All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

Status
Not open for further replies.

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7

அந்த அழகான இரவை என்றுமே அவர்களால் மறக்கவே முடியாது. அன்றைக்கு மட்டும் சந்திரன் தன்னுடைய வெளிச்சத்தை அந்த காடு முழுக்க பரவ செய்து அந்த அழகிய காட்டை இன்னும் அழகாக்கியது போல் தோன்றியது. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் மனதில் இருவருமே தன்னுடைய தடத்தை பதித்து விட்டதை இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை ஆனால் சுற்றி இருந்த இயற்கைக்கு அது நன்றாகவே தெரிந்தது போல ஈரக்காற்றாக மாறி இருவரையும் தழுவி சென்று குளிரை பரப்பியது. அந்த காட்டின் குளிர் வானதிக்கு மிகவும் பழகிய ஒன்று என்பதால் அவளுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை ஆனால் ஆதிக்கு இது மிகவும் புதிது. ஆதலால் அவனால் வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியாமல் அவன் உடல் குளிரில் நடுங்க தொடங்கியது. அவனுடைய நடுக்கத்தை கண்ட வானதி இரவு நேரத்தில் அதுவும் இந்த காட்டில் இது போல் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பது தெரிந்ததால் தான் வரும் வழியில் இருந்த சில விறகு குச்சிகளை அவள் சேகரித்து கொண்டு வந்தாள். அது இப்போது நல்லதாக போய் விட்டது என்று எண்ணியப்படி அவள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து தான் கொண்டு வந்த விறகுகளையும் கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த இலைகள் மற்றும் குச்சிகள் என அனைத்தையும் எடுத்து அதில் சிலதை ஒன்றாக வைத்து கொண்டிருந்தாள். அவள் செய்வதை பார்த்தவன் ஒன்றும் புரியாமல் எழுந்து அவள் அருகில் அமர்ந்தான்.


ஆதி, “ என்ன பண்ணிட்டு இருக்க…. நீ வரும் போதே இந்த குச்சிய எடுத்துட்டு வந்தல அப்பவே கேக்க நினைச்சேன் “ என்று தனக்கு எதிரில் அமர்ந்து விறகுகளை அடுக்கி கொண்டு இருந்தவளை பார்த்து கேட்டான்.


அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ இராத்திரி நேரத்தில இங்க ரொம்ப குளிரும்ன்னு எனக்கு தெரியும்….எனக்கு இந்த கிளைமேட் பழக்கப்பட்டது. ஆனால் உங்களுக்கு புதுசுன்னு எனக்கு தெரியும்…. எப்படியும் இங்க தங்கற மாதிரி ஆயிடுச்சு….அதான் தீமூட்றத்துக்கு தேவப்படும்ன்னு எடுத்துட்டு வந்தேன். இப்போ அதுக்கு தான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன் “ என்று கூறியவளை பார்த்து கொண்டிருந்தபோது மனதில் ஏதோ ஒன்று தோன்றியது. தான் கூறாமலே தனக்காக யோசித்து செய்து கொண்டிருந்தவளை பார்த்த போது அவனுடைய அன்னையின் நினைவு வந்தது.


வானதி, “ சார் மேட்ச் பாக்ஸ் வச்சிருக்கீங்கலா “ என்று கேட்டவளை முறைத்தவன், “ என்ன பார்த்த எப்படி இருக்கு எனக்கு எந்த கேட்டப்பழக்கமும் கிடையாது “ என்று கோவப்பட்டவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள், “ ஐயோ சாமி தெரியாமல் கேட்டுட்டேன் என்னை விட்ருங்க…நெருப்பு மூட்றதுக்கு மேட்ச் பாக்ஸ் தேவப்ப்படும் ஒரு வேலை உங்ககிட்ட இருக்குமோன்னு கேட்டேன் “ என்று பாவமாக கூறியவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.


அதே சிரிப்புடன், “ விறகு எடுத்துட்டு வந்தா பத்தாது அதுக்கு தீமூட்றதுக்கு மேட்ச் பாக்ஸ் தேவப்ப்படும்ன்னு உனக்கு தெரியாத …இப்போ என்ன பண்ணூவ” என்று கேட்டவனை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அங்கு கீழே கிடந்த இரு கற்களை எடுத்து ஒன்றோடு ஒன்று வேகமாக சிறிது நேரம் தேய்த்தாள். அதன் பலனாக அந்த காய்ந்த சறுகுகள்குள் நெருப்பு பற்ற ஆரம்பித்தது. அதை கண்டவள் மகிழ்ச்சியுடன் அவனை பார்த்து சிரித்தாள். முதலில் அவள் செய்வதை வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்தவன் திடீரென்று தீ பற்றவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் அவள் சிரிப்ப்பதை கண்டவன் மனதில் இந்த இருள் சூழ்ந்த இந்த காட்டிற்குள் பிரகாசமாக அவள் முகம் அந்த நெருப்பிற்க்கு நடுவில் அவ்வளவு அழகாக தெரிந்தது. அவளின் முகத்தை இப்போது தான் அவன் தெளிவாக காண்கிறான். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய மனதில் தோன்றிய வரிகள்...


ஒளியிலே தெரிவது தேவதையா

உயிரிலே கலந்தது நீயில்லையா

இது நேசமா நெசம் இல்லையா

உன் நெனவுக்கு தெரியலையா

கனவிலே நடக்குதா கண்களும்

காண்கிறதா காண்கிறதா....



அவளுடைய கண்கள் இரண்டும் ஒரு சுழலைப் போல் அவனை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு இருந்த நேரம், “ சார் பாத்திங்களா நெருப்பு உண்டாக்க மேட்ச் பாக்ஸ் தேவையில்ல கொஞ்சம் நிதானமும் பொறுமையும் கொஞ்சம் மூலையும் இருந்தா போதும்... இப்போ பாத்திங்களா...” என்று அவனை பார்த்து சிரித்தாள். அவளுடைய குரலில் நிகழ்காலத்துக்கு வந்தவனுக்கு மீண்டும் அவள் கண்களை சந்திக்க முடியவில்லை முகத்தை வேறுபுறம் திருப்பியவன், “ நீ புத்திசாலி தான் நான் ஒதுக்கறேன் “ என்று அமைதியாக ஒப்புக்கொண்டான். இருவரும் அமைதியாக அந்த நெருப்பில் குளிர் காய்ந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு வானதிக்கு தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்தது. அவள் அந்த மண்டபத்தில் இருந்த தூணில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள். ஆதி தூங்காமல் தங்களை சுற்றி எதாவது மிருகங்கள் வருகிறதா என்று பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான். நேரங்கள் செல்ல செல்ல தூக்கம் அவனையும் தன்னுள் இழுத்தது . அவனும் மற்றுமொரு தூணில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தான். இருவரின் மனதிலும் காதல் என்னும் தீ பற்ற தொடங்கியதற்கு சாட்சியாக வானதி எரிய வைத்த நெருப்பு அமைதியாக எரிந்து கொண்டிருந்தது. அதை அவர்கள் உணர்வது எப்போது என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


காலை நேரம் எவ்வளவு விரைவில் இரவு இந்த காட்டை சூழ்ந்ததோ அவ்வளவு வேகமாக சூரியன் இந்த காட்டிற்குள் தன் கதிர்களை பரப்ப ஆரம்பித்தான். இதுவரை சில நேரம் வண்டியின் சத்தத்தில், சில நேரம் தூங்காமல் எனா இப்படி தான் பல நாட்கள் ஆதியின் பொழுது விடியும் ஆனால் இன்று அதிகாலை வேளையின் பனிக்காற்று மற்றும் பறவைகளின் கீச் கீச்சென்ற கானத்தில் அவனுக்கு அழகாக விடிந்தது. எழுந்தவுடன் அவன் கண் முன்னால் தோன்றிய பச்சை பசேல் என்ற காட்சி அவன் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இது போன்ற ஒரு அழகான விடியலை அவன் கண்டதும் இல்லை இனியும் காண்ப் போவதும் இல்லை என்று தோன்றியது. மனதில் எழுந்த புத்துணர்ச்சியுடன் சுற்றி பார்த்தவன் தன் அருகில் இருந்த வானதியை காணாமல் திகைத்தான். இவள் எங்கே சென்றாள் என்று நினைத்தப்படி எழுந்து நின்று தன்னுடைய கண்களை நாலாப்புறமும் திருப்பி பார்த்தவனின் பார்வையில் அவளுடைய பேக் அங்கு இருப்பது பட்டது , ‘ பேக் இங்க தான் இருக்கு இவ எங்கே போய் இருப்பா ‘ என்று யோசித்து கொண்டிருக்கும் போது தன் முன் கேட்ட காலடி சத்தத்தில் அது யாரென்று அறிந்தவன் கோவத்தொடு நிமிர்ந்து பார்த்தவனின் பார்வை ரசனையாக மாறியது. குளித்து முடித்து புத்தம் புது மலராக தன் முன் நிற்ப்பவளை கண்டதும் அவனின் கோவம் காணாமல் போனது.


தூக்கத்தில் இருந்து விழித்து பரப்பரப்புடன் தேடிக் கொண்டிருந்த ஆதியை பார்த்தவள், “ என்ன சார்.... என்ன ஆச்சி ...அப்படி எத காலைல எழுந்த உடனே தேடிட்டு இருக்கீங்க..” என்று கேட்டவளை கண்டு முறைத்தவன், “ எங்கயாவது போறதா இருந்தா என்ன எழுப்பி இருந்து இருக்கலாம்ல உன்ன காணனோம் தான் தேடிட்டு இருக்கேன்... ஆனா நீ ஜாலியா குளிச்சிட்டு வந்து இருக்க.... உன்ன பாத்தா பிக்னிக் வந்த மாதிரி இருக்கு ட்ரெஸ் எல்லாம் பக்காவா பாக் பண்ணி எடுத்துட்டு வந்து இருக்க... ஒரு வேள என்ன கடத்த ப்ளான் பண்ணி இருக்கியா.... “ என்று எழுந்தவுடன் அவள் இல்லாததால் ஏற்ப்பட்ட எரிச்சலில் அவளிடம் கோவத்தை காட்டினான்.


அவன் கூறியதை கேட்டவள், “ சார் நீங்க எப்பவும் இப்படி தானா இல்ல இப்ப தான் இப்படியா... இல்ல தெரியாம தான் கேக்கறேன் உங்கள மாதிரி ஒரு துர்வாசரா யாராவது கடத்த இப்படி ஒரு ப்ளான் அதுவும் என்னை நானே பிரச்சனைக்குள்ள தள்ளுற மாதிரி பன்னுவாங்களா... கோவம் வந்தா என்ன பேசறோம்ன்னு யோசிக்கவே மாட்டிங்காளா... எப்பவாவது பட்ட தான் கோவத்துக்கு மதிப்பு இல்லனா எரிச்சல் தான் வரும் “ என்று மூச்சு விடாமல் பேசியாவளை கண்டவன் தேவை இல்லாமல் டென்ஷன் ஆகி அவளை கத்திவிட்டதை உணர்ந்தவன், “ காலைல எழுந்தவுடனே காணோம்... இந்த காட்ல எங்கயாவது போயிட்டியோ ன்னு கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்...அதான் உன் கிட்ட காட்டிட்டேன்...அதனால....அது....வந்து...ச...சாரி “ என்று தயங்கியப்படி பேசியவனை கண்டு உண்மையில் வானதிக்கு சிரிப்பு தான் வந்தது.


வானதி, “ நீங்க முன்ன பின்ன யார் கிட்டயும் சாரி கேட்டு இருக்க மாட்டிங்க போல இருக்கு... பரவால விடுங்க இனிமே அடிக்கடி கோவப்படாதிங்க சரியா.... நான் எப்பவும் சீக்கிரம் எழுந்துடுவேன்.. நீங்க வேற நல்லா தூங்கிட்டு இருந்தீங்க அதான் எழுப்ப வேண்டாம்ன்னு குளிக்க போனேன்... அதுவும் இல்லாம இது மலைப்பகுதி இங்க இருந்து வெளிய எங்கயாவது போனோம்ன்னா எப்பவும் ஒரு ட்ரெஸ் நான் எடுத்துட்டு தான் போவேன்... அது இப்போ எனக்கு யூஸ் ஆயிடுச்சு ... சரி நேரம் வேற ஆகுது நீங்களும் போய் குளிச்சிட்டு வாங்க....இங்க பக்கத்துல ஒரு அருவி இருக்கு ரொம்ப அழகா இருக்கும் இங்க யாரும் வர மாட்டாங்க நீங்க தாராளமா குளிக்களாம்... இந்தாங்க இது என்னோட துண்டு தான் யூஸ் பண்ணிக்கொங்க “ என்று துண்டை நீட்டியவளின் கையில் இருந்து வாங்கினான். அவர்கள் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரம் அழைத்து சென்றவள், “ இங்க இருந்து கொஞ்சம் உள்ள போனா அருவி வந்துடும்... இந்த ஓடைய பாத்துட்டே நேரா போங்க “ என்று வழி காட்டியதை கேட்டு கொண்டு அந்த ஓடையை ஒட்டியப்படி இருந்த பாதையில் நடந்து சென்றான்.


அவனை அனுப்பி விட்டு முன்னே இருந்த இடத்திற்கு வந்தவள் தன்னுடைய துணியை பேக்கில் அடுக்கி கொண்டிருந்த போது அவனுடைய வாட்ச் அங்கு இருப்பதை பார்த்தவள் அதை கையில் எடுத்து, “ என் கையில வச்சிக்க சொல்லிட்டு போனா என்ன... இப்படியா கீழ வச்சிட்டு போவாங்க காணாம போய்ட்ட என்ன பன்றது... சரி நம்ம பேக் உள்ள வைப்போம் அப்பறம் கொடுத்துக்கலாம் “ என்று அதை தன்னுடைய பையில் துணிக்கு நடுவில் வைத்தாள்.


அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனை அழைத்து சென்ற இடத்திற்கு சென்றவள் அங்கிருந்த ஓடையில் இருந்த பெரிய பாறையின் மீது அமர்ந்து கொண்டு தன்னை சுற்றியுள்ள சூழலை ரசிக்க ஆரம்பித்தாள். இயற்கையை ரசிக்க ஆரம்பித்தவுடன் மனம் லேசாகவும் சந்தோசமாகவும் மாறியது. அந்த சூழ்நிலையை காணும் போது அவளுக்கு பாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தன் மனதில் தோன்றிய பாடலை பாட ஆரம்பித்தாள்.


புல்வெளி புல்வெளி தன்னில்

பனித்துளி பனித்துளி ஒன்று

தூங்குது தூங்குது பாரம்மா

அதை சூரியன் சூரியன் வந்து

செல்லமாய் செல்லமாய் தட்டி

எழுப்புது எழுப்புது ஏனம்மா

இதயம் பறவை போலாகுமா

பறந்தால் வானமே போதுமா

நான் புல்லில் இறங்கவா

இல்லை பூவில் உறங்கவா



என்று அவள் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள். அங்கு அருவியில் குளித்து முடித்தவன் காதில் ஒரு அழகிய குரலில் பாடல் ஒலித்தது. அதில் அவன், “ இந்த காட்டுக்குள்ள யாரு இவ்வளவு அழகா பாடுறது...” என்று எண்ணியவன் வேகமாக அங்கிருந்து சிறிது தூரம் சுற்றி பார்த்து கொண்டே நடந்தவன் கண்ணில் அந்த அழகிய ஒடையின் ஒரமாக இருந்த பாறையின் மீது அமர்ந்தப்படி பாடிய வானதியே தென்ப்பட்டாள். தன்னை மறந்து அவள் பாடிக் கொண்டிருந்த தோற்றம் அந்த குரல் இரண்டும் அவன் மனதில் அழியாத ஓவியமாக பதிந்தது. அவள் கண்ணில் படாதவாறு மறைந்து நின்று அவள் பாடுவதை ரசிக்க ஆரம்பித்தான்.


துள்துள்துள் துள்துள்துள்துள்ளென

துள்ளும் மயிலே

மின்னல் போல் ஓடும் வேகம்

தந்தது யாரு

ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்ஜலென

ஓடும் நதியே

சங்கீதா ஞானம் பெற்று தந்தது யாரு

மழையன்னை தருகின்ற

தாய்ப்பால் போல்

வழியுது வழியுது வெள்ளை அருவி

அருவியை முழுவதும் பருகி விட

ஆசையில் பறக்குது

சின்னக்குருவி...

பூவண்ணமே எந்தன் மனம்

புன்னகையே எந்தன் மதம்

வானம் திறந்திருக்கு பாருங்கள்

எனை வானில் ஏற்றிவிட

வாருங்கள்....



கண்களை மூடி அவள் பாடலை ரசித்துக் கொண்டிருந்தவன் பாடல் நின்றவுடன் கண்களை திறந்து பார்த்தான். அங்கு பாறையின் மீது அமர்ந்திருந்தவள் ஒடுகின்ற நீரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பின்னாடி ஒரு யானை வந்து நின்றதை கண்டு அவன் பயந்து கொஞ்சம் அவள் அருகில் வேகமாக வந்தவன், “ ஏய்...இங்க பாரு அங்க இருந்து எழுந்து வா “ என்று கத்தினான்.


திடீரென்று தன் வலதுப்பக்கத்தில் கேட்ட குரலில் திரும்பி பார்த்தவள் அவன் கத்தியதை கேட்டதும் வேகமாக எழுந்த போது அவள் கால் அந்த பாறையின் மீது இருந்த நீரில் வழுக்கி விழ இருந்தாள். அவள் விழுவதை கண்டவன் பதட்டத்துடன் அவள் அருகில் செல்வதற்குள் அங்கு நடந்ததை பார்த்தவன் கண்கள் ஆச்சிர்யத்தில் விரிந்தது.


எங்கே விழுந்து விடுவோமோ என்று நினைக்கும் நேரம்... அவள் விழுவதற்குள் அவள் இடதுப்பக்கம் இருந்த யானை தன் தும்பிக்கையால் அவளை தூக்கி புல் தரையில் இறக்கி விட்டது. அதை பார்த்தவள் கண்களில் பாசத்துடன் அந்த யானையை வருடி கொண்டிருந்த போது, “ சீக்கிரம் இந்தப் பக்கம் வா இன்னும் அங்க என்ன பாத்துட்டு இருக்க “ என்று ஆச்சரியத்தில் இருந்து வெளியே வந்தவன் வேகமாக அவளை தன் பக்கம் அழைத்தான்.


ஆனால் வானதி அவன் கூறியதை கேட்டவுடன், “ சார் பயப்படாதிங்க இவன் ஒன்னும் பண்ண மாட்டான். நீங்க பக்கத்துல வாங்க “ என்று அவனிடம் கூறியவள். அந்த யானையின் புறம் திரும்பி அதன் தும்பிக்கையை பாசமாக வருடிக் கொண்டே, “ கணேசா.... எப்படி இருக்க... நான் உன்ன பாக்கத்தான் நேத்தே வந்தேன். இப்போ கூட உன்ன கூப்பிடனும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.... அதுக்குள்ள நீயே வந்துட்ட “ என்று கேட்டாள். அதற்கு யானையும் அவளின் முகத்தை தான் தும்பிக்கையால் மோப்பம் பிடித்தது


இதை பார்த்து கொண்டிருந்த ஆதி ஒன்னும் புரியாமல் நின்று கொண்டிருந்தான். அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அவனின் புறம் திரும்பி பார்த்தவள் அவன் அசையாமல் நிற்பதை பார்த்து, “ சார்... நான் நேத்து சொன்னேன்ல என் தம்பி அது இவன் தான் பெயர் கணேசன். இவனுக்கு பத்து வயசு தான் ஆகுது. ரொம்ப அழகா இருக்கான்ல “ என்று கூறியவளை கண்டவன், “ என்ன இந்த யானை தான் உன் தம்பியா.... “ என்று அதிர்ச்சியுடன் கேட்டவனை பார்த்த கணேசன் தன்னுடைய காதை ஆட்டி, தலையை குலுக்கி பிளிறியது. அந்த சத்தத்தை கேட்ட ஆதிக்கு சிறிது பயம் தோன்றியது. அதற்குள் வானதி, “ கணேசா... கோவப்படாத அவர் நமக்கு தெரிஞ்சவர் தான். அவருக்கு கைக்குடு “ என்றவள் ஆதியின் புறம் திரும்பி, “ சார் நீங்களும் கைய குடுத்து அறிமுகம் ஆகிக்கோங்க “ என்று கூறினாள். அவள் கூறியப்பிறகு கணேசனும் அமைதி அடைந்து அவள் கூறியதை போல் செய்தது. ஆனால் ஆதி இன்னும் அவள் குடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளி வராததால் அவர்களை பார்த்தப்படியே நின்றுக் கொண்டிருந்தான். இது வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள் அவன் அருகில் வந்து அவன் கையை கணேசனிடம் நீட்டினாள். அவள் நீட்டுவதை பார்த்த கணேசனும் தான் தும்பிக்கையால் அவனின் கையை பிடித்து மோப்பம் பிடித்தது. தன் கையில் ஏற்ப்பட்ட கூச்சத்தில் அவன் உடம்பு சிலிர்த்தது. வானதியிடம் அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் தன் கண்களால் அவளிடம் கேட்டான்.


அதை சிரிப்புடன் பார்த்தவள், “ அவனுக்கு உங்கள பிடிச்சிருக்கு... இனி அவன் உங்கள எங்க பாத்தாலும் நியாபகம் வச்சிப்பான் “ என்றாள்.


ஆதி, “ நீ என்ன சொல்ற அது எப்படி ஒரு தடவ பாத்த உடனே நியாபகம் வச்சிக்க முடியும் “


வானதி கணேசன் பக்கத்தில் சென்று அவனை பார்த்து கொண்டே, “ சார் பொதுவா மனிதர்களுக்கு அப்பறம் யானைக்கு தான் நிறைய நியாபக சக்தி இருக்கும். அது மட்டும் இல்லாமல் மோப்ப சக்தியும் அதிகம். உங்க வாசனையை வச்சே கண்டு பிடிச்சிடுவான். இவங்களுக்கு கேட்கும் திறனும் அதிகம். அவங்க இருக்க ஏரியாவுள எங்க உங்க குரல் கேட்டாலும் நீங்க தான்ன்னு கண்டுப்பிடிச்சிடுவாங்க. இப்போ கூட நான் பாடுனதும் என் குரல கேட்டு என்னை பாக்க வந்துட்டான் பாத்திங்களா.... அப்பறம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குரல் வேறுப்பாடு மொழிகளுக்கு இடையேயான வேறுப்பாடு எல்லாமே யானையால இனம் கண்டுப்பிடிக்க முடியும் “ என்று கூறியவளை கேட்டு பிரம்மிப்புடன் பார்த்தான்.


வானதி, “ இதுக்கே அசந்துட்டா எப்படி இன்னும் நிறைய இருக்கு மனிதர்களை போல யானையும் உணர்ச்சி வசப்படக்கூடிய உயிரினம். உறவினர்கள் இறந்துட்டா நாம இறுதி சடங்கு செய்றது மாதிரி இவங்க கூட்டத்துல யாராவது இறந்துட்டா மத்த எல்லா யானைகளும் சேர்ந்து இறுதி சடங்கு செய்வாங்க. சந்தோசமாக இருந்தாலும் அதக் கொண்டாடுவாங்க. முக்கியமா நமக்கு இருக்க மனநோய் இவங்களுக்கும் இருக்கு. தன்னுடைய துணை இறந்துட்டா அந்த வருத்ததுலலேயே இன்னொரு துணையும் இறந்துடும். உயிர் போற வலியே வந்தாலும் யானை அலறாது துடிக்காது. ஒருத்தவங்கல பாக்கணும்னா முந்நூறு கிலோ மீட்டர் தூரம் கூட தேடி போவாங்க. இப்படி சொல்லிட்டே போலாம்.... என்ன ஒரு அழகான படைப்பு இல்ல. எனக்கு தெரிஞ்சி கடவுள் நல்ல மனநிலமைல இருக்கும் போது படைச்சிருப்பார்ன்னு தோணும் “ என்று தன்னை மறந்து கூறிக் கொண்டிருந்தாள்.


அவள் கூறியதை கேட்டப்பிறகு ஆதிக்கு யானையின் மீது ஒரு பெரிய மரியாதையே எழுந்தது. பாசமாக அவர்கள் பக்கம் திரும்பினான் ஆனால் அவர்கள் ஒரு தனி உலகத்தில் இருந்தனர். தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி கொண்டிருந்தனர்.அதை சிரிப்புடன் பார்த்தவன் மனதில் இந்த உலகத்தில் கூடப்பிறந்தவர்கள் மீதே பாசம் இல்லாத போது இவள் இந்த யானையை தன்னுடைய தம்பியாக எண்ணி பாசமாக இருப்பதை கண்டு ஆச்சர்யமாக இருந்தது. அவன் இது வரை அவன் தங்கையின் மேல் பாசமாக இருந்தாலும் அதை அவன் காட்டியது இல்லை இங்கு நடந்ததை பார்க்கும் போது இனி அதுப்போல இல்லாமல் தன்னிடம் அன்பு செலுத்துபவர்கள் இடமாவது கொஞ்சம் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன். இவள் நான் நினைத்தத்தை போல் இல்லாமல் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக தெரிவதை போல் அவனுக்கு தோன்றியது.


வானதி, “ சரி கணேசா நேரம் ஆயிடுச்சு இவர வேற நான் பத்திரமா கூட்டிட்டு போகணும்... அதுவும் இல்லாம இனிமே என்னால அடிக்கடி உன்னை பாக்க வர முடியாது “ என்று கூறியவுடன் கணேசன் வருத்தத்துடன் அவளை விட்டு வேறு புறம் திரும்பி கொண்டான். அங்கு நடப்பதை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தான் ஆதி.


வானதி வேகமாக அவன் முன் சென்று தும்பிக்கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, “ கோவப்படாத கணேசா.... உனக்கு எல்லாமே தெரியும் போன தடவ வந்த போது நான் எல்லாத்தையும் சொன்னேன்ல... இப்போ நான் இங்கயிருந்து போயே ஆகனும் வேற வழியில்லை... நீயும் என்னை புரிஞ்ச்சிக்கலனா எப்படி... எனக்கு உன்ன விட்டா வேற யாரும் இல்லை “ என்று கண்ணில் கண்ணீரோடு பேசியவளை கண்ட கணேசன் கலங்கிய கண்களோடு அவளின் கண்ணீரை தன் தும்பிக்கையால் துடைத்தது. வானதியும் அவனின் கண்ணீரை துடைத்து விட்டு அவனை அணைத்து கொண்டாள். அதை பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் கண்களும் லேசாக கலங்கியது.


வானதி, “ நீ கவலப்படாத நான் என்னால முடியும் போது எல்லாம் உன்ன பாக்க வருவேன்...ஏன்னா என்னால உன்னை பாக்காம இருக்க முடியாது... அது உனக்கே தெரியும்ல.... சரி அங்க உன் அம்மா வெயிட் பன்றாங்க நீ போ... நானும் கிளம்புறேன் “ என்று அவள் பேசுவதை கேட்ட ஆதியும் அவர்கள் அருகில் வந்து, “ நானும் உன்ன வந்துப்பாக்குறேன்... இப்போ நாங்க கிளம்புறோம்” என்று அவனை தன் கைகளால் வருடியப்படி கூறினான்.


வானதியும் அவனை பிரிந்து இரண்டு அடி எடுத்து வைத்தவளை கணேசன் தன் தும்பிக்கையால் போக விடாமல் பிடித்து அழுகும் குரலில் பிளிறியது. அதைக் கேட்டவள், “ கணேசா... அக்காவா அழ வைக்காத நல்ல பிள்ளையா என்ன வழி அனுப்பி வைக்கனும்... உனக்கு நான் எதுவும் தரல அடுத்த முறை வரும் போது உனக்கு பிடிச்சது எல்லாம் வாங்கிட்டு வரேன் சரியா “ என்று கூறியவளின் கையை விட்டு விட்டு தலையின் மீது ஆசிர்வாதம் செய்தான் கணேசன். அதை ஏற்றவள் தன்னை தூக்குமாறு செய்கை செய்தால் அவனும் அவளை தும்பிக்கையால் தூக்கியவுடன் அவனின் நெத்தியில் முத்தம் வைத்தாள்.பிறகு கீழே இறங்கியவள் அவனிடம் இருந்து விடைப்பெற்று சென்று விட்டாள். கணேசனும் தன் அன்னையுடன் அங்கிருந்து காட்டிற்குள் சென்று மறைந்தனர். இனி வானதி வந்தால் மட்டுமே கணேசன் வருவான்.


தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு இருவரும் காட்டை விட்டு வெளியே செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தனர். சிறிது தூரம் சென்ற பிறகும் அமைதியாகவே நடந்தனர். இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். வானதி தன்னுடைய உறவான கணேசனை பிரிந்த வருத்தத்தில் இருந்தாள். ஆதியின் மனநிலை முற்றிலும் வேறாக இருந்தது. இங்கு வரும் போது இருந்தவனை விட செல்லும் போது அவனுள் நிறைய மாற்றங்கள். வானதியோடு இருந்த இந்த ஒரு நாளை அவனால் மறக்கவே முடியாது என்று அவனுக்கு தோன்றியது. இவளை போல் ஒருத்தியை இதுவரை அவன் கண்டதும் இல்லை இனி காணப் போவதும் இல்லை. அவளுடன் நடந்து கொண்டிருக்கும் பாதை இன்னும் நீண்டுகொண்டே செல்லாத என்ற எண்ணம் அவனுக்கு தோன்றும் போது இருவரும் காட்டை விட்டு வெளியே வந்து விட்டனர்.


