All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நுஹா மர்யமின் "இருளில் கண்ணீரும் எதற்கு?" - கதைத் திரி

Status
Not open for further replies.

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 10
"ஹேய் அர்ச்சனா... உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நேத்து ஆஃபீஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் பிரணவ் சாரும் அந்த அனுவும் மட்டும் ஆஃபீஸ்ல ரொம்ப நேரம் தனியா இருந்து இருக்காங்க டி... நம்ம செக்யூரிட்டி சொன்னார்... என்ன என்ன நடந்து இருக்குமோ ரெண்டு பேருக்கும் இடைல?" என அர்ச்சனாவின் தோழி மீனா கூற, கோபத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா, 'ச்சே... நாம என்ன பண்ணாலும் அது நமக்கு எதிராவே திரும்புதே... விட மாட்டேன்... என்ன நடந்தாலும் பிரணவ் எனக்கு தான்...' என்றாள் மனதில்.

ஏதோ நினைத்தவளாக கோப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு பிரணவ்வின் அறைக் கதவை அனுமதி வேண்டி தட்ட, "கம் இன்..." என‌ உள்ளிருந்து பிரணவ்வின் குரல் கேட்கவும் அறைக் கதவைத் திறந்து கொண்டு ஒயிலாக நடந்து சென்றாள்.

பிரணவ் கணினியில் பார்வையை பதித்தவாறே, "சொல்லுங்க என்ன விஷயம்?" என்க, "இந்த ஃபைல்ல நீங்க ஒரு சைன் பண்ணணும் சார்..." என்ற அர்ச்சனா பிரணவ்வின் இடப்பக்கம் வந்து அவனுக்கு மிக நெருக்கமாக குனிந்தவாறு கூறினாள்.

தூரத்தில் இருந்து பார்க்கும் ஒருவருக்கு அர்ச்சனா பிரணவ்வின் மீது சாய்ந்து இருப்பது போல் தோன்றும்.

ஆத்திரத்தில் பல்லைக் கடித்த பிரணவ் கோபமாக தன் இருக்கையில் இருந்து எழுந்துகொள்ள, அதனை எதிர்ப்பார்க்காத அர்ச்சனா ஒரு நிமிடம் தடுமாறி பின் சரியாக நின்று கொண்டாள்.

அர்ச்சனாவை அழுத்தமாகப் பார்த்த பிரணவ், "என்ன வேணும் உனக்கு?" என்க, "சார்... நான்... சைன்..." என வார்த்தை வராது தடுமாறினாள் அர்ச்சனா.

அவளை நெருங்கி அவளின் தாடையை அழுத்தமாகப் பற்றிய பிரணவ், "நான் யாருன்னு சரியா தெரியாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்க நீ... நான் யாருன்னு தெரிஞ்சா பின்னாடி ரொம்ப வருத்தப்படுவ... உனக்கு இந்த வேலைல நிரந்தரமா இருக்கணும்னா என் கிட்ட இருந்து தள்ளியே இரு... அதை விட்டுட்டு சீப்பா பிஹேவ் பண்ண நினைச்சன்னா உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்... மைன்ட் இட்..." என மிரட்டிவிட்டு, "கெட் லாஸ்ட்..." எனக் கத்தினான்.

அர்ச்சனா அங்கிருந்து செல்லப் பார்க்க, "வன் மினிட்..." என்ற பிரணவ் ப்ளாஸ்கில் இருந்த கொதிநீரை ஒரு குவளையில் ஊற்றி, "இதை எடுங்க..." என்றான் அர்ச்சனாவிடம்.

அர்ச்சனாவும் ஏன் என்று புரியாமல் அதனைக் கையில் எடுக்க, குவளையுடன் சேர்த்து அர்ச்சனாவின் கரத்தை இறுக்கப் பற்றினான் பிரணவ்.

"ஸ்ஸ்ஸ் ஆ..." என அதன் சூடு தாங்காது அர்ச்சனா கத்த, பிரணவ்வின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம்.

"ஸ்ஸ்ஸ்... வலிக்கிது சார்..." என அர்ச்சனா முணங்க, "இது ஃபைல்ஸை மாத்தி வெச்சதுக்கு..." என பிரணவ் கூறவும், 'இவருக்கு எப்படி தெரிஞ்சது?' என அர்ச்சனா அதிர்ச்சி ஆக, "எனக்கு எப்படி தெரியும்னு பார்க்குறீங்களா? இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க மிஸ் அர்ச்சனா?' என மறு கரத்தால் சிசீடீவியை காட்டினான்.

ஏளனமாக நகைத்த பிரணவ் தன் பிடியில் அழுத்தத்தைக் கூட்டவும், "ஆ..." என அர்ச்சனா வலியில் அலற, பிரணவ்வின் மனது குளிர்ந்தது.

பட்டென பிரணவ் அர்ச்சனாவின் கரத்தை விடவும் கொதிநீர்க் குவளை அர்ச்சனாவின் காலில் விழுந்து அவளின் கால் வெந்து புண்ணானது.

வலியில் அர்ச்சனாவின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க, காலைப் பற்றியபடி கீழே அமர்ந்தாள்.

அர்ச்சனாவின் கை, கால் இரண்டுமே வெந்து புண்ணாகி இருக்க, காயம் தந்த வலியை விட அனுபல்லவியின் மீதிருந்த வன்மம் அதிகமாகிக்கொண்டே சென்றது.

அவளின் முகத்துக்கு நேராக குனிந்த பிரணவ், "இது ஜஸ்ட் டெமோ தான்... திரும்ப இப்படி ஏதாவது பண்ணா விளைவு இதை விட கொடூரமா இருக்கும்..." என்றான் பிரணவ் கண்களில் வெறியுடன்.

ஆகாஷிற்கு அழைத்த பிரணவ் அவன் அழைப்பை ஏற்கவும், "இங்க என் கேபின்ல ஒரு பேஷன்ட் இருக்காங்க... வந்து ஹாஸ்பிடல் கூட்டிட்டு போங்க..." என உத்தரவு இட்டு விட்டு அழைப்பைத் துண்டிக்க, கண்களில் கண்ணீருடன் அவனை முறைத்துப் பார்த்தாள் அர்ச்சனா.

தன் இருக்கையில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்ட பிரணவ், "மிஸ் அர்ச்சனா... இந்த பிரணவ்வை பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? என்னைப் பத்தி உங்களுக்கு சரியா தெரியலன்னு நினைக்கிறேன்... அவ்வளவு சீக்கிரமா யாராலயும் இந்த பிரணவ்வை வளைச்சி போட முடியாது..." என்றான் திமிருடன்.

சற்று நேரத்தில் அங்கு வந்த ஆகாஷ் தரையில் காலைப் பிடித்தபடி அமர்ந்திருந்த அர்ச்சனாவைக் கண்டு முதலில் அதிர்ந்தவன் பிரணவ்வைத் திரும்பிப் பார்க்க, அவன் இருந்த தோற்றமே என்ன நடந்து இருக்கும் என்று ஆகாஷிற்கு கூறியது.

இவ்வளவு நாட்களாக பிரணவ்வுடன் இருக்கிறான். அவனுக்கு தெரியாததா தன் பாஸ் யாருடன் எப்படி நடந்துகொள்வார் என்று.

பிரணவ், "ஆகாஷ்... மிஸ் அர்ச்சனாவை பார்த்து பத்திரமா ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் நல்ல டாக்டரா காட்டி மெடிசின்ஸ் வாங்கி கொடுங்க... அப்போ தான் சீக்கிரமே குணம் ஆகுவாங்க..." என இருபொருள் பட நக்கல் குரலில் கூறவும் வாயை மூடி சிரித்த ஆகாஷ் அர்ச்சனா பார்த்த பார்வையில் கப்சிப் என வாயை மூடிக்கொண்டு, "வாங்க மேடம்... நான் உங்களை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன்..." என அர்ச்சனாவிற்கு எழுந்துகொள்ள கை கொடுத்தான்.

ஆனால் அர்ச்சனாவோ ஆகாஷின் கரத்தைத் தட்டி விட்டு தானே எழுந்துகொள்ள முயல, திடீரென, "ஆ..." என வலியில் கத்திக்கொண்டு மீண்டும் கீழே விழுந்தாள்.

கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய ஆகாஷ், "அதான் சொல்றேன்ல மேடம்... வாங்க..." என அர்ச்சனாவின் தோளைப் பிடித்து எழ வைத்து அழைத்துச் சென்றான்.

************************************

ஆஃபீஸில் லீவ் போட்டு விட்டு அவர்கள் தங்கியிருந்த அபார்ட்மெண்ட்டிற்கு சென்ற அனுபல்லவி கண்ணாடி முன் நின்று தன் விம்பத்தையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

தன் கரங்கள் இரண்டையும் முகத்தின் முன் கொண்டு வந்தவளுக்கு பிரணவ் பிடித்த இடம் இன்னுமே குறுகுறுப்பது போல் ஒரு உணர்வு.

கன்னங்கள் இரண்டும் வெட்கச் சதுப்பை பூசிக்கொள்ள, அனுபல்லவியின் மனசாட்சியோ, 'அடக் கூறு கெட்டவளே... கொஞ்சம் கூட இந்த சூடு, சுரணை எதுவுமே இல்லயா உனக்கு? பத்து பேர் சேர்ந்து பண்ண வேண்டிய வேலையை ஒத்த ஆளா உன்ன பண்ண வெச்சி, உன் கை எல்லாம் புண்ணாக்கி வெச்சிருக்கான் அந்த பிரணவ்... நீ என்னன்னா அவனை நினைச்சி பல்லைக் காட்டிட்டு இருக்க...' எனக் காரித் துப்பியது.

அனுபல்லவி, "அட ச்சே... அனு... வர வர நீ போற ரூட் கொஞ்சம் கூட சரி இல்ல... சரியா பார்த்தா நீ அவர் மேல கோவப்படணும்..." எனத் தலையில் அடித்தபடி தன்னையே திட்டிக் கொண்டவள், "ஆ... வலிக்கிதே... ரொம்பத் தான் கொடுமை பண்ணுறார்..." என வலியில் முகம் சுருக்கினாள்.

"பனை மரத்துக்கு பாதி வளர்ந்து இருக்கான்... என்னை குட்டச்சின்னு சொல்றான்... இடியட்... ஹவ் டேர் ஹீ... பிரணவ் சாருக்கு பீ.ஏ. னா கொழுப்பு கூடிடுமா? நாளைக்கு இருக்கு அவனுக்கு..." எனக் கத்திக்கொண்டே பாதணிகளை ஒவ்வொரு மூலைக்கும் தூக்கி வீசியபடி வந்த தோழியைப் புரியாமல் பார்த்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "என்னாச்சு சாரு? ஏன் இவ்வளவு கோவமா இருக்க? யாரைத் திட்டுற?" எனக் கேட்க, "எல்லாம் அந்த நெட்டக் கொக்கு ஆகாஷை தான்... சச் அ இரிட்டேட்டிங் பர்சன்..." எனப் பல்லைக் கடித்தாள் சாருமதி.

"ஆகாஷ்?" என யோசித்த அனுபல்லவி, "ஓஹ்... பிரணவ் சாரோட பீ.ஏ. வா? அவர் என்ன பண்ணார்?" என்க, "என்ன தான் பண்ணல? ரொம்ப கடுப்படிக்குறான் டி அனு..‌. இன்னைக்கு நீ வேற ஹாஃப் டேல போய்ட்ட... செம்மயா போர் அடிச்சிச்சேன்னு ஏதாவது சாப்பிடலாம்னு கஃபடேரியா போய் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட்டேன்... எங்க இருந்து தான் அந்த மலக் குரங்கு வந்துச்சுன்னு தெரியல... சடன்னா வந்து என் கைல இருந்த ஐஸ் கிரீமை பிடுங்கி சாப்பிடுறான்... அதுக்கப்புறமாவது சும்மா இருந்தானா?" என சாருமதி ஆகாஷை அர்ச்சிக்க, ஏதோ கதை கேட்பது போல் கன்னத்தில் கை வைத்து சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்தாள் அனுபல்லவி.

அனுபல்லவி, "அப்புறம் என்ன டி பண்ணினார்?" என ஆர்வமாகக் கேட்க, "அந்தக் கொடுமையை ஏன் டி கேட்குற?" எனச் சோகமாகக் கூறிய சாருமதி மாலை ஆஃபீஸில் நடந்தவற்றை கூறினாள்.

************************************

கஃபடேரியாவில் ஐஸ் கிரீம் வாங்கிக்கொண்டு யாரும் இல்லாத ஒரு மூலையில் போய் அமர்ந்து கொண்ட சாருமதி சுற்றியும் வேடிக்கை பார்த்தபடி ஐஸ் கிரீமை சாப்பிட, திடீரென அங்கு வந்து சாருமதியின் அருகில் அமர்ந்த ஆகாஷ் அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ் கிரீமை தன் பக்கம் இழுத்து சாப்பிட தொடங்கினான்.

கோபத்தில் பல்லைக் கடித்த சாருமதி, "மலக் குரங்கே... ஐஸ் கிரீம் வேணும்னா வாங்கி சாப்பிட வேண்டியது தானே... எதுக்குடா என்னோடதை பறிச்சு சாப்பிடுற?" என்க, "இதைப் போல டேஸ்ட்டான ஐஸ் கிரீம் வேற இல்லயாம் குட்டச்சி..." என்றான் ஆகாஷ் கூலாக.

"அதுக்காக? என்னோடதை பறிச்சி சாப்பிடுவியா நீ? கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லயா?" எனச் சாருமதி ஆவேசமாகக் கேட்கவும் அவளைப் பார்த்து புன்னகைத்த ஆகாஷ், "உன் கிட்ட எனக்கு என்ன டி மேனர்ஸ் பார்க்க வேண்டி இருக்கு குட்டச்சி?" என்கவும் சாருமதியின் பற்கள் அரைபடும் ஓசை அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

சாருமதி எண்ணெய்யில் இட்ட கடுகாய் வெடிக்கத் தயாராக, அதற்கு மேலும் தூபம் போடுவது போல், "அது மட்டும் இல்ல குட்டச்சி... ஆல்ரெடி நீ குட்டி அண்டா சைஸ்ல இருக்க... இதுக்கு மேலயும் ஐஸ் கிரீம் சாப்பிட்டா அண்டா சைஸ்ல இருக்குற நீ பீப்பா சைஸ் ஆகிடுவ... அப்புறம் உன் ஃபியூச்சர் ஹப்பி எப்படி உன்ன தூக்க முடியும் குட்டச்சி?" எனக் ஆகாஷ் ஐஸ் கிரீமை வாயில் போட்டு சுவைத்தபடி கூற, "அதைப் பத்தி உனக்கு என்னடா கவலை பனை மரம்? என் ஃபியூச்சர் ஹப்பிக்கு நான் எப்படி இருந்தாலும் பிடிக்கும்..." என்றாள் சாருமதி கண்கள் மின்ன.

ஆகாஷ், "ஹ்ம்ம்... அது என்னவோ கரெக்ட் தான் குட்டச்சி... அதனால தான் நான் ஃபீல் பண்றேன் குட்டச்சி... பிகாஸ் ஃபியூச்சர்ல நான் தானே உன்ன லைஃப் லாங் சுமக்க போறேன் மை டியர் ஃபியூச்சர் வைஃபீ..." எனப் பளீர் புன்னகையுடன் சாருமதியின் தலையில் ஒரு மினி அணுகுண்டை இறக்கவும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தவள் கண்கள் வெளியே தெரித்து விடும் அளவுக்கு விரித்தாள்.

உதடு மடித்துப் புன்னகைத்தபடி சாருமதியின் அதிர்ந்த முகத்தை ரசித்த ஆகாஷ் அவள் தன்னிலை மீளும் முன்னே சாருமதியின் உதட்டோரம் ஒட்டி இருந்த ஐஸ் கிரீமை முத்தமிட்டு தன் உதட்டுக்கு மாற்றிக்கொண்டு, "வரேன் குட்டச்சி பேபி..." என்று விட்டு சென்றான்.

அவன் சென்று பல நிமிடங்கள் கடந்த பின்னும் இன்னும் அதே நிலையில் இருந்தவளை ஏதோ கீழே விழும் சத்தம் மீட்டெடுத்தது.

அவசரமாக தலையை உலுக்கிக் கொண்ட சாருமதி, 'இப்போ நடந்தது எல்லாம் கனவா?' என யோசிக்க, அவளின் உதட்டின் ஓரம் எஞ்சி இருந்த ஆகாஷின் முத்தத்தின் ஈரம் நடந்தவை அனைத்தும் நிஜம் என எடுத்துரைக்க, "ஆகாஷ்..." எனக் கோபத்தில் பல்லைக் கடித்தாள் சாருமதி.

************************************

சாருமதி மாலை ஆஃபீஸில் நடந்தவற்றை சோகமாகக் கூறி முடிக்கவும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள் அனுபல்லவி.

"நான் எவ்வளவு ஃபீலிங்கா சொல்லிட்டு இருக்கேன்... நீ பாட்டுக்கு சிரிக்கிற..." என சாருமதி கோபப்பட, "ஹஹஹா... இப்படி கூட யாராவது ப்ரபோஸ் பண்ணுவாங்களா சாரு? இதுல கிஸ் வேற..." என மீண்டும் சிரித்தாள் அனுபல்லவி.

அதில் உதட்டைப் பிதுக்கிய சாருமதி ஆகாஷ் முத்தமிட்ட இடத்தை அழுந்தத் தேய்க்க, தோழியின் நிலையை எண்ணி கடினப்பட்டு தன் சிரிப்பை அடக்கிய அனுபல்லவி சாருமதியின் தோளில் கை போட்டு, "சாரு... எதுக்கு இப்போ நீ ஃபீல் பண்ற? ஆகாஷ் உனக்கு ப்ரபோஸ் பண்ணதனாலயா?" எனக் கேட்கவும், "அவன் எப்படி பப்ளிக்ல எல்லார் முன்னாடியும் அப்படி கிஸ் பண்ணலாம்?" என்றாள் சாருமதி பட்டென்று கோபமாக.

அனுபல்லவி, "ஓஹ்... அப்போ அவர் உனக்கு ப்ரபோஸ் பண்ணினது உனக்கு பிரச்சினை இல்ல... கிஸ் பண்ணினது கூட பிரச்சினை இல்ல... அப்படி எல்லார் முன்னாடியும் கிஸ் பண்ணது தான் பிரச்சினை... அப்படி தானே..." என ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திக் கேட்கவும், "ஆஹ்... அது... அது..." எனத் தடுமாறினாள் சாருமதி.

"எது எதுமா?" என அனுபல்லவி கேலியாகக் கேட்கவும் சுதாகரித்த சாருமதி, "அது எப்படி நேத்து தான் சரியாப் பார்த்து பேசினோம்... இல்ல இல்ல சண்டை போட்டோம்... அதுக்குள்ள எப்படி லவ்? அந்த நெட்டக் கொக்குக்கு வேற வேலை இல்ல... சும்மா என்னைக் குழப்புறான்... நாளைக்கு இருக்கு அவனுக்கு... பிரணவ் சாரோட பீ.ஏ.னா என்ன வேணாலும் பண்ணுவாரா?" எனக் கோபமாகக் கேட்டவள் அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சாருமதி சென்ற திக்கைப் பார்த்து புன்னகைத்த அனுபல்லவி, "ஹ்ம்ம்ம்ம்... நமக்கெல்லாம் எப்போ தான் இந்த லவ் எல்லாம் செட் ஆக போகுதோ?" எனப் பெருமூச்சு விடவும் பிரணவ்வின் முகம் அவள் கண் முன் வந்து போக, அவசரமாக தலையை உலுக்கி தன்னை சமன் செய்து கொண்டாள்.

************************************

"டேய் பிரதாப்... அர்த்த ராத்திரியில எல்லாம் பேக் பண்ணிட்டு எங்க கிளம்பிட்டு இருக்க நீ?" என அவனின் தந்தை கேட்க, "அதைத் தான்ங்க நானும் இம்புட்டு நேரமா கேட்டுட்டு இருக்கேன்... பதில் சொல்லாம அவன் பாட்டுக்கு எல்லாத்தையும் எடுத்து வைக்கிறான்..." என அவனின் தாய் சலிப்பாகக் கூறினார்.

ஆனால் பிரதாப் என்பவனோ தனக்கு வேண்டியவை எல்லாம் எடுத்து பையில் வைத்தவன், "அம்மா... அப்பா... நான் போய்ட்டு வரேன்... அந்த ஓடுகாலி அனு எங்க இருக்கான்னு தெரிஞ்சிடுச்சி... இந்தத் தடவை அவளால என் கிட்ட இருந்து தப்பிக்க முடியாது..." என்கவும் அவனின் தாய், தந்தை இருவரின் முகத்திலும் அப்படி ஒரு வன்மமான பாவனை.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 11
விடிந்தும் விடியாததுமாய் இருக்கும் அதிகாலைப் பொழுதில் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் கையில் பையுடன் வந்து நின்ற நண்பனைக் கேள்வியாய் நோக்கினான் கார்த்திக்.

கார்த்திக், "டேய் பிரதாப்? என்னடா இது? நீ வரதா சொல்லவே இல்ல?" எனக் கேட்க, "ப்ச்... சொல்லிட்டு வரலன்னா வீட்டுக்குள்ள எடுக்க மாட்டியா? ச்சீ தள்ளு..." எனக் கடுப்புடன் கூறிய பிரதாப் வாசலில் நின்ற கார்த்திக்கைத் தள்ளிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்றான்.

'என்ன நடக்குது இங்க? இது என் வீடா? இல்ல அவன் வீடா?' என மனதினுள் தன்னையே கேட்டுக்கொண்ட கார்த்திக் பிரதாப்பின், "டேய் நாயே..." என்ற கத்தலில் தோளைக் குலுக்கிக் கொண்டு அவசரமாக உள்ளே ஓடினான்.

சமையலறையில் காஃபி தயாரித்துக் கொண்டிருந்த பிரதாப்பிடம் சென்ற கார்த்திக், "என்ன விஷயமா பெங்களூர் வந்து இருக்கடா?" எனக் கேட்கவும், "முக்கியமான ஒருத்தரை தேடி வந்திருக்கேன்... என் லைஃப்ல ரொம்....ப முக்கியமான ஒருத்தர்..." என ரொம்ப என்பதில் அழுத்தம் கொடுத்து கூறிய பிரதாப்பின் கண்களில் இருந்த வெறியை நல்ல நேரம் கார்த்திக் கவனிக்கவில்லை.

கார்த்திக், "ஓஹ்... ஃபிகரா மச்சி? நீ நடத்து ராசா... பட் ஜாக்கிரதை பிரதாப்... சென்னை போல இல்லடா பெங்களூர்... அவ்வளவு தான் என்னால சொல்ல முடியும்..." என்கவும் பிரதாப் காஃபியை ஒரு மிடர் பருகியபடி சரி எனத் தலையசைத்தான்.

"சரிடா... அப்போ நான் ஆஃபீஸ் கிளம்ப ரெடி ஆகுறேன்... ஏதாவது தேவைன்னா கால் பண்ணு... நான் வர ஈவ்னிங் ஆகும்..." என்று விட்டு கார்த்திக் கிளம்பி விட,

'அனு... வந்துட்டேன் டி... இந்த தடவை உன்னால என் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது...' என்று விஷமமாக புன்னகைத்தான் பிரதாப்.

************************************

"அனு... என்ன பண்ணுற? ஆஃபீஸ் கிளம்பலயா?" என்ற சாருமதியின் கேள்விக்கு கட்டிலில் குப்புப்படுத்தவாறே மறுப்பாகத் தலையசைத்தாள் அனுபல்லவி.

அவளின் அருகில் சென்று ஆறுதலாக தோள் மீது கை வைத்த சாருமதி, "அனு... எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்க போற? நீ பெங்களூர் வந்து மூணு வருஷம் ஆச்சு... ஒவ்வொரு வருஷமும் இந்த நாள்ல நீ இப்படி தான் இடிஞ்சி போய் சோகமா இருக்க... அப்படி என்ன தான் நடந்துச்சின்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற... பெஸ்ட் ஃப்ரெண்ட்னு பேச்சுக்கு தான் சொல்ற... ஆனா எனக்கு உன்ன பத்தி எதுவுமே தெரியல..." எனக் கோபமும் வருத்தமும் கலந்து உரைக்கவும் எழுந்த அனுபல்லவி சாருமதியைப் பக்கவாட்டில் அணைத்துக் கொண்டவள், "சாரு... நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு என்னை விட உனக்கு நல்லா தெரியும்..." என்றாள் கண்கள் கலங்க.

"ஹ்ம்ம் ஹ்ம்ம்... தெரியும் தெரியும்... அதனால தான் உன்ன எதுவும் கேட்காம இருக்கேன்..." என்றாள் சாருமதி போலிக் கோபத்துடன்.

அனுபல்லவி, "தேங்க்ஸ் டி... சரியான நேரம் வரும் போது நான் உன் கிட்ட எல்லா உண்மையையும் சொல்றேன்... அதுவரைக்கும் ப்ளீஸ் இதை பத்தி என் கிட்ட எதுவும் கேட்காதே சாரு..." என்றவள் சாருமதி சரி எனத் தலையசைக்கவும், "சாரு... என்னை பத்தி எல்லா உண்மையையும் தெரிஞ்சதுக்கு அப்புறம் நீ என்னை வெறுத்துட மாட்டேல்ல..." எனக் கண்ணீருடன் கேட்க, "லூசு அனு... நான் எப்படி உன்ன வெறுப்பேன்... உன்ன பத்தி எனக்கு தெரியாதா? நீ என்ன பண்ணினாலும் அதுக்கு ஒரு வேலிட் ரீசன் இருக்கும்னு நான் நம்புறேன்..." எனச் சாருமதி கூறவும் அவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் அனுபல்லவி.

சற்று நேரத்தில் அனுபல்லவி அழுது அழுதே உறங்கிப் போக, சாருமதி மாத்திரம் ஆஃபீஸ் கிளம்பினாள்.

நேற்றில் இருந்தே அனுபல்லவியைக் காணாதது பிரணவ்விற்கு ஏதோ போல் இருந்தது.

சீசிடீவி கேமரா வழியாக தன் கணினியில் அடிக்கடி அனுபல்லவி வழமையாக அமரும் இடத்தையே பார்த்தபடி இருந்தான்.

'ஏன் பல்லவி இன்னைக்கு வரல?' என யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் அவனது மெயிலுக்கு அனுபல்லவியின் விடுமுறைக் கடிதம் வந்தது.

ஏதோ சுகவீனம் என்று கூறி இன்று மாத்திரம் விடுமுறைக் கேட்டிருக்க, அதனை ஆமோதித்து பதில் அனுப்பிய பிரணவ்விற்கு தன்னால் தானோ அவள் சுகவீனமுற்றாள் எனக் குற்றவுணர்வாக இருந்தது.

அனுபல்லவியைப் பற்றி பிரணவ் யோசிக்கும் போதே அவனைக் காப்பாற்றிய அந்த முகம் அறியாப் பெண்ணின் நினைவும் சேர்ந்து வந்து விட, தலைவலி வந்தது தான் மிச்சம்.

சரியாக ஆகாஷ் அங்கு வரவும் தலையில் கை வைத்து அமர்ந்து இருந்தவனைக் கண்டு பதறி, "என்னாச்சு பாஸ்? திரும்ப தலைவலியா? ஹாஸ்பிடல் போகலாமா?" எனக் கேட்டான்.

மறுப்பாகத் தலையசைத்த பிரணவ், "எனக்கு ஒன்னுமில்ல ஆகாஷ்... டோன்ட் வொரி... எனக்கு ஒரு இன்ஃபர்மேஷன் தெரியணும் ஆகாஷ்..." என்க, "சொல்லுங்க பாஸ்... எதைப் பத்தி இன்ஃபார்மேஷன் வேணும் உங்களுக்கு?" எனக் கேட்டான் ஆகாஷ்.

சில நொடி அமைதி காத்த பிரணவ், "அன்னைக்கு எனக்கு ஆக்சிடன்ட் ஆனப்போ ஒரு பொண்ணு தான் என்னைக் காப்பாத்தி ஹாஸ்பிடல்ல சேர்த்துச்சு... அந்தப் பொண்ணைப் பத்தி தெரியணும்..." என்க, 'பொண்ணா? இவர் எதுக்கு அந்தப் பொண்ணைப் பத்தி கேட்குறார்?' என யோசித்த ஆகாஷ் அதனை மறைக்காமல் பிரணவ்விடமே கேட்டு விட்டான்.

ஆகாஷ், "எதுக்கு பாஸ் அந்தப் பொண்ணைப் பத்தி தெரிஞ்சிக்க நினைக்கிறீங்க?" எனக் கேட்கவும், "ஜஸ்ட் தேங்க்ஸ் சொல்ல தான்... எனக்கு மறு வாழ்வு கொடுத்து இருக்கா அந்தப் பொண்ணு... அவளுக்கு ஏதாவது என்னால உதவி பண்ண முடிஞ்சா பண்ண தான்..." என்றான் பிரணவ்.

