அத்தியாயம் 6
( நீலகிரியை பற்றிய சிறிய தகவல்
நீலகிரி மலை என்று அழைக்கப்படும் நீல மலையானது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள ஒரு மலை தொடராகும். இம்மலைத் தொடர் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. நீலகிரி என்னும் பெயராலேயே இம்மாவட்டம் நீலகிரி என்னும் பெயர் பெற்றது. இது மலைகளின் இராணி என்றழைக்கப்படுகிறது. நீலகிரி என்றால் நீல நிறமான மலை என்று பொருள். நீலகிரி மலையில் பூத்து குலுங்கும் குறிஞ்சி செடி அல்லது நீலக்குறிஞ்சி மலர்களினால் இம்மலை பிரதேசம் நீல நிறத்தில் தோன்றவதால் தென்னிந்தியவில் இம்மலை தொடர்ச்சிக்கு நீலகிரி மலை என்ற பெயர் பெற்றது.
ஏறத்தாழ 3300 க்கும் மேற்ப்பட்ட பூக்கும் தாவர வகைகள் உள்ளன. அதில் 1232 தாவர வகைகள் இவ்விடத்திற்கே உரித்தானவை. பேயேலெப்சிஸ் என்ற தாவர பேரினம் உலகில் இங்கு மட்டுமே காணப்படுகிறது.
விலங்கினங்களை பொறுத்தவரையில் மேற்கு தொடர்ச்சி மலைக்கே உரித்தான 100 வகையான பாலுட்டிகள் , 350 வகையான பறவைகள் , 80 வகையான இரு வாழ்விகள் , 39 வகையான மீன்கள், 31 வகையான ஊர்வன, 316 வகையான வண்ணத்துபூச்சியினங்கள் மற்றும் எண்ணிலடங்கா முதுகெலும்பற்ற விலங்கினங்கள் இக்காப்பகத்தில் காணப்படுகிறது. இங்குள்ள அரிதாகி வரும் விலங்குகள் புலி, ஆசிய யானை, வரையாடு ஆகியன இங்கு உள்ளன ).
அடுத்த நாள் காலை விடியும் முன்னரே ஆதி நீலகிரிக்கு கிளம்பி சென்று விட்டான். ஷக்தியை இங்கு இருக்கும் வேலைகளை பார்க்க சொல்லி இங்கேயே இருக்க சொல்லி விட்டு சென்றான். மதிய வேலை நெருங்கும் நேரம் அவன் நீலகிரியை வந்தடைந்தான். அவர்கள் அங்கு வந்தால் தங்கும் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்று தயாராகி எஸ்டேட்க்கு சென்றான். அங்கு அனைவரும் அவனுக்காக காத்திருந்தனர். அங்கு முழுவதும் சுற்றி பார்த்து கொண்டே வேலை செய்பவர்களிடம் எதாவது பிரச்சனை உள்ளதா என்று கேட்டறிந்தான். பிறகு வேலைகள் எல்லாம் எவ்வாறு நடைபெறுகிறது என்று அனைத்தும் அவன் கண்களால் பரிசோதித்து விட்டு அங்குள்ள ஆபீஸ் ரூம் சென்று அமர்ந்தான். காலையில் வந்ததில் இருந்து எதுவும் உண்ணவில்லை காபி குடித்தது மட்டும் தான். எஸ்டேட் மேனேஜர் சாப்பிட சொன்னாலும் வேலை முடிந்த பிறகு சாப்பிடுவதாக கூறியவன் இந்த வருட கணக்கு வழக்குகளை கொண்டு வர சொல்லி சரிப்பார்த்து கொண்டிருந்தான்.