சூரியனின் வெளிச்சம் முகத்தின் மேல் பட்டவுடன் சுயநினைவுக்கு வந்தவள், “ சார்... காட்டை விட்டு சீக்கிரமா வெளிய வந்துட்டொம் போல அதுவே எனக்கு தெரில... ஒரு வழியா உங்கள கூட்டிட்டு வந்து இங்க விட்டுட்டேன் இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு... என்னால தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் அதுக்காக என்னை மன்னிச்ச்சிடுங்க.... இனிமே நம்ம சந்திப்போமான்னு தெரியல இருந்தாலும்.... உங்க வாழ்க்கை சந்தோஷமா அமைய என்னுடைய வாழ்த்துகள் “ என்று சொல்லி தன்னுடைய கையை அவனை நோக்கி நீட்டினாள்.


ஆதி, “ நீ சொன்ன மாதிரி என்னை கூட்டிட்டு வந்து விட்டுட்ட..... உனக்கும் என்னுடைய வாழ்த்துகள். இப்போவாவது உன் பெயர் என்னன்னு சொல்ல கூடாத “ என்று அவள் கையை பிடித்துக் கொண்டே கேட்டான். அவள் கையை பிடித்த அந்த நொடி அவனுக்குள் மின்சாரம் பாய்ந்ததை போல் இருந்தது. அவள் பெயரையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆர்வமாக இருந்தது.


அவன் கையை பிடித்தவுடன் அவளுக்கும் ஏதோ ஒரு உணர்வு தோன்றியது. அதுவும் இல்லாமல் அவன் பெயரை கேட்டதும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே, “ நம்ம சந்திப்பு இந்த ஒரு தடவையோட முடிஞ்சிடுச்சின்னா ரெண்டும் பேரும் பெயர தெரிஞ்சி கிட்டு என்ன பண்ண போறோம். ஒரு வேள.... விதி நம்ம திரும்பவும் சந்திக்கனும்ன்னு இருந்தா அப்போ நான் என் பெயர் என்ன... எங்க இருக்கேன்ன்னு எல்லாத்தையும் சொல்றேன்.... நீங்களும் சொல்லுங்க... இப்போ நம்ம இப்படியே பிரிஞ்சி போறது தான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது..... எப்பவும் இந்த நாளை என்னால மறக்கவே முடியாது “ என்றாள் தெளிவாக. அவள் கூறுவதும் அவனுக்கு சரியென்று தான் பட்டது. ஒரு முறை சந்தித்தவுடன் ஏற்ப்படும் இந்த உணர்வுக்கு என்ன பெயர் வைப்பது என்று அவனுக்கும் தெரியவில்லை. அதனால் இதை இத்துடன் நிறுத்துவது தான் சரியென்று தோன்றியது.


ஆதி, “ நீ சொல்றதும் சரி தான் என்னாலையும் இந்த நாளா மறக்கவே முடியாது....சரி பாத்து பாத்திரமா போயிடுவல “ என்று கேட்டதற்கு ஆமென்று தலையசைத்தவளைப் பார்த்து, “ சரி அப்போ நான் கிளம்புறேன் “ என்று கூறி இருவரும் விடை பெற்றுக் கொண்டு எதிர் எதிர் திசையில் நடந்து சென்றனர்.

அவர்கள் இருவரும் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள் என்று தெரியாமல் பிரிந்த இருவரும் மீண்டும் விதியின் வசத்தால் ஒன்று இணைவார்களா....அதை காலம் தான் தீர்மானம் செய்ய வேண்டும்....அதுவரை நாமும் காத்திருப்போம்....


இது இது இது இது காதலா

என் இதயத்திலே ஒரு கூக்குரல்

அது அது அது அது காதல்தான்

என தடவியதே என் பூவிரல்....

பூக்கூடை போலே தான்

என் வசம் மோதினாய்

கூழாங்கல் போலே தான்

உடைகிறேன் ஏந்தினாய்

இதயம் எங்கே இயங்கும் என்று

உன்னால் கண்டேன் இப்போது....


உந்தன் உயிரோடு உயிர் சேரும்

ஓர் நொடி

வாழ்வே முடிந்தாலும் அது

போதும் சேரடி.....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்து திரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்.....


.
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ளாஷ் பேக் என்னால முடிஞ்ச வரைக்கும் நான் நல்லா குடுக்க ட்ரை பண்ணி இருக்கேன்.... உங்களுக்கு பிடிக்கும்ன்னு நினைக்கறேன் மறக்காமல் உங்கள் கருத்துக்களை எனக்கு சொல்லுங்க ப்ரெண்ஸ்...
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 8

இன்று

வானதி இல்லம்....

தன் வாழ்க்கையில் நடந்த அந்த முக்கியமான தருணத்தை மனம் திறந்து மித்ராவிடம் கூறிக் கொண்டிருந்தாள் வானதி. அவள் சொன்னதை முழுதாக கேட்ட மித்ரா, “ அப்படினா இந்த வாட்ச் அவரோடது தானா.... இந்த மூணு வருஷத்துல ஒரு தடவ கூட அவர நீ சந்திக்கவே இல்லையா “ என்று கேட்டவளை நிமிர்ந்து பார்த்து , “ நானும் அந்த நாளுக்காக தான் காத்துட்டு இருக்கேன் “ என்று கூறியவளை கண்ணில் குறும்புடன் , “ அப்படினா அவர் மேல உனக்கு ஏதோ இருக்கு போல அதான் மூணு வருஷம் ஆனதுக்காப்புறம் கூட இன்னும் அவர உன்னால மறக்கவே முடியல அப்படி தான ஆரூ “ என்று கேட்டவளை கோவமாக முறைத்தவள், “ மித்ரா.... நீ தேவையில்லாதது எல்லாம் பேசிட்டு இருக்க. நான் அப்ப இருந்த சூழ்நிலையில அவருக்கு நன்றி சொல்ல மறந்திட்டேன். பாதி வழி போனதுக்காப்புறம் நியாபகம் வந்து திரும்பி அங்க போய் பாக்கும் போது அவர் அங்க இல்ல. அதுவுமில்லாமல் அவரோட பொருள் என்கிட்ட இருக்கு... அதனால தான் அவர பாக்கணும்ன்னு சொன்னேன் தவிர நீ நினைக்கற மாதிரி என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லை புரிஞ்சிதா “ என்று அங்கிருந்து எழுந்து ஜன்னல் ஓரம் சென்று நின்றுக் கொண்டாள்.

அவள் கோவமாக எழுந்து சென்றதை பார்த்தவள், “ ஆரூ நான் சும்மா தான் சொன்னேன்.... அப்படியே அவர் மேல உனக்கு எதாவது இருந்தா தான் என்ன தப்பு .... உன் உயிரையும் மானத்தையும் காப்பாத்தி இருக்கார்...அவர் கூட ஒரு நாள் முழுக்க இருந்து இருக்க அவரப்பத்தி உனக்கு ஓர் அளவு புரிஞ்சிருக்கும்... அந்த இடத்துல வேற யாராவது இருந்திருந்தா அப்ப இருந்த சூழ்நிலையை பயன்படுத்தி இருப்பாங்க ஆனா அவர் அப்படி எதுவும் செய்யல சோ எனக்கு அவர் நல்லவர் மாதிரி தான் தெரிது. அப்படிப்பட்டவர் உன் வாழ்க்கைக்குள்ள வந்தா நல்லா இருக்கும்ன்னு நினைச்சி தான்...” என்று தன் மனதில் உள்ளதை சொல்லிக் கொண்டு இருந்தவள் அவளுடைய கூர்மையான பார்வையில் அமைதியாக தலை குனிந்துக் கொண்டாள்.


வானதி, “ மித்ரா... எனக்கு யாரோட துணையும் தேவையில்ல... என்ன பாத்துக்க எனக்கு தெரியும் அப்படி இல்லனா நீ இருக்கல அது போதும் வேற யாரும் எனக்கு வேண்டாம். இப்போ என்னோட எண்ணம் எல்லாம் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக் கொடுக்கனும்ன்னு தான் இருக்கு... வேற எதப்பத்தி நினைக்கவும் எனக்கு விருப்பம் இல்லை. இனி இதப்பத்தி என்கிட்ட எதுவும் பேசாத நடக்கறது எதுவோ அது நடக்கட்டும் இப்ப நேரம் ஆயிடுச்சு சாப்பிட போலாம் வா “ என்று கூறிவிட்டு அந்த வாட்சை பத்திரப்படுத்தியப்பின் அந்த அறையை விட்டு வெளியே சென்று விட்டாள்.

அவள் சென்றதை கண்ட மித்ரா, “ இவ மட்டும் என்னப்பத்தி கவலப்படுவா நான் மட்டும் இவளுக்கு எதுவும் செய்ய கூடாதா.... அப்படி எல்லாம் என்னால இருக்க முடியாது. மூணு வருஷம் ஒருத்தர்க்காக காத்துட்டு இருக்கானா எதுவும் இல்லாமையா இருக்கும். கடவுளே அவர எப்படியாவது எங்க கண்ணுல காட்டு “ என்று மேலே பார்த்து புலம்பிக் கொண்டிருந்தவள் காதில், “ அங்க என்ன தனியா பேசிட்டு இருக்க மித்ரா... சீக்கிரம் வா இங்க “ என்று கத்தியவள் குரலை கேட்டவுடன், “ இதோ வரேன் ஆரூ “ என்று அறையை விட்டு வெளியே ஓடினாள்.


வர்மா பேலஸ்...


கண்களில் காதல் மின்ன அன்று தன்னவளை சந்தித்த அந்த நாளை பற்றி கூறிக் கொண்டிருந்தவனை பார்த்த ஷக்தி, “ ஏன்டா ஒரு தடவ தான நான் இல்லாம நீ வெளியூர் போன அதுக்குள்ள இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கா... இவ்வளவு தான இல்ல வேற எதுவும் இருக்கா இப்பவே சொல்லிடுடா மொத்தமா கேட்டுக்குறேன்.... தனித்தனியா ஷாக் குடுக்காத என்னோடது பிஞ்சி மனசு தாங்காது “ என்று புலம்பியவனை கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.


அவனுடைய சிரிப்பை பார்த்தவன், “ நீ இப்படி சிரிக்கறத பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்குடா.... நீ எப்பவும் இப்படியே இருக்கணும் அதான் எங்களுக்கு வேணும் “ என்றவனிடம், “ அதுக்கு அவ என் கூடவே இருக்கணும் இந்த வாழ்க்கை முழுக்க “ என்றான்.


ஷக்தி, “ சரி அதெல்லாம் இருக்கட்டும்.... அந்த பொண்ணு பெயர் என்ன, இப்போ எங்க இருக்க அப்படின்னு உனக்கு எதுவும் தெரியாது....அப்படி இருக்கும் போது இன்னிக்கு நீ பாத்த பொண்ணு தான் அவன்னு எப்படி சொல்ற...இத்தனைக்கும் அந்த பொண்ணு முகத்த துப்பட்டாவால மறைச்சி இருந்தது....அப்பறம் எப்படி அவத்தான்ன்னு இவ்வளவு உறுதியா எப்படி சொல்ற “ என்று குழப்பத்துடன் கேட்டவனை பார்த்த ஆதி, “ அவ குரல என்னால என்னைக்கும் மறக்கவே முடியாது. நான் தூங்கும்போது கூட அவ முகம் தான் என் கண் முன்னால வரும்.... அந்த குரல் எப்பவும் என் காதில கேட்டுட்டே இருக்கு அப்படி இருக்கும் போது எனக்கு தெரியாத அந்தக் குரலுக்கு சொந்தக்காரி யாருன்னு... அது மட்டுமில்லாம வேற ஒன்னு இருக்கு அதைப் பார்த்த அப்பறம் தான் இன்னும் கன்போர்ம் ஆச்சு “ என்று கூறினான்.


ஷக்தி, “ என்னடா சொல்ற எனக்கு ஒன்னும் புரில கொஞ்சம் தெளிவா தான் சொல்லேன்...இன்னிக்கு நீ என்ன குழப்பனும்ன்னு ஒரு முடிவோடு இருக்க போல. அப்படி எத வச்சி கண்டு பிடிச்ச “.
ஆதி, “ அது...அது வந்துடா... அவ வலது கால்ல ஆறு விரல் இருக்கும் டா அது ரொம்ப அழகா இருக்கும் சின்னதா....அத நான் காட்டுல இருக்கும் போதே நோட்டிஸ் பன்னேன்... அது இப்போ எனக்கு யூஸ் ஆயிடுச்சு...அவ என் பக்கத்துல இருக்கும் போது என் மனசு அடிச்சி சொல்லுச்சி அது அவ தான்ன்னு.... இப்ப பாத்தியா அது உண்மை ஆயிடுச்சு “ என்று கூறிய அவன் முகத்தில் இருந்த சந்தோஷத்தை அவன் இதுவரை பார்க்காதது அதை பார்த்த ஷக்திக்கு தோன்றியது அவனுடைய மகிழ்ச்சி அந்த பெண்ணிடம் இருக்கிறது என்று அவளை எப்படியாவது தேடிக் கண்டு பிடித்து இவனிடம் சேர்க்க வேண்டும் என்று அவன் மனதில் உறுதி எடுத்துக் கொண்டான். அதே முடிவோடு , “ நீ சொல்றது எல்லாம் சரி ஆதி... அந்த பொண்ணு மேல இவ்வளவு பாசம் வச்சிருக்க நீ ஏன் இந்த மூணு வருஷமா அவள தேடல....நீ நினைச்சா அவள பத்தின எல்லா விஷயங்களையும் தெரிஞ்ச்சிருக்க முடியும் அப்படி இருக்கும் போது நீ ஏன் அதை செய்யல “ என்றவனை ஒரு பார்வை பார்த்து விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து ஜன்னல் ஓரமாக அமைதியாக நின்றான்.


சிறிது நேரத்திற்குப் பின் பெருமூச்சு உடன், “ ஒரே நாள்ல சந்திச்ச பொண்ணு மேல எனக்கு வந்தது ஒரு ஈர்ப்பா தான் இருக்கணும்ன்னு என் அறிவு சொல்லுச்சி ....கொஞ்ச நாளுக்கு அப்பறம் அவள மறந்துடுவேன்ன்னு நினைச்ச்சென்.... இங்க வந்ததுக்காப்புறம் அவள மறக்க தான் நானும் முயற்சி செஞ்சேன்...... அதுக்காப்புறம் கொஞ்ச நாள்லயே அப்பாவும் இறந்துட்டார்.அந்த இழப்புல இருந்து வெளிய வந்து நம்ம குடும்ப தொழில் அப்பா பாத்துட்டு இருந்த எல்லாத்தையும் டேக் ஒவெர் பண்ணி.... இதுக்கு நடுவுல உங்க கல்யாணம் அப்பறம் பிஸ்னஸ்ல என்ன தக்க வச்சிக்கறதுன்னு ..... இப்படியே வருஷங்கள் ஒடி போய்டுச்சி..இதுல எனக்கு அவ மேல இருக்க உணர்வுக்கு பேர் என்னன்னு தெரிஞ்சிக்க தோணல... அவள நினைக்கும் போது என் மனசுல உறுவாகுற அந்த நிம்மதிய இழக்க கூடாதுன்னு நான் அப்படியே விட்டுடேன். என்ன நடக்கனும்ன்னு இருக்கோ அது நடக்கட்டும்ன்னு வாழ்க்கை போற பாதைல நானும் போகலாம் அப்படின்னு முடிவெடுத்து அமைதியா இருந்தேன் “ அன்று தன் மனதில் தோன்றிய எண்ணங்களை அவனிடம் மறைக்காமல் உறைத்தான்.


அவன் கூறிய அனைத்தையும் கேட்ட ஷக்தி, “ நீ சொல்றது எல்லாம் சரி....இப்போ எப்படி அந்த பொண்ணு மேல உனக்கு காதல் வந்தது....அதை நீ எப்ப உணர்ந்த அத முதல்ல சொல்லு “ என்று தன்னை தெளிவுபடுத்தி கொல்லுவதற்க்காக கேட்டான்.


ஆதி, “ உனக்கே தெரியும் நான் என்னோட மைன்ட் ரிலாக்ஸ் பன்னனும்னா பைன்டிங் பன்றது வழக்கம்ன்னு அப்படி நான் வரையும் போது எல்லாம் என்னையும் அறியாமல் என் கை வரையறது எல்லாம் அவளோட முகம் தான் அதை பார்த்த அந்த நிமிஷம் என் மனசுகுள்ள அவ எவ்வளவு நிறைஞ்சி இருக்கான்னு தெரிஞ்சிக்கிட்டேன் .... நீயும் ஷர்மியும் கல்யாணத்த பத்தி பேசும் போது எல்லாம் அவ முகம் தான் என் கண்ணு முன்னாடி வரும்.....எந்த பொண்ணோட முகமும் என் மனசுல இந்த அளவுக்கு ஆழமா பதிஞ்சது இல்ல.... அவக் கூட இருக்கும் போதும் சரி அவள பத்தி நினைக்கும் போதும் சரி என் மனசுல சொல்ல முடியாத ஒரு சந்தோசம், நிம்மதி இது ரெண்டுமே தோணும். எதனால இப்படி ஒரு உணர்வு இருக்கு அப்படின்றத தெளிவு படுத்திக்கறதுக்காக தான் எனக்கு நானே ஒரு டெஸ்ட் வச்சேன் “ என்று சொன்னவனை புரியாமல் பார்த்தவன், “ அப்படி என்ன டெஸ்ட் அது “ என்று கேட்டான்.


அதற்கு ஆதி தான் கண்களை மூடி ஜன்னலின் மீது சாய்ந்து நின்றவன், “ அவ என்கிட்ட ஒன்னு சொன்ன விதி நம்ம சந்திக்கனும்ன்னு இருந்தா அப்ப நாம சந்திக்கலாம்ன்னு அதனால தான் அந்த விதிக்கிட்டயே என் முடிவையும் கொடுத்திட்டேன்....அது என்னன்னா ஒரு ரெண்டு நாளுக்குள்ள அவள நான் பார்க்கணும்ன்னு அப்படி இல்லனா இப்படியே இருந்திடலாம்ன்னு. மனசுக்குள்ள ஒரு பயம் இருந்திட்டே இருந்தது. எங்க என் கண்ணுல படாமயே போயிடுவாளோன்னு ...ஆனா பாறேன் இன்னிக்கு தான் அந்த ரெண்டாவது நாள் அது முடியறதுக்குள்ள நான் அவள பாத்துட்டேன்....அதனால இந்த ரெண்டு நாள்ள எனக்கு ஒன்னு புறிஞ்சிது அவள மறக்கறதுன்றது என்னால முடியாத காரியம்..... அதனால இனி என்ன ஆனாலும் என் வாழ்க்கை அவளோட தான் அப்படின்னு நான் முடிவு பன்னிட்டேன் “ என்று உணர்ச்சிகரமாக கூறிக் கொண்டிருந்தவனை கண்ட ஷக்தி எழுந்து வந்து ஆதரவாக அவனின் தோள் மேல் கையை வைத்தான்.


அவனின் தொடுகையில் கண்களை திறந்தவன், “ இந்த மூணு வருஷத்துல அவ மேல எனக்கு இருக்க உணர்வு அன்பா பாசமா இந்த வான் அளவு உயர்ந்து இருக்கு.... அது....அது எப்படி சொல்றதுன்னு தெரில....நான் அவ மேல வச்சிருக்க அன்பை காதல் என்ற மூணு வார்த்தையில அடக்க முடியாது ஆனா அப்படி சொன்னா தான் உனக்கு புரியும்னா....ஆமா நான் அவளை காதலிக்குறேன்.....” என்று அவன் முகத்தை பார்த்து கத்தியவனை கண்ட ஷக்தி, “ ரிலாக்ஸ் ஆதி... எனக்கு புரிது... இனிமே சிஸ்டரா கண்டு பிடிக்கறது மட்டும் தான் நம்ம வேலை. என்ன அப்படி பாக்குற உன்னோட மனைவி என் சிஸ்டர் தான அதான் அப்படி சொன்னேன் சரியா. உடனே அவங்கள தேடுற வேளைய பாக்கலாம் “ என்று கூறியவனை பார்த்து சிரித்தவன் அவனை அழைத்துக் கொண்டு தன்னுடைய அறைக்குள் சென்றான்.


இது வரை யாரும் அவனுடைய படுக்கை அறைக்குள் சென்றது இல்லை. அதுக்கு முன்னால் இருக்கும் ஆபீஸ் ரூம் வரைக்கும் தான் அவனே வந்து இருக்கிறான் அப்படி இருக்கும் போது அவனே அங்கு அழைத்து செல்வதை கண்டு ஒன்றும் புரியாமல் அவனுடன் சென்றான். அறைக்குள் சென்றவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. மிகவும் அழகான பெரிய அறை அது. அதில் அனைத்தும் அவனுடைய ரசனைக்கேற்ப அமைந்திருந்தது. அதில் இன்னும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அவனின் படுக்கைக்கு வலதுப்புற சுவர் முழுவதும் அடைத்தப்படி ஒரு பெண்ணின் அழகிய ஓவியம் பெரிதாக ப்ரேம் செய்து மாட்டப்பட்டு இருந்தது. அது மட்டும் இல்லாமல் நிறைய படங்கள் இருந்தன. அதை கண்டவனுக்கு புரிந்து விட்டது அது யாருடையது என்று , “ இது தான் சிஸ்டர் போட்டோ வா “ என்று கேட்டான். அந்த ஓவியத்தில் இருந்து தன் கண்களை எடுக்காமல் அவளின் முகத்தை கைகளால் வருடியப்படி , “ ஆமா இவத்தான் ரொம்ப அழகா இருக்கால... இனி அவள விட்டு என்னால இருக்க முடியும்ன்னு எனக்கு தோணல ஷக்தி அதனால தான் நம்ம ப்ரெண்ட் ரிஷி ஒரு டிடெக்டிவ் தான அவன் கிட்ட போட்டோவ குடுத்து தேட சொல்லி இருக்கேன். அவன உடனே ரிபொர்ட் குடுக்க சொல்லி சொன்னேன். ஆனா பாரு அவன் காலைல தான் தருவேன்ன்னு சொல்லிட்டான் இடியட் “ என்று சொல்லிக் கொண்டிருந்தவனை பார்த்து கொண்டிருந்த ஷக்தியின் மனதில் ஒரு பயம் உண்டாக ஆரம்பித்தது. அதை அவனிடம் இப்போது கூறுவது சரியாக இருக்காது என்று நினைத்த்தவன் காலையில் இதைப் பற்றி அவனிடம் பேசியே ஆக வேண்டும் என எண்ணியவன், “ நீ நினைக்கறது எல்லாம் நடக்கும் ஆதி. இப்போ வா எற்கனவே நேரம் ஆயிடுச்சு சாப்பிட போலாம். ஷர்மி வெயிட் பன்னிட்டு இருப்பா வா “ என்று அவனை அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.


சாரா இல்லம்


இரவு உணவுக்கு கூட வேண்டாம் என்று மறுத்து விட்டு அறையில் அப்படி அவள் என்ன தான் செய்துக் கொண்டு இருக்கிறாள் என்று நினைத்த சந்திரிகா குடிக்க பாலாவது எடுத்து செல்வோம் அவள் பசித் தாங்க மாட்டாள் என்று பாலை எடுத்துக் கொண்டு சாராவின் அறையை நோக்கி சென்றார். அறைக்குள் சாரா மிகவும் டென்ஷனோடு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தவளை பார்த்துக் கொண்டே உள்ளே வந்த சந்திரிகா “ என்னாச்சு சாரா நைட் சாப்பாடு கூட வேண்டாம்ன்னு சொல்லிட்டு இங்க ஏன் இப்படி நடந்துட்டு இருக்க “ என்று அவள் அருகில் சென்று அவளின் தோள் மேல் கையை வைத்தப்படி கேட்டவரை கண்ட சாரா, “ நான் இன்னிக்கு எவ்வளவு ஆசையோடு ஆதி கிட்ட என் மனசுல இருக்கறத சொல்லனும்ன்னு அவர பாக்க போனேன்ன்னு தெரியுமா... எல்லாம்.....எல்லாமே வீணாப் போயிடுச்சு அம்மா “ என்று அந்த அறையே அதிரும் படி கத்தினாள்.


அவளின் கோவத்திற்க்கு காரணம் என்ன என்பதை புரியாமல், “ நீ என்ன சொல்றன்னு எனக்கு ஒன்னும் புரியல... முதல்ல டென்ஷன் ஆகாம தெளிவா சொல்லு “ என்று கேட்டவரிடம் மதியம் ஆதியின் ஹோட்டல் வாசலில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.


அவள் கூறியதை முழுதும் கேட்டவுடன், “ சாரா இது தற்செயலா நடந்தது... இதுக்கே நீ அப்செட் ஆனா எப்படி. நம்ம ஒரு விஷயத்த அடையனும்ன்னா அதுக்கு நிதானம் அவசியம்... ஒரு வழில முடியலனா வேற ஒரு வழிய நம்ம உடனே யோசிக்கனும்.... ஆனா என்ன நடந்தாலும் முன் வெச்சக் கால என்னைக்கும் பின் வைக்க கூடாது நீ என் பொண்ணு.... என்ன ஆனாலும் நீ நினைச்சத சாதிச்சே ஆகனும்... அதுக்கு என்ன விலை குடுக்கனும்னாலும் பரவாயில்லை...” என்று அவள் கண்களை பார்த்து உறுதியுடன் கூறியவரை பார்த்த சாரா, “ கண்டிப்பா சாதிப்பேன் மா இந்த முறை மிஸ் ஆயிடுச்சு ஆனா அடுத்த முறை நான் விட மாட்டேன்.... அடுத்து என்ன பன்னனும் யார் மூலமா பன்னனும்ன்னு எனக்கு நல்லா தெரியும்....நான் உன் பொண்ணு மா நினைச்சத அடையாம விட மாட்டேன் “ என்றவளை முகத்தில் சிரிப்புடன் அனைத்துக் கொண்ட சந்திரிகா அவளிடம் பாலை கொடுத்து குடிக்க சொல்லி பிறகு அவளை உறங்க வைத்த பின்னரே அந்த அறையை விட்டு சென்றார்.


அந்த அமைதியான இரவு நேரத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டு இருக்க இரு உள்ளங்கள் மட்டும் தூங்காமல் விழித்து இருந்தது.


வானதி அன்று தன்னுடைய கடந்த காலத்தை கூறிய பிறகு மித்ரா பேசியதை பற்றி சிந்தித்து கொண்டிருந்தாள். இனியும் அவருடைய பொருள் தன்னிடம் இருப்பது அவளுக்கு சரியாக படவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அதை அவரிடம் சேர்க்க வேண்டும்... அவரை ஒரு முறை சந்தித்தால் போதும் தன்னுடைய நன்றியை கூறி விட்டு அந்த வாட்சை கொடுத்து விட்டால் இனி அவருக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது....அதனால் கூடிய விரைவில் அவரை சந்தித்தப்பின் இந்த உறவுக்கான முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும். அதற்கு அந்த கடவுள் தான் உதவ வேண்டும் என்று மனதிற்குள் தீவிரமாக நினைத்துக் கொண்டிருந்த்தாள்.


அதற்கு நேரேதிராக ஆதிக்கு இன்று சந்தோஷத்தில் உறக்கமே வரவில்லை. நாளைய விடியல் எப்போது விடியும் அவளை பற்றிய விவரங்கள் எப்போது கைக்கு வரும் என்று ஆர்வமாக காத்து கொண்டிருக்கிறான். அவர்களின் உறவு அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டும். அவள் எங்கே என்று அவன் தேடிய தேடலுக்கான விடை நாளை அவன் கைகளுக்கு கிடைக்க போகிறது. இந்த முறை அவர்களின் சந்திப்பு பிரிவில் முடியாமல் இருவரின் வாழ்க்கையும் இணைவதில் முடிய வேண்டும் என்ற எண்ணம் அவனின் மனம் முழுவதும் வியாப்பிக்க தொட்ங்கியது.


இன்றைய நாள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திருந்தது. பகல் என்ற ஒன்று இருந்தால் இரவு என்ற ஒன்று வந்து தான் ஆகவேண்டும். என்னத்தான் வெவ்வேறு எண்ணங்களை கொண்டு இருந்தாலும் அனைவரும் தங்களை அறியாமல் உறங்க ஆரம்பித்தனர். அந்த உறக்கம் அவர்களை அடுத்த நாள் விடியலுக்கு அழைத்து சென்றது அடுத்த நாள் நல்ல பொழுதாக விடியும் என்ற நம்பிக்கையில்.....


இவர்களின் உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கும் வானதி.... அந்த முற்றுப்புள்ளிக்கு அருகில் மற்றுமொரு புள்ளி வைத்து அதை தொடர்க்கதையாக்க நினைக்கும் ஆதி....இவர்கள் இருவரில் யாருடைய எண்ணம் ஈடேறும் என்பதை நாமும் பொறுத்து இருந்து பார்ப்போம்....


எங்கே எங்கே விண்மீன் எங்கே


பகல் வானிலே நான் தேடினேன்

அங்கே இங்கே காணோம் என்று

அடி வானிலே நான் ஏறினேன்


கூடு தேடும் கிளியே

அவளின் வீடு எங்கே பார்த்தாயா....

உள்ளாடும் காற்றே

அவள் உள்ளம்சென்று பார்த்தாயா....


தூரல் போடும் துளியே

உயிரை தொட்டுப் போனவள்

பார்த்தாயா....

பஞ்சு போன்ற நெஞ்சை

தீயில் விட்டுப் போனவள்

பார்த்தாயா...

கண்ணால் கண்டால் நீ சொல்லு

உன் காலில் விழுவேன்

நீ சொல்லு....

நிஜத்தை தேடும்...


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துத் திரியில்
பகிர்ந்து

கொள்ளுங்கள் ....
 
