All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நுஹா மர்யமின் "இருளில் கண்ணீரும் எதற்கு?" - கதைத் திரி

Status
Not open for further replies.

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 30
ஹைதரபாத்தில் இருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு இடத்தில் தாசிகளுக்கெனவே இருந்த ஒரு குடியிருப்பில் வாழ்ந்தவர் அனுஷியா.

தன் பதினாறு வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்து குடும்ப உறவுகளால் ஒதுக்கப்பட்டு எதுவுமே இன்றி அநாதையாக வந்து சேர்ந்தவரை அரவணைத்தது அக் குடியிருப்பில் வாழும் தாசிகள் தான்‌.

அங்கிருந்த அனைவரும் விதியாலும் சதியாலும் தாசிகளாக மாறியவர்களே.

ஆகையால் தம்மைப் போல் அனுஷியா மாறி விடக் கூடாது என்பதற்காகவே கயவர்களின் பார்வையில் இருந்து முடிந்தளவு அவளை மறைத்து வைத்தனர்.

இவ்வாறிருக்க அனுஷியா தன் இருபதுகளின் தொடக்கத்தில் காலடி எடுத்து வைக்க, அக் குடியிருப்பின் நிர்வாகியின் பார்வையில் விழுந்தாள் அனுஷியா.

இதுவரை எப்படியோ அவருக்கு தெரியாமல் தான் மற்ற தாசிகள் அனுஷியாவை அங்கே தங்க வைத்திருந்தனர்.

நிர்வாகியின் பார்வையில் விழுந்தால் நிச்சயம் அனுஷியாவையும் அவர் தம்மைப் போலவே மாற்றி விடுவார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

எப்படியோ இதனை அறிந்து விட்ட நிர்வாகி சத்யன் கேவலமாக ஒரு திட்டத்தைத் திட்டினார்.

"இந்தப் பொண்ணுக்கும் என் பொண்ணு வயசு தான் இருக்கும்... அதனால இந்தப் பொண்ணு இங்கயே பாதுகாப்பா இருக்கட்டும்... ஆனா இனிமே இப்படி எனக்குத் தெரியாம திருட்டுத்தனம் பண்ணாம இருங்க..." என மற்ற தாசிகளைப் பொய்யாக மிரட்டி விட்டுச் சென்றார்.

அன்றிலிருந்து அனுஷியா அங்கேயே அடைந்து கிடக்காமல் ஏதாவது வேலை கிடைக்குமா எனத் தேடி அலைய, அவள் செல்லும் இடம் எல்லாம் அவள் தாசிகளுடன் வசிப்பதால் அவளைக் கேவலமாகப் பார்த்தும் வார்த்தைகளால் வதைத்தும் வந்தனர்.

மனமுடைந்து திரும்பும் அனுஷியாவிற்கு அங்கிருந்த தாசிகள் தான்‌ ஆறுதலாக இருந்தனர்.

அனுஷியா மூலம் நல்ல வருவாயை ஈட்ட எண்ணிய நிர்வாகி அதற்குத் தகுந்த வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க, அச் சந்தர்ப்பமும் கிடைத்தது.

அன்று வழமை போலவே வேலை தேடி அலைந்த அனுஷியாவின் கைப்பேசிக்கு அழைத்தார் நிர்வாகி.

அவசரமாக அழைப்பை ஏற்ற அனுஷியா, "சொல்லுங்க ஐயா..." என்க, "அம்மாடி அனுஷியா... நம்ம மாலினி இருக்காளே... அவளுக்கு சின்ன பிரச்சினை ஆகிடுச்சு மா..." என்றார் சத்யன்.

அனுஷியாவை அங்கு அழைத்து வந்து அவளுக்குத் தேவையான அனைத்தையும் செய்து கொடுத்ததே மாலினி தான்.

அவளுக்கு என்னவோ ஏதோவென பதறிய அனுஷியா, "அக்காவுக்கு என்னாச்சு ஐயா?" எனக் கேட்டாள் பதட்டமாக.

சத்யன், "வழமையா வர கஸ்டமர் இல்லாம இன்னைக்கு புது கஸ்டமர் ஒன்ன பார்க்க அந்தப் பொண்ணு போயிருக்கா... போன இடத்துல கொஞ்சம் பிரச்சினை போல... நான் வேற வேலை விஷயமா வெளிய வந்திருக்கேன்... மத்ததுங்க எல்லாரும் கஸ்டமர பார்க்க போயிருக்காங்க... அவங்கள டிஸ்டர்ப் பண்ண முடியாது... அதான் மா உன் கிட்ட சொல்றேன்... கொஞ்சம் நீ போய் பார்த்து அந்தப் பொண்ண கூட்டிட்டு வர முடியுமாம்மா?" எனக் கேட்டார்.

மாலினிக்கு பிரச்சினை என்றதும் எதைப் பற்றியும் யோசிக்காத அனுஷியா, "அட்ரஸ சொல்லுங்க ஐயா... நான் உடனே போறேன்..." என்றாள்.

அதன்படி சத்யன் அனுப்பிய முகவரிக்கு சென்று பார்க்க, அதுவோ ஏதோ லாட்ஜ் போல் இருந்தது.

அதனைப் பற்றி யோசிக்காதவள் உள்ளே சென்று சத்யன் கூறிய அறை எண்ணைத் தேடிச் சென்றாள்.

மூடியிருந்த கதவை வேகமாகத் திறந்தவள் கண்டது என்னவோ இருட்டாக இருந்த அறையைத் தான்.

வேகமாக அறை விளக்கை ஒளிர விட்டவள், "அக்கா... எங்க இருக்கீங்க?" எனக் குரல் கொடுத்தபடி முன்னேற அவளைப் பின்னிருந்து அணைத்தது ஒரு உருவம்.

"ஏய்... யாரு நீ? விடு என்னை... அக்கா..." என அனுஷியா பயத்தில் கத்த, "செம்ம ******* ஆ இருக்க பேபி..." என்றது ஒரு ஆண் குரல்.

அவனிடமிருந்து இருந்து வந்த மது வாடையில் அனுஷியாவிற்கு வாந்தி வருவது போல் இருந்தது.

"ச்சீ..." என வேகமாக அக் கயவனைத் தள்ளி விட்ட அனுஷியா கதவைத் திறக்க முயல, அதுவோ பூட்டப்பட்டிருந்தது.

அனுஷியா அதனைத் திறக்க முயற்சிக்கும் போதே அவளின் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்த கயவன், "எங்க பேபி தப்பிக்க போற? உன்ன போக விடுறதுக்கா அந்தாளுக்கு அம்புட்டு பணத்த அள்ளி அள்ளி கொடுத்தேன்..." என்றவன் அனுஷியாவை முத்தமிட நெருங்க, தன்னைத் திட்டமிட்டு இங்கு அனுப்பி உள்ளனர் என்பதைப் புரிந்து கொண்டவள் அக் கயவனிடமிருந்து தப்பிப்பதற்காக தன்னை முத்தமிட நெருங்கியவனின் முகத்தில் காரி உமிழ்ந்தாள்.

அதில் ஒரு நொடி அவனின் பிடி இளக, அதனைப் பயன்படுத்தி தப்பிக்க முயற்சித்தாள் அனுஷியா.

ஆனால் அவள் காரி உமிழ்ந்ததில் வெறியான கயவன் அனுஷியாவின் உடையைப் பற்றி இழுக்க, அவனின் பிடியில் அனுஷியா அணிந்திருந்த ஆடையின் கைப்பகுதி கிழிந்தது.

அவமானத்தில் அனுஷியாவின் விழிகள் கண்ணீரை சுரக்க, ஆடை கிழிந்த பகுதியில் பார்வையைப் பதித்த கயவனின் கண்கள் அவளை அடைய வெறியடைந்தன‌.

"ப்ளீஸ் என்னை விட்டுரு..." என அனுஷியா கண்ணீருடன் கெஞ்ச, அதனைக் கண்டு கொள்ளாதவனோ அனுஷியாவை வலுக்கட்டாயமாக கட்டிலில் தள்ளி விட்டு அவள் மீது படர்ந்து தன் ஆசையைத் தீர்க்க முயன்றான்.

அக் கயவனின் தொடுதலில் அனுஷியாவிற்கு நெருப்பில் வேகுவது போல் உணர்ந்தவள் அவனிடமிருந்து தப்பிக்கப் போராட, அக் கயவனின் உடல் பலத்திற்கு முன் அனுஷியாவின் கரங்களின் பலம் ஒன்றுமே இல்லாதது போல் இருந்தது.

இருந்தும் தன்னைக் காத்துக்கொள்ளப் போராடியவளின் பார்வையில் பட்டது கட்டிலின் அருகில் இருந்த மேசையில் இருந்த பூச்சாடி.

தன் கரத்தை நீட்டி பெரும்பாடு பட்டு அதனை எடுத்த அனுஷியா தன் மீது இருந்தவனின் தலையில் ஓங்கி அடிக்க, ஏற்கனவே போதையில் இருந்தவனின் பிடி விடுபட்டது.

அவனிடமிருந்து தப்பித்து அனுஷியா வெளியே ஓட, தன்னிலை அடைந்த கயவனும் அவளைப் பின்னால் துரத்தினான்.

தன் கற்பைக் காத்துக்கொள்ள வேகமாக ஓடியவள் அக் கயவன் அவளை விடாது துரத்தவும் அவன் காணும் முன் அவசரமாக ஒரு அறைக்குள் நுழைந்து பூட்டிக் கொண்டாள்.

நீண்ட மூச்சுகளை இழுத்து விட்டவள் மெதுவாக அவ் அறை விளக்கை ஒளிர விட்டதும் கண்ட காட்சியில் அனுஷியாவின் இதயம் ஒரு நொடி இயங்க மறுத்தது.

அவ் அறையின் திறந்திருந்த ஜன்னலின் மீது ஒரு கையில் மதுக் கிண்ணத்துடன் ஏறி நின்றிருந்த ஒருவன் அங்கிருந்து பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயல, நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அனுஷியா வேகமாக அவனின் கையைப் பிடித்து கீழே இழுக்கவும் நிலை தடுமாறி அனுஷியாவின் மீதே விழுந்தார் பல்லவன்.

அனுஷியாவோ பல்லவனின் நெருக்கத்தில் அதிர்ச்சியில் இருக்க, "எதுக்காக என்னைக் காப்பாத்தின?" எனக் கேட்டார் பல்லவன் போதை மயக்கத்தில்.

அவசரமாக அவரிடமிருந்து விலகிய அனுஷியா அங்கிருந்து செல்லப் பார்க்க, "ஏன் என்னை காப்பாத்தின? நான் சாகணும்... சாகணும்..." என உலறியவாறே எழுந்து மீண்டும் ஜன்னல் பக்கம் நடக்க, தான் சென்ற பின் மீண்டும் அவர் ஏதாவது செய்து கொள்வாரோ என்ற பயத்திலும் அறைக்கு வெளியே இருந்த கயவனிடமிருந்து தப்பிக்கவும் சற்று நேரம் அங்கேயே இருக்க முடிவு செய்தார் அனுஷியா.

ஆனால் அவரின் மனமோ பல்லவனை அந் நிலையில் தனியே விட்டு செல்ல ஒப்புக்கொள்ளவில்லை.

ஜன்னல் பக்கம் நடந்த பல்லவனின் கரத்தைப் பற்றி நிறுத்திய அனுஷியா, "ஏன் உங்களுக்கு வாழ பிடிக்கல?" எனக் கேட்டாள் தயக்கமாக.

அவளின் கேள்வியே அவளுக்கு அபத்தமாகத் தோன்றியது.

தான் ஏன் சம்பந்தமே இல்லாமல் இவ் ஆடவனுக்காக வருந்துகிறோம் என மனசாட்சி வேறு கேள்வி எழுப்பியது.

அனுஷியாவின் கேள்வியில் அப்போது தான் அவளை உற்று நோக்கினார் பல்லவன்.

பின் ஒரு கசந்த புன்னகையுடன், "எல்லாம் இருக்கு... ஆனா ஒன்னுமே இல்ல..." என்ற பல்லவன் மதுக் கிண்ணத்தை வாயில் சரித்தார்.

பல்லவனின் பதிலில் அனுஷியாவின் மண்டை தான் குழம்பியது.

போதையில் இருப்பவரிடம் எதுவும் கேட்டுப் பயனில்லை எனப் புரிந்து கொண்ட அனுஷியா வேறு எதுவும் கேட்காது கட்டிலில் சென்று அமர்ந்து கொண்டாள்.

சில நொடிகளில் அவளின் அருகில் வந்தமர்ந்த பல்லவன், "பணம் மட்டும் இருந்து போதுமா? வாழ்க்கைல சந்தோஷமும் நிம்மதியும் இருக்கிறவன் தான் உண்மையான பணக்காரன்..." என்றார்.

உள்ளே இறங்கிய மதுவின் காரணமாக மனதில் உள்ளவை அனைத்தும் வெளி வந்தன.

அனுஷியா அவர் கூறுவதை செவிமடுக்க, "என் தங்கச்சி... சின்ன வயசுல இருந்து அவ தான் எனக்கு எல்லாமே... அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து பண்ணேன்... அவ காதலிச்சாங்குற ஒரே காரணத்துக்காக கொஞ்சம் கூட வசதியே இல்லாத, எந்த வேலைக்கும் போகாதவன கல்யாணம் பண்ணி வீட்டோட மாப்பிள்ளையா வெச்சேன்... ஆனா அவ என்னடான்னா எப்பப்பாரு அவ புருஷன் பணம் கேட்டான்னு என் கிட்ட வந்து நிப்பா... நானும் தங்கச்சி தானேன்னு அள்ளி அள்ளி கொடுத்தா அவ புருஷன் ஊதாரித்தனமா செலவு பண்றான்... அதனால இனிமே பணம் தர முடியாதுன்னு சொன்னேன்... அப்பவாச்சும் அவனுக்கு பொறுப்பு வரும்னு நம்பிக்கைல தான்... ஆனா என் தங்கச்சி பணம் தர மாட்டேன்னு சொன்னதும் என்னையே எதிர்த்து பேசுறா... அவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்த பண்ண என்னையே தப்பா பேசுறா... வாழ்க்கையே வெறுத்து போச்சு..." என்றவர் அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளின் கரத்தைப் பற்றி, "என் கவலை புரியுதா உனக்கு?" எனக் கேட்டார் அவளின் முகம் நோக்கி.

அனுஷியாவின் தலை தானாக ஆம் என ஆடவும் மெலிதாகப் புன்னகைத்த பல்லவன் அனுஷியாவின் மடியில் தலை வைத்துப் படுக்க, அனுஷியாவோ அதனை சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை.