அவன் கேட்டதை எடுத்து வந்து கொடுத்தார் . அவன் அனைத்தையும் பார்த்த பிறகு அவரிடம், “ பெர்பெக்ட் எல்லாமே சரியா இருக்கு. வேற எதாவது லேபர்ஸ்குள்ள ப்ரோப்லேம் இருந்தா சொல்லுங்க “ என்றான். அவன் கூறியதை கேட்டவர், “தம்பி நீங்க வருவீங்கன்னு காலைலேயே வானதி தான் எல்லாத்தையும் சரி பார்த்து வெச்சுது தம்பி. இந்த பாராட்டு அந்த பொண்ணூக்கு தான் போகணும். அப்பறம் தொழிலாளிங்க குள்ள எந்த பிரச்சனையும் இல்ல அப்படியே இருந்தாலும் வானதி எல்லாத்தையும் பாத்துக்கும் தம்பி. இங்க இருக்க எல்லாரும் அந்த பொண்ணு பேச்ச தான் கேப்பாங்க. எல்லாருக்கும் அந்த பொண்ணுன்னா அவ்வளவு இஷ்டம். இது வரைக்கும் பிரச்சனை எதுவும் இல்ல. இனிமே இருந்தா சொல்றேன் தம்பி “ என்று மரியாதையுடன் கூறினார்.
அவர் கூறியதை கேட்டவன், “ யார் அந்த வானதி நீங்க எனக்கு அறிமுகம் படுத்தவே இல்லை “ என்று சந்தேகத்துடன் கேட்டான்.
அதற்கு அவர், “ மன்னிச்ச்சிடுங்க தம்பி காலைல ஒரு முக்கியமான வேலையா டவுன் வரைக்கும் போயி இருக்கா. இங்க இருக்க பொண்ணு தான் தம்பி. நம்ம அய்யாவுக்கு நல்லா தெரியும். நம்ம ட்ரஸ்ட் மூலமா தான் படிச்சிது. படிப்ப முடிக்குற வரைக்கும் இங்கயே வேலை பாக்கட்டும்ன்னு அய்யா தான் சொன்னாரு. அவருக்கு வானதிய ரொம்ப பிடிக்கும். அந்த பொண்ணூம் ரொம்ப பொறுப்பானவள் தம்பி. உங்கள நேர்ல பாத்து எல்லாத்தையும் ஒப்படைக்கனும்ன்னு சொல்லுச்சி தம்பி ஆனா தவிர்க்க முடியாததால தான் இருக்க முடியல நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க தம்பி “ என்று சொன்னார்.
ஆதி, “ சரி சரி விட்டா இன்னிக்கு முழுக்க பேசுவிங்க போல. சரி நேரம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன். நீங்க பாத்துகொங்க எதாவது பிரச்சனைனா என்னை காண்டாக்ட் பண்ணுங்க “ என்று கூறியபடியே அங்கிருந்து சென்று விட்டான்.
அவன் எஸ்டேட்டில் இருந்து வீட்டிற்க்கு செல்ல வெகு தூரம் போக வேண்டும் அதுவும் காட்டு வழியாக செல்ல வேண்டும். சிறிது தூரம் காரில் சென்று கொண்டிருந்தவன் ஒரு ஒரமாக வண்டியை நிறுத்தி விட்டு கண்களை மூடி அமர்ந்து விட்டான், ‘ தன்னுடைய வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது. நிம்மதி என்ற ஒன்று தனக்கு இல்லையா. சிரிப்பு என்ற ஒன்றை மறந்து பல வருடங்களாகி விட்டது. இது என்ன வாழ்க்கை ‘ என்ற எண்ணம் சில நாட்களாக அவன் மனதில் தோன்ற ஆரம்பித்தது . அதை பற்றி அவன் சிந்தித்து கொண்டிருந்த போது அந்த ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்டில் ஒரு பெண்ணை மூன்று பேர் தூரத்தி கொண்டு சென்றதை பார்த்தான். அதை பார்த்தவனுக்கு கோவம் வந்தது அந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக காரில் இருந்து இறங்கியவன் அவர்கள் சென்ற பக்கமாக வேகமாக ஓடினான். அந்த பெண் காட்டிற்குள் ஓடியதால் அவர்களும் பின்னாடியே சென்றதை கண்டவன் அவனும் வேகமாக சென்றான்.