"ஓஹ்... உதவி... ஹ்ம்ம்ம்ம்..." எனக் கேலி இழையோடிய குரலில் ஆகாஷ் இழுக்கவும், "என்ன?" என பிரணவ் பார்த்த அழுத்தப் பார்வையில், "ஓக்கே பாஸ்... ஓக்கே பாஸ்... நான் உடனே விசாரிச்சு சொல்றேன்..." என்று விட்டு கிளம்பப் பார்த்த ஆகாஷ் மீண்டும் நின்று, "ஆமா... எப்படி பாஸ் உங்களைக் காப்பாத்தினது ஒரு பொண்ணு தான்னு கன்ஃபார்மா சொல்றீங்க? டாக்டர்ஸ் கூட உங்களை ஹாஸ்பிடல் கொண்டு வரப்போ நீங்க சுயநினைவு இல்லாம இருந்ததா சொன்னாங்களே..." என ஆர்வம் மிகுதியில் கேட்டு விட்டு நாக்கைக் கடித்தான் பிரணவ் என்ன சொல்லுவானோ என்ற பயத்தில்.

நெஞ்சுக்கு குறுக்காக கரங்களைக் கட்டிக்கொண்டு ஆகாஷை அழுத்தமாகப் பார்த்த பிரணவ், "ஆகாஷ்... நீங்க இப்போ நான் சொன்ன வேலையை செய்ய போறீங்களா? இல்ல இங்க நின்னு என்னை என்கொய்ரி பண்ண போறீங்களா?" எனக் கேட்டான்.

"இதோ போய்ட்டேன் பாஸ்..." என்று விட்டு தப்பித்தால் போதும் என அங்கிருந்து ஓடிய ஆகாஷ் சாருமதியின் மேல் மோதி நிற்க, "இடியட்... உனக்கு இதே வேலையா போச்சா? எப்பப்பாரு என்னையே வந்து இடிச்சிட்டு இருக்க... உனக்கு வேற ஆளே கிடைக்கலயா? சரியா இரிட்டேட் பண்றான்..." எனக் கோபத்தில் கத்தியபடி கீழே விழுந்த தன் கைப்பையை எடுக்கக் குனிய, அவளுக்கு முன்பே குனிந்து அந்தக் கைப்பையை எடுத்த ஆகாஷ் சாருமதியின் கரத்தில் கைப்பையைத் திணித்து விட்டு, "ஏய் குட்டச்சி... என்ன வாய் ரொம்ப நீளுது? எனக்கு வேற வேலை இல்லாம தான் பாரு நான் வந்து உன்னை இடிக்கிறேன்... ஏதோ ரெண்டு தடவை தெரியாம உன் மேல வந்து மோதிட்டேன்னு ரொம்ப தான் பேசுற... நாம மேடமுக்கு இரிட்டேட்டிங்காமே... ஏதோ லவ் பண்ற பொண்ணாச்சேன்னு அமைதியா போறேன்... வந்துட்டா மனுஷனுக்கு கடுப்பைக் கிளப்பிக்கிட்டு..." என சாருமதியை விட கோபமாகக் கத்தி விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

முதன் முறையான ஆகாஷின் கோபத்தில் ஒரு நிமிடம் கண் கலங்கி நின்ற சாருமதி, "அவன் கோவமா பேசினா எனக்கென்ன வந்தது? நான் எதுக்கு ஃபீல் பண்ணணும்? நான் என்ன அந்த பனை மரத்த லவ் பண்றேனா? இல்லயே... அவன் எப்படி இருந்தா எனக்கென்ன? காலையிலயே மூட ஸ்பாய்ல் பண்ணிட்டான்... திரும்ப வந்தா இருக்கு அவனுக்கு..." எனத் தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு தன் பணியினைப் பார்க்கக் கிளம்பினாள்.

************************************

"அர்ச்சு... என்னாச்சு உனக்கு? எப்படி இவ்வளவு பெரிய காயம்? அவ்வளவு கேர்லெஸ்ஸா இருப்பியா நீ? ஆஃபீஸ் போனப்போ மீனா தான் உனக்கு நடந்ததை சொன்னா... உடனே கிளம்பி உன்னப் பார்க்க வந்துட்டேன்..." என நல்ல நண்பனாக கார்த்திக் கடிந்துகொள்ள, "நிறுத்து கார்த்திக்... எனக்கு அட்வைஸ் பண்ண தான் நீ இப்போ இங்க வந்தியா? ஆல்ரெடி செம்ம காண்டுல இருக்கேன்... வந்துட்டான் கேள்வி கேட்டுட்டு..." என்றாள் அர்ச்சனா சலிப்பாக.

அர்ச்சனா, கார்த்திக் இருவருக்குமே பெற்றோர் குடும்பம் என யாரும் இல்லை. ஒரே ஆசிரமத்திலேயே இருவரும் வளர்ந்தனர். சிறு வயதில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள். தொடர்ந்து கல்லூரி, ஆஃபீஸ் என அந் நட்பு தொடர, இன்று திடீரென அர்ச்சனா தன்னை எடுத்தெறிந்து பேசவும் மனம் வாடிய கார்த்திக் அதனைத் தன் தோழியிடம் காட்டிக் கொள்ளவில்லை.

அர்ச்சனா, "காஃபி போடும் போது கெட்டில் சூடா இருக்குறதை கவனிக்காம எடுத்து கால்ல ஊத்திக்கிட்டேன்... அவ்வளவு தான்... சரி அதை விடு... கார்த்திக்... அந்த அனுவுக்கும் ப்ராஜெக்ட் மேனேஜருக்கும் இடைல என்ன இருக்கு?" என நேராக விஷயத்திற்கு வர, "அவளைப் புரியாமல் பார்த்த கார்த்திக், "நீ என்ன கேட்குறன்னு புரியல அர்ச்சு... என்ன இருக்குன்னா என்ன அர்த்தம்? நீ ஏன் அதைப் பத்தி கேட்குற?" எனக் கேட்டான்.

"ப்ச்... என்ன நீ வந்ததுல இருந்து கேள்வியே கேட்டுட்டு இருக்க கார்த்திக்? நான் ஒரு கேள்வி கேட்டா அதுக்கு டைரெக்டா பதில் சொல்ல முடியாதா உன்னால? என்ன இருக்குன்னா என்ன இருக்கு தான்... நான் பிரணவ்வை லவ் பண்றேன்... அவர் அனு கூட க்ளோஸா இருக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல..." என அர்ச்சனா கோபமாகக் கூற, கார்த்திக்கின் மனதில் ஏதோ சொல்ல முடியாத வலி.

அது ஏன் என்று கூட அவனுக்குப் புரியவில்லை.

கார்த்திக், "அ...அர்ச்சு... நீ... என்ன சொல்ற? லவ்வா? அதுவும் பிரணவ் சார் மேலயா? எப்படி?" எனத் தயக்கமாகக் கேட்க, "ஆமா... லவ் தான்... ஏன் எனக்கு என்ன குறை? அழகு இல்லயா? படிப்பு இல்லயா? எத்தனை பசங்க என் ஒரு கண் அசைவுக்காக என் பின்னாடி நாய் மாதிரி அலைஞ்சி இருப்பானுங்க... அதுவும் போக அந்த பிரணவ் யூஸ் பண்ற கார், மொபைல் எல்லாம் பார்த்து இருக்கியா நீ? எல்லாமே ஹை க்ளாஸ் பசங்க யூஸ் பண்றது... அவன் சாதாரணமானவன் இல்லன்னு நினைக்கிறேன்... அவன் கூட இருந்தா நான் ஆசைப்படுற லக்ஸரி லைஃப என்னால வாழ முடியும்... பையன் ஹேன்ட்ஸமா வேற இருக்கான்... சின்ன வயசுல இருந்தே யாரோ உடுத்திட்டு தூக்கிப் போட்ட ட்ரெஸ்ஸைப் போட்டு, பிடிச்சதை வாங்கிக்க முடியாத நிலமை கொடுமை கார்த்திக்... இனிமேலும் என்னால இந்த நரகத்துல இருக்க முடியாது... பிரணவ்வை சீக்கிரமா என் பக்கம் விழ வெச்சி காட்டுறேன்... ஆனா இந்த அனு தான் எனக்கு தடையா இருக்கா..." எனக் கண்களில் தீவிரத்துடன் கூறிய அர்ச்சனாவைக் காண கார்த்திக்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.

வெறும் பணத்திற்காக தன் தோழி இந்த அளவுக்கு இறங்கிப் போகிறாள் என நினைக்கும் போது கார்த்திக்கின் மனம் ஒரு பக்கம் வேதனை அடைய, தன்னால் அவளுக்கு நல்ல வாழ்வை அமைத்துக் கொடுக்க முடியவில்லையே எனத் தன் மீதும் கழிவிரக்கம் தோன்றியது.

"அர்ச்சு... நீ ஏதோ அவசரப்பட்டு முடிவு எடுத்திருக்கன்னு தோணுது... நல்லா யோசிச்சு பாரு... நீ ஆசைப்படுறது போல வாழணும்ங்குறதுக்காக லவ் பண்றது சரியா?" என தோழிக்குப் புரிய வைக்கும் நோக்கில் பேசிய கார்த்திக்கை கை நீட்டி தடுத்த அர்ச்சனா, "உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடிஞ்சா பண்ணு கார்த்திக்... இல்லன்னா கிளம்பி போய்ட்டே இரு... சும்மா சும்மா அட்வைஸ் பண்ணிட்டு வராதே..." என்றாள் கோபமாக.

அப்போது சரியாக பிரதாப்பிடமிருந்து கார்த்திக்கிற்கு அழைப்பு வந்தது.

அர்ச்சனாவை ஏக்கமாகப் பார்த்தபடியே கார்த்திக் அழைப்பை ஏற்கவும் மறுபக்கம் பிரதாப், "டேய் எங்கடா இருக்க நீ? ஈவ்னிங் வீட்டுக்கு வரேன்னு சொன்ன... இன்னும் காணோம்..." எனக் கோபமாகக் கேட்க, 'ஏதோ நான் இவன் பொண்டாட்டி போல கேள்வி கேட்குறதை பாரு... ஏன் வீட்டுக்கு இன்னும் வரலயாம்... ச்சே... இவன் வேற...' என மனதுக்குள் பிரதாப்பை வறுத்தெடுத்த கார்த்திக், "வரேன் மச்சான்... என் ஃப்ரெண்டுக்கு சின்ன ஆக்சிடன்ட் ஒன்னு... அதான் பார்க்க வந்தேன்... இப்போ கிளம்பிட்டேன்..." என்றான் அர்ச்சனாவை நோட்டம் விட்டபடி.

அவளோ பிரணவ்வை எப்படி தன் காதல் வலையில் சிக்க வைக்கலாம் எனத் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்க, அழைப்பில் இருந்த பிரதாப், "நீ ஒன்னும் வர வேணாம்... எனக்கு உன்னால ஒரு காரியம் ஆகணும்..." என்க, 'அதானே... இவன் எப்போ நம்மளை மனுஷனா மதிச்சிருக்கான்?' என எப்போதும் போல மனதில் கவுன்டர் கொடுத்தான் கார்த்திக்.

கார்த்திக், "ஹ்ம்ம்... சொல்லுடா... என்ன பண்ணணும்? மது மாது ஏதாவதுன்னு மட்டும் சொன்ன கொலை பண்ணிடுவேன்..." என மிரட்ட, "ஏ ச்சீ வாயைக் கழுவு... அசிங்கமா பேசிக்கிட்டு... எனக்கு உடனடியா ஒரு பைக் ஆர் கார் ரென்ட்டுக்கு வேணும்..." என்றான் பிரதாப்.

'ஆமா... நான் அசிங்கமா பேசுறேன்... ஐயா பண்றது எல்லாமே புண்ணிய காரியம்...' என மனதில் பிரதாப்பிற்கு கவுன்டர் கொடுத்த கார்த்திக்கிற்கு அப்போது தான் அவன் கேட்டது மூளையில் பதிய, "என்ன? பைக் ஆர் காரா? ரென்ட்டுக்கா? டேய்... நானே மாசம் பதினைந்தாயிரம் சம்பளத்துல வாடகை வீட்டுல நாளைக் கடத்திட்டு இருக்கேன்... எனக்கு ஆஃபீஸ் போறதுக்கே கஷ்டப்பட்டு கடன் வாங்கி ஒரு பைக்கை வாங்கி இருக்கேன்... நீ ஈசியா ஏதோ சாக்லேட் வாங்கி கேட்குறதை போல கேட்குற..." எனக் கேட்டான் கோபமாக.

பிரதாப், "ஓஹ்... அதுவும் சரி தான்... சரிடா... அப்போ நாளைல இருந்து நீ பஸ் பிடிச்சு ஆஃபீஸ் போ... உன் பைக்கையே நான் யூஸ் பண்ணிக்குறேன்... நான் பெங்களூர்ல இருந்து போகும் வரை எனக்கு தேவைப்படும்..." என்றவன் கார்த்திக்கின் பதிலைக் கூட எதிர்ப்பார்க்காது அழைப்பைத் துண்டித்து விட, "டேய் பிரதாப்... மச்சான்..." என கார்த்திக் கத்தினது எதுவும் பிரதாப்பின் செவியை எட்டவில்லை.

அர்ச்சனா, "என்ன கார்த்திக்? ஓக்கேயா? அந்த அனுவை என்ன பண்ணலாம்? அவளை பிரணவ்வே கம்பனியை விட்டு துரத்தி விடுறது போல பண்ணணும்..." என ஆத்திரமாகக் கூற, 'இதுங்களுக்கு ஃப்ரெண்டா இருக்குற பாவத்துக்கு என்னை வெச்சி செய்றாங்க...' என மானசீகமாகத் தன்னையே நொந்து கொண்டான் கார்த்திக்.

************************************

கணினித் திரையில் பார்வையைப் பதித்திருந்த பிரணவ் தன்னிடம் அனுமதி கூட வாங்காமல், "பாஸ்..." எனப் பதட்டமாக ஓடி வந்த ஆகாஷைக் கேள்வியாக நோக்கியவன் ஆகாஷ் கூறிய செய்தியில் அதிர்ச்சியில் எழுந்து நின்றான்.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 12

அனுபல்லவியின் தலைமையில் பிரணவ்வின் வழி நடத்தலில் மிஸ்டர் மெஹெராவிடம் வாக்களித்த ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக அந்த பிராஜெக்டை பிரணவ்வின் குழு நிறைவு செய்தனர்.

இதில் அனுபல்லவிக்குத் தான் ஏகபோக மகிழ்ச்சி. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜெக்டை எந்தவொரு பிரச்சினையும் இன்றி நிறைவு செய்ததால் வந்த மகிழ்ச்சி அது.

ஆனால் எந்தவொரு பிரச்சினையும் வரவில்லை என அனுபல்லவி நினைத்துக் கொண்டிருக்க, அவளுக்கு எதிராக தீட்டிய சதித் திட்டங்கள் அனைத்தையும் பிரணவ் அழகாக முறியடித்ததை அவள் அறியாமல் போனாள்.

************************************

விடுமுறை முடிந்து மறுநாளே ஆஃபீஸ் வந்த அனுபல்லவியை பிரணவ் எதுவுமே கேட்கவில்லை.

'என்ன இவர் எதுவுமே நம்மள கேட்கல? இப்படி எல்லாம் இருக்க மாட்டாரே... சும்மாவே எறிஞ்சி விழுவார்... இதுல ப்ராஜெக்ட் டைம்ல சடன்னா லீவ் வேற போட்டு இருக்கேன்... ஒருவேளை புலி பதுங்குறது பாயுறதுக்கோ?' என யோசிக்க, 'அவர் என்ன கேட்கணும்னு நீ எதிர்ப்பார்க்குற?' என்ற மனசாட்சியின் கேள்வியில் தலையில் அடித்துக்கொண்ட அனுபல்லவி, 'அதானே... நான் ஒருத்தி லூசு மாதிரி...' எனத் தன்னையே கடிந்து கொண்டாள்.

பிரணவ், "மிஸ் பல்லவி... பல்லவி... பல்லவி உங்களைத் தான்..." என்ற கத்தலில் தன்னிலை அடைந்த அனுபல்லவி, "ஆஹ் சார்... ஏதாவது சொன்னீங்களா?" எனக் கேட்டாள் அவசரமாக.

"என்ன ஆச்சு உங்களுக்கு? இவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன்... காதுல விழலயா?" எனப் பிரணவ் கோபமாகக் கேட்கவும் தலை குனிந்த அனுபல்லவி, "சாரி சார்... வேற ஏதோ யோசனை..." என்றாள் தயக்கமாக.

பிரணவ், "எப்பப்பாரு இதே வேலையா போச்சு உங்களுக்கு... எல்லாம் பண்ணிட்டு அதுக்கப்புறம் சாரி கேட்பீங்க... ப்ராஜெக்ட் எந்த அளவுல போய்ட்டு இருக்கு? டெட்லைனுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு..." என்க, "மேக்சிமம் முடிச்சிட்டோம் சார்... ஃபைல்ஸ் எல்லாம் ஈவ்னிங் உள்ள உங்க கிட்ட சப்மிட் பண்றேன் சார்..." என அனுபல்லவி கூற, "குட்... இதே ஸ்பிரிட்டோட வர்க் பண்ணுங்க... யூ மே லீவ் நவ்..." எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவி வெளியேறினாள்.

இங்கு பிரதாப்போ பெங்களூர் முழுவதும் அனுபல்லவியைப் பற்றி விசாரிக்க, எங்கு கேட்டும் அவனுக்கு சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.

சலித்துப் போய் வீட்டில் அமர்ந்து இருக்கும் போது வாசல் அழைப்பு மணி ஒலி எழுப்பவும் பிரதாப் சென்று கதவைத் திறக்க, அங்கு அர்ச்சனா கோபமாக நின்றிருந்தாள்.

பிரதாப்பைக் கேள்வியாக நோக்கிய அர்ச்சனா, "கார்த்திக் எங்க? நீங்க யாரு?" என வீட்டினுள் நுழைந்தவாறு கேட்க, 'என்ன இவ பாட்டுக்கு உள்ள வரா... ஒருவேளை கார்த்திக்கோட ஆளா இருப்பாளோ... ஆனா அவன் அப்படி என் கிட்ட எதுவும் சொல்லலயே...' என பிரதாப் யோசிக்கும் போதே, "உங்களைத் தான் கேட்குறேன் மிஸ்டர்... கார்த்திக் எங்க?" எனக் கேட்டாள் அர்ச்சனா.

பிரதாப், "குளிச்சிட்டு இருக்கான்... வருவான் இப்போ... வெய்ட் பண்ணுங்க..." என்க, சமையலறைக்குச் சென்று குளிரூட்டியைத் திறந்து குளிர் நீர் போத்தலை எடுத்து வந்து ஹாலில் அமர்ந்தாள் அர்ச்சனா.

சற்று நேரத்திலேயே குளித்து விட்டு வந்த கார்த்திக், "ஹேய் அர்ச்சு... எப்போ வந்த?" எனப் புன்னகையுடன் கேட்டவாறு வர, "ஹ்ம்ம் இப்போ தான் கார்த்திக்... அது யாரு? உன் ஃப்ரெண்டா?" என ஒரு ஓரமாக நின்று இருவரும் பேசுவதை வேடிக்கை பார்த்தபடி இருந்த பிரதாப்பைக் காட்டிக் கேட்டாள் அர்ச்சனா.

கார்த்திக், "ஆமா அர்ச்சு... இவன் பிரதாப்... பிரதாப்... இது அர்ச்சனா... என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட்... நாங்க சின்ன வயசுல இருந்து ஒன்னா ஒரே ஆசிரமத்துல தான் வளர்ந்தோம்..." என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைக்க, பிரதாப்பிடம் சிறு தலையசைப்பு மட்டுமே.

அர்ச்சனா, "கார்த்திக்... நீ ஏதாவது யோசிச்சியா? வர வர அந்த அனு தொல்லை தாங்கல... இந்த பிரணவ் வேற எப்பப்பாரு பல்லவி பல்லவின்னு அவளைத் தனியா கூப்பிட்டு பேசுறான்... எனக்கு பிரணவ் வேணும் கார்த்திக்... எதாவது ஐடியா சொல்லு..." எனக் கோபமாகக் கூற, அவளின் கூற்றில் முகம் வாடிய கார்த்திக் அதனைத் தன் தோழிக்குத் தெரியாமல் மறைத்தபடி, "நீ இந்த விஷயத்துல சீரியஸா தான் இருக்கியா அர்ச்சு? எதுக்கும் கொஞ்சம் இன்னொரு தடவை திங்க் பண்ணு..." எனக் கெஞ்சினான்.

பதிலுக்கு அர்ச்சனா ஏதோ கோபமாகக் கூற வர, இவ்வளவு நேரமும் இவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்த பிரதாப் அர்ச்சனா அனு என்று கூறியதும் நெற்றி சுருக்கியவன், "அர்ச்சனா... நீங்க இப்போ என்ன பெயர் சொன்னீங்க... ஒரு பொண்ணு பெயர் சொன்னீங்கல்ல..." எனக் கேட்க, அவனைப் புரியாமல் நோக்கிய அர்ச்சனா, "ஹ்ம்ம்... அனு..." என்றாள்.

பிரதாப், "ஃபுல் நேம் என்ன அந்தப் பொண்ணோட?" என்க, "அனுபல்லவி" என அர்ச்சனா கூறவும் பிரதாப்பின் முகம் காட்டிய உணர்வில் அர்ச்சனாவிற்கே 'திக்' என்றானது.

"அனு தான் உங்க காதலுக்கு தடையா இருக்காளா? அவளால இனிமே உங்களுக்கு எந்தத் தொல்லையும் இருக்காது... அதுக்கு நான் கேரென்ட்டி..." என பிரதாப் விஷமப் புன்னகையுடன் கூற, "டேய் பிரதாப்? என்னடா சொல்ற? அனுவுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டான் கார்த்திக் புரியாமல்.

அர்ச்சனாவும் அதே கேள்வியைத் தாங்கி பிரதாப்பின் முகம் நோக்க, "அனுவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னு உங்களுக்கு அவசியம் இல்ல... உங்களுக்கு என் ஹெல்ப் வேணும் இப்போ... அவ்வளவு தான்..." என்றான் பிரதாப்.

விஷமப் புன்னகையுடன் பிரதாப் முன் கரத்தை நீட்டிய அர்ச்சனா, "என் வழில இருந்து அனுவைத் தூக்கிட்டா போதும்... அவ உங்களுக்கு யாரா இருந்தாலும் எனக்கு பிரச்சினை இல்ல..." என்க, பதிலுக்கு தன் கரம் நீட்டிய பிரதாப், "என் கிட்ட விடுங்க..." என்றான் அதே விஷமப் புன்னகையுடன்.

************************************

அன்று அனுபல்லவிக்கு வேலை முடிய சற்று தாமதம் ஆனதால் சாருமதி முன்னதாகவே வீட்டிற்கு சென்றிருக்க, ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த அனுபல்லவியை திடீரென வழிமறித்து நின்றான் பிரதாப்.

பிரதாப்பைக் கண்டதும் அனுபல்லவி அதிர்ச்சியில் உறைய, "என்ன அனு? மாமனைக் கண்டது உனக்கு சந்தோஷமா இல்லையா?" என விஷமமாகக் கேட்க, "பிர...பிரதாப்... நீ... நீ எப்படி இங்க?" எனக் கேட்டாள் அனுபல்லவி பயத்துடன்.

அவளின் தாடையை அழுத்திப் பிடித்த பிரதாப், "பெங்களூர்ல வந்து ஒழிஞ்சிக்கிட்டா எங்களால கண்டு பிடிக்க முடியாதுன்னு நினைச்சியா? நீ உயிரோடா இருந்தாலும் செத்தாலும் எங்களுக்கு பிரச்சினை இல்ல... ஆனா எங்களுக்கு சேர வேண்டியதைக் கொடுத்துட்டு எங்க வேணாலும் போய்த் தொலை..." எனக் கோபமாகக் கூறியவன் தன் பிடியை இன்னும் அதிகரிக்க, வலியில் கண்கள் கலங்கிய அனுபல்லவி பிரதாப்பின் கரத்தை தட்டி விட முயன்றாள்.

ஆனால் முடியாமல் போக, "என்னைக்... கொன்னே போட்....டாலும் நீங்க நினைச்சது... நடக்க விட மாட்டேன்..." என்றாள் அனுபல்லவி கஷ்டப்பட்டு.

அனுபல்லவியின் தாடையிலிருந்து தன் கரத்தை எடுத்த பிரதாப் ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் சேர்த்து அவள் கன்னத்தில் ஓங்கி அறையவும் கீழே விழுந்தவளின் உதடு கிழிந்து இரத்தம் கசிந்தது.

அவளின் முடியை ஆவேசமாகப் பற்றிய பிரதாப், "இப்பவே நீ என் கூட ஊருக்கு வராய்... அடுத்த முகூர்த்தத்துலயே உனக்கும் எனக்கும் கல்யாணம்..." என்க, அப்போது தான் ஆஃபீஸில் இருந்து வெளியே வந்த பிரணவ் அனுபல்லவியிடம் ஒருவன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வதைக் கண்டு, "ஏய்... யாரு நீ? பல்லவி..." என்றவாறு அவசரமாக அவர்கள் அருகில் சென்றான்.

அனுபல்லவி, "பிரணவ் சார்..." எனக் கண்கள் கலங்க அழைக்க, அவளின் கண்ணீர் பிரணவ்வை ஏதோ செய்தது.

அனுபல்லவியின் முடியை விட்ட பிரதாப், "ஓஹ்... நீ தான் அந்த பிரணவ்வா?" எனக் கேட்டான் இளக்காரமாக.

பிரதாப்பின் காலரைக் கோபமாகப் பிடித்த பிரணவ், "யாரு டா நீ? எதுக்கு எங்க ஆஃபீஸ் முன்னாடியே எங்க ஸ்டாஃப் கிட்ட பிரச்சினை பண்ற?" என்க, "வெறும் ஸ்டாஃப் மட்டும் தானா?" என அனுபல்லவியை மேலிருந்து கீழ் வரை பார்வையால் அளந்தபடி பிரதாப் கேட்கவும் அனுபல்லவிக்கு அவமானமாக இருக்க, பிரதாப்பின் பேச்சில் எரிச்சலடைந்த பிரணவ், "நீ யாரா வேணாலும் இரு... என் இடத்துக்கு வந்து எங்க ஆஃபீஸ் பொண்ணுங்க கிட்ட வம்பு பண்ணன்னா சும்மா விட மாட்டேன்..." என்றவன் பிரதாப்பைத் தள்ளி விட்டு அனுபல்லவியிடம் சென்றான்.

"பல்லவி... ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்ட பிரணவ் அவளுக்கு எழுந்துகொள்ள கை கொடுக்க, பிரணவ்வின் கரத்தைப் பற்றி எழுந்த அனுபல்லவி, "ஐம் ஓக்கே சார்... தேங்க்ஸ்..." என்கவும் தான் அவளின் உதட்டில் இருந்து வடிந்த இரத்தத்தைக் கண்டு கொண்டான் பிரணவ்.

பிரணவ், "பல்லவி பிளட்..." எனத் தன் கைக்குட்டையை எடுத்து அவளின் காயத்தைத் துடைக்கும் போது, "என்னடா பல்லவி பல்லவின்னு ரொம்பத் தான் கொஞ்சுற... அவளைப் பத்தி உனக்கு என்னடா தெரியும்?" எனக் கோபமாகக் கேட்ட பிரதாப் அனுபல்லவியிடம் இருந்து பிரணவ்வைப் பிரித்து தள்ளி விடவும் சமநிலை இழந்த பிரணவ் அருகில் இருந்த கம்பத்தில் பலமாகத் தலை மோதி கீழே விழுந்தான்.

"பிரணவ்..." என அனுபல்லவி அதிர்ந்து கத்தவும், "என்ன டி பிரணவ்? ஒழுங்கு மரியாதையா என் கூட வா..." என்ற பிரதாப் அனுபல்லவியின் கரத்தைப் பிடித்து இழுக்க, அவனிடமிருந்து தன் கரத்தை விடுவிக்கப் போராடினாள் அனுபல்லவி.

தூரத்தில் எங்கோ போலீஸ் ஜீப்பின் சத்தம் கேட்கவும் பயந்த பிரதாப், "இன்னைக்கு என் கிட்ட இருந்து தப்பிச்சிட்ட... சீக்கிரம் உன்னைத் தேடி திரும்ப வருவேன் டி..." என்றவன் அவசரமாக தன் பைக்கை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றான்.

பிரதாப் சென்றதும் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த பிரணவ்விடம் ஓடிய அனுபல்லவி, "சார்... என்னாச்சு சார்? நீங்க நல்லா இருக்கீங்களா? வாங்க ஹாஸ்பிடல் போகலாம்..." எனப் பதற, பிரணவ்விற்கோ அன்று விபத்தின் போது தன்னைக் காப்பாற்றிய பெண்ணின் குரல் கேட்பது போல் இருந்தது.

மெதுவாகத் தலையைத் தூக்கி அனுபல்லவியின் முகம் காண வழமையாக அவனின் மனக் கண்ணில் தெரியும் அந்த மங்கலான முகத்திற்கு பதிலாக இப்போது அனுபல்லவியின் முகம் தெளிவாகத் தெரிந்தது.

