All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாப்புகுட்டியின் "கனவில் கலையாத நிஜமாய் நீ" - கதை திரி.

Status
Not open for further replies.

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழமைகளே😍😍, "கனவில் கலையாத நிஜமாய் நீ" என்கிற அடுத்த கதையுடன் விரைவில் வருகிறேன் என கூறி கொண்டு விடை பெறுகிறார் உங்களின் பாப்புகுட்டி😁😁😁🙏🙏🙏
 

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையிலிருந்து ஒரு சின்ன டீ தோழமைகளே, படித்துவிட்டு கருத்துக்களை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளவும்.
கதையுடன் விரைவில் சந்திக்கிறேன் 🙏😍😘.


உதகையிலிருந்து(ஊட்டி)25கி.மீ தொலைவில் உள்ள எம்ரால்டு கிராமத்தில் தனக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தை நோக்கி தன் பி.எம்.டபிள்யூ காரில் பயணித்து
கொண்டிருந்தான்.


அவன் R.V என எல்லோராலும் அழைக்கப்படும் ருத்ரேஷ் “ருத்ரேஷ் வர்மா”.ராஜேஷ் வர்மா சுபதேவி இவர்களின் தவப்புதல்வன். “K.V" தொழில் சாம்ராஜியத்தின் முடிசூடா மன்னன்.


ஆறடி உயரம்,கருப்பும் அல்லாத சிகப்பும் அல்லாத மாநிறத்தில் ரோமனிய சிற்பமாய்,கூர் நாசி,அடர்ந்த யாருக்கும் அடங்காத சிகை,
வேட்டையாடும் வேங்கையின் கண்களும்,அழுந்த மூடிய உதடுகளும் என ஆண்மையின் இலக்கணமாய் இருக்கும் மகனைக் கண்டு அவனின் பெற்றோர்க்கு சிறு கர்வம் கூட உண்டு.

‐---‐---‐-‐----------------------------------------------‐‐


கட்டுமான துறை மட்டுமின்றி “K.V" குரூப் கால் பதிக்காத தொழிலே இல்லை எனும் அளவிற்கு இவனின் வளர்ச்சி இருந்தது.


இவனின் இந்த வளர்ச்சியை கண்டு இவன் தாத்தா , தந்தைக்கு அளவில்லாதப் பெருமையே.சுபதேவி “R.V"யின் வளர்ச்சியைப் பார்த்து பெருமை கொண்டாலும் கடந்த சில நாட்களாக அவன் திருமணத்திற்கு பிடிக்கொடுக்காமல் சுற்றுவதால் அவனின் மீது சிறு கோபத்துடன் உள்ளார்.


நினைவுகளிலிருந்து மீண்டு தன் கையை தீண்டும் மென் ஸ்பரிசத்தில் காரின் இட பக்கம் திரும்பி பார்க்க,கண்ட கனவின் தாக்கத்தில் மிரண்டு விழித்தப்படி அவனை நெருங்கி அமர்ந்தால் அவள்.


மந்திரங்கள் ஏதுமின்றி,
மேளதாளங்கள் இன்றி,
அவளின்
பெயர் கூட தெரியாமல்,ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவளைக் காத்திடும் பொருட்டு அவனின் பெற்றோருக்கும் தெரிவிக்கமால் திருமணம் செய்து கொண்டான்.
 
Status
Not open for further replies.
Top