அவசரமாக பல்லவனைத் தன்னிடம் இருந்து விலக்க முயல, "நீயும் என்னை விட்டுப் போகப் போறியா?" எனக் கேட்டார் பல்லவன் கண்ணீருடன்.

பல்லவனின் விழி நீர் அனுஷியாவை ஏதோ செய்ய, தன் முயற்சியைக் கை விட்டாள்.

அதன் பின் பல்லவன் தன் மனம் விட்டு ஏதேதோ பேச, விடியும் வரை அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் அனுஷியா.

பேசியவாறே பல்லவன் உறங்கி விட, அனுஷியாவும் தன்னையும் மீறி உறங்கி விட்டாள்.

கதிரவனின் ஒளிக்கீற்று கண்ணில் படவும் முதலில் கண் விழித்த பல்லவன் தன் அருகில் இருந்த பெண்ணைக் கண்டதும் திடுக்கிட்டார்.

அனுஷியாவும் உறக்கம் கலைந்து எழுந்து விட, "சாரி சாரி நான்..." எனப் பல்லவன் பதட்டமாக ஏதோ கூற முயன்றார்.

"நைட் நீங்க தற்கொலை பண்ணிக்க பார்த்தீங்க... அதான் நான்..." என அனுஷியா தடுமாறவும் தான் பல்லவனுக்கு அனைத்தும் நினைவுக்கு வந்தது.

"நீங்க எப்படி இங்க?" எனப் பல்லவன் குழப்பமாகக் கேட்கவும் தான் எவ்வாறு அங்கு வந்து மாட்டிக் கொண்டேன் என விளக்கினாள் அனுஷியா.

பல்லவன், "நா...நான்... நான் ஏதாவது உங்க கிட்ட தப்பா..." எனத் தயங்க, அவர் என்ன கேட்க வருகிறார் எனப் புரிந்து கொண்டவள், "அப்படி எதுவும் இல்ல... நீங்க உங்க மனசுல இருந்த கவலை எல்லாம் சொன்னீங்க..." என்கவும் பல்லவனின் முகத்தில் கசந்த புன்னகை.

சில நொடிகள் அமைதி காத்த அனுஷியா, "அ...அந்தப் பொறுக்கி இன்னும் வெளிய தான் இருக்கானோன்னு பயமா இருக்கு... என்னை கொஞ்சம் உங்க கூட வெளிய கூட்டிட்டு போறீங்களா?" எனக் கேட்டாள் தயக்கமாக.

சரி எனச் சம்மதித்த பல்லவனும் தன்னுடன் வந்த பெண் போல் அனுஷியாவை வெளியே அழைத்துச் செல்ல, சுற்றி இருந்தவர்களின் பார்வை அனுஷியாவைக் குறுகுறுவென மொய்த்தன.

அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அனுஷியாவிற்கு மிகுந்த அவமானமாக இருந்தது.

லாட்ஜை விட்டு வெளியே வந்ததும், "நான் உங்கள உங்க வீட்டுல ட்ராப் பண்ணவா?" எனக் கேட்டார் பல்லவன்.

தான் வாழும் இடத்தைப் பற்றி அறிந்து கொண்டால் நிச்சயம் பல்லவன் தன்னைத் தவறாக எண்ணுவார் என அவரின் உதவியை மறுத்து விட்டாள் அனுஷியா.

"தேங்க்ஸ்..." என்று மட்டும் கூறி விட்டு அங்கிருந்து சில அடிகள் நடந்த அனுஷியா மீண்டும் பல்லவனிடம் திரும்பி வந்து, "பிரச்சினையோ கவலையோ வந்தா தற்கொலை பண்ணிக்குறது தான் முடிவுன்னா இந்த உலகத்துல யாருமே உயிரோட இருக்க மாட்டாங்க... உங்கள விட கஷ்டத்த அனுபவிக்கிறவங்களும் இங்க இருக்காங்க... அவங்க எல்லாரும் அதை எதிர்த்து போராடிட்டு தான் வாழ்ந்துட்டு இருக்காங்க... உங்க பிரச்சினைக்கான தீர்வ யோசிங்க... ஆனா அது நிச்சயம் தற்கொலையா இருக்காது..." என்று விட்டு சென்றாள்.

அனுஷியாவின் தலை மறையும் வரை மென் புன்னகையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்த பல்லவனின் மனம் அனுஷியாவின் வார்த்தைகளில் இதமாக உணர்ந்தது.

தான் தங்கியிருந்த குடியிருப்புக்கு வந்த அனுஷியாவோ மாலினியிடம் நடந்த அனைத்தையும் கூறி கண்ணீர் வடிக்க, "அனு... இனிமேலும் நீ இங்க இருக்குறது பாதுகாப்பு இல்ல... எங்க வாழ்க்கை தான் இப்படி ஆகிடுச்சு... நீயாவது நல்லா இருக்கணும்... உன்ன என் சொந்த தங்கச்சா தான் நான் பார்க்குறேன்... இதுல கொஞ்சம் பணம் இருக்கு... இதை எடுத்துக்கிட்டு இந்த ஊரை விட்டு எங்கயாவது தூரமா போயிடு... ஏதாவது ஹாஸ்டல்ல தங்கிக்கோ... உனக்கு கண்டிப்பா ஏதாவது வேலை கிடைக்கும்... உனக்கு ஏதாவது தேவைன்னா என் நம்பருக்கு கால் பண்ணு... ஆனா இனிமே இங்க மட்டும் இருக்காதே... அந்த சத்யன் மோசமான ஆளு... எனக்கு அப்பவே அந்த ஆள் மேல சந்தேகமா இருந்தது... நீ இங்க இருந்தா நிச்சயம் அவன் உன்னையும் இந்த நரகத்துல தள்ளாம விட மாட்டான்..." என்றாள் மாலினி.

மாலினியின் கூற்றில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்ட அனுஷியா வேறு வழியின்றி மாலினி கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு மறுநாளே அங்கிருந்து கிளம்பினாள்.

சத்யன் கண்ணில் பட்டு விடக் கூடாது என வேக வேகமாக பேரூந்து நிலையத்தை நோக்கி ஓடியவளை வழி மறித்தான் அன்று லாட்ஜில் அவளின் கற்பைக் களவாட நினைத்த கயவன்.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 31
தன்னை வழி மறித்து நின்ற கயவனை அனுஷியா அதிர்ச்சியுடன் நோக்க, ஒரு கையால் சிகரெட்டை வாயில் வைத்து ஊதித் தள்ளியபடி உதடு சுழித்து ஏளனச் சிரிப்புடன் அனுஷியாவை நோக்கி நடந்து வந்தான் அக் கயவன்.

சத்யன் கண்ணில் பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆள் நடமாட்டம் அற்ற பாதையைத் தேர்ந்தெடுத்து ஓடி வந்த தன் முட்டாள்தனத்தை எண்ணி தன்னையே நொந்து கொண்டாள் அனுஷியா.

"என்ன பேபி? நேத்து தப்பிச்சது போல இன்னைக்கும் தப்பிச்சிடலாம்னு பார்க்குறியா?" எனக் கேட்டவாறு அனுஷியாவின் கரத்தை வலுக்கட்டாயமாக பற்றி, சிகரெட் புகையை அனுஷியாவின் முகத்தில் ஊதியவன், "என்னவோ பெரிய உத்தமி போல சீன் போடுற... ஆஃப்டரோல் கேவலமான ******* நீ..." என வார்த்தைகளில் விஷத்தைக் கக்கினான்.

இதுநாள் வரையிலும் இப்படி ஒரு வார்த்தையை யாரிடமும் கேட்காத அனுஷியாவிற்கு அக் கயவனின் பேச்சில் கண்கள் கலங்கின.

"நா...நான் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்ல... ப்ளீஸ் என்னை விட்டுருங்க..." எனக் கெஞ்சினாள் அனுஷியா.

ஆனால் அக் காமுகனோ அனுஷியாவின் கெஞ்சலை செவிமடுக்காது அவளை முத்தமிட நெருங்கினான்.

தன் மானத்தை காப்பாற்றுவதற்காக மற்ற கையால் அனுஷியா அக் கயவனைத் தள்ளி விட முயற்சிக்க, அவனோ அனுஷியாவே எதிர்ப்பாராத சமயம் அவளின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

அனுஷியா வலி தாங்காமல் கீழே விழ, அவளின் உதடு கிழிந்து இரத்தம் வருவதை ஆசை தீர ரசித்த அக் கயவன் அனுஷியாவை நெருங்கி அவளின் உதட்டில் இருந்து வழிந்த இரத்தத்தை ஒரு விரலால் துடைத்து தன் நாவில் வைத்து ருசித்தான்.

அனுஷியா அவனை அருவருப்புடன் நோக்க, "உன் ப்ளெட்ட டேஸ்ட் பண்ணிட்டேன்... உன்ன டேஸ்ட் பண்ண வேணாமா பேபி?" என இகழ்ச்சியுடன் கூறிய கயவன் சட்டென அனுஷியாவின் மீது மொத்தமாய் படர்ந்து அவளை அடைய முயன்றான்.

தன் மொத்த பலத்தை உபயோகித்து அனுஷியா அவனிடம் இருந்து விடுபடப் போராட, ஏற்கனவே மனதளவில் பலவீனமாய் இருந்தவளின் முயற்சி அனைத்தும் வீணானது.

இறுதியில் அவளின் உடலை மறைத்திருந்த உடையையும் அக் கயவன் விலக்க முயல, 'இதுக்கு நீ என்னைப் பெத்தவங்களோட என்னையும் கொன்னிருக்கலாம் கடவுளே...' என மனதில் எண்ணியவளின் விழிகள் கண்ணீரை சிந்தின.

திடீரென தன் மேல் இருந்த கனமான சுமை விலகவும் மெல்ல இமை திறந்து நோக்கிய அனுஷியா கண்டது தன்னை கற்பழிக்க முயற்சித்தவனை முன் தினம் தான் காப்பாற்றியவன் அடித்துக் கொண்டிருப்பதைத் தான்.

காலையில் அனுஷியா கூறி விட்டுச் சென்றதை எண்ணியபடியே தன் வண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த பல்லவன் ஏதோ சிந்தனையில் அனுஷியாவின் நல்ல நேரமோ என்னவோ வழி மாறி வேறு வழியில் வண்டியை செலுத்தினான்.

சில நிமிடங்களில் சுயத்தை அடைந்த பல்லவன் தெரு ஓரமாய் யாரோ ஒருவன் ஒரு பெண்ணிடம் அத்துமீற முயற்சிப்பதை நொடியில் புரிந்து கொண்டு உடனே வண்டியை விட்டு இறங்கி அவ்விடம் நோக்கி ஓட, இரவு தன்னைக் காப்பாற்றிய தேவதையிடம் அக் கயவன் தவறாக நடக்க முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.

நொடியும் தாமதிக்காது அக் கயவனின் கழுத்தைப் பிடித்து இழுத்து அவன் எதிர்த்தாக்குதல் நடத்த முன்னரே முகத்தில் பல குத்துகள் விட்டு அடி பிண்ணி எடுத்தான்.

அனுஷியா மெது மெதுவாக மயக்க நிலைக்கு செல்ல, அவளிடம் ஓடிய பல்லவன் தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றி அனுஷியாவிற்கு அணிவித்தவன், "ஹலோ... மேடம்... மேடம்... இங்க பாருங்க..." என அவளின் கன்னத்தில் தட்டினான்.

ஆனால் அனுஷியாவோ கண்களில் கண்ணீருடன் பல்லவனை நன்றிப் பார்வை பார்த்துவிட்டு மயங்கி விடவும் மறு நொடியே அவளைத் தன் கரங்களில் ஏந்திச் சென்று வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான் பல்லவன்.

இங்கு பல்லவனிடம் அடி வாங்கிய கயவனோ அவர்கள் இருவரையும் வஞ்சத்துடன் வெறித்து விட்டு, "என்னையே அடிச்சிட்டேல்ல... உங்கள சும்மா விட மாட்டேன்... நான் யாருன்னு காட்டுறேன்..." என சூளுரைத்தவன் யாருக்கோ கைப்பேசியில் அழைத்து பேசினான்.

மருத்துவமனையில் அனுஷியாவைப் பரிசோதித்த மருத்துவர், "மிஸ்டர் பல்லவன்... சரியான நேரத்துல போய் நீங்க அவங்கள காப்பாத்தி இருக்கீங்க... அவங்களுக்கு பிஷிக்கலா எந்த அப்பியூஸும் நடக்கல... மென்டலி வீக்கா இருக்காங்க... அதனால தான் மயங்கிட்டாங்க... கொஞ்சம் நேரத்துல கான்ஷியஸ் வந்துடும்... வார்டுக்கு மாத்தினதும் நீங்க போய் பார்க்கலாம்..." என்கவும், "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர்..." என்றான் பல்லவன்.

பல்லவன் கீழே சென்று அனுஷியாவிற்கான மருந்தை வாங்கி வர, "சார்... நீங்க கூட்டிட்டு வந்த பொண்ணுக்கு கான்ஷியஸ் வந்திடுச்சு... பட் ட்ரிப்ஸ் எல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு பயங்கரமா கத்தி அழுதுட்டு இருக்காங்க... நாங்க எவ்வளவு சமாதானப்படுத்த ட்ரை பண்ணியும் எங்களால முடியல..." என்ற மறு நொடியே அனுஷியா இருந்த அறைக்கு ஓடினான் பல்லவன்.

"வராதீங்க... வராதீங்க... யாரும் என் பக்கத்துல வராதீங்க... எனக்கு பயமா இருக்கு... அம்மா... என்னையும் உங்க கிட்ட கூட்டிப் போங்கம்மா..." எனக் தலையில் அடித்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள் அனுஷியா.

அனுஷியாவின் கரங்களைப் பிடித்து தடுத்த பல்லவன், "ஹேய் ஹேய்... காம் டவுன்... காம் டவுன் மா... நத்திங் டு வொர்ரி... உனக்கு எதுவும் ஆகல..." என்கவும் தான் அவனின் முகத்தை ஏறிட்டாள் அனுஷியா.

பல்லவனைக் கண்டதும் தான் எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பித்து உள்ளோம் என்பதை நினைத்துப் பார்க்கவும் பயத்தில் அனுஷியாவின் உடல் சிலிர்த்தது.

அவளின் பயத்தைப் புரிந்து கொண்ட பல்லவன் தன் அழுத்தத்தை அதிகரிக்க, சட்டென அவனிடம் இருந்து விலகிய அனுஷியா, "எனக்கு பிடிக்கல... வேணாம்... என்னால இந்த உலகத்துல ஒரே பொண்ணா அநாதையா தனியா சமாளிக்க முடியல... அம்மா... அப்பா... என்னையும் உங்க கூட கூட்டிப் போங்க..." என பழையபடி அழ ஆரம்பித்தாள்.