தன்னை மறந்து அவளின் முகத்தைத் தொட கரம் நீட்டிய பிரணவ், "சார்..." என்ற அனுபல்லவியின் குரலில் தன்னிலை அடைந்து அவசரமாக தலையை உலுக்கி தன்னை சமன் படுத்திக்கொண்டான்.

பிரணவ், "ஐம் ஓக்கே பல்லவி..." என்றவன் அனுபல்லவியின் உதவியை மறுத்து விட்டு தட்டுத் தடுமாறி எழுந்து நின்று, "நானே உங்களை ட்ராப் பண்றேன்..." என்று விட்டு தன் வண்டியை நோக்கி சென்றான்.

அனுபல்லவியும் தலை குனிந்தபடியே பிரணவ்வின் பின்னே சென்று வண்டியில் ஏறியவள் கவலையாக அமர்ந்து இருக்க, "யார் அது பல்லவி?" எனத் தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்டியபடி பிரணவ் கேட்கவும் தலை குனிந்த அனுபல்லவி, "என் அத்தை பையன் சார்..." என்றவள் தண்ணீர் மொத்தத்தையும் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்.

அதிலே அவளின் பயத்தை உணர்ந்து, "எதுக்கு அப்போ உன்ன மிரட்டிட்டு இருந்தான்?" எனக் கேட்டான் பிரணவ் புரியாமல்.

இமை தாண்டி வடிந்த கண்ணீரை பிரணவ்விற்கு தெரியாமல் மறைக்க கார் விண்டோ வழியே வெளியே பார்வையைப் பதித்த அனுபல்லவி, "அதைப் பத்தி மட்டும் எதுவும் கேட்காதீங்க சார்... ப்ளீஸ்..." என்று மட்டும் கூறினாள்.

அதன் பின் பிரணவ்வும் அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்டு தொல்லை கொடுக்காமல் அமைதியாக வர, அனுபல்லவிக்கு பிரணவ் ஏதும் கேட்காதது நிம்மதியாக இருந்தது.

அனுபல்லவி தங்கியிருந்த அபார்ட்மெண்ட் வந்ததும் பிரணவ் காரை நிறுத்த, அதைக் கூட உணர முடியாத நிலையில் ஏதோ யோசனையில் ஆழ்ந்து இருந்த அனுபல்லவியின் கரம் பற்றி, "பல்லவி..." எனப் பிரணவ் அழைக்கவும் திடுக்கிட்டவள் அதன் பின்னே சுற்றம் உணர்ந்தாள்.

எதுவும் பேசாது காரை விட்டு இறங்கிய அனுபல்லவி பிரணவ்விடம் எதுவும் கூறாது கால் போன போக்கில் வீட்டினுள் நுழைய, அவள் வீட்டினுள் நுழைந்து கதவை மூடும் வரை அவள் சென்ற திசையையே வெறித்திருந்தான் பிரணவ்.

பின் தன் வீட்டிற்கு சென்றவன் அந்த இளமஞ்சள் நிற துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

"பல்லவி... நீ தான் எனக்கு மறுஜென்மம் அளிச்சியா? ஏன் எனக்கு ஒன்னுன்னதும் நீ அவ்வளவு துடிச்ச?" எனத் தன்னையே கேட்டவனின் இதழ்கள் அழகாய் விரிந்தன.

அனுபல்லவியின் துப்பட்டாவை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவனுக்கு ஏதோ அவளையே அணைத்த உணர்வு.

பல நாட்கள் கழித்து மனம் விட்டு புன்னகைத்தான்.

************************************

பிரணவ் ஆஃபீஸில் தன் அறையில் வேலையாக இருக்க, திடீரென, "பாஸ்..." எனக் கத்திக்கொண்டு அவனின் அனுமதி கூட வாங்காது அறையினுள் நுழைந்தான் ஆகாஷ்.

அவனைப் புரியாமல் பார்த்த பிரணவ், "என்னாச்சு ஆகாஷ்?" எனக் கேட்க, ஓடி வந்த களைப்பில் நீண்ட மூச்சுகளாக விட்டு தன்னை சமன் செய்து கொண்ட ஆகாஷ், "பாஸ்... உங்களைக் காப்பாத்தி ஹாஸ்பிடல் சேர்த்த அந்தப் பொண்ணு யாருன்னு கண்டு பிடிச்சிட்டேன்..." என்க, "பல்லவி..." என்றான் பிரணவ்.

ஆகாஷ் அதிர்ச்சியாக அவனை நோக்க, "அனுபல்லவி தான் என்னை அன்னைக்கு காப்பாத்தினாங்க... இல்லயா?" என பிரணவ் கேட்க, "பாஸ்... செம்ம பாஸ்... எப்படி கண்டு பிடிச்சீங்க?" என ஆகாஷ் கேட்கவும் அவனுக்கு பதிலளிக்காது மெல்லியதாக புன்னகைத்த பிரணவ், "இதை சொல்லத் தான் அவ்வளவு அவசரமா ஓடி வந்தீங்களா ஆகாஷ்?" எனக் கேட்டான்.

தலையில் அடித்துக்கொண்ட ஆகாஷ், "பாருங்க பாஸ்... முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்..." என்கவும் பிரணவ் அவனைக் கேள்வியாக நோக்க, "பாஸ்... அன்னைக்கு உங்க காரை ஆக்சிடன்ட் பண்ணின லாரி ட்ரைவர் ஆக்சிடன்ட் பண்ணிட்டு பயந்து தப்பி ஓடிட்டான்னு போலீஸ் சொன்னாங்கல்ல... அவன் தெரியாம ஒன்னும் ஆக்சிடன்ட் பண்ணல... அவனுக்கு பணம் கொடுத்து உங்களை ஆக்சிடன்ட் பண்ண வெச்சிருக்காங்க..." என்கவும் அதிர்ச்சியில் எழுந்து நின்றான் பிரணவ்.

ஆகாஷ், "ஆமா பாஸ்... நேத்து தான் அந்த லாரி ட்ரைவர் ஒரு குடோன்ல மறைஞ்சி இருக்கும் போது போலீஸ் அவனை பிடிச்சு இருக்காங்க... அந்த குடோன் உங்க மாமா பெயர்ல இருக்கு..." என்கவும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியான செய்தியைக் கேட்ட பிரணவ்விற்கு தலைவலி வந்து இருக்கையில் பட்டென அமர்ந்தான்.

"பாஸ்... என்னாச்சு?" என ஆகாஷ் பதட்டமாகக் கேட்கவும், "எனக்கு ஒன்னும் இல்ல ஆகாஷ்... மாமா எதுக்கு என்னைக் கொல்ல ட்ரை பண்ணார்? இந்த விஷயம் அம்மாவுக்கு தெரியுமா?" எனக் கேட்டான் கரங்களால் தலையை ஏந்தியபடி.

"என்ன காரணம்னு சரியாத் தெரியல பாஸ்... அந்த லாரி ட்ரைவர் போலீஸ் கிட்ட மாட்டினதும் போலீஸ் அவனை விசாரிக்கவும் தான் உங்க மாமா பெயரை சொல்லி இருக்கான்... பட் நேத்து நைட் அவன் ஜெய்ல்ல தற்கொலை பண்ணிக்கிட்டான்... அதனால அதுக்கு மேல எந்த விஷயமும் தெரியல... உங்க மாமாவுக்கு எதிரான வேற எந்த ஆதாரமும் அவங்களுக்கு கிடைக்கல பாஸ்... அப்புறம் மேடமுக்கு இன்னுமே இதைப் பத்தி தெரியாது..." என ஆகாஷ் கூறவும் யோசனை வயப்பட்டான் பிரணவ்.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 13

தன் மாமனே தன்னைக் கொல்ல நினைக்கிறார் என அறிந்து அதிர்ச்சியில் உறைந்த பிரணவ்விற்கு அதற்கான காரணம் தான் பிடிபடவில்லை.

தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனைக் காணும் போது ஆகாஷிற்கு பாவமாக இருக்க, "பாஸ்..." என்றான் தயங்கியபடி.

பிரணவ் தலையை நிமிர்த்தாமலே, "ஐம் ஓக்கே ஆகாஷ்... நீங்க போங்க..." என்கவும் ஆகாஷ் சென்று விட, பிரணவ் தன் தாய் மாமனை எண்ணி யோசனையில் ஆழ்ந்தான்.

பிரணவ்வின் பெற்றோர் எப்போதும் பிஸ்னஸ் பிஸ்னஸ் என்று ஓடிக் கொண்டிருந்தாலும் பிரணவ்வின் தாய் மாமன் அடிக்கடி அவனை வந்து பார்த்து அவனிடம் அன்பாகவே நடந்து கொள்வார். தன் பெற்றோரை விட பிரணவ் அவரிடம் சற்று நெருக்கமாகவே பழகுவான். அப்படி இருக்கும் போது தன் மாமாவே தன்னைக் கொல்ல முயன்றதை அறியும் போது அவனால் அதனை நம்பவே முடியவில்லை.

சற்று நேரம் அது பற்றியே சிந்தித்தவன் வேண்டும் என்றே வேறு யாரோ தனக்கும் தன் மாமனுக்கும் இடையில் பிணக்கு ஏற்படுத்த இவ்வாறு செய்வதாகவே முடிவெடுத்தான்.

************************************

பிரணவ் கேட்ட ஃபைல்களை ஒப்படைக்க அனுபல்லவி அவனின் அறைக் கதவைத் தட்ட, உள்ளிருந்து எந்தப் பதிலும் வராததால் அன்று போல் பிரணவ்விற்கு ஏதாவது ஆகி விட்டதோ எனப் பயந்தவள் அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

ஆனால் அறையில் யாருமே இருக்கவில்லை. "சார்..." என அழைத்தவாறு சுற்றும் முற்றும் பார்வையைப் பதித்த அனுபல்லவியைக் கவர்ந்தது மேசையில் வைக்கப்பட்டிருந்த நாவல்.

அதனைக் கையில் எடுத்துப் பார்த்த அனுபல்லவி, "ஓஹ்... நம்ம ஆளு நவல்ஸ்லாம் ரீட் பண்ணுவாரா?" என ஆச்சரியமாகத் தன்னையே கேட்டுக் கொண்டவளிடம், 'எதே? உன் ஆளா?' எனக் கேட்டது மனசாட்சி.

மனசாட்சியின் கேள்வியில் முகம் சிவந்தவள், "ஏன்? என் ஆளுன்னு சொன்னா என்ன தப்பு? எனக்கு அவரைப் பிடிச்சிருக்கு... அப்புறம் அவர் சிங்கிள் வேற..." என்க, 'உனக்கு எப்போ இருந்து அவரைப் பிடிச்சிருக்கு? அப்புறம் அவர் சிங்கிள்னு உன் கிட்ட யாரு சொன்னாங்க?' என மனசாட்சி மீண்டும் வினா எழுப்ப, "இந்த சிடுமூஞ்சியாவது யாரையாவது லவ் பண்றதாவது? அவரை எப்போ இருந்து பிடிக்கும்னு நான் அவர் கிட்டயே சொல்லிக்குறேன்... உன் கிட்ட ஒன்னும் சொல்ல வேண்டிய அவசியம் இல்ல..." என அனுபல்லவி மனசாட்சிக்கு குட்டு வைத்தவாறு மெதுவாகத் திரும்ப, மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி, ஒரு காலை மடக்கி சுவரில் சாய்ந்தவாறு நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பிரணவ்.

பிரணவ் நின்ற தோற்றம் வழமை போலவே அனுபல்லவியை அவனை ரசிக்கத் தூண்ட, பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல் அவனையே விழி அகற்றாமல் ரசித்தாள் அனுபல்லவி.

பிரணவ், "என்ன மிஸ் பல்லவி? சைட் அடிச்சி முடிச்சிட்டீங்களா?" என்ற பிரணவ்வின் குரலில் சுயம் உணர்ந்த அனுபல்லவி அவள் இவ்வளவு நேரம் செய்து கொண்டிருந்த காரியத்தை உணர்ந்து அதிர்ச்சியுடன் அவனை நோக்கினாள்.

அனுபல்லவி, "சார்... நான்... நான்... ஃபைல்..." என வார்த்தை வராது தடுமாற, "ஹ்ம்ம்... சொல்லுங்க பல்லவி... எத்தனை மார்க் போடலாம்? தேருவேனா?" எனப் பிரணவ் கேட்கவும், "இனிஃபினிட்டி..." எனத் தன்னை மறந்து கூறிய அனுபல்லவி அவசரமாக நாக்கைக் கடித்தாள்.

அப்போது தான் பிரணவ்வின் பார்வையில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்தாள். எப்போதும் இருக்கும் இறுக்கம் அகன்று, முகத்தில் மெல்லிய புன்னகையுடன் கண்களில் ஒரு வித ரசனையுடன் அவனின் பார்வை அனுபல்லவியைத் தழுவியது.

அதன் காரணம் அறியாத பேதையோ, 'என்ன இவர் இப்படி பார்க்குறார்? கோவமா பார்த்தா கூட தாங்கிக்கலாம்... இது என்ன பார்வை? ஏன் இந்தப் பார்வை என்னை ஏதோ பண்ணுது?' என மனதினுள் விவாதம் நடத்திக் கொண்டிருக்க, தன் அழுத்தமான காலடிகளுடன் மெதுவாக அவளை நெருங்கினான் பிரணவ்.

'ஐயோ பக்கத்துல வராரே... நான் இப்போ என்ன பண்றது? அவர் கிட்ட பர்மிஷன் கேட்காம அவரோட புக்கை எடுத்தேன்னு அடிப்பாரோ? எங்க அடிப்பார்? கன்னத்துல அடிச்சிட்டார்னா என்ன பண்றது? யாராவது கேட்டா இவரை மாட்டி விடவும் முடியாதே?' என அனுபல்லவி மீண்டும் மனதுக்குள் விவாதிக்க, அவளின் கால்களோ பிரணவ் முன்னேறும் ஒவ்வொரு அடிக்கும் பின்னோக்கி நகர்ந்து அதற்கு மேல் முடியாது மேசையுடன் ஒட்டி நின்றாள்.

அனுபல்லவியின் முகத்தில் தெரியும் பதட்டத்தையும் அவளின் முகம் காட்டும் பல்வேறு பாவனைகளையும் ரசித்தவாறே அவளை நெருங்கிய பிரணவ் அனுபல்லவி நகர முயற்சித்தால் அவன் நெஞ்சின் மீது மோதும் இடைவெளியில் தன் நடையை நிறுத்தினான்.

இவ்வளவு நெருக்கமாக பிரணவ் வந்து நிற்கவும் இன்னும் பின்னே நகர முயற்சித்தவளை மேசை தடுக்க, மேசையிலேயே உட்கார்ந்து விட்டாள்.

ஒரு பக்கம் அனுபல்லவிக்கு பிரணவ் என்ன செய்து விடுவானோ என்ற பதட்டம் இருக்க, இன்னொரு பக்கம் இவ்வளவு நெருக்கமாக நிற்பவனை ரசித்தது அவளது மனம்.

தான் நின்ற இடத்தில் இருந்தே அனுபல்லவியின் பக்கம் லேசாக சாய்ந்த பிரணவ் தன் இடது கையால் அனுபல்லவிக்கு நெருக்கமாக மேசையைப் பிடித்தவன் அவளை இன்னும் சற்று நெருங்கவும், "சா...ர்..." என்றவளின் நா தந்தியடித்தது.

இதழ் மூடி புன்னகைத்த பிரணவ் அனுபல்லவியை அணைப்பது போல் மற்ற கையையும் கொண்டு செல்ல, அனுபல்லவியின் இதயத்துடிப்பு எகிற, அவனின் நெருக்கத்தில் அனுபல்லவியின் காது மடல்கள் வெட்கத்தில் சிவந்தன.

அதனை மறைக்கக் கூட வழியின்றி அவளின் விழிகள் தன்னால் மூடிக்கொள்ள, சில நொடிகளில் ஏதோ சத்தம் கேட்கவும் விழி திறந்தவள் கண்டது அவளை சுற்றி தன் கரத்தை நீட்டி மேசை ட்ராயரைத் திறந்து கொண்டிருந்த பிரணவ்வைத் தான்.

சரியாக பிரணவ்வின் இரு கரங்களுக்கும் இடையில் அனுபல்லவி சிறை பிடிக்கப்பட்டிருக்க, அசையக் கூட இடமின்றி அவனின் நெருக்கத்தில் அவஸ்தைப்பட்ட அனுபல்லவியின் இதழைச் சுற்றி வியர்வைப் பூக்கள் பூத்தன.

அவள் படும் அவஸ்தையை ரசித்தவாறே ட்ராயரைத் திறந்து அனுபல்லவியின் இளமஞ்சள் நிற துப்பட்டாவை பிரணவ் கையில் எடுத்துக்கொண்டு நிமிரவும் அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள் அனுபல்லவி.

இன்னுமே பிரணவ்வின் இரு கரங்களுக்கும் இடையில் சிறை பிடிக்கப்பட்டு இருந்தவளோ அதைக் கூட உணராது, 'அவருக்கு தெரிஞ்சிடுச்சா நான் தான் அவரைக் காப்பாத்தினதுன்னு?' என சிந்திக்க, இதற்கு மேலும் அனுபல்லவியை சீண்ட விரும்பாத பிரணவ் தன் கரங்களை எடுத்து அவளுக்கு விடுதலை அளித்தான்.

அந்த துப்பட்டாவை அனுபல்லவியின் முகத்துக்கு நேராக ஆட்டிக் காட்டிய பிரணவ், "அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை வெச்சிக்கிறது எனக்கு பிடிக்காது..." என்க, 'நான் அடுத்தவளா?' எனத் திடீரென முளைத்த கோபத்தில் அவனின் கரத்தில் இருந்த தன் துப்பட்டாவைப் பறிக்க கரத்தை நீட்டினாள் அனுபல்லவி.

பட்டென அதனைத் தனக்குப் பின்னே மறைத்த பிரணவ் குறும்புப் புன்னகையுடன், "ஆனா....." என இழுத்தவன் அனுபல்லவியின் உதட்டின் மேல் பூத்திருந்த வியர்வையை தன் பெருவிரலால் அழுத்தித் துடைக்க, அனுபல்லவிக்கோ மூச்சு விடவும் சிரமமாக இருந்தது.

அனுபல்லவியின் கண்கள் அவனின் செயலில் அதிர்ச்சியில் விரிந்திருக்க, அதனை ரசித்தவாறே அந்த துப்பட்டாவை முன்னே கொண்டு வந்தவன் அதன் வாசனையை தனக்குள் இழுத்துக்கொள்வது போல் புன்னகையுடன் இழுத்து முகர்ந்தான்.

அனுபல்லவிக்கு அவன் ஏதோ தன்னையே முகர்ந்தது போல் மேனி சிலிர்க்க, முகம் சிவந்தவள் பிரணவ் எதிர்ப்பார்க்காத சமயம் அவனைத் தள்ளி விட்டு விட்டு வெளியே ஓடினாள்.

அனுபல்லவி சென்ற பின்னும் அவள் சென்ற திசையைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த பிரணவ் அந்த துப்பட்டாவை தன் நெஞ்சுடன் அணைத்தபடி, "பல்லவி... பல்லவி... யூ ஆர் டெம்ப்டிங் மீ..." என்றான் விழிகளை முடி ரசனையுடன்.

இங்கு பிரணவ்விடமிருந்து தப்பித்து ஓடி வந்தவளோ, ஒரு பாட்டில் தண்ணீர் முழுவதையுமே காலி செய்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அவளை விசித்திரமாகப் பார்த்த சாருமதி, "என்னாச்சு அனு? எதுக்கு ஏதோ ரேஸ் ஓடிட்டு வந்ததைப் போல தண்ணியை குடிக்கிற?" எனக் கேட்கவும் அவளிடம் என்ன கூறி சமாளிக்க என விளித்த அனுபல்லவி, "அது... அது... ஒன்னுமில்ல டி... சும்மா தான்... ஆஹ்... ஆகாஷ் உன்ன லவ் பண்றதா சொன்னன்னு சொன்னியே... அப்புறம் என்னாச்சு?" எனப் பேச்சைத் திசை மாற்ற, அது சரியாக சாருமதியிடம் வேலை செய்தது.

சாருமதி, "அவனைப் பத்தி நினைச்சாலே கடுப்பா வருது அனு... சரியான இம்சை..‌. அன்னைக்கு என்னைத் திட்டிட்டு அப்புறம் வந்து கொஞ்சுறான்... அதுலயும் அந்த பனைமரம் என்னைக் குட்டச்சி பேபின்னு சொல்லும் போது அப்படியே அவனைக் கடிச்சு குதறி விடத் தோணுது டி..." என ஆகாஷை அர்ச்சிக்கத் தொடங்க, அதனை சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்த அனுபல்லவி சாருமதிக்கு பின்னே வந்து நின்றவனைக் கண்டு கஷ்டப்பட்டு தன் சிரிப்பை அடக்கியவள், "சாரு... நீ அவரைத் திட்டிட்டு இரு... நான் வாஷ்ரூம் போய்ட்டு வரேன்..." என அங்கிருந்து மெதுவாகக் கழன்று கொள்ள, "ஹேய் அனு... நில்லு டி..." என்ற சாருமதியின் கத்தல் அனுபல்லவியின் இருக்கையில் வந்து அமர்ந்த ஆகாஷைக் கண்டதும் தடைப்பட்டது.

"நீ... நீ... நீ இங்க என்ன பண்ணுற?" என திடீரென ஆகாஷை அங்கு எதிர்ப்பார்க்காது சாருமதி திக்கித் திணறிக் கேட்க, "யாரோ என்னை ரொம்ப புகழ்றாங்கன்னு என் மனசு சொல்லிச்சு... வந்து பார்த்தா என் குட்டச்சி பேபி..." என ஆகாஷ் கண்களில் காதல் சொட்டக் கூறினான்.

ஆகாஷின் பார்வையில் அவன் பக்கம் சாயத் துடித்த மனதை கடினப்பட்டு அடக்கிய சாருமதி, "சாருக்கு புகழ்ச்சி ஒன்னு தான் குறைச்சல்... ஆளையும் மூஞ்சியையும் பாரு..." என்றாள் உதட்டை சுழித்தபடி.

ஆகாஷ், "குட்டச்சி.‌‌.." என ஏதோ கூற வரவும் ஆவேசமாக எழுந்த சாருமதி, "யாரு டா குட்டச்சி? திரும்ப திரும்ப அதையே சொல்ற... மவனே நீ இன்னைக்கு செத்தடா பனைமரம்..." என்றவள் ஆகாஷின் முடியைப் பிடித்து எல்லாப் பக்கமும் ஆட்ட, மொத்த ஆஃபீஸும் அவர்களை வேடிக்கை பார்த்தது.

கூட்டம் கூடி இருப்பதைக் கண்டு அங்கு வந்த பிரணவ் இவர்களின் செயலில் கோபம் மூண்டு, "ஆகாஷ்‌..." எனக் கத்த, இருவரும் பதறி விலகினர்.

பிரணவ், "என்ன நடக்குது இங்க ஆகாஷ்? இதென்ன ப்ளே க்ரௌண்ட்டா? உங்க விளையாட்டை எல்லாம் ஆஃபீஸுக்கு வெளிய வெச்சிக்கோங்க... கண்டிப்பா இதுக்கு உங்களுக்கு பனிஷ்மன்ட் இருக்கு... மேனேஜ்மன்ட் கிட்ட சொல்லி உங்க ரெண்டு பேரோட இந்த மந்த் போனஸை கட் பண்றேன்..." என்றான் கோபமாக.

பிரணவ்வின் கோபத்திற்கு பயந்து அனைவரும் கலைந்து செல்ல, தலைகுனிந்து நின்றிருந்த இருவரையும் முறைத்த பிரணவ், "இன்னும் என்ன நிற்கிறீங்க? வேலையைப் பாருங்க... ஆகாஷ்... என் கேபினுக்கு வாங்க..." எனக் கட்டளையிட்டு விட்டு சென்றான்.

பிரணவ் சென்றதும் சாருமதி ஆகாஷை ஏகத்துக்கும் முறைக்க, 'ஆத்தி... குட்டச்சி காளி அவதாரம் எடுத்துட்டா... எஸ்கேப் ஆகிடுடா ஆகாஷ்...' என மனதில் எண்ணியவன், "இதோ வந்துட்டேன் பாஸ்..." என்றவாறு பிரணவ்வின் அறைக்கு ஓடினான்.

************************************

வாஷ்ரூம் வந்த அனுபல்லவி கண்ணாடியில் தெரியும் தன் விம்பத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தாள்.

பிரணவ்வின் நெருக்கத்தில் சிவந்த அவளின் காது மடல்கள் இன்னும் சிவப்பாகவே இருந்தன.

பிரணவ் தொட்ட இடம் கூட இன்னும் குறுகுறுக்க, "ஐயோ... கொல்றானே..." என வெட்கத்தில் முகத்தை மூடிக் கொண்டாள் அனுபல்லவி.

'அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம்? என்ன ஆச்சு அனு உனக்கு? நோ அனு... கூல் டவுன்... அவர் வேணும்னே உன்ன சீண்டுறார்... மாட்டிக்காதே...' என மனதிற்குள் பேசிய அனுபல்லவி வெளியே ஏதோ சத்தம் கேட்கவும் முகத்தில் நன்றாக நீரை அடித்துத் துடைத்துக் கொண்டு வெளியே செல்ல, வாஷ்ரூமுக்கு வெளியே அர்ச்சனா நின்றிருந்தாள்.

அனுபல்லவி அவளைக் கண்டு கொள்ளாமல் தன் பாட்டுக்கு செல்ல, அர்ச்சனா தான் அவளின் சிவந்திருந்த முகத்தை சந்தேகமாக நோக்கினாள்.

உடனே பிரதாப்பிற்கு அழைத்த அர்ச்சனா அவன் அழைப்பை ஏற்றதும் கத்தத் தொடங்கினாள்.

அர்ச்சனா, "நீ இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க பிரதாப்? பெரிசா சபதம் போட்ட அந்த அனுவை என் வழில இருந்து தூக்கி காட்டுறேன்னு... போற போக்க பார்த்தா எனக்கு எதிரா தான் எல்லாம் நடக்கும் போல... நீ அவளை எதுவுமே பண்ணலயா?" எனக் கோபமாகக் கேட்க,

"ஏய்... என்ன ரொம்ப தான் சத்தம் போடுற? இங்க உனக்கு தான் என் ஹெல்ப் தேவை... எனக்கு இல்ல... நான் எதுவுமே பண்ணலன்னு நினைச்சிட்டு இருக்கியா? நான் என்ன பண்ணினாலும் அந்த பிரணவ் என் எல்லாப் ப்ளேனையும் தவிடு பொடியாக்குறான்... கொஞ்சம் நாள் பொறுமையா இருந்து அவங்க எதிர்ப்பார்க்காத சமயம் தான் காயை நகர்த்தணும்... உனக்கு அவ்வளவு அவசரம்னா நீயே ஏதாவது பண்ணி வழக்கம் போல அவன் கிட்ட மாட்டிக்கோ..." எனக் கோபத்தில் கத்தி விட்டு பிரதாப் அழைப்பைத் துண்டிக்கவும் கோபத்தில் பல்லைக் கடித்த அர்ச்சனா காலால் தரையை உதைத்தாள்.

 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 14

அடுத்து வந்த நாட்களில் எல்லாம் பிரணவ் அனுபல்லவியை எப்போதும் தன் முன்னே வைத்திருப்தற்காக இல்லாத வேலைகள் எல்லாம் அவளுக்கு கொடுக்க, மனதில் அவனைத் திட்டித் தீர்த்தாலும் அனைத்தையும் ஒழுங்காக செய்தாள் அனுபல்லவி.


இடைக்கிடையே வேண்டுமென்றே பிரணவ் அனுபல்லவியை சீண்டுவதும் அதில் அவள் படும் அவஸ்தையை ரசிப்பதுமாக இருந்தான்.


அனுபல்லவிக்கு தான் பிரணவ்வின் மாற்றத்திற்கான காரணமும் புரியாமல் அவனின் சீண்டல்களால் உள்ளுக்குள் அவன் மேல் எழும் காதலை மறைக்கவும் முடியாமல் திண்டாடினாள்.


இவர்களுக்கு நடுவில் அர்ச்சனா தான் பிரணவ்வை அனுபல்லவியிடம் இருந்து மொத்தமாக விலக்க சரியான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.


ஆகாஷோ சாருமதியை வெறுப்பேற்றி பதிலுக்கு சாருமதி அவனுடன் சண்டையிடும் நிமிடங்களை எல்லாம் சுவாரசியமாக ரசித்தான்.


சரியாக ஒரு வாரத்தில் அனுபல்லவியின் தலைமையில் பிரணவ்வின் வழி நடத்தலில் மிஸ்டர் மெஹெராவிடம் வாக்களித்த ஒரு மாதத்திலேயே வெற்றிகரமாக அந்த பிராஜெக்டை பிரணவ்வின் குழு நிறைவு செய்தனர்.


