அத்தியாயம் -3
"ப்பா... அதுதான் அம்மா " என்று கூற, அதிர்ச்சியில் "அம்ரு" என்று கத்தினான் அஜித்.
அஜித் கத்துவதை திரும்பி பார்த்தவள் , கோவிலின் வாயில் நோக்கி நகர ,
"ப்பா .. அம்மாகிட்ட போய் எதாவது பேசுப்பா .." என்று அவனுக்கு கூற, அவனோ திரு திருவென்று முழித்தான்.
வாயில் நோக்கி சென்றவளை, ஒருவன் அதே மாறி இடிக்க, அவனது கன்னம் பழுத்தது.அதைப்பார்த்து அஜித் தனது கன்னத்தில் கை வைக்க , 'அம்மாடி ... அடி ஒன்னும் இடி மாறியிருக்கே..இவகிட்ட போய் என்னை கோர்த்துவிடுறான் பாரு ..அம்ரு ..உனக்கு இருக்கு இன்னைக்கு இருக்கு...' என்று மனதில் அம்ருவை திட்டியபடி இருக்க , கால்கள் இதழின் இருப்பிடத்திற்கு சென்றது.
புதியவனும் , இதழும் வாக்குவாதத்தில் ஈடுபட, புதியவன் ,"இந்தம்மா .. நான் வேணும்னு மோதிட்டேனு வச்சுக்குவோம்.. கொஞ்ச நேரம் முன்னாடி அவன் மோதுனானே , அவனை ஏன் சும்மா விட்ட " என்று கேட்க, அஜித்திக்கோ பயம் வந்து தொற்றிக்கொண்டது ,'நம்மளையும் அடிச்சுடுவாளோ ' என்று பயந்தபடி பார்க்க ,இதழ் ," அது உனக்கு தேவைல்லாத விஷயம் "
புதியவன் ," ஏன் அது உன்னோட புருஷனா?" என்று நக்கல் தொனியில் கேட்க, அஜித் மனதிற்குள் , 'ஏண்டா .. நான் உனக்கு என்ன பாவம் பண்ணுனேன்.. அவகிட்ட கோர்த்துவிடுற..ஒருத்தன் போன் பண்ணி கோர்த்துவிட்டுட்டான்.. நீ இப்போ .. நடத்துங்கடா நடத்துங்கடா.. கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்குற...' என்று புலம்பியவனின் காதில் , தேனாக(அது நமக்கும் நம்ம அம்ருவுக்கும் மட்டும் தான் .. அஜித்திற்கு அடுத்துவரும் புயலின் வார்த்தையாகவே ) அவளின் வார்த்தைகள் வந்து விழுந்தது.
அப்படி இதழ் என்ன சொன்னான்னு பாக்குறீங்களா ? ,
இதழ் ," ஆமா அவரு என்னோட வீட்டுக்காரர்தான்.. இப்போ என்னங்குறா ?" என்று அஜித்தை பார்த்து முறைக்க, புதியவன் சாரி கேட்டுவிட்டு வெளியே சென்றான்.அஜித் மீண்டும் திருதிருவென்று முழிக்க, இதழ் வெளியே சென்றாள்.
அவன் பின்னாடியே சென்று , "மேடம் .."இதழ் திரும்பி கண்களால் அவனிடம் என்ன என்று கேள்வி கேட்க ," உங்க பேர் என்னனு சொன்னீங்கன்னா , நல்ல இருக்கும் .."அவளோ எதோ பைத்தியத்தை பார்ப்பதுபோல அவனை பார்த்தாள்.
"ப்ளீஸ் மேடம் .. உங்க பேர் .."
