All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் “கலாப மயில் போல் உலவிடும் அழகே!!” கதை திரி

Status
Not open for further replies.

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதை பார்த்ததும் உங்க எல்லார் மனசுலயும் என்ன ஓடும்னு எனக்கு நல்லாவே புரியுது...🙈

But என்ன பண்றது ‘ஆதியின் நிலா’ முடியிறதுக்குள்ள நான் கிழவி ஆகிடுவேன் போல இருக்கே... அப்புறம் அந்த தள்ளாத காலத்துல என்னால இன்னொரு கதை எழுத முடியுமோ என்னவோ.... 😞😞😞

இப்புடி ஒரு கதை என் மனசுல இருக்கிறத நானே மறக்காம இருக்கிறதுக்காகத்தான் இப்பவே இந்த கதை திரி....

எனக்கு தூக்கத்துல கூட வாயில ஆதி ஆதின்னு தான் வருது.... அவன மறக்கடிக்கிற மாதிரி ஒரு நல்ல்ல்ல்லலலல மனுசன கொண்டுவந்தா தான் என் மனசு ஆறும்.....

அந்த நல்ல பையனையும் ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணையும் கூட்டிக்கிட்டு சீக்கிரமா வந்திர்ரேன்... 😁
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன்: யுகதீரன்
நாயகி: சன்யோகிதா

டீசர்:

“வாட்!!!!!!! சாத்வியோட அண்ணனா...???!!!!” சன்யோகிதா நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.... “இத்தன நாளா இது தெரியாம போச்சே மச்சி...”

“அவ ஊர பத்தி பேசுறப்போலாம் பட்டிக்காடு பட்டிக்காடுனு கிண்டல் பண்ணுவியே சனு” பூஜா எடுத்துக் கொடுத்தாள்.

“அந்த பட்டிக்காட்டுல இப்படியொரு ஹீரோ இருப்பான்னு தெரிஞ்சிருந்தா சிவா கிட்ட சொல்லி அந்த ஊரையே விலைக்கு வாங்க சொல்லிருப்பனே”

“சனு... இது எங்க அண்ணா... அண்ணா... இது சன்யோகிதா... என் ப்ரென்ட்” இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள் சாத்விகா.

அவள் முகத்தில் தெரிந்த அதீத ஆர்வம் யுகதீரனுக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை.

தன் முன்னால் நீண்டிருந்த கரத்தை ஒரு பார்வை பார்த்தவன் பதிலுக்கு கரம் குவித்து “வணக்கம்..” என்றான்.


####################


“அவன் வீட்டுலயே வந்து உட்கார்ந்துக்கிட்டு அவன் கட்டிக்கப்போற பொண்ணையே இன்னொருத்தன் கூட கோர்த்துவிட ப்ளான் பண்றியே... இதெல்லாம் அவனுக்கு தெரிஞ்சுதுன்னு வையி.... உன்னையும் துண்டு துண்டா வெட்டி உன் கூட வந்த பாவத்துக்காக எங்களையும் அரிவாளால அரிஞ்சி சென்னைக்கு பார்சல் பண்ணி விட்டுடுவான்”

“அவன் எதுக்கு மச்சி... சாத்விகாக்கு தெரிஞ்சா போதுமே சாப்பாட்டுல விஷத்த வெச்சி அவ கையாலயே நம்ம மூனு பேரையும் கொன்னுடுவாளே....!!” ஜீவாவும் பூஜாவும் புலம்பிக் கொண்டிருக்க அவர்களை கண்டு கொள்ளாது அலைபேசியில் தந்தைக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தாள் சன்யோகிதா.
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீசர் 2:



“என்னமோ பேசனும் சொன்னீங்களாம்... சொல்லுங்க என்ன பேசனும்..” கையில் வைத்திருந்த அருவாளை இரு விரல்களால் வருடி விட்டபடி கேட்டான் யுகதீரன்..

சற்று தள்ளி நின்றிருந்த பூஜா “சனு வேண்டாம் வந்துடுடி... காட்டு பய அறுத்து கிறுத்து போட்டுட போறான்..” சன்யோகிதாவிடம் சொல்வதாக நினைத்துக் கொண்டு தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தாள்.

அவன் கையிலிருந்த அரிவாளையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்தவள் “அது... அது வந்து...” என்று தடுமாற “அதான் வந்துட்டீங்கல்ல.. சொல்லுங்க... நீங்க சொல்றத கேக்குறதுக்கு தானே எங்க மாப்ள இம்புட்டு நேரமா காத்திருக்கு..” என்றான் குமரன்.

“ஹீ.. ஹீ... அது நான் என்ன சொல்ல வந்தேன்னா.. உங்க ஊர் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... அதேத்தான் சொல்ல வந்தேன்...” இழித்து வைத்தாள் சன்யோகிதா.


“நாசமா போச்சு...” என்று தலையில் அடித்துக் கொண்டாள் ஜீவா “இவ இந்த ஜென்மத்துல அவன்கிட்ட லவ்வ சொல்லப் போறதும் இல்ல... நம்ம இந்த ஊரை விட்டு போக போறதும் இல்ல..”

“அவன் அருவாள வெச்சிக்கிட்டு சொல்லு சொல்லுன்னா இவ எப்படிடீ சொல்லுவா..” தன் தோழிக்காக வக்காளத்து வாங்கினாள் பூஜா.

அவளை ஏற இறங்க பார்த்தான் குமரன் “ஏம்மா இத சொல்லத்தான் தீரன தனியா வரச் சொன்னியா நீயி.. இதை நீ அவங்க வீட்டுலயே சொல்லிருக்கலாமே மா..”




‘கலாப மயில் போல் உலவிடும் அழகே’ கதை அடுத்த வாரத்திலிருந்து பதிவிடப்படும்... 😍
 
Status
Not open for further replies.
Top