இதில் அனுபல்லவிக்குத் தான் ஏகபோக மகிழ்ச்சி. பிரணவ் தன்னை நம்பி ஒப்படைத்த முதல் ப்ராஜெக்டை எந்தவொரு பிரச்சினையும் இன்றி நிறைவு செய்ததால் வந்த மகிழ்ச்சி அது.


ப்ராஜெக்ட் வேலைகள் சிறப்பாக முடியவும் அனைவரையும் மீட்டிங் ஹாலில் ஒன்று கூட்டி இருந்தான் பிரணவ்.


அனைவரும் வந்து அமரவும் அவர்களைப் பார்த்து புன்னகைத்த பிரணவ், "இந்த வன் மந்த்தா எல்லாரையும் ரொம்ப படுத்திட்டேன்னு நினைக்கிறேன்..." என்கவும் அனைவரும் புன்னகைக்க, அனுபல்லவியோ, 'எல்லாரையும் எங்க படுத்தினீங்க? என்னைத் தானே வெச்சி செஞ்சீங்க...' என உள்ளுக்குள் கறுவினாள்.


பிரணவ்விற்கு அவளின் முக பாவனையில் இருந்தே அவள் என்ன நினைக்கிறாள் எனப் புரிந்து கொண்டவன் யாரும் கவனிக்காத நேரம் அவளைப் பார்த்து கண் அடிக்க, அனுபல்லவியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன. அதற்கு மாறாக அவளின் கன்னங்களோ வெட்கச் சதுப்பைப் பூசிக் கொண்டன.


தன் தொண்டையை செறுமிய பிரணவ், "அப்புறம் ஒரு குட் நியுஸ் சொல்லத் தான் உங்க எல்லாரையும் இன்னைக்கு கூப்பிட்டேன்..." என்கவும் அனைவரும் அவனை ஆர்வமாக நோக்க, "நான் எதிர்ப்பார்த்ததை விடவே இந்த ப்ராஜெக்டை நீங்க எல்லாரும் ரொம்ப நல்லாவே கம்ப்ளீட் பண்ணி இருக்கீங்க... வெல் டன் காய்ஸ்..." எனக் கை தட்டவும் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.


பிரணவ், "என்ட் ஆல்சோ மிஸ் பல்லவியை கண்டிப்பா நாம பாராட்டியே ஆக வேண்டும்... ஏன்னா இது அவங்க கைட் பண்ற ஃப்ர்ஸ்ட் ப்ராஜெக்ட்... பட் எந்தவொரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு அவங்க வர்க்க அவ்வளவு அழகா பண்ணினாங்க..." என்கவும் அங்கிருந்த அனைவரும் அவளுக்காக கை தட்ட, அர்ச்சனாவோ பல்லைக் கடித்து தன் கோபத்தை அடக்கினாள்.


"சூப்பர் டி அனு..." என சாருமதி அவளை அணைத்துக்கொள்ள, புன்னகைத்த அனுபல்லவி எழுந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்தாள்.


"சரி இப்போ அந்த குட் நியூஸ் என்னன்னு சொல்றேன்..." என்ற பிரணவ் அனைவரும் அவனின் முகத்தையே ஆவலுடன் நோக்கிக் கொண்டிருப்பதைக் கண்டு புன்னகைத்தவன், "இந்த ப்ராஜெக்ட்டை நீங்க சக்சஸ்ஃபுல்லா முடிச்சதால இந்த மந்த உங்க சேலரி டபள் ஆக்கப்பட்டிருக்கு..." என்கவும், "ஹே....." என அனைவரும் உற்சாகமாகக் கத்தினர்.


ஆகாஷ், "சைலன்ட்ஸ்... சைலன்ட்ஸ்..." என அவர்களை அடக்கவும் அமைதி அடைந்தனர் அனைவரும்.


பிரணவ், "இந்த சக்சஸை செலிப்ரேட் பண்ணும் விதமா உங்க எல்லாருக்கும் நம்ம கம்பெனி சார்பாக இன்னைக்கு லஞ்ச் அரேன்ஜ் பண்ணி இருக்கு... ஹோப் யூ ஆல் என்ஜாய்..." என்று விட்டு முடித்துக் கொண்டான்.


அனைவரும் உற்சாகமாக மீட்டிங் ஹாலில் இருந்து கலைந்து செல்ல, சாருமதியுடன் செல்லப் போன அனுபல்லவியை, "பல்லவி... ஒரு நிமிஷம்..." என தடுத்து நிறுத்தினான் பிரணவ்.


சாருமதியும் அவளுடன் நிற்க, "மிஸ் சாருமதி... நீங்க கிளம்புங்க... பல்லவி கூட இம்பார்டன்ட் விஷயம் ஒன்னு பேச இருக்கு..." எனப் பிரணவ் கூறவும் அனுபல்லவி கண் காட்டவும் சாருமதி அங்கிருந்து செல்ல, அவளுடன் கூடவே பின்னால் சென்றான் ஆகாஷ்.


அனுபல்லவி, "சொல்லுங்க சார்..." என்கவும், "அது... பல்லவி... நாளைக்கு ஈவ்னிங் மிஸ்டர் மெஹெராவோட பார்ட்டி ஒன்னு இருக்கு... அதுக்கு நீங்களும் என் கூட வரணும்..." என்றான் பிரணவ்.


"சார்... நான் எதுக்கு?" எனத் தயங்க, "ஏன்? என் கூட வரது உங்களுக்கு இஷ்டம் இல்லையா? இல்லன்னா நான் உங்களை ஏதாவது பண்ணிடுவேனோன்னு பயப்படுறீங்களா?" என்றான் பிரணவ்.


எவ்வளவு முயன்றும் தன் வார்த்தைகளில் இருந்த கடுமையை பிரணவ்வால் மறைக்க முடியவில்லை. அனுபல்லவி மறுக்கவும் ஏன் என்றே தெரியாத ஒரு கோபம் துளிர் விட்டது.


பிரணவ்வின் கோபத்தில் பதறிய அனுபல்லவி, "ஐயோ அப்படி எதுவும் இல்ல சார்... நான் சும்மா தான் கேட்டேன்..." என்க, "மிஸ்டர் மெஹெரா தான் உங்களை இன்வைட் பண்ணினார்..." என்றான் பிரணவ்.


அனுபல்லவி, 'அச்சோ அனு... கொஞ்சம் கூட உனக்கு அறிவில்ல... இந்த வன் வீக்கா தான் அவர் உன் கிட்ட நல்லா பேசுறார்... வீணா திரும்ப அவரைக் கோவப்படுத்திட்ட...' என மனதில் தன்னையே கடிந்து கொண்டவள், "நான் வரேன் சார்... எத்தனை மணிக்கு பார்ட்டி? எங்க நடக்கும்?" எனக் கேட்கவும் மனதில் எழுந்த மகிழ்ச்சியை வெளியே காட்டாத பிரணவ், "ஈவ்னிங் ஃபைவ் அ க்ளாக் போல ரெடி ஆகி இருங்க... நானே உங்களை வந்து பிக்கப் பண்றேன்..." என்றான்.


தானே வருவதாக கூற வந்த அனுபல்லவி பிரணவ்வின் கோபம் நினைவு வந்தவளாய், "ஓக்கே சார்... அப்போ நான் போகட்டா?" எனக் கேட்டாள்.


பிரணவ், "என்ன அவசரம்? கொஞ்சம் இருங்க..." என்றவன் வண்ணக் காகிதத்தால் சுற்றிய ஒரு பெட்டியை அனுபல்லவியிடம் நீட்டவும் அனுபல்லவி தயக்கமாக, "என்ன சார் இது?" எனக் கேட்க, "ஏன்? சொன்னா தான் வாங்கிக்குவீங்களா?" எனப் பிரணவ் சற்று கடுமையாகக் கேட்கவும் சட்டென அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டாள் அனுபல்லவி.


அனுபல்லவிக்கு தெரியாமல் லேசாகப் புன்னகைத்த பிரணவ், "நாளைக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டுட்டு ரெடி ஆகிட்டு இருங்க..." என்றான் கட்டளையாக.


"ம்ம்ம்ம்ம்..." எனத் தலையாட்டிய அனுபல்லவி அங்கேயே நிற்க, அவளைப் புருவம் உயர்த்தி கேள்வியாக நோக்கிய பிரணவ், "இன்னும் என்ன?" என்க, "ஆஹ்... ஒன்னும் இல்ல சார்... நான் போறேன்..." என்று விட்டு அவசரமாக அங்கிருந்து சென்றாள்.


அனுபல்லவி சென்றதும் பெருமூச்சு விட்டபடி தன் இருக்கையில் அமர்ந்த பிரணவ், "ஹப்பாடா... ஒரு வழியா அவ எந்த கேள்வியும் கேட்காதது போல பண்ணிட்டேன்... ஒரு கிஃப்ட் கொடுக்க இருக்குற பாடு... ஐயையோ... உன் நிலமை ரொம்ப மோசம்டா பிரணவ்..." எனக் கூறிப் புன்னகைத்தவனின் முகம் திடீரென மாறியது.


தலையில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போல் வலியை உணர, தலையை அழுத்தப் பற்றிக் கொண்டான்.


சில நிமிடங்கள் கழித்து வலி லேசாக மட்டுப்படுவது போல் இருக்க, ட்ராயரைத் திறந்து தலைவலி மாத்திரையை எடுத்து போட்டுக் கொண்டான்.


இங்கு சாருமதியைத் தொடர்ந்து வந்த ஆகாஷோ, "ஹேய் குட்டச்சி..." எனக் கத்த, கோபத்துடன் அவன் பக்கம் திரும்பிய சாருமதி அவன் முன் விரல் நீட்டி ஏதோ சொல்ல முயன்றவள் என்ன நினைத்தாலோ கண்ணை மூடி தன்னை சமன்படுத்திக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.


சாருமதி அமைதியாகப் போவது ஆகாஷிற்கு ஏதோ போல் இருக்க, ஓடிச் சென்று அவள் முன் நின்று வழி மறித்தான்.


சாருமதி அவனைக் கேள்வியாக நோக்கவும் "ஈஈஈஈ..." என இளித்த ஆகாஷ், "சாரி குட்டச்சி..." என்க, "இங்க பாருங்க ஆகாஷ்... உங்க கூட பேசினாவே சண்டை தான் வருது... தயவு செஞ்சி என்னை டிஸ்டர்ப் பண்ணாம போங்க..." என்றாள் சாருமதி சலிப்பாக.


ஆகாஷ், "மதி... உன் கிட்ட மட்டும் தான் நான் இப்படி நடந்துக்குறேன்... உன்னை சீண்ட எனக்கு பிடிச்சிருக்கு..." என்க, அவனின் பிரத்தியேகமான அழைப்பு சாருமதியில் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ண, அதனை முகத்தில் காட்டாதவள், "ஏன் என்னைப் பார்த்தா உங்களுக்கு லூசு போல தெரியுதா? எப்பப்பாரு ஏதாவது சொல்லி சீண்டிட்டே இருக்க..." என்றாள் முறைப்புடன்.


'கொஞ்சம் ஓவரா தான் போய்ட்டோமோ?' என எண்ணிய ஆகாஷின் முகம் வாடியது.


"சாரி மதி... இனி உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்... பட் நான் உன்ன லவ் பண்றேன்னு சொன்னது நிஜம் தான்... அது விளையாட்டுக்கு சொல்லல..." என்ற ஆகாஷ் அங்கிருந்து நகர, 'என்ன பட்டுன்னு சாரி கேட்டுட்டு போறான்? விடக் கூடாதே...' என நினைத்த சாருமதி, "ஹேய் பனைமரம்..." என அழைக்கவும் அவள் பக்கம் திரும்பினான் ஆகாஷ்.


சாருமதி, "என்ன நீ ஈஸியா சாரி சொல்லிட்டு போற? இவ்வளவு நாளா என்னை சீண்டினதுக்கு எல்லாம் பனிஷ்மென்ட்டா இன்னைக்கு உன் பர்ஸை காலி பண்ண போறேன்... மரியாதையா வந்து பில் பே பண்ணுங்க..." என்கவும் ஆகாஷ் சரி எனத் தலையசைக்க, கேன்டினை நோக்கி நடந்த சாருமதி ஆகாஷைக் கடந்து செல்லும் போது, "லவ் பண்ணுறேன்னு சொல்லுவாங்களாம்... ஆனா நம்மள இம்ப்ரஸ் பண்றது போல எதுவும் பண்ண மாட்டார்... சீண்டுறதுல மட்டும் குறைச்சல் இல்ல..." என முணுமுணுத்தவாறு செல்ல, அதனைக் கேட்ட ஆகாஷின் இதழ்கள் தானாக மலர்ந்தன.


************************************


மறுநாள் மாலை தன் வீட்டில் அனுபல்லவி பார்ட்டிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்க, அவளையே புருவம் சுருக்கி பார்த்த சாருமதி, "அனு... இந்த ட்ரெஸ் எப்போ வாங்கின? நான் இதுவரை உன் கிட்ட இப்படி ஒரு ட்ரெஸ்ஸ பார்த்ததே இல்லயே... ரொம்ப ரிச்சா வேற இருக்கு..." என்க, தோழியின் கேள்வியில் தன் முகத்தில் தெரிந்த பதட்டத்தை மறைத்த அனுபல்லவி, "அது... சாரு... நேத்து பிரணவ் சார் மிஸ்டர் மெஹெராவோட பார்ட்டிக்கு இன்வைய்ட் பண்ணி இருக்காங்கன்னு சொன்னதும் வரும் போது வாங்கிட்டு வந்தேன்... அங்க பார்ட்டிக்கு பெரிய பெரிய இடத்துல இருந்து வருவாங்க... அதான் டி நல்ல ரிச் ட்ரெஸ்ஸா வாங்கினேன்... இந்த மந்த் சேலரி கூட டபிளா தருவாங்க தானே... சோ எந்தப் பிரச்சினையும் இருக்காது..." என சமாளிக்கவும் சரி எனத் தலையசைத்தாள் சாருமதி.


சரியாக மாலை ஐந்து மணி வாக்கில் பிரணவ் அனுபல்லவியின் வீட்டின் முன் வந்து ஹார்ன் அடிக்க, கிளம்பத் தயாரான அனுபல்லவியிடம் வந்த சாருமதி, "அனு... பார்த்து பத்திரமா போய்ட்டு வா... உனக்கு இந்த பார்ட்டி எல்லாம் புதுசு... பிரணவ் சார் கூட போறதனால பயம் இல்ல... ஆனா அங்க வர எல்லாரையும் நம்ப முடியாதே... ஜாக்கிரதையா இரு..." என்கவும் புன்னகைத்த அனுபல்லவி, "சரி சாரு... நான் கவனமா இருக்கேன்... நீ எனக்காக வெய்ட் பண்ணிட்டு இருக்காதே... தூங்கு... என் கிட்ட தான் இன்னொரு கீ இருக்குல... சரி டி... அப்போ நான் கிளம்புறேன்..." என்று விட்டு புறப்பட்டாள்.


அனுபல்லவி வரும் வரை கார் ஸ்டீரிங் வீலில் விரல்களால் தாளமிட்டபடி இருந்த பிரணவ்வின் விழிகள் இமைக்க மறந்தன.


பிரணவ் நேற்று கொடுத்த பார்டரில் கல் வேலை செய்யப்பட்ட இளஞ்சிவப்பு நிற சாரியில் அதற்கேற்றவாறு பட்டர்ஃப்ளை ஸ்லீவ் ப்ளவுஸ் அணிந்து அவளின் நீண்ட சுருள் கூந்தலை விரித்து மொத்தமாக ஒரு பக்கம் போட்டு அளவான ஒப்பனையில் தோதான நகைகளுடன் நடந்து வந்த அனுபல்லவியை விட்டு பிரணவ்வின் விழிகள் அகல மறுத்தன.


அனுபல்லவி வந்து காரில் ஏறிய பின்பும் பிரணவ் அதே நிலையில் இருக்க, "சார்..." என்ற அனுபல்லவியின் குரலில் தன்னிலை அடைந்து அவசரமாக பார்வையைத் திருப்பிக் கொண்டான்.


பிரணவ்வின் பார்வையில் அனுபல்லவியின் மொத்த உடலும் சிலிர்த்து அடங்க, பிரணவ்வோ இரு கைகளாலும் முகத்தை தேய்த்து விட்டவன், 'இப்படியாடா பிரணவ் பார்த்து வைப்ப? பல்லவி உன்ன பத்தி என்ன நினைச்சி இருப்பா? இதுக்கு முன்ன பொண்ணுங்களை பார்த்ததே இல்லையா? ஓஹ் காட்... கன்ட்ரோல் யுவர் செல்ஃப் பிரணவ்...' என அனுபல்லவியின் பக்கம் அலை பாயும் தன் மனதை அடக்க வெகுவாகப் போராடினான்.


'ஏன் நான் பார்க்க கூடாதா? எனக்கு இல்லாத உரிமையா?' என பிரணவ் தன் மனதிடம் கேள்வி எழுப்ப, பிரணவ் இன்னும் காரை உயிர்ப்பிக்காமல் முகத்தை மூடியபடி அமர்ந்திருக்கவும் அவனுக்கு என்னவோ என பதட்டமடைந்த அனுபல்லவி பிரணவ்வின் தோள் தொட்டு, "சார்... என்னாச்சு? ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்கவும் நிமிர்ந்த பிரணவ், "ஐ... ஐம் ஓக்கே பல்லவி... போகலாம்..." எனக் காரை உயிர்ப்பித்தான்.


அப் பயணம் வெகு அமைதியாகக் கழிய, இருவரின் மனங்களோ மற்றவரின் அருகாமையை எண்ணி உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டன.


அனுபல்லவியின் அருகாமையில் பிரணவ்வின் உடலில் ஹார்மோன்கள் தன் வேலையை சிறப்பாக ஆரம்பிக்க, ஏசி போட்ட காரிலும் அவனுக்கு வியர்த்து வடிந்தன.


இதே நிலை நீடித்தால் நிச்சயம் தன் வசம் இழப்போம் எனப் புரிந்து கொண்ட பிரணவ் அதனைக் கலைக்கும் விதமாக மியூசிக் பிளேயரை ஆன் செய்ய, அதுவும் கூட அவனுக்கு எதிராக செய்தது.


பாடல் வரிகளில் அனுபல்லவியின் முகம் சிவக்க, விஜய் யேசுதாஸின் குரல் அவ் ஏகாந்த நிலையை மேலும் அதிகரிக்க, இருவரின் பார்வையும் தம் இணைகளுடன் கலக்க முயற்சித்தன.


தெளிமானம் மழவில்லின்
நிறம் அணியும் நேரம்
நிறமார்ந்நொரு கனவு என்னில்
தெளியுன்ன போலே


புழையோரம் தழுகும்
தண்ணீரும் காற்றும்
புளகங்ஙள் இழை நெய்‌தொரு
குழல் ஊதிய போலே


குளிரேகும் கனவு என்னில்
கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம்
தளிராடிய நேரம்


அகம் அருவும் மயிலிணைகள்
துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம்
பகருன்ன யாமம்


அழகே…!!!
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே…!!!
என்னுயிரில் விடரும் பனிமலரே


மலரே நின்னை
காணாதிருந்நால்
மிழிவேகிய நிறமெல்லாம்
மாயுன்ன போலே


அலிவோடு என் அரிகத்தின்
அணையாதிருந்நால்
அழகேகிய கனவெல்லாம்
அகலுன்ன போலே


ஞானென்றே ஆத்மாவின்
ஆழத்தின் உள்ளில்
அதிலோலம் ஆரோரும்
அறியாதே சூட்சிச்ச


தாளங்கள் ராகங்கள்
ஈணங்களாயி
ஓரோரு வர்ணங்களாயி


இடறுன்னு ஒரென்றே
இடை நெஞ்சின் உள்ளில்
ப்ரணயத்தின் மழையாய்
நீ பொழியுன்னீ நாளில்


தளருன்னு ஒரென்றே
தனு தோறும் நின்றே
அலை தல்லும் ப்ரணயத்தால்
உணரும் மலரே… அழகே…


குளிரேகும் கனவு என்னில்
கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம்
தளிராடிய நேரம்


அகம் அருவும் மயிலிணைகள்
துயில் உணரும் காலம்
என் அகதாரில் அனுராகம்
பகருன்ன யாமம்


அழகே…!!!
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே…!!!
என்னுயிரில் விடரும் பனிமலரே...



இதே நிலை அவர்கள் திரும்பி வரும் பொழுதும் நீடிக்குமா?
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 15
அந்த ரம்யமான பொழுதை இருவரும் ஒருவர் கண்களை ஒருவர் காதலுடன் நோக்கியவாறு ரசித்துக் கொண்டிருக்க, திடீரென பின்னால் ஒலித்த ஹார்ன் ஒலியில் தான் இருவரும் தன்னிலை மீண்டனர்.

அப்போது தான் பிரணவ் வண்டியை சிக்னலில் நிறுத்தி இருப்பது புரிய, அவன் இருந்த நிலையில் சிக்னலில் காரை நிறுத்தியதை கூட உணராது இருந்ததை எண்ணி வெட்கத்தில் ஒற்றைக் கையால் முகத்தை மறைத்துக் கொண்டான்.

அனுபல்லவியும் சிவந்த முகத்துடன் மறுபுறம் திரும்பிக்கொள்ள, மீண்டும் பின்னால் இருந்த வாகனங்கள் ஹார்ன் அடிக்கவும் விரைவாக தன் காரை உயிர்ப்பித்தான் பிரணவ்.

சற்று நேரத்திலேயே கார் பார்ட்டி நடக்கும் இடத்தை அடைய, முதலில் காரை விட்டு இறங்கிய பிரணவ் அனுபல்லவி இறங்குவதற்காக மறுபக்கம் வந்து கதவைத் திறந்து விட்டான்.

'என்ன இவர் இப்படி எல்லாம் பண்ணுறார்?' எனப் புன்னகையுடன் எண்ணியபடியே காரில் இருந்து இறங்கினாள் அனுபல்லவி.

இருவருமே ஒன்றாகவே பார்ட்டி நடக்கும் ஹாலுக்குள் நுழைய, அந்த ஹாலின் பிரம்மண்டத்தைக் கண்டு அசந்து போன அனுபல்லவியின் கண்கள் விரிந்தன.

"ஹேய் மிஸ்டர் பிரணவ்...வெல்கம்... ஹவ் ஆர் யூ மேன்?" என பிரணவ்வை வரவேற்றபடி வந்தார் மிஸ்டர் மெஹெரா.

பிரணவ், "ஐம் குட் மிஸ்டர் மெஹெரா..." எனப் புன்னகையுடன் பதிலளிக்கும் போதே அனுபல்லவியைக் கண்டு கொண்ட மிஸ்டர் மெஹெரா, "ஹாய் மிஸ் பல்லவி... நைஸ் டு மீட் யூ..." என்க, "ஹாய் சார்... மீ டூ..." எனப் பதிலளித்தாள் அனுபல்லவி.

மெஹெரா, "மிஸ்டர் பிரணவ்... திஸ் பார்ட்டி இஸ் அரேன்ஜ்ட் டு செலிப்ரேட் அவர் சக்சஸ்ஃபுல் ப்ராஜெக்ட்... யூ டூ ஆர் தி மோஸ்ட் இம்பார்டன்ட் கெஸ்ட் டுடே... சோ ப்ளீஸ் என்ஜாய் தி பார்ட்டி..." எனும் போதே, "ஹேய் மை பாய்..." என கையில் மதுக் குவளையுடன் வந்து பிரணவ்வை அணைத்துக் கொண்டார் நடுத்தர வயது ஒருவர். அவர் தான் ராமலிங்கம். பிரணவ்வின் தாய் மாமன்.

அவரைக் கண்டதும் முகம் மலர்ந்த பிரணவ்விற்து ஆகாஷ் கூறியதும் சேர்ந்து நினைவு வந்து அது பற்றி இன்று அவரிடம் பேசியே ஆக வேண்டும் என முடிவெடுத்தவன், "நல்லா இருக்கேன் மாமா..." என்றான்.

மெஹெரா, "ஹேய் காய்ஸ்... ஆர் யூ ரிலேடிவ்ஸ்?" எனக் கேள்வியாக நோக்கவும் பிரணவ்வின் தோளில் கரத்தைப் போட்ட ராமலிங்கம், "ஹீ இஸ் மை நெஃபிவ்..." என்றவர் பிரணவ்விடம் திரும்பி, "பிரணவ்... நானும் மிஸ்டர் மெஹெராவும் ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்..." என்கவும் புன்னகையுடன் தலையசைத்தான் பிரணவ்.

யாரோ அழைக்கவும், "ஐ வில் கெட் யூ பெக்..." என்று விட்டு மெஹெரா அங்கிருந்து சென்று விட, அப்போது தான் பிரணவ்வின் அருகில் தயக்கமாக நின்று கொண்டிருந்த அனுபல்லவியைக் கவனித்தார் ராமலிங்கம்.

பிரணவ் அங்கு வந்த ஒரு தொழிலதிபருடன் பேசிக் கொண்டிருக்க, ராமலிங்கமின் பார்வை அனுபல்லவியை மேலிருந்து கீழாக அங்குலம் அங்குலமாக அளவிட, அனுபல்லவியின் முதுகுத்தண்டு சில்லிட்டது.

தன்னை அறியாமலே பயத்தில் பிரணவ்வின் கரத்தை பற்றிப் பிடித்தவளை குழப்பமாகப் பார்த்தவன் அவள் பார்வை சென்ற திக்கில் பார்வையைத் திருப்ப, அவன் கண்கள் கோபத்தில் சிவந்தன.

அவன் கூலர்ஸ் அணிந்து இருந்ததால் யாரின் கண்களுக்குமே புலப்படாமல் போக, அனுபல்லவியின் இடை பற்றி தன் அருகே நெருக்கமாக நிற்க வைத்தவனின் அணைப்பு அனுபல்லவியின் பயத்தை ஓரளவு குறைத்தது.

ராமலிங்கம், "அப்புறம்... யாரு மாப்பிள்ளை இது? எத்தனை நாளைக்கு இந்த கேஸ்?" என அனுபல்லவியைப் பார்த்துக் கொண்டு கேட்க, அனுபல்லவியின் கண்கள் சட்டெனக் கலங்கி விட்டன.

பிரணவ் ராமலிங்கத்திடம் கோபமாக ஏதோ கூற முனையும் போது அந்த பார்ட்டி ஹால் விளக்குகள் அணைக்கப்பட்டு இருளடைந்து மேடையில் மட்டும் ஒளி பிறப்பிக்கப்பட்டது.

ஒலிவாங்கியுடன் மேடையில் நின்ற மெஹெரா, "ஹெலோ எவ்ரிபாடி... ஃபர்ஸ்ட் ஆப் ஆல் ஐ வுட் லைக் டு எக்ஸ்ப்ரெஸ் மை க்ரடிடியுட் டு எவ்ரிவன் ஹூ எக்சப்டட் மை ரிகுவெஸ்ட் என்ட் கேம் ஹியர்... திஸ் பார்ட்டி அரேன்ஜ்ட் டு அப்ரிசியேட் மிஸ்டர் பிரணவ் ஃபார் கம்ப்ளீட்டிங் மை ப்ராஜெக்ட் சக்சஸ்ஃபுலி..." என்கவும் அங்கு வந்திருந்த அனைவரும் கை தட்ட, பிரணவ் புன்னகைத்தான்.

மெஹெரா, "ஓக்கே காய்ஸ்... லெட்ஸ் என்ஜாய் தி பார்ட்டி..." என்கவும் பாடல்கள் ஒலிக்க, அங்கு வந்திருந்த ஆண்கள், பெண்கள் எனப் பாகுபாடின்றி அனைவருமே கையில் மதுக் குவளைகளுடன் நடனமாட, அதனைக் கண்டு முகம் சுழித்தாள் அனுபல்லவி.

வெய்ட்டர் ஒருவர் மதுக்குவளைகளை ஏந்திக் கொண்டு பிரணவ் இருந்த இடத்திற்கு வர, அதிலிருந்து ஒரு குவளையைக் கையில் எடுத்தவன் வெய்ட்டரிடம் ஆரேன்ஜ் ஜூஸ் ஒன்று கொண்டு வரும்படி கட்டளை இட்டான்.

பிரணவ் மதுக் குவளையை கையில் எடுத்ததுமே அனுபல்லவியின் முகம் வாட, அதனைக் கவனித்தவன், "என்னாச்சு?" எனக் கேட்கவும் ஒன்றுமில்லை எனத் தலையாட்டிய அனுபல்லவி அப்போது தான் தன் இடையைச் சுற்றி இருந்த பிரணவ்வின் கரத்தைக் கவனித்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

அந்த நேரம் ஏதோ ஒரு கோபத்தில் அவளை அணைத்திருந்தவனுக்கும் அப்போது தான் அது புரிய, "ஓஹ்... சாரி பல்லவி... ரியலி சாரி..." எனத் தன் கரத்தை விலக்கிக் கொண்டான் பிரணவ்.

அனுபல்லவியின் முக மாற்றத்தைக் கண்டு, தான் அவளை அணைத்ததை அவள் விரும்பவில்லை போல எனத் தவறாக எண்ணிய பிரணவ்விற்கு மனதில் வலி உண்டாக, அதனை மறைக்க கையில் இருந்த மதுவை ஒரே மூச்சில் குடித்து முடித்தான்.

