All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "தேடல் தொடங்கியதே" - கதைத்திரி

மிக்க நன்றி உமா சிஸ் 😍😍😍 ஹா ஹா இந்த கையில குச்சி ரொட்டி இந்த கையில பதில்... எப்டி நம்ப டீல்😉😉😜😜😜
Ha ha sis ippadi sollitingale intha deel nooooo aprm sis iniku my daughter ku birthday so kuchchi mittai ku pathil cake:smiley32: ok u ans me story ok ini karuthu thirila comment pannren
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha sis ippadi sollitingale intha deel nooooo aprm sis iniku my daughter ku birthday so kuchchi mittai ku pathil cake:smiley32: ok u ans me story ok ini karuthu thirila comment pannren
செம்ம sissy குட்டிக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்க 😍😍😍🎊🎊🎊 பதிலா நானே அவங்கள காணும்னுதான் தேடிட்டு இருக்கேன் சிஸ் ☹☹☹😞 கிடச்சாங்கன்னா கண்டிப்பா சொல்லிடறேன் சிஸ் 😉😉😜😜😜😎😎😎
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேடல் இரண்டு:-
11540


யாரோடு யார் இருக்கிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்தும் உணர முடியா இருள் மங்கிய பொழுது… அருகில் நிற்பவர்களே யார் என்று உணர முடியா போது எதிரியின் முகத்திரை காண கிடைப்பது அதிசயமே… ஆனால் எதிரியோ நண்பனாக!!!! யார் யாரை மரிப்பது… பிடிப்பது???

காரிருள் படர்ந்த வானில் உன்னை நோக்கி நான் வருகிறேன் என்பது போல் மேககூட்டங்களை துரத்திக் கொண்டு சென்றாள் மதி!! ஓரிடத்தில் முகிலிடம் இருந்து மறைந்தும் சில இடத்தில் அதன் பின்னே ஒளிந்து அந்த கூட்டத்திற்கு ஆட்டம் காண்பித்தும் கொண்டிருக்க, பூமியில் நம் குழுவோ என்ன செய்து கொண்டிருக்கிறது!!!!

அடுத்த தேடல் முதல் தேடலில் இருந்து பத்து நிமிடம் முடிந்திருந்தது,
மீண்டும் அனைவரும் வெவ்வேறு இடத்தில்… தேடலுக்கான பதிலோ மாற்றான் சொல்லில்!!! என்ன வருமோ?? திக்திக் நிமிடங்கள் சுற்றி நிற்பவர்களுக்கு… நெஞ்சோ படபடவென அடித்துக் கொள்ள,

இந்தமுறை கேள்வி சர்வேஷிடமிருந்து!!!! கள்ளனோ தைரியமாக பதில் அளிக்க, இவர்களுக்கோ சிறிதான பதட்டம்… ஒளிந்திருக்கும் இடத்தில் இருந்து பக்கத்தில் இருப்பவரை நோட்டம் விட்டுக்கொண்டும் கண்கள் அலைபாய்ந்துக் கொண்டும் இருக்க,

இதழுக்கோ அந்த குட்டி மூளையில் பெரிய சந்தேகம்… யாரிடம் கேட்பது என தீவிரமாக யோசித்தவள்
நமக்கு பதில் சொல்ற ஒரே அடிமை தீக்ஷிதான் அவக்கிட்டையே கேட்போம்…

ஸ்க் ஸ்க் ஸ்க்… என்று தன்னை விட்டு சற்று தொலைவிலிருந்தவளை அதிகம் சத்தமிடாமல் அழைக்க,

அவளோ தன் வேலையில் உன்னிப்பாக கவனம் செல்லுத்திக் கொண்டிருந்ததாள் இவளை திருப்பி பார்க்கவில்லை…. ஆனால் இவளுக்கு வலதுபக்கம் நின்றிருந்த விஷ்ணுவோ தன் காதை கூர்மையாக தீட்டி காதின் ஓரம் கைவத்துக் கேட்டவன், தன் பக்கத்தில் நகத்தை கடித்துக் கொண்டு அடுத்து என்ன வரும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தவளை சீண்டி,

ஸ்ரீ எனக்கு ஸ்க் ஸ்க்க்கு என்று கேட்கிறது உனக்கு?? என்று ஏதோ ராணுவ ரகசியம் பேசுவது போல் படத்தில் வரும் அதே நயனத்தில் சுரண்டி கேட்க,

ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் இவனின் கேள்வியில் இன்னும் கடுப்பாகி..