Last edited:

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9



இரவு மிகவும் நீண்டு இருந்தாலும் விடியல் யாருக்கும் காத்திராமல் அதற்குரிய நேரத்தில் சரியாக விடிந்தது. நேற்று நடந்த விஷயங்களின் காரணமாக ராத்திரியெல்லாம் தூங்காமல் இருந்த ஷக்தி விடியும் நேரம் தான் தூங்க தொடங்கினான். சூரியனின் வெளிச்சம் முகத்தில் பட்டவுடன் அவனின் தூக்கம் கலைந்தது. தூங்க சொல்லி கண்கள் கெஞ்சினாலும் எழுந்துக் கொள்ள வேண்டிய நேரத்தை தாண்டி விட்டதால் கண்களை திறந்தவன் முன் கன்னத்தில் கை வைத்தப்படி அமர்ந்திருந்த ஷர்மியே தரிசனம் தந்தாள். தனக்கு முன்னால் தெரிந்த முகத்தை கண்டு அவசரமாக எழுந்து அமர்ந்த ஷக்தி, “ எதுக்கு இப்படி காலையிலேயே கிட்ட வந்து பயமுத்தூற ஷர்மி “ என்று கேட்டவனை முறைத்தவள், “ ஏன் கேக்க மாட்டிங்க நேத்து என்கிட்ட என்ன சொல்லிட்டு போனீங்க.... அண்ணன் கிட்ட போய் நடந்தது எல்லாம் கேட்டுட்டு வரேன்ன்னு போயிட்டு ரெண்டு பேரும் அமைதியா சாப்பிட்டுட்டு தூங்கிட்டிங்க.... இங்க ஒறுத்தி வெயிட் பன்னிட்டு இருக்கான்னு உங்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருந்ததா “ என்று தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.



அப்போது தான் நேற்று அவளிடம் தான் எதுவும் கூறவில்லை என்பதே அவனுக்கு நியாபகம் வந்தது. தன்னுடைய கையால் தலையை அடித்துக் கொண்டவன், “ சாரி செல்லம் உன் அண்ணன் குடுத்த ஷாக்ல இருந்து இன்னும் என்னால வெளிய வர முடியல அதனால தான் நான் எதுவும் சொல்லல டா. நீ எதுவும் வருத்தப்படாத சரியா இப்போவே உங்கிட்ட எல்லத்தையும் சொல்றேன் “ என்று கூறிக் கொண்டே அவளின் முகத்தை தன் பக்கமாக திருப்பியவன். ஆதி கூறியவற்றை அனைத்தையும் அவளிடம் ஒன்று விடாமல் விவரமாக கூறி முடித்தான். அதை முழுவதும் கேட்டவள் என்ன சொல்வது என்று தெரியாமல் அதிர்ச்சியுடன் அமர்ந்திருப்பவளை கண்ட ஷக்தி, “ அவன் சொல்லும் போது எனக்கும் இப்படி தான் இருந்தது “ என்று அவளை பிடித்து நன்றாக உலுக்கி இந்த உலகத்திற்கு கொண்டு வந்தான்.



ஷர்மி, “ என்னால இத நம்பவே முடில மாமா... அண்ணன் மனசுக்குள்ள கூட ஒருத்தவங்க இருக்காங்க... அவர் எதிர்ல நின்னு பேச கூட எல்லாரும் பயபடுவாங்க ஆனா இவங்க அண்ணன்னா ஒரு வழி பண்ணி இருக்காங்க போல.... அப்போ அவங்க தான் என் அண்ணனுக்கு ஏத்தவங்க... எப்படியோ அண்ணன் கல்யாணம் நடக்க போகுது..... இப்போ தான் எனக்கு சந்தோஷமா இருக்கு... மாமா... மாமா நான் அவங்கள பாக்கணும் என்னை அவங்க கிட்ட கூட்டிட்டு போறிங்கலா “ என்று தன் முகத்தை பிடித்து கொஞ்சியவளை பார்த்து, “ அடிப்பாவி ஒரு தடவ என்னை மாமான்னு கூப்பிடுன்னு எத்தனை தடவ கெஞ்சி இருப்பேன்... அப்போ எல்லாம் சொல்லாம உனக்கு காரியம் ஆகனும்ன்னு இப்போ சொல்றியா... அண்ணன்ன்னும் தங்கச்சியும் இதுல ஒரே மாதிரி இருக்கீங்க “ என்று கோவமாக எழுந்தவனின் கையை பிடித்த ஷர்மி அவன் அருகில் வந்து நின்று, “ என்ன இப்படி சொல்றீங்க அண்ணன்னுக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சா உங்களுக்கு சந்தோஷம் இல்லயா அதான்..... சரி இனிமே உங்கள நான் மாமா அப்படினே கூப்பிடுறேன்.... போதுமா இப்ப நான் கேட்டத்துக்கு பதில் சொல்லுங்க “ என்றவளின் தோள் மேல் கையை போட்டு,” சரி...சரி... போதும் எனக்கு கோவம் போயிடுச்சி... நீ கேட்ட எல்லாக் கேள்விக்கும் நம்ம வெளிய போனா தான் பதில் கிடைக்கும்... உன் அண்ணன் இன்னிக்கு என்ன என்ன பண்ண போறான்னே தெரியால அதுக்கு வேற ரெடியாகனும் நீயும் பாக்க தான போற போய் டிபன் எடுத்து வை.... நான் குளிச்சிட்டு வரேன் “ என்று அவளின் கன்னத்தை தட்டி விட்டு சென்று விட்டான். ஷர்மியும் சிரித்தப்படியே அங்கிருந்து வெளியே சென்றாள்.


குளித்து முடித்து ஆபீஸ் செல்வதர்க்கு தயாராகி அறையை விட்டு வெளியே வந்தவன் நேராக சாப்பாட்டு மேஜைக்கு சென்று அமர்ந்தான். ஷர்மியும் அவனுக்கு சாப்பாடு பரிமாறி கொண்டிருந்த போது ஆதி தன் அறையை விட்டு வேகமாக வந்தவன் வாசலை பார்த்த மாதிரி இருந்த சோபாவில் அமர்ந்தான். உணவை சாப்பிட்டு கொண்டே அவனை பார்த்த ஷக்தி, “ என்ன இன்னிக்கு இவன் அதிசயமா இவ்வளவு சீக்கிரம் கீழே இறங்கி வந்ததும் இல்லாம வெளிய போகாம அமைதியா இருக்கான்.... இது எல்லாம் காதல் செய்யும் மாயம் “ என்றவனை புரியாமல் பார்த்த ஷர்மிளா, “ என்ன சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரில.... அண்ணன் இப்படி நடந்துக்கறதுக்கு என்ன காரணம் “ என்று கேட்டாள்.


சாப்பிட்டு முடித்த ஷக்தி , “ எல்லாம் அவன் ஆள பத்தி வரப் போற தகவல தெரிஞ்சிக்க தான் வந்து இருக்கான்... வா போய் அவன் என்ன பன்றான்ன்னு பாக்கலாம் “ என்றவன் அவளை அழைத்துக் கொண்டு ஹாலில் இருந்த இன்னொரு சோபாவில் அமர்ந்தனர். அவர்கள் இருவரும் வரும் வரை வாசலை பார்த்து கொண்டிருந்ததவன் அவர்கள் அருகில் அமர்ந்ததும் தன்னுடைய கைப்பேசியை பார்ப்பது போல் வாசலையும் பார்த்து கொண்டிருந்தான். அவனின் ஆர்வத்தை பார்த்து கொண்டிருந்த இருவருக்கும் சிரிப்பாக இருந்தது. ஷக்தி அவனை கேலி செய்ய நினைத்து வாயை திறக்கும் போது ஆதி எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் நண்பன் ரிஷி உள்ளே வந்தவன் ஆதிக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து, “ இந்த காலையிலேயே என்ன ஒரு ட்ராஃப்பிக் வண்டிய ஒட்டிட்டு இங்க வரத்துக்குள்ள ஒரு வழி ஆயிட்டேன்” என்று கூறிக் கொண்டே நிமிர்ந்தான் அங்கிருந்த அனைவரும் அவனையே பார்ப்பதை கண்டு ஒன்றும் புரியாமல் ஆதியை பார்த்து அதிர்ந்தான். அவன் வந்த நேரத்தை பார்த்தவன் கால் மேல் கால் போட்டு தன்னுடைய இருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கண்களில் கூர்மையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


சூழ்நிலையை சமாளிக்க சிரித்தப்படி , “ ஆதி ரொம்ப நேரம் எனக்காக வெயிட் பன்றியா.... ரியலி சாரி ஆதி... ட்ராஃப்பிக் அதிகாம இருந்தது அதான் கொஞ்சம் லேட் ஆயிடுச்சு “ என்று கூறியவனை கையை உயர்த்தி தடுத்தவன், “ போதும் உன்னோட இந்த தேவையில்லாத கதையை கேக்க இங்க யாரும் இல்ல.... சொன்ன வேலையை முடிச்சியா அத மட்டும் சொல்லு “ என்றான். அவன் பேசுவதைக் கேட்ட ஷக்திக்கு உண்மையில் சிரிப்பு தான் வந்தது நம்மை போல இன்னொரு அடிமை வந்து சிக்கி இருக்கு என்று ஆனால் வெளியில் சொன்னால் என்ன நடக்கும் என்று தான் அவனுக்கு தெரியுமே அதனால் நடப்பதை அமைதியாக பார்ப்போம் என்று அமர்ந்திருந்தான்.
ரிஷி, “ என்னால முடிஞ்ச வரைக்கும் நான் அவங்கள பத்தின தகவல கலேக்ட் பண்ணி இருக்கேன். அத பத்தி எல்லாம் இந்த பைல்லா இருக்கு இந்த ஆதி “ என்று அவன் முன் அந்த பைலை நீட்டினான். அதை வாங்கியவன் பிரித்து பார்க்காமல் எதிரில் இருந்த டீப்பாய் மீது வைத்தவன், “ எனக்கு அத படிக்க இப்ப பொறுமை இல்ல... நான் அப்பறம் படிச்சிக்கிரேன்...அதுல என்ன இருக்குன்னு ஒரு சின்ன விஷயத்த கூட விடாம சொல்லு “ என்று தன் கம்பீரமான குரலில் கேட்டான். அவன் குரலில் சிறிது ஜர்க் ஆனவன் தன்னை சமன்ப்படுத்திக் கொண்டு அவனிடம் சேகரித்த தகவலை கூறத் தொடங்கினான். அங்கிருந்த அனைவரும் அவன் சொல்ல போகும் விஷயத்த கேட்க ஆவலாக இருந்தனர்.



ரிஷி, “ நீ குடுத்த போட்டோவில் இருந்த பொண்ணு பேர் “ ஆருந்ய வானதி “. அவங்க ஒரு ஸ்கூல்லா டீச்சரா இருக்காங்க... இங்க தான் அவங்க ப்ரெண்டோட ஒரு வீடு எடுத்து தங்கி இருக்காங்க. அவங்க ப்ரெண்டு பேர் கூட மித்ரா உங்க கம்பெனில தான் வேலை பாக்குறாங்க.... முக்கியமான ஒரு விஷயம் அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் ஆகல.” என்றவன் பாதியிலேயே நிறுத்தி விட்டு ஆதியை பார்த்தான். பேசிக் கொண்டிருந்தவன் இப்போது தன்னை பார்ப்பதை கண்டு அவனை எதுவாக இருந்தாலும் மேலே சொல்லும் மாறு கண்ணை காட்டினான். அதை புரிந்து கொண்டவன், “ நீ என் கிட்ட அவங்கள கடைசியா நீலகிரில பாத்ததா சொன்ன அதை வச்சி அங்க இருக்க எனக்கு தெரிஞ்சவங்க மூலமா விசாரிசத்துல அவங்க உங்களோட எஸ்டேட்ல தான் தங்கி வேலை பாத்து இருக்காங்க.... அது மட்டும் இல்லாம உங்க அப்பா ட்ரஸ்ட் மூலமா அவங்கள படிக்க வச்ச்சிறுக்கார்.... அவங்க ஏதோ ஒரு காரணமா தான் சென்னையில வேலை தேடிட்டு வந்து இருக்காங்க.... உங்க அப்பா தான் முதல்ல இங்க தங்கறதுக்கு நல்ல ஹாஸ்டல் பாத்து பாதுகாப்பா தாங்க வச்சிருக்கார் “ என்று கூறியவனை பார்த்து கண்களை முடியவன் கண்களுக்குள் மூன்று வருடங்களுக்கு முன் அங்கு சென்றிருந்த போது அங்குள்ள அனைவரும் வானதி என்ற பெயரை கூறியது நினைவு வந்தது. அன்றே இது தெரிந்து இருந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு மனமும் இப்போது இதை தெரிந்து கொள்ளும் போது அவள் மேல் கொண்ட அன்பை புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது என்று ஒரு மனமும் கூறியது.ஒரு பெருமூச்சுடன் கண்களை திறந்தவன் , “ அப்பாவுக்கும் வானதிக்கும் என்ன சம்பந்தம்..... அவளோட குடும்பத்த பத்தி நீ இன்னும் ஒன்னுமே சொல்லலயே “ என்று கேட்டவனிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் இருந்தவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு , “ ஆதி அது வந்து.... அதப்பத்தி என்னால தெரிஞ்சிக்க முடியால....அவங்க பேமிலி பத்தியும் எதுவும் தெரியல... நானும் இங்க இருந்தே ரொம்ப முயற்சி பன்னேன் முடியால.... அதுக்கு காரணம் உன் அப்பா தான்.... அவங்கள பத்தி யாரும் தெரிஞ்சிக்க முடியாதப்படி பக்காவா எல்லாத்தையும் பண்ணியிருக்கார்... ஆனா ஒன்னு அவங்கள சுத்தி ஒரு பிரச்சனை கண்டிப்பா இருக்கு அது என்னன்னு நான் கண்டு பிடிச்சி சொல்றேன்...எனக்கு கொஞ்சம் டைம் குடு ஆதி “ என்று கேட்டவனை கழுத்தில் தன் கையை வைத்து தேய்த்துக் கொண்டு சிந்தித்தவன். சடாரென அங்கிருந்து எழுந்தான் , “ சரி நான் உனக்கு ஒரு வாரம் டைம் தரேன் அதுக்குள்ள என் கைக்கு அவள பத்தின எல்லா விஷயமும் எனக்கு வந்தாகனும் அப்படி இல்லனா நான் என்ன செய்வேன்ன்னு எனக்கே தெரியாது அதை நல்லா நியாபகம் வச்சிக்கோ “ என்றவன் வேகமாக படியேறி தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.



அவன் சென்றதை பார்த்த ஷக்தி அங்கிருந்து எழுந்து ரிஷி பக்கத்தில் அமர்ந்தவன் பயங்கரமாக சிரிக்க ஆரம்பித்தான். இவன் எதுக்காக இப்படி சிரிக்குறான்ன்னு தெறியலயே என்று நினைத்தவன், “ எதுக்குடா இப்ப லூசு மாதிரி சிரிக்குற.... நானே இவன் கிட்ட இப்படி மாட்டிகிட்டொமே இப்ப என்ன பன்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கேன் “ என்று சோகமாக சொன்னவனை பார்த்து , “ அதுக்கு தான்டா நானும் சிரிச்சேன்.... என்னடா நாம மட்டும் இவன் கிட்ட சிங்கிளா சிக்கி இருக்கோமேன்னு நினைச்சேன் இப்ப நீ வந்துட்ட எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு “ என்றவனை கொலைவெறியுடன் பார்த்தான் ரிஷி.
அவர்கள் இருவரும் ஆதியை பற்றி பேசுவதை கண்ட ஷர்மி , “ என்ன ரெண்டு பேரும் ஓவரா பேசுறிங்க.... அண்ணாவ கூப்பிடவா “ என்று கேட்டவளை கண்டு இருவரும் கையெடுத்து கும்பிட்டனர். அதைக் கண்டு ஷர்மியும் சிரிக்க ஆரம்பித்தாள்.



ரிஷி, “ டேய் யாருடா அந்த பொண்ணு... இவன் இவ்வளவு ஆர்வமா இருக்கான் அப்படின்னா என்னவா இருக்கும் “.



ஷக்தி, “ இது கூடவா புறிஞ்சிக்க முடியால.... அந்த பொண்ணு தான் வருங்கால மிஸ்சஸ். ஆதித்ய அருள்மொழி வர்மன்.... சரி சரி நீ போய் அவன் சொன்ன வேளைய பாரு இல்ல அவன் செம்ம கடுப்பாகிடுவான் பாத்துக்கோ “ என்றான்.


“ நீ சொல்றத என்னால நம்பவே முடிலடா... இருந்தாலும் சந்தோஷமா தான் இருக்கு. சரி நான் கிலம்புரேன் “ என்ற ரிஷி இருவரிடமும் விடைப்பெற்று கொண்டு சென்றான். அவன் சென்றதும் ஷர்மியும் தன்க்கு மருத்துவமனையில் வேலை இருப்பதாக சொல்லி சாப்பிட்டு விட்டு கிளம்பி விட்டாள்.


இப்போது இருப்பது இருவர் மட்டுமே அதனால் ஆபீஸ் செல்ல வேண்டும் என்பதால் ஆதியை அழைக்க அவனுடைய அறைக்கு சென்றான். அவனின் அறை கதவை தட்டி விட்டு உள்ளே சென்றவன் அங்குள்ள வரவேற்ப்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்த ஆதியை கண்டான். அவனிடம் சிலவற்றை கூற வேண்டும் என்று எண்ணியவன் சிறிது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவன் அருகில் சென்று அமர்ந்தான். அவன் வந்தது தெரிந்தும் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தவனை கண்டு, “ ஆதி என்னாச்சு என் இப்படி அமைதியா இருக்க “ என்று கேட்டவனை பார்த்தப்படி திரும்பி அமர்ந்தான்.



ஆதி, “ ரிஷி சொன்ன எல்லாத்தையும் கேட்ட தான. அதப்பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன். அது மட்டும் இல்லாம இந்த மூணு வறுஷத்துல அவ பெயர் என்னவா இருக்கும்ன்னு நான் யோசிக்காத நாள் இல்ல. எந்த பொண்ணோட பேர கேட்டாலும் அது அவளோடதா இருக்குமான்னு நினைச்சி இருக்கேன். இப்போ அவளோட உண்மையான பெயர கேக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு... அவள மாதிரியே அவ பெயரும் வித்தியாசமா அழகா இருக்குல “ என்று ஷக்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தான். ஆனால் அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை கண்டு, “ ஷக்தி என்னாச்சி உனக்கு ஏன் அமைதிய இருக்க. எதையோ என்கிட்ட சொல்லனும்ன்னு நினைக்கற அத எப்படி சொல்றதுன்னு தயங்கிட்டு இருக்க அப்படி தான... எதுவா இருந்தாலும் பரவால சொல்லுடா “.



ஷக்தி, “ அது...வந்து. ..ஆதி... நான் சொல்றத கோவப்படாம நிதானமா கேளு.... இந்த மூணு வருஷமா நீ அந்த பெண்ணையே நினைச்சிட்டு இருந்த மாதிரி அந்த பொண்ணூம் உன்னை நியாபகம் ஆவது வச்சிருக்குமா.... அந்த ரிப்பொர்ட்ல கல்யாணம் ஆகலன்னு தான் போட்டு இருக்கு... ஒரு வேள அந்த பொண்ணு மனசுல....வேற யாராவது இருந்து அவங்கள....அந்த பொண்ணூம் காதலிச்சிட்டு இருந்தா என்ன பன்றது ஆதி “ என்று மிகுந்த தயக்கத்தொடு அவனிடம் கூறினான்.


முதலில் அவன் கூறுவதை பொறுமையாக கேட்க ஆரம்பித்தவன் போக போக அவன் சொன்னதை கேட்டவன் முகம் கோவத்தில் சிவந்தது. சடறென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன். அவனை நோக்கி, “ இப்ப நீ சொன்னத வேற யாரவது சொல்லி இருந்தா இங்க நடக்கறதே வேறையா இருந்து இருக்கும்...” என்றவனை பார்த்தவன், “ இல்ல ஆதி நான் சொல்றத கொஞ்சம் “ என்று ஆரம்பித்தவனை தன்னுடைய கையை நீட்டி தடுத்தவன், “ வேண்டாம் ஷக்தி நீ எதுவும் சொல்லாத... நீ எதுக்காக இத சொன்னன்னு எனக்கு தெரியும்... ஆனா ஒன்னு நீ நல்லா புரிஞ்சிக்கோ....இதப்பத்தி நான் பேசறது இதுவே கடைசியா இருக்காட்டும்..” என்று நிறுத்தியவன்.


தன்னை நிலைப்படுத்தி கொண்டு , “ எனக்கு இந்த உலகத்திலேயே ரொம்ப பிடிச்சது என்னோட அம்மா தான் அவங்க என்னை விட்டு போனதும் யாரையும் எனக்கு பிடிக்கல....அவங்க பிரிவ என்னால தாங்கிக்க முடியல. அதனால தான் நான் யாரையும் என்ன நெருங்க விட்டது இல்ல....அப்படி இருந்த என் மனசுக்குள்ள என்னையும் மீறி அவ நுழைஞ்சிட்டா இனி நானே நினைச்சாலும் அவளை என் மனசுல இருந்து பிரிக்க முடியாது. பிரிக்கவும் விட மாட்டேன்... அந்த வானதி என்ற நதி இந்த ஆதித்யா என்ற கடல தான் வந்து சேரனும்....நடுவுல எத்தனை தடங்கல் வந்தாலும் அது எல்லாத்தையும் மீறி அந்த நதி கடல தான் வந்து அடையும்....அது மாதிரி தான் அவ எனக்கு மட்டும் தான் சொந்தம் அதுக்கு எதாவது தடை வந்த அதை அழிக்க கூட தயங்க மாட்டேன்....அதையும் மீறி பிரிக்க நினைச்சா அவங்க இந்த ஆதித்ய அருள்மொழி வர்மன் ( A . V ) யோட முழுமையான முகத்தை பாக்க வேண்டி இருக்கும் “ என்று ஆவேசமாக பேசியவனை கேட்டு அதிர்ந்தான் ஷக்தி. ஏன்னெனில் அவன் ஆதித்யா வாக இருக்கும் போதே சாமாளிப்பது கொஞ்சம் கடினம் தான். அதுவே அவன் A.V யாக மாறினால் அவன் செயல்கள் அனைத்தும் அசுரத்தனமாக இருக்கும் அவனை அடக்குவது என்பதை நினைக்கும் போதே அவனுக்கு தலை சுற்றியது. இப்போது அவனை சமாதானம் செய்வது தான் முக்கியம் என்று எண்ணியவன். அவன் அருகில் எழுந்து சென்ற ஷக்தி, “ ஆதி டென்ஷன் ஆகாத. .. நான் இப்படியும் இருக்குமோன்னு தான் சொன்னேன்...உன்ன கஷ்டப்படுத்தனும்ன்னு சொல்லல சாரி ஆதி. கண்டிப்பா சிஸ்டர் மனசுலயும் நீ தான் இருப்ப சரியா “ என்று கூறி விட்டு அவனை ஆதரவாக அனைத்துக் கொண்டான்.


அவனிடம் பிரிந்த ஷக்தி, “ அடுத்து என்ன பண்ணப் போற ஆதி “ என்று கேட்டான். அதற்கு அவனை ப்பார்த்து , “ அவள நேர்ல சந்திக்கனும். அவளும் என்ன மறக்காம இருக்காளான்னு நான் தெரிஞ்சிக்கனும். வா இப்போவே போய் பாக்கலாம்” என்று வாசலை நோக்கி நடந்தவனை , “ ஆதி இன்னிக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு மறந்துட்டிய... நீ அத அட்டென்ட் பன்னியே ஆகனும்..... எல்லாத்தையும் இன்னிக்கு பண்ண சொன்னதே நீ தான். சோ அந்த வேலையை முடிச்சிட்டு நீ போய் பாரு ஆதி. இப்ப ஆபீஸ் போலாம் டைம் ஆயிடுச்சி “ என்றவன் கூறியது அனைத்தும் உண்மையே இப்போது தான் அதை பற்றிய நியாபகமே அவனுக்கு வந்தது. போயே ஆக வேண்டும் என்று உணர்ந்தவன் காலை உதைத்துக் கொண்டு அறையை விட்டு வேகமாக சென்றான். அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே ஷக்தியும் பின்னாடியே சென்றான்.


ஆபீஸ் சென்றவனை வேலைகள் உள்ளிழுத்து கொண்டது. ஒரு மீட்டிங் முடிந்ததும் அடுத்தது என்று சுழல் காற்று தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் தன்னுள் இழுத்து செல்வதை போல் அவனும் அந்த வேலைகளுக்குள் சிக்கிக் கொண்டான். அனைத்து வேலைகளையும் முடித்து உட்காருவதற்க்குள் நேரம் மாலையை கடந்து இருந்தது. ஓய்வு என்பது இன்று இல்லாமல் காலை வந்ததில் இருந்து இப்போது வரை வேலை செய்ததில் அவன் வயிரும் தன்னை கவனிக்க சொல்லி கெஞ்சியது அதனால் வீட்டிற்கு போகலாம் என்று ஷக்தி வந்து அழைக்கும் போது மறுப்பு எதுவும் சொல்லாமல் அவனுடன் சென்றான்.



காரில் சென்று கொண்டிருந்தவன் மனம் முழுவதும் வானதியே நிறைந்திருந்தாள். இதுவரை அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் இருந்தது ஆனால் இன்று அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரிந்திருந்தும் அவனால் சென்று அவளை பாக்க முடியாமல் போய் விட்டதே என்ற எண்ணம் அவனின் மனதை அலைக்கழித்தது. வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த ஷக்திக்கும் அவன் மனநிலை புரிந்திருந்ததால் அமைதியாக இருந்தான். வெளியே பார்த்து கொண்டு வந்த ஆதி திடீரென்று ஒரு பார்க் வாசலில் வண்டியை நிறுத்த சொன்னான். வண்டியை நிறுத்தியவன் அவனிடம் என்ன என்று கேட்டவனிடம், “ ஷக்தி கொஞ்ச நேரம் இந்த பார்க்ல இருந்துட்டு போலாம் “ என்றவன் வேகமாக இறங்கி உள்ளே சென்று விட்டான். எதற்கு இங்க இருக்க சொன்னான் என்று தெரியாமல் ஷக்தியும் காரை ஒரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்
அங்கு ஒரு பெஞ்ச்சில் அமர்ந்தவன் அங்கு வந்திருந்த அனைவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஷக்தியும் அவன் அருகில் வந்து அமர்ந்து தன் போன்னில் பாடல் கேட்க ஆரம்பித்தான். அந்த மாலை கடக்கும் வேலை மிகவும் அழகானதாக இருந்தது. குழந்தைகள் , பெரியவர்கள், வயதானவர்கள் என எல்லா வயதுடையவர்களும் அவர்களின் சந்தொஷத்திற்க்காக அங்கு வந்திருந்தனர். அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளை பார்த்து கொண்டிருந்தபோது அவன் அருகில் ஒரு சிறுமி வந்து, “ சார் ரோஜாப்பூ வாங்கிக்கொங்க சார் “ என்று அவனிடம் பூவை நீட்டினாள்.



அதைப் பார்த்தவன், “ இல்லமா எனக்கு பூ வேண்டாம்.... இந்த பணம் வேணா வெச்சிக்கோ மா “ என்று அவன் நீட்டிய பணத்தை வாங்காமல் , “ பூ வேணும்னா வாங்கிக்கொங்க ஆனா இலவசமா கொடுக்கற பணம் எல்லாம் எனக்கு வேண்டாம் சார்... நான் வரேன் “ என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள். அந்த சிறியப் பெண் கூறியதை கேட்ட இருவருக்கும் ஆச்சிரியமாக இருந்தது. சிரித்துக் கொண்டே அந்த சிறுமி செல்வதை பார்த்து கொண்டிருந்த ஆதியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது.



பள்ளியில் இருந்து வந்த வானதி தன்னுடைய அபார்ட்மென்டில் உள்ள சிறுவர்களும் அவர்களின் அம்மாக்களும் அழைத்ததால் வீட்டிற்கு அருகில் உள்ள பார்க்கிற்கு வந்து இருந்தாள் . அங்கு வந்தவுடன் அனைவரும் விளையாட சென்று விட்டனர். இவளும் அங்குள்ளவற்றை சுற்றி பார்த்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தவள் கண்களில் ஒரு சிறுமி பூ விற்பதைக் கண்டாள். ஆனால் அங்கு இருந்த யாரும் வாங்கவில்லை. ஆதலால் அவளிடம் சென்றவள், “ என்ன பாப்பா பூ யாரும் வாங்கலையா “ என்று கேட்டாள். அவர்கள் பேச ஆரம்பிக்கும் போது தான் ஆதி அவர்களை கண்டான். யாரை காலையில் இருந்து காண முடியவில்லையே என்று வருந்தினானோ அவளே அவன் கண் முன் தோன்றியதில் அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. உடனே அந்த பெஞ்சில் இருந்து எழுந்து நின்றான். அமர்ந்து இருந்தவன் தீடிரென எழுந்ததை கண்ட ஷக்தியும் நின்றான்.



‘ இவன் எதை இப்படி ஆர்வமா பாக்குறான் ' என்று நினைத்தவன் அவன் கண்கள் செல்லும் திசையை கண்டவனுக்கும் ஆச்சர்யம். தன் நண்பனின் மனதை கொள்ளைக்கொண்டவளை முதன் முறையாக நேரில் காண்கிறான். அங்கு என்ன நடக்க போகிறது என்று பார்க்க அவனுக்கும் ஆவலாக இருந்தது. அதனால் அவனும் அங்கு என்ன நடக்கிறது என்று கவனிக்க ஆரம்பித்தான்.


அதற்கு அந்த சிறுமியும் , “ ஆமா அக்கா இன்னும் ஐந்து ரோஜா தான் இருக்கு இத வித்திட்டு வீட்டுக்கு போலாம்ன்னு பாத்தேன் ஆனா யாரும் வாங்க மாட்றாங்க.... அம்மா வேற காத்துட்டு இருப்பாங்க “ என்று சோகமாக சொன்னவளிடம், “ சரி ஒரு பூ எவ்வளவு “ என்று கேட்டாள்.


