All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரியாத வரம் வேண்டும் 3

AnuJey

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆனால் பிரியா விற்கு ஏனொ செல்ல விருப்பம் இல்லை. "பரவாயில்லை அப்பா நான் இங்கயே இருக்கேன் எனக்கு போனும் னு லாம் இல்லை" என்றாள். "அதான் அப்பா சொல்லிட்டாருல பாத்து பத்திரமா பொய்ட்டு வாங்க எல்லாரும்" என்றாள் சரஸ்வதி.

"ரொம்ப தாங்க்ஸ் மா அடுத்த மாசம் தான் கல்யாணம் கொடைக்கானல்ல மொத்தம் நாலு நாள் மா" என்றாள் கீதா. "சேரி நல்லா சுத்தி பார்த்துட்டு வாங்க" என்று கூறினார் சோமசுந்தரம்.

ரியா வின் கல்யாணத்திற்காக கிளம்பிக் கொண்டிருந்த பிரியாவிடம் சரஸ்வதி அறிவுரை கூற ஆரம்பித்தார். "எங்கேயும் தனியா போகாத பசங்க பக்கம் போகாத பசங்க பேசுனா லும் திரும்பி பேசாத" என்று. எல்லாத்துக்கும் சேரி என்று ஒத்துக்கொண்டவள் கீதா மற்றும் விமலா வுடன் கொடைக்கானல் பேருந்தில் ஏறினாள். பின் மூவரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு சென்றனர்.

கொடைக்கானலில் இறங்கிய பின் விமலா அவர்களுடைய கிளாஸ்மேட் தாருணி க்கு கால் செய்தாள். அவர்களை அங்கயே இருக்க சொல்லி விட்டு அவளுடைய காரை எடுத்துக்கொண்டு வந்தாள் தாருணி. மூவரையும் அழைத்துக் கொண்டு தாருணி ஒரு ரிசார்ட் க்கு சென்றாள் அதைப் பார்த்த மூவரும் ஆச்சரியப்பட்டனர் அவ்வளவு பிரம்மாண்டமாக இருந்தது. இது ரியா புக் செய்த ரிசார்ட். இதே ரிசார்ட்டின் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரிய மண்டபத்தில் தான் கல்யாணமும் ரிசப்ஷனும் நடைபெறவிறுந்தது.அந்த ரிசார்ட் பார்க்க காட்டேஜ் போல் இருப்பதனால் இருவருக்கு ஒன்று என்கிற கணக்கில் மொத்தம் பதினைந்து ரிசார்ட் களை புக் செய்தாள் ரியா முதல் நாள் கொடைக்கானலை அவர்களின் நண்பர்கள் பட்டாளத்தோடு காரில் சென்று சுற்றிப் பார்ப்பது தான் அன்றைய பிளானாக இருந்தது.

"இல்லை டி நான் வரலை நீங்க பொய்ட்டு வாங்க எனக்கு அவங்களோட கார்ல லாம் வர பிடிக்கல" என்றாள் பிரியா. "யேய் லூசு மாதிரி பேசாத பிரியா இந்த மாதிரி தெரியாத இடத்துல நம்ம கூட்டத்தோட கோவிந்தா போட்டா தான் சேஃப் தனியா போனா வம்பு" என்றார்கள் விமலாவும் கீதாவும்.

அதுவும் சரி தான் என்று தாருணி யோடு வெளியே சுற்ற சென்றனர். ரியா வின் வருங்கால கணவன் ஆரவ் தன்னுடைய நண்பர்களுக்கும் ரியா வீட்டில் அதே ரிசார்ட்டில் தான் ரூம் போட்டார்கள். ஆரவ் விற்கு மொத்தம் மூன்று நண்பர்கள் வந்தார்கள். அந்த மூவரும் ரியாவின் தோழிகளோடு நண்பர்களாக பழகினர். இதில் இரண்டு பேர் ரியாவின் தோழிகளோடு கண்டதுமே காதலாகி விட்டனர். ஒருவன் மட்டும் காதல் கத்திரிக்காய் என்று விழாமல் அவனிடம் வழியும் பெண்களிடம் முடிந்த வரை நாசுக்காக பேசிவிட்டு காதல் கீதல் என்றால் தங்கச்சி என்று சொல்லிக் கொண்டு வருவான் ஆம் அவன் தான் குருநாத் தீபன் இவன் பார்க்க பேரழகன் போல் இருப்பான் அந்த கர்வம் அவனிடத்தில் எப்போதும் இருக்கும் ஆறடி இரண்டு அங்குலம் உயரத்தில் இருப்பவன் மாநிறத்தில் மேச்சோ மேன் என்று சொல்கிற அளவுக்கு மேன்லி யாக இருப்பான்.அவனாக சென்று பெண்களிடம் பேச மாட்டான். பெண்கள் மரியாதையாக நடந்து கொண்டால் அவனும் மரியாதை யாக பேசுவான். அவர்கள் வழிந்தால் அவர்களை கண்டுகொள்ள மாட்டான். இவன் வந்தால் பெண்கள் அவனை சூழ்ந்து கொள்வர்.