"சாரி சார்.. நீங்க யாருன்னே தெரியாது .. முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட நான் பேசிகிட்டு இருக்கணும்னு அவசியமில்லை. உங்ககிட்ட என்னோட பேரை சொல்லவேண்டிய அவசியம் எனக்கில்லை .." என்று வெடுக்கென்று கூறிவிட்டு அவனை தாண்டி முன்னால் செல்ல ,அவளது இடையை பற்றியவாறே, அவளை பின்னுக்கு இழுக்க, புதிய அறிமுகமில்லாத ஆடவனின் கரம் தன இடையின் மேல் விழுந்ததில் அவளது உடல் கூசி , நடுங்கியது. அவளது நடுக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒரு வாகனம் அவளை உரசி செல்ல, அவள் மேனி மீண்டும் நடுங்கியது.
"சாரி சாரி .. " என்று மன்னிப்பு கேட்டவன் அவள் தன்னிலை அடையும்வரை பொறுமையுடன் இருந்தான்.
"இப்போ உங்க பேரை சொல்லலாமே மிஸ் .. " என்று கேட்க , அவ்ளோ ,"முடியாது .." என்று கூறி விடைபெற,
அம்ரு போனில் ," அப்பா அம்மா போறாங்க.. பேசுங்க .." என்று கூற ,
"மிஸ்.. மேடம் .. " என்று கத்திகொண்டே வர, இதழ் வேகமாக நடக்கத்தொடங்கினாள்.
அவனது அழைப்புகள் காதில் விழுந்தாலும் , அதை எல்லா கண்டுகொள்ளாமல் நடந்துகொண்டு இருந்தாள்.
"ஹே பொண்டாட்டி .. நில்லுடி .." என்று அவன் உரக்க கத்த, அங்கே இருந்த அனைவரும் திரும்பி பார்த்தனர். இதழ் பல்லை கடித்தபடி திரும்பி பார்த்துவிட்டு , வேகமாக நடக்கத்தொடங்கினாள். அதைப்பார்த்த அருகில் இருந்த வயதான பெண்மணி , "ஏம்மா.. உன்னோட புருஷன்காரன் கூப்பிடறான்ல.. என்னான்னு கேக்குறது .. " என்று கூறினார்.
இதழோ, "அவன் என்னோட ..." என்று கூறி முடிப்பதற்குள் , "அப்பாடா .. ஒருவழியா நின்னுட்டியா.. என்மேல கோவம் இருந்த வீட்டுலபோய் வச்சுக்கலாம் ..வரேன் ஆண்ட்டி .." என்று கூறி அவளது கையை பிடித்து அருகில் இருந்த பானிபூரி கடைக்கு அழைத்துச்சென்றான்.
அம்ரு ,"ப்பா... அம்மாக்கு பானிபூரி விட , காளான் பிடிக்கும் .." என்று கூற,
அஜித் , "அண்ணா ஒரு காளான் , ஒரு பேல்பூரி " என்று ஆர்டர் செய்துவிட்டு , இதழை பார்த்தான்.
அம்ரு , "அப்பா.. சூப்பர் ப்பா... லவ் யு ப்பா." என்று கூற,
அஜித் ," லவ் யு டா " என்று கூற , எதிரில் இருந்த இதழோ அவன் தனக்குத்தான் கூறுகிறான் என்று ,
அஜித்தை முறைத்தபடி நின்றுகொண்டு இருந்தாள்.
இதழ் ,"யோவ் .. என்னடா .. லவ் னு சொல்ற ..உரிமையா பொண்டாட்டின்னு சொல்ற "
அம்ரு ," ஹாஹ்ஹாஹ்ஹா ..."
அஜித் , "சிரிக்காத டா .."
இதழ் ," டேய் .. நான் பேசுறது உனக்கு சிரிப்பா இருக்கா .." என்று கோவத்தில் கத்த ..
அஜித் ," உன்னை இல்லைம்மா.. டேய் சிரிக்காத டா ..." என்று திரும்பி நின்று கத்த ,
இதழும் அங்கியிருந்த அனைவரும் அவனை ஒரு மாதிரி பார்த்தனர் ..