பல்லவன் எவ்வளவு முயற்சித்தும் அனுஷியா சமாதானம் அடையாமல் போகவும், "ஷட்டப்... ஷ்ஷ்ஷ்..." எனச் சத்தமிட்டான் பல்லவன்.

அதில் பயந்து அனுஷியா சட்டென அமைதியாகி விட, மெலிதாகப் புன்னகைத்த பல்லவன், "சாரி... உன் நேம் என்ன?" எனக் கேட்டான்.

"அ...அனுஷியா..." எனப் பயம் விலகாமலே அனுஷியா பதிலளிக்க, "ம்ம்ம்... அனு... நைஸ் நேம்... பயந்துட்டியா? சாரி... உன்னை அமைதிப்படுத்த எனக்கு வேற வழி தெரியல..." என்றான் பல்லவன்.

அனுஷியா பதிலளிக்காது இருக்கவும், "ஆஹ்... என்னைப் பத்தி எதுவும் சொல்லலல்ல நான்... ஐம் பல்லவன்... உனக்கு யாரும் இல்ல அநாதைன்னு சொன்ன... எனக்கு எல்லாரும் இருந்தும் நானும் அநாதை தான்..." என்றவன் அவள் முன் நட்புக் கரம் நீட்ட, தயக்கமாக பதிலுக்கு கை குலுக்கினாள் அனுஷியா.

"ஆமா... ஊருக்கு மட்டும் தான் உபதேசமா? உங்களுக்கு இல்லையா?" எனப் பல்லவன் கேட்கவும் அவனைக் குழப்பமாக ஏறிட்டாள் அனுஷியா.

பல்லவன், "இல்ல... மார்னிங் எனக்கு அட்வைஸ் பண்ணீங்க... இப்போ நீங்களே வாழ பிடிக்கலன்னு சொல்றீங்க..." என்கவும் தலை குனிந்தவாறு கண்ணீர் சிந்தினாள் அனுஷியா.

ஒரு விரலால் அனுஷியாவின் தாடையைப் பற்றி தன் முகம் காண வைத்த பல்லவன், "அனுஷியா... நீங்க சொன்னதையே தான் நான் உங்களுக்கு திரும்ப சொல்றேன்... பிரச்சினைன்னு வந்தா உயிர விடுறது தான் வழின்னா இந்த உலகத்துல மனுஷங்களே இருக்க மாட்டாங்க... உங்க வலி எனக்கு புரியிது... பட் எல்லா விஷயத்தையும் பாசிடிவ்வா பாருங்க... இப்போ எவ்வளவு பெரிய ஆபத்துல இருந்து நீங்க தப்பி இருக்கீங்க... ஒரு வேளை நான் அந்த இடத்துக்கு வராம போய் இருந்தேன்னா என்ன நடந்து இருக்கும்? நான் ஏன் ரோங் ரூட்ல வரணும்? நீங்க ஏன் சரியா என் கண்ணுல படணும்? எல்லாத்துக்குமே ஏதோ காரணம் நிச்சயம் இருக்கும்... ஒரு பொண்ணா தனி மனுஷியா இந்த உலகத்துல உங்களால சமாளிக்க முடியாதுன்னு சொன்னீங்க... அது தப்பு... பொண்ணா இருந்தா யாரையாவது நம்பி தான் இருக்கணுமா? ஏன் ஒரு பொண்ணால சொந்த கால்ல நிற்க முடியாதா? முடியும்... நீங்க சாதிக்க வேண்டியது இந்த உலகத்துல எவ்வளவோ இருக்கு... அதுக்காக தான் என் மூலமா கடவுள் அந்த இடத்துல உங்கள காப்பாத்த வெச்சிருக்கார்..." என்றான்.

"என்னால என்ன பண்ண முடியும்? உங்களுக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாது... அதனால தான் இப்படி சொல்றீங்க..." என்ற அனுஷியா தன்னைப் பற்றி அனைத்தையும் கூறி விட்டு பல்லவனின் முகம் நோக்க, அவனோ அதே புன்னகையுடன் அவளை நோக்கிக் கொண்டிருந்தான்.

"ப்ச்... இவ்வளவு தான் விஷயமா? இதுல உங்க தப்பு என்ன இருக்கு? நீங்க ஒன்னும் வேணும்னு அங்க போகலயே... சந்தர்ப்ப சூழ்நிலையால அந்த இடத்துல மாட்டிக்கிட்டீங்க... மாட்டிக்கிட்டீங்கன்னும் சொல்ல முடியாது... தன்னோட நிலைமை உங்களுக்கு வரக் கூடாதுன்னு அங்க இருந்தவங்க உங்கள கவனமா பார்த்துக்கிட்டாங்க... அவங்க கூட தப்பானவங்க கிடையாது... உங்களுக்கு கிடைச்ச வாய்ப்பு கூட அவங்களுக்கு கிடைக்கல... பட் அது கூட நிரந்தரம் இல்ல... உங்களால அவங்க வாழ்க்கைய மாற்ற முடியும்... அவங்களாலயும் வெளி உலகத்துல தலை நிமிர்ந்து வாழ முடியும்... அதை நடத்தணும்னா முதல்ல நீங்க தன்னம்பிக்கையோட இருக்கணும்... முடியுமா?" எனக் கேட்டான் பல்லவன்.

அனுஷியா ஆம் எனத் தலையசைக்கவும், "தெட்ஸ் மை கேர்ள்..." என்றான் பல்லவன் புன்னகையுடன்.

"பட் நான் இன்னும் காலேஜை கூட கம்ப்ளீட் பண்ணலயே... என்னால என்ன பண்ண முடியும்?" எனக் கேட்டாள் அனுஷியா வருத்தமாக.

பல்லவன், "எல்லாமே முடியும்... திங்க் பாசிட்டிவ்... அதுக்கு முன்னாடி நீங்க ஹெல்த்தியா இருக்கணும்... ஃபர்ஸ்ட் இந்த ஃப்ரூட்ஸை சாப்பிடுங்க..." என்றவன் ஒரு தோடம்பழத்தை எடுத்து தோலுரித்து அனுஷியாவிடம் நீட்டினான்.

அதனை வாங்கிய அனுஷியா, "தேங்க்ஸ்..." என்க, "இன்னும் என்ன தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு... நீங்க என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க... அதுக்காக நான் இதைக் கூட பண்ணலன்னா எப்படி?" எனப் பல்லவன் கேட்கவும் அனுஷியா புன்னகைக்க, அப் புன்னகையில் தன்னையே தொலைத்தான் பல்லவன்.

_____________________________________________________

"ஹேமா... நடக்குற எதுவுமே நல்லா இல்ல... இப்படியே போனா உன் அண்ணன் மொத்த சொத்தையும் ஏதாவது அநாதை ஆசிரமத்துக்கு எழுதி வெச்சிடுவான்... அப்புறம் நம்ம நடு ரோட்டுல பிச்சை எடுக்க வேண்டியது தான்..." என கிஷோர் தன் மனைவியைக் கடிந்து கொண்டான்.

"அது எப்படி கிஷோர் முடியும்? அந்த சொத்துல எனக்கும் பங்கு இருக்கு... ஆனா இந்த மொத்த சொத்தையும் அடையணும்னா அதுக்கு ஒரே வழி எங்க அண்ணனுக்கு உங்க தங்கச்சிய கட்டி வெச்சி அவ மூலமா சொத்த எங்க பெயருக்கு மாத்திக்கிறது தான்..." என மனசாட்சியே இன்றி பேசினாள் ஹேமா.

_____________________________________________________

"என்ன சொல்ற? நீ ஏன் அவள தப்பிக்க விட்ட? யாரோ அவள காப்பாத்தினதா வேற சொல்ற... இப்போ அவ யார் கிட்டயாவது வாய திறந்த நம்ம டோட்டல் பிஸ்னஸும் லாஸ் ஆகிடும்... ச்சே..." என எதிர் முனையில் இருந்தவனை வறுத்தெடுத்தார் சத்யன்.

"அப்படி எல்லாம் எதுவும் நடக்காது... அவ வாய திறக்காம இருக்க என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும்... நீங்க கவலைப்படாதீங்க... அவன் என்னையே அடிச்சிட்டான்... இதுக்கு அவன் பதில் சொல்லியே ஆகணும்..." என்றான் வன்மமாய்.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 32
"இது யார் வீடு?" எனப் பல்லவனுடன் சேர்ந்து அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றுக்கு வந்த அனுஷியா சுற்றும் முற்றும் பார்த்தவாறு வினவினாள்.

"வெல்கம் ஹோம்... இது என் வீடு தான்..."எனப் புன்னகையுடன் பதிலளித்தான் பல்லவன்.

அனுஷியா, "அ...அது... உங்க வீட்டுல உங்கள தவிற யாரும் இல்லையா?" எனத் தயக்கமாகக் கேட்கவும், அவளின் கேள்வியின் காரணம் அறிந்தவன், "இருக்காங்க... ஆனா இந்த வீட்டுல இல்ல... வேற வீடு இருக்கு..." என்றான் பல்லவன்.

"என்னை ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்து விடுறீங்களா? என் கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு... அதை வெச்சி நான் ஏதாவது வேலைக்கு சேர்ந்து அதுல கிடைக்கிற பணத்துல படிக்கிறேன்..." என அனுஷியா கூறவும் புன்னகைத்த பல்லவன்,

"நான் உங்கள ஏதாவது பண்ணிடுவேன்னு பயப்படுறீங்களா?" எனக் கேட்டவனின் குரலில் லேசாக வருத்தம் எட்டிப் பார்த்தது.

"அச்சோ அப்படி எல்லாம் இல்லைங்க..." என உடனடியாக மறுத்த அனுஷியா, "எ...என்ன இருந்தாலும் கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணும் பையனும் தனியா இருந்தா இந்த உலகம் தப்பா தானே பேசும்... அதுவும் இல்லாம எனக்கு இந்த பேச்சு ஒன்னும் புதுசு இல்ல... பழக்கப்பட்டது... ஆனா நீங்க வாழ வேண்டியவர்... உங்களுக்கு மனைவியா வரப் போறவங்களுக்கு இது பிரச்சினையா அமையலாம்ல..." என்றாள் தயக்கமாக.

பல்லவன், "கல்யாணமா? என் வாழ்க்கைலயா?" எனக் கசந்த புன்னகையுடன் கேட்டவன், "நீங்க மட்டும் நேத்து கொஞ்சம் லேட் ஆகி இருந்தீங்கன்னா நான் இன்னைக்கு உங்க முன்னாடி உயிரோட நிட்டுட்டு இருந்திருக்க மாட்டேன்... வாழ்க்கையே வெறுத்து போய் இருக்கேன்..." எனப் பெருமூச்சு விட்டான்.

அனுஷியா இதற்கு என்ன பதிலளிக்க எனத் தெரியாமல் அமைதியாக இருக்கவும், "என் கதை எதுக்கு? உங்கள படிக்க வைக்கிற மொத்தப் பொறுப்பும் இனிமே என்னோடது... அப்புறம் இன்னொரு விஷயம்... இந்த வீட்டுல தங்க நீங்க எதுக்கும் தயங்க வேண்டியது இல்ல... நான் இங்க இருக்க மாட்டேன்... உங்களுக்கு துணையா நான் ஒருத்தங்கள ஏற்பாடு பண்ணி இருக்கேன்... இன்னும் கொஞ்சம் நேரத்துல அவங்க வந்துடுவாங்க... வீட்டு வேலை எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க... உங்களுக்கு என்ன வேணும்னாலும் அவங்க கிட்ட தயங்காம கேளுங்க..." எனப் பல்லவன் கூறிக்கொண்டு இருக்கும் போதே வாசல் அழைப்பு மணி ஒலித்தது.

"அவங்க வந்துட்டாங்க போல..." என்றவாறு பல்லவன் சென்று கதவைத் திறக்கவும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி உள்ளே வந்தார்.

"அனுஷியா... இவங்க தான் ஜெயாக்கா... இனிமே இவங்க உங்க கூட இருந்து உங்களுக்கு தேவையான எல்லாம் பண்ணிக் கொடுப்பாங்க... ஜெயாக்கா... இவங்க அனுஷியா... கொஞ்சம் பயந்த சுபாவம்... பார்த்துக்கோங்க..." என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தான் பல்லவன்.

"இதை நீங்க சொல்லணுமா தம்பி? எனக்காக எவ்வளவு பண்ணி இருக்கீங்க நீங்க... முதல் தடவை என்னை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைச்சி இருக்கீங்க... என் பொண்ண போல பார்த்துப்பேன்... நீங்க கவலையே படாதீங்க..." என ஜெயா கூறவும் அனுஷியாவின் விழிகள் ஈரமாகின.

தாய்ப் பாசம் இன்றி வளர்ந்தவளுக்கு முதல் முறை தன்னையும் ஒருவர் மகள் போல என்று கூறவும் அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

"தேங்க்ஸ் மா... அம்மான்னு கூப்பிடலாம்ல..." எனக் கேட்டாள் அனுஷியா தயக்கமாக.

"அதுக்கென்ன கண்ணு... நீ தாராளமா என்னை அம்மான்னு கூப்பிட்டுக்கோ... நீயும் எனக்கு பொண்ணு தான்..." என்றார் ஜெயா.

"சரி அனுஷியா... அப்போ உனக்கு..." என ஏதோ கூற வந்த பல்லவன், "சாரி... அவசரத்துல உனக்குன்னு வந்திடுச்சு..." என்க, "பரவால்ல... நான் உங்கள விட சின்ன பொண்ணு தான்..." என்றாள் அனுஷியா.

லேசாகப் புன்னகைத்த பல்லவன், "உனக்கு காலேஜ் போக தேவையான திங்க்ஸ், இன்னும் என்ன என்ன வேணுமோ அதை எல்லாம் ஒரு லிஸ்ட் போட்டு கொடு... நான் அப்புறமா வரும் போது எடுத்துட்டு வரேன்..." என்றான்.

முன் பின் அறியாத ஒருவன் தனக்காக இத்தனையும் செய்வதை எண்ணும் போது அனுஷியாவின் மனம் கனத்தது.

"சாரி... உங்களுக்கு ரொம்ப கஷ்டத்தை தரேன்... நான் வேலைக்கு சேர்ந்ததும் உங்க பணத்த எல்லாம் திருப்பி கொடுத்துடுறேன்..." என்றாள் அனுஷியா.

"அதெல்லாம் அப்புறமா பார்த்துக்கலாம்... இப்போ உன்னோட முழுக் கவனமும் படிப்புல மட்டும் தான் இருக்கணும்..." என்றான் பல்லவன் புன்னகையுடன்.