காட்டிற்குள் அவர்கள் வேகமாக சென்றதால் எங்கே போனார்கள் என்று தெரியாமல் சுற்றி தேடிக் கொண்டே சென்றான். சிறிது தூரம் சென்ற பிறகு சில பேச்சு குரல்கள் கேட்டு அந்த பக்கம் சென்று பார்த்தவன் அதிர்ந்தான்.
காட்டிற்குள் வேகமாக ஓடிய வானதி வழியில் இருந்த மரத்தின் வேர் தடுக்கி கீழே விழ இருந்தவள் சுதாரித்து நேராக நின்று திரும்ப ஓடுவதற்குள் பின்னாடியே ஓடி வந்த மூவரும் அவளை சுற்றி வளைத்தனர். அவர்களை பார்த்து, “ எதுக்கு என்னை விடாம தூரத்துரிங்க...உங்களுக்கு என்ன வேணும் “ என்று மனதிற்குள் தைரியத்தை வரவைத்து கொண்டு கேட்டாள்.
அதைக் கேட்ட மூவரில் ஒருவன், “ நீ மட்டும் ஓடாம இருந்து இருந்தா நாங்க வந்த வேலை முடிஞ்சி இருக்கும்... இப்போ கூட கேட்டு போகல கொஞ்சம் நேரம் அசையாம நில்லு நாங்க உன்னை ஒரே தடவ குத்திக் கொன்னுட்டு போயிடுவோம்... அதான் எங்களுக்கு இப்ப வேணும் “ என்றான்.
“ நீங்க சொல்றது உங்களுக்கே ஒவரா இல்ல நீங்க கொல்ற வரைக்கும் நான் நிக்கனுமா “.
“ முதல்ல உன்ன கொல்லனும்ன்னு தான் வந்தோம் ஆனா நீ வேற அழகா இருக்க அதனால எங்களுக்கு இப்போ வேற ஒன்னு தோணுது. எப்படியும் சாக தான போற....“ என்று ஒரு மாதிரியாக சிரித்தப்படி மூவரில் ஒருவன் வானதியை நெருங்கி வந்தான். தன்னை நோக்கி வருபவனை கண்டவள் தைரியத்தை வர வைத்துக் கொண்டு அவனை ஓங்கி வயிற்றில் குத்தி தள்ளி விட்டு விட்டு மறுபடியும் ஒட ஆரம்பித்தாள். தன்னுடைய உயிரை விட தன் மானத்தை காப்பாத்த வேண்டிய நிர்ப்பந்தம் அவளை வேகமாக ஓட வைத்தது. ஆனால் அவளால் வெகு தூரம் ஓட முடியவில்லை அங்கிருந்த சேற்றில் கால் தடுக்கி கீழே விழுந்தாள்.
தன்னை தள்ளி விட்டு ஒடியவள் மீது கோவம் கொண்டு இன்னும் வெறியோடு அவளை தூரத்திக் கொண்டு வந்தவர்கள் அவள் கீழே விழுந்ததை பார்த்து வேகமாக அவளை நெருங்கி இருவர் அவள் கைகளை பிடித்துக் கொண்டனர்.
“ நானும் ரொம்ப அழகான பொண்ணா இருக்கன்னு கொஞ்சம் விட்டு பிடிச்சா ரொம்ப ஒவரா போற... இனி உன்ன விட்டு வெச்சா நாங்க யார் கிட்டயாவது மாட்டிப்போம். சீக்கிரம் வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தான் யாரோ வர மாதிரி வேற இருக்கு. அவ கையா நல்லா இறுக்கமா பிடிங்கடா “ என்று கத்தியோடு சொல்லியவன் அவளை நெருங்கினான். வானதியும் தன்னால் முடிந்தவரை அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தாள் ஆனால் முடியவில்லை அதனால் என்ன நடக்கனுமோ நடக்கட்டும் என்று தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
அதே நேரம் அவர்களின் பேச்சு குரலை கேட்டு அங்கு வந்த ஆதி கண்டது அந்த மூன்று பேரில் ஒருவன் அந்த பெண்ணை கொல்ல கத்தியோடு செல்ல மற்ற இருவரும் அந்த பெண்ணின் கையை பிடித்திருந்தனர். அந்த பெண்ணும் அவர்களிடம் இருந்து தன்னை விடுவித்து கொள்ள போராடி கொண்டிருந்ததை தான். சூழ்நிலையை உடனே புரிந்து கொண்டவன் கத்தியை அந்த பெண்ணுக்கு அருகில் கொண்டு செல்லும் போது இவன் அந்த கையை பிடித்து தடுத்தான்.