அம்ரு ," ப்பா .. நீ போன்ல பதில் பேசாத .. ம்ம் மட்டும் சொல்லு .. அப்புறம் எல்லாரும் ...ஹஹ்ஹஹ்ஹா உன்னைய ஹஹ்ஹா .. பைத்தியம்னு நெனச்சுடுவாங்க ...ஹாஹாஹா .."
அஜித் ," அடப்பாவி .." என்று திரும்பி அவன் அனைவரையும் பார்த்து ஹிஹிஹிஹி . என்று இளித்துவைக்க , அவளோ அவனை பரிதாபமாக பார்த்தாள்..
அம்ரு ,"ப்பா. இப்போவது பேர் என்னனு கேளு ப்பா .."
அஜித் ," ஏங்க.. உங்க பேரு என்னான்னு சொன்னீங்கன்னா .."
இதழ் ,"எதுக்கு.. உனக்கு ... நீ பாட்டுக்கு பொண்டாட்டி னு கத்துற .. லவ் யு னு சொல்லுற .. இதுக்கு முன்னாடி என்னை பார்த்துஇருக்கியா ..எந்த தைரியத்துல நீ என்கிட்ட பேசிட்டுஇருக்க" என்று பொரிய ஆரம்பித்தாள்.
அம்ரு , "ப்பா.. பதில் சொல்லுப்பா ."
அஜித் ," நான் என்னான்னு பதில் சொல்லுவேன் .. ஏதுன்னு சொல்லுவேன் .." என்று முனங்க ..
இதழ் , "அங்க என்ன வாய்க்குள்ள முனகிட்டு இருக்க " என்று கேட்க, அதற்குள் ஆர்டர் செய்த தட்டுகள் வர, அவளிடம் ஒன்றை குடுத்துவிட்டு தானும் ஒன்றை எடுத்துக்கொண்டான்.
"எனக்கு எதுக்கு இது .. "
"மிஸ்.. நீங்க என்னை கோவில்ல வச்சு உங்க புருஷன்ன்னு சொல்லியிருக்கீங்க . அதுக்கு நான் எதாவது சொன்னேனா .. நான் பாட்டுக்கு அமைதியா இருந்தேன்ல ..உங்க பேர் என்னானு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு அதான் கேட்டேன்.. எங்கேயோ பார்த்தமாறி இருக்கேனு கேட்டேன் ..
அது ஒரு குத்தமா ...சொல்லுங்க .. "
"நான் உன்னை புருஷன்னு சொல்லலை .. வீட்டுக்காரர்தான் சொன்னேன்.. . பொண்டாட்டி னு கத்துவது ,லவ் யு சொல்லுவது .. இதெல்லம் என்ன... தெரியாம நான் உன்னை வீட்டுக்காரர்ன்னு அவன் அந்த லூசு கேட்டதுக்கு சொல்லிப்புட்டேன் .. இப்போ அவஸ்தை படுறேன் ..நான் சொன்னது உன்னை காப்பாத்துறதுக்கு தான்.. நீ தெரியாம தான் என்மேல மோதின , நான் பார்த்தேன் அங்கே இருந்த படி தடுக்கிவிட்டு மோதிட்டே,.அவன் என்னை வேணும்னே மோதினான் ..அவனுக்கு குடுத்த அடிய உனக்கு குடுத்துஇருக்கணும் " என்று மூச்சு வாங்க கோவத்தில் பேசியவள், வாயில் சூடான காளானை வைத்தபடி .."ஸ்ஸ் ஆஅ ..... நான் எதுக்குடா உங்கிட்ட பேரை சொல்லணும்.. யாரு டா நீ.." என்று மீதி காளானை வைத்தபடி கேட்டுக்கொண்டு இருந்தாள்.
"எங்கவூர்ல , புருஷனை வீட்டுக்காரர்ன்னு கூப்பிடுவாங்க அதான்.. சாரி .. மன்னிச்சுக்கோங்க .." என்று தன்மையாக சொல்ல, "சரி சரி.. விடு .. " என்று அவள் நகர,
"இப்போவது பேரை சொல்லுங்களே.. என்னை ஒரு நண்பனாக நினைத்தால் .." என்று ரொம்ப பணிவுடன் கேட்க, அவனை மேலும் கீழும் பார்த்தவள் ," சரி .. என்னோட பேரு இதழிசை.."