“ ஒரு பூ பத்து ரூபாய் அக்கா “என்றாள். தன்னுடைய பர்சில் இருந்து அம்பது ரூபாய் நோட்டை எடுத்து , “ அப்படினா இந்த எல்லா ரோஜா பூவையும் நானே வாங்கிக்கிரேன் கொடு “ என்று காசை அவளிடம் கொடுத்து விட்டு பூவை வாங்கிக் கொண்டாள். வானதி எல்லாப் பூவையும் வாங்கி கொண்டாதில் அந்த சிறுமிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


“ ரொம்ப தேங்க்ஸ் அக்கா... கொஞ்சம் கீழ குனிங்களேன் “ என்று கேட்டவளின் முன் குனிந்த வானதியின் முகத்தை திருப்பி கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து அவளின் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். வானதியும் அவள் கன்னத்தில் சிரித்துக் கொண்டே முத்தம் வைத்த பின் அந்த சிறுமியும் விடைப்பெற்று சென்று விட்டதை பார்த்து திறும்பியவளின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்து நின்றது. யாரை பார்க்க வேண்டும் என்று இந்த மூன்று வருடங்களாக காத்திருந்தாளோ அவன் தன் கண் முன் நிற்பதை அவளால் நம்ப முடியவில்லை.


அங்கு நடந்த அனைத்தையும் கண்டு ரசித்து கொண்டிருந்தவன் அவள் தன்னை நிமிர்ந்து பார்ப்பதை கண்டு அவனின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவளுக்கு தன்னை நினைவு இருக்குமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் பிறகு தான் நாம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் பேச்சை கேட்காது அவன் கால்கள் அவளை நோக்கி செல்ல ஆரம்பித்தது.



அவனை பார்த்ததும் நன்றியை கூற வேண்டும் என்று என்னென்னவோ நினைத்து கொண்டிருந்தவளின் மூளை செயல் இழந்தது போல் இருந்தது. பல நேரங்களில் மனத்திற்கும் முளைக்கும் நடக்கும் போராட்டத்தில் மனமே வெற்றி பெறும். இன்று வானதி விஷயத்திலும் அது தான் நடந்தது. அவன் மேல் அவளுக்கு இருந்த ஈர்ப்பு அவள் அறியாமலே அவன் அருகில் அழைத்து சென்றது.



அந்த அழகான இடத்தில் இருவரும் நேருக்கு நேர் நின்று ஒருத்தரின் கண்களை இன்னொருவர் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர். அவள் முதலில் பேச வேண்டும் என்று அவனும்....அவன் முதலில் பேச வேண்டும் என்று அவளும்....என இருவருமே அமைதியாக இருந்தனர். இருவரையும் இணைக்கும் பாலமாக காற்று அவர்களை சுற்றி அடிக்க ஆரம்பித்தது....வானதியின் கையில் இருந்த மலர்களும் அந்த காற்றுக்கு ஏற்றவாறு அழகாக அசைந்தது....



இருவரில் யாருடைய மௌனம் கலைந்து....என்ன பேசியிருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள நாமும் காத்திருப்போம்...


கனவு கண்டு எந்தன் கண்கள்

மூடிக் கிடந்தேன்....


காற்றை போல வந்து கண்கள்

மெல்ல திறந்தேன்....

காற்றே என்னை கிள்ளாதிரு

பூவே என்னை தள்ளாதிரு

காற்றே என்னை கிள்ளாதிரு

பூவே என்னை தள்ளாதிரு

உறவே உறவே

உயிரின் உயிறே

புது வாழ்க்கை தந்த வள்ளலே...


நிஜத்தை தேடும்...



இந்த கதையின் கருத்துக்களை

“ என் நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....





.
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 10


தங்களை சுற்றியுள்ள இடத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு தனி உலகில் இருவருமே அனைத்தையும் மறந்த நிலையில் விழியோடு விழி கலக்க நின்றுக் கொண்டிருந்தனர். மீள முடியாத ஒரு சுழலில் சிக்கிக் கொண்டது போல் இருவரும் அவரவர் விழி விச்சில் மாட்டி அதில் மூழ்க இருந்த நேரம் வானதியோடு வந்த சிறுவர்களில் ஒருவன் அக்கா என்று அழைத்தப்படி அவள் அருகில் சென்று அவளின் கையை பிடித்து இழுத்தான். அந்த நொடி இருவரையும் நிகழ்காலத்திற்க்கு கொண்டு வந்தது. அந்த தொடுகையில் கீழே குனிந்து என்ன வேண்டும் என்று கேட்டாள்.


அதற்கு அந்த பையன், “ அக்கா இங்க என்ன பன்றிங்க... எல்லாரும் வீட்டுக்கு கிளம்புறாங்க. அதனால அம்மா உங்கள கூட்டிட்டு வர சொன்னாங்க.. வாங்க போலாம் “ என்று அவளின் கையை பிடித்து இழுத்தவனை பார்த்து, “ இல்லடா நீங்க வீட்டுக்கு போங்க நான் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்ன்னு அம்மா கிட்ட சொல்லு சரியா போ “ என்று அவனை அனுப்பி வைத்து விட்டு அவனை நோக்கி திரும்பினாள். மூன்று வருடங்களுக்கு பிறகு காண்பதால் இமைக்க மறந்து அவளின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தத ஆதியின் முகத்தருகே சொடக்கிட்டாள். அந்த சத்தத்தில் தன் மோன நிலையில் இருந்து கலைந்து அவள் என்ன சொல்ல போகிறாள் என்று தெரிந்து கொள்வதற்க்காக பார்த்தான்.


வானதி, “ இந்த மூணு வருஷமா நான் யார பாக்கணும்ன்னு நினைச்சிட்டு இருந்தனோ இப்ப அவர் என் கண் முன்னாடி நிக்கிறத என்னால நம்பவே முடியல... “ என்றாள் முகத்தில் புன்னகையோடு. அவள் அவ்வாறு கூறியதுமே அவன் மனத்திற்கு அப்படி ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தன்னை போல அவளும் தன்னை மறக்கவில்லை என்று தெரிந்து கொண்ட ஆனந்தம் ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், “ விதி இருந்தா திரும்பவும் சந்திப்போம் அப்படின்னு சொன்ன இப்போ அந்த கடவுளே நம்மள சந்திக்க வச்சிருக்கார்.... இப்ப என்ன சொல்ற “ என்று கேட்டான். அதை ஆமோதிப்பது போல் தலையசைத்தவள், “ நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் ஆனா அதை இப்படி அவசரமா சொல்ல எனக்கு விருப்பம் இல்லை நேரம் வேற ஆயிடுச்சி... நீங்க தப்பா நினைக்களனா நாமா நாளைக்கு சந்திக்கலாமா “ தயங்கியப்படி கேட்டவளை கண்டவனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை அவன் சொல்ல வேண்டியது எல்லாம் இவள் சொல்வதை கேட்கும் போது அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம் இதுவரை அவன் வாழ்க்கையில் அடைந்திடாத ஆனந்தம் ஆனால் அதை எதையும் முகத்தில் அவனால் காட்ட முடியாது அதனால் அவளிடம், “ அப்படினா நாளைக்கு ஈவ்னிங் நான் சென்ட் பண்ர லோகேஷன்னுக்கு வந்துடு...அதுக்கு உன் நம்பர் குடுத்தனா நல்லா இருக்கும்" என்று கேட்டான்.


அவன் அப்படி நேரடியாக கேட்பான் என்று அவள் எதிர்ப்பார்க்கவில்லை இருந்தாலும் சந்திக்கலாம் என்று சொன்னவள் இவள் தான் அப்படி என்றால் அவன் நம்பர் கேட்டதில் தவறு எதுவும் இல்லை என்பதால் அவனிடம் தன்னுடையதை கொடுத்து அவனுடையதை பெற்று கொண்டாள். பிறகு நேரமாவதை உணர்ந்தவள் அவனிடம் விடைப்பெற்றுக் கொண்டு நாளை பார்க்கலாம் என்று கூறிவிட்டு சென்று விட்டாள். அவள் அவனை விட்டு செல்ல செல்ல அவளை எப்படியாவது என்ன செய்தாவது தன்னுடன் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற தொடங்கியது . அங்கு நடந்த அனைத்தையும் ஒரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த ஷக்தி வானதி சென்ற பின்னும் அசையாமல் நிற்பதை கண்டு அவன் அருகில் சென்று தோளில் கையை வைத்தான். அந்த சுபரிசத்தில் தன்னுனர்வை பெற்றவன் ஷக்தியை அனைத்துக் கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.


சிறிது நேரத்திற்குப் பிறகு அவனை விட்டு பிரிந்த ஆதி, “ அவ என்ன சொன்னான்னு கேட்டியா ஷக்தி.... அவ என்ன சந்திக்கனும்ன்னு சொல்றா...ஒரு வேலை அவ மனசுலையும் என் மேல காதல் இருக்குமா....அத சொல்ல தான் கூப்பிட்றாளோ...” என்று கேள்வியாக கேட்டவனிடம் , “ அப்படியும் இருக்கலாம் ஆதி.... அது என்னவா இருக்கும்ன்னு யோசிக்கறத விடு எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம். வா இப்போ வீட்டுக்கு போலாம் “ என்று அவனை அங்கிருந்து வீட்டிற்க்கு அழைத்து சென்றான்.


எப்போதும் இருவரும் வீடு வந்து சேரும் நேரத்தை கடந்தும் இன்னும் அவர்கள் வரவில்லையே என்று டென்ஷனொடு ஹாலில் குறுக்கும் நெடுக்கும் நடந்தப்படி வாசலை பார்த்து கொண்டிருந்ததாள் ஷர்மிளா. அதே நேரம் இருவரும் ஒன்றாக வீட்டிற்குள் நுழைந்தனர். அவர்களை பார்த்தவுடன் , “ என்னாச்சி ஏன் இவ்வளவு நேரம் உங்களுக்காக நான் எவ்வளவு நேரமா காத்திட்டு இருக்கேன் தெரியுமா “ என்று கேட்டவளிடம் ஷக்தி பதில் கூறுவதற்கு முன்பு ஆதி, “ ஷர்மீ... எனக்கு ரொம்ப பசிக்குது சாப்பாடு போட்ரியா “ என்று கேட்டவனை பார்க்கும் போது இருவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இதுவரை அவன் இது போல் அவளிடம் கேட்டதில்லை அவளிடம் மட்டும் இல்லை யாரிடமும் கேட்டதில்லை தன்னுடைய வேலைகள் அனைத்தையும் அவனே செய்துக் கொள்வான் அப்படிப்பட்டவன் இன்று இப்படி கேட்டதும் உண்மையில் அவளுக்கு சந்தோஷத்தில் வார்த்தையே வரவில்லை.


கண்களில் நீரோடு அவன் கையை பிடித்து டைனிங் டேபில்லிள் அமர வைத்து பரிமாறியவள் ஆதியை பார்த்து, “ சாப்பிடுங்க அண்ணா... இது நாள் வரைக்கும் நான் பரிமாறி நீங்க சாப்பிட மாட்டிங்களான்னு ஏங்கி இருக்கேன்..... இப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா “ என்று தன்னுடைய கண்களை துடைத்து கொண்டிருந்தவளை பார்த்த ஆதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. தன் தங்கையுடைய இந்த சிறு ஆசையை கூட அவனால் நிறைவேத்த முடியவில்லையே என்று. இனி அவளிடம் பாசமாக இருக்க வேண்டும் என்று எண்ணியவன் அவளை பக்கத்தில் அமர வைத்து அவன் கையால் ஊட்டினான் பதிலுக்கு அவளும் ஊட்டினாள். இதை பார்த்துக் கொண்டிருந்த ஷக்திக்கு உண்மையில் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே நிறைவோடு அனைவரும் உண்டு விட்டு தங்களின் அறைக்கு சென்று விட்டனர்.


இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்த வானதி மறக்காமல் அந்த வாட்சை எடுத்து தன்னுடைய ஹாண்ட் பேக்கில் பத்திரமாக வைத்துக் கொண்டாள். பிறகு கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தவள் மனதில், ‘ இந்த விஷயத்தை மித்ரா கிட்ட சொல்லலாமா வேண்டாமா.... இல்ல வேண்டாம் சொன்ன அன்னிக்கு மாதிரியே தேவை இல்லாதது எல்லாம் பேசுவா....எப்படியோ நாளைக்கு எல்லாம் முடிஞ்சிடும்.... அதனால நாளைக்கு வந்து எல்லாத்தையும் சொல்லிடலாம்...அது தான் சரியாவும் இருக்கும் “ என்று நினைத்தவள் உறங்க ஆரம்பித்தாள்.


காலம் யாருக்காகவும் எதுக்காகவும் காத்திருக்காது என்பது போல் அடுத்த நாள் விடியல் எப்பவும் போல விடிந்தது. காலையில் எழுந்ததில் இருந்து ஆதியின் செயல்கள் அனைத்தும் பரப்பரப்பாகவே இருந்தது. என்றும் இல்லாமல் இன்று விரைவாகவே ஆபீஸ் சென்றவன் மாலை எந்த வேலையும் இருக்க கூடாது என்பதற்காகவே எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருந்தான். தன்னுடைய அறைக்கு வந்த கதிரிடம் இன்று எந்த மீட்டிங் இருந்தாலும் அனைத்தையும் மாலைக்குள் முடிக்க வேண்டும் எல்லா நேரத்தையும் மாற்றி வைக்க சொன்னான். அவன் சொல்லிய அனைத்துக்கும் சரி என்று கூறியவனுக்கு இன்று அவனுடைய செயல்கள் எல்லாம் வித்தியாசமாக இருப்பதை போல் தோன்றியது. ஆனால் அதை அவனிடம் கேட்க முடியாததால் அமைதியாக அவன் கூறியதை செய்ய சென்று விட்டான். என்னத்தான் அவன் வேலையை விரைவாக முடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் கடைசியாக ஹோட்டலில் அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தது அதை முடித்தவுடன் இங்கிருந்து வேறு எந்த இடமும் செல்ல முடியும் என்று அவனுக்கு தோன்றவில்லை. என்ன செய்யலாம் என்று சிந்தித்து கொண்டிருந்தவனுக்கு, ‘ அவள இங்க வர சொன்ன என்ன நாமாளும் அவக் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பன்னலாம் ‘ என்று ஒரு யோசனை தோன்றியது உடனே அவளுடைய கைப்பேசிக்கு அவள் பள்ளி முடியும் நேரம் அவனுக்கு தெரியும் அதனால் நான்கு மணிக்கு மேல் வருமாறு ஹோட்டல் அட்ரஸ்சையும் அனுப்பி விட்டான்.


மாலை தன்னுடைய பள்ளி நேரம் முடிந்ததும் வெளியே செல்வதற்கு முன்பாக கைப்பேசியை எடுத்து பார்த்தவள் அதில் இருந்த மெசேஜை கண்டவுடன் புரிந்தது அது யாருடையது என்று அதை முழுவதுமாக படித்தவள் கிளம்பி சென்றாள். அதே நேரம் சரியாக நாலு மணிக்குள் எல்லா வேலையும் முடித்தவன். அங்கிருந்த ஒரு டேப்பிளில் சென்று அமர்ந்தவன் யாரையும் தன்னை தொந்தரவு செய்ய கூடாது என்று உறுதியாக கூறிவிட்டான். தங்களின் முதலாளி அவ்வாறு கூறியும் அதை செய்வதற்கு அவர்களுக்கு எங்கே தைரியம் இருக்கிறது அதனால் அனைவரும் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டனர்.


பள்ளியில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் ஹோட்டல் வாசலில் வண்டியை நிறுத்தியவள் மனதில் அன்று இதே இடத்தில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. அதில் சற்று எரிச்சல் அடைந்தவள் வண்டியை ஒரமாக நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள். அவன் எங்கே இருக்கிறான் என்று கண்களால் தேடிக் கொண்டிருந்தாள். அவள் வரவுக்காகவே அங்கே இருந்த ஒரு டேப்பிளில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தவன். அவள் வந்ததையும் தன்னை அவள் அழகிய கண்களால் தேடிக் கொண்டிருபதையும் கண்டவன் மனத்திற்கு அப்படி ஒரு சொல்ல முடியாத சந்தோஷத்தால் நிறைந்தது. பிறகு அவனே எழுந்து வந்து அவளை அங்கிருந்து அழைத்துக் கொண்டு சென்று யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு இடத்தில் அமர்ந்தான் வானதியும் அவன் பின்னலாயே வந்து அவனுக்கு எதிரில் அமர்ந்தாள். இதுவரை எந்த பெண்ணிடமும் நின்று கூட பேசாத தங்கள் முதலாளி இன்று ஒரு பெண்ணை அவரே வந்து அழைத்து செல்வதை கண்டவர்களுக்கு சொல்லாமலேயே புரிந்தது அந்த பெண் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்று. அங்கு வேலை செய்பவர்கள் அவ்வாறு நினைத்து கொண்டு இருக்க அங்கு அவர்கள் இருவரும் யார் முதலில் பேசுவது என்று தெரியாமல் வானதி அந்த இடத்தை பார்த்து கொண்டிருந்த்தாள். ஆதி அவளுக்கு தெரியாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான். பிறகு ஆதி அவளிடம் என்ன சாப்பிடுகிறாய் என்று கேட்டு அதற்கு ஏற்றவாறு இருவருக்கும் ஜுஸ் கொண்டு வர சொன்னான். அது வந்த பிறகும் அவள் அமைதியாக ஏதோ சிந்தனையில் அமர்ந்து இருப்பதை கண்டவன்.


ஆதி, “ என்னாச்சி ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு வர வழியில எதாவது பிரச்சனையா “. அவன் அவ்வாறு கேட்டதும் நிமிர்ந்து அமர்ந்தவள், “ பிரச்சனை எதுவும் இல்லை இந்த ஹோட்டலுக்கு முன்னாடி ஒரு தடவை வந்தப்போ நடந்தது நியாபகம் வந்தது அதான்.... வேற ஒன்னும் இல்லை “ என்றவள் ஜூசை குடிக்க ஆரம்பித்தாள்.


ஆதி, “ இப்படி அப்செட் ஆகுற அளவுக்கு என்ன நடந்துச்சி “ பேச்சை ஆரம்பிப்பதற்காக அவளிடம் கேட்டான். அவன் கேட்டதும் அன்று சாராவுடன் நடந்த சம்பவத்தை பற்றி அனைத்தையும் கூறி முடித்தவள், “ அந்த பொண்ணு சரியான திமிர் புடிச்ச பொண்ணு போல அதுவும் பணக்கார திமிர். அவங்கள மட்டும் சொல்ல முடியாது இங்க பணக்காரங்க எல்லாரும் ஏழையா இருக்குறவாங்கள பாத்தா இப்படி தான் நடந்துக்கறாங்க.... அதுனால தான் நான் இந்த மாதிரி ஹை சொசைட்டிள இருக்குறவாங்க கிட்ட எந்த ரிலேஷன் ஷிப் வச்சிக்கறது இல்ல..... எல்லாருமே அந்த மாதிரின்னு நான் சொல்ல வரவில்லை. ஆனா நான் சந்திக்கறவங்க எல்லாரும் அப்படி தான் இருக்காங்க என்ன பன்றது “ என்று கூறிக் கொண்டிருந்ததை கேட்ட ஆதிக்கு மனதில், “ அப்படினா நம்ம ஆளுக்கு பணக்காறங்கன்னா அவ்வளவுவா பிடிக்காது போலயே.... அப்போ நம்மள பத்தி தெறிஞ்சா....நம்ம உறவு ஆரம்பிக்கும் போதே முடிஞ்சிடும்.... இப்போ என்ன பன்றது..... இப்போதைக்கு இதப்பத்தி நம்ம எதுவும் சொல்லாம இருக்கரது நல்லது... முதல்ல அவ மனசுல என்ன இருக்குன்னு தெரிஞ்சிப்போம் அதுக்கப்பறம் பாத்துக்கலாம் ‘ என்று தோன்றியது.


அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லையே என்று அவனை பார்த்த போது அவன் வேறு ஒரு சிந்தனையில் இருப்பது போல் தோன்றியதும் தான் எதற்கு வந்தோம் அதை விட்டு விட்டு தேவையில்லாததை பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம் என்பதே அவளுக்கு தெரிந்தது. உடனே விரலை சொடக்கி நிகழ் உலகத்திற்கு கொண்டு வந்தவள் தன்னுடைய பேக்கில் இருந்து அவன் வாட்சை எடுத்து அவன் புறம் வைத்தவள், “ சாரி தேவை இல்லாதத பேசிட்டு வந்த வேலையை மறந்துட்டேன்.... இது என்னன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா உங்களோடது தான் அன்னிக்கு நீங்க மண்டபத்தில விட்டுடீங்க அப்போவே கொடுக்கனும்ன்னு நினைச்சேன் மறந்துட்டேன். அடுத்தவங்க பொருள வச்சிக்கிட்டு எனக்கு பழக்கம் இல்லை அன்னையில இருந்து இதை உங்க கிட்ட கொடுக்கனும்ன்னு பத்திரமா வச்சிருந்தேன்... இப்போ தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு “ என்று புன்னகையுடன் கூறியவளை பார்க்கும் போது அவன் மனதில் தோன்றியது என்னவென்று அவனுக்கு புரியவில்லை ஆனால் நேற்றிலிருந்து இருந்த மகிழ்ச்சி குறைவது போல் இருந்தது.


ஆதி, “ இந்த வாட்ச்சா என் கிட்ட கொடுக்கனும்ன்னு தான் என்னை தேடுனியா.... இல்ல வேற எதாவது இருக்க “ என்று ஒரு சிறு எதிர்ப்பார்ப்போடு அவளை கேட்டான்.


வானதி, “ இல்லை இன்னும் ஒரு விஷயம் இருக்கு.... அது தான் ரொம்ப முக்கியமானது “ என்று கூறியவளை ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தான். மேலும் அவனிடம், “ உங்களுக்கு என்னோட மனமார்ந்த நன்றி நன்றி.... இன்னும் உங்களுக்கு எத்தனை தடவை நன்றி சொன்னாலும் பத்தாது. நான் இப்போ உங்க முன்னாடி முழுசா உயிரோடு இருக்கேன்னா அதுக்கு நீங்க தான் காரணம்... இந்த நன்றி உணர்வு என் வாழ்நாள் முழுக்க இருக்கும்....அன்னிக்கே உங்ககிட்ட சொல்லனும்ன்னு நினைச்சேன் ஆனா என்னால சொல்ல முடியல.....அதனால தான் இப்போ சொல்றேன். இதுக்கு பிரதிபலனா என்னால எதுவும் செய்ய முடியாது அதுக்கு ஈடாகவும் அது இருக்காது இருந்தாலும் எதுவும் செய்யாம என்னால இருக்கவும் முடியாது. அதனால உங்களுக்கு என் கிட்ட இருந்து எதாவது வேனும் அப்படினா எப்பவேணாலும் கேக்கலாம் “ என்றவளை பார்க்கும் போது உண்மையில் ஆதிக்கு கோவமாக வந்தது. தான் நினைத்தது ஒன்று ஆனால் நடந்தது வேறு ஒன்றாக இருந்தது. அவனுடைய கற்பனைகள் அனைத்தும் அழிந்தது போல் இருந்தது. இப்போது என்ன செய்வது என்று யோசித்தவன் முதலில் அவள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் அப்போது தான் காதலை கூறும் போது அவள் சம்மதிப்ப்பாள். இப்போதைக்கு என்ன நடக்கிறதோ அது நடக்கட்டும் அதன் போக்கிலே செல்வோம் என்று நினைத்தான்.


ஆதி, “ அப்படினா உன் கிட்ட என்ன கேட்டாலும் நீ தருவியா... ஒரு வேள நீ கொடுக்க முடியாததா இருந்தா “.


வானதி, “ இந்த வானதி சொன்னா சொன்னது தான்.... நீங்க என்ன கேட்டாலும் அதை நான் மறுக்காம கொடுப்பேன் இது நான் உங்களுக்கு கொடுக்குற வாக்கு “ என்றாள் உறுதியாக. அதை கேட்டவனுக்கு எதையோ சாதித்த திருப்தி அவன் கண்ணில் தெரிந்தது.


ஆதி, “ சரி இந்த வரத்தை நான் ஏத்துக்கறேன்.... அப்பறம் தசரதன் மாதிரி கொடுத்த வரத்தால உனக்கு கஷ்டம் வந்துற கூடாது இல்லையா அதான் கேட்டேன். அதுக்கு அப்பறம் உன் இஷ்டம்...இப்போவது உன்னப்பத்தி சொல்லலாம் இல்லையா “ என்று அவளை பற்றி அனைத்தும் தெரிந்திருந்தும் அவள் மூலமாக தெரிந்து கொள்ள கேட்டான்.


முதலில் அவன் கூறியதை கேட்டு அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது. கொடுத்த வரத்தால் அப்படி என்ன நேர்ந்து விடும் என்று நினைத்தாள். ஆனால் அவளுக்கு தெரிய வில்லை அந்த வரத்தால் எனென்ன நிகழ போகிறது என்று அது வரமா இல்லை சாபமா என்று அதை பெற்றுக் கொண்டவர் கேட்பதில் தான் உள்ளது.


பிறகு தன்னுடைய பெயர், வேலை என அனைத்தையும் அவனிடம் பகிர்ந்து கொண்டவள் அவனை பற்றி கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும் அவளிடம் என்ன கூறுவது என்றே அவனுக்கு தெரியவில்லை அவன் முழு பெயரை சொன்னால் அவன் யார் என்று அவளுக்கு தெரிந்து விடும் இப்போது என்ன செய்வது என்று நினைத்தவன். ஆதி, “ என்னோட பெயர் அருள்மொழி... “ என்று அவன் கூறும் போது அந்த ஹோட்டலில் வேலை செய்யும் மேனேஜர் அங்கு பதட்டத்துடன் வேகமாக வந்து, “ சார்.... சாரி...சார்... ரொம்ப முக்கியமான விஷயம்.... அதனால தான் உங்கள தொந்தரவு பண்ண வேண்டியதா ஆயிடுச்சி... “ என்று பயத்துடன் அவனிடம் கேட்டவனை பார்த்த ஆதிக்கு உண்மையில் பயங்கரமாக கோவம் வந்தது எங்கே அவளுக்கு எதாவது தெரிந்துவிடுமோ என்று அதே போல் வானதியும் அவனையே ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருப்பதால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை இல்லை என்றால் அவனுக்கு இருந்த கோவத்திற்க்கு எதிரில் நிற்பவன் நிச்சயம் அடி வாங்கி இருப்பான். இருந்தும் பொறுமையை வரவழைத்து கொண்டு அவனை மேலே சொல்லுமாறு சைகை செய்தான்.


அந்த மேனேஜர் சற்று பயத்தோடு, “ சார்.... நம்ம ஹோட்டல்ல இருந்து மூணு வேலையும் ஆசிரமங்களுக்கு சாப்பாடு குடுப்போம் சார்....அதை நைட் அனுப்பறதுக்கு உங்க கிட்ட சைன் வாங்கள.....இன்னும் ஒரு முக்கியமான பைல்லா சைன் வேனும்......அதனால தான் இப்போ.... “ என்று தயங்கியப்படியே பேப்பரை நீட்டியவனை முறைத்தப்படி கையில் வாங்கி கையெழுத்துட்டு கொடுத்து அவனை அனுப்பி வைத்தான். இப்போது இவளை எப்படி சாமாளிப்பது என்று நினைத்துக் கொண்டே அவளை பார்த்தான். அவளும் அவனையே சந்தேகமாக பார்த்து கொண்டிருந்தாள்.


வானதி, “ நீங்க இங்க வேலை பாக்குறிங்களா “ என்று சந்தேகமாக கேட்டாள். அவள் அவ்வாறு கேட்டதும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது. அவனும், “ ஆமா இங்க தான் வொர்க் பன்றேன்... என்னோட பாஸ் இங்க அடிக்கடி வர மாட்டாரு.... அதனால தான் நான் இதெல்லாம் பாக்க வேண்டியதா இருக்கு.... மொத்ததுல அவரும் நானும் வேற வேற இல்லை....ரெண்டு பேருமே ஒன்னு தான் “ என்று அவளிடம் கூறி சமாளித்தான். அவளும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆள்பவனாக இருப்பான் என்ற எண்ணம் அவளுக்கு தோன்ற வில்லை அதற்கு பணக்காரர்களை வெறுக்கின்ற என்று அவளின் எண்ணம் கூட காரணமாக இருக்கலாம்.


சிறிது நேரத்திற்கு பிறகு அவள் கிளம்புவதாக கூறி விட்டு அங்கிருந்து எழுந்தாள். அவனும் அவளுடன் எழுந்து, “ இனிமே நம்ம நல்ல நண்பர்களா இருக்கலாமா “ என்று அவளை கண்ணோடு கண் பார்த்து கேட்டான். அவனின் கண்ணை பார்த்து கொண்டிருந்தவளுக்கு வேண்டாம் என்று கூறி அவன் மனதை நோக அடிக்க ஏனோ மனசு வரவில்லை அதனால் அவளும் சரி என்று தலையசைத்தாள். அதை கண்டவனுக்கு சந்தோஷமாக இருந்தது எப்படியாவது அவளின் மனதில் இடம் பிடித்து விட்டு பிறகு தன்னுடைய காதலை கூற வேண்டும் என்று நினைத்தவன் அவளுக்கு சிரிப்புடனே அடுத்தமுறை சந்திப்போம் என்று கூறி விடை கொடுத்தான்.


