து அவர்கள் பின்னோடு சென்றாள்.

பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீர அழகுடன் விஷாலின் கைபிடித்து மேடையை அடைந்தான் விழா நாயகன் மதிநந்தன்.

அவன் கையில் பூ செண்டை கொடுத்து மனையில் அமரவைக்க அய்யர் மந்திரங்களை கூறத் தொடங்கினார்.

மணமகள் அறையில்....

அரக்கு நிறத்து சேலை அதற்கு பொருத்தமாய் ஆரி ஒர்க் செய்திருந்த அதே வண்ண சட்டை, கழுத்தில் ஆன்ட்டிக் வகையை சேர்ந்த ஆரம், நெக்லஸ்... காதில் குடை ஜிமிக்கி... கைக்கு தங்க வளையல்கள்.... இன்னும் நெற்றிசுட்டி, ஒட்டியாணம், வங்கி என தலை முதல் கால் வரை நகைகளை இழைத்து தங்க சிலையென பார்ப்போர் வியக்கும் வகையில் நின்றிருந்தாள் சவிதா.

தம் கைகளால் அவள் முகத்தை சுற்றி அதை நெற்றியில் வைத்து சுடக்கெடுத்து திருஷ்டி கழித்தாள் வைஷ்ணவி.

"சவிதா .. ரொம்ப அழகா இருக்க..ஒரு திரிஷ்டி பொட்டு மட்டும் வச்சுடுவோம்."என தாரணி கண்மையை எடுத்து அவளின் ஒரு கன்னத்தில் சிறு புள்ளியை வைத்தாள்.

தன் நாத்திகளின் செய்கையில் அவள் சிரிக்க அந்நேரம் சுந்தரம் உள்ளே வந்தார்.

தந்தைகளுக்கு மகள்கள் என்றாலே தனி பிரியம் தானே. அவர்கள் என்றுமே தம் மடி தவழும் சிறுபிள்ளைகளாய் எண்ணிக் கொண்டிருக்கும் தந்தை மார்களுக்கு மகவுகளின் திருமண கோலமே அவர்கள் வளர்ந்து விட்டதை உணர்த்தும்.

இங்கேயும் கண்கள் கலங்க தம் மகளின் திருமண கோலத்தை கண்டு கழித்தவர்.."என் மகள் தான் எவ்வளவு வளர்ந்து விட்டாள்."என எண்ணி சவிதாவை உச்சி முகர்ந்தார் சுந்தரம்.

"இன்றுதான் இவளை டவலில் சுற்றிய பூக் குவியலென டாக்டர் தம் கைகளில் தந்தது போல் இருக்க.. இதோ இன்னும் சிறிது நேரத்தில் அவள் இன்னோரு வீட்டு மருமகள்.."என மனதுள் நினைத்திருக்க அதை கலைத்தது

ப்ரோஹிதரின் "பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ "என்ற வாக்கியம்.

வைஷுவும், தாருவும் ஆளுக்கு ஒரு பக்கமாய் சவியின் இரு கைகளையும் பிடித்து அவளை மனைக்கு அழைத்து வந்தனர்.

அன்னமென நடந்து வந்த தன் ஜின்னுக் குட்டியை கண்கொட்டாமல் பார்த்தான் மதிநந்தன்.

சவிதா அவனின் வலப்பக்கம் வந்து அமர தன் கழுத்தை அவள் புறம் திருப்பி அவளின் அழகை அவன் ரசித்துக் கொண்டிருக்க; அதில் "மச்சான்! நேரா உட்காரு எல்லாரும் உன்ன பாத்து தான் சிரிச்சிட்டு இருக்காங்க" என்றான் விஷால்.

"தாலி கட்ட முன்னயே பையன் விழுந்துட்டானே... ஏ..
மகா இனி உன் பையன் உன்னலாம் கண்டுக்க மாட்டான் டி... அவன் ஞாபகத்துல பொண்டாட்டி மட்டும் தான் இருப்பா போலயே..."என மதியின் சொந்தக்கார பாட்டி மகாலட்சுமியிடம் கூற

"அதுக்கென்ன சித்தி.. என் பையன் மருமக கூட சந்தோஷமா இருந்தா போதும்."என்ற மகாலட்சுமியின் பதிலில் பெண்ணை பெற்றவர்கள் திருப்தியானார்கள்.