தன்னை நோக்கி வந்த அந்த கத்தி இன்னும் தன்னை குத்தவில்லையே என்று நினைத்தவள் இறுக்கமாக மூடியிருந்த கண்களை திறந்து பார்த்தாள் வானதி மனதில் காலையில் டவுனில் ஒரு அவசர வேலையாக சென்றவள் வேலை முடிந்த பிறகு போகும் வழியில் ஒரு முக்கியமான நபரை சந்திக்க காட்டுப் பக்கம் செல்ல வேண்டி அந்த சாலை வழியாக நடந்து செல்லும் போது திடீரென்று மூன்று பேர் அவளிடம் தப்பான எண்ணத்துடன் நெருங்கினார்கள். அவர்களின் நோக்கத்தை உணர்ந்தவள் தப்பிப்பதற்காக ஓடினாள். அப்போது தான் ஆதி இதை பார்த்து விட்டு அவளை காப்பாற்றுவதர்க்காக வந்திருக்கிறான் என்று நினைத்தாள். அவள் மனத்தில் நடந்ததை நினைத்து பார்ப்பதற்குள் அவர்கள் மூவரும் ஆதியை தாக்கினர் . அவனும் அவர்கள் மூவரையும் அசால்ட்டாக அடித்து நொறுக்கி விட்டான். அவனின் அடிக்கு பயந்தவர்கள் தலை தெறிக்க ஓடி விட்டனர்.
அவர்கள் அங்கிருந்து ஓடியதை பார்த்து உறுதிப்படுத்திய பிறகு அவளை நோக்கி வந்தவன், “ கொஞ்சம் கூட அறிவில்லை ......ஆள் நடமாட்டம் இல்லாத ரோட்ல தனியா வரக்கூடாதுன்னு தெரியாது இப்ப என்ன நடந்ததுன்னு பாத்தியா.....உங்களுக்கு எப்படி புரியும் எல்லாம் திமிர் வேற என்ன சொல்றது “ என்று கோவமாக கத்தினான்.
அவன் கோவப்பட்டதை பார்த்தவள், “ அப்படி இல்ல சார்....நான் எதுக்கு வந்தேன் னா....” என்று கூற ஆரம்பித்தவளை தன் கையை உயர்த்தி தடுத்தவன், “ போதும் உன்னோட சாக்கு போக்க கேக்க எனக்கு இப்ப நேரம் இல்ல இருட்டாக ஆரம்பிச்சிடுச்சு.... சீக்கிரமா இந்த காட்டை விட்டு வெளிய போகணும்... உன்ன காப்பாத்த வந்து நானும் இங்க மாட்டிக்கிட்டேன்...” என்று கத்தினான். அவளின் பாதி தெரிந்த முகத்தை பார்த்தவுடன் தன்னுடைய மனதில் ஏதோ ஒரு உணர்வு தோன்றுவதை அறிந்தவன் அது பிடிக்காததால் அதை அவளிடமே கோவமாக வெளிப்படுத்தினான்.
தன்னை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியவனுக்கு நன்றி கூற வேண்டும் என்று நினைத்தவள் மற்றவர்கள் என்ன பேச வருகிறார்கள் என்று கேட்காமல் கத்தியவனை நிதானமாக பார்த்தவள், “ சார் இப்போ இந்த காட்ட விட்டு போறது நமக்கு நல்லது இல்லை.... பாருங்க நல்லவே இருட்டிடுச்சு “ என்றவளை முறைத்தவன், “ அதுக்காக இங்கேயே வா இருக்க முடியும் மூளையை யூஸ் பண்ண மாட்டியா.... அதான அது இருந்திருந்தா நீ ஏன் இப்படி அந்த ரவுடிங்க கிட்ட மாட்ட போற “ என்று கூறினான்.