" வாவ் .. சூப்பர் பேர் .." என்று பாராட்ட, அம்ரு .." சூப்பர் ப்பா... " என்று போனில் அஜித்திற்கு முத்தம் தர , அவன் சிரித்துக்கொண்டே , "ம்ம் .." என்று கூறினான் ..
"என்ன ம்ம்ம்..உங்க பேரு .."
"என்னோட பேரு அஜித் .." என்று கூற , அவளோ விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள்..
அம்ரு ,"ஹ்ஹஹாஹாஹா ...' என்று சிரிக்க ," சிரிக்காதீங்க .." என்று அஜித் கூற,
"சாரிங்க.. அஜித்னு சொன்னீங்க .. நம்ம தலகிட்டே இருக்க கலர் இல்லை, அவர் அளவுக்கு அறிவும் இல்லை .. அதான் சிரிச்சுட்டேன் .."
"பரவலா விடுங்க.. எல்லாரும் சிரிக்கத்தான் செய்றாங்க . நான் எனக்கு , என்னை சுத்தியிருக்கறவங்களுக்கு நல்லவனாய் இருக்கேன் .. அதுபோதும் .." என்று கூற, அவனது இந்த பேச்சு அவளுக்கு பிடித்துஇருந்தது ..
அம்ரு .." ப்பா .. நம்பர் கேளுப்பா .."
அஜித் ,." கேட்ட, என்னை இங்கேயே கொன்னுடுவா .." என்று இளித்தபடியே முனகினான் ..
அம்ரு ," அடப்போப்பா .. உனக்கு பொண்ணுகளை கரெக்ட் பண்ணவே தெரியலை .."
அஜித் ," ஆமாடா .. நீ அதுல டாக்டர் பட்டம் வாங்கிட்ட, எனக்கு அட்வைஸ் பண்ற ..நீ அங்க வாயை மூடுன , நான் இங்கே பேசுவேன் .." என்று மீண்டும் இளித்தபடியே இதழை பார்த்து முனங்கினான்.
"சரிங்க, நான் கிளம்புறேன் .." என்று நகர , அஜித் ,"ஒரு நிமிடம் " என்று அவளை இழுத்துக்கொண்டு அருகில் உள்ள தெருவில் சென்று , " இங்கேயே இருந்து 5 வது வீடு .. அதுல தான் நான் தங்கியிருக்கேன் .. எதாவது ஹெல்ப் வேனும்னுன கேளுங்க .. பகல் முழுக்க இன்னும் ஒரு மாசத்துக்கு வெட்டிதான்..."
"ஏன் .."
"நான் நைட் ஷிப்ட்.. பின்னாடி தெரியுற , பெரிய ஆபீஸ்ல , 'ஸ்ய்ஸ்' கம்பெனில ஒர்க் பண்றேன்."
என்று இதழ் வேலை செய்யப்போகும் நிறுவனத்தின் இடத்தை சுட்டிக்காட்ட ,
அவளும் பார்த்துவிட்டு ," தேங்க்ஸ் .. ஹெல்ப் தேவைப்பட்டால் உங்களை எப்படி காண்டாக்ட் செய்வது.. உங்க நம்பரை தாங்க.. " என்று அவள் சர்வ சாதாரணமாக கேட்க,
அம்ரு .." அப்பாடா.. அம்மாவது கேட்டாங்களே .. நம்பரை உளறிக்கிட்டே கொடுப்பா" என்று பின்னல் இருந்து உசுப்ப , அவனோ சரியான நம்பரை தெளிவாக குடுத்தான்.
அம்ரு .., "உனக்கு இந்த ஜென்மத்துல கல்யாணம் ஆகாதுப்பா..கடவுளே என்னை ஏன் இப்படி சோதிக்குற " என்று புலம்பினான்.