டேய் வாய மூடிட்டு இப்ப மட்டும் நீ நிக்கல… இந்த நகத்துக்கு பதில் உன்னைய கடிச்சி கொதறிடுவேன் பாத்துக்கோ!!! என்று அவள் செய்கை மூலம் பயங்கரமாக செய்து காமிக்க….

விஷ்ணுவோ இந்த இருட்டை விட இவளின் விகார முகத்தை பார்த்து பயபுள்ளை விபூதி அடிக்கும் அளவுக்கு பயந்து பின்னிருந்த மரத்தில் மோதிக் கொண்டான் நெஞ்சில் கைவைத்துக் கொண்டு… ஏற்கனவே இருக்கும் படபடப்பில் இதுவேறு சேர்ந்து கொள்ள அவனின் முகத்தில் முத்துமுத்தாக வேர்வை துளிகள் அரும்ப ஆரம்பித்தது…. பேச்சு அவன் நாபிக்கமலத்தில் இருந்து வெளியேறுவது இனி கடினமே….

இதற்க்கெல்லாம் மூலக்காரணமானவளோ தன்னுடைய சந்தேகத்தை யாரிடமும் கேக்க முடியவில்லையே என்று விரக்தி படும் நேரம்….. அந்த கள்ளனின் குரல் வித்யாசமாக ஒலிக்க!!! சிந்தித்து கொண்டிருந்தவளுக்கோ ஒலியின் ஓசையில் எங்காவது சென்று ஒளிந்துக் கொள்வோமா என்ற அற்ப ஆசை…… அப்ப யாரும் கண்டுபிடிக்க முடியாதுள்ள!!!!!

அவள் மனசாட்சியோ….
அடியே அரைலூசு!!!! தேட போறதே நீதாண்டி….. இதுல ஒளிஞ்சிக்க போறாளாமே… அய்யகோ கடவுளே இவளுக்கெல்லாம் என்ன மனசாட்சியா படைச்சிட்டியே!!!! என்று அது பாட்டுக்கு ஒரு மூலையில் படுத்து புலம்பவே ஆரம்பித்து விட்டது….

இந்த பக்கம் சிலர் இப்படி யோசித்தும் பேசியும் கொண்டிருக்க… இவர்களையெல்லாம் காணாமல் கண்டு நோட்டம் வீட்டுக் கொண்டிருந்த கள்ளனுக்கோ யார் தன்னுடைய இறையென்று கண்டறிந்த சந்தோசம்…

இது ஒரு விசித்திரமான ஆடுகளம்!!!! பதிலே தேடலாக முடியும்… ஒருவனால் தீர்மானிக்கப் படுவது மற்ற அனைவராலும் கண்டெடுக்கப்பட்டாலும், அதில் மகிழ்வது கள்ளனே!!!!!

இத்தனை தந்திரத்தில் இவன் பதில் வெளிபட, நம் குழுவோ ஓடு……. துரத்து…… கண்டுபிடி… என்று மூச்சிரைக்க ஓட ஆரம்பித்தனர்…

ஓட்டம் சஞ்சீவ், முனிதா, தீக்ஷியை உற்சாகப் படுத்தியதென்றால்… ராமனையும் விஷ்ணுவையும் தங்கள் பிரதான குணத்தை மறந்து ஊக்கப்படுத்தியது…. இதழும் ராமனும் விசனப்பட, மற்ற மூவரும் தேடலில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்….