ஏனெனில் எந்த ஒரு தாயும் தன் மகன் தனக்கே முன்னுரிமை குடுக்க வேண்டும் என எண்ணுவாள்.
பெரும்பாலும் மாமியார், மருமகள் சண்டை வர காரணமும் இதுவாகத்தான் இருக்கும்.

அப்பாட்டியின் கேலியும் மதியின் மனதில் இனி சவிதாவிற்கே முதல் இடம் என்பதாய் இருந்தும் இலகுவாய் அதை ஏற்றுக்கொண்டு சவிதா எங்கள் வீட்டு பெண் என உணர்த்திய மகாவின் பதிலில் இனி தன் மகள் பற்றிய கவலை இல்லை.

நம்மை போலவே அவளை இவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிம்மதி சுந்தரம், முத்தரசியின் மனதில் பிறந்தது.

மதியின் தன்னை மறந்த செய்கையில் சுற்றி இருந்த உறவுகளின் கிண்டல் சவியின் மனதில் கோபத்தைத் தூண்டியது.

மதியை நோக்கி அனல் கக்கும் பார்வையை வீசினாள். அதில் இத்துனை நேரம் மனதில் பரவி இருந்த இதம் மறைய தனது காதல் பார்வையை மாற்றி நேராக அமர்ந்து கொண்டான்.

"அய்யயோ... நம்ம கண்ணகி கண்ணாலயே எரிச்சுருவா...இனி அடக்க ஒடுக்கமா இருக்க வேண்டிதான்...இவுங்க குதுகலத்துல என் வாழ்கைல கும்மி அடிச்சிடுவாங்க போலயே "என மனதுள் புலம்பியவன் நல்ல பிள்ளையாய் முகத்தை வைத்துக் கொள்ள

அதே நேரம் "கெட்டிமேளம்... கெட்டிமேளம் "என்ற அய்யர் மஞ்சள் கயிற்றில் பொன் சரடு கோர்த்த மாங்கல்யத்தை மதிநந்தன் கையில் தர.. அதை தன் மனங் கவர்ந்தவளின் மணிக் கழுத்தில் பூட்டினான்.

தலை தாழ்த்தி இருந்த சவிதாவின் மனதில்

இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டது சரியா? ஆதி, என்ன மன்னிச்சுரு இதைத் தடுக்க நான் முயற்சி செஞ்சும் நடந்துடுச்சு. உனக்கு நான் துரோகம் செய்ய நினைக்கல. எவ்ளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த பந்தத்துல இருந்து வெளிய வந்துடுவேன்."என்பன ஓடிக் கொண்டிருக்க

அவளின் தலையை நிமிர்த்தி நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட்டான் புது மாப்பிள்ளை.

தனக்கு நேர் எதிரே நின்றிருந்த தந்தையின் கண்களில் ஆனந்த கண்ணீரும் ,இதழில் தவழ்ந்த புன்னகையும் சவிதாவின் மனக்கிலேசத்தை போக்கி சிறிது தெளிய வைத்தது.

அவளின் ஒரு மனம் "என் அப்பாவின் நிம்மதிக்காவும், சந்தோஷத்திற்காகவும் எதையும் செய்யலாம்"என எண்ண

இன்னோரு மனமோ அதற்கு நேர் எதிராய் "இது தவறு.. ஆதிக்கு செய்யும் துரோகம்."என வாதிட்டது.

அவளின் மன போராட்டங்கள் எதையும் அறியாமல் தான் முதன் முதலில் பார்த்து காதல் வயப்பட்ட பெண்ணையே மணந்து கொண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் சவியின் மதி.

-தொடரும்.
 

Gomathi Nandhini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
6 💕...