இதழை வழியனுப்பி வைத்தவன் , அம்ருவிடம்,"பார்த்தியா .. நான் நம்பர் கொடுத்துட்டேன் .." என்று கூற அம்ருவோ ," ********* " திட்டிக்கொண்டு இருந்தான்
அஜித் ,"டேய் நான் உன்னோட அப்பன் டா "
அம்ரு ," அது தெரியுது .. அதுனாலதான் அளவ திட்டியிருக்கேன் .. அம்மாகிட்ட நம்பர் வாங்க தெரியலை .."
அஜித் ," விடுறா விடுறா .. இந்த அளவுக்கு பேசியிருக்கா, தேவைன்னா நம்மளை கூப்பிடுவா .." என்று கூறிக்கொண்டே வீட்டிற்கு சென்றான் ..
வீட்டிற்கு வந்தவனை , அழைத்து ,
"ப்ப்பா..."
"என்னடா "
"அம்மா எப்படி இருந்தாங்க .."
"அழகா இருந்தாங்க "
"ஹ்ம்ம் .. என்னை மாறி இருந்தாங்களா "
"உன்னமாறியே இருந்தாங்க .."
"டேய் என்ன அம்மாக்கு மட்டும் மரியாதை தர.."
"அவங்க மம்மி ப்பா ..நீ டம்மி ப்ப்பா "
"நான் உன்னோட அப்பன்டா "
"அட என்னப்பபா நீ சும்மா இதுவே சொல்லுறே"
"எல்லாம் என் நேரம் .. டேய் எனக்கு ஒரு டவுட்.. அம்மா அழகா இருக்கா.. உங்க அம்மாவோட சாயல் உங்கிட்ட கொஞ்சம் தெரியுது .. உங்க அப்பா என்னைமாறி இருப்பாருன்னு சொன்ன, ஆனால் என்னோட சாயல் ,கலர் கொஞ்சம் கூட உங்கிட்ட இல்லையே .. .."
"ம்ம்ம்ம்...அறிவுக்கொழுந்து ...." என்று தலையில் அடித்தபடி வேற ரூமிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டான் அம்ரு..
நீங்களே சொல்லுங்க.. அதான் அம்ரு அவங்க அம்மா சாயல்ல இருக்கான்ல .. இருந்தாலும் அஜித்துக்கு கொஞ்சம் வாய்க்கொழுப்பு அதிகம்தான் .. இதனாலயே , இந்த வாயாலையே இதழ் - அம்ருகிட்ட மாட்டிகிட்டு முழிக்க போறான் அஜித் ..
தனது அறைக்கு வந்த இதழ் , சந்தோசமாக பாட்டை முணுமுணுத்தபடி , நாளைக்கு தேவையானவற்றை எடுத்துவைத்துக்கொண்டு இருந்தாள். அவளது மனம் சந்தோசமாக இருந்தது .. வீட்டினரிடம் பேசிவிட்டு , சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டாள் ..
அஜித்தும் சாப்பிட்டுவிட்டு அலுவலகத்திற்கு செல்ல , அவனது முகத்திலும் இளநகை இருந்தது ..
வழக்கம் போல நாட்கள் செல்ல, இதழ் ட்ரைனிங் பணிகளில் கவனம் செலுத்த ,அஜித் , அவனது பணிகளில் கவனம் செலுத்தினான் ..
விதியும் , அம்ருவும் ... எப்படி இவங்களை சேர்த்து வைக்கிறது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டு இருந்தார்கள் ...
************************************************************************************************************************************************
ஹாய் பிரண்ட்ஸ்,
"வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - மூன்றாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன் ..
படித்துவிட்டு உங்களது கமெண்ட்ஸ்களை பகிரவும்
பானுவின் - "வானவில்லாய் நீ .. வர்ணங்களாய் நான்.." - கருத்துத்திரி