அவரவரின் தேடல் தேடுதலுக்கு உரிய இடத்தில் கிடைக்க… கள்ளனின் இரையான நம் இதழ்!!!! சிறிது யோசித்திருந்தால் கூட அவளிடமே அவள் தேடல் இருக்கிறது என்பதை கண்டறிந்திருப்பாள்…. ஓடும் தருணங்களில் உடல் உழைப்பை பிரதானப்படுத்தியவள், சிந்திப்பதை தூக்கி தூர எரிந்துவிட்டு ஓட…

பின்னாடி கேட்கும் காலடி ஓசையிலே நாம் சீக்கிரத்தில் மாட்டிகொள்ள போகிறோம் என்று தெரிந்தும்….. விடாது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க… இதயம் ஜெட் வேகத்தில் துடிக்க, இல்லாமல் இருக்கின்ற வயிறோ உள்வாங்கி வெளியில்வர சளைக்காமல் ஓடியவள் தன் தேடலை நெருங்கும் தருணம்…. அவள் பின்னிருந்து ஒரு குரல்

இதழ் உனக்கு மேல…. என்று உரக்க கத்தியது

தன்னிடமே இருந்ததையே மறந்தவள்… மாற்றை தேடும் போது மாயனாக வந்து அவள் தேடலை நிறுத்தி பிடிபட வைத்ததை அவள் துரதஷட்ம் என்றுதான் எண்ண வேண்டும்….

கள்ளனுக்கோ எதை நினைத்து மகிழ்வது என்று தெரியவேயில்லை தன் இலக்கு ஒரு முட்டாள் என்று அவன் அறிந்துதான் இவளை தேர்ந்தெடுத்தது… ஆனால் அவளின் இறுதிநேர முயற்சி எங்கே தப்பி விடுவாளோ என கள்ளனுக்குள்ளும் ஒரு பயம்… இருந்தும் துரத்தியவன் கடைசி நிமிட தீகிஷியின் குரல் தனக்கு சாதகமாக மாறியதை நினைத்தவனின் இதழில் அத்தனை ஏளன சிரிப்பு….

இவ்ளோ கஷ்டம் எதுக்கு??? இப்ப பாரு என்கிட்டையே மாட்டிக்கிட்ட!!! என்பது போல்,

இதழுக்கோ கள்ளனிடம் மாட்டியதை விட தீகிஷியின் மேல்தான் சந்தேகம் முளைத்தது இருவரும் கூட்டுகளவாணிகளோ??

அப்படியும் இருக்குமோ????

ஆனால் கள்ளனுக்கா!!!!
அவள் தோழர்களுக்கா!!!!!

தேடல் தொடரும்…..

💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

ஹாய் பிரண்ட்ஸ் 🙏🙏
தேடலுக்கான அடுத்த அத்தியாயம் பதிவு பண்ணிட்டேன்😍😍... ஏதாவது தேடி கண்டுபிடிச்சி இருந்தீங்கன்னா சொல்லிட்டு போங்க😉😉😉 போன அத்தியாயத்துக்கு லைக் மற்றும் கமண்ட் போட்ட எல்லாருக்கும் நன்றி 😍😍😍
உங்கள் அன்பான கருத்துக்களை கருத்து திரியில் பதிவிடுங்கள் தோழமைகளா ப்ளீஸ் 🙂🙂🙂
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Kadaisila ithazh antha கள்ளன் kita maatikitaala... Avalukaaga பதில் ava kitaye இருக்கு but ava அது yosikila... Enna aaga pooguthoo..
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Kadaisila ithazh antha கள்ளன் kita maatikitaala... Avalukaaga பதில் ava kitaye இருக்கு but ava அது yosikila... Enna aaga pooguthoo..
ஹா ஹா நன்றி சித்ராஜி😍😍😍 என்ன ஆகும் 🤔🤔🤔
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவர்கள் எல்லோரும் எதை தேடுகிறார்கள் என்று நாங்கள் தேடுகிறோம் சகோ
😇😇😇😇😇
தேடி சீக்கிரமா கண்டு பிடிங்க சகோ நானும் ஆவலா வைட்டிங் 😍😍😍😉😉
 
Top