வானதியும் சிரித்தப்படியே திரும்பியவள் அதிர்ச்சியுடன் அங்கயே நின்றாள். கிளம்பியவள் செல்லாமல் எதை கண்டு அதிர்ச்சியுடன் நிற்க்கிறாள் என்று அவள் பார்வை சென்ற திசையை பார்த்தவனும் சிறிது அதிர்ச்சி அடைந்தான். இருவரும் அதிர்ச்சி அடையும் அளவிற்க்கு அவர்கள் கண்டது என்னவாக இருக்கும்.... வானதியின் ஆதியுடனான இந்த சந்திப்பு இனி காதலாக மாறுமா.....


அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்

தொலைவில் தெரிந்தாள்

மறுநிமிடம் கண்களில் மறையும்

பொய்மான் போல் ஓடுகிறாய்


அவளுக்கும் எனக்கும் நடுவினிலே

திரையொன்று தெரிந்தது

எதிரினிலே முகமூடி அணிந்தால்

முகங்கள் தெரிந்திடுமா....


நிஜத்தை தேடும்...


இந்த கதையின் கருத்துக்களை

"என் நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....










 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11


ஆதியிடம் விடைப்பெற்றுக் கொண்டு திருப்பும் போது அதே நேரம் மித்ராவும் கதிரும் ஒன்றாக கைக்கோர்த்துக் கொண்டு சிரித்தப்படியே ஹோட்டல்க்குள் நுழைவதைக் கண்ட வானதிக்கு அதிர்ச்சியாக இருந்தது மேலும் அவர்கள் இருவரும் அங்கிருந்த ஒரு டேபிளில் அமர்ந்து கண்களில் காதலோடு பேசிக் கொண்டிருப்பதை பார்த்தவளுக்கு புரிந்து விட்டது. வெளியே செல்ல கிளம்பியவள் அதிர்ச்சியுடன் நிற்பதை கண்ட ஆதி இவள் எதை பார்க்கிறாள் என்று அந்த திசையை பார்த்தவன் மனதில், ‘ அடப்பாவி எனக்கே தெரியாம ஆபீஸ்ல ஒரு காதல் படம் ஒடிருக்கு போலயே.... இப்ப இவ என்ன பண்ண போறான்னு தெரிலயே ‘ என்று நினைத்தான். அவர்களை பார்த்து கொண்டிருந்த வானதி அங்கிருந்து வேகமாக சென்று விட்டாள். அவள் செல்வதை கண்டவன் தன்னுடைய வேலையை பார்க்க சென்று விட்டான்.


வீட்டிற்கு வந்த வானதிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அவள் இந்த விஷயத்தை கூறாமல் இருந்ததற்கும் எதாவது காரணம் இருக்கும் என்று நினைத்தவள் அவள் வருவதற்காக காத்திருந்தாள்.



சாராவும் ஷர்மிளாவும் சிறு வயதிலிருந்தே ஒன்றாக படித்தவர்கள் பிறகு காலேஜ் படிக்கும் போது வெவ்வேறு துறையை எடுத்ததால் பிரிந்து விட்டனர். அவ்வப்போது நடக்கும் ப்ரெண்ட்ஸ் கெட் டுகெதெரில் சந்திப்பதோடு சரி அதன் பிறகு அவர்கள் சந்திப்பதில்லை . ஷர்மிக்கு சாரா மேல் பெரிதாக எந்த அபிப்ராயமும் இல்லை அவள் கொஞ்சம் திமிர் பிடித்தவள் என்று அவளுக்கு நன்றாக தெரியும் அதனால் கொஞ்சம் தள்ளியே இருப்பாள். கொஞ்ச நாட்களாக சாரா அவளிடம் தன்னுடைய நட்பை பயன்படுத்தி அவள் மூலமாக ஆதியை திருமணம் செய்ய திட்டம் தீட்டி கொண்டிருந்தாள். இருவரும் ஒரே ஸ்டேட்டஸ் என்பதால் இதற்கு அவள் கண்டிப்பாக சம்மதிப்பாள் அவள் மூலம் நமக்கு எந்த தடையும் இருக்காது நமக்கு உதவியாகவே இருப்பாள் என்று எண்ணினாள். இன்று எப்படியாவது அவளிடம் பேச வேண்டும் என்பதற்காக அவர்களின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறாள். அவளின் கார் வர்மா பேலஸ்க்குள் நுழைந்தது. அந்த பிரம்மாண்டமான வீட்டை பார்க்கும் போது இந்த அரண்மனைக்கு தானே ராணியாக இருக்க வேண்டும் என்ற அவளின் எண்ணம் வலுப்பெற்றது.


ஹாலில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்த ஷர்மிளா தீடீரென்று வந்த சாராவை கண்டு சற்று அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவளை உள்ளே அழைத்து அமர வைத்து உபசரித்தாள்.


ஷர்மி, “ எப்படி இருக்க சாரா.... பாத்து ரொம்ப நாளாச்சு வீட்டுக்கு வரேன்ன்னு சொல்லவே இல்லை... “ என்று கேட்டாள்.


சாரா, “ நல்லா இருக்கேன் ஷர்மீ ... எனக்கு இந்த சுத்தி வளைச்சி பேசறது எல்லாம் பிடிக்காது நான் நேரடியா விஷயத்துக்கே வரேன்... உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்னு பேசனும் “ என்று அவள் சொன்னதை கேட்ட ஷர்மிக்கு குழப்பமாக இருந்தது. இவள் காரணம் இல்லாமல் இங்கு வந்திருக்க மாட்டால் அது என்னவாக இருக்கும் என்று அவளால் யூகிக்க முடியவில்லை அதனால் அவளிடமே அதை கேட்டாள், “ என்ன விஷயம் சாரா சொல்லு... அதுவும் என்னை தேடி வர அளவுக்கு அப்படி என்ன விஷயம் “ என்றாள்.


சாரா, “ அது வேற ஒன்னும் இல்லை ஷர்மீ நான் உன்.... அண்ணன எனக்கு பிடிச்சிருக்கு... அவர நான் கல்யாணம் பன்னிக்கனும் ஆசைப்படுறேன்.. இத அவர் கிட்ட சொல்ல தயக்கமா இருந்தது. அதான் உன்கிட்ட சொல்றேன் நீ தான் எப்படியாவது ஆதிக்கிட்ட பேசி எங்க கல்யாணத்த நடத்தி வைக்கனும் “ என்றாள்.



அவள் கூறியதை ஜீரணிக்கவே ஷர்மிக்கு சிறிது நேரம் பிடித்தது. அவளுக்கே இந்த விஷயம் பிடிக்க வில்லை என்கிற போது இதை எப்படி அண்ணன் கிட்ட பேச முடியும் அதுவும் அவர் மனதில் வேறு ஒருவர் இருக்கும் போது தன்னால் இதில் எதுவும் செய்ய முடியாது. இப்போது அவளை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்த போது சரியாக அதே நேரம் ஆதியும் ஷக்தியும் ஒன்றாக வீட்டிற்க்குள் நுழைந்தனர். அவள் அமர்ந்திருப்பதை கண்ட ஆதி எதுவும் கூறாமல் மாடி ஏறப்போகும் போது அவன் அருகில் எழுந்து வந்த சாரா, “ ஆதி ஒரு நிமிஷம் உங்க கிட்ட கொஞ்சம் பேசனும் “ என்றவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் அவள் பின்னாடி நின்று கொண்டிருந்த ஷர்மிளாவை இவள் யார் என்பதை போல் பார்த்தான். அதை புரிந்து கொண்டவள் அவன் அருகில் வந்து, “ அண்ணா...... அது இவ என் ப்ரெண்டு பெயர் சாரா... எஸ். எஸ். கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் விஸ்வநாதன் தான் இவ அப்பா.....இவ உங்க கிட்ட ஏதோ பேசனுமா “ என்று தயங்கியப்படி கூறியதை கேட்டவன்.
சாராவை பார்த்து சொல்லுமாறு சொன்னான். அவளும் இதை தவறவிட்டால் இது போல் ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது இன்றே அவனிடம் கூற வேண்டும் என்று முடிவெடுத்தவள் , “ அது...வந்து...நான் இதை உங்ககிட்ட ரொம்ப நாளா சொல்லனும்ன்னு முயற்சி பன்னிட்டு இருக்கேன். ஆனா உங்கள சந்திக்கவே முடியல....இப்ப சொல்றேன்.... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு.... உங்கள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுரேன்.....” என்றவளை ஆதியின் கோவமான “ ஸ்டாப் இட் “ என்ற குரல் தடுத்து நிறுத்தியது.



முதலில் அவள் ஆரம்பிக்கும் போது அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவன் போக போக அவள் கூறியதை கேட்டவுடன் அவனுக்கு பயங்கரமாக கோவம் வந்தது. மேலும் அவள் பேசுவதை கேட்க முடியாமல், “ இதுக்கு மேல எதாவது பேசுன நான் மனுஷனா இருக்க மாட்டேன் “ என்று கண்கள் சிவக்க ஆவேசமாக கத்தியவனை பார்த்து கொண்டிருந்த சாரா பயத்தில் ஒரடி பின்னால் நகர்ந்தாள் இருந்தாலும் தைரியத்தை வரவழைத்து கொண்டு அவனிடம் பேசலாம் என்று வாயை திறக்கும் போது அவளை பேசவிடாது கையை நீட்டி தடுத்தவன், “ நான் யார கல்யாணம் பன்னிக்கனும்ன்னு நான் தான் முடிவு பன்னனும்.... உன்னை பத்தி எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இருக்கியா... எல்லாமே தெரியும்.... இன்னொரு தடவை இந்த மாதிரி உளறிக்கிட்டு என் முன்னாடி வந்த....அப்பறம் இனி என்னை பெயர் சொல்லி கூப்புடுற வேலை வச்சிக்க கூடாது எ. வி ( A. V) ன்னு சொல்லு.... என்னப் புரிஞ்சிதா....“ என்று அவளை தான் விரலை நீட்டி எச்சரித்தவன் வேகமாக படியெறி சென்று விட்டான். அவனை சமாதானம் செய்ய ஷக்தியும் பின்னாடியே சென்றான்.


அவன் தன்னை ஒரு பொருட்டாக கூட மதிக்காததை சாராவால் தாங்கி கொள்ள முடியாவில்லை இதுவரை அவளிடம் இது போன்று யாரும் எடுத்தெறிந்து பேசியது இல்லை அங்கிருந்து வேகமாக தன் காரை எடுத்து கொண்டு சென்று விட்டாள். ஷர்மீயால் இருவரில் யாரை சமாதானம் செய்வது என்று தெரியாமல் அங்கையே அமர்ந்து விட்டாள். மேல் தளத்தில் இருந்த பால்கனியில் நடந்து கொண்டிருந்தவன் அருகில் வந்த ஷக்தி, “ எதுக்கு இவ்வளவு கோவம் ஆதி.... பாவம் அந்த பொண்ணு “ என்றவனை கோவமாக முறைத்தவன், “ அவ பாவமா.... நீ பாத்த..... அவளுக்கு எவ்வளவு தைரியம் என்க்கிட்டயே வந்து இப்படி பேசறதுக்கு....அவளுக்கு பாவம் பாத்தா அப்பறம் நம்ம நிலைமை பரிதாபமா மாறிடும்..... இது எல்லாம் அவங்க அம்மாவோட ஐடியாவா இருக்கும். அவங்க பேமிலி பத்தி எனக்கு நல்லா தெரியும் விஸ்வனாதன் இப்படி இருக்கார்னா அதுக்கு அவர் மனைவியோட பணத்து ஆசை தான் காரணம்.... ச்சா நல்ல மூட்ல வந்தேன் எல்லாம் கேட்டு போச்சு “ என்றான் எரிச்சலாக. அவன் கூறுவதும் சரியாக தான் இருந்தது இப்ப இவனை எப்படி சமாதானம் செய்வது என்று அப்போது தான் அவன் வானதியை சந்திக்க சென்றதே நியாபகம் வந்தது உடனே, “ ஆதி நீ சிஸ்டர் பாத்தியா... என்ன ஆச்சி “ என்று ஆவலாக கேட்டான். அவன் வானதியை பற்றிய பேச்சை எடுத்ததும் எரிமலையாக இருந்தவன் பனிமலையாக உருகிவிட்டான். முகத்தில் ஒரு மென்னகையோடு இன்று நடந்த அனைத்தையும் கூறினான். அவன் கூறுவதை பொறுமையாக கேட்டவன், “ ஏன்.... ஆதி சிஸ்டர் கிட்ட உன்னப்பத்தி எதுவும் சொல்லாம வந்துட்ட “ என்று கேட்டான்
ஆதி, “ பின்ன வேற என்ன பண்ண சொல்ற. .. அவக்கிட்ட நான் யாருன்னு சொல்லி இருந்தா அவ்வளவு தான் இன்னிகே எங்க உறவு முடிஞ்சி இருக்கும் அதனால தான் சொல்லல...இப்போ நான் சந்தோஷமா இருக்கேன் ஷக்தி.... நீ கவலப்படாதிங்க நான் என்னை பத்தி கண்டிப்பா அவக்கிட்ட சொல்லிடுவேன் “ என்று உறுதியாக கூறியவனிடம் ஷக்தியால் எதுவும் கூற முடியாமல் அங்கிருந்து சென்று விட்டான். கீழே சென்ற ஷக்தி ஷர்மிளாவிடம் அனைத்தையும் தான் பார்த்து கொள்வதாக கூறி சமாதானம் செய்து அழைத்து சென்றான்.


இரவு தாமதமாக வந்த மித்ரா அறைக்குள் சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சாப்பிட வந்தவள் அங்கு அமைதியாக எல்லத்தையும் எடுத்து வைத்து கொண்டிருந்த வானதியை பார்த்து, “ சாரி ஆரூ... ஆபீஸ்ல கொஞ்சம் வேலை அதான் வர லேட் ஆயிடுச்சு “ என்று கூறியவளூக்கு எந்த பதிலும் சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் வானதி. அவள் அமைதியாக உண்பதை கண்ட மித்ராவுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்றியது அதனால் அவளும் எதுவும் பேசாமல் சாப்பிட்டாள்.



எல்லா வேலையையும் முடித்த வானதி தன் அறைக்குள் செல்ல திரும்பும் போது , “ ஆரூ என்னாச்சி எதாவது பிரச்சனையா “ என்று கேட்டவளிடம் எதுவும் கூறாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள் வானதி.


“ அதான் நான் ஆபீஸ்ல வேலை இருந்தது அதனால தான் லேட் ஆயிடுச்சுன்னு சொன்னேன்ல அப்பறம் என்ன “ என்று கேட்டவளை பார்த்து தன்னுடைய கைகளை கட்டிக் கொண்டு, “ அப்படியா உங்க ஆபீஸ் இப்போ ஹோட்டல்க்கு மாத்திட்டாங்களா என்ன என்கிட்ட நீ சொல்லவே இல்லை “ என்றவளை அதிர்ச்சியுடன் பார்த்தாள் மித்ரா.


அவள் அவ்வாறு நிற்பதை பார்த்த வானதி, “ இன்னும் உனக்கு புறியலையா.... நேரடியா சொல்லனும்னா.... நானும் அந்த இடத்தில் தான் இருந்தேன்..... அங்க நடந்த எல்லாத்தையும் பாத்துட்டேன் போதுமா இல்ல இன்னும் எதாவது சொல்லனுமா “ என்று பாதியில் நிறுத்தியவள் அவள் அருகில் வந்து, “ நான் எப்படி அங்க வந்தேன்ன்னு உனக்கு குழப்பமா இருக்குல.... நானே உன்கிட்ட இதப்பத்தி பேசனும்ன்னு நினைச்சேன் ஆனா அது இப்படி ஆகும்ன்னு நினைக்கள “ என்றவள் நேற்று ஆதியை சந்தித்ததில் இருந்து இன்று மாலை வரை நடந்தது அனைத்தையும் விவரமாக உறைத்தாள். அவள் கூறியதை முழுவதுமாக கேட்ட மித்ராவுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது அவள் வேண்டும் என்று எதையும் வானதியிடம் மறைக்க வில்லை ஆனால் சந்தர்ப்பம் அமையவில்லை என்பது தான் உண்மை. இப்போது அவளை எப்படியாவது சமாதானம் செய்தே ஆக வேண்டும் என்று எண்ணியவள் அவளிடம் சென்று அவளுடைய கையை பற்றியப்படி , “ உன்கிட்ட மறைக்கனும்ன்னு நினைச்சி எல்லாம் நான் எதுவும் மறைக்கலை ஆரூ... ப்ளீஸ் என்னை மன்னிச்சிடு.... எனக்கு கொஞ்சம் தயக்கமா இருந்தது..... இதப்பத்தி சொன்னவுடனே நீ என்னை தப்பா நினைச்சிடுவியோன்னு தான் எனக்கு பயமா இருந்தது “ என்று தயங்கியவளின் பிடியில் இருந்து தன்னுடைய கையை விடுவித்து கொண்ட வானதி, “ நான் உன் காதல் வாழ்க்கைக்கு ஒரு தடையா இருப்பேன்ன்னு நினைச்சியா மித்ரா.... நீ என்னை புரிஞ்சிக்கிட்டது இவ்வளவு தானா.... நான் கூட நீ சொல்லாததுக்கு முக்கியமான காரணம் இருக்கும்ன்னு நினைச்சேன் ஆனா அதுக்கு நானே காரணமா இருப்பேன்ன்னு கனவுல கூட நினைக்கல “.


மித்ரா, “ இல்லை ஆரூ.... நான் அந்த அர்த்ததுல சொல்லல.... உனக்கு இந்த காதல் கல்யாணம் இது மேல எல்லாம் நல்ல அபிப்பிராயம் இல்லை அதனால தான் எனக்கு கொஞ்சம் யோசனையா இருந்தது “ என்றவளை கண்களில் ஒரு வித வலியோடு பார்த்த வானதி லேசாக சிரித்தப்படி, “ நீ சொன்னத கேட்டவுடனே என் மனசுக்கு சந்தோஷமா இருக்கு....... எனக்கு அதுல எல்லாம் பெறுசா விருப்பம் இல்ல அப்படின்றது உண்மை தான் அதுக்காக உனக்கு பிடிச்சி இருந்தா நான் வேண்டாம்ன்னா சொல்ல போறேன்.... நான் தான் உன்னை என் தோழி அப்படின்றதுக்கு மேல என்னோட கூட பிறந்தவள பார்த்தேன் ஆனா நீ என்ன அப்படி நினைக்கலன்னு இப்ப தான் புரிது.... நீ என்னை பத்தி உயர்வா நினைச்சதுக்கு ரொம்ப நன்றி..... எனிவே உன் வாழ்க்கை நீ ஆசைப்பட்டது போல அமைய என்னோட வாழ்த்துக்கள் “ என்றவள் தனது அறையை நோக்கி செல்ல இருந்தவள் பின்னாடியே சென்ற மித்ரா, “ ஆரூ ஏன் இப்படி எல்லாம் பேசுற எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உனக்கு என் மேல கோவமா இருந்தா நாலு அடி வேணா அடிச்சிக்கோ ப்ளீஸ் “ என்று கெஞ்சியவளை பார்த்த வானதி, “ எனக்கு உன் மேல எந்த கோவமும் இல்லை.... அப்படியே கோவப்படனும்ன்னா உன் மனசுல இப்படி ஒரு எண்ணம் தோன்றதுக்கு காரணமா இருந்த என் மேல தான் படனும்.....அதனால இதைப்பத்தி கவலப்படாம போய் தூங்கு.... எனக்கும் கொஞ்ச வேலை இருக்கு “ என்று சொல்லி முடித்தவுடன் அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்.


வெளியே நின்று கொண்டிருந்த மித்ராவுக்கு அவள் மனதில் என்ன இருக்கிறது அவளை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே அவளது அறைக்குள் சென்றாள். அறைக்குள் நுழைந்த வானதிக்கும் மித்ராவிடம் இப்படி நடந்து கொண்டதை நினைத்து வருத்தமாக இருந்தது. இருந்தாலும் அவள் மனதில் இருப்பதை அவளால் கட்டுப்படுத்த முடியாமல் தான் அவ்வாறு நடந்து கொண்டாள். அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த வானதியின் கைப்பேசியில் மெசேஜ் வந்ததற்காக ஒரு முறை அதிர்ந்து அடைந்தது. அவள் எடுத்து பார்த்த போது அதில் ஆதி தான் குட் நைட் என்று அனுப்பி இருந்தாள். அதை பார்க்கும் போது அவள் மனதில் இவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் தளர்ந்தது போல் இருந்தது. பதிலுக்கு அவளும் குட் நைட் என்று அனுப்பினாள். பிறகு அவனுடைய என்னை அவள் கைகள் அவளறியாமலே அருள் என்ற பெயரில் சேமித்து வைத்தது. இதுவரை தோன்றாத ஓர் உணர்வு அவளை ஆட்க்கொண்டது.


அதே நேரம் அவளுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தாலும் அவள் அதைப் பார்ப்பாளா தனக்கு பதில் அனுப்புவாளா என்று போனையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு அவளுடைய பதிலை பார்த்தவுடன் சிறு பிள்ளையை போல் அவன் உள்ளம் துள்ளி குதித்தது. அவளது பெயரை என்னவாக சேமிப்பது என்று யோசித்தவனுக்கு ஒரு பெயர் தோன்றியது. அவன் பெயரின் முதல் எழுத்தும் அவள் பெயரின் கடைசி எழுத்தையும் ஒன்று சேர்த்து ஆதி என்ற அவனின் பெயரையே சேமித்தான். அவனே அவளாக மாறி பல நாட்கள் ஆகி விட்டதால் அது ஒன்றும் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை. அவனை பொறுத்தவரை அவனின் ஆதியும் அந்தமுமாக அவளே நிறைந்திருக்க வேண்டும் என்பதால் அந்த பெயரை தேர்ந்தெடுத்தான். அந்த பெயரை அவனுடைய டிஸ்ப்லேவில் பார்க்கும் போது என்னவென்று வரையறுக்க முடியாத ஒரு உணர்வு அவனை ஆட்க்கொண்டது.


இன்று இருவரின் எண்ணமும் ஒன்றினைந்தது போல் இவர்களது வாழ்க்கையும் இணையுமா என்று பொருத்திருந்து காண்போம்....



என் ராத்திரியில் உன் சூரியனை

எதற்காக எறிய விட்டாய்....

என் கனவுகளில் உன் நிலவுகளை

எதற்காக கருக விட்டாய்....

எனது தோட்டம் உனது பூக்கள்

எதற்காக உதிர விட்டாய்....


மனதோடு மணல் மேடு எதற்காக

செதுக்கி விட்டாய்....

எனது காற்றில் உனது மூச்சை

எதற்காக அனுப்பி வைத்தாய்....

உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன்

நீ தூக்கி விட்டாய்....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின் கருத்து

திரியில் மறக்காமல் பகிர்ந்து

கொள்ளுங்கள்....

.
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12


ஆதியின் வீட்டில் இருந்து வேகமாக தன்னுடைய வீட்டிற்கு சென்ற சாரா ஹாலில் அமர்ந்திருந்த சந்திரிகாவை கண்டு கொள்ளாமல் மேலே உள்ள அவளுடைய அறைக்கு சென்றாள். அங்குள்ள இருக்கையில் அமர்ந்தவளுக்கு அங்கு நடந்த அனைத்தும் அவள் கண் முன் படமாக விரிந்தது. சிறு வயதிலிருந்தே அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் அடைந்தே பழக்கப்பட்டவள் ஆனால் இன்று அவள் நிராகரிக்கப்பட்டதை அவளால் தாங்க முடியவில்லை மனம் முழுவதும் கோவம் தீயாக கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. அதன் தாக்கத்த அவளால் தாங்க முடியாததால் அங்கிருந்த பொருள்கள் அனைத்தையும் உடைத்து கொண்டிருந்தாள். கீழே இருந்த சந்திரிகாவிற்கு முதலில் ஒன்றும் புரியவில்லை வீட்டிற்க்கு உள்ளே நுழைந்தவள் தன்னிடம் எதுவும் பேசாமல் சென்றதை கண்டு யோசித்து கொண்டிருந்த போது மேலே அவளின் அறையில் இருந்து பொருட்கள் உடையும் சத்தத்தில் வேகமாக சென்ற போது அங்கு முகம் பார்க்கும் கண்ணாடியை உடைக்க கையை ஓங்கிய சாராவை தடுத்து நிறுத்தினார்.


அவளை பெட்டில் அமர வைத்து விட்டு, “ என்னாச்சி சாரா..... எதுக்கு இவ்வளவு கோவம் “

சாரா, “ இன்னும் என்னாகானும்.... நான் அழகா இல்லையா, படிக்கலையா இல்ல அந்தஸ்து தான் இல்லையா இப்படி எல்லாம் இருந்தும் அவனுக்கு ஏன் பிடிக்கல “ என்று ஆவேசமாக கத்தியவளை கண்டு ஒன்றும் புரியாமல் , “ ஏன் இப்படி எல்லாம் பேசர.... என்ன நடந்ததுன்னு முதல்ல தெளிவா சொல்லு “ என்றவரிடம் ஆதியின் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள் சாரா.


சிறிது நேரம் அமைதியாக இருந்தவர், “ இங்க பார் சாரா கோவப்பட்டா நம்ம நினைச்சத சாதிக்க முடியாது.... அவன் உன்ன வேண்டாம்ன்னு சொன்னா அதுக்கு என்ன காரணம்ன்னு கண்டு பிடி.... அதுக்கு அப்பறம் அவன் மனசுல இடம் பிடிக்க என்ன செய்யனுமோ அதை செய்.... அவன் நம்ம கைப்பிடிக்குள்ள வந்ததுக்கு அப்பறம் இன்னிக்கு உனக்கு நடந்த அவமானத்துக்கு பதில் மரியாதைய சிறப்பா செஞ்சிடலாம் “ என்று தீர்க்கமாக கூறிய தன் தாயை கட்டிக் கொண்டவளுக்கு அவர் கூறியதும் சரியாக பட்டது. ஆனால் அவள் மனதில், ‘ நான் இன்னிக்கு நடந்தத மறக்கவும் மாட்டேன் ... உன்னை விடவும் மாட்டேன் ஆதி ‘.


நாட்கள் அதான் வேலையை சரியாக செய்து கொண்டிருந்தது. ஒரு செடியில் இருந்து பூ மலர்வது போல் ஆதி மற்றும் வானதியின் உறவும் அழகாக மலர ஆரம்பித்தது. முதலில் கடமைகே என்று அவன் அனுப்பும் மெசேஜ்க்கு பதில் அளித்து கொண்டிருந்தவள் இப்போது பிடித்தே அவனுடன் உரையாட ஆரம்பித்தாள். மித்ராவுடன் சிறிய மனஸ்தாபம் உள்ளதால் எப்போதும் போல் பேசினாலும் முன்னால் இருந்தது மாதிரி அவளிடம் இருக்க விடாமல் ஏதோ ஒன்று தடுத்தது. ஏற்கனவே தனிமை உணர்ந்தவள் மித்ராவுடனான நட்பில் சிறிது மாறி இருந்தாலும் இப்போது மீண்டும் அதே தனிமையில் சிக்கிக்கொண்டதை போல் இருந்தது. அந்த நேரம் ஆதியின் உறையாடலே அவளுடைய மனத்திற்கு சற்று நிம்மதியை தந்தது. அவள் அறியாமலே அவளுடைய மனம் அவன் பக்கம் சாய தொடங்கியது. ஒரு நாள் அவனுடைய மெசேஜ் வரவில்லை என்றாலும் அதற்காக காத்திருக்கும் அளவுக்கு மாறியது. ஆதிக்கும் தினமும் அவளிடம் பேசாமல் அன்றைய நாள் முற்று பெறாது. வானதிக்கு தெரியாமலே அவளை அவனுடைய பாதுகாப்பு வட்டத்திர்குள் கொண்டு வந்து விட்டான். அன்று ஹோட்டலில் சந்தித்த பிறகு அவர்கள் இருவரும் சந்திக்க வில்லை. அந்த நாளும் கூடிய விரைவில் வந்தது .


அன்று அதிகாலை வேலையில் தொழில் சம்பந்தமாக தன்னை நேற்று சந்திக்க வந்த ஒருவர் அவர்களின் நாட்டிற்கு வழியனுப்புவதற்காக விமான நிலையம் சென்று இருந்தான். அவர்கள் சென்ற பிறகு காரில் வந்து கொண்டிருந்தவனுக்கு வண்டி கடற்கரை வழியாக செல்வதை பார்த்தான். சிறிது நேரம் அங்கு காலார நடக்க வேண்டும் போல் தோன்றியதால் டிரைவரை ஒரமாக நிறுத்த சொல்லியவன் இறங்கி நடக்க தொடங்கினான். அந்த காலை வேலையில் கடற்கரை மணலில் நடப்பதும் மனதுக்கு புத்துணர்ச்சியாக இருந்தது. சுற்றி இருக்கும் சூழலை ரசித்தப்படியே நடந்து கொண்டிருந்தவன் காதில் சிறுவர்கள் ஆர்ப்பரிக்கும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் வந்த திசையை பார்த்தப்படி அங்கு சென்றான். சிறியவர்கள் மற்றும் சில பெரியவர்கள் என அனைவரும் வட்டமாக நின்று கொண்டு கைத்தட்டி உற்சாக படுத்தி கொண்டிருந்தனர். அப்படி அவர்கள் எதுக்கு இவ்வாறு செய்கிறார்கள் என்று இன்னும் கொஞ்சம் உள்ளே சென்று பார்த்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது.