பின் அனுஷியாவிற்கு தேவையான அனைத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு அங்கிருந்து கிளம்பியவன் சில மணி நேரத்திலேயே அனுஷியா கேட்டதற்கும் மேலதிகமாக வாங்கி வந்து குவித்தான்.

அன்று முழுவதும் அங்கே இருந்து அனுஷியாவிற்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்தவன் ஜெயாவின் கையால் நீண்ட நாட்களுக்கு பின் திருப்தியாக உண்டு விட்டு தன் வீட்டுக்கு கிளம்பினான்.

***************************************

கிஷோரும் ஹேமாவும் ஹாலில் கோபமாக அமர்ந்து இருக்க, கார் சாவியை ஒரு விரலில் சுற்றியவாறு விசிலடித்தபடி முகத்தில் என்றும் இல்லாத புன்னகையுடன் வீட்டுக்குள் நுழைந்த பல்லவனை இருவரும் சந்தேகமாக நோக்கினர்.

ஆனால் பல்லவனோ அப்படி இருவர் அவன் கருத்திலேயே பதியாதது போல் அவர்களைத் தாண்டி தன் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக் கொண்டான்.

நேராக குளியலறைக்குள் நுழையப் பார்த்தவன் இடையில் இருந்த கண்ணாடியில் தன்னையே ஒரு தரம் நோட்டம் விட்டான்.

'என்ன ஒரு நாளும் இல்லாம ரொம்ப சந்தோஷமா இருக்க?' என்ற மனசாட்சியின் கேள்விக்கு, "ஏன்? நான் சந்தோஷமா இருந்தா உனக்கு பொறுக்காதே..." எனக் கடிந்து கொண்டான் பல்லவன்.

'எதுக்காக அந்தப் பொண்ணுக்காக இவ்வளவும் பண்ணுற? இத்தனைக்கும் அந்தப் பொண்ண உனக்கு நேத்து தான் தெரியும்...' என்றது மனசாட்சி சந்தேகமாக.

"அது... ஆஹ்... இந்த வீட்டுல இருக்குற பணப் பேய்ங்களுக்கு தண்டத்துக்கும் பணத்தை செலவு பண்ணுறதுக்கு பதிலா ஒரு பொண்ணை படிக்க வைச்சா கொஞ்சம் நன்மையாவது கிடைக்கும்‌..." என்றான் பல்லவன் பதிலுக்கு.

மனசாட்சி மீண்டும் ஏதோ சந்தேகமாகக் கேட்க வர, "என்ன நீ ரொம்ப தான் கேள்வி கேட்குற?" என மனசாட்சியைக் கடிந்து கொண்டான்.

திடீரென அறைக் கதவு தட்டப்படவும் தன்னிலை மீண்ட பல்லவன் சென்று கதவைத் திறக்க, பல்லவனைத் தாண்டி ஓடிச் சென்று கட்டிலில் ஏறி நின்று அவனின் உயரத்துக்கு முறைத்தான் ஐந்து வயதேயான பிரதாப்.

பல்லவனுக்கு இந்த வீட்டில் பிடித்த ஒரே விடயம் இந்த குழந்தை மட்டும் தான். எந்தக் கள்ளங்கபடமும் சிறுவனின் பேச்சில் பல சமயம் தன் கவலைகளை மறந்துள்ளான் பல்லவன். ஆனால் அவனின் தங்கைக்கு அது கூட பொறுக்காது இப்பொழுதெல்லாம் பிரதாப்பை பல்லவனிடம் செல்ல விடுவதில்லை.

"டேய் வாண்டு... என்னாச்சு? எதுக்காக மாமாவ முறைச்சிட்டு இருக்க?" எனப் புன்னகையுடன் கேட்ட பல்லவனுக்கு அப்போது தெரியவில்லை இந்த சிறுவனின் மனதிலும் அவனின் பெற்றோர்கள் நஞ்சை விதைக்கப் போகிறார்கள் என்று.

"நீங்க வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?" எனக் கேட்டான் பெரிய மனிதன் போல.

அவனின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ச்சியை வெளிப்படுத்திய பல்லவன், "யாரு கண்ணா உனக்கு இப்படி சொன்னாங்க?" எனக் கேட்டான்.

"அப்பாவும் அம்மாவும் பேசிக்கிட்டாங்க... நான் கேட்டேன்..." என்ற பிரதாப் உடனே கட்டிலை விட்டு இறங்கி வந்து பல்லவனின் காலைக் கட்டிக்கொண்டு, "வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்காதீங்க மாமா... அவங்க ரொம்ப மோசம்... என்னை அடிப்பாங்க..." என்றான் வருத்தமாக.

அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட பல்லவன், "என் வாண்டு சொல்லி நான் கேட்காம இருக்க போறேனா? மாமா உங்க வானதி அத்தைய கல்யாணம் பண்ணிக்கல... உனக்காக மாமா ரொம்ப அழகான, அன்பான, உன் கூட டெய்லி விளையாடக் கூடிய ஒரு அத்தைய கூட்டிட்டு வரேன்..." என்றவனுக்கு அவனை அறியாமலே அவனின் மனக் கண்ணில் அனுஷியாவின் முகம் தோன்றி மறைந்தது.

"ஹே... ஜாலி... ஜாலி..." எனப் பிரதாப் உற்சாகமாக பல்லவனின் மடியில் இருந்தபடியே குதிக்க, "ஷ்ஷ்ஷ்..." என அவனின் வாய் மேல் விரல் வைத்து தடுத்த பல்லவன்,

"மாமா உனக்கு விளையாட அத்தைய கூட்டிட்டு வரணும்னா நீ இதைப் பத்தி யார் கிட்டயும் சொல்லக் கூடாது... முக்கியமா உன் அம்மா அப்பா கிட்ட..." என்கவும் வாயை அழுத்தமாக மூடி லாக் போடுவது போல் சைகை காட்டி சிரித்தான் பிரதாப்.

***************************************

நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல, பல்லவனின் உதவியால் தன் படிப்பை நல்லபடியாக தொடர்ந்தாள் அனுஷியா.

அடிக்கடி வீட்டிற்கு சென்று அனுஷியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாதவன் இடையிடையே சென்று அவளுக்கு தேவையானவற்றை கேட்டு செய்து கொடுத்தான்.

அனுஷியாவின் மனதிலோ பல்லவன் மீது தனி மரியாதை ஒன்று உருவாகி இருந்தது.

அதே சமயம் சத்யனின் ஆட்களோ அனுஷியாவை யாரின் கவனத்தையும் ஈர்க்காதவாறு ரகசியமாக வலை வீசித் தேடிக் கொண்டிருந்தனர்.

இடைப்பட்ட நாட்களில் ஹேமாவும் ஒவ்வொரு விதமாக பல்லவனின் மனதை மாற்றி தனது நாத்தனாரை அவனுக்கு மணமுடித்து வைக்க திட்டமிட்டும் எதற்குமே பல்லவன் மசியவில்லை.

அன்று மனைவியுடன் தீவிரமாக ஏதோ விவாதித்துக் கொண்டிருந்த கிஷோருக்கு ஒரு அழைப்பு வந்தது.

மறுமுனையில் கூறப்பட்ட செய்தியில் ஏகத்துக்கும் அதிர்ந்தான் அவன்.

"என்னாச்சுங்க? ஏதாவது ப்ராப்ளமா?" என்ற ஹேமாவின் கேள்விக்கு, "உன் அண்ணன் எவளுக்கோ தண்டமா செலவு பண்ணிட்டு இருக்கானாம்... போற போக்க பார்த்தா நம்ம ப்ளேன் எதுவும் சக்சஸ் ஆகாது போல..." என்றான் கிஷோர் பல்லைக் கடித்துக் கொண்டு.

ஹேமா, "என்னங்க சொல்றீங்க? யார் அவ?" எனக் கேட்டாள் பதிலுக்கு கோபமாக.

"தெரியல ஹேமா... விசாரிச்சு பார்க்குறேன்..." என்ற கிஷோர் யாருக்கோ அழைத்து ஏதோ கூற, சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு கிடைத்த தகவலில் இருவரின் முகத்திலும் விஷமச் சிரிப்பொன்று உதித்தது.

***************************************

அன்று அனுஷியா கல்லூரியில் இருந்து வரும்போது ஹாலில் தலையை அழுத்தமாகப் பற்றியபடி சோஃபாவில் அமர்ந்து இருந்தான் பல்லவன்.

அதே நேரம் கையில் காஃபியுடன் வந்த ஜெயா, "இந்தாங்க தம்பி சுக்கு காஃபி... தலைவலிக்கு நல்லா இருக்கும்..." என்றவாறு அதனைப் பல்லவனிடம் கொடுக்க, "தேங்க்ஸ் கா..." என அதனை வாங்கியவன் அப்போது தான் வாசலில் நின்றிருந்த அனுஷியாவைக் கவனித்தான்.

"என்னாச்சு அனுஷியா? ஏன் அங்கயே நின்னுட்ட?" எனப் பல்லவன் கேட்கவும் தான் உள்ளே வந்தவள், "இல்ல இப்போ தான் வந்தேன்..." என்றாள்.

காஃபியை ஒரு மிடறு குடித்தவன், "காலேஜ் எல்லாம் எப்படி போகுது? எந்தப் பிரச்சினையும் இல்லல்ல..." எனக் கேட்டான் பல்லவன்.

"இல்லைங்க... எல்லாம் ஓக்கே தான்... இதெல்லாத்துக்கும் சேர்த்து நான் எப்படி உங்களுக்கு கைமாறு பண்ண போறேன்னே தெரியல..." என்றவளின் கண்கள் கலங்கின.

பல்லவன், "ஹேய்... எதுக்குமா கைமாறு அது இதுன்னு பேசிட்டு இருக்க? நான் இந்த நிமிஷம் உயிரோட இருக்க காரணமே நீ தான்..." எனக் கூறவும் அனுஷியா ஏதோ கூற வர, அதற்குள் அங்கு வந்த ஜெயா, "சரி சரி போதும் ரெண்டு பேரும் பேசினது... வாங்க சாப்பிடலாம்... இன்னைக்கு தம்பிக்கு பிடிச்ச மீன் குழம்பு பண்ணி இருக்கேன்...." என்றார்.

அதனைக் கேட்டதும், "நிஜமாவாக்கா? அப்போ இன்னைக்கு ஒரு வெட்டு தான்... அனு... நீயும் இப்பவே சாப்பிடு... அப்புறம் நான் மிச்சம் வைக்கலன்னு சொல்லக் கூடாது... அக்கா நீங்களும் சாப்பிடுங்க..." என உற்சாகமாக கூறியவன் டைனிங் டேபிளில் முதல் ஆளாக சென்று அமர்ந்தான்.

பல்லவனின் முகத்தில் இருந்த புன்னகையைக் கண்டதும் அனுஷியாவின் முகமும் மலர்ந்தது.

மூவரும் சாப்பிட்டுக்கொண்டே பேச, பல்லவனின் முயற்சியால் அனுஷியாவும் தன் கூட்டை விட்டு வெளியே வந்து எந்தத் தயக்கமும் இன்றி பேசத் தொடங்கினாள்.

அனுஷியா தன்னை மறந்து ஜெயாவிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்க, அவளையே கண் எடுக்காமல் நோக்கினான் பல்லவன்.

இவ்வளவு நேரமும் அவனின் மனதில் இருந்த கவலைகள் அனைத்தையும் அவளின் புன்னகையில் மறக்கத் தொடங்கினான்.

***************************************

மறுநாள் பல்லவன் வீட்டிற்கு கூட செல்லாது தன் ஆஃபீஸிலேயே தீவிர சிந்தனையில் அமர்ந்திருக்க, அவனின் கைப்பேசி விடாமல் ஒலி எழுப்பியது.

சலிப்புடன் அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் மறு முனையில் ஜெயா, "தம்பி... அனுஷியா பாப்பா இன்னும் வீட்டுக்கு வரல தம்பி... வழமையா காலேஜ் முடிஞ்சதும் இந் நேரம் நேரா வீட்டுக்கு வந்திருப்பா... அப்படியே ஏதாவது வேலையா இருந்தாலும் என் கிட்ட கால் பண்ணி சொல்லிடுவா... ஆனா இன்னைக்கு இம்புட்டு நேரம் ஆகியும் வீட்டுக்கு வரல தம்பி... ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப்னு வருது..." என்றார் பதட்டமாக.

"அக்கா... நீங்க டென்ஷன் ஆகாம இருங்க... நான் அவ எங்கன்னு பார்த்து கூட்டிட்டு வரேன்... நீங்க அவ ஃப்ரெண்ட்ஸ் நம்பர் ஏதாவது இருந்தா எனக்கு அனுப்பி வைங்க..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்த பல்லவன், 'எங்க போய்ட்ட ஷியா?' என மனதுக்குள் பதட்டமாகக் கேட்டவன் அனுஷியாவைத் தேடி விரைந்தான்.

அதே நேரம் ஒரு பாழடைந்த வீட்டில் இருட்டறையில் கை கால்கள் எல்லாம் கட்டப்பட்டு வாயைத் துணியால் மூடி உடலில் ஒட்டுத் துணி கூட இன்றி தரையில் மயங்கிக் கிடந்தாள் அனுஷியா.

அவளின் நெற்றியில் லேசாக இரத்தக்கறை படிந்து இருந்தது.
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 33

அன்று ஏதோ முக்கியமான ஸ்டாஃப் மீட்டிங் என்று கூறி கல்லூரி சற்று முன் கூட்டியே விடப்பட்டது.

காலையில் ஜெயா சமையலுக்கு தேவையான சில பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறியது நினைவு வரவும் வீடு செல்ல முன் நேராக கடைக்குச் சென்று அதனை வாங்கி வரலாம் என்று கிளம்பினாள் அனுஷியா.

கடையில் இருந்து வெளியே வந்தவள் தூரத்தில் மாலதியிடம் ஒருவன் வாக்குவாதம் செய்வதைக் கண்டு அவசரமாக அங்கு ஓட, அதே நேரம் மாலதியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவனோ அவளை அடிக்க கை ஓங்கினான்.

அனுஷியா குறுக்காக வந்து நிற்கவும் அவள் கன்னத்தில் அடி விழ, "அனு..." எனப் பதறினாள் மாலதி.

திடீரென குறுக்காக வந்து அடி வாங்கியவளையே மேலிருந்து கீழ் வரை ஆராய்ந்தான் அந்த ஆடவன்.

அனுஷியா, "அக்கா... என்னாச்சு கா? யார் இவர்? எதுக்காக உன் கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கார் இவர்?" எனக் கேட்டாள் மாலதியிடம் புரியாமல்.