ஆனால் உண்மையாகவே பிரணவ்வின் நெருக்கம் அனுபல்லவியின் காதல் கொண்ட மனதை ஏதோ செய்ய, உள்ளுக்குள் மகிழ்வாக இருந்தது.

சற்று நேரத்திலேயே பிரணவ் கேட்ட ஜூஸுடன் வந்த வெய்ட்டர் அதனை அனுபல்லவியிடம் நீட்ட,பிரணவ் கண் காட்டவும் தயக்கமாக அதனை எடுத்துக் குடித்தாள்.

அனுபல்லவி அந்த ஜூஸைப் பருகுவதை தூரத்திலிருந்து விஷமச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் ராமலிங்கம்.

பிரணவ், "பல்லவி... நீங்க அந்த டேபிள்ல உட்காருங்க... நான் ஒருத்தர் கூட பேசிட்டு வரேன்..." என்றவன் அனுபல்லவி தலையசைக்கவும் அங்கிருந்து சென்றான்.

அனுபல்லவிக்கும் அந்தக் கூட்டத்தின் நடுவே நிற்க ஏதோ போல் இருக்க, பிரணவ் கூறவும் உடனே வந்து ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள்.

திடீரென்று லேசாக தலை சுற்றுவது போல் இருக்க, வாஷ்ரூம் செல்வதற்காக எழுந்தாள்.

அனுபல்லவி வாஷ்ரூம் செல்லவும் விஷமமாகப் புன்னகைத்த ராமலிங்கம் அவளை மெதுவாகப் பின் தொடர்ந்தார்.

முகத்தில் நன்றாக நீரை அடித்த அனுபல்லவி, "என்னாச்சு எனக்கு? ஏன் இப்படி தலை சுத்துது?" என்றவளால் நேராக நிற்க கூட முடியவில்லை.

"ஏன்னா நீ குடிச்ச ஜூஸ்ல மயக்க மருந்து கலந்து இருந்தது..." எனக் கூறியபடி அங்கு வந்தார் ராமலிங்கம்.

அவரை அங்கு எதிர்ப்பார்க்காத அனுபல்லவி, "நீ...நீங்க... இங்...க..." என்றவள் சமநிலை இழந்து விழப் பார்க்க, அவசரமாக அவளைப் பிடித்துக் கொண்டார் ராமலிங்கம்.

அனுபல்லவி, "ச்சீ... என்னை விடுங்க..." என முகம் சுழித்தவள் ராமலிங்கத்திடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளப் போராட, "என்ன பேபி நீ? என் மருமகனுக்கு மட்டும் தான் கம்பனி கொடுப்பியா? எனக்கு எல்லாம் கொடுக்க மாட்டியா?" என முழுப் போதையில் வக்கிரமாகக் கேட்டவரின் பார்வை அனுபல்லவியின் உடலில் மேய்ந்தது.

மயக்க மருந்து அதன் வேலையைக் காட்டத் தொடங்க, கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்த அனுபல்லவி, "பி...பிரணவ்..." என முணுமுணுக்க, ராமலிங்கமோ அனுபல்லவியின் முகத்தை வருடியபடி, "செக்ஸி..." என்றவர் அவளின் தோளில் இருந்த சேலையை மெதுவாக விலக்கி விட்டு அவள் இதழை நோக்கி நெருங்க, அவரை இழுத்து அவரின் முகத்திலே ஒரு குத்து விட்டான் பிரணவ்.

அனுபல்லவியை விட்டு வந்தாலும் பிரணவ்வின் பார்வை முழுவதும் அனுபல்லவியைச் சுற்றியே இருந்தது.

அப்போது தான் அவள் தலையைப் பிடிப்பதும் கஷ்டப்பட்டு எழுந்து வாஷ்ரூம் செல்வதும் கண்ணில் பட, அவளைத் தொடர்ந்து செல்லப் போன பிரணவ்வைப் பிடித்துக் கொண்டார் மெஹெரா.

அவர் ஏதோ முக்கியமான விடயமாக பேசவும் பிரணவ்விற்கு அங்கிருந்து நகர முடியாத நிலை.

ஒருவாறு அவரை சமாளித்து விட்டு அவசரமாக அனுபல்லவி சென்ற திசையில் நடந்தவனுக்கு அனுபல்லவியின் கத்தல் சத்தம் கேட்கவும் எதுவும் யோசிக்காமல் வாஷ்ரூம் கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த பிரணவ் அவனின் மாமாவே தன்னவளிடம் தவறாக நடக்க முற்படுவதைக் கண்டு ஆத்திரமடைந்தவன் அவரின் முகத்தில் ஓங்கி குத்தினான்.

பிரணவ்வின் அடியில் வலியில் முகத்தைப் பிடித்தபடி கீழே விழுந்தார் ராமலிங்கம்.

"பல்லவி..." என அனுபல்லவியைத் தாங்கிக் கொண்ட பிரணவ் அவளின் தோளைச் சுற்றி சேலையைப் போர்த்தி விட்டு முகத்தில் தட்டியும் அனுபல்லவி கண் விழிக்கவில்லை.

உடனே தண்ணீர் பிடித்து அனுபல்லவியின் முகத்தில் தெளிக்கவும் மெதுவாக விழி திறந்தாள் அனுபல்லவி.

அதற்குள் எழுந்த ராமலிங்கம், "என்ன மாப்பிள்ளை? பார்ட்டில என்ஜாய் பண்ண தானே இந்த பொண்ண கூட்டிட்டு வந்த... உன் மாமன் கூட ஷேர் பண்ணிக்க மாட்டியா?" என்கவும் அனுபல்லவி முகம் சுழிக்க, ராமலிங்கத்தின் சட்டையை ஆவேசமாகப் பற்றிய பிரணவ், "எங்க அம்மாவோட தம்பின்னு பார்க்குறேன்... இல்ல இப்போ நீ பண்ண போன காரியத்துக்கு உன்ன வெட்டி போட்டு இருப்பேன்..." என்றான்.

அவனின் கரத்தைத் தட்டி விட்ட ராமலிங்கம், "ஓஹ்... என்னவோ நீ உத்தமன் போல பேசுற... ஏற்கனவே ஒரு பொண்ணைக் காதலிக்கிறது போல நடிச்சி ஏமாத்தினவன் தானே நீ..." என ஏளனமாகக் கூறவும் அனுபல்லவி அதிர்ச்சி அடைய, கோபத்தில் பல்லைக் கடித்த பிரணவ், "அன்னைக்கு ஆக்சிடன்ட் நடக்க காரணம் நீ தான்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்... என்னைப் பகைச்சிக்கிட்டா கம்பி எண்ண வேண்டி வரும்..." என மிரட்டினான்.

அதனைக் கேட்கவும் சத்தமாகச் சிரித்த ராமலிங்கம், "அப்போ உனக்கு எல்லாமே தெரிஞ்சிடுச்சு போல மருமகனே... அதுவும் நல்லதுக்கு தான்... இனிமே உன் முன்னாடி நல்லவன் வேடம் போட வேண்டியதில்ல..." என்கவும் பிரணவ் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தான்.

ஆகாஷ் அவரைப் பற்றிக் கூறியும் பிரணவ் அதனை நம்பவில்லை. இப்போதும் அவரின் வாயால் உண்மையை வரவழைக்கவே அப்படிக் கூற, ராமலிங்கம் உண்மையை ஒத்துக் கொண்டது பிரணவ்விற்கு அதிர்ச்சியாக இருந்தது.

ராமலிங்கம், "ஆமாடா... நான் தான் உன்ன ஆக்சிடன் பண்ண அந்த லாரி ட்ரைவரை செட் பண்ணேன்... கொஞ்சம் கூட உரிமையே இல்லாத நீ எப்படி எங்க அக்கா, மாமாவோட சொத்த உன் இஷ்டத்துக்கு அனுபவிக்கலாம்? " என்கவும் பிரணவ் அவரைப் புரியாமல் நோக்க, "என்ன புரியலயா? ஹஹஹா... உன் பிறப்பை பத்தின பெரிய ரகசியம் ஒன்னு இருக்கு மருமகனே... அதைத் தெரிஞ்சிக்க வேண்டாமா?" என நக்கலாகக் கேட்கவும் அவரின் சட்டையைப் பற்றிய பிரணவ், "என்ன சொல்ற?" எனக் கேட்டான் கோபமாக.

"ரொம்ப ஆத்திரப்படக் கூடாது மாப்பிள்ளை... ஆல்ரெடி உனக்கு ஹெல்த் ப்ராப்ளம் வேற இருக்கு..." என நக்கலாகக் கூறவும் பிரணவ்வின் முகம் இறுக, "சீக்கிரமே உனக்கு எல்லா உண்மையும் தெரிய வரும்... வெய்ட் என்ட் சீ மருமகனே..." என்ற ராமலிங்கம் அங்கிருந்து நகர, பிரணவ்விற்கு குழப்பமாக இருந்தது.

அனுபல்லவி அப்போது தான் நன்றாக மயக்கம் தெளிந்திருக்க, தனக்கு நடக்க இருந்த கொடுமையை எண்ணி கூனிக்குறுகி பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்தாள்.

அனுபல்லவியின் நினைவு வந்து அவள் பக்கம் திரும்பிய பிரணவ்விற்கு அனுபல்லவி நின்றிருந்த தோற்றம் மனதை வாட்ட, "பல்லவி..." எனப் பாய்ந்து அணைத்துக் கொண்டான்.

அவளிடம் இருந்து எந்த சத்தமும் வெளி வரவில்லை. ஆனால் பிரணவ்வின் மார்பு ஈரம் ஆகுவதிலேயே அனுபல்லவி அழுகிறாள் எனப் புரிந்து கொண்டவனின் அணைப்பு மேலும இறுகியது.

பிரணவ், "ஒன்னும் இல்ல பல்லவி... உனக்கு எதுவும் நடக்கல... உனக்கு எதுவும் நடக்க நான் விட மாட்டேன்..." என்றவாறு அனுபல்லவியின் தலையை வருட, "நீங்க மட்டும் வரலன்னா என்ன ஆகி இருக்கும்ங்க? அந்த... அந்த ஆள்... என்னை... என்னை..." என்ற அனுபல்லவியால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

"ஷ்ஷ்ஷ்... ஒன்னும் இல்ல பல்லவி... அதான் நான் வந்துட்டேன்ல... என்னால தான் உனக்கு இந்த நிலமை... நான் தான் உன்ன ஃபோர்ஸ் பண்ணி பார்ட்டிக்கு வர வெச்சேன்... அப்படி கூட்டிட்டு வந்தும் நான் உன்ன சரியா கவனிக்கல... ஐம் சாரி..." என்ற பிரணவ்வின் கண்கள் கலங்கின.

சில நொடிகள் மௌனமாய் கழிய, "வா பல்லவி நாம போகலாம்... இனிமே இங்க இருக்க வேணாம்..." என்ற பிரணவ் அனுபல்லவியை அங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்றான்.

காரில் செல்லும் போது அனுபல்லவி ஓரளவு சமாதானம் அடைந்திருக்க, பிரணவ்வோ ராமலிங்கம் கூறியது பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

பிரணவ்வின் இறுகிய தோற்றத்தைக் கவனித்த அனுபல்லவி, "அது... பீச் போலாமா?" எனத் தயங்கியவாறு கேட்கவும் அவளைக் கேள்வியாக நோக்கினான் பிரணவ்.

அனுபல்லவி, "இன்னைக்கு பௌர்ணமி... பீச்ல இருந்து கடல் அலை சத்தத்தோட சேர்த்து பௌர்ணமி நிலாவை ரசிக்கணும்னு ரொம்ப நாளா ஆசை... அதனால தான் சொன்னேன்..." என்கவும் சரி எனத் தலையசைத்த பிரணவ் கடற்கரையை நோக்கி வண்டியை செலுத்தினான்.

கடல் அலை பாதத்தை நனைக்க, சிறிது தூரம் காலாற நடந்தவர்கள் ஒரு இடத்தில் ஓய்வாக அமர்ந்தனர்.

இருவருமே வானில் தெரிந்த பௌர்ணமி நிலவை சில நொடிகள் ரசிக்க, "அவர் ஏன் உங்களை அப்படி சொன்னார்?" எனத் திடீரெனக் கேட்டாள் அனுபல்லவி.

பிரணவ், "நீ என்ன நினைக்கிற?" என அனுபல்லவியின் கண்களை ஆழமாகப் பார்த்தபடி கேட்க, "அது சும்மா உங்க மேல பழி போடுறார் போல..." என அனுபல்லவி கூறவும் பிரணவ்வின் முகத்தில் ஒரு கசந்த புன்னகை.

"அவர் சொன்னது உண்மை தான்..." என கடலை வெறித்தவாறு பிரணவ் கூறவும் அதிர்ந்தாள் அனுபல்லவி.

பிரணவ், "நான் ஒரு பொண்ண காதலிக்கிறது போல நடிச்சி ஏமாத்தினேன் தான்..." என்றவன் சிறுவயது முதல் பெற்றோர் இருந்தும் அவர்களுடன் ஒன்றாக இருக்காதது பற்றியும் அதிலிருந்து அவர்களின் கவனத்தைக் கவர்வதற்கு வேண்டும் என்றே ஏதாவது தவறு செய்வது, அபினய்யின் நட்பு தொடக்கம் சிதாராவைப் பற்றியும் அனைத்தையும் கூறினான்.

தன் மனதில் இவ்வளவு நாளும் அழுத்திக் கொண்டிருந்த பாரத்தை அனுபல்லவியிடம் கொட்டவும் நிம்மதியாக உணர்ந்த பிரணவ், "தாராவுக்கு நான் பண்ணின அநியாயத்துக்கு தண்டனையா தான் அன்னைக்கு எனக்கு அந்த ஆக்சிடன்ட் ஆகி என்னால ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாத நிலமைக்கு ஆளாகி இருக்கேன்... ஒரு பொண்ணைக் காதலிக்கவோ, கல்யாணம் பண்ணிக்கவோ கொஞ்சம் கூட தகுதி இல்லாதவன் நான்..." எனப் பெருமூச்சு விட்டான்.

சில நிமிடங்கள் மௌனமாய் கழிய, "நீங்க தப்பு பண்ணி இருக்கீங்க தான்... பெண் பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க... நீங்க அந்த தப்பு உணர்ந்து அதுக்கு தண்டனையும் உங்களுக்கு கிடைச்சிடுச்சு... அதே நேரம் ரொம்ப ஆபத்தான நேரத்துல சிதாராவை நீங்க காப்பாத்தி இருக்கீங்க... எப்போ நீங்க உங்க தப்பை மனசார உணருறீங்களோ அப்பவே நீங்க திருந்திட்டீங்க... அதுக்கப்புறம் நீங்க எந்த தப்பும் பண்ணல தானே... இன்னும் ஏன் அப்போ அதை நினைச்சி ஃபீல் பண்றீங்க?" என அனுபல்லவி கூறவும் பிரணவ் அவளின் முகத்தை கேள்வியாக நோக்க, "கடவுளுக்கு தெரியும் எது உங்களுக்கு எப்போ கிடைக்கணும்னு... நிச்சயமா நீங்களும் ஒரு குழந்தைக்கு தந்தை ஸ்தானத்தை பெறுவீங்க... அப்புறம்..." என நிறுத்தி பிரணவ்வின் கண்களைப் பார்த்தாள் அனுபல்லவி.

பிரணவ்வும் அவள் என்ன கூற வருகிறாள் என அவளையே பார்த்திருக்க, "காதலிக்கவும், காதலிக்கப்படவும், கல்யாணம் பண்ணிக்கவும் எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கு..." என்ற அனுபல்லவி பிரணவ்வின் கரத்தை அழுத்தப் பற்றினாள்.

இருவரின் கோர்த்திருந்த கரங்களையே பிரணவ் வெறித்துக் கொண்டிருக்க, "சின்ன வயசுல இருந்தே பாசத்துக்காக ஏங்கி இருக்கீங்க... ஆனா இனிமே அதுக்கு அவசியம் இல்ல... உங்களுக்கு தாயா, தாரமா, குழந்தையா, எல்லாமுமா நான் இருப்பேன் உங்க கூட கடைசி வரைக்கும்..." என அனுபல்லவி கூறவும் பிரணவ்வின் கண்கள் கலங்கின.

பிரணவ் அனுபல்லவியையே பார்த்துக் கொண்டிருக்க, "அன்னைக்கு உங்களுக்கு ஆக்சிடன்ட் ஆகி உங்களை அந்த நிலமைல பார்த்ததும் ஏன்னே தெரியாம என் மனசு உங்களுக்காக ரொம்ப துடிச்சது... உங்களுக்கு எதுவும் ஆக கூடாதுன்னு நான் வேண்டாத தெய்வம் இல்ல... அது ஏன்னு அப்போ புரியல... அப்புறம் ஆஃபீஸ்ல உங்களை ஃபர்ஸ்ட் டைம் பார்த்தப்போ உங்களுக்கு எதுவும் ஆகல... நீங்க நல்லா இருக்கீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன்... என் மனசு கொஞ்சம் கொஞ்சமா உங்க பக்கம் சரிய ஆரம்பிச்சது... நீங்க எப்பவும் ஏதோ ஒரு மாதிரி இறுக்கமாவே இருப்பீங்க..‌. அதைப் பார்க்குறப்போ எல்லாம் உங்க முகத்துல சந்தோஷத்தை கொண்டு வரணும்னு தோணும்... அப்போ தான் எனக்கு புரிஞ்சது என் மனசு முழுசா நீங்க இருக்கீங்கன்னு... உங்க பாஸ்ட் எப்படி இருந்தாலும் எனக்கு முக்கியம் இல்ல... அதெல்லாம் மறந்து போகும் அளவுக்கு என் காதல்ல உங்களை மூழ்கடிக்கணும்... ஐ லவ் யூ பிரணவ்..." என பிரணவ்வின் விழிகளை ஆழமாக நோக்கியபடி கூறிய அனுபல்லவி பிரணவ்வின் நெற்றியில் தன் முதல் இதழ் அச்சாரத்தைப் பதிக்க, அவளைப் பாய்ந்து அணைத்துக்கொண்ட பிரணவ் இத்தனை வருடமும் தான் கட்டுப்படுத்தி வைத்த மொத்த கண்ணீரையும் அனுபல்லவியின் தோளில் அழுது கரைத்தான்.

தன் மொத்த வலியையும் போக்கும் விதமாக அனுபல்லவியை அணைத்துக்கொண்டு கதறிய பிரணவ்வின் தலையை வருடியபடி எதுவும் கூறாது அழ விட்டாள் அனுபல்லவி.

சில மணி நேரம் கழித்து அழுது முடிந்த பிரணவ் மெதுவாக அனுபல்லவியை விட்டு விலகி அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

தனக்குரிய இடத்தை அடைந்து கொண்ட மன நிம்மதியோ என்னவோ அனுபல்லவியின் மடியில் தலை சாய்த்ததுமே பல வருடங்கள் கழித்து நிம்மதியாக உறக்கத்தைத் தழுவினான் பிரணவ்.

குழந்தை போல் புன்னகைத்தபடி தன் மடியில் துயில் கொள்ளும் தன்னவனையே விழி அகற்றாமல் பார்த்த அனுபல்லவி, 'இன்னைக்கு என் மனசுல உள்ள காதலை உங்க கிட்ட சொல்லாம விட்டேன்னா இனி எப்பவுமே அதுக்கான சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு தோணிச்சு பிரணவ்... அதனால தான் இன்னைக்கே எல்லாத்தையும் உங்க கிட்ட சொன்னேன்... என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சதுக்கு அப்புறம் கூட என் மேல இதே காதல் உங்களுக்கு இருக்குமா பிரணவ்?' என எண்ணியவளின் விழி நீர் பிரணவ்வின் கன்னத்தில் விழவும் திரும்பி அனுபல்லவியின் வயிற்றில் முகம் புதைத்தான் பிரணவ்.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 16
பல நாட்கள் கழித்து கடல் காற்று முகத்தை வருட, தன்னவளின் மடியில் நிம்மதியாக உறங்கினான் பிரணவ்.

பிரணவ்வின் தலையை வருடியபடி கடலை வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள்.

தன்னைப் பற்றி முழுவதும் அறிந்தால் பிரணவ் தன்னை ஏற்றுக்கொள்வானா என்ற கேள்வியே அவளை அதிகம் பயமுறுத்தியது.

சில மணி நேரங்களிலேயே விழிப்புத் தட்டிய பிரணவ் கண்டது கடலை வெறித்துக் கொண்டிருந்த அனுபல்லவியைத் தான்.

பிரணவ் சட்டென எழுந்து அமரவும் திடுக்கிட்ட அனுபல்லவி, "என்னாச்சுங்க? உங்க தூக்கத்தை கலைச்சிட்டேனா?" என வருத்தமாகக் கேட்கவும் கலங்கியிருந்த அவளின் கண்களை துடைத்து விட்ட பிரணவ், "சாரி பல்லவி... ரொம்ப நாள் கழிச்சி அசந்து தூங்கிட்டேன்... உனக்கு கால் வலிச்சி இருக்கும்ல..." என்றான் வருத்தமாக.

அனுபல்லவி, "அச்சோ அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல பிரணவ்... அது சும்மா காத்துக்கு கண்ணு கலங்கி இருக்கு... நீங்க நல்லா தூங்கிட்டு இருந்தீங்க... அதான் நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணல..." என்றாள்.

லேசாகப் புன்னகைத்த பிரணவ் அனுபல்லவியை தன் நெஞ்சின் மீது சாய்த்துக்கொண்டு, "நிஜமாவே நான் முன்னாடி பண்ணின தப்பை நினைச்சி உனக்கு என் மேல கோவம் இல்லையா பல்லவி?" எனக் கேட்டான்.

பிரணவ்வின் நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்ட அனுபல்லவி, "நீங்க இன்னுமே அப்படி இருந்தீங்கன்னா நிச்சயம் நான் கோவப்பட்டு இருப்பேன்... வருத்தப்பட்டு இருப்பேன்... ஆனா நீங்க தான் இப்போ திருந்திட்டீங்களே பிரணவ்... என் கிட்ட வரும் போது நீங்க பொண்ணுங்களை மதிக்கிற, அவங்களை கண்ணியமா நடத்துறவரா தானே இருக்கீங்க... அதனால எனக்கு ரொம்ப சந்தோஷம் தான்..." எனப் புன்னகையுடன் கூறவும் அவளைத் தன்னுள் இன்னும் இறுக்கி அணைத்துக் கொண்ட பிரணவ், "பல்லவி... இந்த லைஃப் நீ எனக்கு கொடுத்த மறுஜென்மம்... ஆக்சிடன்ட்டுக்கு அப்புறம் எனக்கு இப்படி ஒரு குறை இருக்குன்னு தெரிஞ்சதும் எதுக்குடா இன்னும் வாழுறோம்னு தோணிச்சு... ஆனா அந்த ஆக்சிடன்ட்டுக்கு அப்புறம் தினமும் என்னைக் காப்பாத்தின பொண்ணோட முகம் என் கனவுல வரும்... ஆனா உன் முகம் சரியா தெரியாது... உன்ன முதல் தடவை பார்த்ததும் என்னையே அறியாம உன்னோட எல்லா செயலையும் ரசிச்சேன்... அதனால எனக்கு என் மேலயே கோபம்... உன்ன காதலிக்க கொஞ்சம் கூட தகுதியே இல்லாத என்னைப் போல ஒரு குறை உள்ளவன் உன்ன எப்படி ரசிக்கலாம்னு... அந்த கோவத்தை தான் முட்டாள் மாதிரி உன் மேல காட்டி உன்ன கஷ்டப்படுத்தினேன்... ஆனாலும் நீ என்னை விட்டு தூரமா போறதை என் மனசு ஏத்துக்கல... அதனால தான் ஏதாவது ஒரு காரணம் காட்டி உன்ன என் கூடவே வெச்சிக்கிட்டேன்... இப்போ இந்த நிமிஷம் தோணுது இப்படியே உன் கைய பிடிச்சிக்கிட்டு நூறு வருஷம் வாழணும்னு..." என்றவன் அனுபல்லவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அதனை விழி மூடி அனுபவித்தாள் அனுபல்லவி.

சில நொடிகள் மௌனமாய் கழிய, "பல்லவி... ரொம்ப லேட் ஆகிடுச்சு... உன் ஃப்ரெண்ட் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பா... வா போகலாம்..." என்ற பிரணவ் எழுந்து அனுபல்லவிக்கு எழுவதற்காக கையை நீட்டினான்.

அனுபல்லவி, "அவ கிட்ட வர லேட் ஆகும்னு ஆஷ்ரெடி இன்ஃபார்ம் பண்ணிட்டேன்..." என்றவள் பிரணவ்வின் கரத்தைப் பற்றி எழுந்து நின்றாள்.

பிரணவ் காரை ஓட்ட, அனுபல்லவி அவனின் தோளில் சாய்ந்தவாறு வர, அனுபல்லவியின் அபார்ட்மெண்ட் வந்ததும் காரை நிறுத்திய பிரணவ் அனுபல்லவியின் கன்னத்தில் முத்தமிட்டு, "நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..." என்கவும் முகம் சிவந்தாள் அனுபல்லவி.

************************************

சாருமதியும் அனுபல்லவியும் மறுநாள் சாவகாசமாக ஆஃபீஸ் வர, மொத்த கம்பனியும் ஒரே பரபரப்பாக இருந்தது.

அவர்களைப் புரியாமல் பார்த்தபடி இருவரும் சென்று தம் இருக்கையில் அமர, ஆகாஷ் அவர்களைக் கடந்து செல்லவும், "ஓய் பனைமரம்..." என அழைத்தாள் சாருமதி.

ஆகாஷ் வாயெல்லாம் பல்லாக, "என்ன குட்டச்சி பேபி?" என இளித்துக்கொண்டு வர, அவனைக் கேவலமாக ஒரு லுக்கு விட்ட சாருமதி, "எதுக்கு இப்போ ப்ரஷ் பண்ண போறது போல மொத்த பல்லையும் காட்டிட்டு இருக்க?" எனக் கேட்கவும் அனுபல்லவி வாயை மூடி சிரித்தாள்.

சாருமதியை முறைத்தவாறு, "சொல்லு என்ன விஷயம்? எதுக்கு கூப்பிட்ட?" எனக் கேட்டான் ஆகாஷ்.

சாருமதி, "ஆமா... இன்னைக்கு ஏதாவது இம்பார்டன்ட் மீட்டிங் இருக்கா? எதுக்கு எல்லாரும் டென்ஷனா இருக்காங்க?" எனக் கேட்கவும், "ஓஹ்... அதுவா... கம்பனி எம்.டி வராங்க இன்னைக்கு..." என்றான் ஆகாஷ் கூலாக.

அனுபல்லவி, "என்ன? மூர்த்தி சார் வராரா? ஏன் முன்னாடியே இன்ஃபார்ம் பண்ணல?" எனப் பதறிக் கேட்க, "அவர் கம்பனி... அவருக்கு வேண்டிய நேரம் அவர் வராரு... உனக்கு என்ன டி வந்துச்சு? ஏதோ தப்பு பண்ணி மாட்டிக்கிட்டது போல முழிக்கிற..." என்றாள் சாருமதி.

அவளைப் பார்த்து இளித்து வைத்த அனுபல்லவி, "ஆமால்ல... சும்மா பயப்படுறேன் நான்..." என்றாள்.

ஆகாஷ், "மூர்த்தி சார் ஒன்னும் இன்னைக்கு வரல... அவர் பையன் தான் வரார்..." என்கவும், "என்ன? அவர் பையனா? எப்படி இருப்பார்? பார்க்க ஹேன்ட்சமா இருப்பாரா?" எனச் சாருமதி கண்கள் பளிச்சிடக் கேட்கவும் ஆகாஷிற்கு உள்ளுக்குள் எரிந்தது.

அவனின் முகம் போன போக்கைப் பார்த்து தனக்குள் சிரித்த சாருமதி, "சொல்லு பனைமரம்... ஆள் பார்க்க எப்படி இருப்பார்?" என வேண்டும் என்றே அவனைக் கடுப்பேற்றுவதற்காக கேட்க, "ஆஹ்... அவர் வந்ததும் நீயே போய் பார்த்துக்கோ..." எனக் கடுப்பாக கூறிய ஆகாஷ், "வந்துட்டா ஹேன்ட்சம் அது இதுன்னு... ஒருத்தன் அவ பின்னாடியே சுத்துறேன்... அதெல்லாம் அவ முட்டைக் கண்ணுக்கு தெரியாது... என் கிட்டயே கேட்குறா பாரு கேள்வி..." என முணுமுணுத்தவாறு அங்கிருந்து செல்லவும் சாருமதி வயிற்றைப் பிடித்துக்கொண்டு சிரித்தாள்.

அனுபல்லவி, "ஹேய் பாவம் டி சாரு அவர்... எதுக்கு சும்மா அவரை டீஸ் பண்ற?" எனத் தோழியைக் கடிந்துகொள்ள, "என்ன எவ்வளவு கடுப்பேத்தி இருப்பான்... கொஞ்சம் நேரம் வயிறு எரியட்டும்..." எனச் சிரித்தாள் சாருமதி.

