All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பூபாள ராகம்........

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

பூபாளத்தில்
குயில் கூவ
குழந்தையும் குதித்திருக்க.....
பூபாளத்தில்
குழல் ஊத
குமரியும் குதுகலிக்க.....
பூபாளத்தில்
குண்டு பாய
குடும்பமே கும்மிருட்டாய்.....
பரிதவித்த காலையே....
உன் உதயத்தில் மாற்றமில்லை
ஆனால்......
உன் உன்னதத்தில் உயிரில்லையோ......?
காலத்தின் மாற்றம்
கற்பனையையும் மாற்றிடுமோ.....?

தெளிவில்லா விடியல், தெளியாத மனங்களை, தெளிய வைக்க வந்ததன்றோ...? இனிய காலை வணக்கம் தோழிகளே!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

கனிவான காலை,
அணியான சோலை,
துணிவான ஓலை,
பணிவான பாலை பாசுங்கிளியை
கொஞ்சும் காதலில்
மிஞ்சும் மோதலில்
பூபாளம் மீட்டும் புது ராகமே...!

இனிய காலை இன்பத்தின் திறவுகோலாய் இதம் பரப்ப இனிய காலை வணக்கம்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

விடிகாலை வெளியில்
அதிகாலைக் குளிரில்
பூஞ்சாரல் மழையில்
சஞ்சாரம் விழியில்
பூபாளம் மொழியில்
புதுலோகம் அன்றோ...?

இனிய காலையின் அற்புத நேரம், மனம் மயங்கும் மகரந்த தீரம். இனிய காலை வணக்கம்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே,

சிட்டுக் குருவியின்
பட்டுக் குரலில்,
மொட்டு மலர்ந்த
பட்டுப் பூவின்
சுந்தர மணத்தில்
விட்டுப் பிரியும்
சிப்பி இமைகள்....
பூபாளம் கேட்டால்
துயில் பறக்காதோ...!
ஆலோலம் பாட
மனம் திறக்காதோ...?

அழகுய காலையின் ஆனந்த ராகம் அமுதகானம் மீட்ட இனிய காலை வணக்கம் தோழிகளே!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

கார்மேகம் சூழ்ந்த
கனிவான காலை...
கடும் குளிர் சூழ்ந்த
கணமான காலை...
பூபாளம் கேட்க
இதமான காலை...
அனுபவித்தறிந்தால்
சுகபோகமன்றோ......!

மழை மேகம் சூழ்ந்த இதமான காலை இனிய இசை மீட்ட, இன்பம் மீட்கும் இனிய காலை வணக்கம்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

பூமியின் விடியலில்
புதையலாய் மனதினில்
பூபாளம் இசைத்திட்டால்...
பூலோகம் சொர்க்கமன்றோ...!

இனிய விடியலின் இனிமைகள் துலங்க, இனிய காலை வணக்கம் தோழிகளே...!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!


பூபாளம் பாடிய ஆலோலத்தில்
தென்றலின் நாதம் இன்னிசையாய்...
தேகங்கள் சிலிர்த்த காலையிலே....
தேரடி வீதீயின் ஓரத்திலே...
புதிய விடியலின் புன்னகை - அது
பெண்ணவள் பெருமையின் மென்னகை!


இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

பூபாளம் பாடும் காலை...
வெண்பனி மூடும் சோலை...
கண்மணி தேடும் வேளை..
தனியாத மனங்கள் பாலை...!

இனிய காலை வணக்கம் தோழிகளே, இந்த நாள் இனியதாய் தொடரட்டும்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே...!

மழையோடு பேசும்
இலையோடு வீசும்
காற்றோடு பாடும்
ஏகாந்தம் எல்லாம்
ஏக்கமாய் வென்று
எழுகின்ற கீதம் பூபாளமே...!


இந்த நாள் இனிய நன்னாளாக அமைய என் இனிய வாழ்த்துக்கள்...!
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே...!

பூபாளம் என்பது ஆலோலம் பாட
பூலோகம் எல்லாம் பூத்திருக்காதோ...!

பூகோளம் என்பது ஆலோலம் பாட
ஆகாயம் எல்லாம் ஆராதிக்காதோ...!

இனிய காலையின் இன்ப நாதம் அமுத கானமாய் ஆரோகணம் செய்ய என் இனிய காலை வணக்கம்
 
Top