அவனின் பேச்சில் கடுப்பான வானதி, “ சார் சும்மா அதையே சொல்லிட்டு இருக்காதிங்க...நீங்க என்னை காப்பத்தினிங்க அப்படின்றதுக்காக என்னை பேசவே விடாம பேசுறிங்க...இப்போ நான் சொல்றத கொஞ்சம் கேக்ரிங்கலா” என்று அவனை பார்த்து கேட்டாள்.
தானும் அதிகமாக பேசியதை உணர்ந்தவன். அவள் கேட்டதற்கு சரியென்றும் மேலே கூறுமாறும் தலையசைத்தான். அவன் சம்மத்தித்ததை கண்டவள், “ இந்த காட்டை பத்தி எனக்கு நல்லவே தெரியும்... இப்போ நம்ம நடுக்காட்டில இருக்கோம் அதுவும் வழி தெறிஞ்சாலும் இருட்டுல வழி மாறி போயிடுவோம்... சார். மிருகங்கள் எல்லாம் இப்போ அதிக நடமாட்டம் இருக்கும். அதனால காலைல விடிஞ்ச பிறகு இங்க இருந்து போறது தான் நமக்கு நல்லது. அத தவிர நமக்கு இப்போ வேற வழியும் இல்லை “ என்றாள்.
அவள் கூறியதும் சரியென்பதை உணர்ந்தவன், “ நீ சொல்றதும் உண்மை தான் ஆனா இந்த காட்டுக்குள்ள காலைல வரைக்கும் எங்க தங்கறது “ என்று கேட்டான்.
வானதி தன்னை சுற்றியுள்ள இடத்தை பார்த்தாள். இருட்டிய பிறகு அந்த முழு நிலவின் வெளிச்சத்தில் தாங்கள் இருக்கும் இடத்தை குத்து மதிப்பாக அறிந்தவள், “ சார் அது வந்து எனக்கு தெறிஞ்ச வரைக்கும்... இங்க பக்கத்துல ஒரு பாழடைந்த மண்டபம் ஒன்னு இருக்கு நாம அங்க போலாம். விடிஞ்ச உடனே நான் உங்களை காட்டுக்கு வெளியே கொண்டு போய் விட்டுட்றேன் “ என்று அங்கு செல்லும் பாதையை பார்த்தப்படியே கூறினாள்.
ஆதி, “ இப்போ எனக்கு உன் பேச்ச கேக்கரத தவிர வேற வழி இல்லை வா போலாம் “ என்று கூறி ஒரு பெருமூச்சுடன் அவளை முன்னாடி நடக்க சொன்னான். வானதியும் கீழே விழுந்த தன்னுடைய பேக்கை தோளில் மாட்டியப்படி முன்னே சுற்றி பார்த்துக் கொண்டே நடந்தாள். சிறிது தூரம் சென்ற பிறகு கீழே கிடந்த சிறு சிறு குச்சிகளை எடுத்து கொண்டு சென்றவளை புரியாமல் பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்தான் ஆதி. வாழ்க்கையில் முதல் முறையாக வேறு ஒருவரை தான் பின் தொடர்வதை அச்சர்யமாக எண்ணியவன் காலையில் இருந்து சாப்பிடாதது பிறகு சண்டையிட்டது என அனைத்தும் சேர்ந்து சோர்வுடனே நடந்தான்
வானதி, “ சார் இதோ வந்துட்டொம்... வாங்க இங்க வந்து உக்காருங்க “ என்று கூறியவள் அந்த மண்டபத்தின் ஒரு மூலையில் அமர்ந்தாள். அவள் அமர்ந்ததை பார்த்தவன் இன்னொரு பக்கத்தில் அம்ர்ந்தான். அவன் மனதில், ‘ காலைல இருந்து ஒன்னும் சாப்பிடல பயங்கரமா பசிக்குது இப்போ என்ன பன்றது. இருட்டுல எது எங்க இருக்குன்னு கூட தெரிலயே...என்ன பன்றது ‘ என்று யோசித்து கொண்டிருந்தவன் முன் ஒரு கரம் பழத்தை நீட்டியது. அந்த பழத்தை வாங்காமல் அவளையே புரியாமல் பார்த்தான்.