சற்று நேரத்திலேயே அங்கு வந்த மேனேஜர் மோகன், "காய்ஸ்... சீக்கிரம் எல்லாரும் மீட்டிங் ஹாலுக்கு வாங்க... எம்.டி வந்துட்டு இருக்கார்..." என்கவும் அனைவருமே மீட்டிங் ஹாலிற்கு சென்றனர்.

அனுபல்லவி, 'என்ன இன்னைக்கு இவர் இன்னும் வரல? எம்.டி வேற வராராமே... எம்.டி கிட்ட திட்டு வாங்குவாறோ? ஏதோ சர்ப்ரைஸ் இருக்குன்னு வேற சொன்னாரே...' என எண்ணியபடி சென்றாள்.

மீட்டிங் ஹாலில் அனைவரும் அமர்ந்து தமக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க, புயல் வேகத்தில் கோட் சூட் அணிந்து ஸ்டைலாக அவ் அறைக்குள் நுழைந்தவனைக் கண்டு அனைவரின் கண்களும் அதிர்ச்சியில் விரிந்தன.

சாருமதி திறந்த வாய் மூடாமல் இருக்க, அவனைத் தொடர்ந்து வந்த ஆகாஷோ சாருமதியைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.

அனுபல்லவிக்கோ இன்னும் என்ன நடக்கிறது என்று புரியாத நிலை.

அர்ச்சனா ஒரு படி மேலே சென்று கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்.

அவள் அருகில் அம்ர்ந்து இருந்த கார்த்திக் தான் அர்ச்சனாவைப் பார்ந்து மனம் வாடினான்.

கம்பனி எம்.டி என்பதற்கு பொருத்தமாக கருநீல நிற கோர்ட் சூட் அணிந்து டை கட்டி கம்பீரமாய் வந்திருந்த பிரணவ்வோ அனைவரையும் பார்த்து புன்னகைத்தவாறு, "ஹாய் காய்ஸ்..." என்றான்.

பிரணவ், "என்னைப் பத்தின இன்ட்ரூ உங்களுக்கு அவசியம் இல்லன்னு நினைக்கிறேன்... இருந்தாலும் சொல்றேன்... என் ஃபுல் நேம் பிரணவ் ராஜ்... எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் சீ.இ.ஓ. மூர்த்தி ராஜோட ஒரே பையன்... இந்த கம்பனி எம்.டி நான் தான்..." என்றவன் ஆகாஷிடம் கண் காட்ட, அதனைப் புரிந்து கொண்டதாய் தலையசைத்த ஆகாஷ், "தன்னோட ஸ்டாப்ஸோட ஸ்டாஃப்ஸா வேலை பார்த்து அவங்க மனசுல என்ன இருக்குங்குறதை தெரிஞ்சிக்க தான் பாஸ் நம்ம கம்பனில ப்ராஜெக்ட் மேனேஜர் போல ஜாய்ன் பண்ணார்... பாஸ் கைட் பண்ணின டீம் மட்டும் இல்லாம எல்லா டீமுமே ரொம்ப நல்லா வர்க் பண்ணீங்க... சோ இன்னைல இருந்து பாஸ் எம்.எல். கம்பனீஸ் பெங்களூர் ப்ரான்ச்சை பொறுப்பு எடுத்து நடத்துவார்..." என்கவும் அனைவரும் கை தட்டினர்.

இன்னும் சில முக்கியமான விடயங்களைப் பேசி விட்டு மீட்டிங் முடிய, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாருமதியின் பின்னே பெளியேறிய ஆகாஷ், "என்ன குட்டச்சி? உங்க எம்.டி ஹேன்ட்சமா இருக்காரா?" எனக் கேலி செய்ய, அவனைப் பார்த்து உதட்டை சுழித்த சாருமதி, "உன்ன விட ஹேன்ட்சமா தான் இருக்கார் நெட்டக்கொக்கு..." என்று விட்டு செல்லவும் குறும்பாகப் புன்னகைத்தான் ஆகாஷ்.

அனைவரும் சென்ற பின்னும் அனுபல்லவி மட்டும் அங்கேயே நிற்க, அனைவரும் சென்று விட்டதை உறுதிப்படுத்தி விட்டு அனுபல்லவியை நெருங்கிய பிரணவ் அவளின் தோள்களில் தன் கரத்தைப் போட்டுக்கொண்டு, "எப்படி இருக்கு என் சர்ப்ரைஸ்?" எனக் கேட்டான் புன்னகையுடன்.

அவனைத் தயக்கமாக ஏறிட்ட அனுபல்லவி, "நீங்க தான் இந்த கம்பனி எம்.டி னு ஏன் முன்னாடியே சொல்லல?" எனக் கேட்க, "ஏன் பல்லவி? நான் எம்.டி யா இருக்குறது உனக்குப் பிடிக்கலயா?" என வருத்தமாகக் கேட்ட பிரணவ், "மனசுக்கு ஒரு சேன்ஜ் தேவைப்பட்டது... என் கடந்த காலத்தை விட்டு எவ்வளவு தூரம் விலகி வர முடியுமோ அவ்வளவு தூரம் விலகி வர நினைச்சேன்... அதனால தான்..." என்றான்.

வருவிக்கப்பட்ட புன்னகையுடன், "ஓஹ்... இல்ல எனக்கு ஹேப்பி தான்... திடீர்னு சொல்லவும் கொஞ்சம் ஷாக்... அவ்வளவு தான்..." என்ற அனுபல்லவி, "நா... நான் போகட்டுமா?" எனக் கேட்டாள்.

அவளின் நடவடிக்கைகளை குழப்பமாகப் பார்த்த பிரணவ், "என்னாச்சு பல்லவி? ஆர் யூ ஓக்கே? உடம்புக்கு ஏதாவது முடியலயா? நீ வேணா லீவ் எடுத்துக்குறியா?" என அனுபல்லவியின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி வினவினான்.

பிரணவ்வின் அக்கறையில் உள்ளம் குளிர்ந்த அனுபல்லவி புன்னகையுடன், "நான் நல்லா இருக்கேன்... எனக்கு ஒன்னும் இல்ல... டென்ஷன் ஆகாதீங்க... யாராவது வந்தா தப்பா நினைப்பாங்க... அதான்..." என்க, "அதுல என்ன இருக்கு?" எனக் கேட்டான் பிரணவ் புரியாமல்.

ஒரு நொடி அமைதியாக இருந்த அனுபல்லவி, "பிரணவ்... சொல்றேன்னு தப்பா நினைக்க வேணாம்... நாம காதலிக்கிற விஷயம் இப்பவே யாருக்கும் தெரிய வேணாம்... ப்ளீஸ்... எனக்காக இதை மட்டும் பண்ணுவீங்களா?" எனக் கேட்டாள் கண்களை சுருக்கி.

அவளின் முகத்தை ஆழ்ந்து நோக்கிய பிரணவ் உடனே புன்னகையுடன், "நீ கேட்டு நான் மறுப்பேனா பல்லவி? யாருக்கும் எதுவும் தெரியாது... பயப்பட வேணாம்... நீ போய் வேலையை கவனி... எனக்கும் கொஞ்சம் வர்க் இருக்கு..." என்கவும் முகம் மலர்ந்த அனுபல்லவி அங்கிருந்து சென்றாள்.

அனுபல்லவி சென்றதும் லேசாக தலை வலிப்பது போல் உணர்ந்த பிரணவ் அதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளாது தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றான்.

அனுபல்லவி புன்னகையுடன் தன் இருக்கையில் வந்து அமர, "அனு... என்னாச்சு? ஏன் சிரிச்சிட்டே வர? நேத்துல இருந்து நீ சரி இல்லயே... ஒரு மார்க்கமாவே சுத்திட்டு இருக்க..." எனக் கேட்டாள் சாருமதி சந்தேகமாக.

"ஒன்னும் இல்லயே... ஒன்னும் இல்லயே..." என சிரித்தே சமாளித்த அனுபல்லவி, "இந்த சுதந்திர இந்தியாவுல ஒரு பொண்ணு சும்மா சிரிக்க கூட காரணம் வேணுமா?" என வராத கண்ணீரைத் துடைக்கவும் அவளை முறைத்த சாருமதி, "போதும் மேடம்... உங்க ட்ராமாவை நிறுத்துங்க... எப்படி இருந்தாலும் கடைசில என் கிட்ட தானே வந்தாகணும்... அப்போ பார்த்துக்கலாம்..." என்றாள்.

பின் சாருமதியின் கவனம் வேலையில் பதிய, நிம்மதிப் பெருமூச்சு விட்ட அனுபல்லவி, 'எப்படியோ இன்னைக்கு சமாளிச்சிட்ட அனு... டெய்லி இப்படி மறைக்க முடியுமா? பேசாம நானும் பிரணவ்வும் லவ் பண்றதை அவ கிட்ட சொல்லிடலாமா?' எனத் தன்னையே கேட்டுக்கொள்ளவும் அவளின் மனசாட்சி விழித்துக் கொண்டது.

மனசாட்சி, 'ஆமா... பிரணவ் எப்போ உன்ன லவ் பண்ணுறதா சொன்னான்?' எனக் கேட்கவும், 'ஆமால்ல... நான் மட்டும் தானே என் லவ்வை அவர் கிட்ட சொன்னேன்... அவர் ஒரு தடவை கூட ஐ லவ் யூ சொல்லலயே...' என யோசித்தவள், 'ச்சே ச்சே... பிரணவ் ஐ லவ் யூ சொல்லலன்னா என்ன? அவர் என்னைக் காதலிக்கிறது எனக்கு தெரியாதா? அவரோட பார்வையே என் மேல உள்ள காதலை சொல்லுது...' எனத் தன் மனசாட்சியை அடக்கினாள்.

அனுபல்லவி தன் போக்கில் மனதில் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்க, அவள் தலையில் குட்டிய சாருமதி, "எந்த கோட்டையை பிடிக்கலாம்னு இப்போ யோசிச்சிட்டு இருக்க?" எனக் கேட்டாள் கேலியாக.

வலியில் தன் தலையைத் தடவியபடி சாருமதியை முறைத்த அனுபல்லவி அவளுக்கு பதிலளிக்காது கணினித் திரையில் பார்வையைப் பதித்தாள்.

************************************

"என்ன சொல்ற அர்ச்சனா? அந்த பிரணவ் தான் உங்க கம்பனி எம்.டி யா?" எனப் பிரதாப் அதிர்ச்சியாகக் கேட்கவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த அர்ச்சனா, "ஆமா பிரதாப்... நான் தான் சொன்னேனே அவனைப் பார்த்தா சாதாரண ஆள் போல தெரியலன்னு... எப்படியோ நான் ஆசைப்பட்டபடியே வசதியான வாழ்க்கை வாழ முடியும்... அதுக்கு முதல்ல நீ அந்த அனுவை ஏதாவது பண்ணு... உன்னால முடியலன்னா சொல்லு... நான் என் வழில அவ கதையை முடிக்கிறேன்..." என்றாள் வன்மமாக.

பிரதாப், "அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதே அர்ச்சனா... அனுவுக்கு சீக்கிரம் நான் ஒரு வழி பண்றேன்... இனிமே அவ உன் வழில குறுக்கா இருக்க மாட்டா... நான் அதுக்கு இப்போவே ஏற்பாடு பண்றேன்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அர்ச்சனாவோ பகல் கனவு காணத் தொடங்க, அவளையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக், "அர்ச்சு... ஏன் நீ இவ்வளவு மாறிட்ட? ப்ளீஸ்... இப்படி எல்லாம் பண்ண வேணாமே..." எனக் கெஞ்ச, அவனைக் கோபமாக நோக்கிய அர்ச்சனா, "என்ன வேணாம்? நான் ஆசைப்பட்ட வாழ்க்கையை வாழ எனக்கு உரிமை இல்லயா?" எனக் கேட்டாள் கோபமாக.

கார்த்திக், "அது தப்பில்ல அர்ச்சு... பட் ஒரு பொண்ணு வாழ்க்கையை ஸ்பாய்ல் பண்ணிட்டு உனக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?" எனக் கேட்க, "பிரணவ்வைப் பத்தி எதுவும் சரியா தெரியாமலே அவனை அடைய ஆசைப்பட்டேன் நான்... இப்போ இவ்வளவு பெரிய சொத்துக்கு சொந்தக்காரன்னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் ஈஸியா விட்டுக் கொடுத்துடுவேனா? நான் நினைச்சதை நடத்தியே தீருவேன்... அதுக்கு யாரு குறுக்கா நின்னாலும் அவங்களை என்ன வேணாலும் பண்ணுவேன்.." என்றாள் அர்ச்சனா ஆவேசமாக.

அர்ச்சனாவின் முகத்தில் தெரிந்த வன்மத்தில் கார்த்திக்கிற்கே திக் என்றானது.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 17

"அப்பா... வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு? அந்த வக்கீல் நம்ம டீலுக்கு சம்மதிச்சாரா?" என பிரதாப் கேட்கவும் மறுபக்கம் அழைப்பில் இருந்த அவனின் தந்தை, "எங்கடா மகனே அந்த ஆளு சம்மதிக்கிறது? ஒரே நீதி, நேர்மை, விசுவாசம்னு கதை அளந்துட்டு இருக்கான்... மெய்ன் டாக்கிமன்ட் நம்ம கைக்கு வராம நம்மளாலயும் எதுவும் பண்ண முடியல..." என்றார் சலிப்பாக.


பிரதாப்,"நீங்க கவலைப்படாதீங்கப்பா... அந்த ஓடுகாலி கழுதையை என் வழிக்கு சீக்கிரமா கொண்டு வரேன்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தவன் உடனே அவன் தீட்டிய திட்டத்தை செயற்படுத்த ஆயத்தமானான்.


************************************


"ஏங்க... நம்ம இன்னைக்கு பெங்களூர் போகலாமா? எனக்கு பிரணவ்வை பார்க்கணும் போல இருக்குங்க..." என ஆஃபீஸ் கிளம்பிக் கொண்டிருந்த மூர்த்தியிடம் அவர் மனையாள் லக்ஷ்மி கேட்கவும் அவரைக் கேலிப் பார்வை பார்த்த மூர்த்தி, "என்ன லக்ஷ்மி? புதுசா பையன் மேல அக்கறை?" எனக் கேட்டார்.


லக்ஷ்மி, "எனக்கு எப்பவும் என் பையன் மேல அக்கறை இருக்குங்க... அது உங்களுக்கும் உங்க பையனுக்கும் தான் புரியல... அவன் தகுதி தராதரம் பார்த்து யார் கூடவும் பழக மாட்டேங்குறான்னு தான் எனக்கு கோவமே..." என்றார் முறைப்புடன்.


மூர்த்தி, "சரி அதை விடு லக்ஷ்மி... எதுக்கு இப்போ திடீர்னு அவனைப் பார்க்க போகணும்னு சொல்ற... முன்னாடி கூட அவன் தனியா தானே இருப்பான் அதிகமா..." என்க, "தெரியலங்க... ப்ளீஸ் நாம இப்பவே கிளம்பலாம்... காலைல இருந்து என் மனசுக்கு என்னவோ போல இருக்குங்க..." என்ற லக்ஷ்மி அடுத்த ஒரு மணி நேரத்தில் கணவனுடன் சேர்ந்து விமானத்தில் பெங்களூர் பறந்தார்.


************************************


அன்று அனைவருக்கும் முன்னதாகவே ஆஃபீஸ் வந்து விட்டாள் அனுபல்லவி.


வழமையாகவே பிரணவ் அனைவருக்கும் முன்னதாக ஆஃபீஸ் வந்து விடுவான். அதனால் இன்று சாருமதியிடம் அனுபல்லவி ஏதேதோ கூறி சமாளித்து விட்டு பிரணவ்வை சந்திக்க வந்து விட்டாள்.


தன் மேசையில் இருந்த கோப்புகளை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டு வந்தவன் கதவு தட்டும் சத்தத்தில் ஆகாஷ் தான் வந்து விட்டதாக எண்ணி, "உள்ள வாங்க ஆகாஷ்... நான் சொன்ன வர்க்ஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சா?" எனக் கேட்டான் தலையை நிமிர்த்தாமலே.


பல நிமிடங்கள் கழித்தும் பதில் வராததால் தலையை நிமிர்த்திப் பார்த்த பிரணவ் தன் முன் மௌனமே உருவாய் தலை குனிந்து நின்றிருந்த அனுபல்லவியைக் கண்டு அதிர்ந்தான்.


"பல்லவி... என்னாச்சு? ஏன் பேசாம நின்னுட்டு இருக்க?" எனக் கேட்டவாறு எழுந்து அவளிடம் சென்று அவளின் தாடையைப் பற்றி தன் முகம் பார்க்க வைத்தான் பிரணவ்.


அனுபல்லவியின் கலங்கியிருந்த கண்களைக் கண்டு பதட்டம் அடைந்த பிரணவ், "ஏன் பல்லவி கண் கலங்கி இருக்கு? அந்த பிரதாப் திரும்ப உன்ன தொந்தரவு பண்ணானா? அன்னைக்கே அவனுக்கு நான் ஒரு வழி பண்ணி இருப்பேன்... நீ தான் வேணாம்னு சொன்ன..." என ஆத்திரப்படவும் சட்டென அவனை அணைத்துக் கொண்டாள் அனுபல்லவி.


புன்முறுவலுடன் தன்னவளை ஒரு கரத்தால் அணைத்துக்கொண்டு மறு கரத்தால் அவளின் தலையை வருடி விட்ட பிரணவ், "ஷ்ஷ்ஷ்... அழாதேடா... என்னாச்சு?" எனக் கேட்கவும் அவன் நெஞ்சில் இன்னும் அழுத்தமாக முகத்தைப் புதைத்த அனுபல்லவி, "நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க என்னை வெறுக்க மாட்டீங்களே..." எனக் கேட்டாள்.


பிரணவ், "நீ எனக்கு கிடைச்ச வரம்... உன்ன எப்படி நான் வெறுப்பேன்..." என்க, "என்னை விட்டு போயிட மாட்டீங்களே..." என அழுதவாறே பல்லவி கேட்கவும் அவளைத் தன்னை விட்டுப் பிரித்து அனுபல்லவியின் கன்னங்களைத் தாங்கி விழியோடு விழி நோக்கிய பிரணவ், "உன்னைப் பிரியும் ஒரு சூழ்நிலை வந்தா அது என் கடைசி மூச்சு நின்னு போற நேரமா இருக்கும்..." என்கவும் பட்டென அவன் வாயில் அடித்தாள் அனுபல்லவி.


"ஹேய்... எதுக்கு டி அடிக்கிற? நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன்..." என்றான் பிரணவ் மென்னகையுடன்.


அனுபல்லவி, "அதுக்காக அப்படி சொல்லுவீங்களா நீங்க?" என முறைக்க, அவளின் கோபத்தை ரசித்த பிரணவ், "சரி சரி சாரி டா... சொல்லு என்ன விஷயம்? என்னைப் பார்க்க தான் இவ்வளவு ஏர்லியா வந்தியா?" எனக் கேட்டான்.


"ஹ்ம்ம்... உங்க கிட்ட... அது... என்னைப் பத்தி முக்கியமான ஒரு விஷயம் சொல்லணும்..." என பிரணவ்விடமிருந்து விலகி அனுபல்லவி தயங்கியவாறு கூறவும் பிரணவ் அவளை இழுத்து தன் கை வளைவில் வைத்துக்கொண்டே, "என்ன சொல்றதா இருந்தாலும் இப்படியே இருந்துட்டு சொல்லு... நமக்குள்ள எந்த டிஸ்டான்ஸும் இருக்க கூடாது..." என்றவன் அனுபல்லவியின் கழுத்தில் முகம் புதைத்தான்.


பிரணவ்வின் நெருக்கம் அனுபல்லவியை ஏதோ செய்ய, நெளிந்து கொண்டே, "நான்..." என ஏதோ கூற வர, அதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பட்டென பிரணவ்வை விட்டு விலகினாள்.


பிரணவ், "கம் இன்..." என அனுமதி அளிக்கவும் உள்ளே வந்த ஆகாஷ் அனுபல்லவியை ஒரு பார்வை பார்த்து விட்டு, "பாஸ்...மேடமும் சாரும் வந்து இருக்காங்க..." என்கவும், "வாட்?" என அதிர்ந்தான் பிரணவ்.


அனுபல்லவிக்கு தான் கூற வந்ததை பிரணவ்விடம் கூறிய முடியாமல் போனது வருத்தமாக இருந்தாலும் தன் அத்தை, மாமாவைக் காணும் ஆவல் ஏற்பட்டது.


பிரணவ், "அவங்க எதுக்கு இங்க வந்தாங்க? என் கிட்ட கூட சொல்லாம..." எனக் கோபப்படும் போதே அவ் அறைக்குள் நுழைந்த லக்ஷ்மி, "எங்க பையனை பார்க்க வர எங்களுக்கு உரிமை இல்லயா? எவ்வளவு ஆசையா வந்தோம் உன்ன பார்க்க... நீ என்னன்னா நாங்க ஏன் வந்தோம்னு கேட்குற?" எனக் கேட்டார் வருத்தம் தோய்ந்த குரலில்.


அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த பிரணவ், "இது என்ன புதுக் கதையா இருக்கு? நான் எப்படி இருக்கேன் என்ன பண்ணுறேன்னு சின்ன வயசுல இருந்தே என்னைக் கண்டுக்காம பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடினவங்களுக்கு இப்போ மட்டும் என்ன பாசம்?" எனக் கேட்கவும், "பிரணவ்..." எனச் சத்தமாக அழைத்தார் மூர்த்தி.


மூர்த்தி, "இப்படி தான் பெத்தவங்க கூட பேசுவியா? அதுவும் இல்லாம நீ இந்தக் கம்பனி எம்.டி மட்டும் தான்... எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் என்னோடது. எங்களுக்கு இங்க வர உரிமை இல்லயா?" என்கவும் பிரணவ்வின் முகம் இறுக, அனுபல்லவிக்கு தன்னவனைக் காணக் கவலையாக இருந்தது.


மூர்த்தியின் பேச்சில், "வாவ்... ரொம்ப நல்லா இருக்கு டேட்... உங்க கம்பனி... ஹ்ம்ம்..." எனக் கை தட்ட, "பிரணவ்... அப்பா அந்த அர்த்தத்துல சொல்ல வரலப்பா... இந்த மொத்த சொத்துக்கும் நீ தான் வாரிசு..." என்றார் லக்ஷ்மி.


இன்னும் ஏதோ பேச வந்த லக்ஷ்மி அங்கு நின்ற அனுபல்லவியை ஒரு பார்வை பார்க்க, "சார்... நான்... நான் அப்புறம் வரேன்..." எனப் பிரணவ்விடம் கூறிவிட்டு அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள்.


பிரணவ் கோபமாக தன் இருக்கையில் அமர்ந்தவன், "ஆகாஷ்... என்ன விஷயமா இங்க வந்து இருக்காங்கன்னு கேளுங்க..." என்க, பிரணவ் தம்மை யாரோ போல் நடத்துவது மூர்த்தியையும் லக்ஷ்மியையும் குத்திக் கிழித்தது.


லக்ஷ்மி, "பிரணவ் கண்ணா... அப்பாவும் அம்மாவும் உனக்காக தானே டா ஓடியோடி சம்பாதிக்கிறோம்..." என பிரணவ்வின் தலையை வருடவும், "நான் கேட்டேனா?" என ஆவேசமாகக் கேட்டான் பிரணவ்.


பிரணவ்வின் கோபக் குரல் மூடி இருந்த அறையைத் தாண்டி வெளியே கேட்க, அப்போது தான் ஆஃபீஸ் வந்தவர்கள் அனைவரும் என்னவோ ஏதோ என அவ் அறைக்கு வெளியே கூடினர்.


அனுபல்லவியும் சாருமதியுடன் அங்கு பதட்டமாக நின்றிருந்தாள். பிரணவ்வை இது வரை இவ்வளவு ஆத்திரப்பட்டு காணாதவளுக்கு அவனின் இந்தக் கோபம் அதிர்ச்சியாக இருந்தது.


"பாஸ்..." என உடனே ஆகாஷ் அவனை அமைதிப்படுத்த முயல, "நான் கேட்டேனா உங்க பணம் எனக்கு வேணும்னு? சொல்லுங்க... நான் கேட்டேனா எனக்கு பணம் தான் முக்கியம்னு... சின்ன வயசுல இருந்தே நான் உங்க கிட்ட கேட்டது எனக்கான பாசத்தை... அதைத் தந்தீங்களா ரெண்டு பேரும்?" எனக் கேட்டான் பிரணவ் கோபமாக.


அவனின் ஒவ்வொரு கேள்வியும் மூர்த்தியையும் லக்ஷ்மியையும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது.


பிரணவ், "நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எனக்கு தேவையான எல்லாம் பண்ணினது நீங்க சம்பளம் கொடுத்து வெச்சிருந்த வேலைக்காரங்க தான்... எனக்கு சின்னதா காய்ச்சல் வந்தா கூட உங்க மடில படுக்க ஆசைப்பட்டு எத்தனை தடவை உங்களைத் தேடி இருக்கேன்னு தெரியுமாம்மா?" எனக் கேட்டான் லக்ஷ்மியிடம்.


மூர்த்தி, "பிரணவ்..." என அவனை நெருங்க, "இருங்க... நான் இன்னைக்கு பேசியே ஆகணும்... எவ்வளவு நாள் தான் எல்லாத்தையும் மனசுக்குள்ளே வெச்சி நான் அவஸ்தைப்படுறது? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் அப்பா அம்மா கூட ஸ்கூல் வருவாங்க... நான் மட்டும் டெய்லி ட்ரைவர் கூட போவேன்... பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்குக்கு கூட வர மாட்டீங்க... எல்லாம் கால்ல பேசி முடிச்சிடுவீங்க... அப்பா அம்மா இருந்தும் அநாதையா இருக்குறது எவ்வளவு கொடுமை தெரியுமா?" என்றவனின் கண்கள் கலங்கின.


மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் அப்போது தான் தம் தவறு புரிந்தது.


பிரணவ்வின் நலனுக்காக என எண்ணி செய்தவை அனைத்தும் தம் மகனுக்கு இவ்வளவு அநீதி இழைத்துள்ளதா எனப் புரிந்து குற்றவுணர்ச்சியில் நின்றனர்.


சரியாக ஆகாஷின் கைப்பேசி ஒலி எழுப்ப, ஒரு ஓரமாகச் சென்று அழைப்பை ஏற்றவன் மறுபக்கம் கூறப்பட்ட செய்தியில் அதிர்ந்தான்.


ஆகாஷ், "பாஸ்..." எனப் பிரணவ்விடம் வந்தவன் அறை சுவற்றில் மாட்டி இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பிக்க, அதில் காட்டிய செய்தியில் அனைவரும் அதிர்ந்தனர்.


அறைக்கு வெளியே நின்றிருந்த ஊழியர்கள் கூட அச் செய்தியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அனைவருக்குமே அதில் கூறப்பட்ட செய்தி அதிர்ச்சியாக இருந்தது.


அனுபல்லவிக்கு தன்னவனின் மனநிலையை எண்ணி வருத்தமாக இருந்தது. இப்போதே உள்ளே நுழைந்து அவனை அணைத்து ஆறுதல் அளிக்க அவளின் மனம் உந்தியது.


"பிரபல தொழிலதிபர் மற்றும் எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் ஸ்தாபகர் மூர்த்தி ராஜின் மகனான இளம் தொழிலதிபர் பிரணவ் ராஜ் அவரின் சொந்த மகன் இல்லை என சற்று முன்னர் வெளிவந்த செய்தியில் மக்கள் மத்தியில் பரபரப்பு."


"தொழிலதிபர் மூர்த்தி ராஜின் மனைவியின் சகோதரரான எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸின் பங்குதாரரான ராமலிங்கத்தின் பேட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது."


"இளம் தொழிலதிபர் பிரணவ்விற்கு ஆண்மைக் குறைபாடு."


"ஆண்மையற்ற ஒருவர் நிறுவனத்தைப் பொறுப்பெடுத்து நடத்துவதா? எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸ் ஊழியர்கள் எதிர்ப்பு"


"ஆம்பளையே இல்லாதவன்லாம் எப்படி கம்பனி நடத்துவான்?"


"ஒரு அநாதைக்கு இவ்வளவு சொத்தா? கொடுத்து வெச்சவன் தான்..."



இவை அனைத்தும் சில மணி நேரத்துக்குள் பத்திரிகை, தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்களில் வந்த செய்திகள்.


தொலைக்காட்சியில் கூறப்பட்ட செய்தியைக் கேட்டதும் பிரணவ்விற்கு அன்று பார்ட்டியின் போது ராமலிங்கம் கூறியவை மாத்திரம் தான் செவிகளில் ஒலித்தன.


லக்ஷ்மி, "பிரணவ் கண்ணா... அவனுங்க ஏதோ பொய் சொல்றாங்க... நீ அதெல்லாம் கண்டுக்காதேப்பா... நீ எங்க பையன்டா..." என அவனை நெருங்க, "கிட்ட வராதீங்க..." என்றான் பிரணவ் அழுத்தமாக.


அவனின் இறுகி இருந்த தோற்றம் ஆகாஷிற்கே வருத்தமாக இருந்தது.