மணமக்களின் வலது கையை பட்டுத்துணியால் தாரணி கட்ட அவர்கள் அக்னியை மூன்று முறை சுற்றி வந்தார்கள்.

வைஷ்ணவி புது மன தம்பதியருக்கு பாலும், பழமும் ஊட்ட, இருப்பக்க உறவினர்களும் மொய் எழுதி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

மதிய உணவுக்கான பந்தி தொடங்க மணமக்களுக்கு பரிசை கொடுத்த பெரியவர்கள் சாப்பிட சென்றிட... இளவட்டங்கள் மதி, சவியை கேலி செய்து சிரித்திருந்தனர்.

பெற்றோர் முதல் அங்கிருந்த உறவினர்கள் வரை அனைவரோடும் புகைப் படம் எடுத்து முடித்திருக்க... மணமக்களை தனியே போட்டோஸ் எடுக்க சொன்னாள் தாரணி.

இருவரின் அந்யோன்யத்தை அதிகரிக்கும் வகையில் நெருக்கமான போஸ்களில் நிற்க சொன்னார் புகைப்படக்காரர்.

அதை தவிற்கும் வகையில் "அண்ணி பசிக்கிது.. சாபிட்டு வந்து போட்டோஸ் எடுத்துக்கலாமா?"என பாவமாய் தாரணியிடம் சவிதா கேட்க

"ஹான்... வாங்க சாப்பிட போலாம்"
என்றவள் இருவரையும் அழைத்துக் கொண்டு டைனிங் ஹாலுக்கு வந்தாள்.

மதி, சவி அருகருகே அமர.. சவிதாவின் மறுபுறம் வைஷ்ணவி, வியா அமர்ந்திருக்க... மதியின் மறுபுறம் தாரணி, விஷால் அமர்ந்திருந்தனர்.

நேத்ரனும், ஹரியும் பந்தியில் பரிமாறிக் கொண்டிருந்தனர்.

இலை போட்டு இனிப்பு வகைகளில் இருந்து சாதம், குழம்பு, பச்சடி, கூட்டு, பொரியல் வரை பரிமாறிட... அனைவரும் சாப்பிடத் தொடங்கினர்.

அதேநேரம் மணமக்கள் சாப்பிடுவதை வீடியோ எடுத்திருந்த பையன் "மாப்பிளை அண்ணா அக்காவுக்கு ஊட்டிவிடுங்க "என்க

மறுவார்த்தை இன்றி தன் இலையில் இருந்த இனிப்பை சவியின் வாய்க்கு அருகில் கொண்டு சென்றான் மதி.

இக்காட்சியை படம்பிடிக்க தனது கேமராவை தயாராய் வைத்திருந்தான் மற்றொரு புகைப்படக்காரன்.

கண் இமைக்கும் நொடியில் தன் வாய்க்கு அருகில் வந்த மதியின் கையை கண்டு அதிர்ந்தவள் வேண்டாம் என்னும் விதமாய் அவனை ஒரு பார்வை பார்த்தாள்.

எங்கே அதெல்லாம் கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லையே...

"மாப்பிள்ள நீட்டிட்டு இருக்காருல வாங்கிக்கோ பாப்பா "என்ற தந்தையின் குரலில் அத்திசை நோக்க

பாயாச தூக்கு வாளியை தன் கைகளில் வைத்திருந்தவர் கண்களில் மாப்பிள்ளை ஊட்டி தன் மகள் சாப்பிடுவதை பார்க்கும் ஆவல் இருந்தது.

தந்தை கூறிய பின் தவிர்க்க முடியாது வாயை திறந்து அவன் குடுத்த இனிப்பை வாங்கிக் கொண்டாள்.

"ஏன் வைஷு.. மாப்பிள்ளை பொண்ணுக்கு ஊட்டியாச்சு... இப்போ பொண்ணு மாப்பிள்ளைக்கு ஊட்டனும்ல..!" என தாரணி சவிதாவின் அண்ணியான வைஷ்ணவியிடம் கேட்க

"ஹான் தாரு... நானும் இதேதான் சொல்ல வந்தேன்.சவி, மதி அண்ணாக்கு ஊட்டிவிடு மா" என்றாள் வைஷ்ணவி.

