ஹாய் ஹாய் ஹாய் ,
மீண்டும் ஒரு குட்டி டீ வண்ணாரப்பேட்டையில் இருந்து
"தாத்தய்யாஆஆஆஆ!!!!!" என அந்த அரண்மனையை விட பெரிதாக இருந்த வீட்டின் வரவேற்பறையில் இருந்து காது கிழிந்து கட்டிடம் அதிருமாறு கத்திக் கொண்டிருந்தான் கதிர்.
இவன் இட்ட சப்தத்தில் ஏதோ முக்கியமான பத்திரத்தில் கையெழுத்து இட்டுக்கொண்டிருந்த இரகுவீரபூபதி ஜெர்க் ஆனதில் கை நடனமாடி கடைசியாக 'i'என்பது இழுத்து கொண்டு போய் 'j' ஆகி விட ,'வடை போச்சே' என்பது போல் வருந்திய தாத்தா, மெதுவாக இறங்கி கீழே வந்தார்.
அவர் தன்னிடம் வரும் வரை கூட பொறுமை காக்க முடியாத கதிர் வேக வேக எட்டுக்களை வைத்து அவர் முன் போய் நிற்க, திடீரென்று தன் முன் அர்னால்டு போல் வந்து நின்ற தன் பேரனை அண்ணாந்து பார்த்து அரண்டு போனவர் அவர் கைத்தடியாலே அவனை அடித்து "ரெண்டு அடி பின்னாடி தள்ளி நில்லு டா எருமை..நான் என்ன உன் அத்தை பொண்ணா இப்படி கிட்ட வந்து நின்னு கிட்னி திருடுறவன் மாதிரி பார்க்குற" என திட்ட,
அவர் தன்னை கிண்டல் செய்ததில் மேலும் கடுப்பான கதிர்,"யோவ் தாத்தா என்னை கொலை வெறி ஆக்காத..எந்துக்கு நுவ்வு பைத்தியம் லாகா பிகேவ் சேஸினுண்டாரு(எதுக்கு பைத்தியம் மாதிரி நடந்துக்கிறீங்க)??" என கேட்க,
மீண்டும் அவன் தோளில் கைத்தடியை வைத்து அடித்தவர்,"உனக்கு எத்தனை தடவை சொல்லுறது தமிழ்ல பேசுன்னு அதென்ன பாதி தமிழ் பாதி தெலுங்குன்னு உளறிட்டு இருக்க" என கண்டிக்க,
'அதுக்கு நீ தமிழ் பொண்ணா பார்த்து உன் பையனுக்கு கட்டி வச்சிருக்கனும்' என முனுமுனுத்தவன் ,"அதான் இப்போ முக்கியம் பாரு..ஒரு மனுஷன் மூனு வாரம் மெடிக்கல் கேம்ப் போய்ட்டு வரதுக்குள்ள என் அக்காவுக்கு மேரேஜ் பண்ணி மொரிஷியஸ்க்கு ஹனிமூன் அனுப்பி வச்சுருக்க நீ..நீயெல்லாம் ஒரு தாத்தாவா?? ஏன்யா இப்படி பண்ண??" என ஆதங்கத்தோடு வினவியவனை சிரிப்போடு பார்த்த தாத்தா
"ரொம்ப துள்ளாத டா அடங்கு..இந்த கேள்விக்கு பதில் தெரிஞ்சுக்கிற அளவுக்கு நீ இன்னும் வளரலை..உன் மலையாள மாங்குயிலை போய் சைட் அடிக்கிற வேலையை மட்டும் நீ பாரு" என கூறிவிட்டு அங்கிருந்து நகர,
போகும் அவரையே கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தவனின் நாசியில் மலையாள வாசம் வந்து நிறைக்க, திரும்பி பார்க்காமலே வருவது யாரென்று கண்டுகொண்டவன் மனதில் அனிருத் அமர்ந்து அழகான லவ் சாங்க் கம்போஸ் பண்ணிக்கொண்டிருந்தார்.
தன்னைக் கடந்து செல்லப்போன அந்த யெல்லோ சுடிதாரைக் "ஏய் ஜனனி" என அழைத்தான்.