மூர்த்தி, "பிரணவ்... என்ன நடந்ததுன்னு அப்பா சொல்றேன் டா..." என்கவும் அவரின் முகத்தை ஏளனமாக நோக்கிய பிரணவ், "அப்பாவா? யாருக்கு? அதான் உங்க மச்சினர், அம்மாவோட தம்பி, என்னோட பாசமான தாய் மாமன் மிஸ்டர் ராமலிங்கம் எல்லா நியூஸ்லயும் பேட்டி கொடுத்து இருக்காரே... இன்னுமா மறைக்க நினைக்கிறீங்க?" எனக் கேட்டவனின் குரலில் இனம் காண முடியாத ஒரு உணர்வு.


லக்ஷ்மி, "பெத்தா மட்டும் தான் உனக்கு நாங்க அப்பா அம்மாவா? உன்ன வளர்த்த எங்களுக்கு அந்தத் தகுதி இல்லயா?" எனக் கேட்டார் கண்ணீருடன்.


இவ்வளவு நேரமும் தான் கேட்டவை அனைத்தும் பொய்யாக இருக்க வேண்டும் என அவனின் உள் மனம் பிரார்த்திக்க, லக்ஷ்மி கூறியதைக் கேட்டதும் மொத்தமாகவே உடைந்து விட்டான் பிரணவ்.


அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தவனின் அருகில், "கண்ணா..." என அழைத்தவாறு மூர்த்தியும் லக்ஷ்மியும் நெருங்க, "இதனால தான் இவ்வளவு வருஷமா என்னை உங்க கிட்ட இருந்து தள்ளியே வெச்சி இருந்தீங்களாம்மா? அப்படியாப்பா?" என உடைந்த குரலில் கேட்க, "இல்லப்பா... நீ எங்க புள்ள..." எனக் கண்ணீர் விட்டார் லக்ஷ்மி.


கசந்த புன்னகை ஒன்றை உதிர்த்த பிரணவ், "வளர்த்தா அப்பா அம்மா இல்லயான்னு கேட்டீங்க... நீங்க எங்கம்மா என்னை வளர்த்தீங்க? நானா தானே வளர்ந்தேன்..." என்கவும், "பிரணவ்..." என்றார் மூர்த்தி கண்ணீருடன்.


பிரணவ் திடீரென தலையை அழுத்தமாகப் பற்றிக்கொள்ள, "பிரணவ் கண்ணா... என்னப்பா ஆச்சு?" என லக்ஷ்மி பதற, அவர் முன் கை நீட்டி தடுத்த பிரணவ், "இதுக்கு மேல எதையும் தாங்குற சக்தி இல்ல... இப்பவாவது உண்மைய சொல்லுங்கம்மா..." என்றான் கெஞ்சலுடன்.


"அதை சொல்லத் தான் மருமகனே நான் வந்து இருக்கேன்..." என்றவாறு உள்ளே நுழைந்தார் ராமலிங்கம்.


அவரைக் கண்டு பிரணவ் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாதிருக்க, ராமலிங்கத்தின் சட்டையௌ ஆவேசமாகப் பற்றிய மூர்த்தி, "ஏன் டா இப்படி பண்ண? நாங்க உனக்கு என்னடா பண்ணோம்?" எனக் கேட்டார்.


தன் தம்பியின் கன்னத்தில் ஓங்கி அறைந்த லக்ஷ்மி, "ஏன் லிங்கா இப்படி பண்ண? நான் உன்ன தம்பியாவா டா நடத்தின? உன்னையும் என் பையன் போல தானே டா நடத்தினேன்... பாவி... பாவி..." எனக் கதறினார்.


அவரின் கரத்தைத் தட்டி விட்ட ராமலிங்கம், "ஆமா... யார் இல்லன்னு சொன்னாங்க? நீயும் மாமாவும் என்னை உங்க பையனா தான் பார்த்துக்கிட்டீங்க... ஆனா இந்த அநாதை வந்ததுக்கு அப்புறம் என்ன ஆச்சு?" என்கவும் மூர்த்தியும் லக்ஷ்மியும் அதிர்ந்தனர்.


பிரணவ்வோ ராமலிங்கத்தையே கேள்வியாக நோக்கினான்.


வெளியே நின்றிருந்த ஊழியர்களும் செய்தியில் காட்டியதைப் பற்றியே தமக்குள் கிசுகிசுத்துக்கொள்ள, "என்ன டி அனு நடக்குது இங்க? ஏதேதோ சொல்றாங்க..." எனக் கேட்டாள் சாருமதி குழப்பமாக.


அனுபல்லவியோ தோழிக்கு பதிலளிக்காது பதட்டமாக இருந்தாள்.


"என்ன இங்க கூட்டமா இருக்கு? உங்களுக்கு வேலை எதுவும் இல்லயா? போங்க எல்லாரும் இங்க இருந்து..." என மேனேஜர் மோகன் சத்தமிடவும் கூட்டம் கலைந்தது.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 18
ஏழ்மையே உருவான ஒரு வரிய குடும்பத்தில் பிறந்தவர் தான் லக்ஷ்மி. அவரின் ஒரே தம்பி ராமலிங்கம். இருவருக்கும் இடையில் பத்து வருட வயது வித்தியாசம். தன் ஐந்து வயதிலேயே ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ராமலிங்கத்திற்கு லக்ஷ்மி தான் தாய்க்கு தாயாக, தந்தைக்கு தந்தையாக, சகோதரிக்கு சகோதரியாக இருந்து வந்தார்.

வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தவர்களின் வாழ்வில் வசந்தம் வீசுவதற்காகவே நுழைந்தார் மூர்த்தி ராஜ்.

நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மூர்த்தி ராஜிற்கு லக்ஷ்மியின் மேல் கண்டதும் காதல் வர, அதனை தாமதிக்காமல் அவரிடம் வெளிப்படுத்தினார்.

உறவினர்கள் என்று யாரும் அப்போது அவர்களுக்கு இருக்கவில்லை.

முதல் முறை ஒரு ஆணவன் வந்து காதலைக் கூறவும் லக்ஷ்மி அதனை ஏற்கத் தயங்க, ராமலிங்கமோ அவரைத் திருமணம் செய்தால் நாம் வறுமை நீங்கி வசதியாக வாழலாம் எனத் தமக்கையை ஊக்கிவித்தார்.

லக்ஷ்மியின் மனதிலும் அந்த எண்ணம் தோன்றியதால் மூர்த்தியின் காதலுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

மகனின் சந்தோஷமே முக்கியம் என மூர்த்தியின் பெற்றோர் உடனே இருவரின் திருமணத்தையும் நடத்தி வைத்தனர்.

சிறு வயதிலிருந்தே வறுமையில் வளர்ந்தவர்களுக்கு திடீரென இவ்வளவு வசதியான வாழ்வைப் பார்த்ததும் பேராசை எழுந்தது.

லக்ஷ்மிக்கு தன் கணவனின் சொத்து, அதனால் தான் வேண்டியவாறு இதனைப் பயன்படுத்தலாம். தானும் தம்பியும் பெற்றோரை இழந்து வறுமையில் கஷ்டப்பட்ட போது ஒரு சிறிய உதவிக்கு கூட வராதவர்கள் முன் தான் நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. தம் தகுதிக்கு குறைவானவர்களுடன் பேசுவதே தமக்கு இழுக்கு என்று எண்ணினார்.

அதனால் மூர்த்தியிடமே தொழிலைக் கற்று அவருக்கு தொழிலில் உதவியாக இருந்தார்.

ஆனால் ராமலிங்கத்திற்கோ தன் மாமனின் பணத்தை செலவலிப்பதில் மாத்திரமே நேரம் சென்றது.

மூர்த்தியும் ராமலிங்கத்தை மைத்துனன் என்ற நிலையைத் தாண்டி மகனாகவே நடத்தினார். அதுவே அவருக்கு இன்னும் வசதியாகிப் போயிற்று.

மூர்த்தி மற்றும் லக்ஷ்மியின் மொத்த சொத்தையும் மொத்த பாசத்தையும் ராமலிங்கம் ஒருவரே அனுபவித்து வந்தார்.

வருடங்கள் கடந்தும் மனமொத்த தம்பதியர்களாய் வாழ்ந்து வந்த மூர்த்திக்கும் லக்ஷ்மிக்கும் குழந்தைப் பாக்கியம் மற்றும் கிடைக்கவே இல்லை.

சிகிச்சைகள், வேண்டுதல்கள் எதுவுமே பலனளிக்காது போகவும் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தனர்.

உடனே காலம் தாழ்த்தாது பிறந்த சில நாட்களே ஆன பிரணவ்வைத் தத்தெடுத்து அன்பைப் பொழிந்து வளர்க்கத் தொடங்க, பிரணவ் மெது மெதுவாக வளரத் தொடங்கவும் இருவரின் கவனமும் மீண்டும் தொழிலிற்கு சென்றது.

குழந்தையைக் கவனித்துக் கொள்வதற்காக கேர் டேக்கர் ஒருவரை நியமித்து பிரணவ்வின் மொத்தப் பொறுப்பையும் அவரிடமே வழங்கினார்.

தம் மகனிற்கு எல்லாமே சிறந்ததாக மாத்திரமே கிடைக்க வேண்டும் என்று விரும்பிய லக்ஷ்மி, பெரிய பெரிய பள்ளிக்கூடம், கல்லூரி என்பவற்றில் பிரணவ்வை சேர்த்து தேவைக்கு அதிகமாகவே பணத்தை வாரி வழங்கியவர் அவனுக்கு வேண்டிய அன்பை மட்டும் கொடுக்கத் தவறினார்.

ஆரம்பத்தில் ராமலிங்கமும் தனக்கு தாய் தந்தையாக இருக்கும் அக்காவினதும் மாமாவினதும் குழந்தை மீது மிகுந்த பாசத்தை வைத்திருந்தார்.

அதனால் தான் பிரணவ் கூட தன் பெற்றோரை விட அவரிடத்தில் நெருக்கமாக இருந்தார்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, பிரணவ் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தன் பிஸ்னஸ் மொத்தத்திற்கும் பிரணவ்வை வாரிசாக மூர்த்தி அறிவிக்கவும் மாமனுக்கு பிறகு தன்னைத் தான் தொழில் வாரிசாக அறிவிப்பார் என எண்ணிக் கொண்டிருந்த ராமலிங்கத்திற்கு அது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

அந்த ஏமாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக பிரணவ்வின் மீது‌ வெறுப்பாக மாறத் தொடங்கியது.

ராமலிங்கம் பிரணவ் மீது இவ்வளவு வெறுப்பை வளர்க்கும் அளவுக்கு மூர்த்தி ஒன்றும் அவருக்கு அநீதி இழைத்து விடவில்லை.

எம்.எல். க்ரூப்ஸ் ஆஃப் கம்பனீஸின் மெய்ன் ப்ரான்ச்சில் ராமலிங்கத்திற்கு ஒரு உயர்ந்த பதவியை வழங்கி இருந்தார். தான் எது செய்வதாக இருந்தாலும் ராமலிங்கத்திடமும் ஒரு வார்த்தை கூறி விட்டே செய்வார்.

அப்படி இருந்தும் பிரணவ் மேல் வெறுப்பை வளர்த்த ராமலிங்கம் அவனை தன் வழியில் இருந்து அழிக்க சரியான சந்தர்ப்பம் வரும் வரை காத்திருந்தார்.

சரியாக பிரணவ்வும் பெங்களூர் செல்ல, அங்கு வைத்து யாருக்கும் சந்தேகம் வராதவாறு அவன் கதையை முடிக்க ஒரு லாரியை ஏற்பாடு செய்தார்.

அதிலிருந்தும் பிரணவ் உயிர்ச்சேதம் இன்றி தப்பித்து விட, பார்ட்டியில் வைத்து தன்னை அவமானப்படுத்தியதற்கும் சேர்த்து பழி வாங்குவதற்காகவே இன்று பத்திரிகைகளில் அவனின் உண்மையை எல்லாம் கூறி பேட்டி கொடுத்தது.

ராமலிங்கம் கூறியவற்றைக் கேட்டு லக்ஷ்மி அதிர்ச்சியில் உறைந்திருக்க, மூர்த்தியோ இத்தனை காலமும் பாம்புக்கா பால் ஊட்டி வளர்த்தேன் என மனம் நொந்தார்.

தம்பியின் செயலில் மனம் உடைந்த லக்ஷ்மி ஆவேசமாக அவன் சட்டையைப் பற்றி, "உனக்கு இந்த சொத்து தான் வேணும்னா அதை எங்க கிட்ட கேட்டு இருக்க வேண்டியது தானே டா... நீ ஒரு வார்த்தை கேட்டா நாங்க மாட்டோம்னு சொல்லி இருப்போமா டா? ஆனா நீ உனக்காக நானும் உன் மாமாவும் பண்ணின எல்லாத்தையும் மறந்துட்டு எங்க பையனையே கொல்ல பார்த்து இருக்கேல்ல... ச்சீ... உன்ன என் தம்பின்னு சொல்லவும் அசிங்கமா இருக்குடா..." எனக் காரி உமிழ்ந்தார்.

மூர்த்தி, "உனக்கு நான் எதுல குறை வெச்சேன் லிங்கா? அப்படி இருந்தும் எங்க பையனை எங்க கிட்ட இருந்து மொத்தமா பிரிக்க முயற்சி பண்ணி இருக்க நீ..." என்றார் வருத்தமாக.

பிரணவ்வோ ராமலிங்கம் கூறியவற்றை எல்லாம் கேட்டு முடித்த பின்னும் எதுவும் கூறாமல் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.

அவன் அருகில் சென்ற லக்ஷ்மி, "பிரணவ் கண்ணா... இந்த வயித்துல உன்ன பத்து மாசம் சுமந்து பெத்துக்குற பாக்கியத்தை பெறலன்னாலும் நீ தான் கண்ணா எங்க பையன்...எங்க ரெண்டு பேருக்கும் நீ தான்பா எல்லாமே... நீ நல்லா இருக்கணும்னு உனக்காக பணம் சேர்த்து வைக்க நெனச்சோமே தவிர நீ இப்படி பாசத்துக்காக ஏங்குவன்னு நினைக்கலப்பா... அம்மாவ நம்பு பிரணவ்... உன் மேல அம்மா உயிரையே வெச்சிருக்கேன்... சத்தியமா உன்ன நாங்க அநாதையா பார்க்கலப்பா... அம்மாவை நம்பு பிரணவ்..." எனக் கண்ணீர் வடித்தவர் இரத்த அழுத்தம் அதிகரித்து அப்படியே மயங்கிச் சரிய, "லக்ஷ்மி..." "அக்கா..." "மேடம்..." என மூர்த்தி, ராமலிங்கம், ஆகாஷ் மூவருமே அவரிடம் ஓடினர்.

ராமலிங்கத்தின் முன் கை நீட்டி தடுத்த மூர்த்தி, "உன்ன எங்க குடும்பத்துல ஒருத்தனா பார்த்துக்கிட்டதுக்கு நீ எங்களுக்கு பண்ணினது வரை போதும்... தயவு செஞ்சி இனிமே எங்க மூஞ்சில கூட முழிக்காதே... இங்க இருந்து போயிடு... இதுக்கு மேல ஒரு நிமிஷம் நீ இங்க நின்னாலும் நான் போலீஸை கூப்பிட்டு உன்ன உள்ள தள்ளுவேன்..." என எச்சரிக்கவும் அனைவரையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார் ராமலிங்கம்.

இத்தனை களேபரம் நடந்தும் முகத்தில் எந்த உணர்வும் காட்டாது வெறித்திருந்த பிரணவ் திடீரென எழுந்து நின்று, "ஆகாஷ்... டோன்ட் ஃபாலோ மீ..." என்று விட்டு வேகமாக கிளம்பினான்.

************************************

காலையிலிருந்தே அனுபல்லவி பிரணவ்விற்கு பல முறை அழைத்தும் அவளின் எந்த அழைப்புமே ஏற்கப்படவில்லை.

அனுபல்லவிக்கு அவனை நினைத்து உள்ளம் அடித்துக்கொண்டது.

"அவர் ஏன் கால் அட்டன்ட் பண்ண மாட்டேங்குறார்? காலைல ஆஃபீஸ்ல ரொம்ப உடஞ்சி போய் இருந்தாரே... அவரைப் அப்படி பார்க்கவே முடியல..." எனக் கலங்கிய அனுபல்லவி மீண்டும் பிரணவ்விற்கு அழைக்க முயற்சிக்க, இம்முறையும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

வேறு வழியின்றி ஆகாஷிற்கு அழைத்தாள் அனுபல்லவி.

மறுபக்கம் ஆகாஷ் அழைப்பை ஏற்றதும், "அ...அண்ணா... அது... சார் எங்க இருக்கார்?" என அனுபல்லவி கேட்கவும் குழம்பிய ஆகாஷ், "அனு... என்னாச்சுங்க?" எனக் கேட்டான்.

அனுபல்லவி, "சாருக்கு ரொம்ப நேரமா ட்ரை பண்றேன்... பட் அவர் கால் அட்டன்ட் பண்ணவே இல்ல... அதான் சார் எங்க இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமான்னு கேட்க தான் கால் பண்ணேன்..." என்றாள்.

ஆகாஷும் ஆரம்பத்திலிருந்தே பிரணவ்வும் அனுபல்லவியும் ஒருவரையொருவர் காணும் போது இருவரின் முகத்திலும் தெரியும் மலர்ச்சியை அவதானித்திருந்தான்.

இப்போது அனுபல்லவி கேட்கவும் அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் எனப் புரிந்துகொண்ட ஆகாஷ், "பாஸ் எங்க போனார்னு எனக்கும் தெரியலங்க... ரொம்ப அப்சட்டா கிளம்பி போனார்... அவரை ஃபாலோ பண்ண வேணாம்னு என் கிட்ட சொன்னார்..." என்கவும், "ஓஹ்... உ...உங்களுக்கும் தெரியலயா?" எனக் கேட்டாள் அனுபல்லவி வருத்தமாக.

"எக்சேக்டா தெரியலம்மா... ஆனா பாஸ் கவலையா இருக்கும் போது அவரோட பீச் ஹவுஸ் போவார்... அநேகமா அங்க தான் இருப்பார்னு நினைக்கிறேன்..." என ஆகாஷ் கூறவும் மகிழ்ந்த அனுபல்லவி, "எனக்கு உடனே அந்த பீச் ஹவுஸ் அட்ரஸை அனுப்புறீங்களா? ப்ளீஸ்..." என்கவும் சரி என அழைப்பைத் துண்டித்த ஆகாஷ் உடனே அனுபல்லவியின் எண்ணுக்கு அந்த முகவரியை அனுப்பி வைத்தான்.

ஆகாஷ் மனமோ, 'இந்தப் பொண்ணால மட்டும் தான் பாஸ் முகத்துல பழைய சிரிப்பை கொண்டு வர முடியும்னு நம்புறேன்...' என வேண்டியது.

இவ்வளவு நேரமும் ஏதோ இழந்ததைப் போல் சுற்றிக் கொண்டிருந்த தோழி திடீரென மிகுந்த மகிழ்வுடன் காணப்படுவதைப் புரியாமல் பார்த்த சாருமதி, "என்னாச்சு அனு? யார் கால்ல?" எனக் கேட்கவும், "சாரு... நான் கொஞ்சம் அர்ஜென்ட்டா வெளிய போய்ட்டு வரேன்... நீ எனக்காக வெய்ட் பண்ணாம தூங்கு..." என்று விட்டு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு அவசரமாக வெளியேற, "ஹேய் அனு... இந்த நைட் டைம்ல எங்க டி போற? சொல்லிட்டு போடி..." என சாருமதி கத்தியது எதுவும் அனுபல்லவியின் செவிகளை எட்டவில்லை.

தன்னவனை உடனே காண வேண்டும் என்ற பதட்டத்தில் முன்பு பேரூந்தில் செல்லும் போது இருந்த பயம் எதுவுமின்றி அவசரமாக பேரூந்தில் ஏறி ஆகாஷ் அனுப்பிய முகவரியை சென்றடைந்தாள் அனுபல்லவி.

************************************

ஆகாஷிடம் தன்னைப் பின் தொடர வேண்டாம் என்று கட்டளை இட்ட பிரணவ் நேராக சென்றது தன் பீச் ஹவுஸிற்கு தான்.

கடற்கரை ஓரமாக நடந்தவனின் கால்களை அலைகள் முத்தமிட்டுச் செல்ல, ஆனால் அவனின் மனமோ அமைதியடைய மறுத்தது.

உடனே கடலில் இறங்கி தண்ணீருக்கு அடியில் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு சில நிமிடங்கள் இருந்த பிரணவ்வின் மனமோ இந்த நிமிடமே இந்த ஆழ்கடலில் மூழ்கி தான் இறந்து போக மாட்டோமா என வேண்டியது.

அந்த அளவு மனமுடைந்து காணப்பட்டான் பிரணவ்.

எதிலுமே மனம் லயிக்கவில்லை.

தற்கொலை செய்யக் கூட மனதில் துணிச்சல் வேண்டுமாமே. அதற்கு கூட வழியின்றி தண்ணீரில் இருந்து வெளியே வந்த பிரணவ் கடல் மணலில் படுத்துக் கொண்டான்.

நினைவு தெரிந்த நாளில் இருந்தே யாரின் அன்புக்காக அவன் ஏங்கினானோ அவர்களே தனக்கு சொந்தம் இல்லை என்பதை அறிந்ததும் துடித்துப் போனான் பிரணவ்.

இத்தனை வருடங்களும் செல்லும் இடம் எல்லாம் பிரணவ் ராஜ் எனத் தன்னைப் பெருமையாக அறிமுகப்படுத்தியவனின் பெயரில் பாதியே அவனுக்கு சொந்தமில்லை என்ற உண்மை கசந்தது.

பெற்றோரை விட தன் மேல் அதிகம் பாசத்தை பொழிந்த மாமாவிற்கு தன் மேல் இவ்வளவு வெறுப்பு இருந்து இருக்கிறது என்ற உண்மையை பிரணவ்வால் ஏற்க முடியவில்லை.

பல எண்ணங்களுடன் வானத்தை வெறித்துக் கொண்டிருந்த பிரணவ் அவனே அறியாமல் உறங்கிப் போனான்.

சில மணி நேரங்கள் கழித்து மெதுவாகக் கண் விழிக்க, நன்றாகவே இருட்டி இருந்தது.

எழுந்து மணலில் கையூன்றி அமர்ந்த பிரணவ்விற்கு காலை நடந்த சம்பவங்கள் அனைத்தும் மீண்டும் நினைவு வந்து அவனை வருத்தியது.

"ப...பல்லவி... பல்லவிக்கும் இந்த நேரம் என்னைப் பத்தின எல்லா உண்மையும் தெரிஞ்சி இருக்கும்ல... ஒ... ஒருவேளை அவளும் என்னை விட்டு போயிடுவாளா?" எனத் தன்னையே கேட்டுக் கொண்டவனை தலைவலி பிய்த்துத் தின்றது.

"ஆஹ்..." என வலியில் அலறிய பிரணவ் அங்கிருந்து எழுந்து வீட்டை நோக்கி நடந்தான்.

தன் மனதில் உள்ள வலியை கொஞ்சம் நேரமாவது மறப்பதற்காக கப்போர்ட்டிலிருந்து மது பாட்டில்களை எடுத்துக்கொண்டு சோஃபாவில் அமர்ந்தான்.

ஒரு பாட்டிலைத் திறந்து வாயில் சரிக்கச் செல்லும் போதே வாசலில், "பிரணவ்..." என்ற அனுபல்லவியின் குரல் கேட்கவும் அவள் பக்கம் திரும்பினான் பிரணவ்.

அனுபல்லவியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மதுபாட்டிலை மீண்டும் கையில் எடுத்த பிரணவ் அவளைப் பார்க்காமலே, "நீ எதுக்கு இங்க வந்த?" எனக் கேட்டான்.

அவனை நெருங்கிய அனுபல்லவி, "என்ன பண்ணுறீங்க பிரணவ்? எதுக்காக இப்போ குடிச்சி உடம்பைக் கெடுத்துக்க போறீங்க?" எனக் கேட்டாள் கோபமாக.

பதிலுக்கு கசந்த புன்னகையை உதிர்த்த பிரணவ், "ஆல்ரெடி கெட்டுப் போன உடம்பு தானே... அதான் பேப்பர் நியூஸ்னு எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சே... இதுக்கு மேல இந்த உடம்புக்கு என்ன நடந்தாலும் யாருக்கு நஷ்டம்?" என்றான் விரக்தியாய்.

அனுபல்லவி, "அதுக்காக குடிச்சி உங்களை நீங்களே அழிச்சிப்பீங்களா? இதைக் குடிச்சன்னு உங்களுக்கு என்ன கிடைக்க போகுது?" எனக் கோபமாகக் கேட்கவும் மறு நொடியே பிரணவ்விடமிருந்து, "நிம்மதி... ஆறுதல்... என் மனசுல உள்ள வலி கொஞ்சமாவது இது மூலமா குறையும்..." என்ற பதில் வந்தது.

அவனின் கலங்கியிருந்த கண்களைக் கண்டு மனம் பொறுக்காமல், "இதைக் குடிச்சா உங்க வலி போயிடுமா பிரணவ்?" என அனுபல்லவி வருத்தமாகக் கேட்கவும், "வேற என்ன தான் என்னைப் பண்ண சொல்ற பல்லவி?" என அவளின் முகம் பார்த்து கத்திய பிரணவ்வின் விழிகள் கண்ணீரை சிந்தின.

அனுபல்லவியிடமிருந்து மௌனமே பதிலாய் கிடைக்கவும், "சொல்லு பல்லவி... இந்த வலியை மறக்க இதை விட்டா வேற என்ன வழி இருக்குன்னு சொல்லு... உன்னால முடியுமா இந்த வலியை மறக்க வைக்க? முடியல டி... ரொம்ப வலிக்கிது..." எனக் கவலையுடன் கூறிய பிரணவ்வின் இதழ்கள் மறு நொடியே அனுபல்லவியின் இதழ்களினால் சிறை செய்யப்பட்டன.

இருவருக்கும் முதல் இதழ் முத்தம்.‌ அவ் இதழ் முத்தத்தை ஆரம்பித்தது என்னவோ அனுபல்லவி தான். ஆனால் அது உடனே பிரணவ்வின் ஆட்சியாகி அவளுள் இன்னும் இன்னும் மூழ்கிப் போக முயன்றான்.

பிரணவ்வின் கன்னங்களைத் தாங்கியிருந்த அனுபல்லவியின் கரங்கள் மெதுவாகக் கீழிறங்கி அவனின் சட்டை பட்டனை மேலிருந்து ஒவ்வொன்றாகக் கழற்றவும் தன்னிலை அடைந்த பிரணவ் கஷ்டப்பட்டு தன்னிடமிருந்து அவளைப் பிரித்தாள்.

பிரணவ்வின் மடியில் அமர்ந்து அவன் முகத்தைக் கேள்வியாக நோக்கிய அனுபல்லவியை அதிர்ச்சியாகப் பார்த்த பிரணவ், "ப...பவி... எ...என்னப் பண்ணுற நீ?" எனக் கேட்டான்.

அவனின் பிரத்தியேகமான அழைப்பில் கண்களில் காதல் சொட்ட பிரணவ்வின் விழிகளுடன் தன் விழிகள் கலந்த அனுபல்லவி, "உங்க வலியை மறக்க வைக்க என்னால முடிஞ்சது..." என்றவள் மீண்டும் அவனின் இதழ்களை சிறை பிடிக்கவும் வலுக்கட்டாயமாக அவளைத் தன்னை விட்டுப் பிரித்த பிரணவ், "பைத்தியமா பல்லவி உனக்கு? நீ என்ன பண்ணுறன்னு தெரிஞ்சி தான் பண்ணுறியா? வே...வேணாம்... நீ போயிடு இங்கிருந்து..." என்றான் எங்கோ பார்த்தபடி.

பிரணவ்வின் தாடையைப் பற்றி தன் முகம் காண வைத்த அனுபல்லவி, "எனக்கு எதைப் பத்தியுமே கவலை இல்ல பிரணவ்... இப்போ எனக்கு தெரியிறது எல்லாம் உங்க வலி... வலி மட்டும் தான்... உங்களை இப்படி உடஞ்சி போய் என்னால பார்க்க முடியல... அந்த வலியைப் போக்க நான் எந்த எல்லைக்கும் போவேன்... பிகாஸ் ஐ லவ் யூ மோர் தென் எவ்ரித்திங்... என்ன நடந்தாலும் எப்படியான நிலமையாக இருந்தாலும் உங்களுக்கு நான் இருக்கேன்... பிரணவ்வுக்காக எப்பவுமே அவனோட பல்லவி இருப்பா..." எனக் காதலுடன் கூறவும் பிரணவ்வின் கண்கள் மகிழ்ச்சியில் கலங்கின.

'இவள் என்னவள்... எனக்கானவள்‌..‌. எனக்கு என் பவி இருக்கா...' என்ற எண்ணம் பிரணவ்வின் மனதில் ஆழப் பதிந்தது.