அங்கு அமர்ந்ததும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றி பார்த்து கொண்டிருந்தவள் கண்ணில் சோர்வான முகத்துடன் இருந்த ஆதியே தெரிந்தான். தன்னை காப்பாற்ற வந்து இங்கு மாட்டிக் கொண்டதை எண்ணி வருத்தம் கொண்டாள் . அவன் முகத்தை வைத்தே பசியோடு இருப்பதை அறிந்தவள் தன் பேக்கில் தான் பார்க்க வந்த நபருக்காக வாங்கிய பழங்கள் கொஞ்சம் இருந்தது. அதில் ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினாள். ஆனால் அதை வாங்காமல் தன்னையே பார்த்தவனை, “ இந்த பழம் நான் வேற ஒருத்தருக்கு வாங்கிட்டு வந்தது தான் இனிமே இதை அவங்களுக்கு கொடுக்க முடியாது. உங்கள பாத்தா காலையில இருந்து சாப்பிடாம பசில இருக்க மாதிரி தெரிது அதனால நீங்க சாப்பிடுங்க “ என்று கூறி அவனின் கை மீது வைத்தாள். ஆதியும் மிகுந்த பசியோடு இருந்ததால் மேற்க்கொண்டு எதுவும் கூறாமல் அவள் கொடுத்த எல்லா பழங்களையும் உண்டான். பசி தீர்ந்த பிறகு தான் எல்லா பழத்தையும் தானே உண்டதை உணர்ந்தவன். அவளை பார்த்து, “ அது ... வந்து. ... பசில இருந்ததால எல்லாத்தையும் நானே சாப்பிட்டுடேன்... ஏன் நீ எடுத்துக்காம எனக்கே எல்லாத்தையும் கொடுத்த ? “ என்று கேள்வியாக பார்த்தவனை பார்த்து சிரிப்புடன், “ கவலைப்படாதிங்க எனக்கு பசியில்லை அதுவுமில்லாமல் நம்ம கண்ணு முன்னாடி ஒருத்தர் பசியோடு இருந்தா அவங்க பசிய தான் முதல்ல போக்கனும் அது நம்ம கடமைன்னு என் அம்மா சொல்லி இருக்காங்க “ என்று வானத்தை பார்த்துக் கொண்டே கூறியவளை விசித்திரமாக பார்த்தான்.
இதுவரை அவன் பார்த்த பெண்கள் அனைவருமே சுயநலமானவர்கள் தன்னுடையதை யாருக்கும் அதுவும் இலவசமாக கொடுப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம். அப்படி இருக்கும் போது இந்த பெண் அவர்களில் இருந்து வித்தியாசமாக தெரிந்தாள்.