அவனைக் கண்டவள் எப்போதும் போல் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கல்லையும் மண்ணையும் போல் அவனை பார்த்து வைக்க, அதற்கெல்லாம் அசராத கதிர் ," உன் கிட்ட ஒன்னு சொல்லனும்..ரொம்ப நாளா சொல்லனும் சொல்லனும்னு மனசுக்குள்ள பூட்டி வைச்சு வைச்சு எனக்கு பூகம்பம் வந்ததால இன்னைக்கு உன்கிட்ட சொல்லிரலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என மூச்சு விடாமல் பேச,
அதற்கும் எந்தவொரு உணர்ச்சியையும் பிரதிபலிக்காமல் ," எந்தா பரை" என மலையாளத்தில் கேட்க,
எப்போதும் போல் அவளின் அந்த மலையாளம் அவனை கடுப்பின் உச்சிக்கு இழுத்து சென்றது ,'இவ ஒருத்தி ஆ ஊன்னா பற பறன்னு நான் என்ன ஸ்பைடர் மேன்னா கட்டிடம் விட்டு கட்டிடமா பறக்க..பைத்தியம் ' என நொந்து கொண்டவன் ,"ஒன்னுமில்லை மா தாயே போய் உன் வேலையை பாரு" என கையெடுத்துக் கும்பிட்டான்.
அவ்விடம் விட்டு அகன்று தன் அலுவலக அறைக்கு வந்த ஜனனி கதவின் இடுக்கில் தெரிந்த கதிரைக் கண்டு இரகசியமாக புன்னகைத்துக் கொண்டாள்.
வண்ண வண்ண அலங்கார விளக்குகளால் புது மணப்பெண்ணைப்போல் அலங்கரித்திருந்த அந்த தோட்டத்தை திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான் நம் கதையின் நாயகன்.
அவன் அருகில் இருந்த வசுந்தரா , அவனின் செய்கையை பார்த்து அவன் தொடையில் கிள்ள, "மாரியாஆஆஆஆத்தாஆஆஆ!!!!" என அலறிய அவனை அங்கு கூடியிருந்த அனைவரும் வித்தியாசமாக பார்க்க,
அனைவரையும் பார்த்து சங்கடமாக சிரித்த வசுந்தரா,"ஹேய் லூசு எதுக்கு இப்படி கத்தி என் மானத்தை வாங்குற" என அவனை பார்க்காமலே வார்த்தைகளை பற்களுக்கு இடையில் கடித்து துப்பினாள்.
தன் தொடையைத் தேய்த்துக்கொண்டே ,"பின்ன என்ன மே நறுக்குன்னு கிள்ளுனா எல்லாரும் கத்த தான் செய்வாங்க..எங்க நான் வேணும்னா உங்களை கிள்ளுறேன் நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்ப்போமா" என அவள் கிள்ளிய இடத்திலே இவனும் கிள்ள கையை கொண்டு போக,
அவன் கையை தட்டிவிட்டு அவனை நோக்கி தீப்பார்வை வீசினாள்.அவள் பார்வையில் கையை எடுத்து வாயில் வைத்து பொத்திக்கொண்ட அவனைப் பார்த்து அவளுக்கு மிகவும் லேசாக சிரிப்பு வந்தது.அதை அடக்கியவள் மீண்டும் தன் பார்வையை அங்கு அமைந்திருந்த மேடையின் மீது பதித்தாள்.
ஆனால் அவனோ அவளையே இன்ச் இன்ச்சாக இரசித்தவன் ,'ச்சே என்னா பொண்ணு டா..சின்ன வயசுல இருந்து ஆவின் பாலுலையே ஆட்டம் போட்டிருக்கும் போல , கண்ணைப் பாரு அப்படியே நம்ம கண்ணம்மா கிழவி விக்கிற கிணத்துமீனு மாதிரியே இருக்கு, அய்யோ மூக்கைப் பாரு நம்ம முனியாண்டி அண்ணன் கடை முறுக்கு மாதிரி கடிச்சு சாப்பிடனும் போல இருக்கே, அய்யோ அய்யோ வாயா இது அப்படியே நம்ம வனஜா அக்கா செய்யுற தேன் மிட்டாய் மாதிரி பார்க்கும் போதே எச்சி ஊறுதே ' என அவன் வர்ணித்துக் கொண்டிருக்க
"இப்போ மட்டும் உன் கண்ணை என் மேல இருந்து எடுக்கலை என் கன் தான் உன்கிட்ட பேசும்" என வசுந்தராவின் வார்த்தையில் கலைந்தவன் ,'இந்த வெள்ளைக்கரடிக்கு எல்லா சைடும் கண்ணு இருக்கும் போல ,போடி நீ இல்லைனா என்ன இங்க பாரு சுத்தி வெள்ளை தக்காளியா இருக்கு ஆனா என்ன பூராம் கிழவிங்களா இருக்கும் போல இந்த வயசுலயே எல்லா முடியும் வெளுத்துப் போய் கிடக்கு..பேசாம நம்ம ஏரியாக்கு அடுத்து போறப்போ துணிக்கு சாயம் போடுற மாதிரி கருப்பு சாயத்தை எடுத்துட்டு வந்து இதுங்க மண்டையில அடிச்சு அதுங்க மனசுல இடம் பிடிச்சு இந்த வெள்ளைக்கரடி மூஞ்சில கரியை பூசனும்' என அங்கிருந்த ஆங்கிலேயர்களை பார்த்து பரிதாப்பட்டு தன் மனதில் சபதமிட்டுக்கொண்டான் அவன்.