"ஆஹ்... உங்க அக்கா என் கிட்ட ஐம்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தா... அதுவும் ஒரு மாசத்துல திருப்பி தரதா சொல்லி..‌. ஆறு மாசம் ஆகியும் இன்னும் பணம் வரல... கால் பண்ணி கேட்டாலும் சரியான பதில் சொல்லல... அதான் நானே என் பணத்த வாங்க தேடி வந்திருக்கேன்... வட்டியோட சேர்த்து இப்போ மொத்தமா ஒரு லட்சம் ஆகிடுச்சு... ஒழுங்கு மரியாதையா இப்பவே என் பணத்த எடுத்து வை... இல்லன்னா அசிங்கம் ஆகிடும்... உன்ன போல ******களுக்கு பணம் தந்ததே பெரிசு... இதுல என்னையே ஏமாத்த பார்க்குறியா நீ?" என்றான் அந்த ஆடவன்.

அவனின் பதிலில் அதிர்ந்த அனுஷியா மாலதியை அதிர்ச்சியுடன் நோக்க, "எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க... ப்ளீஸ்... கண்டிப்பா உங்க பணத்த திருப்பி கொடுத்துடுறேன்..." எனக் கையெடுத்து கெஞ்சினாள் மாலதி கண்ணீருடன்.

"சரியா ஒரு வாரத்துல பணம் என் கைக்கு வந்தாகணும்... இல்ல நடக்குறதே வேற... சொல்லிட்டேன்..." என மிரட்டி விட்டு அவர்களை விட்டு சற்று தள்ளி சென்றவன் தன் கைப்பேசியை எடுத்து ஏதோ தேட, அவன் தேடியது கிடைக்கவும் இதழ்களில் ஒரு இகழ்ச்சிப் புன்னகை தோன்றியது.

"எதுக்குக்கா அந்த ஆள் கிட்ட பணம் வாங்கின? என்னாச்சுக்கா?" என்ற அனுஷியாவின் கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனமாக கண்ணீர் சிந்தினாள் மாலதி.

"என் படிப்புக்காகவா?" எனக் கேட்டாள் அனுஷியா சந்தேகமாக.

மாலதியின் மௌனமே அவளுக்கான பதிலை வழங்கி விட, "சாரி க்கா... என்னால உனக்கு ரொம்ப கஷ்டம்... நான் எல்லாம் பிறந்ததே சாபம்... எல்லாருக்கும் பாரமா இருக்கேன் நான்..." என மாலதியை அணைத்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள் அனுஷியா.

அவளின் தலையை வருடி விட்ட மாலதி, "அனும்மா... இங்க பாரு... நீ யாருக்கும் பாரமா இல்ல... முதல்ல அதை புரிஞ்சிக்கோ... என்னை அக்கான்னு வாய் நிறைய கூப்பிடுறது எல்லாம் வெறும் பேச்சுக்கா?" எனக் கேட்கவும் உடனே மறுப்பாக தலையசைத்தவளிடம்,

"என் தங்கச்சிக்காக நான் இதைக் கூட பண்ண மாட்டேனா? எனக்கு தான் அந்த வாய்ப்பு கிடைக்கல... ஆனா‌ நீ படிச்சி பெரிய ஆளா வரணும்... அப்போ தான் இந்த அக்காக்கு பெருமை... புரிஞ்சுதா?" எனக் கேட்டாள் மாலதி.

அனுஷியா ஆம் எனத் தலையசைக்க, "சரி சொல்லு... நீ இப்போ எங்க இருக்க? உனக்கு அந்த சத்யனால எந்தப் பிரச்சினையும் வரலைல..." என மாலதி கேட்கவும் சில நொடிகள் அமைதி காத்த அனுஷியா இதுவரை நடந்த அனைத்தையும் மறைக்காமல் கூறினாள்‌.

"நீ சொல்றதை பார்க்கும் போது அவர் நல்லவரா தான் தெரியுறார்... இருந்தாலும் நீ பார்த்து சூதானமா இருந்துக்கோ... சொந்தக்காரங்களையே நம்ப முடியாத காலம் இது... யாரோ மூணாவது மனுஷன் இவர்... பார்த்து பத்திரமா இரு... சரி லேட் ஆகிடுச்சு... நீ பார்த்து போய்ட்டு வா... இந்தப் பண மேட்டரை நான் பார்த்துக்குறேன்... நீ இது எதையும் யோசிச்சி வருத்தப்படாதே..." என மாலதி கூறவும் மனமேயின்றி விடை பெற்றுச் சென்றாள் அனுஷியா.

அனுஷியா சற்றுத் தூரம் சென்று விடவும் மறு பக்கம் திரும்பி கலங்கி இருந்த கண்களைத் துடைத்த மாலதி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு விடாமல் இறுமினாள்.

'சாரி அனு... என்னால உன் கிட்ட உண்மைய சொல்ல முடியல...' என்றாள் மனதுக்குள்.

இங்கு அனுஷியாவோ ஏதாவது செய்து மாலதி வாங்கிய கடனை அடைக்க உதவி செய்ய வேண்டும் என எண்ணிக் கொண்டு மனம் போன போக்கில் நடக்க, அவளின் முன் வேகமாக வந்து நின்ற ஒரு வேன் கண் இமைக்கும் நொடிப் பொழுதில் அனுஷியாவை அதில் ஏற்றிக் கொண்டு பறந்தது.

"ஏய்... யாருடா நீங்க? விடுங்க டா... யார் நீங்க? எதுக்காக என்னைக் கடத்திட்டு போறீங்க?" என இரு பக்கமும் அவளைப் பிடித்து வைத்துக்கொண்டு இருந்தவர்களிடமிருந்து தப்பிக்க திமிற, முன் சீட்டில் இருந்த ஒருவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்து, "அமைதியா இருக்கலன்னா நடக்குறதே வேற..." என்று மிரட்டினான்.

அனுஷியா பதிலுக்கு ஏதோ கூற வரவும் அதற்குள் முன் சீட்டில் இருந்தவன் அனுஷியாவின் அருகில் இருந்தவனிடம் கண்ணைக் காட்ட, அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் மயக்க மருந்து அடங்கிய ஊசியை அவள் கழுத்தில் இறக்கி இருந்தான் அவன்.

மறு நொடியே அனுஷியா மயங்கி விட, "பாஸ்..‌. ஆப்பரேஷன் சக்சஸ்... நீங்க சொன்ன இடத்துக்கு தான் வந்துட்டு இருக்கோம்..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

மீண்டும் அனுஷியா மயக்கம் தெளிந்து கண் விழிக்கும் போது இருந்தது ஒரு இருட்டறைக்குள் தான்.

அவளின் கை கால்கள் கட்டப்பட்டு வாயைத் துணியால் கட்டி இருந்தனர்.

"ம்ம் ம்ம்.... ம்ம்ம்ம்... ம்ம்..." என அனுஷியா கட்டை அவிழ்க்கப் போராட, அவளை அடைத்து வைத்திருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது.

"என் கண்ணுலயே மண்ணைத் தூவி ஏமாத்த பார்த்தியா பேபி?" என்ற குரலில் அனுஷியா சத்தம் வந்த திசையை அதிர்ச்சியுடன் நோக்க, அங்கு விஷமச் சிரிப்புடன் அவளை நோக்கி வந்தான் அந்தக் கயவன்.

பயத்தில் அனுஷியாவின் முகம் வெளிறிப் போக, அவளின் வாயில் இருந்த துணியை எடுத்தவுடன், "நீ... நீ... எ.. எதுக்காக என்னைக் கடத்திட்டு வந்த?" என அனுஷியா பயத்துடன் கேட்கவும் பேய்ச் சிரிப்பு சிரித்தவன், "உன்னை சும்மா வெச்சிருக்கவா அவ்வளவு கஷ்டப்பட்டு தூக்கிட்டு வந்திருக்கோம்... வேற எதுக்கு? இதுக்காக தான்..." என்றவன் அனுஷியாவின் முகத்தை ஒரு விரலால் வருடினான்.

அனுஷியாவிற்கு அருவருப்பில் உடல் கூச, "ப்ளீஸ் என்னை எதுவும் செஞ்சிடாதே... என்னை விட்டுடு..." என கண்ணீருடன் இறைஞ்சினாள்.

"அது எப்படி பேபி விட முடியும்? நான் நினைச்சதை நடத்திக் காட்ட வேண்டாமா?" எனக் கேட்டவன் அனுஷியாவின் நெஞ்சில் கை வைக்கப் போக, தன்னைக் காத்துக்கொள்ள அவனின் முகத்தில் காரி உமிழ்ந்தாள் அனுஷியா.

அதில் ஆத்திரம் உச்சிக்கு ஏறவும் அக் கயவன் அனுஷியாவின் கன்னத்தில் ஓங்கி அறைய, உதடு கிழிந்து இரத்தம் வடிந்தது.

"என்னை விட்டுடு... வேணாம்..." என அனுஷியா கெஞ்ச, அதனைக் கண்டு கொள்ளாதவன், "உனக்கு எம்புட்டு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ? இனி யார் நினைச்சாலும் உனக்கு என் கிட்ட இருந்து தப்ப முடியாது டி..." என்றவன் அவளின் உடையில் கை வைத்து இழுக்க, அனுஷியாவின் உடை கிழிந்து அவளின் பெண்மை அவனுக்கு காட்சிப் பொருள் ஆகியது.

இந்த நொடியே தன் உயிர் போய் விடக் கூடாதா என வேண்டியவள் அவமானத்தில் கண்ணீர் சிந்தினாள்.

அவளின் கை கால்கள் கட்டப்பட்டு இருந்ததால் அவளால் தன்னைக் காத்துக்கொள்ள எதுவும் செய்ய முடியவில்லை.

உடலைக் குறுக்கி சுவரோடு சாய்ந்து அமர்ந்தவள், "விட்டுடு ப்ளீஸ்..." எனக் கெஞ்சினாள்.

அவளைக் கண்களாலே துகில் உறிந்தவன் அனுஷியாவின் தலை முடியைப் பற்றி இழுத்து அவளை முத்தமிட முயன்றான்.

அனுஷியாவோ கட்டப்பட்டிருந்த கால்களாலே அவனை உதைத்து தள்ள முயன்றாள்.

ஆனால் அதிலிருந்து லாவகமாக தப்பித்தவன் மீண்டும் அவளுக்கு அறைய, முழுதாக மயக்கமடைந்தாள் அனுஷியா.

அதனைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டவன் அனுஷியாவின் உடைகளை முற்றாகக் கலைத்து விட்டு அவளின் பெண்மையைக் களவாட முயல, பட்டென அவ் அறைக் கதவு திறக்கப்பட்டது.

"டேய் ராகேஷ்... என்ன காரியம் டா பண்ண போன? உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லையா?" எனக் கோபமாகக் கேட்டபடி உள்ளே வந்தார் சத்யன்.

அவரைப் பார்த்து முறைத்த ராகேஷ், "நான் யூஸ் பண்ணி முடிச்சதும் நீ யூஸ் பண்ணிக்கோ... அதுக்கு எதுக்கு இவ்வளவு சீன்? இப்போ என் மூட மாத்தாம கிளம்புயா..." என்றான் ஒரு மாதிரி குரலில்.

அவனை அனுஷியாவிடமிருந்து இழுத்து விலக்கிய சத்யன், "இந்தப் பொண்ணால நமக்கு எம்புட்டு லாபம் கிடைக்க இருக்குதுன்னு தெரியுமா உனக்கு?" எனக் கேட்டார் ஆத்திரமாக.

ராகேஷ் அவரைக் குழப்பமாக நோக்க, "ஆமா... ஃபாரின் கஸ்டமர் ஒருத்தனுக்கு ஃப்ரெஷ் பீஸ் அஞ்சி நாளைக்கே அனுப்பி ஆகணும்... ஆல்ரெடி நாழு பேர் ரெடி... இவ தான் அஞ்சாவது பீஸ்... அந்தாளு ரொம்ப மோசமானவன்... இவ மட்டும் ஃப்ரெஷ் பீஸ் இல்லன்னு தெரிஞ்சா எங்க தலையை தனியா எடுத்துடுவான்... ஒழுங்கா இந்தப் பொண்ண விட்டுட்டு வெளிய வந்துடு... உன்னால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு..." என்று விட்டு சத்யன் வெளியேற, அனுஷியாவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்த ராகேஷ் 'ஷிட்...' எனத் தரையைக் காலால் உதைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினான்.

***************************************

ஜெயா அழைப்பைத் துண்டித்ததும் பித்துப் பிடித்தவன் அனுஷியாவை எல்லா இடத்திலும் தேடி அலைந்தான் பல்லவன்.

எங்கு தேடியும் அனுஷியா கிடைக்காமல் போக, அவனின் மனதில் பயப் பந்து உருள ஆரம்பித்தது.

அப்போது தான் அவனுக்கு அனுஷியாவிற்கு புது கைப்பேசி வாங்கிக் கொடுக்கும் போது எதற்கும் இருக்கட்டும் என்று அவளின் பாதுகாப்புக்கு ஜீ.பி.ஸ் கனெக்ட் செய்து தன் கைப்பேசியுடன் இணைத்தது நினைவு வந்தது.

இவ்வளவு நேரமும் இருந்த பதட்டத்தில் பல்லவனுக்கு இவ் விடயம் மறந்து இருந்தது.

உடனே தன் கைப்பேசியை எடுத்து அனுஷியா இருக்கும் இடத்தைத் தேட, அதில் காட்டிய இடத்திற்கு கிளம்பினான் பல்லவன்.

ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்த கிளைச் சாலையில் கைப்பேசி காட்டிய இடத்தை நோக்கி நடந்தவனுக்கு அவ் இடத்தைப் பார்க்கும் போதே மனதில் அச்சம் சூழ்ந்தது.

ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அனுஷியாவின் கைப்பேசி இருக்கும் இடத்தைக் காட்ட, சுற்றும் முற்றும் பார்த்த பல்லவனின் பார்வையில் பட்டது ஒரு பாழடைந்த வீடு.

வெளியே விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, வீட்டின் உள்ளிருந்து ஒரு மெல்லிய வெளிச்சம் வந்தது.

அதனை வைத்து அங்கு ஆட்கள் இருப்பதை உறுதி செய்தவன் அவ் வீட்டை நோக்கி சில அடிகள் எடுத்து வைத்து விட்டு, திடீரென என்ன நினைத்தானோ தன் காவல் துறை நண்பன் ஒருவனுக்கு அழைத்து விஷயத்தை கூறி அவ் இடத்துக்கு வரவழைத்தான்.

காவல் துறையினர் அங்கு வந்து சேர எடுத்த அரை மணி நேரமும் பல்லவனுக்கு பல யுகங்கள் போல் இருந்தது.