கண்ணீருடன் தன்னையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்த தன்னவனின் கன்னம் பற்றிய அனுபல்லவி, "ஐ லவ் யூ பிரணவ்..." என்று அவனின் அதரங்களை சிறைப் பிடிக்க, தன்னவளின் இதழ்த் தேனை இம்முறை விரும்பியே சுவைத்தவன் அவளுள் புதைந்து போனான்.

வெகுநேரம் நீடித்த இதழ் முத்தம் இருவரையும் அடுத்த கட்டம் நோக்கிப் பயணிக்கத் தூண்ட, அனுபல்லவியைத் தன்னை விட்டுப் பிரிக்காமலே மெதுவாக அவளைக் கரங்களில் ஏந்திக்கொண்டு அறையை நோக்கி நடந்தான் பிரணவ்.

மென் பஞ்சு மெத்தையில் தன்னவளை மெதுவாக கிடத்திய பிரணவ் அவள் மேல் படர்ந்து கழுத்தில் முகத்தைப் புதைத்தான்.

அனுபல்லவி, "பி...பிரணவ்..." எனத் தயக்கமாக அழைக்கவும், "பவி... நி...நிஜமாவே உனக்கு சம்மதமா?" என அவளின் கண்களைப் பார்த்து கேட்ட பிரணவ்வின் கண்களில் தெரிந்த ஏக்கம் அனுபல்லவியின் கன்னத்தை வெட்கத்தில் சிவக்கச் செய்து முகத்தில் மென் முறுவல் தோன்றியது.

அனுபல்லவியின் முகமே அவளின் பதிலைக் கூறவும் மகிழ்ந்த பிரணவ் மறு நொடியே தன்னவளை முத்தங்களால் அர்ச்சிக்கத் தொடங்கினான்.

பிரணவ்வின் விரல்கள் அனுபல்லவியின் உடலில் அத்துமீற, விரும்பியே அவனுக்குள் தொலைந்தாள் அனுபல்லவி.

விடியும் வரையுமே தம் இணைகளுக்குள் தம்மைத் தொலைத்து, ஆடை இழந்த மேனிகளுக்கு ஒருவருக்கொருவர் தாமே ஆடையாகி, ஈருடல் ஈருயிராக இருந்தவர்கள் ஈருடல் ஓருயிராக மாறி, தன் காதலால் தன்னவனின் வலியை மறக்கச் செய்யும் நோக்கில் அவளும், தன்னவளின் காதலில் அனைத்தையும் மறக்கும் மாயத்தில் தன்னையே தொலைக்க விரும்பி அவனும் கூடலில் திளைத்தனர்.

லேசாக அறையில் வெளிச்சம் படரத் தொடங்கவும் தன்னவளை விட்டுப் பிரிந்த பிரணவ் அவளின் பிறை நுதலில் அழுத்தமாக இதழ் பதித்து இராப் பொழுதில் தொடங்கிய கூடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அனுபல்லவியை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்ட பிரணவ் காற்று கூட இருவருக்கும் இடையில் புக இயலாதவாறு எங்கு தன்னவளை விட்டால் அவள் மாயமாக மறைந்து விடுவாளோ என்ற பயத்தில் அனுபல்லவியை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 19
அனுபல்லவியின் கன்னத்தில் தன் கன்னம் உரச அவளை இறுக்கி அணைத்தவாறு படுத்திருந்தான் பிரணவ்.

சில நொடிகளிலேயே அனுபல்லவியின் கன்னம் ஈரமாகவும் அதிர்ந்தவள் தன் தலையை உயர்த்தி தன்னவனைக் காண, பிரணவ்வின் மூடியிருந்த விழிகளைத் தாண்டி கண்ணீர் கசிய தன் அணைப்பை இன்னும் இறுக்கினான்.

அனுபல்லவிக்கு வலித்தாலும் தன்னவனின் வலியை அதன் மூலம் உணர்ந்தவள் தன் இதழால் அவனின் விழி நீரைத் துடைக்கவும், இமை திறந்தான் பிரணவ்.

பிரணவ், "என் வலியை மறக்கணும்னு நான் உன்ன கஷ்டப்படுத்துறேனா பவி?" எனத் தன்னவளின் முகம் பார்த்து வருத்தமாக வினவவும் பிரணவ்வை விட்டு விலகி கட்டிலில் சாய்ந்தமர்ந்த அனுபல்லவி தன் மடியைக் காட்டினாள்.

அதனைப் புரிந்துகொண்ட பிரணவ் உடனே அவள் மடியில் தலை சாய்த்து வயிற்றில் முகம் புதைத்தான்.

பிரணவ்வின் தலையை வருடியவாறே, "உங்களால என்னை எந்த சூழ்நிலையிலும் கஷ்டப்படுத்த முடியாது பிரணவ்..." என்றாள் அனுபல்லவி புன்னகையுடன்.

"ஒருவேளை நீ மட்டும் என் பக்கத்துல இல்லன்னா எனக்கு என்ன ஆகி இருக்கும்னே தெரியல பவி..." எனப் பிரணவ் கூறவும் அவனைப் பேச விட்டு அமைதியாக இருந்தாள் அனுபல்லவி.

பிரணவ், "சின்ன குழந்தையா இருக்கும் போது எதுவுமே தெரியல... அம்மாவும் அப்பாவும் கூடவே இருப்பாங்க... அவங்க கையை விட்டு இறக்கவே மாட்டாங்க... அப்படி எல்லாம் இருந்துட்டு ஓரளவுக்கு வளர்ந்ததும் திடீர்னு ஒருநாள் கேர்டேக்கரை கூட்டிட்டு வந்து அவங்க கைல என்னை ஒப்படைச்சிட்டு அப்பாவும் அம்மாவும் பிஸ்னஸை கவனிக்க போய்ட்டாங்க...

எனக்கு அந்த கேர்டேக்கரை பிடிக்கவே இல்ல... சம்பளம் தராங்கன்னு கடமைக்கு என்னைப் பார்த்துப்பாங்க... ரொம்ப திட்டுவாங்க... அதனாலயே நான் அவங்களை கடிச்சி வைப்பேன்... இதை அவங்க அம்மா கிட்ட போட்டு கொடுக்கவும் அம்மா என்னைத் திட்டிட்டு வேற கேர்டேக்கர் ஏற்பாடு பண்ணாங்க... எல்லாருமே அப்படி தான்... பணத்துக்காக வேலை பார்க்குறாங்க... எத்தனையோ கேர்டேக்கர் மாத்தினாங்க... ஆனா கடைசி வரை அம்மாவால மட்டும் தான் என்னைப் பார்த்துக்க முடியும்னு அம்மாவுக்கு புரியல... ஒரு கட்டத்துக்கு மேல எனக்கே எல்லாம் வெறுத்து போய் எனக்குள்ளே ஒடுங்கி போய் அமைதியாகினேன்... என்னோட வேலை எல்லாம் நானே பண்ணிக்க ஆரம்பிச்சேன்... அதுக்கப்புறம் அம்மா எந்த கேர்டேக்கரும் வைக்கல... நான் பேசுறதை கூட குறைச்சிக்கிட்டேன்...

பக்கத்து வீட்டுல என் வயசுலயே ஒரு பையன் இருந்தான்... ஆனா அவங்க ரொம்ப வசதி இல்லாதவங்க... அந்தப் பையன் கூட நான் சேர்ந்து விளையாடுவேன்... இதைப் பத்தி அம்மாவுக்கு தெரிஞ்சதும் என்னை ரொம்ப திட்டிட்டாங்க... நம்ம தகுதிக்கு குறைஞ்ச யார் கூடவும் பழகக் கூடாது... எல்லாருமே பணத்துக்காக தான் நம்ம கூட பழகுவாங்கன்னு சொன்னாங்க... அது அந்த வயசுலயே என் மனசுல பதிஞ்சி போயிடுச்சு... அப்புறம் அந்தப் பையன் கூட நான் சேர்ந்து விளையாடல...

ஸ்கூல் காலேஜ் எல்லாமே நல்ல பெரிய வசியானதா பார்த்து அம்மா சேர்த்து விட்டாங்க... அங்க படிக்கிற எல்லாருமே பணக்கார வீட்டுப் பசங்க... பணம் இருக்குற எல்லா இடத்திலும் குணம் இருக்கும்னு எதிர்ப்பார்க்க முடியாது இல்லயா... அங்க கூட அப்படி தான்... எல்லாருமே கெட்டவங்கன்னு இல்ல... நல்லவங்களும் இருந்தாங்க... ஆனா நான் தேடி தேடி கெட்ட பசங்களாவே ஃப்ரெண்ட் ஆனேன்... எல்லாருமே பணத்துக்காக மட்டும் தான் என் கூட ஃப்ரெண்ட் ஆனாங்க... அது தெரிஞ்சும் நான் கண்டுக்கல... ஏன்னா நான் தப்பு பண்ணினா அப்போவாவது அப்பாவும் அம்மாவும் எனக்காக வருவாங்கன்னு தான்... எல்லார் கூடவும் சண்டை போடுவேன்... யாரையாவது போட்டு அடிப்பேன்... அப்போ கூட அவங்க வரல... எல்லாத்தையும் கால்லயே பேசி முடிச்சிடுவாங்க...

ஸ்கூல் காம்படிஷன்ஸ்ல வின் பண்ணி அவார்டோட அவங்க கிட்ட காட்ட ஓடி வருவேன் சீக்கிரமா... பட் வீட்டுல யாருமே இருக்க மாட்டாங்க... நைட் ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் காட்டலாம்னா டயர்ட் ஆகி வருவாங்க... நான் ஹேப்பியா என்னோட அவார்டை காட்டினா சூப்பர் பா... அப்புறம் பார்க்குறேன்... டயர்டா இருக்குன்னு சொல்லுவாங்க... அதைக் கைல கூட எடுத்து பார்க்க மாட்டாங்க... வாழ்க்கையே வெறுத்து போய் இருந்தப்போ தான் என் வாழ்க்கைல அபி வந்தான்... அபினவ்... எனக்கு கிடைச்ச உண்மையான ஃப்ரெண்ட்... கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள பூட்டி வெச்சிருந்த நல்லவன வெளிய கொண்டு வந்தான்... அப்பா அம்மாவோட பாசத்துக்கு ஏங்கிட்டு இருந்த எனக்கு எல்லாமுமா இருந்தான்... தப்பு பண்ணினா தட்டி கொடுக்கல... தட்டி கேட்டான்... அவன் மூலமா அவனோட அண்ணன் ஆதர்ஷ் ஃப்ரெண்ட் ஆகினான்... அவங்க கூட இருந்தப்போ மட்டும் தான் நான் நானாக இருந்தேன்... மனசுல உள்ள கவலை எல்லாம் மறந்து சந்தோஷமா இருந்தேன்...

அப்படி இருக்குறப்போ தான் தாராவ பார்த்தேன்... சிதாரா... பார்த்ததும் பிடிச்சி போச்சு அவள... அது எப்படிப்பட்ட பிடித்தம்னு எல்லாம் தெரியல... பிடிச்சிருந்தது... அவளுக்கும் அப்படி தான்... அப்போ தான் என் காலேஜ் ஃப்ரெண்ட் ராகுல் கால் பண்ணான்... அவனுங்களுக்கு நான் அபி கூட இருக்குறது சுத்தமா பிடிக்காது... எங்களை பிரிக்க எப்போ சான்ஸ் கிடைக்கும்னு பார்த்துட்டு இருந்தாங்க... சரியா அவன் கால் பண்ணப்போ ரொம்ப ஹேப்பியா தாராவ பத்தி சொன்னேன்... ஆனா அவன் கிராமத்துப் பொண்ணுங்களைப் பத்தி ரொம்ப தப்பு தப்பா சொன்னான்... ஏற்கனவே சின்ன வயசுல அம்மா சொன்னதும் சேர்ந்து நானே தப்பா முடிவு பண்ணேன் தாராவும் என் கூட பணத்துக்காக தான் பழகுறான்னு...

ஆனாலும் என்னால அவள விட முடியல... அவள பிடிச்சிருந்தது... அவ அழகா இருக்குறதால ஒருவேளை அவளை யூஸ் பண்ணி பார்க்கணும்னு வர ஆசைன்னு நானே மனசை சமாதானம் பண்ணேன்... அதுக்கேத்த மாதிரியே அவ கூட பழகினேன்... ஆனா என்னால அதையும் பண்ண முடியல... அவள விடவும் முடியல... திரும்ப சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் ஒரு நாள் கால் பண்ணி அவ ஊருக்கு அவசரமா வர சொன்னா... வீட்டுல கல்யாணம் பேசுறாங்கன்னு கல்யாணம் பண்ணிக்க சொன்னா... என் சொத்துக்காக தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறதா நினைச்சி அவளை பத்தி சீப்பா பேசிட்டு அங்க இருந்து வந்துட்டேன்...

இருந்தாலும் மனசுக்குள்ள ஏதோ ஒரு உறுத்தல்... தாராவ ஆர்யான் கூட பார்த்ததும் என் பொருளை என் கிட்ட இருந்து எடுத்துட்டது போல ஃபீல்... திரும்ப அவ கூட சேர நினைச்சேன்... பட் முடியல... அதுக்கப்புறம் நடந்த எல்லாம் தான் உனக்கு தெரியுமே... ஆர்யான் தான் தாராவுக்கு ஏத்தவன்... அவளுக்கு பண்ணின அநியாயத்துக்கு தான் எனக்கு அப்படி ஒரு தண்டனை கிடைச்சது... நான் தாராவுக்கு பண்ணின அநியாயம் அபிக்கு தெரியவும் என்னால முன்ன மாதிரி அவன் கூட பழக முடியல... அதனால தான் எல்லாத்தையும் விட்டுட்டு பெங்களூர் வந்தேன்...‌

அந்த ஆக்சிடன்ட் பத்தி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் தெரிஞ்சதும் ரொம்ப துடிச்சிட்டாங்க... என் அப்பாவும் அம்மாவும் எனக்கே திரும்ப கிடைச்சிட்டதா நினைச்சி சந்தோஷப்பட்டேன்..‌. ஆனா கொஞ்ச நாளைக்கு அப்புறம் திரும்ப பிஸ்னஸ் அது இதுன்னு ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க... ரொம்ப மனசு உடைஞ்சிடுச்சு... யாருமே வேணாம்னு முடிவெடுத்து தனியா இருக்கும் போது தான் நீ என் வாழ்க்கைல வந்த... என்னோட கார்டியன் ஏஞ்சல்..." என்றவனின் அணைப்பு இறுகியது.

அனுபல்லவியின் வயிற்றுப் பகுதி சூடாகுவதை வைத்தே தன்னவன் அழுகிறான் என் உணர்ந்தவளுக்கும் தன்னவன் இத்தனை வருடங்களாக மனதளவில் அடைந்த வேதனையை எண்ணி கண்ணீர் சுரந்தது‌.

அனுபல்லவியின் கண்களில் இருந்து வடிந்த கண்ணீர் பிரணவ்வின் கன்னத்தில் பட்டுத் தெறிக்கவும் அவசரமாக அவளின் முகம் நோக்கி கண்ணீரைத் துடைத்து விட்ட பிரணவ், "நீ என் லைஃப்ல வந்ததுக்கு அப்புறம் தான் பழையபடி என் முகத்துல சிரிப்பு வந்தது... அபி கூட இருக்குறப்போ எவ்வளவு ஹேப்பியா இருந்தேனோ நீ என் பக்கத்துல இருக்கும் போது அதை விட பல மடங்கு ஹேப்பியா இருந்தேன்... ஆனா இப்படி ஒரு குறையோட உன் வாழ்க்கைய ஸ்பாய்ல் பண்ண கூடாதுன்னு தான் உன்ன என்னை விட்டு தள்ளியே வைக்க ட்ரை பண்ணேன்... பட் உன்னோட காதலால என் தயக்கம் எல்லாத்தையும் தகர்த்து எறிய வெச்சி என்னை உனக்குள்ள கட்டிப் போட்டுட்ட..." என்றான் இவ்வளவு நேரம் இருந்த வருத்தம் மறைந்து புன்னகையுடன்.

அவன் கூறிய விதத்தில் அனுபல்லவியை வெட்கம் பிடுங்கித் திண்ண, கண்களில் மையலுடன் அதனை ரசித்தவன் அனுபல்லவியின் முகத்தை தன்னை நோக்கி இழுத்து அவளின் அதரங்களில் கவி படித்தான் பிரணவ்.

சில நிமிடங்கள் நீண்ட இதழ் முத்தத்தில் அனுபல்லவி மூச்சு விட சிரமப்படவும் மனமேயின்றி அவளை விடுவித்த பிரணவ் தன்னவளை ஏக்கமாக நோக்கினான்.

அவனின் நெற்றியில் அனுபல்லவி முத்தமிடவும் கண்களை மூடி அதனை ரசித்த பிரணவ், "நீ தர லிப் கிஸ்ஸை விட இது தான் எனக்கு பிடிச்சிருக்கு..." என்கவும் அவனைப் பொய்யாக முறைத்த அனுபல்லவி, "அப்போ இதுக்கு என்ன அர்த்தம்?" என்றாள் தன் இதழில் இருந்த காயத்தைச் சுட்டிக்காட்டி.

அதில் குறும்பாகப் புன்னகைத்த பிரணவ், "அது வேற டிப்பார்ட்மென்ட்..." என்கவும் அவனின் தோளில் செல்லமாக அடித்த அனுபல்லவி, "பிரணவ்... நான் ஒன்னு சொன்னா கேட்பீங்களா?" எனக் கேட்டாள் தயக்கமாக.

அனுபல்லவியின் மடியில் வாகாகப் படுத்துக்கொண்டு அவளின் கரத்தை எடுத்து தன் தலை மீது வைத்து விட்டு கண்களை மூடிக்கொண்ட பிரணவ், "இப்போ சொல்லு..." என்றான்.

சில நொடி மௌனத்திற்குப் பின், "பிரணவ்... அத்தையும் மாமாவும் பண்ணினது தப்பு தான்... இல்லன்னு சொல்லல... நீங்க அதனால் நிறைய பாதிக்கப்பட்டு இருக்கீங்க... இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் நீங்க நல்லா இருக்கணும்னு தானே ஓடி ஓடி உழைச்சாங்க... அதுலயும் உங்க அம்மா... சின்ன வயசுல அவங்க பட்ட கஷ்டம் எதையும் நீங்க அனுபவிக்க கூடாதுன்னு நினைச்சாங்க..." என அனுபல்லவி கூறவும் பெருமூச்சு விட்ட பிரணவ்,

"நீ சொல்றது எல்லாம் கரெக்டா இருக்கும் பல்லவி... அவங்க எவ்வளவு தான் எனக்காக தான் பண்ணினாங்கன்னு ரீசன் சொன்னாலும் எனக்கு தேவைப்பட்டது அது இல்லயே... என்னைப் பொருத்தவரை இந்த பாசம் ரொம்ப பொல்லாதது பல்லவி... நாம அதுக்காக ஏங்கும் போது அது கிடைக்காது... எதுவும் வேணாம்னு இருக்கும் போது கிடைக்கும்... அந்த சமயத்துல அதை அவ்வளவு சீக்கிரமா நம்மளால அக்செப்ட் பண்ணிக்க முடியாது... எல்லாம் விடு... அவங்க நான் கேட்ட பாசத்தை தரல... அது கூட ஓக்கே... ஆனா யாரை நான் இவ்வளவு நாளா அம்மா அப்பான்னு நினைச்சேனோ, யாரோட பாசத்துக்காக நான் தவியா தவிச்சேனோ இன்னைக்கு அவங்க எனக்கு சொந்தம் இல்லங்குற உண்மைய தான் என்னால் ஏத்துக்க முடியல டி..." என்றான் கண்ணீருடன்.

அனுபல்லவி, "யாரு சொன்னாங்க அவங்க உங்களுக்கு சொந்தம் இல்லன்னு... உங்களுக்கு மட்டும் தான் அவங்க சொந்தம்... யாராலயும் உரிமை கோர முடியாது... அநாதை ஆசிரமங்கள்ல எவ்வளவு பசங்க இருப்பாங்க அப்பா, அம்மா, குடும்பம் எதுவுமே இல்லாம... ஆனா உங்களுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் இருக்காங்க... பிரணவ் ராஜ்னு ஒரு அடையாளம் இருக்கு... ஆனா எந்த அடையாளமும் இல்லாம எத்தனை பேர் இந்த உலகத்துல இருக்காங்க தெரியுமா?" எனும் போதே அவளின் கண்கள் கலங்கி விட்டன.

ஆனால் பிரணவ் அதனைக் கவனிக்கவில்லை.

"கடவுள் சில பேருக்கு குழந்தை பாக்கியத்தை கொடுக்க மாட்டார்... சில பேருக்கு அப்பா அம்மா இல்ல... இதுக்கு காரணம் என்ன தெரியுமா? அந்த அப்பா அம்மா இல்லாத பசங்களுக்கும் அப்பா அம்மா பாசம் கிடைக்கணும்னு தான் உங்க அப்பா அம்மா மாதிரி ஆனவங்க இருக்காங்க... யாரோ நியூஸ்ல நீங்க அவங்க புள்ள இல்லன்னு சொன்னா அது உண்மை ஆகிடுமா? உங்களுக்கும் உங்க அப்பா அம்மாவுக்கும் இரத்த உறவு வேணா இல்லாம இருக்கலாம்... ஆனா ஆத்மார்த்தமான அன்பு இருக்கு உங்களுக்குள்ள... அத்தையும் மாமாவும் உங்கள கண்டுக்கல... பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடினாங்கன்னு சொல்றீங்களே பிரணவ்... ஒரு வயசுக்கு அப்புறம் நீங்க கூட தான் அவங்கள ஒதுக்கி வெச்சீங்க..." என அனுபல்லவி கூறவும் அவளைப் புரியாமல் பார்த்தான் பிரணவ்.

அனுபல்லவி, "ஆமாங்க... சின்ன வயசுல நீங்க உங்களுக்குள்ள ஒடுங்கி வளர்ந்ததுக்கு அப்புறம் அவங்க கூட பேசுறதையே நிறுத்திட்டீங்க... தேவைக்கு மட்டும் தான் பேசுறீங்க... உங்க மனசுல எல்லாத்தையும் போட்டு பூட்டி வெச்சி நீங்களும் கஷ்டப்பட்டு இப்போ உங்க அப்பா அம்மாவையும் சேர்த்து கஷ்டப்பட வைக்கிறதுக்கு நீங்க ஒரு தடவ அவங்க கிட்ட மனசு விட்டு பேசி இருக்கலாமே..." எனும் போதே இடையில் குறுக்கிட்ட பிரணவ், "அவங்க தான் எனக்கு பேச கூட டைம் தரலன்னு சொல்றேனே பல்லவி..." என்றான்.

"இதெல்லாம் வெறும் சாக்கு போக்கு பிரணவ்... இப்போ இருக்குற பசங்க எவ்வளவு விஷயத்துக்கு பிடிவாதம் பிடிக்கிறாங்க... உங்களால ஒரே ஒரு தடவ பிடிவாதம் பிடிச்சி அவங்க கூட பேச முடியலயா? நீங்க பேசணும்னு சொன்னா அவங்க முடியாதுன்னு சொல்ல போறாங்களா? அவங்க ரெண்டு பேரும் உங்களை புரிஞ்சிக்கலன்னு சொல்றீங்களே... நீங்களும் தான் பிரணவ் அவங்கள புரிஞ்சிக்கல..." என அனுபல்லவி கூறவும் நெற்றியை அழுத்திப் பிடித்தான் பிரணவ்.

மெதுவாக அவனின் நெற்றியை நீவி விட்ட அனுபல்லவி, "விடுங்க பிரணவ்... எல்லாம் முடிஞ்சு போன விஷயம்... இனி வர நாட்களை சரி அவங்கள புரிஞ்சி நீங்களும் அவங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க... உங்க வார்த்தைகள்ல இருந்த வலியை ஆல்ரெடி அவங்க புரிஞ்சிக்கிட்டு நிச்சயம் தங்களோட தவறை உணர்ந்து இருப்பாங்க... இதுக்கு மேலயும் அவங்களுக்கு தண்டனை தர வேணாம்... அவங்க தப்பு பண்ணி இருக்காங்க தான்... ஆனா அவங்க உங்க அப்பா அம்மா... அவங்களுக்கு தங்களோட தப்பை திருத்திக்க ஒரு வாய்ப்பை கொடுக்குறது தப்பே இல்ல... இன்னொரு விஷயத்தை நல்லா புரிஞ்சிக்கோங்க... அவங்க உங்க அப்பா அம்மா... யாரு சொன்னாலும் நீங்க அவங்க புள்ள இல்லன்னு ஆகிடாது... நான் இப்படி பேசினது உங்களுக்கு கஷ்டமா இருக்கா?" எனப் பிரணவ்வின் வாடி இருந்த முகத்தைப் பார்த்து வருத்தமாகக் கேட்டாள்.

உடனே அவளை விட்டுப் பிரிந்த பிரணவ் அனுபல்லவியின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, "நான் தப்பு பண்ணா என்னைத் திருத்துற எல்லா உரிமையும் உனக்கு இருக்கு... பிரணவ்வும் பல்லவியும் வேற வேற இல்ல... ரெண்டு பேரும் ஒன்னு தான்... என்னை அடிக்கவும் உனக்கு உரிமை இருக்கு... சும்மா எதையும் நினைச்சி ஃபீல் பண்ணாதே... நீ இவ்வளவு சொல்லலன்னா நிச்சயம் நான் அவங்கள இப்போ வரைக்கும் தப்பா தான் புரிஞ்சிக்கிட்டு இருப்பேன்... என் மேலயும் தப்பு இருக்கு... அவங்க ரெண்டு பேரும் என்னைத் தேடி வரும் போது நான் தான் தூரமா போனேன்... என் பவி சொல்லிட்டாளே... இனிமே உன்னோட பிரணவ் குட் பாயா இருப்பான்... ஓக்கே..." என்றவன் அனுபல்லவியின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு விட்டு அவளை அணைத்துக் கொண்டான்.

சில நொடிகள் அவனின் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளுக்கு அப்போது தான் தன் தோழியின் நினைவு எழுந்தது.

அவசரமாக பிரணவ்வை விட்டு விலகி தலையில் கை வைத்து அமர்ந்தவளைப் புரியாது நோக்கிய பிரணவ், "என்னாச்சு பல்லவி?" எனக் கேட்டான்.

அனுபல்லவி, "சாரு கிட்ட நைட் சீக்கிரமா வரேன்னு எங்க போறேன்னு கூட சொல்லாம வந்தேன்... அவ இந்நேரம் நான் நைட் வீட்டுக்கு வரலன்னு டென்ஷன் ஆகி தேடிட்டு இருப்பா..." என வருத்தத்துடன் கூறவும் ஏதோ யோசித்த பிரணவ், "உனக்கு யாரு நான் இங்க தான் இருப்பேன்னு சொன்னாங்க?" எனக் கேட்டான்.

"ஆகாஷ் அண்ணா தான்..." என்ற அனுபல்லவியின் பதிலில் புன்னகைத்த பிரணவ், "அப்போ விடு... டென்ஷன் ஆகாதே... அவன் பார்த்துப்பான் உன் ஃப்ரெண்ட... நீ குளிச்சிட்டு வா... நாம ரெண்டு பேரும் போய் உன் அத்தையையும் மாமாவையும் பார்த்துட்டு வரலாம்... அப்படியே அவங்களுக்கு அவங்க மருமகளையும் இன்ட்ரூ பண்ணலாம்..." என்றான்.

பிரணவ் கூறிய விதத்திலேயே அவன் மனம் மாறி விட்டதை உணர்ந்த அனுபல்லவிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அனுபல்லவி, "முதல்ல நீங்க போய் குளிச்சிட்டு வாங்க..‌. நான் எதுக்கும் சாருக்கு கால் பண்ணி அவளை சமாதானப்படுத்துறேன்..." என்கவும் முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்ட பிரணவ், "பெங்களூர்ல தண்ணி பஞ்சமாம்... பேசாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒன்னா குளிச்சி தண்ணிய மிச்சம் வைக்கலாமே..." என்றான் அப்பாவியாக.

இடுப்பில் கை வைத்து அனுபல்லவி அவனை ஏகத்துக்கும் முறைக்கவும், "ஓக்கே ஓக்கே... நோ டென்ஷன் பேபி... நாட்டுக்கு நல்லது பண்ண நினைச்சேன்... பரவால்ல... கல்யாணத்துக்கு அப்புறம் பண்ணிக்கலாம்..." என்றவாறு எழுந்து குளியலறை நோக்கி நடந்தான் பிரணவ்.

பிரணவ் செல்லவும் புன்னகைத்த அனுபல்லவி, "சரியான கேடி என் பிரணவ்..." எனச் செல்லமாக அவனைத் திட்டி விட்டு தன் கைப்பேசியைத் தேடி எடுத்து சாருமதிக்கு அழைப்பு விடுத்தாள்.

திடீரென ஏதோ விழும் சத்தம் கேட்கவும் பதறி அவசரமாக சென்று பார்க்க, பேச்சு மூச்சற்று மயங்கிக் கிடந்த பிரணவ்வைக் கண்டு அதிர்ந்தாள் அனுபல்லவி.
 
Status
Not open for further replies.
Top