ஒரே வயதொத்த தாருவும், வைஷுவும் வா, போ என கூப்பிட்டு பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கி பழகி விட்டனர்.

அண்ணியின் கூற்றில் சங்கட முற்றவள் அமைதி காக்கவே அங்கிருந்தோர் வற்புறுத்தலில் வேறு வழியின்றி சிறிதளவு உணவை எடுத்து மதிக்கு ஊட்டினாள்.

அவள் தந்ததை வாங்கிக் கொண்டவன் தன் பற்களால் அவளின் விரலினை கடித்தான்.

அதில் படெக்கென விரலை அவன் வாயிலிருந்து உறுவியவள் அவனை வெறுப்பாய் பார்த்தாள்.

அதை காணாத மதி இத்துணை நேரம் நடந்த நிகழ்வின் தாக்கத்தில் சுற்றுப்புறம் மறந்திருந்தான்.

அவன் எச்சில் பட்ட கையால் சாப்பிட விரும்பாதவள் இலையை மூடிவிட்டு எழுந்தாள்.

"என்னாச்சு சவி.." வைஷு பதட்டமாய் கேட்க

"தல வலிக்குது அண்ணி. இதுக்கு மேல சாப்பிட்டா வோமிட் வந்துடும் "

சவிதா தலை வலி வந்தால் எதுவும் சாப்பிட மாட்டாள். அவளுக்கு உடனே வோமிட் வந்திடும். தலைவலி சரியான பின்பே விரும்புவதை உண்பாள். இதை அறிந்திருந்த வைஷ்ணவி "ஓகே பாப்பா..
ரூம்ல போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு "என்றாள்.

மேலும் மதிய உணவு முடிந்ததும் சவிதா தனது புகுந்த வீடு இருக்கும் ஊரான சென்னைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதால் வழியில் வோமிட் வந்துவிட்டால் சிரமம் என அவளை வைஷு கட்டாயப் படுத்தவில்லை.

கையை கழுவிய சவிதா வேகமாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்து மணமகள் அறைக்கு வந்து விட்டாள்.

திருமணத்தில் அவளின் விருப்பமின்மையை அறிந்தும் இன்று மதி நடந்து கொண்டது அவன் மேல் இருந்த மதிப்பை குறைத்தது.

அவளின் எண்ணங்கள் தரி கெட்டு ஓடி பழைய நிகழ்வுகளை ஞாபக படுத்த அதன் தாக்கத்தில் அவள் கண்கள் கண்ணீரைப் பொழிந்தது.

தன் மகள் அறையில் தனியாய் அமர்ந்திருப்பதை கண்ட முத்தரசி "பாப்பா... சவி, சாப்பிட்டியா டீ... ஏன் தனியா உட்காந்துருக்க? மாப்பிள்ளை எங்க?" என கேள்விகளை அடுக்க

அத்துணை நேரம் இருந்த மன பாரத்தில் தாயை கட்டிக்கொண்டு அவள் கதறிட முத்தரிசியோ பயந்து விட்டார்.

"பாப்பா.. என்ன மா.. எதுக்கு அழற "
அன்னை நடுக்கமாய் வினவினர்.

சவிதாவை தேடி அவ்வறைக்கு வந்த வைஷ்ணவியும் , தாரணியும் இக்காட்சியை கண்டு பதறினர்.

"அத்த.. என்னாச்சு "வைஷு கேட்க

"தெரியல வைஷு.. நான் வந்ததுல இருந்து அழுதுட்டு தான் இருக்கா "

"அம்மா.. அப்பாவ விட்டுட்டு வரோமேனு அழறியா?" தாரணி தவிப்பாய் கேட்க

அக்கேள்வியில் இன்னும் சிறிது நேரத்தில் நாம் சென்னைக்கு கிளம்ப வேண்டும் என்ற நிதர்சனம் அவளுக்கு புரிய...