குரு மற்றும் அவனுடைய நண்பர்கள் தனிக்காரில் வந்து கொண்டிருந்தனர். ரியாவின் தோழிகள் ஏழு கார்களில் இருந்தனர். இதில் பிரியா விற்கு பசங்களும் கூட வராங்க என்பது தெரியாது கீதா மற்றும் விமலா டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் போட்டிருந்தனர். ஆனால் பிரியா மட்டும் தன் தலையைப் பின்னி எப்பயும் போல காட்டன் சல்வார் போட்டுவிட்டு அமைதியாக அடக்கமாக இருந்தாள்.

அனைத்து கார்களும் ஒரு எஸ்டேட்டில் நின்றது அது மாலை நேரம் என்பதால் நன்றாகவே குளிர ஆரம்பித்தது. பிரியா முதலில் யாரையும் கவனிக்கவில்லை. பின் திடீரென ஆண்களின் சத்தம் கேட்டு திரும்பினாள். அங்கு குரு வும் அவனுடைய நண்பர்கள் இருவரும் கேக் வெட்டி கத்திக் கொண்டிருந்தனர். அதில் ரியா வுடைய தோழிகள் அந்த இரண்டு நண்பர்களின் காதலிகள் தாருணி விக்னா அந்த இருவரோடு சேர்ந்து கேக் வெட்டினார்கள்.இது என்ன என்பதைப் போல் அவளின் நண்பர்களைப் பார்த்தாள் பிரியா அவர்களுக்கும் இந்த ஆண்களைத் தெரியாது. "ஹே கேர்ள்ஸ்! ய பிக் அநௌன்ஸ்மென்ட் என்னோட நண்பர்கள் பிரதீப், விஷ்னு இவர்கள் உங்க பிரண்ட்ஸ் தாருணி மற்றும் விக்னா இவங்க எல்லாருமே விரும்புறாங்க என்றான் இவங்க எல்லாருக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்க போகுது அதனால இந்த தருணத்தை என்ஜாய் பண்ணலாம்" என்று கத்தினான்.

மற்ற பெண்கள் அனைவரும் கைதட்டினர்.பிரியா மட்டும் கைதட்டாமல் அந்த இடத்தில் இருக்காமல் விலகிக்கொண்டாள். " ஏய் பிரியா நீ எதுக்கு இங்க வந்த எல்லாரும் அங்க இருக்காங்க தப்பா எடுத்துட்டுக்கப்போறாங்க" என்றாள் கீதா." இல்லடி எனக்கு இதெல்லாம் பார்க்க இன்ட்ரெஸ்ட் இல்லை இவங்களாம் யாரு டி இப்படி பசங்களும் இருப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்ட" என்றாள் பிரியா." பிரியா நாங்க ஒன்னு சொல்லுறோம்னு தப்பா எடுத்துக்காத சிலநேரம் நம்ம இப்படி தணிச்சு வந்துட்டோம்னா அது நமக்கு ஆபத்தா போய் முடிஞ்சிடும் கூட்டத்தோட ஆமா சாமி போட்டா கொஞ்சம் எஸ்கேப் ஆயிடலாம் புரிஞ்சிக்கோ" என்றாள் விமலா.

" எங்கம்மா பசங்க இருக்கிற இடம் பக்கமே இருக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க டீ அதனால தான் இப்படி விலகி வந்திட்ட"என்றாள் பிரியா." சேரி அவளை விடு டி நம்ம போலாம் இல்ல தப்பா எடுத்துக்கப்போறாங்க" என்று கீதா விமலாவை அழைத்துச் சென்று விட்டாள்.

" ஹேய்! ஹாண்ட்சம் ஆர் யு சிங்கிள் உங்கள் வயசு என்ன" என்று மற்ற அனைத்து பெண்களும் கத்தினர்." ஹா ஹா!நான் கமிட் ஆகி இருபது வருடங்கள் ஆகுது எனக்கு நெக்ஸ்ட் மன்த் மெரேஜ் என் வயசு இருபத்தி ஐந்து" என்றான் குரு. இதைக் கேட்டு அனைவரும் ஷாக் ஆனார்கள் கீதா விமலா உட்பட. குரு எப்போதும் பொய் சொல்ல மாட்டான் பெண்கள் அவனிடம் பேசினால் நன்றாக பேசுவான் ஆனால் அவன் அவர்களிடம் எல்லை மீறியதில்லை.கேக்கை அனைவருக்கும் கொடுத்தனர் பெண்கள்.ஆனால் பிரியா வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த இடத்திற்கும் வராமல் தனியே நின்றாள். " இந்த பொண்ணு ஏன் இப்படி இருக்கா அவ கிட்ட யாரும் தப்பா வும் நடந்துக்கல ஏதோ அட்டென்சன் சீக்கீங் மாதிரி தோணுது" என்றாள் அவளுடைய வகுப்பில் படித்த சந்தியா.ரியா வின் உயிர்த்தோழி யான சந்தியா ரியாவிற்கு எதிர்மறையான குணத்தைக் கொண்டவள் பணக்காரி என்ற கர்வமும் மற்றவர்களை மட்டம் தட்டுவதிலும் ஆர்வமாக இருப்பாள். மற்றவர்களும் சந்தியா சொல்லிய கருத்திற்கு ஆமாம் என்று தான் சொன்னார்கள்.