தனக்குத் தெரிந்த அத்தனை தெய்வத்திடமும் அனுஷியாவிற்கு எதுவும் நடந்து விடக் கூடாது என வேண்டிக் கொண்டவனுக்கு ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்தது.

அது பல்லவனுக்கு அனுஷியா மேல் எழுந்திருந்த காதல்.

அதற்குள் காவல் துறையினர் வந்து விட, உள்ளே இருப்பவர்களுக்கு சந்தேகம் வராதபடி அவ் இடத்தை காவல் துறையினர் முற்றுகையிட்டனர்.

சத்யனும் ராகேஷும் தீவிரமாக ஏதோ பேசியபடி இருக்க, திடீரென காவல் துறையினர் உள்ளே நுழையவும் என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தவர்கள் பின் வாசல் வழியாக தப்பிக்க முயல, சுற்றிலும் காவல் துறையினர் வந்து அவர்களைப் பிடித்தனர்.

பல்லவன் அனுஷியாவைத் தேடிச் செல்ல, பூட்டியிருந்த கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் தன்னவள் இருந்த நிலையைக் கண்டு ஏகத்துக்கும் அதிர்ந்தான்.

அவசரமாக தன் சட்டையைக் கழட்டி அனுஷியாவிற்கு அணிவித்த பல்லவன் அவளின் கட்டுகளை அவிழ்த்து விட்டு தன்னவளை வாரி அணைத்து, "அனு... அனுஷியா... ஷியா... இங்க பாரு... உனக்கு எதுவும் ஆகல... நான் வந்துட்டேன்... ப்ளீஸ் டி... கண்ணைத் திறந்து பாரும்மா..." எனக் கண்ணீர் வடித்தான்.

அனுஷியாவிடம் ஒரு அசைவும் இல்லாது போகவும் அவளைக் கரங்களில் ஏந்தியவன் அவசரமாக அங்கிருந்து வெளியேறினான்.

அதற்குள் காவல் துறையினர் சத்யன், ராகேஷ் உட்பட அவர்களின் ஆட்களை கைது செய்திருந்தனர்.

 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 34

மருத்துவமனையில் அனுஷியாவை சேர்த்த பல்லவனுக்கு அவள் கண் விழிக்கும் வரைக்கும் உடலில் உயிர் இருக்கவில்லை.

மருத்துவர் வந்து அனுஷியா கண் விழித்து விட்டாள் என்று கூறவும் தான் அவனுக்கு உயிரே வந்தது.

"டாக்டர் அனுஷியாவுக்கு?" எனப் பல்லவன் தயங்க, அவன் என்ன கேட்க வருகிறான் எனப் புரிந்து கொண்ட மருத்துவர், "டோன்ட் வொர்ரி மிஸ்டர் பல்லவன். யுவர் வைஃப் இஸ் பர்ஃபக்ட்லி ஆல் ரைட். கரெக்டான டைமுக்கு நீங்க அவங்கள போய் காப்பாத்தி இருக்கீங்க. யாரும் அவங்க மேல கை வைக்கல." என்றவர் அவனின் தோளில் தட்டித் தந்து விட்டு சென்றார்.

அனுஷியாவை மருத்துவமனையில் சேர்க்கும் போது தன் மனைவி என்றே பதிந்து இருந்தான் பல்லவன்.

மருத்துவர் சென்றதும் அனுஷியா இருந்த அறைக்குள் பல்லவன் வேகமாக நுழைய, அனுஷியாவோ தலையில் சிறிய கட்டுடன் விட்டத்தை வெறித்தவாறு படுத்திருந்தாள்.

பல்லவன் உள்ளே வரவும் அனுஷியா எழ முயற்சிக்க, அவசரமாக அவளின் முதுகில் கை வைத்து சாய்வாக அமர வைத்தான் பல்லவன்.

அனுஷியாவின் முகம் உணர்விழந்து காணப்பட, "அனு..." எனப் பல்லவன் அழைக்கவும், "ஏன் எனக்கு மட்டும் இப்படி?" எனக் கேட்ட அனுஷியாவின் குரலில் அவ்வளவு வெறுமை.

"ஷியா..." எனக் கலங்கிய கண்களுடன் தன்னவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட பல்லவனின் மார்பில் முகம் புதைத்து இவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த அழுகையை கொட்டித் தீர்த்தாள் அனுஷியா.

"ஷ்ஷ்ஷ்... அழாதே ஷியா. ஒன்னும் ஆகல. அதான் நான் வந்துட்டேன்ல." எனத் தன்னவளின் தலையை வருடியபடி கூறினான் பல்லவன்.

"எனக்கு பயமா இருக்கு. அ...அவன் என்னை... என்னை... இங்கெல்லாம் தொட்டான். எ...எனக்கு ரொம்ப அசிங்கமா இருந்தது. செத்துடணும் போல இருந்தது." எனக் கதறியபடி அனுஷியா தன் நெஞ்சைத் தொட்டுக் கூறவும் பல்லவனின் அணைப்பு மேலும் இறுகியது.

அனுஷியாவுடன் சேர்ந்து கண்ணீர் வடித்த பல்லவனுக்கு அக் காமுகன்களை அடித்துக் கொல்லும் அளவுக்கு வெறி வந்தது.

சில கணங்கள் பல்லவனின் மார்பிலேயே அழுது கரைந்த அனுஷியா அதன் பின் தான் அவள் இருக்கும் நிலை உணர்ந்து சட்டென அவனிடமிருந்து விலகி, "சாரி... சாரி..." என்றாள்.

இவ்வளவு நேரமும் தன் கையில் இருந்த புதையல் திடீரென தன் கை விட்டுப் போன உணர்வு பல்லவனுக்கு.

ஆனால் அனுஷியாவை சங்கடப்படுத்த விரும்பாதவன், "நான் போய் உனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வரேன்..." என்றவன் அனுஷியாவின் பதிலைக் கூட எதிர்ப்பாராது அங்கிருந்து வெளியேறினான்.

கால் மணி நேரம் கடந்து கையில் உணவுடன் பல்லவன் வந்த போது அனுஷியா உறங்கி இருக்க, அவளின் அருகே இருக்கையைப் போட்டு அமர்ந்து தன்னவளின் முகத்தையே வெறித்தான்.

அதே நேரம் அவனின் கைப்பேசிக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைப்பு வரவும் அழைப்பை ஏற்றுப் பேசியவன் மறு முனையில் கூறப்பட்ட செய்தியில் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

"நான் இப்போவே வரேன்..." என்ற பல்லவன் ஒரு நர்ஸிடம் அனுஷியா எழுந்ததும் சாப்பிட வைக்கக் கூறி விட்டு அவசரமாக காவல் நிலையம் சென்றான்.

அங்கு அவனின் சகோதரியும் அவளின் கணவனும் ஒரு பெஞ்ச்சில் அமர வைக்கப்பட்டிருக்க, நேராக சென்று கிஷோரின் சட்டையைப் பிடித்து, "ஏன் டா இப்படி பண்ண? சொல்லுடா..." எனக் கர்ஜித்தான் பல்லவன்.

கிஷோரோ பல்லவனை இளக்காரமாக நோக்க, பல்லவனுக்கு ஆத்திரம் தலைக்கேறி அவனைப் போட்டு அடித்தான்.

"அண்ணா... விடுண்ணா அவர... அவர் எந்தத் தப்பும் பண்ணல..." எனத் தடுக்க வந்த ஹேமாவை அவன் கண்டுகொள்ளவே இல்லை.

பின் இரண்டு காவலர்கள் வந்து தான் பல்லவனை கிஷோரிடமிருந்து பிரித்தனர்.

"சார்... இது போலீஸ் ஸ்டேஷன். இங்க வந்தும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க. அப்புறம் நாங்க எதுக்கு இருக்கோம்?" எனத் திட்டினார் இன்ஸ்பெக்டர்.

"யோவ்... நீ தான் அந்த சத்யனுக்கு அந்தப் பொண்ண தூக்க சொன்னதா சொல்றான்." எனக் கிஷோரிடம் கேட்ட இன்ஸ்பெக்டரிடம், "ஆதாரம் இருக்கா சார்? வெறும் வாயால சொன்னதை வெச்சி எப்படி என்னை அரெஸ்ட் பண்ணலாம்?" எனக் கேட்டான் கிஷோர் நக்கலாக.

"பொய் சார். அந்தாளு தான் என்னை வந்து சந்திச்சு பணம் எல்லாம் கொடுத்து அந்தப் பொண்ண தூக்க சொன்னான்." என சிறையினுள் இருந்து கத்தினான் சத்யன்.

"இன்ஸ்பெக்டர் சார்... அவன் யாருன்னே எனக்கு தெரியாது. இதுக்கு முன்னாடி நான் அவன பார்த்தது கூட கிடையாது. ஒரு வாரமா வேலை விஷயமா வெளியூருக்கு போய்ட்டு இன்னைக்கு காலைல தான் நான் வீட்டுக்கு வந்ததே. அதுக்கான அத்தனை ஆதாரமும் இருக்கு. வேணும்னா விசாரிச்சு பாருங்க." என்றான் கிஷோர் உறுதியாக.

நன்றாக விசாரித்துப் பார்த்த இன்ஸ்பெக்டரும் கிஷோருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாததாலும் அவன் கூறியதற்கு ஆதாரம் இருந்ததாலும் அவனை விடுவித்தனர்.

ஆனால் பல்லவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது கிஷோர் தான் இதற்கு காரணம் என்று.

கிஷோரும் ஹேமாவும் காவல் நிலையத்தில் இருந்து வெளியே செல்ல, அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற பல்லவன் கிஷோரின் சட்டையைப் பிடித்து, "நீ தான் அனுவ கடத்த சொல்லி இருப்பன்னு எனக்கு உறுதியா தெரியும் டா. திரும்ப ஒரு தடவை அனு மேல கைய வெச்சன்னு தெரிஞ்சா தங்கச்சி புருஷன்னு கூட பார்க்க மாட்டேன். கொன்னுடுவேன்." என மிரட்டினான்.

_______________________________________________

மறுநாளே அனுஷியாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல, பல்லவனோ அவளை விட்டு எங்கும் நகராமல் இருந்தான்.

அனுஷியாவே, "நீங்க கிளம்புங்க. எனக்கு ஒன்னும் இல்ல. நான் இப்போ நல்லா இருக்கேன். ஏதாவது தேவைன்னா ஜெயாம்மா பார்த்துப்பாங்க." என்க, "ஏன் நான் பார்த்துக்க கூடாதா?" எனக் கேட்டு அவளின் வாயை மூடச் செய்வான் பல்லவன்.

ஆரம்பத்தில் பல்லவனின் கவனிப்பு அனுஷியாவிற்கு சங்கடமாக இருந்தாலும் அடுத்து வந்த நாட்களில் அதனை விரும்பியே ஏற்றாள்.

பல்லவன் கொஞ்சம் கொஞ்சமாக அனுஷியாவின் மனதில் நுழைய ஆரம்பிக்க, அனுஷியா அதனை உணர்ந்ததும் ஏகத்துக்கும் அதிர்ந்தாள்.

'என்ன பண்ணிட்டு இருக்கேன் நான்? எவ்வளவு உயரத்துல இருக்குறவர் அவர். நான் சாக்கடை. நான் அவருக்கு கொஞ்சம் கூட பொருந்த மாட்டேன். இப்படி எல்லாம் நான் நினைக்கிறதே தப்பு. என்னைப் பொறுத்தவரை அவர் கடவுள். என்னோட இரட்சகன். கடவுள் மேல பக்தி வைக்கலாம். அதுக்காக உரிமை கொண்டாட முடியாது.' எனத் தன் மனதுக்கு கடிவாளம் இட்ட அனுஷியா அடுத்து வந்த நாட்களில் பல்லவனிடமிருந்து விலக ஆரம்பித்தாள்.

முதலில் அதனை சாதாரணமாக எண்ணிய பல்லவன் அதன் பின் தான் வித்தியாசத்தை உணர்ந்தான்.

அனுஷியா விலக விலக பல்லவனுக்கு அவள் மீதிருந்த காதல் அதிகரித்ததே ஒழிய, குறையவில்லை.

அதற்குள் அனுஷியாவின் படிப்பும் முடிந்தது.

அதே நேரம் பல்லவனின் அனுமதி இன்றியே அவனுக்கும் கிஷோரின் தங்கை வானதிக்குமான திருமண ஏற்பாடு விரைவாக நடந்து கொண்டிருந்தது.

இவை எதையும் அறியாத பல்லவனோ அனுஷியாவின் விலகலுக்கான காரணத்தைத் தேடிக் கொண்டிருந்தான்.

அதற்கு சரியான சந்தர்ப்பமாக அன்று ஜெயா வேலைக்கு வராமல் போகவும் அனுஷியா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

இதை அறியாத பல்லவன் வழமை போலவே வீட்டுக்கு வர, அவனை வரவேற்று அமர வைத்தாள் அனுஷியா.

இருவருக்குமே அங்கு நிலவிய அமைதியும் அத் தனிமையும் ஏதேதோ உணர்வுகளைத் தந்தது.

"ம்ம்ம்... ஜெயாக்கா எங்க? நீ மட்டும் தனியா இருக்க." என மௌனத்தைக் கலைத்தான் பல்லவன்.

"அம்மா இன்னைக்கு அவங்க குலதெய்வக் கோயிலுக்கு போறதா சொன்னாங்க. அதான் வரல. நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்." என அங்கிருந்து அவசரமாகச் சென்றாள் அனுஷியா.

சில நிமிடங்களில் அனுஷியா கொண்டு வந்த காஃபியை பல்லவன் பருகிக் கொண்டிருக்க, "நான் வேலைக்கு போகலாம்னு இருக்கேன்." என அனுஷியா கூறவும், "ம்ம்ம்... குட் ஐடியா. எங்க கம்பனிலயே நீ வந்து ஜாய்ன் பண்ணிக்கலாம்." என்றான் பல்லவன்.

மறுப்பாகத் தலையசைத்த அனுஷியா, "இல்ல. நானே ரெண்டு மூணு கம்பெனில ஜாபுக்கு அப்ளை பண்ணி இருக்கேன். நாளைக்கு கூட ஒரு கம்பனில இன்டர்வியூவுக்கு வர சொல்லி இருக்காங்க." என்றாள்.

பல்லவன் அதனைக் கேட்டு அமைதியாக இருக்க, "நான் வேலைக்கு போய்ட்டு இத்தனை நாள் உங்களுக்கு என்னால ஆன செலவுகளை சீக்கிரம் அடைச்சிடுவேன்." என அனுஷியா கூறவும் அவளை வெட்டும் பார்வை பார்த்தான் பல்லவன்.