தரணியின் கேள்விக்கு அவளது தலை ஆமெனும் விதமாய் ஆடியது.

அதேநேரம் சுந்தரம், ஹரி, வியா, நேத்ரன் அவ்வறைக்கு வந்திட... அவர்களை கண்ட சவிக்கு கண்கள் கரித்து கொண்டு வந்தது.

"தாரு.. நேரமாயிட்டது இப்போ கிளம்புனாதான் மதுரைல பிலைட்ட புடிக்க முடியும்." விஷால் அவசர படுத்த

தன் பிறந்த வீட்டு உறவுகளிடம் இருந்து கண்ணீருடன் விடை பெற்றாள் சவிதா.

தந்தையின் மார்பில் சாய்ந்தவள், அன்னையின் கழுத்தில் கையை போட்டு தன்னுடன் இருக்கிக் கொண்டாள்.

அண்ணனின் தோளில் சாய்ந்து அண்ணியின் கையைத் தன் கன்னத்தில் வைத்துக்கொண்டாள்.

வர்மனை தூக்கி சுற்றியவள் அவனுக்கு ஒரு முத்தம் குடுத்து இறக்கி விட்டாள்.

தன் இரு கைகளால் ஹரி,வியா இருவரையும் அணைத்தவள் "போய்ட்டு வரேன் " என தொண்டை அடைக்க கூறி ஒரு தலை அசைப்புடன் மண்டப வாயிலுக்கு சென்றாள்.

இந்த பாசப் போராட்டத்தைக் கண்டு மதியின் குடும்பம் வருத்தப் பட

"கவலைபடாதீங்க. சவிதா எனக்கு ஒரு தங்கச்சி போல தான்.. என் அம்மா, அப்பாக்கு அவளும் ஒரு பொண்ணு மாதிரி.. என் அண்ணா அவனோட உயிரா அவளைப் பாத்துப்பான். " தாரு அவர்களுக்கு ஆறுதல் அளித்தாள்.

"ஆமா சித்தப்பா... உங்களுக்கு நம்பிக்கை வர அத்தாட்சியா நா இருக்கேன் பாருங்க. நான் வாக்கப்பட்டு வந்த நாளில் இருந்து என்னய இவுங்க எல்லாரும் கண் கலங்காம தான் பாத்துக்குறாங்க" விஷால் சிரிக்காமல் முகத்தை பாவமாய் வைத்து கொண்டு சொல்ல..

அதை கேட்டு தாரு அவனை செல்லமாய் முறைக்க மற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.

சவிதாவின் குடும்பத்தாரை சிரிக்கவைத்து அவர்களிடம் இருந்து விடைபெற்றார்கள் மதி வீட்டார்.

பொன்னமராவதியில் இருந்து மதுரை வரை காரிலும் மதுரையிலிருந்து சென்னை வரை பிலைட்டிலும் பயணம் செய்தனர்.

கார் ஏரியதிலிருந்தே மதியை தவிர்த்த சவிதா தாரணியின் அருகிலே அமர்ந்து கொண்டாள்.

வீட்டாரை பிரிந்து வந்த வருத்தத்தில் இருந்தவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

மதி தன் அறைக்கு பால் சொம்புடன் வந்தவளின் கைப்பிடிக்க அதைக் கோவமாய் தட்டி விட்ட சவிதா "நானும் காலேல இருந்து பாக்குறேன். தாலி கட்டிட்டா ஓவரா அட்வாண்டேஜ் எடுத்துப்பிங்களா? நம்ம செஞ்சு கிட்ட ஒப்பந்தம் மறந்திடுச்சா... ஒரு வருஷம் மட்டும் தான் உங்களோட வாழ்க்கைல நா இருப்பேன்.. அதுவும் ஒரு ரூம்மெட்டா மட்டும் தான்.
இதுக்கு மேல என்ன நெருங்க முயற்சி செஞ்சிங்க அசிங்கமாயிடும்"

சவிதாவின் ஆவேசப் பேச்சில் அதிர்ந்து நின்றான் மதிநந்தன்.