ஏன்னெனில் அங்கு நடந்து கொண்டிருந்தது ஒரு சிலம்ப போட்டி ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் கையில் உள்ள கம்புகளால் சண்டையிட்டு கொண்டிருந்தனர். அந்த ஆண் யார்ரென்று அவனுக்கு தெரியாது ஆனால் அந்த பெண் வேறு யாரும் இல்லை நம் வானதி தான். அவனும் ஆர்வத்துடன் அங்கு நடப்பதை பார்க்க ஆரம்பித்தான். இருவரின் சண்டையும் உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த ஆண் தன்னுடைய முழுப்பலத்தில் கொடுக்கும் ஒவ்வொரு தாக்குதலையும் லாவகமாக எதிர்த்து பதில் அடி கொடுத்தவளை பார்க்கும்போது அவனுக்கும் மிகவும் பெருமையாக இருந்தது. அங்கு நடப்பதை தன் கைப்பேசியில் உடனே வீடியோவாக சேமிக்க ஆரம்பித்தான். வெகு நேரம் நீடித்த சிலம்ப சண்டையில் இருவருமே வெற்றி பெற்றனர். அதைக் கண்ட சிறுவர்கள் அனைவரும் பயங்கரமாக கைத்தட்டினர். சண்டையிட்ட இருவரும் ஏதோ பேசியப்படி விடைப்பெற்றனர். சிறுவர்களும் அவர்கள் பெற்றோர்களுடன் அவளிடம் சொல்லி விட்டு சென்றனர். அனைவரும் செல்வதை பார்த்தவள் தன்னுடைய புடவையை சரி செய்துக் கொண்டே திரும்பியவள் கண்ணில் சிரித்து கொண்டு ஆதி நிற்பதை கண்டவள் பதிலுக்கு சிரித்தப்படியே கையில் கம்புடன் அவன் அருகில் வந்தவள் , “ நீங்க..... இங்க எப்ப வந்திங்க “ என்று கேட்டாள்.


அதற்கு ஆதி, “ நீங்க சண்டை போட்டுட்டு இருக்கும் போதே வந்துட்டேன்.... சும்மா சொல்லக் கூடாது ரொம்ப நல்லா சிலம்பம் சுத்துற.... நான் உன்னை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் என்னை ஏதோ ஒரு வகையில ஆச்சர்யப்படுத்துற..... உனக்கு சிலம்பம் தெரியும்ன்னு ஏன்.... என் கிட்ட சொல்லவே இல்லை “ என்று கூறியவனை பார்த்து சிரித்துக் கொண்டே, “ எனக்கு சிலம்பம் தெரியுமான்னு நீங்க என்க்கிட்ட கேக்கவே இல்லையே “ என்றவள் அவன் அதற்கு முறைப்பதை பார்த்து விட்டு , “ அது ஒன்னும் இல்லை சின்ன வயசுல இருந்து கத்துக்கிட்டது இப்போ கொஞ்சம் டச் விட்டு போய்டுச்சு.... இப்ப இருக்க சூழல்ல தற்காப்பு கலை அப்படின்றது அவசியமானது அதுவும் முக்கியமா பொண்ணுங்களூக்கு ரொம்ப தேவை... அதனால தான் எங்க ஸ்கூல்ல இதை வாரத்துல மூன்று நாள் சொல்லி தரத்துக்கு ஏற்ப்பாடு பன்னியிருக்கோம்.... இங்க சொல்லி கொடுக்கறவங்க ரொம்ப வருஷமா சிலம்பம் கத்துக் கொடுக்கறவங்க.... இன்னிக்கு இங்க வந்து க்ளாஸ் வச்சிக்கலாம்ன்னு முடிவு பன்னோம்.... இன்னிக்கு பசங்கள பாத்துக்க நான் வந்தேன் அதனால தான் சும்மா ஒரு சண்டை போட்டு பாக்கலாம்ன்னு வேற ஒன்னும் இல்லை “ என்று அவள் கூறுவதை ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான் ஆதி.


ஆதி, “ இது உண்மையிலேயே ரொம்ப நல்ல விஷயம் தான்....இனிமே உன்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்.... என்னிக்கும் இல்லாமல் நான் இன்னிக்கு இங்க வந்ததும் நல்லது தான்.... இல்லனா இப்படி ஒரு காட்சி என் கண்ணுல பட்ருக்குமா “ என்று கூறியவனை பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தவளுக்கு புடவை கட்டி கொண்டு அந்த மண்ணில் நடக்க தொடங்கியதால் சற்று தடுமாறியது அதைக் கண்ட ஆதி அவள் முன்னே தன்னுடைய கையை நீட்டிவதை பார்த்த வானதி அதற்குள் தன்னை நிலைப்படுத்தி கொண்டாள். அதில் சற்று ஏமாற்றம் அடைந்த ஆதி, “ ஏன்.... என் கைய பிடிக்க கூடாத என்ன அப்ப தான் உனக்கு என் மேல நம்பிக்கை இல்லை அதனால உன்னப்பத்தி என்கிட்ட எதுவும் சொல்லல.... இப்போ என்ன “ என்று கேட்டவனை நேருக்கு நேராக பார்த்த வானதி.


“ உங்க மேல நம்பிக்கை இல்லாததால உங்க கைய பிடிக்காம இல்லை.... நிறையஇருக்கறதுனால தான் பிடிக்கல.... அதுவும் இல்லாம எனக்கு உங்க கைய பிடிக்கனும்ன்னு இப்ப தோணல “ என்றவளை விசித்திரமாக பார்த்தவன், “ நீ சொல்றத கேக்கும் போது ரொம்ப புதுசா இருக்கு... என்னை பொறுத்தவரைக்கும் நமக்கு தெரிஞ்சவங்கா யாராவது கைய நம்ம முன்னாடி நீட்டுனா பதிலுக்கு நம்மலும் கொடுக்கனும். பட் நீ சொல்றதும் சரி தான்.... இனிமே நீயா விருப்பபட்டு என் கைய்ய பிடிக்கும் போது தான் என் விரல் கூட உன் மேல படும் போதுமா “ என்று கேட்டவனுக்கு சரியென்று தலையசைத்தவள் கடலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
திடீரென்று ஆதி, “ உன் கைல இருக்க கம்பபோட இன்னொரு பக்கத்த என் பக்கமா நீட்டு “ என்றான். அவன் எதற்காக அப்படி கேட்கிறான் என்று புறியாமலேயே அவன் சொன்னதை செய்தாள். கம்போட ஒரு பக்கம் வானதி தன்னுடைய வலதுகையால் பிடிக்க இன்னொரு பக்கத்தை ஆதி தன்னுடைய இடதுகையால் பிடித்தவன், “ எனக்கு உன்னோட கைய பிடிச்சிட்டு நடக்கனும் போல இருந்தது.... நீ நினைக்கற மாதிரி தப்பான என்னத்துல இல்லை. சாதாரணமா ஒரு ப்ரெண்டோடது போல தான். ஆனா நீ தான் உனக்கு விருப்பம் இல்லைன்னு சொல்லிட்ட அதனால தான் நீ பிடிச்சிட்டு இருக்க இந்த கம்ப பிடிக்கும் போது எனக்கு உன் கைய பிடிச்ச உணர்வு எனக்கு இருக்கும் அதான் “ என்று பேசிக் கொண்டே நடந்தவன் கூறியதை கேட்டதும் முதலில் ஒன்றும் புரியவில்லை பிறகு அவன் பேசியதை கேட்கும் போது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அந்த நிமிடம் அவள் மனதில் அவன் ஆழமாக பதிந்தான்.



அந்த சூழலை இருவருக்கும் இழக்க விரும்பவில்லை போல அதனால் எதுவும் பேசாமல் நடந்து கொண்டே கடலின் கரைக்கு வந்து நின்றனர். அந்த கம்பை விடாமல் அந்த கடல் அலைகளில் காலை நனைத்து கொண்டிருந்தவர்கள் மனதும் அந்த கடலை போல மிகவும் அமைதியாக இருந்தது. அலைகள் அவள் பாதங்களை வருடி செல்வதை பார்த்த ஆதிக்கு அந்த அலையாக தான் இருக்க கூடாத என்று தோன்றியது. அது மட்டும் இல்லாமல் அவள் காலில் உள்ள ஆறாவது விரல் அவ்வளவு ஆழகாக அவனுக்கு காட்சி கொடுத்து கொண்டிருந்தது. அவளை அடையாளம் கண்டு பிடிக்க அவனுக்கு பெரிதும் உதவியது அந்த விரல் தான் அதனாலேயே அதன் மேல் அவனுக்கு அப்படி ஒரு பிடித்தம் உண்டானது. அவள் காலைப் பிடித்து அந்த விரலை தொட்டு பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது.



இன்று காலையில் சீக்கிரமாக எழும் போது கோவமாகவே எழுந்தான் ஆனால் இப்போது இந்த அழகான கடற்கரையில் மனத்திற்கு பிடித்தவளுடன் அலைகளில் கால்களை நனைத்தப்படி நிற்பது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. சிறிது நேரத்த்திற்கு பிறகு வானதி, “ ஸ்கூலுக்கு போகணும் நேரம் ஆயிடுச்சு போலாமா “ என்று கேட்டாள். அவனுக்கும் ஆபீஸ் சென்று செய்ய நிறைய வேலைகள் இருந்தது அது அப்போது தான் நியாபகம் வந்தது. அவனும் சரியென்று தலையசைத்தான். இருவரும் மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்தனர்.


ஆதி, “ ஆருந்யா.... உன் ப்ரெண்ட் மித்ரா மேல கொஞ்சம் கோவமா இருக்கேன்ன்னு சொன்னியே இப்போ அது போய்டுச்சா “ என்று கேட்டான். இது வரை அவளை யாரும் ஆருந்யா என்று அழைத்தது இல்லை இன்று அவன் அழைப்பதை கேட்கும் போது என்னென்று தெரியாமலே அது அவளுக்கு பிடித்திருந்தது.


வானதி, “ அவ மேல எனக்கு கோவமெல்லாம் ஒன்னும் இல்லை கொஞ்சம் வருத்தம் தான். என்னை அவ புரிஞ்சிக்கலையேன்னு அதுக்காக நான் அவக்கிட்ட பேசாமலாம் இல்லை பேசிட்டு தான் இருக்கேன் இருந்தாலும் மனசுல ஒரு ஒரத்துல கொஞ்சம் வருத்தம் இருக்கும்....அதுவும் சரியாயிடும். ரொம்ப நாள் அவ விட்டு என்னால ஒதுங்கி இருக்க முடியாது. ஆமா நான் கேக்க மறந்துட்டேன் நீங்க எப்படி இங்க அடிக்கடி வறுவீங்களா “ என்று கேட்டாள் .



அதற்கு என்ன பதில் சொல்வது என்று அவனுக்கு தெரியவில்லை எதாவது சொல்லி சமாளிக்க வேண்டும் அதற்காக பொய் கூற அவனுக்கு மனம் வரவில்லை.


ஆதி, “ அது தெரிஞ்சவர் ஒறுத்தர் ஊருக்கு போறார் அதான் சென்ட் ஆப் பன்னிட்டு வந்தேன். வரவழியில இங்க வந்தேன் “ என்றான்.


இப்படி பேசிக் கொண்டே இருவரும் வண்டிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அதுவரை இருவரும் அந்த கம்பை விடாமல் பிடித்து கொண்டிருப்பதை பார்க்கும் போது இருவருக்கும் சிரிப்பு தான் வந்தது. பிறகு அவளின் ஸ்கூட்டியின் அருகில் சென்றவள் அவனிடமிருந்து அந்த கம்பை வாங்கினாள். மனதே இல்லாமல் அதை அவளிடம் கொடுத்தவன் அவள் கிளம்புவதர்க்காக காத்திருந்தான். வண்டியில் ஏறி அமர்ந்தவள் ஸ்டார்ட் செய்து அவனிடம், “ நீங்களும் பாத்து வீட்டுக்கு போங்க.... அப்பறம் நான் கிளம்புறேன். பை அருள் “ என்று கூறியவள் வேகமாக சென்று விட்டாள்.


ஆரம்பத்தில் அவள் கூறியதற்கு தலையாட்டியவன் போகும் போது அவன் பெயரை முதன் முறையாக அவள் கூறியதை கேட்கும் போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் அவன் அன்னை இருந்தவரை அவனை அருள் என்று தான் அழைப்பார் அவருக்கு பிறகு யாரும் அப்படி அழைக்கவும் இல்லை அதற்கு அவன் அனுமதித்ததும் இல்லை. ஆனால் இன்று அவள் அந்த பெயரை சொன்னதை கேட்டதும் அவனுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் உணர்ச்சி குவியலாக அவள் சென்ற பாதையை பார்த்தப்படி நின்று கொண்டிருந்தான்.



வானதியின் மனதிற்குள் ஏற்ப்பட்டிருக்கும் இந்த மாற்றம் காதலில் முடியுமா அல்லது அப்படியே முற்று பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்....


கடற்கரை மணலிலே

நடந்து போனேன்

சுவடுகள் அனைத்திலும்

உன்னையே பார்த்தேன்....

கலங்கரை விளக்கமும்

விழியில் பார்த்தேன்....

அலை எது கரை எது

குளம்பியே போனேன்....


சிறகுகள் விரிக்கிறேன்

பறவையே பறவையே....

தவழ்கிறேன் குதிக்கிறேன்

மழலையே மழலையே....

அருகிலும் தொலைவிலும்

நெருக்கம் நீயே தான்....



நிஜத்தை தேடும்....



உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ என்ற கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....

 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
த்தியாயம் 13


கடற்கரையில் நடந்தவற்றை நினைத்தப்படியே வீட்டிற்குள் நுழைந்த வானதியை ஹாலில் அமர்ந்து இருந்த மித்ராவே வரவேற்றாள். அவளை பார்த்தப்பின் அறைக்குள் செல்ல இருந்தவளிடம், “ கொஞ்சம் நில்லு ஆரூ “ என்று கூறி தடுத்து நிறுத்தினாள். வானதியும் உள்ளே செல்லாமல் திரும்பி நின்றாள்.



மித்ரா, “ இன்னும் என் மேல உனக்கு கோவம் போகலியா…. நான் பன்னது தப்பு தான் “ என்றவளிடம், “ நீ பன்னதுல எந்த தப்பும் இல்ல மித்ரா அதே மாதிரி உன் மேல எனக்கு எந்த கோவமும் இல்லை போதுமா “ என்றாள் வானதி. அவள் அருகில் சென்று கையை பிடித்த மித்ரா, “ அப்பறம் ஏன் என் கிட்ட எப்பவும் போல பேச மாட்ற…. நீ என் கிட்ட பேசற தான் ஆனா அதுல ஓட்டுதல் இல்லை. என் ஆரூவால என்கிட்ட இப்படி கூட இருக்க முடியுமா ஆனா என்னால அப்படி இருக்க முடியல…. எனக்கு உன்னை தவிர இந்த உலகத்துல வேற யாரும் இல்லை நீ இதுப்போல நடந்துக்கறது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா “ என்று அழுதவளை பார்க்கும்போது வானதியால் அதற்கு மேல் அவளது பிடிவாதத்தை இழுத்து வைக்க முடியவில்லை. உடனே அவளை அங்கிருந்த இருக்கையில் அவளுடன் அமர்ந்து அவள் கண்ணீரை துடைத்து விட்டு , “ உன் கூட பேசமா இருக்கறது எனக்கு மட்டும் சந்தோஷம்ன்னு நினைச்சியா…. நீயே என்னை இப்படி தப்பா புரிஞ்சிகிட்யேன்னு எனக்கு சின்ன வருத்தம் அவ்வளவு தான். இப்ப நீ பேசலனா நானே இன்னும் கொஞ்ச நேரத்துல பேசியிறுப்ப்பேன்…. அதுக்குள்ள இப்படி அழற நான் இனிமே இப்படி பண்ண மாட்டேன் போதுமா “ என்று வானதி கூறியதை கேட்டதும் தான் மித்ராவின் முகத்தில் ஒரு தெளிவே வந்தது.



மித்ரா, “ அப்படினா இனிமே நமக்குள்ள எந்த பிரச்சனையும் இல்ல அப்படி தான “ என்று கேட்டவளிடம் ஆமாம் என தலையசைத்தவள், “ இனி எந்த பிரச்சனையும் இல்ல…. சந்தோஷம் தான் அதுவும் உன் கல்யாணத்தை பத்தினது தான். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு நிச்சயமா ஒரு நல்லவரை தான் வாழ்க்கை துணையா தேர்ந்தெடுத்து இருப்ப…. இருந்தாலும் அவரை நான் நேர்ல சந்திச்சி பேசனும் “ என்று பேசிக் கொண்டே இருந்தவளிடம், “ கொஞ்சம் பொறுமையா கூட இதை பேசலாம் அதுக்கு முன்னாடி நான் உன் கிட்ட ஒன்னு சொல்லனும்…. அது என்னனா என் கல்யாணத்துக்கு முன்னாடி உன் கல்யாணம் நடக்கனும் “ என்றவளை நிறுத்து என்ற வானதியின் குரல் தடுத்து நிறுத்தியது.
வானதி, “ மித்ரா என்ன பேச்சு இது…. இப்ப பேச வேண்டியது உன் கல்யாணத்த பத்தி தான் எனக்கு என்ன அவசரம் வேண்டியிருக்கு இதுல “.



மித்ரா, “ அவசரம் இல்லை இது அவசியம். நீ எப்பவும் தனியா நின்னுட கூடாது. உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கை துணை அமையனும் நான் நினைக்கறது ஒரு தப்பா. இங்க பாரு ஆரூ இந்த விஷயத்துல நான் உன்னவிட பிடிவாதக்காரியா தான் இருப்பேன் “



வானதி, “ கல்யாணத்த பத்தி நீ மட்டும் முடிவு பண்ண முடியாது மித்து “.



மித்ரா, “ அது எனக்கும் தெரியும். அதனால தான் அவர் கிட்ட நான் முன்னாடியே இதைப்பத்தி பேசி இருக்கேன். அவரும் சந்தோஷமா ஒத்துக்கிட்டாரு.... சோ நீ எதுவும் கவலப்படாத “.



வானதி, “ சொன்னா புரிஞ்சிக்கோ மித்ரா. நீ என்னை பத்தி கவலைப்படாத நீ உனக்கு அமைஞ்சி இருக்க வாழ்க்கையா பாரு “.



மித்ரா, “ இப்ப நான் சொல்றது தான் எப்பவும் உன் கல்யாணம் நடக்காமா நான் பண்ணிக்க மாட்டேன்” என்றாள் உறுதியான குரலில். அதை கேட்ட வானதிக்கு ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது இந்த விஷயத்தில் மித்ராவை சமாதானம் செய்வது கடினம் அதனால் இப்போதைக்கு சரியென்று சொல்லி சமாளிக்க வேண்டியது தான் என்று முடிவு செய்தவள்; “ சரி நான் கல்யாணம் பன்னிக்கிறேன் போதுமா…. ஆனா எனக்கு கொஞ்சம் டைம் குடு “ என்றவளை பார்த்து சிரிப்புடன் ஒப்புக்கொண்டாள் ஏன்னெனில் அவள் ஒத்துக்கொன்டதே பெரிய விஷயம் அதனால் மீதியை பொறுமையாக பார்த்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டாள். அறைக்குள் வந்த வானதிக்கு ஏன்னென்று தெரியாமல் திருமணம் செய்ய வேண்டும் என்று மித்ரா கூறும் போது ஆதியின் முகமே அவள் மனதில் தோன்றியது. இன்று காலையில் அவரை சந்திக்கும் போது அவர் கண்களில் புதிதாக தெரிந்த அந்த உணர்வு என்னவென்று அவளுக்கு புரியவில்லை. அது என்ன என்று இன்னும் கொஞ்சம் ஆழமாக சிந்தித்து இருந்தால் அவளுக்கே புரிந்து இருக்கும் ஆனால் அவள் அதை பற்றி எதுவும் யோசிக்காமல் அடுத்த வேலையை பார்க்க சென்று விட்டாள்.



இங்கு ஹாலில் அமர்ந்து நியூஸ் பேப்பரை படித்து கொண்டிருந்தார் சந்திரிகா. அப்போது சாரா வேகமாக கீழே ஓடி வந்தவள், “ அம்மா இங்க பாருங்க…. அப்பவே எனக்கு சந்தேகமா தான் இருந்தது அந்த ஆதி என்னை வேண்டாம்ன்னு சொல்லும் போது…. அது ஏன்ன்னு இப்போ தான் புரியிது “ என்று வேகமாக படப்படத்தவளை பக்கத்தில் அமர வைத்த சந்திரிகா, “ சாரா…. காலையிலேயே உனக்கு என்னாச்சு எதாவது கனவு கன்டியா “ என்று கேட்டார்.


சாரா, “ நான் கனவு எதுவும் காணல…. அந்த ஆதி வேற ஒரு பொண்ண லவ் பன்றார் அம்மா…. “ என்றவளை பாதியிலேயே நிறுத்தியவர், “ நீ சொல்றதை கேட்டா நம்புற மாதிரியா இருக்கு அந்த ஆதி ஒரு பொண்ணா லவ் பன்றானா…. அவன் பொண்ணூங்க கிட்ட சாதாரணமா கூட பேசி நான் பாத்ததும் இல்லை கேள்வி பட்டதும் இல்லை…. உன்னை மறுத்ததுக்கு வேற காரணம் இருக்கும் சரியா போ போய் வேற வேலை இருந்தா பாரு “ என்றார்.



சாரா, “ அம்மா நான்…. நான் தேவையில்லாம சொல்றனா…. இங்க இந்த போடோவ பாருங்க என் ப்ரெண்ட் காலையில பீச்சுக்கு போய் இருந்தப்போ எடுத்தது…. இதை பாருங்க “ என்று போனை அவரிடம் நீட்டினாள்.அதை வாங்கி பார்த்தவர் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது. அதில் ஆதியும் வானதியும் எதிர் எதிரில் சிரித்தப்படி நிற்கும் காட்சி பதிவாகி இருந்தது.



சாரா, “ பாத்தீங்களா…. என்னை பாக்கும் அலட்சியத்த காட்டுனா அந்த கண்ணு அவள பாக்கும் போது எவ்வளவு காதல் இருக்கு பாத்தீங்களா…. இதை நான் சும்மா விட மாட்டேன் “ என்று கூறிக் கொண்டிருந்தவளை இடை மறித்த சந்திரிகா, “ இதை நான் பாத்துக்கறேன்…. நீ போ “ என்று அழுத்தமாக கூறியவரை பார்த்த சாராவுக்கு ஒன்றும் புரியவில்லை அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.



அவள் சென்ற பின்னும் தன் கையில் இருந்த போடோவை பார்த்து கொண்டிருந்த சந்திரிகாவின் மனதில், “ இத்தனை நாளா உன்னை தான் நான் தேடிட்டு இருக்கேன் ஆனா நீ இந்த ஊர்ல தான் இருந்து இருக்க…. இதுவரைக்கும் உன்னோட முகத்த இவ்வளவு தெளிவா நான் பாக்கல சும்மா சொல்ல கூடாது நீ அப்படியே உன் அம்மா மாதிரியே அச்சு அசலா இருக்க பட் அதுவே உன் மேல எனக்கு கொலைவெறிய உண்டாக்குது. உன் அம்மாவாள தான் என் வாழ்க்கையில பிரச்சனை வந்தது. இப்போ உன்னால என் பொண்ணூக்கு பிரச்சனை வர நான் விட மாட்டேன். முதல்ல என்னோட கணக்க நான் தீக்கரேன்” என்று நினைத்தவருக்கு கோவம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. தன்னுடைய போனை எடுத்து அவரின் ஆட்களுக்கு சில கட்டளைகளை பிறப்பித்தார். ஆனால் இது எதுவும் அவருடைய கணவருக்கு தெரிய கூடாது என்பதில் மிகவும் தெளிவாக எப்போதும் போல் இப்போதும் தன் காய்களை நகர்த்தினார்.



மாலை ஆனதும் தன் பள்ளியில் இருந்து கிளம்பிய வானதி வழியில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி விட்டு அனைத்தையும் ஸ்கூட்டியில் வைத்து விட்டு நிமிர்ந்தவள் கண்கள் அங்கு நடக்க இருக்கும் விபத்தை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றது.


சிறிது நேரத்திற்குப் முன் அதே வழியில் தன்னுடைய வீட்டிற்கு சென்று கொண்டிருந்த ஷர்மிளாவின் கார் அதே இடத்தில் ப்ரெக் டவுன்னாகி நின்று விட்டது. டிரைவர் அதை சரிப்பார்த்தவுடன் மெக்கானிக் தான் வர வேண்டும் என்று கூறிவிட்டு மெக்கானிக்கை அழைத்து வர சென்றார். அது வரை உள்ளேயே அமர்ந்து இருக்க முடியாமல் வெளியில் வந்தவள் போனை பார்த்த்ப்படி நடத்து கொண்டிருந்தாள். அதில் சிக்னல் கிடைக்காததால் சற்று சாலைக்கு அருகில் நின்றப்படி ஷக்திக்கு முயற்சி செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தாள். அதே நேரம் அந்த வழியாக வந்த சாரா அங்கு நின்று கொண்டிருந்த ஷர்மிளாவை பார்க்கும் போது நேற்று அவளுக்கு ஏற்ப்பட்ட அவமானம் இன்று காலை அவள் பார்த்த போட்டோ என அனைத்தும் அவள் கண்முன் வந்து கோவத்தை கிளப்பியது. இவளை காயப்படுத்துவதன் மூலம் ஆதிக்கு வலிக்க செய்ய வேண்டும் என்று எண்ணம் தீடிரென தோன்றியது.



உடனே தன்னுடைய காரில் வேகத்தை கூட்டி அவளை இடிப்பதை போல் வந்து கொண்டிருந்தாள். அப்போது தான் வானதி அந்த வண்டி அங்கு நின்று கொண்டிருக்கும் ஒருவரை இடிக்க வருவதை பார்த்தவள் நொடியில் அவள் அருகில் ஒடியவள் அந்த கார் அவளை மோத வரும் போது ஷர்மிளாவை தன் பக்கம் வேகமாக இழுத்து விட்டாள். தன்னை ஒருக்கரம் இழுத்தவுடன் திரும்பி பார்த்த போது தான் தெரிந்தது அவளை ஒரு வண்டி இடிக்க வந்ததை அதை புரிந்து கொண்ட நொடி அவளுக்கு பயத்தில் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவள் தள்ளாடுவதை கண்ட வானதி அவளை கைத்தாங்கலாக பிடித்து கொண்டு ஒரமாக அழைத்து சென்றவள் தன்னுடைய பேக்கீல் இருந்து தண்ணீரை குடிக்க குடுத்து , “ நீங்க நல்லா தானா இருக்கீங்க “ என்று கேட்டாள்.



தண்ணீரை குடித்த பிறகு சிறிது ஆஸ்வாசம் அடைந்தவள் அப்போது தான் தன்னை காப்பற்றியவளை பார்த்தாள். அப்பறம் தான் நியாபகம் வந்தது சில நாட்களுக்கு முன்பு கோவிலில் சந்தித்தது என அனைத்தையும் தெரிந்தது. “ ரொம்ப தேங்க்ஸ்.... இன்னிக்கு நீங்க என் உயிரை காப்பாத்துனத்துக்கு நான் என்ன சொல்றதுன்னு தெரில “ என்றாள் ஷர்மிளா.



வானதி, “ இதுல என்ன இருக்கு ஒறுத்தர்க்கு ஒறுத்தர் உதவி செய்யறதுல என்ன இருக்கு.... அப்பறம் ஒரு விஷயம் அந்த வண்டி உங்கள டார்கெட் பன்னி வேணும்னே இடிக்க வந்த மாதிரி தான் இருந்தது. ஏதுக்கும் நீங்க ஜாக்கிரதையா இருங்க “ என்று அவள் சொன்னதும் சிறிது யோசித்த ஷர்மிளா, “ கண்டிப்பா நான் பாத்துக்கறேன்.... உங்களுக்கு என்னை நியாபகம் இருக்கா “ என்று கேட்டவள் அன்று நடந்ததை முழுவதும் கூறி விட்டு, “ அன்னிக்கே உங்க பெயரை கேக்கலயேன்னு நீங்க போனதுக்கு அப்பறம் தான் நினைச்சேன்.... அடுத்த முறை உங்கள சந்திக்கும் போது உங்கக்கிட்ட கேக்கனும்ன்னு இருந்தேன்.... ஆனா உங்கள மீட் பண்ற சூழ்நிலை தான் அமையல “ என்றவளை பார்த்து சிரித்தவள்.


வானதி, “ அது எல்லாம் இருக்கட்டும் உங்க வீட்ல இருந்து யாரையாவது வர சொல்லுங்க “.



ஷர்மிளா, “ நான் ஏற்கனவே என் ஹஸ்பன்ட் கிட்ட சொல்லிட்டேன் வரேன்ன்னு சொல்லிட்டார் “ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஷக்தி காரை நிறுத்தி விட்டு வேகமாக அவர்கள் அருகில் வந்தான். அங்கு வானதி ஷர்மிளாவுடன் பேசிக் கொண்டு இருந்ததை பார்க்கும் போது அவனுக்கு ஒன்றும் புரியாமல் ஷர்மீயிடம் சென்று என்ன ஆயிற்று என்று கேட்டான். அவளும் சிறிது நேரத்திற்கு முன் நடந்ததை முழுவதையும் சொல்லி முடித்தாள். அதை கேட்டவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது பிறகு அவளை தலை முதல் கால் வரை கண்களால் ஆராய்ந்தவன் வானதியின் புறம் திரும்பி, “ ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர்.... எனக்கு என்ன சொல்றதுனே தெரில நீங்க மட்டும் சரியான நேரத்தில் வரலைன்னா என்ன ஆயிருக்கும் “ என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினான்.



வானதி, “ பரவலை உங்க நன்றியை நீங்களே வச்சிக்கோங்க ஏற்கனவே இவங்க நிறைய சொல்லிட்டாங்க .... நீங்க முதல்ல அந்த வண்டியை ஒட்டிட்டு வந்தது யாருன்னு பாருங்க எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு.... சரி எனக்கு நேரம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் “ என்று ஸ்கூட்டியின் அருகில் சென்றவள் ஷர்மியின் பக்கம் திரும்பியவள், “ நீங்க என் பெயர் என்னன்னு கேட்டீங்கல என் பெயர் ஆருந்ய வானதி.... திரும்பவும் நம்ம சந்திப்போம் “ என்றவள் சென்று விட்டாள்.



