All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நர்மதா சுப்ரமணியமின் "காத்திருக்கும் காரிகை" கவிதை தொகுப்புத் திரி

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் மக்களே,

இது என்னுடைய கவிதை தொகுப்பிற்கானத் திரி.

கவிதைத் தொகுப்பின் தலைப்பு: காத்திருக்கும் காரிகை

திருமண வயதுடைய பெண்ணவள்..
தன் திருமணத்திற்காய் காத்திருக்கும் பெண்ணவள்...
பெற்றோர்கள் அவளின் இணையை தேடிக் கொண்டிருக்க,
திருமணம் பற்றிய அவளின் எதிர்பார்ப்புகள்,எண்ணங்கள்...
அவள் மணக்கவிருக்கும் அவளவனை பற்றிய அவளின் கற்பனைகள்..
அவளின் கவிதைப் தொகுப்பே இந்த காத்திருக்கும் காரிகை....


மக்களே, தங்களின் கருத்துக்களை கீழ்க்கண்ட திரியில் பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

நர்மதா சுப்ரமணியமின் கவிதைகள்,சிறுகதைகள் - கருத்துத் திரி

images (18).jpeg

அன்புடன்,
நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #1:

தலைப்பு: என்னவனே

எனக்கே எனக்காய்
எனக்காக பிறந்து
எனக்காக வளர்ந்து
என்னை தேடிக் கொண்டிருக்கும்
என் இனியவனே
காத்துக் கொண்டிருக்கிறேன்
உன் வருகைக்காக
விரைவில் கண்டுபிடிப்பாய்
என்கின்ற நம்பிக்கையில்
இப்படிக்கு
உன் வருங்கால மனைவி


----- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #2:

தலைப்பு: தேடல்

என்னவனை
காணும் நாட்களுக்காய்
தவிக்கும் நேரங்களில்
கட்டளையிடத் தோன்றுகிறது
கால இயந்திரத்திடம்...
காலப்பயணத்தின் மூலம்
என்னை என்
திருமண நாளிற்கு

இட்டுச்செல்லுமென்று....

-- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #3:

தலைப்பு : வேண்டுதல்

என்னவனின் தேடலுக்கு

முற்றுப்புள்ளி வைத்து
என்னை சீக்கிரம்
கண்டுபிடிக்க
அவனுக்கு
அருள்புரியுமாறு
கடவுளிடம் வேண்டியதில்
தொடங்கியது
என்னவனுக்கான
என் முதல் வேண்டுதல்...


--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #4:

தலைப்பு: உன்னைப் போல் ஒருவன்

எனக்கானவனைப் பற்றி

யோசிக்கும் நேரங்களில்
உன்னைப் போல்
ஒருவனைத் தான்
எதிர்ப்பார்க்கிறது நெஞ்சம்....

உன்னைப் போல் எந்த
எதிர்பார்ப்பும் இல்லாமல்
என் மீது அன்பு செலுத்த...

உன்னைப் போல்
எனக்கு அரணாய் இருந்து
என்னைக் காக்க...

உன்னைப் போல்
எனக்காய் மட்டுமே
என்னை நேசிக்க...

உன்னைப் போல்
என்றும் என் மேல்
வெறுப்புணர்வு
வராமலிருக்க....

உன்னைப் போல்
என்றும் என்னை
குழந்தையாய் பாவிக்க...

உன்னைப் போல்
என்றும் அழகானவளாய்
அவன் கண்ணுக்கும்
நான் தோன்ற...

அவனின் ஒரு செயலிலேனும்
உன்னை நான் உணர...

உன்னைப் போல் ஒருவனை
எனக்கானவனாய்
தேர்வு செய்வாயா
என் அன்பான அப்பா......


-- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #5:

தலைப்பு: காதல் மலரும் தருணம்

உன்னை பார்த்த நொடியில்

என் மனம் கவர்வாயோ??

உன் பேச்சால்
என்னை ஈர்ப்பாயோ??

உன் நல்லொழுக்கத்தால்
என் நன்மதிப்பை பெறுவாயோ??

உன் நேசத்தால்
என்னுள் உன் அன்பை
விதைப்பாயோ???

யோசிக்கின்றேன்

எவ்வாறு என்னுள்
காதலை மலர வைப்பாய் என்று...

---நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #6:

தலைப்பு: என்னவருக்காக

பிரசவிக்காதக் குழந்தைக்கு


பெயர் வைப்பதுப்போல்

செல்லப்பெயர்களைத் தேடி

சேமித்து வைக்கிறேன்

என்னை மணக்கும்

என்னவருக்காக...

--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #7:

தலைப்பு: என் நினைவில் உன் நினைவு

நான் கண்மூடி கைகூப்பி கடவுளை

வணங்கிடும் வேளையில்
அருகில் அருவுருவமாய் நீ
என் நினைவில்.....

தொலைதூரப் பயணங்களில்
நான் உன் தோள் சாயந்திட
அருகினில் நீ
என் நினைவில்.....

நான் சமைக்கும் வேளைகளில்
அதை ரசித்து ருசித்து
உண்ணும் நீ
என் நினைவில்....

பேருந்தில் பயணிக்கையில்
உன் விருப்பப் பாடலை
தலையணி ஒலிவாங்கியில்
ஒன்றாய் இணைந்து
ரசிக்கும் நாம்
என் நினைவில்.....

நான் எனக்காய்
உடை வாங்கும் நேரம்
எனக்காய் தேர்வு செய்யும் நீ
என் நினைவில்....

நினைவால் என்னை தொடரும்
அருவுருவத்திற்கு
உயிர் கொடுத்து
என்னுடன் இணைப்பாயா
என் இறைவா!!!!!


-- நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #8:

தலைப்பு: என் மனக்கள்வன்

இனிமையான குழலிசை

காதில் நுழைந்து
மனதை கொள்ளை
கொள்வது போல...

உன் விழி பார்வையில்
என் மீதான உன் நேசம்
என் மனதை முழுவதுமாய்
கொள்ளை கொண்டு....

என்னையறியாமல்
என்னுள் உன் நேசம்
காதலாய் உருமாற
மனம் கவர்ந்த கள்வனாய்
வருவாயா என் வாழ்வில்......

--நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:

narmadha subramaniam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை #9:

தலைப்பு: காத்திருக்கிறேன் உனக்காக

தினமும் என் நெற்றி வகிட்டில்

நான் இடும் குங்குமம்
உன்னை நினைவூட்ட...

என் இடையைக் கட்டிக்கொண்டு
என் மடியில் நீ உறங்கும்
அழகைக் கண்டு நான் ரசிக்க..

உன் மார்பில் சாய்ந்து
அமைதியாக நான் உறங்க..

நான் கேட்கும் அனைத்து
காதல் பாடலின் உருவாய்
உன் வடிவம்
என் கண்முன் தோன்ற...

நான் நீயாய்
நீ நானாய்
நாம் ஒன்றாய்
இணைந்து வாழ

காத்திருக்கிறேன்
என் மணாளனே....

---நர்மதா சுப்ரமணியம்
 
Last edited:
Top