All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிந்திக்கா நினைவுகள்…...🌹🌹🌹🌹🌹🌹

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிந்திக்கா நினைவுகள்…...



12549

நட்பு


இமை முடிய நொடி

இதழ் தானாய் விரிகிறது

என் நண்பனின் நிழல்
என் இதயம் வழி

விழி முன் வலம் வருவதால்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.


நட்பு என்னும் மூன்றெழுத்தை

நினைவுகள் என்னும்
ஐந்தெழுத்தில் சேர்த்து வைத்தேன்
விழிகள் காண எண்ணும் நொடி
எண்ணத்தில் இருந்து மீட்டெடுக்க…

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


அழியாத தடயங்ளாய் என்
நெஞ்சில் உன் நினைவுகள்...

மறவாத நினைவுகளாய்
நம் ஒன்றாய் பயணித்த
பொழுதுகள்...

நகராத பொழுதுகளாய்
மறந்து போகா சில ரணங்கள்

ஆற்ற முடியா ரணங்களாய் சில
வலிகளின் வடுக்கள்

வடுக்கள் போக்கும் வரங்களாய்
மனம் மகிழும் மங்காத நினைவுகள்

அனைத்தையும் சுமந்து நடந்த

நம் கல்லூரி காலங்கள்...

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




காலம் மறைத்து வைத்த பொக்கிஷம் உனை

கல்விகரையில் கண்டேன்

பார்த்த நொடி இதழ் மலர்ந்தாய்

கரம் நீட்டி
பற்றி கொள் பயணம் செய்யலாம்
என்றாய்

போகும் வழியில்

பாதுகாத்தாய்

என் பசிக்கு உணவு தந்தாய்

சோகம் கொண்டு சோர்வடைய
தோள் தந்து துவலாதே என்றாய்

சண்டைகள் பல சமாதனம் சில

மன்னிப்பு மறந்து போனது

சேட்டைகள் எல்லை தண்டியது

தண்டனை பகிரப்பட்டது

வாழ்வின் நிதர்சனமுரைக்க

கல்விகரை பிரிந்து சொன்றது

பிரிந்தும் பற்றிய கரத்தை விடமால்
இருக்கிறாய் என்று உணர வைக்கிறாய்


உன் நினைவுகளில் நான் மூழ்கி எழும் போது..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

12550



நித்தமும் பயணிக்கிறேன்
விழிகளின் செந்நீருடன்
தொலைந்து போனா
உன் நினைவுகளில்….

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

ஒரு நொடி மலரும்
என் இதழ்கள்
மறுநொடி வாடுகிறது
என் இதயம் மாறவா
உன் நினைவுகளின்
தாக்கத்தில்…..

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நீ என்னை நீங்கிய நொடி
கனவில் மட்டுமே காதல்
கொண்டேனடா

விழிகள் மூடி காணும்
என் கனவுகளுக்கு கால்கள்
இல்லையடா

ஆதலால் தான் விழிச்சிறையில்
இருந்து வெளியேற தெரியாமல்
என்னை போலவே தவிக்குதடா

நித்தமும் என் நெஞ்சம் சுமக்கும்
உன் நினைவுகள்…

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>.>>>>>>>>>>


ஒரு நொடியேனும் உன் தேன் குரலில்
கரைந்தவன் நானடி
இன்று கண்ணீரில் கரைகிறேனடி

நிலவின்றி நீலவானமும் கடந்து
செல்லும் இனிய இரவை ஆனால்

உன் நினைவின்றி என் இரவுகள்
நகர மறுக்குதடி

நிஜமாய் என்னுள் வந்தாய்
நிரந்தர நிழலாய்
என்னுள் புதைந்து விட்டாயடி

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


12551


காதல்


நினைவுகளும் நிஜங்களும் ஒன்றென
அறிந்தேன்
உன்னை கண்ட கணங்கள் கரையும் நொடி

நிஜங்களை காட்டிலும் நினைவுகள்
சுகமென்று உணர்ந்தேன்

நீ என்னுயிரில் கலந்த நொடி…

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


சிந்தும் மழையை வெறுத்தவன் நான்
சிறு துளியில் சிலிர்கிறேன்

கடலை கானலாய் கண்டவன் நான்
காலம் மறந்து கால்நனைத்திட நினைக்கிறேன்


இருளில் என்ன இதமென கேட்டவன் நான்
இன்று இரவின் இனிமையில் கரைகிறேன்

எல்லாம் உன் நினைவால் மட்டுமே…..



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


12553



கன்றிய காயமும்
கன்னம் சிவக்க வைக்கிறது
என்னவா
அது உன் மெய் தீண்டலின்
நினைவாய் இருப்பதால்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வாடிய மலரை கண்டபோது எல்லாம்
உள்ளம் உவகை கொள்கிறது

என் இதழ்களோ மென் நாண
புன்னகையை சிந்துகிறது

அது என்னவனின் காதல்
நினைவு என்பதால்



>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

இனிய நினைவுகள்
பலதுடன் பயணித்தாலும்
என் இதயம் ஒன்றிய
நினைவு நீயடா...



12552



இன்பமாய் துன்பமாய்
கவலையாய் கனிவாய்
ஊடலாய் கூடலாய்
வலியாய் காதலாய் என

என் வாழ்வின் அனைத்து
நினைவுகளையும் சேர்த்து
வைத்தேன்

தள்ளாடும் வயதில் தலைவன்
கைகோர்த்து

எனக்கே உரித்தான என்னவன்
இதயத்தின் ஓசையை இன்னிசையாய்
கேட்டு கொண்டு

அழகிய காலை மாலை சூரிய சந்திரனை
ரசித்த படி அந்நினைவுகளை உயிர்பித்து
மீண்டும் நினைவால் ஒரு வாழ்க்கை வாழ….

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>




நினைவுகள் கானல் போன்றது எண்ணும் நொடி
முன் தோன்றும் நெருங்கும் நொடி
காற்றில் கரைந்துவிடும்

என் வரிகளில் சில நினைவுகள்…..🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐


படித்து விட்டு பிழை இருப்பின் கூறுவீர் திருத்தி கொள்கிறேன் சகாக்களே...
💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐



இதுவரை என் கவிதை கணைகளை எனக்காய் தாங்கி அழகாய் கருத்து பகிர்ந்த என் சகாக்களுக்கு நன்றி…..🌷🌷🌷🌷🌷🌷


கருத்தை கருத்து திரியில் சொல்லவும்... sisters & FRIENDS
https://srikalatamilnovel.com/community/threads/சாராவின்-எண்ணங்களே-எழுத்துக்களாய்-கருத்துத்-திரி.667/



 
Top