All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நானும் காத்திருக்கிறேன்
உன்னுடனான முதல் சந்திப்பு
அது உணர வைக்கும்
என் நாணத்திற்காக...
உன்னுடனான முதல் உரையாடல்
நம் வாழ்வின் பக்கங்களில்
நினைவுகளாய்
பொதிந்து வைப்பதற்காக...
உன் முதல் ஸ்பரிசம்
அது உணர்த்தும்
இதமான சிலிர்ப்பிற்காக...
உன் முதல் முத்தம்
அது தரும் புது உணர்விற்காக..
உன்னுடனான முதல் ஊடல்
அது தரும் மனவலியை
உன் நேசத்தால் போக்குவதற்காக..
உன்னுடனான முதல் பிரிவு
அது உணர்த்தும்
என் மனயிடுக்கிலிமிருக்கும்
உன் மீதான என் காதலுக்காக...
உன்னுடனான முதல் பயணம்
அது தரும் இதமான
மனநிலையில்
உன்னருகாமையை ரசிப்பதற்காக..
என உன்னுடனான
என் அனைத்து
முதல் நிகழ்வுகளையும்
ரசித்துணர்ந்து வாழ
காத்திருக்கிறேன் கண்ணாளனே!!!!
என் காதல் என்னவனுக்கேயென யாரென்றே தெரியாதவனுக்காய் காதலை சுமந்து காத்து கொண்டிருக்கிறேனே நானும்...
எனில் என்னவன் கடவுளின் அம்சமோ??
இல்லை காணாது காதலில் கசிந்துருகுவதில் நான் தான் அக்கோதையின் வம்சமோ????
தன்னவனான ஈசனை
மணம் புரிய
தவமிருந்தாராமே பார்வதியும்
எனில் என்னவன் சிவனின் அம்சமோ???
இல்லை என்னவனுக்காய் விரமிருந்து தவமிருக்கும்
நான் தான் பார்வதியின் வம்சமோ???
இவை ஏதும் இல்லையெனில்,
ஏன் என்னை ஏங்க வைக்கிறாய்
எனக்கானவனை எண்ணி???
ஏன் என்னை தவிக்க வைக்கிறாய்
என் திருமண நாளை எண்ணி???
எனக்காய் பிறந்த என்னவனை
என்னுடன் இணைத்துவிடு கண்ணா...
இல்லையென்றாலும்
இராமருக்காய் காத்திருந்த சபரியாய்,
மனம் முழுக்க நிறைந்து வழியும்
காதலுடன் காத்திருப்பேன் அவனுக்காகவே...
என் காதல் முழுவதும் என்னவனுக்காகவே...
என்னை மணக்கும் என் மன்னவனுக்காகவே என்று....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.