அவள் சென்ற திசை பார்த்துகொண்டிருந்த ஷர்மிக்கு அந்த பெயரை கேட்ட மாதிரியே இருந்தது அது எங்கே என்று யோசித்து கொண்டிருக்கும் போது அவளை அழைத்த ஷக்தி, “ இந்த பெயரை நீ எங்கயோ கேட்ட மாதிரி இல்ல “ என்றவனிடம் ஆமாம் என்று தலையசைத்தாள்.



ஷக்தி, “ அது வேற யாரும் இல்லை உன்னோட வருங்கால அண்ணி அதாவது உன் அண்ணனோட மனசுல இடம் பிடிச்ச அந்த பொண்ண பாக்கணும்ன்னு சொல்லுவியே அது இவங்க தான் ஆருந்ய வானதி.... இப்ப தெறித்தா “



ஷர்மிளா, “ நீங்க சொல்றது உண்மையா.... அது இவங்க தானா என்னால நம்பவே முடியல. நான் முதல்ல பாக்கும் போது இவங்க என் அண்ணியா வந்த நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன். இப்ப நான் நினைச்ச மாதிரியே நடந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். நாம இப்பவே போய் அவங்க கிட்ட பேசலாமா “

ஷக்தி, “ அந்த மாதிரி எதுவும் பன்னிடாத மா.... இப்ப தான் உன் அண்ணன் சாதாரணமா பேசற நிலைமைக்கு வந்துருக்கான். நீ அதுக்குள்ள குட்டையை குழப்பிடாத. இது எல்லாத்தையும் அவன் பாத்துப்பான். அடுத்த தடவை சிஸ்டர பாத்தா கூட உன் அண்ணன பத்தி எதுவும் பேசாதே “ என்றவன் அவன் தன்னுடைய அடையாளத்தை மறைத்து கொண்டு இருப்பதை பற்றி முழுமையாக சொல்லி முடித்தான்.



அதை கேட்டவளுக்கு அச்சர்யமாக இருந்தது தன்னுடைய அண்ணன் ஒரு பெண்ணிற்காக இந்த அளவு செய்வதை பார்க்கும் போது அவர் அந்த பெண்ணை எவ்வளவு காதலிக்கிறார் என்பது அவளுக்கு புரிந்தது. ஷர்மிளா, “ நீங்க சொல்ற மாதிரியே பன்றேன். நாமாளும் நம்மால முடிஞ்சதா செய்யணும். சீக்கிரமா அண்ணனுக்கும் அண்ணிக்கும் கல்யாணம் பன்னனும் “ என்று கண்களில் சிரிப்புடன் கூறியவளை அழைத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றான் ஷக்தி.



இரவு வேலைகள் முடிந்து வீட்டிற்கு வர வெகு நேரம் ஆனது அதனால் வெளியில் சாப்பிட்டு விட்டு வந்தவன் தன் அறைக்கு உறங்க சென்றான். உடை மாற்றி வந்தவன் பால்கனி வழியே தெரிந்த அந்த நிலவை பார்த்தவனுக்கு இன்று காலையில் நடந்ததை நினைக்கும் போது அவன் முகத்தில் புன்னகை தோன்றியது. அந்த நிமிடம் அவன் வாழ்க்கை முழுவதும் நீடிக்காத என்று தோன்றியது. கூடிய விரைவில் எல்லா விஷயத்தையும் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தான். அவன் கண்களில் எதிர்காலத்தை பற்றிய கனவுகள் அதிகமாக நிறைந்து இருந்தது. அந்த இரவு முழுவதும் அவன் உறங்கிய பிறகும் அந்த கற்பனையே கனவாக வந்தது. அந்த நினைவே அவனுக்கு நிம்மதியான இரவாக அமைந்தது. அவன் காணும் கனவுகள் நிறைவேறுமா.....



செல்லக்கிளி என்னை

குளித்திட்ட வேண்டும்....

சேலை தலைப்பில்

துவட்டிட வேண்டும்....

கல்லுச்சிலை போல் நீ

நிற்க வேண்டும்....

கண்கள் பார்த்து தலை

வார வேண்டும்....

நீ வந்து இலை போட வேண்டும்....

நான் வந்து பறிமாற வேண்டும்....

என் விழி உன் இமை மூட வேண்டும்

இருவரும் ஒரு ஸ்வரம்

பாட வேண்டும்....

உன்னில் என்னை தேட வேண்டும்....



நிஜத்தை தேடும்....



உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்
.....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14


காலையில் சீக்கிரமாக ஆபீஸ் செல்வதற்கு தயாராகி கீழே வந்த ஆதி ஹால் சோபாவில் அமர்ந்து இருந்த ஷக்தியிடம், “ நம்ம ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் வா போகலாம் “ என்று தன் கையில் இருந்த வாட்சை சரி செய்தப்படியே கூறியவன் அருகில் வந்த ஷர்மீ, “ அண்ணா…. இவ்வளவு காலையிலேயே கிளம்பிறீங்க ரொம்ப அவசரமா…. இன்னும் நீங்க ரெண்டு பேரும் சாப்பிட கூட இல்லை “ என்று கேட்டாள்.


ஆதி, “ ஒன்னும் பிரச்சனை இல்லை டா…. போய்ட்டு வந்து நாங்க சாப்பிடுறோம். இப்ப டைம் ஆயிடுச்சு நாங்க கிளம்பறோம் “ என்றவன் ஷக்தியை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்று விட்டான். ‘ இவன் பார்வையே சரியில்லையே…. எங்க கூட்டிட்டு போறான்ன்னு வேற தெரியலையே ‘ என புலம்பியபடி வெளிய வந்தவன். ஏற்கனவே காரை ஸ்டார்ட் செய்து காத்திருந்தவன் ஷக்தி வந்து அமர்ந்ததும் வேகமாக கிளப்பினான். முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் காரை ஒட்டிக் கொண்டிருந்த ஆதியை பார்த்த ஷக்திக்கு ஒன்றுமே புரியவில்லை. அதனால் அவனிடமே கேட்டு விடலாம் என்று முடிவெடுத்தவன், “ ஆதி இப்ப நாம எங்க போறோம் “ என்று கேட்டவனை திரும்பி ஒரு பார்வை பார்த்து விட்டு மீண்டும் தன் வேலையான வண்டி ஒட்டு வதை செய்தான்.


இவனிடம் இனி கேட்டு எந்த உபயோகமும் இல்லை என்று தெரிந்து கொண்ட ஷக்தி அமைதியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அவர்கள் கார் விஷ்வநாதன் வீட்டு காம்பவுண்டுக்குள் நுழைவதை பார்த்தவன். “ ஆதி இப்ப எதுக்கு இவர் வீட்டுக்கு நம்ம வந்துருக்கோம்.... இப்படியே அமைதியா இருந்தா எப்படிடா எனக்கு மன்டையே வெடிச்சிடும் போல இருக்கு எதாவது சொல்லு “ என்று கேட்டவனிடம் “ அதான் வாசல் வரைக்கும் வந்தாச்சு இல்ல உள்ள போனவுடனே என்னன்னு தெரிஞ்சிடும் வா “ என்றவன் காரை விட்டு இறங்கி அவர்கள் வீட்டிற்குள் சென்ற ஆதியை அமைதியாக ஷக்தியும் பின் தொடர்ந்தான்.


ஹாலில் உள்ள சோபாவில் விஸ்வநாதனும் சந்திரிகாவும் வாசலை பார்ப்பதும் போனை பார்ப்பதுமாக பதட்டத்துடன் அமர்ந்து இருந்தவர்கள் தீடிரென்று ஆதி வீட்டிற்குள் நுழைவதை கண்ட விஸ்வநாதன் இவன் எதற்கு இப்போ இங்க வந்து இருக்கான்ன்னு தெரியலையே என்று நினைத்தவர். அவனை வரவேற்று அமர கூறினார். சந்திரிகாவிற்க்கும் அவன் வருகைக்கான காரணம் தெரியாததால் சந்தேகமாக அவனை பார்த்து கொண்டிருந்தார். அங்கிருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு கம்பீரமாக அமர்ந்த ஆதியின் அருகில் ஷக்தியும் அமர்ந்தான்.
நாதன், “ சொல்லுங்க ஆதித்யா.... தீடிரென வீட்டுக்கு வந்துறுக்கீங்க எதாவது முக்கியமான விஷயமா “.


ஆதி, “ நான் வந்தது இருக்கட்டும் நாதன் சார்.... உங்களுக்கு எதாவது பிரச்சனையா பாக்க பதட்டமா தெரீங்க.... அப்படி இருந்த சொல்லுங்க என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா செய்றேன் “ என்று கூறியவனை அங்கிருந்த அனைவருமே குழப்பத்துடன் பார்த்தனர்.


விஸ்வநாதனுக்கும் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் தான் இருந்தார். ஆதியே நேரடியாக கேட்பதால் அவனிடம் இருந்து எதாவது உதவி கிடைக்கும் என்று நினைத்தவர். அவனிடம், “ அது வந்து ஆதி.... என் பொண்ணு சாராவ நேத்துலயிருந்து காணோம்.... ப்ரெண்டை பாக்க போறேன்ன்னு சொல்லிட்டு போனவ இன்னும் வீட்டுக்கு வரவே இல்லை.... நானும் என்னோட இன்ப்ளுஎன்ஸ் எல்லாம் யூஸ் பண்ணி தேடி பாத்துட்டேன் ஆனா ஒரு தகவலும் கிடைக்கலை. அவ போனும் ஆப்பாகி இருக்கு என்ன பன்றதுனே தெரியல “ என்று கண் கலங்கியப்படி கூறியவரை பார்க்கும் போது ஷக்திக்கு பாவமாக இருந்தது. அவர் கூறியதை கேட்ட ஆதி சிறிது நேர அமைதிக்கு பின், “ உங்க பொண்ணு எங்க இருக்கான்னு எனக்கு தெரியும் “ என்று அவன் கூறியதும் அடப்பாவி என்ற பார்வையுடன் ஷக்தி அவனை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சந்திரிகா அவனுக்கு சாரா இருக்கும் இடம் தெரியும் என்று சொன்னவுடன், “ அப்படினா என் பொண்ணா நீ தான் கடத்திருக்கியா.... உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும் “ என்றப்படி எழுந்து அவன் சட்டையை பிடிக்க சென்றவர் அவன் அமர்ந்ததிருந்த இருக்கையில் இருந்து நிமிர்ந்து பார்த்த ஒரு பார்வையில் பின்வாங்கினார்.


நாதன், “ என் பொண்ணு இருக்க இடம் எப்படி தெரியும் ... எனக்கு உங்களப்பத்தி தெரியும் காரணம் இல்லாமல் நீங்க எதுவும் செய்ய மாட்டிங்க. என் பொண்ணு எங்க “


சந்திரிகா, “ நீங்க என்ன அவன்கிட்ட போய் இவ்வளவு பொறுமையா பேசிட்டு இருக்கீங்க. போலீஸ்க்கு போன் பண்ணுங்க “ என்றவரை பார்க்கும் போது ஆதி மற்றும் ஷக்தி இருவருக்கும் சிரிப்பு தான் வந்தது. அவனிடம் இது எதுவும் வேலைக்கு ஆகாது என்பது விஸ்வநாதனுக்கு நன்றாக தெரியும் அதனால் அவர் அமைதியாக ஆதியையே பார்த்தார்.


ஆதி, “ உங்க பொண்ணு இன்னும் அஞ்சு நிமிஷத்துல இங்க இருப்பா “ என்று தன் வாட்சை பார்த்த கூறியவன் வாசலை பார்க்க ஆரம்பித்தான். அனைவரும் அவன் பார்க்கும் திசையையே பார்த்து கொண்டிருந்தனர். அப்போது சரியாக ஐந்து நிமிடங்களுக்குள் சாரா வீட்டிற்குள் நுழைந்தாள். அவளை பார்த்த அவள் பெற்றோர் இருவரும் அதிர்ச்சியில் எழுந்தனர். ஏன்னினெனில் அவளுக்கு தலையில் கையில் அடிப்பட்டு இருந்தது. அதை கண்டவர்கள் அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். ஷக்திக்கு சுத்தமாக அங்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை. திரும்பி ஆதியை பார்த்தால் அவன் சுவாரஸ்யமாக அவர்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தான்.


சாராவிடம் என்ன நடந்தது எதனால் இப்படி அடிப்பட்டு இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டிருந்தனர். சாராவும் நேற்று தோழியை சந்தித்து விட்டு ஷாப்பிங் சென்று விட்டு காரில் ஏறுவதற்காக போகும் போது ஒருவன் தன் கையில் இருந்த கைப்பேசியை பிடிங்கி கொண்டு ஓடி விட்டான் என்றும் அவனை பிடிக்க பின்னாடியே சென்ற போது எதிரில் வந்த ஒரு வண்டி மோதி கீழே விழுந்தது மட்டும் தான் நியாபகத்தில் இருந்தது என்றும் காலையில் கண் விழித்த போது மருத்தவமனையில் இருந்ததாகவும் பெரிதாக அடிப்படாததால் இப்போது வீட்டுக்கு வந்தேன் என்று சற்று சிரமாப்பட்டு திக்கி திக்கி கூறினாள்.


அதை முழுவதையும் கேட்ட ஷக்திக்கு ஆதியின் மேல் சந்தேகமாக இருந்தது அப்போது அவனும் இவனை பார்த்து கண்ணடிக்கவும் இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்போது அவன் புறம் திரும்பிய சந்திரிகா, “ நீ தானா என் பொண்ணோட இந்த நிலைமைக்கு காரணம் சொல்லு.... அவ உன்னை காதலிக்கறதா சொன்னா உங்களுக்கு பிடிக்கலனா விட்ர வேண்டியது தானா அதுக்காக இப்படியெல்லாம் பன்னலாமா “ என்று சத்தமாக கத்தியவரை அமைதியாக பார்த்தவன் அங்கிருந்து எழுந்து தன் பாக்கெட்டில் இருந்து அவளுடைய போனை எடுத்து அந்த டேபிள் மேல் வைத்து விட்டு நிமிர்ந்தான். அதை பார்த்தவர்களுக்கு புரிந்தது இதை செய்தது இவன் தான் என்று.


நாதன், “ நீ இப்படி பன்னுவான்னு நான் நினைக்கவே இல்லை.... என் மனைவி சொல்றது எல்லாம் உண்மையா சொல்லு எதுக்கு இப்படி பண்ண எதுவா இருந்தாலும் என்க்கிட்ட சொல்லி இருக்கலாமே “.


ஆதி, “ அவங்க சொன்னது உண்மை தான் உங்க பொண்ணு என்க்கிட்ட வந்து அவ விருப்பத்த சொன்னா. ஆனா எனக்கு விருப்பம் இல்லாததுக்கு எல்லாம் என்னோட டைமா வேஸ்ட் பண்ண முடியாது.... உங்களுக்கே என்னைப் பத்தி நல்லா தெரியும் எனக்கோ இல்லை என்னை சார்ந்தவங்களுக்கோ சின்ன கீறல் விழுந்தா கூட அதுக்கு காரணமானவாங்கலோட கையையே எடுத்து தான் எனக்கு பழக்கம். அப்படி இருக்கும் போது உங்க பொண்ணு என்ன பண்ணியிருக்கா தெரியுமா “ என்று அவளை கண்களில் கனலை தேக்கியப்படி கேட்டவனை பார்க்கும் போது அவள் செய்தது அவனுக்கு தெரிந்திருக்கிறது அடுத்து என்ன செய்ய போகிறான் என்று சாராவுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்தது.


அவள் அருகில் வந்தவன், “ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்திருந்தா என் தங்கச்சி மேலயே வண்டிய விட்டு ஏத்த பாத்து இருப்ப.... எனக்கு எப்படி தெரியும்ன்னு பாக்குறியா என்னை சார்ந்தவங்க மேல என்னோட பார்வை எப்பவும் இருக்கும் அவ்வளவு சீக்கிரம் அதுல இருந்து யாராலையும் தப்பிக்கவே முடியாது. இப்பக்கூட உன் அப்பாவுக்காக தான் உன்னை இந்த சின்ன அடியோட விட்டு இருக்கேன். இல்லன்னு வச்சிக்கோ.... இதுவே கடைசி முறையா இருக்கட்டும் இனி நான் இருக்க திசைப்பக்கம் கூட நீ வரக்கூடாது “ என்று அவளை ஒரு விரல் நீட்டி மிறட்டியவன். அவளின் தந்தை புறம் பார்த்து, “ இங்க பாருங்க உங்க பொண்ணுக்கு நல்ல புத்தி சொல்லி திருத்த பாருங்க அடுத்த முறை நான் இந்த மாதிரி மன்னிக்க மாட்டேன். என்னோட தன்டனையே வேற மாதிரி இருக்கும். புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கறேன். பாத்துக்கொங்க “ என்று எச்சரித்தவன் வேகமாக வெளியே சென்று விட்டான்.


அவன் அவ்வாறு எச்சரித்து விட்டு சென்றதும் விஸ்வநாதனுக்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை ஏன்னெனில் தவறு அனைத்தும் தன் மகள் மேல் இருப்பதை புரிந்து கொண்டவர் ஒன்றும் பேசாமல் தனது அறைக்கு சென்று விட்டார். சாராவை பார்க்கும் போது சந்திரிகாவால் தன்னுடைய கோவத்தை அடக்க முடியவில்லை ஆனால் அதை காட்ட இது நேரமல்லா என்பதை அறிந்தவர் தகுந்த நேரத்திற்காக்க காத்திருப்பதே சிறந்தது என்று அவரது அனுபவ அறிவு உணர்த்தியது. இப்போது சாராவை கவனிப்பது தான் முக்கியம் என்பதால் அவளை அவளுடைய அறைக்கு மெதுவாக அழைத்து சென்றார்.


இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது என்று அதிர்ச்சியில் இருந்த ஷக்தி அவன் செல்வதைக் கண்டு பின்னாடியே சென்று வண்டிக்குள் அமர்ந்தவுடன் வண்டியை எடுத்த ஆதி, “ என்க்கிட்ட இந்த விஷயத்த நீ சொல்லலனா எனக்கு தெரியவே வராதுன்னு நினைச்சிட்டியா “ என்று கேட்டவனிடம் என்ன கூறுவது என்று ஷக்திக்கு தெரியவில்லை.


ஷக்தி, “ உன்க்கிட்ட சொல்லக் கூடாதுன்னு எல்லாம் இல்லை ஆதி தேவையில்லாம சண்டை வரக்கூடாதுன்னு தான்....“ என்று இழுத்தவனை பார்த்து விட்டு, “ எது தேவையில்லாதது என் தங்கச்சிய ஒறுத்தி கொல்லப்பாப்பா நான் அமைதியா இருக்கணுமா. அதான் அவள நேத்தே தூக்கிட்டேன் “ என்று அசால்ட்டாக சொன்னவனை பார்க்கும் போது எப்பவும் போல இப்பவும் அவன் வேகத்தை கண்டு ஷக்திக்கு பிரம்மிப்பாகவே இருந்தது.


ஷக்தி, “ நீ எங்கக்கூட இல்லனாலும் உன்னோட நிழல் எங்க கூட தான் இருக்கும்ன்னு நேத்து தான் நல்லா புரிஞ்சிது “ என்றவனை புரியாமல் பார்த்தான் ஆதி.


ஷக்தி, “ புரியலள நேத்து ஷர்மீய காப்பாத்துனது யாரு தெரியுமா.... உன்னோட வானதி தான் “ என்று அவன் கூறியதும் இவ்வளவு நேரம் கோவத்தொடு இருந்த அவன் முகம் புன்னகையை தத்தெடுத்தது. சிரித்தப்படியே, “ அவ நிழல் இல்லடா என்னோட நிஜம்.... என்னை பொறுத்தவரை ரெண்டு பேரும் வேற வேற இல்லை.... இங்க நடந்தது எதுவும் ஷர்மீக்கு தெரியாமா பாத்துக்கோ புரிஞ்சிதா” என்றான். ஷக்தியும் அதற்கு சரியென்றான். அதன் பிறகு இருவரும் அவர்கள் ஆபீஸ் விஷயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.


அந்த சம்பவம் நடந்து ரெண்டு நாட்களுக்கு பிறகு காலையில் ஹாலில் ஷர்மிளா தன்னுடைய அண்ணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள். அதே நேரம் கீழே இறங்கி வந்தவன் வேகமாக வாசலை நோக்கி சென்றவனை தடுத்து நிறுத்தியவள்.


ஷர்மிளா, “ அண்ணா உங்களுக்காக தான் நான் வெயிட் பன்னிட்டு இருக்கேன் உங்கக்கிட்ட ஒன்னு சொல்லனும் “.


ஆதி, “ என்ன விஷயம் சீக்கிரமா சொல்லுமா.... நிறைய வேலை இருக்கு “.


ஷர்மிளா, “ பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா.... நீங்க என்னைக்கும் சந்தோஷமா ரொம்ப வருஷம் வாழனும் அண்ணா “ என்றவள் தன்னுடைய கையில் இருந்த கோவில் பிரசாதத்தை அவன் நெற்றியில் வைத்தாள். அவள் வாழ்த்தியதும் தான் அவனுக்கு இன்று அவனுடைய பிறந்த நாள் என்பதே நியாபகத்துக்கு வந்தது. பிறகு அவளை பார்த்து சிரிப்புடன் அந்த வாழ்த்தை ஏற்று கொண்டவன் அங்கிருந்து ஆபீஸ்க்கு சென்று விட்டான்.


ஆபீஸ் வந்தவனுக்கு அதன் பிறகு நடந்த அனைத்தும் மறந்து வேலைகள் அவனை தனக்குள் மூழ்கடித்துக் கொண்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு ஷக்தியும் கதிரும் ஒன்றாக அவன் கேபின்குள் நுழைந்தனர். ஷக்தி அவனை எழுப்பி கட்டிப்பிடித்து தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தான். கதிரும் அருகில் நின்றப்படியே தன்னுடைய வாழ்த்தை கூறினான். இருவருக்கும் தன் நன்றியை கூறியவன் அமைதியாக வேலையை பார்க்க ஆரம்பித்தான். அவர்கள் இருவருக்கும் தெரியும் ஆதி தன்னுடைய பிறந்த நாளை கொன்டாடுவதில்லை என்று அதனால் அதன் பிறகு அவர்கள் அதைப்பற்றி எதுவும் பேசவில்லை.


ஷக்தி, “ ஆதி உன்க்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் ரெண்டு பேரும் இங்க வந்தோம் “. என்று அவன் சொன்னவுடன் தன் வேலையை நிறுத்தி விட்டு அவர்களை பார்த்தப்படி சாய்ந்து அமர்ந்தான்.


ஷக்தி, “ ஷர்மீக்கு நாளைக்கு அமெரிக்கால ஒரு மெடிக்கல் கான்பிரென்ஸ் இருக்கு சோ அவள தனியா அனுப்ப முடியாததால நானும் அவக்கூட போகணும் “ என்றான்.


ஆதி, “ சரி போய்ட்டு வா ஷர்மியும் பாவம் நீ அவக்கூட இப்பலாம் சரியா டைம் ஸ்பென்ட் பன்றதே இல்லை அதனால இன்னும் ரெண்டு நாள் கூட இருந்துட்டு வாங்க.... இது தான் நீ சொல்ல வந்த முக்கியமான விஷயமா “.


ஷக்தி, “ இல்ல ஆதி இது இல்லை....நம்ம மும்பை பிரான்ச்ல கொஞ்சம் பிரச்சனை.... இங்க இருந்தே சால்வ் பண்ண முயற்சி பன்னேன் ஆனா முடியல. நேர்ல தான் போகணும்.... நான் போகலாம்ன்னு தான் இருந்தேன் இப்போ ஷர்மீ கூட போறதால தான் நீ போய் ஆகனும் ஆதி.... அப்படியே அங்க ஒரு வாரம் இருந்து முடிக்க வேண்டிய வேலைகள் கொஞ்சம் இருக்கு அதையும் முடிச்சிட்டு வந்துடு “ என்றான்.


ஷக்தி கூறிய அனைத்தும் ஆதிக்கு சரியாகவே பட்டது. போன மாதமே அங்கு போக வேண்டியது ஆனால் இங்கு நிறைய வேலைகள் இருந்ததால் அப்படியே தள்ளி போய் விட்டது. இப்போது செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டதால் அவன் சென்றே ஆக வேண்டும் என்று நினைத்தவன். கதிரிடம், “ கதிர் நம்ம புது ப்ராஜெக்ட் ஹெட் யாரு “ என்று கேட்டான்.


கதிர், “ சுரேந்தர் தான் பாஸ்.... அதுக்கு ஹெட் “.


சிறிது நேரம் யோசித்தவன் ஒரு முடிவெடுத்து விட்டு , “ நீங்க போய் அவரா கூட்டிட்டு வாங்க “ என்று கூறி அனுப்பி வைத்தான். ஷக்தியும் அவன் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்து ஆதியின் பதிலுக்காக காத்திருந்தான். கதிரும் உடனே சுரேந்தரை அழைத்து கொண்டு ஆதியின் அனுமதி பெற்றப்பின் அவன் அறைக்குள் இருவரும் நுழைந்தார்கள். அவர்கள் வந்தவுடன் சுரேந்தரிடம், “ சுரேந்தர்.... புது ப்ராஜெக்ட்க்கு நீங்க தான ஹெட் சோ இப்போ ஒன் வீக் நான் இருக்க மாட்டேன் அதனால நீங்க இப்போ சில கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டு எல்லாம் காட்டுனீங்கல .... அதுல கடைசியா இருந்த இடத்த ஓகே பன்னிடுங்க.... நான் வரத்துக்குள்ள அந்த இடம் நம்ம கம்பெனிக்கு மாறி இருக்கணும் எந்த ப்ரோப்லேம் வந்தாலும் அதை நீங்க தான் டீல் பன்னனும். நான் வந்ததும் ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்ண எல்லாமே பக்கவா இருக்கணும்.... உங்களுக்கு எதாவது சந்தேகம் இருந்தா கதிர்க்கிட்ட கேட்டுக்கொங்க. நான் சொன்னது எல்லாம் புரிஞ்சிது தான “ என்று கேட்டவனிடம் பதிலுக்கு புரிந்தது என்று பதிலளித்தான்.


ஆதி, “ இதுல எந்த பிரச்சனை வந்தாலும் அதுக்கு நீங்க தான் முழு பொறுப்பு நியாபகம் இருக்கட்டும். இப்போ நீங்க போய் உங்க வேலையை பாருங்க “ என்று அவனிடம் சிறிது அழுத்ததுடன் கூறி அனுப்பி வைத்தான். அவன் சென்றதும் கதிரிடம், “ கதிர் இந்த ஒன் வீக் என்னை யாரும் தொந்தரவு பன்னாம பாத்துக்கொங்க.... முடிஞ்ச அளவுக்கு ஷக்தி வரவரைக்கும் நீங்க கவனிச்சிக்கொங்க. இல்லனா எனக்கு மெயில் பண்ணுங்க புரிஞ்சிதா. இன்னிக்கு நைட் ப்ளைட் புக் பன்னிடுங்க போங்க “ என்று அவன் இந்த ஒரு வாரத்தில் செய்ய வேண்டிய அனைத்தையும் வரிசையாக கூறியதை கேட்ட கதிருக்கு தலையெல்லாம் சுத்தியது இருந்தாலும் இது அவனுடைய கட்டளையாக இருப்பதால் அவன் கண்டிப்பாக செய்தே ஆக வேண்டும். இந்த ஒரு வாரத்தில் என்னென்ன ஆக போகிறதோ என்று சிந்திந்தப்படியே அவன் சொன்னதை செய்ய அங்கிருந்து வெளியே சென்றான்.


ஷக்தி, “ நீ எதுவும் யோசிக்காத ஆதி நாங்க ஒரு மூணு நாள்ள வந்துடுவோம். அதனால நீ அங்க இருக்க வேலையை நல்லப்படிய முடிச்சிட்டு வா.... நான் ஒறுத்தன் நீ போனாலே அது சரியா தான முடியும்.....” என்று பேசிக் கொண்டிருந்தவன் அவனிடம் எந்த பதிலும் வரவில்லையே என்று அவனை பார்க்கும் போது தான் தெரிந்தது அவன் வேறு ஒரு சிந்தனையில் ஆழுந்து இருப்பது.


அவன் நினைத்ததை போல் அவனுடைய சிந்தனைகள் முழுதும் வேறு ஒரு விஷயத்தில் இருந்தது. அது வேறு எதுவும் இல்லை வானதியை பற்றியே இருந்தது. அவள் இங்கு தான் இருக்கிறாள் என்று தெரிந்ததில் இருந்து ஒரு நாள் கூட அவளை நேரில் பார்க்காமல் அவன் இருந்தது இல்லை. காலையில் அவள் பள்ளிக்கு செல்லும் போதோ அல்லது மாலை வீட்டிற்கு செல்லும் போது என ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளது முகத்தை ஆசைத் தீர பார்த்து விடுவான் அப்போது தான் அந்த நாள் நல்லப்படியாக முழுமை அடைந்ததை போல் இருக்கும். அப்படி இருக்கும் போது ஒரு வாரம் அவளை காணாமல் எப்படி இருப்பது என்பதே அவனுடைய பெரிய கவலையாக இருந்தது.


ஷக்தி, “ என்னாச்சு ஆதி.... எதைப்பத்தி இவ்வளவு தீவிரமா யோசிச்சிட்டு இருக்க “ என்றவனை பார்த்த ஆதி, “ நான் என்னை மறந்து ஒரு விஷயத்த நான் யோசிக்கிறேன்னா அது என் ஆருந்யாவ பத்தி தான் இருக்கும் “.