இப்படியே நேரங்கள் சென்றது ஆனால் ஆதியால் அமைதியாக அமர முடியவில்லை ஏனென்றால் இதுவரை அவன் இப்படி ஒரே இடத்தில் எதுவும் செய்யாமல் அவன் இருந்ததே இல்லை அதுவே அவனுக்கு எரிச்சலாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் கீழே இருக்கும் கற்க்களை எடுத்து தூக்கி வீசிக்கொண்டிருந்தான். அவனின் செயல்களை பார்த்து அவனின் மனநிலையை புரிந்து கொண்டவள், “ இப்படி காட்டுக்குள்ள மாட்டிக்கிட்டது உங்களுக்கு பிடிக்கலன்னு நினைக்கறேன். எனக்கு உங்க சூழ்நிலை என்னன்னு புரிது. நாம சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தாலா இங்க இருந்தாலும் நம்மள சுத்தி இருக்க அழக கொஞ்சம் ரசிச்சி பாருங்க. ஒரு அழகான காடு, சுத்தி இருட்டு அதுல முழுநிலவொளியோட வெளிச்சம், காத்துல அசையற மரங்கள், அதனோட இலைகள் ஒன்னுக்கு ஒன்னு காத்துல ஒரசும் போது ஏற்படுற சத்தம்....இப்படின்னு நிறைய விஷயங்கள் நம்மள சுத்தி இருக்கு. இனி இதுப்போல ஒரு சந்தர்ப்பம் உங்க வாழ்க்கையில வருமான்னு தெரியாது.... அதனால கோவத்த விட்டுட்டு இந்த நிமிஷத்த ரசிங்க “ என்று தன்னை மறந்து அவனிடம் பேசிக்கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு அவள் கூறியதை கேட்டவுடன் தான் தன்னை சுற்றியுள்ளவற்றை பார்க்க வேண்டும் போல் எண்ணம் தோன்றியது. இப்போது அதை பார்த்தவனுக்கு அந்த இடமே அழகாக தெரிந்தது.
அந்த நிமிடம் அவன் மனதில் , ‘ நாம் எங்கு இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை யாரோடு இருக்கிறோம் என்பது தான் முக்கியம். எந்த ஒரு இக்கட்டுட்டான சூழ்நிலையில் இருந்தாலும் அதை ரசிக்க தெரிந்த ஒருவரோடு இருந்தால் அந்த இடமும் அந்த நொடியும் மிகவும் அழகாக தெரியும் ‘ என்பதை உணர்ந்தான். அது மட்டும் இல்லாமல் அவளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுள் தோன்றியது. ஆதலால் அவளிடம், “ இங்க நீயும் நானும் தான் இருக்கோம் அதனால உன்னை பத்தி நீ சொல்லு....ஆமா நீ யார பாக்க காட்டுக்கு வந்த “ என்று கேட்டான். அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தவள், “ சார்... அது வந்து...என்னடா இப்படி சொல்றலேன்னு நினைக்காதிங்க....மிஞ்சி போனா நம்ம ரெண்டு பேரும் விடியற வரைக்கும் தான் ஒன்னா இருக்கபோறோம்....அதுக்காப்புறம் நீங்க உங்க வழிய பாத்திட்டு போயிடுவீங்க நான் என் வழியில போயிடுவேன்....அதனால நான் யார் என் பெயர் என்ன...இப்ப என்ன பன்றேன் இப்படி எதுவும் நீங்க கேக்காதிங்க நானும் உங்கள பத்தி எதுவும் கேக்க மாட்டேன்....சரியா என்னை எதுவும் தப்பா நினைச்சிக்காதிங்க “ என தயங்கியப்படி கூறியவள். அவன் தன்னை எதுவும் தவறாக எண்ணி விட்டானா என்று தெரிந்து கொள்ள அவனின் முகத்தையே பார்த்தாள்.