அவனின் பார்வை அனுஷியாவுக்கு உள்ளே குளிரைப் பரப்ப, "கம் அகைன்." என்றான் பல்லவன் அழுத்தமாக.

"இதுக்கு மேலயும் நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. இதுவரைக்கும் சம்பந்தமே இல்லாத எனக்காக நீங்க பண்ணினது எல்லாமே அதிகம். இனிமேலும் உங்களுக்கு தொந்தரவா இருக்க விரும்பல நான். நீங்களும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுங்க. என்னைப் போல ஒருத்தி கூட உங்களுக்கு பழக்கம் இருக்குன்னு உங்க மனைவிக்கு தெரிஞ்சா அது உங்களுக்கு தான் அசிங்கமா இருக்கும்." என்றாள் அனுஷியா தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

"அதுக்கு அப்புறம் என்ன பண்ணுறதா ஐடியா?" எனக் கேட்டான் பல்லவன் இறுகிய குரலில்.

"மாலதி அக்காவ கூட்டிக்கிட்டு யாருக்கும் தெரியாத ஒரு இடத்துக்கு போயிடுவேன்." என அனுஷியா கூறவும் சட்டென எழுந்த பல்லவன் அனுஷியாவிடம் ஒரு வார்த்தை கூறாது வீட்டிலிருந்து வெளியேறினான்.

பல்லவன் சென்று விடவும் தொப் என கீழே அமர்ந்த அனுஷியாவின் கண்கள் கண்ணீரை சொரிந்தன.

தன் காதலை நேரடியாக பல்லவன் அனுஷியாவிடம் வெளிப்படுத்தாவிடினும் அவனின் பார்வையும் செயலுமே அவனின் காதலை அனுஷியாவிடம் எடுத்துரைக்க, அதனைப் புரிந்து கொள்ள முடியாத அளவு முட்டாள் இல்லையே அவள்.

'நீங்க சொந்தபந்தங்களோட சந்தோஷமா இருக்கணும் பல்லவன். என்னைப் போல ஒரு அநாதை அதுவும் சாக்கடை உங்களுக்கு வேணாம்.' என்றாள் அனுஷியா மனதுக்குள்.

அன்று முழுவதும் எங்கெங்கோ சுற்றி விட்டு மறுநாள் காலையில் பல நாட்கள் கழித்து தன் வீட்டுக்கு வந்த பல்லவனுக்கு அங்கிருந்த சூழ்நிலை வித்தியாசமாகப் பட்டது.

வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு என்றும் இல்லாத திருநாளாக சொந்தபந்தங்களால் நிறைந்திருந்தது.

அதே நேரம் பல்லவனைத் தேடி வந்த ஹேமா அவனிடம் ஒரு கவரை வழங்கவும் அவளைக் குழப்பமாக நோக்கினான் பல்லவன்.

"இந்த ட்ரெஸ்ஸ போட்டு ரெடியாகுண்ணா. இன்னைக்கு உனக்கும் வானதிக்கும் நிச்சயதார்த்தம்." எனக் குண்டைத் தூக்கிப் போட்டாள் ஹேமா.

தன் கையில் இருந்த கவரைத் தூக்கி சுவற்றில் அடித்த பல்லவன், "என்ன இதெல்லாம் ஹேமா? நான் என்ன பொம்மையா நீ சொல்றது எல்லாத்துக்கும் தலை ஆட்ட?" எனக் கேட்டான் கோபமாக.

அவனிடம் எதிர்த்துப் பேசிப் பயனிருக்காது எனப் புரிந்து கொண்ட ஹேமா தன் அடுத்த ஆயுதமாக கண்ணீரை எடுத்துக்கொண்டாள்.

பல்லவன் எதிர்ப்பார்க்காத நேரம் அவனின் காலில் விழுந்த ஹேமா, "உன் தங்கச்சிக்கு வாழ்க்கை பிச்சை போடுண்ணா... இந்தக் கல்யாணம் மட்டும் நடக்கலன்னா என் புகுந்த வீட்டுக்காரங்க என் புருஷன என்னை விட்டுப் பிரிச்சிடுவாங்க. அப்புறம் காலத்துக்கும் நான் வாழாவெட்டியா தான் அண்ணா இருக்கணும். அப்படி ஒன்னு மட்டும் நடந்தா நான் உயிரோடயே இருக்க மாட்டேன்..." எனக் கதறினாள்.

முன்பானால் ஹேமாவின் கண்ணீரையும் நாடகத்தையும் கண்டு ஏமாந்திருப்பான் பல்லவன்.

ஆனால் இப்போது தான் அவனுக்கு அனைவரின் சுயரூபமும் தெளிவாகத் தெரியுமே.

தன் காலைப் பிடித்துக் கெஞ்சிக் கொண்டிருந்த ஹேமாவை உதறித் தள்ளிய பல்லவன் வந்த வேகத்திலேயே அங்கிருந்து கிளம்பவும் கோபத்தில் பல்லைக் கடித்தாள் ஹேமா.

அதே நேரம் ஹேமாவைத் தேடி வந்த கிஷோரிடம் நடந்த அனைத்தையும் ஹேமா கூற, "எங்க போயிட போறான்? இங்க தானே வந்தாகணும். என்ன நடந்தாலும் குறித்த முகூர்த்தத்துல வானதிக்கும் அவனுக்கும் கல்யாணம் நடந்தே தீரும்." என்றான் கிஷோர் ஆவேசமாக.

_______________________________________________

இன்டர்வியூவை நல்ல விதமாக முடித்துக்கொண்டு வெறியே வந்த அனுஷியா டாக்சி ஒன்றைப் பிடிக்க கை நீட்ட, அவளின் முன் சீறிப் பாய்ந்து வந்து நின்றது ஒரு கார்.

அனுஷியா ஒரு நொடி அதிர்ந்து நிற்க, உள்ளே ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த பல்லவனோ அவளுக்காக கதவைத் திறந்து விட்டு அமைதியாக இருந்தான்.

அவனை அவமதிக்க மனமின்றி பல்லவன் கூறாமலே புரிந்து கொண்ட அனுஷியா அமைதியாக காரில் ஏறிக் கொள்ளவும் காரை இயக்கினான் பல்லவன்.

"எங்க போறோம்?" என்ற அனுஷியாவின் கேள்விக்கு பதிலளிக்காது காரின் வேகத்தை பல்லவன் நன்றாகவே அதிகரிக்கவும் பயத்தில் கண்களை இறுக்கி மூடிய அனுஷியா தன்னையும் மீறி பல்லவனின் கரத்தைப் பற்றி, "ப்ளீஸ்... கொஞ்சம் மெதுவா போங்க..." என்றாள் கெஞ்சலாக.

அதன் பின்னர் தான் தன்னவளின் முகத்தில் இருந்த பயத்தைக் கண்ட பல்லவன், "சாரி..." என்று வேகத்தைக் குறைத்தான்.

அதன் பிறகு அனுஷியாவால் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

சற்று தூரம் வந்ததும் ஒரு கடற்கரையில் காரை நிறுத்திய பல்லவன் தானும் இறங்கி அனுஷியா இறங்குவதற்காக கதவைத் திறந்து விட்டான்.

"எதுக்கு இங்க வந்திருக்கோம்?" எனக் குழப்பமாகக் கேட்டவளின் கரத்தை சட்டெனப் பற்றி, "என்னைக் கல்யாணம் பண்ணிக்குறியா ஷியா?" எனக் கேட்ட பல்லவனின் குரல் கரகரத்தது.

அவனை அதிர்ச்சியுடன் நோக்கிய அனுஷியா தன் கரத்தை வேகமாகப் பிரித்து, "எ...என்ன சொல்றீங்க?" எனக் கேட்டாள்.

"ஷியா... நான் இப்படி கேட்குறதால நீ என்னைத் தப்பா நினைக்கலாம். ஆனா எனக்கு வேற வழி இல்ல." என்றவன் வீட்டில் தனக்கு ஏற்பாடு செய்யப்படும் கட்டாயத் திருமணத்தைப் பற்றிக் கூறியவன், "ப்ளீஸ் ஷியா. எனக்கு இந்த ஹெல்ப் பண்ணு... என்னால யாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது..." என்றவனின் கண்கள் வேறு ஒன்று கூற, அதனைத் தெளிவாக உணர்ந்தாள் அனுஷியா.

"நான்...நான் எப்படி? நான் ஒரு அநாதை... உங்கள போய் நான்..." எனத் தயங்கினாள் அனுஷியா.

காதல் என்று போய் நின்றால் எங்கு அவள் தன்னைத் தவறாக எண்ணி விடுவாளோ என்று தான் தன் சூழ்நிலையைக் காரணம் காட்டி திருமணம் செய்யக் கேட்டான்.

ஆனால் அனுஷியாவின் தயக்கத்தையும் அவளின் விலகலுக்கான காரணத்தையும் கணித்தவனுக்கு அதற்கு மேல் தன் காதலை மறைக்க முடியவில்லை.

அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளைப் பாய்ந்து அணைத்துக் கொண்ட பல்லவன், "ஐ லவ் யூ ஷியா... ஐ லவ் யூ... எதுக்காகவும் யாருக்காகவும் உன்ன என்னால இழக்க முடியாது. நீ வந்ததுக்கு அப்புறம் தான் இருட்டிப் போய் இருந்த என் வாழ்க்கைல வெளிச்சம் வந்தது. என்னோட கடைசி மூச்சு வரைக்கும் நீ என் கூட இருக்கணும் ஷியா..." என்றான் கண் கலங்க.

பல்லவன் நேரடியாகவே தன் காதலை வெளிப்படுத்தி விடவும் இத்தனை நாட்களாக அவனைப் பிரிய நினைத்துப் போராடிய அனுஷியாவின் மனம் தன்னால் அவனை விட்டுப் பிரிந்து வாழ முடியாது என்பதைப் புரிந்து கொண்டது.

இத்தனை நாட்களாக தான் அநாதை என்றும் தனக்கென யாரும் இல்லை என்றும் எண்ணியவளுக்கு எல்லாமுமாக பல்லவன் வந்து சேரவும் ஆனந்தக் கண்ணீருடன் பதிலுக்கு பல்லவனை இறுக்கி அணைத்தாள் அனுஷியா.

_______________________________________________

வணக்கம் மக்களே!!!


சாரி சாரி சாரி சாரி... அதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல. இனிமே ஒழுங்கா அப்டேட் தந்து கதைய முடிக்கிறேன். 🤭

Thank you 😊 keep supporting ❤
 

Nuha Maryam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்ணீர் - அத்தியாயம் 35

அனுஷியாயின் அணைப்பே பல்லவனுக்கு அவள் தன் மீது வைத்திருந்த காதலை உணர்த்த, பல்லவன் வானில் பறக்காத குறை தான்.

ஏதோ ஒரு நினைவில் பல்லவனை அணைத்துக் கொண்ட அனுஷியா தன்னிலை அடைந்தவளாக சட்டென பல்லவனை விட்டு விலக, இவ்வளவு நேரமும் இருந்த இனிமை நீங்கி அவளைக் குழப்பத்துடன் நோக்கினான் பல்லவன்.

"நா...நான்... இ...இது...‌ இது... வேணாம். சரி வராது. நான் உ... உங்களுக்கு தகுதியானவ கிடையாது." எனும் போதே அனுஷியாவின் குரல் கரகரத்தது.

தன்னவளின் பயம் உணர்ந்த பல்லவன் அனுஷியாவின் முகத்தை தன் கரங்களில் ஏந்தி, "ஷியா..." என்றவாறு அவளின் விழிகளை ஆழ்ந்து நோக்க, அக் குரலுக்கு கட்டுப்பட்டவளாக பல்லவனின் விழிகளை சந்தித்த அனுஷியாவிற்கு சுற்றம் மறந்தது.

கண்களிலேயே காதலை தேக்கி வைத்திருந்தான் பல்லவன்.

அனுஷியா விழி அகற்றாமல் பல்லவனையே நோக்க, "ஷியா... இதை நல்லா உன் மனசுல போட்டுக்க. இந்த உலகத்துலயே... ஏன்... எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த உலகத்துலயே உன்ன விட எனக்கு தகுதியானவ யாருமே கிடையாது. நீ உன்னையே தாழ்வா நினைச்சிக்காதே. சாக்கடைல விழுந்தாலும் வைரத்தோட மதிப்பு மாறாது. என்னோட ஷியா அந்த வைரத்தையும் மிஞ்சினவள். யாருக்காகவும், எந்த சூழ்நிலையிலும் நான் உன் மேல வெச்ச காதல் ஒரு துளி கூட குறையாது. இப்போ பிடிச்ச இந்த கையை என் கடைசி மூச்சு வரை விட மாட்டேன். புரிஞ்சதா?" எனப் பல்லவன் கேட்கவும் அனுஷியாவின் தானாகவே மேலும் கீழும் ஆடியது.

மறு நொடியே அனுஷியாவின் முகம் முழுவதும் முத்தத்தால் அர்ச்சித்தான் பல்லவன்.

மெதுவாக அனுஷியாவின் இதழ்களை நெருங்கிய பல்லவனின் இதழ்கள் தன்னவளின் சம்மதத்தை வேண்டி அவளின் விழிகளை நோக்க, அதிலிருந்த காதலில் கட்டுண்டவளாக இமைகளை மூடினாள் அனுஷியா.

தன்னவளின் சம்மதம் கிடைத்த மறு நொடியே அனுஷியாவின் இதழ்களை பல்லவனின் இதழ்களுக்குள் சிறைப்பட்டன.

சில நொடிகள் நீடித்த அவ் இதழ்களின் சங்கமம் அனுஷியா மூச்சு வாங்க சிரமப்படவும் மனமேயின்றி அவளின் இதழ்களுக்கு விடுதலை கொடுத்து முற்றுப் பெற வைத்தான் பல்லவன்.

தன்னவனின் முகம் நோக்க வெட்கித்தவளாக செவ்வானமாய் சிவந்திருந்த முகத்தை பல்லவனின் மார்பில் முகம் புதைத்து மறைத்தாள் அனுஷியா.

பதிலுக்கு தன்னவளை இறுக அணைத்துக் கொண்ட பல்லவன், "ஷியா... ஊரறிய மேள தாளத்தோட உன் கழுத்துல மூணு முடிச்சிட்டு உன்ன என் மனைவியா ஏற்கணும்னு தான் எனக்கு ஆசை. ஆனா இப்போ நிலைமை நமக்கு சாதகமா இல்ல. உன்ன பிரிஞ்சி இருக்குற ஒவ்வொரு நொடியுமே என் மனசு உனக்கு ஏதாவது ஆபத்து வந்துடுமோன்னு தவியாய் தவிக்குது. என்னை சுத்தியும் நிறைய சதி நடக்குது. அதெல்லாம் இப்போ என்னால உன் கிட்ட விளக்கமா சொல்ல முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பா சொல்றேன். ஆனா எந்த காரணத்துக்கும் நான் உன்ன கை விட மாட்டேன்னு நீ நம்பணும். கேட்குறேன்னு தப்பா நினைக்காதே ஷியா. எனக்கு வேற வழி இல்ல. இப்போவே கோயில்ல சிம்பிளா கல்யாணம் பண்ணிக்கலாமா? இந்த பிரச்சினை எல்லாம் முடிஞ்சதும் க்ரேன்டா ரிசப்ஷன் வெச்சு செலிப்ரேட் பண்ணலாம். உனக்கு சம்மதமா?" எனக் கேட்டான்.