ஷக்தி, “ சிஸ்டர பத்தி இப்ப என்ன நினைச்சிட்டு இருக்க “ என்று கேட்டவனிடம் அவன் நினைத்துக் கொண்டு இருந்ததை பற்றி கூறினான். அதை கேட்ட ஷக்தி, “ இப்ப என்ன ஒரு வாரம் சிஸ்டர பாக்க முடியாதுன்னு வருத்தப்படுரியா.... அதுக்கு ஒன்னும் பண்ண முடியாதுன்னாலும் இன்னிகே நீ போய் பாத்து பேசிட்டு வா “ என்று கூறியவனை சற்று தயக்கத்துடன் பார்த்தான் ஆதி. அவனுடைய அந்த தயக்கம் ஷக்திக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. இது வரை எந்த விஷயத்துக்கும் அவன் தயங்கி நின்று அவன் பார்த்ததில்லை. ஆதி எந்த ஒரு காரியத்தை செய்யவும் யாரை பார்த்தும் பயந்ததே இல்லை. அவனுடைய தைரியத்தை கண்டு பல நேரத்தில் அனைவரும் வியந்தது உண்டு. அப்படிப்பட்டவனுடைய இந்த மாற்றம் மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது.


ஷக்தி, “ ஆதி நீயா இப்படி தயங்கிர என்னால நம்பவே முடியல. இப்போ நீ போன் பண்ணி மீட் பன்னலாமான்னு கேளு.... சிஸ்டர் சரின்னு சொன்னா போய் பாரு அவ்வளவு தான் “ என்றவன் சொன்னதும் அவனுக்கு சரியென்று தோன்றியது. உடனே அவனுடைய போனில் இருந்து வானதியின் எண்ணூக்கு அழைத்தான். அது முழு ரிங் போய் கட்டாகும் போது அவள் எடுத்தவள், “ ஹலோ.... சொல்லுங்க தீடீர்னு போன் பண்ணி இருக்கீங்க “ என்ற அவளின் குரலை கேட்டு ஒரு நிமிடம் மெய் மறந்து அமர்ந்திருந்தவன் அவள் மீண்டும் ஹலோ என்று கூப்பிட்டவுடன் நிதானத்துக்கு வந்த ஆதி.


ஆதி, “ அது வந்து ஆருந்யா.... நான் உன்னை பாக்கணும் மீட் பன்னலாமா “.


வானதி, “ ஹ்ம்... சரி அப்படினா நாளைக்கு மீட் பன்னலாமா “


ஆதி,” இல்லை ரொம்ப முக்கியமான விஷயம் இன்னிக்கே அதுவும் இப்பவே பாக்கணும் “ என்றவனுக்கு அந்த பக்கத்தில் இருந்து ஒரு நிமிடத்திற்கு எந்த பதிலும் வரவில்லை என்றதும் அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவள் பள்ளியில் வேலையில் இருப்பாள் என்று அவனுக்கு தெரியும் அதனால் அவள் எப்படியும் முடியாது என்று தான் கூறுவாள் என்று நினைத்தான்.


வானதி, “ ரொம்ப முக்கியமான விஷயம்ன்னு வேற சொல்றீங்க.... நாம அன்னிக்கு மீட் பண்ண பார்க்க்கு வந்துடுங்க நானும் அங்க வரேன். ஒரு அரைமணி நேரத்தில் நான் அங்க இருப்பேன் “ என்றவள் போனை வைத்து விட்டாள். அவள் சொன்னதை கேட்டதும் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனி ஒரு நிமிடம் கூட தாமதிக்க கூடாது என்று எண்ணியவன் வேகமாக தன்னுடைய இடத்தில் இருந்து எழுந்தான்.


அப்போது ஷக்தி, “ ஆதி நீ காலையிலேயே எதுவும் சாப்பிடல மதியம் வேற ஆயிடுச்சு சாப்பிட்டு போயேன் “ என்றவனை பார்த்து தான் வழியில் பார்த்து கொள்வதாக கூறி விட்டு வேகமாக சென்று விட்டான். அவன் சென்றதும் ஆதியின் செயல்களை நினைக்கும் போது ஷக்திக்கு சிரிப்பு தான் வந்தது. காதல் வந்தால் எப்படிப்பட்டவனையும் இப்படி மாற்றி விடும் என்று சொல்வதும் சரியென்று தோன்றியது.


அவர்களின் இந்த தீடீர் சந்திப்பில் நிகழப்போவது என்ன என்று நாமும் அங்கு சென்று பார்த்தால் தான் தெரியும். அவர்கள் அங்கு செல்லும் வரை நாமும் காத்திருப்போம்....


நான் முழுசா உன்னை எனக்குள்ள

பொதைச்சேன்

என் உசுரா அழகே உன்னை நித்தம்

நித்தம் நினைச்சேன்....

இனி வரும் ஜென்மம் மொத்தம்

நீயும் தான்

உறவா வரனும் மறுப்படி

உனக்கென பிறந்திடும் வரம்

நான் பெறணும்....

பெண்ணே பெண்ணே வாழ்க்கை

நீள என் கூட நீ மட்டும்

போதும் போதும் நீ நாளும்....


நிஜத்தை தேடும்....


உங்களின் கருத்துகளை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....
 

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15


அவளை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அவனை அவள் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வர வைத்தது. இதுவரை யாருக்காகவும் அவன் காத்திருந்தது இல்லை சொல்ல போனால் அவனுக்காக இங்கே காத்திருப்பவர்கள் பலர். ஒருவருக்காக காத்திருப்பது என்பது அவனுக்கு பிடிக்காத விஷயம். அப்படிப்பட்டவன் இன்று அவள் வருவதற்கு முன்னதாகவே வந்து விட்டான். மனதுக்கு பிடித்தவர்களுகாக காத்திருப்பதும் ஒரு சுகம் தான் என்று அவனுக்கு தோன்றியது.


அவளை பற்றிய சிந்தனையில் அவன் இருந்த போது ஒருவரின் காலடி சத்தத்தில் நிமிர்ந்து பார்த்தான். அந்த மதிய நேர வெயில் அவள் மேல் பட பச்சை நிற சேலையில் தன்னுடைய முகத்தில் விழுந்த முடியை காதிற்கு பின்னால் ஒதுக்கியப்படியே அவனை நோக்கி சிரித்த முகத்துடன் வருவதை பார்க்கும் போது அவனுடைய இதயம் ஒரு நிமிடம் வேகமாக துடித்து அடங்கியது. அவளுடைய அந்த தோற்றம் அவன் மனதில் என்றும் அழியாத ஓவியமாக பதிந்தது. அவன் அமர்ந்திருந்த இருக்கையில் தன் கையில் இருந்த பையை வைத்து விட்டு சற்று இடைவெளி விட்டு அமர்ந்தாள்.


வானதி, “ வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா அருள் “ என்று கேட்டவளை பார்த்து இல்லை என்று தலையசைத்தவன் , “ ஸ்கூல்ல இருந்தப்போ தொந்தரவு பன்னிட்டனா ஆருந்யா “ என்று அவள் அருள் என்று அழைத்ததை ரசித்தப்படியே கேட்டான்.


வானதி, “ இல்லை இன்னிக்கு நான் லீவு போட்டு இருந்தேன் அதனால பிரச்சனை எதுவும் இல்லை “ என்றவுடன் பதறிப்போய், “ என்னாச்சு உடம்பு எதுவும் சரியில்லையா “ என்றவனை பார்க்கும் போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தது. தனக்கு ஓன்று என்றால் பதட்டபடவும் இன்னொருவர் இருக்கிறார்கள் என்று.


வானதி, “ அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை…. இன்னிக்கு ஒரு முக்கியமான நாள் அதனால தான் லீவு போட்டேன் “ என்று அவள் கூறியதை கேட்கும் போது அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவனின் முகத்தில் தோன்றிய உணர்ச்சியை பார்க்கும் போதே அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்பதை உணர்ந்தவள் , “ அது…. இன்னிக்கு என் அம்மாவோட பிறந்த நாள் ஒவ்வொரு வருஷமும் இதே நாள்ள என் கையால சமைச்சு ஆதரவு இல்லாம கஷ்டப்பட்றவங்களுக்கு கொடுப்பேன். என் மனசுக்கு ஒரு திருப்தி அவங்களுக்கே நான் ஏதோ செஞ்ச மாதிரி தோணும் அதுல எனக்கு சந்தோஷம்…. இங்க இருந்த ஒரு கோவில்ல தான் நான் சாப்பாடு கொடுத்துட்டு இருந்தேன். அப்போ தான் நீங்க போன் பன்னீங்க…. அதனால தான் இங்கே வர சொன்னேன் “ என்று அவள் சொல்வதை கேட்கும் போது அடுத்தவர்களுக்காக உதவும் அவளின் குணம் அவனுக்கு அவனுடைய தாயை நினைவுப்படுத்தியது.


அவன் அமைதியாக இருப்பதை பார்த்தவள், “ நீங்க தான் என்னை வர சொன்னீங்க…. நான் எதையோ பேசிட்டு இருக்கேன்…. சொல்லுங்க என்ன விஷயமா என்னை பாக்கணும்ன்னு சொன்னீங்க “ என்று கேட்டாள். அவள் அப்படி கேட்டவுடன் என்னவென்று அவன் கூறுவான். உண்மையில் அவன் எதற்காக அவளை சந்திக்க வந்தான் என்று சொன்னால் அவள் அதை எவ்வாறு எடுத்து கொள்வாள் என்று அவனுக்கு தெரியவில்லை அதனால் இப்போது என்ன சொல்வது என்று சிந்தித்தவன்.


ஆதி, “ அது… வந்து…. எனக்கும் இன்னிக்கு ஒரு முக்கியமான நாள் தான்…. அதாவது எனக்கும் இன்னிக்கு பிறந்த நாள் தான்…. அதான் உன்னை பாக்கணும் போல இருந்தது “. அவன் சொன்னதை கேட்கும் போது அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஏன்னெனில் தன்னுடைய அம்மாவின் பிறந்த நாள் அன்று அவனுக்கும் பிறந்த நாள் என்று நினைக்கும் போது அவள் மனதில் இன்னது என்றே தெரியாத ஒரு உணர்வு.


வானதி, “ உண்மையாவா…. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. உங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் அருள் ….நீங்க ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லல அட்லீஸ்ட் இப்ப போன் பண்ணும் போதாவது சொல்லி இருக்கலாம்ல…. இப்ப பாருங்க நான் எந்த பரிசும் வாங்காமலே வந்துட்டேன் “ என்று சோகமாக கூறியவளை பார்த்தவன், “ உன்னோட இந்த வாழ்த்தே எனக்கு மிகப் பெரிய பரிசு தான் “. அவன் என்ன சொன்னாலும் அவள் முகம் தெளியாததை கண்டவன்.


ஆதி, “ இப்ப என்ன நீ எதாவது ஒரு பரிசு கொடுக்கனும் அவ்வளவு தான. அப்ப நான் உன்கிட்ட இருக்கறதை கேட்ட நீ கொடுப்பியா “ அவள் முகம் வாடுவதை அவனால் தாங்கிக்க முடியவில்லை.


வானதி, “ கண்டிப்பா என்னால கொடுக்க முடிஞ்ச தருவேன் கேளுங்க “ என்று சிரிப்புடன் சொன்னவளை பார்த்தவன். அவன் அருகில் இருந்த அவளுடைய பையில் இன்னும் ஒரு உணவு பொட்டலம் மீதம் இருப்பதை பார்த்தான்.


ஆதி, “ காலையில இருந்து நான் எதுவும் சாப்பிடல. இப்போ எனக்கு ரொம்ப பசிக்குது உன்கிட்ட இருக்க சாப்பாடு கொடுக்கிறீயா “ என்றான். வேறு எதையோ கேட்க போகிறான் என்று நினைத்தவள் அவன் உணவை கேட்பான் என்று அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவள் அமைதியாக அவனையே பார்ப்பதை கண்டவன் சிரிப்புடன், “ என்ன பாக்குற ஆதரவு இல்லாதவங்களுக்கு கொடுக்கனும்ன்னு சொன்னோம் இவன் கேக்கரனேன்னு பாக்குறியா. நான் ஒரு வகையில அப்படி தான் எனக்கும் அம்மா அப்பா இரண்டு பேருமே இல்.... “ என்று அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே அந்த உணவை எடுத்து அவன் முன் நீட்டினாள்.


தன் முன்னால் நீட்டிய உணவை வாங்கியவன் அவள் கையால் சமைத்த உணவை முதன் முறையாக உண்ண போவதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. மனதுக்கு பிடித்தவர்கள் கையால் சமைத்து உண்ணுவது என்பது உண்மையில் அவனுடைய மிக சிறந்த பிறந்த நாள் பரிசாக தோன்றியது. ஆசையாக அதை பிரித்து ஒரு வாய் எடுத்து உண்டவனுக்கு அந்த ருசி மிகவும் பிடித்து இருந்தது. கூடவே அவனுடைய கண்களும் கலங்கியது. மீண்டும் வேகமாக முழுவதையும் சாப்பிட்டு முடித்தான்.


அவன் உண்பதை பார்த்து கொண்டிருந்தவள் அவன் முகம் மாறுவதை கண்டு அவளுக்கு ஒன்னும் புரியவில்லை. அவன் உண்டு முடித்தவுடன் தண்ணீர் கொடுத்தாள். அவனும் கையை கழுவி சுத்தம் செய்து விட்டு வந்து அமர்ந்தவனுக்கு மனதில் அப்படி ஒரு நிம்மதி நிறைந்திருந்தது. திரும்பி அருகில் பார்க்கும் போது அவள் அவன் முகத்தையே பார்ப்பதை கண்டவன், “ சாப்பாடு உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. இதுவரைக்கும் நான் இப்படி சாப்டதே இல்லை “ என்றான்.


வானதி, “ இது கொஞ்சம் டூ மச்.... நீங்களே ஒரு பெரிய ஹோட்டல்ல வேலை செய்றீங்க.... அப்படி இருக்கும் போது நான் சமைச்சத பாராட்டுறீங்க “ என்று கேட்டவளை பார்க்கும் போது அவன் மனதில் பல எண்ண அலைகள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்டிருந்தது. அவளும் சரி அவள் சமைத்த உணவும் சரி அவனுக்கு எவ்வளவு பெரிய விஷயம் என்று தெரியாமல் அவள் பேசுவதை பார்க்கும் போது இந்த அறியாமை கூட அவள் மேல் இன்னும் காதல் அதிகமாக காரணமாக இருந்தது. இந்த நிமிடமே தன்னுடைய மனதில் இருப்பதை சொன்னால் என்ன என்று அவனுக்கு தோன்றியது. இப்போது வேண்டாம் பொறுமையாக சொல்லலாம் என்று அறிவு சொன்னாலும் மனம் நெகிழ்ந்து இருக்கும் இந்த சூழலில் சொல் என்று அவன் மனம் கூறியது. எப்போதும் அவன் புத்தியை கொண்டே முடிவு எடுப்பவன் ஆனால் இன்றோ மனம் சொல்வதை கேட்டால் என்ன என்று தோன்றியது.


வானதி, “ என்னாச்சு ஏன் அமைதியா இருக்கீங்க அப்படினா நான் சொன்னது உண்மை தான “ என்று சிரிப்புடன் கூறியவளை கண்கள் இமைகாமல் பார்த்தான்.


ஆதி, “ நான் உன்கிட்ட ஒரு விஷயம் ரொம்ப நாளா சொல்லனும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.... ஆனா என்னால சொல்ல முடியல. இப்ப எனக்கு சொல்லனும்ன்னு தோனுது.... சொல்லட்டுமா ஆருந்யா “ என்று கேட்டவனை பார்க்கும் போது அவளுக்கு அவன் எதை பற்றி சொல்ல போகிறான் என்று யோசித்தப்படியே அவனிடம், “ சொல்லுங்க “ என்றாள்.
ஆதி, “ நான் பேசி முடிக்கற வரைக்கும் நீ இங்க இருந்து எங்கையும் போக கூடாது. நான் முழுசா சொல்லி முடிச்சதும் உனக்கு என்ன சொல்லனும்ன்னு தோனுதோ நீ சொல்லனும் சரியா “ என்றவனுக்கு சம்மதமாக தலையசைத்தாள்.


அவள் சரியென்று சொன்னதும் தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் அவளுக்கு முன்னாடி இரண்டு அடி தள்ளி நின்றுக்கொண்டு மேலே இருக்கும் வானத்தை பார்த்து கொண்டே தன்னுடைய மனதில் இருப்பதை கூற ஆரம்பித்தான்.


ஆதி, “ இந்த உலகத்துல அம்மாவ பிடிக்காதவங்கன்னு யாருமே இல்லை எல்லாரும் மாதிரி எனக்கும் என் அம்மாவ ரொம்ப பிடிக்கும்.... அவங்களுக்கு என்னை விட்டு பாதியிலேயே போய்டுவேன்ன்னு தெரியும் போல அதனால தான் நான் சின்ன வயசா இருக்கும் போதே மொத்த பாசத்தையும் என் மேல காட்டிட்டாங்க.... அவங்க என்னை விட்டு போனதுக்காப்புறம் இந்த உலகமே இருண்ட மாதிரி ஆயிடுச்சு யாரையுமே எனக்கு பிடிக்காம போய்டுச்சு.... அதனால எனக்கு மறுபடியும் யார் மேலயும் பாசம் வைக்க பயமா இருந்துச்சு. என்னை சுத்தி ஒரு வட்டத்தை நானே போட்டுக்கிட்டேன். அப்படி இருந்த என் மனசுக்குள்ள ஒறுத்தி என்னையும் அறியாம நுழைஞ்சிட்டா “ என்றான் சிரித்தப்படி. ஆரம்பத்தில் அவன் கூறுவதை கேட்கும் போது அவளுக்கு பாவமாக இருந்தது ஆனால் கடைசியில் அவன் ஒரு பெண்ணை விரும்புவதாக சொன்னதை கேட்கும் போது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அவள் மனதில் ஏதோ ஒரு சொல்ல முடியாத உணர்வு தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.


வானதி, “ நீங்க ஒரு பெண்ணை காதலிக்கிறீங்கள.... யாரு அந்த பொண்ணு “ என்று கேட்டவளை திரும்பி பார்த்தவன் , “ அவள நான் மூணு வருடங்களுக்கு முன்னாடி நீலகிரி எஸ்டேட் காட்டுல முதன் முறையா சந்திச்சேன்.... அப்போ எனக்கு தெரியாது அவ தான் என் வாழ்க்கையாவே மாறுவான்னு. அந்த நாள் என் மொத்த வாழ்க்கையையே மாத்திடுச்சு. அன்னிக்கு எனக்கு எதுவும் தோணல ஆனா இந்த மூணு வருஷத்துல அவள நான் நினைக்காத நாளே இல்லை.... என்னோட உணர்வுள மூச்சு காத்துலன்னு எல்லாத்துலையும் அவளே கலந்து இருக்கா. யாரையும் என் மனசுக்குள்ள நெருங்க விடாதவன் நான் ஆனா என்னையும் அறியாம என் மனசுகுள்ள இருந்த எல்லா தடையையும் உடைச்சிட்டு ஒரு ராணி மாதிரி அதுல சிம்மாசனம் போட்டு உக்காந்துட்டு இருக்கறவ நீ தான்..... அது நீ தான் ஆருந்யா.....” என்று தன்னுடைய விரலை அவளை நோக்கி சுட்டிக்காட்டி கத்தினான்.


அந்த பெண் யார் என்று கூறுவான் என்று ஆர்வமாக கேட்க ஆரம்பித்தவள் அவன் அந்த இடத்தை பற்றி சொல்லும் போதே அது அவள் தான் என்று புரிந்து கொண்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு அவன் ஆணித்தரமாக அவள் தான் என்று கூறியதும் அவளால் ஒன்றும் சொல்ல முடியாமல் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து வேகமாக எழுந்தாள். அவள் அதிர்ச்சியுடன் எழுந்து நிற்பதை கண்டவன் அருகில் சென்று அவள் கண்ணை நேருக்கு நேர் பார்த்து கொண்டே, “ இதை உன்னை திருப்பியும் சந்திச்ச உடனே சொல்லனும் நினைச்சேன்.... ஆனா உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாம எப்படி சொல்றதுன்னு ஒரு பயம் எங்கே நீ என்னை வேண்டாம்ன்னு சொல்லிடுவியோன்னு. எனக்கு பயம்ன்னா என்னன்னு சொல்லி குடுத்தவளே நீ தான். ஆனா இன்னிக்கு உன்கிட்ட சொல்லியே ஆகனும்ன்னு தோணுச்சு அதான் என்ன ஆனாலும் பரவாலன்னு சொல்லிட்டேன். என்னோட மனசு முழுக்க நீ தான் நிறைஞ்சி இருக்க. நான் நீயா மாறி ரொம்ப நாள் ஆயிடுச்சு.... நாள் ஆக ஆக உன் மேல எனக்கு இருக்க காதல் அதிகம் ஆகுதே தவிற குறைய மாட்டுது. அதோட பாரத்தை என்னால தாங்க முடியால அதான் உன்கிட்ட இறக்கி வெச்சிட்டேன் “ என்று கூறினான்.


காதல் கல்யாணம் இதில் எதன் மீதும் நம்பிக்கை இல்லாதவள் அவள் அப்படி இருக்கும் போது அவளிடம் ஒருவன் காதலிப்பதாக கூறுவதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. அவனை தவிர அந்த இடத்தில் வேறு யார் இருந்து இருந்தாலும் நடப்பதே வேறாக இருந்து இருக்கும். ஆனால் அவனிடம் ஏனோ மனசு கஷ்டப்படும்படி பேச அவளுக்கு மனம் வரவில்லை. இதுக்கு மேல் இங்கிருந்தாள் கோவமாக பேசிவிடுவோம் பிறந்த நாள் அதுவுமாக ஒருவர் மனதை காயப்படுத்த அவளுக்கு மனம் வரவில்லை அதனால் வேகமாக தன்னுடைய பேக்கை எடுத்து கொண்டு திரும்பியவளால் அங்கிருந்து செல்ல முடியவில்லை.


தன் மனதில் இருப்பதை கூறி முடித்தவன் அடுத்து அவள் என்ன சொல்லுவாள் என்று ஆர்வமாக அவளுடைய முகத்தையே பார்த்து கொண்டிருந்தான். அதில் தெரிந்த மாற்றங்களை வைத்தே அவள் தன்னை நம்பவில்லை என்று அவன் புரிந்து கொண்டான். அவளிடம் மீண்டும் பேசுவதற்குள் கிளம்பியவளை தடுப்பதற்காக அவளின் புடவை முந்தானையை லேசாக பிடித்து நிறுத்தினான். அதில் அவனை திரும்பி பார்த்து முறைக்க ஆரம்பித்தவளை பார்த்து, “ நான் உன்னை தொட மாட்டேன்ன்னு வாக்கு கொடுத்து இருக்கேன் அதனால தான் உன் புடவையை பிடிக்க வேண்டியதா போய்டுச்சு.... நான் பேசி முடிக்கற வரைக்கும் போக கூடாதுன்னு சொன்னேன்ல. அப்பறம் பாதியிலேயே போனா எப்படி.... “ என்று கூறிக் கொண்டே மனமே இல்லாமல் தன் கையில் இருந்த புடவையை விடுவித்தான்.


அப்போது தான் அவன் கேட்டதற்கு தான் ஒப்புக்கொண்டதையும் நினைத்து பார்த்தவள் ஒன்றும் கூறாமல் தன் கைகளை கட்டிக்கொண்டு அவனையே பார்க்க ஆரம்பித்தாள். பிறகு ஆதி, “ நான் உன்னை காதலிக்கறதா சொன்னதால நீயும் உன் மனசுல இருக்கறதை என்கிட்ட இப்பவே சொல்லனும்ன்னு இல்லை. எனக்கு இப்ப தோன்ற மாதிரி உனக்கு தோணும் போது நீ சொல்லு அதுவரைக்கும் நான் காத்திட்டு இருப்பேன். அது எவ்வளவு நாள் ஆனாலும் சரி. அதுக்காக ரொம்ப நாள் என்னை காக்க வெச்சிடாத உன் கூட ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழனும் அப்படின்றது என்னோட நீண்ட நாள் கனவு.... எனக்கு மனைவினா இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான்.... அதுல எந்த மாற்றமும் இல்லை என் உயிர் இருக்கற வரைக்கும் வரவும் வராது இது என் அம்மா மேல சத்தியம்..... உனக்காக வெயிட் பன்றேன்ன்னு சொன்னதுனால தினமும் மெசேஜ் பன்றது போன் பன்றது இது எதுவும் பண்ண மாட்டேன்ன்னு நினைச்சிடாத. அது வேற டிப்பார்ட்மென்ட் உன்கிட்ட பேசாமலாம் என்னால இருக்கவே முடியாது சரியா “ என்று வசனம் பேசியவனை கொலைவெறியோடு பார்த்தாள் வானதி.


அவன் அவ்வாறு கூறும் போது அவள் மனம் ஏன்னென்று தெரியாமல் சந்தோஷமாக இருந்தது உண்மை ஆனால் அதை வெளிக்காட்டி கொள்ள அவளுக்கு விருப்பம் இல்லை. இதற்கு மேல் இருந்தால் அவன் பேச்சிற்கு அவளை தலையாட்ட வைத்து விடுவானோ என்று பயந்தவள். அவனிடம், “ நீங்க பேசி முடிச்சாச்சுனா நான் கிளம்புலாமா. எனக்கு நிறைய வேலை இருக்கு “ என்றவளை நிற்க வைக்க அவனுக்கு மனம் இல்லை அதனால் , “ உன்னோட பதிலுக்காக நான் காத்திட்டு இருப்பேன்.... நான் ஊருக்கு ஒரு வேலை விஷயமா போறேன் எப்ப வருவேன்ன்னு தெரியாது வந்த உடனே உன்ன பாக்க தான் வருவேன் அதுவரைக்கும் நேர்ல என்னோட தொல்லை இல்லாமா நிம்மதியா இரு ஆனா போன் பண்ணிட்டு தான் இருப்பேன் அதை எடுக்க மறந்துடாத நான் அங்க நிம்மதியா வேலை பாக்குறது உன் கைல தான் இருக்கு “ என்று கூறி அவளுக்கு விடைக்கொடுத்தான். அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று நடக்க ஆரம்பித்தவள் அந்த பார்க்கின் வாசலை நெருங்கும் போது ஏன்னென்று தெரியாமல் அவள் கால்கள் ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்க்க வைத்தது. பிறகு வேகமாக வெளியே சென்று விட்டாள்.


தன்னுடைய மனதில் இருப்பதை ஏதோ ஒரு தூண்டுதலில் அவளிடம் சொல்லி விட்டாலும் அதற்கு அவளுடைய பதில் என்னவாக இருக்கும் என்ற பதட்டம் அவன் மனதில் இருந்தது. ஆனால் அவள் ஒன்றுமே கூறாமல் அமைதியாக இருந்தது அவனுக்கு மிகவும் குழப்பதையே ஏற்ப்படுத்தியது. அவள் மனதில் ஒரு ஒரத்தில் கூட தான் இல்லையோ என்ற எண்ணம் அவனுக்கு வருத்தத்தையே அளித்தது. ஆனால் அவன் பேசும் போது அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளையும் தன்னிடமிருந்து விட்டால் போதும் என்று அவள் விலகி சென்று வாசலை நெருங்கும் போது ஒரு நிமிடம் அவள் திரும்பி தன்னை பார்த்ததும் இது எல்லாத்தையும் நினைத்து பார்க்கும் போது அவள் மனதில் தானும் இருக்கிறோம் ஆனால் அவள் இன்னும் அதை உணரவில்லை என்றே அவனுக்கு தோன்றியது. அதை அவள் உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று நம்பினான்.


அவன் மனத்திற்குள், ‘ இது வரைக்கும் அதிரடியா எல்லாத்தையும் செஞ்சு பழக்கப்பட்டவன் நான் யாருக்கிட்டயும் இவ்வளவு பொறுமையா பேசினது இல்லை. உனக்கு மட்டும் எப்பவும் நான் அருளா இருக்கணும் ஆசைப்படுரேன்.... ஆனா என் பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு நீ எனக்கு கிடைக்கமாட்டான்ற நிலைமை வந்த நான் என்னவும் செய்ய தயங்க மாட்டேன்.... உன்னை உனக்காக கூட விட்டு குடுக்க நான் தயாரா இல்லை. பாக்கலாம் என்ன நடக்க போக்குதுன்னு ‘ என்று நினைத்தவன் வீட்டிற்கு லேசான மனத்துடன் செல்ல ஆரம்பித்தான்.


அவனின் இந்த வெளியூர் பயணம் இவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுமா.... இந்த இடைப்பட்ட காலத்தில் அவர்கள் வாழ்வில் நடக்க போவது என்ன என்று தெரிந்து கொள்ள நாமும் அவர்களை போல் பொறுமையாக காத்திருப்போம்....



கடலாக நீயும் மாறினால் அதில்

மூழ்கி மூழ்கி அலையாவேன்

நெருப்பாக நீயும் மாறினால் அதில்

சாம்பலாகும் வரம் கேட்பேன்

அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை

பரிசாக கேட்கிறேன்

அகல் தீபமாகி ஆகாய நிலவை

உறவோடு பார்க்கிறேன்

அது பொய் என்றபோது

உன்னோடு பேசும் கனவுகள்

வேண்டுகிறேன்....


நிஜத்தை தேடும்....

உங்களின் கருத்துக்களை “ என்

நிஜமே நீ தானடி “ கதையின்

கருத்துதிரியில் மறக்காமல்

பகிர்ந்து கொள்ளுங்கள்....
 
Status
Not open for further replies.
Top