அவள் கூறியதை கேட்டதும் அவனுக்கு சிறிது கோவமாக வந்தது. அவனை சந்திப்பதர்க்காகவும் அவனிடம் ஒரு முறையாவது பேச வேண்டும் என்பதற்காகவும் பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தான் வலிய வந்து அவளிடம் பேசியும் அதற்கு அவள் பதிலாளிக்காதது அவனுக்கு கோவமாக வந்தது. அதனால் அவன் தன்னுடைய முகத்தை வேறுப்புறம் திருப்பிக் கொண்டான். அவன் தன் மீது கோவமாக இருப்பதை அவன் முகத்தில் வந்து போன பாவனைகளைக் கொண்டு அறிந்து கொண்டவள். இப்போது இங்கு இருவர் மட்டுமே இருக்கிறோம் அதுவும் தனக்கு உதவி செய்தவர் இப்படி கோவமாக இருப்பது சரியல்ல என்று நினைத்தவள். அவனை சமாதானம் படுத்துவதற்காக, “ கோவமா இருக்கீங்களா....இந்த காட்டுல நம்ம ரெண்டு பேர் தான் இருக்கோம். நீங்களும் இப்படி முகத்த திருப்பிக்கிட்டா எப்படி. நான் என்ன பத்தி வேற எதுவும் சொல்ல மாட்டேன்ன்னு தான் சொன்னேன்... இப்போ நான் யாரா பாக்க வந்தேன்ன்னு சொல்ல மாட்டேன்ன்னு சொல்லவே இல்லையே.... நீங்க கேட்ட ரெண்டு கேள்வில ஒரு கேள்விக்கு நான் பதில் கண்டிப்பா சொல்றேன் “ என்று சாமர்த்தியமாக பேசியவளை மனதில் மெச்சியவன் அவள் பேசுவதை கேட்பதற்காக திரும்பி அமர்ந்தான். இந்த இரவில் தனிமையில் எவ்வளவு நேரம் கோவத்தை பிடித்து வைக்க முடியும் அதனால் அவனும் அவள் போக்கில் , “ சரி சொல்லு “ என்றான்.
வானதி,” நான் இங்க என்னோட தம்பிய பாக்க வந்தேன் “ என்றாள்.
ஆதி, “ என்ன உன் தம்பிய பாக்க வந்தியா. அவன் இந்த காட்டுக்குள்ளயா இருக்கான் “ என்று கேட்டான். ஆனால் அவன் மனதிற்குள் ஒரு வேலை இவங்க குடும்பம் காட்டுக்குள்ள இருக்க பழங்குடியினர் போல என்று எண்ணினான்.
வானதி, “ ஆமா.... ஆனா நீங்க நினைக்கற மாதிரி அவன் என் சொந்த தம்பி இல்லை. பட் அவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவன் கூட. உண்மைய சொல்லனும்னா அவன் என் குழந்தை மாதிரின்னு கூட சொல்லலாம். அவன பாக்க தான் வந்தேன். நாளைக்கு அவன பாத்துட்டு தான் போகணும் “.
ஆதி, “ நீ சொல்றது ஒன்னும் புரியல... எதுவும் கேக்க கூடாதுன்னு வேற சொல்லிட்ட... சரி. நாளைக்கு என்னையும் உன் தம்பிய பாக்கும் போது கூட்டிட்டு போ. இங்க நடந்தத அவங்க கிட்ட சொல்லனும் “
வானதி, “ அப்படினா சரி உங்க இஷ்டம் ... நான் கூட்டிட்டு போறேன் “ என்று கூறியவள் அமைதியாக அந்த சூழலை ரசிக்க ஆரம்பித்தாள்.அவள் மனதில் இன்று நடந்தது அனைத்தும் கண் முன்னால் ஓட ஆரம்பித்தது. இவர் மட்டும் வரவில்லை என்றால் தனக்கு என்ன நேர்ந்து இருக்கும். அவரை பத்திரமாக நாளை விடிந்தவுடன் காட்டிற்கு வெளியே கொண்டு விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.அவளை பார்த்துக் கொண்டிருந்த ஆதியும் முதல் முறையாக மனதில் ஒரு வித அமைதியுடன் அந்த இரவின் அழகையும் அதை ரசிக்க கற்றுக் கொடுத்த பெண்ணையும் மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தீராத மோகம் நான்
கொண்ட நேரம்
தேனாக நீ வந்து சீராட்டதான்
காணாத வாழ்வு நீ தந்த வேலை
பூமாலை நீ சூடி பாராட்டதான்
நீ என் ராணி நாந்தான் தேனீ
நீ என் ராஜா நான் உன் ரோஜா
தெய்வீக பந்தத்திலே நான் கண்ட
சொர்க்கம் இது காதல் உறவே...
நிஜத்தை தேடும்...
இந்த கதையின் கருத்துக்களை “
என் நிஜமே நீ தானடி “ கதையின்
கருத்து திரியில் மறக்காமல்
பகிர்ந்து கொள்ளுங்கள்....