அப்போது அங்கே வந்த வெள்ளைக்காரர் ஒருவர் வசுந்தராவைக் கண்டு புன்னகைத்து அவள் அருகில் வரவும் இவள் எழ, அவளை லேசாக கட்டிப்பிடித்து விடுவித்தார் அந்த நபர்.
அதை ஏதோ எட்டாவது அதிசயம் போல் பார்த்துக் கொண்டிருந்த அவன்,'இந்த வெள்ளைக்கரடிக்கு எவ்வளவு கொழுப்பு!!! கட்டுன புருஷனை பார்க்க கூட விட மாட்டுறா..இப்போ அந்த கிழவன் வந்து கட்டிப்பிடிக்கிறான் இதுவும் ஈன்னு இழிச்சுக்கிட்டே கட்டிப்பிடிக்குது ' என மனதுக்குள் பொருமி கொண்டிருந்தவன் தன்னையறியாமலே எழுந்து நிற்க,
அப்போது வசுந்தராவுடன் பேசிக்கொண்டிருந்த நபரின் மனைவி அங்கு நின்று கொண்டிருந்த 'அவனை' வந்து கட்டிப்பிடித்து "ஹாய் யங் மேன்" என கூற,
அவரிடம் இருந்து துள்ளி குதித்து விலகியவன், அவரைப் பார்த்து முறைத்து ,"கட்டிப்பிடிச்சு விளையாடுற வயசா கிழவி உனக்கு!!!!!" என கேட்க,
வசுந்தராவிற்கு எங்காவது போய் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது ,'இன்னும் எப்படியெல்லாம் என் மானத்தை வாங்கப் போறானோ' என அவள் நொந்துகொள்ள,
அந்த கணவன் மனைவி இருவருக்கும் அவன் பேசியது புரியவில்லை என்றாலும் அவனை மிகவும் பிடித்து விட, அந்த கணவன் அவன் புறம் கையை நீட்டி ,"Hey young man..glad to meet you..i'm john..May i know your good name please" என கேட்க,
'டேய் நரைச்ச மண்டையா எனக்கு ஒரு வார்த்தையே புரியாதுடா இதுல வாயில வெத்தலையை போட்டு மென்னு துப்புன மாதிரி இவ்வளவு நேரமா உளருறியே..இம்மா நேரமா என்ன திட்டுனானா இல்லை பாராட்டுனானான்னு வேற வெளங்கலையே..என்ன டா இது உனக்கு வந்த சோதனை' என மனதிற்குள் புலம்ப,
அவனைப் பற்றி புரிந்த வசுந்தரா ,"ஹிஸ் நேம் இஸ் சன்னி" என கூற,
"இந்தா மே நேமுன்னா பேரு தான இன்னாத்துக்கு என் பேரு சன்னின்னு சொல்ற..நான் உன்னை பிடிச்ச சனின்னு நினைச்சதும் இல்லாம அதை போய் இந்த நரைச்ச மண்டையன் கிட்ட வேற சொல்லி அசிங்க படுத்துறியா??? எங்க ஏரியாலா என் பேரை சொன்னாலே நடுங்கும் தெரியுமா...டேய் நரைச்ச மண்டை என் பேரு " என அவன் பெயரை கூறப் போக, அவன் கையைப் பற்றினாள் வசுந்தரா.
முதன்முறையாக அவளின் தீண்டலில் தான் பேச வந்தது மட்டுமல்லாமல் இந்த உலகத்தையே மறந்து போய் தன் மனைவியை பார்த்தான் 'அவன்'.