கீதாவுக்கும் விமலா வுக்கும் தான் சங்கடமாக போனது. அவர்களுக்கு தெரியும் பிரியா விற்கு இதெல்லாம் பிடிக்காது பிறந்ததிலிருந்து ஆண் வாடையே இல்லாமல் வளர்ந்த பெண்னென்று ஆனால் ஊர் வாயை அடக்க முடியாது.அனைவரும் திரும்பி ரிசார்ட் ற்கு சென்றனர் பின் இரவு நேரம் டின்னர் க்கு அனைவரும் பஃபே உணவு முறை என்பதால் ஒரே நேரத்தில் அழைக்கப்பட்டனர். அனைவரும் நைட் டிரெஸ் போட்டு சாப்பிட வந்தனர். ஆனால் பிரியா மட்டும் அதே சல்வாரை அணிந்து வந்தாள். அதற்கே அனைத்து பெண்களும் கிண்டலடித்தனர். கீதாவும் விமலாவும் கூட நைட் டிரெஸ்ஸை மாத்தினர். அவர்கள் கிண்டலடித்தது பிரியா வின் காதில் விழுந்தாலும் அமைதியாக இருந்தாள்.

"டி பிரியா நீயும் தான் நைட் டிரெஸ் போட்டு வந்துருக்கலாமே ஏன் டீ அதே டிரெஸ் போட்டுருக்க" என்றாள் கீதா. "என்கிட்ட நைட்டி தான் டி இருக்கு அதை இங்க போட முடியாதுல அதான் இதையே போட்டுட்ட" என்று சாப்பிட்டுக்கொண்டே சாதாரணமாக சொன்னாள். "உனக்கு வயசு இருபது தான் ஆகுது பிரியா பார்க்க அவ்வளவு அழகா இருக்க தெரியுமா ரொம்ப கலராவும் இல்லாம உன்னைப் பார்த்தால் மாநிறத்தை விட அதிக கலரா உன்னோட உயரத்திற்கு உன்னோட சிக்கான உடம்புக்கு கலையான முகத்திற்கு கிளாஸ்ல எல்லாருமே ரசிகைகள் பசங்களுக்கும் உன்னை மாதிரி பொண்ணை தான் ரொம்ப பிடிக்கும் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் மாரி இருக்க" என்றாள் விமலா ஆனா உன் அழகுக்கு நீ மெனக்கிட மாட்டிங்குற." என்றாள் விமலா.

"எனக்கு அதுலலாம் விருப்பம் இல்லை டி. நீங்க என்னை பத்தி சொல்லுற மாதிரி லாம் நான் யோசிச்சதே இல்லை" என்று எழுந்த போது அந்த நாற்காலியின் முனையில் கூர்மையாக இருந்த நுனியில் பட்டு பிரியாவின் சல்வார் டாப் கிழிந்து அவளுடைய உள்ளாடை லேசாக தெரிந்தது இதை பிரியா அறியவில்லை. யார் பார்த்தாலும் தெரியும் மாதிரி கிழிந்திருப்பது முதலில் குரு வின் கண்ணில் தான் பட்டது.

"அச்சோ இந்த பொண்ணுக்கு பின்னாடி கிழிஞ்சு உள்ளலாம் தெரியுதே" என்று நினைத்தவன் உடனே "எக்ஸ்க்யூஸ்மி ரெட் சல்வார்" என்றான்.தன்னை யார் கூப்பிடபோரார்கள் என்று சாப்பாட்டை எடுத்துக்கொண்டு இருந்தாள் பிரியா.

அவளின் முன்னே வந்த குரு "உங்க சல்வார் பின்னாடி கிழிஞ்சிருக்கு மறைச்சிக்கோங்க" என்றான். தன் சல்வாரில் கிழிந்ததை விட ஒரு ஆண் தன்னிடம் இப்படி சொன்னதை அவள் மிகவும் அசிங்கமாக உணர்ந்தாள். அவளுக்கு கண்ணில் தண்ணீர் மடமடவென வந்தது.
 
Top