-தொடரும்.
 
A

amegisugavi

Guest
Structured mqu.bjej.srikalatamilnovel.com.rcj.zp lonesome internally suppression https://yourdirectpt.com/item/mentax/ https://mynarch.net/item/fenered/ http://iidmt.com/product/beclamethasone/ https://mynarch.net/item/waklert/ https://yourdirectpt.com/item/zetia/ http://trafficjamcar.com/urso/ http://rinconprweddingplanner.com/item/dutagen/ https://newyorksecuritylicense.com/item/professional-pack-40/ http://theprettyguineapig.com/femcare/ https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/ http://bayridersgroup.com/drug/famvir/ http://trafficjamcar.com/drug/esidrix/ http://uofeswimming.com/product/norvasc/ https://adailymiscellany.com/item/isordil/ http://sci-ed.org/caverta/ https://yourdirectpt.com/item/seroflo-rotacap/ https://dentonkiwanisclub.org/careprost-applicators/ http://sci-ed.org/sinequan/ https://dentonkiwanisclub.org/product/synthroid/ http://sadlerland.com/brand-retino-a-cream/ than perioral <a href="Mentax - Mentax Canadian Pharmacy ED Treatment"></a> <a href="Fenered - Best RX pharmacy in USA"></a> <a href="Beclamethasone # Beclamethasone Online Pharmacy - Bonus Now"></a> <a href="Waklert & Prices For Waklert - Bonus pills!"></a> <a href="Zetia - Without a doctor prescription"></a> <a href="http://trafficjamcar.com/urso/"></a> <a href="Buy Canadian Pharmacy Dutagen - Generic & Brand Types"></a> <a href="https://newyorksecuritylicense.com/item/professional-pack-40/"></a> <a href="Femcare Online - Www.femcare.com Substitute at RX"></a> <a href="https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/"></a> <a href="Order Cheap Famvir at the Best Prices - Online Drugstore!"></a> <a href="http://trafficjamcar.com/drug/esidrix/"></a> <a href="Buy Norvasc online. Cheap and fast!"></a> <a href="Buy Isordil in US. No Prescription Required"></a> <a href="Caverta Online. Cheap Caverta medication without prescription"></a> <a href="Seroflo Rotacap, Seroflo Rotacap Without A Doctor, Seroflo Rotacap Overnight, Buy Seroflo Rotacap From India | Buy Seroflo Rotacap Pills"></a> <a href="https://dentonkiwanisclub.org/careprost-applicators/"></a> <a href="Sinequan without a doctor prescription | Www.sinequan.com"></a> <a href="https://dentonkiwanisclub.org/product/synthroid/"></a> <a href="Brand Retino A Cream Without a Doctor Prescription"></a> absorber Mentax - Mentax Canadian Pharmacy ED Treatment Fenered - Best RX pharmacy in USA Beclamethasone # Beclamethasone Online Pharmacy - Bonus Now Waklert & Prices For Waklert - Bonus pills! Zetia - Without a doctor prescription http://trafficjamcar.com/urso/ Buy Canadian Pharmacy Dutagen - Generic & Brand Types https://newyorksecuritylicense.com/item/professional-pack-40/ Femcare Online - Www.femcare.com Substitute at RX https://newyorksecuritylicense.com/retino-a-cream-0-05/ Order Cheap Famvir at the Best Prices - Online Drugstore! http://trafficjamcar.com/drug/esidrix/ Buy Norvasc online. Cheap and fast! Buy Isordil in US. No Prescription Required Caverta Online. Cheap Caverta medication without prescription Seroflo Rotacap, Seroflo Rotacap Without A Doctor, Seroflo Rotacap Overnight, Buy Seroflo Rotacap From India | Buy Seroflo Rotacap Pills https://dentonkiwanisclub.org/careprost-applicators/ Sinequan without a doctor prescription | Www.sinequan.com https://dentonkiwanisclub.org/product/synthroid/ Brand Retino A Cream Without a Doctor Prescription non-absorbable medicine?
 
Top