"உங்கள நம்பாம நான் யாரை நம்ப போறேன். உங்க கூட இருக்குறதே எனக்கு போதும்." என்றாள் அனுஷியா ஒரு நொடி கூட யோசிக்காது.

உடனே காலம் தாழ்த்தாது தனக்கு நம்பிக்கையான ஒருவர் மூலம் அன்றே கோயிலில் யாருமறியாது ரகசியமாக திருமண ஏற்பாட்டை செய்தான் பல்லவன்.

அனுஷியா மாலதியிடம் மட்டும் நிலைமையை எடுத்துக் கூற, ஏற்கனவே அனுஷியா பல்லவன் பற்றி கூறி இருப்பதாலும் ஊரில் அவனுக்கு இருந்த நற்பெயரை மாலதி ஏற்கனவே அறிந்திருந்ததாலும் முழு மனதாக அவளின் திருமணத்துக்கு சம்மத்தைத் தெரிவித்தாள்.

அனுஷியாவிற்கு நல் வாழ்வு அமைவதில் மாலதிக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

தனக்கு தாயுமானவளாக இருப்பவளின் சம்மதம் கிடைத்த பிறகு அனுஷியா மனதில் இருந்த சிறிய குறையும் நீங்கியது.

அன்றே கோயிலில் எளிமையாக அக்னி சாட்சியாக அனுஷியாவின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அவளை தன்னில் சரிபாதி ஆக்கிக் கொண்டான் பல்லவன்.

உடனே திருமணத்தையும் பதிவு செய்தவன் தன்னவளை அழைத்துக் கொண்டு தன் வீடு நோக்கி புறப்பட்டான்.

_______________________________________________

பல்லவனின் வீடு கூட்டத்தால் நிரம்பி வழிய, ஹேமாவும் கிஷோருமோ கோபத்தில் கிளம்பிச் சென்ற பல்லவன் திரும்பி வரும் வரை காத்திருந்தனர்.

ஹேமாவுக்கு அவ்வளவு நம்பிக்கை தன் சகோதரன் தனக்காக வேண்டி நிச்சயம் வீடு திரும்புவான் என்று.

ஆனால் அவளின் நம்பிக்கையைப் பொய்யாக்குவது போல் தன்னவளின் கரம் பிடித்து மாலையும் கழுத்துமாக பல்லவன் வந்து நிற்கவும் ஹேமாவும் கிஷோரும் ஏகத்துக்கும் அதிர்ந்தனர்.

பல்லவனின் வீட்டில் கூடியிருந்த சொந்தபந்தங்களைக் காணும் போது அனுஷியாவிற்கு இவ்வளவு நேரமும் இருந்த சந்தோஷ மனநிலை மாறி ஒரு வித பயம் பீடித்துக் கொண்டது.

தன் கரத்தை சுற்றி வளைத்து பிடித்திருந்தவளின் கரம் தந்த அழுத்தமே பல்லவனுக்கு தன்னவளின் பயத்தை உணர்த்த, அனுஷியாவின் தோளை சுற்றி அணைத்தவாறு அவளுடன் உள்ளே நுழைந்தான்.

சொந்தபந்தங்கள் தமக்குள் ஒவ்வொரு விதமாக முணுமுணுக்க ஆரம்பிக்க, இவ்வளவு நேரமும் அதிர்ச்சியில் உறைந்திருந்த ஹேமாவும் கிஷோரும் தன்னிலை அடைந்தனர்.

தான் ஒரு திட்டம் போட்டு வைத்திருக்க, அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கும் விதமாக பல்லவன் அனுஷியாவைத் திருமணம் செய்து கொண்டு வரவும் இத் திடீர் திருப்பத்தை எதிர்ப்பார்க்காத கிஷோர் ஆத்திரத்தில் பல்லைக் கடித்தான்.

பல்லவன் அனுஷியாவை விரும்புவதை ஏற்கனவே ஊகித்திருந்த கிஷோர் அவன் இவ்வளவு சீக்கிரம் திருமணம் வரை செல்வான் என்பதை நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.

ஹேமாவோ வேகமாக பல்லவனை நெருங்கி, "அண்ணா... என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்க?" என பல்லவனின் சட்டையைப் பற்றிக் கேட்டாள் ஆவேசமாக.

பட்டென அவளின் கரங்களை வேகமாகத் தட்டி விட்ட பல்லவன், "இப்போ தான் சரியான காரியம் பண்ணி இருக்கேன்." என்றான் அழுத்தமாக.

தன் சகோதரன் தன்னை எதிர்த்துப் பேசுவான் என்று எதிர்ப்பார்க்காத ஹேமா அதிர்ச்சியில் பேச்சிழந்து நிற்க, "என் தங்கச்சி வாழ்க்கைய தட்டிப் பறிக்க பார்க்கிறாயா நீ?" என்ற கிஷோரோ ஆவேசமாக அனுஷியாவை நெருங்கி அவளை அறையக் கை ஓங்கினான்.

அனுஷியா பயந்து பல்லவனின் முதுகின் பின்னால் மறைந்துகொள்ள, அதற்குள் கிஷோரை இழுத்து கீழே தள்ளி விட்டான் பல்லவன்.

ஹேமா அவசரமாக கீழே விழுந்து கிடந்த கணவனிடம் ஓட, "ஆம்பளையா இருந்தா என் கிட்ட மோது. என் பொண்டாட்டி மேல கை வைக்க நினைச்ச... தொலைச்சிடுவேன். ஏற்கனவே உன் ஆளுங்களுக்கு என்ன நடந்துச்சுன்னு மறந்திருக்க மாட்ட. மைன்ட் இட்.‌‌.." கிஷோரின் முகத்தின் முன் விரல் நீட்டி எச்சரித்தான் பல்லவன்.

கூடியிருந்த கூட்டம் தமக்குள் ஒவ்வொரு விதமாக பேசத் தொடங்க, "இங்க எந்த நிச்சயதார்த்தமும் நடக்கப் போறதில்ல. வந்திருக்குறவங்க எங்கள மனசால ஆசிர்வாதம் பண்ணிட்டு கிளம்புங்க." எனப் பல்லவன் அழுத்தமாகக் கூறவும் ஒவ்வொரு தமக்குள் முணுமுணுத்தவாறு கிளம்பினர்.

பின் மனைவியின் பக்கம் திரும்பிய பல்லவன், "ஷியா.‌‌.. சாரி.‌.‌. முதல் நாளே ஏதேதோ பிரச்சினை. இந்த வீட்டுல நம்மள ஆரத்தி எடுத்து வரவேற்க யாரும் கிடையாது. அதனால் நீயே வலது கால எடுத்து வெச்சி உள்ள வா‌." என்றான் புன்னகையுடன்.

உள்ளுக்குள் எதிர்க்காலத்தை எண்ணி அச்சம் இருந்தாலும் பல்லவனின் துணை இருந்தால் எதனையும் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் தன்னவனின் கரம் பற்றி வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் அனுஷியா.

இருவரும் சேர்ந்து பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைத்த பின் அங்கிருந்த மற்றவர்களைக் கருத்தில் கொள்ளாது தன்னவளை அழைத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்றான் பல்லவன்.

இவ்வளவு நேரமும் நடந்தவற்றை கண்களில் வன்மத்தை தேக்கி வைத்து நோக்கினாள் கிஷோரின் தங்கை வானதி.

அவளுக்கு ஆரம்பத்தில் இருந்தே பல்லவனின் அழகிலும் அவனின் சொத்திலும் மோகம் அதிகம்.

திடீரென எங்கிருந்தோ வந்த ஒருத்தி தான் கட்டி வைத்திருந்த கனவுக் கோட்டையைத் தகர்த்து எறியவும் அவளின் மீது வஞ்சத்தை வளர்த்தாள் வானதி.

கிஷோரும் ஹேமாவும் அடுத்து என்ன செய்து பல்லவனின் சொத்தை அபகரிக்கலாம் என அப்போதிருந்தே திட்டமிட ஆரம்பித்தனர்.

இதனை அறியாத பல்லவனோ, "வெல்கம் மை க்வின்." என அறைக் கதவைத் திறந்து மனைவியைப் புன்னகையுடன் வரவேற்றான்.

அனுஷியா முகம்கொள்ளாப் புன்னகையுடன் அறையினுள் நுழைய, கதவைத் தாழிட்ட பல்லவன் அனுஷியா எதிர்ப்பார்க்காத நேரம் அவளை சட்டென தன் கரங்களில் ஏந்தினான்.

"எ...என்ன பண்ணுறீங்க? இ... இறக்கி விடுங்க. ப்ளீஸ்..." என அனுஷியா வெட்கமும் பயமும் கலந்து கூற, "நோ வே... நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு தெரியுமா ஷியா? உன்னை இப்படியே என் கைலயே வெச்சி ராணி மாதிரி பார்த்துக்கணும்." என்றான் பல்லவன்.

அனுஷியா கண்கள் கலங்க தன்னவனை விழி அகற்றாது நோக்க, "ஹேய் என்னாச்சுடா?" என அனுஷியாவை அவசரமாக கட்டிலில் அமர்த்தியவாறு கேட்ட பல்லவன் தன் பெருவிரலால் அவளின் கண்ணீரைத் துடைத்து விட்டான்.

பதிலேதும் கூறாமல் அவனின் மார்பில் முகம் புதைத்த அனுஷியா, "உங்களுக்கு தெரியுமா? என் வாழ்க்கைல காதல், கல்யாணம், கணவன் இதெல்லாம் வரும்னு நான் கனவுல கூட எதிர்ப்பார்க்கல. ஒவ்வொரு நிமிஷமும் என் கற்ப எப்படி என்னை சுத்தி இருந்த காமப் பிசாசுங்க கிட்ட இருந்து காப்பாத்திக்கிறதுன்னு மட்டும் தான் என்னோட எண்ணமா இருந்தது. ஆனா சில சமயம் என்னையும் மீறி என்னால என் வயசு மத்த பொண்ணுங்க போல ஒரு சாதாரண வாழ்க்கைய வாழ முடியாதான்னு ஏக்கம் வரும். அப்புறம் நான் வாழுறதே பெரிய விஷயம் அப்படிங்கிற எண்ணம் வந்து எல்லா ஆசையையும் எனக்குள்ள பூட்டிக்குவேன். ஒன்னு தெரியுமா? எனக்காக மாலதி அக்கா நிறைய பண்ணி இருக்காங்க. அவங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சி கொடுக்கணும்னு மட்டும் தான் எனக்கான ஆசையா இருந்தது. ஆனா நானே எதிர்ப்பார்க்காத விதமா ஆபத்பாந்தவனா என் வாழ்க்கைல நீங்க வந்தீங்க. எனக்கான எல்லாமுமா மாறினீங்க. அன்பு, பாசம், காதல், அரவணைப்பு, பாதுகாப்பு இப்படி எல்லாத்தையும் மொத்தமா கொடுத்தீங்க. நான் உங்களுக்கு தகுதியானவளான்னு எனக்குத் தெரியல. ஆனா என்னோட கடைசி மூச்சு வரைக்கும் என்னைக் கல்யாணம் பண்ணினதுக்காக நீங்க வருத்தப்படும் படி நடக்க மாட்டேன்." என்றவளின் கண்ணீர் பல்லவனின் சட்டையை நனைத்தது.

புன்னகையுடன் தன்னவளை இறுக்கி அணைத்த பல்லவன் சில நொடிகள் அனுஷியாவைத் தன்னை விட்டு விலக்கினான்.

அனுஷியா அவனைக் குழப்பமாக நோக்க, அவளுக்கு வலிக்காதவாறு நெற்றியில் லேசாக இரண்டு விரல்களால் சொட்டியவன், "என் மக்கு பொண்டாட்டி. முதல்ல நீ எனக்கு தகுதியானவ கிடையாதுங்குற எண்ணத்தை உன் மனசுல இருந்து தூக்கி போடு. உன்னை விட எனக்கு தகுதியானவ இந்த உலகத்துல யாரும் கிடையாது. அடுத்த விஷயம் நீ எனக்காக எதுவும் பண்ணவே அவசியம் இல்ல. எப்பவும் போல சாதாரணமா இரு. நீ என் கூட இருந்தாலே எனக்கு அது போதும் கண்மணி. இந்த உலகமே என்னை எதிர்த்தாலும் எனக்கு கவலை இல்ல. நான் மடி சாய நீ இருந்தா போதும். பிகாஸ் ஐ லவ் யூ சோ மச்." எனப் பல்லவன் கூறவும், "ஐ லவ் யூ டூ." என்றாள் அனுஷியா புன்னகையுடன்.

"சரி ஷியா... நீ சீக்கிரம் போய் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா. கப்போர்ட்ல உனக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் இருக்கு. நாம டின்னருக்கு வெளிய போகலாம்." எனப் பல்லவன் கூறவும் சரி எனத் தலையசைத்த அனுஷியா எழுந்து செல்ல, பெருமூச்சுடன் விட்டத்தை வெறித்தவாறு கட்டிலில் தலை சாய்ந்த பல்லவனுக்கு அடுத்து என்ன என்ற ஒரு பெரிய கேள்வி எழுந்தது.

இங்கு கிஷோரின் அறையில் கிஷோர் மற்றும் ஹேமாவுடன் சேர்ந்து கிஷோரின் மொத்தக் குடும்பமும் குழுமி இருந்தனர்.

"அண்ணா... நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. எனக்கு பல்லவன் வேணும். ஒரு அநாதை தாசி கிட்ட நான் தோத்து போகக் கூடாது." என்றாள் வானதி கோபமாக.

"ஆமா கிஷோர். இத்தனை வருஷமா அவன் உங்க ரெண்டு பேர் பேச்சை மீறி எதுவுமே பண்ணல. முதல் தடவையா நம்மள மீறி ஒரு அநாதைய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்திருக்கான். இதை இப்படியே விட்டா அந்த தாசிக்கே மொத்த சொத்தையும் எழுதி வெச்சிடுவான்." என்றார் கிஷோரின் தாய்.
 
Status
Not open for further replies.
Top